தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சே குவேரா - புரட்சிக்காரர்களின் இதயத் துடிப்பு
திருமூலர் | திருமந்திரம் EmptyThu Aug 28, 2014 10:03 am by கே இனியவன்

» ஒரு முக்கோணம் - தொலைந்து போகும் மனிதர்கள் - புரியாத மர்மம்
திருமூலர் | திருமந்திரம் EmptyThu Aug 28, 2014 10:01 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா
திருமூலர் | திருமந்திரம் EmptyThu Aug 28, 2014 10:00 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் எலியாஸ் -சுரா
திருமூலர் | திருமந்திரம் EmptyThu Aug 28, 2014 9:59 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா
திருமூலர் | திருமந்திரம் EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» கென்யா நாட்டு சிறுகதை தமிழில் சுரா
திருமூலர் | திருமந்திரம் EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதை
திருமூலர் | திருமந்திரம் EmptyThu Aug 28, 2014 9:57 am by கே இனியவன்

» பிரம்மராஜன் கவிதைகள்
திருமூலர் | திருமந்திரம் EmptyThu Aug 28, 2014 9:56 am by கே இனியவன்

» K Iniyavan
திருமூலர் | திருமந்திரம் EmptyThu Aug 28, 2014 9:41 am by கே இனியவன்

» K Iniyavan -karuththu
திருமூலர் | திருமந்திரம் EmptyThu Aug 28, 2014 9:37 am by கே இனியவன்


திருமூலர் | திருமந்திரம்

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

திருமூலர் | திருமந்திரம் Empty திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Mon Mar 26, 2012 2:08 pm

திருமூலர் | திருமந்திரம் Thirumular
பன்னிரு திருமுறைகளில் திருமூலர் எழுதிய திருமந்திரம் 10ம் திருமுறையாகும். இது மூவாயிரம் பாடல்களைக் கொண்டது. யோகிகள் பல்லாண்டு காலம் உயிர் வாழ்ந்திருப்பார் என்பது நூற் கொள்கை. திருமூலர் ஒரு யோகி. ஆகவே அவர் தான் கற்ற வித்தையை உலகிற்குக் கூறுகின்றார். உடல் வேறு, உயிர்வேறு. இவையிரண்டும் ஒன்று சேர்ந்து இருந்தால் தான் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருட்களையும் அடைய முடியும் என்ற அந்த உபாயத்தைத் திருமூலர் நமக்குக் கூறுகின்றனர். திருமந்திரம் ஒன்பது பகுதிகளாக உள்ளது. ஒவ்வொரு பகுதியும் ஒரு தந்திரம் எனப் பெயர் பெறும். திருமூலர் காலத்துத் தமிழகத்தில் சைவசமயம் இருந்த நிலைமையை உணர இச் செய்திகள் பொருந்துணை புரிய வல்லவை.

பரகாயப் பிரவேசம் என்று கேள்விப் பட்டிருப்பீர்கள் கூடு விட்டுக் கூடு பாய்தல் என்பது அதன் பொருள். அதாவது ஓர் உயிர் தான் குடியிருக்கும் உடலை விட்டு நீங்கி, மற்றோர் உடம்பினுள் நுழைந்து, அவ்வுடம்பிற்கு ஏற்றவாறு செயல் படுதல். விக்கிரமாதித்தன், ஆதிசங்கரர், அருணகிரிநாதர் ஆகியோர் கூடுவிட்டுக் கூடு பாய்ந்த செய்திகளை நாம் படிக்கிறோம். அதுபோல் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகிய திருமூலரும் மூலன் என்பவனின் உடம்பில் புகுந்து ஆகமப் பொருளைக் கூறியுள்ளார். உயிர் வேறு, உடல் வேறு என்ற தத்துவத்திற்குக் கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தை ஓர் உதாரணமாக விளங்குகிறது.

கயிலாய மலையில் நந்தி தேவரின் உபதேசத்தைப் பெற்ற யோகியார் ஒருவர், அவர் அட்டமா சித்தி பெற்றவர். அவர் அகத்தியரிடத்துக் கொண்டு நட்பால் பொதியமலை நோக்கி வந்தார். திருவாவடுதுறையை அடைந்தார். ஆங்கு இறைவரை வணங்கினார். அப்பதியினின்று அகன்று போகும் போது காவிரியாற்றின் கரையில் பசுக்கூட்டம் அழுவதைப் பார்த்தார். அப்பசுக்கள் மேய்க்கும் மூலன் என்ற இடையன் இறந்து கிடந்தான். யோகியார் அப்பசுக்களின் துன்பத்தைப் போக்க எண்ணினார். தாம் பயின்ற சித்தியினால் அம்மூலன் என்பவனின் உடலில் தம் உயிரைப் புகுத்தினார். பசுக்கள் மகிழ்ந்தன. திருமூலர் மாலையில் அப்பசுக்கூட்டங்களைக் கொண்டு அவற்றின் இருப்பிடங்களில் செல்லச் செய்தார். அவை வழக்கம் காரணமாகத் தம் வீடுகளுக்குச் சென்றன. திருமூலர் ஓரிடத்தில் நின்றார். மூலன் என்ற இடையனின் மனைவி தன் கணவன் இன்னும் வரவில்லையே என்று தேடிக் கொண்டு சென்றாள்! தன் கணவன் போல நின்ற யோகியாரைப் பார்த்தாள். அவர்க்கு ஏதோ நேர்ந்து விட்டது என்று எண்ணி அவரைத் தம் இல்லத்துக்கு அழைத்துச் செல்ல முயன்றாள். முடியவில்லை. அதனால் மனம் கவன்று அவள் இல்லம் திரும்பினாள். அன்று இரவு கழிந்தது. மறுநாள் அவள் தன் கணவனின் நிலையைப் பலரிடம் உரைத்தாள். அவர்கள் திருமூலரிடம் சென்றனர். அப்போது திருமூலர் யோகத்தில் இருக்கக் கண்டு அவரை மாற்ற இயலாது என்று மூலனின் மனைவியிடம் உரைத்தனர். அவள் பெரிதும் துன்பம் அடைந்தாள்.

யோகத்தினின்று எழுந்து யோகியார் தாம் வைத்திருந்த உடலைத் தேடிப் பார்த்தார். அது கிடைக்கவில்லை. தம் யோகவன்மையால் இறைவரின் உள்ளத்தை உணர்ந்தார். சிவாகமப் பொருளைத் திருமூர் வாக்கால் கூற வேண்டும் என்பது இறைவரின் திருவுள்ளம். அதனால் தம் உடல் இறைவரால் மறைக்கப்பட்டது என்பதை அறிந்தார். திருமூலர் சாத்தனூரிலிருந்து சென்றபோது இடையர் அவரைப் பின் தொடர்ந்தனர். அவர்க்கு அவர் உண்மையை உரைத்து, திருவாவடுதுறையை அடைந்து இறைவரை வணங்கிக் கோயிலுக்கு மேற்கில் உள்ள அரசமரத்தின் கீழ் சிவராச யோகத்தில் இருந்து மூவாயிரம் ஆண்டுகளில் மூவாயிரம் செய்யுளை இயற்றினார். பின் இறைவரது திருவடி நிழலை எய்தினார்.

முதல் தந்திரம்

யாக்கை நிலையாமை, செல்வ நிலையாமை, இளமை நிலையாமை, கொல்லாமை, புலால் உண்ணாமை, காம அடக்கம், அந்தணர் ஒழுக்கம், அரசன் கடமை, அறஞ்செய்தலின் சிறப்பு, அன்பை வளர்த்தல், பிறர்க்கு உதவி செய்தல், கற்றோரிடமிருந்தும், நூல்களில் இருந்தும் அறிவை வளர்த்தல், மனத்தை விருப்பு வெறுப்புக்களிற் செல்ல விடாமை போன்ற அறிவுரைகள் தரப்பட்டுள்ளன.

இரண்டாம் தந்திரம்

அகத்தியர் தென்னாடு போந்தமை, சிவனுடைய எட்டு வீரச் செயல்கள், லிங்கத்தின் தோற்றம், தக்கயாகம், பிரளயம் பற்றி புராணக் கதைகள் குறிக்கப்பட்டுள்ளன. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் சிவனுடைய ஐந்தொழில்களும், சக்தி, சிவன் விளையாட்டால் உண்டான ஜீவர்கள், விஞ்ஞானகலர், சகலர், பிரளயாகலர் என்னும் மூவகையினர் என்பதும் அவருள் மதிக்கத்தக்கவர் யாவர் என்பது விளக்கப்பட்டுள்ளன. கோவில்களை அழிப்பது தீது சிவநிந்தை தீது, அடியார் நிந்தை தீது, பொறையுடைமை, பெரியாரைத் துணைக் கோடல் என்பன குறிக்கப்பட்டுள்ளன.

மூன்றாம் தந்திரம்

இப்பகுதி முழுவதும் யோகத்தைப் பற்றியது. ஆனால் பதஞ்சலி கூறும் யோக முறையன்று. இயமம் முதலிய எண்வகை யோகமுறைகளும் அவற்றால் அடையும் பயன்களும் பிறவும் கூறப்பட்டுள்ளன.

நான்காம் தந்திரம்

மந்திர சாத்திரம் அல்லது உபாசனா மார்க்கத்தைப் பற்றியது. அஜபா மந்திரம், சபாலி மந்திரம் கூறப்பட்டுள்ளன. திரு அம்பலச் சக்கரம், திரிபுரச் சக்கரம், ஏரொளிச் சக்கரம், பைரவச் சக்கரம், சாம்பவி மண்டலச் சக்கரம், புவனாபதிச் சக்கரம், நவாஷர் சக்கரம் என்பவை பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன.

ஐந்தாம் தந்திரம்

சைவத்தின் வகைகளும் சரியை, கிரியை, யோகம், ஞானம் இவைகளும் கூறப்பட்டுள்ளன. புறச் சமயங்கள் கண்டிக்கப்படுகின்றன. உட் சமயங்கள் ஏற்கப்படுகின்றன.

ஆறாம் தந்திரம்

உயிர் நாடியாக உள்ளவை சிவ குரு தரிசனம். அவனது திருவடிப் பேறு, ஞானத்தில் பொருள் தெரிபவன், தெரியப்பட்ட பொருள், துறவு, தவம், அருளில் இருந்து தோன்றும் ஞானம், தக்கவர் இலக்கணம், தகாதவர் இலக்கணம், திருநீற்றில் பெருமை என்பவையாகும்.

ஏழாம் தந்திரம்

ஆறு ஆதாரங்கள், ஆறு லிங்கங்கள், சமய சிறப்புப் போதனை, ஐம்புலன்களை அடக்கும் முறை, குருவின் வருணனை, கூடா ஒழுக்கம் முதலியன பேசப்பட்டுள்ளன.

எட்டாம் தந்திரம்

சித்தாந்தத்தின் விளக்கம், காரிய காரண உபாதிகள், புறங்கூறாமை சிவ நிந்தை ஒழிப்பு, உண்மை பேசல், ஆசையை ஒழித்தல் முதலியவை கூறப்பட்டுள்ளன.

ஒன்பதாம் தந்திரம்

குரு, குருமடம், குரு தரிசனம், வைணவ சமாதி, ஸ்தூல, சூக்கும, அதிசூக்கும பஞ்சாட்சரங்கள் பேசப்பட்டுள்ளன. இறைவனது நடன வகைகள் முதலியனவும் ஞானம் மலர்தல், ஞானத்தின் சிறப்பும் கூறப்பட்டுள்ளன.

10ம் திருமுறையில் திருமூலரால் பாடப்பட்ட 3047 பாடல்களும் அதன் தெளிவுரையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Mon Mar 26, 2012 2:09 pm

விநாயகர் காப்பு

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

பொருள் : துதிக்கையோடு கூடிய ஐந்து கைகளையுடையவனும், யானை முகத்தையுடையவனும், இளம் பிறைச் சந்திரனைப் போன்ற தந்தத்தை உடையவனும், சிவனது குமாரனும், ஞானச் சிகரமாக விளங்குபவனும் ஆகிய விநாயகக் கடவுளை அறிவினில் வைத்து அவன் திருவடிகளைத் துதிக்கின்றேன்.

பாயிரம்

1. கடவுள் வாழ்த்து

அஃதாவது கடவுளின் பெருமையைக் கூறி ஏத்துதல்

1. ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றனுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தான்உணர்ந்து எட்டே.

பொருள் : ஒரு பொருளாகிய சிவனே, இனிமையான சத்தியோடு இரண்டாயும், பிரமன், விஷ்ணு, உருத்திரன் என்று மூன்று நிலைகளில் நிற்பவனாயும், நான்கு புருஷார்த்தங்களை உணர்ந்தவனாயும், மெய், வாய், கண், மூக்கு செவியாகிய ஐந்து இந்திரியங்களை வென்றவனாயும், மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை ஆகிய ஆறு ஆதாரங்களில் விரிந்தவனாயும் அதற்கு மேல் ஏழாவது இடமாகிய சகஸ்ரத்தின் மேல் விளங்குபவனாயும், நிலம், நீர், தீ, காற்று, விண், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகிய எட்டுப் பொருள்களையும் உணர்ந்து அவற்றில் கலந்து விளங்குகிறான். இந்த எண்களுக்கு வேறு பொருள் கூறுவாரும் உளர்.

2. போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை
நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கும் நாதனை
மேற்றிசைக் குள்தென் திசைக்குஒரு வேந்தனாம்
கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே.

பொருள் : இனிமையான உயிரில் பொருந்தியிருக்கும் தூய்மையானவனும் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய நான்கு திசைகளுக்கும் பராசக்திக்கும் தலைவனும் மேலே சொல்லாப் பெற்ற திசைகளுள் தெற்குத் திசைக்குரிய இயமனை உதைத்தவனும் ஆகிய இறைவனைப் புகழ்ந்துபாடி நான் உரைக்கின்றேன்.

3. ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்
நக்கனென்று ஏத்திடும் நாதனை நாள்தொறும்
பக்கநின் றார்அறி யாத பரமனைப்
புக்கநின்று உன்னியான் போற்றி செய் வேனே.

பொருள் : உடனாய் நின்றவனும் அழிவில்லாத தேவர்கள் ஆடையில்லாதவன் என்று பரவும் தலைவனும், பக்கத்திலுள்ள திருமால் முதலிய தேவர்கள் அறிய முடியாத மேலோனும் ஆகிய இறைவனை நான் அணுக்கமாக இருந்து அனுதினமும் வழிபாடு செய்வேன். நக்கன் தத்துவங்களைக் கடந்தவன்; மலமில்லாதவன்; மாசில்லாதவன் என்று பொருள் கூறுவாரும் உளர்.

4. அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்
புகலிடத்து என்றனைப் போதவிட் டானைப்
பகலிடத் தும்இர வும்பணிந்து ஏத்தி
இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே.

பொருள் : அகன்ற சீவர்களுக்கு மெய்ப்பொருளானவனும், ஆகாய மண்டலத்துக்கு வித்துப் போன்றவனும் அடைக்கலமான இடத்தில் என்னைச் செல்லவிட்டவனும் ஆகிய இறைவனை, பகலிலும் இரவிலும் வணங்கிப் பரவி, மாறுபாடு உடைய இவ்வுலகில் நான் அறியாமை நீங்கி நின்றேன்.

5. சிவனொடுஒக் கும்தெய்வம் தேடினும் இல்லை
அவனொடுஒப் பார்இங்க யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே.

பொருள் : சிவபெருமானோடு ஒப்பாகவுள்ள கடவுள் புறத்தே உலகில் எங்குத் தேடினும் இல்லை. இனி, அவனுக்கு உவமையாக இங்கு அகத்தே உடம்பிலும் எவரும் இல்லை. அவன் அண்டத்தைக் கடந்து நின்றபோது பொன்போன்று பிரகாசிப்பான். செந்நிறம் பொருந்திய ஊர்த்துவ சகஸ்ரதளத்தாமரையில் விளங்குபவன் ஆவான். (அவன் அன்பர்களின் நெஞ்சத் தாமரையில் உறைபவன் என்பது மற்றோர் சாரார் கருத்து)

6. அவனை ஒழிய அமரரும் இல்லை
அவன்அன்றி செய்யும் அருந்தவம் இல்லை
அவன்அன்றி மூவரால் ஆவதுஒன்று இல்லை
அவன்அன்றி ஊர்புகு மாறுஅறி யேனே.

பொருள் : சிவனைக் காட்டிலும் மேம்பட்ட தேவர்கள் ஒருவரும் இல்லை. அவன் அல்லாது செய்கின்ற அருமையான தவமும் இல்லை. அவனை அல்லாது பிரமன், விஷ்ணு, உருத்திரன் ஆகிய மூவராலும் பெறுவது ஒன்றும் இல்லை. அவனையல்லாது வீடு பேறு அடைவதற்குரிய வழியை அறியேன்.

7. முன்னைஒப் பாயுள்ள மூவர்க்கும் மூத்தவன்
தன்னைஒப் பாய்ஒன்றும் இல்லத் தலைமகன்
தன்னைஅப் பாயெனில் அப்பனு மாய்உளன்
பொன்னைஒப் பாகின்ற போதகத் தானே

பொருள் : பொன்னைப் போன்ற சகஸ்ரதளத்தில் விளங்குபவனே, பழமையாகவே சமமாக வைத்து எண்ணப்படும் பிரமனாதி மூவர்க்கும் பழமையானவன். தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத் தலைமகன். அவனை யாரேனும் அப்பனே என்று வாயார அழைத்தால் அப்பனாக இருந்து உதவுவான். போதகத்தான் - உள்ளமாகிய தாமரை மலர்மீது உள்ளவன் என்பது ஒரு சாரார் கருத்து.

8. தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருளறி வார்இல்லை
சேயினும் நல்லன் அணியன்நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.

பொருள் : தாழ்ந்த சடையையுடைய சிவன் தீயைக் காட்டிலும் வெம்மையானவன்; அன்பர்க்கு நீரைக் காட்டிலும் குளிர்ச்சியானவன்; குழந்தையினும் நல்லவன்; பக்கத்தில் இருப்பவன்; அவனிடம் அன்பு செய்வர்க்குத் தாயைக் காட்டிலும் கருணை புரிபவன். இவ்வாறு இருந்தும் இறைவனது கருணையை அறிபவர் இல்லை.

9. பொன்னால் புரிந்திட்ட பொற்சடை யென்னப்
பின்னால் பிறங்க இருந்தவன் பேர்நந்தி
என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன்
தன்னால் தொழப்படு வார்இல்லை தானே.

பொருள் : பொன்னால் செய்யப்பெற்ற அழகான சடை என்று கூறுமாறு அவன் பின்புறம் விளங்க இருப்பவன். அவனது திருநாமம் நந்தி என்பதாகும். என்னால் வணங்கத் தக்கவன் உயிர்கட்கு எல்லாம் தலைவனாகிய சிவன். ஆனால் அப் பெருமானால் வணங்கத் தக்கவர் பிறர் எவரும் இல்லையாம். நந்தி - பிறப்பு இல்லாதவன்.

10. தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்
தானே சுடுஅங்கி ஞாயிறும் திங்களும்
தானே மறைபொழி தையலு மாய்நிற்கும்
தானே தடவரை தண்கட லாமே.

பொருள் : சிவனாகிய தானே இப்பூவுலகத்தைத் தாங்கிக் கொண்டு ஆகாய வடிவினனாக உள்ளான். அவனே சுடுகின்ற அக்கினியாகவும் சூரியனாகவும் சந்திரனாகவும் உள்ளான். அவனே அருள் பொழியும் சத்தியனாய் இருக்கின்றான். அவனே விசாலமான மலையாகவும் குளிர்ச்சியான கடலாகவும் உள்ளான். இப்பாடலுக்குத் திருவருள் ஆக அம்மையே இவ்வாறு இருக்கிறாள் என ஒரு சாரார் பொருள் கூறி யுள்ளனர்.

11. அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில்
இயலும் பெருந்தெய்வம் யாதும்ஒன்று இல்லை
முயலும் முயலில் முடிவும்மற் றாங்கே
பெயலும் மழைமுகில் பேர்நந்தி தானே.

பொருள் : தூரத்திலும் பக்கத்திலும் எமக்கு முன்னோனாகிய இறைவனது பெருமையை எண்ணினால் ஒத்ததாகச் சொல்லக் கூடிய பெரிய தெய்வம் பிறிதொன்றிலை முயற்சியும் முயற்சியின் பயனும், மழைபொழிகின்ற மேகமும் அவ் இறைவனேயாகும். அவன் பெயர் நந்தி என்பதாகும்.

12. கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும்
எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர்
மண்ணுறு வார்களும் வானுறு வார்களும்
அண்ணல் இவன்என்று அறியகில் லார்களே.

பொருள் : நெற்றிக் கண்ணையுடைய சிவன் ஒப்பற்ற அன்போடு அழியாதிருக்கவும் எண்ணற்ற தேவர்கள் இறந்தாராக, மண்ணிலும் விண்ணிலும் வாழ்கின்ற பலரும் இச்சிவனே அழியாதிருக்க அருள்புரிபவன் என்று இவர் அறியாதிருக்கின்றனரே என் பேதைமை !

13. மண் அளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்
எண் அளந்து இன்னும் நினைக்கிலார் ஈசனை
விண்அளந் தான்தன்னை மேல்அளந் தார்இல்லை
கண்அளந்து எங்கும் கடந்துநின் றானே.

பொருள் : மண்ணை அளந்த மாயவன், அவனது உந்திக் கமலத்தில் உதித்த பிரமன் முதலாய தேவர்களும் சிவனை எண்ணத்தில் அகப்படுத்தி நினையாது இருக்கின்றனர். ஆகாயத்தில் விரிந்து விளங்குபவனை மண்ணுலகோர் கடந்து சென்று அறிய முடியவில்லை. ஆனால் அவன் கண்ணில் கலந்தும் எங்கும் கடந்தும் விளங்குகின்றான்.

14. கடந்துநின் றான்கம லம்மல ராகி
கடந்துநின் றான்கடல் வண்ணம்எம் மாயன்
கடந்துநின் றான்அவர்க்கு அப்புரம் ஈசன்
கடந்துநின் றான்எங்கும் கண்டுநின் றானே.

பொருள் : சிவன் சுவாதிட்டமான மலரிலுள்ள பிரமனைக் கடந்துள்ளான். மணிபூரகத் தானத்திலுள்ள எமது மாயனாகிய விஷ்ணுவைக் கடந்துள்ளான். அவ் இருவர்க்கு மேல் அநாகதச் சக்கரத்திலுள்ள உருத்திரனைக் கடந்துள்ளான். இம் மூவரையும் கடந்து சிரசின் மேல் நின்று எங்கும் கண்காணித்துக் கொண்டுள்ளான்.

15. ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற
வேதியு மாய்விரிந்து ஆர்ந்துஇருந் தான்அருள்
சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்
நீதியு மாய்நித்த மாகிநின் றானே.

பொருள் : சிவன் உலகினைப் படைப்பவனாயும் அழிப்பவனாயும் உடலைக் காத்து மாற்றம் செய்பவனாயும், அவற்றைக் கடந்து நிறைந்து விளங்குகிறான். திருவருள் சோதியாகயும் குவிதல் இல்லாத இயல்போடு ஊழைச் செலுத்துபவனாயும் படைத்துக் காத்து அழித்து உயிர்களுக்கு வினையை ஊட்டுவிப்பான்.

16. கோது குலாவிய கொன்றைக் குழற்சடை
மாது குலாவிய வாள்நுதல் பாகனை
யாது குலாவி அமரரும் தேவரும்
கோது குலாவிக் குணம்பயில் வாரே.

பொருள் : நரம்பு பொருந்திய கொன்றை மலரை அணிந்த சுருண்ட சடையையும் அழகு நிறைந்த ஒளியோடு கூடிய நெற்றியையுடைய உமாதேவியை ஒரு பாகத்தில் உடையவனுமாகிய சிவனை அமரரும் தேவர்களும் குற்றத்தில் பொருந்தி என்ன என்று பாராட்டிக் குணத்தை நாடுவார் ? நாடமாட்டார்.

17. காயம் இரண்டும் கலந்து கொதிக்கினும்
மாயம் கத்தூரி யதுமிகும் அவ்வழி
தேசம் கலந்தொரு தேவன்என்று எண்ணினும்
ஈசன் உறவுக்கு எதிரில்லை தானே.

பொருள் : ஸ்தூல உடம்பும், சூட்சும உடம்பும் ஆகிய இரண்டும் ஒன்றாகக் கலந்த இருப்பினும் மாலை சம்பந்தமுடைய சூக்கும உடம்பில்தான் கானமானது மிகுந்திருக்கும் அக்கானம் அல்லது நாதவழியே மனம் பதிந்து ஆன்மா தன்னை ஒளி வடிவமாகக் காணினும் உடலை விட்டு ஆகாய வடிவினனாகிய சிவனோடு கொள்ளும் தொடர்புக்கு நிகரில்லை கத்தூரி - கானம்.

18. அதிபதி செய்து அளகை வேந்தனை
நிதிபதி செய்த நிறைதவம் நோக்கி
அதுபதி ஆதரித்து ஆக்கமது ஆக்கின்
இதுபதி கொள்என்ற எம்பெரு மானே.

பொருள் : வட திசைக்குத் தலைவனாகச் செய்து அளகாபுரி அரானைச் செல்வத்துக்குத் தலைவனாகச் செய்த நிறைந்த தவத்தின் பயனைக் கருத்தில் கொண்டு, அவ்வாறு வடதிசையைப் போற்றி நீயும் சேமிப்பைக் பெருக்கினால் இவ்வடதிசைக்குத் தலைவனாக நீயும் ஆகலாம் என்று சொல்பவன் எமது தலைவனாவான்.

19. இதுபதி ஏலங் கமழ்பொழில் ஏழும்
முதுபதி செய்தவன் மூதறி வாளன்
விதுபதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி
அதுபதி யாக அமருகின் றானே.

பொருள் : வடக்குத் திசைக்குத் தலைவன் விஷய வாசனைக்கு இடமான ஏழு ஆதாரங்களையும் அழித்துப் பாழ் நிலமாக்கினவன். அவன் பழமையாகவே எல்லாம் அறிபவன். பாவங்களைப் போக்கடிக்கின்ற பலியினைக் கொள்ளும் வடதிசையை இடமாக்கிக் கொண்ட இவரது உண்மையான தவத்தை நோக்கி அத்தவம் செய்வோரையே இடமாக்கிக் கொண்டு எழுந்தருளி யிருக்கின்றான். முதுபதி - சுடுகாடு.

20. முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறனெறி நாடில்
இடியும் முழக்கமும் ஈசர் உருவம்
கடிமலர்க் குன்றம் மலையது தானே.

பொருள் : இறப்பையும் பிறப்பையும் கருவில் உதிக்கும் முன்பே வரையறை செய்து சிவன் பொருந்தியுள்ள நியதியை அறியின் அது விளக்கம் மிக்க கண்மலருக்கு மேல் உள்ள சிரசாகும். அவ் இறைவனது உருவம் ஒளியும் ஒலியுமாகும். இதைத் திருக் கயிலாய மலையாகும் என்று சிலர் கூறுவர்.

21. வானப் பெருங்கொண்டல் மாலயன் வானவர்
ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனைக்
கானக் களிறு கதறப் பிளந்தஎம்
கோனைப் புகுழுமின் கூடலும் ஆமே.

பொருள் : ஆகாயத்திலுள்ள மேகம் போன்ற கரிய திருமால் பிரமன் தேவர் முதலியோரது இழிந்த பிறவியை நீக்குகின்ற ஒப்பற்றவனும், ஆணவமாகிய காட்டு யானையைக் கதறும் படி பிளந்த எம் தலைவனுமாகிய சிவனைத் துதியுங்கள். அவனை அணைந்து உய்யலாம்.

22. மனத்தில் எழுகின்ற மாயநன் னாடன்
நினைத்தது அறிவன் என்னில்தான் நினைக்கிலர்
எனக்குஇறை அன்பிலன் என்பர் இறைவன்
பிழைக்கநின் றார்பக்கம் பேணிநின் றானே.

பொருள் : தியானப் பொருளாக மனத்தில் தோன்றுகின்ற மாயநாடனாகிய சிவன், சீலர் நினைத்ததை அறிவான் என்ற போதும் இவர்தாம் நினையாது இருக்கின்றனர். கடவுளுக்கு என்னிடத்துக் கருணையில்லை என்று சொல்லுவர். இறைவன் தன் கருணைக்கு இலக்கு ஆகாமல் தப்ப நிற்பவர்க்கும் கருணை வழங்கி நிற்கின்றான். அவன் கருணை இருந்தவாறு என்னே !

23. வல்லவன் வன்னிக்கு இறையிடை வாரணம்
நில்லென நிற்பித்த நீதியுள் ஈசனை
இல்லென வேண்டா இறையவர் தம்முதல்
அல்லும் பகலும் அருளுகின் றானே.

பொருள் : சர்வ வல்லமையுடையவனும், அக்கினி தேவனைக் கடலின் மத்தியில் நிலைக்கச் செய்த நீதியுடையவனும் ஆகிய இறைவனை இல்லை என்று கூற வேண்டா. படைத்தல் முதலியவற்றைச் செய்கின்ற கடவுளர்க்கும் தலைவனாய், இரவும் பகலும் ஆன்மாக்களுக்கு அருள் செய்து கொண்டிருக்கின்றான்.

24. போற்றிசைத் தும்புகழ்ந் தும்புனி தன்அடி
தேற்றுமின் என்றும் சிவனடிக்கே செல்வம்
ஆற்றிய தென்று மயலுற்ற சிந்தையை
மாற்றிநின் றார்வழி மன்னிநின் றானே.

பொருள் : போற்றிக் கூறியும் புகழ்ந்து பாடியும் நின்மலனாகிய சிவனது திருவடியை இடைவிடாது தாரகமாகக் கொண்டு தெளியுங்கள். சிவபெருமான் திருவடிக்கே நம் செல்வமெல்லாம் உரியது என்று எண்ணிப் புறம்பொருளில் மயங்கிக் கிடக்கின்ற மனத்தை மாற்றி நிற்பவரிடத்தில் சிவன் நிலைபெற்று நிற்பான்.

25. பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்
இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே.

பொருள் : பிறவாதவனும், யாவற்றையும் ஒடுக்குபவனும், பேரருள் உடையவனும், அழிவில்லாதவனும் எல்லோர்க்கும் இடையறாது இன்பத்தை நல்குபவனும் ஆகிய சிவனை வணங்குங்கள். அவ்வாறு வணங்கினால் நீங்கள் அவனடி மறவாதவர்களாய் அஞ்ஞானம் நீங்கி ஞானப்பேறு
அடையலாம். துறப்பிலி - இடையீடு இல்லாதவன், விருத்தம் - இடையூறு.

26. தொடர்ந்துநின் றானைத் தொழுமின் தொழுதால்
படர்ந்துநின் றான்பரி பாரக முற்றும்
கடந்துநின் றான்கம லம்மலர் மேலே
உடந்திருந் தான்அடிப் புண்ணிய மாமே

பொருள் : ஆன்மாக்களை என்றும் தொடர்ந்து நின்ற சிவனை எப்பொழுதும் வணங்குங்கள். அவ்வாறு வணங்கினால் எங்கும் வியாபித்து உள்ளவனும் விசாலமான உலகமுழுவதும் கடந்து நின்றவனும் சகஸ்ரதன கமலத்தின் மேல் உடனாய் இருந்தவனும் ஆகிய சிவனது திருவடிப் பேறுகிட்டும். கமலகம் மலர்மேல் உட்கார்ந்திருந்தான் மலர்மிசை ஏகினான்

27.சந்தி எனத்தக்க தாமரை வாண்முகத்து
அந்தமில் ஈசன் அருள்நமக் கேயென்று
நந்தியை நாளும் வணங்கப் படும்அவர்
புந்தியின் உள்ளே புகுந்துநின் றானே.

பொருள் : சேர்க்கையின் இடம் என்று சொல்லப்படும் சுவாதிட்டான மலரின் கீழ் ஒளிபொருந்திய முகத்தையுடைய இறுதியில்லாத இறைவனது கருணை நமக்கே உரியது என்று அப்பெருமானைத் தினந்தோறும் வழிபடுவோரது புத்தியில் தானே புகுந்து பெயராது நின்றான். சந்தியெனத்தக்க - அந்தியில் தோன்றும் செவ்வான நிறத்தையுடைய என்னுமாம்.

28. இணங்கிநின் றான்எங்கும் ஆகிநின் றானும்
பிணங்கிநின் றான்பின்முன் னாகிநின் றானும்
உணங்கிநின் றான்அம ராபதி நாதன்
வணங்கிநின் றார்க்கே வழித்துணை யாமே.

பொருள் : எவ்விடத்தும் நீக்கமற நிறைந்துள்ளவனாகிய சிவன் ஆன்மாவோடு பொருந்தியுள்ளான். எல்லாக் காலத்தும் இருப்பவனாகிய பெருமான் மாறுபட்ட தன்மையில் உள்ளான். தேவர் உலகை ஆளும் சிவன் தனக்கெனச் செயலின்றி உள்ளான். அவன் தன்னை வழிபடுவோர்க்கு வழித்துணையாக உள்ளான்.

29. காணநில் லாய்அடி யேற்குஉறவு ஆருளர்
நாணகில் லேன்உன்னை நான்தழு விக்கொளக்
கோணநில் லாத குணத்தடி யார்மனத்து
ஆணியன் ஆகி அமர்ந்துநின் றானே.

பொருள் : சிவத்தை விட்டு மாறிய நினைவு இல்லாத அடியார் மனத்திடை ஆணிவேர் போல் எழுந்தருளியிருப்பவனே ! சீவயாத்திரை முழுவதும் உதவக் கூடியவர் உன்னையன்றி வேறு உறவு யார் உள்ளார் ? ஆகையால இறைவனே அடியேனுக்கு ஞான கோசரப் பொருளாய் விளங்க வேண்டும். அப்போது நான் உன்னைத் தலைவனாக ஏற்றுக் கொள்ள வெட்கப்படமாட்டேன்.

30. வான்நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும்
தான்நின்று அழைக்கும்கொல் என்று தயங்குவார்
ஆன்நின்று அழைக்கு மதுபோல்என் நந்தியை
நான்இன்று அழைப்பது ஞானம் கருதியே.

பொருள் : ஆகாயத்தில் விளங்கித் தானே பொழியும் மழையைப் போன்று இறைவனும் தானே வலியவந்து அருளைப் பொழியும் என்று சிலர் தயக்கம் கொள்வர். பசுவின் கன்று பால் கருதித் தன் தாயை அழைப்பது போல, என் நந்தியை நான் இப்போது அழைப்பது ஞானம் கருதியேயாம்.

31. மண்ணகத் தான்ஒக்கும் வானகத் தான்ஒக்கும்
விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும்
பண்ணகத்து இன்னிசை பாடலுற் றானுக்கே
கண்ணகத் தேநின்று காதலித் தேனே.

பொருள் : இறைவன் பூவுலகில் வாழ்கின்றவர்க்கு மானிட வடிவில் வெறிப்பட்டருளுவான். புவர்லோக வாசிகளுக்கு ஆகாய வடிவினனாக ஒளிவடிவில் வெளிப்பட்டு அருளுவான். சுவர்லோக வாசிகளுக்கு அவ்வண்ணமே தேவவடிவில் வெளிப்பட்டு அருளுவான். சித்திகளை விரும்பினவர்க்குச் சித்தனாக நின்று அருளுவான் நிறைவு பெற்ற மனத்தின் இடமாக நாதத்தை வெளிப்படுத்துபவனாகிய அவனுக்கு அறிவினிடமாக நின்று நான் அன்பு பூண்டிருந்தேன்.

32. தேவர் பிரான்நம் பிரான்திசை பத்தையும்
மேவு பிரான்விரி நீர்உலகு ஏழையும்
தாவு பிரான்தன்மை தானறி வார்இல்லை
பாவு பிரான்அருள் பாடலும் ஆமே.

பொருள் : சிவன் தேவர்கள் அனைவர்க்கும் தலைவன். அவன் மானிடர்க்கும் தலைவன். அவன் சீவ கோடிகளிடம் திசை எட்டு மேல், கீழ் எனப் பத்துப் பக்கங்களிலும் நிறைந்துள்ளான், அவனே விரிந்த நீரால் சூழப்பெற்ற ஏழு உலகங்களையும் கடந்து உள்ளான். இவனுடைய தன் ஒருவரும் அறிபவர் இல்லை. இவ்வண்ணம் வியாபித்துள்ள இறைவனது அருளை எம்மால் எவ்வாறு பாடமுடியும்

33. பதிபல வாயது பண்டுஇவ் வுலகம்
விதிபல செய்தொன்றும் மெய்ம்மை உணரார்
துதிபல தோத்திரம் சொல்லவல் லாரும்
மதியிலர் நெஞ்சினுள் வாடுகின் றாரே.

பொருள் : தொன்று தொட்டே இவ்வுலகில் கடவுளர் பலர் உளர் அக்கடவுளர் வழிபாட்டுக்குக் கிரியை விதிகள் ஏற்படுத்தி உண்மைப் பொருளை உணரார் ஆயினர். துதித்துப் பல தோத்திரப் பாடல்களைப் பாடவல்லாரும் சிவத்தோடு கலந்திருந்து பெறும் உண்மை அறிவைப் பெறாதவராய் உளர். மனத்தினுள் அமைதியின்றி வாடுகின்றார்கள்.

34. சாந்து கமழுங் கவரியின் கந்தம்போல்
வேந்தன் அமரர்க்கு அருளிய மெய்ந்நெறி
ஆர்ந்த சுடரன்ன ஆயிர நாமமும்
போந்தும் இருந்தும் புகழுகின் றேனே.

பொருள் : சிவபெருமான் தேவர்க்கு அருளிய உண்மை நெறி, கலவைச் சாந்தில் வீசுகின்ற கஸ்தூரியின் மணம் போலச் சிவ மணம் வீசும். அவ்வுண்மை நெறி செல்ல அருமையான சுடர் போன்ற ஒளியினை நல்கும் அவனது ஆயிரம் திருநாமங்களையும் நடக்கும் போதும் இருக்கும் போதும் எப்போதும் பரவிக் கொண்டிருக்கிறேன். சாந்து - கலவைச் சந்தனம்.

35.ஆற்றுகி லாவழி யாகும் இறைவனைப்
போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில்
மேற்றிசைக் கும்கிழக் குத்திசை எட்டொடு
மாற்றுவன் அப்படி ஆட்டவும் ஆமே.

பொருள் : பிறர் படைக்காத சன்மார்க்க நெறியில் விளங்கும் சிவனைப் போற்றுங்கள். போற்றிப் புகழுங்கள். அவ்வாறு புகழ்ந்தான் ஈசான திக்குக்கும் சிரசில் கிழக்கு முதலாகவுள்ள அஷ்டதள கமலத்தை நிமிரும்படி செய்வன். அவ்வாறு உங்களது ஈசான முகம் விளங்கவும் ஆகும். மேல்திசை - உச்சி இங்கு விளங்குவது ஈசானமுகம்.

36. அப்பனை நந்தியை ஆரா அமுதினை
ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை
எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால்
அப்பரிசு ஈசன் அருள்பெற லாமே.

பொருள் : உயிருக்குத் தந்தையை இறைவனைத் தெவிட்டாத அமுதம் போன்றவனை, தனக்கு ஒப்பில்லாதவனை, வேண்டுவார்க்கு வேண்டுவன ஈயும் வள்ளலை, ஊழியைச் செய்கின்ற முதல்வனை எவ்வகையாயினும், வழிபடுங்கள். வழிபட்டால் அவ்வகையே இறைவனது அருளையே பெறலாகும்.

37. நானும்நின்று ஏத்துவன் நாள்தொறும் நந்தியைத்
தானும்நின் றான்தழல் தான்ஒக்கும் மேனியன்
வானில்நின் றார்மதி போல்உடல் உள்ளுவந்து
ஊனில்நின் றாங்கே உயிர்க்கின்ற வாறே.

பொருள் : நாள்தோறும் இறைவனை நானும் நிலையாக இருந்து வழிபடுவேன். அக்கினி போன்ற திருமேனியை யுடைய இறைவனும் வெளிப்பட்டு நின்றான். அவன் வானத்தில் கலைகள் நிறைந்த சந்திரனைப் போல உடல் இடமாக மகிழ்ந்து ஊன் பொருந்திய உடலில் சகஸ்ரதள கமலத்தில் பிராண ரூபமாய் இருக்கிற விதம் இதுவாகும்.

38. பிதற்றொழி யேன்பெரி யான்அறி யானைப்
பிதற்றொழி யேன்பிற வாஉரு வானைப்
பிதற்றொழி யேன்எங்கள் பேர்நந்தி தன்னைப்
பிதற்றொழி யேன்பெரு மைத்தவன் நானே.

பொருள் : பெரியவனும் அரியவனும் ஆகிய சிவனைத் தோத்திரம் செய்வதை விடமாட்டேன். ஒரு தாயின் வயிற்றில் பிறவாதவனும் உருவமுடையவனுமாகிய சிவனைத் தோத்திரம் செய்வதை விடமாட்டேன். எங்களுடைய பெருமையான சிவனைத் தோத்திரம் செய்வதை விடமாட்டேன். எப்போதும் தோத்தரித்துக் கொண்டு இருக்கும் நானே பெரிய தவம் செய்பவனானேன். இந்நான்கு நெறியினையும் முறையே சீலம், நோன்று, செறிவு, அறிவெனக் கூறுவர்.

39. வாழ்த்தவல் லார்மனத்து உள்ளுறு சோதியைத்
தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை
ஏத்தியும் எம்பெரு மான்என்று இறைஞ்சியும்
ஆத்தம்செய்து ஈசன் அருள்பெற லாமே.

பொருள் : வாயாரப் புகழ்ந்து வாழ்த்தவராது மனத்தினுள் விளங்கும் சோதியும் குற்றங்களைப் போக்கும் தீர்த்தம் போன்றவனும் அவ் ஆகாய மண்டலத்தில் வெளிப்படுகின்ற தேவ தேவனாகிய இறைவனைத் துதித்தும் எம் தலைவனே என்று வணங்கியும் நேசித்து வந்தால் அவ் இறைவனது அருளைப் பெறுதல் எளிதாகும். ஆத்தன் - நண்பன் எனப்படுவன்.

40. குறைந்து அடைந்த ஈசன் குரைகழல் நாடும்
நிறைந்து அடை செம்பொனின் நேர்ஒளி ஒக்கும்
மறைஞ்சுஅடம் செய்யாது வாழ்த்தவல் லார்க்குப்
புறஞ்சடம் செய்வான் புகுந்துநின் றானே.

பொருள் : சீவர்களின் குறையை நினைந்து சென்று இறைவனது ஒலிக்கின்ற திருவடியை நீங்கள் நாடுங்கள். அது பூரணமாகப் பெற்ற சிவந்த பொன் போன்ற ஒளியினை ஒத்திருக்கும். வஞ்சனை கொண்டு பிடிவாதம் செய்யாமல் அத்திருவடியை வணங்குவார்க்கு உள்ளத்தே புகுந்து வணங்கும் சிவன் உடம்பைப் புறம் என்று உணர்த்துவான். ஏக்கற்றவர் - ஆசையால் தாழ்ந்தவர்.

41. சினஞ்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப்
புனஞ்செய்த நெஞ்சிடைப் போற்றவல் லார்க்குக்
கனஞ்செய்த வாள்நுதல் பாகனும் அங்கே
இனஞ்செய்த மான்போல் இணங்கிநின் றானே.

பொருள் : திருப்பாற் கடலில் சீறி எழுந்த நஞ்சை உண்டருளிய மகாதேவனைத் திருத்தம் செய்த விளைநிலம் போன்ற மனத்தில் வைத்து வணங்க வல்லார்க்கு நாத ஒலி காட்டி (ஒளி பொருந்திய நெற்றியை யுடைய) உமையொரு பாகனும் அவர் மனத்தில் பெண்மானைக் கண்ட ஆண்மானைப் போன்று கூடி நின்றான்.

42. போய்அரன் தன்னைப் புகழ்வார் பெறுவது
நாயக னான்முடி செய்தது வேநல்கும்
மாயகம் சூழ்ந்து வரவல்ல ராகிலும்
வேயன தோளிக்கு வேந்தொன்றும் தானே.

பொருள் : சிவனிடம் அடைக்கலம் புகுந்து தோத்திரம் செய்வார்பெறும் பயனாவது நான்கு முடிகளையுடைய பிரமன் படைத்தபடியே மீளமீளப் படைக்கும் மாயையோடு கூடி சம்சாரப் பந்தத்தில் உழல்பவராயினும் திரட்சியான தோள்களையுடைய உமாதேவியின் தலைவனான் சிவன் வந்து பொருந்தலாம்.

43. அரனடி சொல்லி அரற்றி அழுது
பரனடி நாடியே பாவிப்ப நாளும்
உரன்அடி செய்துஅங்கு ஒதுங்கவல் லார்க்கு
நிரன்அடி செய்து நிறைந்து நின்றானே.

பொருள் : இறைவனது திருவடியைப் புகழ்ந்து பாடி, அன்பினால் கசிந்துருகி, இடைவிடாது திருவருமைச் சிந்தித்து ஞானத்தை நிலைக்கும்படி செய்து அங்கே நிலைத்திருப்பவர்க்கு அவரது மனத்தைச் செம்மை செய்து பூரணமாக நிறைந்திருப்பான். திரு ஐந்து எழுத்தை தூய மனத்துடன் இடையறாது வழுத்தி எனினுமாம்.

44. போற்றிஎன் பார்அம ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்அசு ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்மனி தர்புனி தன்அடி
போற்றிஎன் அன்புள் பொலியவைத் தேனே.

பொருள் : தேவர்கள் சுழுமுனையில் விளங்கும் ஏகபாத சிவனை வாழ்க என்று வாழ்த்துவார்கள். அசுரர்கள் அவனை வாழ்க என்று வாழ்த்துவார்கள். மனிதர்கள் அவன் திருவடி வாழ்க என்று கூறுவார்கள். நான் அவனை வணங்கி என் அன்பினுள் விளங்குமாறு நிலைபெறச் செய்தேன். இன்பம். பொருள், அறம், வீடு, இவைகளை முறையே மேற்கண்டவர்கள் விரும்பி வழிபடுவர் என்லாம்.

45. விதிவழி அல்லதுஇல் வேலை உலகம்
விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை
துதிவழி நித்தலும் சோதிப் பிரானும்
பதிவழி காட்டும் பகலவன் ஆமே.

பொருள் : கடல்சூழ்ந்த உலகம் இறைவன் விதித்த முறையின்படி நடப்பதன்றி வேறு முறையால் அல்ல. இவ்விதிமுறைக்கு நாம் அடையும் போகம் விரோதம் இல்லை. சோதி வடிவான் இறைவனும் நாடோறும் துதிவழியாக வீட்டு நெறியை அளிக்கும் சிவ சூரியன் ஆவான்.

46. அந்திவண் ணாஅர னேசிவ னேஎன்று
சிந்தைசெய் வண்ணம் திருந்தடி யார்தொழ
முந்திவண் ணாமுதல் வாபர னேஎன்று
புந்தி வண்ணன்எம் மனம்புகுந் தானே.

பொருள் : இறைவனையே சிந்தித்திருக்கும் வண்ணம் மனம் திருந்திய அடியார்கள் செம்மேனி யம்மானே எப்பொருளுக்கும் இறைவனே மங்கள வடிவினனே என்று தொழ, பழமையானவனே, முதல்வனே, மேலானவனே என் நான் தொழ ஞானசொரூபியாய் எம் மனத்தில் எழுந்தருளியிருந்தான்.

47. மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்
நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்
பனையுள் இருந்த பருந்தது போல
நினையாத வர்க்கில்லை நின்இன்பம் தானே

பொருள் : இல்லறத்திலிருந்து இறைபணி செய்பவர் பெரிய தவத்தை உடையவர்க்கு ஒப்பாவர். இடைவிடாது தியானத்தில் இருப்பவர், இறைவனது அன்பினுள் பொருந்தியிருப்பர். பனை மரத்தில் உள்ள பருந்து உணவெடுக்க வெளியே வரும் நேரத்தைத் தவிர பனையிலே ஒடுங்கியிருப்பது போல உலகில் ஈடுபட வேண்டிய நேரத்தில் ஈடுபட்டு மற்ற நேரங்களில் சிவ சிந்தனையில் ஈடுபடாதவர்க்கு இறையின்பம் கிட்டாது. பழத்தையுடைய பனைமரத்தின்மேல் பருந்து இருந்தாலும் பழத்தை நினைப்பதில்லை; இழிந்த பொருள்களை உண்ண நினைக்கும்.

48. அடியார் பரவும் அமரர் பிரானை
முடியால் வணங்கி முதல்வனை முன்னிப்
படியார் அருளும் பரம்பரன் எந்தை
விடியா விளக்கென்று மேவிநின் றேனே.

பொருள் : அடியார்கள் வணங்கும் தேவதேவனை என்னுடைய சிரசால் வணங்கி அப்பெருமானை நினைந்து, பூமியில் உள்ளார்க்கு அருளும் மேலானவனாகிய எந்தையை அணையாத விளக்கு என்று எண்ணிப் பொருந்தியிருந்தேன்.

49. நரைபசு பாசத்து நாதனை உள்ளி
உரைபசு பாசத்து ஒருங்கவல் லார்க்குத்
திரைபசு பாவச் செழுங்கடல் நீந்திக்
கரைபசு பாசம் கடந்துஎய்த லாமே.

பொருள் : பழமையான சீவன் பாசம் ஆகியவற்றுக்கு நாதனாகிய சிவனை நினைந்து, பசு என்று பாசம் என்றும் சொல்லப்பெறுகின்றவற்றின் இயல்பை அறிந்து சிவனோடு ஒன்று கூடவல்லார்க்கு அலை போன்று வரும் பசுக்கள் செய்யும் பாவமாகிய கடலை நீந்தி, பசு பாசங்களைக் கடந்து முத்திக் கரையை அடையலாம். பசு கட்டப்பட்ட சீவன், உயிர். பாசம் - தளை (ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலம்)

50. சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான்என்று
பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்துநின்று
ஆடுவன் ஆடி அமரர்பி ரான்என்று
நாடுவன் நான்இன்று அறிவது தானே.

பொருள் : இறைவனது திருவடியைச் சிரசில் சூடிக் கொள்வேன். மனத்தில் வைத்துப் போற்றுவேன். தலைவன் என்று பாடுவேன். பல மலர்களை அர்ச்சித்து வணங்கி நின்று கூத்தாடுவேன். அவ்வாறு ஆடி, அவனே தேவதேவன் என்று விரும்புவேன். நான் இன்று அவனைப் பற்றி அறிந்து செய்வது இவ்வளவு ஆகும்.

2. வேதச் சிறப்பு (வேதத்தின் பெருமை)

51. வேதத்தை விட்ட அறம்இல்லை வேதத்தின்
ஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே.

பொருள் : வேதத்தில் சொல்லப்படாமல் விட்டுப் போன நீதி ஒன்றும் கிடையாது. நாம் ஓதத்தக்க நீதிகள் எல்லாம் வேதத்தில் உள்ளன. அதனால் அனுபூதிமான்கள் தர்க்க வாதத்தை விடுத்து எல்லாப் பொருளும் நிரம்பிய வேதத்தை ஓதியே முத்தி அடைந்தார்கள். திருக்குறளே செந்தமிழ் மறை என்று கழகப் பதிப்பில் கண்டுள்ளது. ஆனால் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற வடமொழி வேதங்களைப் பற்றி தான் ஆசிரியர் கூறுகின்றார்.

52. வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே.

பொருள் : வேதங்களை ஓசையளவில் எடுத்தும் படுத்தும் சொல்கின்றவன் அவற்றை அறிந்தவன் ஆவான். வேதத்தை உரைத்த இறைவன் பிரமப் பொருள் விளங்கவும், அவன் அந்தணர் வேள்வி செய்வதன் பொருட்டும், உண்மைப் பொருளை உணர்த்தவும் வேதத்தைக் கூறியருளினான். ஆரிய வேதம் உரைத்தவன் பிரம்மா.

53. இருக்குஉரு வாம்எழில் வேதத்தின் உள்ளே
உருக்குஉணர் வாய்உணர் வேதத்துள் ஓங்கி
வெருக்குஉரு வாகிய வேதியர் சொல்லும்
கருக்குஉரு வாய்நின்ற கண்ணனும் ஆமே.

பொருள் : மந்திர வடிவான அழகிய வேதத்தில் உள்ளத்தை உருக்குகின்ற உணர்வாய் உணரப்படுகின்ற வேதத்தினில் விளங்கி, அச்சத்தை விளைவிக்கும் கம்பீரத் தொனியுடைய வேத மந்திரங்களாய், சூக்கும நிலையில் நின்றவன் முக்கண்ணையுடைய சிவபெருமான் ஆவான். இருக்கு என்று சொல்லப்படுகின்ற சுலோகங்களையுடையது ஆரிய வேதம்.

54. திருநெறி யாவது சித்துஅசித்து அன்றிப்
பெருநெறி யாய் பிரானை நினைந்து
குருநெறி யாம்சிவ மாம்நெறி கூடும்
ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே.

பொருள் : தெய்வீக நெறியாவது, அறிவு அறியாமையற்ற வீடு பேறாய் உள்ள இறைவனை எண்ணி, குருவால் உணர்த்தப்பெறும் நெறியாய்ச் சிவத்தைப் பொருந்தும் ஓர் ஒப்பற்ற நெறியாகும். இந் நெறியினையே சிறப்பாக வேத முடிவான உபநிடதம் கூறும். தெய்வீக நெறியாவது குரு அருளால் சிவனடி சேர்ப்பிக்கும் நெறி என்று உபநிடதம் கூறும்.

55. ஆறங்க மாய்வரும் மாமறை ஓதியைக்
கூறங்க மாகக் குணம்பயில் வாரில்லை
வேறங்க மாக விளைவுசெய்து அப்புறம்
பேறங்க மாகப் பெருக்குகின் றாரே.

பொருள் : ஆறு அங்கங்களாக ஆராயப் பெற்று வரும் வேதத்தை அருளிச் செய்தவனை உடம்பின் பகுதியாகக் கொண்டு அவனது இயல்பை உணர்வார் இல்லை. தம்மின் வேறான அங்கமாக வைத்து வழிபட்டு, பிறகு தமது இஷ்ட காமியங்களைப் பெருக்கிக் கெடுகின்றார்களே. ஆறங்கமாவன; சிட்சை, கற்பகம், வியாகரணம், சந்தோவிசிதி, சோதிடம், நிருத்தம் என்பன.

இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Mon Mar 26, 2012 2:11 pm

56. பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர்
ஆட்டும் அறாத அவனியில் மாட்டாதார்
வேட்டு விருப்பார் விரதமில் லாதவர்
ஈட்டும் இடஞ்சென்று இகலல்உற் றாரே.

பொருள் : பாடல்களும், அவற்றுக்கான இசையும், அலைந்து ஆடுகின்ற ஆடல் மகளிரின் ஆட்டமும் நீங்காத உலகில் வேதநெறி காட்டும் உண்மை நெறிநில்லார், வேள்வி செய்யும் விருப்பம் உடையவராய் விரதமில்லாதவர் ஆவர். அவர் புறத்தே சென்று மாறுபாடுற்று அழிகின்றனர். பாட்டும் இசையும் ஆட்டமும் இறைவனது உண்மையை உணர அமைக்கப் பெற்றவை. இவ்வுண்மையை உணராமல் புறத்தோற்றத்தில் மயங்கிக் கெடுவதாகக் கூறுகின்றார்.

3. ஆகமச் சிறப்பு (ஆகமத்தின் பெருமை)

57. அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன்
அஞ்சொடு இருபத்து மூன்றுள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத்து அறுவரும்
அஞ்சா முகத்தில் அரும்பொருள் கேட்டதே.

பொருள் : கரிய நிறமுடைய உமாதேவியை இடப்பாகத்தில் உடையவன், அருளிச் செய்த ஆகமங்கள் இருபத்தெட்டு உள்ளன. வணக்கத்தைச் செய்து பிரணவர் முதல் மகாளர் ஈறாக அறுபத்தறுவரும் ஐந்தாவது முகமாகிய ஈசான முகத்திலிருந்து அவற்றின் பொருளைக் கேட்டனராம். உமாபாகன் இருபத்தெட்டு ஆகமங்களை அறுபத்தாறு பேர்களுக்கு ஈசான முகத்திலிருந்து உபதேசித்தருளினான். ஐந்து முகங்களாவன; சத்தியோபாதம், வாம வேதம், அகோரம், தற்புருடம், ஈசானம் என்பனவாம்.

58. அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் நானே.

பொருள் : இறைவன் ஆன்மாக்கள்மீது வைத்த கருணையால் கூறியருளிய ஆகமங்கள் எண்ணுவதற்கு இயலாது. இருபத்தெட்டுக் கோடியே நூறாயிரமாகும். இவற்றின் வழி தேவர்கள் இறைவனது பெருமையைச் சொன்னார்கள். நானும் அவ்வழியைப் பின்பற்றி அப் பொருளை வணங்குகிறேன். இந்த எண் ஆகமத்திலுள்ள கிரந்தங்களைக் குறிக்கின்றன. கிரந்தங்கள் - சூத்திரங்கள்.

59. பண்டிதர் ஆவார் பதினெட்டுப் பாடையும்
கண்டவர் கூறும் கருத்தறி வார்என்க
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்
அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே.

பொருள் : அறிஞர் என்பவர் பதினெட்டு மொழிகளும் தெரிந்தவர். அத்தகையோர் ஆகமம் கூறும் உண்மையை நன்றாக அறிவர். அறிஞர்கள் அறிந்த பதினெட்டு மொழிகளும் அண்டங்களுக்கு முதல்வனாகிய சிவன் வெளிப்படுத்திய அறத்தைச் சொல்லுவனவாம். பதினெட்டு மொழிகளிலும் சிவன் சொன்ன அறமே உள்ளது.

60. அண்ணல் அருளால் அருளும்திவ் யாகமம்
விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரிது
எண்ணில் எழுபது கோடிநூ றாயிரம்
எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே.

பொருள் : இறைவன் கருணையால் அருளிச் செய்த தெய்வத் தன்மை பொருந்திய ஆகமம், வானுலக வாசிகளாகிய தேவர்களுக்கும் அனுபவத்துக்கு வாராதது. அவற்றைக் கணக்கிடின் எழுபது கோடியே நூறாயிரமாகும். அவ்வாறு கணக்கிட்டு அறிந்தாலும் அனுபவன் இன்றேல் அவை நீரின்மேல் எழுத்துப் போலப் பயன்படாது போகும். ஆகமத்தை அனுபவமின்றி அறிந்தால் பயனில்லை.

61. பரனாய் பராபரம் காட்டில் உலகில்
தரனாய்ச் சிவதன்மம் தானேசொல் காலத்து
அரனாய் அமரர்கள் அர்ச்சிக்கும் நந்தி
உரனாகி ஆகமம் ஓங்கிநின் றானே.

பொருள் : மிக மேன்மையானவனாய்ப் பரஞானம் அபரஞானம் ஆகிய இரண்டையும் அறிவித்து, உலகைத் தாங்குபவனாய் சிவ புண்ணியத்தைத் தான் அருள் செய்யும்போது அரனாய், தேவர்கள் வணங்கி வழிபடும் சிவபெருமான் அறிவாய் ஆகமத்தில் விளங்குகின்றான். பராபரம் - பரஞானம், அபரஞானம். பரஞானம் - சிவஞானம், அபரஞானம் - கலைஞானம்.

62. சிவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற
நவஆ கமம்எங்கள் நந்திபெற் றானே.

பொருள் : சிவமாகிய பரம்பொருளிடமிருந்து சத்தியும் சதாசிவமும் மனத்துக்கு உவந்த மகேசர் உருத்திரர் தவத்தைச் செய்த திருமால் பிரமன் ஆகியோர் அவரவர் அறிவில் விளங்கிய ஒன்பது ஆகமங்களும் எங்களது குருநாதனாகிய நந்தியெம் பெருமான் வழிமுறையாகப் பெற்றவையாகும். பரமசிவத்திடமிருந்து பெற்ற ஆகமத்தைக் குருநாதனாகிய நந்தியெம் பெருமான் பெற்றான்.

63. பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தியம் வாதுளம்
மற்றுஅவ் வியாமளம் ஆகும்கா லோத்தரம்
துற்றநல் சுப்பிரம் சொல்லு மகுடமே.

பொருள் : குருபரம்பரையில் பெற்ற ஆகமங்கள் காரணம், காமிகம், பொருந்திய நல்லவீரம், உயர்ந்த சிந்தியம், வாதுளம், மேலும் தந்திர சாத்திரமாகிய யாமளம், நன்மையாகும் காலோத்திரம், மேற்கொண்டு ஒழுகவல்ல நல்ல சுப்பிரம், சொல்லத் தகுந்த மகுடம் என்ற ஒன்பது மாகும். 1. காரணம், 2. காமிகம், 3. சிந்தியம், 4. சுப்பிரம், 5. வீரம், 6. மாதுளம், 7. காலோத்திரம், 8. மகுடம், 9. யாமளம். இவையே நந்தியெம்பெருமான் பெற்ற ஒன்பது ஆகமங்களாகும்.

64. அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்ணிலி கோடி தொகுத்திடும் ஆயினும்
அண்ணல் அறைந்த அறிவுஅறி யாவிடின்
எண்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே.

பொருள் : இறைவன் அருளால் வந்த சிவாகமங்கள் கணக்கற்ற கோடிகளாகத் தொகுத்துச் சொல்லப்பட்டிருப்பினும், இறைவன் சொன்ன உண்மைப் பொருளை உணராவிடின் அவை அனைத்தும் நீர்மேல் எழுத்துப் போலப் பயனற்றவையாகும்.

65. மாரியுங் கோடையும் வார்பனி தூங்கநின்று
ஏரியும் நின்றங்கு இளைக்கின்ற காலத்து
ஆரிய மும்தமி ழும்உட னேசொலிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே.

பொருள் : மழைக் காலமும் கோடைக் காலமும் பனிக்காலமும் இலயப்பட்டு நின்று, ஏரியும் வறட்சியடைந்திருக்கும் ஊழிக்காலத்து, வடமொழியையும் தமிழ் மொழியையும் ஏக காலத்து உபதேசித்து, சிருஷ்டி தொடங்குமுன் பராசத்திக்குச் சிவபெருமான் அருள் புரிந்தான்.

66. அவிழ்க்கின்ற வாறும் அதுகட்டு மாறும்
சிமிட்டலைப் பட்டுயிர் போகின்ற வாறும்
தமிழ்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலும் ஆமே.

பொருள் : ஆன்மாக்களைப் பந்தத்தினின்றும் நீக்கும் முறைமையினையும் பந்தத்தில் விடுகின்ற முறைமையினையும் கண் இமைத்தல் ஒழிந்து உயிர்போகின்ற முறைமையினையும், தமிழ்சொல் வடசொல் ஆகிய இரண்டாலும் உணர்ந்துகின்ற சிவனை உணர முடியுமோ? முடியாது. பந்தமும்வீடும் அருளுகின்ற சிவனை ஆகம அறிவினால் அறிய முடியாது.

4. குரு பாரம்பரியம் (குரு மரபு)

67. நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்
என்றிவர் என்னோடு எண்மரும் ஆமே.

பொருள் : திருநந்தி தேவனது அருளைப் பெற்ற குரு நாதர்களை ஆராயின் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்ற நால்வரும் சிவயோக மாமுனிவரும் திரு அம்பலத்தில் திருக்கூத்தைத் தரிசித்த பதஞ்சலி வியாக்ரபாதர் ஆகியோரும் என்னோடு எட்டுப் பேர்கள் ஆவார்கள். சிவனிடம் உபதேசம் பெற்ற குருநாதர் எண்மராவர்.

68. நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருளாவது என்செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட நானிருந் தேனே.

பொருள் : சிவனது அருளால் குருநாதன் என்ற தகுதியை அடைந்தோம். அவனது அருளால் மூலாதாரச் சக்கரத்தில் விளங்கும் உருத்திரனை நாடினோம். உலகில் சிவனது அருள் எல்லாவற்றையும் செய்யும் அவன் வழிகாட்ட மூலாதாரத்திலிருந்து மேலேறிச் சிரசின் மேல் நிலை பெற்றிருந்தேன். இரண்டாம் அடிக்குப் பொருளாக இறந்த மூலனுடைய தேகத்தில் புகுந்ததைக் கூறுவர்.

69. மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துரு காலாங்கி கஞ்ச மலையனோடு
இந்த எழுவரும் என்வழி யாமே.

பொருள் : திருமந்திரம் உபதேசம் பெற்ற வழிமுறையாவது மாலாங்கள், இந்திரன், சோமன், பிரமன், உருத்திரன், கட்டுத்தறி போன்று அசையாதிருக்கும் காலாங்கி, கஞ்ச மலையனோ ஆகிய இவ் எழவரும் என்வழி வந்த மாணக்கர்களாம். திருமூலருடைய ஏழு மாணவர்கள். ஆவடுதுறையில் உடன் இருந்தவர்கள். இவர் துறவிகள்.

70. நால்வரும் நாலு திசைக்குஒன்று நாதர்கள்
நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு
நால்வரும் நான்பெற்றது எல்லாம் பெறுகென
நால்வரும் தேவராய் நாதர்ஆ னார்களே

பொருள் : சனகாதி நால்வரும் நான்கு திக்குகளுக்கு ஒரு நாதராய், அந்நால்வரும் தாம் பெற்ற பல்வேறு வகை அனுபவங்களைக் கொண்டு அவர் தாம் தாம் பெற்ற அனுபவத்தைப் பிறர்க்கு எடுத்து அருளி, அந்நால்வரும் மேன்மையுடையவராய் குருநாதர் ஆனார்கள்.

71. மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்
செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன்
கழிந்த பெருமையைக் காட்டகி லானே.

பொருள் : சிவயோக, மாமுனி, பதஞ்சலி, வியாக்கிர பாதர் ஆகிய மூவருக்கும் சனகாதியர் நால்வர்க்கும் சிவபெருமான் உபதேசம் செய்தது இறப்பையும் பிறப்பையும் நீங்கும்படி செய்யும் பெருமையுடைய நெறியாகும். செழுமையான சோம சூரியாக்கினி வடிவான பெருமான் குறைந்த பெருமையைக் கெடுப்பவன் அல்லன். நால்வர்க்கு அருளியது துறவு நெறி. மூவர்க்கு அருளியது அருள் நெறி இரு நெறியிலும் பிறவிநீக்கம் ஒன்றே குறிக்கோள். இரு நெறியையும் இணைப்பதே திருமூலர் நெறி.

72. எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையும்
செழுந்தண் நியமங்கள் செய்யுமின் என்றண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே
அழுந்திய நால்வர்க்கு அருள்புரிந் தானே.

பொருள் : எட்டுத் திக்குகளிலும் பெருமழை பெய்தாலும் வளர்ச்சியைத் தரும் அருள்மிகு கடன்களைச் செய்யுங்கள் என்று சிவபெருமானது சிறந்த குளிர்ச்சியான பவளம் போலும் சிவந்த சடையிடம் காதல் கொண்டு பொருந்தியிருந்த சனகாதி நால்வர்க்கும் அருள் புரிந்தான். சடைமுடியில் அழுந்துதல்- யோகியர் இரவில் விளங்கும் செவ்வொளியில் அழுந்தி யிருத்தல்.

5. திருமூலர் வரலாறு (ஆசிரியர் வரலாறு)

(திருமூலர் மாணாக்கர்களுக்குத் தம் வரலாறு கூறுதல்)

73. நந்தி திருவடி நான்தலை மேற்கொண்டு
புந்தியின் உள்ளே புகப்பெய்து போற்றிசெய்து
அந்தி மதிபுனை அரனடி நாள்தொறும்
சிந்தைசெய்து ஆகமம் செப்பலுற் றேனே.

பொருள் : என் குருநாதனாகிய நந்தியின் இரு திருவடிகளையும் என் சிரசின்மேல் கொண்டு அறிவினுள்ளே நிறுத்தி வணக்கம் செய்து, முச்சந்தி வீதியில் பொருந்திய மதிசூடிய சிவ பெருமானது திருவடியினைத் தினந்தோறும் தியானித்துத் திருமந்திரமாகிய ஆகமத்தைச் சொல்லத் தொடங்குகிறேன். அந்தி முச்சந்தி, வளரும் தன்மையுள்ள மதி எனினுமாம்.

74. செப்பும் சிவாகமம் என்னும்அப் பேர்பெற்றும்
அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்
தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்
ஒப்பிடல் எழுகோடி யுகம்இருந் தேனே.

பொருள் : சிவ ஆகமம் கூற வல்லவன் என்னும் அத் தகுதியைப் பெற்றும், அத் தகுதியை அருளும் குருநாதரின் திருவடியைப் பெற்றும், சிரசின் மேல் குறைவே யில்லாத ஆகாயப் பெருவெளியில் ஒப்பற்ற ஒளி அணுக்களின் அசைவினைத் தரிசித்தபின் ஒப்பில்லாத ஏழு ஆதாரங்களும் விளங்குமாறு பொருந்தியிருந்தேன்.

(பொன்னம்பலமும் ஆருயிர்களின் நெஞ்சத் தாமரையும் எனப் பொருள் கொள்வாரும் உளர்)

75. இருந்தஅக் காரணம் கேள்இந் திரனே
பொருந்திய செல்வப் புவனா பதியாம்
அருந்தவச் சொல்வியைச் சேவித்து அடியேன்
பரிந்துடன் வந்தனன் பத்தியி னாலே.

பொருள் : இந்திரனே ! இங்ஙனம் ஏழு ஆதாரங்களையும் பொருந்தி இருந்ததற்குரிய காரணத்தைக் கேட்பாயாக. அங்குப் பொருந்திய புவனங்களுக்குத் தலைவியாகிய அருமையான தவத்துக்குரிய செல்வியைச் சிதாகாயப் பெருவெளியில் பத்தியினாலே அவளை அடைந்து தரிசித்தபின் நான் அவளுடன் திரும்பினேன். இந்திரன் என்பவர் மாணாக்கர்களுள் ஒருவர். நான் தென்னாட்டில் வந்து தங்கியிருப்பதற்குரிய காரணம் யாதெனில் இங்குத் தவஞ்செய்யும் அருந்தவச் செல்வியை வணங்குதற்கேயாம் என்றும் பொருள் கொள்ளலாம்.

76. சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்
மிதாசனி யாதிருந் தேன்நின்ற காலம்
இதாசனி யாதிருந் தேன்மனம் நீங்கி
உதாசனி யாதுகூட னேஉணர்ந் தோமால்.

பொருள் : சாதாக்கியத் தத்துவத்தையும் முத்தமிழ் மொழியையும் வேதத்தையும் பெரிதும் நுகர்ந்திருந்தேன். அவ்வாறு அப்பொருள்களை நுகர்ந்த காலத்தில் நன்மையைத் தருவதான உணவின்றி இருந்தேன். அதனால் மனம் தெளிந்து பாராமுகமாய் இருந்தமையின் உண்மைப் பொருளை உணர்ந்தேன்.

படைப்புக் காலத்தில் சதாசிவனுடைய தத்துவமாகிய சாதாக்கிய தத்துவத்தினின்றும் வெளிப்பட்டது தமிழ் வேதம் என்க. மித+அசனி = மிதாசனி = அளவாய் உண்போன்.

77. மாலாங்க னேஇங்கு யான்வந்த காரணம்
நீலாங்க மேனியன் நேரிழை யாளொடு
மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்
சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே.

பொருள் : மாலாங்கனே ! இத்தென் திசைக்கு யான் வந்த காரணம் என்னவெனில் நீலநிறமான் திருமேனியையும் நேர்மையான அணிகளையும் உடைய சிவகாமி அம்மையோடு, மூலாதாரத்தை இடமாகக் கொண்டு சதாசிவம் முடிய நடத்தருளும் ஐந்தொழிற் கூத்தினது இயல்பினை விளக்கும் வேதத்தை உலகினார்க்குச் சொல்ல வந்தேன்.

78. நேரிழை யாவாள் நிரதிச யானந்தப்
பேருடை யாளென் பிறப்பறுத்து ஆண்டவன்
சீருடை யாள்சிவன் ஆவடு தண்டுறை
சீருடை யாள்பதம் சேர்ந்திருந் தேனே.

பொருள் : நேர்மையான அணிகளையுடைய சத்தி மேலான சிவானந்த வல்லி என்னும் திருநாமம் உடையவள். என்னுடைய பிறவியின் காரணத்தை வேரொடு களைந்து ஆட்கொண்டவள். எல்லையற்ற சிறப்பினை யுடையவள். சிவபெருமானோடு திருவாவடுதுறையுள் எழுந்தருளியிருப்பவள். அவளுடைய திருவடியைச் சேர்ந்திருந்தேன். அதாவது இடையறாது நினைந்திருந்தேன்.

79. சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச்
சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்துறை
சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலில்
சேர்ந்திருந் தேன்சிவ நாமங்கள் ஓதியே.

பொருள் : சிவமங்கைதன் பங்கனாகிய சிவபெருமானைக் கூடியிருந்தேன். சிவனுக்குச் சிறப்பாக உடைய திருவாவடுதுறைக்கண் கூடியிருந்தேன். அத்திருக்கோவிலின் மேல்பாலுள்ள திரு அரசமரத்து நிழலில் கூடியிருந்தேன். சிவபோதி - சிவன் கோவிலில் உள்ள அரசு. சிவனது திருநாமத்தைச் சிந்தித்தருந்தேன்.

80. இருந்தேன்இக் காயத்தே எண்ணிலி கோடி
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே.

பொருள் : இவ்வுடம்பினுள் எண்ணற்ற காலம் தங்கியிருந்தேன். இரவும் பகலும் அற்ற சுயம்பிரகாச வெளியில் தங்கியிருந்தேன். தேவர்களும் துதிக்கும்படியான இடத்தில் பொருந்தியிருந்தேன். என் குருநாதராகிய நந்தியின் இரு திருவடிக்கீழ் அமர்ந்திருந்தேன்.

81. பின்னைநின்று என்னே பிறவி பெறுவது
முன்னைநான் றாக முயல்தவம் செய்கிலர்
என்னைநான் றாக இறைவன் படைத்தனன்
தன்னைநன் றாகத் தமிழ்செய்யும் ஆறே.

பொருள் : பின்னும் தயங்கிநின்று ஏன் பிறவியைப் பெறுகிறார்கள் ? அவர்கள் முற்பிறவிகளில் நன்றாக முயன்று தவம் செய்யாதவர்களாம் நான் நல்ல தவம் செய்தமையின் தன்னைப் பற்றித் தமிழில் ஆகமம் செய்யும் வண்ணம் எனக்கு நல்ல ஞானத்தை அளித்து இறைவன் பிறவியைக் கொடுத்தருளினான். திருமந்திரம் - தமிழ் ஆகமம்.

82. ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு
ஊனமில் ஒன்பது கோடி யுகத்தனுள்
ஞானப்பால் ஊட்டி நாதனை அர்ச்சித்து
நானும் இருந்தேன்நற் போதியின் கீழே.

பொருள் : ஞானத் தலைவியாக உள்ள சத்தியோடு கூடிய சிவநகர் புகுந்து ஊனம் ஒன்றில்லாத ஒன்பது முடிவுகளுடன் கூடிய சந்திப்பில், தோத்திரமாகிய அபிஷேகத்தைச் செய்து இறைவனைப் பூசித்து நான் நல்ல அரசமரத்தில் கீழ் இருந்தேன். நந்தி நகர் - ஆவடு துறை.

83. செல்கின்ற வாறறி சிவன்முனி சித்தசன்
வெல்கின்ற ஞானத்து மிக்கோர் முனிவராய்ப்
பல்கின்ற தேவர் அசுரர்நரர் தம்பால்
ஒல்கின்ற வான்வழி யூடுவந் தேனே.

பொருள் : திருக் கைலாயத்திலிருந்து செல்லுகின்ற வழியில் சிவனை நினைந்து மன்மதனை வெல்கின்ற ஞானத்தில் மிகுந்த முனிவராக முப்பத்து முக்கோடி தேவர்கள் அசுரர்கள் மானுடர்கள் ஆகியோர் தம்மிடம் சூக்குமமாயுள்ள விண் வழியாக இவ்வுலகுக்கு யான் வந்தேன். சிவமுனி - சிவமுன்னி, சிவன் அடியினை நினைந்து.

84. சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்
உத்தம மாகவே ஓதிய வேதத்தின்
ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி
அத்தன் எனக்குஇங்கு அருளால் அளித்ததே.

பொருள் : உள்ளத்தின் கண்ணே சிறந்து விளங்குகின்ற நூல்களில் மிகச் சிறந்த தாகச் சொல்லப்பெற்ற வேதத்தின் உடலாகிய சொல்லையும் அவ்வுடலுள் ஒத்திருந்து உற்பத்தியாகின்ற பொருளையும் இறைவன் கருணையால் எனக்கு இங்கு உணர்த்தி யருளினான்.

85. நான்பெற் றஇன்பம் பெறுகஇவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.

பொருள் : நான் இறைவனைப் பற்றி நினைந்து அடைந்த இன்பத்தை இவ்வுலகமும் அடைவதாக ஆகாயத்தை இடமாகக் கொண்ட அறிவு சொரூபமான சிவத்தைப் பற்றிச் சொல்லப் போனால், அது உடலைப் பற்றி உணர்வாகவுள்ள மந்திரமாகும். அவ்வுணர்வை அடிக்கடி முயன்று பற்றிக் கொண்டால் சிவம் வந்து உங்களிடம் பொருந்தி விடும்.

86. பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்
சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி
மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை
உறைப்பொடுங் கூடிநின்று ஓதலும் ஆமே.

பொருள் : பிறப்பு இறப்பு இல்லாத நாதனை, நந்தி யென்னும் திருநாமம் படைத்தவனைச் சிறப்புகளோடு ஆகாய மண்டலவாசிகள் கரங்கூப்பித் தொழுது, நெஞ்சினுள் மறவாதவராய் மந்திரமாகிய மாலையால் பத்தியோடு பொருந்தியிருந்த ஓதவும் கூடும். சிவன் பிறவா யாக்கைப் பெரியோன் ஆதலின் பிறப்பிலி முதல்வன் எனப்படுவன். அவனை நந்தியென்னும் திருப்பெயரான் அழைப்பர்.

87. அங்கிமி காமைவைத் தான்உடல் வைத்தான்
எங்குமி காமைவைத் தான்உலகு ஏழையும்
தங்கிமி காமைவைத் தான்தமிழ்ச் சாத்திரம்
பொங்கி மிகாமைவைத் தான்பொருள் தானுமே.

பொருள் : உடலை அளித்த இறைவன் உடலில் அக்கினியை மிகாமல் அளவுடன் வைத்தருளினான். பூலோகம் முதலிய ஏழ் உலகங்களையும் அழியாதவாறு அக்கினியை வைத்தான். குழப்பமில்லாமல் இருக்கத் தமிழ் ஆகம மாகிய திருமந்திரத்தை வைத்தான். எல்லாப் பொருளும் இந்நூலின் கண் அடங்குமாறு செய்தான். உடல் அங்கி சடராக்கினி, கடல் அங்கி - வடவாமுகாக்கினி.

88. அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி
அடிகண் டிலேன்என்று அச்சுதன் சொல்ல
முடிகண்டேன் என்று அயன் பொய்மொழிந்தானே.

பொருள் : இறைவனது திருவடியையும் திருமுடியையும் காண்போம் என்று கருதி முயன்ற பிரமனும் திருமாலும் ஆகிய இருவரும் உருவத்தைக் காணாது மீளவும் பூமியில் கூடி, அடி கண்டிலேன் என்று திருமால் கூற, திருமுடியைக் கண்டேன் என்று பிரமன் பொய்யை உரைத்தான்.

89. பெற்றமும் மானும் மழுவும் பிரிவற்ற
தற்பரன் கற்பனை யாகும் சராசரத்து
அற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில்
நற்பத மும்அளித் தான்எங்கள் நந்தியே

பொருள் : இடபமும் மானும் மழு ஆயுதமும் பிரிவில்லாமல் கொண்ட மேலான பரம்பொருளின் கற்பனையாகவுள்ள இவ்வுலகில் எங்களது குருநாதனாகிய நந்தி ஒழிவனைக் கொடுத்து அடியவன் முடிமீது தன் மேலான திருவடியையும் சூட்டி யருளினான். பெற்றம் - அறம், மான் - கருணை, மழு - வீரம் இவைகளை உணர்த்தும் சரம் - அசைவன, அசரம் - அசையாதன.

90. நேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை
மாயத்தை மாமாயை தன்னில் வரும்பரை
ஆயத்தை யச்சிவன் தன்னை யாகோசர
வீயத்தை முற்றும் விளக்கியிட் டேனே.

பொருள் : அறியப்படும் பொருளையும் அறிகின்ற அறிவையும் மாயையின் விவரங்களையும், சுத்த மாயையில் விளங்கும் பரை, ஆதி, இச்சை, ஞானம், கிரியை ஆகிய சத்தியின் கூட்டத்தையும் அவ்வித சத்திகளில் விளங்கும் சிவத்தையும், சொரூப சிவத்தின் பிரபாவத்தையும் ஆகிய முழுவதையும் இந்நூலில் விளக்கியுள்ளேன். மாயை - அசுத்த மாயை; மாமாயை - சுத்த மாயை. பரைஆயம் - சத்தியின் கூட்டம்; அகோசர வீயம் - சொரூப சிவன்.

91. விளக்கிப் பரமாகும் மெய்ஞ்ஞானம் சோதி
அளப்பில் பெருமையன் ஆனந்த நந்தி
துளக்கறும் ஆனந்தக் கூத்தன்சொற் போந்து
வளப்பிற் கயிலை வழியில்வந் தேனே.

பொருள் : அகோசர விந்து நிலையைச் சொல்லப் போனால் அதுபரம் என்று பேருடன் கூடிய அறிவு மயமான சோதியாகும். அவ் ஆனந்த நந்தி எம்பெருமான் அளவில்லாத பெருமையுடையவன். அசைவற்றிருக்கும் அந்த ஆனந்த நடராஜமூர்த்தி யினது ஆணையின் வண்ணம் சிறப்பு மிக்க திருக்கயிலையினின்றும் இவ்விடம் வந்தேன். நந்தி மரபில்யான் வந்தேன் எனினுமாம். சொற்போந்து உபதேசம் பெற்று. கயிலை வழி நந்தி பரம்பரை.

92. நந்திஅரு ளாலே மூலனை நாடிப்பின்
நந்திஅரு ளாலே சதாசிவன் ஆயினேன்
நந்திஅரு ளால்மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன்
நந்திஅரு ளாலே நானிருந் தேனே.

பொருள் : நந்தியாகிய சிவபெருமான் திருவருளால் மூலன் உடம்பினுள் புகுந்தேன். பின்னும் அந்த நந்தியின் அருளால் சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம் ஆகலின் இத்தமிழ் ஆகமத்தை ஓதினேன். அவன் அருளாலேயே திருவடிப் பேரின்பமாகிய அம்மையினை இம்மையே பெற்றுள்ளேன். அந்த நந்தியங் கடவுள் திருவருளால் இவ்வுலகத்து இருந்துள்ளேன்.

93. இருக்கில் இருக்கும் எண்ணிலி கோடி
அருக்கின்ற மூலத்துள் அங்கே இருக்கும்
அருக்கனும் சோமனும் ஆரழல் வீச
உருக்கிய ரோமம் ஒளிவிடும் தானே.

பொருள் : அளவில்லாத மந்திரங்களில் சிவன் எழுந்தருள்வன். பொருந்தியுள்ள மூலத்திடத்தும் ஓம் என்னும் மூலமந்திரத்தினிடத்தும் இருப்பன். ஞாயிறும் திங்களும் ஒளி வீசும்படி ஆருயிர்களின் உடம்பகத்துக் காணும் மயிர்க்கால் தோறும் அருள் ஒளி தோன்றும். அதனால் அங்குச் சிவன் உறைந்தருள்வன். அருகுகின்ற என்பது அருக்கின்ற எனத்திரிந்து நின்றது அருகுதல் - பொருந்துதல்.

94. பிதற்றுகின் றேன்என்றும் பேர்நந்தி தன்னை
இயற்றுவன் நெஞ்சத்து இரவும் பகலும்
முயற்றுவன் ஓங்கொளி வண்ணன்எம் மானை
இயற்றிகழ் சோதி இறைவனும் ஆமே.

பொருள் : எந்நாளும் அவன் அருள் துணையால் நிகழும் பேரன்பால் நந்தியங் கடவுளைச் சிவசிவ என்று இடையறாது ஏத்துகின்றேன். இரவும் பகலும் நெஞ்சத்து அவனையே இடையறாது நினைதலாகிய பரவுதலைச் செய்கின்றேன். அவன் திருவடியைப் பெறவே முயல்கின்றேன். அவன் ஒரு பெற்றியாய் என்றும் அழியா அறிவொளியாய் எவற்றையும் ஒளிர்விக்கும் ஆற்றல் ஒளியாய்த் திகழும் ஓங்கொளி வண்ணன். எம் தலைவன். திருமூலர் சோதிப் பிழம்பாய் உள்ள இறைவனை எப்போதும் நினைந்தும் பேசியும் வந்தார்.

6. அவை யடக்கம்

(அவையடக்கம் கூறலாவது அண்ணலின் பெருமையும் தன் சிறுமையும் கருதி அடக்கமாகக் கூறுதல்)

95. ஆரறி வார்எங்கள் அண்ணல் பெருமையை
யாரறி வார்இந்த அகலமும் நீளமும்
பேரறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்
வேரறி யாமை விளம்புகின் றேனே.

பொருள் : எம் சிவபெருமானது பெருமையை அறிவார் யார் ? அவனது அகலத்தையும் நீளத்தையும் கொண்ட பரப்பினை யாரே அறிய வல்லார் ? தனக்கென நாமமும் உருவமும் இல்லாத பெரிய சுடரினது வேரினையும் அறியாது அதைப் பற்றிப் பேசுகின்றேன்.

96. பாடவல் லார்நெறி பாட அறிகிலேன்
ஆடவல் லார்நெறி ஆட அறிகிலேன்
நாடவல் லார்நெறி நாட அறிகிலேன்
தேடவல் லார்நெறி தேடகில் லேனே.

பொருள் : சிவனது புகைழப் பாடுகின்றார் நெறியில் சென்று பாட அறியேன். இனி பக்தி மேலீட்டான் ஆடுகின்றவர் நெறியில் சென்று ஆடவும் அறியேன். போகத்தினால் நாடுகின்றவர் நெறியில் சென்று நாடவும் அறியேன். ஞானத்தால் தத்துவ விசாரணை செய்து ஆராய்கின்றவர் நெறியில் நின்று ஆராயவும் அறியேன். இவை நான்கும் முறையே சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்னும் நன்னெறி நான்மைத் திருத்தொண்டின் குறிப்பாகும்.

97. மன்னிய வாய்மொழி யாலும் மதித்தவர்
இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப்
பின்னை உலகம் படைத்த பிரமனும்
உன்னும் அவனை உணரலும் ஆமே.

பொருள் : நிலைபேறுடைய வேத வாக்கினாலும், ஓதுபவர் சுரத்திலுள்ள இனிய நாத ரூபமாக எழுகின்ற ஈசனைச் சூக்குமத்திலிருந்து தூல உலகைச் சிருட்டித்த நான்முகனும் எண்ணிக் கொண்டிருக்கும் அப்பெருமானை நம்மால் உணர முடியுமோ ? முடியாது. வாய்மொழி - வேதம்.

98. தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை
முத்திக்கு இருந்த முனிவரும் தேவரும்
இத்துடன் வேறா யிருந்து துதிசெயும்
பத்திமை யால்இப் பயன்அறி யாரே.

பொருள் : சிவபெருமான் குருவாய் எழுந்தருளி வந்து தத்துவ ஞானத்தை உரைத்தது திருக் கைலையின் அடிவாரத்திலாகும். வீடு பேற்றினை விரும்பியிருந்த முனிவர்களும் தேவர்களும் இத்தத்துவ ஞானத்தை வேறாக இருந்து ஓதும் தன்மையால் இதன் பயனை அறிய மாட்டாதவர் ஆயினர்.

7. திருமந்திரத் தொகைச் சிறப்பு

(திருமந்திரப் பாடல்களின் எண்ணிக்கையும் பெருமையும்)

99. மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
ஞாலம் அறியவே நந்தி அருளது
க்ஷகாலை எழுந்து கருத்தறிந்து ஓதிடின்
ஞாலத் தலைவனை நண்ணுவர் அன்றே.

பொருள் : திருமூல நாயனார் அருளிச் செய்த மூவாயிரம் தமிழும் உலகம் உய்ய நந்தி அருளியதாகும். ஒவ்வொரு நாளும் வைகறைப் பொழுதிலும் மற்றைய பொழுதுகளிலும் சிவக்கோலத்துடன் எழுந்து பொருளுணர்ந்து ஓதுவார் திருவருள் கைவந்தவராவர்.

100. வைத்த பரிசே வகைவகை நன்னூலின்
முத்தி முடிவிது மூவா யிரத்திலே
புத்திசெய் பூர்வத்து மூவா யிரம்பொது
வைத்த சிறப்புத் தருமிவை தானே.

பொருள் : திருமந்திரமாகிய நல்லு நூலில் வைத்த தன்மை ஒன்பது தந்திரவகையாம். இம்மூவாயிரமும் முடிவான முத்தி நிலையைக் கூறுவது புத்தி பூர்வமாகச் சொன்ன மூவாயிரம் ஆகிய இவைதாம் பொதுவும் சிறப்புமாக அமைந்து ஓதுவார்க்கு நன்மை பயக்கும் முதல் ஐந்து தந்திரங்கள் பொது. பின் நான்கு தந்திரங்கள் சிறப்பு, நான்கு பொது, ஐந்து சிறப்பு என்ற கருத்தும் நிலவுகிறது.

8. குருமட வரலாறு (அஃதாவது மூலன் மரபு உரைத்தல்)

101. வந்த மடம்ஏழும் மன்னும்சன் மார்க்கத்தின்
முந்தி உதிக்கின்ற மூலன் மடம்வரை
தந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம்
சுந்தர ஆகமச் சொல்மொழிந் தானே.

பொருள் : ஏழு திருமடங்களும் நிலைபெற்ற நன்னெறியினைப் போதிப்பனவே. அவற்றுள் சிறந்து காணப்படுவது திருமூலர் திருமடமாகும். அதன்வழி இவ் ஒன்பது தந்திரங்களும் அவற்றிற்குரிய மூவாயிரம் திருமந்திரமும் வெளிப்போந்தன. இவற்றைத் திருமூலராகிய சுந்தரர் அருளிச் செய்தார். அதனால் இதற்குச் சுந்தர ஆகமம் எனவும் ஒரு திருப்பெயருண்டு.

102. கலந்தருள் காலாங்கர் தம்பால்அ கோரர்
நலந்தரு மாளிகைத் தேவர்நா தாந்தர்
புலங்கொள் பரமானந் தர்போக தேவர்
நிலந்திகழ் மூலர் நிராமயத் தோரே.

பொருள் : இறைவன் திருவருளால் மெய்யுணர்வு கைவந்த வழிவழித் தவத்தோர் காலாங்கர், அகோரர், மாளிகைத் தேவர், நாதாந்தர், பரமானந்தர், போக வேதர், திருமூலர் என ஏழு தமிழ் முனிவர் ஆவர், நிராமயம் - குற்றமின்மை. இவ்வேழு மாடங்களும் சித்த மார்க்கத்தைப் போதிப்பன.

9. திருமூர்த்திகளின் சேட்டகனிட்ட முறை

(அஃதாவது, மும்மூர்த்திகளாகிய பிரமன், விஷ்ணு, ருத்திரன் ஆகியோரது இயல்பு)ஜியேஷ்ட-சேட்ட, கனிஷ்ட-கனிட்ட, மூத்த இளைய என்பனவாம்.

103. அளவில் இளமையும் அந்தமும் ஈறும்
அளவியல் காலமும் நாலும் உணரில்
தளர்விலன் சங்கரன் தன்னடி யார்சொல்
அளவில் பெருமை அரிஅயற்கு ஆமே.

பொருள் : எல்லையில்லாத இளமைப் பருவமும், எல்லையில்லாத அழகும், எல்லையற்ற இறுதியும், அளவு செய்கின்ற காலமும், ஆகிய நான்கையும் நன்கு ஆராயின், ஆன்மாக்களுக்குச் சுகத்தைச் செய்யும் சங்கரன் ஒருவாற்றலும் குறைவு இல்லாதவன். தன் அடியாரால் சொல்லப் பெறும் எல்லையற்ற பெருமை யெல்லாம் திருமாலுக்கும் பிரமனுக்கும் ஆகுமோ ? ஆகாது.

104. ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்
ஆதிக் கமலத்து அலர்மிசை யானும்
சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்றெனார்
பேதித்து உலகம் பிணங்குகின் றார்களே.

பொருள் : மூலாதாரத்திலுள்ள ருத்திரனும், நீலமணி போன் வண்ணத்தையுடைய திருமாலும், சிருஷ்டிக்குக் காரணமாயுள்ள சுவாதிட்டான மலரில் இருக்கும் பிரமனும், ஆராயுமிடத்து இம் மூவரும் தொடர்பினால் ஒருவரே என்று துணியமாட்டாராய் வேறு வேறாகக் கருதி உலகவர் மாறுபட்டுப் பேசுகிறார்களே. என்னே இவரது அறியாமை !

105. ஈசன் இருக்கும் இருவினைக்கு அப்புறம்
பீசம் உலகில் பெருந்தெய்வம் ஆனது
நீசர் அதுஇது என்பர் நினைப்பிலார்
தூசு பிடித்தவர் தூர்அறிந் தார்களே.

பொருள் : சிவன் இருவினைக்கு ஏற்ப உடம்பினைப் படைத்துக் காத்து அழிக்கும் முத்தேவர் ஆட்சிக்கு அப்புறம் உள்ளான். அம்மூவர் உண்டாவதற்குக் காரணமான மூலப் பொருளாகிய சிவனே உலகில் பெரிய தெய்வமாகும். மாசுடையோர் தெய்வர் அது என்றும் இது என்றும் மயங்குவாராய்ப் பிதற்றுகின்றனர். மாசில்லாத தூய்மை யுடையயோர் மூலமாகிய சிவனே பரம்பொருள் என்று உணர்ந்திருந்தனர்.

106. சிவன்முதல் மூவரோடு ஐவர் சிறந்த
அவைமுதல் ஆறிரண்டு ஒன்றோடுஒன்று ஆகும்
அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்
சவைமுதல் சங்கரன் தன்பெயர் தானே.

பொருள் : சிவனாதிய முதல்வன் மூவராகவும், ஐவராகவும் திருச்சிற்றம்பலமான சபையில் சிறந்து விளங்குவான். அச்சபையானது ஆறு ஆதாரங்களும் மகேசுவர சதாசிவம் பொருந்திய இரண்டும் கவிழ்ந்த சகஸ்ரதளம் ஒன்றும் நிமிர்ந்த சகஸ்ரதளம் ஒன்றுமாகப் பத்தாகும். அவற்றில் விந்தும் நாதமும் விளங்க அந்நிலையில் சபை முதலாகவுள்ள அவனுக்குச் சங்கரன் என்பது பெயராகும்.

107. பயன்அறிந்து அவ்வழி எண்ணும் அளவில்
அயனொடு மால்நமக்கு அன்னியம் இல்லை
நயனங்கள் மூன்றுடை நந்தி தமராம்
வயனம் பெறுவீர்அவ் வானவர் ஆலே.

பொருள் : சீவர்கள் அடையும் பயனை அறிந்து சிந்திக்கும் அளவில் பிரமனும் திருமாலும் சிவனுக்கு வேறானவர் அல்லர். அவர் மூன்று கண்களையுடைய சிவனது வழி நின்று முத்தொழிலைச் செய்பவராம். ஆதலின் அத் தேவரால் மேன்மை அடையுங்கள். வயன் - பயன்.

108. ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பாலொத்த மேனி பணிந்தடி யேன்தொழ
மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்புநீ
ஞாலத்து நம்மடி நல்கிடுஎன் றேனே.

பொருள் : அழியாத தன்மை பெற்ற தேவர்கள் சூழ்ந்துள்ள திருச்சபையில் பால் போன்ற நிறமுடைய பெருமானை நான் வணங்கவும், நீ திருமாலுக்கு முதல் தொழிலாகிய சிருஷ்டி செய்யும் பிரமனுக்கு ஒப்பாவாய். ஆதலின் பூவுலகில் போதகாசிரியனாக இருந்து திருவடி ஞானத்தைக் கொடுத்தருள்க என்று அருளினான். பூவுலகில் போபோதாகாசிரியனாக இருந்து அருளைப் பரப்புக என்று இறைவன் திருமூலருக்கு அருளினான்.

இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Mon Mar 26, 2012 2:12 pm

109. வானவர் என்றும் மனிதர்இவர் என்றும்
தேனமர் கொன்றைச் சிவனருள் அல்லது
தானமர்ந்து ஓரும் தனித்தெய்வம் வேறில்லை
ஊனர்ந் தோரை உணர்வது தானே.

பொருள் : தேவர்கள் என்றும் மனிதர்கள் என்றும் உள்ள இவர்கள், தேன் துளிர்க்கும் கொன்றை மலரையுடைய சிவனது அரளால் அன்றி, தாமே பொருந்தி, உணரும் தெய்வம் வேறொன்றும் இல்லை. மூவராகவும் ஐவராகவும் இவர்களின் வேறாகவும் உடலில் விளங்கும் சிவன் ஒருவனே என்பதை அறிவதாகும்.

110. சோதித்த பேரொளி மூன்றுஐந்து எனநின்ற
ஆதிக்கண் ஆவது அறிகிலர் ஆதர்கள்
நீதிக்கண் ஈசன் நெடுமால் அயன்என்று
பேதித்து அவரை பிதற்றுகின் றாரே.

பொருள் : ஒளி விடுகின்ற பேரொளிப் பிழம்பாகிய சிவன், பிரமன், விஷ்ணு, உருத்திரன் ஆகிய மூவராகவும், பிரமன், விஷ்ணு, ருத்திரன், மகேசுவரன், சதாசிவன் ஆகிய ஐவராகவும் நின்ற தொன்மைக் கோலத்தை அறியாதவராகிய மூடர்கள் முறைமையாக உருத்திரன் திருமால் பிரமன் என்று வேறு வேறாகக் கருதி அவர்களைப் பேசுகின்றார்களே ! என்னே அவரது பேதைமை.

111. பரத்திலே ஒன்றாய்உள் ளாய்புற மாகி
வரத்தினுள் மாயவ னாய்அய னாகித்
தரத்தினுள் தான்பல தன்மைய னாகிக்
கரத்தினுள் நின்று கழிவுசெய் தானே.

பொருள் : மேன்மையான நிலையில் ஒப்பற்ற சிவமாய், எல்லாவற்றிலும் உள்ளும் புறமுமாகி, விருப்பத்தை உண்டாக்குவதில் திருமாலாய் சிருட்டித்தலில் பிரமனாகி, தகுதிக் கேற்ப ஒருவனே பலப்பல தேவராகத்தான் விளங்காதவாறு மறைவாக ருத்திரனாக நின்று சங்காரத் தொழிலையும் செய்வான்.

112. தானொரு கூறு சதாசிவன் எம்இறை
வானொரு கூறு மருவியும் அங்குளான்
கோனொடு கூறுஉடல் உள்நின்று உயிர்க்கின்ற
தானொரு கூறு சலமய னாமே.

பொருள் : சிவபரம்பொருளின் ஒரு கூறாகிய சதாசிவனாகிய எம் தலைவன், ஆகாயக் கூற்றில் பொருந்தி எல்லாத் தத்துவங்களிலும் ஊடுருவியும் வேறாயும் உள்ளான். அவனே உடலுள் பிராண ரூபமாகவுள்ள தலைவனாவான். அவனது மற்றொரு கூறு அசைவு ரூபமாக உள்ளது. சலமயன் தண்ணியனுமாம்.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Mon Mar 26, 2012 2:15 pm

திருமூலர் | திருமந்திரம் 2815
1. உபதேசம்

(குரு சீடனுக்குக் கூறும் வாசகம் உபதேசமாகும். குரு உபதேசத்தால் அருட்கண் விழிப்படையும் என்க)

113. விண்ணின்று இழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின்று உருக்கியோர் ஒப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே

பொருள் : இறைவர் பரம ஆகாயத்தினின்று இறங்கித் தாம் ஆட்கொள்ளத் திருவுளம் பற்றியிருக்கும் ஆன்மாக்களது மலபரிபாகத்திற்கு ஏற்றவாறு திருமேனி தரித்துத் தமது குளிர்ந்த பாதத்தை மலப் பிணிப்பு மீண்டும் அணுகாது பாதுகாக்கைக்குத் தலைக்காவலாய் வைத்து உயிர்க்கு உயிராய் நின்று மனத்தைக் கசியச் செய்து உவமையற்ற திருவருட் பார்வையால் முத்தி நெறிகளைக் குறிப்பாற்காட்டிப் பாசத்தை நீக்கினார்.

114. களிம்பறுத் தான்எங்கள் கண்ணுதல் நந்தி
களிம்பறுத் தான்அருள் கண்விழிப் பித்துக்
களிம்பணு காத கதிரொளி காட்டிப்
பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே.

பொருள் : நெற்றிக் கண்ணாகிய எமது சிவபெருமான் மலப்பிணிப்பால் மூடப்பட்டிருந்த ஆன்மாக்களின் அருட் கண்ணைத் திறக்கச் செய்து, பாசத்தை அறுத்து அஞ்ஞான இருள் அணுகாத தனது அருள் ஒளியைக் காட்டிப் பளிங்கின் இயல்பதாகிய ஆன்மாவில் சிவமாகிய பவளத்தைப் பதித்தான்.

115. பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போற்பசு பாசம் அனாதி
பதியினைச் சென்றணு காப்பசு பாசம்
பதியணு கிற்பசு பாசம் நிலாவே.

பொருள் : இறைவனும், பாசத்தாற் கட்டுண்ட ஆன்மாவும், பாசமும் என நூல்கள் கூறும் முப்பொருள்களில் இறைவனைப் போலவே ஆன்மாவும் பாசமும் அனாதியாம். இம்முப்பொருள்களும் அனாதியாயினும் பசுவும் பாசமும் முதல்வனைச் சென்று அணையவாம். ஆனால் திருவருள் அணுகில் பசுத் தன்மையும் பாசமும் நிற்க மாட்டா. (நீங்கிவிடும் என்பதாம்.)

116. வேயின் எழுங்கனல் போலேஇம் மெய்யெனும்
கோயில்இருந்த குடிகொண்ட கோன்நந்தி
தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும்
தோயம தாய்எழுஞ் சூரிய னாமே.

பொருள் : மூங்கிலின் கண் நிறைந்த நெருப்பைப் போல் எமது தேகமாகிய கோவிலிலும் வீற்றிருக்கும் சிவபெருமான், தாயைவிட அதிக அன்போடு, எம்மைப் பந்தித்திருக்கும் மும்மலங்களையும் போக்கும் கிருபா மேகம் போன்ற ஞான ஆதித்தியனாம். (நந்தியெம் பெருமான் பக்குவம் பெற்ற நிலையில் தானே தோன்றிச் சீவரது மல இருளைப் போக்குவான் என்ற கருத்தும் கொள்க)

117. சூரிய காந்தமும் சூழ்பஞ்சம் போலவே
சூரிய காந்தம் சூழ்பஞ்சைச் சுட்டிடா
சூரியன் சாநிதி யிற்சுடு மாறுபோல்
சூரியன் தோற்றமுன் அற்ற மலங்களே.

பொருள் : சூரியகாந்தக் கல்லானது தானே அதைச் சூழ்ந்திருக்கும் பஞ்சைச் சுடமாட்டாது. அதுபோல் ஆன்மா ஆனவன் தானே தன்னைப் பந்தித்திருக்கும் மலங்களைச் சுடமாட்டான். ஞாயிற்றின் சந்நிதி மாத்திரையானே சூரிய காந்தக் கல்லின்கண் உள்ள நெருப்பு விளங்கி அதைச் சூழ்ந்திருக்கும் பஞ்சைச் சுடுவதுபோல் ஆசாரிய மூர்த்தியாய் எழுந்தருளிவரும் சிவபெருமான் சந்நிதி மாத்திரையான் ஆன்மாவின் கண் ஞான நெருப்பு விளங்கி அவனைப் பந்தித்திருக்கும் மலத்தை நாசம் செய்யும் !

118. மலங்கள்ஐந் தாமென மாற்றி அருளித்
தலங்கள்ஐந் தால்நல் சதாசிவ மான
புலம்களைந் தான்அப் பொதுவினுள் நந்தி
நலன்களைந் தான்உள் நயம்தான் அறிந்தே

பொருள் : ஐந்தாவது அண்டத்தில் வீற்றிருந்து சதாசிவன் என்னும் திரு நாமத்தையுடையவனாய் ஐந்தாவது அண்டத்தில் இருப்பவனாயினும் தேகமாகிய அம்பலத்திலும் நடனம் செய்பவனாகிய இறைவன் பஞ்ச கலா சோதனையால் ஆன்மாக்களின் அதிதீவிர பக்குவத்தை யறிந்தே பிறவித் துன்பத்துக்கு ஏதுவாகிய மலங்கள் ஐந்து பிரகாரமாயிருக்குமென்று விளக்கி அவைகளை நாசம் செய்து முத்தி யடையச் சாதனமாக ஒரு லட்சியத்தைக் காட்டுவான். (நந்தி - இறைவன்)

119. அறிவுஐம் புலனுட னேநான்ற தாகி
நெறியறி யாதுற்ற நீர்ஆழம் போல
அறிவுஅறி வுள்ளே அழிந்தது போல
குறியறி விப்பான் குருபர னாமே.

பொருள் : வழியறியாது கடற்சூழலில் அகப்பட்டு மயங்கும் ஒருவனைப் போல் ஆன்மா ஐம்புலனிற் சுழன்று மழக்கமெய்தி நிற்கும். அவனுக்குச் சிற்றறிவாகிய ஆன்மபோதம் பேரறிவாகிய இறை விறைவில் அழிந்தது போல் ஆகும்படி முத்தி அடைதற்குச் சாதனமாகப் பரம குருவாகிய சதாசிவன் ஒரு லட்சியத்தைக் காட்டுவான்.

120. ஆமேவு பால்நீர் பிரிக்கின்ற அன்னம்போல்
தாமே தனிமன்றில் தன்னந் தனிநித்தம்
தீமேவு பலகர் ணங்களுள் உற்றன
தாமேழ் பிறப்புஎரி சார்ந்தவித் தாமே.

பொருள் : பசுவின் பாலினிடமிருந்து நீரைப் பிரிக்கின்ற அன்னப்பறவை போல, சிதா காயப் பெருவெளியில் ஆடுகின்ற அம்பலவனது ஒப்பற்ற ஆட்டமே சீவர்களிடமிருந்து வினையைப் பிரித்து விடும். அதனால் தீமை காரணமாகக் கருவி கரணங்களில் பொருந்திய பாவ புண்ணியங்கள் எல்லாம் ஏழு பிறவியிலும் வறுத்த வித்து முளைக்காதது போலப் பயன் தாராவாம்.

121. வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிகச்
சுத்தத் துரியம் பிறந்து துடக்கற
ஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடு
செத்திட டிருப்பர் சிவயோகி யார்களே.

பொருள் : பிறவித் துன்பத்துக்கு வித்தாகிய புலன் கரணங்களின் சக்தியைக் கெடுத்து வியாக்கிரபுரமாகிய புருவ மத்தியில் சுத்த அவத்தையில் துரிய நிலை எய்திச் சகல பற்றுக்களும் அற்றுப் புலன்களும் உயிரும் உடம்போது பொருந்தி நிற்பினும் அவைகளால் உபதேசிக்கப் பெறாது சிவயோகிகள் செத்தவர்களைப் போல் இருப்பார்கள்.

122. சிவயோக மாவது சித்தசித் தென்று
தவயோகத் துன்புக்குத் தன்னொளி தானாய்
அவயோகஞ் சாராது அவன்பதிபோக
நவயோக நந்தி நமக்களித் தானே.

பொருள் : சிவயோகம் என்பது சித்துப் பொருள்கள் இவை சடப் பொருள்கள் இவை என்று விவேகத்தினால் அறிந்து சிரசால் சென்று அடையும் சிவராஜ யோகத்தை அறிந்து அங்குக் காணும் சிவவொளியுள் புகுந்து நின்று, வேறு வகையான தீமைதரும் யோகத்தை மேற்கொள்ளலாம் அவனுடைய பதியாகிய பரமாகாய மண்டலத்தில் நின்று உய்யும்படியாக தோழமை நெறியை நந்தியெம் பெருமான் நமக்கு அளித்தருளினன்.

123. அளித்தான் உலகெங்கும் தானான உண்மை
அளித்தான் அமரர் அறியா உலகம்
அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள்
அளித்தான் பேரின்பத்து அருள்வெளி தானே.

பொருள் : தான் எவ்விடத்தும் நீக்கமின்றி நிற்கும் உண்மையையும் வானோரும் அறியாத சிவலோகத்தையும் கனக சபையின் கண் நடிக்கும் சீபாதத்தையும், பேரின்பத்தை அளிக்கும் சிதாகத்தையும் சிவபெருமான் கடாட்சித்தார்.

124. வெளியில் வெளிபோய் விரவிய வாறும்
அளியில் அளிபோய் அடங்கிய வாறும்
ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும்
தெளியும் அவரே சிவசித்தர் தாமே.

பொருள் : மனவெளியில் பரவெளியும் ஆன்மாக்களின் அன்பில் சிவபிரான் அன்பும் ஆன்ம பிரகாசத்தில் அருட்பிரகாசமும் போய்க் கலந்த விதத்தை அறிந்தவர்களே சிவசித்தர்களாம்.

125. சித்தர சிவலோகம் இங்கே தரிசித்தோர்
சத்தமும் சத்த முடிவுந்தம் முன்கொண்டோர்
நித்தர் நிமலர் நிராமயர் நீள்பர
முத்தர்தம் முத்தி முதல்முப்பத் தாறே.

பொருள் : சிவசித்தர்கள் சிவலோகத்தை இப்பூமியின் கண்ணே தெரிசித்தவர், நாத நாதாந்தங்களையும் தம்முள் உணர்ந்தவர்கள். பிறப்பு இறப்பு, மலர், நோய் அற்றவர்கள், மேம்பாடு உடைய பரமுத்தி அடைந்தவர்கள். அவர்கள் முத்தியடைந்த நிலை முப்பத்தாறு தத்துவங்களையும் சோபானமாகக் கொண்டு கடந்து சென்று அவைகளுக்கு அப்பாற்பட்ட சிவத்தை அடைந்ததாகும் சோபானம் - படிக்கட்டு.

126. முப்பதும் ஆறும் படிமுத்தி ஏறியாய்
ஒப்பிலா ஆனந்தத்து உள்ளொளி புக்குச்
செப்ப அரிய சிவங்கண்டு தான்தெளிந்து
அப்பரி சாக அமர்ந்திருந் தாரே.

பொருள் : முப்பத்தாறு தத்துவங்களையும் முத்திக்கு ஏற சோபானமாய் உள்ள படிகளாக கொண்டு அவைகளின் வழி சென்று அவைகளுக்கு அப்பாலுள்ள உவமையற்ற பேரானந்தமாகிய சோதியிற் கலந்து வாக்குக்கு எட்டாத சிவபெருமானைத் தரிசித்து, தம் இயல்பையும் உணர்ந்து சிவவியாபகத்துள் அடங்கிச் சிவமேயாய்ச் செயலற்று இருப்பார்கள் சிவ சித்தர்கள்.

127. இருந்தார் சிவமாகி எங்கும் தாமாகி
இருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கி
இருந்தார் முக்காலத்து இயல்பைக் குறித்தங்கு
இருந்தார் இழவுவந்து எய்திய சோம்பே.

பொருள் : சிவசித்தர்கள் சிவமாந்தன்மை எய்தி எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பர். எல்லாம் சிவன் செயல் என்று யாவற்றையும் தரிசித்துக் கொண்டு இருப்பர். மூன்று காலங்களின் தன்மைகளை உணர்ந்து இருப்பர். அவர்கள் தங்களுக்கு என் ஒருசெயலின்றி இருப்பர்.

128. சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே
சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே
சோம்பர் உணர்வு சுருதி முடித்திடஞ்
சோம்பர் கண்டார்அச் சுருதிக்கண் தூக்கமே

பொருள் : மேலை மந்திரத்தில் ஓதப்பெற்ற சோம்பல் நிலை எய்திய சிவயோகிகள் இருப்பது பரநாத வெளியில்; அவர்கள் நிலைபெற்றிருப்பது ஒளியாய் இருக்கின்ற கனகசபையின் கண்ணே; அவர்கள் அறிவு இருப்பது சுருதிகட்கு அப்பாற்பட்ட இடத்தில்; அவர்கள் சுருதிகளை ஓதி உணர்ந்தது ஆனந்த நித்திரை எய்து வதையே சித்தர்கள் நாதாந்த நிலையில் பேரின்பம் எய்தியிருப்பர்.

129. தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே.

பொருள் : தங்கள் உள்ளத்தே சிவலோகத்தையும், சிவத்தோடு அத்து விதமாய் பொருந்தி நிற்பதாகிய யோக நிலையையும் இவ்வாறு பொருந்தி நிற்றலால் அனுபவிக்கும் சிவபோகமாகிய பேரின்பத்தையும் தூங்காமல் தூங்குவதாகிய ஆனந்த நித்திரையில் கண்டார்கள். இவர்கள் எய்திய நிலையானது மனவாக்குக்கு எட்டாதது. ஆதலான் எவ்வாறு சொல்வது ?

130. எவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லை
அவ்வாறு அருட்செல்வன் ஆதிஅரன் தானும்
ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடும்
செவ்வானிற் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கமே

பொருள் : தன் அறிவுக்கு எட்டியபடி இறைவனை எந்தெந்த விதமாக எண்ணி ஒருவன் வணங்குகிறானோ, அந்தந்த விதமாய் நின்று பயனை அளிப்பவன் ஆதிபகவனே. அவன் தான் உவமையற்ற கனக சபையின் கண்ணே உமாதேவிகாண நடனம் செய்யும் சிதாகாயத்தில் செழிப்பாய் பிரகாசிக்கும் மாணிக்க மாணியாம். சிவபெருமான் ஆன்மாக்களின் பக்குவத்திற்கேற்ப அருள் புரிவான்.

131. மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்
மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்
ஆணிப் பொன் மன்றில் ஆடுந் திருக்கூத்தைப்
பேணித் தொழுதென்ன பேறுபெற் றாரே.

பொருள் : மாணிக்க மணியுள் மரகதச் சோதியாயும் மரகத மாடமாயும் விளங்கும் உயர்ந்த கனக சபையின் கண்ணே உமாதேவி காண நடனம் செய்யும் சிதாகாயத்தில் செழிப்பாய் பிரகாசிக்கும் மாணிக்க மணியாம். சிவபெருமான் ஆன்மாக்களின் பக்குவத்திற்கேற்ப அருள் புரிவான்.

132. பெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறி
பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன்
பெற்றார்அம் மன்றில் பிரியாப் பெரும்பேறு
பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே

பொருள் : இவ்வுலகத்தில் தங்களை விட்டு நீங்காத ஞான நெறியையும் இவ்வுலகத்திலும் இன்னும் பிறவாமையாகிய மேலான பயனையும், ஒப்பற்ற கனக சபையினின்றும் நீங்காத முத்திப் பேற்றையும், உலகத்தாரோடு பேசாத பெருமையும் ஆகிய இவைகளை, முதல்வனைக் கனக சபையின்கண் வழிபட்டவர்கள் பெற்றார்கள்.

133. பெருமை சிறுமை அறிந்தெம் பிரான்போல்
அருமை எளிமை அறிந்தறி வார்ஆர்
ஒருமையுள் ஆமைபோல் உள்ஐந்து அடக்கி
இருமையும் கேட்டிருந் தார்புரை அற்றே.

பொருள் : எம் சிவபெருமானைப் போன்று அண்டத்திலும் அணுவிலும் நிறைந்து, அவற்றின் அருமையும் பெருமையையும் ஒரு சேர உணர்ந்து அறிபவர் யார் ? அந்தச் சாதகர் மன ஒருமைப்பாட்டுடன் ஆமையைப் போல ஐம்பொற்களையும் புறத்தே செல்லாது உள்ளுக்கு இழுத்துக் கொண்டு பெருமை சிறுமையாகிய இரண்டையும் குற்றமின்றிச் சாதகர்கள் உணர்ந்திருந்தார்கள்.

134. புரைஅற்ற பாலினுள் நெய்கலந் தாற்போல்
திரைஅற்ற சிந்தைநல் ஆரியன் செப்பும்
உரையற்று உணர்வோர் உடம்பிங்கு ஒழிந்தால்
கரையற்ற சோதி கலத்தசத் தாமே.

பொருள் : குற்றமற்ற பாலில் நெய் கலந்தாற் போல் சலனமற்ற சிந்தையுள் அத்துவிதமாய் நிற்கும் சற்குருவானவர் சொல்வது யாதெனில் பேச்சு அற்று மௌன நிலையில் நிற்கும் தெளிவடைந்த உயிரானது வாழுதற்கு இடமாகிய உடம்பு நாசமானால் எல்லையில்லாத அருட் சோதியில் கலந்த சத்தாகும்.

135. சத்தமுதல் ஐந்தும் தன்வழித் தான்சாரில்
சித்திக்குச் சித்தன்றிச் சேர்விடம் வேறுண்டோ
சுத்த வெளியிற் சுடரிற் சுடர்சேரும்
அத்தம் இதுகுறித்து ஆண்டுகொள் அப்பிலே.

பொருள் : சத்தமாதி விஷயங்கள் ஆன்மாவை உபாதிக்காமல் தங்கள் இனமாகிய அசத்தைச் சேர்ந்த வழி உணர்த்த உணரும் சித்தாகிய ஆன்மாவுக்கு உணர்த்தும் சித்தாகிய இறைவன் திருவடியைவிடச் சேரும் இடம் வேறு உண்டோ ? இல்லை. இதுபோல் சிதாகாயத்தில் சுயம் சோதியாகிய திருவருளில் ஆன்மப் பிரகாசம் சேரும். இவ்வுண்மை கடல் நீரில் கண்டு கொள்க.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Mon Mar 26, 2012 2:16 pm

136. அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால்
உப்பெனப் பேர்பெற்று உருச்செய்த அவ்வுரு
அப்பினிற் கூடிஅத ஒன்றாகு மாறுபோல்
செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே.

பொருள் : கடல்நீரில் நுட்பமாயுள்ள உவர்ப்பானது சூரியனது வெப்பத்தால் உப்பு என்னும் பேரைப் பெற்று உருவத்தை எய்தியதானது மீளத் தண்ணீரில் சேர்ந்த வழி அதனோடு அத்துவிதமாய்க் கலந்து நிற்றல் போல் ஆன்மா ஆனவன் சிவபிரான் விவாபகத்துடன் அடங்கி அத்துவிதமாய் நிற்பான்.

137. அடங்குபேர் அண்டத்து அணு அண்டம் சென்றங்கு
இடங்கொண்டது இல்லை இதுவன்றி வேறுண்டோ
கடந்தொறும் நின்ற உயிர்கரை காணில்
திடம்பெற நின்றான் திருவடி தானே.

பொருள் : பெரிய உலகில் நிறைந்துள்ள சட அணுக்கள் ஆகாயத்தில் சென்று அங்கு வேறிடத்தைப் பற்றி நின்றதில்லை. இதுவல்லாமல் வேறு உண்மை யுளதோ ? இல்லை. இது போல் ஒவ்வொரு உடலின் கண்ணும் உள்ள ஆன்மாவும் முத்திக்கரை எய்தின் சிவபிரான் திருவடியையே பற்றி உறுதியாய் நிற்கும்.

138. திருவடி யேசிவ மாவது தேரில்
திருவடி யேசிவ லோகம்சிந் திக்கில்
திருவடி யேசெல் கதியது செப்பில்
திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே.

பொருள் : நூல்களை ஆராய்ந்து அறியின் சிவத்தன்மை எய்துதல் என்பதும், ஆராய்ந்தறிந்த விஷயத்தைச் சிந்தித்துப் பார்க்கில் சிவலோகம் என்பதும், சிந்தித்து உணர்ந்ததைச் சொல்லில் ஆன்மாக்கள் முடிவிற் சென்றடையும் குறிக்கோள் ஆவதும், புகலிடமாவதும், முப் பொருள்களின் இயல்பை உள்ளவாறு உணர்ந்தவர்களுக்குச் சிவபிரான் திருவடியே என்பதாம்.

139. தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருமேனி செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.

பொருள் : குருவின் திருமேனியைத் தரிசித்தலும், அவர் திருநாமத்தை விதிப்படி உச்சரித்தலும், அவர் அருளும் உபதேசமொழியைக் கேட்டலும், அவர் உருமாகிய மந்திரத்தைச் சிந்தித்தலுமே, கலங்கிய சமாதி நிலையைத் தெளியச் செய்வனவாம்.

140. தானே புலன்ஐந்தும் தன்வசம் ஆயிடும்
தான் புலன்ஐந்தும் தன்வசம் போயிடும்
தா÷ன் புலன்ஐந்தும் தன்னில் மடைமாறும்
தானே தனித்துஎம் பிரான்தன்னைச் சந்தித்தே

பொருள் : ஆன்மாவானவன் ஐம்புலன்களின் வேறாவான் தன்னைக் கண்டு எமது இறைவனாகிய சிவபெருமானைத் தரிசித்தால் ஐம்புலன்களும் அவன் வசமாகி அவன் செலுத்தும் வழியிற்புக்கு அவன் திருப்பும் வழிகளிலே திரும்பும். அவனை மீறி ஒருசிறிதும் சேட்டியா. (ஆன்மா தத்துவங்களை விட்டுச் சிவத்தைப் பொருந்தின போத புலன்களின் சேட்டை அறும்.)

141. சந்திப் பதுநந்தி தன்திருத் தாளிணை
சிந்திப் பதுநந்தி செய்ய திருமேனி
வந்திப் பதுநந்தி நாமம்என் வாய்மையால்
புந்திக்குள் நிற்பது நந்திபொற் பாதமே.

பொருள் : ஐம்புலன்களும் என் வசப்படியன் நான் தரிசிப்பது சிவபிரான் திருவடியாகிய திருவருளையே; சிந்தனை செய்வது அவர் செவ்விய திருமேனியாகிய பஞ்சாட்சரத்தையே; என் வாக்காற் புகழ்வது அவர் திருநாமத்தையே என்புத்தியை விட்டு நீங்காமல் நிற்பது அவர் அருளிய சிவஞான உபதேசம் இவையன்றி வேறொன்றையும் நான் காண்பதில்லை.

142. போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்
போதந் தனில்வைத்துப் புண்ணியர் ஆயினர்
நாதன் நடத்தால் நயனம் களிகூர
வேதத் துதித்திடப் போயடைந்தார் விண்ணே.

பொருள் : சிவஞானத்தை அருளும் எமது இறைவனாகிய நின்மல சிவபிரானை ஞானகிகள் தங்கள் அறிவின் கண்ணே வைத்து, அவன் திருநடனத்தால் கண்கள் இன்பம் எய்தவம், தேவம் துதிக்கவும் மேலான் சிதாகாயத்தை அடைந்தார். (குரு நாதன் உபதேசப்படி நந்தியை அறிவினில் தியானித்தவர் நாத சம்மியம் கிட்டி ஆகாய மண்டலத்தில் விளங்குபவர்).

2. யாக்கை நிலையாமை

(யாக்கை நிலையாமையாவது உடம்பினது நிலையாமை. திருவள்ளூர் போன்று நிலையாமை கூறிப்பின் அறம் கூறுவார் ஆசிரியர்)

143. மண்ணொன்று கண்டீர் இருவினைப் பாத்திரம்
திண்ணென்று இருந்தது தீயனைச் சேர்ந்து
விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ஆவபோல்
எண்ணின்ற மந்தர் இறக்கின்ற வாறே.

பொருள் : மாயையாகிய மண் ஒன்று உள்ளது. அதனின்றும் தோன்றி குரு வினையால் விளைந்த உடம்பாகிய பாத்திரம், அப் பாத்திரம் சுடப்பட்ட போது வலிமையாகக் காணப்பட்டிருந்தது. சுடப்படாத பாண்டம் ஆகாயத்திலிருந்து மழைநீர் பெய்த போது கரைந்து மண்ணாவது போல் எண்ணற்ற மக்கள் உடம்பு அழிந்து கெடுகின்றனர்.

144. பண்டம் பெய்கூரை பழகி விழுந்தக்கால்
உண்டஅப் பெண்டிரும் மக்களும் பின்செலார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழிநட வாதே.

பொருள் : வினை போகங்களை அளவிட்டு வைக்கப்பட்ட உடம்பு வினை போகங்களை அனுபவித்து நீங்கியபின், சுக போகங்களை உடனிருந்து அனுபவித்த மனைவியும் மக்களும் கூட வரமாட்டார். உயிரோடு வாழ்ந்த காலத்துக் கடைப் பிடித்த விரதத்தின் பயனும் ஞானமும் அன்றி, வேறு எவையும் இறந்தோருடன் கூடச் செல்வது இல்லை.

145. ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.

பொருள் : உடல் விழுந்தபின் எல்லாம் ஒன்றுகூடி ஓலமிட்டு அழுது, அதுவரையிலுள்ள பெயரை மாற்றிப் பிணம் என்ற பெயரைச் சூட்டி, தூதுவளை நிறைந்த சுடுகாட்டில் கொண்டு போய்க் கொளுத்திவிட்டு, இவ்வண்ணம் ஒருவர் இருந்தார் என்ற எண்ண மின்றி நீரினில் மூழ்கிவிட்டு நீங்கினார்கள்.

146. காலும் இரண்டு முகட்டலகு ஒன்றுள
பாலுள் பருங்கழி முப்பத்தி ரண்டுள
மேலுள கூரை பிரியும் பிரிந்தால்முன்
போலுயிர் மீளப் புகஅறி யாதே.

பொருள் : உடம்பாகிய வீட்டுக்குக் கால்கள் இரண்டு. உச்சி உத்தரமாகிய முதுகுத்தண்டு ஒன்றுள்ளது. பக்கத்தில் போடப்பட்டுள்ள விலா எலும்பாகிய சாற்றுக் கழிகள் முப்பத்திரண்டு உள்ளன. இவை யெல்லாம் மூடப்பெற்ற தசையாகிய கூரை ஒரு காலத்தில் பிரியும். பிரிந்தால் உயிர் அதனுள் முன்போல் புக அறியாது.

147. சீக்கை விளைந்தது செய்வினை மூட்டிற்ற
ஆக்கை பிரிந்தது அலகு பழுத்தது
மூக்கினிற் கைவைத்து மூடிட்டுக் கொண்டுபோய்க்
காக்கைக் குப்பலி காட்டிய வாறே.

பொருள் : கபம் மேலோடியது; பல பிறவிகளில் செய்யப்பட்ட வினைகளின் தொடர்புகள் ஒழிந்தன. உடம்பு நீங்கியது. பழு எலும்பு வலி கெட்டது. மூக்கினில் கைவைத்துப் பார்த்து உயிரியக்கம் இல்லாமையை உணர்ந்து ஆடையால் மூடிக் கொண்டு போய், காக்கைக்குப் பலியிட்டு இறுதிக் கடனைச் செய்தனர். சீக்கை - சிலேட்டுமம். காக்கைக்குப் பலி - வாய்க்கரிசி போடுதல்.

148. அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்க மேஇறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே.

பொருள் : நல்ல முறையில் பக்குவமாகச் சமையல் பண்ணி வைத்தனர். அவ்வாறு சமைத்த அறுசுவை உணவை வீட்டுக்குத் தலைவன் உண்டார். மனைவியோடு குலாவியிருந்தார். இடப்புறம் நெஞ்சம் சிறிது வலிக்கிறது என்று மனைவியிடம் கூறினார். சொன்ன பிறகு கீழே படுத்தவர் அப்படியே கிடந்து இறந்து ஒழிந்தார். மந்தணம் கொள்ளுதல் - உடல் உறவு கொள்ளுதல்.

149. மன்றத்தே நம்பி மாடம் எடுத்தது
மன்றத்தே நம்பி சிவிகைபெற் றேறினான்
மன்றத்தே நம்பி முக்கோடி வழங்கினான்
சென்றத்தா என்னத் திரிந்திலன் தானே.

பொருள் : சிறப்புடைய தலைமகன் மாடிவீடு கட்டி மகிழ்ந்திருந்தான். அவன் பலர் காணப் பல்லக்கில் அமர்ந்து சென்றான். அவன் பொது இடத்தில் இயல்புடைய மூவர்க்கும் புத்தாடை வழங்கினான். உயிர் பிரிந்த பின் மக்கள் அப்பா என்று அழைக்கவும் அவன் மீண்டிலன்.

150. வாசந்தி பேசி மணம்புணர்ந்து அப்பதி
நேசந் தெவிட்டி நினைப்பொழி வார்பின்னை
ஆசந்தி மேல்வைத்து அமைய அழுதிட்டுப்
பாசந்தீச் சுட்டுப் பலியட்டி னார்களே.

பொருள் : நிச்சயதார்த்தம் பண்ணித் திருமணம் செய்து கொண்ட அக் கணவனது காதலும் கசந்து, அவரது நினைப்பையும் உரிமை மனைவியர் பின்னர் மறந்து விடுவர். அவர் இறந்தபின் பாடையில் வைத்து பொருத்தமாகப் புலம்பியழுது, பற்றினையும் சுட்டெரித்துப் பிண்டம் போட்டார்களே, என்ன பரிதாபம்.

151. கைவிட்டு நாடிக் கருத்தழிந்து அச்சற
நெய்பட்டுச் சோறுண்ணும் ஐவரும் போயினர்
மையிட்ட கண்ணாளும் மாடும் இருக்கவே
மெய்விட்டுப் போக விடைகொள்ளு மாறே.

பொருள் : நாடி பார்ப்பவர். இனிப் பயனில்லையெனக் கைவிட்டுவிட, நினைவு கெட்டு உயிர்ப்பு இயக்கம் நீங்க, நெய்யிட்டுப் பிசைந்த சோற்றைச் சுவைக்கும் நாக்கு முதலிய பஞ்சேந்திரியங்கள் செயலிழந்தன; மைபூசிய கண்ணையுடைய மனைவியும் செல்வமும் இவ்வுலகத்து இருக்க, உடலை விட்டு உயிர்போக விடை கொள்ளும் முறை இதுவாகும்.

152. பந்தல் பிரிந்தது பண்டாரங் கட்டற்ற
ஒன்பது வாசலும் ஒக்க அடைந்தன
துன்புறு காலத் துரிசுவர மேன்மேல்
அன்புடை யார்கள் அழுதகன் றார்களே

பொருள் : உடம்பாகிய பந்தல் பிரிந்தது; உயிர் நிலையாகிய களஞ்சியம் கட்டு விட்டுப் போயிற்று உடம்பிலுள்ள ஒன்பது வாயில்களும் ஒரு சேர அடைபட்டன. துன்பத்தைத் தருவதாகிய கால முடிவு விரைவாக வந்தடைய அன்புடையவர்களாகிய சுற்றத்தாரும் பிறரும் அழுது நம்மை விட்டு அகன்றார்கள்.

153. நாட்டுக்கு நாயகன் நம்மூர்த் தலைமகன்
காட்டுச் சிவிகையொன்று ஏறிக் கடைமுறை
நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்ட
நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே.

பொருள் : நாட்டுக்குத் தலைவனும் நம்முடைய ஊருக்குத் தலைவனுமாக உள்ளவன் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் பாடையில் இறந்த பின் ஏறிக் கொண்டு நாட்டிலுள்ளவர் இறுதிக் கடன் செலுத்தப் பின்னே வரவும், பாடைக்கு முன்னே பறை கொட்டவும், நாட்டின் தலைமகன் காட்டுக்குச் செல்கின்ற முறை இதுவாம்.

154. முப்பதும் முப்பதும் முப்பத் தறுவரும்
செப்ப மதிளுடைக் கோயிலுள் வாழ்பவர்
செப்ப மதிளுடைக் கோயில் சிதைந்தபின்
ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் தார்களே

பொருள் : தொண்ணுற்றாறு தத்துவங்களும் நன்றாகச் செய்யப் பெற்ற மதில் சூழ்ந்த கோயிலில் வாழ்பவராவர். செம்மையாகச் செய்யப்பட்ட மதிள் சூழ்ந்த கோயில் நிலை கெட்ட பின் அக்கோயிலில் வாழ்ந்த அனைவரும் ஓடிப் போயினர். உடம்பு அழியத் தத்துவங்கள் முதலியன நீங்கும்.

155. மதுவூர் குழலியும் மாடும் மனையும்
இதுவூர் ஒழிய இதணம் தேறிப்
பொதுவூர் புறஞ்சுடு காடது நோக்கி
மதுவூர் வாங்கியே வைத்தகன் றார்களே.

பொருள் : தேன் பிலிற்றும் மலர்களை அணிந்த கூந்தலையுடைய மனைவியும், செல்வமும், வீடும், இவ்வூரின் கண்ணே தங்கிவிட, உயிர் நீங்கிய உடம்பைப் பாடையில் வைத்து, ஊருக்குப் பொதுவாகப் புறத்தே யுள்ள சுடுகாட்டை நோக்கி எடுத்துச் சென்று மயக்கத்தோடு பாடையினின்றும் எடுத்துச் சிதையில் வைத்து விட்டுச் சென்றார்கள்.

156. வைச்சகல் வுற்றது கண்டு மனிதர்கள்
அச்சக லாதென நாடும் அரும்பொருள்
பிச்சது வாய்ப்பின் தொடர்வுறு மற்றவர்
எச்சக லாநின்று இறைக்கின்ற வாறே.

பொருள் : மேலே சொன்னவாறு சுடுகாட்டில் வைத்து எல்லோரும் நீங்கியதைக் கண்டும் மக்கள், உயிர் உடலை விட்டு நீங்காது என்று தாம் தேடும் அருமையான பொருள்களில் மயக்கமுற்று அதனைத் தேடுவதற்கு அலையும் மக்கள் மேன்மை நீங்க நின்று வருந்து கின்றார்களே. அச்சு - உயிர்.

157. ஆர்த்தெழு சுற்றமும் பெண்டிரும் மக்களும்
ஊர்த்துறைக் காலே ஒழிவர் ஒழிந்தபின்
வேர்த்தலை போக்கி விறகிட்டு எரிமூட்டி
நீர்த்தலை மூழ்குவர் நீதியி லோரே.

பொருள் : ஆரவாரம் செய்து கொண்டு எழுகின்ற உறவினரும் மனைவியும் மக்களும், ஊருக்குப் புறம்பே யுள்ள நீர்த்துறை வரை வந்து நீங்குவர்; அவ்வாறு நீங்கிய பின் வாழ்வுக்கு அடியாகவுள்ள தலையினை மறைத்துப் பின்னர்த் தீயினை மூட்டி நீரில் தலை மூழ்குவார்கள் நீதியில்லாதவர். (சுடுகாட்டில் செய்யும் இறுதிச் செயல் கூறியவாறு.)

158. வளத்திடை முற்றதோர் மாநிலம் முற்றுங்
குளத்தின் மண்கொண்டு குயவன் வனைந்தான்
குடம்உடைந் தால்அவை ஒடென்று வைப்பார்
உடலுடைந் தால்இறைப் போதும் வையாரே.

பொருள் : ஒப்பற்ற உலக முழுவதும் வளப்ப மிக்க இடைப் பிரதேசமாகிய முன்னிடத்து கருப்பை யாகிய குளத்தினது சுரோணிதமாகிய மண்ணைக் கொண்டு பிரமனாகிய குயவன் படைத்தலைச் செய்தான். மண்ணாலாகிய குடம் உடையுமாயின் அதன் பகுதியாகிய ஓடானது உதவும் என்று வைத்திருப்பர். உடல் உடைந்தால் ஒரு கணப்பொழுதும் வீட்டில் வைக்க மாட்டார்கள். (உடம்பின் இழிவு கூறியவாறு.)

159. ஐந்து தலைப்பறி ஆறு சடையுள
சந்தவை முப்பது சார்வு பதினெட்டுப்
பந்தலும் ஒன்பது பந்தி பதினைந்து
வெந்து கிடந்தது மேலறி யோமே.

பொருள் : இவ்வுடம்பில் ஐந்து இந்திரியங்களும் ஆறு ஆதாரங்களும் உள்ளன. எலும்பு இணைப்புகள் முப்பது. அவற்றைச் சார்ந்துள்ள பொருத்துகள் பதினெட்டு. இவற்றின் மீது போர்த்தப் பெற்ற பந்தலும் ஒன்பது வரிசையாகவுள்ள எலும்புகள் பதினைந்து, இவையெல்லாம் சேர்ந்த உடம்பு தீயில் வெந்து கிடந்தது. அதற்குமேல் உயிரின் நிலையை நம்மால் அறிய முடியவில்லை.

160. அத்திப் பழமும் அறைக்கீரை நல்வித்தும்
கொத்தி உலைப்பெய்து கூழ்அட்டு வைத்தனர்
அத்திப் பழத்தை அறைக்கீரை வித்துண்ணக்
கத்தி எடுத்தவர் காடுபுக் காரே.

பொருள் : சுரோணிதமாகிய அத்திப் பழத்தையும் சுக்கிலமாகிய அறைக்கீரை வித்தையும் கிளறிக் கருப்பையாகிய உலையில் இட்டு கருவாகிய கூழைச் சமைத்தனர். சுரோணிதமாகிய அத்திப் பழத்தைச் சுக்கிலமாகிய அரைக்கீரைவித்து உண்டு சிசுவாய் வளர்ந்து பின் அமுது சமைத்தவர், இறுதியில் சுடுகாட்டுக்குச் சென்றனரே.

161. மேலும் முகடில்லை கீழும் வடிம்பில்லை
காலும் இரண்டு முகட்டலக் கொன்றுண்டு
ஓலையான் மேய்ந்தவர் ஊடு வரியாமை
வேலையான் மேய்ந்ததோர் வெள்ளித் தளியே

பொருள் : உடம்பாகிய வீட்டுக்கு உச்சிக் கூரை இல்லை. கீழே குறடும் இல்லை. ஆனால் இரண்டு கால்கள் உள்ளன. நடுக்கால் ஒன்று உள்ளது. இவ்வாறுள்ள கூரையை ஓலையினால் வேய்ந்தவர் இடையே வரிச்சுக் கழி போட்டுக் கட்டாமல், அழகுபடச் செய்த ஒரு வெண் கோயிலாகும். (நடு நாடியாகிய சுகுமுனையின் பிராணனைச் செலுத்தாமையால் உடம்பு அழிந்து கெடுகிறது.)

162. கூடம் கிடந்தது கோலங்கள் இங்கில்லை
ஆடும் இலயமும் அற்றது அறுதலும்
பாடுகின் றார்சிலர் பண்ணில் அழுதிட்டுத்
தேடிய தீயினில் தீயவைத் தார்களே.

பொருள் : உயிர் நடனம் செய்த உடம்பாகிய கூடம் அப்படியே கிடந்தது. முன் உயிர் இருந்த காலத்துள்ள அழகு இப்போது அவ்வுடம்பில் இல்லை. அசைந்து ஆடிக் கொண்டிருந்த பிராண ஓட்டமும் நின்றது. அவ்வாறு பிராணன் நீங்குதலும் உற்றார் உறவினர் ஒப்பாரி வைத்து அழுகின்றனர். நெருப்பை உண்டாக்கி அதில் உடலைச் சுட்டெரித்து விடுகிறார்கள்.

163. முட்டை பிறந்தது முந்நூறு நாளினில்
இட்டது தானிலை ஏதேனும் ஏழைகாள்
பட்டது பார்மணம் பன்னிரண்டு ஆன்டினில்
கெட்டது எழுபதில் கேடறி யீரே.

பொருள் : மீன் முட்டையைப் போல் கருப்பையில் பதியும் உடம்பு பத்து மாதங்களில் வெளி வந்தது. இவ்வுடம்பு ஏதாவது விருப்பப்படி அமைந்தது அல்ல. அறிவிலிகளே ! பிறந்து பன்னிரண்டு ஆண்டுகளில் அது உலக வாசனை பொருந்தும் இடமாக இருந்தது. எழுபது ஆண்டுகளில் மடிந்தது. இந் நிலையாமையை அறிவீராக.

164. இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டான்
முடிஞ்சது அறியார் முழங்குவர் மூடர்
விடிஞ்சுஇரு ளாவது அறியா உலகம்
படிஞ்சு கிடந்து பதைக்கின்ற வாறே.

பொருள் : உடம்பாகிய அகல் இருக்க, உயிராகிய தீபவொளியைக் காலன் கொண்டு சென்றான். அறிவில்லாதவர்கள் உடம்பு அழியும் உண்மையை அறியாது அரற்றுகின்றனர். பிறப்பாகிய விடிவும், இறப்பாகிய இருளும் மாறி மாறி வரும் என்பதை உலகினர் அறியாது. நிலையற்ற உடம்பை நிலையென்று பற்றிக் கிடந்து வருந்துகிறார்களே.

165. மடல்விரி கொன்றையன் மாயன் படைத்த
உடலும் உயிரும் உருவம் தொழாமல்
இடர்படர்ந்து ஏழா நரகிற் கிடப்பர்
சூடர்பட வெந்தமர் கூப்பிடு மாறே.

பொருள் : விரிந்த கொன்றை மாலை அணிந்தவனும், மாயைக்கு ஆதாரமானவனுமாகிய சிவன் படைத்த உடம்பிலும் உயிரிலும் கலந்து விளங்கும் உருவத்தை வணங்காமல், குடர்கிழிய விருப்பம் மிக்க சுற்றத்தார் கதறுமாறு துன்பம் பெருகி ஏழு வகையான நரகத்தில் வாடிக் கிடப்பர். (உடம்பில் விளங்கும் சோதியை வணங்காமல் அறிவில்லாதவர் நரகில் கிடந்து வாடுவர்.)

166. குடையும் குதிரையும் கொற்றவா ளுங்கொண்டு
இடையும்அக் காலம் இருந்து நடுவே
புடையும் மனிதனார் போக்கும்அப் போதே
அடையும் இடம்வலம் ஆருயி ராமே.

பொருள் : வெண்கொற்றக் குடையும் குதிரையும் செங்கோலும் கொண்டு, நாற்புறமும் மக்கள் சூழ்ந்து வர நடுவில் செல்லும் போதே அழிவு உண்டாகும் காலத்தில் அத்தலைவனது பிராணன் இடம் வலமாகச் சுழன்று நின்றுவிடும் முடிமன்னராய் நால்வகைச் சேனை புடைசூழச் சென்றாலும் பிராணன் நீங்குவதைத் தடுக்க முடியாது.

167. காக்கை கவரிலென் கண்டார் பழிக்கிலென்
பாற்றுளி பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென்
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும்
கூத்தன் புறப்பட்டுப் போனஇக் கூட்டையே.

பொருள் : உடம்பாகிய தோற்பையில் இருந்து வினைமுடிவு பெறச் செய்து, வினைப் பயனை ஊட்டிக் கொண்டிருந்த உயிராகிய கூத்தன் வெளிப்பட்டுப் போனபின் இவ்வுடம்பாகிய கூட்டைக் காக்கை கொத்தினால் என்ன ? கண்டவர்கள் பழித்தால் என்ன ? உடம்பைச் சுட்டெரித்த பின் எலும்பின்மேல் பாலைத் தெளித்தால் என்ன ? பலர் பாராட்டிப் பேசினால் என்ன ?

3. நிலையாமை

(செல்வ நிலையாமையாவது, புறச் செல்வமாகிய மாடுமனை முதலியவற்றின் நிலையாமை)

168. அருளும் அரசனும் ஆனையும் தேரும்
பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னம்
தெருளும் உயிரொடும் செல்வனைச் சேரின்
மருளும் பினையவன் மாதவம் அன்றே.

பொருள் : அருள்புரியும் அரச பதவியும், யானைப் படையும், தேர்ப்படையும் பொருட் குவியலும் ஆகியவற்றைப் பிறர் கவர்ந்து செல்வதற்கு முன், தெளிந்த உயிரோடு நிலையான செல்வத்தையுடைய இறைவனை அடைந்தவுடன், பிறகு அவன் பெரி தவத்தையும் விரும்பாது வெருவுவான். உயிருடன் உள்ள போதே சிவனைச் சேரின் மாதவம் வேண்டா.

169. இயக்குறு திங்கள் இரும்பிழப்பு ஒக்கும்
துயக்குறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டா
மயக்கற நாடுமின் வானவர் கோனை
பெயற்கொண்டால் போலப் பெருஞ்செல்வ மாமே.

பொருள் : வானத்தில் இயங்குகின்ற ஒளியுடைய சந்திரன் ஒளி குறைந்து இருளாவது போலத் தளர்ச்சியுறும் செல்வம் குறைந்து இல்லையாவதை யாரும் சொல்லத் தேவையில்லை. ஆதலால் தேவதேவனாகிய இறைவனைப் பொருள் மயக்கம் நீங்கி நாடுங்கள். மழை மேகம் போலப் பெருஞ்செல்வம் உண்டாகும். இறைவனே நிலையான செல்வம் ஆகும்.

170. தன்னது சாயை தனக்குத் வாதுகண்டு
என்னது மாடென்று இருப்பர்கள் ஏழைகள்
உன்னுயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது
கண்ணது காணொளி கண்டுகொ ளீரே.

பொருள் : தன்னோடு பொருந்திய நிழல் தனக்கு உதவாதது கண்டும் அறிவில்லாதவர்கள் தமக்கு வேறாகவுள்ள செல்வம் தமக்கு உதவும் என்று எண்ணுவார்கள். உடலோடு ஒன்றாக வந்தது உன்னுடைய உயிர். எனினும் உயிர் போகும்போது உடல் அழிந்து போகும். அகக்கண் இடமாக விளங்குகிறது நிலையான ஒளி. அதனை உடம்பு உள்ளபோதே நாடிக் கொள்ளுங்கள்.

171. ஈட்டிய தேன்பூ மணங்கண்டு இரதமும்
கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும்
ஓட்டித் துரந்திட்டு அதுவலி யார்கொளக்
காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே.

பொருள் : பூவினது மணத்தை ஆராய்ந்து கண்டு அதனுள் பொருந்திய தேனைச் சேகரித்த வண்டு, எடுத்துக் கொண்டு வந்து ஒரு மரக்கிளையில் அடையாக வைக்கும். வண்டினை விரட்டிவிட்டு வலிமையுடையவர் அத்தேனை எடுத்துச் செல்ல, அது காட்டிக் கொடுத்து நீங்கிவிடும். செல்வம், உடையானுக்குப் பயன்படாமையோடு தீமையும் செய்யும்.

172. தேற்றித் தெளிமின் தெளிந்தநீர் கலங்கன்மின்
ஆற்றுப் பெருக்கிற் கலக்கி மலக்காதே
மாற்றிக் களைவீர் மறுத்துங்கள் செல்வத்தைக்
கூற்றன் வருங்கால் குதிக்கலும் ஆமே.

பொருள் : செல்வம் நிலையாமையை நன்கு அறிந்து தெளியுங்கள். தெளிந்தவர்கள் மீண்டும் பயம் கொள்ளாதீர்கள். ஆற்று வெள்ளம் போல் பெருகிவரும் செல்வத்தைக் கண்டு கலங்கி மயங்காமல், உங்களது பொருட் பற்றினை நீத்து மேலான செல்வத்தைப் பெருக்கிக் கொள்ளுங்கள். உயிரை உடலினின்றும் கூறு செய்கின்ற கூற்றுவன் வரும்போது கடத்தலும் கூடும்.

173. மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே
கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லும் கலம்போல்
அவிழ்கின்ற ஆக்கைக்கோர் வீடு பேறாகச்
சிமிழொன்று வைத்தமை தேர்ந்தறி யாரே.

பொருள் : மகிழ்ந்து அனுபவிக்கின்ற பரம்பரைச் சொத்தும், தாமே முயன்று ஈட்டிய பொருளும், ஆற்றுப் பெருக்கில் சென்று உடனே கவிழ்கின்ற படகைப் போன்றன. அழிந்து போகின்ற உடம்புக்கு ஒரு நிலை பேறாகச் சேமித்து வைத்துள்ளதை உணர்ந்து பெருக்கிக் கொள்ள உலகவர் அறியார்.

174. வாழ்வும் மனைவியும் மக்கள் உடன்பிறந்
தாரும் அளவுஏது எமக்கென்பர் ஒண்பொருள்
மேவும் அதனை விரிவுசெய் வார்கட்குக்
கூவும் துணையொன்று கூடலும் ஆமே.

பொருள் : உயிர்க்கு உதவியில்லாத வாழ்வுக்குரிய பொருளும் மனைவியும் மக்களும் உடன் பிறந்தாரும் எமக்கு அளவற்றவர் இருக்கின்றனர் என்று உலகவர் கூறுவர். ஆனால் இவற்றை விட்டு உற்ற இடத்து உதவும் ஒளிப் பொருளான சிவத்தை நினைந்து அச் செல்வத்தைப் பெருக்கிக் கொள்வார்க்கு கூவி அழைத்துக் கொள்ளும் மேலான செம்பொருளை அடைதல்கூடும்.

175. வேட்கை மிகுந்தது மெய்கொள்வார் இங்கிலை
பூட்டுந் தறியொன்று போம்வழி ஒன்பது
நாட்டிய தாய்தமர் வந்து வணங்கிப்பின்
காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே.

பொருள் : உலகவாழ்வில் ஆசை பெருகிற்று; உண்மைப் பொருளை அறிபவர் யாரும் இல்லை; உடம்பை நிலையாக நிறுத்தும் கழுமுனையாகிய தறி ஒன்று உள்ளது. ஆனால் அதற்கு அழிக்கின்ற வழி ஒன்பது உள்ளன. உறவு முறையை நிலைநாட்டிய தாயாரும் சுற்றத்தாரும் வந்து வணங்கிய பின் சுடுகாட்டைக் காட்டிக் கொடுத்து நீங்கிவிடுவர்.

176. உடம்போடு உயிரிடை விட்டோடும் போது
அடும்பரிசு ஒன்றில்லை அண்ணலை எண்ணும்
விடும்பரி சாய்நின்ற மெய்ந்நமன் தூதர்
சுடும்பரி சத்தையும் குழகி லாரே.

பொருள் : உடம்பைவிட்டு உயிர் இடையிலே விட்டுச் செல்லும் போது வெல்லும் வகை ஒன்றுமில்லை. இறைவனை எண்ணுங்கள் உயிரை உடம்பினின்றும் வேறுபடுத்தும் பரிசினை நல்கும் உண்மையான எம தூதர்கள் வேதனைப்படுத்தும் பரிசினைக் கருதமாட்டார்கள்.

4. இளமை நில்லாமை

(அஃதாவது வாலிபத் தன்மை மாறும் இயல்பினது)

177. கிழக்கெழுந்து ஓடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டும் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்
விழக்கண்டும் தேறார் வியனுல கோரே.

பொருள் : கிழக்கே வானத்தில் உதயமாகிய நன்றாக விளங்கிய சூரியன், மேற்கில் மறைவதைக் கண்டும் அறிவில்லாத மக்கள் இளமை நிலையாமையை உணரார். அதே போன்று இளங்கன்று சில நாளின் வளர்ந்து மூப்படைந்து இறப்பதைக் கண்டும் அகன்ற உலகிலுள்ளோர் இந்த இளமை நிலையாமையை உணரமாட்டார்.

178. ஆண்டு பலவுங் கழிந்தன அப்பனைப்
பூண்டுகொண் டாரும் புகுந்தறி வார்இல்லை
நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும்
தூண்டு விளங்கின் சுடர்அறி யாரே.

பொருள் : பல ஆண்டுகள் அறியாமையில் கழிந்தோடின. உயிர்த்தந்தையாகிய இறைவனை யாரும் தங்கள் உடலில் நிலைபெறச் செய்து அவனது அகண்ட ஒளியில் புகுந்து பேரறிவைப் பெறுவார் இல்லை; நீண்ட காலம் உலகில் வாழும் பேறு பெற்றிருப்பினும் தூண்டுகின்ற விளக்கின் சுடர்போன்ற இறைவனை உலகவர் அறியாதவர்களாக உள்ளனர்.

179. தேய்ந்தற்று ஒழிந்த இளமை கடைமுறை
ஆயந்தற்ற பின்னை அரிய கருமங்கள்
பாய்ந்தற்ற கங்கைப் படர்சடை நந்தியை
ஓர்ந்துற்றுக் கொள்ளும் உயிருள்ள போதே.

பொருள் : இளமையானது நாள்தோறும் சிறிது சிறிதாகத் தேய்ந்து கடைசியில் இற்று ஒழிந்தது. மூப்பு எய்திய பின் அருமையான காரியங்கள் செய்ய முடியாதனவாகும். ஆதலால் உயிர் செழுமையான உடலில் இருக்கும் போதே கங்கையாறு பாய்ந்து மறைந்த பரவிய சடையையுடைய சிவபெருமானை ஆராய்ந்து பொருந்துங்கள். நந்தி - இறைவன்.

180. விரும்புவர் முன்என்னை மெல்லியன் மாதர்
கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர்போல்
அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்கும்
கரும் பொத்துக் காஞ்சிரங் காயும்ஒத் தேனே.

பொருள் : மென்மையான பெண்கள் கரும்பைப் பிழிந்து கடைசியில் வருகின்ற சாற்றினைப்போல, இளமைக் காலத்தில் என்னை இனிமையாக விரும்புவர். அத்தகையான, தாமரை மொட்டுப் போன்ற முலையினையும், அழகிய அணியையும் உடைய பெண்களுக்கு, இளமையில் கரும்பைப் போன்று இனிமையாகவும் முதுமையில் எட்டிக்காய் போன்று கசப்பாகவும் ஆயினேன்.

181. பாலன் இளையன் விருத்தன் எனநின்ற
காலங் கழிவன கண்டும் அறிகிலார்
ஞாலம் கடந்துஅண்டம் ஊடறுத் தான்அடி
மேலும் கிடந்து விரும்புவன் நானே.

பொருள் : பாலன் என்றும் இளையன் என்றும் முதியோன் என்றும் உள்ள பருவ காலங்கள் மாறுபடுவதை உலகோர் அறியவில்லை. ஆனால் இவ்வுலகத்தைக் கடந்து அதற்கு மேலாக உள்ள அண்டங்களையும் ஊடறுத்து நிற்கின்ற இறைவனது திருவடியை மேன்மேலும் பொருந்தி நான் அன்பு செய்வேன்.

182. காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும்
மாலை படுவதும் வாணாள் கழிவதும்
சாலும்அவ் ஈசன் சலவிய னாகிலும்
ஏல நினைப்பவர்க்கு இன்பம்செய் தானே.

பொருள் : நாள்தோறும் காலையில் எழுந்தவர்கள் மாலையில் உறக்கத்துக்குச் செல்வதும் வாழ்நாள் குறைவதும் போதும் ! அவ்வாறு வாழ்நாளைக் குறைக்கின்ற உருத்திர மூர்த்தி கோபமுடையவன். ஆகிலும் பொருந்த நினைப்பவர்க்கு இன்பம் அருளுகின்றான்.

183. பருவூசி ஐந்துமோர் பையினுள் வாழும்
பருவூசி ஐந்தும் பறக்கும் விருகம்
பருவூசி ஐந்தும் பனித்தலைப் பட்டால்
பருவூசிப் பையும் பறக்கின்ற வாறே.

பொருள் : பருமையான ஊசி போன்ற ஐந்து இந்திரியங்களும் ஒருபை போன்ற உடம்பினுள் உள்ளன; பறந்து சென்று தீயனவற்றைப் பற்றி உண்ணும் காக்கை போன்றவை இந்த ஐந்து இந்திரியங்களுமாகும்; ஐந்து இந்திரியங்களும் சிரசின்மேல் பனிப்படலம் போல விளங்கும் ஒளியில் தலைப்பட்டு அமையுமாயின் ஐந்து இந்திரியங்களைக் கொண்ட உடம்பின் நினைவு நீங்கிவிடும்.

184. கண்ணதும் காய்கதி ரோனும் உலகினை
உண்ணின்று அளக்கின்றது ஒன்றும் அறிகிலார்
விண்ணுறு வாரையும் வினையுறு வாரையும்
எண்ணுறும் முப்பதில் ஈர்ந்தொழிந் தாரே.

பொருள் : தண்ணிய சந்திரனும் வெம்மையான சூரியனும் உலகவரின் உடம்பினுள் இருந்து வாழ்நாளை அளந்து கொண்டிருப்பதை யாரும் அறியவில்லை. ஆகாயப் பேறு அடைபவரையும் விளையுள்பட்டு அழிபவரையும் சூரிய சந்திரர்கள் முப்பது ஆண்டில் பிரிந்து விடுகின்றனர்.

185. ஒன்றிய ஈரெண் கலையும் உடலுற
நின்றது கண்டும் நினைக்கிலர் நீசர்கள்
கன்றிய காலன் கருக்குழி வைத்தபின்
சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே.

பொருள் : பொருந்திய பதினாறு கலைகளும் உடனாய் நிற்றலைக் கண்டும், கீழானவர்கள் தலைவழியே சென்று மேல்-விளங்கும் இறைவனைச் சிந்திக்கின்றிலர். சினக்கின்ற காலனாகவுள்ள உருத்திரன் மீண்டும் கருப்பையில் வைத்தபின் அதில் போய் மீண்டும் பிறவியில் வீழ்வர். இவர் மனமயக்கம் ஒழியாதவராவர்.

186. எய்திய நாளில் இளமை கழியாமை
எய்திய நாளில் இமையினால் ஏத்துமின்
எய்திய நாளின் எறிவது அறியாமல்
எய்திய நாளில் இருந்துகண் டேனே.

பொருள் : பிராசாத நெறியே சென்று சந்திர மண்டலம் விளங்கிய காலத்து, இளமை நிலைக்காதிருக்கும் போது, துதிப்பாடல்களால் சிவனைப் புகழ்ந்து பாடுங்கள். அவ்வாறு ஏத்திப் பிராண இயக்கம் நடைபெறுவதை உணராமல் அப்போது தியானத்தில் பொருந்தியிருந்து உண்மையை நான் உணர்ந்தேன். (இளமையிலேயே இறைவனை ஏத்தி வழிபட்டுச் சித்தி பெற வேண்டும்).

5. உயிர் நிலையாமை

(அஃதாவது, உயிர் உடம்பில் நில்லாமை)

187. தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில்
இழைக்கின்றது எல்லாம் இறக்கின்ற கண்டும்
பிழைப்பின்றி எம்பெரு மான்அடி ஏத்தார்
அழைக்கின்ற போதுஅறி யார்அவர் தாமே.

பொருள் : துளிர்க்கின்ற செம்மையான தளிரையும் குளிர்ச்சியான மலரையும் உடைய பூங்கொம்பிலே, தோற்றுகின்றவையெல்லாம் சருகாக மாறுதலைக் கண்டும், தவறுதலன்றி உயிருள்ள போதே இறைவனது திருவடியை ஏத்த மாட்டார்கள். அவர்கள் எமனிடமிருந்து அழைப்பு வந்த போது இறைவனை ஏத்துவதற்கு அறிய மாட்டாதவர் ஆவர்.

188. ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது
ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள்
ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால்
ஐவரும் அச்செய்யைக் காவல்விட் டாரே.

பொருள் : பிரமனாகி ஐவர்க்கும் தொழில் செய்வதற்கு உடம்பாகிய ஒரு நிலம் விளைந்து கிடந்தது. ஐவரும் அவ்வுடம்பினை ஓம்பி உயிர்க்கு வினைப் போகத்தை ஊட்டி வருவார்கள். இவர்களுக்குத் தலைவனாகிய சிவனிடமிருந்து வினை நுகர்வு முடிவில் இறுதிச் சீட்டு வருதலும், இவர்கள் அவ்வுடம்பாகிய விளை புலத்தை ஓம்பாது கழிந்தனர். ஐவர் பிரமன், திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் ஆகிய ஐவர்.

189. மத்தளி ஒன்றுள தாளம்இ ரண்டுள
அத்துள்ளே வாழும் அரசனும் அங்குளன்
அத்துள்ளே வாழும் அரசன் புறப்பட்டால்
மத்தளி மண்ணாய் மயங்கிய வாறே.

பொருள் : மண்ணாலாகிய உடம்பு ஒன்று உண்டு அதில் உச்சுவாச நிச்சுவாசமாகிய தாளங்கள் இரண்டு உள்ளன. அதனுள் வாழ்கின்ற சீவனாகிய அரசனும் அங்கு வீற்றிருக்கின்றான். அங்குள்ள சீவன் உடம்பை விட்டு நீங்கினால் கோயிலாகிய உடம்பு மீண்டும் மண்ணாய் விட்டது.

190. வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை
வேங்கடத் துள்ளே விøளாடு நந்தியை
வேங்கடம் என்றே விரகுஅறி யாதவர்
தாங்கவல் லாருயிர் தாமறி யாரே.

பொருள் : சிரசின்மேல் ஈசான திக்கில் விளங்குபவனும் வாக்கு உருவாமாக இருந்து கொண்டு நடிப்பவனும் வெந்து போகின்ற உடம்பினுள்ளே விளையாடும் நம் தீயாகவுள்ளவனுமாகிய இறைவன் அழுகின்ற உடம்பாயுள்ளான் என்ற தன்மை அறியாதவர், உடம்பினைத் தாங்குகின்ற அருமையான சீவனையும் அறியாதவராவர்

191. சென்றுணர் வான்திசை பத்துந் திவாகரன்
அன்றுணர் வால்அளக் கின்றது அறிகிலர்
நின்றுண ரார்இந் நிலத்தின் மனிதர்கள்
பொன்றுணர் வாரிற் புணர்க்கின்ற மாயமே.

பொருள் : சிவசூரியன் உடம்பில் கீழும் மேலும் சூழவுள்ள எட்டுத் திசைகளிலும் சென்று அறிவான். அவன் உணர்வு மயனாக இருந்து உடம்பில் வியாபித்த அறிதலை உலகவர் அறியவில்லை இந் நிலவுலகில் வாழ்கின்ற மக்கள் நான் என்னும் அகங்காரம் கெட்ட ஞானியரிடம் அவன் கலக்கின்ற மாயத் தன்மையும் உணர மாட்டார், என்னே அறியாமை ?

இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Mon Mar 26, 2012 2:17 pm

192. மாறு திருத்தி வரம்பிட்ட பட்டிகை
பீறும் அதனைப் பெரிதுணர்ந் தாரிலை
கூறுங் கருமயிர் வெண்மயி ராவது
ஈறும் பிறப்பும்ஒ ராண்டெனும் நீரே.

பொருள் : சிக்கல் அறுத்து ஒழுங்குபடுத்தி நெய்யப் பெற்ற பட்டாடை கிழிந்து ஒழியும் அவ்அழியும் தன்மையை உலகவர் நன்றாக உணரவில்லை. அதுபோன்று கூறப் பெறுகின்ற கரியமயிர் நரை மயிராவதும் பூமியில் இறப்பதும் பிறப்பதும் சிறு பொழுது தாம் என்று நீவிர் உணருங்கள்.

193. துடுப்பிடு பானைக்கும் ஒன்றே அரிசி
அடுப்பிடு மூன்றிற்கும் அஞ்செரி கொள்ளி
அடுத்தெரி யாமல் கொடுமின் அரிசி
விடுத்தன நாள்களும் மேற்சொன் றனவே.

பொருள் : சுழுமுனை யாகிய அகப்பை இடம்பெற்ற உடம்பாகிய பானைக்கும் விந்துவாகிய அரிசி ஒன்றேயாம். உடம்பினுள் சோம சூரியாக்கினியாகிய அடுப்புக்குப் பிராணன் முதலிய ஐவகை வாயுக்களும் விறகாகும். அடுத்து வீணாக்காமல் விந்து சக்தியைக் கொடுத்து மதி யமுதத்தைப் பெறுங்கள் வரையறுக்கப் பெற்ற நாட்கள் வீணாகக் கழிக்கின்றனவே.

194. இன்புறு வண்டிங்கு இனமலர் மேற்போய்
உண்பது வாச மதுபோல் உயிர்நிலை
இன்புற நாடி நினைக்கிலும் மூன்றுஒளி
கண்புற நின்ற கருத்துள்நில் லானே.

பொருள் : இன்பத்தை நாடுகின்ற வண்டு, கூட்டமான மலர்களின் மேல்சென்று, மணம் நிறைந்த தேனை உண்பது போல, சீவன் அகத் தாமரையில் இன்பத்தை நாடி நினைத்தாலும் சோம சூரியாக்கினியாகிய ஒளியில் விளங்கும் சிவன் புறத்தே செல்லும் மனத்தில் விளங்க மாட்டான்.

195. ஆம்விதி நாடி அறஞ்செய்மின் அந்நிலம்
போம்விதி நாடிப் புனிதனைப் போற்றுமின்
நாம்விதி வேண்டும் அதென்சொலின் மானிடர்
ஆம்விதி பெற்ற அருமைவல் லார்க்கே.

பொருள் : பிறவியில் இன்பம் ஆகின்ற நெறியை விரும்பி ஒழுக்கத்தில் நில்லுங்கள். இனி மேலாம் நிலம் அல்லாது ஒளி மண்டலத்தை விரும்பி இறைவனை ஏத்துங்கள். மானிடராய்ப் பிறக்கும் நல்லூழைப் பெற்ற அருமையானவருக்கு, சொல்லப் போனால் விதியாக் கூறவேண்டியது என்ன உள்ளது.

196. அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின்
வெவ்விய னாகிப் பிறர்பொருள் வவ்வன்மின்
செவ்விய னாகிச் சிறந்துண்ணும் போருதொரு
தவ்விக்கொடு உண்மின் தலைப்பட்ட போதே.

பொருள் : வஞ்சனை பேசி அறம் அழிய நடவாதீர்கள். கொடியோராகிப் பிறர்பொருளைக் கவராதீர்கள். செம்மையுடையோனாகிச் சிறப்பாக உண்ணும்போது, யாரேனும் நாடிவரின் ஓர்அகப்பை உணவு கொடுத்துப் பின் உண்ணுங்கள்.

6. கொல்லாமை

(ஓர் உயிரை உடம்பினின்றும் பிரிக்காமை)

197. பற்றாய் நற்குரு பூசைக்கும் பன்மலர்
மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்
நற்றார் நடுக்கற்ற தீபமும் சித்தமும்
உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே.

பொருள் : பற்றுக் கோடாகிய சிறந்த குருவின் பூசைக்கும் பலவகை மலராக உள்ளது கொல்லாமையாகும். கண்மலரின் ஒளியே நல்ல மாலையாகும். அசைவற்ற மனமே சிறந்த தீபமாகும். இவை யனைத்துங் கொண்டு பூசிக்கின்ற உயிர் விளங்கும் இடம் சிரசின் உச்சியாகும், சிவகுரு பூசைக்குச் சிறப்பான மலர், கொல்லாமையாகும். அகப் பூசைக்கும்ப புறப்பொருள் தேவையில்லை.

198. கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை
வல்லடிக் காரர் வலிக்கயிற் றாற்கட்டிச்
செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை
நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே.

பொருள் : கொல் என்றும் குத்து என்றும் சொல்லிய விலங்கை யொத்த மக்களைக் காலனது ஏவலர் வலிமையான கயிற்றால் கட்டி, செல் என்று நில் என்றும் அதட்டி, அனல் கக்குகின்ற நரகத்தில் நெடுங்காலம் நிற்க என்று ஆணையிடுவர்.

7. புலால் மறுத்தல் (புலால் உண்ணாமை)

199. பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாரும் காண இயமன்தலை தூதுவர்
சொல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி முறித்துவைப் பாரோ

பொருள் : பொல்லாத புலால் உணவை உண்ணும் கீழ்மக்களை யாவரும் காணும் வண்ணம் எமதூதர்கள் கறையானைப் போன்று பற்றி அரித்துப் பின் அனல் கக்குகின்ற நரகத்தில் முதுகைக் கீழ்ப் புறமாகக் கிடத்தி வைப்பர்.

200. கொலையே களவுகள், காமம், பொய்கூறல்
மலையான பாதக மாம்அவை நீக்கித்
தலையாம் சிவனடி சார்ந்தின்பம் சார்ந்தோர்க்கு
இலையாம் இவைஞானா னந்தத்து இருத்தலே

பொருள் : கொலை, களவு, காமம், பொய் பேசுதல் ஆகியவை பஞ்ச மா பாதங்களாகும். அப்பாவங்களை நீக்கி, சிரசின் மேல் திருவடி சூடி இன்பம் அடைந்தோர்க்கு இப்பாவங்களும் அவற்றால் வரும் துன்பங்களும் இல்லையாம். இவர்கள் பேரின்பத்தில் திளைத்திருத்தலும் ஆகும்.

8. பிறன்மனை நயவாமை (பிறன் மனைவியை விரும்பாமை)

201. ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
காத்த மனையாளைக் காமுறுங் காளையர்
காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக்கு இடருற்ற வாறே.

பொருள் : அன்புடைய மனைவி வீட்டில் இருக்கவும், பிறரால் காக்கப்பட்ட மனைவியை விரும்பும் காமுகர், வீட்டில் காய்த்துப் பழுத்துள்ள பலவின் கனியை உண்ணாமல், காட்டில் பழுத்துள்ள ஈச்சம் பழத்தைப் பொறத் துன்பப்படுவது போலாம். (பிறர் மனைவியை நாடுவது அறியாமையாகும்.)

202. திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியை
அருத்தமென்று எண்ணி அறையில் புதைத்துப்
பொருத்தம்இல் லாத புளிமாங் கொம்பேறிக்
கருத்துஅறி யாதவர் காலற்ற வாறே.

பொருள் : செப்பமாக வளர்த்த மரத்தினின்றும் பெற்ற இனிய மாம்பழத்தைச் சேமிப்புப் பொருளாக எண்ணி அறையில் வைத்துவிட்டு, தகுதியில்லாத புளியம் பழத்துக்காகப் புளியங் கிளையில் ஏறி, ஆலோசனை யில்லாதவர் பிராணசத்தி குறைவுற்று வருந்துகின்றாரே !

203. பொருள்கொண்ட கண்டனும் போதத்தை யாளும்
இருள் கொண்ட மின்வெளி கொண்டுநின் றோரும்
மருள் கொண்ட மாதர் மயலுறு வார்கள்
மருள் கொண்ட சிந்தையை மாற்றகில் லாரே.

பொருள் : பொருளில் பற்றுடையோரும், அறிவை மறைத்து ஆளுகின்ற அறியாமையாகி இருளில் தோன்றிய மின்வெளிபோன்ற சிறு அறிவைப் பெரிதென்று மதித்திருப்போரும் மருண்ட பார்வை உடைய பெண்ணிடம் மயக்கம் கொள்வார்கள். அவ்வாறு மயங்கிய மனத்தை மாற்ற முடியாதவராவர்.

9. மகளிர் இழிவு (பொது மகளிர் இழிவு)

204. இலைநல லாயினும் எட்டி பழுத்தால்
குலைநல வாங்கனி கொண்டுண லாகா
முலைநலங் கொண்டு முறுவல்செய் வார்மேல்
விலகுறு நெஞ்சினை வெய்துகொள் வீரே.

பொருள் : இலை முதலியவற்றால் அழகாயுள்ள எட்டிமரம் குலையாகப் பழுத்திருந்தாலும் அக்குலையில் கவர்ச்சியுடைய தாகிய பழத்தைப் பறித்து உண்ணலாகாது. அது போல முலை நலத்தினால் கவர்ச்சியைக் காட்டிப் புன்முறுவல் செய்வார் மேல் அவரது கவர்ச்சியில் ஈடுபடாமல் விலகிவிட வேண்டும். அவ்வாறு அவர்பால் செல்லும் மனத்தினையும் கடிய வேண்டும்.

205. மனைபுகு வார்கள் மனைவியை நாடில்
சுனைபுகு நீர்போல் சுழித்துடன் வாங்கும்
கனவது போலக் கசிந்தெழும் இன்பம்
நனவது போலவும் நாடவொண் ணாதே.

பொருள் : பிறர்மனை செல்வோர் அம்மனைக்குரிய மாதரை நாடினால், மலைச் சுனையில் புகுகின்ற நீர் மூழ்குவாரைச் சுழிக்குள் சிக்க வைத்தல் போல, காமச் சுழலில் சிக்க வைத்துவிடும். கனவுபோல அம்மாதர் மாட்டுச் சிறிது சுரக்கின்ற அன்பை நனவு போல உண்மையானது என்று விரும்புதல் கூடாது.

206. இயலுறும் வாழ்க்கை இளம்பிடி மாதர்
புயலுறும் புல்லின் புணர்ந்தவ ரேயினும்
மயலுறும் வானவர் சாரஇரும் என்பார்
அயலுறுப் பேசி அகன்றொழிந் தாரே.

பொருள் : அழகு பொருந்திய வாழ்க்கையுடைய இளம் பெண் யானையை ஒத்த பெண்கள் மழையைக் கண்ட புல் போலத் தளிர்த்திருந்த போதிலும் தேவரை யொப்பார் வந்து பொருந்த, முன்னமே புணர்ந்தவரை வெளியே இரும் என்று சொல்வார் மேலும் குறிப்பு மொழியால் வெளியேறச் சொல்லி நீங்கிப் போவர்.

207. வையகத் தேமட வாரொடும் கூடியென்
மெய்யகத் தோடும் வைத்த விதியது
கையகத் தேகரும் பாலையின் சாறுகொள்
மெய்யகத் தேபெரு வேம்பது வாமே.

பொருள் : உலகில் மங்கையொடு கூடுவதால் என்ன பயன் விளைந்து விடும் ? மெய்ப்பொருளை அகத்தே உணர்ந்த ஞானியரும் விதியாகக் கூறுவது அதுவேயாகும். அம்மங்கையர் கூட்டம் புறத்தே ஆலைக் கரும்பின் சாறு போல உள்ளது. கொள்கலமாகவுள்ள அகத்தே பெரிய வேம்பு போன்றதாம்.

208. கோழை ஒழுக்கம் குளமூடு பாசியில்
ஆழ நடுவர் அளப்புறு வார்களைத்
தாழத் துடக்கித் தடுக்ககில் லாவிடில்
பூழை நுழைத்தவர் போகின்ற வாறே.

பொருள் : சுக்கிலத்தை மாதரின் பாசி படிந்த கருக்குழியில் ஆழநடுவராய் இன்புறுவார்களைத் தடைபடுமாறு பிணித்துத் தடுக்காவிட்டால் மறைமுகமாகச் செல்லும் சிறுவாயிலில் நுழைந்தாவது போய் அழிந்து விடுவர்.

(இவ்வைந்து மந்திரங்களும் பரத்தையர் பற்றியன என்று கொள்ளுதல் பொருத்தமாகும்)

10. நல்குரவு (வறுமை)

209. புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை
அடையப் பட்டார்களும் அன்பில ரானார்
கொடையில்லை கோளில்லை கொண்டாட்டம் இல்லை
நடையில்லை நாட்டில் இயங்குகின் றார்கட்கே

பொருள் : உடுத்திய ஆடை கிழிந்து பயனற்றது போல வறுமை யுடையோர் வாழ்க்கையும் பயனற்றுப் போய் விட்டது. அடையப் பட்ட சுற்றத்தார்களும் அன்பின்றி விலகிவிட்டார். கொடுக்கல் வாங்கல் ஒன்றும் இல்லை. உற்சாகம் இல்லை. நாட்டில் இருப்பவராயினும் நாட்டோடு ஒட்டிய கம்பீர நடையில்லை.

210. பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருதென்று
அக்குழி தூர்க்கும் அரும் பண்டம் தேடுவீர்
எக்குழி தூர்த்தும் இறைவனை ஏத்துமின்
அக்குழி தூரும் அழுக்கற்ற போதே.

பொருள் : பொழுது விடிகின்றதே என்று வயிற்றை நிரப்புவான் வேண்டி, அவ் வாழ்க்குத் தேவைப்படும் அருமையான பொருள்களைத் தேடுவோர்களே ! எக்குழியை நிரப்பினாலும் இறைவனது பொருள்சேர் புகழைப் பாடுங்கள். பிறவிக்குக் காரணமாகிய வினை நீங்கினால் வயிற்றுக்குழி நிரம்பிவிடும்.

211. கற்குழி தூரக் கனகமும் தேடுவர்
அக்குழி தூர்க்கை யாவர்க்கும் அரியது
அக்குழி தூர்க்கும் அறிவை அறிந்தபின்
அக்குழி தூரும் அழுக்கற்ற வாறே.

பொருள் : உலகவர் வயிற்றுக் குழியை நிரப்புவதற்குப் பொன்னைத் தேடுவார்கள். அவ்வயிற்றுக் குழியைக் குறையாது நிரப்புவது யவர்க்கும் கடினமானது. அக்குழியைத் தூர்க்கும் திருவடி ஞானம் பெற்றிபின் பிறவிக்குக் காரணமான வினையும் நீங்கி அவ்வயிற்றுப் பிணியும் நீங்கும்.

212. தொடர்ந்தெழு சுற்றம் வினையினும் தீய
கடந்ததோர் ஆவி கழிவதன் முன்னே
உடந்தொர காலத்து உணர்விளக்கு ஏற்றித்
தொடர்ந்துநின்று அவ்வழி தூர்க்கலும் ஆமே.

பொருள் : பிறவிதோறும் தொடர்ந்து வருகின்ற சுற்றங்கள் வினையைக் காட்டிலும் தீமை செய்வன. வாழ்நாளைக் கடந்து உயிர் உடலைவிட்டு நீங்குவதற்கு முன்னே உலகப் பொருளை விட்டு மாறுபட்டு உண்மைப் பொருளை நாடி நீங்காதிருந்து பிறவிக் குழியைத் தூர்ப்பதோடு பசிப் பிணியையும் போக்கலாம்.

213. அறுத்தன ஆறினும் ஆனினம் மேவி
அறுத்தனர் ஐவரும் எண்ணிலி துன்பம்
ஒறுத்தன வல்வினை ஒன்றல்ல வாழ்வை
வெறுத்தனன் ஈசனை வேண்டிநின் றானே.

பொருள் : ஆறு அத்துவாவின் வழியாக உயிர்க் கூட்டம் வினைகளை ஈட்டின. மெய் முதலிய ஐம்பொறிகளும் சுவை முதலிய பொருளின் மேல் சென்று உயிருக்கு எண்ணற்ற துன்பங்களைக் கொடுத்தன. பல கொடிய வினைகள் வாழ்க்கையை வேதனைப் படுத்தின. வாழ்க்கையை வெறுத்த வறுமையாளன் வறுமை நீங்க ஈசனை வேண்டியிருந்தான்.

ஆறு அத்துவா - வன்னம், பதம், மந்திரம், தத்துவம், கலை, புவனம், ஆகிய ஆறு வழிகள்.

11. அக்கினி காரியம் (தீ ஓம்புதல்)

214. வசையில் விழுப்பொருள் வானும் நிலனும்
திசையும் திசைபெறு தேவர் குழாமும்
விசையம் பெருகிய வேத முதலாம்
அசைவிலா அந்தணர் ஆகுதி வேட்கிலே

பொருள் : குற்றமில்லாத மேன்மையான வானத்தில் வாழ்பவரும் நிலத்தில் வாழ்பவரும், திசைகளில் வாழ்பவர்களும் திசைகளுக்குரிய திக்குப் பாலகர்களும், வேதத்தை முதலாகக் கொண்டு அந்தணர் வேள்வி செய்யின் நலமுறுவார்கள்.

215. ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர்
போகதி நாடிப் புறங்கொடுத்து உண்ணுவர்
தாம்விதி வேண்டித் தலைப்படு மெய்ந்நெறி
தாம்அறி வாலே தலைப்பட்ட வாறே.

பொருள் : வேள்வியினைச் செய்யும் வேதம் ஓதும் அந்தணர் சுவர்க்கத்தை விரும்பி அக்கினி காரியம் செய்து, தானம் கொடுத்து, உணவை உட்கொள்வார், தங்களுடைய விதியைத் தாங்களே நிச்சயம் செய்யும் மெய்ந் நெறியை உணர்ந்தவர் தங்களுடைய அறிவைச் சிரசின் மேல் செலுத்திவாழ்வர்.

216. அணைதுணை அந்தணர் அங்கியுள் அங்கி
அணைதுணை வைத்ததன் உட்பொரு ளான
இணைதுணை யாமத்து இயங்கும் பொழுது
துணையணை யாயதோர் தூய்நெறி யாமே.

பொருள் : இல்லறத்திலுள்ள அந்தணர் புறத்தே ஓம்பும் அக்கினியின் தத்துவத்தை அகத்தே உணர்ந்து மனைவியோடு கூடிச் செய்து, அதன் உண்மைப் பொருளை உணர்ந்து சிவசக்தியாக எண்ணி யாமத்தில் இக்கிரியை செய்வதே பொருந்துகின்ற துணையான மேன்மையான ஒரு நெறியாகும். (அங்கியுள் அங்கி - காருக பத்தியம்; ஆண் பெண் கூட்டுறவு).

217. போதிரண் டோதிப் புரிந்தருள் செய்திட்டு
மாதிரண் டாகி மகிழ்ந்துட னேநிற்கும்
தாதிரண் டாகிய தண்ணம் பறவைகள்
வேதிரண் டாகி வெறிக்கின்ற வாறே.

பொருள் : ஆண், பெண் சேர்க்கையை விரும்பி அருளை எண்ணிப் புரிந்தால், குண்டலினி விளங்கி மேலேறியும் சிற்சத்தி இருள் நீங்கி ஒளிபாயும் விளங்கும். இந்நிலை எய்தாது சுக்கில கரோணிதக் கலப்பால் விளைந்த ஆணும் பெண்ணுமாகிய பறவைகள் மாற்றம் அடைந்து இரண்டும் மயக்கத்தை அடைகின்றன.

218. நெய்நின்று எரியும் நெடுஞ்சுடரே சென்று
மைநின்று எரியும் வகையறி வார்கட்கு
மைநின்று அவிழ்தரும் அத்தின மாம்என்றும்
செய்நின்ற செல்வம் தீயது வாமே.

பொருள் : ஆண்பெண் கூட்டுறவினால் உண்டாகும் உணர்வோடு மேலே சென்று, புருவ மத்தியில் விளங்கும் சுடரின் தன்மையை அறிவார்க்கு, மலம் நீங்குதலாகிய அந்நாள் நன்னாளாம். எப்போதும் உடலில் நிலைபெற்ற செல்வமாகிய சிவன் அந்த அக்கினியேயாம்.

219. பாழி அகலும் எரியும் திரிபோல்இட்டு
ஊழி அகலும் உறுவினை நோய்பல
வாழிசெய்து அங்கி உதிக்க அவைவிழும்
வீழிசெய்து அங்கி வினைசுடும் ஆமே.

பொருள் : யோனி குண்டத்துள் உள்ள அக்கினியைத் தீப்பந்தம் போல் மேலெழும்படி செய்தால், அடைகின்ற வினைகளும் நோய்களும் முடிவு எய்தி நீங்கும். கீழேயுள்ள அக்கினி மேலே நிலைபெற்றால் வினை முதலியவை கெடும். அவற்றைத் தாங்கியுள்ள வினைகளைச் சுட்டு மேலும் அவை ஏற்படாமல் காக்கும்.

220. பெருஞ்செல்வம் கேடென்று முன்னே படைத்த
வருஞ்செல்வம் தந்த தலைவனை நாடும்
வருஞ்செல்வத்து இன்பம் வரஇருந்து எண்ணி
அருஞ்செல்வத்து ஆகுதி வேட்கநின் றாரே.

பொருள் : பொன்னும் மணியும் கேட்டினைத் தரும் முன்னே அருளிச் செய்த அருமையான ஞானச் செல்வத்தை அளித்த தலைவனாகிய சிவனை நாடுங்கள். மேலான சிவாக்கினி சிரசின் மேல் உதிப்பதை நினைந்து, ஞானச் செல்வத்தை நாடி அக்கினி காரியம் செய்கின்றார்கள்.

221. ஒண்சுட ரானை உலப்பிலி நாதனை
ஒண்சுட ராகிஎன் உள்ளத்து இருக்கின்ற
கண்சுட ரோன்உலகு ஏழும் கடந்தஅத்
தண்சுடர் ஓமத் தலைவனும் ஆமே.

பொருள் : ஒளிவடிவானவனும் அழிவில்லாத தலைவனும், ஒளிமிக்க சுடராகி என் உள்ளத்தில் எழுந்தருளியிருக்கின்ற கண் ஒளியானவனும், ஏழு உலகங்களையும் கடந்த அக்குளிர்ந்த சுடராகியவனும் ஆகிய சிவன் ஓமத் தலைவனாகிய - இயமானனும் ஆவான். இயமானன் - வேள்வித் தலைவன்.

222. ஓமத்துள் அங்கியின் உள்ளுளன் எம்இறை
ஈமத்துள் அங்கி இரதங்கொள் வானுளன்
வேமத்துள் அங்கி வினைவு வினைக்கடல்
கோமத்துள் அங்கி குரைகடல் தானே.

பொருள் : உடலின் சகல அக்கினி காரியத்துக்கும் சிவன் மறைந்து இருந்து உதவுகிறான். அவன் இறந்த பிறகு சாரமாகிய சூக்கும உடலிலும் பொருந்தி விளங்குவான். நெய்யப் பெற்ற ஆடை, உரம் பெறுவது போல் வாசனா ரூபமான வினைகள் சிக்குண்டு கடல் போல் பெருகி விடுகின்றன. ஆன்மா சிவத்தை நோக்கிச் சிந்தனையைக் கடைவதாயே சப்திக்கின்ற நாத ஒலி உண்டாகி வினை கெடும் கோமத்து - ஆன்மா.

223. அங்கி நிறுத்தும் அருந்தவர் ஆரணத்து
அங்கி இருக்கும் வகையருள் செய்தவர்
எங்கும் நிறுத்தி இளைப்பப் பெரும்பதி
பொங்கி நிறுத்தும் புகழ்அத வாமே.

பொருள் : அக்கினியைச் சிரசுக்குக் கொண்டு செல்லும் திறமுடையவர் வைதீக அக்கினியைக் காருக பத்தினியோடு கூட வளர்த்தவராவர். மறுமையில் பிரமலோகம் முதலியவற்றில் தங்கி இளைப்பாறவும் இம்மையில் மேல் ஓங்குகின்ற புகழும் அவர்க்கு உண்டாகும். அக்கினி காரியம் செய்பவர் இம்மை இன்பத்தோடு மறுமையிலும் இன்பம் பெறுவர்.

12. அந்தணர் ஒழுக்கம் (அந்தணர் ஒழுகும் முறை)

224. அந்தணர் ஆவோர் அறுதொழில் பூண்டுளோர்
செந்தழல் ஓம்பிமுப் போதும் நியமஞ்செய்
தந்தம நற்கரு மத்துநின்று ஆங்கிட்டுச்
சந்தியும் ஓதிச் சடங்கறுப் போர்களே.

பொருள் : அந்தணராகிய அறவோர் பிறப்பை அறுக்கும் தொழிலை யுடையவர். முன்னே சொன்னவாறு அக்கினி காரியம் செய்து, மூன்று வேளைகளிலும் தவறாது தங்களுக்குரிய தவமாகிய நல்ல செயலைச் செய்துவிட்டு, ஒத்து எண்ணிச் சடங்கு செய்வோராவர்.

225. வேதாந்தம் கேட்க விருப்பொடு முப்பதப்
போதாந்த மான பிரணவத் துள்புக்கு
நாதந்த வேதாந்த போதாந்த நாதனை
ஈதாந்தம் எனாதுகண்டு இன்புறு வோர்களே.

பொருள் : வேதத்தின் முடிவான உபநிடதத்தின் உண்மையை அறிய விருப்பத்தோடு தத்துவமசி என்ற முப்பது அறிவின் முடிவான ஓங்காரத்துள் பொருந்தி, நாதம் கடந்ததாய், உபநிடதத்தின் உச்சியாய், அறிவுக்கு அப்பாலாய் விளங்கம் தலைவனை, இதுதான் முடிவு என்று எண்ணாது முப்பதத்தையும் கடந்து துரிய நிலையில் விளங்குவோராவர்.

226. காயத் திரியோ கருதுசா வித்திரி
ஆய்தற்கு உவப்பர் மந்திரம்ஆங்கு உன்னி
நேயத் தேரேறி நினைவுற்று நேயத்தாய்
மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே.

பொருள் : காயத்திரியாய்க் கருதுகின்ற சூரியனாகிய சாவித்திரியை அதற்குரிய மந்திரத்தை எண்ணிச் செபிக்க அந்தணர் விரும்புவர். அன்பாகிய தேரில் ஏறிச் சென்று சிவமாகிய நேயப் பொருளோடு பொருந்தியவராய் தனு கரண புவன போங்களாகிய மாயா காரியங்களை விரும்பாது வென்று விளங்குவர்.

227. பெருநெறி யான பிரணவம் ஓர்ந்து
குருநெறி யாலுரை கூடிநால் வேதத்
திருநெறி யான கிரியை யிருந்து
சொரூபமது ஆனோர் துகளிர்பார்ப் பாரே.

பொருள் : முத்தி நெறியான பிரணவத்தைத் தெளிந்து குரு உபதேசம் பெற்று, மகாவாக்கியம் உணர்த்தும் அத்துவித நெறியில் அகவழி பாட்டில் இருந்து, பிரம சொரூபம் ஆயினோர் குற்றமற்ற அந்தணர்கள், பிரணவத்தை எண்ணி அமர்ந்திருப்பவர் பிரம சொரூபம் பெறுவர்.

228. சத்திய மும்தவம் தான்அவன் ஆதலும்
எய்த்தரும் இந்தியம் ஈட்டியே வாட்டலும்
ஒத்த உயிர்கள் உண்டா யுணர்உற்று
பெத்தம் அறுத்தலும் ஆகும் பிரமமே.

பொருள் : மெய்ப்பொருளை அகத்தில் நோக்கித் தற்போதம் இழந்து, இளைப்பினைத் தரும் இந்திரியங்களைப் புலன்களின் வழிச் செல்லாது தடுத்தும் இருவினை ஒத்த உயிர்களாய் ஞானம் பெற்று, பந்தத்தை நீக்கிப் பிரமம் ஆவர். பிரணவத்தை உணர்ந்தோர் கட்டின்றிப் பிரமமாவர்.

229. வேதாந்தம் கேட்க விரும்பிய வேதியர்
வேதாந்தம் கேட்டுந்தம் வேட்கை ஒழிந்திலர்
வேதாந்த மாவது வேட்கை ஒழிந்திடம்
வேதாந்தம் கேட்டவர் வேட்கைவிட் டாரே.

பொருள் : வேத முடிவான உபநிடதத்தை அறிய விரும்பிய அந்தணர் வேதாந்தத்தைக் கேட்டும் தம் ஆசையை விட்டாரில்லை. ஆசையை விட்ட இடமே வேதத்தின் முடிவாம்.வேதாந்தத்தின் பொருளை உணர்ந்து கேட்டவர் ஆசையை விட்டவர் ஆவார். ஆசையற்ற இடமே வேதாந்தம் ஆகும். ஒழிந்த இடம் என்பது ஒழிந்திடம் என்று திரிந்து நின்றது.

230. நூலும் சிகையும் நுவலிற் பிரமமோ
கார்ப்பாசம் நுண்சிகை கேசமாம்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
நூலது அந்தணர் காணும் நுவலிலே.

பொருள் : சொல்லுமிடத்துப் பூணூல் அணிந்து சிகை வைத்திருந்தால் அந்தண்மை ஆகுமோ ? பூணூல் பருத்திப் பஞ்சு; சிறிய சிகை உரோமமாம்; இடைகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்று நாடிகளையும் ஒன்றாக்கி உணர்வதே மறை முடிவு அதன் பயின் பிரம நாடி சிறந்து சிரசில் ஞானம் பிறக்கும். சொல்லுமிடத்துப் பூணூலைத் தரித்த அந்தணர் உணர்வார். நூலும் சிகையும் பூணூலைத் தரித்த அந்தணர் உணர்வார். நூலும் சிகையும் பூண்பதோடு அவற்றின் உண்மையையும் அறிய வேண்டும்.

231. சத்தியம் இன்றித் தனிஞானம் தானின்றி
ஒத்த விடயம்விட்டு ஓரும் உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப் பரன்உண்மை யின்றிப்
பித்தேறும் மூடர் பிராமணர் தாமன்றே.

பொருள் : மெய்ப்பொருள் அறிவின்றி, தன்னை உணரும் ஞானமும் இன்றி, மனத்தோடு பொருந்திய விடய வாசனைகளை நீத்து உண்மையை உணர்கின்ற உணர்வுமின்றி, மெய்யான பத்தியுமின்றி, மேலான பொருள் ஒன்று உண்டு என்ற நினைவின்றி, அறியாமை நிறைந்த மூடர் அந்தணர் ஆவாரோ; ஆகமாட்டார்.

232. திருநெறி யாகிய சித்தசித் தின்றிக்
குருநெறி யாலே குருபதம் சேர்ந்து
கரும நியமாதி கைவிட்டுக் காணும்
துரிய சமாதியாம் தூய்மறை யோர்க்கே

பொருள் : மேன்மையான பிரணவ நெறியில் அறிவு அறியாமையின்றி, குரு உபதேசத்தினாலே திருவடியைப் பொருந்தி, பிரணவ நெறியில் செல்வதால் புறக்கிரியைகளை விட்டிருக்கும் தூய்மையான அந்தணர்க்கு ஒளியுடன் பொருந்தி நிற்றல் உண்டாம். தூய்மையான அந்தணர் ஒளியோடு பொருந்தி நிற்பர்.

233. மறையோர் அவரே மறையவர் ஆனால்
மறையோர்தம் வேதாந்த வாய்மையில் தூய்மை
குறையோர்தன் மற்றுள்ள கோலா கலமென்று
அறிவோர் மறைதெரிந்து அந்தணர் ஆமே.

பொருள் : வேதங்களைப் பொருளுணர்ந்து ஓதுபவரே அந்தணராவார். ஆனால் மறையவரது வேதாந்தம் உண்மையாகத் தூய்மையுடையது. வேதமல்லாத மற்றைய குறையுடைய நூல்களைக் கற்றல் ஆரவாரத்துக்கேயாம் என்று அறிந்து ஒதுக்குபவர். மறையோதிய அந்தணராவார். அந்தணர் பிற நூல்களைக் கல்லாது வேதத்தையே ஓதுவர்.

234. அந்தண்மை பூண்ட அருமறை அந்தத்துச்
சிந்தைசெய் அந்தணர் சேரும் செழும்புவி
நந்துதல் இல்லை நரபதி நன்றாகும்
அந்தியும் சந்தியும் ஆகுதி பண்ணுமே.

பொருள் : எல்லா உயிர்களிடத்தும் அருள் உள்ளங் கொண்ட அருமையான வேத முடிவாகிய சிவத்தை இடைவிடாது நினைக்கும் அந்தணர் அடைகின்ற வளமான பூமி வளமை குன்றுதல் இல்லை. அந்நாட்டு அரசனும் நல்லவனாவான். காலை மாலையாகிய இருவேளைகளிலும் ஆகுதி செய்வார்கள்.

235. வேதாந்த ஞானம் விளங்க விதியிலோர்
நாதாந்த போதம் நணுகிய போக்கது
போதாந்த மாம்பரன் பாற்புகப் புக்கதால்
நாதாந்த முத்தியும் சித்தியும் நண்ணுமே

பொருள் : வேதாந்த நெறியில் நிராசையாக நின்று ஞானம் அடைய ஊழ் இன்றியவர், நாதாந்த முத்திபதம் எய்துவர். அறிவான் முடிவாம் ஞானம் உண்டாகிப் பரத்தைச் சேர்ந்து அடைந்தால் நாதாந்த முத்தியோடு இவ்வுலகில்சித்திகளும் பெறுவர். பரன்பால் அடையின் முத்தியோடு சித்தியும் கிட்டும்.

236. ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து
நன்றும் இருந்தும் நலம்பல பேசினும்
வென்று விளங்கும் விகிர்தனை நாடுவர்
கென்று வணங்கும் திருவுடை யோரே.

பொருள் : பிராணனும், உச்சுவாச நிச்சுவாசங்களும் அடங்கிய காலத்து, மகிழ்ச்சியாக இருந்து நன்மையே பல பேசிக் கொண்டிருந்தாலும் மேலான முத்தியைப் பெறும் செல்வர்கள் யாவற்றையும் கடந்து விளங்கும் சிவத்தையே நாடுவர். சிவத் திருவுடையோர் மேலான முத்தி அடைவர்.

237. தானே விடும்பற்று இரண்டும் தரித்திட
நானே விடப்படும் ஏதொன்றை நாடாது
பூமேவு நான்முகன் புண்ணியப் போகனாய்
ஓம்மேவு ஓர்ஆ குதிஅவி உண்ணவே.

பொருள் : இறைவனை எண்ணிட அகப்பற்று புறப்பற்று ஆகிய இரண்டும் தானே நீங்கும். அகங்காரம் அறுபட்டு விடும். பின்னர் எது ஒன்றையும் தேடாது, பூவிலே பொருந்திய பிரமனைப் போலப் புண்ணியத்தை விரும்பியவனாய், ஆகுதி செய்யப்படும் அவியை உண்ணவே பிரணவம் பொருந்தும். ஆகுதி உண்ணவே பற்றுக்கள் நீங்கும்.

13. இராச தோடம் (அரசனுக்குரிய குற்றம்)

238. கல்லா அரசனும் காலனும் நேரொப்பர்
கல்லா அரசனிற் காலன் மிகநல்லன்
கல்லா அரசன் அறம்ஓரான் கொல்லென்பான்
நல்லாரைக் காலன் நணுகநில் லானே.

பொருள் : கல்வி அறிவு இல்லாத அரசனும் இயமனும் ஒருங்கு வைத்து எண்ணப்படுவர். ஆனால் கல்வி அறிவு இல்லாத அரசனைக் காட்டிலும் இயமன் மிகவும் நல்லவன். கல்வியில்லாத அரசன் அறத்தின் வழி ஆராயாமல் கொல் என்று ஆணையிடுவான். அறத்தின் வழி நிற்கும் நல்லவரை இயமன் நெருங்க மாட்டான்.

239. நாள்தோறும் மன்னவன் நாட்டில் தவநெறி
நாள்தோறும் நாடி அவநெறி நாடானேல்
நாள்தோறும் நாடு கெடமூட நண்ணுமால்
நாள்தோறும் செல்வம் நரபதி குன்றுமே.

பொருள் : நாள்தோறும் அரசன் தன் நாட்டில் நன்னெறியினை முறையாக ஆராய்ந்து, அவன் நீதி முறைமையைக் செய்யாவிடின் நாள்தோறும் நாட்டின் வளம் குன்ற நாட்டு மக்களிடையே அறியாமை பொருந்தும். நாள்தோறும் அரசனது செல்வமும் குறைந்து கொண்டே வரும்.

240. வேட நெறிநில்லார் வேடம்பூண் டென்பயன்
வேட நெறிநிற்பார் வேடம்மெய் வேடமே
வேட நெறிநில்லார் தம்மை விறல்வேந்தன்
வேட நெறிசெய்தால் வீடது வாகுமே.

பொருள் : வேடத்துக்குரிய நெறியில் அகமும் புறமும் ஒத்து நில்லாதார் வேடத்தை மட்டும் பூண்டு கொண்டு என்ன பயன் ? ஆனால் வேடத்துக்குரிய நெறியில் பொருந்திவாழ்பவரது வேடம் உண்மையான வேடமாகும். வேடத்துக்குரிய நெறியில் நில்லாதவரை வலிமை மிக்க அரசன் தண்டனை முதலியவற்றால் வேடத்துக்குரிய நெறியில் நிற்கச் செய்தால் அது வீடு பேற்றை அளிக்கு வழியாகும்.

241. மூடங் கெடாதோர் சிகைநூல் முதற்கொள்ளில்
வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும்
பீடுஒன்று இலனாகும் ஆதலால் பேர்ந்துணர்ந்து
ஆடம் பரநூல் சிகையறுத் தால்நன்றே.

பொருள் : அறியாமை கெடாதவர் சிகை, பூணூல் முதலிய வேடங்களைக் கொண்டால் மண்ணுலகத்தில் உள்ளவர் வாடுவர். பெருவாழ்வு வாழ்கின்ற அரசனும் பெருமை இல்லாதவன் ஆவான். ஆதலால் வேடத்தின் உண்மையை மீண்டும் ஆராய்ந்து அறிந்து ஆடம்பரமாக அணியும் பூணூலையும் சிகையையும் களைந்துவிடுதல் நாட்டுக்கும் அரசனுக்கும் நன்மையாம்.

242. ஞானம் இலாதார் சடைசிகை நூல்நண்ணி
ஞானிகள் போல நடிக்கின்றவர் தம்மை
ஞானிக ளாலே நரபதி சோதித்து
ஞானமுண் டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே.

பொருள் : ஞானத்தை அடையாதவர் சடையும் சிகையும் பூணூலும் பெற்று, ஞானிகளைப் போல நடிக்கின்றவர்களை, ஞானிகளைக் கொண்டே இவரது உண்மையினை அரசன் சோதித்து ஞானம் பெறும்படி செய்தால் நாட்டுக்கே நன்மை உண்டாகும்.

243. ஆவையும் பாவையும் மற்றுஅற வோரையும்
தேவர்கள் போற்றும் திருவேடத் தாரையும்
காவலன் காப்பவன் காவாது ஒழிவனேல்
மேவும் மறுமைக்கு மீளா நரகமே.

பொருள் : பசுவையும் மகளிரையும் மற்றும் அறநெறியில் நிற்பவரையும் தேவரும் வணங்கத்தக்க உண்மையான தவ வேடத்தாரையும் அரசன் காத்தற்கு உரியவன். அவன் காக்கவில்லையாயின் அவன் மறுமையில் நித்திய நரகத்தை அடைவான்.

244. திறந்தரு முத்தியும் செல்வமும் வேண்டின்
மறந்தும் அறநெறியே ஆற்றல் வேண்டும்
சிறந்தநீர் ஞாலம் செய்தொழில் யாவையும்
அறைந்திடில் வேந்தனுக்கு ஆறில்ஒன்று ஆமே.

பொருள் : மேன்மையான மறுமைக்குரிய முத்தியும், இம்மைக்கு உரிய செல்வமும் வேண்டினால் அரசன் எப்போதும் நாட்டில் அறத்தையே நிலை நாட்ட வேண்டும். சிறந்த கடலால் சூழப் பெற்ற உலகில் வாழ்கின்ற மக்கள் ஆகியோர் செய்கின்ற நல்வினை தீவினைப் பயன் யாவும், சொல்லப்புகின் அரசனுக்கு நன்மையோடு தீமையினும் ஆறில் ஒரு பங்கு உண்டாகும்.

245. வேந்தன் உலகை மிகநன்று காப்பது
வாய்ந்த மனிதர்கள் அவ்வழி யாநிற்பர்
போந்திவ் வுலகைப் பிறர்கொள்ளத் தாங்கொள்ளப்
பாய்ந்த புலியன்ன பாவகத் தானே.

பொருள் : அரசன் உலகைக் காப்பது மிக நன்றாய் இருக்கிறது. அங்குள்ள மக்களும் அரசனைப் போன்றே இருப்பர். மாறு கொண்டு இவனது நாட்டைப் பிற நாட்டான் கைப்பற்றவும், பிற நாட்டைத் தான் போரிட்டுக் கைப்பற்றவும் இவன் விளைவு அறியாது பாய்கின்ற புலி போன்ற கொடியவனாவான். அரசன் யுத்த வெறி பிடித்து அலைவது குற்றமாகும்.

246. கால்கொண்டு கட்டிக் கனல்கொண்டு மேலேற்றிப்
பால்கொண்டு சோமன் முகம்பற்றி உண்ணாதோர்
மால்கொண்டு தேறலை உண்ணும் மருளரை
மேல்கொண்டு தண்டஞ்செய் வேந்தன் கடனே.

பொருள் : பிராணனது இயக்கத்தைத் தடுத்து, மூலாதாரத்திலுள்ள மூலக்கனலைச் சிரசின்மேல் செலுத்தி, அங்குக்காணும் பால் போன்ற வெண்ணிற ஒளியைக் கொண்டு மதிமண்டலம் அறிந்து அங்கு உண்டாகும் ஆனந்தத் தேனைப் பருகாதவராய் ஆனந்தம் விளைக்கும் என்று மயக்கம் கொண்டு கள்ளினை உண்ணும் மருட்சியாளரை மேலும் இப்பழக்கத்துக்கு ஆளாகாதபடி செய்த அரச தர்மமாகும்.

247. தத்தம் சமயத் தகுதிநில் லாதாரை
அத்தன் சிவன்சொன்ன ஆகம நூல்நெறி
எத்தண் டமும்செயும் அம்மையில் இம்மைக்கே
மெய்த்தண்டம் செய்வது அவ் வேந்தன் கடனே.

பொருள் : தத்தமக்குரிய சமயநெறியில் நில்லாதவர்களைச் சிவன் அருளிய ஆகம முறைப்படி, அப்பெருமான் மறு பிறப்பில் அத்தகைய தண்டனையைக் கொடுத்துத் திருத்தும். இப் பிறப்பிலேயே தக்க தண்டனை கொடுத்துத் திருத்துவது அரசனது கடமையாகும்.

14. வானச் சிறப்பு (மழையின் பெருமை)

248. அமுதூறு மாமழை நீரத னாலே
அமுதூறும் பன்மரம் பார்மிசை தோற்றும்
கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை
அமுதூறும் காஞ்சிரை ஆங்கது வாமே.

பொருள் : அமுதத்தைப் போன்று வளப்பத்தைத் தருகின்ற மழைப் பெருக்கால், சுவையையுடைய பல மரங்கள் உலகத்தில்மேல் உண்டாகும். பாக்கு, இளநீரையுடைய தென்னை, கரும்பு, வாழை, அமுது அளிக்கும் சமாதி நிலைக்கான எட்டி முதலியன உண்டாகும். காஞ்சிரை - சமாதிக்குரிய மூலிகை.

249. வரையிடை நின்றிழி வான்நீர் அருவி
உரையில்லை உள்ளத் தகத்துநின் றூறும்
நுரையில்லை மாசில்லை நுண்ணிய தெண்ணீர்
கரையில்லை எந்தை கழுமணி யாறே.

பொருள் : சிரசாகிய மலையினின்றும் பெருகி வரும் ஒளிமயமான ஆகாய கங்கையை உரைப்பதற்கு உரையில்லை. அது மனமண்டலத்தில் அன்பினால் ஊறும் பிருதிவிக் கலப்பின் மையால் நுரையில்லை அழுக்கில்லை யாதலின் தெளிந்த தன்மையுடைய நீர் எந்தையாகிய பாவங்களைப் போக்குகின்ற ஆறு அகண்டமாதலின் கரை இல்லை.

15. தானச் சிறப்பு (பிறர்க்கு இயன்றளவு கொடுத்தலின் பெருமை)

250. ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்
பார்த்திருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை உடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே.

பொருள் : யாவராயினும் கொடுங்கள்; அவர் உயர்ந்தோர் இவர் தாழ்ந்தோர் என்று கருதாதீர். வருவிருந்து பார்த்திருந்து உண்ணுங்கள். பழமையைப் போற்றாதீர்கள். இம்மை மறுமையில் விருப்பம் உடையவரே ! மிக வரைந்து உண்ண வேண்டா. காகங்கள் உண்ணும் காலத்தில் பிற காகங்களை அழைத்து உண்பதை அறியுங்கள். பழமையைப் போற்றாமையாவது அருமையுடைத்துது என்று பாதுகாவாமை.

இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Mon Mar 26, 2012 2:19 pm

16. அறஞ்செய்வான் திறன் (இல்லையென்னாது ஈவாரது தன்மை)

251. தாமறி வார்அண்ணல் தாள்பணி வார்அவர்
தாமறி வார்அறம் தாங்கிநின் றார்அவர்
தாமறி வார்சில தத்துவர் ஆவர்கள்
தாமறி வார்க்குத் தமர்பர னாமே.

பொருள் : தம்மை அறிவார் இறைவன் திருவடியை வணங்குபவர் ஆவர். தம்மை அறிபவரே அறம் செய்யும் நெறியில் நின்றவராவர். தம்மை அறிபவரே உண்மையை உணர்பவர் ஆவர். தம்மை அறிவார்க்கு இறைவனே உறுவினனாக உள்ளான்.

252. யாவர்க்கு மாம்இறை வற்குஒரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொடு வாயுறை
யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க்கு இன்னுரை தானே.

பொருள் : உண்ணுவதற்கு முன்னே இறைவனுக்குப் பச்சிலை கொண்டு பூசித்தல் யாவர்க்கும் ஆகும். அவ்வாறே பசுவுக்கு ஒரு வாயளவு புல் கொடுத்தல் யாவருக்கும் ஆகும். அதே போல் உண்பதற்கு முன்னே சிறிதளவு பிறர்க்குக் கொடுத்தல் ஆகும். இல்லையெனில் பிறர்மனம் நோகாதவாறு இனிமையாகப் பேசுதல் யாவர்க்கும் ஆகும் எல்லோரும் செய்யக் கூடிய எளிமையான அறம் கூறியவாறு.

253. அற்றுநின் றார்உண்ணும் ஊணே அறன்என்னும்
கற்றன போதம் கமழ்பவர் மானிடர்
உற்றுநின்று ஆங்கொடு கூவல் குளத்தினில்
பற்றிவந் துண்ணும் பயன்அறி யாரே.

பொருள் : இருவகைப் பற்றும் அற்று நின்ற சிவஞானியாருக்கு அளிக்கும் உணவே அறம் என்று நூல்கள் கூறும் அங்ஙனமிருந்தும் கல்வியால் உண்டான அறிவு விளங்கும் மனிதர்கள் பார்த்திருந்து கிணற்றங் கரையிலோ குளத்தங் கரையிலோ தங்கியுள்ள சிவஞானியாரை அழைத்துவந்து உண்பிக்கும் பயன் அறியவில்லையே. பற்றற்ற ஞானியரை உண்பிப்பதே சிறந்த அறமாகும்.

254. அழுக்கினை ஒட்டி அறிவை நிறையீர்
தழுக்கிய நாளில் தருமமும் செய்யீர்
விழித்திருந்து என்செய்வீர் வெம்மை பரந்து
விழிக்கஅன்று என்செய்வீர் ஏழைநெஞ் சீரே.

பொருள் : அறம் செய்யா உள்ளத்தை உடையோரே ! காமம் வெகுளி மயக்கம் ஆகிய அழுக்கினை அகற்றி அறிவினைப் பெருக்கவில்லையே செல்வம் தழுவிய நாளில் அறமும் செய்யவில்லை. உலக நோக்கில் காலத்தைக் கழித்து என்ன செய்யப் போகிறீர். இவ்வுடல் எரிந்து அழியும் பாது அறஞ்செய்யாது காத்தவை என் ஆகும் ? சிந்தியுங்கள்

255. தன்னை அறியாது தான்நலன் என்னாது இங்கு
இன்மை அறியாது இளையர்என்று ஓராது
வன்மையில் வந்திடும் கூற்றம் வருமுன்னம்
தன்மையின் நல்ல தவஞ்செய்யும் நீரே.

பொருள் : சர்வ வல்லமையுடன் உயிரை உடலினின்றும் பிரிக்கும் காலன்; உன்னுடைய நிலையை அறியாது; நீ நல்லவன் என்றும் கருதாது; இங்கு உனக்குற்ற வறுமையும் உணராது; நீ வயதில் இளையவன் என்று கருதிடாது; ஆதலால் நீர் காலன் வந்து உயிரைக் கொண்டு போவதற்கு முன் உடலை நிலை பேறாகச் செய்யும் நல்ல தவத்தினைச் செய்யும்.

256. துறந்தான் வழிமுதல் சுற்றமும் இல்லை
இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை
மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன்
அறந்தான் அறியும் அளவறியாரே.

பொருள் : துறந்தோர்க்கு இவ்வுலகில் ஒருவித உறவும் இல்லை. இறந்தவர்க்கு இவ்வுலகப் பொருள்களினால் எவ்வித இன்பமும் இல்லை. இம்மையில் அறஞ் செய்யாது மறந்தவர்க்கு வழித் துணையாக ஈசன் வருவதில்லை. இம் முத்திறத்தினரும் அறத்தினைச் செய்யும் முறையை அறிய மாட்டார்.

257. தான்தவம் செய்வதாம் செய்வத்து அவ்வழி
மான்தெய்வ மாக மதிக்கும் மனிதர்கள்
ஊன்தெய்வ மாக உயிர்க்கின்ற பல்லுயிர்
நான்தெய்வ மென்று நமன்வரு வானே.

பொருள் : அறிவையே தெய்வமாகக் கருதும் மனிதர்கள் முற்பிறப்பில் செய்த தவத்தின் வழி தாம் தவஞ் செய்து மேன்மையடைவர். உடம்பே தெய்வமென்று கருதி வாழ்கின்ற உயிர்க் கூட்டம் நான் தெய்வமென்று இயமன் வருவகை அறியாது அழிவர். மான் - புத்திமான். உடம்பைப் பெரிதெனப் பேணி அறம் செய்யாதவர் அழிவர்.

258. திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி
இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு
கிளைக்கும் தனக்கும் அக்கேடில் புகழோன்
விளைக்கும் தவம்அறும் மேற்றுணை யாமே.

பொருள் : நம்மை ஆழ்த்துகின்ற வினையாகிய கடலில் இருந்து கரையேறுவதற்குரிய தோணியாக இருந்து நமக்கும் நமது சுற்றத்தார்க்கும் களைப்பினைப் போக்கிக் காக்கும் இரு வழிகள் உள்ளன. அவை அழியாப் புகழினையுடைய அச்சிவத்தினைப் பற்றி நின்று ஆற்றப் பெறும் தவம் ஒன்று; இல்வாழ்க்கை பற்றி நின்று செய்யும் அறம் மற்றொன்று இவையே மறுமைக்குத் துணையாவன. முத்திக்குரிய வழி அறமும் தவமும் ஆகும்.

259. பற்றது வாய்நின்ற பற்றினைப் பார்மிசை
அற்றம் உரையான் அறநெறிக்கு அல்லது
உற்றுஉங்க ளால்ஒன்றும் ஈந்தது வேதுணை
மற்றண்ணல் வைத்த வழிகொள்ளு மாறே.

பொருள் : பற்றுக்கோடு அதுவேயாய் நின்ற மெய்ப்பொருளை உலகில் குறை கூறாதவனாய் அறநெறி அல்லது பிறநெறியில் செல்லாது பொருந்தி நீங்கள் பிறர்க்குக் கொடுத்த ஒன்றுமே துணையாகும். அதுவே சிவம் வைத்த முத்தியடைதற்குரிய வழியாகும்.

17. அறஞ்செயான் திறம் (தருமம் செய்யாதவரது இயல்பு)

260. எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன
ஓட்டிய நல்லறம் செய்யா தவர்செல்வம்
வட்டிகொண்டு ஈட்டிய மண்ணின் முகந்திடும்
பட்டிப் பதகர் பயன்அறி யாரே.

பொருள் : பொருந்திய நல்ல அறங்களைச் செய்யாதவரது செல்வம் எட்டி மரத்தினது பெரிய பழம் பழுத்து விழுந்து பயன் படாது கிடந்தது போலாம். வட்டி வாங்கி ஈட்டி உலகில் பிறர்பொருளைக் கவர்ந்திடும் வஞ்சனையுடைய பாதகர்கள் செல்வத்தின் பயனை அறியாதவராவர்.

261. ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின
கழிந்தன கற்பனை நாளுங் குறுகிப்
பிழிந்தன போலத்தம் பேரிடர் ஆக்கை
அழிந்தன கண்டும் அறம்அறி யாரே

பொருள் : பல ஆண்டுகள் கழிந்தன; பலப்பல ஊழியும் சென்றன எத்தனையோ மனக் கோட்டைகளை தகர்ந்தன; வாழ்நாளும் குறைந்து, சத்து நீங்கின. சக்கைபோலப் பிழியும் துன்பத்தைத் தருகின்ற தம் உடம்பு பயனற்று அழிவதைப் பார்த்தும் உலகினர் அறத்தின் மேன்மையினை அறியாது உள்ளனரே !

262. அறம்அறி யார்அண்ணல் பாதம் நினையும்
திறம்அறி யார்சிவ லோக நகர்க்குப்
புறம்அறி யார்பலர் பொய்மொழி கேட்டு
மறம்அறி வார்பகை மன்னிநின் றாரே.

பொருள் : உலகில் பலர் அறம் இன்னதென்று அறிகிலர். அறத்தின் பயனாக விளங்கும் இறைவன் திருவடியை எண்ணும் முறைமையையும் அறியவில்லை. சிவநகருக்குப் பக்கமாகிய சொர்க்காதி நிலைகளையும் அறியார். உலகாயதர் போன்றோர் கூறும் பொய்மொழிகேட்டு இவ்வுலகப் பொருளை விரும்பிப் பாவ காரியங்களைச் செய்வார். அதனால் பிறப்பு இறப்பாகிய பகையைப் பொருந்தி நின்றார்கள்.

263. இருமலும் சோகையும் ஈளையும் வெப்பும்
தருமம்செய் யாதவர் தம்பால தாகும்
உரும்இடி நாகம் உரோணி கழலை
தருமம்செய் வார்பக்கல் தாழகி லாவே

பொருள் : இருமலும் சோகையும் கோழையும் சுரமும் ஆகியவை தருமம் செய்யாதவரைச் சென்று அடையும். மரணம் விளைக்கும் மின்னுலும் இடியும் பாம்புக் கடியும் தொண்டை நோயும் வயிற்றுக் கட்டியும் ஆகியவை தருமம் செய்பவர் பக்கம் அணுகா.

264. பரவப் படுவான் பரமனை ஏத்தார்
இரவலர்க்கு ஈதலை யாயினும் ஈயார்
கரகத்தால் நீராட்டிக் காவை வளர்க்கார்
நரகத்தில் நிற்றிரோ நல்நெஞ்சி னீரே.

பொருள் : உலகாயத மதத்தின் போதனையால் தம் புகழை விரும்பி நிற்பார் இறைவனை வழிபடமாட்டார். இனி, தம்மை நோக்கி வந்து யாசித்தவர்களுக்குச் சிறிதும் கொடுக்க மாட்டார் வழிப்போக்கர் தங்கச் சரீரப் பிரயாசை கொண்டு குடத்தினால் நீர்விட்டுச் சோலைகளை வளர்க்கவும் செய்யார். இத்தகைய நல்ல எண்ணம் கொண்டவர்களே ! நரகத்தில் நிலையான வாசம் விரும்பியுள்ளீர்களோ ? நல்நெஞ்சினீர் - வஞ்சப் புகழ்ச்சி.

265. வழிநடப் பாரின்றி வானோர் உலகம்
கழிநடப் பார்நடந் தார்கரும் பாரும்
மழிநடக் கும்வினை மாசற ஓட்டிட்டு
ஒழிடப் பார்வினை ஓங்கி நின்றாரே.

பொருள் : அறவழியில் நடப்பவராக இல்லாமல் தேவருலக இன்பம் நீங்கும் வண்ணம் தீயவழியில் நடப்பவர் இருள் சூழ்ந்து உலகமாகிய நரகத்தில் நடப்பவராவர். காமம் வெகுளிமயக்கம் ஆகிய குற்றங்களைக் களைந்து அவற்றினின்றும் நீங்கிச் சன்மார்க்கத்தில் நிற்பவர். வினை கடந்து நின்றவராவர்.

266. கனிந்தவர் ஈசன் கழலடி காண்பர்
துணிந்தவர் ஈசன் துறக்கமது ஆள்வர்
மலிந்தவர் மாளும் துணையும்ஒன்று இன்றி
மெலிந்த சினத்தினினுள் வீழ்ந்துஒழிந் தாரே.

பொருள் : எல்லா உயிர்களிடத்தும் கருணை காட்டுபவர் இறைவனது திருவடியை காண்பர் விரக்திகொண்டு உலகினை விட்டுத் துணிவுடன் தவம் செய்தவர் மாயுச்சிய நிலையை அடைவர். உலக நிலையில் நின்று அறன் அருளின்றி மாள்வர். காலனுடைய சினத்துக்கு ஆளாகிப் பயத்தைத் தரும் நரகில் வீழ்ந்து அழிவர்.

267. இன்பம் இடரென்று இரண்டுற வைத்தது
முன்பவர் செய்கையி னாலே முடிந்தது
இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள்
அன்பிலார் சிந்தை அறம்அறி யாரே.

பொருள் : உலகில் இன்பமும் துன்பமும் ஆகிய இரண்டும் பொருந்தியிருப்பது, முற்பிறப்பில் அவரவர் செய்த அறச் செயலுக்கும் மறச் செயலுக்கும் ஏற்ப அமைந்த தாகும். அறத்தினால் இன்பம் அடைதலைக் கண்டு வைத்தும் கொடுப்பது அறியாப் பேதைகள் அன்பில்லாத சிந்தையுடையராய் அறத்தினை அறிய மாட்டார்.

268. கெடுவதும் ஆவதும் கேடில் புகழோன்
நடுவல்ல செய்துஇன்பம் நாடவும் ஒட்டான்
இடுவதும் ஈவதும் எண்ணுமின் இன்பம்
படுவது செய்யின் பசுவது வாமே.

பொருள் : கேட்டினையும் ஆக்கத்தினையும் ஊட்டச் செய்கின்ற கேடில்லாத இறைவன் நேர்மையற்ற செயலைச் செய்து இன்பம் பெற அனுமதிக்கவும் மாட்டான். ஆகவே, தக்கார்க்கு இடுதலையும் வறியார்க்கு ஒன்று ஈதலையும் நினையுங்கள். (பிறர் இன்பம் கெடும் படியாக நடப்பது மிருகத் தனமாகும்)

269. செல்வம் கருதிச் சிலர்பலர் வாழ்வெனும்
புல்லறி வாளரைப் பேற்றிப் புலராமல்
இல்லங் கருதி இறைவனை ஏத்துமின்
வில்லி இலக்கெய்த விற்குறி யாமே.

பொருள் : சிலருக்கும் பலருக்கும் வாழ்வு தருகிறோம் எனத் தருக்கும் அற்ப அறிவுடையாரை, அவரது அழிகின்ற செல்வத்தைக் கருதி வாழ்த்தி வாடாமல், அழியாத செல்வமாகிய வீடு பேற்றினை அளிக்கும் இறைவனைக் கருதி வாழ்த்துங்கள் வில்லானான் எய்த அம்பு இலக்கினைத் தவறாது அடைவது போல உங்களது வறுமையைத் தவறாது போக்கி இன்பம் தருவான்.

18. அன்புடைமை (இறைவன்பால் கொள்ளும் அன்பை உடைமை)

270. அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.

பொருள் : அனுபவம் இல்லாதவர் அன்பாகிய சத்தியும் சிவமாகிய அறிவும் இரண்டு பொருள் என்பர். அன்பின் முதிர்வினால் தோராகிய எல்லோரும் உணர்வதில்லை. அன்பு தான் சிவத்தை விளங்கும்படி செய்கிறது என்பதை எல்லோரும் உணர்ந்தபின் அன்பே வடிவாய்ச் சிவமாந்தன்மை எய்தியிருந்தார்.

271. பொன்னைக் கடந்திலங் கும்புலித் தோலினன்
மின்னிக் கிடந்து மிளிரும் இளம்பிறை
துன்னிக் கிடந்த சுடுகொடி யாடிக்குப்
பின்னிக் கிடந்ததென் பேரன்பு தானே.

பொருள் : பொன்னினும் பிரகாசமுடைய புலித்தோலின் மஞ்சள் ஒளியில் விளங்குபவன்; பளிச்சென்று பிரகாசிக்கும் சிற்றொளியையுடைய பிறையானது, பொருந்தியிருந்த வெண்ணீற்று ஒளியில் திகழ்பவர் இத்தகைய கூத்தனுக்கு என்னுடைய பேரன்பு கலந்திருந்தது.

272. என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்
பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும்
அன்போடு உருகி அகங்குழை வார்க்கின்ற
என்போன் மணியினை எய்தஒண் ணாதே

பொருள் : எலும்பையே விறகாகக் கொண்டு உடம்பின் தசையை அறுத்து நெருப்பிலிட்டுப் பொன்னைப் போலக் காய்ச்சி வறுத்தாலும், அன்போடு உருகி மனம் நெகிழ்வார்க்கு அல்லது என்னைப் போல இறைவனை அடைய முடியாது.

273. ஆர்வர் உடையவர் காண்பார் அரன்தன்னை
ஈரம் உடையவர் காண்பார் இணையடி
பாரம் உடையவர் காண்பார் பவந்தன்னைக்
கோர நெறிகொடு கொங்குபுக் காரே.

பொருள் : மிக்க அன்புடையவர் இறைவனை உணர்வர். அன்பினால் உண்டாகும் மனம் நெகிழ்வுடையார் விந்து நாதமாகிய திருவடிகளைச் சிரசில் சூடுவர். சம்சாரமாகிய சுமையைத் தாங்கி வருந்துபவர் பிறவியாகிய சாகரத்தில் உழல்வர். அன்பில்லாத அவர் துன்பமாகிய காட்டகத்தே நெறியறியாது திண்டாடுவர். கொங்கு - காடு.

274.என்அன் புருக்கி இறைவனை ஏத்துமின்
முன்அன் புருக்கி முதல்வனை நாடுமின்
பின்அன் புருக்கி பெருந்தகை நந்தியும்
தன்அன்பு எனக்கே தலைநின்ற வாறே.

பொருள் : பலபேசி என்ன பயன் ? அன்பினால் மனத்தை உருக்கி இறைவனை ஏத்தி வழிபடுங்கள். தலையாய் அன்பினால் மனத்தை உருக்கித் தலைவனை நாடுங்கள். அவ்வாறு நாடிய எனக்குப் பெருமையுடைய குரு நாதனும் பாசத்தைப் போக்கி தனது கருணையை என்னிடத்துக் காட்டும் வகை இவ்வாறாம்.

275. தானொடு காலம் சயம்புஎன்று ஏத்தினும
வானொரு காலம் வழித்துணை யாய்நிற்கும்
தேனொரு பால்திகழ் கொன்றை அணிசிவன்
தானொரு வண்ணம்என் அன்பில்நின் றானே.

பொருள் : சிவன் தானே ஒருவனாய் நின்ற நாளில் சுயம்பு என்று எண்ணி வழிபடின், வானத்தில் ஒரு காலத்தில் பொருந்தி வழிபடுவார்க்கு உற்ற துணையாய் இருக்கும். தேனையொத்த இன்பந் தரும் சத்தியை ஒரு பக்கத்தில் உடையவனாகப் பொன்னொளியில் விளங்கும் சிவன் தானே ஒரு நிறத்தைப் பெற்று எனது அன்பு வலையில் அகப்பட்டு நின்றான்.

276. முன்படைத்து இன்பம் படைத்த முதலிடை
அன்புஅடைத்து எம்பெரு மானை அறிகிலார்
வன்படைத்து இந்த அகலிடம் வாழ்வினில்
அன்புஅடைத் தான்தன் அகலிடத் தானே.

பொருள் : உலகினைப் படைத்து எல்லா இன்பங்களையும் அமைத்தருளிய இறைவனிடம், அன்பினைச் செலுத்தி எல்லா உயிர்க்கும் தலைவனாகிய இறைவனை அறியாமல் கெடுகின்றனர். உறுதியைத் தந்து இவ்வுலக வாழ்வில் அன்பைப் படைத்த பெருமான் அகண்ட உலகமாகவும் உள்ளான். சிவன் போகமாகவும் புவனமாகவும் உள்ளான்.

277. கருத்துறு செம்பொன்செய் காய்கதிர்ச் சோதி
இருத்தியும் வைத்தும் இறைவன்என்று ஏத்தியும்
அருத்தியுள் ஈசனை யாருள் வேண்டில்
விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே.

பொருள் : கருத்திலே பொருந்துகின்ற உருக்கு முகத்துப் பிரகாசிக்கும் செம்பொன்னைப் போன்ற சோதி வடிவானவனை நினைத்தும் அமைத்து வைத்தும் அவனையே தலைவன் என்று ஏத்தியும், உள்ளத்தில் அன்பு கொண்டு அவனை யார் அருள் வேண்டினாலும் தேவர் தலைவனாகிய அப்பெருமான் அவ் வொளியில் நின்று சிவவொளியைப் பெருகச் செய்வான்.

278. நித்தலும் துஞ்சும் பிறப்பையும் செய்தவன்
வைத்த பரிசுஅறிந் தேயும் மனிதர்கள்
இச்சையு ளேவைப்பர் எந்தை பிரான்என்று
நச்சியே அண்ணலை நாடுகி லாரே.

பொருள் : உயிர்களின் வினைக்கீடாக நாளும் இறப்பையும் பிறப்பையும் அமைத்தவன் வைத்த முறைமையினை அறிந்திருந்த மக்கள் உலக போகத்தில் விருப்பத்தைச் செலுத்துவர். எந்தை எம்பிரான் என்று விரும்பி அண்ணலாகிய சிவனை நாடவில்லை.

279. அன்பின்உள் ளான்புறத் தான்உட லாயுள்ளான்
முன்பின்உள் ளான்முனி வர்க்கும் பிரானவன்
அன்பின்உள் ளாகி அமரும் அரும்பொருள்
அன்பினுள் ளார்க்கே அணைதுணை யாமே.

பொருள் : தன்னை அறியும் அறிவு கொண்டவரிடம் அவ் அன்பில் நின்றருளுவான். தன்னில் நிற்பது போலவே பிறரிடம் நிற்பவனும் அவனே. அன்பே உடலாக உள்ளவன். உலகத் தோற்றத்துக்கு முன்னும் உலக அழிவுக்குப் பின்னும் அழியாது நிற்பவன். ஆத்ம விசாரணை செய்யும் முனிவர்க்கும் அவனே தலைவன். அவனிடம் யாரொருவர் அன்பு கொண்டாரோ அவரிடம் நிலையாகப் பொருந்தும் அரிய பொருளாயுள்ளவன். அன்பின் வழி அணுகுவோர்க்கு அவன் துணையாக இருந்து உய்விப்பான்.

19. அன்பு செய்வாரை அறிவன் சிவன் (அன்பே சிவமாவது என்பதை அறிவாரைச் சிவன் அறிவான்)

280. இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்
உகந்தருள் செய்திடும் உத்தம நாதன்
கொழுந்தன்பு செய்தருள் கூரவல் லார்க்கு
மகிழ்ந்தன்பு செய்யும் அருளது வாமே.

பொருள் : உயிர்கள் தன்மாட்டு அன்பு செய்தலை இகழ்ந்ததையும் மெய்யன்பு கொண்டிருந்தலையும் இறைவன் அறிவான். மேலோனாகிய அத்தலைவன் அதற்கேற்ப மகிழ்ந்து அருள் செய்வான். தன் மாட்டுத் தளிர்த்து வரும் அன்பினைப் புரியவல்லார்க்கு மகிழ்ச்சி கொண்டு அன்பு செய்யும அளவுக்கு அருளை வழங்குவான்.

281. இன்பப் பிறவிக்கு இயல்வது செய்தவன்
துன்பப் பிறவித் தொழில்பல என்னினும்
அன்பிற் கலவிசெய்து ஆதிப் பிரான்வைத்த
முன்பிப் பிறவி முடிவது தானே.

பொருள் : மக்கள் பேரின்பம் அடையப் பிறவியில் இயல்பான பல சாதனைகளைக் கொடுத்த இறைவன், துன்பம் நிறைந்த பிறப்பில் இவர் எத்தொழிலைச் செய்தாலும் செலுத்துகின்ற அன்பில் கலக்க ஆதியாகிய பெருமான் முன்னே அமைத்துக் கொடுத்த பிறவியானது முடிவடையும்.

282. அன்புறு சிந்தையின் மேலெழும் அவ்வொளி
இன்புறு கண்ணியொடு ஏற்க இசைந்தன
துன்புறு கண்ணிஐந்து ஆடும் துடக்கற்று
நண்புறு சிந்தையை நாடுமின் நீரே.

பொருள் : அன்பு பொருந்திய சிந்தையின் மேல் விளங்கும் சிவமாகிய ஒளி, இன்பம் வழங்குகின்ற கண்ணையுடைய இச்சத்தியோடு அன்பரை ஏற்று அருள்புரியத் திருவுளங் கொள்வான். அவ்வாறு ஏற்கத் திருவுளங் கொண்டமையின் வலைபோன்ற ஐம்பொறிகளின் தொடர்பு அறுபட்டு நீங்கும். அப்பொழுது நன்மை பெற்ற சிந்தையை நீங்கள் இறைவன் பால் தொடர்பு கொண்டு துன்புறு கண்ணியை அகற்றி நில்லுங்கள்.

283. புணர்ச்சியுள் ஆயிழை மேல்அன்பு போல
உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்கவல் லாருக்கு
உணர்ச்சியில் லாது குலாவி உலாவி
அணைத்தலும் இன்பம் அதுஇது வாமே.

பொருள் : சிற்றின்பத்தில் மகளிர்மேல் வைத்த அன்புபோல், சிரசின் மேல் உதிக்கும் பரிச உணர்வில் மனம் பதிவுண்டு இருக்க வல்லார்க்கு, உணர்வு கெட்டு நாதத்தோடு பொருந்தித் துவாத சாந்த வெளிக்குச் சென்று கூடலும், அங்குப் பெறும் பேரின்பம் இங்குப் பெற்ற சிற்றின்பம் போல இருக்கும்.

284. உற்றுநின் றாரொடும் அத்தகு சோதியைச்
சித்தர்கள் என்றும் தெரிந்துஅறி வார்இல்லை
பத்திமை யாலே பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுத்தவர் முன்புநின் றானே.

பொருள் : முன் மந்திரத்தில் கூறியவாறு பேரின்பத்தில் திளைத்திருந்தாரோடும் விளங்கும் சோதியாகிய இறைவனைச் சித்திகளை யுடையவர் என்று ஆராய்ச்சியினால் அறிந்து விட முடியாது. ஆனால் அடியார்கள் பத்தியோடு அவன் அருளாலே அவனை வணங்க அவர்கட்கு வீடு பேற்றை அளித்து அவர்கள் முன்பு விளங்கித் தோன்றினான்.

285. கண்டேன் கமழ்தரு கொன்றையி னான்அடி
கண்டேன் கரியுரி யான்தன் கழலிணை
கண்டேன் கமல மலர்உறை வானடி
கண்டேன் கழலதென் அன்பினுள் யானே.

பொருள் : வாசனைதரும் கொன்றைப் பூப்போன்ற மஞ்சள் ஒளிக்கிரணத்தை உடையவனைக் கண்டேன். காரிருளாகிய ஆணவமான யானையைக் கிழிஞூததவனுடைய திருவடிகளைக் கண்டேன். மூலாதாரக் கமலத்தில் விளங்குபவனைக் கண்டேன் எனது அன்பில் அவனது திருவடிகள் விளங்குவதை நான் கண்டேன்.

286. நம்பனை நானா விதப்பொரு ளாகுமென்று
உம்பரில் வானவர் ஓதுந் தலைவனை
இன்பனை இன்பத்து இடைநின்று இரதிக்கும்
அன்பனை யாரும் அறியகி லாரே.

பொருள் : நம்பத் தகுந்தவனும் எல்லாப் பொருளாகவும் உள்ளான் என்று வானுலகில் தேவர்கள் போற்றும் தலைவனும் இன்பவடிவானவனும், சீவர்களது இன்பத்தில் பொருந்தி மகிழ்கின்ற அன்பு வடிவானவனும் ஆகிய இறைவனை யாரும் அறிய முடியவில்லை. இரதித்தல் - சுவைத்தல்; மகிழ்தல்.

287. முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார்
அன்பில் இறைவனை யாம்அறி வோம்என்பர்
இன்பப் பிறப்பும் இறப்பும் இலான்நந்தி
அன்பில் அவனை அறியகி லாரே.

பொருள் : நந்தியாகிய இறைவன் இன்பத்தால் வந்த பிறப்பும் இறப்பும் இல்லாதவன். முன்பு அவனை வணங்கிப் பிறப்பு இறப்பு அறியாத ஞானியர், அன்பினால் இறைவனை வழிபட்டு நாங்கள் அவனை உணர்ந்திருக்கின்றோம் என்பர். அங்ஙனமிருந்தும் ஏனையோர் அவனை உணர்ந்து பிறப்பு இறப்பைப் போக்கிக் கொள்ள அறியவில்லையே !

288. ஈசன் அறியும் இராப்பக லும்தன்னைப்
பாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களைத்
தேசுற்று இருந்து செயலற்று இருந்திடில்
ஈசன்வந்து எம்மிடை ஈட்டிநின் றானே.

பொருள் : இரவும் பகலும் இடைவிடாது அவனை அன்பினுள் வைத்துப் போற்றுபவர்களை இறைவன் அறிவான். ஆதலால் நாம் ஒளிபெற்று ஒளியில் நின்று நம்கென ஒரு செயலின்றியிருப்பின் இறைவன் எழுந்தருளி வந்து நம்மிடை பிரிப்பின்றி உடன் உறைவான்.

289. விட்டுப் பிடிப்பதுஎன் மேதகு சோதியைத்
தொட்டுத் தொடர்வன் தொலையாய் பெருமையை
எட்டும்என் ஆருயி ராய்நின்ற ஈசனை
மட்டுக் கலப்பது மஞ்சனம் ஆமே.

பொருள் : மேலாகிய ஒளிவடிவாகிய இறைவனை விடுவதும் மீண்டும் பிடிப்பதும் எதற்காக ? அவனைச் சிக்கெனப் பற்றிக் கொண்டு அவன் வழியே நான் செல்வேன். அங்ஙனம் எல்லையில்லாப் பெருமையைப் பெறுவேன். எனது உயிருக்குயிராய்க் கலந்து நின்ற இறைவனை இனிமையாகக் கலப்பதே நீராடலாகும்.

20. கல்வி (சிவானுபவத்தைத் தரும் கல்வி)

290. குறிப்பறிந் தேன்உடல் உயிரது கூடிச்
செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானை
மறிப்பறி யாதுவந்து உள்ளம் புகுந்தான்
கறிப்பறி யாமிகும் கல்விகற் றேனே.

பொருள் : உடல்வந்த காரணத்தை அறிந்தேன். உயிர் அந்த உடலோடு பொருந்திச் செறிந்துள்ளதை அறிந்தேன். அதனால் தேவ தேவனாகிய இறைவனும் எவ்விதமான தடையுமின்றி என் மனத்தைத் தனக்கு இடமாக்கிக் கொண்டான். உவர்த்தல் இல்லாத மிகுகின்ற அனுபவ அறிவைப் பெற்றேன்.

291. கற்றறி வாளர் கருதிய காலத்துக்
கற்றறி வாளர் கருத்திலோர் கண்ணுண்டு
கற்றறி வாளர் கருதி உரை செய்யுங்
கற்றி காட்டக் கயல்உள வாக்கும்

பொருள் : உண்மைக் கல்வி கற்றவர் சிந்தித்துப் பார்க்கும் போது அவர்கள் கருத்தில் ஞானக் கண் புலனாகியது. அவர்கள் அவ்வாறு புலனாகும் உண்மையைச் சிந்தித்துப் பிறர்க்கு உரைப்பர் கல்தூண் போன்று சலனமற்றிருந்து பிறர்க்கு உணர்த்தி அவர்களது ஞானக் கண்ணை விளங்கும்படி செய்வர். கற்றறி - கல்+தறி = கற்றூண். கயல்- மீன். கண்ணுக்கு ஆயிற்று.

292. நிற்கின்ற போதே நிலையுடை யான்கழல்
கற்கின் செய்மின் கழிந்தறும் பாவங்கள்
சொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின்
மற்றொன்று இலாத மணிவிளக்கு ஆமே.

பொருள் : எடுத்த உடலில் உயிருள்ள போதே உடல் நிலையாமையை உணர்ந்து உயிர்க்கு உறுதிபயக்கும் நிலையான போருளான இறைவனுடைய ஞானத்தைப் பெற முயலுங்கள். உங்களுடைய பாவங்கள் நீங்கி விடும். சொல்லில் வழுவின்றி இறைவனை ஏத்துங்கள். அவ்வாறு ஏத்தினால் ஒப்பிட்டுக் கூற முடியாத சுய சோதியான சிவன் விளங்கித் தோன்றுவான்.

293. கல்வி யுடையார் கழிந்தோடிப் போகின்றார்
பல்லி யுடையார் பாம்பரிந்து உண்கின்றார்
எல்லியும் காலையும் ஏத்துமின் இறைவனை
வல்லியுள் வாதித்த காயமும் ஆமே.

பொருள் : உண்மையில் பிரணவ அறிவில்லாத உலகியல் கல்வி கற்றவர்கள் பிரணவத்தினின்றும் விலகிய வழியில் செல்கின்றனர். உலகியல் பற்றுடையோர் குண்டலியின் ஆற்றலைப் பெருக்காமல் வீணாக்குகின்றனர். இரவும் பகலும் இறைவனை நினைந்து வழிபாடு செய்யுங்கள். இரசவாதம் செய்யப்பெற்ற பொன்போலக் குண்டலினி ஆற்றலால் அழியா உடல் (பிரணவ தேகம்) அமையும்.

294. துணைஅது வாய்வரும் தூயநற் சோதி
துணைஅது வாய்வரும் தூயநற் சொல்லாம்
துணைஅது வாய்வரும் தூயநற் கந்தம்
துணைஅது வாய்வரும் தூயநற் கல்வியே.

பொருள் : இறைவழிபாடு செய்வார்க்குத் தூய்மையான சோதி துணையாக வரும். நல்ல பிரணவம் அவர்களுக்குத் துணையாக விளங்கும். சுக்கிலம் கெடாது தூய்மையுற்று உடலுக்கு உறுதுணையாய் ஒளியாகி நிற்கும். பிரணவக் கல்வியே பிறவியில் துணையாய் இருந்து வீடு பேற்றை அளிக்கும்.

295. நூல்ஒன்று பற்றி நுனியேற மாட்டாதார்
பால்ஒன்று பற்றினால் பண்பின் பயன்கெடும்
கோல்ஒன்று பற்றினால் கூடாப் பறவைகள்
மால்ஒன்று பற்றி மயங்குகின் றார்களே.

பொருள் : உடம்பிலுள்ள சுழுமுனை நாடியைப் பற்றிச் சிரசின் உச்சிடல் பிரமரந்திரம் செல்ல மாட்டாதார், காம விகாரம் கொண்டால் சிவ யோகத்தில் பயன் கிட்டாது கெடுவர். முதுகந்தண்டைப் பற்றிச் சிரசின் மேல் சென்றவரிடம் இந்திரியங்கள் சேட்டை செய்யா. இதனை அறியாமல் கீழேயுள்ள தத்துவங்களின் இயல்பில் மயங்கி நன்மை அறியாமல் கெடுகின்றனர்.

296. ஆய்ந்துகொள் வார்க்குஅரன் அங்கே வெளிப்படும்
தோய்ந்த நெருப்பது தூய்மணி சிந்திடும்
ஏய்ந்த இளமதி எட்டவல் லார்கட்கு
வாய்ந்த மனமல்கு நூலேணி யாமே.

பொருள் : சுழுமுனையின் மேல் சென்றவர்க்குத் துன்பம் களையும் சிவம் நாத தத்துவத்தில் வெளிப்படுவான். நாதத்தில் விளங்கும் சிவன் பரிசுத்தமான ஒளியை வீசிக் கொண்டிருக்கும். அவ்வாறு பொருந்திய சந்திர மண்டலம் விளங்கப் பெற்றவர்க்கு, தகுதிவாய்ந்த மனம் பொருந்துகின்ற சுழுமுனை நூலேணியாகும்.

297. வழித்துணை யாய்மருந் தாயிருந் தார்முன்
கழித்துணை யாம்கற் றிலாதவர் சிந்தை
ஒழித்துணை யாம்உம் பராய்உலகு ஏழும்
வழித்துணை யாம்பெருந் தன்மைவல் லானே.

பொருள் : ஞானம் பெற வாயிலாகப் பிறவி நோய்க்கு மருந்தாக இருந்த நூலேணி பற்றியோர் முன்பு அவ்வாறு பற்றாதவர் கழிக்கப்பட்ட துணையாகும். பெருமையில் சிறந்தவனாகிய சிவபெருமான் சிந்தையின் பழைய நிலையை ஒழிக்கத்தக்க துணையாவான். தேவ சொரூபம் பெற்று ஏழ் உலகங்களுக்குச் செல்லும் வழித்துணையாகவும் உள்ளான்.

298. பற்றது பற்றில் பரமனைப் பற்றுமின்
முற்றது எல்லா முதல்வன் அருள்பெறில்
கிற்ற விரகிறண கிளரொளிவானவர்
கற்றவர் பேரின்பம் உற்றுநின் றாரே.

பொருள் : வாழ்வில் பற்றுக்கோடாக ஒரு தெய்வத்தை வழிபட வேண்டில் மேலான சிவபெருமானையே பற்றி வழிபடுங்கள். முழுமுதல் கடவுளாகிய அவனது அருளைப் பெற்று விட்டால் எல்லாம் இனிது முடி எய்தும். உபாயத்தில் வல்ல மிகுந்த தேசுடைய தேவர்கள் அனுபவக் கல்வியடையோரைக் காட்டிலும் பேரின்பம் பெற்று நின்றாரோ ? இல்லை.

299. கடலுடை யான்மலை யான்ஐந்து பூதத்து
உடலுடை யான்பல ஊழிதோ றூழி
அடல்விடை யேறும் அமரர்கள் நாதன்
இடமுடை யார்நெஞ்சத் தில்இருந் தானே.

பொருள் : பரந்த கடலைத் தனக்குச் சொந்தமாக உடையவன். அதே போன்று உயர்ந்த மலையையும் உடையவன். ஐம்பூதங்களையும் தனக்குத் திருமேனியாக உடையவன். இப்பூதங்கள் அழிந்து மாறுபடும் போது பல தடவைகளிலும் ஒளியே வடிவான இடபத்தில் விளங்கும் தேவதேவன். தன்னையே நினைந்து தமக்குரிய இடத்தை அமைத்துக் கொண்டவர் உள்ளத்தின் ஒளியில் அவனிருந்து அருளுவான்.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Mon Mar 26, 2012 2:19 pm

21. கேள்வி கேட்டமைதல் (வல்லோர் பால் சென்று கேட்கத் தக்கனவற்றைக் கேட்டு, மனம் அடங்கியிருத்தல்)

300. அறங்கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும்
மறங்கேட்டும் வானவர் மந்திரங் கேட்டும்
புறங்கேட்டும் பொன்னுரை மேனிஎம் ஈசன்
திறங்கேட்டும் பெற்ற சிவகதி தானே.

பொருள் : நீதிகளைக் கேட்டும் அந்தணர்களது அறிவுரைகளைக் கேட்டும், பாவங்கள் இவையெனக் கூறும் நீதி நூல்களைக் கேட்டும், தேவ உபாசனைக்குரிய மந்திரங்களைக் கேட்டும், பிற சமய நூல் கேட்டும், பொன் என்று உரைக்கப் பெறுகின்ற திருமேனியையுடைய எம் பெருமானது தன்மையினைக் கேட்டும் சிவகதி தானே பெற்றதாம்.

301. தேவர் பிரானைத் திவ்விய மூர்த்தியை
யாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின்
ஓதுமின் கேள்மின் உணர்மின் உணர்ந்தபின்
ஓதி உணர்ந்தவர் ஓங்கிநின் றாரே.

பொருள் : எல்லாத் தேவர்களுக்கும் தலைவனான் சிவபெருமானும் ஒளியான திருமேனியை உடையவனும் ஆகிய இறைவனை எவர் ஒருவர் அறிபவர் ? அவ்விதம் ஒளியாக அறிந்தபின் சிவத்தை உணர்த்தும் நூல்களைக் கற்று அறிவியுங்கள். பின் கற்றவற்றையும் கேட்டவற்றையும் சுய அனுபவத்தில் வைத்து உணருங்கள். சுய அனுபவத்தில் உண்மையை உணர்ந்தவர் நிட்டை கூடிச் சிவத்துடன் பொருந்தி உயர்ந்தோராவர்.

302. மயன்பணி கேட்பது மாநந்தி வேண்டின்
அயன்பணி கேட்பது அரன்பணி யாலே
சிவன்பணி கேட்பவர் தேவரும் ஆவர்
பயன்பணி கேட்பது பற்றது வாமே.

பொருள் : மாட்சிமையுள்ள சிவனை வேண்டினால் திருமால் பணி செய்வான். சிவனுக்குப் பணி செய்தால் பிரமனும் ஏவல் வழி நடப்பான். சிவன் ஆணைவழி நிற்போர் தேவர் ஆகவும் ஆவர். சிவத்தின் ஆணையை அறிந்து பணி செய்தலின் பயன் திருவடிக்கண் நீங்காத பற்றாகும்.

303. பெருமான் இவனென்று பேசி இருக்கும்
திருமா னிடர்பின்னைத் தேவரும் ஆவர்
வருமா தவர்க்கு மகிழ்ந்தருள செய்யும்
அருமா தவத்தெங்கள் ஆதிப் பிரானே.

பொருள் : தலைவன் இவனே என்று பேசிக் கொண்டிருக்கின்ற உண்மை ஞானம் பெற்ற மனிதர்கள் பிறகு தேவராவர். அருமையான மாதவத்தனாகிய எங்கள் சிவபெருமான் மனிதராய்த் தேவராய் மேல் நிலைக்கு எய்திவரும் மேலான தவமுடையார்க்கு உவந்து அருள் செய்வான்.

304. ஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும்
பேசி யிருந்து பிதற்றி மகிழ்வெய்தி
நேசமும் ஆகும் நிகழ்ஒளி யாய்நின்று
வாச மலர்க்கந்தம் மன்னிநின் றானே.

பொருள் : இறப்பும் பிறப்பும் இறைவன் வினைவழி அருளுவான். இத்தன்மையினை அறிந்து பிறர்க்கு உரைத்தும் தானே பேசியும் களிப்புற்று அன்பு செலுத்தி இருங்கள். அவன் சிவசோதியாய் இருந்து சுவாதிட்டானமாகிய மலரில் விந்துவாகிய மணத்தில் பொருந்தி அருளிக் கொண்டிருக்கிறான். கந்தம் - விந்து.

305. விழுப்பமும் கேள்வியும் மெய்நின்ற ஞானத்து
ஒழுக்கமும் சிந்தை உணர்கின்ற போது
வழுக்கி விடாவிடில் வானவர் கோனும்
இழுக்கின்றி எண்ணிலி காலம் தாமே.

பொருள் : சிவனது பெருமையும் அதனைப் பற்றிய கேள்வியும், அக்கேள்வியால் உண்டான் ஞான ஒழுக்கமும் மனத்தில் சிந்திக்கின்ற காலத்து, நிலையில் திரியாது அடங்கியிருப்பின், தேவர் தலைவனாகிய இறைவனும் குறைவின்றி அளவற்ற காலம் அருள் புரிபவன் ஆவான்.

306. சிறியார் மணற் சோற்றில் தேக்கிடு மாபோல்
செறிவால் அனுபோகம் சித்திக்கும் என்னில்
குறியாதது ஒன்றைக் குறியாதார் தம்மை
அறியாது இருந்தார் அவராவர் அன்றே.

பொருள் : உலகத் தொடர்பால் இறை அனுபவம் உண்டாகும் என்று சொல்வது சிறு குழந்தைகள் (சிறுவீடு கட்டி) மணலால் சோறு சமைத்து உண்டு மகிழ்வது போலாம். சுட்டியறிய முடியாத சிவனது அகண்ட வியாபகத் தன்மையை உணராதார் தம்முடைய ஆன்ம சொரூபத்தையும் அறியாதவர் ஆவர் அல்லவா ?

307. உறுதுணை யாவது உயிரும் உடம்பும்
உறுதுணை யாவது உலகுறு கேள்வி
செறிதுணை யாவது சிவனடிச் சிந்தை
பெறுதுணை கேட்கின் பிறப்பில்லை தானே.

பொருள் : உடம்புக்கு உற்ற துணையாக இருப்பது உயிராகும். உயிருக்கு துணையாக இருப்பது உலகில் ஞானியர்பால் பெறுகின்ற கேள்வியாம். அக்கேள்வியால் சிவனது திருவடியைப் பற்றி எண்ணியிருத்தலே தக்க துணையாகும். இத்தகைய பெறுதற்குரிய துணையைப் பற்றிக் கேட்பின பிறப்பு இல்லையாகும்.

308. புகழநின் றார்க்கும் புராணன்எம் ஈசன்
இகழநின் றார்க்கும் இடும்பைக்கு இடமாம்
மகிழநின் றாதியை ஓதி உணராக்
கழியநின் றார்க்கொரு கற்பசு ஆமே.

பொருள் : புகழ்ந்து பேசப் பெறுகின்ற பிரமன் விஷ்ணு உருத்திரன் ஆகியோர்க்கும் பழமையானவன் எம் இறைவனாவான். தன்னை இகழ்ந்து கூறுகின்றவர்க்குத் துன்பத்துக்கு இடமாக இருப்பவன். ஆதியாகிய எம் தலைவனை மகிழ்ச்சியுடன் அவனது பெருமையை உணராது விலகி நின்றவர்க்கு, அவன் கல்லில் செதுக்கிய பசுவைப் போலப் பயன்பட மாட்டான்.

309. வைத்துணர்ந் தான்மனத் தொடுவாய் பேசி
ஒத்துணர்ந் தான்உரு ஒன்றோடொன்று ஒவ்வாது
அச்சுஉழன்று ஆணி கலங்கினும் ஆதியை
நச்சுஉணர்ந் தார்க்கே நணுகலும் ஆமே.

பொருள் : ஆன்மாக்கள் இடமாகத் தனது சத்தியைப் பதிப்பித்தருளிய சிவன், அச்சத்தியால் மனத்தொடு வாக்கையும் அவற்றோடு பொருந்தி யிருந்து உணர்கின்றான். அவனது வடிவம் ஒன்றுக்கொன்று மாறுபட்டது. எனினும் உடம்பாகிய அச்சிலிருந்து மனத் திட்பமாகிய ஆணி கழன்று உருக் குலைந்த காலத்து, ஆதியாகிய சிவனை விரும்பி நின்றவர்க்கே அவனை நெருங்கி அனுபவிக்கலாகும்.

22. கல்லாமை (கற்றும் சிவானுபவம் பெறாமை)

310. கல்லா தவரும் கருத்தறி காட்சியை
வல்லார் எனில்அருட் கண்ணான் மதித்துளோர்
கல்லாதார் உண்மைபற் றாநிற்பர் கற்றோரும்
கல்லாதார் இன்பம் காணுகி லாரே.

பொருள் : ஆசிரியர்பால் சென்று முறையாகக் கற்காமல் பண்டைய தவத்தால் அவர்களது கருத்தில் தெய்வக் காட்சியை உணர வல்லாராயின், அவர்கள் இறைவன் அருளால் அனுக்கிரகம் செய்யப் பெற்றவராவர். இத்தகையோர் (அனுபவமுடையோர்) உலகைப் பற்றாமல் சிவத்தைப் பற்றி நிற்பர். முறையாகக் கல்வி கற்றோரும், கல்லாதவராகக் கருதப்பட்டவர் பெற்ற அனுபவத்தை அடைவதில்லை.

311. வல்லார்கள் என்றும் வழியொன்றி வாழ்கின்றார்
அல்லா தவர்கள் அறிவு பலஎன்பார்
எல்லா இடத்தும் உளன்எங்கள் தம்இறை
கல்லா தவர்கள் கலப்பறி யாரே.

பொருள் : சிவத்தின் அருளைப் பெற்றவர்கள் உண்மைநெறி ஒன்று என்று எண்ணி அந்நெறியே வாழ்கின்றார்கள். சிவத்தின் அருளைப் பெறாதவர்கள் உலகில் பலநெறி உள என்று கூறுவர். ஆனால் எங்களது இறைவனே எல்லா நெறியாயும் உள்ளான். கல்லாதவர்கள் இவ்வாறு கலந்திருக்கும் இயல்பை அறிய மாட்டார்கள்.

312. நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து
நில்லாக் குரம்பை நிலையென்று உணர்வீர்காள்
எல்லா உயிர்க்கும் இறைவனே ஆயினும்
கல்லாதார் நெஞ்சத்துக் காணஒண் ணாதே.

பொருள் : நிலையில்லாதவற்றை நிலையுடையனவாகவும் நிலையில்லாத உடம்பை நிலையுடையதாகவும் நெஞ்சில் எண்ணுபவர்களே ! எல்லா உயிர்கட்கும் இறைவனே தாரகமாயினும் உண்மை உணராதார் நெஞ்சில் அறியப் படாதவனாகவே உள்ளான்.

313. கில்லேன் வினைத்துய ராக்கும் மயலானேன்
கல்லேன் அரநெறி அறியாத் தகைமையின்
வல்லேன் வழங்கும் பொருளே மனத்தினுள்
கல்லேன் கழியநின்று ஆடவல் லேனே.

பொருள் : இறைவழி நிற்கும் ஆற்றல் இல்லேன். அதனால் வினைத் துயரங்களுக்கு ஆளானேன். சிவத்துடன் பொருந்தி நிற்கும் சிவநெறியைக் கற்கவில்லை. அறியாமையால் மயக்கம் செய்வனவற்றைப் பயில்பவனாக உள்ளேன். வழங்கும் வள்ளலாகிய பெருமானை மனத்தினுள் தியானிக்க வல்லேன் அல்லேன். புறம்பே நின்று உலகானுபவத்தில் திளைப்பவனாக நான் உள்ளேன்.

314. நில்லாது சீவன் நிலையன்று எனஎண்ணி
வல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினார்
கல்லா மனித்தர் கயவர் உலகினில்
பொல்லா வினைத்துயர் போகஞ்செய் வாரே.

பொருள் : சீவன் எடுத்த உடம்பில் நினைத்திராது பிரிந்துவிடும் என்ற உண்மையை உணர்ந்து, சிவத்தின் அருளைப் பெற்றவர் தான தருமம் செய்தும் துறவறம் பூண்டும் ஒழுகினார். உலகில் அருளைப் பெறாதவராகிய கீழ்மக்கள் கொடிய வினையால் வினையும் துயரத்தை அனுபவிப்பர்.

315. விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி
கண்ணினின் உள்ள கலந்துஅங்கு இருந்தது
மண்ணினின் உள்ளே மதித்து மதித்துநின்று
எண்ணி எழுதி இளைத்துவிட் டாரே.

பொருள் : பரம ஆகாயத்தினுள் விளைந்த சிவமாகிய விளங்கனி கண்ணினுள்ளே கலந்து அவ்விடத்து இருந்தது. உலகியலைப் பெரிதாக மதித்து அதில் வாழ்ந்து கொண்டு, புத்தியூகத்தால் பலவாறாக இறை நிலையை எழுதி வீணாயினரே !

316. கணக்கறிந் தார்க்குஅன்றிக் காணஒண் ணாது
கணக்கறிந் தார்க்குஅன்றிக் கைகூடா காட்சி
கணக்கறிந்து உண்மையைக் கண்டுஅண்ட நிற்கும்
கணக்கறிந் தார்கல்வி கற்றறிந் தாரே.

பொருள் : ஞான சாதனையை அறிந்தவர்க்கு அன்றிச் சிவமாகிய விளங்கனியைப் பெற முடியாது இச் சாதனையை அறிந்தவர்க்கு அன்றிக் காட்சி கைகூடாது. ஞான சாதனையை அறிந்து உண்மைப் பொருளைக் கண்டு பொருந்தி நிற்கும் வித்தையை அறிந்தவர் உண்மையான கல்வி கற்றவராவர்.

317. கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
கல்லாத மூடர்சொல் கேட்கக் கடன்அன்று
கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லாராம்
கல்லாத மூடர் கருத்தறி யாரே.

பொருள் : கற்று அனுபவம் இல்லாத மூடரைக் காணவும் கூடாது. அவரது வார்த்தையைக் கேட்பதும் கடமை ஆகாது. அனுபவம் இல்லாத மூடரைக் காட்டிலும் எழுத்து வாசனையில்லாதவர் நல்லவராம். அனுபவம் இல்லாதவர் கருத்தில் இறைவனை உணர மாட்டார்.

318. கற்றும் சிவஞானம் இல்லாக் கலதிகள்
சுற்றமும் வீடார் துரிசுஅறார் மூடர்கள்
மற்றும் பலதிசை காணார் மதியிலோர்
கற்றன்பில் நிற்போர் கணக்கறிந் தார்களே.

பொருள் : நூல்களைக் கற்றும் அன்பவ ஞானம் இல்லாத தீய குணமுடையோர் தீமையைத் தருவதாகிய ஆணவம் கன்மம் மயை யாகிய சுற்றத்தை விடமாட்டார். இவர்கள் குற்றத்தை அறிந்து நீக்கிக் கொள்ளாத மூடர்களாவர். மேலும் பல திசைகளிலுள்ள அறிஞர்களோடு கூடி உண்மை உணரா அறிவிலிகள் ஆவார்கள். ஆனால் சிவஞானம் பெற்றுச் சிவத்தினிடம் அன்பு கொண்டு நிற்போரே கணக்கறிந்தவராவர்.

319. ஆதிப் பிரான்அ மரர்க்கும் பரஞ்சுடர்
சோதி அடியார் தொடரும் பெருந் தெய்வம்
ஓதி உணரவல் லோம்என்பம் உள்நின்ற
சோதி நடத்தும் தொடர்வுஅறி யாரே.

பொருள் : யாவர்க்கும் தலைவனாகிய முதல்வன் தேவர்க்கும் மங்காத ஒளியாய்த் திகழ்கின்றான். ஒளி பெற்ற அடியார் நாடும் பெரிய கடவுளாய் இருக்கின்றான். அப்பெருமானைக் கற்றறிந்துவிடுவோம் என்று கூறுவார். அவர்கள் உள்ளேயே இருக்கின்ற சோதி எவ்வாறு நடத்திக் கொண்டிருக்கிறது என்பதனை அறியார்கள்.

23. நடுவு நிலைமை

(நடுவு நிலைமை என்பதற்கு, சிரசின் மேல் விளங்கும் ஒளியில் நிற்றல், நடுவாகிய சுழுமுனையில் நிற்றல், சிவசத்திக்கு இடையே நிற்றல், சூரிய சந்திரனாகிய இரு கண்களுக்கு மேல், புருவ நடுவில் நிற்றல், எல்லா உயிர்களிடமும் அந்தண்மை பூண்டு ஒழுகல் எனப் பல பொருளும் பொருந்தும்)

320. நடுவுநின் றார்க்குஅன்றி ஞானமும் இல்லை
நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை
நடுவுநின் றார்நல்ல தேவரும் ஆவர்
நடுவுநின் றார்வழி நானும்நின் றேனே

பொருள் : நடுவாகிய சகஸ்ரதளத்தில் விளங்கும் ஒளியை அறிந்து நில்லாதவர்க்கு ஞானம் கிட்டாது நடுவாகிய சகஸ்ர தள ஒளியில் நிற்போர்க்கு நரகம் கிடையாது. அவ்வாறு நடுவுநின்றார் நல்ல தேவ வடிவு பெறுவர். சம்பிரதாய முறையில் நடுவு நின்ற அடியார் வழியால் நானும் பயின்று நின்றேன்.

321. நடுவுநின் றான்நல்ல கார்முகில் வண்ணன்
நடுவுநின் றான்நல்ல நான்மறை யோதி
நடுவுநின் றார்சிலர் ஞானிகள் ஆவோர்
நடுவுநின் றான்நல்ல நம்பனும் ஆமே.

பொருள் : சகஸ்ர தள ஒளியில் நல்ல மேக வண்ணத்தனாகிய திருமால் நின்றான். அதில் நான்கு வேதங்களையும் உணர்ந்த பிரமன் இருந்தான். அதிலே சில ஞானிகள் ஆவோரும் இருந்தனர். அதில் யாவரும் நம்பத்தக்க சிவனும் விளங்கி நின்றான்.

322. நடுவுநின் றார்சிலர் ஞானிகள் ஆவர்
நடுவுநின் றார்சிலர் தேவரு மாவர்
நடுநின் றார்சிலர் நம்பனும் ஆவர்
நடுவுநின் றார்ஒரு நானும்நின் றேனே.

பொருள் : இப் பிறவியிலேயே ஞானிகளாக வேண்டிய சிலரும் சிரசின் மேல் உச்சியில் பொருந்தியிருந்தனர். அவ்வாறு சகஸ்ரதளத்தில் பொருந்தி யிருந்தவரில் சிலர் தேவர்கள் ஆவார்கள். அவருள் வேறு சிலர் சிவமாந் தன்மை எய்துவர். அவ்வழியிலே நானும் சகஸ்ரதள ஒளியில் நிலை பெற்றுள்ள அடியார் கூட்டத்தோடு கலந்து நின்றேன்.

323. தோன்றிய எல்லாம் துடைப்பனை அவனன்றி
ஏன்றுநின் றாரென்றும் ஈசன் இணையடி
மூன்றுநின் றார்முதல் வன்திரு நாமத்தை
நான்றுநின் றார்நடு வாகிநின் றாரே.

பொருள் : உலகில் தோன்றி எல்லாவற்றையும் அழிக்க வல்லவன் இறைவனாகிய சிவபெருமான். சகஸ்ரதள ஒளியில் நிற்பவரே எப்போதும் நன்றிக் கடப்பாடு உடையவராக விளங்கினார். அவர் இறைவனது இரு திருவடிகளையும் பெற வேண்டும் என்று முயன்றிருந்தார். மேலும் அவர்கள் முதல்வனது திருநாமத்தைப் பற்றிக் கொண்டு போக நித்திரையில் இருந்தார்கள் (முயன்று என்பது மூன்று எனத் திரிந்தது).

24. கள்ளுண்ணாமை (கள் உண்ணாதிருத்தல்)

324. கழுநீர் பசுப்பெறின் கயந்தொறும் தேரா
கழுநீர் விடாய்த்துத்தம் காயம் சுருக்கும்
முழுநீர்க் கள்ளுண்போர் முறைமை அகன்றோர்
செழுநீர்ச் சிவன்தன் சிவானந்தத் தேறலே

பொருள் : பசுக்கள் அருந்துவதற்குக் கழுநீர்ப் பெற்றால் பிறகுளந்தோறும் சென்று நீரைத் தேடி அருந்தா. கழுநீரை விரும்பித் தாகத்தால் களைத்துத் தம்முடைய உடம்பினை சிவானந்தமாகிய மதுவாகும். இம்மதுவை அருந்தாமல் முழுநீர் மயமான மதுவை உண்பர் ஒழுக்கத்தின் நீங்கியவர். என்னே அறியாமை !

325. சித்தம் உருக்கிச் சிவமாம் சமாதியில்
ஒத்துச் சிவானந்தம் ஓவாத தேறலைச்
சுத்த மதுவுண்ணச் சிவானந்தம் விட்டிடா
நித்தல் இருத்தல் கிடத்தல் கீழ்க்காலே.

பொருள் : சித்தத்தைச் சிவன்பால் வைத்து உருகச் செய்து, சிவ சமாதியில் பொருந்தி, சிவானந்தம் நீங்காத மதுவினை, சுத்தநிலையில் அனுபவிக்கச் சிவானந்தம் நீங்காது, அதை விட்டுச் சிவன் நினைவின்றி நிற்றலும் இருத்தலும் கிடத்தலும் கீழ்நிலையாகும். நிற்றல் நித்தலெனத் திரிந்தது.

326. காமமும் கள்ளும் கலதிகட் கேயாகும்
மாமல மும்சம யத்துள்ள மயலுறும்
போமதி யாகும் புனிதன் இணையடி
ஓமய ஆனந்தம் தேறல் உணர்வுண்டே

பொருள் : காமமும் கள்ளும் கீழ்மக்களுக்கே யாகும். ஆணவ மலமும் சமயத்தை உள்ளவாறு உணராது மயக்கத்தை விளைக்கும். கெட்டுப் போகும் புத்தி உண்டாகும். மேலோர்க்குச் சிவபெருமானது இரு திருவடி இணைப்பால் பெறும் பிரணவ மயமான சிவானந்தத் தேனாகிய உணர்வு உள்ளது.

327. வாமத்தோர் தாமும் மதுவுண்டு மாள்பவர்
காமத்தோர் காமக் கள்ளுண்டே கலங்குவர்
ஓமத்தோர் உள்ளொளிக்கு உள்ளே உணர்வர்கள்
நாமத்தோர் அன்றே நணுகுவர் தாமே.

பொருள் : சத்தி வழிபாட்டினர் தேவிக்குத் திருப்தி செய்வதாய்க் கூறித் தாங்கள் மதுவுண்டு அழிபவராவர். காம வாழ்வில் உள்ளோர் காமமாகிய போதையிலிருந்தே கலங்கி நிற்பர். மகாதேவா என்னும் ஓமத்தைச் செய்வோர் சிரசின் மேல் வெளிப்படும் ஒளிக்குள்ளே தமது உணர்வை நிறுத்தி மகிழ்ந்திருப்பர். சிவநாம மகிமையை அறிந்து அனுபவிப்பவர் அப்பொழுதே சிவனை அணுகும் இன்பம் பெறுவர். நாமத்தோர் - நாம சங்கீர்த்தனம் செய்வோர்.

328. உள்ளுண்மை ஓரார் உணரார் பசுபாசம்
வள்ளண்மை நாதன் அருளினான் வாழ்வுறார்
தெள்ளுண்மை ஞானச் சிவயோகம் சேர்வுறார்
கள்ளுண்ணும் மாந்தர் கருத்தறி யாரே.

பொருள் : வேதாகமம் உணர்த்தும் உண்மையை விளங்க மாட்டாதார் பசு பாசம் பதி ஆகியவற்றை அறிய மாட்டார். அவர் விரும்பியவற்றை யெல்லாம் அளிக்கும் சிவபெருமானது அருளைத் துணையாகக் கொண்டு வாழமாட்டார். தெளிந்த உண்மையான சிவபோகத்தில் அவர் நிலைபெற மாட்டார். புறத்தேயுள்ள நீர்க் கள்ளை அருந்துவோர் உண்மையை உணர மாட்டார்.

329. மயக்குஞ் சமய மலமன்னும் மூடர்
மயக்கு மதுவுண்ணும் மாமூடர் தேரார்
மயக்குறு மாமாயை மாயையின் வீடு
மயக்கில் தெளியின் மயக்குறும் அன்றே.

பொருள் : மயங்கச் செய்கின்ற சமயக் குற்றங்களைப் பொருந்திய மூடர்கள் சமயத்தின் பேரால் மயக்கத்தைத் தருகின்ற மதுவினை அருந்துவார்கள். இப்பெரிய மூடர்கள் நல்ல வழியை ஆராய்ந்து அறியார்கள். மயக்கத்தைக் கொடுக்கின்ற மகா மாயையும் மாயையின் இருப்பிடமாகும். மயக்கத்தினின்றும் தெளிந்தாலும் வாமாசார வழிபாடு மீண்டும் மயக்கத்தைத் தருமே தவிர சிவானந்தத்தை நல்காது.

330. மயங்கும் தியங்கும் கள்வாய்மை அழிக்கும்
இயங்கும் மடவார்தம் இன்பமே எய்தி
முயங்கும் நயங்கொண்ட ஞானத்து முந்தார்
இயங்கும் இடையறா ஆனந்தம் எய்துமே.

பொருள் : உண்டாரை மயங்கச் செய்வதும் மாண்டாரை நினைந்து கவலச் செய்வதும் ஆகிய கள் உண்மையை அழிக்கும். இயங்கிக் கொண்டிருக்கிற பெண் இன்பத்தை நாடி அடையத் தூண்டும் இங்ஙனமாகிய கள்ளை உண்பார் நல்ல ஞானத்துத் தலைப்பட்டார். அவர்களுக்கு என்று இடையறாது விளங்கும் சிவானந்தத் தேறல் கிட்டுமோ ? கிட்டாது (ஏகாரம் எதிர்மறைப் பொருளானது)

331. இராப்பகல் அற்ற இடத்தே இருந்து
பராக்கற ஆனந்தத் தேறல் பருகார்
இராப்பகல் அற்ற இறையடி இன்பத்து
இராப்பகல் மாயை இரண்டிடத் தேனே.

பொருள் : இரவு பகல் என்று பேதமற்று தன்னை மறந்த சாக்கிர அதீத நிலையில் இருந்து, வேறு எண்ணமற்றுச் சிவானந்தத் தேனை உலகவர் அருந்தமாட்டார். இரவும் பகலும் இல்லாத திருவடி இன்பத்தில் திளைத்து, இரவும் பகலும் உள்ள அசுத்த மாயை சுத்த மாயை இரண்டையும் அகற்றி நின்றேன்.

332. சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர்
சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்
சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச்
சத்திய ஞானஆ னந்தத்திற் சார்தலே.

பொருள் : சத்தியை அடைய விரும்பிச் சாகத் மதத்தின் (வாமத்தோர்) மதுவை உண்பர். மதுவுண்டு தம்மை மறந்திருத்தலால் அவரது அறிவுச் சத்தி கெடுகிறது. சத்தி என்பது சிவஞானத்தை அறிந்து அதில் நிலைபெற்று, சத்திய ஞான ஆனந்தத்தை அடைதலாம்.

333. சத்தன் அருள்தரின் சத்தி அருள்உண்டாம்
சத்தி அருள்தரின் சத்தன் அருள்உண்டாம்
சத்தி சிவமாம் இரண்டும்தன் உள்வைக்கச்
சத்தியும் எண்சித்தித் தன்மையும் ஆமே.

பொருள் : சத்தியை உடையவனாகிச் சிவன் அருள் புரில்தால் சத்தியின் அருள்கிட்டும். சத்தி அருள் புரிநதால் சிவனது அருள் உண்டாகும். சத்தி சிவமாகிய இரண்டும் விளங்கும் விந்து நாதங்களை உணர்ந்து பொருந்தியிருக்க, அவர்களுக்குச் சத்தி வடிவம் உண்டாகி அட்டமா சித்திகளும் தாமே வந்தடையும்.

334. தத்துவம் நீக்கி மருள்நீக்கித் தானாகிப்
பொய்த்தவம் நீக்கிமெய்ப் போகத்துட் போக்கியே
மெய்த்த சகமுண்டு விட்டுப் பரானந்தச்
சித்திய தாக்கும் சிவானந்தத் தேறலே.

பொருள் : சிவானந்தமாகிய தேன் முப்பத்தூறு தத்துவங்களையும் கடக்கச் செய்து, தத்துவங்களே தான் என்று மயங்கின அறிவை நீக்கிச் சிவமாய், உபாயத்தால் அடையலாம் என்று எண்ணிச் செய்யப்பெறும் பொய்த் தவங்களினின்றும் நீக்கியருளி, உண்மையான சிவபோகத்துள் செலுத்தி, உண்மையாய்த் தோன்றிய உலகம் இல்லாதது ஒழியும்படி செய்து மேலான ஆனந்தம் சிந்திக்கும்படி செய்யும்.

335. யோகிகள் கால்கட்டி ஒண்மதி ஆனந்தப்
போத அமுதைப் பொசித்தவர் எண்சித்தி
மோகியர் கள்ளுண்டு மூடராய் மோகமுற்று
ஆகும் மதத்தால் அறிவழித் தாரே.

பொருள் : சிவயோகியர் பிராணனை வசப்படுத்தி, சந்திர மண்டலத்தில் சிவானந்தத்தை அருந்துபவர். அட்டமா சித்திகளை விரும்புபவர் கள்ளினைக் குடித்து மூடராக ஆசைப்பட்டு, உண்டாகும் பற்றினால் உள்ள அறிவையும் இழந்தார்கள்.

336. உண்ணீர் அமுத முறும்ஊ றலைத்திறந்து
எண்ணீர் குரவன் இணையடித் தாமரை
நண்ணீர் சமாதியின் நாடிநீ ரால்நலம்
கண்ணாற் றொடேசென்று கால்வழி காணுமே.

பொருள் : மரணத்தை மாற்றும் ஒளி ஊற்றைத் திறந்து அனுபவிக்க மாட்டீர். சிவகுருவின் திருவடியை எண்ணி நிற்க மாட்டீர். சமாதியில் சிவ சோதியை விரும்பிப் பொருத்த மாட்டீர். அருள் நீர்ப் பெருக்கால் நன்மை தரும் கண்ணின் காரியமாகிய ஒளி நெறி பற்றிச் சென்று, பிராணன் செல்லும் வழியை (சுழுமுனை வழியை) அறியுங்கள்.

முதல் தந்திரம் முற்றிற்று.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் Empty திருமந்திரம் | இரண்டாம் தந்திரம்

Post by இறையன் Mon Mar 26, 2012 2:24 pm

(காமிக ஆகமம்)

1. அகத்தியம் (உடம்பில் விளங்கும் நாதம், இந்த அக்கினி உடம்பைத் தாங்கிக் கொண்டும், உண்பதைச் சீரணித்துக் கொண்டும் உள்ளது என்க. இதன் சொரபம் நாதமாகும்)

337. நடுவுநில் லாதுஇவ் வுலகம் சரிந்து
கெடுகின்றது எம்பெரு மான்என்ன ஈசன்
நடுவுள அங்கி அகத்திய நீபோய்
முடுகிய வையத்து முன்னிர்என் றானே.

பொருள் : எவ்வுயிர்க்கும் நாயகனான இறைவனே ! இவ்வுலகில் வாழ்கின்ற சீவர்கள் சுழுமுனை மார்க்கத்தில் பொருந்தி நில்லாது உலக முகமாகக் கீழ்நிலைப்பட்டுப் பிராண சக்தியை இழக்கின்றார்கள் என்று ஆசிரியர் வேண்ட, இறைவன், மூல நடுவிலுள்ள சொரூபமான நாதமே நீ சென்று, விரைந்து கெடுகின்ற சீவரது சிரசின் முன்பக்கமாகப் பொருந்திக் காப்பாயாக என்றருளினான்.

338. அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்
அங்கி உதயம்செய் மேல்பால் அவனொடும்
அங்கி உதயம்செய் வடபால் தவமுனி
எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே

பொருள் : அக்கினி கலையின் சொரூபமாகிய நாதத்தைச் சிரசின் முன்பக்கம் விளங்கச் செய்யும் சாதகனாகிய அகத்தியன், அதனைப் பின்புறம் பிடரிப்பக்கம் விளங்கச் செய்பவனாய், அது பரவிச் சிரசின் இடப்பக்கம் விளங்கும் தவமுனியாகி சிரசு எங்கும் நிறைகின்ற வளப்பம் மிக்க ஒளியானவன்.

2. பதிவலியில் வீரட்டம்எட்டு

(இறைவன் வீரத்தால் அட்ட இடங்கள் எட்டு. அவையாவன; திருவதிகை, திருக்கடவூர், திருக்கொறுக்கை, வழுவூர், திருக்கோவாலூர், திருப்பறியலூர், திருக்கண்டியூர், திருவிற்குடி என்பனவாம் இங்கு நடந்தன வாகவுள்ள புராணக்கதைகளுக்கு ஆசிரியர் தத்துவ விளக்கம் கொடுத்தருளுகிறார்.)

339. கருத்துறை அந்தகன் தன்போல் அசுரன்
வரத்தின் உலகத்து உயிர்களை எல்லாம்
வருத்தம்செய் தூன்என்ற வானவர் வேண்டக்
குருத்துயர் சூலங்கைக் கொண்டுகொன் றானே.

பொருள் : சீவர்களது கருத்திலே இருக்கின்ற அந்தகன் போன் அறியாமையாகிய அசுரன் உயர்ந்த உலகத்திலுள்ள உயிர்களையெல்லாம் துன்பம் செய்கிறான் என்று தேவர்கள் இறைவனை வேண்ட, அவன் சுடர் விடுகின்ற ஞானமாகிய சூலத்தைக் கொண்டு அறியாமையாகிய அசுரனை அழித்தருளினான் (அந்தகாசுர சங்காரத்தில் தத்துவம் உணர்த்தியவாறு)

340. கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்
தலையைத் தடித்திட்டுத் தான்அங்கி யிட்டு
நிலைஉல குக்குஇவன் வேண்டுமென்று எண்ணித்
தலையை அரிந்திட்டுச் சந்திசெய் தானே.

பொருள் : சுவாதிட்டானச் சக்கரத்தில் விந்து நாசம் செய்து கொண்டிருந்த பிரமனை விந்து நீக்கம் செய்வதைத் தடுத்து இறைவன் அக்கினி காரியத்தால் சீவர்கள் விந்து செயம் பெறுமாறு செய்து உலகம் நிலைபெறப் பிரமனது சிருட்டியும் வேண்டும் என்று கருதி, அவன சேட்டையை நீக்கி உலக இன்பத்துக்குப் பொருந்துமாறு அருளினான். (நான்முகனின் சிரசைக் கொய்ததன் தத்துவம் உணர்த்தியவாறு)

341. எங்கும் பரந்தும் இருநிலம் தாங்கியும்
தங்கும் படித்துஅவன் தாள்உணர் தேவர்கள்
பொங்கும் சினத்துள் அயன்தலை முன்னற
அங்குஅச் சுதனை உதிரங்கொண் டானே.

பொருள் : எங்கும் வியாபித்தும் அகன்ற உலகுக்கு ஆதாரமாய் இருந்தும், எல்லாம் சென்று ஒடுங்குவதற்கு இடமாயுள்ள இறைவனது திருவடியை உணர்ந்த பக்குவப்பட்ட சீவர்கள் போகம் செய்யும் காலத்து பிரமனின் சேட்டை கெட, மணிபூரகத்திலிருந்து கொண்டு கவர்ச்சியைத் தந்து கொண்டு இருக்கும் திருமாலினது கவர்ச்சியைப் போக்கி யருளினான். (பிரச கபாலத்தில் குருதியை ஏற்றதன் தத்துவம் உணர்த்தியவாறு)

342. எங்கும் கலந்தும் என் உள்ளத்து எழுகின்ற
அங்க முதல்வன் அருமறை ஓதிபால்
பொங்கும் சலந்தரன் போர்செய் நீர்மையன்
அங்கு விரற்குறித்து ஆழிசெய் தானே.

பொருள் : என்னுடைய உயிரில் விளங்கும் உடம்புக்கு நாயகனும் நாத தத்துவத்துக்குரிய சதாசிவ மூர்த்தியும் ஆனவனிடத்து நீரை முகமாகவுடைய அபானனாகிய சலந்தராசுரன் கீழ் நோக்குதலாகிய போரினைச் செய்ய அவ்வாறு அது கீழ் நோக்காது யோக சாதனை பால் மேற் சென்று கலந்து சகஸ்ரதளம் வட்டமாக விரியுமாறு சீவர்களுக்குப் பெருமாள் அருள் புரிந்தான். (சலந்தராசுரன் சங்காரத்தின் தத்துவம் உணர்த்தியவாறு)

343. அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யார்அறி வாரே.

பொருள் : நீரை அணிந்துள்ள சிவந்த சடையினையுடைய பழமையானவன், மூன்று கோட்டைகளை அழித்தான் என்று அறிவில்லாதவர்கள் கூறுவார்கள். மூன்று கோட்டைகளை அழித்தலாவது ஆணவம் கன்மம் மாயையாகிய மூன்று மலங்களை அழித்தலாம். அவ்வாறு கோட்டையை அழித்ததை யாரே அறியவல்லார் ? (திரிபுர சங்காரத்தின் தத்துவம் உணர்த்தியவாறு)

344. முத்தீக் கெளுவி முழங்கெரி வேள்வியுள்
அத்தி யுரிஅரன் ஆவது அறிகிலர்
சத்தி கருதிய தாம்பல தேவரும்
அத்தீயின் உள்ளெழுந் தன்று கொலையே.

பொருள் : மூன்று தீயினை எழுப்பி நாதத்தை வெளிப்படுத்தும் அக்கினி காரியத்துள் யானை போன்ற காரிருளைக் கிழித்து வெளிப்படும் ஒளி இறைவனாக ஆகின்றதை யாரும் அறியவில்லை. குறி கணம் கூடி பல தேவர்களும் அத்தீயில் சிவன் வெளிப்பட்ட போதும் மறைந்து ஒழிந்தனர். (கயமுகாசூர சங்காரத்தின் தத்தும் உணர்த்தியவாறு)

345. மூலத் துவாரத்து மூளும் ஒருவனை
மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற்
காலுற்றுக் காலனைக் காய்ந்து அங்கி யோகமாய்
ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே.

பொருள் : மூலாதாரத்திலிருந்து சுழுமுனை நாடி வழியாகக் கிளம்பி மேலெழுகின்ற மூர்த்தியை, பிரமரந்திரமாகிய மேல் துவாரத்தில் ஊர்த்துவ திருஷ்டியால் பார்த்துச் சுழுமுனையில் பொருந்தி எமனை வெகுண்டு, அக்கினி காரியம் செய்தால் உடம்பாகிய உலகைக் கடந்து சகஸ்ரதளமாகிய ஊரில் அழியாதிருக்கலாம். (திருக்கடவூர் எம சங்காரத் தத்துவம் உணர்த்தியவாறு)

346. இருந்த மனத்தை இசைய இருத்தி
பொருந்தி இலிங்க வழியது போக்கி
திருந்திய காமன் செயலழித்து அங்கண்
அருந்தவ போகம் கொறுக்கை அமர்ந்ததே.

பொருள் : நலமாயிருந்த மனத்தைச் சிவனோடு சேர்த்து வைத்து குறிவழி செல்லாது தடுத்து, தீமை செய்யாதவாறு விந்து நீக்க மாகிய காமனது செயலைக் கெடுத்து அவ்விடத்து வாழ்க்கைத் துணையுடன் பொருந்தியிருந்தே கொறுக்கை இருந்த தாகும். திருக்கொறுக்கை என்ற தலத்தில் மன்மதனைத் தகனம் செய்த தத்துவம் உணர்த்தியவாறு.

3. இலிங்க புராணம் (இலிங்க மாவது, தோற்ற ஒடுக்கங்களுக்குக் காரணமாகிய அருட் குறி புராணமாவது அதன் பழமை)

347. அடிசேர்வன் என்னஎம் ஆதியை நோக்கி
முடிசேர் மலைமக னார்மக ளாகித்
திடமார் தவஞ்செய்து தேவர் அறியப்
படியார அர்ச்சித்துப் பத்திசெய் தானே.

பொருள் : சிவபெருமானது திருவடியைச் சென்று அடைவேன் என்று சக்தியானவள் அவனையே நோக்கி, சரீரத்தின் உச்சியாகிய சிரசில் விளங்கும் சிற்சக்தியாகி, சிவனை அடைய உறுதியான தவத்தைப் புரிந்து, ஒளி மண்டல வாசிகள் காண முறையாக அருச்சனைப் புரிந்து வழி பட்டாள்.

348. திரிகின்ற முப்புரம் செற்ற பிரானை
அரியனென்று எண்ணி அயர்புற வேண்டா
பரிவுடை யாளர்க்குப் பொய்யலன் ஈசன்
பரிவொடு நின்று பரிசறி வானே.

பொருள் : திரிந்து கொண்டிருக்கின்ற மும்மலக் கோட்டையை அழித்த பெருமானை அடைவதற்கு அருமையானவன் என்று நினைந்து சேர்ந்து போக வேண்டா. அவ் இறைவன் அன்புடையார்க்குப் பொய்யானவன் அல்லன். அவன் சீவர்களிடம் கருணையோடு பொருந்தித் தகுதி நோக்கி அருள் புரிவான்.

349. ஆழி வலங்கொண்டு அயன்மால் இருவரும்
ஊழி வலஞ்செய்ய ஒண்சுடர் ஆதியும்
ஆழி கொடுத்தனன் அச்சுதற்கு அவ்வழி
வாழி பிரமற்கும் வாள்கொடுத் தானே.

பொருள் : சுவாதிட்டான மணிபூரகச் சக்கரங்களிலே இடங்கொண்ட பிரமனும் திருமாலும் ஆகிய இருவரும் முறையாக மூலாதாரத்தைச் சுற்றிவர அங்கு ஒளிமயமாக விளங்கும் உருத்திர மூர்த்தியும் அம்முறையே திருமாலுக்குச் சகஸ்ரதளச் சக்கரத்தில் விளங்க அருள் செய்தான். சுவாதிட்டானத்திலிருந்து உற்பத்தியைப் பெருக்காது மேலே சென்ற பிரமனுக்கும் ஒளியினை நல்கினான்.

350. தாங்கி இருபது தோளும் தடவரை
ஓங்க எடுத்தவன் ஒப்பில் பெருவலி
ஆங்கு நெரித்துஅம ராஎன்று அழைத்தபின்
நீங்கா அருள்செய்தான் நின்மலன் தானே.

பொருள் : இந்திரியங்களும் புலன்களுமாகிய இருபது தோள்களும் தாங்கி விசாலமான மலையைத் தன் முயற்சியால் எடுத்த புருஷனாகிய இராவணனது ஒப்பில்லாத ஆற்றலை, அவ்விடத்து அழித்துத் தன் சிறுமை உணர்ந்து தேவா காப்பாற்று என்று அவன் வேண்டியபின் நீங்காத பத்தியை நிலைபெறுமாறு செய்தான் அனாதி மலரகிதனான சிவபெருமான்.

351. உறுவது அறிதண்டி ஒண்மணற் கூட்டி
அறுவகை ஆன்ஐந்தும் ஆட்டத்தின் தாதை
செறுவகை செய்து சிதைப்ப முனிந்து
மறுமழு வால்வெட்டி மாலைபெற் றானே.

பொருள் : தனக்கு உறுவதைக் காரண காரியத்தோடு அறியவல்ல சீவனாகிய சண்டீசன், வெண்மையான ஒளியாகிய மணலைச் சேர்த்து, பிறவி அறும் வகையில் ஞானேந்திரியமாகிய ஐந்தும் பசுக்களையும் புறப்புலன்களில் மேயாது தடுக்க, மாயையால் உண்டான உடம்பாகிய தந்தை பொறாது பகை கொண்டு கெடுக்க, வெகுண்டு அக்கினி கலையாகிய வாளால் இடைபிங்கலையாகிய இருகால்களையும் தொழிற்படாமல் செய்து சிவத் தொண்டன் ஆனான்.

352. ஓடிவந் தெல்லாம் ஒருங்கிய தேவர்கள்
வாடி முகமும் வருத்தத்துத் தாஞ்சென்று
நாடி இறைவா நமஎன்று கும்பிட
ஈடில் புகழோன் எழுகஎன் றானே.

பொருள் : மனம் ஒருமைப்பட்ட தேவர்கள் எல்லோரும் சிவபெருமானிடம் ஓடி வந்து, முகவாட்டத்துடன் வருத்தத்தோடு சரணடைந்து நாடி, இறைவனே போற்றி என்று வணங்க, ஒப்புயர்வற்ற புகழையுடைய சிவபெருமான் எழுந்து மேலே வந்து சேருங்கள் என்று அருளினான். (ஆலகால விஷம் தேவர்களைத் துரத்தியதாக உள்ள புராணத் தத்துவம் உணர்த்தியவாறு)

4. தக்கன்வேள்வி

(தக்கன் வேள்வியாவது, ஆண் பெண் கூட்டுறவாகும். சிவ பெருமானை நினைந்து செய்யாமையால் விந்து செயமாகிய பயனைப் பெறாமல் கூட்டுறவாகிய வேள்வி சிதைந்தது)

353. தந்தை பிரான்வெகுண் டான்தக்கன் வேள்வியை
வெந்தழல் ஊடே புறப்பட விண்ணவர்
முந்திய பூசை முடியார் முறைகெட்டுச்
சிந்தினர் அண்ணல் சினஞ்செய்த போதே.

பொருள் : ஆண்பெண் கூட்டுறவாகிய தக்க யாகத்தைச் சிவபிரான், தன்னை நினையாமல் செய்தமையால் கோபங் கொண்டான். காமாக்கினியால் தகிக்கப்பட்டு விந்து நீக்கம் உண்டாக, தேவர்கள் எண்ணியவாறு விந்து செயமாகிய பூசையின் பயனைப் பெறவில்லை பெருமான் வெகுண்டவுடனே தேவ காரியச் சிதைவு உண்டாகி அவர்கள் வெறியேறினர்.

354. சந்தி செயக்கண்டு எழுகின் றரிதானும்
எந்தை இவனல்ல யாமே உலகினில்
பந்தம்செய் பாசத்து வீழ்ந்து தவஞ்செய்
அந்தமி லானும் அருள்புரிந்த தானே.

பொருள் : ஆண் பெண் சேர்க்கையைச் செய்வதற்குத் தருக்கி எழுகின்ற திருமாலும், உலகினில் படைக்கின்றவன் சிவனல்ல நாமே தான் என்றான். அதனால் கட்டினை விளைவிக்கின்ற பாசக் கடலில் ஆழ்ந்து வருந்திய பின் சிவனை நோக்கித் தவம்புரிய முடிவில்லாத பெருமானும் விஷ்ணு தத்துவம் மேலே விளங்கும்படி அருள் செய்தான். (எழுகின்றஅரி என்பது எழுகின்றரி எனத் திரிந்தது)

355. அப்பரி சேஅய னார்பதி வேள்வியுள்
அப்பரி சேஅங்கி அதிசய மாகிலும்
அப்பரி சேஅது நீர்மையை உள்கலந்து
அப்பரி சேசிவன் ஆலிக்கின் றானே.

பொருள் : முன்னே முறையே பிரமனும் காம காரியமாகிய தக்கயாகத்துக்குத் தானே தலைவனெனத் தருக்கினான். அதனால் காமாக்கினி மூண்டெழுந்த போதிலும், அவ்வகையே அதன் தன்மையில் பொருந்தி, சிவபெருமான் முறையாக ஆரவாரத்தோடு விளங்குகின்றான்.

356. அப்பரி சேஅயன் மால்முதல் தேவர்கள்
அப்பரி சேஅவ ராகிய காரணம்
அப்பரி சுஅங்கி உளநாளும் உள்ளிட்டு
அப்பரி சாகி அலர்ந்திருந் தானே

பொருள் : அவ்வண்ணம் பிரமன், திருமால் முதலிய தேவர்கள், அத்தன்மையைப் பெற்றதற்குக் காரணம் சிவபெருமானே யாம். அவ்வாறு அக்கினி கலையுள்ளே விளங்கும் வரை அவ் அக்கினி கலையில் சிவபெருமான் நீக்கமற நிறைந்து விளங்கியிருந்தான்.

357. அலர்ந்திருந் தான்என்று அமரர் துதிப்பக்
குலந்தரும் கீழ்அங்கி கோளுற நோக்கிச்
சிவந்த பரம்இது சென்று கதுவ
உவந்த பெருவழி ஓடிவந் தானே.

பொருள் : அமரர்கள் எல்லாம் ஆகாய பூத நாயகனான சிவபெருமானே எங்கும் நீக்கமற நிறைந்துள்ளான் என்று உணர்ந்து வேண்ட, ஆறு ஆதாரங்களில் கீழான மூலாதாரத்திலுள்ள அக்கினி கலை சுழுமுனை வழியாக மேலெழ, சிவந்த மேலான ஒளியானது சகஸ்ர தளத்தைச் சென்று பற்ற, இதுவே வழிபடும் மகிழ்ச்சிக்குரிய பெருவழி என்று சிவன் விரைந்து வந்தருளினான்.

358. அரிபிர மன்தக்கன் அருக்கன் உடனே
வருமதி வாலை வன்னிநல் இந்திரன்
சிரமுக நாசி சிறந்தகை தோள்தான்
அரனருள் இன்றி அழிந்தநல் லோரே.

பொருள் : திருமால் பிரமன் தக்கன் சூரியனுடன் வருகின்ற சந்திரன் நாமகள் அக்கினி நல்ல இந்திரன் ஆகியோர் சிரம், முகன், மூக்கு, கை, தோள், ஆகியவற்றைச் சிவனருள் பொருந்தாமையால் இழந்து பின் நல்லோராயினர்.

359. செவிமந் திரஞ்சொல்லும் செய்தவத் தேவர்
அவிமந் திரத்தின் அடுக்களை கோலிச்
செவிமந் திரம்செய்து தாமுற நோக்கும்
குவிமந் திரம்கொல் கொடியது வாமே.

பொருள் : செபிக்கத்தக்க மந்திரங்களைச் சொல்லிச் சிவனருள் பெற்ற தேவர்கள், வாயிட்டுக் கூற முடியாத பிரணவத்தால் மூலா தாரத்திலுள்ள அக்கினியைத் தூண்டி நாதம் உண்டாகச் செய்து, தாம் பொருந்த நோக்கும் மனத்தை ஒருமைப் படுத்தும் மகா மந்திரம் கொடுமையானது ஆகுமா ? ஆகாது.

360. நல்லார் நவகுண்டம் ஒன்பதும் இன்புறப்
பல்லார் அமரர் பரிந்தருள் செய்கென
வில்லார் புரத்தை விளங்குஎரி கோத்தவன்
பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே.

பொருள் : நல்லாரது உடம்பிலுள்ள ஒன்பது துவாரங்களாகிய குண்டங்களும் சிறந்து இன்புறு, பல தேவர்கள் அடியேங்கட்கு இரங்கி அருள் செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்ளக் கொடிய அசுரர் அழியும் வண்ணம் பிரணவமாகிய வில்லினால் ஆணவாதி மும்மலங்களை எரித்து அருளினான்.

361. தெளிந்தார் கலங்கினும் நீகலங் காதே
அளிந்தாங்கு அடைவதுஎம் ஆதிப் பிரானை
விளிந்தான் அதுதக்கன் வேள்வியை வீயச்
சுளிந்தாங்கு அருள் செய்த தூமொழி யானே

பொருள் : சினந்து பின்னர் அருள்புரிந்த நாத சொரூபியான சிவபெருமானே, தன்னை நினையாது இயற்றிய காம வேள்வியை அழியுமாறு செய்தான். ஆனால் இன்ப வடிவமாகிய அப்பெருமானை அன்பு செலுத்தி அடைய வேண்டும். அதனால் நூல் வல்லார் கூறும் மயக்க நெறி பற்றிக் கலங்காதே.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Mon Mar 26, 2012 2:25 pm

5. பிரளயம்

(பிரளயம் என்பதற்கு அழிவு என்று பொருள். அழிவினைச் செய்து அருளுபவன் சிவன் என்பத இங்குக் கூறப்பெறும்.)

362. கருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத்து
இருவரும் கோஎன்று இகல இறைவன்
ஒருவனும் நீருற ஓங்கொளி யாகி
அருவரை யாய்நின்று அருள்புரிந் தானே.

பொருள் : கருவிடும் எல்லையே மூடிக்கொண்டு எழுகின்ற மணிபூரகத்திலுள்ள நீர் மண்டலத்தில், பிரம விஷ்ணுக்களாகிய இருவரும் தம்முள் மாறுபட மணிபூரகத்தானத்திலுள்ள அறிவு மயமான சூரியன் மேலெழுந்து சிவசூரியனாகி அருமையான உச்சியின் மேல்நின்று இருவருக்கும் அருள்புரிந்தான்.

363. அலைகடல் ஊடுஅறுத்து அண்டத்து வானோர்
தலைவன் எனும்பெயர் தான்தலை மேற்கொண்டு
உலகார் அழற்கண்டு உள்வீழாது ஓடி
அலைவாயில் வீழாமல் அஞ்சல்என் றானே.

பொருள் : சிவன் கடல் பிரதேசமாகிய மணிபூரகத் தானத்தினின்றும் பிளந்தும் கொண்டு, அண்டத்தின் எல்லையை அடைந்து சகல தத்துவ நாயகர்களுக்கும் தானே தலைவன் என்ற பெயரை வகிக்கும் திறனுடையவனாகி, உலகில் உள்ளோர். காமாக்கினியில் வீழாது தான் சென்று துன்பமாகிய அலைமோதும் பிரபஞ்சத்தில் அழுந்தாமல் அஞ்சேல் என்று அருள் செய்தான்.

364. தண்கடல் விட்ட தமரரும் தேவரும்
எண்கடல் சூழ்எம் பிரான்என்று இறைஞ்சுவர்
விண்கடல் செய்தவர் மேலெழுந்து அப்புறம்
கண்கடல் செய்யும் கருத்தறி யாரே.

பொருள் : குளிர்ச்சி பொருந்திய மணிபூரகமாகிய கடலினைக் கடந்த அறிவு மயமான சூரியனை அமரத்துவம் பெற்றோரும் ஒளிமண்டல வாசிகளும் சிரசின்மேல் எட்டுத் திக்கும் கடல் போன்று பரந்து விளங்கும் ஒளிமயமான சிவன் என்று வணங்கி ஏத்துவர். ஆகாயத்தைக் கடல் போன்று செய்த அப்பெருமான் சிரசின் மேலும் சென்று, அகக் கண்ணுக்குப் பரவெளியாகக் காட்சி தருவதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

365. சமைக்கவல் லானைச் சயம்புஎன்று ஏத்தி
அமைக்கவல் லார்இவ் உலகத்து ளாரே
திகைத்ததெண் ணீரில் கடல்ஒலி ஓசை
மிகைக்கொள் அங்கி மிகாமைவைத் தானே.

பொருள் : எல்லாத் தத்துவங்களையும் படைப்பவனைத் தனக்கு ஒரு படைப்பவன் இல்லாதவன் என்று துதித்துத் தங்களிடம் வியாபகப்படும் முறையில் அமைத்துக் கொள்பவர் இவ்வுலகத்து உள்ளவரே ஆவர். பொங்கிய நீரில் கடலொளி போன்ற நாதம் மேம்பட்டுப் பரவக் காமாக்கினியை மிகாதவாறு அச்சுயம்பு மூர்த்தி வைத்தான்.

366. பண்பழி செய்வழி பாடுசென்று அப்புறம்
கண்பழி யாத கமலத்து இருக்கின்ற
நண்பழி யாளனை நாடிச்சென்று அச்சிரம்
விண்பழி யாத விருத்திகொண் டானே.

பொருள் : பண்பினைக் கெடுக்கின்ற காமச் செயலாகிய வழிபாட்டினைச் செய்துகொண்டு, சுவாதிட்டானச் சக்கரத் தில்இருக்கின்ற நட்பைக் கொடுக்கின்ற பிரமனைத் தேடியடைந்து அவனது சிரமானது ஆகாயத்தை பழிக்காதவாறு பிரசா விருத்தியாகிய சேட்டையினை ஏற்றருளினான்.

6. சக்கரப் பேறு

(சக்கரப் பேறாவது ஆணையால் பெற்ற செல்வம் ஆகும். சிவபெருமானிடம் திருமால் சக்கரம் பெற்ற வரலாற்றின் தத்துவம் இங்குக் கூறப் பெறும்.)

367. மால்போ தகன்என்னும் வண்மைக்குஇங்கு ஆங்காரம்
கால்போதம் கையினோடு அந்தரச் சக்கரம்
மேல்போக வெள்ளி மலைஅம ராபதி
பார்போகம் ஏழும் படைத்துஉடை யானே.

பொருள் : மயக்கத்தைத் தருபவன் என்னும் உணர்வாகிய விஷ்ணு தத்துவத்துக்கு, இவ்விடத்து உலகானுபவம் அறுபட அழகிய சுழுமுனை வழியாக மணிபூரகத்திலுள்ள உணர்வு சகஸ்ர தளமாகிய வட்டத்தை அடைய வெள்ளொளியில் விளங்கும் தேவாதி தேவனாக பூமி முதலாக ஏழ்உலக இன்பங்களையும் படைத்து அவற்றை அளிப்பவனாக விளங்குகின்றான்.

368. சக்கரம் பெற்றுநல் தாமோதரன் தானும்
சக்கரம் தன்னைத் தரிக்கஒண் ணாமையால்
மிக்கரன் தன்னை விருப்புடன் அர்ச்சிக்கத்
தக்கநற் சத்தியைத் தான்கூறு செய்ததே.

பொருள் : முற்கூறிய சக்கரத்தைப் பெற்றுக் குடர் விளக்கம் செய்த திருமாலாகிய தாமோதரனும் பெற்று சக்கரத்தைத் தாங்க முடியாமல், மேலான சிவபெருமானை விருப்பத்துடன் வழிபாடும் செய்ய, தனது வியாபக சத்தியை ஒரு கூறு செய்தளித்துத் தாங்கும்படி செய்தான்.

369. கூறது வாகக் குறித்துநற் சக்கரம்
கூறது செய்து கொடுத்தனன் மாலுக்குக்
கூறது செய்து கொடுத்தனன் சக்திக்குக்
கூறது செய்து தரித்தனன் கோலமே.

பொருள் : பகிர்ந்து கொடுப்பதற்காக அமைத்து நல்ல சக்கரத்தைத் திருமாலுக்கு ஒரு பகுதியைக் கொடுத்தான். அவ்வாறே தனது சக்திக்கும் பகிர்ந்து கொடுத்தான். இவ்வாறு பகிர்ந்து திருமாலுக்கும் சக்திக்கும் தனது திருமேனியைத் தந்தருளினான்.

370. தக்கன்தன் வேள்வி தகர்த்தநல் வீரர்பால்
தக்கன்தன் வேள்வியில் தாமோதரன் தானும்
சக்கரம் தன்னைச் சசிமுடி மேல்விட
அக்கி உமிழ்ந்தது வாயுக் கரத்திலே

பொருள் : பிரசாவிருத்திக் கிரியையாகிய தக்கனது யாகத்தை அழித்தருளிய வீரப்பத்திரன் மேல் அவ்வேள்வியில் திருமாலும் ஆணையாகிய சக்கரத்தை அவ்வீரனது பிறைமுடியில் செலுத்த காம வாயுவின் வேகத்தால் அக்கினி சத்தியாகப் பயன் கிட்டாது போயிற்று (வீரபத்திரர் தக்கண் வேள்வியைத் தகர்த்தருளினார் என்பதன் தத்துவம் உணர்த்தியவாறு).

7. எலும்பும் கபாலமும்

(எலும்பும் கபாலமும் என்பன எலும்பும் மண்டை ஓடும் ஆம். ஆனால், அவை உருவத்தையும் அறிவையும் அறிப்பன. பிரம விஷ்ணுக்கள் எலும்புகளைச் சிவன் அணிந்துள்ளான் என்பதன் தத்துவம் உணர்த்தப் பெறுகிறது.)

371. எலும்பும் கபாலமும் ஏந்தி எழுந்த
வலம்பன் மணிமுடி வானவர் ஆதி
எலும்பும் கபாலமும் ஏந்திலன் ஆகில்
எலும்பும் கபாலமும் இற்றுமண் ஆமே.

பொருள் : பேரூழிக் காலத்தில் எலும்பையும் மண்டையோட்டையும் ஏந்திக் கொண்டு எழுந்த சிவன், மணிமுடி தரித்த திருமால் முதலிய தேவரது உருவமாகிய எலும்பையும் அறிவாகிய மண்டை யோட்டையும் சூக்குமத்தில் தாங்கவில்லை யெனில் பிறவிக்கு வரும்போது மக்களது பழைய உருவமும் அறிவும் தொடர்பின்றிப் போகும்.

8. அடிமுடி தேடல்

(அடிமுடி தேடலாவது சிவனது அடியையும் முடியையும் தேடல். சிவன் சோதிப் பிழம்பாதலின் அடியையும் முடியையும் ஆணவத்தோடும் ஆசையோடும் சென்று வழிபட்ட பிரம விஷ்ணுக்களால் காண முடியாதது என்பது இப்பகுதியில் விளக்கியவாறு)

372. பிரமனும் மாலும் பிரானேநான் என்னப்
பிரமன்மால் தங்கள்தம் பேதைமை யாலே
பரமன் அனலாய்ப் பரந்துமுன் நிற்க
அரனடி தேடி அரற்றுகின் றாரே.

பொருள் : பிரமனும் திருமாலும் சிவ வியாபகத் துட்பட்டிருந்தும் தங்களது அறியாமையால் அவ்விருவரும் தாங்களே தலைவர் என்று அகங்கரிக்க, மேலான சிவன் சோதிப் பிழம்பாய் முன்னே தோன்றவும் அப் பேரொளியாகிய சிவனது அடியையும் முடியையும் உணராது தேடுவராயினர்.

373 ஆமேழ் உலகுற நின்றஎம் அண்ணலும்
தாமேழ் உலகில் தழல்பிழம் பாய்நிற்கும்
வானேழ் உலகுறும் மாமணி கண்டனை
நானே அறிந்தேன் அவன்ஆண்மை யாலே.

பொருள் : ஆகின்ற ஏழ்உலகங்களும் பொருந்துமாறு விளங்கிய எம் தலைவனும், தாமே ஏழு உலகிலும் நிறைந்து அக்கினி வடிவில் வியாபித்துள்ளான். ஆகாய பூதத்தில் ஏழு உலகிலும் விளங்கும் நீலகண்டனை அவனது அருளால் ஒன்றுபட்டுப் பிரம விஷ்ணுக்களால் காணமாட்டாதவனை நான் அறிந்தேன்.

374. ஊனாய் உயிராய் உணர்வுஅங்கி யாய்முன்னம்
சேணாய்வா னோங்கித் திருவுருவாய் அண்டத்
தாணுவும் ஞாயிறும் தண்மதி யும்கடந்து
ஆள்முழுது அண்டமும் ஆகிநின் றானே.

பொருள் : சிவபெருமானாய் உடம்பாய் உயிராய் அதனுள் நின்ற உணர்வாய் அக்கினியாய், பிரம விஷ்ணுக்களாலும் அறியாத காலத்துத் தூரப் பொருளால் ஆகாய மளவும் ஓங்கி விளங்கும் சோதி உருவாய், அண்டங்களுக்கு ஆதாரமான ஸ்தம்பத்தையும் அவற்றைச் சுற்றி வரும் சூரிய சந்திரனையும் கடந்து ஆளுகின்ற அண்டங்கள் முழுமையுமாக விளங்கி நின்றான்.

375. நின்றான் நிலமுழுது அண்டத்துள் நீளியன்
அன்றே அவன்வடிவு அஞ்சினர் ஆய்ந்தது
சென்றார் இருவர் திருமுடி மேற்செல
நன்றாம் கழலடி நாடஒண் ணாதே.

பொருள் : நிறைந்து நின்ற சிவன் சர்வ அண்டங்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டு தான் உயர்ந்து நின்றனன். சிவன் பேரொளியாக நீண்டு நின்ற காலத்து அவனது திருமேனியைக் கண்டு அஞ்சினவராய், அச் சோதியை ஆராயச் சென்ற பிரம விஷ்ணுக்களாகிய இருவரும் சிவனது திருமுடியானது ஆராயுந்தோறும் வளர்ந்து கொண்டே மேற்செல்ல, நன்மை தருவதாகிய அச்சிவனது அருளைப் பெறாதவராயினர்.

376. சேவடி ஏத்தும் செறிவுடை வானவர்
மூவடி தாஎன் றானும் முனிவரும்
பாவடி யாலே பதஞ்செப் பிரமனும்
தாவடி யிட்டுத் தலைப்பெய்து மாறே.

பொருள் : செம்மையான திருவடியைப் புகழ்கின்ற கூட்டமான தேவரும் மூன்று அடி தா என்று மகாபலியிடம் கேட்ட திருமாலும் முனிவரும் கீத வடிவான மந்திரங்களைக் கொண்டு விரும்பியதைச் செய்யலாமென்ற பிரமனும் சுற்றி அலைந்து அவனைச் சேரமுடியுமா ? முடியாது.

377. தானக் கமலத் திருந்த சதுமுகன்
தானக் கருங்கடல் வாழித் தலைவனும்
ஊனத்தின் உள்ளே உயிர்போல் உணர்கின்ற
தானப் பெரும்பொருள் தன்மைய தாமே.

பொருள் : சுவாதிட்டானச் சக்கரத்திலுள்ள நான்முகனும், மணிபூரகத் தானமாகிய கருமையான கடலில் வாழ்கின்ற திருமாலும் ஊன் பொதிந்த உடம்பினுள்ளே உயிர்போல் உடனாய் உணர்கின்ற முன்மூளை பின் மூளையாகிய தானங்களில் அதிட்டித்துள்ள சதாசிவமூர்த்தியாகுமா ? ஆகாது.

378. ஆலிங் கனஞ்செய்து எழுந்த பழஞ்சுடர்
மேலிங்ஙன் வைத்ததோர் மெய்ந்நெறி முன்கண்டு
ஆலிங் கனஞ்செய்து உலகம் வலம்வரும்
கோலிங் கம்அஞ்சுஅருள் கூடலு மாமே.

பொருள் : எல்லாவற்றிலும் கலந்தெழுகின்ற மேலான சுடர்ப் பொருள் ஆன்மாக்களின் உய்திக்காக இங்கே அமைக்கப் பெற்ற உண்மை நெறியை அறிந்து, எல்லாத் தத்துவங்களிலும் கலந்தும் கடந்தும் நிற்கின்ற மேலான பஞ்ச சாதாக்கியத்தின் அருளைப் பெறலாம்.

379. வாள்கொடுத் தானை வழிபட்ட தேவர்கள்
ஆள்கொடுத்து எம்போல் அரனை அறிகிலர்
ஆள்கொடுத்து இன்பம் கொடுத்துக் கோளாகத்
தாள்கொடுத் தானடி சாரகி லாரே.

பொருள் : தமக்கு ஒளியைக் கொடுத்த சிவபெருமானை வணங்கிய தேவர்கள் அடிமையாகக் கொடுத்து எம்மைப் போல் இறைவனை அறியவில்லை. தன்னையே எமக்கு ஆளாகக் கொடுத்தும் சிவ போகத்தை அருளியும் நாங்கள் உய்தி பெறும் வண்ணம் வலிமையான திருவடியைத் தந்தருளிய இறைவனைப் பொருந்தாதவராயினர்.

380. ஊழி வலஞ்செய்துஅங்கு ஓரும் ஒருவற்கு
வாழி சதுமுகன் வந்து வெளிப்படும்
வீழித் தலைநீர் விதித்தது தாஎன
ஊழிக் கதிரோன் ஒளியைவெண் றானே.

பொருள் : ஊழியைச் செய்கின்ற உருத்திர மூர்த்தியை ஆராய்ந்து அறிகின்ற சிவனுக்கு, பிரம பட்டத்தோடு வாழ்கின்ற இப்பிரமன் வெளிப்பட்டு நின்று, விரும்பப்படுகின்ற என்னுடைய சிரசில் தாங்கள் விதிக்கும் கட்டளையைத் தாரும் என்று பிரமன் வேண்ட, ஊழியைச் செய்கின்ற சிவன் பேரொளிப் பிழம்பாய் விளங்கி நின்று சிருட்டித் தொழிலை அருளினான்.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Mon Mar 26, 2012 2:26 pm

9. சர்வ சிருஷ்டி

(சர்வ சிருஷ்டி என்பது, எல்லாவற்றையும் படைத்தல் என்றபடி. சர்வ சங்கார காலத்தில் எல்லாவற்றையும் ஒடுக்கிய சிவனே மீண்டும் அம்முறையே படைப்பான் என்பது இங்குக் கூறப் பெறும்.)

381. ஆதியோடு அந்தம் இலாத பராபரம்
போதம தாகப் புணரும் பராபரை
சோதி யதனிற் பரந்தொன்றத் தோன்றுமாம்
தீதில் பரையதன் பால்திகழ் நாதமே.

பொருள் : முதலும் முடிவும் இல்லாத மேலான பரம்பொருள், அறிவு மயமாகப் பிரிப்பின்றியுள்ள பராபரையான சோதியினிடம் பரன் தோன்றத் தீமையில்லாத பரை தோன்றும், அப் பரையினிடமாக விளங்குகின்ற நாதம் தோன்றும்.

382. நாதத்தில் விந்துவும் நாதவித் துக்களில்
தீதற் றகம்வந்த சிவன்சத்தி என்னவே
பேதித்து ஞானம் கிரியை பிறத்தலால்
வாதித்த இச்சையில் வந்தெழும் விந்துவே.

பொருள் : முற்கூறிய நாதத்திலிருந்து விந்துவும் சுத்த மாயையில் தோன்றிய நாத விந்துக்களில் சிவன் என்றும் சத்தி என்று பிரிந்து ஞானம் என்றும் செயல் என்றும் பிரிந்து முறையே உண்டாதலால் உலகைத் தோற்றுவிக்க வேண்டும் என்ற சங்கற்பமாகிய இச்சை காரணமாக அனைத்தும் சுத்த மாயையினின்றும் தோன்றுவனவாம்.

383. இல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக்
கல்லொளி போலக் கலந்துள இருந்திடும்
வல்லது ஆக வழிசெய்த அப்பொருள்
சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே.

பொருள் : தத்துவங்கள் தோன்றுவதற்கு இடமாகிய சத்தி பராசத்தியினிடமாகத் தோன்றி, நவரத்தினம் போன்ற பிரகாசத்துடன் ஆன்மாவில் கலந்து வியாபகமாய் இருக்கும். ஆற்றலோடு தொழில் செய்கின்ற அச்சத்தியில் பெருமையைக் கூறப் புகில் அளவிடற் பாலதாகும்.

384. தூரத்திற் சோதி தொடர்ந்தொரு சத்தியாய்
ஆர்வத்து நாதம் அணைந்தொரு விந்துவாய்ப்
பாரச் சதாசிவம் பார்முதல் ஐந்துக்கும்
சார்வத்து சத்திஓர் சாத்து மானாமே.

பொருள் : எண்ணத்துக்கு அப்பாற்பட்ட சிவசோதி எண்ணத்துக்கு உட்பட்டு வரும் சத்தியாய் இச்சை காரணமாக உண்டாகிய நாதத்தைப் பொருந்திய விந்துவாய், ஐந்தொழில் பாரத்தினை ஏற்று நடத்தும் சதாசிவ மூர்த்தி நிலம் நீர் தீ காற்று ஆகாயம் ஆகிய ஐந்துக்கும் சார்வாகிய சத்தியாகவும் ஒப்பற்ற சத்தியை உடையவனாகவும் உள்ளான்.

385. மானின்கண் வானாகி வாயு வளர்ந்திடும்
கானின்கண் நீரும் கலந்து கடினமாய்த்
தேனின்கண் ஐந்தும் செறிந்து ஐந்து பூதமாய்ப்
பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே.

பொருள் : அசுத்த மாயையினின்றும் ஆகாயமாகிக் காற்றுத் தோன்றி வளர்ந்திடும் நெருப்பினின்றும் நீரும் பொருந்திக் கடினத் தன்மையுடைய நிலமாய் பஞ்சீகரண நியாயத்தில் ஒன்றில் ஐந்து தன்மைகளுக்கும் கலந்து ஐம்பெரும் பூதங்களாய் பூ என்று வியாகிருதியில் பிரபஞ்சம் உண்டாகும். (கான் நெருப்பு.)

386. புவனம் படைப்பான் ஒருவன் ஒருத்தி
புவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர்
புவனம் படைப்பானும் பூமிசை யானாய்
புவனம் படைப்பான்அப் புண்ணியன் தானே.

பொருள் : பிரபஞ்சத்தைப் படைத்தருளுவது சிவசத்தியாகும். அவர்கட்குப் பிரமன் விஷ்ணு உருத்திரன் மகேசுவரன் சதாசிவன் ஆகிய ஐவர்கள் புத்திரர்கள் ஆவார்கள். அவ்வாறு படைக்கும் சிவசத்தி சொரூபமான பொருளே நான்முகனாய் பிரபஞ்சத்தைப் படைத்து இதம் செய்யும் புண்ணிய மூர்த்தியாகும்.

387. புண்ணியன் நந்தி பொருந்தி உலகெங்கும்
தண்ணிய மானை வளர்ந்திடும் சத்தியும்
கண்ணியல் பாகக் கலவி முழுதுமாய்
மண்ணியல் பாக மலர்ந்தெழு பூவிலே

பொருள் : சிவன் அறிவு மயமாய் எல்லாப் புவனங்களிலும் பொருந்தி குளிர்ச்சி பொருந்திய மாயா காரியப் பொருளைக் காத்தருளுவர். சத்தியும் கண்ணோட்டமுடன் (இரக்கம்) எல்லாவற்றும் கலந்து, தாங்கும் தன்மையதாய் வியாகிருதியில் விரிந்து எழுவான்.

388. நீரகத்து இன்பம் பிறக்கும் நெருப்பிடை
காயத்திற் சோதி பிறக்கும்அக் காற்றிடை
ஓர்வுடை நல்லுயிர்ப் பாதம் ஒலிசத்தி
நீரிடை மண்ணின் நிலைப்பிறப் பாமே.

பொருள் : நீர்ப் பிரதேசமான மணிபூரகத்தில் புருஷனுக்கு இன்பம் உண்டாகும். அக்கினி விளங்கும் அநாகதமாகிய நெஞ்சினுள் ஒளிவீசும் கிரணங்கள் உண்டாகும். அவ்வாயு விளங்கும் விசுத்தியில் ஆராய்த்தக்க உயிர்ப்புநிலை பெற்றிருக்கும் ஆகாய பூதகுணமாகிய நாதம் சத்தியைத் தந்து கொண்டிருக்கும். நீர் மண் இடையேயுள்ள சுவாதிட்டானமே உற்பத்திக் குரிய இடமாகும்.

389. உண்டுஉல கேழும் உமிழ்ந்தான் உடனாகி
அண்டத்து அமரர் தலைவனும் ஆதியும்
கண்டச் சதுமுகக் காரணன் தன்னொடும்
பண்டுஇவ் வுலகம் படைக்கும் பொருளே.

பொருள் : உலகம் ஏழினையும் உண்டு உமிழ்ந்த திருமால் உடனாய், எல்லா அண்டங்களில் வாழும் தேவர்களுக்குத் தலைவனும் முன்னோனுமாகிய சிவபெருமான் உலகினைப் படைக்கும் நான்முகனோடும், பழமையாகவே இவ்வுலகம் படைக்கின்ற மெய்ப் பொருளாகும்.

390. ஓங்கு பெருங்கடல் உள்ளறு வானொடும்
பாங்கார் கயிலைப் பராபரன் தானும்
வீங்கும் கமல மலர்மிசை மேலயன்
ஆங்குயிர் வைக்கும் அதவுணர்ந் தானே.

பொருள் : பெருகுகின்ற கடற்பிரதேசமாகிய மணிபூரகத்திலுள்ள திருமாலுடன் சிரசின்மேல் அழகான வெள்ளொளியில் விளங்கும் பராபரனாகிய சிவபெருமானும் பூரிக்கின்ற சுவாதிட்டானச் சக்கரத்திலிருக்கின்ற பிரமன் அவ்விடத்து உடம்போடு உயிரைப் புணர்த்துகின்ற தன்மையை உணர்ந்திருந்தான்.

391. காரணன் அன்பிற் கலந்தெங்கும் நின்றவன்
நாரணன் நின்ற நடுவுட லாய்நிற்கும்
பாரணன் அன்பிற் பதஞ்செய்யும் நான்முகன்
ஆரண மாய்உல காய்அமர்ந் தானே.

பொருள் : சிருஷ்டி காரணமாகிய சிவபெருமான் அன்பினால் எல்லாப் பொருளோடும் கலந்திருப்பவன். திருமாலாய் உடம்பின் நடுப்பாகமாகிய உந்திக் கமலத்தில் இருப்பான். அவனே புவனங்களை அன்பில் சிருஷ்டி செய்யும் நான்முகனாய் உள்ளான் அப்பெருமானே சொற்பிரபஞ்சமாயும் பொருட் பிரபஞ்சமாயும் உள்ளான்.

392. பயன்எளி தாம்பரு மாமணி செய்ய
நயன்எளி தாகிய நம்பன்ஒன் றுண்டு
அயன்ஒளி யாயிருந்து அங்கே படைக்கும்
பயன்எளி தாம்வய ணந்தெளிந் தேனே.

பொருள் : எல்லாப் பயன்களையும் எளிமையாக நல்கும் பெரிய மாணிக்கத்தை விளங்கச் செய்ய நன்மை தரும் சிவன் ஒருவன் உளன். அப்பெருமான் பிரமனுக்கும் ஒளியை நல்கிப் படைத்தல் தொழிலை மூலாதாரத்திலிருந்து செய்கிறான். அவன் துணை கொண்டு பயனை எளிமையாக அடையும் காரணத்தை அறிந்தேன். (வயணம் - காரணம்)

393. போக்கும் வரவும் புனிதன் அருள்புரிந்து
ஆக்கமும் சிந்தையது ஆகின்ற காலத்து
மேக்கு மிகநின்ற எட்டுத் திமையொடும்
தாக்கும் கலக்கும் தயாபரன் தானே.

பொருள் : அழிப்பும் படைப்பும் சிவனருளால் நிகழும் காப்பும் ஆகிய முச்செயல்களையும் நினைக்கின்ற காலத்தில், சிரசைச் சூழவுள்ள எட்டுத் திசைகளிலும் மூலாதாரத்தினின்று மேலே வந்த செவ்வொளி மோதிப் பரவும்.

394. நின்றுயி ராக்கும் நிமிலன்என் ஆருயிர்
ஒன்றுயி ராக்கும் அளவை உடலுற
முன்துய ராக்கும் உடற்குத் துணையதா
நன்றுயிர்ப் பானே நடுவுநின் றானே.

பொருள் : உலகுயிர்களோடு பொருந்தி நின்று பக்குவம் செய்யும் மலமில்லாத சிவன், என்னுடைய அருமையான உயிருக்கு வளமாம் தன்மையைச் செய்து என் உடம்பில் பொருந்தி முன்னே துன்பத்தைக் கொடுத்த உடம்புக்குத் துணையாய் நடு நாடியின் உச்சியில் உயிர்ப்பாய் நன்மை செய்து கொண்டு இருக்கின்றான்.

395. ஆகின்ற தன்மையின் அக்கணி கொன்றையன்
வேகின்ற செம்பொனின் மேலணி மேனியன்
போகின்ற சீவன் புகுந்துஉட லாய்உளன்
ஆகின்ற தன்மைசெய் ஆண்டகை யானே.

பொருள் : பிரபஞ்சம் உண்டாதற் பொருட்டுப் பாம்பை அணிந்த கொன்றை வேந்தனும் உருகுகின்ற சிவந்த பொன்போன்ற மேலான அழகிய திருமேனியை யுடையவனும் ஆகிய சிவன், பிறவிக்குச் செல்கின்ற சீவன் வாழும் உடலாயும் உள்ளான். அவன் சீவனைச் சிவமாக்கி ஆளுகின்றவன் ஆவான். (அக்கு - உருத்திராட்சமுமாம்)

396. ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார்
இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும்
பருவங்கள் தோறும் பயன்பல வான
திருவொன்றிற் செய்கை செகமுற்றும் ஆமே.

பொருள் : ஒருவனாகிய சிவனும் ஒருத்தியாகிய சத்தியும் விளையாடல் செய்தார்கள். அவ் இருவரது விளையாட்டு எல்லாம் செய்ய வல்லது சூரிய கதி மாறுபட்டால் உண்டாகும் பருவ காலங்களுக்கு ஏற்ப விளையும் பயன்களும் உலகில் வேறாக இருக்கும். அதே போன்று அருள் பதிவின் மாறு பாட்டால் உண்டாகும். பக்குவத்துக்கு ஏற்ப விளையும் பயன்களும் உலகில் வேறுபடும்.

397. புகுந்தறி வான்புவ னாபதி அண்ணல்
புகுந்தறி வான்புரி சக்கரத்து அண்ணல்
புகுந்தறி வான்மலர் மேலுறை புத்தேன்
புகுந்தறி யும்முடிக் காகிநின் றாரே.

பொருள் : புவனங்களுக்கு அதிபதியான உருத்திரனிடம் புகுந்து உலகை அழிக்கின்ற செயலைச் சிவன் அறிவான். அவன் பந்தங்களால் சுற்றப்பட்ட உலகினைத் திருமாலிடம் பொருந்திக் காக்கின்ற செயலை அறிவான். சுவாதிட்டான மலர்மேல் உறைகின்ற செயலை அறிவான். சுவாதிட்டான மலர்மேல் உறைகின்ற பிரமனிடம் பொருந்திச் சிருஷ்டித் தொழிலையும் அவன் அறிவான். அவ்வாறு அறிகின்ற சிவனது ஆட்சிக்கு அடங்கியே அவரவர் தொழில்களைச் செய்கின்றனர்.

398. ஆணவச் சத்தியும் ஆம்அதில் ஐவரும்
காரிய காரண ஈசர் கடைமுறை
பேணிய ஐந்தொழி லார்விந்து விற்பிறந்து
ஆணவம் நீங்காது அவரெனல் ஆகுமே.

பொருள் : ஆணவ மலத்தை உடையவராகிய பிரமனாதி ஐவரும் தகுதிபற்றி மேலுள்ளவர் காரண ஈசர் என்றும் கீழ் உள்ளவர் காரிய ஈசர் என்றும் சொல்லப் பெறுவர். இறைவன் விரும்பிய வண்ணம் நடைபெறும் ஐந்தொழிலால் சுத்த மாயையில் தோன்றி, ஆணவ மலர் முற்றிலும் நீங்காதவர்கள் என்றே சொல்லப் பெறுவர்.

399. உற்றமுப் பாலொன்று மாயாள் உதயமாம்
மற்றைய மூன்று மாயோ தயம்விந்து
பெற்றவன் நாதம் பரையிற் பிறத்தலால்
துற்ற பரசிவன் தொல்வினை யாட்டிதே.

பொருள் : மாயையாகிய சத்தி ஒன்றாயிலும் அது சுத்த மாயை, அசுத்த மாயை, பரகிருதி மாயை என்று மூன்றாக உள்ளது. ஏனைய சாதாக்கியம், மகேசுவரம், சுத்தவித்தை ஆகிய மூன்றும் சுத்த மாயையின் காரியமாகும். விந்துவைப் பெற்ற நாதமானது பரையினின்றும் தோன்றுவதால், பரையோடு சிவனது பழமையான விளையாட்டே இச்சிருஷ்டி முதலியனவாகும்.

400. ஆகாயம் ஆதி சதாசிவ ராதிஎன்
போகாத சத்தியுள் போந்துடன் போந்தனர்
மாகாய ஈசன் அரன்மால் பிரமனாம்
ஆகாயம் பூமி காண அளித்தலே.

பொருள் : ஆகாயம் முதலிய ஐம்பூதங்களை இயக்கும் சதாசிவர் முதலிய ஐவரும் என்றும் உள்பொருளாகிய மாயா சத்தியுள் பொருந்தி என் உடம்பிலும் உயிரிலும் தொழில் புரிகின்றனர். பெருமை பொருந்திய சதாசிவ மூர்த்தி யானவர் ருத்திரன் விஷ்ணு பிரமன் ஆகியோராய் விண்ணும் மண்ணும் ஆகிய உலகங்களை தோன்றும்படி செய்வார்.

401. அளியார் முக்கோணம் வயிந்தவந் தன்னில்
அளியார் திரிபுரை யாம்அவள் தானே
அளியார் சதாசிவம் ஆகி அமைவாள்
அளியார் கருமங்கள் ஐந்துசெய் வாளே.

பொருள் : கருணை நிரம்பிய முக்கோணப் பீடத்தில் விந்துவினில் மையப் புள்ளியில் விளங்கும், கருணையுள்ளமும் மண்டல நாயகியுமான அவளே, அனுக்கிரகம் புரியும் சதாசிவ மூர்த்தியாகிப் பொருந்தியிருப்பாள். அவளே அருளோடு கூட ஐந்தொழில்களையும் சீவகர்கள் மாட்டுச் செய்பவள் ஆவாள். திரிபுரை - அக்கினி, சூரியன், சந்திரன் ஆகிய மும்மண்டல நாயகி.

402. வாரணி கொங்கை மனோன்மணி மங்கலி
காரணி காரிய மாகக் கலந்தவள்
வாரணி ஆரணி வானவர் மோகினி
பூரணி போதாதி போதமும் ஆமே.

பொருள் : கச்சணிந்த தனங்களை யுடைய சதாசிவ நாயகி மங்கலப் பொருளாயும் எல்லாவற்றுக்கும் காரணமாயும் படைத்தலாதி செயலில் கலந்தவளாயும் உள்ளாள். அவளே பிரணவ சொரூபியாயும் வேதப் பொருளாயும் தேவரை மயக்கும் திரோதான சத்தியாயும் பூரணமாய் சந்திர ஞானமும் அனுபவ ஞானமும் உடையவளாயும் உள்ளாள்.

403. நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்றங்கு இயங்கும் அரன்திரு மாலவன்
மன்றது செய்யும் மலர்மிசை மேலயன்
என்றிவ ராக இசைந்திருந் தானே.

பொருள் : சதாசிவரோடு பிரிப்புற்று நின்ற மகேசுரன் கீழே சென்று அங்குத் தொழில் செய்யும் உருத்திரனாகவும் திருமாலாகவும் ஆண் பெண் சேர்க்கையைச் செய்கின்ற சுவாதிட்டானச் சக்கரத்திலுள்ள பிரமன முதலியோராகவும் ஒன்றுபட்டிருந்தான்.

404. ஒருவனு மேஉலகு ஏழும் படைத்தான்
ஒருவனு மேஉலகு ஏழும் அளித்தான்
ஒருவனு மேஉலகு ஏழும் துடைத்தான்
ஒருவனு மேஉலகு ஓடுஉயிர் தானே.

பொருள் : சிவனாகிய ஒருவனே (சதாசிவன் என்ற பதியாகிக்) காரியக் கடவுளரோடு பொருந்தி ஏழ் உலகங்களையும் படைக்கிறான். அவ்வாறே அவன் ஏழ் உலகங்களையும் காக்கிறான். அப் பெருமானே ஏழ் உலகங்களையும் ஒடுக்குகிறான். அவனே உலகமாகவும் உயிராகவும் உள்ளான்.

405. செந்தா மரைவண்ணன் தீவண்ணன் எம்இறை
மஞ்சார் முகில்வண்ணன் மாயஞ்செய் பாசத்தும்
கொந்தார் குழலியார் கூடி ய கூட்டத்தும்
மைந்தர் பிறவி அமைத்துநின் றானே.

பொருள் : செந்தாமரை நிறம் போன்ற தழல் நிறத்தையுடைய எமது தலைவனாகிய உருத்திரன் மேகம் போன்ற நிறமுடைய திருமால் மயக்கம் செய்கின்ற உலக பந்தத்தும், பூங்கொத்துகளை அணிந்த மாதரது கூட்டத்தும் பொருந்தி, வலிய உலக உற்பத்தியை அமைத்தருளுகின்றான்.

406. தேடும் திசைஎட்டும் சீவன் உடல்உயிர்
கூடும் பிறவிக் குணம்செய்த மாநந்தி
ஊடும் அவர்தம் உள்ளத்து ளேநின்று
நாடும் வழக்கமும் நான் அறிந் தேனே.

பொருள் : எட்டுத் திசையிலும் தேடி அலைகின்ற சீவனுக்கு உடம்போடு உயிர் கூடிப் பிறக்கும்படி அமைந்த சிவபெருமான் கன்னியரும் காளையருமாக இருந்து ஊடு கின்றவரது உள்ளத்தில் எழுந்தருளி நின்று, விருப்பம் செய்கின்ற வழக்கத்தையும் நான் அறிந்தேன்.

407. ஓர்ஆய மேஉலகு ஏழும் படைப்பதும்
ஓர்ஆய மேஉலகு ஏழும் அளிப்பதும்
ஓர்ஆய உலகு ஏழும் துடைப்பதும்
ஓர்ஆய மேஉலக கோடுஉயிர் தானே.

பொருள் : சிவசத்திக் கூட்டமே ஏழ் உலகங்களைப் படைப்பதும், அக் கூட்டமே ஏழ் உலகங்களையும் காத்து நிற்பதும், அதுவே ஏழ் உலகங்களையும் காத்து நிற்பதும், அதுவே ஏழ் உலகங்களை அழிப்பதும், அக்கூட்டமே உலகோடு உயிரை இணைத்து நிற்பதுமாகும்.

408. நாதன் ஒருவனும் நல்ல இருவரும்
கோது குலத்தொடும் கூட்டிக் குழைத்தனர்
ஏது பணியென்று இசையும் இருவருக்கு
ஆதி இவனே அருளுகின் றானே.

பொருள் : நாதனாகிய சிவபெருமான் ஒருவனும் சீவர்களுக்கு நன்மையைச் செய்கின்ற மகேசுவர சதாசிவரும் சுத்தமாயை அசுத்தமாயை ஆகிய இரண்டிலும் ஒளி மண்டலத்திலிருந்து காரண நிலையை அமைக்கின்றனர். அவ் ஆணைவழி என்ன தொழில் செய்ய வேண்டும் என்று விரும்பி நிற்கும் பிரம்ம விஷ்ணுக்களுக்கு ஆதியான சிவனே ஆற்றலை அளிக்கின்றான்.

409. அப்பரிசு எண்பத்த நான்குநூறு ஆயிரம்
மெய்ப்பரிசு எய்தி விரிந்துயி ராய்நிற்கும்
பொய்ப்பரிசு எய்திப் புகலும் மனிதர்கட்கு
இப்பரி சேஇருள் மூடிநின் றானே.

பொருள் : மேலே காட்டிய முறையில் எண்பத்து நான்கு லட்சம் யோனி பேதங்களிலும் உண்மையாகப் பொருந்தி உயிர்க்குயிராய் விளங்குவான். இதனைப் பொய்யானது என்று கூறும் மக்களை இத்தன்மையிலேயே ஆணவவல்லிருளில் ஆழ்த்துகின்றான்.

410. ஆதித்தன் சந்திரன் அங்கிஎண் பாலர்கள்
போதித்த வானொலி பொங்கிய நீர்புவி
வாதித்த சத்தாதி வாக்கு மனாதிகள்
ஓதுற்ற மாயையின் விந்துவின் உற்றாதே.

பொருள் : சூரியன், சந்திரன்அங்கி முதலிய அட்டதிக்குப் பாலர்கள் போதனை செய்யும் நாதர் நிரம்பிய ஆகாயம் பெருகுதலையுடைய நீர், நிலம், வாதனை செய்யும் சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தமாகிய தன் மாத்திரைகள், வாக்கு, பாதம், பாணி, பாயுரு உபத்தியமாகிய கன்மேந்திரியங்கள், மனம், புத்தி, சித்தம் அகங்காரமாகிய அந்தக் கரணங்கள் எல்லாம் சொல்லப் பெற்ற மகேசுரர் விளங்கும் விந்து மண்டலத்தில் சூட்சுமமாய் அமைக்கப்பட்டுள்ளன.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Mon Mar 26, 2012 2:26 pm

10. திதி (ஸ்திதி - திதி - காத்தல்)

(சிவனது நிலை சிறப்பு நிலை. அவனே உலகுக்கு அருள் புரியும் நிலையில் சதாசிவனாக உள்ளான். சதாசிவ மூர்த்தியே பிரமனாய்ப் படைக்கிறான் என்று முன்னர்க் கூறப்பட்டது. இப்பகுதியில் சதாசிவ மூர்த்தியே திருமாலாய் உலகைக் காக்கிறான் என்பது கூறப் பெறுகிறது.)

411. புகுந்துநின் றான்வெளி யாய்இரு ளாகிப்
புகுந்துநின் றான்புகழ் வாய்இகழ் வாகிப்
புகுந்துநின் றான்உட லாய்உயி ராகிப்
புகுந்துநின் றான்புந்தி மன்னிநின் றானே.

பொருள் : அனுக்கிரகத்தைச் செய்யும் சதாசிவ மூர்த்தியே வெளியாகவும் இருளாகவும் எல்லாவற்றிலும் கலந்துள்ளான். அவனே ஞானியர்க்குப் புகழத்தக்க பொருளாகவும், அஞ்ஞானியர்க்கு இகழத்தக்க பொருளாகவும் உள்ளான். அவன் உடலாகவும் உயிராகவும் உள்ளான். அவ்வாறு கலந்து நின்ற அவனே மகத் என்ற புத்தி தத்துவத்தில் பொருந்தியிருக்கிறான்.

412. தானே திரையொடு தேவரு மாய்நிற்கும்
தானே உடலுயிர் தத்துவ மாய்நிற்கும்
தானே கடல்மலை ஆதியு மாய்நிற்கும்
தானே உலகில் தலைவனும் ஆமே.

பொருள் : சதாசிவ மூர்த்தியேஎல்லாத் திசைகளிலும் வியாபித்துத் தேவர்களாக நிற்பான். அவனே ஆகாயக் கூற்றில் பொருந்தியவனாகையால் உடலாகவும் உயிராகவும் பொருந்தி உடலின் தத்துவத்திலும் உயிரின் தத்துவத்திலும் விளங்குகின்றான். அவனே கடலாகவும் மலையாகவும் இவை போன்ற பிற அசையாதனவற்றிலும் உள்ளான். அதனால் சதாசிவ மூர்த்தியே தலைவனுமாவான்.

413. உடலாய் உயிராய் உலகம தாகிக்
கடலாய்க் கார்முகில் நீர்பொழி வானாய்
இடையாய் உலப்பிலி எங்குந்தா னாகி
அடையார் பெருவழி அண்ணல்நின் றானே.

பொருள் : சிரசின்மேல் பொருந்திய ஒளிமயமான ஆகாயத்தில் விளங்கும் அனுக்கிரக மூர்த்தி, உடலாயும் உயிராயும் உலகமதாகியும், அவனே கடலாயும் இருண்ட மேகமாய் மழைநீர் பொழிபவனாயும், இவற்றிற்கு மத்தியில் உள்ளவனாய் அழியாதவனாய் எங்கும் நிறைந்திருப்பவனாய் விளங்கி நின்றானே.

414. தேடும் திசைஎட்டும் சீவன் உடலுயிர்
கூடு மரபிற் குணஞ்செய்த மாநந்தி
ஊடும் அவர்தமது உள்ளத்து ளேநின்று
நாடும் வழக்கமும் நான்அறிந் தேனே.

பொருள் : எட்டுத் திசையிலும் தேடி அலைகின்ற சீவனுக்கு உடம்போடு உயிர் கூடிப் பிறக்கும்படி அமைத்த சிவபெருமான் கன்னியரும் காளையருமாக இருந்து ஊடுகின்றவரது உள்ளத்தில் எழுந்தருளிய நின்று விருப்பம் செய்கின்ற வழக்கத்தையும் நான் அறிந்தேன்.

415. தானொரு காலம் தனிச்சுட ராய்நிற்கும்
தானொரு கால்சண்ட மாருத மாய்நிற்கும்
தானொரு காலம் தண்மழை யாய்நிற்கும்
தானொரு காலம்தண் மாயனும் ஆமே.

பொருள் : சதாசிவ மூர்த்தியே உலகை அழிக்க வேண்டும் போது ஒப்பற்ற சூரியனாகி, மழை இல்லாமையைச் செய்து அழிப்பான். அவனே சூறாவளிக் காற்றாய் அழிவினைச் செய்வான். அவனே ஒரு சமயம் பெருமழையைப் பெய்வித்துப் பிரளயத்தை உண்டாக்குவான். அவனே ஒரு சமயம் திருமாலாய் இருந்து உலகினைக் காப்பவனாகவும் உள்ளான்.

416. அன்பும் அறிவும் அடக்கமு மாய்நிற்கும்
இன்பமும் இன்பக் கலவியு மாய்நிற்கும்
முன்புறு காலமும் ஊழியு மாய்நிற்கும்
அன்புறு ஐந்தில் அமர்ந்துநின் றானே.

பொருள் : முன்னே கூறிய மூர்த்தியே உயிராற்றலில் விளங்கும் அன்பு அறிவு அடக்கம் ஆகிய பண்புகளாய் உள்ளான். இன்பத்துக்கும் இன்பக் கூட்டுறவுக்கும் காரணமாக உள்ளான். அவன் கால எல்லை வகுத்தவனாகவும் அதனை முடிப்பவனாகவும் உள்ளான். அவனே நன்மையைச் செய்ய சுத்த மாயா தத்துவ மாகிய நாதம், விந்து, சாதாக்கியம், மகேசுரம், சுத்தவித்தை ஆகிய ஐந்தில் பொருந்தி ஐம்பூத காரியங்களைச் செய்கிறான்.

417. உற்று வனைவான் அவனே உலகினைப்
பெற்று வனைவான் அவனே பிறவியைச்
சுற்றிய சாலும் குடமும் சிறுதூதை
மற்றும் அவனே வனையவல் லானே.

பொருள் : அப்பெருமானே உலகினை மாயை யினின்றும் தோன்றச் செய்பவன் ஆவான் அவனே உயிர்களுக்குப் பிறவியைக் கொடுத்தருள்பவன் ஆவான். பேரண்டமாகிய பெரியமிடாவும் சிற்றண்டமாகிய குடமும் உடம்பாகிய கலயமும் ஏனையவற்றை அவன் குயவனைப் போன்று மண்ணாகிய மாயை யினின்றும் படைத்தருளுவான்.

418. உள்ளுயிர்ப் பாய்உட லாகிநின் றான்நந்தி
வெள்ளுயி ராகும் வெளியான் இலங்கொளி
உள்ளுயிர்க் கும்உணர் வேஉட லுள்பரந்து
தள்ளுயி ராவண்ணம் தாங்கிந்ன் றானே.

பொருள் : நந்தி எம் பெருமான் உள்ளே மூச்சுக் காற்றாய் அது நடைபெறுவதற்குத் துணைபுரிய உடலாயும் உள்ளான். அவன் தத்துவங்களோடு கூடாத உயிர்கள் ஆகாயத்தை இடமாகக் கொண்டு ஒளி மயமாய் விளங்குபவன். எனினும் அவனே உள்ளே அசைவினை உண்டாக்குகிற உணர்வாய் உடலினுள் பரவி உயிரை வெளியேற்றி விடாமல் கால எல்லைவரை தொழிற்படுத்திக் கொண்டு உள்ளான்.

419. தாங்கருந் தன்மையும் தானவை பல்லுயிர்
வாங்கிய காலத்தும் மற்றோர் பிறிதில்லை
ஓங்கி எழுமைக்கும் யோகாந்தம் அவ்வழி
தாங்கிநின் றானும்அத் தாரணி தானே.

பொருள் : அவ்வாறு உயிர்களை உடலைவிட்டு நீங்காது தாங்கிய நிலையிலும், தான் பல் உயிர்களாகிய அவற்றைக் கால எல்லையில் உடம்பினின்றும் பிரிந்த நிலையிலும், அவற்றைக் காப்பதற்கு அவனைத் தவிரவேறு எவரும் இல்லை. மேல் வருகின்ற ஏழ் பிறப்புக்கும் துரியாதீதமாகிய அந்நிலையில் ஆகாய பூத நாயகனான அச் சதாசிவனே தாங்கிக் கொண்டுள்ளான்.

420. அணுகினும் சேயவன் அங்கியிற் கூடி
நணுகினும் ஞானக் கொழுந்தொன்று நல்கும்
பணிகினும் பார்மிசைப் பல்லுயி ராகித்
தணிகினும் மண்ணுடல் அண்ணல்செய் வானே.

பொருள் : எல்லா உயிரிடத்தும் பொருந்தி யிருக்கும் இறைவனைப் புறத்தே சென்று தேடினாலும் அவர்க்குத் தூரமாயிருப்பவன். அவரவர் இடமுள்ள அக்கினி கலையைத் தூண்டி அத்துடன் பிரமரந்திரம் சென்று அணுகினாலும் அவன் அருளை வழங்குவான். உலகின்மீது பலபிறவி எடுத்து இறைவனை வணங்கினாலும் அப்பிறவி தோறும் உயிர்களுக்குச் சேவை செய்தாலும் எம்பெருமான் மேன்மையான உடம்பினைக் கொடுத்தருளுவான்.

11. சங்காரம்

(சங்காரம் - அழித்தல்) ஐந்தொழில் அருட் செயல்களில் சங்காரமும் ஒன்றாகும். இளைப்பாற்றல் பொருட்டாதலின் என்க. சிவனே உருத்திரனாய் சங்காரம் செய்கிறான் என்பது அறிக.)

421. அங்கிசெய்து ஈசன் அகலிடம் சுட்டது
அங்கிசெய்து ஈசன் அலைகடற் சுட்டது
அங்கிசெய்து ஈசன் அசுரரைச் சுட்டது
அங்கிஅவ் ஈசற்குக் கைஅம்பு தானே.

பொருள் : அக்கினியைப் பெருகச் செய்து இறைவன் பரந்த உலகத்தை அழித்தருளினான். அதே போன்று அக்கினியால் அவன் அலைகடலை வற்றச் செய்தான். அக்கினியால் இறைவன் அசுரரை அழித்தருளினான். அவ் அக்கினியே இறைவனுக்கும் கையிலே விளங்கும் அம்பாகும்.

422. இலயங்கள் மூன்றினும் ஒன்றுகற் பாந்தம்
நிலையன்று அழித்தமை நின்றுணர்ந் தேனால்
உலைதந்த மெல்லரி போலும் உலகம்
மலைதந்த மானிலம் தான்வெந் ததுவே.

பொருள் : தினப்பிரளயம், மத்தியப் பிரளயம், மகாப் பிரளயம் ஆகிய மூன்றனுள் கற்பத்தின் முடிவில் வரும் பிரளயம் ஒன்றாகும். இவ்வுலகங்களின் நிலை அன்று அழிந்தவற்றை நான் ஞானக் கண்ணால் கண்டேன். கற்பமுடிவில் உலையிலிட்ட அரிசி கீழும் மேலுமாகச் சுழலுவது போல இவ்வுலகம் சுழலும், அப்போது குறிஞ்சி முதலிய பெரிய நிலம் வெந்து ஒழியும் (தினப் பிரளயம் - உறக்கம். நடுப்பிரளயம் - இறப்பு. மகாப் பிரளயம் சீவ வர்க்கம் ஒரு சேர அழிதல் (கற்பமுடிவு).

423. பதஞ்செய்யும் பாரும் பனிவரை எட்டும்
உதஞ்செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாம்
குதஞ்செய்யும் அங்கி கெளுவிஆ காசம்
விதம்செய்யும் நெஞ்சில் வியப்பு இல்லைதானே.

பொருள் : சீவர்களுக்குப் பக்குவத்தைச் செய்கின்ற பூமியும் பனிநிறைந்த மலை எட்டும் மகிழ்ச்சியை உண்டாக்குகின்ற ஏழு கடல்களின் பெருக்கம் முதலிய எல்லாம் கொதிக்கும் படி செய்கின்ற அக்கினியை மூட்டி, வெட்ட வெளியாக்குவாரது நெஞ்சில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

424. கொண்டல் வரைநின்று கிழிந்த குலக்கொடி
அண்டத்துள் ஊறி இருந்துஎண் திசையாதி
ஒன்றின் பதஞ்செய்த ஓம்என்ற அப்புறக்
குண்டத்தின் மேல்அங்கி கோலிக்கொண் டானே.

பொருள் : சிரசின் மேலுள்ள ஒளி மண்டலத்திலிருந்து கீழே இறங்கிய ஆதி சக்தி, உடம்பைச் சுற்றியுள்ள ஒளி மயமான அண்ட கோசத்தில் பொருந்தி யிருந்து திரோதான சத்தியோடு கூடிச் சீவர்களைப் பக்குவப் படுத்திப் பிரணவமாகிய மூலாதாரத்திலுள்ள குண்டத்தின்மேல் எழுகின்ற அக்கினியை மீண்டும் தன்னோடு ஒடுக்கிக் கொண்டு சிவபெருமான் விளங்கினான்.

425. நித்தசங் காரம் உறக்கத்து நீள்மூடம்
வைத்தசங் காரமும் சாக்கிரா தீதமாம்
சுத்தசங் காரம் தொழிலற்ற கேவலம்
உய்த்தசங் காரம் பரன்அருள் உண்மையே.

பொருள் : நித்த சங்காரம் என்பது உறக்கத்தில் ஒன்றும் அறியா திருத்தலாம். அமைத்த சங்காரம் என்பது கருவி கரணங்கள் சுழன்ற நிலையாம். சுத்த சங்காரமாவது செயலின்றி ஒன்றும் விளங்காமல் நிற்கும் நிலை. சிவனருளில் பொருந்தச் செய்வதே உண்மையான சங்காரமாகும்.

426. நித்தசங் காரம் இரண்டுடல் நீவுதல்
வைத்தசங் காரமும் மாயாள் சங்காரமாம்
சுத்தசங் காரம் மனாதீதம் தோய்வித்தல்
உய்த்தசங் காரம் சிவனருள் உண்மையே.

பொருள் : நித்த சங்காரமாவது தூல சூக்குமமான இரு உடல்களையும் சீவன் தொட்டுக் கொண்டிருத்தல். இப்படியாக அமைத்த சங்காரம் மாயையைப் பொருந்திய சங்காரமாகும். சுத்த சங்காரம் என்பது மனம் அதீதத்தில் சென்று சேட்டையின்றி இருக்கச் செய்தல், அப்போது சிவனருளில் தோய்விக்கச் செய்தலே உண்மையான சங்காரமாகும்.

427. நித்தசங் காரம் கருவிடர் நீக்கினால்
ஒத்தசங் காரமும் உடலுயிர் நீவுதல்
வைத்தசங் காரம் கேவலம் ஆன்மாவுக்கு
உய்த்தசங் காரம் சிவமாகும் உண்மையே.

பொருள் : நித்த சங்காரம் பிறவித் துன்பத்தைப் போக்கினால் மனம் கருவிகள் ஒத்த சங்காரத்தில் உடலும் உயிரும் பிரிந்திருக்கும் நிலை உண்டாகும். இவ்வாறு அமைத்து வைத்த சங்காரம் ஆன்மாவுக்குச் சுத்த கேவல நிலையாம். சிவமாந் தன்மை அளித்த சங்காரமே உண்மை சங்காரமாகும்.

428. நித்தசங் காரமும் நீடுஇளைப் பாற்றுதல்
வைத்தசங் காரமும் மன்னும் மனாதியில்
சுத்தசங் காரமும் தோயாப் பரனருள்
வைத்தசங் காரமும் நாலாம் மதிக்கிலே.

பொருள் : நித்த சங்காரமாவது நீண்ட உறக்கத்தில் வைப்பதாகும். அமைத்து வைத்த சங்காரமும் மனம் முதலிய கரணங்கள் அடங்கியிருக்கும்படி செய்தல். சுத்த சங்காரமும் கூடக் கருவிகளினின்றும் நீங்கிப் பரனருளில் கூடாதிருத்தலாம். மதித்துச் சொன்னால் கருவிகளினின்றும் நீங்கிப் பரனருளல் தோய்ந்து விளங்கும்பட செய்தல் நான்காவது சங்காரமாகும்.

429. பாழே முதலா எழும்பயிர் அப்பயிர்
பாழாய் அடங்கினும் பண்டைப்பாழ் பாழாகா
வாழாச்சங் காரத்தின் மாலயன் செய்தியாம்
பாழாம் பயிராய் அடங்கும்அப் பாழிலே.

பொருள் : பாழாகிய சிவத்தை முதலாகக் கொண்டு தோன்றும் ஆன்மப் பயிரானது, அது தனுகரணாதிகளோடு கூட்டப் பெற்றபின் திரும்பவும் அடங்கினாலும் பண்டை நிலை எய்தாது. இது முடிவைத் தராத சங்கார மாதலின் இச் சீவர்கள் மாலயன் செயலுக்கு உட்பட்டுப் பிறப்பு இறப்பில் உழல்வர். ஆணவ மலர் வலிமை கெட்டு வறுத்த வித்துப் போல் பாழும் பயிரான போது அச்சிவத்தின் வியாபகத்தில் அடங்கியிருக்கும்.

430. தீயவைத்து ஆர்மின்கள் சேரும் வினைதனை
மாயாவைத் தான்வைத்த வன்பதி ஒன்றுண்டு
காயம்வைத் தான்கலந்து எங்கும் நினைப்பதோர்
ஆயம்வைத் தான்உணர்வு ஆரவைத் தானே.

பொருள் : சேர்கின்ற வினைகளைச் சுட்டுவிடுகின்ற வண்ணம் சிவன்பால் ஆர்வத்தைப் பெருக்கி நில்லுங்கள். இவ்வாறு அழியும்படி செய்கின்றவன் வாழ்கின்ற இடமாகிய சகஸ்ரதளம் ஒன்றுள்ளது. அவ்விடத்தை உடம்பில் வைத்தான். கலந்து சிந்திப்பதற்கு உடம்பைச் சூழ ஒளிக் கற்றைகளை அமைத்தருளினான். அங்கே உணர்வு பொருந்துமாறு அருளினான்.

12. திருரோபவம்

(திருரோபவம் என்பது மறைப்பாகும். மகேசுவரன் சிவனது ஆணையைத் தாங்கிச் சீவர்கள் அறியா வண்ணம் வினை போகங்களை ஊட்டு கின்றான். இவ்வாறு ஊட்டுவித்துச் சீவரது வினையைக் கழித்தலின் இதுவும் அருட் செயலே யாகும்.)

431. உள்ளத்து ஒருவனை உள்ளுறு சோதியை
உள்ளம்விட்டு ஓரடி நீங்கா ஒருவனை
உள்ளமும் தானும் உடனே இருக்கினும்
உள்ளம் அவனை உருவுஅறி யாதே.

பொருள் : உயிருக்கு உயிராக இருக்கும் ஒருவனும் மன மண்டலத்தில் உள்ளே எழுகின்ற பேரொளிப் பிழம்பானவனும் நெஞ்சத்தை விட்டுச் சிறிதும் நீங்காத பெருமானும் ஆகிய ஒப்பற்ற தலைவனை நெஞ்சத்தில் உடனாய் அவன் வீற்றிருப்பினும் நெஞ்சம் மல மறைப்பினால் அப்பெருமான் இன்ன தன்மையன் என்று உணராததாகும்.

432. இன்பப் பிறவி படைத்த இறைவனும்
துன்பம்செய் பாசத் துயருள் அடைத்தனன்
என்பிற் கொளவி இசைந்துறு தோல்தசை
முன்பிற் கௌவி முடிகுவது ஆக்குமே.

பொருள் : இன்பம் பெறுவதற்குரிய பிறவியைத் தந்தருளிய இறைவன் துன்பத்தைத் தருகின்ற பந்தத்தைச் சீவர்களுக்கு அமைத்தருளினான். அவன் சீவர்களை எலும்போடு சேர்த்து, பொருந்திய, தோலாலும் தசையாலும் வன்மை பொருந்தப் பண்ணி, தூய்மைப் படுத்தி முத்தியைக் கொடுத்தருளுவான்.

433. இறையவன் மாதவன் இன்பம் படைத்த
மறையவன் மூவரும் வந்துடன் கூடி
இறையவன் செய்த இரும்பொறி யாக்கை
மறையவன் வைத்த பரிசுஅறி யாரே.

பொருள் : ருத்திரன் திருமால் இன்பத்தை அமைத்த பிரமன் ஆகிய மூவரும் வந்து உடன்கூடி, இறைவன் அமைத்துக் கொடுத்த பெருமையுள்ள இயந்திரமான சரீரத்தில் இரகசியமாக அவ் இறைவன் வைத்த தன்மையினை அறிய மாட்டார்கள். (இறைவன் - சதாசிவ மூர்த்தி.)

434. காண்கின்ற கண்ணொளி காதல்செய் ஈசனை
ஆண்பெண் அலிஉரு வாய்நின்ற ஆதியை
ஊண்படு நாவுடை நெஞ்சம் உணர்ந்திட்டுச்
சேண்படு பொய்கைச் செயல் அணை யாரே.

பொருள் : காணுகின்ற கண்ணில் ஒளியாக இருந்து அருள்புரிகின்ற ஈசனும், ஆணாய்ப் பெண்ணாய் அலியாய் விளங்கும் ஆதியாகிய சிவனை, உண்பதற்குப் பயன்படும் நாவின்வழி மனத்தைச் செலுத்தி, சிரசின் மேலுள்ள ஆகாய மண்டலத்தில் உண்டாகிற இயற்கையான தடாகத்தில் உடன் உறைதலைப் பொருந்தாராயினர். அலி என்பது ஈண்டு அருவுருவத் திருமேனி.

435. தெருளும் உலகிற்கும் தேவர்க்கும் இன்பம்
அருளும் வகைசெய்யும் ஆதிப் பிரானும்
சுருளும் சுடருறு தூவெண் சுடரும்
இருளும் அறநின்று இருட்டறை யாமே.

பொருள் : தெளிவுடைய உயிர்களுக்கும் ஒளி மண்டல வாசிகளுக்கும் இன்பத்தை நல்குகின்ற தன்மையைச் செய்யும் ஆதியாகிய சதாசிவனும் சொற்பப் பிரகாசம் பொருந்திய தூவெண்மதியும் இருளும் கெடும்படியாக வல்லிருளாய் இருக்கும் சீவரது அண்ட கோசத்தில் மறைப்பினைச் செய்து கொண்டிருப்பான்.

436. அரைக்கின் றருள்தரும் அங்கங்கள் ஓசை
உரைக்கின்ற ஆசையும் ஒன்றோடொன்று ஒவ்வாப்
பரக்கும் உருவமும் பாரகம் தானாய்க்
கரக்கின் றவைசெய்த காண்டகை யானே.

பொருள் : தத்துவங்களும் ஓசை முதலிய தன்மாத்திரைகளும் சொல்லப் பெறுகின்ற ஆசையும் ஒன்றுக்கு ஒன்று வேறுபட்ட பல்வேறு உருவங்களும் உலக முழுவதும் தானாய் மறைதலைச் செய்கின்ற இறைவனே மறைப்புச் சத்தியை அருளுவான். இவற்றைத் திருவுள்ளத்தால் சிவபெருமான் கண்டருள்வன். அரைக்கின்ற அருள் - மறைப்பு.

437. ஒளித்துவைத் தேன்உள் ளுறவுணர்ந்து ஈசனை
வெளிப்பட்டு நின்றருள் செய்திடும் ஈண்டே
களிப்பொடும் காதன்மை என்னும் பெருமை
வெளிப்பட்டு இறைஞ்சினுள் வேட்சியும் ஆமே.

பொருள் : நான் இறைவனை அகத்தே உணர்ந்து போற்றி வைத்து வழிபட்டேன். அப்பெருமான் அப்பொழுதே காட்சியில் வெளிப்பட்டு அருளை நல்குவான். இனி மகிழ்ச்சியோடு அன்பு என்னும் பெருங்குணம் வெளிப்பட்டு அவனைப் புறத்தே வழிபாடு செய்தாலும் அவனுக்கு விருப்பமாம்.

438. நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்றங்கு இயங்கி அரன்திரு மாலவன்
நன்றது செய்யும் மலர்மிசை மேலயன்
என்றிவ ராகி இசைந்திருந் தானே.

பொருள் : எல்லாவற்றையும் தானே மறைத்து நின்ற மகேசுரன் கீழ்முகங்கொண் செயற்பட்டு உருத்திரன், திருமால், நன்மைøய் செய்யும் சுவாதிட்டான மலரிலுள்ள பிரமன் என்று மூவரோடும் கலந்திருக்கின்றான்.

439. ஒருல்கிய பாசத்துள் உத்தம சித்தின்
இருங்கரை மேலிருந்து இன்புறு நாடி
வருங்கரை ஓரா வகையினிற் கங்கை
அருங்கரை பேணில் அழுக்குஅற லாமே.

பொருள் : ஒடுங்கிய பாசநிலையில் சிவனாகிய பெரிய கரையின் மேல் சீவர்கள் இருந்து ஆன்ம அனுபவம் விழைந்து பிறவியாகிய அருங்கரையை நாடாத தன்மையில் சங்கு ஓசையோடு வரும் ஆகாய கங்கையின் கரையைப் பொருந்தினால் மாசினை நீங்கப் பெறலாம். (கங்கை அருங்கரை - திருவருளின் எல்லையில்லாத துணை. உத்தம சித்தன் - தலையாய சிவபெருமான்.)

440. மண்ணொன்று தான்பல நற்கல மாயிடும்
உண்ணின்ற யோனிகட்கு எல்லாம் ஒருவனே
கண்ணொன்று தான்பல காணும் தனைக்காணா
அண்ணலும் இவ்வண்ணம் ஆகிநின் றானே.

பொருள் : மண் ஒன்றே சட்டி பானை முதலிய நல்ல பாத்திரங்களாகும். அதுபோன்று யோனி தேங்கட்கு எல்லாம் அகத்தேயுள்ள ஒருவனே காரணமாகும். கண்ணாகில் இந்திரியம் புறப்பொருள் பலவற்றைக் கண்டாலும் தன்னைக் காணாது அது போன்று பெருமானும் எல்லா யோனி பேதங்கட்குக் காரணமாயினும் சீவக் காட்சிக்குப் புலப்படாது நிற்பான். (யோனிகள் - நிலம், முட்டை, கருப்பை, அழுக்கு என்னும் நால்வகைப் பிறப்புகள்.)
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Mon Mar 26, 2012 2:27 pm

13. அனுக்கிரகம்

(அனுக்கிரகம் - அருளல். சிவனது ஆணையைத் தாங்கிச் சதாசிவன் சீவர்களைப் பிறப்பினில் செலுத்தி மலநீக்கம் பெற அருள் புரிகிறான் என்பது இப்பகுதியில் கூறப்பெறும்.)

441. எட்டுத் திசையும் எறிகின்ற காற்றொடு
வட்டத் திரையனல் மாநிலம் ஆகாயம்
ஒட்டி உயிர்நிலை என்னும்இக் காயப்பை
கட்டி அவிழ்ப்பான் கண்ணுதல் காணுமே.

பொருள் : எட்டுத் திசையும் வீசுகின்ற காற்றோடு, வட்டமாகச் சூழ்ந்துள்ள கடல், நெருப்பு, பூமி, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களையும் ஒன்று சேர்ந்து, உயிர் தாங்கும் இடமாகிய உடம்போடு உயிரைச் சேர்த்தும் பிரித்தும் வைப்பான் சதாசிவ மூர்த்தி யாவான். ஒட்டு - திருவடிப்பேறு கண்ணுதல் நினைப்பளவானே ஐந்தொழில் புரியும் அண்ணல் எனலுமாம். கடல் இங்கு நீரைக் குறிக்கும்.

442. உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தை
நச்சியே இன்பங்கொள் வார்க்கு நமன்இல்லை
விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்குத்
தச்சும் அவனே சமைக்கவல் லானே.

பொருள் : சிரசின் மேல் பிரமரந்திரத்தில் நீங்கி விளங்கும் நாதத்தை விரும்பி இன்பத்தைப் பெறுவார்க்கு இறப்பு இல்லை. மேலான விரிந்த சுடராகவுள்ள அக்கினி சூரியன் சந்திரன் ஆகிய மூன்றையும் உலகினுக்கு அச்சதாசிவ மூர்த்தியே இணைத்துச் சீவர்கள் உய்ய அருள் புரியவல்லான்.

443. குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக்
குசவன் மனத்துற்றது எல்லாம் வனைவன்
குசவனைப் போல்எங்கள் கோனநந்தி வேண்டில்
அசைவில் உலகம் அதுஇது வாமே.

பொருள் : குசவன் தண்டச் சக்கரத்தில் பிடித்து வைத்த மண்ணை, அவன் மனத்தில் எண்ணியவாறு செய்வான். குசவனைப் போன்று எங்கள் சதாசிவ மூர்த்தி நினைத்தால் சடத்தன்மை யுடைய உலகம் சடத்தை விட்ட ஆன்மாவாக மிளிரும்.

444. விடையுடை யான்விகிர் தன்மிகு பூதப்
படையுடை யான்பரி சேஉலகு ஆக்கும்
கொடையுடை யான்குணம் எண்குண மாகும்
சடையுடை யான்சிந்தை சார்ந்துநின் றானே.

பொருள் : ஒளியை வாகனமாக உடையவனாகவும், மாறுபட்ட செயலை யுடையவனாகவும் மிகுந்த புவனாபதிகளை யுடையவனாகவும் உள்ள சதாசிவ மூர்த்தி, தன் விருப்பப்படி உலகைப் படைத்தருளுவான். வேண்டுவார்க்கு வேண்டுவதே ஈயும் தன்மையுடைய அவன் குணம் எண்குணமாகும். ஒளிக் கிரணங்களை வீசிக் கொண்டிருக்கும் அப்பெருமான் சீவரது சிந்தையில் பொருந்தியிருந்தான். (ஆனேற்றை ஊர்தியாகவும் உயர்த்துங் கொடியாகவும் உடையவன் சிவன் என்றும் பொருள் கொள்ளலாம்.)

445. உகந்துநின் றேபடைத் தான்உலகு ஏழும்
உகந்துநின் றேபடைத் தான்பல ஊழி
உகந்துநின் றேபடைத் தான்ஐந்து பூதம்
உகந்துநின் றேஉயிர் ஊன்படைத் தானே.

பொருள் : இறைவன் (சீவர்கள் வாழ வேண்டுமென்று) ஏழ் உலகங்களையும் விரும்பிப் படைத்தருளினான். அவ்வாறே பல பிரளயங்களை விரும்பிச் செய்தருளினான். நிலம் முதலிய ஐந்து பூதங்களையும் விரும்பித் தோற்றுவித்தருளினான். விரும்பி நின்றே உயிரிலும் உடலிலும் பொருந்திச் சீவகோடிகளுக்கு உதவினான்.

446. படைத்துஉடை யான்பண்டு உலகங்கள் ஏழும்
படைத்துஉடை யான்பல தேவரை முன்னே
படைத்துஉடை யான்பல சீவரை முன்னே
படைத்துஉடை யான்பர மாகிநின் றானே.

பொருள் : பழமையாகவே ஏழு உலகங்களையும் சிருட்டி செய்து அவற்றை உடைமையாகக் கொண்டான். அங்குப் பலதேவர்களைப் படைத்து அவர்களை ஆண்டு கொண்டான் அவனே பல சீவர்களைச் சிருட்டிக்கு விடுத்துத் தேவரோடு சம்பந்தப் படுத்தி ஆட்கொண்டான். அவ்வாறு படைத்து ஆட்கொண்ட அவன் தலைவனாக உள்ளான்.

447. ஆதி படைத்தனன் ஐம்பெரும் பூதம்
ஆதி படைத்தனன் ஆசில்பல் ஊழி
ஆதி படைத்தனன் எண்ணிலி தேவரை
ஆதி படைத்தனன் தாங்கிநின் றானே.

பொருள் : ஆதி சத்தியோடு கூடிய சதாசிவன் ஐம்பெரும் பூதங்களைப் படைத்தருளினான். குற்றமில்லாத பல ஊழிகளை உயிர்களின் நன்மைக்காக அவன் செய்தான். எண்ணற்ற தேவர்களை அவன் சிருட்டிக்கு விட்டான். இவ்வாறு அவன் சிருட்டியைச் செய்ததோடு அவற்றுக்கு ஆதாரமாகவும் இருந்தான். ஆதி - அம்மை; அம்மையுடன் கூடிய சிவபெருமான்; ஆதிபகவன்.

448. அகன்றான் அகலிடம் ஏழும்ஒன் றாகி
இவன்தான் என்நின்று எளியனும் அல்லன்
சிவன்தான் பலபல சீவனும் ஆகி
நவின்றான் உலகுறு நம்பனும் ஆமே.

பொருள் : இறைவன், அகன்ற இடமாக உள்ள இவ்வுலகம் ஏழுடனும் ஒன்றாகப் பொருந்தியும் இவற்றைக் கடந்தும் உள்ளான். இவ்வாறு இவன் உடனாயிருப்பினும் எளிமையில் காட்சிப் படுபவன் அல்லன். சிவனே பலவாகவுள்ள சீவரிடம் வியாபித்து அவனை விரும்பினவருக்கு அவரவரிடம் பொருந்தி உபதேசம் செய்தருளுவான்.

449. உள்நின்ற சோதி உறநின்ற ஓருடல்
விண்நின்று விரும்பும் விழுப்பொருள்
மண்நின்ற வானோர் புகழ்திரு மேனியன்
கண்நின்ற மாமணி மாபோத மாமே.

பொருள் : உள்ளே எழுகின்ற சோதியானது உயிர் பொருந்தி நிற்கும் ஓர் உடலாகவும் விண்ணுலகிலுள்ள தேவர்கள் விரும்புகின்ற மேலான பொருளாகவும் மண்ணுலகத்தில் பக்குவம் பெற்ற மேலோர் புகழும் திருமேனியாகவும் கண்ணிலே விளங்குகின்ற மணியாகவும் பெரிய ஞானமாகவும் உள்ளது. (மாமணி என்பதற்குத் திரு ஐந்தெழுத்து எனவும் பொருள் கொள்ளலாம்.)

450. ஆரும் அறியாத அண்டத் திருவுருப்
பார்முத லாகப் பயிலும் கடத்திலே
நீரினிற் பால்போல் நிற்கின்ற நேர்மையைச்
சேராமற் காணும் சுகம்அறிந் தேனே.

பொருள் : யாவரும் அறிய முடியாத அண்டத்திலுள்ள திருவுருவை பூமி முதலாகப் பொருந்திய சரீரத்தில், நீரினில் பால்கலந்து பால்போல் நிற்கும் தன்மையை அயர்ச்சியை அடையாமல் பார்த்துக் கொண்டிருக்கும் இன்பத்தை நான் பெற்றேன். சேராமல் - மறந்துவிடாமல் சுகம் பேரின்பம்.

14. கர்ப்பக் கிரியை

(கர்ப்பத்தில் செய்யப்படும் தொழில் கர்ப்பக் கிரியை எனப்படும். இறைவன் சீவர்களைக் கருப்பையில் இருந்து காக்கும் முறைமை இங்குக் கூறப்பெறும்.)

451. ஆக்குகின் றான்முன் பிரிந்த இருபத்தஞ்சு
ஆக்குகின் றான்அவன் ஆதிஎம் ஆருயிர்
ஆக்குகின் றான்கர்ப்பக் கோளகை யுள்ளிருந்து
ஆக்குகின் றான்அவன் ஆவது அறிந்தே.

பொருள் : இறப்பின் போது பிரிந்த இருபத்தைந்து தத்துவங்களைத் தோற்றுவிக்கின்றான். ஆதியாகிய அவ் இறைவன் அருமையான் உயிரைத் தத்துவங்களோடு சேர்க்கிறான். அவன் மாதாவின் கருப்பையில் பொருந்தி உயிர்களுக்கு உதவுகிறான். அவன் உடல் வளர்ச்சிக்குத் தேவையை அறிந்தே எல்லாம் செய்கின்றான்.

452. அறிகின்ற மூலத்தின் மேல்அங்கி அப்புச்
செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவிப்
பொறைநின்ற இன்னுயிர் போந்துற நாடிப்
பறிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே.

பொருள் : யோகியர் அறிகின்ற மூலாதாரத்தின் மேல் நெருப்பும் நீரும் செறிந்துள்ள ஞானபூமியில், திருவடியைப் பதித்து, பொறையுடனுள்ள இனிமையான உயிரைக் கருவில் புகும் வண்ணம் எண்ணிக் கருவினின்றும் நீங்குகின்ற பத்து மாதகால வரையறையை அதற்கு இறைவன் நியமித்தருளினான்.

453. இன்புறு காலத்து இருவர்முன்பு ஊறிய
துன்புறு பாசத் துயர்மனை வானுளன்
பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும்
அன்புறு காலத்து அமைத்துஒழிந் தானே.

பொருள் : சிதாகாயத்தில் விளங்கும் இறைவன், தலைவன் தலைவியுமாகிய இருவர் இன்புற்ற போது, சீவன் விட்டுச் சென்ற வினையை அனுபவிப்பதற்கான துயரம் பொருந்திய உடம்பில் பக்குவம் அடையும் காலத்தையும் சீவன் பூமியில் தங்க வேண்டிய கால எல்லையையும் இருவரும் அன்போடு கூடிய காலத்தே அமைத்தருளினான். (முன்பு ஊறிய - அநாதியே ஆன்மாவைப் பற்றியுள்ள.)

454. கருவை ஒழிந்தவம் கண்டநால் மூவேழ்
புருடன் உடலில் பொருந்தும்மற் றோரார்
திருவின் கருக்குழி தேடிப் புகுந்த
உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே.

பொருள் : கருவை நீங்கினவர் அறிந்த இருபத்தைந்து தத்துவங்களும் ஆண் உடம்பில் தங்கி உருவாவதை மற்றையோர் அறிய மாட்டார். அக்கரு பின் பெண்ணின் கருப்பையை நாடி அடைந்த ஆணும் பெண்ணுமாகிய இரண்டு உருவமாக ஓடிப் பாய்ந்தது. (வெண்ணீர் - சுக்கிலம்; செந்நீர் - சுரோணிதம். கருவை ஒழிந்தவர் ஞானியர்)

455. விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி
ஒழிந்த முதல்ஐந்து ஈரைந்தோடு ஏறிப்
பொழிந்த புனல்பூதம் போற்றுங் கரணம்
ஒழிந்த நுதல்உச்சி உள்ளே ஒளிந்ததே.

பொருள் : ஆண் பெண் சேர்க்கையில் யோனிவிரிந்து இலிங்கத்தினின்றும் சுக்கிலம் விழுந்தது. நீங்கிய புருடன் என்ற தத்துவம் தன் மாத்திரைகள் ஐந்தும் ஞானேந்திரியம் ஐந்தும் கன்மேந்திரியம் ஐந்துடன் கூடி, தன்மாத்திரைகளினின்றும் தோன்றிய நீர் முதலான ஐந்து பூதம் போற்றுதலுக்கு உரிய நான்கு அந்தக் கரணங்களுடன் நீங்கிய நெற்றியின் உச்சியுள் ஒளிந்தது. (ஞானேந்திரியம் அறிதற்கருவி. கருமேந்திரியம் - செய்தற்கருவி)

456. பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவும்
தாவி உலகில் தரிப்பித்த வாறுபோல்
மேவிய சீவனில் மெல்லநீள் வாயுவும்
கூவி அவிழும் குறிக்கொண்ட போதே.

பொருள் : பூவினில் உள்ள வாசனையைப் பொருந்திய காற்றும் உலகில் எங்கும் பரவித் தங்கியிருப்பது போல் கருப்பையில் பொருந்திய கருவினில் மெல்ல நீண்ட தனஞ்சயனம் என்னும் வாயுவும் குறிப்பிட்ட காலத்தில் இரைந்து கொண்டு உள்ளே செல்லும். (நீள் வாயு - தனஞ்சயன்)

457. போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டுடன் நாலு புரவியும்
பாகன் விடான்எனில் பன்றியு மாமே.

பொருள் : அருவமாய்ப் போகின்ற புரியட்டக சரீரமும், உள்ளே புகுகின்ற தச வாயுக்களும் காமாதி அஷ்ட விகாரங்களும் இவற்றுள் அமிழ்ந்துள்ள புருடனும், நவத்துவாரங்களும், குண்டலியாகிய நாதமும் பன்னிரண்டு விரற்கடை செல்லும் பிராணனாகிய குதிரையும் இறைவனாகிய பாகன் செலுத்தாவிடில் பன்றியைப் போல் இழிந்த பிறப்பாய்விடும்.

458. ஏற எதிர்க்கில் இறையவன் தானாகும்
மாற எதிர்க்கில் அரியவன் தானாகும்
நேரொக்க வைக்கின் நிகர்போதத் தானாகும்
பேரொத்த மைந்தனும் பேரர சாளுமே

பொருள் : கூட்டுறவின் போது சுக்கில் சுரோணித கலப்பில் சுக்கிலம் எதிர்த்துச் சென்றால் பிறக்கும் குழந்தை இறையவனைப் போன்றிருப்பான். சுரோணிதம் மாறி எதிர்த்துவரின் அப்போது பிறக்கும் குழந்தை திருமாலைப் போன்றிருப்பான். சுக்கில் சுரோணிதமாகிய இரண்டும் சமமாகப் பொருந்தினால் அப்போது பிறக்கும் குழந்தை பிரமனைப் போன்றிருப்பான். மூவரது தன்மையும் பொருந்தியிருந்தால் பேரரசனாய்ப் பெரிய சாம்ராஜ்யத்தை ஆளுவான்.

459. ஏய்அங்கு அலந்த இருவர்தஞ் சாயத்துப்
பாயுங் கருவும் உருவா மெனப்பல
காயம் கலந்தது காணப் பதிந்தபின்
மாயம் கலந்த மனோலய மானதே.

பொருள் : பல புலன்களில் பொருந்தி வருந்தின ஆண் பெண்ணாகிய இருவரது வண்ணத்தில் வெளியாகிற கரு உருவாகும் என்றபடி, பல பிறவியில் பல உடம்பில் பொருந்திய அக்கரு நன்றாகப் பதிந்த பிறகு மயக்கம் பொருந்திய இருவரது மனமும் ஒருமைப் பாடுற்றது. மனோயம்-உள்ளத்து ஒற்றுமை.

460. கர்ப்பத்துக் கேவலம் மாயாள் கிளைகூட்ட
நிற்கும் துரியமும் பேதித்து நினைவுஎழ
வற்புறு காமியம் எட்டாதல் மாயேயம்
சொற்புறு தூய்மறை வாக்கினாம் சொல்லே.

பொருள் : கருப்பையில் அறியா நிலையிலுள்ள சிசுவுக்கு மாயை தத்துவங்களைச் சேர்க்க, அமைந்து நிற்கும் பேருறக்க நிலை நீங்கிச் சிசுவுக்கு நினைவு உண்டாக வலிமைமிக்க மாயையின் காரியமாகிய அராகாதி எட்டுக் குணங்களும் சுத்த மாயையினின்றும் தோன்றும் நால்வகை வாக்கினின்று சொல்லும் ஆகும்.

461. என்பால் மிடைந்து நரம்பு வரிக்கட்டிச்
செம்பால் இறைச்சி திருந்த மனைசெய்து
இன்பால் உயிர்நிலை செய்த இறையோங்கும்
நண்பால் ஒருவனை நாடுகின் றேனே.

பொருள் : எலும்புகளால் பின்னி நரம்புகளாகிய கயிற்றால் வரிந்து கட்டி, இரத்தத்தோடு கூடிய இறைச்சியால் திருத்தமாக வீட்டை அமைத்து இன்பத்தையுடைய உயிர் தாங்கும் உடம்பினைச் செய்த இறைவனிடத்து ஓங்கும் காதலால் ஒப்பற்ற அப் பெருமானைத் தேடுகின்றேன்.

462. பதஞ்செய்யும் பால்வண்ணன் மேனிப் பகலோன்
இதஞ்செய்யும் ஒத்துஉடல் எங்கும் புகுந்து
குதஞ்செய்யும் அங்கியின் கோபம் தணிப்பான்
விதஞ்செய்யு மாறே விதித்தொழிந் தானே.

பொருள் : சீவர்களைப் பக்குவஞ் செய்யும் பால் வண்ணனாகிய சூரியப் பிரகாசம் போன்ற மேனியையுடைய சதாசிவன் உடலில் எங்கும் நீக்கமற நிறைந்து நன்மையைச் செய்வான். குதத்தானத்திலிருந்து தூண்டி நடத்தும் மூலாக்கினியின் வேகத்தைத் தணிப்பதற்காக இன்பம் பெறும்படியான நியதியை அமைத் தருளினான்.

463. ஒழிபல செய்யும் வினையுற்ற நான
வழிபல நீராட்டி வைத்தெழு வாங்கி
பழிபல செய்கின்ற பாசக் கருவைச்
சுழிபல வாங்கிச் சுடாமல்வைத் தானே.

பொருள் : பழியான காரியங்களைச் செய்கின்ற பாசத்தில் கட்டுப்பட்ட கருவை, பலவாகிய சுழல்களினின்றும் எடுத்து அழியாது காப்பாற்றினான். மேலும் வினை பொருந்திய காலத்தே பலவகையாகத் தூய்மையாக்கிச் சிசுவை மேலெழும்படி செய்து வினையை நீங்கும்படி இறைவன் செய்வான்.

464. சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்
அக்கிர மத்தே தோன்றும்அவ் யோனியும்
புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால்விரல்
அக்கரம் எட்டும்எண் சாணது வாகுமே.

பொருள் : ஆண் பெண் கூட்டுறவால் சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளை நிறமான சுக்கிலமும் அவ்வாறே யோனியினின்றும் தோன்றும் செந்நிறமான சுரோணிதமும் எட்டு விரற்கடையளவு புறப்பட்டு நான்கு விரற்கடையளவு உள்ளே போகும். அப்போது பஞ்சபூத அக்கரங்களாகிய ஐந்து அகரமாகிய நாதமும் உகரமாகிய விந்துவும் மகரமாகிய மாயையும் சேர்ந்து எட்டுச் சாண்அளவு உடம்பு சிசுவுக்கு உண்டாகும்.

465. போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனும்
கோசத்துள் ஆகம் கொணர்ந்த கொடைத்தொழில்
ஏகத்துள் ஆங்கே இரண்டெட்டு மூன்றைந்து
மேகத்துள் ஆங்கொரு முட்டைசெய் தானே.

பொருள் : இன்பத்துள் பொருந்திய இறைவனும் கருவில் உடம்பைத் தந்த கொடைச் செயலால் ஆண் பெண் கூட்டுறவால் முப்பத்தொரு தத்துவங்களைச் சேர்ந்து இருவரது மயக்க நிலையில் ஒரு கருவாகிய முட்டையைத் தந்தருளினான்.

466. பிண்டத்தில் உள்ளுறு பேதைப் புலன்ஐந்தும்
பிண்டத்துள் ஊடே பிறந்து மரித்தது
அண்டத்தின் உள்ளுறு சீவனும் அவ்வகை
அண்டத்து நரத்து அமர்ந்திருந் தானே.

பொருள் : பிண்டமாகிய இவ்வுடம்பினுள்ளே அறியாமை நிறைந்த புலன்கள் ஐந்தும் உடம்பில் தோன்றி உடம்பு அழிந்தபோது அவையும் செயலற்று அழிந்தன. உடம்பைச் சுற்றியுள்ள அண்ட கோசத்தின் உள்மேயுற்ற சீவனும் அவ்வாறே பக்குவம் பெற்ற போது தன் செயலற்று நாத தத்துவத்தில் ஒடுங்கும். (பேதைப்புலன் - அறிவற்ற புலன்)

467. இலைப்பெறி யேற்றி எனதுடல் ஈசன்
துலைப்பொறி யிற்கரு ஐந்துடன் ஆட்டி
நிலைப்பொறி முப்பது நீர்மை கெளுவி
உடலைப்பொறி ஒன்பதில் ஒன்றுசெய் தானே.

பொருள் : இறைவன் மாயையால் உண்டாக்கிய உடம்பைத் துலாக்கோல் போல் செலுத்தும் சிவ தத்துவத்தில் அகர உகர மகர விந்து நாத மாகிய பிரணவத்தில் கருவை இயக்கி சீவனை நிலைக்க வைக்கும் ஆன்ம தத்துவம் இருபத்து நான்கும், புருட தத்துவம் நீங்கிய வித்தியா தத்துவம் ஆறும் சீவனது இயல்புக்கு ஏற்பக் கூட்டி உடம்பாகிய பொறியில் ஒன்பது துவாரங்களையும் அமைத்தருளினான். (உலைப்பொறி - சரீரம்)

468. இன்புற்று இருவர் இசைவித்து வைத்தமண்
துன்பக் கலசம் அணைவான் ஒருவனே
ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு
வெந்தது துளை விளைந்தது தானே.

பொருள் : சிற்றின்பத்தில் ஈடுபட்டிருந்த தாயும் தந்தையுமாகிய இருவரும் மனமொன்றி வைத்த மண்ணாலான துன்பமயமான குடத்துள்ளே சேர்ந்தவன் ஆன்மா ஒருவனே. அத்துடன் ஒன்பது வாயில்களாகிய நீர்ச்சாலும் புரியட்டமாகிய எட்டும் ஞானேந்திரிய கன்மேந்திரிய மாகிய பத்தும் ஆக பதினெட்டுக் கலசமும் அந்தக் கருப்பையாகிய சூளையில் வெந்து பக்குமாயின.

469. அறியீர் உடம்பினில் ஆகிய ஆறும்
பிறியீர் அதனில் பெருகுங் குணங்கள்
செறியீர் அவற்றினுள் சித்திகள் இட்டது
அறியஈ ரைத்தினுள் ஆனது பிண்டமே.

பொருள் : உடம்பினுள் கொளுந்திய ஆறு துன்பங்களையும் அறியாது உள்ளீர். அங்கு மனத்தினுள்ளே பெருகிக் கொண்டிருக்கும் தாமத இராசத சாத்துவிகமாகிய குணங்களினின்றும் பிரியாதுள்ளீர். அங்குச் சித்திகள் அமைவதைப்பொருந்தாதீர். உணரின் பத்து மாதங்களில் ஆகியது இப்பிண்டமாகும். ஆறுதுன்பங்களாவன; பேறு, இழவு, துன்பம், பிணி, மூப்பு, சாக்காடு என்பன.

470. உடல்வைத்த வாறும் உயிர்வைத்த வாறும்
மடைவைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத்
திடம்வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக்
கடைவைத்த ஈசனைக் கைகலந் தேனே.

பொருள் : உடலை மாயை யினின்றும் தோற்றுவித்தவாறும் உடம்பினுள் உயிரை அமைத்து உறுதியான ஆயிர இதழ்த் தாமரையோடு கூடியசிரசில் அக்கினியில் இறுதிநிலை வைத்த இறைவனைச் சுழுமுனையில் கூடினேன்.

471. கேட்டுநின் றேன் எங்கும் கேடில் பெருஞ்சுடர்
மூட்டுநின் றான்முதல் யோனி மயன்அவன்
கூட்டுநின் றான்குழம் பின்கரு வையுரு
நீட்டிநின்று ஆகத்து நேர்பட்ட வாறே.

பொருள் : எவ்விடத்தும் தனக்கொரு கேடில்லாத ஒளிவடிவமான பெருமான் கருவுக் கெல்லாம் கருவாயிருந்து ஆதி சிருட்டியை அருளுகிறான். அப் பெருமான் குழம்பான கருவைச் சீவனோடு சேர்ப்பிக்கின்றான். அதனை உருவாக நீட்டி உடனாய் நின்று உடம்பில் எழுந்தருளியுள்ளதை அடியேன் கேட்டு நின்றேன்.

472. பூவுடன் மொட்டுப் பொருந்த அலர்ந்தபின்
காவுடைத் தீபம் கலந்து பிறந்திடும்
நீரிடை நின்ற குமிழி நிழலதாய்ப்
பாருடல் எங்கும் பரந்தெட்டும் பற்றுமே.

பொருள் : பூப்போன்ற யோனியும் மொட்டுப் போன்ற லிங்கமும் பொருந்த மலர்ந்தபின், சுக்கில சுரோணிதக் கலப்பால் ஒளி மயமான சீவ அணு உண்டாகும். நீரிடை எங்கும் பரந்து நின்ற குமிழியின் நிழல் போன்று புரியட்டக சரீரத்திலுள்ள சீவ அணு உடம் பெங்கும் கலந்து விடும். குமிழி-சீவ அணு எட்டு - புரியட்டக சரீரம். காவுடைத் தீபம் - கரு.

473. எட்டினுள் ஐந்தாகும் இந்திரி யங்களும்
கட்டிய மூன்று கரணமு மாய்விடும்
ஒட்டிய பாச உணர்வென்னும் காயப்பை
கட்டி அவிழ்த்திடும் கண்ணுதல் காணுமே.

பொருள் : முற்கூறிய எட்டனுள் மெய், வாய், கண், மூக்கு, செவியாகிய ஐந்து இந்திரியங்களும், அவற்றோடு தொடர்புடைய மனம், புத்தி, அகங்காரம் என்ற மூன்று அந்தக்கரணங்களும் ஆகும். அவற்றோடு சேர்ந்த ஆசா பாசங்களும் ஏற்ப உண்டாகிய உடம்பைப் பெருமானே முதலில் சேர்த்துப் பின்னர் அவிழ்த்து விடுவான், நீங்கள் அதனைக் காணுங்கள்.

474. கண்ணுதல் நாமம் கலந்துஉடம்பு ஆயிடைப்
பண்ணுதல் செய்து பசுபாசம் நீங்கிட
எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை
மண்முத லாக வருத்துவைத் தானே.

பொருள் : இறைவனது நாமமாகிய பிரணவத்தைக் கலந்து, உடம்பினில் நாதம் விளங்குமாறு செய்து, பசுத் தன்மையும் நீங்குமாறு நான்கு இதழ்களையுடைய மூலாதாரச் சக்கரத்தினால் உணர்த்தப்படும் பரப்பு அனைத்தையும் பிருதிவி தத்துவத்திலிருந்து தொடங்குகின்ற நியதியை வைத்துள்ளான். (கண்ணு ல் நாமம் - நமச்சிவாய)

475. அருளல்லது இல்லை அரனவன் அன்றி
அருளில்லை யாதலின் அவ்வோர் உயிரைத்
தருகின்ற போதுஇரு கைத்தாயர் தம்பால்
வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே.

பொருள் : சத்தியின்றிச் சிவன் இல்லை. இனிச் சிவன் இன்றிச் சத்தியும் இல்லை. ஆதலால் அச்சிறப்பான உயிர்க்கு உடம்பைத் தருகின்றபோது, இரு செவிலித்தாய் மாட்டு வைக்கும் அன்பை அமைத்து அருளினான். (இருகைத்தாயர் - குண்டலினி சத்தி, சிற்சத்தி ஆகிய இருதாயர், கிரியையும் ஞானமும் விளங்க இருவரின் உதவியும் சீவனுக்குத் தேவை என்க)

476. வகுத்த பிறவியின் மாதுநல் லாளும்
தொகுத்திருள் நீக்கிய சோதி யவனும்
பகுத்துணர் வாகிய பல்லுயிர் எல்லாம்
வகுத்துள்ளும் நின்ற தோர் மாண்பது வாமே.

பொருள் : அவரவர் வினைக் கீடாக வகுக்கப் பெற்ற பிறவியில் நல்ல சத்தியும் சத்திக் கேற்ற சோதி வடிவான இறைவனும், பல வகைத் திறத்தினுள்ள உணர்வு மயமான பல உயிர்கட்கு எல்லாம் வகை செய்யுமாறு அவ் அவற்றின் உயிர்க்கு உயிராய் நிற்கின்ற சிறந்த பொருளாகும்.

477. மாண்பது வாக வளர்கின்ற வன்னியைக்
காண்பதுஆண்பெண் அலிஎயனும் கற்பனை
பூண்பது மாதா பிதாவழி போலவே
ஆம்பதி செய்தான் அச்சோதிதன் ஆண்மையே

பொருள் : பெருமையோடு வளர்க்கின்ற ஒளியாகிய உயிரை ஆணாகவோ பெண்ணாகவோ அலியாகவோ காண்பது கற்பனையாகும். அது தாய் தந்தையின் தன்மையைக் கொண்டிருக்கும். அவ்வாறாகும் உயிருக் கேற்ற உடம்பினைப் படைத்தல் அச் சோதியாகிய இறைவனது வல்லமை யாகும். உயிருக்கு ஆண் பெண் என்ற வேறுபாடு இல்லை. உடம்பில்தான் ஆண் பெண் வேறுபாடாகும்.

478. ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகில் பெண்ணாகும்
பூண்இரண்டும் ஒத்துப் பொருந்தில் அலியாகும்
தாள்மிகு மாகில் தரணி முழுதாளும்
பாணவம் மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே.

பொருள் : கூட்டுறவின் போது ஆண் பண்பு மிகுந்தால் சிசு ஆணாகும். பெண் பண்பு மிகுந்தால் சிசு பெண்ணாகும். ஆண் பெண் குணம் சமமாகில் சிசு அலியாகும். பெண்ணின் நீக்க நிலைக்கும் கடந்த பூமானாகில் உலகை ஆளத்தக்க குழவியாகும். கூட்டுறவின் போது தாழ்ச்சி மனப்பான்மையிருந்தால் சுக்கிலம் பாய்வது நின்றுவிடும். (தாள் - முயற்சி, பாண் - தாழ்ச்சி)

479. பாய்ந்தபின் அஞ்சோடில் ஆயுளும் நூறாகும்
பாய்ந்தபின் நாலோடில் பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந்து இவ்வகை
பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலும் ஆமே.

பொருள் : சுக்கிலமானது ஆணிடமிருந்து பிரிந்து ஐந்து விரற்று கடை ஓடி விழுந்தால் பிறக்கும் குழந்தையின் ஆயுள் நூறாண்டாகும். நான்கு விற்கடை ஓடிவிழுந்தால் ஆயுள் எண்பதாகும். சுக்கிலத்தைச் செலுத்தும் வாயுவினை நன்றாக உணர்ந்து இவ்வகையாக ஓடி விழும்படி செய்யும் யோகிக்குச் செலுத்த முடியும்.

480. பாய்கின்ற வாயுக் குறையில் குறளாகும்
பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும்
காய்கின்ற வாயு நடுப்படில் கூனாகும்
பாய்கின்ற வாயுமா தர்க்கில்லைப் பார்க்கிலே.

பொருள் : சுக்கிலத்தைச் செலுத்துகின்ற வாயு குறையுமானால் குழந்தை குட்டையாக இருக்கும். அவ்வாறு செல்லுகின்ற வாயு மெலிந்திடின் குழந்தை முடமாகும். அவ்வாயு தடைப்படின் குழந்தை கூனாகும். ஆராயின் பெண்களுக்குச் செலுத்துகின்றவாயு இல்லை.

481. மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வைத்த குழவிக்கே

பொருள் : தாயின் வயிற்றில் கருவாய் அமைந்த குழந்தைக்கு அவள் வயிற்றில் மலம் மிகுமானால் அக்குழந்தை மந்தபுத்தி உள்ளவனாவான். அவ் வயிற்றில் நீர் மிகுந்தால் அக் குழந்தை ஊமையாகும். மலம்நீர் இரண்டும் அங்கு மிகுமாயின் அக்குழந்தை குருடாம்.

482. குழவியும் ஆணாம் வலத்தது ஆகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது ஆகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவி அலியாகும் கொண்டகால் ஒக்கிலே.

பொருள் : போக காலத்தில் ஆண்மகனிடம் பிராணன் சூரிய கலையில் (வல நாசியில்) இயங்குமாயின் ஆண் குழந்தையாகும். அப்போது சந்திர கலையில் (இட நாசியில் இயங்குமாயின் பெண் குழந்தையாம். சுக்கிலத்தைச் செலுத்தும் பிராண வாயுவோடு அபானன் என்னும் மலக் காற்று எதிர்த்தால் சுக்கிலம் சிதைந்து இரட்டைக் குழந்தையாகும். சூரிய கலை சந்திரகலை ஒத்து இயங்கினால் குழந்தை அலியாகும்.)

483. கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தெழில்
கொண்ட குழவியும் கோமளம் ஆயிடும்
கொண்டநல் வாயு இருவர்க்கும் குழறிடில்
கொண்டதும் இல்லையாம் கோல்வளை யாட்கே.

பொருள் : பிராணவாயு, புணரும் இருவருக்கும் ஒத்து இயங்குமாயின் கருவுட் கொண்ட குழந்தையும் அழகாக இருக்கும். அக் காலத்து இருவர்க்கும் பிராணவாயு தடுமாறினால், பெண்ணுக்குக் கரு உண்டாதற்கான வாய்ப்பு இல்லையாம்.

484. கோல்வளை உந்தியில் கொண்ட குழவியும்
தால்வலை யுள்ளே தயங்கிய சோதியாம்
பல்வளர்ந் துள்ளே பகலவன் பொன்னுருப்
போல்வளர்ந் துள்ளே பொருந்துரு வாமே.

பொருள் : பெண்ணினது கருப்பாசயத்தில் ஏற்றுக் கொண்ட குழந்தையும் அண்ணாக்கினுள்ளே விளங்கும் சோதி போன்றதாம். அஃது ஆணாகவோ பெண்ணாகவோ வளர்ந்து சூரியனது பொன்னுருவைப் போன்று வளர்ச்சி யுற்றுப் பூரணமான உருவத்தைப் பெறும். (தால்வளை - அண்ணத்தின் கண்ணதாம் தொளை)

485. உருவம் வளர்ந்திடும் ஒண்திங்கள் பத்தில்
பருவமது ஆகவே பாரினில் வந்திடும்
மருவி வளர்ந்திடு மாயையி னாலே அருவமது
ஆவதுஇங்கு ஆர்அறி வாரே.

பொருள் : உருவமானது நியதியான பத்து மாதங்கள் கருப்பையில் வளரும், பக்குவம் உண்டாகவே அச்சிசு பூமியில் பிறந்து வளரும், மாயை யாகிய வளர்ப்புத் தாயோடு பொருந்தி வளர்ந்திடும். ஆனால் அவ்வுடம்பினுள் பொருந்திய உயிர் வடிவமில்லாதது என்பதை யார் அறிவார் ? (ஒருவரும் அறிய மாட்டார்)

486. இட்டான் அறிந்திலன் ஏற்றவன் கண்டிலன்
தட்டான் அறிந்தும் ஒருவர்க்கும் உரைத்திலன்
பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்
கெட்டேன் இம்மாயையின் கீழ்மைஎவ் வாறே

பொருள் : வித்திட்ட தந்தையும் என்ன குழந்தை என்பதை அறியவில்லை. அதனை ஏற்றுக்கொண்ட தாயும் அந்த விவரத்தை அறியவில்லை. காரணத்துக் கேற்பக் காரியம் செய்யும் பிரமனாகிய தட்டானும் அறிந்தவனாயினும் ஒருவருக்கும் சொல்லவில்லை. அந்நியதியை அமைத்துக் கொடுக்கும் சதாசிவனும் அங்கேயிருக்கிறான். என்னே இம்மாயையின் மயக்குந் தன்மை இருந்தவாறு ! (தட்டான் - சிவன் என்றும் சிலர் பொருள் கொள்வர்.)

487. இன்புற நாடி இருவரும் சந்தித்துத்
துன்புறு பாசத்தில் தோன்றி வளர்ந்தபின்
முன்புற நாடி நிலத்தின்முன் தோன்றிய
தொன்புற நாடி நின்று ஓதலும் ஆமே.

பொருள் : இன்ப நாட்டத்தை விரும்பிய இருவர் கூட்டத்துத் துன்பம் பொருந்தும் பாசத்தில் தோன்றிய சிசு துன்பத்தில் வளர்ந்த பின்னர் மேன்மை பெற விரும்பி உலகில் எல்லாவற்றிற்கும் முன்னே தோன்றியுள்ள பழமைக்கும் பழமையான இறை வனைப் பொருந்த நாடி ஏத்தலுமாகும்.

488. குயிற்குஞ்சு முட்டையைக் காக்ககைக்கூட்டு இட்டால்
அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல்
இயக்கில்லைப் போக்கில்லை ஏன்என்பது இல்லை
மயக்கத்தால் காக்கை வளர்க்கின்ற வாறே.

பொருள் : குயிலின் முட்டையைக் காக்கையின் கூட்டில் வைத்தால் சந்தேகமின்றிக் காக்கை வளர்ப்பது போன்று இயக்கமில்லாமலும் போக்கில்லாமலும் ஏன் என்று வினவாமலும் தாயும் மயக்கத்தினால் உடம்பை வளர்க்கின்ற முறை இதுவாம். (காக்கைக் கூட்டில் குயில் முட்டையிடும் என்பதைக் குறிக்கின்றார்.)

489. முதற்கிழங் காய்முளை யாய்அம் முளைப்பின்
அதற்புத் லாய்ப்பல மாய்நின் றளிக்கும்
அதற்கது வாய்இன்பம் ஆவது போல
அதற்கது வாய்நிற்கும் ஆதிப் பிரானே.

பொருள் : தாவரமானது முதலில் கிழங்காய் இருந்தது. முளையாய் முளைக்குப்பின் அதன் புதராய், பின் பழமாய்ப் பயனைத் தரும். அதுவே அத்தாவரத்திற்கு இன்பமாக அமைவது போன்று எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பயன் அளிப்பதே ஆதியாகிய குறைவனுக்கு இன்பமாம்.

490. ஏனோர் பெருமையன் ஆகிலும் எம்இறை
ஊனே சிறுமையுள் உட்கலந்து அங்குளன்
வானோர் அறியும் அளவல்ல மாதேவன்
தானே அறியும் தவத்தின் உள்ளே.

பொருள் : மற்றைய தேவர்களைக் காட்டிலும் பெருமை உடையவன் ஆகிலும் எம் இறைவனாகிய பரமேசுவரன் ஊன் உடலிலுள்ள குற்றங்களிலும் தான் கலந்து அற்றினூடே விளங்குகின்றான். அப்படிப்பட்ட தேவதேவனை வானோர்களாலும் அறிய முடியாமல் மக்களே தாம் தங்கள் தவ வலிமையால் காண முடியும்.

491. பரத்திற் கரைந்து பதித்தநற் காயம்
உருத்தரித்து இவ்வுடல் ஓங்கிட வேண்டித்
திரைக்கடல் உபபுத் திரண்டது போலத்
திரித்துப் பிறக்கும் திருவுரு ளாலே.

பொருள் : மேலான பரம்பொருளினிடத்துச் சூக்குமமாய் ஒடுங்கிய நல்ல உடம்பு மீண்டும் பக்குவத்துக்கேற்பப் பயனை அடைய வேண்டி அலை கடலில் சூரிய வெப்பத்தால் உப்புத் திரண்டு உருவம் அடைவது போல இறைவனது அருளால் மீண்டும் தூல உடம்பு கருவில் உருவாகிறது.

இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Mon Mar 26, 2012 2:29 pm

15. மூவகைச் சீவ வர்க்கம்

(மூவகைச் சீவ வர்க்கம் என்பது விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் என்றபடி விஞ்ஞானகலர் ஆணவமலர் ஒன்று மட்டும் உடையவர். பிரளயகலர் ஆணவம் கன்மம் என இருமலமுடையவர். சகலர் ஆணவம், கன்மம், மாயையென மும்மலமுடையவர்.)

492. சத்தி சிவன்விளை யாட்டால் உயிராக்கி
ஒத்த இருமாயா கூட்டத்து இடையூட்டிச்
சுத்தமது ஆகும் துரியம் புரிவித்துச்
சித்தம் புகுந்து சிவமயம் ஆக்குமே.

பொருள் : சத்தியும் சிவனும் விளையாட்டாக உயிரைச் சூக்கும சரீரத்தில் பொருத்தி, சுத்தமும் அசுத்தமுமாகிய இரு மாயையுள் கூட்டுவித்து, சுத்தமாகிய மேலாம் நிலத்தை எய்துவித்து, சீவர்களது சித்தத்தில் விளங்கித் துரிய நிலையில் சீவரூபம் பெற அருளும்.

493. விஞ்ஞானர் நால்வரும் மெய்ப்பிரள யாகலத்து
அஞ்ஞானர் மூவரும் தாங்கு சகலத்தின்
அஞ்ஞானர் மூவரும் ஆகும் பதின்மராம்
விஞ்ஞானர் ஆதியர் வேற்றுமை தானே.

பொருள் : தெளிந்த ஞானமுடையோராகிய விஞ்ஞானகலர் நால்வகையினரும் பிரளயா காலத்தில் அந்த ஞானத்தைப் பெறும் பிரளயகலர் மூவகையினரும், உலக வாழ்வில் பொருந்தி அறியாமையுடைய சகலர் மூவகையினருமாக விஞ்ஞானகலராதிய மூவகைச் சீவவர்க்கமும் பத்துப் பிரிவினதாகும்.

494. விஞ்ஞானர் கேவலத் தார்அது விட்டவர்
தஞ்ஞானர் அட்டவித் தேசராம் சார்ந்துளோர்
எஞ்ஞானர் ஏழ்கோடி மந்திர நாயகர்
மெய்ஞ்ஞானர் ஆணவம் விட்டுநின் றாரே.

பொருள் : விஞ்ஞானகலர் ஆணவ மலர் மட்டும் உடையோராகிய தன்னலம் விட்டவரும், ஆன்ம ஞானம் உடையவராகிய அட்ட வித்தியே சுரபதம் சார்ந்தோரும், உயர்ந்த ஞானமுடையோராகிய ஏழு கோடி மந்திரேசுரரும் உண்மையான ஞானமுடையோராகிய ஆணவமல வாசனையும் விட்டு நின்றவருமாக நால்வகையினராம்.

495. இரண்டா வதில்முத்தி எய்துவர் அத்தனை
இரண்டாவ துள்ளே இருமல பெத்தர்
இரண்டாகும் நூற்றெட்டு ருத்திரர் என்பர்
முரண்சேர் சகலத்தர் மும்மலத் தாரே.

பொருள் : விஞ்ஞானகலரில் பக்குவம் குறைந்தோர் உடலுடன் கூடியிருந்தபோத சீவன் முத்தி அடையாமல் அடுத்த பிறவியில் சிவனை அடைவர். அவ்வளவே இருமலமுடைய இரண்டாவது பிரிவினரான பிரளயகாலர், இரண்டு பிறவிகளில் நூற்றெட்டு உருத்திரர் பதமடைவர் என்பர். மாயையின் வலிமையால் பிணிக்கப்பட்ட சகலர் மும்மலம் கெடாது உள்ளவராவர்.

496. பெத்தத்த சித்தொடு பேண்முத்தச் சித்தது
ஒத்திட்டு இரண்டிடை ஊடுற்றார் சித்துமாய்
மத்தது மும்மலம் வாட்டுகை மாட்டாதார்
சத்தத்து அமிழ்ந்து சகலத்து ளாரே.

பொருள் : மும்மலமுடைய சகலரில் சிலர் சித்தாகிய சிவத்தைப் பேணி ஞானமும் வடிவான சிவமாயினர். ஞானமும் கிரியையும் ஒத்துச் சதாசிவ நிலையில் பற்றி நின்றவர், ஞான வடிவாய் மும்மலங்களைக் கடந்து மேல் நிற்பவராவர். ஞானமும் கிரியையும் ஒத்து மும்மலத்தை நீக்க மாட்டாதார் நாத தத்துவம் வெளிப்படாமல் சகல ராவார்.

497. சிவமாகி ஐவகைத் திண்மலம் செற்றோர்
அவமாகச் சித்தர்முத் தாந்தத்து வாழ்வார்
பவமான தீர்வோர் பசுபாசம் அற்றோர்
நவமான தத்துவம் நாடிக் கொண்டாரே.

பொருள் : சிவமாகி ஐவகையான வலிமையுள்ள மலங்களையும் வென்றவர். வீண்போகாத சித்தராய் முத்தி பெற்று அழியாத நிலையில் இருப்பர். பசுபாசத் தன்மைகள் நீங்கப் பெற்றவராய் அவர் பிறவியினின்றும் நீங்குவர். அவர் சிவனது ஒன்பது நிலையையும் விரும்பிக் கொண்டவராவர்.

498. விஞ்ஞானர் ஆணவ கேவல மேவுவோர்
விஞ்ஞானர் மயையில் தங்கும் இருமலர்
அஞ்ஞானர் அச்சக லத்தர் சகலராம்
விஞ்ஞான ராதிகள் ஒன்பான்வே றுயிர்களே.

பொருள் : விஞ்ஞானகலர் ஆணவமாகிய ஒரு மலர் மட்டும் உடையவர் (அணு சதாசிவர்) விஞ்ஞானரைப் போன்று சுத்த மாயையில் உள்ள பிரளயாகலர் இருமலம் உடையவர். (அட்ட வித்தியேசர் முதலியோர்) கருவிகொண்டு உணரும் சகலரும் அஞ்ஞானத்தால் அறிவில்லாதவராவர். இம்மூவகையிலும் உள்ள உயிர் வருக்கங்கள் உத்தம மத்திம அதமமான தகுதி என்று ஒவ்வொரு பிரிவிலும் மும்மூன்றாய் ஒன்பது வகையுள்ளன.

499. விஞ்ஞான கன்மத்தால் செய்யகங் கூடி
அஞ்ஞான கன்மத்தி னால்சுவர் யோனிபுக்கு
எஞ்ஞான செய்தீண்டி யேயிடை யிட்டுப்போய்
மெய்ஞ்ஞான ராகிச் சிவமேவல் உண்மையே.

பொருள் : விஞ்ஞானகலர் மேலான ஞான கன்மத்தினால் உள்நின்று உணர்த்தப் பெற்றும், பிரளயகாலர் உள்நின்று உணர்த்தப் பெறாமையால் சுத்த வித்தியா மண்டலங்களை அடைந்தும், சகலர் ஞானம் படிப்படியாகப் பெற மாயா சரீரத்தைக் கொண்டு மீளமீள வந்து பிறந்தும், உண்மை ஞானத்தைப் பெற்றுச் சிவ சாயுச்சியம் பெறுதல் உறுதியாம். சுவர்யோனி - தேவப் பிறப்பு

500. ஆணவம் துற்ற அவித்தா நனவற்றோர்
காணிய விந்துவாம் நாத சகலாதி
ஆணவம் ஆதி யடைந்தோர் அவரன்றே
சேணுயர் சத்தி சிவதத் துவம் ஆமே.

பொருள் : ஆணவம், செறிந்துள்ள அஞ்ஞானத்தை நனவிலும் நீங்கியவர், விந்து நாதம் ஆகியவற்றைச் சகல நிலையில் (தேகத்துடனே) காண முடியும். ஆணவம் முதலான மலங்களைப் பொருந்திய சகலர்களோ மிக மேலான சிவ தத்துவ மண்டலங்களை மல நீக்கம் பெற்ற பின்னரே அடைவர்.

16. பாத்திரம்

(பாத்திரம் - கொள்கலன். அஃதாவது அறவழியில் ஈட்டிய பொருளைச் சேம வைப்பாக வைக்கும் இடமாகும். அதற்கு உரியவர் சிவ ஞானியராவர்)

501. திலமத் தனைபொன் சிவஞானிக்கு ஈந்தால்
பலமுத்தி சித்தி பரபோக மும்தரும்
நிலமத் தனைபொன்னை நின்மூடர்க்கு ஈந்தால்
பலமும்அற் றேபர போகமும் குன்றுமே.

பொருள் : எள் அளவு பொன்னைச் சிவஞானிக்குக் கொடுத்தால் அதன் பயன் மறுமைக்கு முத்தியும் இம்மைக்குச் சித்தியும் போகமும் உண்டாகும். பூமியளவு பொன்னை அஞ்ஞானிகளுக்குக் கொடுத்தால் பயனும் இல்லை; மறுமை இன்பமும் இல்லை. (பரபோகம் - திருவடிப் பேறு)

502. கண்டிருந்து ஆருயிர் உண்டிடுங் காலனைக்
கொண்டிருந்து ஆருயிர் கொள்ளும் குணத்தனை
நன்றுணர்ந் தார்க்குஅருள் செய்திடு நாதனைச்
சென்றுணர்ந் தார்சிலர் தேவரும் ஆமே.

பொருள் : காலம் வரும் வரை பாத்திருந்து உயிரைக் கவர்ந்து செல்லும் காலனை, செலுத்தியிருந்து ஏற்றுக் கொள்ளும் எண் குணத்தானும் நன்றாக அவனது உயிர்க்கு உயிராந் தன்மையை உணர்ந்தார்க்கு அருள்புரியும் நாதனு மாகிய இறைவனை அவன் விளங்கும் விந்து நாத மண்டலங்களில் சென்றுணர்ந்தவர் சிலர் ஒளி மண்டல வாசிகளாவர்.

503. கைவிட்டி லேன்கரு வாகிய காலத்து
மெய்விட்டி லேன்விகிர் தன்அடி தேடுவன்
பொய்விட்டு நானே புரிசடை யான்அடி
நெய்விட் டிலாத இடிஞ்சலும் ஆமே.

பொருள் : நான் தாய் வயிற்றில் கருவாய் இருந்தபோது சிவஞானத்தையே பற்றியிருந்தேன். மெய்ப் பொருளாம் இறைவனது திருவடியை உடம்போடு கூடியிருந்த போதும் நீங்காதிருந்தேன். பின் பொய்யாகிய உடம்பை விட்டு ஒளி மயமான திருவடியை நான் தேடுவேன். அது நெய்விட்டு எரியாத தூண்டா விளக்காகும்.

504. ஆவன ஆவ அழிவ அழிவன
போவன போவ புகுவ புகுவன
காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன்
ஏவன செய்யும் இளங்கிளை யோனே.

பொருள் : போகப் பொருள்கள் வருவன வரும். அவை நீங்குவன நீங்கும். கழிக்கப் பெறும் வினைகள் கழியும். அனுபவிக்க வேண்டி வருவன வந்து சேரும். ஆகையால் இவற்றை இறைவன் காட்டியருளக் கண்டிருப்பவனே அவன் ஆணையின் வண்ணம் செயலாற்றுகின்ற முதல் தகுதி உடையவன் ஆவான்.

17. அபாத்திரம்

(பாத்திரம் அல்லாதது அபாத்திரம், சற் பத்திரத்திற்கு ஈவது பயனுண்டு என்று முன் கூறிய ஆசிரியர் அசற் பாத்திரத்திற்கு ஈவதில் பயனில்லை என்று இங்குக் கூறுகிறார்.)

505. கோல வறட்டைக் குனிந்து குளகிட்டுப்
பாலைக் கறந்து பருகுவதே ஒக்கும்
சீலமும் நோன்பும் இலாதவர்க்கு ஈந்தது
காலம் கழிந்த பயிரது ஆகுமே.

பொருள் : அழகான வறட்டுப் பசுவுக்குக் குனிந்து நிமிர்ந்து பசுந்தழையிட்டு பாலைக் கறந்து குடிப்பது போலாகும், ஒழுக்கமும் விரதமும் இல்லாதவர்க்கு ஈவது மேலும் பருவம் தப்பிச் செய்த பயிரையும் போலப் பயனற்றதாகும். வறட்டை - கன்று ஈனாப்பசு. (மலட்டுப் பசு)

506. ஈவது யோக இயம நியமங்கள்
சார்வது அறிந்துஅன்பு தங்கும் அவர்க்குஅன்றி
ஆவது அறிந்துஅன்பு தங்கா தவர்களுக்கு
ஈவ பெரும்பிழை என்றுகொள் ளீரே.

பொருள் : (ஈவ-ஈவது) யோகத்துக்குத் தவிர்க்க வேண்டியவைகளையும் கொள்ள வேண்டியவைகளையும் அறிந்து அன்புடையார்க்கே தானம் செய்ய வேண்டும். அவ்வாறன்றிச் சார்பறிந்து அன்பு கொள்ளாதவர்க்குத் தானம் செய்வது பெரிய தவறாகும் என்று உலகவரே அறிந்து கொள்ளுங்கள். யோகம் - மனவொடுக்கம்; இயமம் - தீமை அகற்றல்; நியமம் - நன்மை ஆற்றல்.)

507. ஆமாறு அறியான் அதிபஞ்ச பாதகன்
தோமாறும் ஈசற்குந் தூய குரவற்கும்
காமாதி விட்டோர்க்கும் தரல்தந்து கற்பிப்போன்
போமா நரகில் புகான் போதங் கற்கவே

பொருள் : பஞ்சமா பாதகன் நல்லோர்க்குக் கொடுப்பதன் நன்மையை அறியாது கெடுவான். ஆனால் குற்றமற்ற ஞான குருவுக்கும் தூய்மையான பெரியோர்க்கும் காமம் வெகுளி மயக்கம் ஆகிய மூன்றையும் நீங்கினோர்க்கும் அவரவர்க்குக் கொடுத்து அவ்வந் நிலையிலே நிற்கச் செய்பவன் ஞானத்தைப் பெற்றமையால் பஞ்சமா பாதகன் ஆழும் நரகில் புகமாட்டான்.

508. மண்மலை யத்தனை மாதனம் ஈயினும்
அண்ணல் இவன்என்றே அஞ்சலி அத்தனால்
எண்ணி இறைஞ்சாதார்க்கு ஈந்த இருவரும்
நண்ணுவர் ஏழா நரகக் குழியிலே.

பொருள் : மண்மலை போன்று அத்துணை பெரிய பொருளைக் கொடுத்தாலும் சிவனே முன்னின்று அருளுகின்றான் என்று கூப்பிய கையினனாய் எண்ணி வணங்காதருக்குக் கொடுத்த புரவலரும் ஏற்ற இரவலருமாகிய இருவரும் ஏழு வகையான நரகங்களில் அழிந்து உழல்வர்.

18. தீர்த்தம்

(தீர்த்தம் - புகை நீர். புறத்தே காவிரியிலும் கங்கையிலும் தீர்த்தம் உள்ளது போல அகத்தேயும் மூலாதாரம் முதல் சகஸ்ரதளம் வரை தீர்த்தம் உள்ளது. இங்குள்ள தீர்த்தத்தை அறிந்து ஆடவேண்டும் என்கிறார்.)

509. உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்துநின்று ஆடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பரந்து திரிவரே
கள்ள மனமுடைக் கல்வியி லோரே.

பொருள் : மன மண்டலம் சூழவுள்ள உடம்பில் மூலாதாரம் முதலாகச் சகஸ்ரதளம் ஈறாகவுள்ள இடங்களில் ஏழுதீர்த்தங்கள் உள்ளன. தாம் செய்த வினை நீங்க இவ்விடங்களில் பொருந்தி ஆட மாட்டார், நேர்மை இல்லாத மனம் உடைய அறிவில்லோரே, பூமியில் பள்ளத்திலுள்ள தீர்த்தங்களையும் மலை மேட்டிலுள்ள சுனைகளையும் தேடி அலைவர்.

510. தளியறி வாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றும்
குளியறி வாளர்க்குக் கூடவும் ஒண்ணான்
வளியறி வாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும்
தெளியறி வாளர்தம் சிந்தையு ளானே.

பொருள் : தெளிந்த ஞான முடையாரது சிந்தையில் விளங்கும் சிவன் திருக்கோயில் வழிபாடு செய்பவர்க்குக் குளிர்ச்சியுள்ள பொருளாய்க் காட்சியளிப்பான். காம நெறியில் ஈடுபடுவார்க்கு அடைய முடியாதவனாக உள்ளான். பிராணாயமாய் பயிற்சியாளர்க்கு அவனை ஒரு சமயம் அடைதலும் கூடும்.

511. உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனைக்
கள்ளத்தி னாரும் கலந்தறி வார்இல்லை
வெள்ளத்தை நாடி விடும்அவர் தீவினைப்
பள்ளத்தில் இட்டதோர் பத்துள்ளாமே.

பொருள் : மன மண்டலத்துள்ளே உணருகின்ற ஒப்பற்ற பொருளை, கூடா வொழுக்குடைய கள்ள மனமுடையார் கலந்தறிய மாட்டார். நீர்ப் பிரதேசத்தை விரும்பிப் பாய்ச்சுகின்றவரது தீய செயலானது பள்ளத்திலுள்ள நீரை நீர்ச்சால் கொண்டு மேட்டுக்கு இறைப்பது போலப் பயனற்றதாம். நீர்ச்சால் துவாரங்களோடு இருந்தால் நீரை மேலேற்றிப் பயன்பெற முடியாது.

512. அறிவார் அமரர்கள் ஆதிப் பிரானைச்
செறிவான் உறைபதம் சென்று வலங்கொள்
மறியார் வளைக்கை வருபுனல் கங்கைப்
பொறியார் புனல்மூழ்கப் புண்ணியர் ஆமே.

பொருள் : ஒளி மண்டல வாசிகள் ஆகாய மண்டலத்தில் செறிந்துள்ள விந்து மண்டலத்தை அடைந்து ஆதியாகிய சிவபெருமானை அறிவார். காமக் கலையைத் தடுத்துச் செயம் பெறுவதால் பொருந்தும் பிரணவ கோஷத்தோடு வரும் கங்காப் பிரவாகத்தில் பொறிகளையுடைய சீவர்கள் நீராடவே புண்ணியர் ஆவர்.

513. கடலில் கெடுத்துக் குளத்தினில் காண்டல்
உடலுற்றுத் தேடுவார் தம்மைஒப் பாரிலர்
திடமுற்ற நந்தி திருவரு ளால்சென்று
உடலிற் புகுந்தமை ஒன்றறி யாரே.

பொருள் : கடலில் பொருளைப் போட்டு விட்டு அதனைக் குளத்தினில் காண்பவர் நீர்ப்பையாகிய கடலில் விந்து நீக்கத்தைக் கெடுத்து அதனை நெற்றிப் பிரதேசமாகிய குளத்தினில் ஒளியாகப் பெறுவாரை ஒப்பாக மாட்டார். அவ்வாறு ஆகாய பூத நாயகரான சதாசிவரின் அருளாலே சென்று உடம்பில் புகுந்து மேற்சென்றமையை அறிய மாட்டார். (நந்தி - சிவபெருமான்)

514. கலந்தது நீரது உடம்பில் கறுக்கும்
கலந்தது நீரது உடம்பில் சிவக்கும்
கலந்தது நீரது உடம்பில் வெளுக்கும்
கலந்தது நீர்அனல் காற்றது வாமே.

பொருள் : உடம்பில் கலந்த நீரானது (உணர்வானது) சிவன் தாமத குணவயப்பட்ட போது கீழ்நிலையில் கருமையாகப் புலப்படும். உடம்பில் கலந்த நீரானது இராசத குணநிலையில் கீழேயுள்ள மூலவாயு நெற்றிக்கு வந்தபோது மாதுளம் பூப்போன்ற செஞ்சோதியாகத் தோன்றும். கலந்த நீரானது சாத்துவிக நிலையில் சிதாகாயத்தை அடைந்த போது வெண்ணிற ஒளியாகத் தோன்றும் அவ்வாறு கலந்த நீரானது அக்கினியின் பிரகாசமும் காற்றின் இயக்கமும் பொருந்தியே உள்ளது.

19. திருக்கோயில் இழிவு

(திருக்கோயில் இழிவு என்பது, திருக்கோயிலுக்குச் செய்யும் இழிவு என்றபடி. திருக் கோயிலுக்குச் செய்யும் இழிவால் வரும் கேடு இங்குக் கூறப்பெறும்.)

515. தாவர லிங்கம் பறித்தொன்றில் தாபித்தால்
ஆவதன் முன்னே அரசுநிலை கெடும்
சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும்
காவலன் பேர்நந்தி கட்டுரைத் தானே.

பொருள் : கோயிலில் உள்ள அருவுருவத் திருமேனியாகிய இலிங்கத்தைப் பிடுங்கி வேறோர் இடத்தில் வைத்தால் வைப்பதன் முன்னம் ஆட்சி அழியும். பிடுங்கி வைத்தவன் இறப்பதற்கு முன்னே தொழு நோயால் பீடிக்கப் படுவான். இவ்வாறு என்னுயிர்க் காவலனாகிய சிவபெருமான் கூறியருளினான். (பேர் நந்தி - முழுமுதற் பெருங் கடவுள்)

516. கட்டுவித் தார்மதில் கல்லொன்று வாங்கிடில்
வெட்டுவிக் கும்அபி டேகத்து அரசரை
முட்டுவிக் கும்முனி வேதிய ராயினும்
வெட்டுவித் தேவிடும் விண்ணவன் ஆணையே.

பொருள் : கட்டுவிக்கப் பெற்ற நிறைந்த மதிலில் ஒரு கல்லைப் பெயர்த் தெடுத்தால் அத்தீமை மகுடாபிஷேகம் செய்விக்கப் பெற்ற மன்னரை வெட்டி வீழ்விக்கச் செய்யும். முனிவரது தவத்தை முடிவு பெறாமல் செய்யும். கல்லைப் பெயர்த்தவர் வேதியராக இருந்தாலும் அவர்களையும் வெட்டி வீழ்த்தும்படி செய்யும். இது சிவனது ஆணையாகும். (விண்ணவன் - பரவெளியாகிய சிவபெருமான்.)

517. ஆற்றரு நோய்மிக்கு அவனி மழையின்றிப்
போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்
கூற்றுதைத் தான்திருக் கோயில்கள் எல்லாம்
சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே.

பொருள் : இயமனை உதைத்தவனாகிய இறைவன் எழுந்தருளியுள்ள கோயில்களில், வேதாகமங்களில் விதிக்கப் பெற்ற நித்திய நைமித்திய வழிபாடுகள் தப்புமாயின் பொறுக்க முடியாத நோய் மிகுந்து, பூமியில் மழை குறைந்து, போற்றுதற்கு அருமையான அரசரும் போர் செய்யும் திறமையில் குன்றுவர்.

518. முன்னவ னார்கோயில் பூசைகள் முட்டிடின்
மன்னர்க்குத் தீங்குள வாரி வளம்குன்றும்
கன்னம் களவு மிகுந்திடும் காசினி
என்னரு நந்தி எடுத்துரைத் தானே.

பொருள் : முதல்வனுடைய திருக்கோயில் பூசைகள் நடவாமல் தடைப் படுமாயின் அரசருக்குத் தீமைகள் உளவாம். மழைநீர் வளப்பம் குறையும். உலகில் கன்னக் கோல் கொண்டு செய்யும் களவு மிகும் என்று அருமையான நந்தி எடுத்துக் கூறினான்.

519. பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால்
போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்
பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றே
சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே.

பொருள் : தகுதிபெறாத பெயரளவில் உள்ள பிராமணன் சிவபெருமானுக்குப் பூசை செய்தால், போர் மேல் செல்லும் மன்னர்க்குப் பொல்லாத வியாதி உண்டாம். உலக முழுவதும் வியாபித்துள்ள நாட்டில் பஞ்சமும் உண்டாகும் என்று சிறப்பு மிக்க நந்தியெம் பெருமான் ஆராய்ந்து கூறியருளினான்.

20. அதோமுக தெரிசனம்

(சதாசிவ மூர்த்தி ஈசானம், தற்புருடம், அகோரம், வாம தேவம், சத்தியோபாதம் என ஐந்து முகங்கள் உள என்று ஆகமம் கூறும். இவையன்றிக் கீழ் நோக்கி முகம் ஒன்றுண்டு, அதுவே அதோமுகம், அதனைத் தரிசித்தல் அதோமுக தெரிசனமாம்.)

520. எம்பெரு மான்இறை வாமுறை யோஎன்று
வம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்ல
அம்பவள மேனி அறுமுகன் போயவர்
தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே.

பொருள் : எம்பெருமானே ! இறைவா ! நாங்கள் வருந்துவது முறையோ என்று ஒளிமண்டல வாசிகளாகிய வானவர்கள் இருள் மண்டல வாசியாகிய அசுரனது வலிமையைப் பற்றி முறையிட, அழகிய பவழம் போன்ற மேனியை யுடைய அறுமுகனே ! நீ நாம் அளிக்கும் சேனையுடன் சென்று அத் ÷ தவர்களின் பகையை அழித்து வருக என்று கூறியருளிய இறைவனே தற்பரனாக உள்ளான்.

521. அண்டமொடு எண்டிசை தாங்கும் அதோமுகம்
கண்டங் கறுத்த கருத்தறி வார்இல்லை
உண்டது நஞ்சென்று உரைப்பர் உணர்விலோர்
வெண்டலை மாலை விரிசடை யோற்கே.

பொருள் : வெண்மையான தலை மாலையை அணிந்த விரிந்த சடையையுடைய சிவபெருமானுக்கு அண்டங்களையும் எட்டுத் திசைகளையும் தாங்கிக் கொண்டுள்ள அதோமுகத்தின் கழுத்துக் கருமையாக உள்ள உண்மையை அறிகின்றவர் யாரும் இல்லை. அவர் நஞ்சுண்டதால் கண்டம் கறுத்தது என்பர் அறிவிலாதார்.

522. செய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப்
பொய்யே யுரைத்துப் புகழும் மனிதர்கள்
மெய்யே உரைக்கில் விண்ணோர் தொழச் செய்வன்
மைதாழ்ந்து இலங்கும் மிடறுடை யோனே.

பொருள் : கருமை நிறம் பொருந்தி விளங்கும் கண்டத்தை யுடைய பெருமான், செழுமையான கடல் சூழ்ந்த உலகில் பொய்யான கதை பேசிப் புகழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் உண்மையான தத்துவத்தைப் பற்றிப் பேசுவார்களாயின் தேவரும் தொழும் தகுதியை அவர்கட்கு அருளுவான். இவ்வுலகினைப் படைத்த அவன் பொய்யினையும் மெய்யினையும் அறிவான்.

523. நந்தி எழுந்து நடுவுறு ஓங்கிய
செந்தீக் கலந்துள் சிவனென நிற்கும்
முந்திக் கலந்தங்கு உலகம் வலம்வரும்
அந்தி இறைவன் அதோமுகன் ஆமே.

பொருள் : மூலாதாரத்திலுள்ள உருத்திரன் சுழுமுனை வழியாக மேலெழுந்து சிரசின் மேல் செவ்வொளியுள் கலந்து சிவன் என்ற பேருடன் நிற்கும். அப்போது முன்னைய நிவர்த்தியாதி புவனங்களில் இயல்பை மாற்றி வெற்றி கண்டு மேலெழுந்து நிற்கும். இவ்வாறு செய்வது முடிவினைச் செய்கின்ற சிவனது அதோமுக மாகும்.

524. அதோமுகம் கீழ்அண்ட மான புராணன்
அதோமுகம் தன்னோடும் எங்கும் முயலும்
சதோமுகத்து ஒண்மலர்க் கண்ணிப் பிரானும்
அதோமுகன் ஊழித் தலைவனும் ஆமே.

பொருள் : அதோமுகம் என்பது கீழே பிரணவமாகிய அண்டத்தில் பழமையாக உள்ளது. அது சூக்கும உடலில் எங்கும் செல்லும் ஆற்றலை யுடையது. சத்தாகிய ஓம் என்னும் பிரணவ வடிவாயுள்ள ஒளி பொருந்திய பராசத்தியுடன் கூடிய பிரனும் அதோ முகனாயும் ஊழியைச் செய்பவனாயும் உள்ளான்.

525. அதோமுகம் மாமல ராயது கேளும்
அதோமுகத் தால்ஒரு நூறாய் விரிந்து
அதோமுகம் ஆகிய அந்தமில் சத்தி
அதோமுகம் ஆகி அமர்ந்திருந் தானே.

பொருள் : கவிழ்ந்த முகமுடைய பெரிய மலராகிய விந்தையைக் கேளுங்கள். சிரசில் கவிழ்ந்துள்ள சகஸ்ர தளத்திலிருந்து நூறு நாடிகள் கீழ் நோக்கி விரிந்து, கவிழ்ந்துள்ள நாடித் தொகுதிகளிலுள்ள அழிவில்லாத சத்திகளுடன் அதோ முகமாகிப் பொருந்தி இறைவனும் நின்றான்.

21. சிவ நிந்தை (சிவ நிந்தையாவது, சிவனே முழுமுதல் என்று உணராது நித்தித்தல்)

526. தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே
அளிவுறு வார்அம ராபதி நாடி
எளியனென்று ஈசனை நீசர் இகழில்
கிளியொன்று பூஞையால் கீழது வாகுமே.

பொருள் : மேலோர் தெளிந்த ஞானத்தால் சிந்தையினிடத்துத் தேவ உலக அதிபனாகிய சிவனை நாடி அருள் பெறுவர். அவ்வாறு இருக்கச் சிவன் எளிமையானவன் என்று கீழோர் இகழ்வாராயின் கிளியானது பூனையின் கீழ்ப்பட்டுக் கெடுவது போலாகும்.

527. முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம்
விளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார்
அளிந்தமுது ஊறிய ஆதிப் பிரானைத்
தளிந்தவர்க்கு அல்லது தாங்கஒண் ணாதே.

பொருள் : உலர்ந்து போன தேவரும் அசுரரும் எல்லாரும் காமத்தால் கெட்டுப் போனவர்களாம். அவர்கள் உடம்பில் அதோ முகத்தில் விளங்கும் உண்மைப் பொருளை உணரமாட்டார்கள். அன்பினால் கசிந்து அமுதம் போல் சுரக்கும் ஆதியாகிய பிரானை உடம்பெங்கும் தேக்கி உண்பவர்க்கன்றித் தாங்க முடியாதாகும்.

528. அப்பகை யாலே அசுரரும் தேவரும்
நற்பகை செய்து நடுவே முடிந்தனர்
எப்பகை யாகிலும் எய்தார் இறைவனைப்
பொய்ப்பகை செய்யினும் ஒன்றுபத் தாமே.

பொருள் : அசுரரும் தேவரும் ஈசுவர நிந்தையினால் தீராப் பகை கொண்டு உய்தி பெறாது இடையே அழிந்தனர். ஈசுவரனிடம் எவ்வாறு பகை கொள்ளினும் அவனை அடைய முடியாது. ஈஸ்வரனைப் போலியாகவாவது பகை செய்யினும் தீமை ஒன்று பத்தாக வளரும். (இறைவனை - முழுமுதற் சிவனை.)

529. போகமும் மாதர் புலவி அதுநினைந்து
ஆகமும் உள்கலந்து அங்குஉள ராதலில்
வேதிய ராயும் விகிர்தன்நாம் என்கின்ற
நீதியுள் ஈசன் நினைப்புஒழி வாரே.

பொருள் : வேதியராகப் பிறந்தும் பெண்களது போகத்தையும் ஊடலையும் எண்ணி மார்பிலும் சிந்தையிலும் கலந்துளராதலாலும் நாம் பிரமன் என்கின்ற தர்மத்து உளராதலாலும் இறைவனைப் பற்றிய எண்ணத்தைச் சிந்தையில் கொள்ள மாட்டார். (நாமே பிரமம் என்போர் ஈசனை எண்ணாது இகழ்வர்.)

22. குரு நிந்தை (குரு நித்தையாவது, குருவைப் பழித்தலாம். குருவைப் பழித்தலும் அடாத செயல் என்க. குருவைப் பழித்தவர் எய்தும் துன்பம் இங்குக் கூறப் பெறும்.)

530. பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள்
உற்றிருந் தாரை உளைவன சொல்லுவர்
கற்றிருந் தார்வழி உற்றிருந் தார்அவர்
பெற்றிருந் தார்அன்றி யார்பெறும் பேறே.

பொருள் : கீழ்மக்கள் ஞானம் பெற்றவரையும் பேண மாட்டார்கள். இவர் உடனிருந்தவரையும் வருந்தும்படி சொல்லுவர். கற்றறிந்தோரிடம் பொருந்தியவரே ஞானம் பெற்றோர் ஆவர். இவரன்றி யார் இப் பேற்றினைப் பெற முடியும் ?

531. ஓரெழுத்து ஒருபொருள் உணரக் கூறிய
சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர்
ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங்கு ஓர்உகம்
பாரிடைக் கிருமியாய்ப் பழகுவர் மண்ணிலே.

பொருள் : ஓம் என்ற பிரணவத்தின் பொருளைச் சீடன் உணரும்படி செய்த பெருமை பெற்ற நாதத்தை எழுப்பித் தந்த குருவை மனம் நோகும்படி செய்தவர் ஊர் சுற்றித்திரியும் நாயாகப் பிறந்து பிறகு ஒரு யுகம் பூமியில் புழுவாய்க் கிடப்பர்.

532. பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்
சித்தம் கலங்கச் சிதைவுகள் செய்தவர்
அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் மாண்டிடும்
சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே.

பொருள் : இல்லற ஞானிகளும் தத்துவ ஞானிகளும் மனம் வருந்தக் கேடு செய்தவரது பொருளும் உயிரும் ஒரு வருடத்தில் நீங்கி விடும். இது உண்மை. சதாசிவத்தின் மேல் ஆணை. (பத்தினி பத்தர்கள் என்பதற்குக் கற்புடைப் பெண்டிர் என்று சிலர் பொருள் கொள்வர்.)

533. மந்திரம் ஒரெழத்து உரைத்த மாதவர்
சிந்தையில் நொத்திடத் தீமைகள் செய்தவர்
நுந்திய சுணங்களாய்ப் பிறந்து நூறுரு
வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே.

பொருள் : ஓரெழுத்து ஒரு மொழியாகிய பிரணவத்தை உபதேசித்த பெரிய தவத்தையுடைய குருவை மனம் வருந்தும் வண்ணம் தீமை புரிந்தவர், இழித்து ஒதுக்கப் பட்ட நாயாய் நூறு பிறவிகள் எடுப்பர். பின்னு தாழ்ந்த பிறப்பெடுத்து மண்ணில் மடிவர்.

534. ஈசன் அடியார் இதயம் கலங்கிடத்
தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்
வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும்
நாசமது ஆகுமே நம்நந்தி ஆணையே.

பொருள் : சிவனடியார் மனம் கலங்கினால் தேசமும் நாடும் பிற சிறப்புகளும் அழியும். இந்திரனது ஆட்சி பீடமும் பெரிய மன்னரது ஆட்சி பீடமும் நாசமாகும். இது நம் சிவபெருமான் மேல் ஆணையாகும்.

535. சன்மார்க்க சற்குருச் சந்நிதி பொய்வரின்
நன்மார்க்க மும்குன்றி ஞானமும் தங்காது
தொன்மார்க்க மாய துறையும் மறந்திட்டுப்
பன்மார்க்க மும்கெட்டுப் பஞ்சமும் ஆமே.

பொருள் : சன்மார்க்கத்தைப் போதித்த நல்லாசிரியரின் முன்பாகப் பொய் கூறினால் முன்பு பெற்றிருந்த தவமும் கெட்டு, ஆசாரியிடம் பெற்ற ஞானோபதேசமும் தங்காது. பழமையாக உபதேசிக்கப்பட்ட நெறியையும் மறந்து ஆன்ம வளர்ச்சிக்குரிய பிற நெறியும் போய் வறுமையும் உண்டாகும்.

536. கைப்பட்ட மாணி தானிடை கைவிட்டு
மெய்ப்பட்ட கல்லைச் சுமப்பேன் விதிபோன்றும்
கைப்பட்ட நெய்பால் தயிர்நிற்கத் தானறக்
கைப்பிட்டுண் பான்போன்றும் கன்மிஞானிக் கொப்பே.

பொருள் : கையில் அகப்பட்ட பெருமையுடைய மாணிக்கத்தைக் கைவிட்டு காலில் பட்ட கல்லை எடுத்துச் சுமப்பானின் வினையைப் போலவும், கையிலுள்ள நெய், பால், தயிர், உணவு இருக்க, தனக்கு நன்மை தராத கையளவு பிட்டு உண்பான் போலவும் ஆகும். ஞானியரோடு கருமம் செய்வானை எண்ணுதல் (ஞானத்தை விட்டுக் கிரியையினைச் செய்வதாகும்.)

23. மயேசுர நிந்தை (மகேசுரரைப் பூசை செய்பவர் மயேசுரர். அவரை நிந்தை செய்வது மயேசுர நிந்தை. சிவனடியாரைப் பழிப்பார் அடையும் தீமை இங்குக் கூறப்பெறும்.)

537. ஆண்டான் அடியவர் ஆர்க்கும் விரோதிகள்
ஆண்டான் அடியவர் ஐயம்ஏற்று உண்பவர்
ஆண்டான் அடியாரை வேண்டாது பேசினோர்
தாம்தாம் விழுவது தாழ்நரகு ஆகுமே.

பொருள் : சிவத்தை வழிபடும் அடியார்கள் உலகியல் நெறிக்கு மாறுபட்டவர். சிவனடியார் பசி வந்துற்றபோது பிச்சை எடுத்து உண்பவர். அத்தகைய அடியாரை வெறுக்கத்தக்க வகையில் வசை மொழிந்தவர் மிகத் தாழ்மையான நரகத்தில் வீழ வகை செய்து கொண்டவராவர்.

538. ஞானியை நிந்திப் பவனும் நலன்என்றே
ஞானியை வந்திப் பவனுமே நல்வினை
யான கொடுவினை தீர்வார் அவன்வயம்
போன பொழுதே புகுஞ்சிவ போகமே.

பொருள் : சிவஞானியைத் தூற்றுபவனும், நல்லவன் என்று ஞானியைப் போற்றுபவனும் முறையே கொடிய வினையும் நல்ல வினையும் நீங்குவர். அச்சிவஞானியை அடைந்த பொழுதே சிவபோகம் சித்திக்கும். (இருவினைஎம் நீங்கியபின் பேரின்பம் கிட்டும் என்றபடி.)

24. பொறையுடைமை (பொறை யுடைமையாவது, பொறுத்தலை உடைமை, உடம்பிலுள்ள அமுதம் வற்றி அழியாமல் பொறுத்தல் பொறை நிலை என்க)

539. பற்றிநின் றார்நெஞ்சில் பல்லிதான் ஒன்றுண்டு
முற்றிக் கிடந்தது மூக்கையும் நாவையும்
தெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள்
வற்றாது ஒழிவது மாகமை யாமே.

பொருள் : மெய்ந்நெறி பற்றி வழுவாமல் நிற்கும் யோகியர் நெஞ்சில் மெய்ப் பொருளோடு கூட வேண்டுமென்ற எண்ணமாகிய பல்லி ஒன்றுள்ளது. அது மூக்கையும் நாக்கையும் முற்றுகை யிட்டு அவற்றைச் செயலும்படி அப்பொழுது மாறி நின்று இருளில் செலுத்துகின்ற மன மண்டலத்தில் உலராது அமுதத்தைப் பெருகச் செய்வது மிக்க பொறுமையாகும்.

540. ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பாலொத்த மேனியன் பாதம் பணிந்துய்ய
மாலுக்கும் ஆதி பிரமற்கும் மன்னவன்
ஞாலத்து இவன்மிக நல்லன்என் றாரே.

பொருள் : பால் போன்ற வெண்ணிற ஒளியில் விளங்கும் சிவனது திருவடியை வணங்கி உய்தி பெறுவதற்காக அவனது கொலு மண்டபத்தைச் சூழ்ந்துள்ள அழிவில்லாத தேவர்களிடம், பொறுமையுடைய இந்த ஞானி திருமாலுக்கும் ஆதிப் பிரமனுக்கும் தலைவன்; உலகத்துக்கும் மிகச் சிறப்புடையவன் என்று சிவபெருமான் அருளிச் செய்தான். (உலாப்பிலி - அழிவில்லாத சிவன். இப்பாடல் சிறு மாறுதல்களுடன் 108 ஆம் பாடலாக வந்துள்ளது.)

541. ஞானம் விளைந்தவர் நம்மிடம் மன்னவர்
சேனை வளைந்து திசைதொறும் கைதொழ
ஊனை விளைத்திடும் உம்பர்தம் ஆதியை
ஏனை வளைந்தருள் எட்டலும் ஆமே.

பொருள் : மெய்ஞ்ஞானம் கைவரப் பெற்றவர் சீவர்களுக்கு மன்னராவர். அத்தகைய ஞானியைக் கருவி கரணங்களாகிய சேனை சூழ்ந்து அவர் ஏவல் வழி நிற்ப அவரது உடம்பை மாற்றிப் படைக்கும் தேவ தேவனை அவர் ஏனை வழி நீத்து ஞானத்தால் அணுகி அருள் கூட முடியும்.

542. வல்வகை யாலும் மனையிலும் மன்றிலும்
பல்வகை யானும் பயிற்றி பதம்செய்யும்
கொல்லையி னின்று குதிகொள்ளும் கூத்தனுக்கு
எல்லையி லாத இலயம்உண் டாமே.

பொருள் : ஆன்மாக்களின் பக்குவத்துக்குத் தக்கவாறு அவரது உடலிலும் உள்ளத்திலும் பலவாறாக இன்ப துன்பங்களை நுகர்வித்துச் சிவபெருமான் பக்குவம் செய்வான். மூலாதாரத்தினின்று ஆதார நிராதாரக் கலைகளிலும் ஆடுகின்ற அக்கூத்தப் பெருமானுக்கு அக் கூத்தின் பயனாக அளவில்லாத ஒருமைப்பாடு உண்டாகும். (கொல்லை - மூலாதாரமே.)

இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Mon Mar 26, 2012 2:55 pm

25. பெரியாரைத் துணைக்கோடல்

(பெரியாரைத் துணைக் கோடலாவது ஞானியரைத் துணையாகப் பெறுதல். பெரியாரது கூட்டுறவு நன்மையைப் பயக்கும்.)

543. ஓடவல் லார்தம ரோடு நடாவுவன்
பாடவல் லார்ஒலி பார்மிசை வாழ்குவன்
தேடவல் லார்க்குஅருள் தேவர்பி ரானொடும்
கூடவல் லார்அடி கூடுவன் யானே.

பொருள் : தலயாத்திரை செய்வாரோடு சேர்ந்து யானும் தலயாத்திரை செய்வேன். பாடுகின்றவர் ஒலியைச் செவி வழியே கேட்டு இன்புற்று வாழ்வேன். அகத்தே தேடி அடைய வல்லார்க்கு அருளுகின்ற மகாதேவனோடும் பொருந்தும் வல்லமையுடையவர் திருவடியை யானும் பொருந்தியிருப்பேன், (ஓடவல்லார் - சரியை யாளர்; பாடவல்லர் - கிரியை யாளர்; தேடவல்லார் - யோகியர்; கூடவல்லார் - ஞானியர்)

544. தாமிடர்ப் பட்டுத் தளிர்போல் தயங்கினும்
மாமனத்து அங்குஅன்பு வைத்தது இலையாகும்
நீஇடர்ப் பட்டிருந்து என்செய்வாய் நெஞ்சமே
போமிடத்து என்னொடும் போதுகண் டாயே.

பொருள் : கொழு கொம்பில்லாமல் துவண்டு தீயிடைப்பட்ட தளிர்போல் வாடினும் மனவுறுதியுடையோர் பெருமையுடைய (நன்மையைத் தரும் மனத்தினிடம் அன்பு வைத்து அதன் வழிச் செல்வதில்லை. மனனே ! நீ தனியே துன்பப் பட்டிருந்து என்ன செய்யப் போகிறாய் ? இறைவனை நாடிப் போகும் போது என்னோடு வருவாயாக.)

545. அறிவார் அமரர் தலைவனை நாடிச்
செறிவார் பெறுவர் சிவதத் துவத்தை
நெறிதான் மிகமிக நின்றருள் செய்யும்
பெரியார் உடன்கூடல் பேரின்பம் ஆமே.

பொருள் : உண்மையை அறியும் பெரியோர் தேவதேவனை விரும்பி அவனிடம் பொருந்தி யிருப்பர். இவர் ஆன்ம தத்துவம் வித்தியா தத்துவம் கடந்து சிவ தத்துவத்தில் விளங்குவர் நன்னெறியில் நின்றொழுகி அடைந்தார்க்கும் உபதேசிக்கின்ற யான் எனது என்னும் செருக்கறுத்த பெரியோருடன் கூடியிருத்தல் பேரின்பமாகும். (தத்துவம் - மெய்யுணர்வு)

546. தார்சடை யான்தன் தமராய் உலகினில்
போர் புகழா எந்தை பொன்னடி சேருவர்
வாயடை யாவுள்ளம் தேவர்க்கு அருள்செய்யும்
கோவடைந்து அந்நெறி கூடலும் ஆமே.

பொருள் : பெரியோருடன் கூடினவர் நீண்ட கிரணங்களை யுடைய சிவபெருமான் உறவினராய், உலக நடையில் ஒழுகுபவர்களால் புகழப் படாதவனான் என் ஐயனின் திருவடியை அடைவர். வாய் பேசாமல் மௌனமாய் ஆன்மாவில் அரனைத் தியானிப்பார்க்கு அருள் புரிகின்ற சிவனை அடைந்து அச்சிவநெறியில் இரண்டறக் கலத்தலும் அப்பெரியார் கூட்டத்தால் அமையும்.

547. உடையான் அடியார் அடியா ருடன்போய்ப்
படையார் அழல்மேனிப் பதிசென்று புக்கேன்
கடையார நின்றவர் கண்டறி விப்ப
உடையான் வருகென ஓலம்என் றாரே.

பொருள் : எல்லாமுடைய சிவனது அடியார்க்கு அடியாராய் உள்ளவரிடம் கூடி, சிவச் சோதியில் பொருந்திச் சிவபுரத்தில் புகுந்தேன். சிவபுரத்தில் கடைவாயிலில் பொருந்தி நின்றவர் என்னைப் பார்த்ததும் சிவபெருமானிடம் விண்ணப்பிக்க, சிவபெருமான் என்னை அழைத்து வருமாறு பணிக்கக் கடைவாயில் காப்பாளர் அபய முத்திரை காட்டி அழைத்தனர். (ஓலம் - அடைக்கலமொழி)

548. அருமைவல் லோன்கலை ஞானத்துள் தோன்றும்
பெருமைவல் லோன்பிற விச்சுழி நீந்தும்
உரிமைவல் லோன்உணர்ந்து ஊழி இருக்கும்
திருமைவல் லாரொடு சேர்ந்தனன் யானே.

பொருள் : பெரியாரைக் கூட வல்ல அருமையானவன் கலை ஞானத்துள் விளங்கியிருப்பான். பெருமை யுடைய ஞானத்தைப் பெற்றவனோ பிறவிச் சூழலினின்றும் நீங்கப் பெறுவான். உரிமையோடு பழகும் தன்மையில் வல்லவன் சிவபெருமானை அகத்தே உணர்ந்து அழிவின்றி வாழ்வான். நான் அருமையும் பெருமையும் உரிமையும் உடைய பெரியோரது துணையைப் பெறும் பேறு பெற்றேன். (கலைஞானம் - திருமுறை உணர்வு)

இரண்டாம் தந்திரம் முற்றிற்று.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் Empty திருமந்திரம் | மூன்றாம் தந்திரம்

Post by இறையன் Mon Mar 26, 2012 2:59 pm

1. அட்டாங்க யோகம் (வீர ஆகமம்)

(அட்டாங்க யோகம் என்பது இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்று எட்டுவகை உறுப்புக்களைக் கொண்ட யோகம் என்றபடி, அறவாழ்வைக் கூறிப் பின் இறையுண்மை கூறிய ஆசிரியப் பெருந்தகை அவ் இறைவனை அடைதற்குரிய நெறிவகைகளைக் கூறத் தொடங்குகிறார்.)

549. உரைத்தன வற்கரி ஒன்று மூடிய
நிரைத்த இராசி நிரைமுறை எண்ணிப்
பிரைச்சதம் எட்டும் பேசியே நந்தி
நிரைத்த இயமம் நியமம் செய்தானே.

பொருள் : பலவாறாகப் பேசப்பெற்று வந்த பிராணன் என்ற ஒன்று இழுக்கப் பெற்றும், அது பன்னிரண்டு விரற்கடை கண்டத்துக்குக் கீழும் கண்டத்துக்கு மேலும் இயங்குமாறும் நினைந்து, அட்டாங்க யோகத்தை எடுத்துரைத்தே குருநாதன் முறையாகத் தீமையைப் போக்குவதற்கும் நன்மையைப் பற்றுவதற்கும் வழிவகை செய்தருளினான்.

550. செய்த இமயம் நியமம் சமாதிசென்று
உய்யப் பராசத்தி உத்தர பூருவம்
எய்த கவச நியாசங்கள் முத்திரை
எய்த உரைசெய்வன் இந்நிலை தானே.

பொருள் : முற்கூறியவாறு உரைசெய்த இயம நியம ஒழுக்கங்களில் நின்று சமாதி பொருந்தி உய்தி பெறவும், முன்னின்று வழிகாட்டிப் பின்னின்று தூங்கிக் கொண்டிருக்கும் பராசக்தியின் துணையை அடையவும் கவச நியாசங்கள் முத்திரைகளை அறிந்து ஒழுகவும் ஆகிய இம்முறையில் யான் கூறிச செல்வேன். (இயமம் - புலனடக்கல்; நியமம் - ஒழுக்க நெறி நிற்றல், சமாதி - தன்னை மறந்திருத்தல்)

551. அந்நெறி இந்நெறி என்னாதுஅட் டாங்கத்து
அந்நெறி சென்று சமாதியி லேநின்மின்
நன்னெறி செல்வார்க்கு ஞானத்தில் ஏகலாம்
புன்னெறி யாகத்தில் போர்க்கில்லை யாகுமே.

பொருள் : இறைவனை அடைவதற்கு அதுநெறி இது நெறி என்று தடுமாறாமல் அட்டாங்க யோக நெறியிலே நின்று சமாதி கூடுமின். அவ்வாறு அந்நெறி சென்று பொருந்தினவர்க்கு ஞான யோகம் கைகூடிச் சிவப்பேறு எய்தலாம். அவ்வாறு ஞானம் கூடாவிட்டாலும் பிறவிக்கு வரும் நெறியில் வந்து உடம்பில் பொருந்துவது இல்லையாகும். அட்டாங்க யோகநெறி நின்று சமாதி கூடினவர்க்குப் பிறவியில்லை.

552. இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரம்
சயமிகு தாரணை தியானம் சமாதி
அயமுறும் அட்டாங்கம் ஆவதும் ஆமே.

பொருள் : இயமம் நியமம் பலவகைப்பட்ட ஆசனம், நன்மையைத்தரும், பிராணாயமம், பிரத்தியாகாரம் வெற்றி மிக்க தாரணை, தியானம், சமாதி ஆகியவை நல்வினையுடையோர்க்குக் கிட்டும் எண்வகை உறுப்புக்களைக் கொண்ட யோக நெறியாகும். (பிராணாயாமம் - பேச்சினை அடக்குதல். தாரணை - தரித்தல் அயம் - நல்வினை.)

2. இயமம்

(இயமமாவது தீயனவற்றைச் செய்யாமல் ஒழுகுதல், இயமத்தை முதலில் கூறி எஞ்சிய உறுப்புக்களை முறையே அடுத்துக்கூறுவார் ஆசிரியர்.)

553. எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையும்
செழுந்தண் நியமங்கள் செய்ம்மின்என் றண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே
அழுந்திய நால்வர்க்கு அருள்புரிந் தானே.

பொருள் : எட்டுத் திக்குகளிலும் சூழ்ந்தெழுந்து பெருமழை பெய்தாலும் குளிர்ச்சியைத் தருகின்ற இயமங்களைத் தவறாது செய்யுங்கள் என்று சிவபெருமான் கொழுமை மிக்க பவளம் போன்ற குளிர்ந்த தன் சடையோடே பொருந்திய சனகாதி நால்வருக்கும் அருளிச் செய்தான். (நால்வர், சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர்.)

554. கொல்லான் பொய்கூறான் களவிலான் எண்குணன்
நல்லான் அடக்கம் உடையான் நடுச்செய்ய
வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கள்காமம்
இல்லான் இயமத்து இடைநின்றானே.

பொருள் : ஓருயிரைக் கொல்லாதவனும், பொய் கூறாதவனும், திருடாதவனும், ஆராய்ச்சியுடையவனும், நல்லவனும், பணிவுடையவனும், நீதி வழுவாதவனும், பகிர்ந்து கொடுத்து உண்பவனும், குற்றமில்லாதவனும், கள்ளும் காமமும் இல்லாதவனுமாகிய தன்மை உடையவனே இயமஒழுக்கங்களில் நிற்பவன் ஆவான்.

3. நியமம் (நியமமாவது நல்லனவற்றைச் செய்து ஒழுகுதல்)

555. ஆதியை வேதத்தின் அப்பொரு ளானைச்
சோதியை அங்கே சுடுகின்ற அங்கியை
பாதியுள் மன்னும் பராசக்தி யோடுடன்
நீதி யுணர்ந்து நியமத்த னாமே.

பொருள் : ஆதியானவனை, நாத வடிவானவனை, ஒளி வடிவானவனை, மூலாதாரத்தில் அக்கினி மயமாகவுள்ளவனை, சித்தினிடம் பிரிப்பின்றி யிருக்கும் பராசக்தியோடு உயிரோடு உடனாய் உறையும் தர்மத்தை உணர்ந்து ஒழுகுபவனே நியமத்தன் ஆவான். (பாதியுள்-திருமேனிக் கண் ஒரு பதியிதல் எனினுமாய்)

556. தூய்மை அருள்ஊண் சுருக்கம் பொறைசெவ்வை
வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை
காமம் களவு கொலையெனக் காண்பவை
நேமிஈர் ஐந்தும் நியமத்த னாமே.

பொருள் : தூய்மை, கருணை, சுருங்கிய உணவு, பொறுமை, நேர்மை, வாய்மை, உறுதியுடைமை யாகியவற்றை வளர்த்தலும், ஏனைய காமம், களவு கொலை யாகியவற்றைத் தீமையெனக் காண்டலுமாக நியமநெறியில் நிற்பவன் பத்துக் குணங்களைக் கொண்டவனாவான். (நேமி-நியமத்தை உடையவன், காதல் உயிரின் மாட்டும் காமம் உடம்பின் மாட்டும் செல்வன.)

557. தவம்செபம் சந்தோடம் ஆத்திகம் தானம்
சிவன்தன் விரதமே சித்தாந்தக் கேள்வி
மகம்சிவ பூசைஒண் மதிசொல்ஈர் ஐந்தும்
நிவம்பல செய்யின் நியமத்த னாமே.

பொருள் : தவம், செபம், மகிழ்வு, தெய்வ நம்பிக்கை, கொடை, சிவவிரதம், முப்பொருள் உண்மை கேட்டல், வேள்வி, சிவபூசை, சோதி தரிசனம், என்று சொல்லப்பெற்றபத்தையும் உயர்வாகக் கடைப்பிடிப்பவன் நியம நெறியில் உள்ளவனாவான்.

4. ஆதனம்

(ஆதனம் - இருக்கை யோகம் புரிவதற்கு முன் இருக்க வேண்டிய ஆசன முறையைப் பற்றியும் அவற்றால் உண்டாகும் பயனைப் பற்றியும் இங்குக் கூறப்பெறும்)

558. பங்கயம் ஆதி பரந்தபல ஆதனம்
அங்குள வாம்இரு நாலும் அவற்றினுள்
சொங்கில்லை யாகச் சுவத்திகம் எனமிகத்
தங்க இருப்பத் தலைவனும் ஆமே.

பொருள் : பத்மாசனம் முதலாகப் பரந்துபட்ட ஆசனங்கள் பல அங்கு உள்ளன. அவ்ஆசன வகைகளுள் எட்டு முக்கியமாகும். சோர்வு இல்லாமல் சுவத்திகம் என்ற சுகாசனத்தில் பொருந்தி இருக்கத் தலைவனாவான். சாதாரணமாக உட்காருவதுதான் சுகாசனமாகும்.

559. ஓரணை அப்பதம் ஊருவின் மேல்ஏறிட்டு
ஆர வலித்துஅதன் மேல்வைத்து அழகுறச்
சீர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்கப்
பார்திகழ் பத்மா சனமெனல் ஆகுமே.

பொருள் : ஒருபக்கம் அணைந்த காலைத் தொடையின்மேல் ஏறும்படி செய்து மிக இழுத்து வலப்பக்கத் தொடையின் மேல் இடக்காலையும், இடப்பக்கத் தொடையின்மேல் வலக்காலையும் வைத்து, அழகாகக் கைகளை மலர்த்தித் தொடையின்மேல் வைக்க உலகம் புகழ் பத்மாசனம் ஆகும், (ஊரு - தொடை)

560. துரிசில் வலக்காலைத் தோன்றவே மேல்வைத்து
அரிய முழந்தாளில் அங்கைகளை நீட்டி
உரிய இடும்உடல் செவ்வே இருத்தி
பரிசு பெறுமது பத்திரா சனமே.

பொருள் : குற்றமில்லாத வலக்காலை இடப்பக்கம் தொடையின் மேல் விளங்கும்படி வைத்து அருமையான முழங்கால்களின் மேல் அழகிய கைகளை நீட்டி, தளர்கின்ற உடம்பைச் செம்மையாக இருத்தி நன்மையைப் பெறுவது பத்திராசனமாம்.

561. ஒக்க அடியிணை ஊருவில் ஏறிட்டு
முக்கி உடலை முழங்கை தனில் ஏற்றித்
தொக்க அறிந்து துளங்காது இருந்திடில்
குக்குட ஆசனம் கொள்ளலும் ஆமே.

பொருள் : பத்மாசனத்தில் கூறியதுபோல் பாதங்கள் இரண்டையும் தொடையின்மேல் மாறி ஏற்றி, முக்கி உடம்பை முழங்கைவரை தூக்கி நிறுத்தி, உடம்பின் பாரம் கைகளில் தங்குவதற்கான சமநிலை தெரிந்து அசையாதபடி இருந்தால் குக்குட ஆசனம் செய்தலும் கூடும். (குக்குடம் - கோழி, குக்குட - ஆசனம் - கோழி இருக்கை)

562. பாத முழந்தாளில் பாணி களைநீட்டி
ஆதர வோடும்வாய் அங்காந்து அழகுறக்
கோதில் நயனம் கொடிமூக்கி லேயுறச்
சீர்திகழ் சிங்கா தனமெனச் செப்புமே.

பொருள் : பாத நுணிகளைப் பூமியில் ஊன்றி முழங்காலில் நீட்டி, அன்போது வாயைப் பிளந்து கொண்டு, அழகு பொருந்தக் குற்றமற்ற கண்களை நாசி, காக்கிரம் என்னும் புருவ நடுவில் வைத்திருப்பது புகழ் அமைந்த சிம்மாசனம் என்று சொல்லப்படும். (கொடிமூக்கு-மூக்கு நுனி.)

563. பத்திரம் கோமுகம் பங்கயம் கேசரி
செத்திரம் வீரம் சுகாதனம் ஓரேழும்
உத்தம மாம்முது ஆசனம், எட்டெட்டுப்
பத்தொடு நூறு பலஆ சனமே.

பொருள் : பத்திரம், கோமுகம், பங்கயம், கேசரி, சொத்திரம், வீரம் சுகாதனம் என்று ஓரேழும் மேலானவையாம். பழமையான ஆசனங்கள் இவற்றோடு நூற்று இருபத்தாறும் அவற்றின் மேலும் பல ஆசனங்களாம். தத்துவப் பிரகாசம் என்ற நூலில் ஆசனங்களில் பெயரும் அமைக்கும் முறையும் கூறப்பட்டுள்ளன. திருமூலநாயனார் ஓதி யருளிய இருக்கை எட்டேயாம். எனினும் பிறர் கொள்கைகளைக் கூறும் முறையில் பிறவும் கொள்ளப்பட்டன.

5. பிராணாயாமம்

(பிரணாயாமமாவது பிராணனைக் கட்டுப்படுத்தல். மேலே கூறிய ஆசனவகையில் ஏதாவது ஒன்றில் இருந்து பிராணாயமப் பயிற்சி செய்யவேண்டும். பிராணாயாமம் ஆசனம் போன்று பல்வேறு வகைத்து)

564. ஐவர்க்கு நாயகன் ஆவ்வூர்த் தலைமகன்
உய்யக் கொண்டேறும் குதிரைமற்று ஒன்றுண்டு
மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாதுபோய்ப்
பொய்யரைத் துள்ளி விழுந்திடும் தானே.

பொருள் : ஐம்பொறிகளுக்கு நாயகனும் அவ்உடம்புக்குத் தலைவனுமாகிய ஆன்மா, உய்திபெற்று மேல் செல்லுவதற்கு மனத்தோடு பிராணனாகிய குதிரை ஒன்றுள்ளது. அது தேகத்தை விட்டு அகண்டத்தைப் பற்றி நின்றோர்க்கு வசப்பட்டு நிற்கும். மெய்யுணர்வில்லாது கண்டத்தைப்பற்றி நின்றோர்க்குப் பிராணன் வசப்படாமல் கீழே தள்ளிவிடும் (குதிரை - பிராணவாயு)

565. சூரியன் நல்லன் குதிரை இரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகுஅறி வார்குஇல்லை
கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படும் தானே.

பொருள் : மனமாகிய ஆரியன் மிகவும் நல்லவன். அவன் ஓட்டுகின்ற பிராணன், அபானன் ஆகிய குதிரைகள் இரண்டு உள்ளன. அவற்றை வெளியே விட்டு உள்ளே நிறுத்தும் திறமையை அறிபவர் இல்லை. பிராண செயம் பெற்ற குருநாதனின் அருள் கிட்டினால் பிராணன் அபானன் ஆகிய குதிரையைச் சேர்த்துப் பிடிக்கப் பிராண செயம் அமையும். (குதிரை இரண்டு - இடைகலை, பிங்கலை, ஆரியன் - பெருமை மிக்க மனம்.)

566. புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டால்
கள்ளுண்ண வேண்டாம் தானே களிதரும்
துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடை யோருக்கே

பொருள் : பறவையை விட வேகத்துடன் கூடிய பிராணனின் வழி சிரசை நோக்கிச் சென்றால் கள்ளுண்ணாமலேயே மகிழ்ச்சியுண்டாகும். உடலில் சோர்வு நீங்கும். சுறுசுறுப்புடனும் இருக்கும். பிராணனும் மனமும் சிரசில் பாயும் மனமுடையோர்க்கு இவ்வுண்மையைச் சொன்னோம். (புரவி - பிராணவாயு.)

567. பிராணன் மனத்தொடும் பேராது அடங்கிப்
பிராணன் இருக்கில் பிறப்புஇறப்பு இல்லை
பிராணன் மடைமாறிப் பேச்சுஅறி வித்துப்
பிராணன் நடைபேறு பெற்றுண்டீர் நீரே

பொருள் : நாமரூப பேதமான பிரபஞ்சத்தை எண்ணாதவற்கு மனமும் பிராணனும் அடங்கி, பிராணன் ஒடுங்கின் பிறப்பு இறப்பு இல்லை. சிவன் தனி வியக்தியில் வைகி வாக்கு உதித்துப் பிராணனும் நிலை மாறி, பிராணன் ஒடுங்காத போது பிறப்பு இறப்பில் படுவீர்.

568. ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில்
ஊறுதல் முப்பத்து இரண்டது ரோசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சகம் ஆமே.

பொருள் : பதினாறு மாத்திரை காலஅளவு இடப்பக்கமுள்ள நாசித் துவாரத்தில் காற்றை உள்ளுக்கு இழுத்தால் பூரகமாம். அறுபத்து நான்கு மாத்திரை அளவு இழுத்த காற்றை உள்ளே நிறுத்தல் கும்பகமாம் முப்பத்திரண்டு மாத்திரை கால அளவு வலப்பக்கம் நாசித்துவாரத்தில் காற்றை மெல்லன விடுதல் ரேசகமாம். முன்னே சொல்லிய முறைக்கு மாறாக வலப்பக்கம் நாசித் துவாரத்தில் காற்றை இழுத்து நிறுத்தி இடப்பக்கம் நாசித் துவாரத்தில் விடுதல் வஞ்சனையாம்.

569. வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பஞ்சாம்
தெளியக் குருவின் திருவருள் பெற்றால்
வளியினும் வேட்டு அளியனும் ஆமே.

பொருள் : சாதகர் காற்றை இழுத்துத் தன் வசப்படுத்தி அடக்கியிருந்தால், உடம்பு பளிங்கு போன்று மாசின்றித் தூயதாய் அது முதுமை எய்தினும் இளமைத் தன்மை உண்டாகும். இதனைத் தெளிய குருவின் அருளையும் பெற்றுவிட்டால் அவர் உடம்பானது காற்றைவிட மென்மை யுடையதாகி, எங்கும் செல்லும் ஆற்றல் பெற்று மேன்மையடைவர்.

570. எங்கே இருக்கினும் பூரி இடத்திலே
அங்கே அதுசெய்ய ஆக்கைக்கு அழிவில்லை
அங்கே பிடித்துஅது விட்டன வும்செல்லச்
சங்கே குறிக்கத் தலைவனும் ஆமே.

பொருள் : நீ எங்கே இருந்தாலும் இடப்பாக நாசியாகிய இடைகலை வழியாகவே பூரகம் செய்வாயாக அங்கே அவ்வாறு பூரிக்க உடம்புக்கு அழிவில்லை . அங்கே கும்பகம் செய்து அப்பிராணன், சொல்லும் அளவு மேற் சொல்ல சங்கநாதம் உண்டாகி மேன்மை அடையலாம்.

571. ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வார்இல்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே.

பொருள் : இடைகலை பிங்கலை வழியாக இழுத்துப் பூரித்து, காற்றை உள்ளே கும்பகம் செய்யும் முறையைத் தெரிந்தவர் இல்லை. அவ்வாறு காற்றைக் கும்பகம் செய்யும் முறையைத் தெரிந்தவர் காலனைக் கடக்கும் இலட்சியத்தை உடையவராவர்.

572. மேல்கீழ் நடுப்பக்கம் மிக்குறப் பூரித்துப்
பாலாம் இரேசகத் தால்உட் பதிவித்து
மாலாகி உந்தியுள் கும்பித்து வாங்கலே
ஆலாலம் உண்டான் அருள்பெற லாமே.

பொருள் : முறையான காற்று தொண்டை மூலாதாரம், விலா ஆகியவற்றில் நிரம்பும்படி செய்து, மறு பகுதியான இரசேகத்தால் (விடுதலால்) அவயவங்களை ஒன்றோடு ஒன்று பதியும்படி செய்து, விருப்பத்தோடு வயிற்றில் கும்பகம் செய்து இருக்கவே நீலகண்டப் பெருமான் அருளைப் பெறலாகும்.

573. வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே
ஏமுற்ற முப்பத்து இரண்டும் இரேசித்துக்
காமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண்டும்
ஓமத்தால் எட்டெட்டுக் கும்பிக்க உண்மையே.

பொருள் : இடைகலை வழியாகப் பதினாறு மாதிரை பூரகம் செய்து, விரும்பத்தக்க பிங்கலையின்கண் பாதுகாப்புற்ற முப்பத்து இரண்டு மாத்திரை இரேசகம் செய்து, பூரித்தலும் இரேசித்தலுமாகிய வேள்வியால் அறுபத்துநான்கு மாத்திரை சூம்பகம் செய்ய உண்மை விளையும்

574. இட்டது அவ்வீடு இளகாது இரேசித்துப்
புட்டிப் படத்தச நாடியும் பூரித்து
கொட்டிப் பிராணன் அபானனும் கும்பித்து
நட்டம் இருக்க நமனில்லை தானே.

பொருள் : ஆக்கப்பட்டதாகிய இவ்வுடம்பு தளர்ச்சியடையாமல் இரேசகம் செய்து, பத்து நாடிகளும் விம்முமாறு காற்றினை உள்ளே இழுந்து நிரப்பி, பிராணனும் அபானனும் சேரப்பெற்று நேராக நிமிர்ந்திருக்க எம பயம் இல்லையாம். (நட்டம் இருக்க - நிலை நிறுத்த எனினுமாம்)

575. புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட வுள்ளே நின்மலம் ஆக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோமம் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே.

பொருள் : உயிர்ப்பாய்ப் புறம்போந்து புக்குத்திரிகின்ற வாயுவை முறையான கும்பகத்தினாலே உள்ளே தூய்மை செய்தால் உறுப்புக்களில் இரத்த ஓட்டம் பாய்ந்து சிவந்து நிற்கும். தலைமுடி, மயிர்கறுத்து விளங்கும். கிரணங்களால் சூழப்பெற்ற ஆத்மன் உடலில் நிலைபெற்று நிற்பான், உடலும் அழியாது என்றபடி.

576. கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்
ஓடுவர் மீளுவர் பன்னிரண்டு அங்குலம்
நீடுவர் எண்விரல் கண்டிப்பர் நால்விரல்
கூடிக் கொளின்கோல அஞ்செழுத்து ஆமே.

பொருள் : உடம்பை இடமாகக் கொண்ட பிராண சத்தி, குழந்தையாக இருந்தபோது பன்னிரண்டு விரற்கடை நீளம் சென்றும் புகுந்தும் இருந்தனர். வயதான போது தொண்டைக்கு மேலே சிரசில் செல்லும் நான்கு விரற்கடையைத் துண்டித்துவிட்டு எட்டு விரற்கடை அளவே தொழிற்படுகின்றனர். மேலே தடை செய்யப்பட்ட நான்கு விரற்கடையும் தொழிற்படுமாறு செய்துகொண்டால் சாதகர் பஞ்சாக்கர சொரூபமாவர்.

577. பன்னிரண் டானைக்குப் பகல்இரவு உள்ளது
பன்னிரண் டானையைப் பாகன் அறிகிலன்
பன்னிரண் டானையைப் பாகன் அறிந்தபின்
பன்னிரண் டானைக்குப் பகல்இரவு இல்லையே.

பொருள் : பன்னிரண்டு விரற்கடை செயற்படும் பிராணனாகிய சூரியனுக்குப் பகல் என்று இரவு என்றும் காலங்கள் உள்ளன. மூக்கிலிருந்து தொண்டை வழியாகக் கீழ் நோக்கிப் பாய்வதால் சிரசிலுள்ள ஆன்மா அறியவில்லை. கீழ்முகம் செல்லாது மேல்முகம் கொண்ட பிராணனை ஆன்மா அறிந்தபின், பிராணனாகிய சூரியனுக்குப் பகல் இரவு என்ற காலங்கள் இன்றி எப்போதும் பிரகாசிக்கும். (பாகன் - ஆன்மா).

6. பிரத்தியாகாரம்

(புறத்தே செல்லும் மனத்தை உள்ளே நிறுத்திப் பழகுதலே பிரத்தியாகாரமாம். இது அடயோகம், இலயயோகம், இலம்பிகாயோகம், மந்திரயோகம், இராஜ யோகம், சிவயோகம் என்ற பிரிவுகளுக்கு ஏற்ப வேறுபடும் அட்டாங்கயோகத்தில், இயமம், நியமம், ஆசனம், பிராணயாமம் என்பன பூர்வபட்சம் என்றும், பிரத்தியாகாரம் தாரணை, தியானம், சமாதி என்பன உத்தரபட்சம் என்றும் கொள்ள வேண்டும். பூர்வம் முன்நிகழ்வது; உத்தரம்-பின் நிகழ்வது.)

578. கண்டுகண்டு கருத்துற வாங்கிடின்
கொண்டு கொண்டு உள்ளே குணம்பல காணலாம்
பண்டுகந்து எங்கும் பழமறை தேடியை
இன்றுகண்டு இங்கே இருக்கலும் ஆமே.

பொருள் : புறத்தே சென்று ஓடுகின்ற மனத்தை அகத்தே பொருந்துமாறு செய்துவிடின், அக்காட்சியைக் கொண்டு சிறிது சிறிதாக இருள் நீங்கி ஒளி பெறலாம். முன்பு விரும்பி எங்கும் பழைய வேதங்களால் தேடப்பெற்ற பொருளை எடுத்த இவ்வுடலில் அகத்தே கண்டு இருத்தல் கூடும்.

579. நாபிக்கும் கீழே பன்னிரண்டு அங்குலம்
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிகிலர்
தாபிக்கும் மந்தரம் தன்னை அறிந்தபின்
கூவிக் கொண்டு ஈசன் குடியிருந் தானே

பொருள் : உந்திக்குக் கீயே பன்னிரண்டு அங்குலத்தில் மூலதாரத்தில் உள்ள குண்டலியை மேல்எழுப்பும் மந்திரமாகிய பிராசாத மந்திரத்தை ஒருவரும் அறியவில்லை. அவ்வாறு எழுப்பும் மந்திரத்தை அறிந்த பின்னர் சிவன் நாத மயமாகச் சிரசின் மேல் விளங்கி நிற்பான். இது ஓம் என்ற மந்திரத்தைக் குறிக்கிறது.

580. மூலத்து இருவிரல் மேலுக்கு முன்நின்ற
பாலித்த யோனிக்கு இருவிரல் கீழ்நின்ற
கோலித்த குண்டலி யுள்எழும் செஞ்சுடர்
ஞாத்து நாபிக்கு நால்விரல் கீழதே.

பொருள் : மூலதாரத்துக்கு இருவிரல் அளவு மேலுள்ளதும் முன்பக்கம் பார்வையுடையதும் வெளிப்படுத்தும் தன்மையுடைய குறிக்கு இரண்டு விரல் அளவு கீழே உள்ளதுமான இடத்தில் வட்டமிட்டுக் கொண்டுள்ள குண்டலினியுள் எழுகின்ற செஞ்சுடர், உடம்பில் உந்திக் கமலத்துக்கு நான்கு விரல் அளவு கீழே யுள்ளது. (செஞ்சுடர் - உச்சித்துளைவழி, பிரமரந்தி மார்க்கம்)

581. நாசிக்கு அதோமுகம் பன்னிரண்டு அங்குலம்
நீசித்தம் வைத்து நினையவும் வல்லையேல்
மாசித்த மா யோகம் வந்து தலைப்பெய்தும்
தேகத்துக்கு என்றும் சிதைவில்லை யாகுமே.

பொருள் : நாசிக்குக் கீழ் பன்னிரண்டு அங்குல அளவிலுள்ள இதயத்து நீ மனத்தை இழுத்து வைத்துச் செஞ்சுடரை நினைப்பாய் ஆயின் அட்டமா சித்திகளும் ராஜயோகமும் வந்து கூடும். இத்தியானம் தேகத்துக்கு எப்பொழுதும் தீமை செய்யாததாகும். இதை அநாகதம் என்பர். (அகவழிபாடு - மானத பூசை.)

582. சோதி இரேகைச் சுடரொளி தோன்றிடின்
கோதில் பரானந்தம் என்றே குறிக்கொண்டுமின்
நேர்திகழ் கண்டத்தே நிலவொளி எய்தினால்
ஓதிய தன்னுடல் உன்மத்தம் ஆமே.

பொருள் : இரு மின்னற் கொடி பின்னி ஓடுவது போன்ற ஒளி தோன்றினால் குற்றமில்லாத மேலான ஆனந்தம் என்றே எண்ணுங்கள். நேர்மை விளங்கும் கண்டத் தானத்தில் (கழுத்துப் பிரதேசத்தில்) நிலவொளி தோன்றிடின் பிரத்தியாகாரப் பயிற்சி செய்த சாதகனது உடலில் ஆனந்தப் பரவசம் உண்டாகும். (இரேகைச் சுடரொளி - கீற்றுப் போன்ற ஒளி என்பாரும் உளர்)

583. மூலத் துவாரத்தை முக்காரம் இட்டிரு
மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு
வேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு
காலத்தை வெல்லும் கருத்து இதுதானே.

பொருள் : மூலாதாரத்தை ஆகுஞ்சனம் என்ற முத்திரையால் அடைத்துக் கொண்டிரு பிரமரத்தின் மேல் மனத்தைப் புறம் விழித்தபடி இரு இதுதான் காலத்தை வெல்லும் உபாயமாகும். (ஆகுஞ்சனம் - குதத்தை மேலெழும்படி அடைத்திருத்தல்.)

584. எருவிடும் வாசற்கு இருவிரல் மேலே
கருவிடும் வாசற்கு இருவிரல் கீழே
உருவிடும் சோதியைஉள்கவல் லார்க்குக்
கருவிடும் சோதி கலந்துநின் றானே.

பொருள் : மலங்கழிக்கும் வாயிலாகிய குதத்துக்கு மேலே இருவிரலும், கருவுண்டாகும் வாயிலாகிய கோசத்துக்கு இருவிரல் கீழுள்ள இடத்தில் உருப்பெறும் குண்டலினியை நினைக்க வல்லார்க்கு கருவிடும் மகேசுரன் சோதிவடிவில் கலந்துள்ளான்.

585. ஒருக்கால் உபாதியை ஒண்சோதி தன்னைப்
பிரித்துஉணர் வந்த உபாதிப் பிரிவைக்
கரைத்துஉணர் உன்னல் கரைதல் உள் நோக்கல்
பிரத்தியா காரப் பெருமைய தாமே.

பொருள் : சுழுமுனையில் மலத்தின் காரியமாகிய இருளால் உண்டாகும் அவத்தையை (நிலை வேறுபாட்டை)யும் புருவ நடுவில் விளங்கும் சோதியினின்றும் பிரித்துள்ள நிலை வேறுபாட்டினையும ஒழித்து உணர்வு மயமான ஒளியை நினைத்து உருகி மனத்தை ஒருமைப் படுத்தல் பிரத்தியாகாரப் பெருமையாம். (ஒருக்கால் - சுழுமுனை)

586. புறப்பட்ட வாயுப் புகவிடா வண்ணம்
திறப்பட்டு நிச்சயம் சேர்ந்துடன் நின்றால்
உறப்பட்டு நின்றது உள்ளமும் அங்கே
புறப்பட்டுப் போகான் பெருந்தகை யானே.

பொருள் : வெளியே சென்ற வாயுவை மீளவும் புக முடியாதபடி திறமையாக உள்ளொளியில் பொருத்தி நின்றால் உள்ளம் வலுவடைந் துள்ளதாம், அப்போது பெருந் தகுதியுடைய இறைவனும் அவ்வொளியில் நிலைபெற்றுப் புறப்பட்டுப் போகாதவனாய் விளங்குவான்.

587. குறிப்பினின் உள்ளே குவலயம் தோன்றும்
வெறுப்பிருள் நீங்கி விகிர்தனை நாடும்
சிறப்புறு சிந்தையைச் சிக்கென்று உணரில்
அறிப்புற காட்சி அமரரும் ஆமே.

பொருள் : குறித்து நிறுத்தலாகிய பிரத்தியாகரத்தில் உலகம் முழுவதுமே இருந்த நிலையிலிருந்து அறியப்படும். வெறுக்கத் தக்க அறியாமையாகிய இருளை நீங்கி வேறுபாட்டினைச் செய்யும் சிவனை நாடுங்கள். சிவத்தை விரும்புகின்ற சிறப்புற்ற சிந்தையில் உறுதியாக உணர்ந்தால் சிவஞானம் பொருந்திய தேவருமாவர்.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Mon Mar 26, 2012 2:59 pm

7. தாரணை

(தாரணையாவது, தரிக்கச் செய்தல், பிரத்தியாகாரப் பயிற்ச்சியால் உள்ளுக்கு இழுத்த மனத்தை நிலைபெறச் செய்தல் என்க.)

588. கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்காட்டி
வீணாத்தண்டு ஊடே வெளியுறத் தானோக்கிக்
காணாக்கண் கேளாச் செவிஎன்று இருப்பார்க்கு
வாணான் அடைக்கும் வழிஅது வாமே.

பொருள் : கோணுதல் இல்லாத மனத்தை ஐõலந்திர பந்தம் முதலியவற்றால் கீழ் நோக்காது தடுத்து நடு நாடியின் வழியாகச் செல்லும் பிராணனுடன் மனத்தையும் பொருத்தி ஆகாயத்தின் இடை பார்வையைச் செலுத்தி, காணாத கண்ணுகம் கேளாத செவியுமாக இருப்பார்க்கு வாழ்நாளாகிய ஆயுள் அழியாமல் அடைக்கும் உபாயமாகும்.

589. மலையார் சிரத்திடை வானீர் அருவி
நிலையாரப் பாயும் நெடுநாடி யூடுபோய்ச்
சிலையார் பொதுவில் திருநட மாடும்
தொலையாத ஆனந்தச் சோதிகண் டேனே.

பொருள் : மலைபோன்ற சிரசினிடை ஆகாயகங்கை எப்போதும் பாய்ந்து கொண்டேயிருக்கின்ற சுழுமுனை நாடியின் வழியாகச் சென்று, பரநாத ஒலிகூடிய சிற்சபையில் ஆனந்தக் கூத்தாடும் அகலாத ஆனந்தத்தை நல்கும் சோதியைத் தரிசித்தேன்.

590. மேலை நிலத்தினாள் வேத்துப் பெண்பிள்ளை
மூல நிலத்தில் எழுகின்ற மூர்த்தியை
ஏல எழுப்பி இவளுடன் சந்திக்கப்
பாலனும் ஆவான் பார்நந்தி ஆணையே.

பொருள் : சிரசின்மேல் எழுந்தருளியுள்ள சிற்சத்தி மாற்றத்தைச் செய்யும் தேவியாவாள், மூலாதாரத்தில் குண்டலினியாகிய கிரியா சத்தியோடு பொருந்திய மூர்த்தியைத்தாரணைப் பயிற்சியால் அம்மூர்த்தியைச் சிரசின்மேல் எழுந்தருளப் பண்ணிச் சிற்சக்தியுடன் சேரும்படி செய்தால் வயதில் முதிர்ந்தவனும் வாலிபன் ஆவான் பார்த்தறிக. இது நந்தியின் ஆணையாகும்.

591. கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி
இடைவாசல் நோக்ட இனிதுள் நிறுத்தி
மடைவாயில் கொக்குப்போல் வந்தித்து இருப்பார்க்கு
உடையாமல் ஊழி இருக்கலும் ஆமே.

பொருள் : மூலாதாரத்தை அடைத்து அங்குள்ள காம வாயு அல்லத அபானனை மேலே செல்லும்படி செய்து நடுவழியான சுழுமுனையின் மேல் மனத்தைப் பொருத்தி நீரோடும் மடைவாயிலில் காத்திருக்கும் கொக்குப் போல நாட்டத்தை விடாமல் இருப்போர்க்கு, தேகம் சிதையாமல் ஊழிக்காலம் வரை இருக்கலாம்.

592. கலந்த உயிருடன் காலம் அறியில்
கலந்த உயிரது காலின் நெருக்கம்
கலந்த உயிரது காலது கட்டின்
கலந்த உயிருடன் காலமும் நிற்குமே.

பொருள் : உடலில் உயிர் கலந்துள்ள கால எல்லையை அறியின் அக்கால எல்லை பிராணன் இயக்கத்தால் அமைந்துள்ளது. அத்தகைய உயிரில் பிராணனது இயக்கத்தைக் கட்டி நிறுத்திவிட்டால் உயிருடன் பொருந்திய காலமும் அழிவின்றுட நிற்கும். ஆயுள் நிலைத்து நிற்கும் என்றபடி.

593. வாய்திற வாதார் மனத்திலோர் மாடுண்டு
வாய்திறப் பாரே வளியிட்டுப் பாய்ச்சுவர்
வாய்திற வாதார் மதியிட்டு மூட்டுவர்
கோய்நிற வாவிடின் கோழையும் ஆமே.

பொருள் : வாய்திறவாமல் மௌனமாக இருப்பவரது மன மண்டலத்தில் பிராணனாகிய செல்வம் ஒன்றுள்ளது. அங்ஙனமின்றி வாய்திறந்து பேசிக் கொண்டிருப்பவர் பிராணனை வெளியிட்டு வீணாக்குபவர். பேசாத மௌனியர் மதிமண்டலத்தில் பிராணனைச் செலுத்திச் சோதியை அறிகின்றனர். சகஸ்ரதளமாகிய செப்பினைத் திறந்து பார்க்க வல்லமையற்றவர்கள் கோழைத்தனம் உள்ளவராவர். (கோய்-நகை வைக்கும் செப்பு)

594. வாழலும் ஆம்பல காலும் மனத்திடைப்
போழ்கின்ற வாயு புறம்படாப் பாய்ச்சுறில்
ஏழுசா லேகம் இரண்டு பெருவாய்தல்
பாழி பெரியதோர் பள்ளி அறையிலே.

பொருள் : உள்ளத்தினின்றும் இறங்கி ஊடறுத்துச் செல்லுகின்ற வாயுவை வெளியே போகாதபடி நடு நாடியின்கண் செலுத்தின்ஏழு சாளரங்களையும் இரண்டு பெரிய வாயில்களையும் கொண்ட தேவர் கோயில் பெரிய வாயில்களையும் கொண்ட தேவர் கோயிலில் பெரிய பள்ளி அறையிலே பலகாலம் வாழலாம். (ஏழு சாலேகம் - கண்இரண்டு, காதுஇரண்டு, நாசி இரண்டு, வாய் ஒன்று; ஆக ஏழு துவாரங்கள். இரண்டு பெருவாய்-எருவாய், கருவாய். பாழி- உடல்; பள்ளி அறை - சகஸ்ரதளம், ஓய்வுபெறும் இடம்)

595. நிரம்பிய ஈரைந்தில் ஐந்தவை போனால்
இரங்கி விழித்திருந்து என்செய்வை பேதாய்
வரம்பினைக் கோலி வழிசெய்கு வார்க்குக்
குரங்கினைக் கொட்டை பொதியலும் ஆமே.

பொருள் : புலன்களைத் துய்த்து நிரம்பிய ஞானேந்திரிய கன்மேந்திரியமாகிய பத்தில் ஞானேந்திரியங்கள் ஐந்தும் நீங்கினால் அறிவிலியே ! நீ வருந்தி இருந்தும் என்ன பயனைப் பெறமுடியும்? ஆனால் இந்திரியங்களின் எல்லையைத் தாண்டி நிற்பவர்க்கு, மனமாகிய குரங்கை உடம்பினில் சேட்டையின்றி இருக்கச் செய்ய முடியும். (ஈரைந்து - தசவாயு என்று சிலர் கொள்வர். கொட்டை கோட்டை என்றும் பாடம்.)

596. முன்னம் வந்தனர் எல்லாம் முடிந்தனர்
பின்னை வந்தவர்க்கு என்ன பிரமாணம்
முன்னூறு கோடி உறுகதி பேசிடில்
என்ன மாயும் இடிகரை நிற்குமே.

பொருள் : முன்னமே வந்து பிறந்தார் அனைவரும் தாரனைப் பயிற்சி இன்மையால் அழிந்து ஒழிந்தனர். பின்னே வந்தவர் அழியமாட்டார் என்பதற்கு என்ன பிரமாணம் ? அவ்வாறு அழிகின்றவர் அடையும் நிலைகளைப் பேசினால் அவை அளவற்றனவாகும். என்ன வியப்பு ! ஆற்றில் இடிந்து கரைகின்ற கரை போன்று நாளும் அழிகின்ற உடம்பு அழியாது நிற்குமோ ? (இடிகரை - அழியும் தேகம்)

597. அரித்த உடலைஐம் பூதத்தில் வைத்து
பொருத்தஐம் பூதம்சத் தாதியிற் போந்து
தெரித்த மனாதிசத் தாதியிற் செல்லத்
தரித்தது தாரணை தற்பரத் தோடே.

பொருள் : ஐம்பொறிகளால் அரிப்புண்ட உடலை ஐம்பூதங்களில் வைத்து, அப்படிப்பட்ட ஐம்பூதங்களில் சத்தம் முதலான தன் மாத்திரைகளில் போகும்படியாக ஆராயப் பெற்ற மனம் முதலிய அந்தக் கரணங்கள் நாதத்தில் ஒடுங்க ஆன்மா தற்பர மாகிய சிவனோடு பொருந்தியிருப்பதே தாரணையாகும்.

8. தியானம்

(தியானம் என்பது இடைவிடாது நினைந்திருத்தல். இடையீடுபட்டு எண்ணுவது தாரணை. இடையீடுபடாது எண்ணுவது தியானம். தியானம் எத்தனை வகையென்றும், அதனை எவ்வாறு செய்து பழக வேண்டும் என்றும் இங்கு ஆசிரியர் கூறுகிறார்.)

598. வரும்ஆதி ஈர்எட்டுள் வந்த தியானம்
பொருவாத புந்தி புலன்போக மேவல்
உருவாய சத்தி பரத்தியான முன்னும்
குருவார் சிவத்தியானம் யோகத்தின் கூறே.

பொருள் : முன்னே தாரணைப் பகுதியில் பத்தாவது மந்திரத்தில் கூறியபடி அமைந்த தியானமாவது, ஒப்பற்ற புத்தியும் புலனும் நீங்கியிருத்தலாம். அது உருவோடுகூடிய சத்தியை மேலாக எண்ணுதலாகிய பரத்தியானம் என்றும் ஒளி பொருந்திய சிவனை எண்ணுதலாகிய சிவத்தியானம் என்றும் இருகூறாக யோகத்தில் கூறப்பெறும்.

599. கண்நாக்கு மூக்குச் செவிஞானக் கூட்டத்துள்
பண்ஆக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்டு
அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டிப்
புண்ணாக்கி நம்மைப் பிழைப்பித்த வாறே.

பொருள் : கண், நாக்கு, மூக்கு, செவியாகிய ஞானேந்திரியங்கள் கூடுமிடத்தில், நாதத்தை உதிக்கச் செய்யும் பழமையான பொருள் ஒன்றுள்ளது அது அண்ணாக்குப் பிரதேசத்தில் எல்லையற்ற பேரொளியைக் காட்டி, மனம் புறவழிச் செல்லாமல் தடுத்து நம்மைப் பிழைக்கச் செய்தது இவ்வண்ணமாம்.

600. ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளி தன்னைக்
கண்õரப் பார்த்துக் கலந்தங்கு இருந்திடில்
விண்ணாறு வந்து வெளிகண் டிட ஓடிப்
பண்ணாமல் நின்றது பார்க்கலும ஆமே.

பொருள் : ஒன்றாகிய ஞானக்கண்ணில் பொருந்திய சோதியை இருகண்களையும் பொருந்திப் பார்த்து அங்கே சலனமில்லாமல் பொருந்தியிருந்தால் ஆகாய கங்கை நன்கு புலப்படும். முறையில் சிதாகாயப் பெருவெளியில் பொருந்தி நிற்கப் பண்ணாமல் நின்ற சுயம்பு மூர்த்தியைப் பார்க்கலுமாகும்.

601. ஒருபொழுத உன்னார் உடலோடு உயிரை
ஒருபொழுது உன்னார் உயிருள் சிவனை
ஒருபொழுது உன்னார் சிவனுறை சிந்தையை
ஒருபொழுது உன்னார் சந்திரப் பூவையே.

பொருள் : உடலோடு கலந்துள்ள உயிரை ஒரு பொழுதும் நினையார்கள்; உயிருக்கு உயிராக விளங்கும் சிவனை ஒரு போதும் எண்ணார்கள்; சிவன் எழுந்தருளியிருக்கின்ற சிந்தையையும் ஒருபொழுதும் எண்ணமாட்டார்கள். என்னே இவர்கள் அறியாமை. (சந்திரப்பூ-ஆஞ்ஞையுள்ள சந்திரன் போன்ற வெண்ணிறஒளி)

602. மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச்
சினந்து விளக்கினைச் செல்ல நெருங்கி
அனைத்து விளக்கும் திரியொக்கத் தூண்ட
மனத்து விளக்கது மாயா விளக்கே.

பொருள் : மனத்தில் விளங்கும் ஒளியை மாட்சியைப் பெறும்படி மேலே செலுத்திச் சினமாகிய அக்கினியைப் போகும்படி செய்து, யாவற்றையும் விளக்கி நிற்கும் சிவ ஒளியைச் சுழுமுனை என்ற திரியைத் தூண்டி நடத்த மனத்துள் விளங்கும் சிவம் என்றும் மங்காத விளக்காகும்.

603. எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதினைக் கண்டறி வார்இல்லை
உள்நாடி உள்ளே ஒளிபெற நோக்கினால்
கண்ணாடி போலக் கலந்துநின் றானே.

பொருள் : எண்ணாயிரம் ஆண்டுகள் யோகம் பயின்றாலும் கண்ணில் சோதியாக இருந்து விளங்குபவனைக் கண்டு அறிபவர்கள் யாரும் இல்லை. மன மண்டலமாகிய உள்ளத்தில் ஒளி பொருந்தும்படி பார்ப்பவர்க்கு, கண்ணாடியில் உருவத்தைக் காண்பது போல உள்ளத்தில் கலந்திருப்பதைக் காணலாம்.

604. நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
வாட்டமும் இல்லை மனைக்கும் மனைக்கும் அழிவில்லை
ஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லை
தேட்டமும் இல்லை சிவன்அவன் ஆமே.

பொருள் : இரண்டு கண்பார்வையையும் நடுமூக்கில் பொருத்தி வைத்திடில் சோர்வும் இல்லை. உடம்புக்கும் அழிவில்லை, மனத்தின் ஓட்டம் இராது. அறியும் தன்மை இராது. தான் என்ற முனைப்பும் இராது புறத்தே செல்லும் அறிவுத் திறனும் இராது. அவன் சிவனாகலாம். (மனை - உடல்.)

605. நயனம் இரண்டும் நாசிமேல் வைத்திட்டு
உயர்வெழா வாயுவை உள்ளே அடக்கித்
துயர்அற நாடியே தூங்கவல் லார்க்குப்
பயனிது காயம் பயமில்லை தானே.

பொருள் : இரண்டுகண் பார்வையையும் நாசி காக்கிரம் என்ற பருவ நடுவில் வைத்து, உயர்தலினின்றும் தாழாத பிராணனை உள்ளே அடக்க, துன்பத்தைத் தரும் மனமாதியை நீக்கி யோக நித்திரை செய்வார்க்கு எடுத்த இவ்வுடல் பயனைத் தருவதாகும். பிரபஞ்சம் பிணிக்கும் என்ற பயமும் இல்லையாம். நாசியில் உயர்ந்த இடம் புருவ மேடு சாதகர் தியானம் செய்யும் போது கண்பார்வையைப் புருவநடுவில் செலுத்தியிருக்க வேண்டும்.

606. மணிகடல் யானை வார்குழல் மேகம்
அணிவண்டு தும்பி வளைபேரி கையாழ்
தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும்
பணிந்தவர்க்கு அல்லது பார்க்கஒண் ணாதே.

பொருள் : மணி, கடல், யானை, புல்லாங்குழல், மேகம், அழகியவண்டு, தும்பி, சங்கு, பேரிகை, யாழ் ஆகியவற்றின் நுண்ணொலிகள் பத்தும் தியானத்தில் அடங்கியிருப்பவர்க்கன்றி வேறுயாராலும் அறிய ஒண்ணாது. இதுவே திருச்சிலம்போசை என்ப.

607. கடலொடு மேகம் களிறுஒடும் ஓசை
அடஎழும் வீணை அண்டர்அண் டத்துச்
சுடர்மனு வேணுச் சுரிசங்கின் ஓசை
திடம்அறி யோகிக்குஅல் லால்தெரி யாதே.

பொருள் : கடல், மேகம், யானை, ஆகியவற்றின் ஓசையும் கம்பி இறுக்கத்தால் வீணையில் எழும் நாதமும், ஆகாயத்தில் அமைந்துள்ள வேத கோஷம், புல்லாங்குழல், சுருங்கிய வாயினையுடைய சங்கு ஆகியவற்றின் ஓசையும் திடமாக அறியவல்ல யோகியர்க்கன்றி ஏனையோரால் அறியமுடியாது. கடலோசை முதலியன வன்மையான ஓசை என்றும் வீணைஓசை முதலியன மென்மையான ஓசை என்று அறிக.

608. ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும்
பாசம் இயங்கும் பரிந்துயி ராய்நிற்கும்
ஓசை அதன்மணம் போல விடுவதோர்
ஓசையாம் ஈசன் உணரவல் லார்க்கே.

பொருள் : இறைவனது இயல்பும், தேவர் குழாச் சேர்க்கையும், பாசத்தின் இயக்கமும், பாசத்தை விட்ட உயிராய் நிற்பதும் நாதமாகும். அதனை உணர வல்லார்க்கு பூவினில் வெளிவரும் கந்தம் போல ஈசன் நாதத்தில் விளங்குகிறான் என்பது புலப்படும்.

609. நாத முடிவிலே நல்லாள் இருப்பது
நாத முடிவிலே நல்யோகம் இருப்பது
நாத முடிவிலே நாட்டம் இருப்பது
நாத முடிவிலே நஞ்சுண்ட கண்டனே.

பொருள் : நாத தத்துவம் முடிந்த இடத்திலே பராசக்தி யுள்ளான். அங்கு நல்ல யோகத்தின் முடிவு உள்ளது. நாத முடிவில் நம் மனத்தில் பதிவது அவ்விடத்தில் நீலகண்டப்பெருமான் விளங்குவான். ஓசை முடிந்த இடமே திருவருள் வெளிப்படும் இடம்.

610. உதிக்கின்ற ஆறினும் உள்ளங்கி ஐந்தும்
துதிக்கின்ற தேசுடைத் தூங்கிருள் நீங்கி
அதிக்கின்ற ஐவருள் நாதம் ஒடுங்கக்
கதிக்கொன்றை ஈசன் கழல்சேர லாமே.

பொருள் : ஆறு ஆதாரங்களில் தோன்றுகின்ற ஐவகை அக்கினியும் வணங்குகின்ற பிரகாசத்தோடு கூடிய நீல ஒளியை அகன்று, இயக்குகின்ற பஞ்ச தன்மாத்திரைகளில் ஒன்றாகிய சததம் ஒடுங்க, பொன்னொளியில் விளங்கும் இறைவனது திருவடியை அடையலாம், ஆறு ஆதாரங்களாவன; மூலம், கொப்பூழ், மேல்வயிறு, நெஞ்சம், மிடறு, புருவநடு என்பனவாம்.

611. பள்ளி அறையில் பகலே இருளில்லை
கொள்ளி அறையில் கொளுந்தாமல் காக்கலாம்
ஒள்ளிது அறியிலோ ரோசனை நீளிது
வெள்ளி அறையில் விடிவுஇல்லை தானே.

பொருள் : இந்திரியங்கள் ஓய்வு பெறுகின்ற பள்ளி அறை என்ற பரஅவத்தையில் (பரை நிலையில்) ஒளியேயன்றி இருளில்லை ஒளியேயுள்ள அறையான படியால் வேறு அக்கினி கொளுத்தாமல் காக்கலாம். ஒளியை உடையதாகிய இந்நிலையை அறியில் இது தியானத்தில் எய்தப் பெறுவது ஆகும். இருளே இல்லாதபடியால் விடிவே இல்லை. (பள்ளி அறை - உள்ளம் கொள்ளி அறை - சுடுகாடு எனினும் ஆம்)

612. கொண்ட விரதம் குறையாமல் தான்ஒன்றித்
தண்டுடன் ஓடித் தலைப்பட்ட யோகிக்கு
மண்டலம் மூன்றினும் ஒக்க வளர்ந்தபின்
பிண்டமும் மாறி பிரியாது இருக்குமே.

பொருள் : சந்திரமண்டலமும் அமைக்க வேண்டுமென்று மேற் கொண்ட குறிக்கோளுக்குக் குறைவு வராமல் தான் ஒன்றுபட்டு, முதுகு தண்டிலுள்ள சுழுமுனை நாடி வழியாக மேல் நோக்கி ஏறிச்சென்ற யோகிக்கு அக்கினி மண்டலம், சூரிய மண்டலம், சந்திரமண்டலம் ஆகிய மூன்றும் பொருந்தும் வகையில் வளர்ந்தபின் எடுத்த தேகம் உலகம் உள்ளவரை சீவனை விட்டு அகலாது. (மண்டலம் மூன்று - வாத, பித்த, சிலேத்துமமுமாம்)

613. அவ்வவர் மண்டலம் ஆம்பரிசு ஒன்றுண்டு
அவ்வவர் மண்டலத்து அவ்வவர் தேவராம்
அவ்வவர் மண்டலம் அவ்வவர்க் கேவரில்
அவ்வவர் மண்டலம் ஆயம்மற் றோர்க்கே.

பொருள் : அவ்வவர் மண்டலத்தினால் ஆகின்ற தன்மை ஒன்றுள்ளது. அக்கினி, சூரிய, சந்திர மண்டலங்களுக்குப் பிரமன், விஷ்ணு, உருத்திரன் ஆகியோர் தலைவராம். அவ்வவரது ஆட்சி அவ் வம்மண்டலத்தில் இருப்பின் அவ்வவரது மண்டலம் மற்றவர்க்கு உதவி செய்யும் கூட்டமாகும்.

614. இளைக்கின்ற நெஞ்சத்து இருட்டறை உள்ளே
முளைக்கின்ற மண்டலம் மூன்றிலும் ஒன்றித்
துளைப்பெரும் பாசம் துருவிடு மாகில்
இளைப்பின்றி மார்கழி ஏற்றம தாமே.

பொருள் : உலகப் பொருளில் மயங்கித் தவிக்கின்ற உள்ளமாகிய இருட்டறையில்தான் உதயமாகின்ற மூன்று மண்டலங்களுள் பொருந்திப் பிரமரந்திரத்துளை வழியாகச் சிவத்தினிடம் பெருங்காதல் கொண்டு ஆராய்ந்து மேற்சென்றால் துன்பம் நீங்கிச் சிரசின் மேல் விடியற்காலம் போல வெளிச்சத்தைக் காணலாம். (துருவிடுதல் - ஆராய்தல். மார்கழி ஏற்றம் - அருணோதயம், மார்கழித்திங்கள் திருவாதிரைத் திருநாளாகும். திருவாதிரை சிவபிரானுக்குச் சிறப்புடையது.)

615. முக்குணம் மூடற வாயுவை மூலத்தே
சிக்கென மூடித் திரித்துப் பிடித்திட்டுத்
தக்க வலம்இடம் நாழிகை சாதிக்க
வைக்கும் உயிர்நிலை வானவர் கோனே

பொருள் : தாமத இராசத சாத்துவிகம் என்ற முக்குணங்களாகிய இருள்நீங்க மூலாதாரத்திலுள்ள அபானனை மேலெழும்படி செய்து, வலப்புற சூரிய கலையை இடப்புறமுள்ள சந்திர கலையோடு பொருந்தும்படி அதிகாரையில் ஒரு நாழிகை பயின்றால் உயிரை உடம்பில் அழியாது சிவன் வைப்பான். (உயிர்நிலை- உடல்)

616. நடலித்த நாபிக்கு நால்விரல் மேலே
மடலித்த வாணிக்கு இருவிரல் உள்ளே
கடலித்து இருந்து கருதவல் லார்கள்
சடலத் தலைவனைத் தாமறிந் தாரே.

பொருள் : அசைவினை உண்டாக்கிக் கொண்டிருக்கும் உந்திச் சக்கரத்துக்கு நான்கு விரல் மேலே ஊர்த்துவ முகமாய் மேலே செல்லும் வாக்கு வெளிப்படும் தொண்டைச் சக்கரத்துக்கு இரண்டு விரற்கடை கீழேயுள்ள அநாகதச் சக்கரத்தில் கடல்முழக்கம் போன்று பொங்கி எழுகின்ற ஒலியினைத் தியானிக்க வல்லவர்கள் உடம்புக்கு உரியவனாகிய ஆன்மாவை அறிந்தவராவார்.

617. அறிவாய்அசத் தென்னும் ஆறாறு அகன்று
செறிவான் மாயை சிதைத்தரு ளாலே
பிறியாத பேரருள் ஆயிடும் பெற்றி
நெறியான அன்பர் நிலையறிந் தாரே.

பொருள் : அறிவான் ஆன்மா, அறிவில்லாத முப்பத்தாறு தத்துவங்களும் நீங்கி, செறிந்துள்ள மாயையை அருளாலே கெடுத்து, சிவனோடு நீங்காதிருக்கும் அருள் சத்தியாகிவிடும் பேற்றைச் சிவநெறியில் முறைப்பட்ட அன்பரே அவ்வுண்மையை உணர்ந்தோராவர்.

9. சமாதி (சமாதியாவது, உயிரும் இறைவனும் ஒன்றி நிற்றல்)

618. சமாதி யமாதியில் தான்செல்லக் கூடும்
சமாதி யமாதியில் தான்எட்டுச் சித்தி
சமாதி யமாதியில் தங்கினோர்க்கு அன்றே
சமாதி யமாதி தலைப்படுந் தானே.

பொருள் : இயமம் முதலியவைகளைக் கடைப்பிடித்து சமாதிவரை செல்லும் முறைமையைச் சொல்லக் கேட்டால், இயமம் முதல் சமாதிக்கு முன்னுள்ள அங்கங்கள் கடைப்பிடிக்கப்படின், எட்டாவதான சமாதி கைகூடும். இவ்எட்டு உறுப்புக்களையும் நியமமாகச் செய்து வருபவர்க்கு அட்டாங்க யோகத்தின் இறுதி உறுப்பான சமாதி கைகூடும்.

619. விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடில்
சந்தியி லான் சமாதியில் கூடிடும்
அந்தமி லாத அறிவின் அரும்பொருள்
சுந்தரச் சோதியும் தோன்றிடும் தானே.

பொருள் : ஒளியும் ஒலியும் சிரசின் மேல் சகஸ்ரதளத்தில் மிகுந்து விளங்கினால், யோகமான சமாதியில் சீவன் பொருந்தி யிருக்கும். அப்போது இறுதியில் ஞான சொரூப மானசிவம் அழகிய சோதியாக வெளிப்படும். (விந்து - உடல் உரஅமிழ்து. நாதம் - உயிர்ப்பு ஓசை மேரு - புருவமத்தி)

620. மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு
மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை
மன்மனத் துள்ளே மகிழ்ந்திருப் பார்க்கு
மன்மனத் துள்ளே மனோலயம் ஆமே.

பொருள் : நினைத்தலைச் செய்யும் மனம் எங்கே உள்ளதோ அங்கே பிராண வாயுவும் உண்டு. மனம் நினைக்கவில்லை யானால் பிராணவாயுவின் அசைவும் உண்டாகாது. அம்மனத்துள்ளே நினைப்பதைவிட்டு மகிழ்ந் திருப்பார்க்கு நினைக்கும் மனமே நினையாத மனமாகி அடங்கிவிடும். (மன் - நினைத்தல்)

621. விண்டலர் கூபமும் விஞ்சத்து அடவியும்
கண்டுணர் வாகக் கருதியிருப் பார்கள்
கெண்டு வெளியிற் செழுங்கிரி யத்திடை
கொண்டு குதிரை குசைசெறுத் தாரே.

பொருள் : பிளந்து வெளிப்படும் ஒளியாகிய நீர்ஊற்றையும் அதில் சிவமாகிய அறிவுக் காட்டையும், தரிசித்து உணர்வு மயமாக எண்ணியிருப்பவர்கள் செழுமையான சிரசாகிய மாலையில் பிராணனாகிய குதிரையைச் செலுத்தி மனமாகிய கயிற்றைக் கொண்டு கட்டிவிடுவார்கள். (செழுங்கிரி - புருவநடுமுனை; ஆக்கினையின் உச்சி.)

622. மூல நாடி முகட்டலகு உச்சியுள்
நாலு வாசல் நடுவுள் இருப்பீர்கள்
மேலை வாசல் வெளியிறக் கண்டபின்
காலன் வார்த்தை கனாவிலும் இல்லை

பொருள் : சிவத்தை நாடிச் சிரசின் உச்சியிலுள்ள சகஸ்ரதளத்தில் கண்ணறிவு, காதறிவு, மூக்கறிவு, நாக்கறிவு ஆகிய நான்கு அறிவும் பொருந்தும் வண்ணம் இருப்பவர்களே ! விரிந்த சகஸ்ர தளத்துக்கு மேலே அகண்டத்தைத் தரிசித்தபின் உங்களுக்குக் காலன் என்ற சொல்லுங்கூடக் கனவிலும் இல்லை.

623. மண்டலம் ஐந்து வரைகளும் ஈராறு
கொண்டிட நிற்கும் குடிகளும் ஆறெண்மர்
கண்டிட நிற்கும் கருத்து நடுவாக
உண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே.

பொருள் : பிருதிவி முதலிய ஐந்து மண்டலங்களும் அகரமுதல் உன்மனி ஈறாகவுள்ள கலைகள் பன்னிரண்டும் ஆதாரச் சக்கரங்களிலுள்ள அட்சரங்களை இடமாகக் கொண்டுள்ள தேவதைகள் நாற்பத்தெட்டும் கருத்து மாத்திரமாக நிராதாரத்தில் (சாந்தியதீத கலையில்) கண்டு, எங்கும் வியாபகமாயுள்ள திருவடியைப் பொருந்தி அனுபவிப்பான் சிவயோகி.

624. பூட்டொத்து மெய்யில் பொறிப்பட்ட வாயுவைத்
தேட்டற்ற அந்நிலம் சேரும் படிவைத்து
நாட்டத்தை மீட்டு நயனத் திருப்பார்க்குத்
தோட்டத்து மாம்பழம் தூங்கலும் ஆமே.

பொருள் : பூட்டைக் கருவியைப் போல உடம்பில் கீழும் மேலுமாகச் செல்லும் வாயுவை தேடுதலுற்ற பிரமரந்திரத்தால் பொருந்தச் சேர்த்து, தேடியலைதலை விட்டு விழித்தபடி இருப்பார்க்கு, சிவக் கனியோடு அசைவற்றிருக்கலாம். (பூட்டை - கிணற்றுராட்டினம் நயனத்திருப்பார்க்கு இடையறாது எண்ணி இருப்பார்க்கு.)

625. உருஅறி யும்பரிசு ஒன்றுண்டு வானோர்
கருவரை பற்றிக் கடைந்தமுது உண்டார்
அருவரை ஏறி அமுதுண்ண மாட்டார்
திருவரை யாம்மனம் தீர்ந்துஅற்ற வாறே.

பொருள் : எங்கள் ஆன்ம சொரூபத்தை அறியும் சிறப்பான முறை ஒன்று உள்ளது. (அதனை யான் சொல்லுவேன்). தேவர்கள் கருவுண்டாகும் இடத்தில் பொருந்தி இன்பத்தைப் பெற்றனர். அதனால் சிரசின் உச்சியில் சென்று அமுத பானம் செய்யாதவர். ஆகவே மனம் அடங்கச் சிரசின் மேலிடத்தில் பொருந்துவதே சொரூபத்தை அறிதலாம். திருப்பாற்கடலைக் கடைந்த செய்தியைக் கூறுவாரும் உளர்.

626. நம்பனை ஆதியை நான்மறை ஓதியைச்
செம்பொனின் உள்ளே திகழ்கின்ற சோதியை
அன்பினை ஆக்கி அருத்தி ஒடுக்கிப்போய்க்
கொம்பேறிக் கும்பிட்டுக் கூட்டமிட் டாரே.

பொருள் : நம்பத் தகுந்தவனும் முதல் பொருளானவனும், நான்கு வேதங்களை ஓதியவனும் செம்பொன்னின் உள்ளே விளங்கும் சோதி போன்றவனுமாகிய சிவனிடம் அன்பினைப் பெருக்கி ஆசையை அடக்கிப் போய் சகஸ்ர தளத்தில் பொருந்தி நின்று சாதகர் நிட்டைகூடியிருந்தார்.

627. மூலத்து மேலது முச்சது ரத்தது
கால் அத்து இசையில் கலக்கின்ற சந்தினில்
மேலைப் பிறையினில் நெற்றிநேர் நின்ற
கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே

பொருள் : குண்டலினி நான்கு இதழ்களோடு கூடிய மூலாதாரத்திலுள்ள முக்கோணவடிவமானது. அது அபானன் சத்திகெட்டுப் பிராணனோடு சேர்கின்ற இடத்தில் பெருமைமிக்க அர்த்த சந்திரனில் நெற்றிக்கு நடுவேயுள்ள வடிவத்தில் அர்த்தசந்திரன் முதல் உன்மனி ஈறாகவுள்ள கலைகளாக விளங்கும்.

628. கற்பனை யற்றுக் கனல்வழி யேசென்று
சிற்பனை எல்லாம் சிருட்டித்த பேரொளிப்
பொற்பினை நாடிப் புணர்மதி யோடுற்றுத்
தற்பர மாகத் தகுந்தண் சமாதியே

பொருள் : சீவ சங்கற்பங்களைவிட்டு மூலக் கனலோடு மேற்சென்று சிற்பத் திறம் நிறைந்த இப்புவனங்களை யெல்லாம் படைத்துக் கொடுத்த பேரொளி அழகனாகிய பரமசிவத்தை, தேடி மதி மண்டலத்தோடு பொருந்தி, தான் என்றும் சிவமென்றும் பேதமாகாதது, சாந்தம் பொருந்திய சமாதியாகும். (தற்பரமாதல் என்பது ஆன்வா பேதமற்றுச் சிவத்தோடு நிற்றல்)

629. தலைப்பட்டு இருந்திடுத் தத்துவம் கூடும்
வலைப்பட்டு இருந்திடும் மாதுநல் லாளும்
குலைப்பட்டு இருந்திடும் கோபம் அகலும்
துலைப்பட்டு இருந்திடும் தூங்கவல் லார்க்கே.

பொருள் : மேற்கூரிய வண்ணம் வாழ்க்கையை மாற்றியவரிடம் ஆன்மா நன்கு விளங்கும் ஆன்மா சிவத்தைச் சார்ந்திருத்தலால் திருவருட் சத்தியும் அங்கே பிணைந்து நிற்கும். அருட்சத்திக்கு எதிரமான் காமக் குரோதத்தின் அகன்று விடும் சமாதி கூடினவர்க்கு நடுமை நிலைமை தானே வந்துவிடும். (துவைப்பட்டிருத்தல் - நடுவு நிற்றல்)

630. சோதித் தனிச்சுட ராய்நின்ற தேவனும்
ஆதியும் உள்நின்ற சீவனும் ஆகுமாம்
ஆதிப் பிரமன் பெருங்கடல் வண்ணனும்
ஆதி அடிபணிந்து அன்புறு வாரே.

பொருள் : ஒளியோடு கூடிய ஒப்பற்ற சுடர்வடிவமாக நின்ற சிவமும், ஆதியாகிய சத்தியும் உள்ளே விளங்குகின்ற மலமற்ற ஆன்மாவும் சமாதியில் ஒன்றேயாகும். படைப்புக்கு முதல்வனாகிய பிரமனும் நீல மேனியையுடைய திருமாலும் ஆதிமுதல்வனாகிய சிவத்திடம் அடி பணிந்து அவனிடம் என்றும் நீங்கா அன்பு எய்துவர்.

631. சமாதிசெய் வார்க்குத் தகும்பல யோகம்
சமாதிகள் வேண்டாம் இறையுடன் ஏகில்
சமாதிதான் இல்லைதான் அவன் ஆகில்
சமாதியின் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே.

பொருள் : சமாதியில் இருப்பவர்க்குப் பல யோகங்கள் சித்திக்கும் எப்போதும் இறைவனோடு ஒன்றியிருக்கின் சமாதிகள் வேண்டாம். ஆன்மாவாகிய தான் சிவமேயானால் சமாதி தேவை யில்லாததாகும். சமாதியினால் அறுபத்து நான்கு கலை ஞானங்களும் வந்து பொருந்தும். (சமாதி - நிஷ்டை)

இயமம் (தீது அகற்றல்)

(அஃதாவது அட்டாங்க யோகத்தால் அடையும் சிறப்பு என்பதாம்)

632. போதுஉகந் தேறும் புரிசடை யான்அடி
யாதுஉகந் தார்அம ராபதிக் கேசெல்வர்
ஏதுஉகந் தான்இவன் என்றருள் செய்திடும்
மாது உகந்து ஆடிடும் மால்விடை யோனே.

பொருள் : சகஸ்ரதளத்தை விரும்பி எழுந்தருளியிருக்கும் சிவபெருமானது திருவடியை, எல்லாவற்றாலும் விரும்பியவர் விண்ணுலகை அடைவர். உமை காண நடனம் புரியும் இடப வாகன மூர்த்தி இச் சாதகன் எதை விரும்பி வந்தான் என்று அதனை அருள் புரியும்.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Mon Mar 26, 2012 3:00 pm

நியமம் (நன்றாற்றல்)

633. பற்றிப் பதத்து அன்பு வைத்துப் பரன்புகழ்
கற்றிருந்து ஆங்கே கருதும் அடர்கட்கு
முற்றெழுந்து ஆங்கே முனிவர் எதிர்வரத்
தெற்றும் சிவபதம் சேரலும் ஆமே.

பொருள் : திருவடியைப் பற்றிநின்று அதனிடம் அன்புகொண்டு சிவத்தின் புகழையே கற்றுக் கேட்டிருந்து அங்கு அவ்வண்ணமே சிந்தித்து இருப்பார்க்கு முனிவர்கள் அனைவரும் எழுந்து எதிர்கொண்டு அழைக்கத்தெளிந்த சிவபதம் சேர்தலும் கூடும். (சிவபதம் - சிவன் திருவடி)

ஆதனம் - இருக்கை

634. வருந்தித் தவஞ்செய்து வானவர் கோவாய்த்
திருந்துஅம ராபதிச் செல்வன் இவனெனத்
தருந்தண் முழவம் குழலும் இயம்ப
இருந்தின்பம் எய்துவர் ஈசன் அருளே.

பொருள் : சிவபெருமானை நோக்கி வருந்தித் தவம் செய்து தேவஉலகுக்கு அரசனாய், தேவ உலகம் செல்லக்கூடிய தகுதியுடையவன் இவன் என்று சொல்லும்படி குளிர்ச்சியைத் தரும் முரசம் வேய்ங்குழலும் ஒலிக்க இறைவன் அருளால் இவ்வுலகிலிருந்து இன்பம் அடைவர். (தண்முழவம் - தண்ணுமை - மத்தளம்)

பிராணாயாமம் (வளிநிலை)

635.செம்பொன் சிவகதி சென்றுஎய்தும் காலத்துக்
கும்பத்து அமரர் குழாம்வந்து எதிர்கொள்ள
எம்பொன் தலைவன் இவனாம் எனச்சொல்ல
இன்பக் கல்வ இருக்கலும் ஆமே.

பொருள் : செம்பொன்னின் ஒளியையுடைய சிகதியை அடைகின்ற காலத்தில் பூரண கும்பத்துடன் கூடியதேவர் கூட்டம் வந்து எதிர் கொண்டழைக்க எங்களுடைய பொன் மண்டலம் என்று புத்தி மண்டலத் தலைவன் இவனாம் என்று அனைவரும் பாராட்ட இன்பச் சேர்க்கையுள் இருக்கலாம்.

பிரத்தியாகாரம் (தொகைநிலை)

636. சேருறு காலம் திசைநின்ற தேவர்கள்
ஆர்இவன் என்ன அரனாம் இவன்என்ன
ஏர்உறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ளக்
கார்உறு கண்டணை மெய்கண்ட வாறே.

பொருள் : சிவகதியைப் பெறுங்காலத்துத் திக்குப் பாலர்களாகிய தேவர்கள் இவன் யார் என்று கேட்க, சிவபெருமான் நாமே இவன் என்று சொல்ல அழகுமிக்க தேவர்கள் அனைவரும் எதிர்கொண்டு அழைக்க கருமைநிறம் பொருந்திய கண்டத்தையுடைய சிவபெருமானைச் சாதகர் நேரில் தரிசித்தவராவர்.

தாரணை (பொறைநிலை)

637. நல்வழி நாடி நமன்வழி மாற்றிடும்
சொல்வழி யாளர் சுருங்காப் பெருங்கொடை
இவ்வழி யாளர் இமையவர் எண்டிசைப்
பல்வழி எய்தினும் பார்வழி யாகுமே.

பொருள் : நாத சம்மியத்தை நாடி எமனிடம் செல்கின்ற வழியை மாற்றுகின்ற பிரணவ உபாசகரும் குறையாத கொடையில் வழிவழி வந்தவரும் ஆகிய இவ் யோகியர்களுக்குத் தேவலோகத்திலுள்ள எட்டுத்திக்குகளுக்குச் சென்றாலும் தேவலோகம் பூலோகம் போன்று தெரிந்த வழியாக இருக்கும்.

தியானம் (நினைதல்)

638. தூங்கவல் லார்க்கும் துணையேழ் புவனமும்
வாங்கவல் லார்க்கும் வலிசெய்து நின்றிட்டுத்
தேங்கவல் லார்க்கும் திளைக்கும் அமுதமும்
தாங்கவல் லார்க்கும் தன்னிடம் ஆமே.

பொருள் : அறிதுயில் கொள்ளும் திருமாலுக்கு ஏழ் உலகங்களை மீண்டும் படைக்க வல்ல பிரமனுக்கும் வலிமையால் அழித்து அசையாது நிற்கும் உருத்திரனுக்கு அமுதம் உண்டு திளைத்துத் தாங்கிக் கொண்டிருக்கும் தேவர்களுக்கும் சிவகதியைப் பெற்றவரே இடமாகும்.

சமாதி (நொசிப்பு)

639. காரிய மான உபாதியைத் தான்கடந்து
ஆரிய காரணம் எழுந்துதன் பாலுற
ஆரிய காரண மாய தவத்திடைத்
தார்இயல் தற்பரம் சேர்தல் சமாதியே.

பொருள் : ஆன்மாக்களுக்கு ஆணவ மல மறைப்பால் விளைந்த உபாதி ஏழையும் கடந்து, ஆரியனான சிவத்தினது உபாதி ஏழையும் பொருந்தி, பரம்பரையாக வரும் சுத்தமாயை, கெட, தவத்தில் இயக்கும் தன்மையதான பொருளைச் சேர்தலே சமாதியின் பயனாம்.

11. அட்டமாசித்தி

பரகாயப் பிரவேசம்

(அட்டமாசித்தி - எட்டுப் பெரிய சித்திகள் யோகப்பயனாலும் ஈசன் அருளாலும் கிட்டுவன. அவையாவன: அணிமா, மகிமா, கரிமா, இலகிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்பன.

அணிமா - அணுப்போன்று சூக்குமமாதல். மகிமா - மலை போன்று பெரிதாதல்; கரிமா - கனமாதல்; இலகிமா - பஞ்சைப்போல் இலேசாதல். பிராப்தி எல்லாப் பொருளை யும் தன்பால் தருவித்தல்; பிராகாமியம் - விருப்பம் போல் தடையின்றி எல்லா இன்பங்களையும் பெற்றிருத்தல்; ஈசத்துவம் - தத்துவங்களை விருப்பப்படி நடத்தல்; வசித்துவம் - தத்துவங்களில் கலந்திருத்தல்.

பரகாயப் பிரவேசமாவது பிராகாமியம். அஃதாவது வேண்டும். உடம்பை எடுத்துக் கொண்டு சுகம் அனுபவித்தல். இனி, மேலான உடம்பில் புகல் என்ற பொருளும் கண்டுகொள்க.)

640. பணிந்துஎண் திசையும் பரமனை நாடித்
துணிந்துஎண் திசையும் தொழுதுஎம் பிரானை
அணிந்துஎண் திசையிலும் அட்டமா சித்தி
தணிந்துஎண் திசைசென்று தாபித்தவாறே.

பொருள் : மனம் ஒருமைப்பட்டு எட்டுத் திக்குகளிலும் மேலான பொருளாகிய பரமனை, அவனே பரம்பொருள் என்று ஆராய்ந்து துணிந்து, அவ்எட் டுத்திசைகளிலும் எம்பெருமானை வணங்கி, எண்திசையினும் அட்டமாசித்திகள் தாமே அடையுமாறு பெற்று எங்கும் அட்டமாசித்திகள் நிலை பெறுவித்தவாறாகும்.

641. பரிசறி வானவர் பண்பன் அடியென
துரிசற நாடியே தூவெளி கண்டேன்
அரியது எனக்கில்லை அட்டமா சித்தி
பெரிதருள் செய்து பிறப்பறுத் தேனே.

பொருள் : ஒளி மண்டல வாசிகளின் பக்குவத்துக்கு ஏற்ப வழங்கும் பண்பாளன் திருவடியே சரண் என்ன குற்றமற நாடி மிகத் தூய்மையான பரவெளியைக் கண்டேன். ஆதலால் அடியேனுக்கு அருமையான பொருள் பிறிதொன்றில்லை; அட்டமா சித்திகளை அடியேனுக்கு விரும்பி யருளி அப்பெரு மான் பிறவியை நீக்கியருள் செய்தான். (துரிசறகாமம் வெகுளி மயக்கமாகிய முக்குற்றம் நீங்க.)

642. குரவன் அருளிற் குறிவழி மூலப்
பரையின் மணமிகு சங்கட்டம் பார்த்துத்
தெரிதரு சாம்பவி கேசரி சேரப்
பெரிய சிவகதி பேறொட்டாஞ் சித்தியே.

பொருள் : குருவின் அருளினால் மூலாதாரத்திலுள்ள குண்டலினி சத்தி சீவசத்தியுடன் பொருந்திக் குறிவழி பாய்வதைத் தடுத்து நல்ல தருணத்தை உண்டாக்கி, தியான முறையில் சாம்பவி, கேசரியாகிய இரு நாட்டத்தில் ஏதேனும் ஒன்று சேர, பெரிய சிவகதியைப் பெற்று அதன் பேறாகிய அட்டமா சித்திகளையும் அடையலாம்.

641. பரிசறி வானவர் பண்பன் அடியெனத்
துரிசற நாடியே தூவெளி கண்டேன்
அரியது எனக்கில்லை அட்டமா சித்தி
பெரிதருள் செய்து பிறப்பறுத் தேனே.

பொருள் : ஒளி மண்டல வாசிகளின் பக்குவத்துக்கு ஏற்ப வழங்கும் பண்பாளன் திருவடியே சரண் என்ன குற்றமற நாடி சிகத் தூய்மையான பரவெளியைக் கண்டேன். ஆதலால் அடியேனுக்கு அருமையான பொருள் பிறிதொன்றில்லை. அட்டமா சித்திகளை அடியேனுக்கு விரும்பி யருளி அப்பெருமான் பிறவியை நீக்கியருள் செய்தான். (துரிசறகாமம் வெகுளி மயக்கமாகிய முக்குற்றம் நீங்க.)

642. குரவன் அருளிற் குறிவழி மூலப்
பரையின் மணமிகு சங்கட்டம் பார்த்துத்
தெரிதரு சாம்பவி கேசரி சேரப்
பெரிய சிவகதி பேறெட்டாஞ் சித்தியே.

பொருள் : குருவின் அருளினால் மூலாதாரத்திலுள்ள குண்டலினி சத்தி சீவசத்தியுடன் பொருந்திக் குறிவழி பாய்வதைத் தடுத்து, நல்ல தருணத்தை உண்டாக்கி, தியான முறையில் சாம்பவி, கேசரியாகிய இரு நாட்டத்தில் ஏதேனும் ஒன்று சேர, பெரிய சிவகதியைப் பெற்று அதன் பேறாகிய அட்டமா சித்திகளையும் அடையலாம்.

643. காயாதி பூதம் கனல்கால மாயையில்
ஆயாது அகல அறிவொன்று அனாதியே
ஓயாப் பதியதன் உண்மையைக் கூடினால்
வீயாப் பரகாயம் மேவலு மாமே.

பொருள் : ஆகாயம் முதலான பூதங்களும் கலை காலம் மாயையாகிய தத்துவங்களும் ஆகிய இவற்றில், ஆய்ந்து தோயாது அகல, ஆன்ம அறிவானது பொருந்தி அனாதியே நீங்காத சத்தினைக் கூடினால் அழியாமல் மேன்மையான சரீரத்தைப் பொருந்தலாம்.

644. இருபதி னாயிரத்து எண்ணூறு பேதம்
மருவிய கன்ம மாம்அந்த யோகம்
தரும்இவை காய உழைப்பாகும் தானே
அரும்இரு நான்காய் அட்டமா சித்திக்கே.

பொருள் : பொருந்திய கன்ம யோகம், இருபதினாயிரத்து எண்ணூறு பேதங்களை யுடையது. இவ்வாறு வந்தவை உடல் உழைப்பு ஆகும். அருமையான இவை அட்டாங்க யோகத்துள் அடங்கி எண் சித்திகளை அளிக்க வல்லனவாம்.

645. மதிதனில் ஈராறாய் மன்னும் கலையின்
உதய மதுநா லொழியவோ ரெட்டுப்
பதியும் ஈராறாண்டு பற்றறப் பார்க்கில்
திதமான ஈராறு சித்திக ளாமே.

பொருள் : சந்திர நாடியாகிய இடைகலையில் பன்னிரண்டு அங்குல அளவாய் இழுக்கப் பெறும் பிராணனில் பிங்கலை வழியாக வெளிப்படுதல் நாலங்குல அளவு போக எட்டங்குல அளவு உள்ளே தங்கும். இதனைப் பன்னிரண்டு ஆண்டுகள் உலகப்பற்றை விட்டுக் கவனித்து வந்தால் உறுதியான அட்டமா சித்திகளை அடையலாம். (ஈராறு-இரண்டும் ஆறும்; எட்டு - உம்மைத் தொகை)

646. நாடும் பிணியாகும் நம்சனம் சூழ்ந்தக்கால்
நீடும் கலைகல்வி நீள்மேதை கூர்ஞானம்
பீடுஒன்றி னால்வாயாச் சித்தியே தத்தின்
நீடும் துரம்கேட்டல் நீண்முடிவு ஈராறே.

பொருள் : நம்முடைய உறவினர் சூழ இருப்பின் நம்மை நாடுவது பந்தமாகும். மிக்க கலை ஞானம், நுண்ணறிவு, நிறையறிவு ஆகிய இவற்றால் அட்டமாசித்திகள் அடையா. பேதமாகப் பெருகிய ஒலியினைப் பன்னிரண்டு கேட்டாலே சித்தியைத் தருமாம். (நீண்முடிவுஈராறு - யோகாப்பியாச காலம் பன்னிரண்டு வருடங்கள்.)

647. ஏழா னதில்கண்டு வாயுவின் வேகியாம்
தாழா நடைபல யோசனை சார்ந்திடும்
குழான ஓரெட்டில் தோன்றா நரைதிரை
தாழான ஒன்பதில் தான்பர காயமே.

பொருள் : நாத தரிசனம் கிட்டியவர் ஏழாண்டில் சண்டமாருதம் போல் செல்லும் வேகத்தை உடையோராவர். நடைதளராமல் பல யோசனை செல்லும் வன்மை கிட்டும். சூழ்ந்த எட்டாம் ஆண்டில் நரை என்றும் மூப்பு என்றும் தோன்றா. தங்குதலையுடைய ஒன்பதாம். ஆண்டில் பரகாயப் பிரவேசமாம்; (அஃதாவது அழியாத உடல் உண்டாகும்) ஏழு, எட்டு, ஒன்பது ஆண்டுகளில் அமையும் பயன் கூறியவாறு.

648. ஈரைந்தில் பூரித்துத் தியான உருத்திரன்
ஏர்வொன்று பன்னொன்றில் ஈராறாம் எண்சித்தி
சீர்ஒன்று மேலேழ் கீழேழ் புவிச்சென்று
ஏர்ஒன்று வியாபியாய் நிற்றல ஈராறே.

பொருள் : பத்தாண்டு தியான சத்தியால் கீழே போகும் சத்திகளை மேலே நிரப்பிக் கொண்டு உருத்திரன் போன்று சாதகர் விளங்குவார். பதினோராண்டில் எட்டு என்று எண்ணப்பட்ட சித்தி உண்டாம். சிறப்புப் பொருந்திய மேலேழ் உலகங்களிலும் கீழேழ் உலகங்களிலும் சென்று பன்னிரண்டு ஆண்டில் எங்கும் சென்று அழகுடன் நிறைந்து நிற்கும் தகுதி சாதகர்க்கு உண்டாகும்.

649. தானே அணுவும் சகத்துதன் நோன்மையும்
தானாக் கனமும் பரகாயத் தேகமும்
தானாவ தும்பர காயஞ்சேர் தன்மையும்
ஆனாத உண்மையும் வியாபியு மாம்எட்டே.

பொருள் : தானே அணிமாவும் உலகம் போன்று பெருமையுடைய மகிமாவும், அளவிடமுடியாத கனம் உடைமையான கரிமாவும் எல்லாவற்றையும் அடக்கியும் அமையாத ஆகாயம் போன்று இலேசான இலகிமாவும், அழியாத உடலை அடைதலாகிய பிராத்தியும், பரகாயத்தை அடையும் ஆற்றலாகிய பிராகாமியமும் அமையாத உண்மையாகிய ஈசத்துமும் வியாப்பியமாகிய வசித்துவமும் ஆகிய எட்டுச் சித்திகளும் அடையலாம்.

650. தாங்கிய தன்மையும் தான்அணுப் பல்லுயிர்
வாங்கிய காலத்து மற்றோர் குறையில்லை
ஆங்கே எழுந்துஓம் அவற்றுள் எழுந்துமிக்கு
ஓங்கி வரமுத்தி முந்திய வாறே.

பொருள் : சிவயோகியாகிய தான் அணுத்தன்மை எய்திப் பல உயிர்களையும் தாங்கிய காலத்தும், அவற்றை வாங்கி ஒடுக்கிய காலத்தும் ஓர் மாற்றமும் இல்லை, சித்தி பெற்ற உயிர்களாகிய அவற்றுள் அப்போதே மேலெழுந்த ஓம் என்னும் நாதம் ஊர்த்துவ சகஸ்ர தளத்தை அடைந்து எழுந்து சென்ற விதமே முத்தி முற்பட்டவாறாம்.

651. முந்திய முந்நூற்று அறுபது காலமும்
வந்தது நாழிகை வான்முதல் ஆயிடச்
சிந்தைசெய் மண்முதல் தேர்ந்தறி வார்வலர்
உந்தியுள் நின்று உதித்தெழும் ஆறே.

பொருள் : சூரிய உதயம் முதல் முன்னூற்று அறுபது விநாடியும் அமைய வந்ததாகிய நாழிகை காலத்தை ஆகாயம் முதலாகக் கொண்டு இடமும் எண்ணப்படுகின்ற இரவுக் காலத்தை மண் முதலாகக் கொண்டு அறியவும் வல்லவர் உந்திக்காலத்தில் நிற்கும் சூரியன் உதித்து மேல் எழுதலை அறிவார். ஒருநாழிகைக்கு 60 விநாடி பகல் 30 நாழிகை. 6030 = 1800 வினாடி, ஒவ்வொரு பூதத்திற்கும் 1800/5 = 360 விநாடி என்க. இதேபோல் இரவுக்கும் கொள்க, இது பழையமுறை இப்போது நாழிகை என்பது 24 நிமிஷம் அதாவது ஒருமணிக்கு 2 1/2 நாழிகை.

652. சித்தம் திரிந்து சிவமய மாகியே
முத்தம் தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர்
சுத்தம் பெறலாம் ஐந்தில் தொடக்கற்றோர்
சித்தம் பரத்தில் திருநடத் தோரே.

பொருள் : சித்தம் புறத்தே செல்லாமல் மாறுபட்டுச் சிவமாகி, வீடு பேற்றை ஆராய்ந்து அடைந்த பிரணவ உபாசகர் சிவத் தோடு கூடிய முத்தர்கள் ஆவார்கள். அவர் பஞ்சேந்திரியங்களின் தொடர்பில்லாதவர்கள். ஆகையால் அகத் தூய்மை பெறலாம். அவர்கள் அறிவு ஆகாயத்தில் தத்துவங்களை விட்டுச் சிவத்துடன் பொருந்திநிற்பர்.

653. ஒத்தஇவ் ஒன்பது வாயுவும் ஒத்தன
ஒத்தஇவ் ஒன்பதின் மிக்க தனஞ்சயன்
ஒத்தஇவ் ஒன்பதில் மிக்க இருந்திட
ஒத்த உடலும் உயிரும் இருந்ததே.

பொருள் : தம்முள் மிகாமலும் குறையாமலும் ஒன்பது வாயுக்களும் ஒத்து இயங்குவன இவ்ஒன்பது அல்லாத பத்தாவதாக உள்ள தனஞ்சயன் என்னும் வாயு ஒத்து இயங்கும் இவ்ஒன்பதிலும் கூடியிருக்கவே உடலோடு உயிரும் நீங்காதிருக்கும்.

654. இருக்கும் தனஞ்சயன் ஒன்பது காலில்
இருக்கும் இருநூற்று இருபத்து மூன்றாய்
இருக்கும் உடலில் இருந்தில வாகில்
இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே.

பொருள் : தனஞ்சயன் என்னும் வாயு ஏனைய வாயுக்கள் இயங்கும் நாடிகளிலும் பொருந்தியிருக்கும், அஃது இருநூற்று இருபத்து மூன்றாவது புவனமாகிய அநந்தை என்ற மண்டலத்தில் பொருந்தியிருக்கும். இந்தக் காற்று பொருந்தியில்லாவிடில் இவ்வுடல் வீங்கி வெடித்துப் போகும். 224 என்ப புவனங்களின் தொகை.

655. வீங்கும் கழலை சிரங்கொடு குட்டமும்
வீங்கும் வியாதிகள் சோகை பலவதாய்
வீங்கிய வாதமும் கூனும் முடமதாய்
வீங்கு வியாதிகள் கண்ணில் மருவியே.

பொருள் : வீங்கும் வயிற்றுக்கட்டி, சிரங்கு, குட்டம், வீக்கவியாதிகள், சோகை, காலில் வாதம், கூனமுடம், கண்ணில் பொருந்தி வீங்கும் வியாதிகள் பலவும் தனஞ்சயன் திரிபால் உண்டாவன.

656. கண்ணில் வியாதி உரோகம் தனஞ்சயன்
கண்ணில்இவ் ஆணிகள் காசம் அவனல்லன்
கண்ணினில் கூர்மன் கலந்திலன் ஆதலால்
கண்ணினில் சோதி கலந்ததும் இல்லையே.

பொருள் : ஆராயுமிடத்தில் தனஞ்சயன் என்னும் வாயு திரிபு அடையின் வியாதியாம், கண்களில் உண்டாகும் ஆணிகள் காசம் முதலிய நோய்கள் தனஞ்சயன் திரிபால் வருவன அல்ல. கண்ணினிடம் கூர்மன் என்ற வாயு பொருந்தாவிடில் கண்ணில்நோய் உண்டாகி ஒளியும் இல்லையாம். (கண்ணுதல் - ஆராய்தல், ஆணி - பூ; காசம் - படலம்)

657. நாடியின் ஓசை நயனம் இருதயம்
தூடி அளவும் சுடர்விடு சோதியைத்
தேவருள் ஈசன் திருமால் பிரமனும்
ஓவற நின்றங்கு உணர்ந்திருந் தாரே.

பொருள் : கண்கள் இருதயம் ஆகிய இவற்றில் நாடியின் ஓசையுள்ளது. சிறுதுடியால் அமையும் ஒலி உண்டாக்குகின்ற சுடருடைய சோதியை தேவர்கள் தலைவர்களாகிய உருத்திரன், விஷ்ணு, பிரமனும் இடைவிடாது அங்குப் பொருந்தி உணர்ந்திருந்தனர். (துடி என்றது தூடி என்று நீண்டு நின்றது.)

658. ஒன்பது வாசல் உடையதோர் பிண்டத்துள்
ஒன்பது நாடி யுடையதோர் ஓரிடம்
ஒன்பது நாடி ஒடுங்கவல் லார்கட்கு
ஒன்பது வாசல் உலைநல மாமே.

பொருள் : கண்முதலிய ஒன்பது துவாரங்களையுடைய உடம்பில் இடை முதலிய ஒன்பது நாடிகள் ஒடுங்குவதற்குரிய சுழுமுனையாகிய இடம் ஒன்றுள்ளது. அவ்விடத்தில் அவை ஒடுங்கியிருக்கத் தவம் செய்ய வல்லார்க்கு ஒன்பது வாயில் களையுடைய உலைக்களமாகிய உடல் நன்மை எய்தும். ஈற்றடியை ஒன்பது காட்சி இலை பலவாமே என்று படைபேதமாகக் கொண்டு உணர்வுகள் அளவிறந்து தோன்றும் என்று பொருள் கூறுவாரும் உளர்.

659. ஓங்கிய அங்கிக்கீழ் ஒண்சுழு முனைச்செல்ல
வாங்கி இரவி மதிவழி ஓடிடத்
தாங்கி உலகங்கள் ஏழுந் தரித்திட
ஆங்கது சொன்னோம் அருவழி யோர்க்கே.

பொருள் : சிறந்த குண்டலினியாகிய அங்கியின் கீழே சுழுமுனை நாடியைச் செல்வச் செய்து, வாங்கிச் சூரிய கலையில் இயங்கும் பிராணனைச் சந்திர கலையில் ஓடும்படி செய்து ஏழ் உலகங்களையும் தாங்கிட யோக நெறி நிற்போர்க்குச் சொன்னோம்.

660. தலைப்பட்ட வாறுஅண்ணல் தையயை நாடி
வலைப்படட் பாசத்து வன்பிணை மானபோல்
துலைப்பட்ட நாடியைத் தூவழி செயதால்ய
விலைக்கண்ண வைத்தோர் வித்தது வாமே.

பொருள் : பிரமரந்திரத்தால் விளங்கும் சிவசத்தியை நாடி, வலையில் அகப்பட்டு எங்கும் செல்லாமல் நிற்கும் மானைப் போல சந்திரகலை சூரிய கலையில் செல்லாமல் பிராணனைச் சூழு நிறுத்தினால் விளைவிக்கு உண்ணுவதற்கும் சேமித்து வைத்த வித்துப் போலப் பயனாகும்.

661. ஓடிச்சென்று அங்கே ஒருபொருள் கண்டவர்
நாடியின் உள்ளாக நாதம் எழுப்புவர்
தேடிச்சென்று அங்கே தேனை முகந்துண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டுமே.

பொருள் : மூலாதாரத்திலிருந்து சகஸ்ரதளத்தை விரைந்து அடைந்து சிவமாகிய ஒரு பொருளைத் தரிசித்தோர் அங்குள்ள நாடியின் உள்ளே நாதத்தை வெளிப்படுத்துவர். மேலும் ஆராய்ந்து அங்கே உண்டாகின்ற அமுதத்தையும் பருகி உடலாகிய பாசறையிலுள்ள காமாதி அறுபகைவர்களைச் சிறைப்படுத்துவர்.

662. கட்டிட்ட தாமரை ஞானத்தின் ஒன்பது
மட்டிட்ட கன்னியர் மாதுடன் சேர்ந்தனர்
கட்டிட்டு நின்று களங்கனி யூடுபோய்
பொட்டிட்டு நின்று பூரண மானதே.

பொருள் : சகஸ்ர தளத்தோடு பிணிக்கப்பட்ட சுழுமுனை நாடியில் சீவர்களை உலகமுகப்படுத்திக் கொண்டிருந் தவாமை முதலான ஒன்பது சத்திகள் சீவர்கள் பக்குவப்பட்ட பின்னர் தம் செயலாற்றுப் பராசக்தியுடன் பொருத்தி அமைந்தனர். அப்போது மூலாதாரத்தில் செயற்படுத்திக் கொண்டிருந்த குண்டலினி தொண்டைச் சக்கரத்தின் வழியாகச் சென்று அஞ்øஞ்ச் சக்கரத்தை அடைந்து பூரண சத்தியாக விளங்கியது.

663. பூரண சத்தி எழுமூன்று அறையாக
ஏரணி கன்னியர் எழுநூற்றுஅஞ்சு ஆயினர்
நாரணன் நான்முகன் ஆதிய ஐவர்க்கும்
காரண மாகிக் கலந்து விரிந்ததே.

பொருள் : பராசத்தியே ஏழ கன்னிகளாக இச்சை ஞானம் கிரியையாகிய பேதத்தால் இருபத்தொன்றாக அழகு மிக்க அக்கன்னியர் ஐம் பெருந் தொழிலுக்கும் நூற்றைந்து கன்னியராயினர். நாராயணன், பிரமன், உரத்திரன் , மகேஸ்வரன், சதாசிவனாகிய ஐவருக்கும் காரணமாகிய அவர்களோடு கலந்து விரிந்து நின்றனன்.

664. விரிந்து குவிந்து விளைந்தஇம் மங்கை
கரந்துள் எழுந்து கரந்துஅங்கு இருக்கில்
பரந்து குவிந்தது பார்முதல் பூதம்
இரைந்தெழு வாயு இடத்தினில் ஓங்கே.

பொருள் : இவ்வாறாக விரிந்து பின்னர் ஒடுங்கிப் பலவகை போகங்களையும் விளையச் செய்த இப்பராசக்தி மறைந்து சிவத்தினுள் சிறந்து தோனறிப் பின் ஒடுங்கியிருப்பின் பூமி முதலிய பூதங்களும் பரந்து பின் ஒடுங்கிவிடும். ஆதலால நீ மேல் எழுகின்ற நாதத்தில் ஓங்கி விளங்குவாயா. (இரைந் தெழு வாயு (ஓசையுடன் மேலெழும் உயிர்ப்பு உயிர்ப்பு பிராணவாயு.)

665. இடையொடு பிங்கலை என்னும் இரண்டும்
அடைபடும் வாயுவும் ஆறியே நிற்கும்
தடையவை ஆறேழும் தண்சுடர் உள்ளே
மிடைவளர் மின்கொடி தன்னில் ஒடுங்கே.

பொருள் : நாதத்தில் ஒடுங்கியவர்க்கு இடைபிங்கலை அடைபட்டுச் சுழுமுனை திறக்கும். சுவாசம் அவர்க்கு மெத்தென இயங்கும். ஆறு ஆதாரங்களும் ஏழு சத்திகளும் நீங்கிச் சந்திரமண்டலத்தில் புருவ நடுவில் விந்துத்தானத்தில் நீ ஒடுங்குவாயாக.

666. ஒடுங்கி ஒடுங்கி உணர்ந்துஅங்கு இருக்கில்
அடங்கி அடங்கிடும் வாயு அதனுள்
மடங்கி மட்ங்கிடும் மன்னுயிர் உள்ளே
நடங்கொண்ட கூத்தனும் நாடுகின் றானே.

பொருள் : மனம் ஒருமைப்பட்டுப் புருவ நடுவில் இருப்பின் பிராணன் அப்போது கட்டுப்பட்டு நின்றுவிடும். புறநோக்கின்றி அகமுகமாக நோக்கும் உயிரினுள்ளே நடனம் புரியப் பெருமானும் தன்னை அறியச் செய்வான்.

667. நாடியின் உள்ளே நாதத் தொனியுடன்
தேடி உடன்சென்றத் திருவினைக் கைக்கொண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டிடு
மாடி ஒருகை மணிவிளக்கு ஆனதே.

பொருள் : சுழுமுனை பாயும் இடத்தில் விளங்கும் நாத ஒலியுடன் சென்று அங்கு நிøபெற்றுள்ள சிவசத்தியைப் பொருந்தி பாசறையிலுள்ள இருளாகிய பகைவரைக் கட்டுகின்ற பெருமை பொருந்திய சுழுமுனையே தூண்டாவிளக்காயிற்று.

668. அணிமாதி சித்திகள் ஆனவை கூறில்
அணுவில் அணுவின் பெருமையின் நேர்மை
இணுகாத வேகார் பரகாயம் மேவல்
அணுத் தன்ஐ எங்கும் தானாதல் என்றுஎட்டே.

பொருள் : அணிமா முதலான சித்திகளைச் சொல்லுமிடத்து அணுவில் அணுவாதலும், பெரியதில் பெரிதாதலும் அசைக்க இயலாத கனமுடையதாதலும் புகைபோல இலே சாதலும் மேலுள்ள ஆகாயத்தைத் தொடுதலும், எல்லாப் பூதங்களிலும் வியாபித்து எழுதலும் உயிர்கட்கு எல்லாம் கருத்து ஆதலும், எல்லாவற்றையும் வசியம் செய்து எங்கும் தானாக இருத்தலும் ஆகிய எட்டாகும்.

669. எட்டாகியசித்தி ஓரெட்டு யோகத்தால்
கிட்டாப் பிராணனே செய்தால் கிடைத்திடும்
ஒட்டா நடுநாடி மூலத்துஅனல் பானு
விட்டான் மதியுண்ண வும்வரும் மேலதே.

பொருள் : அட்டமா சித்திகளும் அட்டாங்க யோகத்தால், அடக்கி ஆளமுடியாத பிராண வாயுவை அடக்கி யாண்டால் அடையப் பெறும். மூலாதாரத்திலுள்ள குண்டலினியானது சுழுமுனை நாடி வழியாகச் சென்று அக்கினி மண்டலம் சூரிய மண்டலம் ஆகியவற்றைக் கடந்தால் மேலுள்ள சந்திரமண்டல அமுதம் புசிக்கக் கூடும்.

670. சித்திகள் எட்டன்றிச் சேர்எட்டு யோகத்தால்
புத்திகள் ஆனவை எல்லாம் புலப்படும்
சித்திகள் எண்சித்தி தானாம் திரிபுரைச்
சத்தி அருள்தரத் தான்உள வாகுமே.

பொருள் : பயிலப் பெறுகின்ற அட்டாங்க யோகத்தால் முற்கூறப் பட்ட அட்டமா சித்திகள் அன்றி, ஞானங்களாக உள்ளவை எல்லாம் வெளிப்படும். எண்வகைச் சித்திகளும் தானே யாகிய திரிபுரைச் சத்தி கருணையின் தரத்தால் சித்தியும் புத்தியும் உண்டாம்.

அணிமா (நுண்மை)

671. எட்டுஇவை தன்னோடு எழிற்பரம் கைகூடப்
பட்டவர் சித்தர் பரலோகம் சேர்தலால்
இட்டமது உள்ளே இறுக்கல்பர காட்சி
எட்டு வரப்பும் இடந்தான்நின்று எட்டுமே.

பொருள் : இந்த எட்டுச் சித்திகளுடன் எல்லாம் வல்ல பரஞானமும் கைவரப் பெற்றவர்களே சித்தராவர். இவர்கள் சிவலோகத்தை அடைதலால் இவர்கள் இஷ்டப் பொருளான சிவத்தைக் கண்டு அழுந்தி யிருப்பார்கள். எட்டினை வரம் பாகவுடைய சித்திகள் இவர்களிடம் தாமே வந்தடையும். (இறுக்கல் - ஒடுங்குதல்)

672. மந்தரம் ஏறும் மதிபானுவை மாற்றிக்
கந்தாய்க் குழியிற் கசடற வல்லார்க்குத்
தந்தின்றி நற்காமிய லோகம் சார்வாகும்
அந்த உலகம் அணிமாதி யாமே.

பொருள் : மலை என்கிற சிரசில் சந்திர சூரிய கனல்களை மாற்றி அடித்த மூளை போலச் சுழுமுனையை யாக்கி விந்து (சுக்கிலம்) நீக்கமின்றி இருக்க வல்லார்க்கு நரம்பின்றிய பிரணவதேகம் பெற்று விரும்பிய நல்ல உலகத்தை அடைவர். அவ்வுலகம் அணிமாதி சித்திகளை அளிக்கவல்லதாம். கந்து - அடித்த முளை.

673. முடிந்துஇட்டு வைத்து முயங்கில் ஓராண்டில்
அணிந்த அணிமாகை தானாம் இவனும்
தணிந்த அப்பஞ்சினும் தான்நொய்ய தாகி
மெலிந்துஅங்கு இருந்திடும் வெல்லஒண் ணாதே.

பொருள் : விந்து நீக்கமின்றிச் சேமித்து வைத்து ஓர்யாண்டு யோக முயற்சியில் ஈடுபட்டால் நூல்களால் புகழ்ந்து கூறப்பட்ட அணிமா சித்த கைவசமாகும். கைவரப் பெற்ற சித்தனும் மெலிந்த நுட்பமான பஞ்சைக் காட்டிலும் நுண்மையாய் மெலிந்து இருப்பான். அவனை வெல்லமுடியாது. ஓர் ஆண்டு என்பது சூரிய வட்டமான சௌரமான வருடம் அன்று. வியாழவட்டமான பன்னிரண்டு ஆண்டு என்ற படி (இந்நிலை ஓராண்டில் கைகூடும் என்பாரும் உளர்.)
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Mon Mar 26, 2012 3:02 pm

இலகிமா (மென்மை)

674. ஆகின்ற அத்தனி நாயகி தன்னுடன்
போகின்ற தத்துவம் எங்கும் புகலதாய்ச்
சாகின்ற காலங்கள் தன்வழி நின்றிடின்
மாய்கின்ற ஐயாண்டின் மாலகு வாகுமே.

பொருள் : ஆக்கத்தை அளிக்கின்ற பராசத்தியுடன் மூலாதாரத்தினின்றும் மேலே தான் சொல்லுகின்ற எல்லாத் தத்துவங்களிலும் அச்சத்தியே ஆதாரமாய், செல்ல வேண்டிய காலங்கள் தன் வழிப்பட்டு நிற்பின் செல்லுகின்ற ஐந்து ஆண்டுகளில் மேன்மையான இலகிமா சித்திக்கும்.

675. மாலகு வாகிய மாயனைக் கண்டபின்
தான்ஒளி யாகித் தழைத்தங்கு இருந்திடும்
பால்ஒளி யாகிப் பரந்துஎங்கும் நின்றது
மேல்ஒளி யாகிய மெய்ப்பொருள் காணுமே.

பொருள் : இலகிமா சித்தி பெற்று அழகிய தலைவனைத் தரிசித்த பிறகு தான் ஒளியாய் விளங்கி அந்தப் பரஞ்சோதியில் திளைத்திருப்பான். இவ் வண்ணம் பால் போன்ற ஒளிப்பொருளாய் எங்கும் பரந்து நின்ற ஆன்மா எல்லாவற்றுக்கும் மேலாகிய ஒளிப் பொருளான சிவபரம்பொருளைத் தரிசிக்கும். (மாலகுவாகிய - பெருமையுள்ள மென்மை வடிவினனான். மயானை - முழுமுதற் சிவனை.)

மகிமா (பருமை)

676. மெய்ப்பொருள் சொல்லிய மெல்லிய லாள்உடன்
தத்பொரு ளாகிய தத்துவம் கூடிடக்
கைப்பொரு ளாகக் கலந்திடும் ஓராண்டின்
மைப்பொருளாகும் மகிமாவ தாகுமே.

பொருள் : உண்மை ஞானத்தை உணர்த்தியருளிய அருட்சத்தியுடன் தத் என்று குறிக்கப்படும் சிவம் கூட, மறைந்த பொருளான மகிமாவானது ஒரு வருடத்தில் உள்ளங் கையிலுள்ள பொருள்போலக் கலந்திடும்.

677. ஆகின்ற காலொளி யாவது கண்டபின்
போகின்ற காலங்கள் போவதும் இல்லையாம்
மேல்நின்ற காலம் வெளியுற நின்றபின்
தான்நின்ற காலங்கள் தன்வழி யாகுமே.

பொருள் : இடை பிங்கலை என்னும் இரு நாடிகளைப் பொருந்தி அமையும் சுழுமுனை சிரசின் மேலே சென்று விளங்கும் போதுள்ள ஒளியைக் கண்டபின், அழிகின்ற ஆயுட்காலங்கள் அழிவதும் இல்லையாம். இனிவரக் கூடிய ஆயுட்காலத்திற்கு வெளியே தான் நின்றபின் எஞ்சியுள்ள காலதத்துவம் அனைத்தும் தன் வழியாம்.

678. தன்வழி யாகத் தழைத்திடும் ஞானமும்
தன்வழி யாகத் தழைத்திடு வையகம்
தன்வழி யாகத் தழைத்த பொருளெல்லாம்
தன் வழி தன்னருள் ஆகிநின் றானே.

பொருள் : மகிமாசித்தி பெற்றவன் வாயிலாக ஞானம் செழித்தோங்கும். அவன் வாயிலாக உலகம் துயர் தீர்ந்து செழுமை பெறும். அங்ஙனம் தன் வாயிலாகச் செழுமையுற்ற பொருள் எல்லாம் தன் வசப்பட்டு நிற்கத் தான் சிவனருள் வசப்பட்டு நின்றான்.

பிராத்தி (விரும்பியது எய்தல்)

679. நின்றன தத்துவ நாயகி தன்னுடன்
கண்டன பூதப் படையவை எல்லாம்
கொண்டவை ஓராண்டு கூட இருந்திடில்
விண்டது வேநல்ல பிராத்தியது ஆகுமே.

பொருள் : பராசத்தியுடன் தூலமாய்க் காணப்பட்ட உலகப்பொருள்கள் எல்லாம் சூக்குமமாய் ஒடுங்கி நின்றன. அத்தகைய சூக்குமமான ஒளிப் பொருள்களைக் கண்டு ஓராண்டு தாரணை செய்யின் தாரணையில் வெளிப்பட்ட சித்தியே வேண்டுவன அடையச் செய்யும். (பூதப்படை உலகப் பொருட்கள்.)

கரிமா (விண் தன்மை)

680. ஆகின்ற மின்னொளி யாவது கண்டபின்
பாகின் பூவில் பரப்பவை காணலாம்
மேகின்ற காலம் வெளியுற நின்றது
போகின்ற காலங்கள் போவதும் இல்லையே

பொருள் : அத்தகைய மின்னொளியைக் கண்ட பின்னர் விரிந்த சகஸ்ரதளக் கமலத்தில் உலகப் பொருளின் விரிவைக் காணலாம். அப்போது மேவுகின்ற கால தத்துவம் புறம்பாக நின்றது. கழிகின்ற காலங்கள் அதனால் கழியமாட்டா.

681. போவது ஒன்று இல்லை வருவது தானில்லை
சாவது ஒன்று இல்லை தழைப்பது தானில்லை
தாமதம் இல்லை தமரகத் தின்ஒளி
யாவதும் இல்லை அறிந்துகொள் வார்க்கே.

பொருள் : மின்னொளி கண்டவர் பிற இடத்துக்குச் செல்ல வேண்டியதில்லை போவது இன்மையால் வருவதும் இல்லை. இறப்பதும் இல்லை. இறப்பு இன்மையால் பிறப்பும் இல்லையாகும். தாமதம் ஆதிமுக்குணங்கள் இல்லை. உண்மை உணர்வார்க்குப் பிரமரந்திரத்தின் உள் தொளையாகிய சுழுமுனையில் விளங்கும் பலவேறுபட்ட ஒளிகளும் இல்லையாகும்.

682. அறிந்த பராசத்தி யுள்ளே அமரில்
பறிந்தது பூதப் படையவை எல்லாம்
குவிந்தவை ஓராண்டு கூட இருக்கில்
விரிந்த பரகாயம் மேவலும் ஆமே.

பொருள் : அத்தகைய பராசக்தியுடன் ஆன்மா பொருந்தியிருந்தால் தத்துவக் கூட்டங்களை அமைக்கும் பூதப்படைகள் எல்லாம் நீங்கிவிடும். மனம் குவிந்து பராசக்தியுடன் ஓராண்டு இருந்தால் விரிந்த பரகாயப் பிரவேசம் செய்தலுமாம் (பிரகாயப்பிரவேசம் - கூவிட்டுக் கூடுபாய்தல்)

பிராகாமியம் (நிறைவுண்மை)

683. ஆன விளக்கொளி யாவது அறிகிலர்
மூல விளக்கொள் முன்னே உடையவர்
கான விளக்கொளி கண்டுகொள் வார்கட்கு
மேலை விளக்கொளி வீடுஎளி தாநின்றே.

பொருள் : ஆன்மாவிடம் தன்னை விளக்கிக் காட்டும் ஒளி அடைந்திருத்தலை அறியமாட்டார். அவர்கள் மூலாதாரத்தில் மூலக்கனலை உடையவர்கள் அதனை எங்கும் விளங்கும் ஒலி ஒளியாகத் தரிசித்திருப்பார்க்கு சிரசுக்கு மேல் விளங்கும் சிவ ஒளியும் அதனால் வீடும் எளிதாம் (பிராகாமியம் - வியாபகம்பெறு விருப்பம்.)

ஈசத்துவம் (ஆட்சியன் ஆதல்)

684. நின்ற சதாசிவ நாயகி தன்னுடன்
கண்டன பூதப் படையவை எல்லாம்
கொண்டவை ஓராண்டு கூடி இருந்திடில்
பண்டைய ஈசன் தத்துவம் ஆகுமே.

பொருள் : சீவர்களிடம் என்றும் நிலை பெற்றுள்ள சிவ சத்தியுடன் சூக்கும, திருஷ்டிக்குப் புலப்படும் ஒளி அணுக்கள் எல்லாவற்றையும் சிரசுக்கு மேலுள்ள விந்து மண்டலத்தில் வெவ்வேறு வகை ஒளி பாய்வதை ஓராண்டு ஆட்சி செய்வாய். ஆனால் பழமையான உடலில் பொருந்திய சதாசிவ தத்துவம் அமையும்.

685. ஆகின்ற சந்திரன் தன்னொளி யாய்அவன்
ஆகின்ற சந்திரன் தட்பமும் ஆயிடும்
ஆகின்ற சந்திரன் தன்கலை கூடிடில்
ஆகின்ற சந்திரன் தானவன் ஆமே.

பொருள் : வளர்கின்ற சந்திரனது ஒளியை நெற்றி நடுவில் விளங்கப் பெறுபவன் அச்சந்திரனைப் போன்று தண்ணளியுடையவன் ஆவான். வளர்கின்ற சந்திரகலை பூரணத்துவம் பெற்றிடில் சந்திரகலை விளங்கப் பெற்ற சீவன் சதாசிவ நிலை பெறுவான்.

686. தானே படைத்திட வல்லவன் ஆயிடும்
தானே அளித்திட வல்லவன் ஆயிடும்
தானே சங்காரத் தலைவனும் ஆயிடும்
தானே இவன்என்னும் தன்மையன் ஆமே.

பொருள் : ஈசத்துவம் பெற்றவர் படைத்தல் தொழிலைச் செய்ய வல்லவராவர். அவரே காத்தலைச் செய்பவராவர். அவரே அழித்தலையும் செய்ய வல்லவர். அவரே தமக்குத் தாமே ஒப்பாகும் தன்மை உடையவர் ஆவர். சதாசிவ ரூபம் பெற்றவர் முத்தொழிலையும் செய்யும் தன்மையைப் பெறுவர்.

687. தண்மைய தாகத் தழைத்த கலையினுள்
பன்மைய தாகப் பரந்தஐம் பூதத்தை
வன்மைய தாக மறித்திடில் ஓராண்டின்
மென்மைய தாகிய மெய்ப்பொருள் காணுமே.

பொருள் : குளிர்ந்த கிரணங்களுடன் கூடிய சந்திரகலையில் விளங்கும் ஒளியில் பலவாறாகக் காணும் பஞ்சபூத அணுக்களை ஓராண்டுக் காலம் வெவ்வேறாகக் காணாமல் பால் வண்ணனது நீல ஒளியைக் கண்டால் மெய்ப்பொருளான மேன்மையான ஆன்மா சிரசில் மேல் ஒளியாக விளங்கும்.

வசித்துவம்

688. மெய்ப்பொரு ளாக விளைந்தது ஏதுஎனின்
நற்பொரு ளாகிய நல்ல வசித்துவம்
கைப்பொரு ளாகக் கலந்தஉயிர்க்கு எல்லாம்
தற்பொரு ளாகிய தன்மையன் ஆகுமே.

பொருள் : உண்மையைப் பொருளாகத் தாரணை முதலிய சம்மியத்தால் உண்டாகியது எது என்றால் நல்ல பொருள் என்று பாராட்டப் பெறும் வசீகரிக்கும் தன்மையாம். தன் விருப்பப்படி நடக்கச் செய்யும் உயிர் வருக்கத்துக் கெல்லாம் சிவமேயான தன்மையனாகச் சாதகன் ஆவான். (தற்பொருள் - சிவன்.)

689. தன்மைய தாகத் தழைத்த பகலவன்
மென்மைய தாகிய மெய்ப்பொருள் கண்டிடின்
பொன்மைய தாகப் புலன்களும் போயி
நன்மைய தாகிய நற்கொடி காணுமே.

பொருள் : சிவமாந் தன்மை பெற்றுச் சிறப்புற்ற சித்தன் மகா சூக்குமமாகிய தனது ஆன்மாவை அறியின், பொன்னொளியுடன் கூடிய ஒளி உடலைப் பெற்றுப் புலன்களின் சேட்டையினின்றும் விடுபட உலகுக்கு நன்மையைச் செய்கின்ற நல்ல சதாசிவ நாயகியைக் காண்பான். (நன்மை-திருவடிப்பேறு நற்கொடி - திருவருள்)

690. நற்கொடி யாகிய நாயகி தன்னுடன்
அக்கொடி யாதும் அறிந்திடில் ஓராண்டு
பொற்கொடி யாகிய புவனங்கள் போய்வரும்
கற்கொடி யாகிய காமுக னாமே.

பொருள் : நல்ல கொடிபோன்ற நன்மையைச் செய்யும் சதாசிவநாயகி தன்னுடன் அக்கொடி போன்ற சத்தியைத் தன்னிடத்தில் நிலை பெற்றுள்ளதாக ஓராண்டு தியானிப்பவன் பொன்னொளியாகிய புவனங்களில் நினைத்த மாத்திரத்தில் சென்று வருகின்ற செவ்வொளி போன்ற காமேசுரனது இயல்பினைப் பெறுவான் கல்-மாணிக்கம்.

691. காமரு தத்துவ மானது வந்தபின்
பூமரு கந்தம் புவனமது ஆயிடும்
மாமரு உன்னிடை மெய்த்திடு மான்அனாய்
நாமரு வும்ஒளி நாயகம் ஆனதே.

பொருள் : எல்லாவற்றையும் வசீகரிக்கும் தன்மை வந்த பின்னர் சகஸ்ர தளத்தில் வாசனையாகத் தங்கியுள்ள தன்மாத்திரை உருவமான ஒளிகள் அதனதன் தன்மைக்கேற்பப் புவனங்களாய் விரிந்து நிற்கும் மகத்துப் போன்ற பெருமையுடையாய் ! அருட் சத்தியானது வசித்துவம் கைவரப் பெற்றவரிடம் விளங்கும் சத்தியோடு பேதமின்றி வாக்கு ரூபமான ஒளித் தன்மை பெற்று நாயகன் என ஆகும்.

692. நாயக மாகிய நல்லொளி கண்டபின்
தாயக மாகத் தழைத்தங்கு இருந்திடும்
போயக மான புவனங்கள் கண்டபின்
பேயக மாகிய பேரொளி காணுமே.

பொருள் : எல்லாவற்றுக்கும் தலைமையான சிவச் சோதியைத் தரிசித்த பின்னர், அவ் வொளியே தாய்வீடாகக் கொண்டு மகிழ்ச்சியுடன் அங்கு வீற்றிருப்பான். எல்லாப் புவனங்களிலும் சென்று கண்டபின் உடலுள் பேய்கள் போன்ற காமக் குரோதிகள் வாழும் ஏனைய புவனங்களுக்காகச் சித்தி பெற்றவன் சொல்ல விரும்பமாட்டான். (ஏகாரம் - எதிர்மறை காணுமே-காணமாட்டான்.)

693. பேரொளி யாகிய பெரிய அவ்எட்டையும்
பாரொளி யாகப் பகைப்பறக் கண்டவன்
தாரொளி யாகத் தரணி முழுதுமாம்
ஓரொளி யாகிய காலொளி காணுமே.

பொருள் : பேரொளிப் பிழம்பான இறைவனை உலக ஒளியைக் காணுதல் போல நடுக்கமின்றிக் கண்டவன் ஆன்ம ஒளியுடன் பூமண்டலம் முழுவதும் விசுவ வியாபியாய் ஒரே ஒளிமயமான பிராண ஒளியைக் காணுவான். (எட்டு-அஷ்ட மூர்த்த வடிவமான இறைவன்.)

694. காலோடு உயிரும் கலக்கும் வகைசொல்லின்
காலது அக்கொடி நாயகி தன்னுடன்
காலது ஐஞ்ஞாற்று ஒருபத்து மூன்றையும்
காலது வேண்டிக் கொண்டஇவ் வாறே.

பொருள் : சுழுமுனை நாடியில் உயிர் எவ்வாறு கலந்துள்ளது என்பதைச் சொல்லின் சுழுமுனையில் மின்னொளி போன்று விளங்கும் பராசத்தியின் ஒளியுடனாகும். சுழுமுனையில் தொடர்புள்ள ஐந்நூற்றுப் பதின்மூன்றையும் சுழுமுனையில் வேண்டி உயிர் கலந்திருக்கும் தன்மை இதுவாம். காலது 513-பிராணவாயு வியாபிக்கும் நாடிகளின் தொகை நாயகி-சத்தி.

695. ஆறது வாகும் அமிர்தத் தலையினுள்
ஆறது ஆயிரம் முந்நூற் றொடு ஐஞ்சுள
ஆறது ஆயிரம் ஆகும் அருவழி
ஆறது ஆயிரம் வளர்ப்பது இரண்டே

பொருள் : அமிர்தத்தைப் பெருக்குகின்ற சிரசினுள் நிரோதினி கலையுள்ளது அமுதத்தைப் பெருக்கி மாற்றத்தைச் செய்வதற்கு வழியாக ஆயிரத்து முன்னூற்று ஐந்து நரம்புத் தொகுதிகள் உள்ளன. மேல் நிøயிலுள்ள சகஸ்ரதளத்துக்குச் செல்ல இது வழியாகவுள்ளது. இதனை வழியாகக் கொண்டு உயிரை வளர்ப்பது சிவ சத்தியாகிய இரண்டுமாம்.

696. இரண்டினின் மேலே சதாசிவ நாயகி
இரண்டது கால்கொண்டு எழுவகை சொல்லில்
இரண்டது ஆயிரம் ஐம்பதோடு ஒன்றாய்த்
திரண்டது காலம் எடுத்ததும் அஞ்சே.

பொருள் : சிவதத்துவத்தில் சிறந்து விளங்கும் மனோன்மணியாகிய சதாசிவ நாயகி இடை பிங்கலையாகிய இருநாடிகளின் மேல் சிரசுக்குச் சென்று விளங்குவøத் சொல்லின் இரண்டு நாடிகளும் சகஸ்ரதளத்தை அடைந்து விரியுமுன் ஐம்பத்தொரு அட்சரங்களால் உணர்த்தப் பெறும் ஆறு ஆதாரங்களைக் கடந்ததாய்த் திரண்டுள்ளது. அந்நிலையில் சாதகனின் காலத்தைக் கடக்கச் செய்வதும் ஐம்முகங்களோடு கூடிய சதாசிவனின் நாயகியாகும்.

697. அஞ்சுடன் அஞ்சு முகமுள நாயகி
அஞ்சுடன் அஞ்சது ஆயுத மாவது
அஞ்சது அன்றி இரண்டது ஆயிரம்
அஞ்சது காலம் எடுத்துளும் ஒன்றே.

பொருள் : பத்துத் திசைகளும் பத்து முகங்களையுடைய சதாசிவ நாயகிக்கு, பிராணன் முதலிய பத்து வாயுக்களும் பத்து ஆயுதங்களாம். ஐம்முகச் சத்திக்கு அவையன்றிக் கவிழ்ந்த சகஸ்ரதளம் நிமிர்ந்த சகஸ்ரதளமாகிய இரண்டும் ஆயுதங்களாகும். அச்சத்தி உருவமற்ற நிலையில் தசவாயுக்களையும் திக்குகளையும் கடந்த வெளியாகவும் விளங்கும்.

698. ஒன்றது வாகிய தத்துவ நாயகி
ஒன்றது கால்கொண்டு ஊர்வகை சொல்லிடில்
ஒன்றது வென்றிகொள் ஆயிரம் ஆயிரம்
ஒன்றது காலம் எடுத்துளும் உன்னே.

பொருள் : அகண்ட வியாபகமான ஏக பராசக்தி சுழுமுனை நாடியில் பொருந்தி ஏறும் வகை சொல்லின் கவிழ்ந்த சகஸ்ரதளத்தை நிமிர்ந்த சகஸ்ர தளமாக மாற்றியமைத்து, காலத்தைக் கடக்கச் செய்ய உதவும் என்பதை நினைவு கூர்வாயாக.

699. முன்னெழும் அக்கலை நாயகி தன்னுடன்
முன்னுறு வாயு முடிவகை சொல்லிடின்
முன்னுறும் ஐம்பத்து ஒன்றுடன் அஞ்சுவாய்
முன்னுறு வாயு முடிவகை யாமே.

பொருள் : சிரசின் முன்பக்கத்தில் விளங்கும் ஊர்த்துவ சகஸ்ரதளத்தில் அமர்ந்துள்ள பரையுடன் முன்னோக்கிப் பாயும் வாயு முடியும் வகையைச் சொல்லப் போனால் முன்னாக விளங்கிய ஐம்பத்தொரு அட்சரங்களையுடைய ஆறு ஆதாரங்களை இயக்கிக் கொண்டு இருந்த ஐம்முகச்சத்தி பராசத்தியாக மாறினபோது முன்னர் விளங்கிய வாயு அடங்கும் வகையாகும்.

700. ஆய்வரும் அத்தனி நாயகி தன்னுடன்
ஆய்வரும் வாயு அளப்பது சொல்லிடில்
ஆய்வரும் ஐந்நூற்று முப்பதொடு ஒன்பது
மாய்வரும் வாயு வனப்புள் இருந்தது.

பொருள் : ஆராய்ச்சியினால் அடையமுடியாத ஒப்பற்ற பரையுடன் ஆராய்வதற்குரிய வாயுவின் அளவை அறிந்து சொல்லப் போனால் ஆகிவருகின்ற வாயு ஒரு நாளைக்கு ஐந்நூற்று முப்பத்தொன்பதாகக் குறைந்து வளமான பராசத்தியினிடம் இலயமடையும் சுவாச இயக்க காலத்தை நீடித்தால் ஆயுள் பெருக்கம் உண்டாகிறது என்கிறார்.

701. இருநிதி யாகிய எந்தை இடத்து
இருநிதி வாயு இயங்கு நெறியில்
இருநூற்று முப்பத்து மூன்றுடன் அஞ்சாய்
இருநிதி வாயு இயங்கும் எழுத்தே.

பொருள் : பெருஞ் செல்வமாகிய ஒளிமண்டலம் தாண்டி விளங்கும் சிவனிடத்து, செல்வமாகவுள்ள மூச்சுக் காற்று இயங்கும் தன்மையில் இருநூற்று முப்பத்தெட்டாகக் குறைந்து அது பிரணவத்தில் நடக்கும். நாதத்தை முதல் ஒலி வடிவம் என்றும் விந்துவை ஒலி முதல் எனவும் கூறுவர்.

702. எழுகின்ற சோதியுள் நாயகி தன்பால்
எழுகின்ற வாயு இடமது சொல்லில்
எழுநூற்று இருபத்து ஒன்பா னதுநாலாய்
எழுந்துடன் அங்கி இருந்தது இவ்வாறே.

பொருள் : மூலாதாரத்திலிருந்து எழுகின்ற சோதியுள் விளங்கும் பராசத்தியினிடம் சுழுமுனை வழிபாய்கின்ற மூச்சுக் காற்றின் இடத்தைச் சொன்னால் எழுநூற்று இருபத்தொன்பது நாடிகளிலும் கலந்துள்ளது. நான்கு இதழ்களையுடைய மூலாதாரத்திலுள்ள அக்கினியே இவ்வாறு சோதியாய் வெளிப்படுகிறது. (நாலாய் - பலவாறாய்)

703. ஆறது கால்கொண்டு இரதம் விளைத்திடும்
ஏழது கால்கொண்டு இரட்டி இறக்கிட
எட்டது கால்கொண்டு இடவகை ஒத்தபின்
ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே.

பொருள் : ஆறாவது கலையாகிய நிரோதினி சக்தியை நெற்றியின் மேற்பாகத்தில் தியானித்தால் புகைபோன்ற நிறம் விளையத் தொடங்கும். ஏழாவது கலையாகிய நாதகலை ஒளியை வியக்தமாகத் தெரிவித்துச் சந்திரகலையைப் பெருக்கிச் சாதகனை இருமடங்கு ஆனந்தத்தில் அழுந்தும்படி செய்து எட்டாவது இடமாகிய நாதாந்தத்தில் மனம் எண்ணுவதை விட்டு உணர்தல் என்ற நிலையில் ஒன்றிய போது ஒன்பதாவது நிலையாகிய சத்தி கலையில் உடலை இயக்கி வந்த பிராணவாயு அடங்கியது.

704. சந்திரன் சூரியன் தற்பரன் தாணுவிற்
சந்திரன் தானும் தலைப்படும் தன்மையைச்
சந்தியி லேகண்டு தானாம் சகமுகத்து
உந்தி சமாதி யுடையொளி யோகியே.

பொருள் : சந்திரன் சூரியன் ஆன்மாவாகிய மூன்றும் விளங்கும் நிமிர்ந்த சகஸ்ரதளத்தில், சந்திரகலை விளங்கும் இயல்பினை உலகில் உயிருடன் வாழும் போதே சிவஒளியைச் சிவஒளியுடன் பொருந்திச் சமாதிநிலை பெற்ற யோகியே சுழுமுனை உச்சியிலே உணர்ந்து உணர்ந்து சிமாந்தன்மை பெறுவான். (தற்பரன் - ஆன்மா, தாணு - துண்போன்று விளங்கும் சிவன்.)

705. அணங்குஅற்ற மாதல் அருஞ்சன நீவல்
வணங்குற்ற கல்வி மாஞானம் மிகுத்தல்
சிணுங்குற்ற வாயர் சித்திதூரம் கேட்டல்
நுணங்கல் திரோதல்கால் வேகத்து நுந்தலே.

பொருள் : ஆசை அழிதல், பந்து மித்திரர்களிடமிருந்து விலகியிருந்தல், பணிவைத்தரும் சிவ ஞானம் பதி ஞானம் வலுத்தல் சுருங்குதலை யுடைய வாயினராதல். அஃதாவது பேச்சுக் குறைதல். அனுக்கிரக நிக்கிரக சக்திபெறுதல். தூரத்தில் நடப்பவை கேட்டல், நுட்பமாய் மறைந்திருத்தல், காற்றை மேலே செலுத்துதல். (பிராண செயம் பெறுதல்) (சிணுங்குற்ற வாயர் - சித்தர்.)

706. மரணம் சரைவிடல் வண்பர காயம்
இரணம் சேர்பூமி இறந்தோர்க்கு அளித்தல்
அரணம் திருவுரு ஆதல்மூ ஏழாம்
கரன்உரு கேள்வி கணக்கறிந் தோனே.

பொருள் : இறப்பையும் மூப்பையும் கடத்தல், வளப்பமான பரகாயப் பிரவேசம் செய்யும் ஆற்றலைப் பெறுதல், பொன்னுலகத்தை இறந்தவர்க்கு அளிக்கும் வல்லமை பெறுதல், பாதுகாப்பான பிரணவதேகம் பெறுதல், மூண்டு எழுகின்ற சிவசூரியனைப் பற்றிய கேள்வி ஞானம் பெறுதல் (சூரியன் என்பது, சித்தர் வழக்கில் அறிவினைக் குறிக்கும்) இத்துணை தன்மைகளையும் யோகிய அறிந்தோன் ஆவான். யோகியர் பேறு கூறியவாறு. (சிறை - சரீரம், அரணன் - பரமசிவன்.)

707. ஓதம் ஒலிக்கும் உலகை வலம் வந்து
பாதங்கள் நோவ நடந்தும் பயனில்லை
காதலில் அண்ணலைக் காண இனியவர்
நாதன் இருந்த நகர்அறி வாறே.

பொருள் : கடல்சூழ்ந்த உலகத்தைச் சுற்ற வலமாக வந்து, கால் வருந்த தல யாத்திரை செய்தும் அடையும் பயன் ஒன்றும் இல்லை. அன்போடு இறைவனைக் கண்டு இன்பம் பெறுபவர் தலைவன் எங்கும் உள்ளான் என்று உணர்ந்து வழிபட்டுப் பயன் எய்துவர். (நகர் - திருக்கோவில்.)

708. மூல முதல்வேதா மால்அரன் முன்நிற்கக்
கோலிய ஐம்முகன் கூறப் பரவிந்து
சாலப் பரநாதம் விந்துத் தனிநாதம்
பாவித்த சத்தி பரைபரன் பாதமே.

பொருள் : மூலாதாரத்துக்கு மேல் சுவாதிட்டானத்தில் பிரமனும் மணிபூரகத்தில் திருமாலும் அநாகதத்தில் உருத்திரனும் விளங்க, அதற்கு மேல் நெற்றி முதல் சிரசுவரை வியாபகமுள்ள சிவாம்சமான சதாசிவனும், சதாசிவநிலைக்கு மேலுள்ள பரவிந்து பெருமை மிக்க பரநாதம் நாதந்தமும் கடந்து அருள்வழங்கும் சிவ சத்தியின் திருவடியாம்.

709. ஆதார யோகத்து அதிதே வொடும்சென்று
மீதான் தற்பரை மேவும் பரனொடு
மேதாதி ஈரெண் கலைசெல்ல மீதொளி
ஓதா அசிந்தம்மீ தானந்த யோகமே.

பொருள் : ஆதாரங்களுக்குரிய பிரமனாதி அதி தேவதையோரும் பொருந்திச் சென்று மேன்மையான பரை பொருந்தும் பரனோடு மேதை முதலாகப் பதினாறு கலைகளாகிய பிரசாத நெறியில் மேல்விளங்கும் ஒளியில், வாக்கும் மனமும் சிறந்து எண்ணமற்று நிற்கின்ற நிலையே ஆனந்த யோகமாம். (யோகம் - ஒடுக்கம்.)

710. மதியமும் ஞாயிறும் வரதுடன் கூடத்
துதிசெய் பவர்அவர் தொல்வா னவர்கள்
விதியது செய்கின்ற மெய்யடி யார்க்குப்
பதியது காட்டும் பரமன்நின் றானே.

பொருள் : இடைபிங்கலை இணைந்துள்ள சுழுமுனை உச்சியில் சிவனைத் துதித்து வணங்குபவர் பழமையிலே தேவரானவர். பிராசாத நெறியில் முறைப்படி உண்மைப் பொருளை நாடிச் செல்லும் அவ் வடியார்களுக்கு நிலையான வீடு பேற்றை அளிக்கும் பரமனும் உடனின்று அருளுவான்.

711. கட்டவல் லார்கள் கரந்தெங்கும் தானாவர்
மட்டவிழ் தாமரை யுள்ளே மணஞ்செய்து
பொட்டெழக் குத்திப் பொறியெழத் தண்டிட்டு
நட்டறி வார்க்கு நமனில்லை தானே.

பொருள் : பிராணனைக் கட்ட வல்லவர்கள் எங்கும் மறைந்து நின்று எவ்விடத்திலும் விளங்க வல்லவர்கள். தேன் மிகுந்த தாமரையாகிய சுவாதிட்டானம் மூலாதாரத்தில் சேர்க்கையை உண்டு பண்ணிப் பிரமரந்திரத்தில் மோதச் செய்து பொறியறிவு நீங்கிச் சுழு முனையில் நின்று அங்கு நடம்புரியும் சிவனை அறிந்திருப்பார்க்கு எமனில்லை. (பொட்டு-உச்சிக்குழி)

12. கலை நிலை

(கலைநிலை - கலை நிற்கும் நிலை. சந்திரகலை, சூரியகலை, அக்கினிகலை ஆகியவை உடம்பில் விளங்கும் முறை கூறப்பெறும் குருவருளால் சந்திர சூரிய கலைகளைச் சேர்த்து அக்கினிக்கலையில் சிவன் பொருந்தி நிற்கும் நிலையும் இப்பகுதியில் காண்க. சந்திரகலை அகரம் முதல் உன்மனிவரை பதினாறாகும். அக்கினி கலையாகிய சுழுமுனையில் சீவன் பொருந்தி யிருக்கும் போது பிராணன் இலயமடைந்து ஒளி மண்டலம் விளங்கும்.)

712. காதல் வழிசெய்த கண்ணுதல் அண்ணலைக்
காதல் விழிசெய்த கண்ணுற நோக்கிடில்
காதல் வழிசெய்து கங்கை வழிதரும்
காதல் வழிசெய்து காக்கலும் ஆமே.

பொருள் : காமத்துக்கே காரணமாய்ச் சுவாதிட்டானத்திலிருந்து வழி செய்து கொண்டிருந்த நெற்றிக் கண்ணையுடைய பெருமானை அன்பு செலுத்திக் கண்கள் இரண்டையும் சேர்த்து மேலே பார்த்தால் அன்பின்வழி கங்கை போன்ற ஒளிப்பிரவாகம் பெருகும். அவ்வாறு அன்பு செய்வதால் உடம்பில் பொருந்திய உயிரை அழியாது காக்கலுமாகும்.

இடைகலை பிங்கலை நாடிகளைக் கங்கை யென்றும் யமுனை யென்றும், சுழுமுனையை அந்தர் வாகினியான சரஸ்வதி என்றும் யோக நூல்கள் கூறும்.

713. காக்கலும் ஆகும் கரணங்கள் நான்கையும்
காக்கலும் ஆகும் கலைபதி னாறையும்
காக்கலும் ஆகும் கலந்தநல் வாயுவும்
காக்கலும் ஆகும் கருத்துற நில்லே.

பொருள் : மனம், புத்தி, சித்தம், அகங்காரமாகிய அந்தக்கரணங்கள் நான்கையும் பாச வழிச்சொல்லாமல், பதிவழிச்செலுத்திக் காத்தலுமாகும். அந்தக் கரணங்கள் நன்மை செய்வதால் சந்திரகலை பதினாறும் வியாபகம் பெறுமாறு காக்கலாம். பாச இயக்கத்துக்குக் காரணமான மனம் சிவ ஒளியைப் பற்றி நின்றபோது பிராணனும் சிவ ஒளியில் சென்று லயமடையும், ஆகவே உன்னுடைய கருத்தை அகண்டமான ஆகாயத்தில் பதித்து நிற்பாயாக.

714. நிலைபெற நின்றது நேர்தரு வாயு
சிலைபெற நின்றது தீபமும் ஒத்துக்
கலைவழி நின்ற கலப்பை அறியில்
அலைஅற வாகும் வழியிது வாமே.

பொருள் : சுழுமுனையில் செல்லும் வாயு நிலைபெற நின்றது, அது காற்றில்லாத இடத்திலுள்ள விளக்கொளி போலும் அசையாமல் மலைபோலும் நின்றது. சந்திரகலை பதினாறில் சிவசத்தி பொருந்தியுள்ளதை அறியில் மனம் அலையாது நிற்கும் வழி இதுவேயாகும். மலைவு அறவாகும் என்பதும் பாடம். (மலைவு - மயக்கம்)

715. புடையொன்றி நின்றிடும் பூதப் பிரானை
மடையொன்றி நின்றிட வாய்த்த வழியும்
சடையொன்றி நின்றஅச் சங்கர நாதன்
விடையொன்றில் ஏறியே வீற்றிருந் தானே.

பொருள் : எங்கும் நிறைந்து நிற்கும் பூத நாயகனை, சிறு வழிகளாகிய நாடிகளில் மாறிச் செல்லாமல் பிராணன் நடு நாடியில் ஒன்றி நிற்க வாய்த்தபோது, கிரணங்களாகிய சடையோடு கூடிய அச் சங்கரநாதன் விந்து மண்டலமாகிய இடபத்தில் ஏறி அமர்ந்திருந்தான். (சடை - திருவாதிரைநாள்; தாங்கும் இடமுமாம்)

716. இருக்கின்ற காலங்கள் ஏதும் அறியார்
பெருக்கின்ற காலப் பெருமையை நோக்கி
ஒருக்கின்ற வாயு வொளிபெற நிற்கத்
தருக்கொன்றி நின்றிடும் சாதகன் ஆமே.

பொருள் : சமாதியில் பொருந்தியிருக்கும் காலத்தைச் சாதகர் உணரார். பெருக இருக்கின்ற காலப் பெருமையை எதிர்நோக்கி சுழுமுனையில் ஒன்று பட்டிருக்கின்ற பிராணன் ஒளி பொருந்திய பரவொளியாகிய சகஸ்ரதளத்தைப் பொருந்த செருக்கின்றி இருப்பவன் சாதகனாம்.

717. சாதக மானஅத் தன்மையை நோக்கியே
மாதவ மான வழிபாடு செய்திடும்
போதக மாகப் புகலுறப் பாய்ச்சினால்
வேதக மாக விளைந்து கிடக்குமே.

பொருள் : இவ் வண்ணம் சாதகமான அத் தன்மையை ஆராய்ந்து பெரிய தவமான வழிபாட்டை நீங்கள் செய்யுங்கள். அவ்வாறு செய்து பிராணனைக் கபாலத்திலுள்ள ஆயிரஇதழ்த் தாமரையின் உள்ளாகப் புகச் செலுத்தினால் இரசவாதம் செய்வோர் உபயோகிக்கும் வாத குளிகை போன்று உடலில் விளைந்துள்ள குற்றங்களை அகற்றி விடும். செம்புபொன்னாதல் (வேதகம்), போல ஆவியும் சிவனாக விளங்கும்.

718. கிடந்தது தானே கிளர்பயன் மூன்று
நடந்தது தானேஉன் நாடியுள் நோக்கிப்
படர்ந்தது தானே பங்கய மாகத்
தொடர்ந்தது தானேஅச் சோதியுள் நின்றே.

பொருள் : அங்ஙனம் விளைந்து கிடந்த பயன் இம்மை இன்பம், மறுமை இன்பம், வீடாகிய மூன்றாம். உள்நாடியான சுழுமுனையை நோக்கிச் சென்ற சீவனைச் சகஸ்ர தளத்தில் பொருந்திய அச்சோதி மூலமாகிய சிவத்துடன் தொடர்ந்து அடங்கியதாம்.

719. தானே எழுந்தஅத் தத்துவ நாயகி
ஊனே வழிசெய்துஎம் உள்ளே இருந்திடும்
வானோர் உலகுஈன்ற அம்மை மதித்திடத்
தேனே பருகிச் சிவாலயம் ஆகுமே.

பொருள் : இவ்வாறு தனக்கு ஓர் ஆதாரமின்றித் தான் பிறவற்றுக்கு ஆதாரமாயுள்ள பராசக்தி இவ்வுடலில் வழி செய்து கொண்டு எமக்குள்ளாகவே இருப்பாள். தேவர் உலகையும் பெற்ற தாயாகிய பராசக்தி விரும்பி இடங் கொள்ள இன்பத்தை உண்டாக்கும் ஒளியில் அமிழ்ந்து திளைத்த சிவயோகியின் உடம்பு சிவாலயமாகும். சாதகனது உடம்பு சிவாலயமாகும்.

720. திகழும் படியே செறிதரு வாயு
அழியும் படியை அறிகிலர் ஆரும்
அழியும் படியை அறிந்தபின் நந்தி
திகழ்கின்ற வாயுவைச் சேர்தலும் ஆமே.

பொருள் : விளங்கும் வண்ணம் நிறைந்து நிற்கும் பிராணன் ஒடுங்கும் முறையை யாரும் அறிய வில்லை. பிராணன் ஒடுங்கும் முறையை அறிந்தபின் வாயு இலயமடைந்த ஆகாய மண்டலத்தில் விளங்கலாம். பிராணவாயுவை அடக்கும் முறையினை அறிந்தபின் சிவபெருமான் அவ்வாயுவின் மேலதாய்த் திகழ்ந்து விளங்குவான்.

729. நூறும் அறுபதும் ஆறும் வலம்வர
நூறும் அறுபதும் ஆறும் இடம்வர
நூறும் அறுபதும் ஆறும் எதிரிட
நூறும் அறுபதும் ஆறும் புகுவரே.

பொருள் : நூறு நாடிகளும் அறுபது தாத்துவிகங்களும் ஆறத்து வாவும் பிங்கலையைப் பற்றி இயங்கியும், அவை இடைகலையைப் பற்றி இயங்கியும் வர அவை சாதனையால் தூய்மை பெற்று மாறி அமைய, சாதகர் இவற்றைக் கடந்து மேல் நிலைக்குச் செல்வர். (ஈற்றடிக்கு வரையறுக்கப்பட்ட நூறு ஆண்டினையும் மாறும்படி நீண்டநாள் எய்துவர் என்று பொருள் கொள்வாரும் உளர்)

730. சத்தியார் கோயில் இடம்வலம் சாதித்தால்
மத்தியார் னத்திலே வாத்தியம் கேட்கலாம்
தித்தித்த கூத்தும் சிவனும் வெளிப்படும்
சத்தியம் சென்னோம் சதாநந்தி ஆணையே.

பொருள் : சந்திர கலையைச் சூரிய கலையில் பொருந்துமாறு சாதனை செய்தால் மத்தியானத்தில் பிரணவகோஷம் கேட்கலாம். இன்பத்தைத் தரும் சிவ நடனத்தைக்கண்டு களிக்கலாம். இறைவன் மேல் ஆணையிட்டு இதனைச் சொன்னோம். (மத்தியத்தானம் மத்தியானம் என்றாயிற்று.)

இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Mon Mar 26, 2012 3:04 pm

731. திறத்திறம் விந்துத் திகழும் அகாரம்
உறப்பெற வேநினைத்து ஓதும் சகாரம்
மறிப்பது மந்திரம் மன்னிய நாதம்
அறப்பெற யோகிக்கு அறநெறி யாமே.

பொருள் : மிகத் தூய்மையான ஒளியுடன் கூடிய அகாரம் பொருந்தும்படி நினைந்து சாரத்தை ஓதுங்கள். அவ்வாறு அம்சம் என்று மனனம் செய்வதே மந்திரமாகும். அவ்வாறு முழுமையாக எண்ணிப் பெறும் நாதமே யோகிக்கு வழிபாட்டுக்குரிய மூர்த்தியாகும். (மறித்தல் - ஸ்மரித்தல் அல்லது மனனம் செய்தல். இதுவே அம்சவித்தை என்றும் அசபை என்று பெயர் பெறும்.)

732. உந்திச் சுழியின் உடனே பிராணனைச்
சிந்தித்து எழுப்பிச் சிவமந் திரத்தினால்
முந்தி முகட்டின் நிறுத்தி அபானனைச்
சிந்தித்து எழுப்பச் சிவன்அவன் ஆமே.

பொருள் : உந்திக் கமலத்திலுள்ள பிராணனை (சூரியனை) உடனே, அம்சம் என்ற மந்திரப் பொருளான சிவத்தை நினைத்து எழுப்பி முன்புறம் புருவ நடுவில் தியானித்து நிறுத்தி, பின் மேலிருந்து கீழே நினைந்து அபானனை எழுப்பச் சிவனாவன். (முகடு-உச்சித்தொளை என்பர் சிலர்.)

733. மாறா மலக்குதம் தன்மேல் இருவிரல்
கூறா இலிங்கத்தின் கீயே குறிக்கொண்மின்
ஆறா உடம்பிடை அண்ணலும் அங்குளன்
கூறா உபதேசம் கொண்டது காணுமே.

பொருள் : நீங்காத மலம் பொருந்திய எருவாய்க்கு இரண்டு விரற்கடை மேலும், வாயிட்டுச் சொல்லமுடியாத பாலுணர்வைத் தரும் குறிக்கும் கீழேயும் உள்ள மூலாதாரத்தில் தியானம் செய்யுங்கள். உடம்பையே வழியாகக் கொண்டு சீவர்களை நடத்தும் சிவம் அங்குள்ளது. சம்பிரதாயத்தால் உணர்த்தப்படும் உபதேசத்தைப் பெற்று முன் கூறியவற்றைக் காணுங்கள்.

734. நீல நிறவடை நேரிழை யாளொடும்
சாலவும் புல்லிச் சதமென்று இருப்பார்க்கு
ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்
பாலனும் ஆவர் பராநந்தி ஆணையே.

பொருள் : நீலவொளியில் விளங்குகின்ற சத்தியுடன் முழுவதும் பொருந்தி, அவளையே அடைக்கலம் என்று இருப்பார்க்கு உலகோர் காணும் வகையில் நரைதிரை மாறி இளமைத் தோற்றம் அமையும் இது சிவனது ஆணையாகும்.

735. அண்டம் சுருங்கில் அதற்கோர் அழிவில்லை
பிண்டம் சுருங்கில் பிராணன் நிலைபெறும்
உண்டி சுருங்கில் உபாயம் பலவுள
கண்டம் கறுத்த கபாலியும் ஆமே.

பொருள் : கருவாய் செயலற்று இருந்தால் மனிதனும் எவ்வித இழப்பும் இல்லை. உடம்பு மெலிவால் சத்துவகுணம் மேலிட்டுப் பிராணனைச் செயிக்க முடியும். உணவு குறையின் மேல் நிற்றலுக்கு வழி பலவுண்டு யோகநெறி நிற்போர் நீலகண்டப் பெருமானாவர்.

736. பிண்டத்துள் உற்ற பிழக்கடை வாசலை
அண்டத்துள் உற்று அடுத்து அடுத்து ஏகிடல்
வண்டுஇச் சிக்கும் மலர்க்குழல் மாதரார்
கண்டுஇச் சிக்கும் காயமும் ஆமே.

பொருள் : உடம்பில் பொருந்தியுள்ள மூலாதாரச் சக்கரத்திலுள்ள காம வாயுவைச் சிரசின்மேல் சகஸ்ரதளத்துக்கு அனுப்பும் பயிற்சியைச் செய்துவந்தால் வண்டுகள் விரும்பும் நறுமணமுள்ள பூக்களை அணிந்துள்ள பெண்கள் பார்த்து விரும்பும் அழகிய வடிவைப் பெறுவர்.

737. சுழலும் பெரும் கூற்றுத் தொல்லைமுன் சீறி
அழலும் இரதத்துள்ள அங்கியுள் ஈசன்
கழல்கொள் திருவடி காண்குறில் ஆங்கே
நிழலுளும் தெற்றுளும் நிற்றலும் ஆமே.

பொருள் : காலத்தை உருண்டு ஓடச் செய்கின்ற எமனை முன்பு வெகுண்டு பிரகாசம் பொருந்திய புணர்ச்சியில் மூலாதாரத்திலுள்ள அதோமுகச் சக்கரத்தில் விளங்கும் சிவனது ஒலிக்கின்ற திருவடியைக் கண்டால் அப்பொழுதே இவ்வுலகிலும் மேல் உலகிலும் வாழலாம். நெற்றி நடுவில் காணப்படும் முக்கோணம் தேர் போல் காணப்படுதலால் இரதம் என்று குறிக்கப்பட்டதாகச் சிலர் பொருள் கொள்வர்.

738. நான்கொண்ட வன்னியும் நாலு கலைஏழும்
தான்கண்ட வாயுச் சரீர முழுதொடும்
ஊன்கண்டு கொண்ட உணர்வு மருந்தாக
மான்கன்று நின்று வளர்கின்ற வாறே.

பொருள் : நான் தரிசித்த அக்கினி கலையாகிய சிவம் சந்திரன் சூரியன் அக்கினி தாரகையாகிய நான்கு கலைகளிலும், ஏழு ஆதாரங்களலும் தான் கண்ட பிராணனாய் உடல் முழுவதும் உடலில் வெளிப்பட்ட உணர்வே அமுதமாக, சீவன் இன்பம் பெற்று வளர்கின்ற முறையில் துணைபுரியும்.

739. ஆகுஞ் சனவேத சத்தியை அன்புற
நீர்கொள் நெல்லில் வளர்கின்ற நேர்மையைப்
பாகு படுத்திப் பலகோடி களத்தினால்
ஊழ்கொண்ட மந்திரம் தன்னால் ஒடுங்கே.

பொருள் : ஆகுஞ்சன முத்திரையில் வெளிப்படும் வேத சத்திரை நீ அன்போடு ஏற்றுக்கொண்டு வேளாண்மையில் நெல்லினை விதைப் பண்டமாகவும் உணவுப் பண்டமாகவும் சேமித்து வைப்பது போல் அளவுற்ற பயிற்சியால் இருளுக்கும் ஒளிக்கும் நடக்கும் போரில் இருள் கீழ்ப் படுத்தப்பட்டு ஒளிச் சேமிப்பு உண்டாய் அங்கே ஒடுங்குவாயாக. ஊழ் கொண்ட மந்திரம். அசாபமந்திரம். சனவேதசத்தி - திரோதாயி அவர்கள், ஆகும்+சனவே+சத்தி என்று பிரிப்பர்.

14. கால சக்கரம்

(காலம் சக்கரம் போல முடிவின்றி மாறி மாறி வருவதாகலின் கால சக்கரம் எனப்பட்டது. மக்களின் கால எல்லையும் அதனைக் கடக்கும் உபாயமும் இங்குக் கூறப்பெறும்.)

740. மதிவட்ட மாக வரைஐந்து நாடி
இதுவிட்டுஇங்கு ஈராது அமர்ந்த அதனால்
பதிவட்டத் துள்நின்று பாலிக்கு மாறும்
அதுவிட்டுப் போமாறும் ஆயலுற் றேனே.

பொருள் : சந்திர மண்டலத்திலுள்ள வியாபினி முதலிய ஐந்து கலைகளின் இயல்பை அறிந்து, இவற்றை நீங்கிச் சிரசின் மேல் துவாதசாந்தப் பெருவெளியில் அமர்ந்தமையால் சிவ சத்தியின் சங்கற்பத்தால் அருளும் வகையும், அக்கால சத்தியின் ஆளுகையை விட்டுக் கடக்கும் நிலையையும் ஆராயலுற்றேன். (மாறும்+அது என்பதை மாறும்+மது எனப் பிரித்து, மது-அமுதம் என்று பொருள் கூறுவாரும் உளர்.)

741. உற்றறிவு ஐந்தும் உணர்ந்தறிவு ஆறுஏழும்
கற்றறிவு எட்டும் கலந்தறிவு ஒன்பதும்
பற்றிய பத்தும் பலவகை நாழிகை
அற்றுஅழி யாது அழிகின்ற வாறே.

பொருள் : சத்தம் முதலாகிய ஐம்புலன்களைப் பொருந்தி அறியும் அறிவும், ஐவகைக் கருவிபற்றிய அறிவை வேறாக இருந்து அறியும் ஆறாவது அறிவும், பொருள்களின் நலன் தீங்குகளைப் பற்றிய ஆராச்சியுடைய ஏழாவதாகவுள்ள அறிவும், கல்வியினால் பெற்ற எட்டாதவராக உள்ள அறிவும், அவ் எட்டுடன் தம் அனுபவம் பற்றிய அறிவும் சேர்ந்த போது உள்ள ஒன்பதாவது அறிவும், ஒன்பது வகை அறிவுக்குக் காரணம் சிவசத்தி என்றறிந்து அதனைப் பிரியாத நிற்கும் பதிஞானமாகிய பத்தாவது அறிவுமாகிய பலவகையான அறிவன் தார தம்மியத்தை அறிந்து ஒழுகாது நிற்பதால் காலம் அறுதியிட்டுப் பட்டு மக்கள் அழிகின்றனர்.

742. அழிகின்ற ஆண்டுஅவை ஐ அஞ்சு மூன்று
மொழிகின்ற முப்பத்து மூன்றுஎன்பது ஆகும்
கழிகின்ற காலறு பத்திரண்டு என்பது
எழுகின்ற ஈர்ஐம்பது எண்ணற்று இருந்தே.

பொருள் : மக்கள் அழிகின்ற காலம் இருபத்தைந்து ஆண்டு முதல் இருபத்தெட்டு ஆண்டுவரை ஓர்எல்லையும், சொல்லப்படுகின்ற முப்பது முதல் முப்பத்துமூன்றுவரை ஓர் எல்லையும் ஆகும். பின் செல்கின்ற காலம் அறுபது முதல் அறுபத்திரண்டு வரை ஓர் எல்லை என்றபடி. இனி நூறாண்டுக்கு ஓர் எல்லையும் அதற்கு மேல் வருவனவற்றுக்கு எல்லையும் இல்லையாம். மக்கள் ஆயுளில் நான்கு கண்டங்கள் உள்ளன.

743. திருந்து தினம் தினத்தி னொடு நின்று
இருந்தறி நாளொன்று இரண்டுஎட்டு மூன்று
பொருந்திய நாளொடு புக்குஅறிந்து ஓங்கி
வருந்துதல் அன்றி மனைபுக லாமே.

பொருள் : திருந்திய நாளாகிய பிறந்த நாளும், அதனோடு பொருந்தி நிற்கின்ற ஜென்ம நட்சத்திரம் கூடிய நாள் ஒன்றும், பின் ஜென்ம நட்சத்திர தினத்தோடு பதினாறு நாள்கள் கூட்டப் பதினேழாம் நாளும், ஆறு நாள்கள் கூட்ட ஏழாம் நாளும் ஆகியவை தவிர, பொருந்திய நாள்களை ஆராய்ந்து அறிந்து வருத்தமின்றி யோகப் பயிற்சி தொடங்குவதற்குரிய நாளாகும்.

744. மனைபுகு வீர்உம் அகத்திடை நாடி
எனஇரு பத்தஞ்சும் ஈராறு அதனால்
தனைஅறிந்து ஏறட்டுத் தற்குறி யாறு
வினை அறி யாறு விளங்கிய நாலே.

பொருள் : உம்முடைய உள்ளத்தின்கண் விரும்பி ஞானயோகம் செய்யப் புகுவீர் ! இருபத்தைந்து தத்துவங்களும் பன்னிரு இராசியில் செல்லும் சூரியனாகிய அறிவால் தன் உண்மையை அறிந்து பக்குவப்பட்டு, சிவன் விளங்கும் ஆறு ஆதாரங்கள் கிரியை செய்யும் வழிகளென அறிந்து அவற்றைக் கடந்தபோது சிவம் சத்தி நாதம் விந்துவாகிய நான்கே விளங்குமாம்.

745. நாலும் கடந்தது நால்வரும் நால்ஐஞ்சு
பாலம் கடந்தது பத்துப் பதின் அஞ்சு
கோலம் கடந்த குணத்தண்டு மூவிரண்டு
ஆலம் கடந்ததொன்று ஆர்அறி வாரே.

பொருள் : உருவங்கள் நான்கையும் கடந்து அருவுருவம் அருவம் ஆகிய ஒன்பது வடிவங்களாக விளங்கி, நெற்றியைக் கடந்து இருபத்தைந்து ஆன்ம தத்துவங்களால் விளங்கும் குறியைக் கடந்ததாய், அவற்றில் பொருந்தும் குண கஞ்சுகமாய், நச்சுத் தன்மையுடைய வினையை ஈட்டுகின்ற ஆறு ஆதாரங்களைத்தாண்டிய ஆன்மாவாகிய சூரியனை யாரே அறிய வல்லார்.

746. ஆறும் இருபதுக்கு ஐ ஐஞ்சு மூன்றுக்கும்
தேறும் இரண்டும் இருபத்தொடு ஆறுஇவை
கூறும் மதிஒன் றினுக்குஇரு பத்தேழு
வேறு பதியங்கள் நாள்விதித் தானே.

பொருள் : ஆறு ஆதாரங்களில் நாற்பத்தெட்டு இலக்கங்கள் அமைந்த பதுமங்களை அறியுங்கள் இரண்டாகிய சூரியன் இருபத்தாறால் அமைவதாக உள்ளது என்று கூறும் அகரமாகிய சந்திர வட்டம் இருபத்தேழாகும். இனிவேறு வகையாகவும் நாட்கணக்கை விதித்துள்ளான்.

747. விதித்த இருபத்தெட் டொடுமூன்று அறையாகத்
தொகுத்தறி முப்பத்து மூன்று தொகுமின்
பதித்தறி பத்தெட்டுப் பாரா திகள்நால்
உதித்தறி மூன்றிரண்டு ஒன்றில் முறையே.

பொருள் : முறையான இருபத்தெட்டு இலக்கத்தை அக்கினி சூரியன் சந்திரன் ஆகிய மூன்று கண்டங்களில் காணுங்கள். அதில் முப்பத்திமூன்று தத்துவங்களையும் தொகுத்து அறியுங்கள். பத்துஎட்டு என்பவற்றைப் பூமிமுதலாகப் பொருந்தி அறிந்து கொள்ளுங்கள். அவை நான்கு மூன்று இரண்டு ஒன்றாகவுள்ள முறைமையை அறியுங்கள். (இவ்விருபாடல்களிலும் கூறிய பயிற்சி முறையை ஆசிரியர் வாய் கேட்டறிக.)

748. முறைமுறை ஆய்ந்து முயன்றில ராகில்
இறையிறை யார்க்கும் இருக்க அரிது
மறையது காரணம் மற்றொன்றும் இல்லை
பறையறை யாது பணிந்து முடியே.

பொருள் : உபதேச முறைப்படி முயற்சி செய்யாவிடில், இறைவனோடு தொடர்பு கொள்ளுதல் யாவர்க்கும் அருமையாம். மறைவாகச் சொல்லியது உபதேசப்படி பெற வேண்டும். என்பதே யன்றி வேறொன்றில்லை. தம்பட்டம் அடிக்காமல் வணங்கிப் பெற்றுக் கொள்வாயாக ! பயிற்சி முறையைக் குருவினிடம் உபதேசக் கிரமத்தில் பெறவேண்டும். (பறையறையாது - வெளிப்படுத்தாமல்.)

749. முடிந்தது அறியார் முயல்கின்ற மூர்க்கர்
இடிஞ்சல் இருக்க விளக்குஎரி கொண்டு
அடிந்து அனல் மூளக் கதுவவல் லார்க்கு
நடந்திடும் பாரினில் நண்ணலும் ஆமே.

பொருள் : மறைத்து வைத்தமை அறியாமல் முயற்சி செய்யும் அறிவிலிகள் நிமிர்ந்த சகஸ்ரதளமாகிய அகலைக் கொண்டு ஒளியைப் பெற்று, இருளைக் கடிந்து சிந்தனையாகிய தைலத்தை விட்டுச் சுழுமுனையைத் தூண்டிப் பிரகாசப் படுத்தும் திறமையைக் குரு காட்டிய முறையில் பெறுவாராயின் அழிகின்ற உலகினில் அழியாது இருக்கலாம். (இடிஞ்சில்-அகல், சகஸ்ரதளம்)

750. நண்ணு சிறுவிரல் நாணாக மூன்றுக்கும்
பின்னிய மார்பிடைப் பேராமல் ஒத்திடும்
சென்னியில் மூன்றுக்கும் சேரவே நின்றிடும்
உன்னி உணர்ந்திடும் ஓவியம் தானே.

பொருள் : பொருந்தும் சிறுவிரலை நாணாக, ஒரு கையிலுள்ள மூன்று விரல்களோடு மற்றொரு கையிலுள்ள மூன்று விரல்களையும் கண்களிலும் புருவத்திலும் நெறித்துப்பிடிக்கின் பிராணன் அபானன் ஆகியவை மார்பிடை ஒத்து நிற்கும். அதனால் சிரசில் அக்கினி சூரியன் சந்திரன் ஆகிய மூன்று மண்டலங்களும் ஒத்தி நிலைபெறும். அங்குக் காணும் ஒளியில் சித்திரம் போல் அசையாது நினைந்து நில்லுங்கள்.

751. ஓவிய மான உணர்வை அறிமின்கள்
பாவிகள் இத்தின் பயன்அறி வார்இல்லை
தீவிலை யாம்உடல் மண்டலம் மூன்றுக்கும்
பூவில் இருந்திடும் புண்ணியத் தண்டே.

பொருள் : அழகான உணர்வை அறிந்து கொள்ளுங்கள். பாவிகள் இதன் பயனை அறிகின்றார் இல்லை. தீவினைக்குக் காரணமான இவ்வுடலில் மூன்று மண்டலங்களும் சுழுமுனை நாடியில் பொருந்திச் சகஸ்ரதளத்தில் விளங்கி நிற்கும். (இத்தின்-இதன்)

752. தண்டுடன் ஓடித் தலைப்பெய்த யோகிக்கு
மண்டலம் மூன்றும் மகிழ்ந்துடல் ஒத்திடும்
கண்டவர் கண்டனர் காணார் வினைப்பயன்
பிண்டம் பிரியப் பிணங்குகின் றாரே.

பொருள் : வீணாத் தண்டமாகிய முதுகு தண்டோடு பிணைந்து சென்று பிரமசந்திரத்தை அடைந்த யோகிக்குச் சோம சூரிய அக்கினியாகிய மண்டலங்கள் மூன்றும் ஒத்து உடற்கண் மகிழும்படியாகப் பொருந்தி யிருக்கும், இவ் உண்மையைக் கண்டவர்களே மெய்ஞ்ஞானிகள். இதனை அறியாதார் வினையால் விளைந்த உடம்பு அழியுமாறு மாறுபட்டுக் கெடுகின்றனர்.

753. பிணங்கி அழித்திடும் பேறது கேள்நீ
அணங்குடன் ஆதித்தன் ஆறு விரியின்
வணங்குட னேவந்த வாழ்வு குலைந்து
சுணங்கனுக் காகச் சுழல்கின்ற வாறே.

பொருள் : நீ மாறுபட்டு உடம்பு அழியும் பயனைக் கேட்பாயாக ! சூரியனாகிய அறிவு குண்டலியின் வழி காம காரியம் செய்யின் வணங்குதற்குரிய வாழ்வு கெட்டு, நாய் மலம் உண்ணுவதில் விருப்பம் கொள்வது போலக் காமச் செயலில் விருப்பம் கொள்வர். தம் உடல் நாயுண்ணச் சுமந்து திரிந்த தன்மையராய் மாள்வர் என்பது வேறொருபொருள்.

754. சுழல்கின்ற வாறுஇன் துணைமலர் காணான்
தழலிடைப் புக்கிடும் தன்னுள் இலாமல்
கழல்கண்டு போம்வழி காணவீல் லாற்குக்
குழல்வழி நின்றிடும் கூத்தனும் ஆமே.

பொருள் : காம வயப்பட்டு அலைவதனால் சகஸ்ரதளத்துக்கு மேல் விளங்கும் திருவடியினை உணர முடியவில்லை. தன் ஒளியில், மேல் நில்லாமல் கீழேயுள்ள அக்கினி மண்டலத்தினால் அழிகின்றனர். திருவடியின் சிலம்பு ஓசையை அறிந்து அதன்வழியாகச் செல்பவனுக்கு சுழுமுனை நாடியில் கூத்தப் பெருமான் விளங்குவான்.

755. கூத்தன் குறியில் குணம்பல கண்டவர்
சாத்திரந் தன்னைத் தலைப்பெய்து நிற்பர்கள்
பார்த்திருந்து உள்ளே அனுபோக நோக்கிடில்
ஆத்தனு மாகி அலர்ந்திரும் ஒன்றே.

பொருள் : நாத சம்மியம் செய்வதால் விளையும் பயன் பலவற்றையும் கண்டவர் மெய்ந்நூற் பொருளை உணர்ந்து அனுபவிப்பர். அவ்விதமாக உள்ளே தியானம் செய்திருப்பின் அவன் விருப்பமுடையவனாகிச் சாதகரும் தானும் வேறின்றி ஏகனாய் விளங்குவான்.

756. ஒன்றில் வளர்ச்சி உலப்பிலி கேளினி
நன்றென்று மூன்றுக்கு நாளது சென்றிடும்
சென்றிடு முப்பதும் சேர இருந்திடில்
குன்றிடைப் பொன்திகழ் கூத்தனும் ஆமே.

பொருள் : முன்மந்திரத்தில் கூறியவாறு இறைவனுடன் பிரிப்பின்றிப் பொருந்தி நிற்பவரது ஆயுள் வளர்வதோடு அழிவும் இல்லை என்பதைக் கேட்பாயாக ! உலக நலம் கொண்ட பூரக, ரேசக, கும்பகமாகியவற்றால் வாழ்நாள் குறையும் அவ்வாறு பூரக ரேசக கும்பகமற்று முப்பது நாழிகை சமாதி செய்பவனின் சகஸ்ரதளத்திலுள்ள பொன் ஒளியில் கூத்தன் விளங்குவான். மெய்-தத்துவம்.

757. கூத்தவன் ஒன்றிடும் கூர்மை அறிந்தங்கே
ஏததுவர் பத்தினில் எண்டிசை தோன்றிடப்
பார்த்து மகிழ்ந்து பதுமரை நோக்கிடின்
சாத்திட நூறு தலைப்பெய்ய லாமே.

பொருள் : கூத்தை உடலில் நடத்தும் பிராணன் சூக்குமமாக அடங்கும் நிலையை அறிந்து, அவ்விடத்தில் அகர உகரத்தைப் பொருத்தி அட்டதள கமலத்தை விளங்கச் செய்வர். அட்ட தளகமலத்தில் விளங்கும் சிவனைக் கண்டு இன்புற்றிருப்பின் எடுத்த உடம்பில் சொல்லப் பெற்ற நூறாண்டுகாலம் வாழலாம்.

758. சாத்திடு நூறு தலைப்பெய்து நின்றவர்
காத்துடல் ஆயிரம் கட்டுறக் காண்பார்கள்
சோத்துடல் ஆயிரம் சேர இருந்தவர்
மூத்துடன் கோடி யுகமது வாமே.

பொருள் : சொல்லப் பெற்ற நூறாண்டு கூடியவர், இவ்வுடலையே ஆயிரம் ஆண்டுகட்குக் குலையாதவண்ணம் காப்பார்கள். இவ்வண்ணம் உடம்போடு கூடி ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தவர் பலயுகம் அறிவால் முதிர்ந்து வாழலாம். (மூத்து-அறிவில் முதிர்ந்து ஊழி - யுகமுடிவு; உலகமுடிவு)

759. உகங்கோடி கண்டும் ஒசிவற நின்று
அகங்கோடி கண்டுள் அயர்வறக் காண்பார்கள்
சிவங்கோடி விட்டுச் செறிய இருந்தங்கு
உகங்கோடி கண்டங்கு உயர்உறு வாரே.

பொருள் : அங்ஙனம் பல நாட்களைக் கண்டு தளர்ச்சி யின்றி இருந்து மனத்தால் முடிந்த பொருளாகிய சிவத்தை எண்ணி இடையறாது தியானிப்பவர் சிவம் என்றும் தான் என்றும் இரண்டாக அறியாமல் ஏகமாய் உணர்ந்து அங்கே உறைந்து அங்கே நீண்ட காலம் வாழ்ந்து உயர்வினை அடைவார். சிவங்கோடி - சிவமே முடிந்த இடமாக.

760. உயருறு வார்உல கத்தொடும் கூடிப்
பயனுறு வார்பலர் தாம்அறி யாமல்
செயலுறு வார்சிலர் சிந்தையி லாமல்
கயலுறு கண்ணியைக் காணகி லாரே.

பொருள் : இங்ஙனம் சிவமாந்தன்மை எய்தி உயர்ந்தவரே உலகத்தோடும் கூடிப் பயனை அடைந்தவர் ஆவர். பலர் இவ் உண்மையை அறிந்துகொள்ள மாட்டாமையால் கன்மங்களை மேலும் மேலும் ஈட்டுவாராயினர். சிலர் இத்தகைய பேற்றை அடைய வேண்டு மென்ற விருப்பம் இல்லாமையால் மீன் போன்று எப்போதும் இமைக்காத கண்ணினையுடைய பராசத்தியை அறியாதவராயினர்.

761. காணகி லாதார் கழிந்தோடிப் போவர்கள்
நாணகி லாதார் நயம்பேசி விடுவர்கள்
காணகி லாதார் கழிந்த பொருளெலாம்
காணகி லாமல் கழிக்கின்ற வாறே.

பொருள் : பரையொளியைப் பெறாதவர் பிறவிப்பயன் எய்தாமல் வீணேகழிவர். வெட்கம் இலாதவர் அனுபவமின்றிசசாத்திர நயங்களைப் பேசுவர். பரையொளியைப் பெறாதார் தத்துவப் பொருள் அனைத்தும் காண முடியாமையால் சேவை செய்யாமல் விலகி விடுகின்றனர்.

762. கழிகின்ற அப்பொருள் காணகி லாதார்
கழிகின்ற அப்பொருள் காணலும் ஆகும்
கழிகின்ற உள்ளே கருத்துற நோக்கில்
கழியாத அப்பொருள் காணலும் ஆமே.

பொருள் : பந்தப் படுத்தும் உலகப்பொருளைப் புறக் கண்ணால் காணாதவர் நீங்குகின்ற அப்பொருளின் தன்மையை அகக் கண்ணால் அறியமுடியும். நீங்குகின்ற பொருளின் உள்ளே மன ஒருமைப்பாட்டுடன் பார்த்தால் எப்பொரு ளிலும் இருந்து நீங்காத சிவனைத் தரிசிக்கவும் கூடும் (கழிகின்ற பொருள் சீவன்; கழியாத பொருள் சிவன்)

763. கண்ணன் பிறப்பிலி காண்நந்தி யாய்உள்ளே
எண்ணும் திசையுடன் ஏகாந்தன் ஆயிடும்
திண்ணென்று இருக்கும் சிவகதியா நிற்கும்
நண்ணும் பதம்இது நாடவல் லார்கட்கே.

பொருள் : முக்கண்ணை யுடையவனும் பிறப்பில்லாதவனும் குருவானவனுமாகிய நந்தியெம் பெருமானை உயிரின் உள்ளாக ஆராய்ந்து காண்க. எண்ணப்பட்ட பத்துத் திக்குகளில் இருப்பதோடு தனித்தும் உள்ளது புலப்படும். உறுதியைத் தரும் சிவகதி கிட்டு ஆராயவல்ல யோகியர்க்கு அடையும் பயன் இதுவேயாகும். (சிவன்நிலை - சிவனுக்கு அடிமையாம் நிலை. முக்கண்ணன்; அன்பு அறிவு ஆற்றல்கள் இயல்பாக விளங்கும் சிவன் நந்தி - சிவபெருமான்.)

764. நாடவல் லார்க்கு நமனில்லை கேடில்லை
நாடவல் லார்கள் நரபதி யாய்நிற்பர்
தேடவல் லார்கள் தெரிந்த பொருளிது
கூடவல் லார்கள் கூறலும் ஆமே.

பொருள் : இவ் வண்ணம் நந்தி யெம் பெருமானை அறிய வல்லார்க்கு ஆயுள் எல்லை அகன்றுவிடுவதால் அழிவில்லை. அறியல்ல வர் மக்களின் தலைவராவர். ஆராய்ச்சி செய்பவர் கண்ட உண்மை இதுவாகும். பெருமானைக் கூட வேண்டுமென்ற விருப்புடையோர்க்கு இவ்வுண்மையைச் சொல்லுதலும் ஆகும்.

765. கூறும் பொருளிது அகார உகாரங்கள்
தேறும் பொருளிது சிந்தையுள் நின்றிடக்
கூறும் மகாரம் குழல்வழி ஓடிட
ஆறும் அமர்ந்திடும் அண்ணலும் ஆமே.

பொருள் : தகுதியுள்ள சீடருக்கு உணர்த்த வேண்டிய பொருள் அகார உகாரமாம் தெளியும் அகார உகாரங்கள் மனத்துள் நிலைபெற்றால், உணர்த்தும் மகாரம் சுழுமுனையாகிய குழலின் வழியே உயரச்சென்று நாத மாக அமைய மாயையின் காரியமான ஆறு ஆதாரங்களும் சேட்டையற்றுச் சிவமும் விளங்கித் தோன்றும்.

766. அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர்
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களுக்கு
அண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும்
அண்ணலைக் காணில் அவன்இவன் ஆகுமே.

பொருள் : சிவபெருமான் எழுந்தருளி யிருக்கும் இடத்தை யாரும் அறிய மாட்டார். அப்பெருமான் ஓசை ஒளி மயமாய் எழுந்தருளி யிருக்கும் இடத்தை உணர்வார்க்கு அவன் உள்ளத்தை விட்டு அகலாது விளங்குவான். அவ்வாறு அவனைக் காணில் சிவமேயாவர்.

767. அவன்இவன் ஆகும் பரிசுஅறி வார்இல்லை
அவன்இவன் ஆகும் பரிசது கேள்நீ
அவன்இவன் ஓசை ஒளியினுள் ஒன்றிடும்
அவன்இவன் வட்ட மதாகிநின் றானே.

பொருள் : சிவன் தானாகும் தன்மையை அறிவார் யாரும் இல்லை. அவ்வாறு சிவமாகும் தன்மையை நீ கேட்பாயாக. சிவன் ஆன்மாவின் சூக்கும வாக்கிலும் சூக்கும ஒளியிலும் பொருந்தும். சிவன் இவனது ஆகாயக்கூற்றில் விளங்குவான். சிவன் சீவனது ஒலி ஒளியினுள் பொருந்தி யிருப்பான்.

768. வட்டங்கள் ஏழும் மலர்ந்திடும் உம்முளே
சிட்டன் இருப்பிடம் சேர அறிகிலீர்
ஒட்டி இருந்துள் உபாயம் உணர்ந்திடக்
கட்டி இருப்பிடம் காணலும் ஆகுமே.

பொருள் : ஆதாரச் சக்கரங்களாகிய வட்டங்கள் ஏழும் உம்முள்ளே மலரும். அங்கு மேன்மை உடையவனாகிய சிவன் இருக்கும் இடத்தை அடைய அறியீர்கள். உபாயத்தினால் சிவனுடன் பொருந்தி நிற்க, கரும்பின் கட்டி போன்ற இன்பம் இருக்கும் இடத்தை நீவரும் அறியலாம்.

769. காணலும் ஆகும் பிரமன் அரியென்று
காணலும் ஆகும் கறைக்கண்டன் ஈசனைக்
காணலும் ஆகும் சதாசிவ சத்தியும்
காணலும் ஆகும் கலந்துடன் வைத்ததே.

பொருள் : முன் மந்திரத்தில் கண்ட முறையால் உள்ளே ஆதார மலர்களில் பிரமன் என்றும் திருமால் என்றும் காணலாம். நீலகண்டன் மகேசுவரன் ஆகியோரையும் அவ்வாறே காணவும் கூடும். இனி சதாசிவ சத்தியையும் காணலாம். உன்னுடைய உயிரிலும் உடம்பிலும் இக்கடவுளர் எல்லாம் பொருந்தியுள்ளதைக் காணலாம்.

15. ஆயுள் பரீட்சை

(ஆயுள் பரீட்சை-வாழ்நாளை அறிவதற்குரிய தேர்வு அஃதாவது, பிராணன் இயக்கத்தை அறிந்து ஆயுட்கால எல்லையை முடிவு செய்த.ஞூ பிராண இயக்கம் நீண்டு செல்லுமாயின் ஆயுள் குறையும். குறைந்து செல்லுமாயின் ஆயுள் நீளும். பிராண சேமிப்பு ஆயுள் நீடிப்புக்கு இன்றியமையாதது என்க.)

770. வைத்தகை சென்னியில் நேரிதாய்த் தோன்றிடில்
உத்தமம் மிக்கிடில் ஓராறு திங்களாம்
அத்தம் மிகுத்திட்டு இரட்டியது ஆயிடில்
நித்தல் உயிர்க்குஒரு திங்களில் ஓசையே.

பொருள் : தலையில் அமைத்த கை பருத்துமின்றிச் சிறுத்துமின்றி அனலாய்த் தோன்றினால் நன்மையாம். பருத்துத் தோன்றினால் ஆறு மாதங்களில் இறப்பு உண்டாகும். கையானது இரண்டு பங்கு பருத்துத் தோன்றினால் எந்நாளும் ஒரு மாதத்துக்குள் இறப்பு உண்டாகும். பிராணனுக்கு ஓசை உண்டாதலின் பிராணனை ஓசை என்றே கூறினார். உயிர்ப்ப ஓசையின் அளவைச் சிலர் குறிக்கின்றனர்.

771. ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்கண்
ஓசை இறந்தவர் ஈசனை உள்குவர்
ஓசை இறந்தவர் நெஞ்சினுள் ஈசனும்
ஓசை உணர்ந்த உணர்வுஇது வாமே.

பொருள் : உள்ளத்தில் உண்டாகும் சூக்குமை முதலிய வாக்குகள் ஈசனோடு ஒப்பானவையாகும். நாதத்தைக் கடந்தவர் ஈசனை நினைந்து நாதாந்தத்தில் இருப்பர். நாதாந்தத்தில் இருப்பவர் நெஞ்சில் ஈசனும் ஓசையால் உணர்ந்த உணர்வாக விளங்குவான். (ஓசை - உயிர்ப்பு; இறந்தவர் - உயிர்ப்பை அடக்கியவர். ஓசை இறந்தவர் (மனம் அடங்கப் பெற்றவர்).

772. ஆமே அழிகின்ற வாயுவை நோக்கிடில்
நாமேல் உறைகின்ற நன்மை அளித்திடும்
பூமேல் உறைகின்ற போதகம் வந்திடும்
தாமே உலகில் தலைவனும் ஆமே.

பொருள் : அழிகின்ற நால்அங்குல வாயுவைக் கண்டு அழியாமல் பொருந்தும்படி செய்யின் உள் நாக்கு மேல் அமையும் சகஸ்ரதளம் விரிந்து நன்மையைச் செய்யும். சகஸ்ரதளம் தங்கும் ஞானம் நிலைபெறும். அவ்வாறு ஞானம் பெற்றவரே உலகத்தலைவராவர். (போதகம் - திருவடி உணர்வு)

773. தலைவ னிடம் வலம் சாதிப்பார் இல்லை
தலைவ னிடம்வல மாயிடில் தையல்
தலைவ னிடம்வலம் தன்வழி அஞ்சில்
தலைவ னிடம்வலம் தன்வழி நூறே.

பொருள் : தலைவன் வாழ்கின்ற இடக்கண் பார்வையை வலக்கண் பார்வையோடு பொருந்தும் வகை அறிவார் இல்லை. இடக் கண்ணை வலக் கண்ணோடு பொருந்தினால் ஒளியாகிய சத்தி விளங்கும். இச் சாதனையால் ஞானேந்திரியங்கள் ஐந்தும் தன்வழிப் பட்டமையின் இவரது வாழ்நாள் நூறாண்டாகும். (இடக்கண்-சிவன்; வலக்கண்-சத்தி, இடம் வலம் சாதிப்பார் என்பதைப் பிராணாயாமத்தைச் சரியாய்ச் செய்து முடிப்பவர் எனப்பொருள் கொள்வாரும் உளர்.)

774. ஏறிய ஆறினில் எண்பது சென்றிடும்
தேறிய ஏறிற் சிறக்கும் வகைஎண்ணில்
ஆறொரு பத்தாய் அமர்ந்த இரண்டையும்
தேறியே நின்று தெளிஇவ் வகையே.

பொருள் : ஆறு விரற்கடை அளவு சுவாசம் வெளியேறினால் எண்பது ஆண்டு வாழலாம். ஏழு விரற்கடை அளவு சுவாசம் வெளிப்படுவதை எண்ணினால் அறுபத்திரண்டாய் ஆயுட் காலம் அமைந்ததையும், ஆராய்ந்து நின்று இவ்வகையாகத் தெளிவாயாக . சுவாச அளவு நீடிப்பதில் ஆயுட்குறைவும், சுவாச அளவு குறைவதில் ஆயுள் நீடிப்பு உண்டாம்.

775. இவ்வகை எட்டும் இடம்பெற ஓடிடில்
அவ்வகை ஐம்பதே என்ன அறியலாம்
செவ்வகை ஒன்பதும் சேரவே நின்றிடின்
முவ்வகை யாம்அது முப்பத்து மூன்றே.

பொருள் : இவ்வகையான எட்டு விரற்கடை சுவாசம் நீண்டு இயங்குமாயின் அவ்வகை ஆயுள் ஐம்பது ஆண்டுகள் என அறியலாம். செம்மையாக ஒன்பது விரற்கடை சுவாசம் சேரஇயங்குமாயின் மூத்து அழியும் காலம் முப்பத்து மூன்று ஆண்டுகளாம்.

776. மும்மூன்றும் ஒன்றும் முடிவுற நின்றிடில்
எண்மூன்றும் நாலும் இடவகை யாய்நிற்கும்
ஐம்மூன்றும் ஓட அகலவே நின்றிடில்
பன்மூன்றொடு ஈராறு பார்க்கலும் ஆமே.

பொருள் : பத்து விரற்கடை சுவாசம் முடிவு பெற நின்றிடில் இருபத்தெட்டு ஆண்டுகள் வாழலாம். பதினைந்து விரற்கடை ஓடி நிற்குமாயின் இருபத்தைந்து ஆண்டுகள் வாழலாம்.

777. பார்க்கலும் ஆகும் பகல்முப் பதுமாகில்
ஆக்கலும் ஆகும்அவ் ஆறிரண்டு உள்ளிட்டுப்
போக்கலும் ஆகும் புகலற ஒன்றெனில்
தேக்கலும் ஆகும் திருத்திய பத்தே.

பொருள் : பகல் முப்பது நாழிகைகளும் சூரியனைச் சந்திரன் பகுதியில் சேர்த்து நிற்பின் சிரசின் ஈசான திக்கில் உணர்வை உதிக்கச் செய்யலாம். அப்போது சுழுமுனையில் சுவாசம் போதலைச் சாதிக்கலாம். இதனால் அகர உகரமாகிய இருகலைகளும் செம்மையுற்றுப் பத்தாகிய அக்கினி கலைவிளங்கும் இதனைப் பார்க்கக் கூடும். (அ-எட்டு, உ இரண்டு தமிழ் எண்கள் இரண்டும் சேர்ந்து பத்து.)

778. ஏயிரு நாளும் இயல்புற ஓடிடில்
பாயிரு நாலும் பகையற நின்றிடும்
தேய்வுற மூன்றும் திகழவே நின்றிடில்
ஆயுரு வாறுஎன்று அளக்கலும் ஆமே.

பொருள் : முற்கூறியபடி பொருந்திய இரு நாள்களிலும் சுழுமுனையில் பிராணன் இயங்கில், கீழ் நோக்குதலையுடைய அபானனும் வியாபகமான சந்திரனும் சீவனுக்குப் பகையாக இல்லாமல் உதவுவான். இவ்வாறு கீழ்நோக்கும் சத்தியைக் குறைத்து மூன்று நாட்கள் நிலைபெறில் ஆயுள் நீடிக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ ?

779. அளக்கும் வகைநாலும் அவ்வழியே ஓடில்
விளக்கும் ஒருநாளும் மெய்ப்பட நிற்கும்
துளக்கும் வகைஐந்தும் தூய்நெறி ஓடில்
களக் மறமூன்றில் காணலும் ஆமே.

பொருள் : இங்ஙனம் அளக்கும் வகையால் நான்கு நாள்கள் சுழுமுனை வழியே பிராணன் இயங்கினால் விளக்கத்தைச் சிவம், சத்தி, விந்து, நாதம் ஆகிய நான்கும் உண்மையாகக் காணலாம். விளக்கமான முறையில் ஐந்து நாட்கள் தூய்மையான இவ்வழியில் இயங்குமாயின் களங்கமின்றிச் சிவம்சத்தி ஆன்மாவாகிய மூன்றையும் காணலாம்.

780. காணலும் ஆகும் கருதிய பத்துஓடில்
காணலும் ஆகும் கலந்த இரண்டையும்
காணலும் ஆகும் கலப்பற மூவைந்தேல்
காணலும் ஆகும் கருத்துற ஒன்றே.

பொருள் : முன்னே விளக்கியபடி பத்து நாட்கள் சுழுமுனையில் அறி பொருந்தியவர்க்கு, தன்னுடன் பொருந்திய சிவம் சத்தியை அறியலாம். அவ்வண்ணம் கலந்த தன்மையும் விட்டுப் பதினைந்து நாட்கள் சுழுமுனை அறிவில் பொருந்தியவர் சீவம் ஒன்றே எண்ணத்தில் காண்பர்.

781. கருதும் இருபதில் காணஆ றாகும்
கருதிய ஐ ஐந்தில் காண்பது மூன்றாம்
கருதும் இருப துடன்ஆறு காணில்
கருதும் இரண்டெனக் காட்டலும் ஆமே.

பொருள் : கருதப்படுகின்ற இருபது நாட்கள் சுழுமுனையில் நிலைபெறின் ஆகாயக் கூறிலிருந்து ஆறு ஆதாரங்கள் அறியப்படும். அவ்வாறு இருபத்தைந்து நாட்கள் இயங்கினால் ஐம்பூத ஆகாயத்தில் பூதாகாயமும் குணமய ஆகாயமும் கீழ்படுத்தப்பட்டுத் தேயுவும் வாயுவும் ஆகாயமுமாகிய மூன்று விளங்கும். மேலும் இருபத்தாறு நாட்கள் இயங்கினால் கருதுகின்ற தேயுவும் ஆகாயமும் ஆகிய இரண்டும் சிறப்புறும்.

782. காட்டலும் ஆகும் கலந்திரு பத்துஏழுடல்
காட்டலும் ஆகும் கலந்தெழும் ஒன்றெனக்
காட்டலும் ஆகும் கலந்திரு பத்தெட்டில்
காட்டலும் ஆகும் கலந்த ஈரைந்தே.

பொருள் : முற் கூறியவாறு சுழு முனையில் இருக்கும் ஞானி இருபத்தேழு நாட்கள் அவ்வாறு இருப்பின், சோதிவடிவாகிய சிவத்தைப் பிறர்க்கு உணர்த்தல் கூடும். அவ்வாறு இருபத்தெட்டு நாட்கள் சுழுமுனையில் பொருந்தியிருப்பின், பத்தாவது நிலையான ஊர்த்துவ சகஸ்ரதளத்தில் விளங்கும் ஆன்மாவைப் பிறர்க்கு உணர்த்தல் கூடும்.

783. ஈர் ஐந்தும் ஐந்தும் இருமூன்றும் எட்டுக்கும்
பார் அஞ்சி நின்ற பகைபத்து நாளாகும்
வாரம்செய் நின்ற வகை ஆறுஅஞ்சு ஆமாகில்
ஓர்அஞ்சொடு ஒன்றுஒன்று எனஒன்று நானே.

பொருள் : பத்தும், ஐந்தும், ஆறும், எட்டுமாகிய இருபத்தொன்பது நாட்களும், உலகோர் அஞ்சும்படி பகைசெய்யும் இந்நாட்கள், யோகியர்க்குப் பத்து நாட்கள் போலத் தோன்றும், அன் பினைப் பெருக்குகின்ற வகையில் இறைவனோடு கலந்திருக் கின்ற முப்பது நாட்களும், ஓர் ஐந்தோடு ஒன்றும் ஒன்று மாகிய ஏழு நாட்கள் கழிந்தன போலத் தோன்றும், (வாரம்-அன்பு மேல்நிலையில் பொருந்தி யிருப்பவர்க்குக் காலம் செல்லுவதே தெரியாது.)

784. ஒன்றிய நாள்கள் ஒருமுப்பத்து ஒன்றாகில்
கன்றிய நாளும் கருத்துற மூன்றாகும்
சென்றுயிர் நாலெட்டும் சேரவே நின்றிடின்
மன்றியல் பாகும் மனையில் இரண்டே.

பொருள் : இறைவனுடன் பொருந்திய நாள்கள் முப்பத்தொன்றாயின், சிறுமையைச் செய்யும் நாள்கள் மனத்தில் மூன்று நாள்கள் போல யோகியர்க்குத் தோன்றும். இறைவனுடன் சென்று உயிர் முப்பத்திரண்டு நாள்கள் பொருந்தி நின்றிடின் உலக நடையினர்க்குரிய இரண்டு நாள்கள் சென்றது போலத் தோன்றும் (கன்று - சிறுமை)

785. மனையில்ஒன்று ஆகும் மாதமும் மூன்றும்
சுனையில் ஒன் றாகத் தொனித்தனன் நந்தி
வினையுற ஓங்கி வெளிசெய்து நின்றால்
தனையுற நின்ற தலைவனும் ஆமே.

பொருள் : மூன்று மாதங்களும் சிவமும் ஆன்மாவும் பேதமற ஒன்றாயினார்க்கு, சகஸ்ரதளத்தில் சூக்கும வாக்கு விளங்கும் படி செய்தனன் நந்தியெம் பெருமான். யாதொரு கிரியையும் இன்றிப் பரம ஆகாயத்தில் நிமிர்ந்து நின்றவர்க்கு தன்னுடன் பொருந்தி நின்ற சிவமேயாதல் கூடும். (மாதமும் மூன்றும்-முப்பத்து மூன்று நாட்கள் எனச்சிலர் பொருள் கொண்டனர். நந்தி- சிவபெருமான்.)

இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Mon Mar 26, 2012 3:11 pm

786. ஆரும் அறியார் அளக்கின்ற வன்னியை
ஆரும் அறியார் அளக்கின்ற வாயுவை
ஆரும் அறியார் அழிகின்ற அப்பொருள்
ஆரும் அறியா அறிவுஅறிந் தேனே.

பொருள் : பரவெளியில் சூக்கும நிலையில் கலந்துள்ள அக்கினியாகிய பூதத்தை யாரும் அறியார். கலந்துள்ள வாயு பூதத்தை யாரும் அறியமாட்டார். எல்லாவற்றையும் ஒடுக்கியிருக்கின்ற சிவத்தை யாரும் அறியார். மற்றவர் அறிந்து கொள்ள முடியாத அறிவை நான் சிவத்துடன் பொருந்தி உணர்ந்தேன்.

787. அறிவது வாயுவொடு ஐந்துஅறி வாய
அறிவா வதுதான் உலகுயிர் அத்தின்
பிறிவுசெய் யாவகை பேணியுள் நாடின்
செறிவது நின்று திகழும் அதுவே.

பொருள் : வாயுவோடு கூடி ஐந்து தன்மாத்திரைகளை அறியும் அறிவாகிய சிவம் அறிவாகும். அச்சிவமே உலகுயிர் அனைத்தின் அறிவுமாம். ஆதலின், சிவத்தைப் பிரித்து வேறாகக் காணாமல் ஒன்றாய்க் காணின், அப்பொருளாகிய சிவமே உயிரோடு பொருந்தி நின்று எல்லாப் பொருளையும் விளக்கத்தானும் விளங்கும். (அத்தின் - அனைத்தின், செறிந்து - நிறைந்து.)

788. அதுஅரு ளும்மரு ளானது உலகம்
பொதுஅரு ளும்புக ழாளர்க்கு நாளும்
மது அரு ளும்மலர் மங்கையர் செல்வி
இது அருள் செய்யும் இறையவன் ஆமே

பொருள் : அச்சிவம் அருளிச்செய்த உலகம் அஞ்ஞானியர்க்கு மயக்கத்தைத் தருவதாகும். ஞானியர்க்கு நாள் தோறும் சுட்டறிவின் நீங்கிய பொது அறிவை நல்கும். இன்பத்தை நல்கும் சகஸ்ரதளத்தில் விளங்கும் பராசக்தி இப்பேற்றை ஞானியர்க்குக் கூட்டி வைப்பான். அதனால் ஞானியர் சிவமேயாவர்.

789. பிறப்பது சூழ்ந்த பெருந்தகை நந்தி
குறிப்பது கூடிய கோலக் குரம்பைப்
பழப்பதி யாவது பற்றறும் பாசம்
அழப்படி செய்வார்க்கு அகலும் மதியே.

பொருள் : சிருஷ்டியைக் கருதிய பெருமையுடைய நந்திக்குப் பிறப்பு இன்றிக் காண்பவரது அழகிய உடம்பு பழமையான இடமாம். இவ்வுண்மையை உணர்ந்தவர்க்கு ஆசை நீங்கும், பின் ஆசைக்குக் காரணமான பாசங்களை வருந்தும்படி செய்யும் அகன்ற அறிவு விளங்கும். (நந்தி - சிவன்)

16. வார சரம்

(வாரம் - நாள், சாரம் - பிராணன் இயக்கம். இன்னின்ன நாளில் இன்னின்ன நாடி வழியாகப் பிராணன் இயங்க வேண்டும் என்ற முறையைக் கூறுவது இப்பகுதியாகும்.)

790. வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதனிடம்
ஒள்ளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம்
வள்ளிய பொன்னே வளரும் பிறைஇடம்
தெள்ளிய தேய்பிறை தான்வலம் ஆமே.

பொருள் : வெள்ளி, திங்கள், புதன் கிழமைகளில் இடைநாடி வழியாகச் சுவாசம் இயங்க வேண்டும். ஒண்மையான சனி, ஞாயிறு, செவ்வாய்க் கிழமைகளின் வலநாடி வழியாக இயங்க வேண்டும். அழகிய வியாழக்கிழமை வளர்பிறை நாளில் இடை கலையில் விளங்கவேண்டும். அழிகின்ற தேய்பிறை நாளில் வியாழக்கிழமை வலநாடியில் இயங்கவேண்டும்.

791. வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்மூன்றும்
தள்ளி இடத்தே தயங்குமே யாமாகில்
ஒள்ளிய காயத்துக்கே ஊனம் இலையென்று
வள்ளல் நமக்கு மகிழ்ந்துரைத் தானே.

பொருள் : வெள்ளி திங்கள் விளங்குகின்ற புதன் கிழமைகளில் இடை நாடியில் சுவாசம் தள்ளி இயங்குமாயின் ஒளிபொருந்திய உடம்புக்கு அழிவில்லையென்று வள்ளலாகிய குரு நாதன் நம்மனோர்க்கு மகிழ்ச்சியோடு உபதேசித்து அருளினான்.

792. செவ்வாய் வியாழம் சனிஞாயி றேஎன்னும்
இவ்வாறு அறிகின்ற யோகி இறைவனே
ஒவ்வாத வாயு வலத்துப் புரியவிட்டு
அவ்வாறு அறிவார்க்குஅவ் ஆனந்த மாமே.

பொருள் : செவ்வாய், தேய்பிறை வியாழன், சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில், சரத்தை வலப்பக்கத்தில் அறிகின்ற யோகி இறைனாவான். இந்நாள்களில் சரம் மாறி இயங்கும் தன்மையை அறிந்து வலப்பக்கத்தில் ஓட விட்டு அம்முறையில் அறிகின்றவர்களுக்கு ஆனந்தம் உண்டாகும்.

793. மாறி வரும்இரு பால்மதி வெய்யவன்
ஏறி இழியும் இடைபிங் கலையிடை
ஊறும் உயிர்நடு வேஉயிர் உக்கிரன்
தேறி அறிமின் தெரிந்து தெளிந்தே.

பொருள் : சந்திரனும் சூரியனும் இடை பிங்கலை நாடிகளில் மாறி மாறி இயங்கும். அப்போது இடைகலை வழியாக ஏறிப் பிங்கலை வழியாக இறங்கியும், பிங்கலை வழியாக ஏறி இடைகலை வழியாக இறங்கியும், பிராணன் நடு நாடியில் ஊர்ந்து செல்லும், பிராணனின் சிவன் பொருந்தியதை ஆராய்ந்து தெளிந்து அறியுங்கள். (உக்கிரன் - சிவன் (வீரபத்திரன்) ஊறும் உயர் வளரும் உயிர்.)

794. உதித்து வலத்துஇடம் போகின்ற போது
அதிர்த்துஅஞ்சி ஓடுத லாம்அகன்று ஆரும்
உதித்துஅது வேமிக ஓடிடும் ஆகில்
உதித்த இராசி உணர்ந்துகொள் உற்றே.

பொருள் : பிராணன் வலப்பக்கம் உதித்து இடப்பக்கம் மாறிச் செல்லுகின்றபோது, ஒருபுறம் கனமாகவும் மற்றொருபுறம் இலேசாகவும் இளைத்து ஓடுதலாகும். தோன்றிய அப்பிராணன் அகன்றும் தணிந்தும் ஓடுதல் நீங்கிப் பொருந்த ஒரு நாடியில் மிகுதியாக ஓடுமாயின் தோன்றிய இராசியை பொருந்தி மிகுதியாக ஓடும் நாடியைக் கொள்வாயாக (இராசி - ஒழுங்கு)

795. நடுவுநில் லாமல் இடம்வலம் ஓடி
அடுகின்ற வாயுவை அந்தணன் கூடி
இடுகின்ற வாறுசென்று இன்பணி சேர
முடி கின்ற தீபத்தின் முன்உண்டுஎன் றானே.

பொருள் : சரியான சுழுமுனையில் பொருந்தி யில்லாமல் இடமாகவோ வலமாகவோ ஓடி, பாய்கின்ற வாயுவை யோகியானவன் பொருந்தி நாடிகள் ஒத்து இயங்குகின்ற புருவ நடுவில் இனிமையைத் தரும் குண்டலினியைச் சேரச் செய்தால் நடுநாடியின் உச்சியில் தீப்பிரகாசம் அமையும் என்று நந்தி அருளினான். (இன்பணி - இனிமையைத்தரும் குண்டலினியாகிய பாம்பு. அந்தணன் - சிவபெருமானைக் குறிக்கும் என்பாரும் உளர்.)

796. ஆயும் பொருளும் அணிமலர் மேலது
வாயு விதமும் பதினாறு உளவலி
போய்அம் மனத்தைப் பொருகின்ற ஆதாரம்
ஆயுவும் நாளும் முகுர்த்தமும் ஆமே.

பொருள் : ஆராய்த்தக்க பொருளான சிவமும் அழகிய கண்மலர்களுக்கு மேலாக உள்ளது. அச்சிவனை நினைந்து சுவாச கலையை மாறச் செய்யின் பதினாறு கலைகளையுடைய சந்திரன் விளங்கும் அக்கலை வலிமையாகச் சென்று மனத்தை அழிக்கின்ற ஆதாரமாக ஆயுளும் நாளும் தியான காலமான முகூர்த்தமுமாக அமைகின்றது. (முகூர்த்தம் - 3 3/4 நாழிகை; 1 1/2 மணி நேரம் கொண்ட காலம்)

17. வார சூலம் (வார சூலம் - கிழமை தோஷம் பயணத்துக்கு உரிய தோஷம் இங்குக் கூறப்பெறும்)

797. வாரத்தில் சூலம் வரும்வழி கூறுங்கால்
நேரொத்த திங்கள் சனிகிழக் கேயாகும்
பாரொத்த சேய்புதன் உத்தரம் பானுநாள்
நேரொத்த வெள்ளி குடக்காக நிற்குமே.

பொருள் : நாள்களில் சூலம் வருகின்ற திசையைக் கூறுமிடத்து திங்களும் சனியும் கிழக்கே சூலமாகும். செவ்வாயும் புதனும் வடக்காகும். ஞாயிறும் வெள்ளியும் மேற்கு ஆகும். இத்திக்குகளில் இக்கிழமைகளில் பயணம் செல்லலாகாது. (சூலம் -முத்தலை - வேல்.)

798. தெக்கண மாகும் வியாழத்துச் சேர்திசை
அக்கணி சூலமும் ஆமிடம் பின்னாகில்
துக்கமும் இல்லை வலமுன்னே தோன்றிடின்
மிக்கது மேல்வினை மேன்மேல் விளையுமே.

பொருள் : வியாழக்கிழமை சூலதிசை தெற்காகும். சூலம் இடப்பக்கமாகவும் பின்பக்கமாகவும் இருக்கப் பயணம் செல்வது நன்மையாம். வலப்பக்கமும் முன்பக்கமும் இருக்கச் செல்லின் மேலும் மேலும் பயணத்தின் தீய வினைவுகள் உண்டாகும். சூலத்தில் செல்லுவதால் உண்டாகும் தீமை கூறியவாறு. (அக்கணி - எலும்புமாலை சூட்டப்பெற்ற.)

18. கேசரி யோகம்

(கேசரி என்பது ஆகாயம் அல்லது சிங்கம் என்று பொருள், யோகம் என்பது சேர்க்கை. கேசரி யோகமாவது, சிங்கத்தைப் போன்று மேல் நோக்கிப் பார்வையைச் செலுத்தியிருப்பதாகும். இந்த யாகத்தால் சாதகர் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலைப் பெறுவார்)

799. கட்டக் கழன்று கீழ்நான்று வீழாமல்
அட்டத்தைக் கட்டி அடுப்பை அணைகோலி
விட்டத்தைப் பூட்டி மேற்பையைத் தாட்கோத்து
நட்டம் இருக்க நமனில்லை தானே.

பொருள் : பிராணன் கீழே இறங்கி வராமல்அண்ணாக்கில் கட்டி, பின் அபானன் குதம் வழியாகவோ குறிவழியாகவோ போகாமல் குதத்தைச் சுருக்கி நிறுத்தி, பின், இரண்டு கண் பார்வைகளையும் ஒன்றாக்கி, அடுத்து மனத்தைச் சுழுமுனை வழியாகப் பாயும் பிராணனில் நிறுத்தியிருக்க உடலைத் தாண்டின நிலைக்குச் சென்றமையால் காலத்தைக் கடக்கலாம்.

800. வண்ணான் ஒலிக்கும் சதுரப் பலகைமேல்
கண்ணாறு மோழை படாமல் கரைகட்டி
விண்ணாறு பாய்ச்சிக் குளத்தை நிரப்பினால்
அண்ணாந்து பார்க்க அழுக்கற்ற வாறே.

பொருள் : சிவயோகி நாதத்தால் மோதி முன்புறமுள்ள மூளையில் இருகண் பார்வைகளையும் மாறிமாறிப் பார்ப்பதனால் உண்டாகும் கரையின் எல்லைக்குள் இரு கரைகளின் ஊடே ஆகாயத்தில் உண்டாகும் ஒளியைக் கொண்டு சகஸ்ரதளத்தை நரப்பினால் நெற்றிக்கு மேலே நிமிர்ந்து பார்க்கச் சீவனின் குற்றமான இருள்விலகிப் பரிசுத்தமாகும். (வண்ணான் - சீவன்.)

801. இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித்
துதிக்கையால் உண்பார்க்கச் சோரவும் வேண்டாம்
உறக்கத்தை நீக்கி உணரவல் லார்கட்கு
இறக்கவும் வேண்டாம் இருக்கலும் ஆமே.

பொருள் : இடைகலை பிங்கலை நாடிகளின் வழிப் பிராணன் இயங்குவதை மாற்றி, சுழுமுனை வழியாகப் பிராணனைச் செலுத்த வல்லார்க்கு இறப்பின்றி அழியாமல் இருக்கக் கூடும். (உறக்கத்தை நீக்குதலாவது - விடியலில் எழுதல். உண்டி, உறக்கம், பயம், இன்பம் ஆகிய நான்கும் உயிர்ப் பண்புகள் துதிக்கை - சுழுமுனை)

802. ஆய்ந்துரை செய்யில் அமுதம்நின்று ஊறிடும்
வாய்ந்துரை செய்யும் வருகின்ற காலத்து
நீந்துரை செய்யில் நிலாமண் டலமாய்ப்
பாய்ந்துரை செய்தது பாலிக்கு மாறே.

பொருள் : ஆராய்ந்து சொல்லுமிடத்துச் சாதனையில் அமுதம் நிலைபெற்று ஊறும் அது வருகின்றபொழுது நன்கு அமைந்து ஒலித்தலைச் செய்யும். பெருகி ஒலித்தலைச் செய்யில் சந்திர மண்டலமாய் விளங்கி ஒலித்தலைச்செய்து அது பாதுகாக்கும் என்றவாறு.

803. நாவின் நுனியை நடுவே விசிறிடில்
சீவனும் அங்கே சிவனும் உறைவிடம்
மூவரும் முப்பத்து மூவரும் தோன்றுவர்
சாவதும் இல்லைச் சதகோடி பூனே.

பொருள் : சாதகர் நல்லாசனத்தில் அமர்ந்து நாக்கின் நுனியை அண்ணாக்கின் மேல் உரசி யிருப்பின் சீவனும் சிவனும் மூவரும் அங்கே தோன்றும். மூவரோடு ஏனைய முப்பத்துகள் மரணமில்லாமல் வாழலாம். இஃது அடயோக முறை சிவிறிடல் என்றும் பாடம் விசிறியின் அடிப்பகுதி முப்பத்து முக்கோடி தேவர் என்றும் சிலம் பொருள் கொள்வர்.

804. ஊனூறல் பாயும் உயர்வரை உச்சிமேல்
வானூறல் பாயும் வகையறி வார்இல்லை
வானூறல் பாயும் வகையறி வாளர்க்குத்
தேனூறல் உண்டு தெளிலும் ஆமே.

பொருள் : ஊனுடலால் அறியப்படும் அறிவெல்லாம் பொருந்தி அமையும் இடமாகிய சிரசின் உச்சிமேல் ஆகாய மண்டலம் விளங்கும் தன்மையை அறிபவர் இல்லை. ஆகாய மண்டலத்தைப் பெருக்கி அறிபவர்க்கு இல்லை. ஆகாய மண்டலத்தைப் பெருக்கி அறிபவர்க்கு அமுதத்தை உண்டு தெளிவினை அடையலாம். ஊன் ஊறம் - சுக்கிலம். வான் ஊறல் (மதி); தேன் ஊறல் - அமுதத்தின் சுவை (சுடுக்கை) வான் ஊறல் - கங்கை (அமுதம்) பாம்பு - குண்டலியாற்றல். கங்கை, மதி, பாம்பு, கடுக்கை என்னும் நான்கும் இறைவன் முடிமேல் உள்ளன.

805. மேலைஅண் ணாவின் விரைந்துஇரு காலிடில்
காலனும் இல்லை கதவம் திறந்திடும்
ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்
பாலனும் ஆவான் பராநந்தி ஆணையே

பொருள் : மேலை அண்ணாக்குப் பிரதேசத்தில் சாதனையால் பிராண அபானனாகிய இருவாயுக்களையும் பொருந்தும் படி செய்யின், தேகத்திற்கு அழிவு இல்லை. பிரமப்புழை திறந்து சாதகர் மேலே செல்வர். உலகத்தார் அறியும் ஆணையாம். இருகால் என்பதற்கு இருமூக்கின் வழியாகவும் வரும் உயிர்ப்பினை (பிராணவாயு) என்று சிலம் பொருள் கொள்வர்.

806. நந்திமுதலாக நாமேலே ஏறிட்டுச்
சிந்தித்து இருக்கில் தரணி முழுதாளும்
பந்தித்து இருக்கும் பகலோன் வெளியாகச்
சிந்தித்து இருப்பவர் தீவினை யாளரே.

பொருள் : இம்முறையில் சிவனை முன்னிட்டுக் கொண்டு நாவினை அண்ணாக்கினுள்ளே ஏறும்படி செய்து, அங்கே நடு நாடியின் உச்சியில் சந்தித்திருப்பின் அச்சாதகர் உலகமுழுதும் ஆள்வார். உடலோடு பின்னிக் கிடக்கும் அறிவு நீங்கி, சிவனை எண்ணியிருப்பவரே உண்மையான அக்கினி காரியம் செய்தவராவார். அதாவது இப்பயிற்சி இல்லாதவர் தீவினையாளர் என்றபடி.

807. தீவினை யாடத் திகைத்தங்கு இருந்தவர்
நாவினை நாடின் நமனுக்கு இடமில்லை
பாவினை நாடிப் பயனறக் கண்டவர்
தேவினை யாடிய தீங்கரும்பு ஆமே

பொருள் : தீய வினைகள் தங்களை வெற்றி கொள்ள அறிவு மயங்கியிருந்த சீவர்கள் நாவால் செய்யும் சாதனையால் நாடினால் நமனுக்கு வேலயில்லை. பரந்த வினைகளை ஆராய்ந்து அவற்றின் பயன் இன்மையை அறிந்தவர் தெய்வப் பணியைச் செய்து அதன் இனிமையைச் சுவைத் திருப்பார். செந்தமிழ் மறைப்பாட்டினை ஆராய்ந்து இடையறாது ஓதி அதன் முழுப் பயனையும் மேற்கொண்டவர் சிவத்துடன் கூடிப் பேரின்பமுறுவர் என்று கூறுவாரும் உளர்.

808. தீங்கரும் பாகவே செய்தொழில் உள்ளவர்
ஆங்கரும் பாக அடையதா ஏறிட்டுக்
கோங்கரும் பாகிய கோனை நிமிர்ந்திட
ஊன்கரும் பாகியே ஊனீர் வருமே.

பொருள் : இனிய கரும்பை யொத்த வினையைச் செய்பவர் சுழுமுனை நாடியாம் கரும்பைப் பெற நாவினை மேலே ஏற்றி, நடு நாடியின் கோணலை ஒழுங்குபெறச் செய்ய ஊன் உடலிலேயே அமுதத்தைக் காண்பர். (கோணலை - வளைவை ஊனீர் - உடல் அமிழ்து. கோங்குஅரும்பு - பாம்பின்தலை; குண்டலி.)

809. ஊனீர் வழியாக உண்ணாவை ஏறிட்டுத்
தேனீர் பருகிச் சிவாய நமவென்று
கானீர் வரும்வழி கங்கை தருவிக்கும்
வானீர் வரும்வழி வாய்ந்தரி வீரே.

பொருள் : நாவின் வழியாக உண்ணாக்கை மேலே செலுத்தி, அதனால் ஊற்றெழுந்து வரும் அமுதத்தைப் பருகிச் சிவாய நம எனச்சிந்தித்து இருப்பார்க்கு காத்தலைச் செய்கின்ற ஒளி நீர்ப்பிரவாகம் போல் முகத்தின் முன் பெருகும். அவ் ஆகாய கங்கையைப் பெற்று அறிந்து கொள்ளுங்கள். (சிவாய நம; சி-ஒளி; வ-ஆற்றல்; ய-ஆகாயத்தையும் ஆன்மாவையும், ந-மறைப்பு, ம-மலம் இவைகளைக் குறிக்கும் என்பர்.)

810. வாய்ந்தளித்து உள்ளே வழிபாடு செய்தவர்
காய்ந்தறி வாகக் கருணை பொழிந்திடும்
பாய்ந்தறிந்து உள்ளே படிக்கதவு ஒன்றிட்டுக்
கோய்ந்தறிந்து உள்ளுறை கோயிலும் ஆமே.

பொருள் : சிவத்தைப் பொருந்தி உள்ளத்தில் வழிபாடு செய்தவர்க்கு மலத்தைச் சுட்டெரிக்கும் அருள் சத்தி ஒலி ஒளி வடிவில் வெளிப்பட்டருளுவான். அத்தகைய ஒலி ஒளி வடிவில் மனம் பதிவுற்றுக் கீழ் இறங்காது சாலந்தர பந்தனம் அமைத்து அங்குக் குவிந்து அறிந்து தியானிப்பார்க்கு எடுத்தவுடல் சிவாலயமாகும். கூய்ந்து அறிந்து எனவும் பாடம் (கூய்ந்து - நிர்மலமாகி)

811. கோயிலின் உள்ளே குடிசெய்து வாழ்பவர்
தாயினும் நல்லார் தரணி முழுதுக்கும்
காயினும் நல்லவர் காய்ந்தவர் தம்முளும்
தீயினும் தீயரத் தீவினை யாளர்க்கே

பொருள் : அகக் கோயிலலையே வாசகமாகக் கொண்டு வாழும் சீவர்கள் அனைத்து உலகுக்கும் தாயினும் மிக்க கருணையுடைய வராவர். சிலர் இவரைச் சினந்தாலும் நன்மையே செய்வர். ஆனால் சினந்தவரில் தீய வினை செய்தவர்க்குத் தீயைக் காட்டிலும் கொடியராய் அழித்துவிடுவர்.

812. தீவினை யாளர்தம் சென்னியின் உள்ளவன்
பூவினை யாளர்தம் பொற்பதி யானவன்
பாவினை யாளர்தம் பாவகத்து உள்ளவன்
மாவினை யாளர்தம் மதியின்உள் ளானே

பொருள் : சிவன் மூலாக்கினியை எழுப்பி யோகம் செய்பவர் சிரத்தில் இருப்பவன். அவன் சகஸ்ரதளத்தில் உணர்பவருக்குப் பொன்னொளி மண்டலத்தில் விளங்குவான். இடைவிடாது பாவனை செய்வாருக்கு அவன் பாவகப் பொருளாய் விளங்குபவன். பெருவினையாகச் சிவயோகம் புரிவோர்க்கு அவரது அறிவில் செறிந்து விளங்குபவனாய் உள்ளான்.

813. மதியின் எழுங்கதிர் போலப் பதினாறாய்ப்
பதிமனை நூறுநூற் றிருபத்து நாலாய்க்
கதிமனை யுள்ளே கணைகள் பரப்பி
எதிர்மலை யாமல் இருந்தனன் தானே.

பொருள் : சந்திரனிடமிருந்து கலைகளைப் போன்று பதினாறு இதழ்களை யுடைய விசுத்திச் சக்கரத்திலிருந்து பொருந்திய உடம்பாகிய மனையில் இருநூற்று இருபத்து நான்கு புவனங்களிலுமாகி, நடக்கின்ற உடம்பில் ஒளிக்கதிர்களைப் பரப்பி, தத்துவங்கள் ஒன்றுக்கு ஒன்று முரண்படாதவாறு சிவன் பொருந்தி யிருந்தான்.

814. இருந்தனள் சத்தியும் அக்கலை சூழ
இருந்தனள் கன்னியும் அந்நடு வாக
இருந்தனள் மான்நேர் முகநிலவு ஆர
இருந்தனள் தானும் அமுதம் பொழிந்தே.

பொருள் : சித்ரூபிணியாகிய பராசத்தியும் விசுத்திச் சக்கரத்திலுள்ள கிரணங்களில் அமைந்துள்ளாள். அவள் அக்கிரணங்களின் நடுவாக விளங்குகிறாள். அவளே ஆன்ம தத்துவத்திலும் சந்திரனாக விளங்கினாள் இவளேதான் போகத்தில் பொருந்தி இன்பம் பொழிபவனாக உள்ளான். (விசுத்திசிடறு அறிவு மயமாகிய சிவனுக்கு ஏற்ப ஆற்றல் மயமான சத்தியும் அமைந்து நிற்கும்.)

815. பொழிந்த இருவெள்ளி பொன்மண் அடையில்
வழிந்துஉள் இருந்தது வான்முதல் அங்குக்
கழிந்தது போகாமல் காக்கவல் லார்க்குத்
கொழுந்துஅது வாகும் குணமது தானே.

பொருள் : ஆகாயம் முதலாகிய பராசக்தி பெய்த வெண்மையான சுக்கிலத்திலும் பொன்மயமான சுரோணிதத்திலும் பொருந்தி அவை தொழிற்படும் சுவாதிட்டானச் சக்கரத்தில் உள்ளான். அங்கு ஆற்றல் கழியாது பாதுகாக்கும் திறமையுடையார்க்கு அதுவே உடலைக் காக்கும் பச்சிலை மருந்தாகும். முன் மந்திரங்களில் கண்டவிசுத்திச் சக்கரத்தின் பயன் அதுவாகும். (வெள்ளி - அமுதம் என்றும், பொன்மண். பூதலம் என்றும் பொருள் கொள்வாகும் உளர்.)

816. குணமது வாகிய கோமள வல்லி
மணமது வாக மகிழ்ந்தங்கு இருக்கில்
தனமது வாகிய தத்துவ ஞானம்
இனமது வாக இருந்தனன் தானே.

பொருள் : காம செயத்தை அளிக்கும் கொடிபோன்ற குண்டலினி சத்தி, ஆகாய மண்டலத்தில் சிவத்துடன் சேர்க்கை யுற்று மகிழ்ச்சியுடன் விளங்கினால், அட்டமாசித்திகளை அளிக்கும் உண்மை ஞானம் உண்டாகும். குண்டலினியின் இனமாகிய சிற்சித்தியுடன் அறிவுமயமான சிவனும் அறிவில் விளங்குவான். தத்துவஞானம்-இறைவி, மணம்அதுவாக ஈசனுடன் கூடி எனினுமாம்.

817. இருந்த பிராணனும் உள்ளே எழுமாம்
பரிந்தஇத் தண்டுடன் அண்டம் பரிய
விரிந்தஅப் பூவுடன் மேலெழ வைக்கின்
மலர்ந்தது மண்டலம் வாழலும் ஆமே.

பொருள் : விசுத்திச் சக்கரத்தின் கீழே ஓடிக் கொண்டிருந்த பிராணன் கண்டத்திலிருந்து உள்முகமாக மேல் நோக்கிச் செல்லும். உடலைத் தாங்கி வீணாத்தண்டைவிட்டுத் தாண்டி ஆகாயத்தை அடைந்து, கவிழ்ந்த சகஸ்ர தளத்தை நிமிர்ந்த சகஸ்ர தளமாக்கி விளங்கும்படி செய்தால் சந்திர மண்டலம் வளர்ச்சி பெற்றுப் பூமண்டலத்தில் நெடிது வாழலாம்.

818. மண்டலத் துள்ளே மனவொட்டி யாணத்தைக்
கண்டகத் தங்கே கருதியே கீழ்க்கட்டிப்
பண்டகத் துள்ளே பகலே ஒளியாகக்
குண்டலக் காதனும் கூத்தொழிந் தானே.

பொருள் : மதிமண்டலத்தில் மனத்தைப் பிணிக்கும் ஒட்டியாண பீடத்தைக் கண்டு மனத்தை அங்கேயே நினைந்து கீழ் நிலையில் செல்லாமல் நிறுத்தி, பழமையான ஆனந்த மயகோசத்தில் மகா சூரியப் பிரகாசம் விளங்க, குண்டத்தை அணிந்த கூத்தப் பெருமானும் அசைவற்று விளங்குவான். (கூத்தொழிதல் - ஐந்தொழில் நீங்குதல்)

819. ஒழிகின்ற வாயுவும் உள்ளே அமரும்
கழிகின்ற வாயும் காக்கலும் ஆகும்
வழிகின்ற காலத்து வட்டக் கழலைப்
பழிகின்ற காலத்துப் பையகற் றீரே.

பொருள் : முற்கூறிய சாதனையால் விசுத்திக் சக்கரத்துக்குக் கீழே சென்று ஒழிகின்ற வாயு அண்ணாக்கின் வழிமேலே சென்று தங்கும் அம்முறையில் வாயுவைக் கழியாது காக்கக் கூடும். அதனால் ஒளியானது நிலைகொண்டு வழிகின்ற காலத்தில் சகஸ்ரதளத்தில் விளங்கும் திருவடியைப் புகழ்கின்றபோது உடம்பாகிய பையை விட்டு நில்லுங்கள்.

820. பையனின் உள்ளே படிக்கதவு ஒன்றிடின்
மெய்யினின் உள்ளே விளங்கும் ஒளியதாம்
கையினுள் வாயுக் கதித்தங்கு எழுந்திடின்
மையணி கோயில் மணிவிளக்கு ஆமே.

பொருள் : உடம்பினுள் மூலாதாரக் கதவாகிய குதத்தை (எருவாயை) இறுகப் பிடித்தால், உடம்பினுள்ளே ஒளி விளங்குமாம். நாடியினுள் அபானன் உக்கிரமாக மேலெழுந்தபோது மலங்களோடு கூடிய சீவன் பிரகாசம் பொருந்தியதாய் விளங்கும்.

821.விளங்கிடும் வாயுவை மேலெழ உன்னி
நலங்கிடுங் கண்டத்து நாடியின் உள்ளே
வணங்கிடு மண்டலம் வாய்த்திடக் கும்பிச்
சுணங்கிட நின்றவை சொல்லலும் ஆமே

பொருள் : மூல பந்தத்தால் அமைந்தவாயு மேல்எழுவதை நினைந்து, கசக்குதலினால் சுருங்குகின்ற விசுத்திச் சக்கரத்தின் மேல் வணங்கத் தக்க சந்திர மண்டலம் விளங்க, அக்கினி சூரிய மண்டலங்கள் சுருங்கிட நின்ற இத்தன்மையைச் சொல்லவா வேண்டும்.

822. சொல்லலும் ஆயிடும் மாகத்து வாயுவும்
சொல்லலும் ஆகும் அனல்நீர்க் கடினமும்
சொல்லலும் ஆகும் இவைஅஞ்சும் கூடிடில்
சொல்லலும் ஆம்தூர தெரிசனந் தானே

பொருள் : ஆகாய பூதத்தில் வாயு பூதம் உள்ளதைச் சொல்லக்கூடும் மேலும் அக்கினி நீர் நிலம் ஆகியவை அங்குக் கூறலுமாம். ஆகாயம் முதலாகிய ஐம்பூதங்களும் ஒளி மயமாக ஆகாயத்தில் பொருந்தியிருப்பதைச் சொல்லக்கூடும். அவ்வாறு கண்டவர் தூர திருஷ்டியுடையவர் ஆவார். (மாகம் - ஆகாயம்; கடினம் - நிலம், வேறு சிலர் மண் நீர்க்கடினமும் எனப்பாடம் கொண்டு மண், நீர், தீ எனப்பொருள் கொண்டனர் கடினம் - ஈண்டுத்தீ.)

823. தூர தரிசனம் சொல்லுவன் காணலாம்
காராருங் கண்ணி கடைஞானம் உட்பெய்து
ஏராரும் தீபத்து எழிற்சிந்தி வைத்திடின்
பாரார் உலகம் பகன்முன்ன தாமே.

பொருள் : தூர திருஷ்டியைப் பற்றிச் சொல்லுவதை உங்கள் அனுபவத்தில் காணலாம். மேகத்தைப் போன்று அருள் வழங்கும் கண்ணையுடைய பராசக்தியைப் பொருந்துவதால் உண்டாகும் ஞானத்தை உள்ளே நிறுத்தி, அழகு நிறைந்த சிவத்தினிடம் சிந்தையை வைத்திருந்தால் பூமிமுதலான உலகங்கள் பகலில் காணப்படுவதுபோல் நன்குவிளங்கும்.

824. முன்னெழு நாபிக்கு முந்நால் விரற்கீழே
பன்னெழு வேதப் பகல்ஒளி உண்டென்னும்
நன்னெழு நாதத்து நற்றீபம் வைத்திடத்
தன்னெழு கோயில் தலைவனும் ஆமே.

பொருள் : முன்னே எழுகின்ற உந்திக் கமலத்துக்குப் பன்னிரண்டு விரற்கடை கீழேயுள்ள மூலாதாரத்தில் பன்னிஎழுகின்ற வேதம் சூரியனாகிய புருடன் விளங்குவதாகக்கூறும் கீழேயுள்ள குண்டலினியைப் பந்தித்து மேலே செலுத்துவதில் நன்றாக எழுகின்ற நாதமாகிய அறிவில் மனம் பந்தித்து இருப்பின் ஆன்மாவாகிய தன்னிடம் எழுகின்ற கோயிலில் சிவம் பிரகாசிக்கும்.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Mon Mar 26, 2012 3:13 pm

19. பரியங்க யோகம்

(பரியங்கம் - கட்டில், யோகம் - சேர்க்கை, கட்டிலில் பெண்ணோடு கூடியிருந்து செய்யும் போகத்தை யோகமாக்குதல் பரியங்க யோகமாகும்.)

பெற்ற சிற்றின்பமே பேரின்ப மாய் அங்கே
முற்ற வரும்பரிசு உந்தீபற
முளையாது மாயை என்று உந்தீபற - திருவுந்தியார்

இதுவே ஒளியை அடைவதற்குரிய குறுக்கு வழி என்கிறார், திபேத்திய குருமார்களில் சிறந்தவராக விளங்கிய நரோப்பா அவர்கள்.

825. பூசு வனவெல்லாம் பூசிப் புலர்த்திய
வாச நறுங்குழல் மாலையும் சாத்திக்
காயக் குழலி கலவியோ குங்கலத்து
ஊசித் துளையுறத் தூங்காது போகமே.

பொருள் : பூசத் தகுந்த வாசனைத் திரவியங்கள் எல்லாம் ஆடவன் உடம்பில் பூசிக்கொண்டு மலர்ந்த மணம் நிறைந்த மாலையை அணிவித்து, பெண்ணோடுகலவியிலே பொருந்தி மனமானது பிரமரந்திரமாகிய உச்சியை நினைந்திருக்க போதும் தளராது இன்பம் காலத்திலும் இறைவனை எண்ணியிருக்க வேண்டும்.

826. போதத்தை யுன்னவே போகாது வாயுவும்
மேகத்த வெள்ளியும் மீளும் வியாழத்தில்
சூதுஒத்த மென்முலை யாளும்நற் சூதனும்
தாதிற் குழைந்து தலைகண்ட வாறே.

பொருள் : முன்மந்திரத்தில் கூறியவாறு பிரமரந்திரத்தில் விளங்கும் பேரறிவுப் பொருளை நினைவில் கொண்டு போதும் புரியின் காம வாயு நிறைந்து தொழிற்படாது. அப்போது நீர்த் தன்மையுடைய சுக்கிலமும் சுரோணிதத்தில் கலக்காது மீளும். சூதாடு கருவியை யொத்த தனங்களையுடைய பெண்ணும் உடம்பாகிய தேரினை நடத்தும் ஆணும் தம்மில் பொருந்திய கூட்டுறவால் விளைந்த சுக்கில சுரோணிதங்கள் விந்து நாதங்களாக மாற்றம் பெற்றுச்சிரசில் பொருந்தும் (சூரன் - தேர்ப்பாகன்)

827. கண்டனும் கண்டியும் காதல்செய் யோகத்து
மண்டலம் கொண்டுஇரு பாலும் வெளிநிற்கும்
வண்டியை மேற்கொண்டு வானீர் உருட்டிடத்
தண்டொரு காலும் தளராது அங்கமே.

பொருள் : தலைவனும் தலைவியும் விரும்பிப் புணரும் யோகத்து, அக்கினி மண்டலம் சூரிய மண்டலங்களைக் கடந்து சந்திர மண்டலத்தில் இருவரும் சிரசின் மேலேயுள்ள வெளியை அறிவர். உடலாகிய வண்டியை மேலும் மேலும் செலுத்துவதால் மதிமண்டலத்தில் ஆகாய கங்கை யாகிய ஒளியைப் பெருக்கிட அங்கீதத்தில் தண்டு ஒரு போதும் தளர்ச்சியடையாது.

828. அங்குஅப் புணர்ச்சியும் ஆகின்ற தத்துவம்
அங்கத்தில் விந்து வருகின்ற போகத்துப்
பங்கப் படாமல் பரிகரித்துத் தம்மைத்
தங்கிக் கொடுக்கத் தலைவனும் ஆமே.

பொருள் : அவ்விடத்தில் அப்புணர்ச்சியின் காரணமான காமாக்கினி, உடம்பில் விந்துவை நீக்கம் செய்கின்ற போகத்தில் அது கெடாமல் பாதுகாத்து, யோகத்தினால் மாற்றி விந்து ஜெயம் பெற்றவன் தலைவனானவன். வேறுசிலர் அங்கப் புணர்ச்சி எனக் கொண்டு பரி அங்கியோகம் எனப் பொருள்கூறுகின்றனர். பங்கப்படாமல் என்பதற்கு நாதவிந்துக்கள் கெடாமல் என்பர்.

829. தலைவனும் ஆயிடும் தன்வழி ஞானம்
தலைவனும் ஆயிடும் தன்வழி போதும்
தலைவனும் ஆயிடும் தன்வழி யுள்ளே
தலைவனும் ஆயிடும் தன்வழி அங்சே.

பொருள் : அங்ஙனமாகிய தலைவன் ஆன்மாவை அறிந்தவனாகின்றான். அவன் விரும்பிய சிவயோகம் தானே வந்தமையும் அவன்தன்னை வசப்படுத்தி ஆளும் தலைவனாவான். அவன் விருப்பப்படி பஞ்சபூதங்கள் முதலியன நடக்கும்.

830. அஞ்சி கடிகைமேல் ஆறாங் கடிகையில்
துஞ்சுவது ஒன்றத் துணைவி துணைவன்பால்
நெஞ்சு நிறைந்தது வாய்கொளாது என்றது
பஞ்ச கடிகை பரியங்க யோகமே.

பொருள் : ஐந்து நாழிகைக்கு மேல் ஆறாவது நாழிகையில் துணைவி துணைவனுடன் பொருந்தி உறக்கங் கொள்வான். ஐந்து நாழிகை கொண்ட பரியங்க யோகம் மனம் நிறைவோடு இனித்தேவையில்லை என்னும்படி செய்தது. கடிகை - நாழிகை.

831. பரியங்க யோகத்துப் பஞ்ச கடிகை
அரியஇல் யோகம் அøந்தவர்க்கு அல்லது
சரிவளை முன்கைச்சி சந்தனம் கொங்கை
உருவித் தழுவ ஒருவர்க்கு ஒண்ணாதே.

பொருள் : பரியங்க யோகத்தில் ஐந்து நாழிகை அருமையாக இருப்பவர்க்கு அல்லாமல், நழுவுகின்ற வளையலை அணிந்த முன் கையை யுடையவளும் விஷய வாசனை பொருந்திய சூரியசந்திரர்களாகிய தனங்களையும் உடைய குண்டலினி சத்தியை கடந்து மேற்செல்ல ஒருவராலும் முடியாது. கைச்சி - கையை உடையவன்.

832. ஒண்ணாத யோகத்தை உற்றவர் ஆர்என்னில்
விண்ணார்ந்த கங்கை விரிசடை வைத்தவன்
பண்ணார் அமுதினைப் பஞ்ச கடிகையில்
எண்ணா மெனஎண்ணி இருந்தான் இருந்ததே.

பொருள் : அடைவதற்கு அருமையான இவ் யோகத்தை அடைந்து அறிவித்தவர் யார் என்றால் வேதகங்கையைத் திருமுடி மேல் வைத்தவனாகிய சீகண்டருத்திரனாவான். நாதத்தோடு கூடிய ஒளியினை ஐந்து நாழிகைவரையில் எண்ணாமல் எண்ணி நுகர்ந்திருந்தான்.

833. ஏய்ந்த பிராயம் இருபதும் முப்பதும்
வாய்ந்த குழலிக்கும் மன்னர்க்கும் ஆனந்தம்
வாய்ந்த குழலியோடு ஐந்து மலர்ந்திடச்
சோர்ந்தன சித்தமும் சோர்வில்லை வெள்ளிக்கே.

பொருள் : இவ் யோகத்துக்குப் பொருந்திய வயது பெண்ணுக்கு இருபது ஆணுக்கு முப்பதுமாகும். அப்போது பொருந்திய பெண்ணுக்கும் மன்னனாகிய ஆணுக்கும் ஆனந்தமாம். பொருந்திய அப்பெண்ணோடு ஐம்பொறிகளும் மலர் மனம் முதலியன அழிந்திடும் சுக்கிலத்துக்கு அழிவில்லை.

834. வெள்ளி உருகிப் பொன்வழி ஓடாமே
கள்ளத்தட் டானார் கரியிட்டு மூடினார்
கொள்ளி பறியக் குழல்வழி யேசென்று
வள்ளியுண் ணாவில் அடக்கிவைத் தாரே.

பொருள் : வெண்ணிறமாகிய சுக்கிலம் உருகிப் பொன்னிறமாகிய சுரோணிதத்தில் (நாதத்தில்) கலக்காமல் மறைந்துள்ள தட்டானாகிய சிவன் கரியாகிய அருளை நல்கிப் பக்குவம் செய்தார். நெருப்பு ஆகிய அக்கினி கலை உண்டாக ஊது குழலாகிய சுழுமுனை வழியே சென்று பொன்னாகிய சந்திரனைச் செப்பு ஆகிய உள் நாவில் விளங்க வைத்தார்.

835. வைத்த இருவரும் தம்மின் மகிழ்ந்துடன்
சித்தம் கலங்காது செய்கின்ற ஆனந்தம்
பத்து வகைக்கும் பதினென் கணத்துக்கும்
வித்தக னாய்நிற்கும் வெங்கதி ரோனே.

பொருள் : இவ்வண்ணம் விந்து நீக்கமின்றிப் புணரும் இருவரும் தம்மில் இன்புற்று, காம வசப்படாமல் தேவ காரியமாக நினைத்துச் செய்கின்ற ஆனந்த நிலையில் பத்துத்திசைகளுக்கும் பதினெட்டுவகைத் தேவர்களுக்கும் தலைவனாக உள்ள சிவசூரியன் விளங்குவான். இப்பரியங்கப் பயிற்சி கைவந்த இருவரும் வெங்கதிரோன்போல் விளங்கும் என்று சிலர் கூறுவர்.

836. வெங்கதி ருக்கும் சனிக்கும் இடைநின்ற
நங்கையைப் புல்லிய நம்பிக்கோர் ஆனந்தம்
தங்களிற் பொன்னிடை வெள்ளிதா ழாமுனம்
திங்களிற் செவ்வாய் புதைந்திருந் தாரே.

பொருள் : விருப்பத்தைத் தருகின்ற சூரியனுக்கும் சனிப்பித்தலைச் செய்யும் கருவாய்க்கும் இடையில் சிறந்த பெண்ணைப் புணருகின்ற ஆண்மகன் ஆனந்தமடைகிறான். இருவரது புணர்ச்சியில் சுரோணிதவழிச் சுக்கிலம் பாயாமல் சந்திர மண்டலத்தில் விளங்கும் செந்நிறம் பொருந்திய வாக்கின் சத்தியாகிய நாதத்தில் திளைத்திருந்தனர்.

837. திருத்திப் புதனைத் திருத்தல்செய் வார்க்குக்
கருத்தழ காலே கலந்தங்கு இருக்கில்
வருத்தமும் இல்லையாம் மங்கை பங்கற்கும்
துருத்தியில் வெள்ளியும் சோரா தெழுமே.

பொருள் : பரியங்க யோகத்தால் - புதனாகிய அறிவைச் சந்திர மண்டலத்தில் வைப்பதாகிய நன்மையைச் செய்வார்க்கு வியாபகக் கருத்துக்கள் பொருந்த அங்கு இருந்தால், பெண்ணுடன் பொருந்துவார்க்குத் துன்பமும் இல்லையாம். உடம்பில் விந்து நீக்கமின்றி ஊர்த்துவ ரேதக அமையும்.

838. எழுகின்ற தீயைமுன் னேகொண்டு சென்றிட்டால்
மெழுகுகுரு கும்பரி செய்திடும் மெய்யே
உழுகின்ற தில்லை ஒளியை அறிந்தபின்
விழுகின்ற தில்லை வெளியறி வார்க்கே.

பொருள் : சுவாதிட்டானத்திலுள்ள காமாக்கினியை மூலாதார வழிப்புருவ நடுவுக்கு கொண்டு சென்றால் அனலின்முன் மெழுகு போன்று சாதகர்க்கு உடம்பு காணாதொழியும் சோதியைக் கண்டபிறகு உழுதலாகிய செயல்இல்லை. புருவ நடுவைத் தாண்டித் துவாத சாந்தப் பெருவெளியை அறிந்த பேர்க்கு உடல் கீழே விழுகின்றதில்லை.

839. வெளியை அறிந்து வெளியின் நடுவே
ஒளியை அறியின் உளிமுறி யாமே
தெளிவை அறிந்து செழுநந்தி யாலே
வெளியை அறிந்தனன் மேலறி யேனே.

பொருள் : ஆகாயத் தானத்தை அறிந்து, அங்கு விளங்கும் பொன் ஒளியை அறியில் உள்ளம் வேறுபடாமல் தெளிவான ஞானத்தைப் பெற்றுச் செழுமையான சிவனருளால் பரமான ஆகாயத்தை அறிந்திருந்தேன். அதற்கு மேல் யான் ஒன்றும் அறியவில்லை.

840. மேலாம் தலத்தில் விரிந்தவர் ஆரெனின்
மாலாம் திசைமுகன் மாநந்தி யாயவர்
நாலா நிலத்தின் நடுவான அப்பொருள்
மேலாய் உரைத்தனர் மின்னிடை யாளுக்கே.

பொருள் : ஒன்றிற்கு ஒன்று மேலாக விளங்கும் தலங்களில் விளங்குகின்றவர் யாரென வினவில், திருமால், பிரமன், ருத்திரன், முதலியோர் ஆவர். துரிய பூமியில் விளங்கும் சிவமாகிய பெரும் பொருள் பராசத்தியை விட மேலே உள்ளது என்று கூறினார். (நாலா நிலம் - துரியம்.)

841. மின்னிடை யாளும் மின் னாளனும் கூட்டத்துப்
பொன்னிடை வட்டத்தின் உள்ளே புகப்பெய்து
தன்னொடு தன்னைத் தலைப்பெய்ய வல்லிரேல்
மண்ணிடைப் பல்லூழி வாழலும் ஆமே.

பொருள் : மின் ஒளியில் விளங்கும் சத்தியும் அவளை ஆள்பவனாகிய சிவனும் ஆகிய இருவரையும் கூட்டத்துடன் பொன்னொளி கொண்ட ஆகாயத்தில் நிலைபெறும்படி செய்து, அக்கூட்டத்திடை ஆன்மாவாகிய தன்னையும் காணவல்லிரேல், இவ்வுலகத்து நீங்கள் நெடுங்காலம் வாழலாம்.

842. வாங்கல் இறுதலை வாங்கலில் வாங்கிய
வீங்க வலிக்கும் விரகுஅறி வார்இல்லை
வீங்க வலிக்கும் விரகறி வாளரும்
ஓங்கிய தன்னை உதம்பண்ணி னாரே.

பொருள் : வெளிமுகமான காம வாயுவை உள்ளுக்கு இழுத்துச் சுக்கிலம் கெடும்படி செய்தலும், அவ்வாறு உள்ளுக்கு இழுத்த காமவாயுவை ஊர்த்துவ முகமாக்குதலாகிய உபாயத்தை அறிவார் இல்லை. அவ்வாறு மாற்றம் செய்யும் உபாயத்தை அறிந்த வரும் வளர்ச்சிபெற்ற தன்னைச் சிவத்திடம் ஆகுதி பண்ணின வராவார். (விரகு - வழிவகை; உபாயம்.)

843. உதம்அறிந்து அங்கே ஒருசுழிப் பட்டால்
கதம் அறிந்து அங்கே கபாலம் கறுக்கும்
இதம் அறிந்து என்றும் இருப்பாள் ஒருத்தி
பதம் அறிந்து உம்முளே பார்கடித் தாளே.

பொருள் : ஆத்ம ஆகுதி பண்ணிப் பிரமப்புழையின் மேலான சகஸ்ர தளத்தில் பொருந்தினால் அவ்வழியிலே மண்டையிலுள்ள உரோமம் கறுக்கும். சீவனுக்குச் செய்ய வேண்டிய நன்மையைக் கருதிக்கொண்டு பராசக்தி விளங்குவாள். பக்குவத்தை உம்மிடம் அறிந்து உம்மிடமுள்ள பிருதிவிச் சக்கரத்தின் காரியத்தை அவள் மாற்றியருளுவான். (இதம் - செல்வி, கதம் - மார்க்கம், பதம் - பக்குவம், பார் - ஆதாரங்கள்)

844. பாரில்லை நீரில்லை பயங்கயம் ஒன்றுண்டு
தாரில்லை வேரில்லை தாமரை பூத்தது
ஊரில்லை காணும் ஒளியது ஒன்றுண்டு
கீழில்லை மேலில்லை கேள்வியிற் பூவே

பொருள் : சகஸ்ரதளமாகிய தாமரை ஒன்றுள்ளது, சிதாகாயத்தில் விளங்குவதால் பூமியும் நீரும் இல்லை. சகஸ்ரதளமாகிய இத்தாமரை மலர்ந்தது. பூவாகவே உள்ளமையால் மொட்டும், மேலிருந்து வந்தமையால் வேரும் இல்லை. அங்குக் காணப்படுகின்ற ஒளி ஒன்றுள்ளது. அகண்டமான மையின் குறிப்பிட்ட இடம் இல்லை. நாதத்துக்குக் காரணமான இச்சகஸ்ரமலர் எங்கும் படர்ந்துள்ளமையின் அதற்கு அடியும் நுனியும் இல்லை. (பங்கயம் சகசிர அறை ; தார் - அரும்பு. கேள்வி - ஞானம்)
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Mon Mar 26, 2012 3:14 pm

20. அமுரி தாரணை

(அமுரி - வீரியம், தாரணை - தரித்தல், அமுரிதாரணை - யாவது வீரியத்தை உடம்பில் தரிக்கும்படி செய்தல். குடிநீர், சிவநீர், வானநீர், ஆகாய கங்கை, அமுத நீர், உவரி, தேறல், மது, கள், மலை நீர் என்பன வெல்லாம் அமுரியைக் குறிக்கும் பல சொற்களாம். சந்திரன் தூலத்தில் வீரியமாகவும், சூக்குமத்தில் ஒளியாகவும், பரத்தில் ஆன்மாவின் சாட்சியாகவும் உள்ளது - யோகசிகோ உபநிடதம் நீர்அமுரியைச் சிறுநீர் என்று கல்பநூல் கூறும். பரியங்க யோகத்தின் பின் இப்பகுதி அமைந்திருப்பதால் அப்பொருள் இங்குப் பொருந்துவது காண்க.)

845. உடலிற் கிடந்த உறுதிக் குடிநீர்க்
கடலிற் சிறுகிணற்று ஏற்றம்இட் டால்ஒக்கும்
உடலில் ஒருவழி ஒன்றுக்கு இறைக்கில்
நடலைப் படாதுயிர் நாடலும் ஆமே.

பொருள் : உடம்பினின்றும் நீங்காமல் உறுதியைப் பயப்பதாகவுள்ள உணர்வு நீரானது கடலின் அருகே சிறு கிணறு தோண்டி ஏற்றமிட்டு இறைத்தலை ஒத்திருக்கும். உடலில் வேறொரு வழியாகக் கீழ்ப்போவதை மேலே செலுத்தினால் உயிர் வருந்தாமல் பாதுகாக்கலாம். உப்பு நீரையுடைய கடலுக்கு அருகே தோண்டி எடுக்கின் நன்னீர் இருப்பது போன்று சிறுநீர் வாயிலுக்கு அருகே அமுரி இருக்கும் என்க.

846. தெளிதரும் இந்தச் சிவநீர் பருகில்
ஒளிதரும் ஓராண்டில் ஊனம்ஒன்று இல்லை
வளியுறும் எட்டின் மனமும் ஒடுங்கும்
களிதரும் காயம் கனகமது ஆமே.

பொருள் : தெளிந்த இந்தச் சிவநீரைக் கொண்டால் ஓராண்டு சாதனத்தில் ஒளியைக் காணலாம். கெடுதல் இல்லாதது இது காற்றுடன் கலந்து மேலேறும். எட்டு ஆண்டுகளில் மனம் கீழ்நோக்குதலைத் தவிர்த்து மேலே நிற்கும். மகிழ்ச்சியை விளைவித்துக் கொண்டிருக்கும். உடம்பு பொன்போன்று பிரகாசிக்கும். சிவநீர் - அமுரி, அமுதநீர் வளியுறு எட்டின் - பிராணவாயு.

847. நூறும் இளகும் நுகரும் சிவத்தினீர்
மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்கள்
தேறில் இதனைத் தெளியுச்சி கப்பிடின்
மாறும் இதற்கு மறுமயி ராமே.

பொருள் : அவ்வாறு அருந்தும் சிவநீரானது கீழேயுள்ள குறியை நெருக்குவதாலும் பிழிதாலாலும் அதன் தன்னை கெட்டு மேலேறும் உயிரை உடம்பில் நீடிக்கச் செய்ய இதைவிட மேலான மருந்து வேறில்லை. மக்கள் இச் சூட்சுமத்தை உணர்ந்து தெளிந்து சிரசில் பாயச் செய்து கொண்டால் நரைத்த உரோமம் கறுப்பாகும் மாற்றத்தைக் காணலாம். நூறு மிளகு அளவு எனக்கொண்டு ஒருநளைக்கு ஒரு மிளகு விழுக்காடு நூறு நாளைக்கு உண்ணுதல் வேண்டும் எனவும் கூறுவர்.

848. கரையரு கேநின்ற கானல் உவரி
வரைவரை என்பர் மதியிலா மாந்தர்
நுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்கு
நரைதிரை மாறும் நமனும்அங்கு இல்லையே.

பொருள் : அறிவில்லாத மக்கள் சிறுநீர்க் குழாய் அருகில் உள்ள சுக்கிலத்தைக் கழிக்க வேண்டும் என்பர். சத்தற்ற முதல் நிலையையும் முதிர்ந்த நிலையையும் அகற்றி அருந்த வல்லார்க்கு உரோமம் நரைத்தலும் தோல் சுருங்குதலும் மாறும். அவ்வாறு நீரை உடம்பில் அமைக்க வல்லார்க்கு எமபயம் இல்லையாம். (கானல் உவரி - உப்பங்கழி நீர். வரைதல் - நீக்குதல்)

849. அளக நன்னுத லாய்ஓர் அதிசயம்
களவு காயம் கலந்த இந்நீரில்
மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில்
இளகும் மேனி இருளும் கபாலமே.

பொருள் : அழகிய கூந்தலையுடைய பெண்ணே ! ஒரு வியப்பு. உடம்பில் மறைமுகமாகச் சென்று (உணர்வாகிய) இந்நீர் சிரசை அடையுங்காலத்து, மிளகு, நெல்லிப் பருப்பு, கஸ்தூரிமஞ்சள், வேப்பம் பருப்பு ஆகியவற்றை அரைத்துத் தலையில் தேய்த்து முழுகி வருவீராயின் உடம்பு மேன்மையாவதோடு உரோமம் கருமையாகும். இத்துடன் கடுக்காய்த் தூளும் சேர்த்தால்பஞ்ச கல்பம் என்பர்.

850. வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும்
நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான்
ஆதி மருந்தென்று அறிவார் அகலிடம்
சேதி மருந்திது சொல்லஒண் ணாதே.

பொருள் : வீரியத்தால் உண்டானபடியால் வீர மருந்தென்றும், ஆகாய வெளியில் சோதியாக அமைவதால் தேவர்கள் மருந்தென்றும் பெண்ணால் அடையப்படுவதால் நாரிமருந்தென்றும் என் குருநாதன் அருளிச் செய்தான். இதனைத் தொன்மையான மருந்தென்று யோகியர் அறிவர். இது விரிந்த சோதி மயமானது. இதனைச் சாமானியருக்குச் சொல்லலாகாது.

21. சந்திர யோகம்

(சந்திர யோகம் என்பது சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம் என்றபடி புறத்தே சந்திரன் சூரியன் அக்கினி முதலிய ஒளிப்பொருள்கள் இருப்பன போன்று அகத்தேயும் உண்டு.)

851. எய்தும் மதிக்கலை சூக்கத்தில் ஏறியே
எய்துவ தூலம் இருவகைப் பக்கத்துள்
எய்தும் கலைபோல ஏறி இறங்குமாம்
துய்யது சூக்கத்துத் தூலத்த காயமே.

பொருள் : சந்திர கலை தூல உடலில் இருந்து சூக்கும உடலுக்கு ஏறியும் சூக்கும உடலில் இருந்து தூல உடலுக்கு இறங்கியும் வரும். இது புறத்திலுள்ள சந்திரன் ஒரு பட்சத்தில் வளர்வதும் மற்றொரு பட்சத்தில் தேய்வதும் போல் அமையும் சந்திர கலை விளக்கத்தால் சூக்கும உடல் தூய்மை பெறுவதற்கேற்பத் தூல உடலும் தூய்மை பெறும் (பக்கம் - பட்சம்)

852. ஆகின்ற சந்திரன் சூரியன் அங்கியுள்
ஆகின்ற ஈரெட்டோடு ஆறிரண்டு ஈரைந்துள்
ஏகின்ற அக்கலை எல்லாம் இடைவழி
ஆகின்ற யோகி அறிந்த அறிவே.

பொருள் : உடம்பினுள் ஆகின்ற சந்திரன் சூரியன் அக்கினியாகிய மூன்றுக்கும் முறையே பதினாறு, பன்னிரண்டு, பத்தாக இயங்குகின்ற கலைகள் எல்லாம் நடு நாடியான சுழுமுனை வழி இயங்கச் செய்கின்ற யோகி அறிந்த அறிவேயாகும். சந்திரகலை 16, சூரியகலை, 12 அக்கினிகலை 10.

853. ஆறாத தாங்கலை ஆதித்தன் சந்திரன்
நாறா நலங்கினார் ஞாலம் கவர்கொளப்
பேறாங் கலைமுற்றும் பெருங்கால் ஈரெட்டு
மாறாக் கதிர்கொள்ளும் மற்றங்கி கூடவே.

பொருள் : பன்னிரண்டு கலைகளையுடைய சூரியனைச் சந்திரனோடு சேர்க்கப் பயின்றவர் உலகம் உவக்கும் பேற்றினை எய்துவர். பெருங்கால் என்ற சந்திரகலை பதினாறும் அக்கினி கலை சேரவே சூரியகலை அடங்கப் பெற்று விளங்கும்.

854. பத்தும் இரண்டும் பகலோன் உயர்கலை
பத்தினொடு ஆறும் உயர்கலை பான்மதி
ஒத்தநல் அங்கியது எட்டெட்டு உயர்கலை
அத்திறன் நின்றமை ஆய்ந்துகொள் வீரே.

பொருள் : சூரியகலை உயர்ந்து செல்லும் அளவு பன்னிரண்டு ஆகும். வெண்மதிக்கலை உயர்ந்த அளவு பதினாறாம். சூரியகலையும் சந்திரகலையும் பொருந்திய அக்கினி கலையின் வியாபகம் அறுபத்து நான்காகும். அவ்வாறாகக் கலைகள் நின்றமையை அறிந்து கொள்ளுங்கள். இங்குக் கூறியவை உயர் கலைகள் சிரசுக்குமேல் எல்லாக் கலைகளும் கருவாக அறுபத்திநான்கு கலைகளாக உள்ளன.

855. எட்எட்டு அனலின் கலையாகும் ஈராறுள்
சுட்டப் படும்கதி ரோனுக்கு சூழ்கலை
கட்டப் படும்ஈர் எட்டாம் மதிக்கலை
ஒட்டப் படாஇவை ஒன்றோடுஒன்று ஆகவே.

பொருள் : அக்கினியில் கலைகள் அறுபத்து நான்கும், சூரியனுக்கும் சூழ்ந்துள்ள கலைகள் பன்னிரண்டு என்று சுட்டி அறியப்பெறும். விந்து செயத்தால் அமையும் சந்திரகலை பதினாறாகும். இக்கலைகள் எல்லாம் ஒன்றையொன்று பொருந்தியிரா.

856. எட்டெட்டும் ஈராறும் ஈரெட்டும் தீக்கதிர்
சுட்டிட்ட சோமனில் தோன்றும் கலையென்ப
கட்டப் படும்தார கைகதிர் நாலுள
கட்டிட்ட தொண்ணூற்றொடு ஆறும் கலாதியே.

பொருள் : அறுபத்தி நான்கும், பன்னிரண்டும் பதினாறும் முறையே அக்கினி, சூரியன் விந்து நீக்கமற்ற சந்திரன் ஆகியவற்றின் கலைகள் என்பர். இவை கட்டப்படும் மூலாதாரத்திலுள்ள நட்சத்திரத்துக்கு நான்கு கலைகள் உள்ளன. இவ்வாறு கட்டப்பட்ட தொண்ணூற்றாறும் கலைகளாகும். சுட்டிட்ட சோமன் என்பதற்கு அமாவசையில் திங்களின் கதிர் ஒடுங்கியிருப்பதால் சுட்ட சோமன் எனக்கூறப்படும் என்பது ஒரு சாரார் கொள்கை.

857. எல்லாக் கலையும் இடைபிங் கலைநடுச்
சொல்லா நடுநாடி யூடே தொடர்மூலம்
செல்லா எழுப்பிச் சிரத்துடன் சேர்தலால்
நல்லோர் திருவடி நண்ணிநிற் பாரே.

பொருள் : சோம சூரிய அக்கினியாகிய எல்லாக்கலைகளும் இடைபிங்கலை நடு நாடியின் வழியே தொடர்புடையன. அவற்றின் இயல்பான கீழ் நோக்குதலைத் தடுத்துச் சிரசின்மேல் சகஸ்ரதளத்தில் சேரும்படி செய்தலால், நல்ல யோகியர் சிவத்தியானத்தில் பொருந்தியிருப்பார். (இடநாடி - இடகலை. வலநாடி - பிங்கலை; நடுநாடி சுழுமுனை)

858. அங்கியில் சின்னக் கதிர்இரண்டு ஆட்டத்துத்
தங்கிய தாரகை யாகும் சசிபானு
வங்கிய தாரகை யாகும் பரையொளி
தங்கு நவசக்ரம் ஆகும் தரணிக்கே.

பொருள் : கீழேயுள்ள அக்கினியில் குறைவினையுடைய இடைபிங்கலைகளின் அசைவில், பொருந்தி ஒளியாகும் சந்திரசூரியர்கள் நாதத்தைச் செய்கின்ற பிரணவமாக மேலே சென்றபோது விளங்கும் அவ்வொளியே, பரையொளி விளங்கும் மேன்மையான சக்கரமாகப் பூமியில் விளங்கும்.

859. தரணி சலங்கனல் கால்தக்க லானம்
அரணிய பானு அருந்திங்கள் அங்கி
முரணிய தாரகை முன்னிய ஒன்பான்
பிரணவ மாகும் பெருநெறி தானே.

பொருள் : நிலம், நீர், தீ, காற்று, சிறந்த ஆகாயம், அழகிய சூரியன், அருமையான சந்திரன், அக்கினி மாறுபாட்டைச் செய்யும் சீவ ஒளியாகிய ஒன்பதும் பிரணவமாகிய பெரு நெறியாகும் அங்கி (சிவவேள்வித்தீ)

860. தாரகை மின்னும் சசிதேயும் பக்கத்துத்
தாரகை மின்னா சசிவனர் பக்கத்துத்
தாரகை பூவிற் சகலத்து யோனிகள்
தாரகை தாரகை தானாம் சொரூபமே.

பொருள் : சந்திரன் தேய்பிறையை அனுசரித்துக் கீழ்முகமான போது மூலாதாரத்திலுள்ள ஒளி பிரகாசம் அடையும் சந்திரன் வளர்பிறையை அனுசரித்து மேல்முகமான போது மூலாதாரத்திலுள்ள ஒளி பிரகாசம் இராது. மூலாதாரத்திலுள்ள ஒளியில் எல்லா யோனிகளும் உள்ளன. மூலாதாரச் சக்கரத்துக்குக் காரணமான அகவொளியே சகல சீவர்களின் சொரூபமாகும். தாரகைகளே உலகில் சகல உற்பத்திக்கும் காரணம்.

861. முற்பதின் ஐஞ்சின் முளைத்துப் பொருத்திடும்
பிற்பதின் ஐஞ்சில் பெருத்துச் சிறுத்திடும்
அப்பதின் ஐஞ்சும் அறியவல் லார்கட்குச்
செப்பரி யான்கழல் சேர்தலும் ஆமே.

பொருள் : சந்திரனது கிரணங்கள் முதல் பதினைந்து நாள்களில் சிறிது சிறிதாக வளர்ந்து பெருத்துப் பூரணத்தை அடையும் பிற் பதில் ஐந்தில் சிறிது சிறிதாகத் தேய்ந்து பருத்த நிலையினின்றும் குறைந்து விடும். அகரச்சுட்டால் உணர்த்தும் வளர்பிறையை அறிய வல்லவர்கட்கு அளவிட்டுக் கூற முடியாத பெருமை யுடைய சிவனது திருவடியை அடைதலுமாகும்.

862. அங்கி எழுப்பி அருங்கதிர் ஊட்டத்துத்
தங்கும் சசியால் தாமம்ஐந்து ஐந்தாக்கிப்
பொங்கிய தாரகை யாம்புலன் போக்கறத்
திங்கள் கதிர்அங்கி சேர்கின்ற யோகமே.

பொருள் : மூலத்தீயை எழுப்பி அருமையான சூரிய மண்டலப் பெருக்கத்தில் விளங்கும் சந்திர மண்டலத்தால் அகர, உகர, மகர, விந்து நாதமாகிய ஐந்தும் விரிந்த பிரயையுடையதாய் ஒளியான பிரணவம் விளங்கும். அதனால் ஐம்புலவழி போகாது சந்திரன் சூரியன் அக்கினியாகிய மூன்றும் சேர்கின்ற போதும் அமையும்.

863. ஒன்றிய ஈரெண் கலையும் உடலுற
நின்றது கண்டும் நினைக்கிலர் நீதர்கள்
கன்றிய காலன் கருத்துழி வைத்தபின்
சென்றதில் வீழ்வர் திகைப்பொழி வாரே.

பொருள் : ஒன்றுபட்ட சந்திர கலைகள் பதினாறும் உடம்பின்கண் பொருந்த நிற்கின்ற ஒளிநிலை கண்டும் தாழ்வானவர்கள் உண்மையை நினைக்கின்றிலர். அதனால் அவர்கள் சினங்கொள்ளும் எமன், உடம்பினின்றும் உயிரைப் பிரிக்க எண்ணம் வைத்தபின் அவ் எண்ணப்படி சென்று இறப்பு என்னும் சுழியில் வீழ்வர். இத்தடுமாற்றமாகிய மயக்கத்தினின்றும் விடுபடார். நீதர்கள் - நீசர்கள்.

864. அங்கி மதிகூட லாகும் கதிரொளி
அங்கி கதிர்கூட ஆகும் மதியொளி
அங்கி சசிகதிர் கூடஅத் தாரகை
தங்கி அதுவே சகலமும் ஆமே.

பொருள் : ஆண் குறியிலுள்ள சந்திரன் மூலாக்கினியோடு பிரமரந்திரம் நோக்கிச் சென்றால் சூரிய ஒளி கிட்டம், மூலாதாரத்திலுள்ள அக்கினியையும் மணிபூரகத்திலுள்ள சூரியனையும் ஒன்றாகச் சேர்ப்பதில் சந்திரன் ஒளி அமையும். இவ்விரண்டு ஒளியும் பிரமரந்திரத்தில் ஒன்றானால் சோம சூரியாக்கினி கூடிய பிரணவம் அமையும். அந்நிலையே சகலமும் ஆம்.

865. ஈராறு பெண்கலை எண்ணிரண்டு ஆண்கலை
பேராற் புக்குப் பிடித்துக் கொடுவந்து
நேராகத் தோன்றும் நெருப்புற வேபெய்யில்
ஆராத ஆனந்தம் ஆனந்தம் ஆனதே,

பொருள் : பன்னிரண்டு கலைகளையுடைய சூரியன் பெண், பதினாறு கலைகளையுடைய சந்திரன் ஆண், இவ்விரண்டும் புறத்தே செல்லாமல் பிடித்து நிறுத்தி, முகத்துக்கு முன்தோன்றும் ஒளியில் கலப்பித்தால் தெவிட்டாத திருவடி இன்பம் நிலைத்த இன்பமாக விளங்கும். (சூரியன் ஆண், சந்திரன் பெண் என்று மற்றொரு சாரார் பொருள் கொள்கின்றனர்.)

866. காணும் பரிதியின் காலை இடத்திட்டு
மாணும் மதியதன் காலை வலத்திட்டு
பேணியே இவ்வாறு பிழையாமல் செய்விரேல்
ஆணி கலங்காதுஅவ் ஆயிரத்து ஆண்டே.

பொருள் : மாட்சிமையுடைய சந்திரனாகிய இடக்கண் பார்வையைச் சூரியனாகிய வலக்கண் பார்வையோடு குரு காட்டிய நெறியில் பொருந்தியும், தோன்றுகின்ற சூரியனாகிய வலக்கண் பார்வையை இடக்கண் பார்வையோடு பொருந்தியும் இம்முறையில் நின்று வழுவாமல் பாதுகாத்து வந்தால் ஆயிரம் ஆண்டு இவ்உடம்பாகிய ஆணி கெடாது நிலைபெறும். (மூக்கின் வழி இயங்கும் மூச்சுக்காற்றைக் குறிப்பதாக ஒரு சாரார் பொருள் கொள்கின்றனர்.)

867. பாலிக்கும் நெஞ்சம் பறையோசை ஒன்பதில்
ஆலிக்கும் அங்கே அமரர் பராபரன்
மேலைக்கு முன்னே விளக்கொளி யாய்நிற்கும்
காலைக்குச் சங்கு கதிரவன் தானே.

பொருள் : சீவகலை ஒன்பதில் சகஸ்ரதளத்துக்குச் சென்ற போது சிரசில் நாதம் முழங்கும். அந்நாதத்தில் தேவாதி தேவனான சிவபெருமான் களிப்புடன் பொருந்துவான். இந்நிலைக்கு முன்னே சூரிய சந்திரர்கள் வலப்புறம் இடப்புறமும் சிறு தீப ஒளிபோல் விளங்குவர். சூரியன் புறப்படுமுன் சங்கோசை மக்களை எழுப்புவது போல் ஞானசூரியன் எழுமுன் நாதம் உதித்து முன்னேவிளங்கும் (ஒன்பதில் - ஒன்பது துவாரங்களையுடைய தேகத்தில் என்று பொருள் கொண்டு அத்துவாரங்களில் வழியாகத் தோன்றும் ஓசைகள் என்று சிலர் கூறுவர்.)

868. கதிரவன் சந்திரன் காலம் அளக்கும்
பொதிரவன் உள்ளே பொதிமழை நிற்கும்
அதிரவன் அண்டப் புறஞ்சென்று அடர்ப்ப
எதிரவன் ஈசன் இடமது தானே.

பொருள் : சூரிய சந்திர இயக்கத்தில் காலம் அளவிடப் படும். இருவரும் ஒன்று சேர்ந்த பிரணவ நிலையில் சிவசக்தி விளங்குவதால் அமுதும் பெருகும் அருள் நிலையுள்ளது நாத சம்மியம் செய்பவன் நாதத்தோடு கூடி அண்டத்தின் எல்லையாகிய துவாத சாந்தத்துக்குச் சென்று நெருங்க அவ்விடத்தில் ஈசனும் நேராக எதிர்ப்பட்டு விளங்குவான்.

869. உந்திக் கமலத்து உதித்தெழும் சோதியை
அந்திக்கு மந்திரம் ஆரும் அறிகிலார்
அந்திக்கு மந்திரம் ஆரும் அறிந்தபின்
தந்தைக்கு முன்னே மகன்பிறந்தானே.

பொருள் : மணிபூரகத்தில் வெளிப்படுகின்ற சேதியை, அடைந்து பிரணவத்தின் உண்மையை யாரும் அறியவில்லை . யாவராயினும் அடைந்து பிரணவத்தை அறிந்தபின் அவர்க்குச் சிவ ஒளிக்கு முன்னே சீவ ஒளி பிரகாசித்து நிற்கும். ஆறு இடங்களுக்கும் உரியவை முறையே 1 ஓம், 2. ஓம் நமச்சிவய; 3. நமசிவய; 4. சிவாயநம; 5. சிவயசிவ; 6. சிவசிவ என்பவையாகும்.

870. ஊதியம் ஏதும் அறியார் உரைப்பினும்
ஓதியும் ஏதும் அறியாத ஊமர்கள்
ஆதியும் அந்தமும் அந்திக்க வல்லீரேல்
வேதியன் அங்கே வெளிப்படுந் தானே.

பொருள் : உண்மைப் பயன் ஒன்றும் அறியமாட்டார். அவ்வுண்மையைப் பிறர் எடுத்துச் சொன்னாலும் தாமே படித்தாலும் உணராத அறிவிலிகள், சந்திரகலையின் ஆதியையும் முடிவையும் சேர்க்கத் திறம் பெற்றீர்ஆகில் இரச குளிகை போன்று மாற்றத்தைச் செய்யும் சிவமும் அங்கே வெளிப்பட்டு விடும். (ஆதியும் அந்தமும் - சுவாசம் உதித்தலும் ஒடுங்குதலும்)

871. பாம்பு மதியைத் தினலுறும் பாம்பது
தீங்கு கதிரையும் சோதித்து அனலுறும்
பாம்பு மதியும் பகைதீர்த்து உடன்கொளீஇ
நீங்கல கொடானே நெடுந்தகை யானே.

பொருள் : குண்டலினியாகிய பாம்பு சுவாதிட்டானத்தில் பொருந்திச் சந்திர கலை வளர வொட்டாது விந்துநீக்கம் செய்து கொண்டுள்ளது. அக்குண்டலினியில் ஆற்றல் தீமை தரும் மணி பூரகத்திலுள்ள சூரியனையும் அசைத்து வெப்பத்தினைச் செய்து கொண்டிருக்கும். குண்டலினியையும் சந்திரனையும் பகைமைத் தன்மை நீங்கும்படி சிரசின்மேல் உடனாகக் கொண்டால், பெருங்கருணையாளனான சிவபெருமான் சாதகனை விட்டு நீங்கமாட்டான்.

872. அயின்றது வீழ்வள வும்துயில் இன்றிப்
பயின்ற சகிவீழ் பொழுதில் துயின்று
நயந்தரு பூரணை உள்ள நடத்தி
வியந்தரு பூரணை மேவும் சசியே.

பொருள் : குண்டலினியோடு சென்ற சந்திரன் சிரசின் மேல்நிற்கும் அளவும் உறங்காது அதனைக் கவனித்தும் அப்படியாக நின்ற சந்திரன் கீழே இறங்கிய போதும் உறங்கியும், நன்மையைத் தரும் ஒளியை உள்ளத்தில் நிலைப்பித்தால், விரிவினைச் செய்யும் சந்திரன் பூரணமாகச் சாதகனிடம் விளங்கும் பூரணை - நடுநாடி.

873. சசிஉதிக் கும்அள வும்துயி லின்றிச்
சசிஉதித் தானேல் தனதுஊன் அருந்திச்
சசிசரிக் கின்ற வும்துயி லாமல்
சசிசரிப் பின்கட்டன் கண்துயில் கொண்டதே.

பொருள் : சந்திரன் சிரசில் உதிக்குமளவும் காலை எழுந்ததும் தியானம் செய்து சந்திரன் உதித்த பிறகு தன் உணவை உட்கொண்டு சந்திரன் சிரசில் சஞ்சாரம் செய்யும் வரை துயிலாதிருந்து, சந்திரன் சிரசை விட்டுக் கீழ் இறங்கியதும் இது காறும் கட்டி நிறுத்தினவன் உறங்கலாம் (கட்டன் ஒளியைக் கட்டி நிறுத்தினவன்.)

874. ஊழி பிரியாத இருக்கின்ற யோகிகள்
நாழிகை யாக நமனை அளப்பார்கள்
ஊழி முதலாய் உயர்வார் உலகினில்
தாழவல் வார்இச் சசிவன்ன ராமே.

பொருள் : ஊழிக்காலம் உயிர் பிரியாதிருக்கின்றயோகியர் நாழி கையைக் கருவியாகக் கொண்டு எமனது வாழ்நாளை அளந்து விடுவார்கள். இவர்கள் உலகில் பஞ்ச இருத்தியம் செய்யும் சதாசிவமூர்த்தியாவர். உலகில் ஆணவமற்றுச் சித்தை முதலாகக் கொண்டு கண்ணொளி பெற்றவராய் விளங்குவர். பஞ்சகிருத்தியம் - ஆக்கல், அளித்தல், அழித்தல், மறைத்தல் அருளல் என்பனவாம்.

875. தண்மதி பானுச்சிச் சரிபூமி யேசென்று
மண்மதி காலங்கள் மூன்றும் வழிகண்டு
வெண்மதி தோன்றிய நாளில் விளைந்தபின்
தண்மதி வீழ்வுஅள விற்குஅணம் இன்றே.

பொருள் : குளிர்ச்சி பொருந்திய சந்திரன் உச்சியாகியவழியில் சென்று உலகினரால் மதிக்கப் பெற்ற இறப்பு நிகழ்வு எதிர்வு ஆகிய முக் காலங்களையும் அவற்றின் காரணங்களையும் உணர்ந்து பூரண நிலா மண்டலத்தைக் கண்டபின் அதிலிருந்து விளைந்து விளங்கும் அமுதத்துக்குக் குறைவில்லை.

876. வளர்க்கின்ற ஆதித்தன் தன்கலை ஆறும்
தளர்கின்ற சந்திரன் தன்கலை ஆறும்
மலர்ந்தெழு பன்னிரண்டு அங்குலம் ஓடி
அலர்ந்து விழுந்தமை யார்அறி வாரே.

பொருள் : மேஷம் முதல் கன்னியா ராசிவரையுள்ள ஆறுகலைகள் வளர்வதிலும், உடலாட்சிக்கான அகரம், உகரம், மகரம், விந்து, அர்த்தசந்திரன், நிரோதினியாகிய ஆறுகலைகள் குறைவதிலும், சுவாசம் நான்கு விரற்கடை கழிவுறாமல் பன்னிரண்டு விரற்கடை விரிந்தோடி விரிந்து நிறைந்தமை யாரே அறியவல்லார் ? சூரியன் கலைகள், மேஷம் ரிஷபம், மிதுனம் கடகம், சிம்மம், கன்னி என்பன.

877. ஆம்உயிர்த் தேய்மதி நாளே யெனல்விந்து
போம்வழி எங்கும் போகாது யோகிக்குக்
காமுறவு இன்மையின் கட்டுண்ணும் மூலத்தில்
ஓமதி யத்துள்விட் டுரையுணர் வாலே.

பொருள் : ஆகின்ற உயிர்க்குக் குறைகின்ற மதி நாளாவது விந்து கழிகின்ற வழியாலாம். யோகியர்க்குக் காமத் தொடர்பு இல்லை. யாதலின் விந்து நழுவாது. மூலாதாரத்தில் கட்டுப்பட்டு விடும். ஆகவே நீங்கள் பிரணவம் விளங்கும் மதிமண்டலத்தில் உணர்வினைச் செலுத்தி ஏத்துமின்.

878. வேறுறச் செங்கதிர் மெய்க்கலை ஆறொடும்
சூறுற நான்கும் தொடர்ந்துற வேநிற்கும்
ஈறில்கி னன்கலை ஈர்ஐந்தொ டேமதித்து
ஆறுட் கலையுள் அகல்உவா வாமே.

பொருள் : சிரசில் வலப்பாகத்தில் மேஷ ராசி முதல் கன்னியாராசி வரை விளங்கும் சூரியன்கலை ஆறுடன் கீழுள்ள மூலாதாரத்திலுள்ள நான்கு கலைகளும் கலந்தே நிற்கும் அறிவுப் பொருளான் சூரியன். அக்கினி கலைபத்துடன் சந்திரன் விளக்கும் துலாம் முதல் மீனராசி வரையில் அறிவு பதிந்த போது சந்திரன் பௌர்ணமி நாளாக விளங்கும். (சூறு - கீழ்ப்புறும்; இனன் - சூரியன்)

879. உணர்வித்து சோணி உறவினன் வீசும்
புணர்வித்து வீசும் கதிரிற் குறையில்
உணர்வும் உடம்பும் உவையொக்க நிற்கில்
உணர்வும் உடம்பும் ஒருகால் விடாவே.

பொருள் : உணர்வினாலான விந்து சுரோணிதத்துடன் உறவு கொள்ளின் சூரியன் மிக்க ஒளி வீசும். ஆனால் சூரியனது ஆற்றல் குறையின் புணர்ச்சியாலான விந்து ஒளியாகச் சிரசின்மேல் வீசும் ஒளிமயமான உணர்வும் (சூக்கும உடம்பும்) தூலமான உம்பும் ஒத்து நிற்கில் ஒளிமயமான உணர்வும் (சூக்கும உடம்பும்) தூல உடம்பும் யோகிக்கு ஒரு காலத்தும் நீங்கா.

880. விடாத மனம்பவ னத்தொடு மேவி
நடாவு சிவசங்கின் நாதம் கொளுவிக்
கடாவிடா ஐம்புலன் கட்டுண்ணும் வீடு
படாதன இன்பம் பருகார் அமுதமே.

பொருள் : புறம் போகாத மனம் காற்றோடு இடப்புற மூளையில் பொருந்தி, யாவற்றையும் நடத்துகின்ற சிவசங்கின் தொனியைக் கேட்டு, ஐம்புல ஆசையில் செல்லாது அடங்கி நிற்கும். அவ்வாறு பிரணவத்தில் கட்டப்படாதன வாயின் சாதகர்இன்பமாகிய அமுதத்தைப் பருகமாட்டார்.

881. அமுதப் புனல்வரும் ஆற்றங் கரைமேல்
குமிழிக் குள்சுடர் ஐந்தையும் கூட்டிச்
சமையத்தண்டு ஓட்டித் தரிக்கவல் லார்க்கு
நமம்இல்லை நற்கலை நாள்இல்லை தானே.

பொருள் : சந்திர மண்டலப் பிரவாகம் பிடரிக்கண்ணிலிருந்து பாய்ந்து விளங்கும் சகஸ்ரதளத்தில் அதன் கரணிகை குமிழ் போன்று உயர்ந்து நிற்பதில் சிவம், சத்தி, நாதம், விந்து, சீவன் ஆகிய ஐந்து சுடர்களையும் ஒன்றுபடுத்தி, மூலாக்கினியை வீணாத்தண்டில் செலுத்திக் காண்பவர்க்கு இறப்பு இல்லாமையோடு ஒளிபெருகும் காலம் என்று ஒன்று இல்லையாம். ஆறு - ஒளிப் பிரவாகம்.

882. உண்ணீர் அமுதம் உறும்ஊறலைத் திறந்து
தெண்ணீர் இணையடித் தாமரைக் கேசெலத்
தெண்ணீர்ச் சமாதி அமர்ந்துதீ ராநலம்
கண்ணாற் றொடேசென்று கால்வழி மாறுமே.

பொருள் : அனுபவிக்கத் தகுந்த அமுதம் ஊறும் ஊறலைத் திறந்து பிரபஞ்சக் கலப்பால் மாறுதல் இல்லாத ஒப்பற்ற சூரியசந்திரர்கள் பொருந்திய சகஸ்ரளத்தை அடைய தெளிவான நீரினுள் இருப்பது போன்ற உணர்வுடன் சமாதியில் நிலைத்து, முடிவில்லாத ஆனந்தத்தை விளைவிக்கும் கண்ணில் விளங்கும் சிவம் உணர்த்தும் வழியில் நின்று பிராண இயக்கத்தை மாற்றுங்கள்.

883. மாறு மதியும் மதித்திரும் மாறின்றித்
தாறு படாமல் தண்டோடே தலைப்படில்
ஊறு படாதுஉடல் வேண்டும் உபாயமும்
பாறு படாஇன்பம் பார்மிசைப் பொங்குமே.

பொருள் : கீழ்நோக்குதல் இல்லாத சந்திரகலையை மாறுபடாமல் போற்றியிருங்கள். பிரிவுபடாமல் வீணாத் தண்டினூடே சகஸ்ரதளத்தை அடைந்தால், உடம்பு அழியாது வேண்டிய யோக உபாயங்களும் சிதறாது கிட்டும். இன்பம் உலகில் எங்கும் பெருகும்.

மூன்றாம் தந்திரம் முற்றிற்று.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் Empty திருமந்திரம் | நான்காம் தந்திரம்

Post by இறையன் Mon Mar 26, 2012 3:17 pm

(சித்த ஆகமம்)

1. அசபை

(அசபை என்பது செபிக்கப் படாமலே பிராணனோடு சேர்ந்து இயங்கும் மந்திரம் என்றபடி. இதுவே மந்திரம் என்றும், பிரணவம் என்றும் கூறப் பெறும். மூச்சுக் காற்று ஹ என்ற ஒலியுடன் வெளிப்படுகிறது ஸ என்று ஒலியுடன் உள் நுழைகிறது. இம் மந்திரத்கை எல்லா உயிர்களும் செபிக்கின்றன.)

884. போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகல் ஞானத்தைத்
தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி
சாற்றுகின் றேன்அறை யோசிவ யோகத்தை
ஏற்றுகின் றேன்நம் பிரான்ஓர் எழுத்தே.

பொருள் : புகழ்ந்து சொல்லப் படுகின்ற ஞானத்தை இடைவிடாது நினைத்துக் கொண்டிருக்கிறேன். மனத்தில் உலக நாயகனாகிய சிவன் திருவடியைத் தெளிகின்றேன். சேவடி யடையும் சிவயோக நெறியை உங்களுக்குச் சொல்லுகின்றேன். எம் பெருமானாகிய சிவபரம்பொருளின் ஓரெழுத்து மந்திரத்தை ஓதுகின்றேன். (ஓரெழுத்து - ஓம் என்பது. இதுவே அசபா மந்திரம் பிரணவத்தை எண்ணுவதே தவிர ஜெபிப்பது இல்லையாதலின் அசபை என்க.)

885. ஓரெழுத் தாலே உலகெங்கும் தானாகி
ஈரெழுத் தாலே இசைந்து அங்கு இருவராய்
மூவெழுத் தாலே முளைக்கின்ற சோதியை
மாவெழுத் தாலே மயக்கமே உற்றதே.

பொருள் : அகரமாகிய ஓரெழுத்தால் உலகமெல்லாம் பரவி அது அதுவாய் விளங்கி, உகரம் என்ற இரண்டாவது பாதத்தால் உடம்பினுள் பொருந்திச் சிவசத்தியாய் மூன்றாவது பாதமாகிய மகரத்தால் தோன்றுகின்ற ஒளிப்பொருளை மாயையால் மயக்கத்தைப் பொருந்தும்படி செய்தது. (அகரம் - சாக்கிரம், உகரம் - சொப்பனம், மகரம் - சுழுத்தி. ஓம் - அ+உ+ம்.)

886. தேவர் உறைகின்ற சிற்றம் பலம்என்றும்
தேவர் உறைகின்ற சிதம்பரம் என்றும்
தேவர் உறைகின்ற திருஅம் பலமென்றும்
தேவர் உறைகின்ற தென்பொது வாமே.

பொருள் : தேவர்க்கும் மூவர்க்கும் மற்று யாவர்க்கும் பெருமானாகிய முழுமுதற் சிவன் என்றும் உறைகின்ற திருவிடம் சிற்றம்பலம் என்ப. இதனையே சிதம்பரம் எனவும் கூறுவர். இதனையே திருஅம்பலம் எனவும் கூறுவர். இவை எல்லாம் அழகிய அம்பலம் என்னும் தென்பொதுவேயாகும்.

887. ஆமே பொன் னம்பலம் அற்புதம் ஆனந்தம்
ஆமே திருக்கூத்து அனவரத தாண்டவம்
ஆமே பிரளயம் ஆகும்அத் தாண்டவம்
ஆமேசங் காரத்து அருந்தான் டவங்களே.

பொருள் : பொன்னம்பலத்தில் என்றும் இடையறாது நிகழும் திருக்கூத்து ஐவகைக் குறிப்பாகும். தாண்டவம் சீவர்களை முன்னேற்றப் புரியும் அருட் செயலாகும். அவை 1. அற்புதக் கூத்து - சிருஷ்டிக்கின்ற நடனம், 2. ஆனந்தக் கூத்து - இன்பம் தருகின்ற நடனம், 3. அனவரதக் கூத்து - சுவாச இயக்க நடனம், 4. ஊழிக் கூத்து - தூக்கத்தைச் செய்யும் நடனம், 5. பேரொடுக்கக் கூத்து - தன்பால் அணைத்துக் கொள்வதற்குரிய நடனம். தாண்டவம் - பிறப்பு அறச் செய்கின்ற கூத்து.

888. தாண்டவ மான தனியெழுத்து ஓரெழுத்து
தாண்டவ மானது அனுக்கிரகத் தொழில்
தாண்டவக் கூத்துத் தனிநின்ற தற்பரம்
தாண்டவக் கூத்துத் தமனியம் தானே.

பொருள் : தாண்டவமான ஒப்பற்ற எழுத்து பிரணவம், அத்தாண்டவம் அனுக்கிரத்தையே முதல் தொழிலாகக் கொண்டு இயங்குவது. அஃது எல்லாவற்றிலும் மேலாக நின்ற தற்பர சிவநிலையாகும். அக் கூத்துப் பொன்னம்பலத்துள் நிகழ்வதாகும்.

889. தானே பரஞ்சுடர் தத்துவ மாய்நிற்கும்
தானே அகார உகாரம தாய்நிற்கும்
தானே பரஞ்சுடர் தத்துவக் கூத்துக்குத்
தானே தனக்குத் தராதலம் தானே.

பொருள் : சிவபரம் பொருளாகிய பரஞ்சோதி தத்துவ ரூபமாக விளக்கப் பட்டவைகளில் கலந்துள்ளது. அதுவே பிரணவத்தின் உறுப்புகளான அகர உகர கலைகளாயும் உள்ளது. தத்துவங்களை இயக்குவதற்குத் தானே ஒளி தருவது. அது வேறு ஆதாரமின்றித் தன்னையே தனக்கு ஆதாரமாயும் கொண்டுள்ளது. (தராதலம் - பூமி ஆதாரம் என்பது. தத்துவம் - மெய்ப்பொருள்.)

890. தாரதல மூலைக்குத் தற்பர மாபரன்
தராதலம் வெப்பு நமவா சியவாம்
தராதலம் சொல்லில் தான்வா சியவாகும்
தராதல யோகம் தயாவாசி யாமே.

பொருள் : ஆதாரமாகிய மூலாதாரத்தில் தற்பரமாக எழுந்தருளியுள்ள சிவம் அக்கினி மண்டலத்தில் நமசிவாய என நிற்கும். மேல் ஆதாரமாக விளங்கும் ஒளி மண்டலத்தைச் சொல்லப் போனால் நவாசிய என்றமையும். அதற்கு மேல் விளங்கும் சகஸ்ரதள ஆதாரத்தில் யவாசியாம்.

891. ஆமே சிவங்கள் அகார உகாரங்கள்
ஆமே பரங்கள் அறியா இடம்என்ப
ஆமே திருக்கூத்து அடங்கிய சிற்பரம்
ஆமே சிவகதி ஆனந்த மாமே.

பொருள் : அகரம் சிவமாகவும், உகரம் சிவையாகவும் ஆகும். இவை இரண்டும் சுட்டறிவுக்கு எட்டாத துணைப் பொருள்கள். ஆதலால் அறிய இடம் என்ப. அறிவுருவாம் முழுமுதல் ஐந்தொழில் திருக்கூத்து அடங்கிய பெரும்பொருள் ஆகும். இறவாத இன்ப நிலையமாக இயங்குவது சிவகதியேயாம். மரங்கள் - மேலாம் மெய்ப் பொருள்கள். சிற்பரம் - மேலாம் அறிவுரு. சிவகதி - இன்பநிலையம்.

892. ஆனந்த மூன்றும் அறிவுஇரண்டு ஒன்றாகும்
ஆனந்தம் சிவாய அறிவார் பலரில்லை
ஆனந்த மோடும் அறியவல் லார்கட்கு
ஆனந்தக் கூத்தாய் அகப்படும் தானே.

பொருள் : இறவாத இன்ப நிலையம் அகர உகர மகரங்களென்னும் மூன்றுமாம். அறிவு ஆற்றல், அறிவு என அறிவு இரண்டாம். அறிவாற்றல் - ஆணை; சத்தி. அறிவு - சிவம். இவற்றுடன் யகரம் ஒன்று கூட்ட அறிவு (சிவய) மூன்றாகும். இம் மூன்றனையும் திருவருள் துணையால் அறிவார் பலரில்லை; சிலரேயாவர். இறவாத இன்பத்தினை அதனுடன் சேர்ந்து அறிய வல்லார்க்கு அவ் இன்பம் ஒளியாது வெளிப்படும் என்க.

893. படுவது இரண்டும் பலகலை வல்லார்
படுவது ஓங்காரம் பஞ்சாக் கரங்கள்
படுவது சங்காரத் தாண்டவப் பத்தி
படுவது கோணம் பரந்திடும் வாறே.

பொருள் : இணைந்திருக்கும் அம்ச மந்திரம் (சிவ) இரண்டும் புரிவார் பல்கலை வல்லவராவர். அம்ச மந்திரம் இரண்டும் அறிவும் ஆணையுமாகக் கூறலாம். அறிவே சிவம் ஆணையே சித்தி இவ்விரண்டின் விரிவே ஓங்கார பஞ்சாட்சரங்கள். இம்முறை குறிப்பதே சங்காரத் தாண்டவர். இத்தாண்டவத்தின் முறைமையால் எல்லா இடங்களிலும் சிவப்பேறு பரவும் என்க. (வாறு - பேறு - சிவப்பேறு. சங்காரம் பேரொடுக்கம்)

894. வாறே சதாசிவ மாறிலா ஆகமம்
வாறே சிவகதி வண்டுறை புன்னையும்
வாறே திருக்கூத்து ஆகம வசனங்கள்
வாறே பொதுவாகும் மன்றின் அமலமே.

பொருள் : இவ்வாறே சதாசிவ மூர்த்தியால் அருளிச் செய்யப்பட்டது. வேத நெறி சைவ நெறிக்கு மாறுபடாத கமம் ஆகும். இவ்வாறு சிவகதியில் வளப்பம் மிகுந்த துறையை அடையின் பாச நீக்கம் உண்டாகும். சைவ ஆகமங்களால் கூறப்பட்ட உண்மை இவ்வாறுள்ளது. இதுவே எல்லோரும் சென்றடையும் பொதுச் சபையாகவும், அதன் கண்விளங்கும் நின்மல சிவமாகவும் உள்ளது. (வண்டுறை - வண்+துறை = வளப்பான முறை. புன்னையு - புல்+நையும் = பாம் கெடும். அமலம் - நிதன் மலசிவம். நெறி நூல் - வேதம். துறைநூல் - ஆகமம்.)

895. அமலம் பதிபசு பாசங்கள் ஆகமம்
அமலம் திரோதாயி யாகும்ஆ னந்தமாம்
அமலம்சொல் ஆணவம் மாயை காமியம்
அமலம் திருக்கூத்தங்கு ஆமிடம் தானே.

பொருள் : நின்மல சிவமே பதிபசு பாசங்களுக்குத் தாரகம் என்று கூறும். நின்மல சிவமே மறைப்புக்கும் ஆனந்தத்துக்கும் தாரகமாம் நின்மல சிவமே சொல்லப்பட்ட ஆணவம் மாயை கன்மத்துக்குத் தாரகம். நின்மல சிவம் விளங்குவது சங்காரத் தாண்டவம் செய்யும் இடமாகும். (திருரோதாயி மறைப்பாற்றல்)

896. தானே தனக்குத் தலைவனு மாய்நிற்கும்
தானே தனக்குத் தன்மலை யாய் நிற்கும்
தானே தனக்குத் தன்மய மாய்நிற்கும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே.

பொருள் : அச்சிவமே சிவசத்தி பிரிப்பின்றி நிற்றலால் சத்திக்குத் தலைவனாக உள்ளான். தான் விளங்கும் அருள் மலையாகவும் அவனே உள்ளான். தான் பிறவற்றோடு கலந்திருந்தாலும் அவனே உள்ளான். தான் பிறவற்றோடு கலந்திருந்தாலும் தன் சுபாவம் குன்றாது நிற்கிறான். தன்னை ஒருவர் ஏலப்படுவார் இன்றித் தானே தனக்குத் தலைவனாய் விளங்குகிறான்.

897. தலைவனு மாய்நின்ற தற்பரக் கூத்தனைத்
தலைவனு மாய்நின்ற சற்பாத் திரத்தைத்
தலைவனு மாய்நின்ற தாதவிழ் ஞானத்
தலைவனு மாய்நின்ற தாளிணை தானே.

பொருள் : அடிமையாகிய உயிருலகம், உடைமையாகிய உயிரல் உலகம் அனைத்திற்கும் என்றும் பொன்றாத் தலைவனுமாய் நின்றருள்பவன் தற்பரக் கூத்தன். அவனே என்றும் ஒன்று போல் விளங்கும் நிலைப் பொருளாகிய சற்பாத்திரமாவான். மணத்தூளாகிய பேருணர்வுத் தாளிணை என்னும் தாமரை போலும் திருவடியை உடையவனாக விளங்குபவனும் அவனேயாவன்.

898. இணையார் திருவடி எட்டெழுத் தாகும்
இணையார் கழலிணை ஈர்ஐஞ்ச தாகும்
இணையார் கழலிணை ஐம்பத்தொன் றாகும்
இணையார் கழலிணை ஏழா யிரமே.

பொருள் : அவனது திருவடியே அகரமாகிய பெரும் பொருளாம். அப் பெரும்பொருளே யகரமாகிய ஆன்மாவில் விளங்கும். அதுவே ஐம்பத்தோர் எழுத்துக்களாம். அதுவே எல்லா மந்திரங்களுக்கும் தலைவனாக உள்ளது. (எட்டெழுத்து அ - ஈரைந்து - பத்து - ய. ஐம்பத்தொன்று - ஆசிரியர் காலத்தில் வழங்கப்பட்ட தமிழ் எழுத்துக்களின் எண் 51. தமிழ் எண்கள் 8-அ 10-ய. ஏழாயிரம் - இறைவனது ஆற்றல்களைக் குறிக்கும் ஒரு பேரெண்.)

899. ஏழா யிரமாய் இருபதாய் முப்பதாய்
ஏழா யிரத்தும் எழுகோடி தானாகி
ஏழா யிரத்துயிர் எண்ணிலா மந்திரம்
ஏழா யிரண்டாய் இருக்கின்ற வாறே.

பொருள் : ஏழாயிரமாய்க் கூறப்பட்ட மந்திரங்கள் இருபது முப்பது என்ற எண்ணிக்கையிலுள்ள எழுத்துக்களால் ஆனவை. ஏழாயிர வகையான மந்திரங்களும் ஏழு முடிவில் பொருந்து வனவாய் ஏழாயிரம் பிரிவில் எண்ண முடியாத பேதங்களாக விரியும். ஏழு முடிகளையுடைய மந்திரங்கள் எல்லாம் இரண்டு ஆகிய விந்து நாதத்தில் முடிவனவாம்.

900. இருக்கின்ற மந்திரம் ஏழா யிரமாம்
இருக்கின்ற மந்திரம் எத்திறம் இல்லை
இருக்கின்ற மந்திரம் சிவன்திரு மேனி
இருக்கின்ற மந்திரம் இவ்வண்ணம் தானே.

பொருள் : அசபையாகிய பிரணவமே ஏழாயிர மந்திரங்களாகும். அசபையாகிய மந்திரம் எத்தன்மையதாக இல்லை ? அசபையே சிவனது வடிவாக உள்ளது. அசபையே இவ்வாறு எல்லா மாய் உள்ளது அசபையே மந்திரமாகவும் மந்திரப் பொரு ளாகவும் உள்ளது.

901. தானே தனக்குத் தகுநட்டம் தானாகும்
தானே அகார உகாரம தாய்நிற்கும்
தானே ரீங்காரத் தத்துவக் கூத்துக்குத்
தானே உலகில் தனிநடந் தானே.

பொருள் : சிவ என்னும் ஈரெழுத்தும் ஒப்பில்லாத சிறந்த திருக்கூத்தாகும். அவையே அகர உகரங்களாகவும் நிற்கும். மேலும் உலகத் தோற்ற ஒடுக்கங்களுக்கு முதற் காரணமாயுள்ள மாயைக்கு அடிப்படை மந்திரமாயுள்ள இரீங்கார மந்திரமும் அதுவேயாம். (ரீம் - மாயையின் பீச மந்திரம்.)

902. நடம்இரண்டு ஒன்றே நளினம தாகும்
நடம்இரண்டு ஒன்றே நமன்செய்யும் கூத்து
நடம்இரண்டு ஒன்றே நகைசெயா மந்திரம்
நடம்சிவ லிங்கம் நலஞ்செம்பு பொன்னே.

பொருள் : நடனம் இரண்டில் சங்காரத் தாண்டவம் அருள் பற்றினது; ஆனபடியால் நன்மையைச் செய்வதாகும். மற்றொன்றாகிய அற்புதத் தாண்டவம் பிறவியில் செலுத்தலால் நமனுக்கு வேலை கொடுக்கும் கூத்து சங்காரத் தாண்டவமே உலகோர் பழிப்புக்கு ஆளாகாத பிரணவ மந்திரமாகும். இத்தாண்டவப் பயன், எடுத்த உடம்பு செம்பு பொன்னாவது போல் சிவகாரமாய் விடும். (அற்புதத் தாண்டவம் - ஆன்மாக்களைப் பிறவியிற் செலுத்தும். (சங்காரத் தாண்டவம் - பிறவியினின்றும் ஆன்மாக்களை மீட்கும்.)

903. செம்பொன் ஆகும் சிவாய நமஎன்னில்
செம்பொன் ஆகத் திரண்டது சிற்பரம்
செம்பொன் ஆகும் ஸ்ரீயும் கிரீயுமெனச்
செம்பொன் ஆன திருஅம் பலமே.

பொருள் : சிவாய நம எனத் திரு ஐந்தெழுத்து ஓதினால் செம்பின் குற்றம் நீங்கிப் பொன்னாவது போல் உயிரின் குற்றமாகிய ஆணவம், கன்மம், மாயை கெட்டுத் தூய்மை பெறும். அப்போது உயிரின் அறிவு மயமான பரம் அமையும் ஸ்ரீம், கிரீம் என்று ஜெபித்தாலும் அவ்விதமே உடம்பு பொன்னாகும். செம்பு பொன்னானது போல் திரு அம்பலம் சமைந்த போது உயிரின் குற்றம் நீங்கிச் சிவாகாரமாய் விளங்கும். (சிரீயும் கிரீயும் - சத்த பீச மந்திரங்கள்.)

904. திருஅம் பலமாகச் சீர்ச்சக் கரத்தைத்
திருஅம் பலமாக ஈராறு கீறித்
திருஅம் பலமாக இருபத்தைஞ் சாக்கித்
திருஅம் பலமாகச் செபிக்கின்ற வாறே.

பொருள் : திரு அம்பலமாக விளங்கும் சிறப்பான சக்கரத்தைச் சபை அமைக்கக் குறுக்கும் நெடுக்குமாக முறையே ஆறு ஆறு கோடுகள் இட்டு அதனை இருபத்தைந்து அறைகளாக்கி அந்த இருபத்தைந்து அறைகளிலும் முறையாகப் பஞ்சாட்சரம் அமைத்துச் செபிக்கவும்.

905. வாறே சிவாய நமச்சி வாயநம
வாறே செபிக்கில் வரும்பேர் பிறப்பில்லை
வாறே அருளால் வளர்கூத்துக் காணலாம்
வாறே செபிக்கில் வரும்செம்பு பொன்னே.

பொருள் : சிவாய நம சிவாயநம என்ற முறையில் வலிமையாக எண்ணிச் செபித்தால் பிறப்பில்லாது ஒழியும். அவ்வாறே வளர்ச்சியைத் தருகின்ற திருக் கூத்துத் தரிசனம் காணலாம் அப்போது ஆன்மா மலமற்றுப் பொன்போல் விளங்கும் (வாறு - பேறு, வலிமை, ஆறு.)

906. பொன்னான மந்திரம் புகலவும் ஒண்ணாது
பொன்னான மந்திரம் பொறிகிஞ்சு கத்தாகும்
பொன்னான மந்திரம் புகையுண்டு பூரிக்கில்
பொன்னாகும் வல்லோர்க்கு உடம்புபொற் பாதமே.

பொருள் : சிவாயநம என்ற பொன் போன்ற மந்திரத்தை வாய்விட்டுச் சொல்லலாகாது இப்பொன் போன்ற மந்திரம் உதட்டளவில் ஒலியின்றி எண்ணத்தக்கது. இந்த மந்திரத்தை எண்ணும்போது உடம்பு பொன்னாகும். திருவடிப் பேறு கிட்டும். (கிஞ்சுகம் - சிவப்பு. இங்குச் செந்நிறமுடைய உதட்டுக்கு ஆயிற்று புகை - சுவாசம்)

907. பொற்பாதம் காணலாம் புத்திரர் உண்டாகும்
பொற்பாதத்து ஆணையே செம்புபொன் ஆயிடும்
பொற்பாதம் காணத் திருமேனி ஆயிடும்
பொற்பாத நன்னடம் சிந்தனை சொல்லுமே.

பொருள் : பொற்பாதம் திருவடி தரிசனம் கிட்டும் பஞ்சாட்சர செபத்தால் சிறந்த ஆசாரியனாகச் சீடர்கள் உண்டவர். சிவ அனுக்கிரகத்தால் சீடனின் மலக் குற்றம் நீங்கும். பொற்பாதத்தைக் காணத் தக்க உடம்பாயிடும். திருவடி நடனச் சிந்தனையை உபதேசியுங்கள் பஞ்சாட்சர செபத்தால் சிறந்த ஆசாரியனாகலாம்.

908. சொல்லும் ஒருகூட்டில் புக்குச் சுகிக்கலாம்
நல்ல மடவார் நயத்துட னேவரும்
சொல்லினும் பாசச் சுடர்ப்பாம்பு நீங்கிடும்
சொல்லும் திருக்கூத்தின் சூக்குமம் தானே.

பொருள் : சொல்லப் படுகின்ற வேறோர் உடம்பில் புகுந்து அங்குள்ள இன்பத்தைப் பெறலாம். இவரிடம் வசீகரத் தன்மை இருப்பதால் அழகிய பெண்கள் விரும்பித் தொடருவர். இவர்கள் சொன்னால் உலகினர்க்கு ஆசாபாசம் நீங்கும். இவை திருக் கூத்தினால் அடையும் பயன்கள்.

909. சூக்குமம் எண்ணா யிரஞ்செபித் தாலும்மேல்
சூக்கும மான வழியிடைக் காணலாம்
சூக்கும மான வினையைக் கெடுக்கலாம்
சூக்கும மான சிவனதுஆ னந்தமே.

பொருள் : மானசீகமாக எண்ணப்படுகின்ற ஆயிரம் உரு செபித்தாலும் மேலுள்ள நுண்மையான உச்சித் தொளை வழியயும் காணலாம். வாசனா ரூபமாகப் பந்தித்துள்ள வினைகளைக் கெடுக்கலாம். சூக்குமமான சிவானந்தம் விளையும் (சூக்குமவழி - பிரமரந்திரம்)

910. ஆனந்தம் ஆனந்தம் ஒன்றென்று அறைந்திட
ஆனந்தம் ஆனந்தம் ஆஈஊஏஓம் என்று அறைந்திடும்
ஆனந்தம் ஆனந்தம் அஞ்சுமது ஆயிடும்
ஆனந்தம் ஆனந்தம் அம்ஹ்ரீம்அம்க்ஷம் ஆம்ஆகுமே,

பொருள் : சீவன் உச்சித் தொளையைக் கடந்து சிவனோடு ஒன்றிய நிலையைச் சொல்வது ஆனந்தம். இவ்வாறு சிவனின் சமஷ்டித் தன்மயும் சீவனின் வியஷ்டித் தன்மையும் பிரித்தறிய முடியாதபடி இருக்கும் இடத்தை அடைவது அதைவிட ஆனந்தம். இவ்வைந்தும் ஒன்றிய நாதாந்தம் அமைந்த போது ஆனந்தமாம். இந்த வித்து எழுத்துக்களான இவை ஐந்துமே சிறந்த ஆனந்தத்தை அளிப்பன. (முன்னர் உள்ள குற்றெழுத்துக்களைச் சிவமாகவும், பின்னர் உள்ள நெட்டெழுத்துக் களைச்)

911. மேனி இரண்டும் விலங்காமல் மேற்கொள்ள
மேனி இரண்டும் மிக்கார்அ விகாரியாம்
மேனி இரண்டும் ஊஆஈஏஓ என்று
மேனி இரண்டும் ஈஓஊஆஏ கூத்ததே.

பொருள் : தூல உடம்பும் சூக்கும உடம்பும் ஒன்றுக் கொன்று தடையாக இராமல் அவை மிகுந்து ஒளி பொருந்தி விகாரப் படாமல் நின்றால் தூல சூக்கும உடல் இரண்டும் விளங்கி அவையே திருக் கூத்தாகும். சொல்லுருவம் என்பது மந்திர உருவம். பொருளுருவம் என்பது உறுப்புக்களோடு கூடிய திருவுருவம். இவை இருவேறு வகையாக சிவாயநம, நமசிவய எனவும் வழங்கப் பெறும்.

912. கூத்தே சிவாய நமமசி வாயிடும்
கூத்தே ஈஊஆஏஓம் சிவாய நம வாயிடும்
கூத்தே ஈஊஆஏஓம் சிவயநம வாயிடும்
கூத்தே இஊஆஏஓம் நமசிவாய கோளொன்று மாறே.

பொருள் : சிவயநம என்னும் செந்தமிழ்த் திருமறை ஐந்தெழுத்தால் ஆகிய திருக்கூத்து ஆருயிர்களை உருகிக் குழைவிக்கும். இக் குழைவினையே சிவனின் ஒப்படைப்பாகிய ஆத்தும நிவேதனம் என்ப. சிவயநம நமசிவாய என்னும் நுண்மையும் பருமையும் ஆகிய இருவகை ஐந்தெழுத்துடன் மேற்கூடிய நெட்டெழுத்து ஐந்தினையும் இணைத்துக் கணித்து வழிபடுதலே செந்நெறிக் கொள்கை என்க.

913. ஒன்றிரண்டு ஆடவோர் ஒன்றும் உடனாட
ஒன்றினின் மூன்றாட ஓரேழும் ஒத்தாட
ஒன்றினில் ஆடவோர் ஒன்பதும் உடனாட
மன்றினில் ஆடனான் மாணிக்கக் கூத்தே.

பொருள் : திருச்சிற்றம்பலச் சிவனார் செய்தருளும் திருஐந்து எழுத்தானாம் திருக் கூத்தினுள் மாணிக்கக் கூத்தென்பதும் ஒன்று. அக் கூத்தானே உலகுயிர்கள் ஆடும் உண்மை இதன்கண் காணப்படும். ஐந்துபூதங்கள் சூரியர் சந்திரர் அக்கினி மும்மூர்த்திகள் இவைகளை இணைத்துப் பலவாறாகக் கூறுவர். அசபை கூறப்புகுந்த இதன்கண் அஞ்செழுத்தருட் கூத்தும் கூறியருளினார். (அசபையும் ஐந்தெழுத்தும் முறையே நுண்மையும் பருமையும் என்னும் இணைவால் என்க)

2. திருஅம்பலச் சக்கரம்

(சக்கரம் என்பது கோடுகள் குறுக்கும் நெடுக்குமாக இட்டு எழுத்துக்களைக் கட்டங்களில் அடைத்து வழிபடுவதற்குரியது திரு அம்பலச் சக்கரம் என்றால் சிதாகாயப் பெருவெளியில் ஆனந்தக் கூத்தாடும் பெருமான் சத்தியோடு மந்திர வடிவமாய் நின்று நிலவும் சக்கரம் என்க.)

914. இருந்தஇவ வட்டங்கள் ஈராறி ரேகை
இருந்த இரேகைமேல் ஈராறு இருத்தி
இருந்த மனைகளும் ஈராறு பத்தொன்று
இருந்த மனையொன்றில் எய்துவன் தானே.

பொருள் : இருந்த இச்சக்கரங்களில் பன்னிரண்டு கோடுகளைக் குறுக்கும், பன்னிரண்டு கோடுகளை நெடுக்கமாக இட்டு அமைந்த கட்டங்கள் 121 ஆகும். அமைந்த இச்சக்கரத்தின் நடுக்கட்டத்தில் சிவன் பொருந்துவன். (ஈராறுபத்து ஒன்று என்பது 2610+1 = 121. சிவன் - சிவ அட்சரமாகிய சி.)

915.தான்ஒன்றி வாழிடம் தன்எழுத் தேயாகும்
தான்ஒன்றும் அந்நான்கும் தன்பே ரெழுத்தாகும்
தான்ஒன்று நாற்கோணம் தன்ஐந் தெழுத்தாகும்
தான்ஒன்றி லேஒன்றும் அவ்அரன் தானே.

பொருள் : சிவமாகிய தான்பொருந்தி விளங்கும் இடம் தனக்குரிய எழுத்தாகிய சிகரமாகும். தான் பொருந்துவதற்கு இடமாயிருக்கும் ஏனைய வய நம என்னும் நான்கு எழுத்துக்களும் தன் பெயரினை உணர்த்தும் எழுத்துக்களாகும். சிவம் பொருந்தி யுள்ள அமைப்பில் நாற்கோணத்தில் சூழவுள்ளனை தன் அஞ்செழுத்தாகும். சிவமாகிய தான் ஏனைய எழுத்துக்களுடனும் பொருந்தி நிற்கும்.

916. அரகர என்ன அரியதொன்று இல்லை
அரகர என்ன அறிகிலர் மாந்தர்
அரகர என்ன அமரரும் ஆவர்
அரகர என்ன அறும்பிறப்பு அன்றே.

பொருள் : அரகர என்னும் நாமத்தைப் பயின்றவர்க்கு எல்லாம் எளிமையில் முடியும்; அவ்வளவு பெருமை யிருந்தும் மனிதர்கள் அரகர என்று வணங்கிப் பயன் அடையவில்லை. அவர் அழியாத ஒளியுடல் பெறுவர். மேலும் வினை இன்மையால் பிறப்பு இல்லை.

917. எட்டு நிலையுள எங்கோன் இருப்பிடம்
எட்டினில் ஒன்றும் இருமூன்றும் ஈரேழும்
ஒட்டிய விந்துவும் நாதமும் ஓங்கிடப்
பட்டது மந்திரம் பான்மொழி யாலே.

பொருள் : எமது தலைவன் வாழும் இடம் மேற்குறித்த சக்கரத்தில் நான்கு திசைகளிலும் நான்கு கோணங்களிலும் உள்ளது. இந்த எட்டு இடங்களிலும் பஞ்சாட்சரம் பொருந்தும். ஓம் நமசிவய என்னும் ஆறெழுத்து அரு மறையும் பதினான்கு உலகங்களும் ஒளியும் ஒலியும் ஆகிய எல்லாம் திருவருள் தங்குதலினின்று தோன்றின. இந்த எண்களுக்கு வேறு பொருளும் கூறுவர்.

918. மட்டவிழ் தாமரை மாதுநல் லாளுடன்
ஒட்டி இருந்த உபாயம் அறிகிலர்
விட்ட எழுத்தை விடாத எழுத்துடன்
கட்டவல் லாருயிர் காக்கவல் லாரே.

பொருள் : சிவனும் சிவையும் ஒட்டி யுறையும் வழிவகை அறியின் விட்ட எழுத்தாகிய வ விடாத எழுத்தாகிய சி இவ்விரண்டும் மா முதல் என்னும் உண்மை வெளியாகும். மா முதல் - மகாகாரணம். இவ் இரு பெரும் எழுத்தாகிய சிவ என்னும் செந்தமிழ்த் தனிமறையினை இடையறாது கணிக்கவல்லார் தம்முயிர் திருவடியிற் கூடிப் பேரின்பம் எய்தும் நிலையினைப் பேண வல்லவர் ஆவர்.

919. ஆலய மாக அமர்ந்தபஞ் சாக்கரம்
ஆலய மாக அமர்ந்தஇத் தூலம்போய்
ஆலய மாக அறிகின்ற சூக்குமம்
ஆலய மாக அமர்ந்திருந் தானே.

பொருள் : கோயிலாக அமர்ந்த பஞ்சாட்சரம், கோயிலாக இருந்த இத்தூல நிலைமாறி, கோயிலாக எண்ணுகின்ற ஒளியை முதலாகவுடைய சூக்குமத்தில் சிவன் கோயில் கொண்டிருந்தான். இவற்றுள் பருமையாகிய நமசிவய என்பதன் மேல் நுண்மையாக அறிகின்ற சிவயநம என்னும் அதுவே திருக்கோவிலாக அமர்நதிருந்தான் என்க. இந்நிலை இரண்டும் முறையே உலகியலைப் பெரியதாகவும், வீட்டி யலைப் பெரியதாகவும் கொள்ளும் குறிப்பினவாகும்.

920. இருந்த இவ்வட்டம் இருமூன்றுஇ ரேகை
இருந்த அதனுள் இரேகை ஐந்தாக
இருந்த அறைகள் இருபத்துஐஞ் சாக
இருந்த அறையொன்றில் எய்தும் அகாரமே.

பொருள் : இருந்த இச்சக்கரம் ஆறுகோடுகளை உடையதாக, அதனுள் கட்டங்கள் ஐந்தாக, அவற்றுள் ஐ ஐந்து கட்டங்கள் இருபத்தைந்தாக, அங்கு ஒரு நடுக்கட்டத்தில் அகாரம் பொருந்தும். (அகரம் சிவபெருமானின் அடையாள எழுத்தாகும்.)

921. மகார நடுவே வளைத்திடும் சத்தியை
ஓகாரம் வளைத்திட்டு உம்பிளந்து ஏற்றி
அகாரம் தலையாய் இருகண் சிகாரமாய்
நகார வகாரநற் காலது நாடுமே.

பொருள் : இதன்கண் திருஅம்பலச் சக்கரம் எழுத்துமுறை அமைப்பினால் தலை, கண், கால் முதலிய உறுப்புக்களோடு அமைந்த ஓர் ஆள் வடிவமாகத் தோன்றுமுறை ஓதப் பெற்றுள்ளது. இதில் சிதம்பரச் சக்கர நடுவில் ஈசனை மனித உருவமாகக் காணும் முறை கூறப்பட்டுள்ளது. குருமுகமாகத் தீட்சை பெற்றுச் சாதனம் செய்தால் சூக்கும சிவாலயம் அமையும் என்பதாம்.

922. நாடும் பிரணவம் நடுஇரு பக்கமும்
ஆடும் அவர்வாய் அமர்ந்தங்கு நின்றது
நாடும் நடுவுள் முகம்நம சிவாய
ஆடும் சிவாயநம புறவட்டத்து ஆயதே.

பொருள் : விரும்பும் பிரணவத்தை ஆஞ்ஞையில் நடுவாக இருபக்கமும் பொருந்திய சிவாக்கினியான ஒளியைக் கொண்டு நோக்குங்கள். அது அசைவினை உண்டாக்கும் சாதகரது வாயில் பொருந்தி நின்றது. அப்போது அண்ணாக்கினுள்ளே உண்டாவது நமசிவாயமாம். பின் வெளியில் சிரசைக் குழவுள்ள பகுதியில் விளங்குவது சிவாய நம என்பது.

923. ஆயும் சிவாய நமமசி வாயந
ஆயும் நமசிவா யயநம சிவா
வாயுமே வாய நமசியெனும் மந்திரம்
ஆயும் சிகாரம் தொட்டந்தத்து அடைவிலே.

சிவாயநம
மசிவாயந
நமசிவாய
யநமசிவா
வாயநமசி

பொருள் : சிவாய நம என்னும் மந்திரத்தை நான்கு முறை எழுத்துக்களை மாற்றியமைக்கும் நிலை ஓதப்படுகின்றது அந்நான்கும் ஈற்றிலிருந்து முறையே ஒவ்வோர் எழுத்தும் முதலெழுத்தாக எழுதுதல் வேண்டும். அங்ஙனம் எழுதின் திரு அம்பலச் சக்கரம் இருபத்தைந்திலும் திரு ஐந்தெழுத்து அமைந்திருக்கும்.

924. அடைவினில் ஐம்பதும் ஐஐந்து அறையின்
அடையும் அறையொன்றுக்கு ஈரெழுத்து ஆக்கி
அடையும் மகாரத்தில் அந்தமாம் க்ஷவ்வும்
அடைவின் எழுத்துடும்பத்தொன்றும் அமர்ந்ததே.

பொருள் : வரிசையாகிய க்ஷ காரம் நீங்கிய ஐம்பது எழுத்துக்களையும் இருபத்தைந்து அறைகளில் அறை ஒன்றுக்கு ஈரெழுத்தாக அடைத்துப் பிரணவ வட்ட மகாரத்தில் க்ஷல்வை அடைப்பின் ஐம்பத்தோர் அட்சரங்களும் முறையாக அடைபட்டுவிடும். ஐம்பத்தொரு கிரந்த அட்சரங்களும் அடைக்கப்படும் விதம் கூறியவாறு.

925. அமர்ந்த அரகர வாம்புற வட்டம்
அமர்ந்த அரிகரி யாம்அத னுள்வட்டம்
அமர்ந்த அசபை யாம்அத னுள்ளவட்டம்
அமர்ந்த ரேகையும் ஆகின்ற சூலமே.

பொருள் : சக்கரத்தின் வெளி வட்டத்தில் ஹரஹர என்றும், அதனை எடுத்த உள்வட்டத்தில் ஹர ஹர என்றும், அதனை எடுத்த உள்வட்டத்தில் ஹரிஹரி என்றும், அதற்கு அடுத்த உள்வட்டத்தில் ஹம்சம் என்னும் அசபையும், சக்கரத்தின் இரேகைகள் முடிவில் சூலமும் இடுக. சக்கரத்தின் புறத்தே இவ்வாறு அமைக்க வேண்டும் என்பதாம்.

926. சூலத் தலையினில் தோற்றிவும் சத்தியும்
சூலத் தலையினில் சூழும்ஓங் காரத்தால்
சூலத்து இடைவெளி தோற்றிடும் அஞ்செழுத்து
ஆலப் பதிக்கும் அடைவதும் ஆமே.

பொருள் : முத்தலை வேலாகிய சூலத்தின் முனையில் சிவையின் எழுத்தாகிய வகரம் அமைத்தல் வேண்டும். அச் சூலத்தைச் சூழ ஓங்காரம் அமைத்தல் வேண்டும். சூலத்தின் இடை வெளியில் திரு ஐந்தெழுத்தை அமைத்தல் வேண்டும். அதுவே இறையாகிய சிவத்தின் நிலைக்களமாகும். (இறை - பதி)

927. அதுவாம் அகார இகார உகாரம்
அதுவாம் எகாரம் ஒகாரமது ஐந்தாம்
அதுவாகும் சக்கர வட்டமேல் வட்டம்
பொதுவாம் இடைவெளி பொங்குநம் பேரே.

பொருள் : அப் பஞ்சாட்சரமே அ,இ,உ,எ,ஒ ஆகிய ஐந்தாம். இதனைச் சக்கர வட்டம் மேல் வட்டத்து இடை வெளியில் இடுக. அதைச் சூழ நம் பேரான, சிவ சிவ என்ற எழுத்துக்களை வட்டம் சூழ அமைக்கவும் சூலத்து இடை வெளியில் அ,இ,உ,எ,ஒ இட்டுச் சூழ ஒரு வட்டமிட்டுச் சிவ சிவ அமைக்கலாம் என்க.

928. பேர்பெற் றதுமூல மந்திரம் பின்னது
சேர்வுற்ற சக்கர வட்டத்துள் சந்தியின்
நேர்பெற் றிருந்திட நின்றது சக்கரம்
ஏர்பெற் றிருந்த இயல்பிது வாமே.

பொருள் : திருப் பெயராகப் பெற்ற நமசிவய, என்பதே சிவ மூல மந்திரமாகும். மற்றை எழுத்துக்கள் உள் வட்டம் வெளி வட்டங்களில் முன்னைத் திருப் பாட்டில் குண்டமுறை போல் திகழ்வனவாகும். இதுவே சம்பத்தைத் தரும் முறையான சக்கரமாகும்.

929. இயலும்இம் மந்திரம் எய்தும் வழியின்
செயலும் அறியத் தெளிவிக்கு நாதன்
புயலும் புனலும் பொருந்துஅங்கி மண்விண்
முயலும் எழுத்துக்கு முன்னா இருந்ததே.

1. பிருதிவி நாற்கோணம் ல

2. அப்பு பிறைவட்டம் வ

3. தேயு முக்கோணம் ர

4. வாயு அறுகோணம் ய

5. ஆகாயம் வட்டம் அ

பொருள் : முறையான இம்மந்திரம் அடையும் நெறியில் அதன் கிரியையும் அறியும்படியாகத் தெளிவு படுத்திய குருநாதன் காற்று, நீர், பொருந்திய தீ, நிலம், ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களுக்கு உரியவாகிய பீசங்களையும் முயலும் பஞ்சாக்கரத்தின் மூலம் அடையுங்கள் என்று அருளினான். பஞ்சாக்கரம் தொழிற்படும் போது பஞ்சபூத பீசாக்கரங்களும் அவைகளின் உருவங்களும் தேவைப்படும் என்க.

930. ஆறெட்டு எழுத்தின்மேல் ஆறும் பதினாலும்
ஏறிட்டு அதன்மேலே விந்துவும் நாதமும்
சீறிட்டு நின்று சிவாய நமவென்னக்
கூறிட்டு மும்மலம் கூப்பிட்டுப் போமே.

பொருள் : ஐம்பது எழுத்தாக அமைக்கப் படும் காலத்து உயிரினத்தில் ஆறாவது எழுத்து ஊ பதினான்காவது எழுத்து ஒள எட்டு என்பது அ ஆகும். அதன்மேல் ஒளியும் ஒலியும் கணிக்குமாறு கூட்டுதல் வேண்டும். சிவயநம என இடையறாது கணித்துக் கொண்டிருந்தால் மும்மலங்களும் பிளவுபட்டு இன்னலுற்றுப் புலம்பி அகலும். (சத்தி ஒளி, விந்து. சிவன் ஒலி, நாதம். ஆதியில் தமிழ் எழுத்துக்கள் ஐம்பது ஆகும்.)

931. அண்ணல் இருப்பது அவள் அக் கரத்துள்ளே
பெண்ணின்நல் லாளும் பிரான்அக் கரத்துள்ளே
எண்ணி இருவர் இசைந்துஅங்கு இருந்திடப்
புண்ணிய வாளர் பொருளறி வார்களே.

பொருள் : முன்னர் கூறிய ஸெள என்பதில் தலைவனாகிய சிவமும் இருப்பன். உமாதேவியும் அப்பிரான் அக்கரத்தில் சிறந்து விளங்குவாள். இவ்விதமாகச் சிவசத்தி ஈசானத்தில் பொருந்தியிருப்பதைப் புண்ணிய சீலர்கள் நாதமாக விளங்குவதை அறிவார்கள் (அ+உ என்பதை ஒள ஆகி ஸகரத்தைச் சேர்க்க ஸெள ஆயிற்று என்றபடி) சிவயசிவ என்பதைக் குறிப் பதாக மற்றொரு சாரார் கூறுவர்.

932. அவ்விட்டு வைத்தங்கு அரவிட்டு மேல்வைத்து
இவ்விட்டுப் பார்க்கில் இலிங்கம தாய்நிற்கும்
மவ்விட்டு மேலே வளியுறக் கண்டபின்
தொம்மிட்டு நின்ற சுடர்க்கொழுந்து ஆமே.

பொருள் : அகரத்தை எழுதி, அதன்மேல் அர என்பது எழுதி, அதன்மேல் இ எழுதிப் பார்க்கில் சிவலிங்கமாம் சிவலிங்கம் அருவம், உருவம் என்னும் இரண்டிற்கும் காரணமாம். இது அருவுருத் திருவுரு என்று ஓதப் பெற்றுள்ளது. (அ - அறிவு; அர தொழில்; இ - இன்பம். ம கரத்தை இட்டு உச்சித் தொளையின் கண் உயிர்ப்புச் செல்லுவதை உணர்ந்தபின் அங்குத்தொம் என்ற ஒலி கேட்கும்.)

933. அவ்வுண்டு சவ்வுண்டு அனைத்தும்அங்கு உள்ளது
கவ்வுண்டு நிற்கும் கருத்தறி வார்இல்லை
கவ்வுண்வு நிற்கும் கருத்தறி வாளர்க்குச்
சவ்வுண்டு சத்தி சதாசிவன் தானே.

பொருள் : அகரமும் சகரமும் அங்குண்டு, இவ்விரண்டும் சிவம், சிவை என்னும் அத்தன் அன்னையைக் குறிக்கும். ஈண்டுக் கூறப்படும் அகரம் அடியையும், சகரம் சடையையும் கொண்டு நிற்கும் திருவுள்ளப் பெற்றி அறிவார் இல்லை. அத்தன்மையின் மெய்ம்மையினை அறியும் அடியவர்க்கு அச்சகரத்தின் வண்ணமாம் சதாசிவன் தோன்றும். (சவ்வுண்ட சத்தி ச என்னும் பீச மந்திரத்தின் சத்தி. கவ்வுண்டு கலந்து)

934. அஞ்செழுத் தாலே அமர்ந்தனன் நந்தியும்
அஞ்செழுத் தாலே அமர்ந்தபஞ் சாக்கரம்
அஞ்செழுத் தாகிய அக்கர சக்கரம்
அஞ்செழுத் துள்ளே அமர்ந்திருந் தானே.

பொருள் : நந்தியாகிய சிவபெருமான் திரு ஐந்து எழுத்தாகவே அமர்ந்து அருளினன். அஞ்சு சொற்களின் முதலெழுத்துக்களாகிய அஞ்சு எழுத்துக்களால் ஆகியது பஞ்சாக்கரம். இந்த ஐந்து எழுத்துக்களாலேயே சக்கரங்கள் அமைக்கப்படும். அதனுள் அமர்ந்து உறைபவன் விழுமிய முழுமுதற் சிவன். (அஞ்செழுத்தின் விரிவு வருமாறு; சி - சிறப்பு; வ-வனப்பு; ய-யாப்பு; ந - நடப்பு; ம - மறைப்பு)

935. கூத்தனைக் காணுங் குறிபல பேசிடில்
கூத்தன் எழுத்தின் முதலெழுத்து ஓதினார்
கூத்தனொடு ஒன்றிய கொள்கைய ராய்நிற்பர்
கூத்தனைக் காணும் குறியது வாமே.

பொருள் : கூத்தனாகிய சிவபெருமானைக் காணும் நெறிகள் நான்காகப் பேசப்படினும், அவன் திரு ஐந்தெழுத்தின் முதலெழுத்தாகிய சிவ என்பதனைச் சிறந்து எடுத்து ஓதம் மெய்யடியார் கூத்தப் பெருமானுடன் பிரிவின்றிக் கலந்த புணர்ப் பிணராவர். இதுவே திருவடிசேரும் பெரு நெறியாகும்.

இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum