தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சே குவேரா - புரட்சிக்காரர்களின் இதயத் துடிப்பு
மரணத்தை வென்றவன் -முருகபாரதி EmptyThu Aug 28, 2014 10:03 am by கே இனியவன்

» ஒரு முக்கோணம் - தொலைந்து போகும் மனிதர்கள் - புரியாத மர்மம்
மரணத்தை வென்றவன் -முருகபாரதி EmptyThu Aug 28, 2014 10:01 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா
மரணத்தை வென்றவன் -முருகபாரதி EmptyThu Aug 28, 2014 10:00 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் எலியாஸ் -சுரா
மரணத்தை வென்றவன் -முருகபாரதி EmptyThu Aug 28, 2014 9:59 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா
மரணத்தை வென்றவன் -முருகபாரதி EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» கென்யா நாட்டு சிறுகதை தமிழில் சுரா
மரணத்தை வென்றவன் -முருகபாரதி EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதை
மரணத்தை வென்றவன் -முருகபாரதி EmptyThu Aug 28, 2014 9:57 am by கே இனியவன்

» பிரம்மராஜன் கவிதைகள்
மரணத்தை வென்றவன் -முருகபாரதி EmptyThu Aug 28, 2014 9:56 am by கே இனியவன்

» K Iniyavan
மரணத்தை வென்றவன் -முருகபாரதி EmptyThu Aug 28, 2014 9:41 am by கே இனியவன்

» K Iniyavan -karuththu
மரணத்தை வென்றவன் -முருகபாரதி EmptyThu Aug 28, 2014 9:37 am by கே இனியவன்


மரணத்தை வென்றவன் -முருகபாரதி

Go down

மரணத்தை வென்றவன் -முருகபாரதி Empty மரணத்தை வென்றவன் -முருகபாரதி

Post by இறையன் Fri Dec 16, 2011 12:33 pm

எப்போதாவது மரணத்தை சந்தித்தித்து இருக்கிறீர்களா ? சரி விடுங்கள் வாழ்க்கையையாவது சந்தித்து இருக்கிறீர்களா ? என்ன கேள்வி இது? எல்லோரும் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறோம் என்கிறீர்களா?

நான் இல்லை என்கிறேன். இருப்பது வேறு. வாழ்வது வேறு. வாழ்கையை வாழ்ந்து பார்க்கவும் கொஞ்சம் ஆழ்ந்து பார்க்கவும் தான் இந்த தளமும், இந்த கட்டுரையும்.

எல்லோரையும் போல் எனக்கும் ஒரு ரோல் மாடல் உண்டு. அவர் பெயர் ARMSTRONG. அவரைத்தான் எனக்கு தெரியுமே என்கிறீர்களா? ஆனால் நீங்கள் நினைப்பவர் - நிலவில் முதலில் கால் வைத்த Neil Armstrong. நான் சொல்வது Lance Armstrong. யார் அவர்?


யார் இந்த லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங்? அமெரிக்காவைச் சார்ந்த ஒரு சைக்கிள் பந்தய வீரர். நமக்குத் துன்பங்கள் வரும்போது எல்லாம், உலகத்திலேயே நாம்தான் அதிகம் கஷ்டப்படுவதாக நாம் எண்ணும்போதெல்லாம், இவரை ஒரு கணம் நினைத்தால் போதும். நம்பிக்கை ஊற்றெடுக்கும். வாழ்க்கையின் மீதான நம் பார்வை மாறும். புத்துணர்ச்சி பொங்கும். அப்படி என்ன செய்தார் இவர்...?

அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரில் பிறந்த லான்ஸிற்கு, பிறந்தது முதலே பிரச்சனைகள் தொடங்கிவிட்டன. இரண்டு வயதில் அப்பாவும் அம்மாவும் பிரிந்துவிட, அம்மாவுடனும் வளர்ப்புத் தந்தையுடனும் வளர்ந்த லான்ஸிற்கு, அவருடைய மணவாழ்க்கையும் சேர்த்து, குடும்ப வாழ்க்கை இறுதி வரை இனிமையாக அமையவே இல்லை.

இளமைக் காலத்தில் டிரையத்லான் (சைக்கிள், ஓட்டம் மற்றும் நீச்சல் - மூன்றும் சேர்ந்த போட்டி) வீரராக பல சாதனைகள் படைத்துக்கொண்டிருந்த லான்ஸின் முழுக்கவனமும், பின்னர், சைக்கிள் பந்தயத்தின் மீது திரும்பியது. வெற்றிகளும், தோல்விகளும் நிறையப் பார்த்த போதும், ஆர்ம்ஸ்ட்ராங்கின் ஆசையெல்லாம், டூர் டி பிரான்ஸ் பந்தயத்தில் வென்றுவிட வேண்டும் என்பதாகவே இருந்தது.

முதலில் டூர் டி பிரான்ஸ் பந்தயத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்! உலகின் மிகக் கடினமான பந்தயங்களுள் ஒன்று அது. ஆண்டுதோறும் ஜலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், பிரான்ஸ் மற்றும் அதன் எல்லையோரங்களில், சுமார் 21 நாட்கள் நடைபெறும் அப்பந்தயத்தில் கடக்க வேண்டிய தூரம் சுமார் 3500 கிலோ மீட்டர்கள். பல்வேறு கட்டங்களாக நடைபெறும் அப்போட்டி, அழகிய நெடுஞ்சாலையில் நடைபெறுவதில்லை. சில கட்டங்கள் தொடர்ந்து புல்வெளியில், சில கட்டங்கள் தொடர்ந்து மேடு-பள்ளங்கள் நிறைந்த சாலையில், சில கட்டங்களோ மலைப்பகுதிகளில், என்று சைக்கிள் ஓட்டியாக வேண்டும். “உலகிலேயே அதிக உடல்திறன் தேவையான விளையாட்டுப் போட்டி” என்றும், போட்டியை முழுவதுமாக நிறைவுசெய்யத் தேவைப்படும் ஆற்றல் “மூன்று முறை எவரெஸ்ட் ஏறுவதற்கும், பல மராத்தான் ஓட்டப்பந்தயங்களுக்கும் இணையானது” என்றும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது. அவ்வளவு கடுமையான பந்தயத்தில் வெல்லத்தான் லட்சியம் கொண்டார் லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங்.

அப்பொழுதுதான் அந்த விபரீதம் நேர்ந்தது! சைக்கிள் பயிற்சியின் போது தவறி விழுந்தார் லான்ஸ்! மருத்துவமனையில் அனுமதித்த சில நாட்களிலேயே கோமா நிலையை அடைந்தார்! காரணம், ஆர்ம்ஸ்ட்ராங்கிற்கு......... கேன்சர்! ஆம்! கொடுமையான புற்றுநோய், அவரது வாழ்க்கையையே புரட்டிப்போட்டது. அமெரிக்க மருத்துவர்களாலேயே, இவர் சில நாட்களில் இறந்து விடுவார் என்று கணிக்கப்பட்டார்!

இந்த நிலையில் தான், ஒரு நாள், சில நிமிடங்கள் ஆர்ம்ஸ்ட்ராங்கிற்கு, நினைவு திரும்பியது. கோமா நிலையில் இருந்த எந்த ஒரு நோயாளியானாலும், நினைவு வந்தவுடன் தன் உறவினர்களைத்தான் தேடுவார் அல்லவா! ஆனால், நம் ஆர்ம்ஸ்ட்ராங்கோ, “டாக்டர்! என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்! நான் இறப்பது குறித்துக் கவலை கொள்ளவில்லை. ஆனால், ஒரே ஒரு முறையேனும், டூர் டி பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தில் வெற்றி பெற்ற பின்னர்தான் நான் இறக்க வேண்டும்” என்றார். என்ன மனிதர் இவர்! மனதிற்குள் எத்தனை லட்சிய வெறி! என்று வியந்த மருத்துவர்கள், அவரை எப்படியாவது காப்பாற்றி விட முனைந்தனர்.

ஆனால் அது அவ்வளவு சுலபமானதாக அமையவில்லை. முழு குணமடைவதற்குள் அவர் பட்ட வேதனைகள் ஏராளம்! கீமொதெரபி என்னும் மிகவும் கடுமையான சிகிச்சை பல முறை அவருக்கு அளிக்கப்பட்டது! மூளையில் கட்டி வேறு ஏற்பட்டு, அதற்கும் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இவை போதாதென்று, தீவிரமான சிகிச்சைகளின் பக்க விளைவாக, நுரையீரலில் அடைப்பு, சிறுநீரகம் பழுது, பக்கவாதம் மற்றும் ஹார்ட் அட்டாக் என்று ஒரு மனிதன் சந்திக்கவே கூடாத அத்தனை பிரச்சனைகளையும், மொத்தமாக சந்தித்தார் ஆர்ம்ஸ்ட்ராங்! இத்தனைக்கும் பிறகு, இறைவன் அருளால், ஆர்ம்ஸ்ட்ராங்கின் லட்சிய வெறியால், உயிர் பிழைத்தார்!

உயிர் பிழைத்தாலும் கூட, இவரால் சைக்கிள் பந்தயத்தில் இனி பங்கேற்கவே முடியாது என்றுதான் உலகம் நினைத்தது! நினைத்ததோடு மட்டுமில்லை, தேசிய அணியில் இடம் கொடுக்காமல், அவரது இதயத்தில் இடியை இறக்கியது! எண்ணிப் பாருங்கள், ஒரு புகழ்பெற்ற வீரருக்கு, எவ்வளவு பெரிய அவமானம் இது!

ஆனால், ஆர்ம்ஸ்ட்ராங் மனம் தளரவில்லை! கடுமையாகப் பயிற்சி செய்தார்! தொடர்ந்து உழைத்தார்! நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்! மிக நல்ல உடல்நிலையோடு இருக்கும் ஒருவரால், ஒருமுறை வெல்வதே கடினம் என்று நம்பப்படும் டூர் டி பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தில், ஒரு முறை அல்ல, இருமுறை அல்ல, தொடர்ச்சியாக ஏழு முறை (1999 – 2005) வென்று உலக சாதனை படைத்தார்.

செப்டம்பர் 18, 1971-ல் பிறந்து, தற்போது 39-ஆவது வயதில், உலகின் நம்பிக்கை நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஆர்ம்ஸ்ட்ராங், உலகெங்கும் கேன்சர் நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டும், அதற்காக நிதி திரட்டிக் கொண்டும் சமுதாய சேவை செய்து வருகிறார் என்றால்.........................

எண்ணிப் பாருங்கள் அன்பர்களே!

“என்னடா! துன்பம் அதை எட்டி உதை, வாழ்ந்து பார்! எப்போதும் உன்னை நம்பி!
இடுகாடு போனபின் நடுவீடு அழைக்குமோ? ஏறி விளையாடு தம்பி!”

என்ற வரிகளுக்கேற்ப, நம்முடைய பிரச்சனைகளை எல்லாம் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்! வெற்றியும், மகிழ்ச்சியும் நிச்சயம்! அடுத்த கட்டுரையில் சந்திப்போம்! அதுவரை ஆர்ம்ஸ்ட்ராங் குறித்தே சிந்திப்போம்!
-- இக்கட்டுரை "நமது நம்பிக்கை" மார்ச் 2010 இதழில் வெளியாகி உள்ளது
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum