தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சே குவேரா - புரட்சிக்காரர்களின் இதயத் துடிப்பு
மகிழ்ந்தார் பாண்டித்துரை தேவர். EmptyThu Aug 28, 2014 10:03 am by கே இனியவன்

» ஒரு முக்கோணம் - தொலைந்து போகும் மனிதர்கள் - புரியாத மர்மம்
மகிழ்ந்தார் பாண்டித்துரை தேவர். EmptyThu Aug 28, 2014 10:01 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா
மகிழ்ந்தார் பாண்டித்துரை தேவர். EmptyThu Aug 28, 2014 10:00 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் எலியாஸ் -சுரா
மகிழ்ந்தார் பாண்டித்துரை தேவர். EmptyThu Aug 28, 2014 9:59 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா
மகிழ்ந்தார் பாண்டித்துரை தேவர். EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» கென்யா நாட்டு சிறுகதை தமிழில் சுரா
மகிழ்ந்தார் பாண்டித்துரை தேவர். EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதை
மகிழ்ந்தார் பாண்டித்துரை தேவர். EmptyThu Aug 28, 2014 9:57 am by கே இனியவன்

» பிரம்மராஜன் கவிதைகள்
மகிழ்ந்தார் பாண்டித்துரை தேவர். EmptyThu Aug 28, 2014 9:56 am by கே இனியவன்

» K Iniyavan
மகிழ்ந்தார் பாண்டித்துரை தேவர். EmptyThu Aug 28, 2014 9:41 am by கே இனியவன்

» K Iniyavan -karuththu
மகிழ்ந்தார் பாண்டித்துரை தேவர். EmptyThu Aug 28, 2014 9:37 am by கே இனியவன்


மகிழ்ந்தார் பாண்டித்துரை தேவர்.

Go down

மகிழ்ந்தார் பாண்டித்துரை தேவர். Empty மகிழ்ந்தார் பாண்டித்துரை தேவர்.

Post by இறையன் Thu Dec 15, 2011 2:07 pm

மதுரையில் வாழ்ந்த ஸ்காட் துரை என்ற ஒரு ஆங்கிலேய வழக்கறிஞர் தமிழ்மொழியில் ஆர்வம் கொண்டு தமிழ் இலக்கணத்தைக் கொஞ்சம் கற்றுக் கொண்டு தமிழ் இலக்கியங்களையும் படிக்கத் தொடங்கினார். தமிழ் அணி இலக்கணம் பேசும் எதுகை மோனைகளில் பெரும் ஈடுபாடு கொண்டு திருக்குறளில் எதுகை மோனை சரியாக அமையாத இடங்களில் அவற்றைத் திருத்தி இவரே ஒரு புதிய திருக்குறள் பதிப்பை வெளியிட்டார். 'சுகாத்தியரால் (ஸ்காட்டால்) திருத்தியும் புதுக்கியும் பதிப்பிக்கப்பட்ட குறள்' என்பது அந்த புதிய திருக்குறள் நூலுக்கான தலைப்பு.

ஒரு முறை நான்காம் தமிழ்ச்சங்கம் தந்த வள்ளலாம் பாண்டித்துரை தேவரை இந்த ஸ்காட் துரை சந்தித்து தாம் செய்த இந்த 'அரிய' பணியைப் பற்றிச் சொல்லி தாம் பதிப்பித்த நூலின் ஒரு பிரதியையும் கொடுத்தார். அந்தப் பதிப்பில் இருந்த குறைபாடுகளைக் கண்டு மிகவும் மனம் நொந்தார் பாண்டித்துரை தேவர்.

திருக்குறளின் முதல் குறட்பா இப்படி திருத்தப்பட்டிருந்தது.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
உகர முதற்றே உலகு

இப்படியே நூல் முழுக்க நெடுகவும் பெரும்பிழைகள் இருந்தன. தன் சினத்தை மறைத்துக் கொண்டு தேவர் ஸ்காட்டிடம் இந்த நூலின் பிரதிகள் மொத்தத்தையும் தாம் வாங்கிக் கொள்வதாகச் சொன்னார். ஸ்காட்டும் தேவர் தன் அரிய பணியைப் பாராட்டி அதில் மகிழ்ந்து எல்லாவற்றையும் வாங்குவதாக எண்ணிக் கொண்டு தன்னிடம் இருந்த எல்லா பிரதிகளையும் கொண்டு வந்து கொடுத்தார். முன்னூற்றுச் சொச்சம் பிரதிகளுக்கு பிரதி ஒன்றிற்கு ஒரு ரூபாய் வீதம் விலை கொடுத்து எல்லாவற்றையும் வாங்கிய தேவர், இராமநாதபுரம் சென்ற பின் அந்த புத்தகக் கட்டை கொண்டு வரச் செய்து எல்லாவற்றையும் தம் கண் முன் தீயிட்டுக் கொளுத்த வைத்தார்.

'இப்பித்துக்கொள்ளியிடம் எஞ்சியிருந்த முன்னூறு பிரதிகளும் அறிஞர் பாற் சென்று மனத்துன்பம் விளைக்காதிருப்பதற்கும் அறியாதார் திருக்குறளை தாறுமாறாக பாடமோதாமல் இருப்பதற்கும் இது தான் தக்க பரிகாரம்' என்று எல்லோரிடமும் சொல்லி மகிழ்ந்தார் தேவர்.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum