Latest topics
இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதை
2 posters
Page 1 of 1
இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதை
சீன மூலம் : கூ - ச்செங் | தமிழில் : இளங்கோவன்
விளையாட்டு
நேற்றா
அதற்கு முன் தினமா?
இறந்த காலம் என்றே வைத்து கொள்வோம்.
கல்லெடுத்து
கைகுட்டையால் சுற்றி
நீலவானுக்குள் வீசி எறிந்தோம் நாம்.
விண்ணும் மண்ணும்
தலைகீழாய் விழ
கிறுகிறுத்துப் போனோம் நாம்
தகிப்பில் இணைந்த கரங்களைக்
கடவுளின் கோபத்திற்கு அஞ்சி
விடுவித்துக் கொண்டோம்.
ஆனால் இடி கைதட்டவில்லை,
மின்னல் இளிக்கவில்லை,
கல் மட்டும் பூமியில்
பேசாமல் விழுந்தது
கைக்குட்டை?
முதிய மரத்தின் உச்சியில்
காற்றில்
முணு முணுத்துக் கொண்டிருக்கிறது
அது முதல்
நாம் மறுபடியும் சந்திக்கவேயில்லை
ஒவ்வொரு நாளையும் ஏப்பம்விட்டு
கொழுத்துப்போனது தூரம்
எஞ்சியதெல்லாம்
பேசத்தவமிருக்கும்
கல்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Thu Aug 28, 2014 10:03 am by கே இனியவன்
» ஒரு முக்கோணம் - தொலைந்து போகும் மனிதர்கள் - புரியாத மர்மம்
Thu Aug 28, 2014 10:01 am by கே இனியவன்
» டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா
Thu Aug 28, 2014 10:00 am by கே இனியவன்
» டால்ஸ்டாயின் எலியாஸ் -சுரா
Thu Aug 28, 2014 9:59 am by கே இனியவன்
» டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா
Thu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்
» கென்யா நாட்டு சிறுகதை தமிழில் சுரா
Thu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்
» இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதை
Thu Aug 28, 2014 9:57 am by கே இனியவன்
» பிரம்மராஜன் கவிதைகள்
Thu Aug 28, 2014 9:56 am by கே இனியவன்
» K Iniyavan
Thu Aug 28, 2014 9:41 am by கே இனியவன்
» K Iniyavan -karuththu
Thu Aug 28, 2014 9:37 am by கே இனியவன்