தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சே குவேரா - புரட்சிக்காரர்களின் இதயத் துடிப்பு
எனக்கு வேலை இருக்கு!-வி. பத்மா  EmptyThu Aug 28, 2014 10:03 am by கே இனியவன்

» ஒரு முக்கோணம் - தொலைந்து போகும் மனிதர்கள் - புரியாத மர்மம்
எனக்கு வேலை இருக்கு!-வி. பத்மா  EmptyThu Aug 28, 2014 10:01 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா
எனக்கு வேலை இருக்கு!-வி. பத்மா  EmptyThu Aug 28, 2014 10:00 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் எலியாஸ் -சுரா
எனக்கு வேலை இருக்கு!-வி. பத்மா  EmptyThu Aug 28, 2014 9:59 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா
எனக்கு வேலை இருக்கு!-வி. பத்மா  EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» கென்யா நாட்டு சிறுகதை தமிழில் சுரா
எனக்கு வேலை இருக்கு!-வி. பத்மா  EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதை
எனக்கு வேலை இருக்கு!-வி. பத்மா  EmptyThu Aug 28, 2014 9:57 am by கே இனியவன்

» பிரம்மராஜன் கவிதைகள்
எனக்கு வேலை இருக்கு!-வி. பத்மா  EmptyThu Aug 28, 2014 9:56 am by கே இனியவன்

» K Iniyavan
எனக்கு வேலை இருக்கு!-வி. பத்மா  EmptyThu Aug 28, 2014 9:41 am by கே இனியவன்

» K Iniyavan -karuththu
எனக்கு வேலை இருக்கு!-வி. பத்மா  EmptyThu Aug 28, 2014 9:37 am by கே இனியவன்


எனக்கு வேலை இருக்கு!-வி. பத்மா

Go down

எனக்கு வேலை இருக்கு!-வி. பத்மா  Empty எனக்கு வேலை இருக்கு!-வி. பத்மா

Post by இறையன் Mon Dec 19, 2011 11:57 pm

இரண்டாம் உலகப் போரின்போது ஒரு முக்கியமான சர்வதேச ஆளுமையாக உருவெடுத்தவர் வின்ஸ்டன் சர்ச்சில்.

சண்டை உச்சத்தில் இருந்தபோது அவரிடம் யாரோ கேட்டார்கள். ‘இந்தப் போர் என்ன ஆகுமோ என்று நினைத்தால் உங்களுக்குப் பயமோ, கவலையோ இல்லையா?’

‘நீங்கள் என்ன கேட்கிறீர்கள்? எனக்குப் புரியவில்லை.’

‘ஒருவேளை, இந்தப் போரில் எதிரி நாடுகள் ஜெயித்துவிட்டால் இங்கிலாந்து என்ன ஆகும்? அதைப்பற்றி நீங்கள் அவ்வப்போது கவலைப்படுவதுண்டா?’

‘இல்லவே இல்லை’ என்றார் சர்ச்சில். ‘எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. கவலைப்பட நேரம் இல்லை!’

சர்ச்சில் சொன்ன இதே விஷயத்தை வாழ்ந்து காட்டிய ஜென் துறவிகள் பலர் உண்டு. ’இந்தக் கணத்தில் வாழுதல்’ எனும் ஜென் அடிப்படைக் கோட்பாட்டை நீட்டித்துப் பார்த்தால், முந்தைய கணத்தின் முடிவுகளைப்பற்றியோ அடுத்த கணத்தின் சாத்தியங்களைப்பற்றியோ கவலைப்பட நேரமில்லாமல் போகும். இந்தக் கணத்தையே முழுமையாக அனுபவித்து வாழமுடியும்.

ஒரு ஜென் துறவி. அவரிடம் யார் என்ன சொன்னாலும் அமைதியாகக் கேட்டுக்கொள்வார். ஆச்சர்யப்படமாட்டார். கோபப்படமாட்டார். பயப்படமாட்டார். வாழ்த்துச் சொல்லமாட்டார். திட்டமாட்டார். வெறுமனே கேட்டுக்கொள்வார். அவ்வளவுதான்.

இதைப் பார்த்த அவருடைய சிஷ்யர்களுக்கு ஆச்சர்யம். அவர்களெல்லாம் சேர்ந்து தங்களுடைய குருநாதரைப் பரிசோதனை செய்து பார்க்கத் தீர்மானித்தார்கள்.

தினமும் மாலை மூன்று மணியளவில் அவர்களுடைய குருநாதர் தேநீர் தயாரிப்பார். அதைச் சுடச்சுடக் குவளையில் ஊற்றிக்கொண்டு வருவார். வெளியே உட்கார்ந்து இயற்கையை வேடிக்கை பார்த்தபடி அருந்துவார்.

அன்றைக்கு அவர் சூடான தேநீர்க் குவளையோடு நடந்து வரும்போது சில சிஷ்யர்கள் திடீரென்று அவர்முன்னே குதித்தார்கள். பெரிதாகக் கத்தினார்கள்.

குருநாதர் அவர்களைக் கவனிக்கக்கூட இல்லை. அவர் முகத்தில் சிறு சலனமும் இல்லை. மெதுவாக வெளியே நடந்தார். வழக்கமான இடத்தில் அமர்ந்தார். தேநீர் அருந்த ஆரம்பித்தார்.

சிஷ்யர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டார்கள். ‘குருவே, நாங்கள் உங்களைப் பயமுறுத்தினோமே. நீங்கள் பயப்படவே இல்லையே!’

‘அப்படியா? வேலையாக இருந்தேன். கவனிக்கவில்லை’ என்றார் குருநாதர். ‘வேண்டுமானால் உங்களுக்காக இப்போது பயந்து காட்டட்டுமா?’
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum