தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சே குவேரா - புரட்சிக்காரர்களின் இதயத் துடிப்பு
திருமூலர் | திருமந்திரம் - Page 2 EmptyThu Aug 28, 2014 10:03 am by கே இனியவன்

» ஒரு முக்கோணம் - தொலைந்து போகும் மனிதர்கள் - புரியாத மர்மம்
திருமூலர் | திருமந்திரம் - Page 2 EmptyThu Aug 28, 2014 10:01 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா
திருமூலர் | திருமந்திரம் - Page 2 EmptyThu Aug 28, 2014 10:00 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் எலியாஸ் -சுரா
திருமூலர் | திருமந்திரம் - Page 2 EmptyThu Aug 28, 2014 9:59 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா
திருமூலர் | திருமந்திரம் - Page 2 EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» கென்யா நாட்டு சிறுகதை தமிழில் சுரா
திருமூலர் | திருமந்திரம் - Page 2 EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதை
திருமூலர் | திருமந்திரம் - Page 2 EmptyThu Aug 28, 2014 9:57 am by கே இனியவன்

» பிரம்மராஜன் கவிதைகள்
திருமூலர் | திருமந்திரம் - Page 2 EmptyThu Aug 28, 2014 9:56 am by கே இனியவன்

» K Iniyavan
திருமூலர் | திருமந்திரம் - Page 2 EmptyThu Aug 28, 2014 9:41 am by கே இனியவன்

» K Iniyavan -karuththu
திருமூலர் | திருமந்திரம் - Page 2 EmptyThu Aug 28, 2014 9:37 am by கே இனியவன்


திருமூலர் | திருமந்திரம்

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

திருமூலர் | திருமந்திரம் - Page 2 Empty திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Mon Mar 26, 2012 2:08 pm

First topic message reminder :

திருமூலர் | திருமந்திரம் - Page 2 Thirumular
பன்னிரு திருமுறைகளில் திருமூலர் எழுதிய திருமந்திரம் 10ம் திருமுறையாகும். இது மூவாயிரம் பாடல்களைக் கொண்டது. யோகிகள் பல்லாண்டு காலம் உயிர் வாழ்ந்திருப்பார் என்பது நூற் கொள்கை. திருமூலர் ஒரு யோகி. ஆகவே அவர் தான் கற்ற வித்தையை உலகிற்குக் கூறுகின்றார். உடல் வேறு, உயிர்வேறு. இவையிரண்டும் ஒன்று சேர்ந்து இருந்தால் தான் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருட்களையும் அடைய முடியும் என்ற அந்த உபாயத்தைத் திருமூலர் நமக்குக் கூறுகின்றனர். திருமந்திரம் ஒன்பது பகுதிகளாக உள்ளது. ஒவ்வொரு பகுதியும் ஒரு தந்திரம் எனப் பெயர் பெறும். திருமூலர் காலத்துத் தமிழகத்தில் சைவசமயம் இருந்த நிலைமையை உணர இச் செய்திகள் பொருந்துணை புரிய வல்லவை.

பரகாயப் பிரவேசம் என்று கேள்விப் பட்டிருப்பீர்கள் கூடு விட்டுக் கூடு பாய்தல் என்பது அதன் பொருள். அதாவது ஓர் உயிர் தான் குடியிருக்கும் உடலை விட்டு நீங்கி, மற்றோர் உடம்பினுள் நுழைந்து, அவ்வுடம்பிற்கு ஏற்றவாறு செயல் படுதல். விக்கிரமாதித்தன், ஆதிசங்கரர், அருணகிரிநாதர் ஆகியோர் கூடுவிட்டுக் கூடு பாய்ந்த செய்திகளை நாம் படிக்கிறோம். அதுபோல் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகிய திருமூலரும் மூலன் என்பவனின் உடம்பில் புகுந்து ஆகமப் பொருளைக் கூறியுள்ளார். உயிர் வேறு, உடல் வேறு என்ற தத்துவத்திற்குக் கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தை ஓர் உதாரணமாக விளங்குகிறது.

கயிலாய மலையில் நந்தி தேவரின் உபதேசத்தைப் பெற்ற யோகியார் ஒருவர், அவர் அட்டமா சித்தி பெற்றவர். அவர் அகத்தியரிடத்துக் கொண்டு நட்பால் பொதியமலை நோக்கி வந்தார். திருவாவடுதுறையை அடைந்தார். ஆங்கு இறைவரை வணங்கினார். அப்பதியினின்று அகன்று போகும் போது காவிரியாற்றின் கரையில் பசுக்கூட்டம் அழுவதைப் பார்த்தார். அப்பசுக்கள் மேய்க்கும் மூலன் என்ற இடையன் இறந்து கிடந்தான். யோகியார் அப்பசுக்களின் துன்பத்தைப் போக்க எண்ணினார். தாம் பயின்ற சித்தியினால் அம்மூலன் என்பவனின் உடலில் தம் உயிரைப் புகுத்தினார். பசுக்கள் மகிழ்ந்தன. திருமூலர் மாலையில் அப்பசுக்கூட்டங்களைக் கொண்டு அவற்றின் இருப்பிடங்களில் செல்லச் செய்தார். அவை வழக்கம் காரணமாகத் தம் வீடுகளுக்குச் சென்றன. திருமூலர் ஓரிடத்தில் நின்றார். மூலன் என்ற இடையனின் மனைவி தன் கணவன் இன்னும் வரவில்லையே என்று தேடிக் கொண்டு சென்றாள்! தன் கணவன் போல நின்ற யோகியாரைப் பார்த்தாள். அவர்க்கு ஏதோ நேர்ந்து விட்டது என்று எண்ணி அவரைத் தம் இல்லத்துக்கு அழைத்துச் செல்ல முயன்றாள். முடியவில்லை. அதனால் மனம் கவன்று அவள் இல்லம் திரும்பினாள். அன்று இரவு கழிந்தது. மறுநாள் அவள் தன் கணவனின் நிலையைப் பலரிடம் உரைத்தாள். அவர்கள் திருமூலரிடம் சென்றனர். அப்போது திருமூலர் யோகத்தில் இருக்கக் கண்டு அவரை மாற்ற இயலாது என்று மூலனின் மனைவியிடம் உரைத்தனர். அவள் பெரிதும் துன்பம் அடைந்தாள்.

யோகத்தினின்று எழுந்து யோகியார் தாம் வைத்திருந்த உடலைத் தேடிப் பார்த்தார். அது கிடைக்கவில்லை. தம் யோகவன்மையால் இறைவரின் உள்ளத்தை உணர்ந்தார். சிவாகமப் பொருளைத் திருமூர் வாக்கால் கூற வேண்டும் என்பது இறைவரின் திருவுள்ளம். அதனால் தம் உடல் இறைவரால் மறைக்கப்பட்டது என்பதை அறிந்தார். திருமூலர் சாத்தனூரிலிருந்து சென்றபோது இடையர் அவரைப் பின் தொடர்ந்தனர். அவர்க்கு அவர் உண்மையை உரைத்து, திருவாவடுதுறையை அடைந்து இறைவரை வணங்கிக் கோயிலுக்கு மேற்கில் உள்ள அரசமரத்தின் கீழ் சிவராச யோகத்தில் இருந்து மூவாயிரம் ஆண்டுகளில் மூவாயிரம் செய்யுளை இயற்றினார். பின் இறைவரது திருவடி நிழலை எய்தினார்.

முதல் தந்திரம்

யாக்கை நிலையாமை, செல்வ நிலையாமை, இளமை நிலையாமை, கொல்லாமை, புலால் உண்ணாமை, காம அடக்கம், அந்தணர் ஒழுக்கம், அரசன் கடமை, அறஞ்செய்தலின் சிறப்பு, அன்பை வளர்த்தல், பிறர்க்கு உதவி செய்தல், கற்றோரிடமிருந்தும், நூல்களில் இருந்தும் அறிவை வளர்த்தல், மனத்தை விருப்பு வெறுப்புக்களிற் செல்ல விடாமை போன்ற அறிவுரைகள் தரப்பட்டுள்ளன.

இரண்டாம் தந்திரம்

அகத்தியர் தென்னாடு போந்தமை, சிவனுடைய எட்டு வீரச் செயல்கள், லிங்கத்தின் தோற்றம், தக்கயாகம், பிரளயம் பற்றி புராணக் கதைகள் குறிக்கப்பட்டுள்ளன. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் சிவனுடைய ஐந்தொழில்களும், சக்தி, சிவன் விளையாட்டால் உண்டான ஜீவர்கள், விஞ்ஞானகலர், சகலர், பிரளயாகலர் என்னும் மூவகையினர் என்பதும் அவருள் மதிக்கத்தக்கவர் யாவர் என்பது விளக்கப்பட்டுள்ளன. கோவில்களை அழிப்பது தீது சிவநிந்தை தீது, அடியார் நிந்தை தீது, பொறையுடைமை, பெரியாரைத் துணைக் கோடல் என்பன குறிக்கப்பட்டுள்ளன.

மூன்றாம் தந்திரம்

இப்பகுதி முழுவதும் யோகத்தைப் பற்றியது. ஆனால் பதஞ்சலி கூறும் யோக முறையன்று. இயமம் முதலிய எண்வகை யோகமுறைகளும் அவற்றால் அடையும் பயன்களும் பிறவும் கூறப்பட்டுள்ளன.

நான்காம் தந்திரம்

மந்திர சாத்திரம் அல்லது உபாசனா மார்க்கத்தைப் பற்றியது. அஜபா மந்திரம், சபாலி மந்திரம் கூறப்பட்டுள்ளன. திரு அம்பலச் சக்கரம், திரிபுரச் சக்கரம், ஏரொளிச் சக்கரம், பைரவச் சக்கரம், சாம்பவி மண்டலச் சக்கரம், புவனாபதிச் சக்கரம், நவாஷர் சக்கரம் என்பவை பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன.

ஐந்தாம் தந்திரம்

சைவத்தின் வகைகளும் சரியை, கிரியை, யோகம், ஞானம் இவைகளும் கூறப்பட்டுள்ளன. புறச் சமயங்கள் கண்டிக்கப்படுகின்றன. உட் சமயங்கள் ஏற்கப்படுகின்றன.

ஆறாம் தந்திரம்

உயிர் நாடியாக உள்ளவை சிவ குரு தரிசனம். அவனது திருவடிப் பேறு, ஞானத்தில் பொருள் தெரிபவன், தெரியப்பட்ட பொருள், துறவு, தவம், அருளில் இருந்து தோன்றும் ஞானம், தக்கவர் இலக்கணம், தகாதவர் இலக்கணம், திருநீற்றில் பெருமை என்பவையாகும்.

ஏழாம் தந்திரம்

ஆறு ஆதாரங்கள், ஆறு லிங்கங்கள், சமய சிறப்புப் போதனை, ஐம்புலன்களை அடக்கும் முறை, குருவின் வருணனை, கூடா ஒழுக்கம் முதலியன பேசப்பட்டுள்ளன.

எட்டாம் தந்திரம்

சித்தாந்தத்தின் விளக்கம், காரிய காரண உபாதிகள், புறங்கூறாமை சிவ நிந்தை ஒழிப்பு, உண்மை பேசல், ஆசையை ஒழித்தல் முதலியவை கூறப்பட்டுள்ளன.

ஒன்பதாம் தந்திரம்

குரு, குருமடம், குரு தரிசனம், வைணவ சமாதி, ஸ்தூல, சூக்கும, அதிசூக்கும பஞ்சாட்சரங்கள் பேசப்பட்டுள்ளன. இறைவனது நடன வகைகள் முதலியனவும் ஞானம் மலர்தல், ஞானத்தின் சிறப்பும் கூறப்பட்டுள்ளன.

10ம் திருமுறையில் திருமூலரால் பாடப்பட்ட 3047 பாடல்களும் அதன் தெளிவுரையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down


திருமூலர் | திருமந்திரம் - Page 2 Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Mon Mar 26, 2012 3:20 pm

936. அத்திசைக் குள்நின்ற அனலை எழுப்பியே
அத்திசைக் குள்நின்ற நவ்எழுத்து ஓதினால்
அத்திசைக் குள்நின்ற அந்த மறையனை
அத்திசைக் குள்ளுறவு ஆக்கினள் தானே.

பொருள் : அகர கலை விளங்கும் திசையாகிய மூலாதாரத்திலுள்ள மூலக்கனலை எழுப்பி, அத்திசையில் விளங்கும் நகாரத்தை அறிந்து ஓதினதால், அந்தத் திசையில் மறைந்து கிடந்த சிவனை அந்தத் திசையில் சிந்தித்து நின்று உறவாக்கிக் கொண்டேன். நகரம் தூலப் பஞ்சாக்கிரமாகிய நமசிவாயவைக் குறிக்கும்.

937. தானே அளித்திடும் தையலை நோக்கினால்
தானே அளித்திட்டு மேலுற வைத்திடும்
தானே அளித்த மகாரத்தை ஓதிடத்
தானே அளித்ததோர் கல்லொளி யாமுமே.

பொருள் : சிவபெருமான் தானாகவே அளித்தருளும் தூமாயை என்னும் குண்டலியினை ஆராய்ந்தால், சிவம் தானாகவே மேல் நிலையில் வைத்திடும். அதுபோல் மகரமாகிய ஒலியினை ஓதிட முழுமாணிக்க ஒளியாகிய சிவபெருமான் தோன்றுவன். (கல் - மாணிக்கம். தையல்-குண்டலினி. மகாரம் - நாதம். கல்லொளி - மாணிக்க சோதி.)

938. கல்லொளி யேயென நின்ற வடதிசை
கல்லொளி யேயென நின்ற இந்திரன்
கல்லொளி யேயென நின்ற சிகாரத்தைக்
கல்லொளி யேயெனக் காட்டிநின் றானே.

பொருள் : சிவபெருமான் வடதிசையிலுள்ள திருக்கயிலாய மலையைத் தனக்கு உறைவிடமாகக் கொண்டவன். அங்கு அவன் புண்ணிய வேந்தனாகக் போகம் அருளுகிறான். அவனுக்குரிய செந்தமிழ் மந்திர ஐந்தெழுத்தின் முதலெழுத்துச் சிகரம். இது வைர ஒளி போன்று திகழ்வது இதனைக் குன்றின் மேல் இட்ட விளக்கெனக் காட்டினான். (இந்திரன் - வேந்தன்; சிவபெருமான்; மருத நிலக்கடவுள். இந்திரன் இந்திரியத்தை அவித்தவன்; பொறிவாயில் ஐந்து அவித்தவன் சிவன்.)

939. தானே எழுகுணம் தண்சுட ராய்நிற்கும்
தானே எழுகுணம் வேதமு மாய்நிற்கும்
தானே எழுகுணம் ஆவதும் ஓதிடில்
தானே எழுந்த மறையவன் ஆமே.

பொருள் : எழுத்துக்கள் தோன்றுவதற்குரிய பண்பமைந்த ஒலியாகிய அருட்சுடரும் சிவனே. அவ் எழுத்துக்களால் ஆகிய அறிவு நூலாம் மறையும் அவனே. எல்லா நற்பண்புகளுமாய் நிற்பவனும் அவனே. தானாகத் தோன்றிய உள்ளங்கவர்கள்வனும் அவனே. (மறையவன் - கள்வன்; தானே எழுகுணம் - நாதம்)

940. மறையவ னாக மதித்த பிறவி
மறையவ னாக மதித்திடக் காண்பர்
மறையவன் அஞ்செழுத்து உள்நிறகப் பெற்ற
மறையவன் அஞ்செழுத்து தாம்அது வாகுமே.

பொருள் : ஆண்டவன் ஆரூயிர் அனைத்தையும் தன்வண்ணம் ஆக்குவன். அதன் பொருட்டு மானுடப் பிறவியை மதித்து அருளினான். அவ் வுண்மையை உணர்ந்து செந்நெறி ஒழுகி மறையவனாக மதித்திடக் காண்பர். அந்நிலை எய்துவதற்குத் திரு ஐந்தெழுத்தின் உள்ளீடாய் நிற்பவன் சிவன். அந்த ஐந்தெழுத்து ஓதுவார் சிவமாகி வாழ்வர். (அஞ்செழுத்து - சிவயநம. சிவமாதல் - சிவனுக்கு அடிமையாதல்)

941. ஆகின்ற பாதமும் அந்நவாய் நின்றிடும்
ஆகின்ற நாபியுள் அங்கே மகாரமாம்
ஆகின்ற சீயிரு தோள்வவ்வாய்க் கண்டபின்
ஆகின்ற வச்சுடர் யவ்வியல் பாமே.

பொருள் : அன்பாகிய உலகியலும் அருளாகிய வீட்டியலும் சிவன் திருவடியால் ஆகுவன. அத்திருவடிக்கண் நகரம். கொப்பூழின் கண் மகரம். இரு தோளின்கண் சிகரம் - வாயின் கண்வகரம். திருமுடியின் கண் யகரம். இம்முறையாக அம்பலவாணரின் அருமுறைத் தமிழ்த்திரு அமைப்பர். (சுடர் திருமுடி.சி சீ என நீண்டது)

942. அவ்வியல் பாய இருமூன்று எழுத்தையும்
செவ்வியல் பாகச் சிறந்தனன் நந்தியும்
ஒவ்வியல் பாக ஒளியுற நோக்கிடில்
பவ்வியல் பாகப் பரந்துநின் றானே.

பொருள் : முன்னர்க் கூறிய இயல்பை அறிந்து இரண்டாகவும் மூன்றாகவும் உள்ள பஞ்சாட்சரத்தை அறிந்தவர்களிடம் செம்மையாகிய இயல்போடு சிவபரம்பொருள் விளங்கும் ஒகரமாகிய பிரணவமாய் உணர்ந்து ஒளிபொருந்த தியானிக்கில் அக்கரங்களாலான பாவின் தன்மையாய் அஃதாவது நாத மயமாய் எங்கும் வியாபித்து நின்றான். இரண்டு மூன்று எனப்பிரிந்து நம என்பவை விடத்தக்கவை. சிவாய என்பவை கொள்ளத் தக்கவை. (ஓ - ஒ ஆயிற்று.)

943. பரந்தது மந்திரம் பல்லுயிர்க் கெல்லாம்
வரந்தரு மந்திரம் வாய்த்திட வாங்கித்
துரந்திடு மந்திரம் சூழ்பகை போக
உரந்தரு மந்திரம் ஓமென்று எழுப்பே.

பொருள் : அவ்வுண்டு என்பது முதல் இதுவரையும் சிவ மந்திரங்கள் விளக்கப்பட்டன. இவை எல்லா உயிர்கட்கும் வேண்டும் வரந்தரு மந்திரமாகும். அம் மந்திரம் பிறவியாகிய பெரும் பகையை நீக்கும். ஓம் என்று உள்ளன்புடன் கணிக்கத் திருவருள் ஆற்றல் கைகூடும். (எழுப்பவே என்பது எழுபே என்று திரிந்து நின்றது. துரந்திடும் - நீக்கும்)

944. ஓமென்று எழுப்பிதன் உத்தம நந்தியை
நாமென்று எழுப்பி நடுவெழு தீபத்தை
ஆமென்று எழுப்பிஅவ் வாறுஅறி வார்கள்
மாமன்று கண்டு மகிழ்ந்திருந் தாரே.

பொருள் : ஓம் என முதற்கண் ஓசையை எழுப்புதல் வேண்டும். பின்பு நவசிவய என்னும் தமிழ் மந்திரத்தை நவிலுதல் வேண்டும். இதன்கண் நடுவெழு திருவிளக்குச் சிகரமாகும். சிவயநம என்று ஓதுவதே திருவடி சேர வழியாகும். இவ்வுண்மையை அறிபவர்கள் திருச்சிற்றம்பலம் கண்டு என்றும் இன்புற்றிருப்பார்கள். (மாமன்று - திருச் சிற்றம்பலம்)

945. ஆகின்ற சக்கரத் துள்ளே எழுத்துஐந்தும்
பாகொன்றி நின்ற பதங்களில் வார்த்திக்கும்
ஆகின்ற ஐம்பத்து ஓரெழுத்து உள்நிற்கப்
யாகொன்றி நிற்கும் பராபரன் தானே.

பொருள் : திரு அம்பலச் சக்கரத்தில் அமைக்கப்படும் எழுத்துத் திரு ஐந்தெழுத்தாகும். இந்த ஐந்தெழுத்தும் ஐந்து சொற்களின் முதல் எழுத்தாகும். அவை அச்சொற்களின் மூலம் விளக்கமுறும். இந்த ஐந்தெழுத்தின் பொருளாக விரிவனவேயாம் ஐம்பத்தோர் எழுத்தும் இவ் அனைத்தையும் உள்நின்று உய்க்கும் முழுமுதல் சிவ பெருமான் ஒருவனேயாம்.

946. பரமாய் அஞ்செழுத்து உள்நடு வாகப்
பரமாய நவசிவ பார்க்கில் மவயரசி
பரகாய சியநம வாம்பரத்து ஓதில்
பரமாய வாசி மயநமாய் நின்றே.

பொருள் : எவ்வகை மந்திரங்களுக்கும் முதன்மை வாய்ந்ததாய்த் தாயாய்த் திகழும் திரு ஐந்தெழுத்துள் நடுவாள் விளங்குவது ய கரமாகும். இந்த ஐந்தெழுத்து; யநவசிம, மவயநசி, சியநமவ, வசிமயந - என நான்கு வகையாகக் கணிக்கப் படும். இங்ஙனம் எழுத்துக்களை நிலைமாறிக் கணித்தல் பொருள் உண்மை நன்கு புலனாய்ப் பதிதற்கே யாம். ஐந்து எழுத்துள் நடு - யகரம்.

947. நின்ற எழுத்துகள் நேர்தரு பூதமும்
நின்ற எழுத்துகள் நேர்தரு வண்ணமும்
நின்ற எழுத்துகள் நேர்தர நின்றிடில்
நின்ற எழுத்துள்ளும் நின்றனன் தானே.

பொருள் : பஞ்சாட்சரமாய் நின்ற எழுத்துக்களே பூதங்களை இயக்குவனவாம். அங்கு அமைந்துள்ள எழுத்துக்கள் பஞ்சாட்சரத்தின் சொரூபத்தை உணர்த்துவன. சக்கரத்திலுள்ள எழுத்துக்கள் முறையாக நின்றால் பஞ்சாக்கர சொரூபமான சிவமும் அவைகளில் சிறந்து விளங்குவான். (ந - பிருதிவி; ம - அப்பு; சி - அக்கினி. வ-வாயு; ப-ஆகாயம். பஞ்சாட்சரமே வடிவமாகக் கொண்டு சிவன் விளங்குவான்.)

948. நின்றது சக்கரம் நீளும் புவியெல்லாம்
மன்றது வாய்நின்ற மாயநன் னாடனைக்
கன்றது வாகக் கறந்தனன் நந்தியும்
குன்றிடை நின்றிடும் கொள்கையன் ஆமே.

பொருள் : அழிவில்லாத திருஅம்பைச் சக்கரத்தினால் எல்லா உலகமும் நிலை பெறுகின்றன. இத்திரு அம்பலச் சக்கரத்து நிலை பேறாகவுள்ள சிவபெருமானை அச் சக்கர வழிபாட்டினால் நந்தியெம் பெருமான் ஆன்கன்றின் வாயிலாகப் பால் பெறுவது போல் பெற்றுக் கொண்டனன். குன்றிடை நிற்பார் நிலைத்த கொள்கை போல் திருஅம்பலச் சக்கரத்தினால் பெறும் பேறு நிலைத்த பேறாகும். மாய நன்னாடன் மாயா காரியமாகிய நல்ல நாட்டின் தலைவனும் நடந்து வோனும் ஆகின்றவன். (இத்திரு அம்பலச் சக்கரத்தைப் பூசித்து நந்திதேவர் கயிலையில் காவல் தலைமை எய்தினார் என்பர்.)

949. கொண்டஇச் சக்கரத் துள்ளே குணம்பல
கொண்டஇச் சக்கரத் துள்ளே குறிஐந்து
கொண்டஇச் சக்கரங் கூத்தன் எழுத்துஐந்தும்
கொண்டஇச் சக்கரத் துள்நின்ற கூத்தே.

பொருள் : திரு அம்பலச் சக்கரத்தால் பெறப்படும் நன்மைகள் பல. அவற்றுள் படைத்தல், காத்தல், துடைத்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழிற் பெயராகும். மேலும் கூத்தப் பெருமான் தன் திருவுருவினைக் கீழிருந்து மேல் நோக்கின் நமசிவய எனவும், மேலிருந்து கீழ் நோக்கின் சிவயநம எனவும் வழங்கும் செந்தமிழ்த் திரு ஐந்தெழுத்தின் சீருமாகும்.

950. வெளியில் இரேகை இரேகையில் அத்தலை
சுளியில் உகாரமாம் சுற்றிய வன்னி
நெளிதரும் கால்கொம்பு நோவித்து நாதம்
தெளியும் பிரகாரம் சிவமந் திரமே.

பொருள் : திரு அம்பலமாகிய பரவொளியில் சக்கரக் கீற்றுக்கள் இல்லை. திரு அம்பலச் சக்கரத்துள் கீற்றுக்கள் உண்டு. குற்றமற்ற உகரம் தீயின் அடையாளம். நெளிவு சேர்ந்த கோடு ஒளியாகிய விந்துவாகும். நெளிவு இல்லாத நேர்க்கோடு ஒலியாகிய நாதமாகும். இவற்றைத் தெளியும் போது சிவ என்னும் மந்திரமாகும். இரேகை கீற்று.

951. அகார உகாய சிகார நடுவாய்
வகாரமோடு ஆறும் வளியுடன் கூடிச்
சிகார முடனே சிவன்சிந்தை செய்ய
ஒகார முதல்வன் உவந்துநின் றானே.

பொருள் : அகர உகரம் ஓங்காரத்தைக் குறிக்கும். சிகர வகரம் திரு ஐந்தெழுத்தைக் குறிக்கும். இவை ஓம் நமசிவய என ஆகும். இவற்றை ஆறெழுத்து மந்திரம் என்ப. சிவசிவ என்று இடையறாது உயிர்ப்புடன் எண்ணிக் கொண்டிருக்க ஓங்கார முதற் பொருளாகிய சிவபெருமான் தோன்றியருள்வான்.

952. அற்ற இடத்தே அகாரமது ஆவது
உற்ற இடத்தே உறுபொருள் கண்டிடச்
செற்றம் அறுத்த செழுஞ்சுடர் மெய்ப்பொருள்
குற்றம் அறுத்த பொன்போலும் குளிகையே.

பொருள் : துயிலற்ற இடமாகிய புருவ நடுவின்கண் வெளிப்பட்டுத் தோன்றுவது அகரமாகும். அந்த அகரம் நேர்ந்த இடத்து முழுமுதற் சிவத்தைக் கண்டிடச் செய்யும். ஆருயிர்களின் மாசு அகற்றிய விழுச்சுடர் மெய்ப்பொருளாகிய சிவன் செம்பின் குற்றமாகிய களிம்பு அகற்றிப் பசும் பொன்னாக்கும் குளிகையை ஒப்பன். (போலும் ஒப்பில் போலி)

953. அவ்வென்ற போதினில் உவ்வெழுத்து ஆவித்தால்
உவ்வென்ற முத்தி உருகிக் கலந்திடும்
மவ்வென்று என்னுள்ளே வழிப்பட்ட நந்தியை
எவ்வணஞ் சொல்லுகேன் எந்தை இயற்கையே.

பொருள் : அகரத்துடனே உகரத்தையும் ஒலித்தால் அடியார் நடுவுள் இருக்கும் குறிப்பினை உணர்த்துவதாகிய உவ்வென்ற வீடுபேறு பிரிவின்றி எய்தும், மகர நிலையாகிய மனத்தின் கண் விளங்கும் நந்தியாகிய சிவம் என்னை முன்னின்று வழிப்படுத்தும். எம் தந்தையாகிய சிவபெருமான் புரியும் அருளிப் பாட்டை எச் சொல்லால் எடுத்து இயம்புவேன். (உவ்-நடு இடத்தைக் குறிக்கும் அடையாளம், பிரணவத்தின் உச்சரிப்பைக் குறிக்கின்றது இப்பாடல்.)

954. நீரில் எழுத்துஇவ் வுலகர் அறிவது
வானில் எழுத்தொன்று கண்டறிவார் இல்லை
யாரிவ் எழுத்தை அறிவார் அவர்கள்
ஊனில் எழுத்தை உணர்கிலர் தாமே.

பொருள் : நீர்மேல் எழுத்துப் போல் இவ்வுலகியல் அறிவு நிலையற்றதாகும். சிதாகாய மண்டலத்தில் விளங்கும் பிரணவமாகிய ஓர் எழுத்தைக் கண்டு, அதன் அறிவைப் பெறுபவர் யாரும் இல்லை. யார் ஒருவர் இவ் எழுத்தை அறிந்தாரோ அவர் பிரமனால் தலையில் எழுதப்படும் எழுத்தை மீளவும் அடைய மாட்டார்கள். அதாவது மீண்டும் பிறக்க மாட்டார்கள்.

955. காலை நடுவுறக் காயத்தில் அக்கரம்
மாலை நடுவுற ஐம்பதும் ஆவன
மேலை நடுவுற வேதம் விளம்பிய
மூலம் நடுவுற முத்திதந் தானே.

பொருள் : உயிர்ப்பு ஆறுநிலைக் களங்களுள் நடுவாகிய நெஞ்சத் தின் கண்நிற்ப, பெரு வெளியில் தோன்றிய ஓங்காரம் ஐம்பத்தோர் எழுத்துக்களாகிய சொன் மாலையின் நடுமணியாக விளங்கும் மேலும் மறைகளின் நடுவாக விளங்கும் திரு ஐந்தெழுத்தே சிவமூல மந்திரமாகும். அதனை இடையறாது நாட வீடு பேறு ஆகும். (நாட - சிந்திக்க.)

956. நாவியின் கீழது நல்ல எழுத்தொன்று
பாவிகள் அத்தின் பயனறி வாரில்லை
ஓவிய ராலும் அறியவொண் ணாதது
தேவியும் தானும் திகழ்ந்திருந் தானே.

பொருள் : கொப்பூழின் கீழ் மூலத்திடத்துத் திகழும் ஒன்று நல்ல எழுத்தாகிய ஓங்காரம் சிவசிவ என்கிலாத் தீவினையாளர் இதன் பயனை அறிகின்றிலர். இது படைப்போன் முதலாகிய தேவர்களாலும் அறிதற்கு அரியது அம்மையோடு சிவபெருமான் ஆண்டுச் சிறந்திருந்தனன். (நாவி - நாபி, கொப்பூழ். பாவிகள் - தீவினையாளர். ஓவியர் - படைப்போன் முதலிய தேவர்கள்.)

957. அவ்வொரு சவ்வென்ற சரனுற்ற மந்திரம்
அவ்வொரு சவ்வென்றது ஆரும் அறிகிலர்
அவ்வொரு சவ்வென்றது ஆரும் அறிந்தபின்
அவ்வொரு சவ்வும் அனாதியும் ஆமே.

பொருள் : அகரமும் சகரமும் அரனுக்குரிய மந்திரமாகும். மகரத்துடன் கூடிய சகரம் - சம். இதனை யாரும் அறிகிலர். அகரத்துடன் கூடிய சகரமாகிய ச, என்னும் மறையினை எல்லாரும் அறிந்தபின் அகர சகரங்கள் தொன்மையனவாகும். (அனாதி - தொன்மை. இதனை அசபை என்பர். அசபை - அசபா பிக்கப்படாதத் (அசம்))

958. மந்திரம் ஒன்றுள் மலரால் உதிப்பது
உந்தியின் உள்ளே உதயம்பண் ணாநிற்கும்
சந்திசெய் யாநிற்பர் தாமது அறிகிலர்
அந்தி தொழுதுநோய் ஆர்த்துஅகன் றார்களே.

பொருள் : திரு ஐந்தெழுத்தே வழிபாட்டு முதன்மை மந்திரம். அதனை நெஞ்சத்தினிடத்து உயிர்ப்புடன் கணிக்க மலர் வழிபாடு அருச்சனையாகும். கொப்பூழின் உள்ளே உயிர்ப்புடன் கணிக்க ஓம வேள்வியாகும். புறத்தே சந்தி செய்கின்றவர் இவ்வுண்மையினை உணரார். சந்தியாதேவியை வழிபடுவதாகக் கூறிக் கொண்டு வீண் ஆரவாரம் செய்து உண்மையினின்றும் நழுவினவர்கள் ஆகின்றனர்.

959. சேவிக்கு மந்திரம் செல்லும் திசைபெற
ஆவிக்குள் மந்திரம் ஆதார மாவன
பூவுக்குள் மந்திரம் போக்கற நோக்கிடில்
ஆவிக்குள் மந்திரம் அங்குச மாமே.

பொருள் : தொழுகை மந்திரம் யாண்டும் கணிக்கப்படும். அம் மந்திரத்திற்கு உயிரினைப் போன்று நிற்பது ஆறு நிலைக்கள மந்திரமாகுமாம். நெஞ்சத் தாமரைக்குள் நிலைபெறு மந்திரம் எது என்று குற்றமற ஆராயின் ஆருயிருக்கு உயிராகிய திரு ஐந்து எழுத்தாகும். அவை ஐம் பொறிகளாகிய மதயானைகளை அடக்க வல்ல அங்கசமாகும்.

960. அருவினில் அம்பரம் அங்கெழு நாதம்
பெருகு துடியிடை பேணிய விந்து
மருவி யகார சிகார நடுவாய்
உருவிட ஊறும் உறுமந் திரமே.

பொருள் : கண்ணுக்குப் புலனாகாத பரவெளியில் தோன்றுவது நாதம். அவ்விதம் பெருகி நிற்கின்ற ஒலியிடை நிலவுவது ஒளியாகிய விந்து ஆன்மாவாகிய யகாரத்தைச் சிகாரமாகிய இருகண் பார்வைக்கும் நடுவாய் கொண்டு தியானிக்கச் சபியாத பிரணவம் சிறந்து விளங்கும்.

961. விந்துவும் நாதமும் மேவி யுடன்கூடிச்
சந்திர னோடே தலைப்படு மாயிடில்
அந்தர வானத்து அமுதம்வந்து ஊறிடும்
அங்குதி மந்திரம் ஆகுதி யாமே.

பொருள் : விந்துவும் நாதமும் அருளால் பொருந்தி உடன்கூடித் திங்களுடன் தலைப்படுமாயின் ஆயிர இதழ்த் தாமரைப் பரவெளியினின்று ஊற்றெழும் அமிழ்தம் வந்து வெள்ளம் போன்று இடையறாது பெருகும். அவ்விடத்துத் திரு ஐந்தெழுத்து மந்திரமே ஆகுதியாகும். (சந்திரன் - இடைதலை அங்குதி மந்திரம் - அப்போது உண்டாகும் உறுதிப்பாடு.)

962. ஆறெழுத்துஓதும் அறிவார் அறிகிலர்
ஆறெழுத்து ஒன்றான ஓதி உணரார்கள்
வேறெழுத்து இன்றி விளம்பவல் லார்கட்கு
ஓரெழுத் தாலே உயிர்பெற லாமே.

பொருள் : ஆறெழுத்து (ஓம் நமசிவய) மந்திரத்தை ஓதும் அறிவுடையவர்கள், இதனால் அமையவேண்டிய உண்மை நிலையை உணரவில்லை. பஞ்சாட்சரத் தியானத்தால் ஓரெழுத்தாகிய (ஓம் பிரணவத்தை உதிக்கச் செய்யவில்லை. பிரணவத்துடன் வேறுஎழுத்துக்கள் சேர்க்காமலே பிரணவ வித்தையை அறிவார்க்குப் பிரணவத்தாலேயே உயிரின் விளக்க காணலாம்.)

963. ஓதும் எழுத்தோடு உயிர்க்கலை மூவைஞ்சும்
ஆதி எழுத்தவை ஐம்பதோடு ஒன்றென்பர்
சோதி எழுத்தினில் ஐயிரு மூன்றுள
நாத எழுத்திட்டு நாடிக்கொள் வீரே.

பொருள் : எழுத்துக்கள் எல்லாம் முதற்கண் அங்காத்தலில் உண்டாகும் அகரத்தோடு உயிரெழுத்துக்கள் பினைந்தும் பழமையான மெய்யெழுத்துக்கள் முப்பத்தைந்தும் அவற்றோடு சேர்த்து எழுத்துக்கள் ஐம்பத்தொன்றாகும். சோதியை உண்டாக்கும் அகர கலையில் ஏனைய எழுத்துக்களும் சூக்கும மாய் இடம் பெற்றுள்ளன. நாத எழுத்தாகிய உகரத்தை அத்துடன் சேர்த்து அறியுங்கள். (பழைய தமிழ் எழுத்துக்கள் 16+35=51)

964. விந்துவி லும்சுழி நாதம் எழுந்திடப்
பந்தத் தலைவி பதினாறு கலையதாம்
கந்தர வாகரங் கால்உடம்பு ஆயினாள்
அந்தமும் இன்றியே ஐம்பத்தொன்று ஆயதே.

பொருள் : சுழியாகிய விந்துவினின்று எழுத்தோசை தோன்றும். அவ் எழுத்து ஐம்பத்தொன்று என்ப. அவ் எழுத்துக்களின் முதல்வி திருவருள் ஆற்றலாகும். அவள் பதினாறு கலையாக விளங்குவள். இத் ஐம்பத்தோர் எழுததும் அம்மையின் வடிவமாக அமைக்கப்படும்.

965. ஐம்பது எழுத்தே அனைத்தும்வே தங்களும்
ஐம்பது எழுத்தே அனைத்துஆக மங்களும்
ஐம்பது எழுத்தேயும் ஆவது அறிந்தபின்
ஐம்பது எழுத்தும்போய் அஞ்செழுத் தாமே.

பொருள் : ஓங்காரத்துடன் கூடிய ஐம்பத்தோர் எழுத்துக்களால் ஆகியதே பொதுவும் சிறப்புமாகக் கூறப்படும் தொன்மைத் தமிழ் மறையும் முறையும் என்ப மறையை வேதம் எனவும், முறையை ஆகமம் எனவும் கூறுப. இவ் எழுத்துக்களால் ஆகிய பயனை உணர்ந்த பின் இவையனைத்தும் ஒடுங்கி ஐந்தெழுத்தே நின்று நிலவி முதன்மையுறும் என்க.

966. அஞ்செழுத் தால்ஐந்து பூதம் படைத்தனன்
அஞ்செழுத் தால்பல யோனி படைத்தனன்
அஞ்செழுத் தால்இவ் அகலிடம் தாங்கினான்
அஞ்செழுத் தாலே அமர்ந்து நின்றானே.

பொருள் : நமசிவாய என்ற ஐந்து எழுத்துக்கள் முறையே பிரதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களை உற்பத்தி செய்தன. அருவமான உயிர்களுக்கு இப்பூதங்களுடன் பொருந்தி வாழ அவற்றுக்கேற்ற யோனியில் சிருஷ்டியைச் செய்தருளினான். இவ்விரிந்த உலகை ஐம்பூத மயமாக இருந்து தாங்கினான். இத்தகைய ஐந்தெழுத்தாலே உயிர்கள் ஊடேயும் விளங்கி நின்றான். இறைவன் உயிர்களுக்குச் செய்யும் உபகாரம் கூறப்பட்டது.

967. வீழ்ந்தெழ லாம்விகிர் தன்திரு நாமத்தைச்
சோர்ந்ததொழி யாமல் தொடங்கும் ஒருவற்குச்
சார்ந்த வினைத்துயர் போகத் தலைவனும்
போந்திடும் என்னும் புரிசடை யோனே.

பொருள் : விகிர்தனாகிய இறைவனது திருநாமத்தை மனம் சோர்வு அடையாமல் ஓதுவார் இன்ப மயக்கத்திலிருந்து தெளிந்து எழலாம். தலைவனாகிய சடாதரன் ஆன்மாக்களைச் சார்ந்துள்ள வினைகளும் அவற்றால் உண்டாகும் துன்பங்களும் நீங்கப் பிரணவ தொனியினால் என்னுடன் வாருங்கள் என்று அழைப்பான். (புரிடையோன் - திருவாதிரை நாளை விரும்புவோன். சடை - திருவாதிரை நாள்.)

968. உண்ணும் மருந்தும் உலப்பிலி காலமும்
பண்ணுறு கேள்வியும் பாடலு மாய்நிற்கும்
விண்ணின்று அமரர் விரும்பி அடிதொழ
எண்ணின்று எழுத்துஅஞ்சும் ஆகிநின் றானே.

பொருள் : சிவன், அடியவர் உண்ணும் முடிவிலா அமிழ்தம் ஆவான். கால தத்துவம் கடந்த நித்தியப் பொருளாயும் இசை பொருந்திய வேதப் பொருளாயும் பாடலாயும் விளங்குவான். ஆகாய மண்டலத்திலுள்ள தேவர்கள் வணங்க ஆராயுமிடத்துப் பஞ்சாட்சரமாகிய நமசிவாய வடிவமாகவும் இருப்பான்.

969. ஐந்தின் பெருமையே அகவிடம் ஆவதும்
ஐந்தின் பெருமையே ஆலயம் ஆவதும்
ஐந்தின் பெருமையே அறவோன் வழக்கமும்
ஐந்தின் வகைசெயப் பாலனும் ஆமே.

பொருள் : விரிந்த உலகமாகச் காட்சி யளிப்பது நமசிவாய என்ற ஐந்து எழுத்தின் பெருமையாகும். தேவாலயம் விளங்குவதும் ஐந்தெழுத்தின் பெருமையாலேயாம். அறவழியிலே நீதி நிலை பெறுவதும் ஐந்தெழுத்தின் பெருமையாலேயாம். பஞ்ச பூதங்களிலும் விளங்கி அவன் அவற்றின் காவலனாக உள்ளான். (கோயிலில் கருப்பக்கிரகம் - சிகாரம்; அர்த்த மண்டபம் வகாரம்; யகாரம் நந்திபீடம்; நகாரம் - நடராச சபை; மகாரம் - பலிபீடம்.)

970. வேரெழுத் தாய்விண்ணாய் அப்புறமாய் நிற்கும்
நீரெழுத் தாய்நிலந் தாங்கியும் அங்குள்ள
சீரெழுத் தாய்அங்கி யாய்உயி ராம்எழுத்து
ஓரெழுத்து ஈசனும் ஒண்சுட ராமே.

பொருள் : அகரமாயும் ஆகாயமாயும் அதற்கு மேலுள்ள நாதமாயும் உள்ளான். மகாரமாகவும் நகாரமாகவும் உள்ளான். பெருமை மிக்க சிகாரமாய் அக்கினியாய் உயிரான யகாரமாய் உள்ள பிரணவ சொரூபமாய் இருப்பன் சிவன். (நீர் எழுத்து ம; நிலஎழுத்து - ந; சி - அக்கினி; உயர் - ய)

971. நாலாம் எழுத்துஓசை ஞாலம் உருவது
நாலாம் எழுத்தினுள் ஞாலம் அடங்கிற்று
நாலாம் எழுத்தே நவிலவல் லார்கட்கு
நாலாம் எழுத்தது நன்னெறி தானே.

பொருள் : (நமசிவய) உலகம் சத்தி மயமாய் உள்ளது. வகரமாகிய சத்தியில் இவ்வுலகம் ஒடுங்கியது. நாலாம் எழுத்தாகிய வகாரத்தைப் செபிப்பவருக்கு அதுவே ஆதாரமாய் நின்று மேன்மையான நெறியினைக் காட்டும். சிவாய நம என்பதில் நாலாம் எழுத்தாகிய ந எனக் கொண்டு பொருள் கூறுவாரும் உளர்.

972. இயைந்தனள் ஏந்திழை என்னுளம் மேனி
நயந்தனள் அங்கே நமசிவ என்னும்
பயந்தனை யோரும் பதமது பற்றும்
பெயர்ந்தனன் மற்றும் பிதற்றுஅறுத் தேனே.

பொருள் : முன்னம் கூறிய சத்தி ஆன்மாவாகிய என்னுடைய உள்ளத்தை விரும்பிப் பொருந்தினான். அதனையே விரும்பி அங்கே அமர்ந்தனன். நாம் சிவத்துக்கு அடிமை என்ற பயனை ஆராய்ந்து தெளியுங்கள். பிரணவமான பதத்தைப் பற்றுங்கள். உலகப் பற்றை நீங்கினேன். வேறு பிதற்றல்களையும் ஒழித்தேன். தெளிந்த ஞானம் பெற்றேன்.

973. ஆமத்து இனிதிருந்து அன்ன மயத்தினை
ஓமத்தி லேயுதம் பண்ணும் ஒருத்திதன்
நாம நமசிவ என்றிருப் பாருக்கு
நேமத் தலைவி நிலவிநின் றாளே.

பொருள் : சீவர்கள் உயிர்வாழத் தானியத்தில் பொருந்தி அன்னமயமாகப் பக்குவமாகச் செய்ததை, ஓம குண்டமாகிய வயிற்றுத் தீயில் ஆகுதி பண்ணுகின்ற சத்தியின், நாமமாகிய நமசிவ என்று தான் அற்று நிற்பார்க்குக் கிரியையைத் தூண்டும் குண்டலினி சத்தி விளங்குவாள். துணையாவாள் எனினுமாம்.

974. பட்ட பரிசே பரமஞ் செழுத்ததின்
இட்டம் அறிந்திட்டு இரவு பகல்வர
நட்டமது ஆடும் நடுவே நிலையங்கொண்டு
அட்டதே சப்பொருள் ஆகிநின் றாளே.

பொருள் : பூர்வ புண்ணியத்தால் கிடைத்த பரிசே மேலான சிவாய நம என்னும் ஐந்தெழுத்தாம். இவ் ஐந்து எழுத்தில் ஆன்மாக்கள் விருப்பத்துக்கு ஏற்றவாறு இரவு பகலாக நடுவே இடங்கொண் சிவன் நடிப்பான். அவனே அஷ்டமூர்த்தமாகவும் உள்ளான். (எண்பொருள் ; நிலம், நீர், தீ, காற்று, வான், திங்கள், ஞாயிறு ஆருயிர் என்பன. இட்டம் - தியான உறைப்பு)

975. அகாரம் உயிரே உகாரம் பரமே
மகார மலமாய் வருமுப் பதத்தில்
சிகாரம் சிவமாய் வகாரம் வடிவமாய்
யகாரம் உயிரென்று அறையலும் ஆமே.

பொருள் : (அ - உயிராயும், உ-பரமாயும், ம - மலமாயும், பிரணவம் இவ்வாறு மூன்று பதங்களில் வரும். சி - சிவமாய், வ-வடிவுடைய சத்தியாய், ய-உயிராயும் சொல்லுமாகும்.)

976. நகார மகார சிகார நடுவாய்
வகாரம் இரண்டும் வளியுடன் கூடி
ஓகார முதற்கொண்டு ஒருக்கால் உரைக்க
மகார முதல்வன் மனத்தகத் தானே.

பொருள் : நமசிவய என்பதன் கண் சிகரம் நடுவாகும். இரண்டு வளி என்பது இடப்பால், வலப்பால் மூச்சு. இஃது உயிர் அடையாளாமிகய யகரத்தைச் குறிக்கும். இவ் ஐந்துடன் ஓமொழியை முதற்கொண்டு உள்ளன்புடன் ஒருமுறை ஓதினால் மகாரமாகிய நாத மெய்க்குத் தலைவனாகிய சிவபெருமான். ஓதுவார் நெஞ்சை இடமாகக் கொண்டு எழுந்தருள்வான்.

977. அஞ்சுள ஆனை அடவியுள் வாழ்வன
அஞ்சுக்கும் அஞ்செழுத்து அங்குசம் ஆவன
அஞ்சையும் கூடத் தடுக்கவல் லார்கட்கே
அஞ்சாதி ஆதி அகம்புக லாமே.

பொருள் : தேகமாகிய காட்டில் இந்திரியங்களாகிய ஐந்து யானைகள் வாழ்கின்றன. அவ்விதமான இந்திரியங்களாகிய யானைகள் அடக்க ஐந்தெழுத்தாகிய நமசிவாய என்பது அங்குசம் போன்றது அவ் ஐந்தெழுத்தாகிய எழுத்து ஐந்தனைக் கொண்டு ஒருசேர அடக்க வல்லார்கட்கு ஐந்துக்கும் முதலாய ஆன்மாவிடம் புகமுடியும்.

978. ஐந்து கலையில் அகராதி தன்னிலே
வந்த நகராதி மாற்றி மகராதி
நந்தியை மூலத்தே நாடிப் பரையொடும்
சந்திசெய் வார்க்குச் சடங்கில்லை தானே.

பொருள் : நீக்கல், நிலைப்பித்தல், நுகர்வித்தல், அமைதி யாக்கல், அப்பால் ஆக்கல் ஆகிய ஐந்து திருவருள் ஆற்றல்களால் செலுத்தப்படுவன அகர முதலிய எழுத்துக்கள். நமசிவய என்பதைச் சிவயநம எனக் கணித்தல் வேண்டும். மகர முதல்வனாகிய நந்தியை மூலத்திடத்து நாடித் திருவருளோடும் சேர்த்து வழிபடுவார்க்குப் புறச் சடங்குகள் வேண்டா.

979. மருவும் சிவாயமே மன்னும் உயிரும்
அருமந்த போகமும் ஞானமும் ஆகும்
தெருள்வந்த சீவனார் சென்றுஇவற் றாலே
அருள்தங்கி அச்சிவமம் ஆவது வீடே.

பொருள் : பொருந்திய சிவய என்னும் மூன்று எழுத்துக்களும் முறையே அறிவும் செறிவும் ஆவியுமாகும். அறிவு ஞானம். செறிவு யோகம். ஆவி-உயிர். யோகம் என்பது உயிர் திருவருளுடன் கூடுதல். அஃதாவது முழுமுதற் சிவத்தை அகத்தே திருவுருவிற் கண்டு வழிபடுதல். இந்நிலை அருமருந்தன்ன நிலையாகும். திருவடியுணர்வு கைவரப் பெற்ற உயிர் இம்முறை யுணர்ந்து வழிபடத் திருவருளுடன் உயிர் கூடிய நிலையில் அவ்வுயிர் சிவம் என்று அழைக்கப்படும். அதுவே வீடாகும். (பின் பேறு என்பது சிவத்துடன் கூடுதலாகும்.)

980. அஞ்சுக அஞ்செழுத்து உண்மை அறிந்தபின்
நெஞ்சுகத்து உள்ளே நிலையும் பராபரம்
வஞ்சகம் இல்லை மனைக்கும் அழிவில்லை
தஞ்சம் இதுவென்று சாற்றுகின் றேனே.

பொருள் : ஐந்து மலங்குளம் நீங்குதற்குத் திரு ஐந்தெழுத்தின் உண்மை அறிந்து ஓதி ஒழுகுதல் வேண்டும். அப்பொழுது சிவபெருமான் நெஞ்சத்திடத்து நிறைந்து வெளிப்படுவன. அந் நெஞ்சத்தில் பிறவிக்கு வித்தாகிய தீய நினைவுகள் தோன்றா. இவ்வுடம்பும் விரும்பும் நாள் வரையும் அழியாதிருக்கும். இந்நிலையே நமக்கு நிலைத்த புகலிடமாகச் சொல்லப் பெறும். (அஞ்சு+உக = அஞ்சு மலங்கள் நசிக்க. அம்+சுகம் - இன்பம் தரும் என்பது மற்றொரு பொருள்.)

981. சிவாயவொடு அவ்வே தெளிந்து உளத்து ஓதச்
சிவாயவொடு அவ்வே சிவனுரு வாகும்
சிவாயவொடு அவ்வும் தெளியவல் லார்கள்
சிவாயவொடு அவ்வே தெளிந்திருந் தாரே.

பொருள் : சிவய என்பதனோடு முதலாய சிவ என்னும் அவ்விரண்டு எழுத்தையும் கூட்டிச் சிவயசிவ எனத் தெளிந்து உள்ளன்புடன் ஓதுதல் வேண்டும். சிவயசிவ என்பதே சிவபெருமானின் மந்திர வுருவாகும். இவ்வுண்மையினைத் தெளிய வல்லார்கள் சிவசிவ என்று சிறந்திருப்பார்கள்.

982. சிகார வகார யகார முடனே
நகார மகார நடுவுறு நாடி
ஒகார முடனே ஒருகால் உரைக்க
மகார முதல்வன் மதித்துநின் றானே.

பொருள் : சிவய நம என்னும் திரு ஐந்தெழுத்தையும் ஓ மொழியுடன் ஓதுதலும் உண்டு. அங்ஙனம் ஓதுவாரையும், உலகமே உருவமாகக் கொண்டு நடத்தும் சிவபெருமான் திருவுளங் கொண்டு நிற்பன். ஓம் நமசிவய என உலகியலும், இத் திருப்பாட்டில் ஓம் சிவயநம என வீட்டியலும் ஓதப் பெறுகின்றன. உலகியலை வேத நெறியெனவும், வீட்டியலை ஆகம நெறியெனவும் கூறுவர்.

983. நம்முதல் ஓர்ஐந்தின் நாடுங் கருமங்கள்
அம்முதல் ஐந்தில் அடங்கிய வல்வினை
சிம்முதல் உள்ளே தெளிவல் லார்கட்குத்
தம்முதல் ஆகும் சதாசிவத் தானே.

பொருள் : விரும்பிய கருமங்களைச் செய்ய நமசிவாய என்ற மந்திரத்தைக் கொள்ளவும். அந்த முதலாகிய உருத்திரர் வலியவினைகளைச் செய்து முடிப்பார். சிகாரத்தைத் தம்முள்ளே தெளிய வல்லார்கட்குச் சதாசிவரே நம் முதலான உருத்திரை இயக்கித் தொழிற் படுத்துவார். உலகத்தில் காரியங்கள் கைகூட ந முதலாக ஓதவேண்டும். சி முதலாக ஓதினால்õ முத்தி இன்பம் கிட்டும்.

984. நவமும் சிவமும் உயிர்பர மாகும்
தவமொன்று இலாதன தத்துவம் ஆகும்
சிவம்ஒன்றி ஆய்பவர் ஆதர வால்அச்
சிவம்என்ப தானாம் எனும்தெளி வுற்றதே.

பொருள் : தோழமையால் சிவத்தைப் பொருந்தின போது உயிர் பரமாக விளங்கும். சிவத்தைத் தோழமையால் கொள்ள, உடலை வருத்தும் தவங்கள் வேண்டாமையோடு ஆன்மா சிவத்துடன் சார்ந்து பரமாதல் தன்மை அமையும். சிவத்துடன் பொருந்தி உணர்பவர். அருளால் அச்சிவமே தான் என்ற தெளிவு உண்டாயிற்று. (நவம் - தோழமை, தத்துவங்களைக் கூடியபோது உயிருக்கு ஆன்மா என்றும், நீங்கிய போது பரம் என்றும் பெயர்.)

985. கூடிய எட்டும் இரண்டும் குவிந்தறி
நாடிய நந்தியை ஞானத்துள் ளேவைத்து
ஆடிய ஐவரும் அங்குஉறவு ஆவார்கள்
தேடி அதனைத் தெளிந்தறி யீரே.

பொருள் : எட்டும் இரண்டும் அகர உகரம். இவை உயிரும் இறையும் என்று கூறப்படும். எட்டும் இரண்டும் கூடுங்கால் பத்தாகும். பத்தென்பது யகரம். அஃதுயிர், உயிர் சிவத்துடன் ஒன்றி ஒரு மனப்பட்டு நாடப்படும் நந்தியை நாடித் திருவடியுணர்வினுள் வைத்தால் வாடுதலைச் செய்விக்கும் ஐம்புலனும் சிவத்தைத் தேடுதலுக்குத் துணை செய்யும். இங்ஙனம் தேடு நிலையைத் தெளிந்துணர்க.

இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் - Page 2 Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Mon Mar 26, 2012 3:22 pm

986. எட்டும் இரண்டும் இனிதுஅறி கின்றிலர்
எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்
எட்டும் இரண்டும் இருமூன்று நான்கெனப்
பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே.

பொருள் : எட்டும் இரண்டும் பத்து. இதன் அடையாளம் ய யகரம் உயிர். உயிரின் அடையாளக் குறி. இவற்றை யாவரும் இனிதறிய மாட்டார். இதை யறிவல்ல அறிவிலார் இருமூன்று நான்கு கூட்டும் கணக்குப் போல் பத்தென்பர். சிவபெருமான் திருவடியே பத்தென்பதாகும். செந்நெறியில் கூறப்படும் பருமை நுண்மையாகிய திரு ஐந்தெழுத்து பத்தாகும். (சிவக்குறி - சிவக் கொழுந்து - சிவலிங்கம்)

987. எட்டு வரையின்மேல் எட்டு வரைகீறி
இட்ட நடுவுள் இறைவன் எழுத்தொன்றில்
வட்டத்தி லேயறை நாற்பத்தெட் டும்இட்டுச்
சிட்டஞ்சு எழுத்தும் செபிசீக் கிரமே.

பொருள் : குறுக்கும் நெடுக்குமாக எட்டு வரைகள் கீறப்பட்டால் அதன்கண் அறைகள் நாற்பத்தொன்பது அமையும். இதன்கண் நடுவரையில் சிகரம் பொறிக்கப்படுதல் வேண்டும். சுற்றிலுமுள்ள நாற்பத்தெட்டு அறைகளிலும் எஞ்சிய எழுத்துக்களை அடைத்து மேன்மையான ஐந்தெழுத்தை விரைவில் செபிப்பாயாக.

988. தானவர் சட்டர் சதிரர் இருவர்கள்
ஆனஇம் மூவரோடு ஆற்றவர் ஆதிகள்
ஏனைப் பதினைந்தும் விந்துவும் நாதமும்
சேனையும் செய்சிவ சக்கரந் தானே.

பொருள் : நிருதி முதலிய அட்டதிக்குப் பாலகர்கள் பைரவர் எண்மர், நந்தி முதலிய சிவ கணங்கள் எண்மர் ஆகிய இம் மூவகையினரும் வழிப்படுத்துபவர்கள். அகரம் முதல் உயிர் எழுத்துக்களும் விந்து நாத எழுத்துக்களும் ஆகிய சேனையும் சிவ சக்கரமாகும். இந்த தேவர்களுக்குப் பதிலாக வேறு தேவர்களின் பெயர்களை வேறு சிலர் கூறுவர்.

989. பட்டனம் மாதவம் ஆறும் பராபரன்
விட்டனர் தம்மை விகிர்தா நமஎன்பர்
எட்டனை யாயினும் ஈசன் திறத்திறம்
ஒட்டுவன் பேசுவன் ஒன்றறி யேனே.

பொருள் : சிவ சக்கரத்தினுள்ளே சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்னும் நான்கு நெறி நற்றவன் ஆற்றுவிக்கும். சிவபெருமான் திருவடிக்குத் தம்மை ஒப்புவித்தவர்கள் முழுமுதலே நமசிவய என வழுத்துவர். எவ்வளவு காலமும் சிவன் திறமே பேசுவர். அவன் திருவடியினையே உணர்வர். இவையன்றி வேறொன்றும் அறியார். (பட்டணம் - சிவசக்கரம். எட்டணை - எள்+தனை.)

990. சிவன்முதல் மூவரோடு ஐவர் சிறந்த
அவைமுதல் ஆறிரண்டு ஒன்றோடுஒன்று ஆன
அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்
சவைமுதல் சங்கரன் தன்பெயர் தானே.

பொருள் : சிவன் மூவராகவும் ஐவராகவும் திருச்சிற்றம்பலமான சபையில் விளங்குவார். அந்தச் சபையானது ஆறு ஆதாரங்களும் மகேசுர சதாசிவம் பொருந்தியதாய்க் கவிழ்ந்துள்ளன. அவற்றின் விந்துவும் நாதமும் விளங்க அந்நிலையில் அதற்குச் சங்கரன் என்று பெயர். (சங்கரன் - உயிருக்கு இதம் செய்பவன். சவை - சபை. இந்த எண்ணுப் பெயர்களுக்கு வேறு பொருள் கூறுவாறும் உளர்.)

991. வித்தாம் செகமய மாக வரைகீறி
நத்தார் கலைகள் பதினாறு நாட்டிப்பின்
உத்தாரம் பன்னிரண்டு ஆதி கலைதொகும்
பத்தாம் பிரம சடங்குபார்த்து ஓதிடே.

பொருள் : விந்து மயமான சந்திர கலையைப் பிருதிவியிலிருந்து கணக்கிட்டு, விருப்பமுள்ள சந்திரகலைகள் பதினாறையும் நிலை நிறுத்திக் கொண்டு பிறகு மறுபகுதியான பன்னிரண்டு கலைகளில் விளங்கும் சூரியனைச் சேர்க்கப் பத்தான அக்கினி கலைகள் அமையும். இது பிரமத்தை அறியும் கிரியை என்று பஞ்சாட்சரம் ஓதவும். (வித்து - விந்து உத்தாரம் - பங்கு)

992. கண்டெழுந் தேன்கம லம்மலர் உள்ளிடை
கொண்டெழுந் தேன்உடன் கூடிய காலத்துப்
பண்டழி யாத பதிவழி யேசென்று
நண்பழி யாமே நமவென வாமே.

பொருள் : நெஞ்சத் தாமரை யினிடத்துச் சிவபெருமானைக் கண்டெழுந்தேன். அகத்துள் ஒற்றித்து ஒண்மை கொண்டுள்ளேன். சிவசக்கரத்தின் பண்பகலாது அம்முறையைக் கைக்கொண்டு அடிமையாம். உறவெய்தி நமசிவய வாழ்க என வாழ்த்துவோமாக.

993. புண்ணிய வானவர் பூமழை தூவிநின்று
எண்ணுவர் அண்ணல் இணையடி மந்திரம்
நண்ணுவர் நண்ணி நமஎன்று நாமத்தைக்
கண்ணென உன்னிக் கலந்துநின் றாரே.

பொருள் : சிவ உலகத்தில் வாழும் சிவ புண்ணியப் பேறு பெற்றவானவர்கள் அகமலர்ந்த அன்பின் அடையாளமாக முகமலர்ந்து மணங்கமழும் முழுநெறி மலர்கள் தூவி நின்று தொழுவர். சிவபெருமான் திருவடியிணைகளைச் சிவசிவ என இடையறாது வழுத்திச் சேர்வர். நமசிவய என்றும் திருஎழுத்தைக் கண்போன்று கருதிக் கணிப்பர். கணித்துக் கலந்து நின்று களிப்பர். (கணித்தல் - செபித்தல்)

994. ஆறெழுத் தாவது ஆறு சமயங்கள்
ஆறுக்கு நாலே இருபத்து நாலென்பர்
சாவித் திரியில் தலையெழுத்து ஒன்றுள
பேதிக்க வல்லார் பிறவியறி றார்களே.

பொருள் : ஆறு எழுத்துக்களால் ஆயது ஆறு சமயங்கள் என்பர். ஒவ்வோர் எழுத்தையும் நான்கு பாகுபாடு செய்ய ஆறுக்கும் இருபத்து நான்கு எழுத்தாகும். இவ் இருபத்து நான்கு எழுத்தும் காயத்திரி என்ப. காயத்திரியின் முன் சேர்ந்து மொழியும் எழுத்து ஓங்காரம். அவ் ஓங்காரத்து அறிவதாகிய உண்மை காண வல்லார் பிறவா பெருவாழ்வு எய்துவர். (சாவித்திரி - காயத்திரி. 24 எழுத்துக்கள் கொண்டது. தலை எழுத்து - பிரணவம். பேதிக்க. பிரித்தறிய.)

995. எட்டினில் எட்டறை யிட்டு அறையிலே
கட்டிய ஒன்றெட்டாய்க் காண நிறையிட்டுச் சுட்டி
இவற்றைப் பிரணவம் சூழ்ந்திட்டு
மட்டும் உயிர்கட்கு உமாபதி யானுண்டே.

பொருள் : ஓர் கண் எட்டு வீடமைத்து, இவ்வீடுகளைச் சூழ ஓ மொழியமைத்து வழிபடின் உயிர்கள் எய்தும் முடிந்த எல்லையாகிய பெருமுதல் அங்கு வெளிப்படும். (உமாபதி - சிவபெருமான்)

996. நம்முதல் அவ்வொடு நாவினர் ஆகியே
அம்முதல் ஆகிய எட்டிடை யுற்றிட்டு
உம்முதல் ஆகவே உணர்பவர் உச்சிமேல்
உம்முதல் ஆயவன் உற்றுநின் றானே.

பொருள் : நமசிவாய என்ற தூல பஞ்சாட்சரத்துடன் தியானம் செய்து, அகரம் முதலாகிய எட்டு அறைகளை அறிந்து அவற்றின் இடையே பொருந்தி, உகரத்தை முதலாகக் கொண்டு உணர்பவரின் உச்சியில் உகரமாகிய சத்தியின் தலைவன் பொருந்தி நிற்பான்.

தம்பனம்

997. நின்ற அரசம் பலகைமேல் நேராக
ஒன்றிட மவ்விட்டு ஓலையிற் சாதகம்
துன்று மெழுமையுள் பூசிச் சுடரிடைத்
தன்ற வெதுப்பிடத் தம்பனங் காணுமே.

பொருள் : நிலையான அரசம் பலகைமேல் நேராகப் பொருத்த மகரத்தை முதலாக மாற்றி எழுதிப் பனை ஓலையில் அவ்வாறே அடைத்து சாதகன் பொருந்தும் தேன் மெழுகை ஓலையுள் பூசிச் சுடரில் சிறிது வெதுப்பத் தம்பன கன்மமாகும். (தம்பனம் - கட்டுதல் அரசமரம் மெய்யுணர்வு விளங்குவதற்கு நிலைக்களமாகும்.)

மோகனம்

998. கரண இரளிப் பலகை யமன்திசை
மரணம்இட்டு எட்டின் மகார எழுத்திட்டு
வரணமில் ஐங்காயம் பூசி அடுப்பிடை
முரணிற் புதைத்திட மோகன மாகுமே.

பொருள் : கொன்றை மரப் பலகையைக் கருவியாகக் கொண்டு யமன் திசையாகிய தெற்குத் திசையில் அப் பலகையை அமைத்துத் தீமையாகிய பகையை ஒழித்தற்கு மாரக மந்திரத்தை எழுதி எட்டில் மகாரம் மட்டும் இட்டு மறைப்பற்ற ஐங்காயத்தைப் பூசி அடுப்பில் தலை கீழாகப் புதைத்தால் மோகன சத்தியுண்டாம். (நசி என்றது மரண மந்திரம். ஐங்காயம் - சுக்கு, மிளகு, கடுகு, உள்ளி, காயம் ஆகிய ஐந்து. மோகனம் - மயங்க வைத்தல்)

உச்சாடனம்

999. ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்தில்
பாங்கு படவே பலாசப் பலகையில்
காங்கரு மேட்டில் கடுப்பூசி விந்துவிட்டு
ஓங்காமல் வைத்திடும் உச்சா டனத்துக்கே.

பொருள் : அவ்விடம் வடமேற்குப் புலமாகிய வாயுதிக்கில் ஐயனார் கோயிலில் தொழும் படியாகப் புரசப் பலகையில் காரீயத் தகட்டில் நஞ்சு பூசி விந்துவாகிய வட்டம் அமைத்து அதன்மேல் ஓங்காரம் சூழ உச்சாடனத்திற்கு இடவும். (உச்சாடனம் - ஏவுதல்; பேயோட்டுதல்.)

மாரணம்

1000. உச்சியம் போதில் ஒளிவன்னி மூலையில்
பச்சோலை யில்பஞ்ச காயத்தைப் பாரித்து
முச்சது ரத்தின் முதுகாட்டில் வைத்திட
அச்சமற மேலோர் மாரணம் வேண்டிலே.

பொருள் : நண்பகற் போதில் ஒளி உடைத்தாகிய தென் கிழக்கு மூலையில் பச்சையான பனைஓலையில் ஐங்காயத்தைத் தடவி முச்சந்தியிலோ சுடுகாட்டிலோ புதைத்து வைத்திட பகையை அழிக்கும் மாரணமாக. அஃது அமையும் (மாரணம் - ஏவலால் செய்யும் கொலை, வசியம்)

1001. ஏய்ந்த அரிதரம் ஏட்டின்மே லேபூசி
ஏய்ந்த அகாரம் உகாரம் எழுத்திட்டு
வாய்ந்தோர் வில்லம் பலகை வசியத்துக்கு
ஏய்ந்தவைத்து எண்பதி னாயிரம் வேண்டிலே.

பொருள் : பொருந்த அரிதாரம் ஏட்டின் மேலே தடவி அகாரஉகாரங்களை எழுதி, வசியத்துக்குப் பொருந்தி வில்வப் பலகையில் வைத்து எண்பதினாயிரம் உருச் செய்க. (அரிதாரம் - தாளகம்)

ஆகர்ஷணம்

1002. எண்ணாக் கருடனை ஏட்டில் உகாரமிட்டு
எண்ணாப் பொன்னாளில் எழுவெள்ளி பூசிடா
வெண்ணாவல் பலகையில் இட்டுமேற் கேநோக்கி
எண்ணா எழுத்தோடுஎண் ணாயிரம் வேண்டிலே.

பொருள் : எண்ணப்படுகின்ற ஆகர்ஷண முறையாவது ஏட்டில் உகாரத்தையிட்டு, எண்ணுதற்கு அருமையான வியாழக் கிழமைகளில் வெள்ளிப் பொடிப் பூசி, வெண்ணாவல் பலகையில் வைத்து மேற்கு நோக்கி பிரணவத் தியானம் எண்ணாயிரம் செய்க. (கருடணை - என்றும் பாடம். ஒப்பாம் நிலைமை - என்று பொருள்.)

3. அருச்சனை

(அருச்சனை என்பது பூசை அல்லது தேவாராதனை. இங்கு இயந்திரத்திலே மந்திர வடிவிலே இறைவனை எழுந்தருளச் செய்து தியானித்தில் கூறப்பெறும்.)

1003. அம்புயம் நீலம் கழுநீர் அணிநெய்தல்
வம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரம்
தும்பை வகுளம் சுரபுன்னை மல்லிகை
செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே.

பொருள் : இயந்திரத்தில், மந்திர வடிவில் எழுந்தருளச் செய்து தாமரை, நீலோற்பலம், செங்கழுநீர், அழகிய கருநெய்தல், மணம் விரியும் பாக்குப்பூ மாதவி, மந்தாரம், தும்பை, மகிழம்பூ, புன்னை மல்லிகை, சண்பகம், பாதிரி, செவ்வந்தி ஆகிய பதினான்கு வகையான நறுமணமிக்க பூக்களைக் கொண்டு வழிபாடு செய்வாயாக. (மாதவி - குருக்கத்தி; வகுளம் - மகிழம்பூ; அருச்சனை - வழிபாடு. இவற்றில் நால்வகைப்பூக்களும் உண்டு என்க.)

1004. சாங்கம தாகவே சந்தொடு சந்தனம்
தேங்கமழ் குங்குமம் கர்ப்பூரம் காரகில்
பாங்கு படப்பனி நீரால் குழைத்துவைத்து
ஆங்கே அணிந்துநீர் அர்ச்சியும் அன்பொடே.

பொருள் : புனுகு கஸ்தூரி முதலிய சாந்துடன் சந்தனம், மணமிகுந்த குங்குமம், பச்சைக் கருப்பூரம், வயிரம் ஏறிய அகில், ஆகிய இவற்றுடன் அளவாகப் பனி நீர் சேர்த்துக் குழைத்து அவற்றை அணிய வேண்டிய இடங்களில் முறையாக அணிந்து அன்புடன் வழிபடுவாயாக. (சாங்கம் - முறைமை - இவை வாசனைத் திரவியங்கள்.)

1005. அன்புடனே நின்று அமுதமும் ஏற்றியே
பொன்செய் விளக்கும் புகைதீபம் திசைதொறும்
துன்பம் அகற்றித் தொழுவோர் நினையுங்கால்
இன்புட னேவந்து எய்திடும் முத்தியே.

பொருள் : அன்புடனே அமுதத்தை நிவேதித்து, பொன்னொளி தரும் விளக்கு ஏற்றி வைத்துத் திக்கு பந்தனம் செய்து தூப தீபம் கொடுத்து வழிபடுவோர் இம்மைப் பேறும் மறுமை முத்தியும் பெறுவர். (அமதம் - தளிகை. இனம்பற்றி மணியும் இயமும் இயம்புக. செந்தமிழ் மாமறைத்திரு முறை ஓதுக. இயம் - வாத்தியம்.)

1006. எய்தி வழிப்படில் எய்தா தனஇல்லை
எய்தி வழிப்படில் இந்திரன் செல்வமுன்
எய்தி வழிப்படில் எண்சித்தி உண்டாகும்.
எய்தி வழிப்படில் எய்திடும் முத்தியே.

பொருள் : இவ்வண்ணம் எய்தி வழிபட்டால் தாமே வந்து எய்யாத பேறுகள் இல்லை. இவ்வாறு வழிபடின் இந்திரனுடைய செல்வமும் பெற்று எண்வகைச் சித்திகளும் உண்டாகும். இனி இவ்வழிபாட்டால் மறுமைக்கு முத்தியும் சித்திக்கும். வழிப்படில் என்பது செந்நெறிச் செல்வர்கள் சென்ற நெறிப்படியே சென்று வழிபடுதல் என்றாகும்.

1007. நண்ணும் பிறதார நீத்தார் அவித்தார்
மண்ணியே நைவேத் தியம்அனு சந்தானம்
நண்ணிய பஞ்சாங்கம் நண்ணும் செபமென்னும்
மன்னும் மனம்பவ னத்தொடு வைகுமே.

பொருள் : இவ்வண்ணம் எய்திப் பூசிப்பவர்தானே வந்தணையும் பிறர் மனைவியையும் விரும்பாதவராய் இந்திரியங்களை வென்றவராவர். இவரது தூய்மையான நிவேதனம், இடைவிடா யோகம். பொருந்திய பஞ்ச அங்க நமஸ்காரம் பொருந்தும் செபம் ஆகியவை பொருந்தும் மனம் பிராணனோடு நிலை பெற்று நிற்கும். மனம் அடங்க வாயு அடங்கும் என்க. முழங்கை இரண்டு, முழந்தாள் இரண்டும், நெற்றி ஒன்று ஆக ஐந்து உறுப்பும் நிலத்தே படும்படி புரியும் வணக்கம் (மண்ணிய - நான்கு சமைத்த எனினுமாம்)

1008. வேண்டார்கள் கன்மம் விமலனுக்கு ஆட்பட்டோர்
வேண்டார்கள் கன்மம் அதில் இச்சை அற்றபேர்
வேண்டார்கள் கன்மம் மிகுசிவ யோகிகள்
வேண்டார்கள் கன்மம் மிகுதியோர் ஆய்ந்தன்பே.

பொருள் : சிவபெருமானுக்கு மீளா அடிமை யானவர்கள் முனைப்பொடு செய்யும் இருவினைகளையும் வேண்டார். பயன் வேண்டிச் செய்யும் கன்மங்களையும் விரும்பார். சிவயோகமாகிய செறிவு நிலையில் உள்ளார். எவ்வினையும் விரும்பார். தலையன்பு வாய்ந்தவராகிய அறிவு நிலையில் உள்ளாரும் பணியே அன்றிப் பிறப்புக்கு வித்தாகிய வினைகளை விரும்பார். பின் இரண்டடியும் செறிவும் அறிவும் குறிப்பதால் முன் இரண்டும் அடியும் முறையே சீலமும் நோன்பும் முறைப்பனவாகக் கொள்க.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் - Page 2 Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Mon Mar 26, 2012 3:24 pm

1009. அறிவரு ஞானத்து எவரும் அறியார்
பொறிவழி தேடிப் புலம்புகின் றார்கள்
நெறிமனை யுள்ளே நிலைபெற நோக்கில்
எறிமணி யுள்ளே இருக்கலும் ஆமே.

பொருள் : சிவயோகம் அறிவு ஒன்றாலேயே அடையத் தக்கது என்பதைக் கிரியை வழி நிற்போர் உணர்வதில்லை. அவர்கள் நாட்டம் எல்லாம் புறத்தேயுள்ள மூர்த்திப் பூசைத் திரவியம் மந்திரம் செபம் ஆகியவற்றால்தான் அலைந்து கொண்டிருக்கும். நியதிக்கு உட்பட்டுக் கிடைத்த உடம்பினுள் ஒரு நெறிய மனத்தோடு காணில் பிரகாசம் பொருந்தி மணிக்கு உள்ளே விளங்கும் ஒளிபோல இறைவனைக் காணலாம்.

1010. இருளும் வெளியும்போல் இரண்டாம் இதயம்
அருள்அறி யாமையும் மன்னும் அறிவு
மருளிவை விட்டெறி யாமை மயங்கும்
மருளும் சிதைத்தோர் அவர்களாம் அன்றே.

பொருள் : வெளியும் இருளும் போல் நெஞ்சமும் மயக்கம் தருவதாய் அறியாமையும் உயிரில் கலந்திருக்கும் ஆருயிரின் அறிவு அறியாமையை விட்டொழிக்கும் ஆற்றல் உடையதன்று. அதனால் மயங்கும். திருவருள் துணையால் அறியாமையை அகற்றியவர் சிவவழிபாட்டினராவர். (இருளும் வெளி - இருளோடு கூடிய ஆகாயம் எறியாமை - நீங்காமை)

1011. தான்அவ னாக அவனேதான் ஆயிட
ஆன இரண்டில் அறிவன் சிவனாகப்
போனவன் அன்பிது நாலாம் மரபுறம்
தான்அவன் ஆகும்ஒ ராசித்த தேவரே.

பொருள் : தான்சிவன் சிவன்தான் என இரண்டன் வழி தன்னைச் சிவமாகக் காண்பன். சித்திடம் காதல் கொண்டு தன் அறிவைச் சிவ அறிவில் ஒன்று படுத்தி நாலாம் நிலையாகிய சாயுச்சிய நிலையை அடையும் மார்க்கம் இது வாகும். இச்சித்தி பெண்ணை சிவஞானிகள் தம்மைச் சிவம் நடத்தும் என்று தாம் ஒன்றையும் சிந்தியாதவர்களாய் இருப்பர்.

1012. ஓங்காரம் உந்திக்கீழ் உற்றிடும் எந்நாளும்
நீங்கா வகாரமும் நீள்கண்டத்து ஆயிடும்
பாங்கார் நகாரம் பயில்நெற்றி உற்றிடும்
வீங்காகும் விந்துவும் நாதம்மே லாகுமே.

பொருள் : உந்திக்குக் கீழ் எந்நாளும் நிலை பெற்றிருப்பது சுவாதிட்டானத்திலுள்ள அணையா நெருப்பான அக்கினி கலையாகும். இந்தி அக்கினியைச் சிவாக்கினியாக்கச் சிவத்தியானம் செய்தால் சீவர்களை விட்டு அகலாத குண்டலினி சத்தி கண்டத் தானத்தில் வந்து பொருந்துவாள். அழகிய ஒளியுடன் கூடிய நகாரம் சுவாதிட்டானத்தினின்றும் நெற்றியை இடமாகப் பொருந்தும். இந்த இடத்திலிருந்து விந்து நாதங்கள் (ஒளி, ஒலி) உதித்து மேலே செல்லும்.

1013. நமவது ஆசனம் ஆன பசுவே
சிவமது சித்திச் சிவமாம் பதியே
நமவற ஆதி நாடுவது அன்றாம்
சிவமாகும் மாமோனம் சேர்தல்மெய் வீடே.

பொருள் : சிவக் கொழுந்தாகிய சிவலிங்கத்தின் இருக்கையாகிய ஆவுடையார் நம என்னும் எழுத்துக்களாகும். அவ் இருக்கை உயிரே (உயிர் அடையாளம்) ஆவுடையாருக்கு மேலுள்ள தூண் ஒத்துக் காணும் ஒளிப்பகுதி சிவ என்னும் எழுத்துக்களாகும். இச்சிவமே வேண்டும் சித்திகளை அருள்வதாகிய இறையாகும். (மானோம் - பெரிய விடுதலை, ஆசனம் - ஆவுடையார்)

1014. தெளிவரு நாளில் சிவஅமுது ஊறும்
ஒளிவரு நாளில் ஓர்எட்டில் உகளும்
ஒளிவரும் அப்பதத்து ஓர் இரண்டு ஆகில்
வெளிதரு நாதன் வெளியாய் இருந்தே.

பொருள் : உடல் தான்அல்ல என்று தெளிந்த அந்நாளில் சீவனுடைய அண்டத்தில் சிவ ஒளி பிரகாசிக்கும். ஒளிவரும் காலத்தில் அது சந்திர கலையாக விளங்கும். ஒளி வரும்போது பிரிப்புற்றிருந்த சீவனுடைய நிலை சிவத்தோடு ஒன்றாயின் சீவ ஒளி சிவ ஒளியுடன் கலந்து விளங்கும். (எட்டில் உகளும் ஒலி - அகாரத்தில் விளங்கும் ஆன்ம ஒளி.)

4. நவகுண்டம்

(நவகுண்டமாவது மந்திர சித்தி பெற்றவர் அவர் வேண்டும் தொழிலுக்கு ஏற்பக் குண்டம், அமைத்து, அதற்குரிய திரவியத்தால் ஓமம் செய்யும் ஒன்பது வகைக் குண்டம். ஒன்பது குண்டம் - சதுரம், யோனி, பிறை, முக்கோணம், வட்டம், அறுகோணம், பதுமம், அட்ட கோணம், வர்த்துவம் என்பன. அதைக் கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, ஈசானியம் ஈசானியத்திற்கும் கிழக்குக்கும் நடுவு ஆகிய ஒன்பது இடங்களிலும் ஆம். இப் பகுதியில் புறத்தே வழிபடுவது போன்றே அகத்தே வழிபட வேண்டும் என்று கூறப்படுகிறது.)

1015. நவகுண்டம் ஆனவை நான்உரை செய்யின்
நவகுண்டத்து உள்ளெழும் நற்றீபம் தானும்
நவகுண்டத்து உள்ளெழும் நன்மைகள் எல்லாம்
நவகுண்டம் ஆனவை நான்உரைப் பேனே.

பொருள் : அனல் ஓம்பும் குண்டங்கள் ஒன்பது. அதன் தன்மையைச் சொல்லுமிடத்து அதன்கண் சிவமாகிய பேரொளிப் பிழம்பு தோன்றா நிற்கும். எல்லா நன்மைகளும் அவ் அனல் ஓம்புதலால் உண்டாகும். அதன் விளக்கத்தை இனிக் கூறுவாம்.

1016. உரைத்திடும் குண்டத்தில் உள்ளே முக்காலும்
நகைத்தெழு நாற்கோணம் நன்மைகள் ஐந்தும்
பகைத்திடு முப்புரம் பாரங்கி யோடே
மிகைத்தெழு கண்டங்கள் மேலறி யோமே.

பொருள் : சொல்லப்படுகின்ற குண்டத்தில் முப்போதும் சிவக் காதலினால் பிருதிவி மயமான நாற்கோணம் மகிழ்ச்சியினைத் தரும். அதனால் சிருட்டியாகி ஐந்தொழில்களும் நன்மையாம். ஆணவாதி மும்மலங்களும் சிவானுக் கிரகத்தால் கெடும். மூலாதாரத்திலிருந்து கடந்தும் விளங்கும். அதன் விளைவு சொல்ல முடியாது (ஊர்த்துவம் -மேல்.)

1017. மேலெறிந்து உள்ளே வெளிசெய்த அப்பொருள்
கால்அறிந்து உள்ளே கருத்துற்ற செஞ்சுடர்
பார்அறிந்து அண்டம் சிறகற நின்றது
நான்அறிந்து உள்ளே நாடிக்கொண் டேனே.

பொருள் : மேல்நிலை அறிந்து ஆருயிர்க்கு உள்ளேயே வெளிசெய்தருளிய சிவனை, உயிர்ப்பாகிய மூச்சுப் பழக்கத்தால் உள்ளேயே நாடுக. அப்பொழுது சிவமாகிய செஞ்சுடர் விளங்கும் தாங்கும் நிலைக் களங்களை ஆராய்ந்தால் பரவெளி என்னும் ஆகாயம் ஏதொரு தாக்குதலும் இன்றி நின்றது விளங்கும். இவ் உண்மைகளை அருளால் நான் அறிந்து அகத்துள் நாடிக் கொண்டேன். (கால் - பிராணவாயு சிறகற - ஆதாரம் இன்றி.)

1018. கொண்டஇக் குண்டத்தின் உள்ளெழு சோதியாய்
அண்டங்கள் ஈரேழும் ஆக்கி அழிக்கலாம்
பண்டையுள் வேதம் பரந்த பரப்பெலாம்
இன்றுசொல் நூலாய் எடுத்துரைத் தேனே.

பொருள் : இக் குண்டத்தினுள் அனலோம்பும் அந்தணர் அவ் ஆற்றலால் உள்ளெழும் ஒளியாய்த் திகழ்வர். அத்தன்மையால் பதிநான்கு என்னும் எண்ணுள் அடங்கிய உலகங்கள் எல்லாவற்றையும் ஆக்கி, நிறுத்தி, அழிக்கும் வலிமை உண்டாகும். விரிந்த அண்டங்கள் எங்கணும் விரிந்து நிலவியுள்ள பண்டைச் செந்தமிழ் அறிவு நூல்களின் பொருளெல்லாம் திருவருள் துணையால் இந்நாள் இரு நூலாக எடுத்துரைத்தேன். (நூல் - திருமந்திரம்)

1019. எடுத்தஅக் குண்டத் திடம்பதி னாறில்
பதித்த கலைகளும் பாலித்து நிற்கும்
கதித்தனல் உள்ளெழக் கண்டுகொள் வார்க்கே
கொதித்தெழும் வல்வினை கூடகி லாவே.

பொருள் : முறையான அமைக்கப்பட்ட அனற்குண்டத்துள் பதினாறு இதழ்களில் உரிய எழுத்துக்கள் வரையப்படும். கொழுந்து விட்டெரியும் அச்சுடரினைக் காணும் பேற்றினர்பால் மிக்க கொதிப்புடன் தோன்றும் தீவினைகள் சேரமாட்டா. (கலைகள் - அட்சரங்கள்)

1020. கூடமுக் கூடத்தின் உள்ளெழு குண்டத்துள்
ஆடிய ஐந்தும் அகம்புறம் பாய்நிற்கும்
பாடிய பன்னீர் இராசியும் அங்குஎழ
நாடிக்கொள் வார்கட்கு நற்சுடர் தானே.

பொருள் : முந்திச் சந்திப்புக்களோடு கூடிய முக்கோணத்துள் கூத்தப் பெருமான் ஆற்றியருளும் ஐந்தொழிலும் அகம் புறமாய் நிற்கும். சிறப்பித்துச் சொல்லப்படும் பன்னிரண்டு கலையுள்ள உயிர்ப்பும் அங்குத் தோன்றும். அந்நிலையினை எண்ணிப் பார்ப்பார்க்குச் சிவனொளி தோன்றும்.

1021. நற்சுட ராகும் சிரமுக வட்டமாம்
கைச்சுட ராகும் கருத்துற்ற கைகளிற்
பைச்சுடர் மேனி பதைப்புற்று இலிங்கமும்
நற்சுட ராய்எழு நல்லதென் றானே.

பொருள் : நல்ல அனற்சுடர் உச்சியும் முகமும் வட்டமாக அமைந்திருக்கும். அச்சுடரே கைமேல் பயன் தருதற்குரிய ஒன்றாகும். அதனை இடையறாது கருதுவார்க்கு அழகிய உடம்பு அசைவற்று இருக்கும். அவ்வாறு இருப்பார்க்குச் சிவலிங்கம் ஒளிப்பிழம்பாக விளங்கும். இதுவே நன்னெறி என்று அருளினள். (கருத்துற்றகை - தியானிப்பவர் கையில்.)

1022. நல்லதென் றாளே நமக்குற்ற நாயகம்
சொல்லதென் றாளே சுடர்முடி பாதமோ
மெல்லநின் றானை வினவகில் லாதவர்
கல்லதன் றாளையும் கற்றும் வின்னாளே.

பொருள் : நம் உயிர்க்கு உயிராக விளங்கும் திருவருள் அம்மை அனலோம்பும் முறைமை நல்லது என்று அருளினாள். திருந்தெழுத்துமே அருமறையாகிய உபதேசம் என்று அரளினாள். அவளே திருவடி நிலையாக மென்மையுற்று நின்றனள். அவ் அம்மையின் உண்மைத் தன்மையை உணராதவர் கலைகளையும் அதற்கு அடியாகிய மறைகளையும் உணர்ந்தவராயினும் அம்மையும் வேறாகவே நிற்பன். (நாயகம் - அம்மை; வின்னாள் - வேறானவள்)

1023. வின்னாஇ ளம்பிறை மேவிய குண்டத்துச்
சொன்னால் இரண்டும் சுடர்நாகம் திக்கெங்கும்
பன்னாலு நாகம் பரந்த பரஞ்சுடர்
என்ஆகத் துள்ளே இடங்கொண்ட வாறே.

பொருள் : ஒளியையே நாவாகவுடைய இளம்பிறை போல் அமையப் பெற்ற அனற் குண்டத்துச் சிறப்பித்துச் சொல்லப்படும் சிவனும் சிவையும் எல்லாத் திசைகளிலும் சுடர்விட்டு விளங்குவர். முதுகுந் தண்டாகிய மேருவின் இடத்தில் அச்சிவச் சுடர் பல்வகையாகத் தோன்றும். அச் சுடர் ஆருயிரின் அகத்து நிலை கொண்டு விளங்கும். (நாகம் - மேரு)

1024. இடங்கொண்ட பாதம் எழிற்சுடர் ஏக
நடங்கொண்ட பாதங்கள் நண்ணீர் அதற்குச்
சகங்கொண்ட கையிரண்டு ஆறும் தழைப்ப
முகங்கொண்ட செஞ்சுடர் முக்கண னார்க்கே.

பொருள் : அனற் குண்டத்தை இடமாகக் கொண்ட அழகிய திருவடிச்சுடர் ஒப்பில்லாத என்றும் மாறாத திருக்கூத்து இயற்றும் தன்மையாகும். உலகெலாம் விளங்கும் பன்னிரண்டு கலைகளும் நாளும் பெருகத் திருமுகம் கொண்டருளிய செஞ்சுடர் முக்கணப் பராகும். (கை-கலை.)

1025. முக்கணன் தானே முழுச்சுடர் ஆயவன்
அக்கணன் தானே அகிலமும் உண்டவன்
திக்கணன் ஆகித் திகைஎட்டும் கண்டவன்
எக்கணன் தானுக்கும் எந்தை பிரானே.

பொருள் : இயற்கைப் பேர் அன்பு அறிவு ஆற்றல்கள் உடைய சிவன் முக்கண்ணன் என்று அழைக்கப் படுவான். முக்கண்-திங்கள் ஞாயிறு தீ. திங்கள் என்பது அன்பாகிய இடக்கண், ஞாயிறு என்பது ஆற்றலாகிய வலக்கண், தீ என்பது அறிவு ஆகிய நெற்றிக்கண். அம்முக்கண்ணன் எப்பொருட்கும் அந்தத்தைச் செய்பவன். அதனால் அகிலமும் உண்டவன் எனப்படுபவன். அவனே எட்டுத் திசைகளிலும் நீக்கமற நிறைந்து நிற்பவன். உலகோர் கண்ணன் என்றுஎவனைக் கூறுகின்றனரோ அவனுக்கும் இறைவனாவான். அவனே எந்தை என்க.

1026. எந்தை பிரானுக்கு இருமூன்று வட்டமாய்த்
தந்தைதன் முன்னே சண்முகம் தோன்றலால்
கந்தன் சுவாமி கலந்தங்கு இருத்தலான்
மைந்தன் இவனென்று மாட்டிக்கொள் ளீரே.

பொருள் : எம் தந்தையாகிய கடவுளுக்குச் சுடரே திருவுரு அவ்வுரு ஆறு வட்டமாகத் திகழ்ந்து நின்றது. அவ்வட்டத்தினின்றும் அறுமுகக் கடவுள் தோன்றினன். அவனைக் கந்தக் கடவுள் என்றும் வழங்குவர். கந்தக் கடவுளும் சிவபெருமானும் பிரிப்பின்றிக் கலந்து விளங்குகின்றனர். அதனால் தந்தையும் மைந்தனும் ஒருபுடை யொப்பு முறை சாற்றுவர். (கந்தன் ஒன்று பட்டவன்.)

1027. மாட்டிய குண்டத்தின் உள்ளெழு வேதத்துள்
ஆட்டிய காலொன்றும் இரண்டும் அலர்ந்திடும்
வாட்டிய கையிரண்டு ஒன்று பதைத்தெழு
நாட்டும் சுரரிவர் நல்லொளி தானே.

பொருள் : ஓம குண்டத்தில் ஓமம் செய்யுங்கால் ஓதப் பெறும். ஓ மொழி மந்திரத்தின் அகர உகர மகரமாகிய மூன்றும் வெளிப்பட்டு இலங்கும். தீ வினையை வாட்டும் தன்மை வாய்ந்த ஞாயிறு திங்கள், தீ ஆகிய முச்சுடரும் அத்தீவினைகள் பதைத்து எழும்படி நாட்டப் பெறும். அங்ஙனம் நாட்டப் பெறுவார் ஒளியுருவினர் ஆவார்.

1028. நல்லொளி யாக நடந்துல கெங்கும்
கல்லொளி யாகக் கலந்துள் இருந்திடும்
சொல்லொளி யாகத் தொடர்ந்த உயிர்க்கெல்லாம்
கல்லொளி கண்ணுள மாகிநின் றாளே.

பொருள் : திருவருள் ஒளி உலகமெங்கும் நடந்து நன்மையருளும்; உயிர்க்குஉயிராய் உணர்வொளியாகக் கலந்து உள்ளுறையும்; ஆசான் அருளிய குருமொழி கொண்டு ஒழுகுவார்க்கு நிலைபெற்ற ஒளியாய்க் கண்ணுள்ளும் நிற்கும். அதுவே திருவருள் என்க. (சொல்லொளி குருமொழி. கல்லொளி - உணர்வொளி.)

1029. நின்றஇக் குண்டம் நிலையாறு கோணமாய்ப்
பண்டையில் வட்டம் பதைத்தெழு மாறாறும்
கொண்டஇத் தத்துவம் உள்ளே கலந்தெழு
விண்ணுளம் என்ன எடுக்கலு மாமே.

பொருள் : ஓம குண்டம் அறுகோணமாய் அமைக்கப்படும். இவ் அமைப்பு மூலாதாரம் முதலாகச் சொல்லப்படும் ஆறு நிலைக் களங்களையும் குறிக்கும். ஒலி உலகுக்கு முன் முதலாய வட்டம் ஓ மொழி என்க. தொடர்ந்து தோன்றுவனவும் சேர்ந்து தத்துவங்கள் முப்பத்தாறு என்ப. இவைகள் கலந்தெழுப் பெரு வெளியிலும் உள்ளதாம்படி காண்டலும் ஆகும். (ஒலியுலகு - சத்தப் பிரபஞ்சம்)

1030. எடுக்கின்ற பாதங்கள் மூன்றது எழுத்தைக்
கடுத்த முகம்இரண்டு ஆறுகண் ஆகப்
படித்துஎண்ணும் நாவெழு கொம்பொரு நாலும்
அடுத்தெழு கண்ணானது அந்தமி லாற்கே.

பொருள் : சிவ என்னும் எழுத்திரண்டினையும் ஒத்துத் துலங்கும் அம்மையப்பர் திருமுகங்கள் இரண்டு. ஒவ்வொரு முகத்திலும் கண்கள் மூன்று. ஆகக் கண்கள் ஆறு மெய்யுணர்வினர் நாவின் கண் இடையறாது படித்தெழு கொழும்கொம்பாயுள்ளது. சிவசிவ என்னும் நாலெழுத்தாகும். முடிவு பேறில்லாத முழு முதற்சிவனை அடையும் திருவடிப் பேற்றினர்க்கு அதுவே மெய்யுணர்வுக் கண்ணாகும்.

1031. அந்தமில் லானுக்கு அகலிடம் தானில்லை
அந்தமில் லானை அளப்பவர் தாமில்லை
அந்தமில் லானுக்கு அடுத்தசொல் தானில்லை
அந்தமில் லானை அறிந்துகொள் பத்தே.

பொருள் : முடிவு பேறில்லாத சிவனைப் போன்று ஆன்மாவும் முடிவு பேறு இல்லாததே அவ் ஆன்மாவுக்கு உரியதாகக் கொள்ளப்படும் இடம் ஒன்றும் இல்லை. அந்த ஆன்மாக்கள் அளவிறந்தன. அவைகளைத் தனி முறையில் குறிக்கும் சொல் ஏதும் இல்லை. சார்பு முறையில் யகரம் என்ப. யகரம் என்பது யாப்பு என்றாகும். (யாப்பு - கட்டு. இஃது உடலுடனும் அருளுடனும் பிணிப்புறும் தன்மையாகும். பத்து என்பது தமிழ் எண்ணால் எழுதினால் யகரமாகும். அந்தமில்லான் - ஆன்மா.)

1032. பத்திட்டுஅங்கு எட்டிட்டு ஆறிட்டு நாலிட்டு
மட்டிட்ட குண்டம் மலர்ந்தெழு தாமரை
கட்டிட்டு நின்று கலந்தமெய் யாகவும்
பட்டிட்டு நின்றது பார்ப்பதி பாலே.

பொருள் : பத்து, எட்டு, ஆறு, நாலு முதலிய இதழ்களையுடைய தாமரை போல் அமைக்கப்படுவது மூலம் முதலிய நிலைகள். அதற்குமேல் ஓம குண்டத்தில் மலர்ந்தெழு தாமரை கட்டுற்று நின்ற கலந்த உடம்பு என்ப. இவ்வுடம்பகத்து நின்ற உயிர் திருவருளாகிய பார்ப்பதியைப் பொருந்தியுள்ள தென்க. எட்டு அகரமெனவும் கூறுவதுண்டு; ஓம குண்டத்தின் மேல் விரிந்துள்ள தீ மண்டலம் எனவும் கூறுப.

1033. பார்ப்பதி பாகன் பரந்தகை நால்ஐஞ்சு
காற்பதி பத்து முகம்பத்துக் கண்களும்
பூப்பதி பாதம் இரண்டு சுடர்முடி
நாற்பது சோத்திரம் நல்லிரு பத்தஞ்சே.

பொருள் : அம்மையப்பராய் விளங்கும் சிவபெருமான் ஐந்து திருமுகங்களுடன் விளங்குங்கால் அவனைவிட்டு விலகாத அம்மையும் ஐந்து திருமுகங்களுடன் விளங்குவள். இவ் இருவர்க்கும் திருவுடம்பு ஓருடம்பாய் திகழும். அப்போது முகம்பத்து, கண்முப்பது, செவி இருபது, கை இருபது, திருமுடி பத்து, திருவடி இரண்டு என்னும் (62) எண்களை இத்திருப்பாட்டுக் குறிக்கின்றது. இறுதியிலுள்ள இருபத்தஞ்சே என்பதை இருபது தஞ்சே எனப் பிரித்தல் வேண்டும். ஆருயிர்கட்கு இத்திருவுருவே தஞ்ச மென்கே. (தஞ்சே-தஞ்சம். இருபது - இருவகை ஐமுகம்.)

1034. அஞ்சிட்ட கோலம் அளப்பன ஐஐந்தும்
மஞ்சிட்ட குண்டம் மலர்ந்தங்கு இருத்தலால்
பஞ்சிட்ட சோதி பரந்த பரஞ்சுடர்
கொஞ்சிட்ட வன்னியைக் கூடுதல் முத்தியே.

பொருள் : ஐந்து திருமுகங்களோடு கூடிய அருளோன் நிலையாகிய சதாசிவத் திருமேனியும் அதன் விரிவாகிய இருபத்தைந்து என்னும் ஏனைச் சிவத் திருவுருவங்களும், அழகு மிக்கதாகிய ஓம குண்டங்களும் மலர்ந்துள்ளன. அதன்கண் எழும் பரஞ்சுடர் செம்பஞ்சு போலும் ஒளிமிக்கதாகிய பேரொளிப் பிழம்பாகும். அத்தகைய அருமையான ஒளி பிழம்பினைக் கூடுவதே வீடு பேறாகும். !

1035. முத்திநற் சோதி முழுச்சுடர் ஆயவன்
கற்றுற்று நின்றார் கருத்துள் இருந்திடும்
பற்றற நாடிப் பரந்தொளி யூடு போய்ச்
செற்றற்று இருந்தவர் சேர்ந்திருந் தாரே.

பொருள் : வீடு பேற்றை அருள்பவனும், என்றும் ஒருபடித்தாய் பேரொளிப் பிழம்பாய் உள்ளவனுமாய சிவன் ஐயம் திரிபறச் செந்தமிழ்த் திருமுறையும் சித்தாந்தமும் ஒளியுணர்ந்து ஒழுகும் மெய்யடியார் உள்ளத்துள் மிக்கு விளங்குவான். உற்ற பற்றறும் வழிவகைகள் யாதென்று எண்ணி அதன்வழி, ஒழுகுதல் வேண்டும். அவ் வழியாவது செய்யும் செயலெல்லாம் சிவன் செயல் என்னும் உண்மை கண்டு நடத்தல். அது வழிநடப்பார் வெளிச்சத்தின் துணையாக நடக்கின்றோம் என்று எண்ணுவதை ஒக்கும். இறைவனை மறவாது காமம் முதலிய குற்றம் கடிந்திருந்தவர் அவன் திருவடியிற் கலந்து இன்புறுவர்.

1036. சேர்ந்த கலையஞ்சும் சேரும்இக் குண்டமும்
ஆர்ந்த திசைகளும் அங்கே அமர்ந்திடும்
பாய்ந்தஐம் பூதமும் பார்க்கின்ற வன்னியைக்
காய்ந்தவர் என்றும் கலந்தவர் தாமே.

பொருள் : நீக்கல், நிலைப்பித்தல், நுகர்வித்தல், அமைதி யாக்கல், அப்பாலாக்கல் என்று செல்லப்படும் ஐங்கலையும் சேர்ந்தது ஆகும் ஓம குண்டம். ஐங்கலை என்பது ஐவகைத் திருவருள் ஆற்றல்கள். நிறைந்த திசைவிளக்கமும் அங்கே காணப்பெறும். பரந்த நில முதலிய ஐம்பூத உண்மையும் அங்கே புலனாகும். இவற்றைத் திரு நோக்கம் செய்வது செஞ்சுடர்ச் சிவபெருமான். உலக உண்மை உணர்ந்து பற்றற்றவர் அச் சிவபெருமான் திருவடியிற் கலந்து இன்புறுவர்.

1037. மெய்கண்ட மாம்விரி நீர்உலகு ஏழையும்
உய்கண்டம் செய்த ஒருவனைச் சேருமின்
செய்கண்ட ஞானம் திருந்திய தேவர்கள்
பொய்கண்டம் இல்லாப் பொருள்கலந் தாரே.

பொருள் : புலனாம்படி வரையறை செய்யப்பட்ட கடலாற் சூழப்பட்ட உலகங்கள் ஏழு. அவ் ஏழையும் உய்யுமாறு வரையறை செய்த ஒப்பில்லா முழுமுதலைச் சேருங்கள். வரையறை செய்யப்பெற்ற அறிவினால் உணர்வார் தேவரே யாவர். அவர்கள் நிலையில்லாததும் எல்லைப் படுத்தப்பட்டது. இல்லாததுமாகிய மெய்ப் பொருளாம் சிவத்துடன் கலந்திருப்பர்.

1038. கலந்திரு பாதம் இருகர மாகும்
மலர்ந்திரு குண்ட மகாரத்தார் மூக்கு
மலர்ந்தெழு செம்முகம் மற்றைக்கண் நெற்றி
உணர்ந்திரு குஞ்சிஅங்கு உத்தம னார்க்கே.

பொருள் : ஓம குண்டத்து விளங்கும் இறைவன் திருவுருவினை வருமாறு கருதுதல் வேண்டும். செம்மைநிறம் பொருந்திய திருமுகமும் குழிந்த குங்கும நிறமாகிய மூக்கும், நெற்றிக் கண்ணோடு கூடிய முக்கண்ணும் நீண்ட கரிய தலைமயிரும்,இரண்டு திருக்கைகளும், இரண்டு திருவடிகளும் உடைய ஒரு பெரும் பொருளாகக் கருதுக.

1039. உத்தமன் சோதி உளனொரு பாலானாய்
மத்திம னாகி மலர்ந்தங்கு இருந்திடும்
பச்சிம திக்கும் பரந்து குழிந்தன
சத்திமா னாகத் தழைத்த கொடியே.

பொருள் : பெரியோனாகிய சிவபெருமான் பேரொளியாய் இருப்பான். அவன் கட்டிளைஞனாய் காளையாய் விளங்கித் தோன்றுவன், மேற்குத் திக்கிலும் பரந்து சூழ்ந்த விடத்துத் திருவருள் உருவாய்த் திகழ்வான். அச் சிவனார்க்குத் திருவுருவாய் அம்மையும் அமைவள்.

1040. கொடியாறு சென்று குலாவிய குண்டம்
அடியிரு கோணமாய் அந்தமும் ஒக்கும்
படிஏழ் உலகும் பரந்த சுடரை
மடியாது கண்டவர் மாதன மாமே.

பொருள் : ஓம குண்டத்தின் கண் வரையப்பட்ட கோட்டின் வழியே சென்று விளங்கும் அடிப்பகுதியில் இருகோணம் முதலும் முடிவும் ஒத்துள்ள பான்மையாக வரைக. முறையாக ஏழ் உலகும் நிறைந்திருக்கும் பேரொளிப் பிழம்பாகிய சிவனைச் சோர்வு அறாது அகக்கண் கொண்டு நோக்குவார் செல்வன் கழலேத்தும் செல்வம் எய்தியவராவர்.

1041. மாதன மாக வளர்கின்ற வன்னியைச்
சாதன மாகச் சமைந்த குருவென்று
போதன மாகப் பொருந்த உலகாளும்
பாதன மாகப் பரிந்தது பார்த்தே.

பொருள் : இறவாப் பெருஞ் செல்வமாக விளங்கும் ஓமத் தீயினைப் பயிற்ச் முறையாகச் சமைந்த அறிவிப்பு முறையென்று கொள்ள உலகெலாம் ஆளும் சிவபெருமான் பேரருளோடு ஆழ்ந்து நோக்கியருள்வன். (யோதனம் - அறிவிப்பு)

1042.பார்த்திடம் எங்கும் பரந்தெழு சோதியை
ஆத்தமு தாகவே ஆய்நதறி வார்இல்லை
காத்துடல் உள்ளே கருதி இருந்தவர்
மூத்துடன் கோடிய யுகங்கண்ட வாறே.

பொருள் : எல்லா இடங்களிலும் நிறைந்து விளங்குகின்ற பேரொளியை நமக்கு எஞ்ஞான்றுமுள்ள திருவருள் துணை என்று அறிவாரிலர். அப் பேரொளியினை ஓம குண்டத்து அவியாது காத்து அதன் வழியாகச் சிவபெருமானை எண்ணியிருந்தவர் மெய்யுணர்வு பழுத்து உடல் கெடாது கோடிக் கணக்கான ஊழிகள் கண்டு வாழ்வர். (ஆத்தம் - துணை)

1043. உகங்கண்ட ஒன்பது குண்டமும் ஒக்க
அகங்கண்ட யோகியுள் நாடி எழுப்பும்
பகங்கண்டு கொண்ட இப் பாய்கரு ஒப்பச்
சகங்கண்டு கொண்டது சாதன மாமே.

பொருள் : தொன்மை தொட்டுப் போற்றி வருகின்ற ஒன்பது திருவருள் ஆற்றலைக் குறிக்கும் ஒன்பது ஓம குண்டமும் அகத் தவத்தராகிய யோகிகள் அகத்தே வளர்த்துப் பயிலுவர். கருவுக்கு அங்சி வாழும் அவர்களின் பிறப்பு நீங்குவது ஒப்ப இவ்வுலகப் பிணிப்பும் நீங்கும். அங்ஙனம் நீங்க இவ் ஓமப் பயிற்சி துணையாகும்.

1044. சாதனை நாலு தழல்மூன்று வில்வயம்
வேதனை வட்டம் விளையாறு பூநிலை
போதனை போதுஐஞ்சு பொற்கய வாரணம்
நாதனை நாடு நவகோடி தானே.

பொருள் : நாற்கோணம், முக்கோணம், அர்த்தசந்திரன், வட்டம், அறுகோணம், அட்டகோணம், பதுமம், யோனி, நீள்வட்டம் ஒவ்வொன்பதும் நாதனை நாடும் ஒன்பது கோணமுடைய குண்டங்களாம். (குண்டங்களைப் பரியாயமாக மறைத்துக் கூறியவாறு.)

5. சத்தி பேதம் - திரிபுரை சக்கரம்

(சத்தி பேதமாவது, சத்தியே கலைமகள், அலைமகள், மலை மகளாகவுள்ள பேதம். திரிபுரை - மும்மண்டல நாயகி இவளே பரமேஸ்வரனோடு அபின்னமாகப் பிரிப்பின்றியிருந்து பஞ்ச கிருத்தியம் செய்ய வல்லவன். இதனைப் பற்றி விரிவாகப் பேசுவது இப்பகுதி என்க.)

1045. மாமாயை மாயை வயிந்தவம் வைகரி
ஓமையை உள்ளொளி ஓராறு கோடியில்
தாமான மந்திரம் சத்திதன் மூர்த்திகள்
ஆமாய் அலவாந் திரிபுரை யாங்கே.

பொருள் : காரிய உலகு உடல் பொருள்களுக்குக் காரணமாகிய மாமாயையும், அக்காரிய மாயையும் ஒளியாகிய வைந்தவமும் செவி ஓசையும், ஓமொழியும் அதன் உள்ள ஒளியாகிய எழுத்துக்களும் அறுபகைக்கு உடனாகும் அறுகோடி மாயையின் ஆற்றல்களும் தாமே இயங்கும் தன்மையவல்ல. மந்திர உருவமாகிய திருவருள் ஆற்றல் இவற்றை இயைந்து இயக்குகின்றது. அதனால் அவை இயக்க இயங்கும் பொருளாகும். அவ் ஆற்றலே திரிபுரை என்று வழங்கப்படும். அவ்வாறு இயைந்து இயக்கினும் அவ் ஆற்றல் பொருள் தன்மையால் வேறாகும். அறுகோடி வகையாயுள்ள மந்திரங்கள் என்றலும் ஒன்று. சத்தி தன் மூர்த்திகளாம் என்பதற்குச் சத்தியின் எழுத்துவங்கள் என்றலும் ஒன்று (வயிந்தவம் - விந்து. ஓ மாயை - பிரணவம்)

1046. திரிபுரை சுந்தரி அந்தரி சிந்துரப்
பரிபுரை நாரணி யாம்பல வன்னத்தி
இருள்புரை ஈசி மனோன்மனி என்ன
வருபல வாய்நிற்கும் மாமாது தானே.

பொருள் : திரிபுரை யானவள் அக்கினி, சூரியன், சந்திரன் என்ற மூன்று கண்டங்களாக விளங்குபவள். பேரழுகு வாய்ந்தவள், ஆகாய வடிவானவள். உலகைப் பரிந்து காக்கும் செவ்வொளியுள் உள்ளவள். நாரணனுக்குத் திதித் தொழிலை நடத்த மாயா உருவை வழங்கியவள். பலவாகிய நிறத்தையுடையவள். மகேசன் சத்தியாகிக் கருநிறத்தில் விளங்குபவள். சதாசிவ சத்தியாகி நினைப்பவர் மனத்தில் விளங்குபவள். இவ்வாறாகத் திரிபுர தேவி ஒருத்தியே பல சத்திகளாக விளங்குகிறாள். ஒன்பது திருப் பெயர்களும் ஒன்பது ஆற்றல்களைக் குறிப்பினவாகும். (ஸ்திதி - திதி - காத்தல்.)

1047. தானா அமைந்தஅம் முப்புரம் தன்னிடைத்
தானான மூவுரு ஓருருத் தன்மையள்
தானான பொன்செம்மை வெண்ணிறத் தாள்கல்வி
தானான போகமும் முத்தியும் நல்குமே.

பொருள் : இயல்பாகவே அமைந்த முப்புரங்களில் தானே மூவுருவும் ஓர் உருவாம் தன்மையுடையவள். தானே பொன் செம்மை வெண்ணிறத்தை உடையவள். போகத்தையும் மோட்சத்தையும் கல்வியையும் அளிப்பவளாக விளங்கும் வெண்ணிறத் தலைவி கலைமகள் கல்வியையும், பொன்னிறத் தலைவி திருமகள் போகத்தையும் செந் நிறத்தலைவி உமாதேவி முத்தியையும் அளிப்பாள் என்க.

1048. நல்குந் திரிபுரை நாதநா தாந்தங்கள்
பல்கும் பரவிந்து பாரண்ட மானவை
நல்கும் பரைஅபி ராமி அகோசரி
புல்கும் அருளும்அப் போதந்தந் தாளுமே.

பொருள் : திரிபுரை நாதத்தையும் நாதம் கடந்து நாதாந்த நிலையையும் தந்தருளுவாள். பரவிந்துவாக இருந்து பெருகுகின்ற உலகம் முதலான அண்டங்களை நல்குவாள். பரையும் அபிராமியும் அகோரியும் ஆகிய அன்னை அன்போடு தழுவி அருளுவாள். பின் அறிவினை வழங்கி ஆட் கொள்வாள். (அபிராமி - பேரழகி; அகோரி - வாக்குக்கும் மனத்துக்கும் அப்பாற் பட்டவள்.)

1049. தாளணி நூபுரம் செம்பட்டுத் தானுடை
வாரணி கொங்கை மலர்க்கன்னல் வாளிவில்
ஏரணி அங்குச பாசம் எழில்முடி
காரணி மாமணிக் குண்டலக் காதிக்கே.

பொருள் : அழகிய காலணி சிலம்பு; செம்பட்டு உடை; கச்சு கொங்கையில் அணி செய்வது; மலர் அம்பு; கரும்பு வில்; எழுச்சியைத் தரும் அங்குச பாசமும், அழகிய கிரீடத்தையும் கருமையான நீலநிறக் குண்டலத்தையும் உடைய தேவிக்கு ஆம். இராஜேஸ்வரியின் உருவம் கூறியவாறு.

1050. குண்டலக் காதி கொலைவிற் புருவத்துள்
கொண்ட அரத்த நிறமன்னு கோலத்தள்
கண்டிகை ஆரம் கதிர்முடி மாமதிச்
சண்டிகை நாற்றிசை தாங்கிநின் றாளே.

பொருள் : குண்டலங்களைக் காதில் அணிந்தவள்; கொல்லும் தன்மையுள்ள வில் போன்ற வளைந்த புருவத்தை உடையவள்; செந் நிறத் திருமேனி கொண்டு விளங்குபவள். தோளணியையும் கழுத்தணியையும் ஒளி விடுகின்ற முடியினையும் சந்திரனையும் உடைய சண்டிகா தேவி நான்கு திசைகளையுடைய உலகங்களைக் காப்பவளானாள்.

1051. நின்ற திரிபுரை நீளும் புராதனி
குன்றலில் மோகினி மாதிருக் கும்சிகை
நன்றறி கண்டிகை நாற்கால் கரீடணி
துன்றிய நற்சுத்த தாமரைச் சுத்தையே.

பொருள் : உயிர் உய்யக் கலந்து நிற்கும் அம்மை திரிபுரை யாவாள். நிலைபெற்ற தொன்மையள். குறையாத அழகுடையவள். இவள் சீர்களின் சிரசுக்கு மேலுள்ள சிகையில் விளங்குபவள். நன்றாக அறியும் கண்களையுடையவள். நான்கு திசை இடங்களில் உள்ளவற்றைத் தன்பால் இழுக்கும் செயல் புரிபவள். சுத்த தாமரையாகிய சகஸ்ரதளத்தில் விளங்கும் சுத்த வித்தியா தேவியாகும் (நாற்காற் கரீடணி என்பதற்கு யானைவாகனம் உடையவள் எனினுமாம்)

1052. சுத்தவம்பு ஆரத் தனத்தி சுகோதயள்
வத்துவம் ஆய்ஆ ளும்மாசத்தி மாபரை
அத்தகை யான மனஆரணி தானுமாய்
வைத்தஅக் கோல மதியவள் ஆகுமே.

பொருள் : தூய்மையான கச்சினையும் மாலையையும் அணிந்தவள்; இன்ப ஊற்றாகும் இயல்பினள்; பொருளாகக் கொண்டு சீவர்களை ஆட்கொள்கின்ற பெரிய சத்தி; பராபரை; அவ்வாறான மனமாகிய காட்டில் வசிப்பவள்; தானேயாகப் படைத்துக் கொண்ட வடிவத்தையுடைய ஞான சொரூபியாக ஆவாள் அல்லது தானேயாக விளங்கும் சந்திர மண்டலம் ஆவாள்.

1053. அவளை அறியா அமரரும் இல்லை
அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவளன்றி ஐவரால் ஆவதொன்று இல்லை
அவளன்றி ஊர்புகும் ஆறறி யேனே.

பொருள் : திருவருள் ஆற்றலை உணராத தேவர்களும் இலர். திருவருள் துணையின்றிச் செய்யும் சீரிய தவமும் இல்லை. அவள் துணையின்றி அருந்தவப் பேற்றால் படைத்தல் முதலிய ஐந்தொழில்களைச் செய்யும் ஐங்கடவுளராலும் ஆவதொன்று இல்லை. அவள் தன் அருள் துணையில்லாமல் திருவடிப் பேறு கைகூடச் செய்யும் செந் நெறியும் இல்லை. (ஊர் - முத்தியுலகம்)

1054. அறிவார் பராசத்தி ஆனந்தம் என்பர்
அறிவார் அறிவுரு வாம்அவள் என்பர்
அறிவார் கருமம் அவள்இச்சை என்பர்
அறிவார் பரனும் அவளிடத் தானே.

பொருள் : திருவடி உணர்வு கைவந்த மெய்கண்டார் அருள் அம்மையின் திருவுருப் பேரின்பம் என்பர். அறிவுதரு எனவும் கூறுவர். ஐந் தொழிலும் அவளது விழைவாகிய திருவுள்ளம் என்பர். விழுமிய முழுமுதற் சிவனும் அவளிடமாகக் கொண்டு திகழ்பவன் என்பர். சத்தி, சிவம் வேறின்றி உள்ள நிலையைக் கூறிற்று இம்மந்திரம்.

1055. தான்எங்கு உளன்அங்கு உளதுதையல் மாதேவி
ஊன்எங் குளஅங்கு உள்ளுயிர்க் காவலன்
வான் எங் குளஅங் குளேவந்தும் அப்பாலாம்
கோன் எங்கும் நின்ற குறிபல பாரே.

பொருள் : சிவமாகிய தான் எங்கு உள்ளதோ அங்கு உள்ளது தையலாகிய பராசக்தி. ஊனலாகிய உடல் எங்கோ அங்கு உயிர்க்குயிராகிப் காவலனாக இருப்பவள். ஆகாயம் எங்கெங் உள்ளதோ அங்கு அங்கு எல்லாமும் அதற்கு அப்பாலாம் பரவெளியிலும் விளங்கும் அவ்வாறு தலைவனாகத் தேவியே நின்ற குறிப்புகளை ஆராய்ந்து அறிக. வந்தும் அப்பாலாம் என்பதற்கு மந்த மாருதம் என்றும் பாடபேதம் உள்ளது. (மந்தமாருதம் - தென்றற் காற்று)

1056. பராசத்தி மாசத்தி பல்வகை யாலும்
தராசத்தி யாய்நின்ற தன்மை யுணராய்
உராசத்தி ஊழிகள் தோறும் உடனே
பராசத்தி புண்ணிய மாகிய போகமே.

பொருள் : பராசத்தியே பலவகையாலும் மேன்மை வாய்ந்தவள். யாவற்றையும் தாங்கும் ஆதார சத்தியாய் நின்ற தன்மையை உணர்க. எங்கும் பரவுகின்ற சத்தியும் அவளே. எல்லா ஊழிகளிலும் ஆருயிர்களைக் காக்கும் ஆற்றல் உடையவளும் அவளே. புண்ணிய பயனைத் தந்தருளும் வாழ்வும் அவளேயாம்.

1057. போகஞ்செய் சத்தி புரிகுழ லாளொடும்
பாகஞ்செய்து ஆங்கே பராசத்தி யாய்நிற்கும்
ஆகஞ்செய்து ஆங்கே அடியவர் நாள்தொறும்
பாகஞ்செய் ஞானம் படர்கின்ற கொம்பே.

பொருள் : சீவர்களுக்குப் போகத்தை ஊட்டுபவன். குண்டலினி சத்தியோடு பொருந்திச் சீவர்களுக்குப் பரிபாகத்தைச் செய்து பராசத்தியாய் நிற்கும் அடியார்களுக்கு நாள்தோறும் வளர்கின்ற ஒளியுடலை அளித்துப் பரிபாகம் உண்டாகும்படி செய்யும் கொழு கொம்பாகவும் விளங்குவாள். பராசத்தியே போகத்தையும் ஞானத்தையும் கொடுப்பவள் ஆவாள்.

1058. கொம்புஅனை யாளைக் குவிமுலை மங்கையை
வம்பவிழ் கோதையை வானவர் நாடியைச்
செம்பவ ளத்திரு மேனிச் சிறுமியை
நம்பிஎன் உள்ளே நயந்துவைத் தேனே.

பொருள் : கொம்பு போன்று துவளும் இடையினை யுடையானை, குவிந்த அழகிய மார்பினையுடைய மங்கையை, மணங்கமழ்கின்ற மலர் சூடிய கூந்தலை யுடையாளைச் சிவவுலகத்துள்ளார். இடையறாது சிந்தித்துத் தொழும் செல்வியைச் செம்மையான பவழம் போலும் திருமேனியையுடைய இளநங்கையை மும்மைக்கும் பெருந்துணை யென்று உறுதியாக நம்பி மிக விரும்பி என் உள்ளத்துள் வைத்தேன். (சிறுமி - கௌரி)

1059. வைத்த பொருளும் மருவுயிர்ப் பன்மையும்
பத்து முகமும் பரையும் பராபரைச்
சித்தக் கரணச் செயல்களும் செய்திடும்
சத்தியும் வித்தைத் தலையவ ளாமே.

பொருள் : உலகில் உண்டு பண்ணி வைத்த பொருளும் அவற்றோடு பொருந்திய உயிர்க்கூட்டமும், பத்துத் திசையிலும் நிறைந்து காக்கும் பத்து முகங்களை உடையவளும் பரையும் பராபரையும், அந்தக் கரணம் நான்கனையும் செயல்படுத்துபவளும் ஆகிய தேவி ஸ்ரீ வித்தைக்கும் தலைவியாம். ஸ்திரீ தேவதையால் கிடைக்கும் ஞானத்துக்கு வித்தை என்றும் புருஷ தேவதையால் கிடைக்கும் ஞானத்துக்கு கல்பம் என்று பெயர்.

இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் - Page 2 Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Mon Mar 26, 2012 3:27 pm

1060. தலைவி தடமுலை மேல்நின்ற தையல்
தொலைவில் தவம்செய்யும் தூய்நெறித் தோகை
கலைபல வென்றிடும் கன்னியென் உள்ளம்
நிலைபெற இங்கே நிறைந்துநின் றாளே.

பொருள் : திருவருள்ளம்மை அண்ணாந்து ஏந்திய வனமுலையினையுடைய தையலாகிய தலைவி. அவளே கெடாத நற்றவஞ் செய்யும் செந்நெறித் தோகை. மறைமுறை முதலாகிய உறுதி நூல்களும் இலக்கண இலக்கிய முதலிய எழில் நூல்களும் உலகுய்ய உள்நின்ற உணர்த்தியருளிய என்றும் ஒரு படித்தாம் கன்னியவாளும் அவளே என்னுள்ளம் அவள்பால் நிலைபெற்று நிற்பதன் பொருட்டு வெளிப்பட்டு நின்றனள். (மறை - வேதம். முறை - ஆகமம்)

1061. நின்றவள் நேரிழை நீள்கலை யோடுற
என்றன் அகம்படிந்து ஏழுல கும்தொழ
மன்றது ஒன்றி மனோன்மனி மங்கலி
ஒன்றெனோடு ஒன்றிநின்று ஒத்து அடைந்தாளே.

பொருள் : நிறைந்து நின்ற அத் திருவருள் அம்மை சிறந்த அறிகலன்களை உடையவள். அழிவில்லாத நிறைந்த முழுக் கலைகளுடன் என நெஞ்சத்து வீற்றிருந்தனள். அவளே எல்லா உலகினரும் வந்து எளிதாகத் தொழும்படி பொன்னம்பலத்தின்கண் பொருந்தி நின்றனள். மனோன்மனி எனவும் மங்கலம் உடையவள் எனவும் அழைக்கப் படுபவளும் அவளே அவள் சிவத்துடன் வேறு அற ஒன்றி நின்று யாண்டும் ஒத்து உறைந்தனள் என்க.

1062. உணர்ந்துட னேறிந்கும் உள்ளொளி யாகி
மணங்கமழ் பூங்குழல் மங்கையும் தானும்
புணர்ந்துட னேநிற்கும் போதருங் காலைக்
கணிந்தெழு வார்க்குக் கதியளிப் பாளே.

பொருள் : ஆருயிர்கட்கு விளக்கும் கருவியாக அமைந்து சிவத்துடன் கூடி உடனாய் நிற்பவள். அக வொளியாய் விளங்குவாள். மலர் சூடிய கூந்தலையுடைய மங்கையும் அத்திருவுருவுள் விளங்கும் சிவமுடன் ஒன்றாய் வெளிப்பட்டு அருள்வள். அப்பொழுது அவ் அம்மையைத் தூய மனத்துள் நாடி முயல்வார்க்கு அவள் நன்னிலையை நல்கி யருள்வள். (கணிந்தெழுதல் - நாடி முயலுதல். கதி - நன்னிலை)

1064. அளியொத்த பெண்பிள்ளை ஆனந்த சுந்தரி
புளியுறு புன்பழம் போலுள்ளே நோக்கித்
தெளியுறு வித்துச் சிவகதி காட்டி
ஒளியுற வைத்தென்னை உய்யவுண் டாளே.

பொருள் : அனைத்து உயிர்களிடத்தும் சமமான தலையணி செய்யும் பெண் பிள்ளை பேரின்பம் பேரழகி மெய்யடியார் உள்ளம் புளியம் பழமும் தோடும் ஒன்றாயிருந்தும் ஓட்டுப் பற்றின்றி நிற்பது போல் உலகியலில் பற்றின்றி நிற்கும். அந்நிலையினை நோக்கி உண்மையினைத் தெளிவிப்பள். உயிரின் அழியாத் தன்மையினையும் சிவனுடன் கூடும் பேரின்ப நிலையினையும் காட்டுவள். அதன்பின் திருவடியுணர்வு வண்ணமாய் நம்மை ஆக்குவள். அம் முறையில் அடியேனையும் உய்யக் கொண்டாள் என்க.

1065. உண்டில்லை என்றது உருச்செய்து நின்றது
வண்தில்லை மன்றினுள் மன்னி நிறைந்தது
கண்டிலர் காரண காரணி தம்மொடு
மண்டல முன்றுற மன்னிநின் றாளே.

பொருள் : உலகோர் உண்டு என்றும் இல்லை என்றும் கூறிய சத்தியே, சூக்குமத்தைத் தூலமாகச் செய்து வளப்பம் பொருந்திய தில்லை மன்று என்று கூறப்பெறும் சிற்றம்பலத்தில் நிலைபெற்று நின்றது. ஆன்மாவின் பந்த மோட்சங்களுக்குக் காரணம் அறிவுருவான சிவத்தினிடம் உள்ளது என்பதையும் உலகோர் அறிவதில்லை. ஆன்மாக்களது மூன்று மண்டலங்களிலும் நிலைபெற்று விளங்கினாள்.

1066. நின்றாள் அவன்தன் உடலும் உயிருமாய்ச்
சென்றான் சிவகதி சேரும் பராசத்தி
ஒன்றாக என்னுள் புகுந்துணர் வாகியே
நின்றாள் பரஞ்சுடர் ஏடுஅங்கை யாளே.

பொருள் : சிவபெருமானின் உடலும் உயிருமாக என்றும் நிற்பவள் திருவருள் அம்மை. மெய்யடியார்களைச் சிவனிலையில் சேர்ப்பிக்கும் வனப்பாற்றலாகிய அருளம்மை என் நெஞ்சத்தால் கலப்பால் ஒன்றாய்ப் பொருள் தன்மையால் வேறாய் உயிர்க்கு உயிராதல் தன்மையால் உடனாய்ப் புகுந்து நின்றனள். பேருணர்வாகவே நின்றனள். பேரொளி யாகவும் நின்றனள். செந்தமிழ் மறையும் முறையும் வரைந்த திருஏடு அங்கையில் உள்ளவள். (அவன் சிவபெருமான் - பராசத்தி - வனப்பாற்றல்.)

1067. ஏடங்கை நங்கை இறைஎங்கள் முக்கண்ணி
வேடம் படிகம் விரும்புவெண் தாமரை
பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள்
சூடுமின் சென்னிவாய்த் தோத்திரம் சொல்லுமே.

பொருள் : வாக்கு ரூபத்தில் விளங்குபவள். எங்களது இறைவி மூன்று கண்களையுடையவள். படிகம் போன்ற தூய வெண்ணிறத்தாள். வெண் தாமரையில் விரும்பி இருப்பவள். நாத மயமாய் விளங்குபவள். இவளைச் சிரசில் அணியுங்கள். புகழ்ந்து இவளைத் துதியுங்கள்.

1068. தோத்திரம் செய்து தொழுது துணையடி
வாய்த்திட ஏத்தி வழிபடு மாறிடும்
பார்த்திடும் அங்குச பாசம் பசுங்கரும்பு
ஆர்த்திடும் பூம்பிள்ளை ஆருமாய் ஆதிக்கே.

பொருள் : திருமுறைகளை ஓதிப் புகழ்ந்து தொழுக. இரண்டு திருவடிகளையும் பேறு வாய்க்குமாறு ஏத்தி என்றும் வழிபடு நெறியில் உரைத்து நிற்க. தோட்டியும் கயிறும், கரும்பு வில்லும், பூங்கணையும், உடையவள் அம்மை. சிவமெய்யினின்றும் சிவை மெய் தோன்றினமையால் ஆதித் திருவருளுக்கு அவள் பிள்ளை முறையுமாம். (சிவை சத்தி; மெய் - தத்துவம் வழிபடும் ஆறு இரும் - வழிபாடு செய்யும் நெறியில் நில்லுங்கள்.)

1069. ஆதி விதமிகத் தண்தந்த மால்தங்கை
நீதி மலரின்மேல் நேரிழை நாமத்தைப்
பாதியில் வைத்துப் பல்காற் பயிற்வீரல்
சோதி மிகுந்துமுக் காலமும் தோன்றுமே.

பொருள் : சிவபெருமானின் ஆதித் தொழிலாகிய படைப்புச் பெருகச் செய்தவள் குளிர்ச்சி பொருந்திய நீர்ப்பிரதேசத்திலுள்ள திருமாலின் தங்கையாகிய நாராயணி. அந்நேரிழிழையின் திருப் பெயராகிய நமசிவய என்னும் தமிழ் ஐந்தெழுத்து அருள் மந்திரத்தை முøயாக எட்டிதழ்த தாமரை அதன் மத்தியில் அமைக்கப் பலமுறை உருவேற்றத் திருவருள் ஒளி பெருகும். அது பெருக, அகக்கண் திறந்து முக்காலவுணர்ச்சியும் கைகூடும். இதனை யோகக் காட்சி என்ப.

1070. மேதாதி ஈரெட்டும் ஆகிய மெல்லியல்
வேதாதி நூலின் விளங்கும் பராபரை
ஆதார மாகியே ஆய்ந்த பரப்பினள்
நாதாதி நாதத்து நல்லரு ளாளே.

பொருள் : அகரம் முதல் உன்மனை ஈறாகவுள்ள பதினாறு கலைகளையும் வடிவமாக உடையவள். வேதம் முதலாகவுள்ள நூல்களில் பரமாகவும் அபரமாகவும் புகழ்ந்து பேசப்பட்டவள். சீவர்களின் இருப்புக்கு ஆதாரமாய் விளங்குபவள். நாதம் நாதாந்தத்தில் விளங்கும் சிவத்துக்கு இவளே அருட் சத்தியும் ஆவாள்.

1071. அருள்பெற் றவர்சொல்ல வாரீர் மனிதர்
பொருள்பெற்ற சிந்தைப் புவனா பதியார்
மருளுற்ற சிந்தையை மாற்றி யருமைப்
பொருளுற்ற சேவடி போற்றுவன் நானே.

பொருள் : மெய்ப் பொருளைத் தனக்கே உரிமையாகப் பெற்ற அருள் வழங்கும் தன்மையுடைய சகல புவன நாயகியான திரிபுரை மயக்கத்தைத் தரும் பிரபஞ்சத்தைப் பற்றிய சீவர்களது சித்தத்தை மாற்றி, நிலையான பந்தமற்ற புவனங்களைப் பொருந்திய திருவடியை நான் வணங்குவேன். மனிதர்காள் ! இவ்வுண்மையை அனுபவத்தில் கண்ட நீங்கள் பிறருக்கு எடுத்துச் சொல்ல முன் வாருங்கள்.

1072. ஆன வராக முகத்தி பதத்தினள்
ஈன வர்ஆகம் இடிக்கும் முசலத்தோடு
ஏனை உழுபடை இடிக்கும் வெண்ணகை
ஊன மறஉணர்ந் தார்உளத்து ஓங்குமே.

பொருள் : தேவியைச் சூழவுள்ள சப்த மாதர்களில் ஒருத்தியான வராகி என்பவள் வராக முகத்தோடு கூடிய அடையாளத்தை உடையவள். இழிந்தோர் உடலை இடித்து வருத்துகின்ற உலக்கையோடு, மற்றை கலப்பை ஏந்திய கைகளையும் வெண்மையான நகையினையும் உடையவள். அவள் குற்றமற்ற ஊனுடலைக் கடந்து தியானிப்பவர் உள்ளத்தில் சிறந்து விளங்குபவள். தேவியைத் தண்ட நாயகியாக வணங்குவார்க்கு வெற்றியை அளிப்பாள் என்பதாம். (வராகம் - பன்றி.)

1073. ஓங்காரி என்பாள் அவளொரு பெண்பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தை உடையவள்
ஆங்காரி யாகிய ஐவரைப் பெற்றிட்டு
ரீங்காரத் துள்ளே இனிதிருந் தாளே.

பொருள் : ஓ மொழிக்கு உரியவளாகிய பெண்பிள்ளை என்றும் நீங்காத மரகத மாகிய பச்சை நிறத்தை யுடையவள். எழுச்சியுடையவளாய் அருளோன் ஆண்டான் அரன் அரி அயன் என்னும் ஐவர் நிலைகளையும் படைத்து ஐவரையும் தொழிற் படுத்தும் ஆற்றலள். ரீங்காரத்துள்ளே இனிதிருந்தனள் என்க. ரீங்காரம் மாயையின் வித்தெழுத் தென்ப. தேனுண்டு மயங்கி வீழும் வண்டொலியை ஒத்திருப்பதும் காண்க. (ஆங்காரி - எழுச்சி யுடையவள்.)

1074. தானே தலைவி எனநின்ற தற்பரை
தானே உயிர்வித்துத் தந்த பதினாலும்
வானோர் தலமும் மனமும்நற் புத்தியும்
தானே சிவகதி தன்மையும் ஆமே.

பொருள் : தானே எல்லாவற்றிற்கும் தலைவியென நின்ற பராசத்தி ! தானே வாக்கு ரூபமாக விளங்கும் பதினான்கு வித்தைகளும் தேவ லோகங்களையும் மன மண்டலத்தையும் நுண்ணறிவையும் கடந்த நாதாந்தமும் தானே சிவகதியை அளிப்பவளும் ஆவாள். பதினான்கு வித்தைகள்; வேதம் 1, அங்கம் 6, நியாயம் 1, மீமாம்சை 1, மிருதி 1, புராணம் 1 ஆக 14.

6. வயிரவி மந்திரம்

(வயிரவி - வயிரவக் கடவுளின் சக்தி. வயிரவியை நினைவு கூர்வது வயிரவி மந்திரம்.)

1075. பன்னிரண் டாங்கலை ஆதி பயிரவி
தன்னில் ஆகாரமும் மாயையும் கற்பித்துப்
பன்னிரண்டு ஆதியோடு அந்தம் பதினாலும்
சொல்நிலை சோடம் அந்தம்என்று ஓதிடே.

பொருள் : பன்னிரண்டு கலைவடிவான ஆதி வயிரவி இடமிருந்து அகாரமாகிய ஓசையும் மாயையாகிய ஒளியும் கூட்டி நினைந்து நோக்கக் கலை பதினான்காகும். இப்பதினான்கும் புகழ்ந்து சொல்லப்படுகின்ற அம்மையின் இருப்பிடம். திங்ககளின் கலை பதினாறும் செல்வியின் சிறந்த இருப்பிடமாகும். (சோடசம் - பதினாறு)

1076. அந்தப் பதினாலும் அதுவே வயிரவி
முந்து நடுவும் முடிவும் முதலாகச்
சிந்தை கமலத்து எழுகின்ற மாசத்தி
அந்தமும் ஆதியும் ஆகின்றாளே.

பொருள் : வயிரவியின் இருப்பிடம் முன் ஓதிய பதினான்கு கலையாகும் முதல்நடு இறுதியாகத் திகழ்பவள். நெஞ்சத் தாமரையிடத்து விளங்கும் பேராற்றல்; அந்தமும் ஆதியும் ஆகி நின்றவள். இஃது ஒடுக்கத்தையும் தோற்றத்தையும் செய்விக்கும் உரிமை உடையவள் என்ப.

1077. ஆகின்ற மூவரும் அங்கே அடங்குவர்
போகின்ற பூதம் பொருந்து புராதரர்
சார்கின்ற சார்வுழிச் சாரார் சதிர்பெறப்
போகுந் திரிபுரை புண்ணித் தோரே.

பொருள் : வயிரவியாகிய பேராற்றலி னிடத்துப் படைப்போன் காப்போன் துடைப்போனாகிய முத் தேவரும் அடங்குவர். தோன்றி மறையும் மண்முதற் பூதங்கள் அங்கே ஒடுங்கும், இப் பூதங்களுடன் இயைந்து வினைக்கும் ஈடாக உலவும் தொன்மை வாய்ந்த ஆருயிர்கள் உண்மை உணர்ந்து இப் பிறப்பினிற் சாராது அம்மையாகிய வயிரவியைச் சார்தல் வேண்டும். உடலைச் சாராது வயிரவி அம்மையின் திருவடியைச் சார்வோர் புண்ணியப் பேற்றினையுடைய பெரியோராவர்.

1078. புண்ணிய நந்தி புனிதன் திருவாகும்
எண்ணிய நாட்கள் இருபத்தேழ் சூழ்மதி
பண்ணிய வன்னி பகலோன் மதியீறு
திண்ணிய சிந்தைதன் தென்னனும் ஆமே.

பொருள் : ஆருயிர்களுக்கு இன்ப வாழ்வு நல்கும் இயல்பினால் புண்ணியன் என்பர். ஆக்க நிளைக்கள மாதலின் நந்தி என்பர் இயற்கைத் தூயோனாதலின் புனிதன். குறைவிலா நிறைசெல்வன். ஆதலின் திருவாகும் என்பர். விண்மீனாகிய நாட்கள் இருபத்தேழும், அவை சூழ்ந்த நடுவில் திகழும் திங்களும், விறகு முதலியன பற்றி ஒளிதரும் தீயும் ஞாயிறும் ஆகிய இப்பொட்கள் முடிந்த முடிவாக விளங்கும் பேரறிவுப் பொருளாகிய தென்னன் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் சிவபெருமான் திருவுள்ளத்தால் ஆக்கப் பெற்றன. (தென்னன் - சிவன்; தென்பாண்டி நாட்டான். திருவாசகம்.)

1079. தென்னன் திருநந்தி சேவகன் தன்னொடும்
பொன்னங் கிரியில் பூதலம் போற்றிடும்
பன்னும் பரிபிடி அந்தம் பகவனோடு
உன்னும் திரிபுரை ஓதிநின் றானுக்கே.

பொருள் : அழகிய சிவபெருமான், திருநந்தியாகிய காவலனாவான், அவனொடும் திருவெள்ளிமலையில் அனைத்துலகும் காத்தருளும் பெண் யானை யனைய அம்மை வீற்றிருக்கின்றாள். திருவடிப்பேர் உன்னித் திருமுறைகளை நாளும் இடையறாது ஓதி நிற்பார்க்கு அந்தம் ஆகிய பகவன் என்னும் அண்ணலோடு உறைந்து திரிபுரை ஆரருள் புரிவள்.

1080. ஓதிய நந்தி உணரும் திருவருள்
நீதியின் வேத நெறிவந்து உரைசெய்யும்
போதம் இருபத்து எழுநாள் புணர்மதி
சோதி வயிரவி சூலம்வந்து ஆளுமே.

பொருள் : மறைநூல் அருளால் ஓதியருளிய சிவபெருமானை அவன் அருளால் உணருங்கள் மறைவழியே முறை அருளினன். நாண்மீன இருபத்தோழையும் பொருந்தும் திங்களை அம்மையாகிய வயிரவியும் தன்கையில் திகழும் முத்தலை வேலாகிய சூலத்தால் உலகனைத்தையும் காத்தருள்வள்.

1081. மெல்லியல் வஞ்சி விடமி கலைஞானி
சொல்லிய கிஞ்சுக நிறமன்னு சேயிழை
கல்லியல் ஒன்பது காணும் திருமேனி
பல்லியல் ஆடையும் பன்மணி தானே.

பொருள் : இயற்கையாகவே பேரிரக்கம் வாய்ந்த மெல்லியல் ஆவள். ஆருயிர்களின் வினைக்கு ஈடாக வஞ்சித்தலும் தண்டித்தலும் உடையவள். எனினும் உண்மையான நோக்கமும் திருவடி உணர்வு சேர் கலைஞானிகள் ஓதுகின்ற முள்முருக்கம் பூ நிறம் போன்ற நிலைத்த செம்மை நிறமுடையவள், அவள் மாணிக்க மணியொத்த செந்நிறம் வாய்ந்த திருமேனியுடையவளும் அவளே, அவள் கரையிற் பலமணிகள் சேர் பொன்னாடை யுடையவள். (விடமி-தண்டிப்பவள்.)

1083. பன்மணி சந்திர கோடி திருமுடி
சொன்மணி குண்டலக்காதி உழைக்கண்ணி
நன்மணி சூரிய சோம நயனத்தள்
பொன்மணி வன்னியும் பூரிக்கின் றாளே.

பொருள் : பலமணிகள் அழுத்திய ஒளிமிக்க பல உறுப்புக்களையுடைய திருமுடியும் புகழ்ந்து சொல்லப்படும் மணிகள் இழைத்த குண்டலம் அணிந்த காதும் உடையவள். மான் போலும் கண்ணையுடையவள். நல்ல விளக்கமுள்ள ஞாயிறு திங்கள் தீ என்னும் மூன்றையும் கண்களாக உடையவள். பொன்போல் விளங்குகின்ற தீ வண்ணத்தம்மை மிகவும் களிப்புறுகின்றாள்.

1084. பூரித்த பூவிதழ் எட்டினுக்கு உள்ளேயோர்
ஆரியத் தாள்உண்டுஅங்கு எண்மர் கன்னியர்
பாரித்த பெண்கள் அறுபத்து நால்வரும்
சாரித்துச் சத்தியைத் தாங்கள்கண் டாரே.

பொருள் : செழிப்பான தாமரை இதழ் எட்டினுக்குள் அருமை மிக்க தாளுண்டு. அங்கே மாறா ஆற்றலும் அருளும் மிக்க கன்னியர் எண்மர் உறைவர். அவர்கள்பால் தோன்றும் கலை முதல்வியர் அறுபத்து நால்வர் ஆவர். அவர்கள் அனைவரும் திருவருள் ஆற்றலைச் சார்ந்து உண்மை உணர்ந்து திகழ் பவராவர்.

1085. கண்ட சிலம்பு வளைசங்கு சக்கரம்
எண்டிசை யோகி இறைவனி பராசக்தி
அண்டமோடு எண்டிசை தாங்கும் அருட்செல்வி
புண்டரி கத்தினுள் பூசனை யாளே.

பொருள் : ஆராய்ந்து எடுக்கப்பெற்ற சிலம்பும், வலம்புரிச்சங்கும், சக்கரமும் உடையவள்; எட்டுத் திசைகளிலும் நிறைந்திருப்பவள்; முதல்வி; திருவருளாற்றல்; பல்வேறு அண்டங்களையும் பல்வேறு திசைகளையும் படைத்து ஆருயிர்களுக்கு அளித்துக் காக்கும் திருவருட்ச்செல்வி; அன்பர்களின் நெஞ்சத்தாமரையின்கண் அவர்கள் ஆர்வமுடன் செய்யும் வழிபாட்டை ஏற்றுக்கொள்ள எழுந்தருளும் அம்மை.

1086. பூசனை கெந்தம் புனைமலர் மாகொடி
யோசனை பஞ்சத்து ஒலிவந்து உரைசெய்யும்
வாசம்இ லாத மணிமந் திரயோகம்
தேசம் திகழும் திரிபுரை காணே.

பொருள் : வழிபாட்டிற்கு வேண்டிய மணப் பொருள்களும், அழகிய மணமுள்ள பூக்களும், சிறந்த புதிய ஆடைகளும், நெடுந் தொலைவுக்குக் கேட்கும் ஐவகையான இயக்க முழக்கமும் சொல்லுதற்குரிய தலையான திரு ஐந்தெழுத்து ஆகிய மந்திரமும் கூடிச் செய்யும் பூசையினை ஏற்றருளும் ஒலி மிகுந்த திரிபுரையாவாள். (இயம்-வாத்தியம் தோற்கருவி தொளைக்கருவி, நரம்புக்கருவி தாளக்கருவி மிடற்றுக்குருவி என ஐந்து.)

1087. காணும் பலபல தெய்வங்கள் வெவ்வேறு
பூணும் பலபல பொன்போலத் தோற்றிடும்
பேணும் சிவனும் பிரமனும் மாயனும்
காணும் தலைவிநற் காரணி காணே.

பொருள் : காணுகின்ற பலபல தெய்வங்கள் வெவ்வேறு அணிகலன்களாகத் தோன்றும் பொன் போலத் தேவியின் பேதமாக விளங்கிடும். பெருமையாகப் போற்றும் சிவனும் பிரமனும் திருமாலும் பிற தெய்வங்களாக விளங்குவது சகத்துக்குக் காரணமாகிய தேவியால்தான் என்று அறிவாயாக.

1088. காரணி மந்திரம் ஓதுங் கமலத்துப்
பூரண கும்ப விரேசம் பொருந்திய
நாரணி நந்தி நடுஅங்கு உரைசெய்த
ஆரண வேதநூல் அந்தமும் ஆமே.

பொருள் : ஆதிமந்திரம் அஞ்செழுத்து என்னும் உண்மையால் அக்காரண மந்திரத்தை இடையறாது ஓதும் மெய்யடியார்களது நெஞ்சத் தாமரையின்கண் உட்கொளல், நிறுத்தல், விடுதல் என்னும் உயிர்ப்புப் பயிற்சிக்குத் துணையாக திருவருள் அம்மை எழுந்தருள்வள். அங்ஙனம் எழுந்தருளும்போது நாரணி என்னும் பெயர் பெறுவள் சிவபெருமான் அருளிச் செய்த மறைநூலின் முதலும் முடிவுமாய் விளங்குவதும் திருவருள்அம்மையேயாம். (பூரகம் - மூச்சை உட்கொளல்; கும்பதும் - நிறுத்தல்; இரேசகம் - வெளிவிடுதல் நந்தி - சிவபெருமான்)

1089. அந்த நடுவிரல் ஆதி சிறுவிரல்
வந்த வழிமுறை மாறி உரை செய்யும்
செந்தமிழ் ஆதி தெளிந்து வழிபடு
நந்தி இதனை நவம்உரைத் தானே.

பொருள் : அந்தத்தைச் செய்யும் கடவுளாகிய சிவபெருமான் நடுவிரலாகவும், படைத்தலைச் செய்யும் ஆதியாகிய நடப்பாற்றல் சிறு விரலாகவும் கொண்டு ஓதும் உலகியல் நமசிவாய என்று ஆகும். இம்முறையினை ஊன நடனம் என்ப. இதனை மாற்றி உரை செய்தலாவது சிறுவிரல் முதல் பெருவிரல் ஈறாகச் சிவநயம் என்று ஆகும். இதுஞான நடம் என்ப. இந்த ஐந்து எழுத்தும் இம்முறை வைப்பும் செந்தமிழுக்கே உடைய சிறப்பென்பது விளங்கச் செந்தமிழாதி தெளிந்து என்று ஓதியருளினார்.

1090. உரைத்த நவசத்தி ஒன்று முடிய
நிரைத்த இராசி நெடுமுறை எண்ணிப்
பிரைச்சதம் எட்டுமுன் பேசிய நந்தி
நிரைத்து நியதி நியமம்செய் தானே.

பொருள் : சொல்லப்பட்ட சத்திகளுள் ஒன்றாகிய மனோன்மனியை முடியின் மேலும், ஏனைய சத்திகள் வரிசையாகச் சிரசைக் சூழவும் அமைய எண்ணிப் பிரசாத கலைகளில் உடம்பில் விளங்கும் எட்டுக் கலைகளை முன்னே பேசிய நந்தி, ஏனைய எட்டும் நிரம்பினதாய் உயிரில் விளங்கும்படி ஒழுங்கு செய்தான்.

1091. தாமக் குழலி தயைக்கண்ணி உள்நின்ற
ஏமத்து இருளற வீசும் இளங்கொடி
ஓமப் பெருஞ்சுடர் உள்எழு நுண்புகை
மேவித்து அழுதொடு மீண்டது காணே.

பொருள் : மணம் கமழும் மலர் கூடிய நீண்ட கூந்தல யுடையவள்; பேரருள் வாய்ந்த கண்ணை யுடையவள்; ஆருயிர்களின் அக இருளைக் கடிந்தோட்டும் பேரொளிப் பிழம்பாம் இளங்கொடிக் கன்னி; அகத்தே கொப்பூ ழின்கண் அஞ்செழுத்தால் வளர்க்கப்படும் ஓமப்பெருஞ்சுடர்; அதன் அகத்தெழும் நறுமண நுண்புகை; அத்தகைய திருவருள் ஆற்றல் நமக்கு வேண்டும் எல்லா நலமும் மேவுவித்து அருளமுது ஊட்டிக் காத்தது என்க.

1092. காணும் இருதய மந்திர முங்கண்டு
பேணும் நமஎன்று பேசும் தலைமேலே
வேணு நடுவு மிகநின்ற ஆகுதி
பூணு நடுஎன்ற அந்தம் சிகையே.

பொருள் : சொல்லும் இருதய மந்திரப்பொருள் உணர்ந்து, சிரசின் மேலுள்ள பீடத்தில் வீற்றிருக்கும் திரிபுரை தேவிக்கு நம என்று நமஸ்காரத்தைச் செய்க ! மூங்கில் குழாய் போன்றுள்ள நடுநாடியின் வரியாக உச்சியில் பொருந்தி உன்னுடைய ஆகுதியை ஏற்பாள். உச்சியின் நடுவே விளங்குவது சிகாமந்திரம் என்று அறிவாயாக.

1093. சிகைநின்ற அந்தக் கவசங்கொண்டு ஆதிப்
பகைநின்ற அங்கத்தைப் பாரென்று மாறித்
தொகைநின்ற நேந்திர முத்திரை சூலம்
வகைநின்ற யோனி வகுத்தலும் ஆமே.

பொருள் : முதன்மையாய் விளங்கும் கவசமாகிய காப்புச் சட்டையை ஓதி உடம்பினைக் காத்தருள் என்று வேண்டுக. மீட்டும் அறிவுப் பொறியினைக் காட்டுக. அறிவுப்பொறி சின்முத்திரை சூலம் யோனி என்னும் இரண்டும் வருத்தலும் கூறப்படும். இவ்விரு மந்திரப் பாட்டுக்களிலும் ஆறங்க மந்திரங்களைப் பற்றிக் கூறப்பட்டிருக்கின்றன.

1094. வருத்தம் இரண்டும் சிறுவிரல் மாறிப்
பொருத்தி அணிவிரல் சுட்டிப் பிடித்து
நெரித்தொன்ற வைத்து நெடிது நடுவே
பெருத்த விரல்இரண்டு உள்புக்குப் பேசே.

பொருள் : சூலம் யோனி என்னும் முத்திரைகள் இரண்டும் கைவிரல்களைச் சிறிது வருத்தத்துடன் அமைத்தல் வேண்டும். சிறு விரல்களை ஒன்றன்மேல் ஒன்றாக மாறி வைத்து அணி விரலை நீட்டிப்பிடித்து அமைப்பது சூல முத்திரையாகும். இவற்றுடன் நடுவிரல் இரண்டும் உட்புகு மாறு அமைப்பது யோனி முத்திரையாகும்.

1095. பேசிய மந்திரம் இராகம் பிரித்துரை
கூசமி லாத சகாரத்தை முன்கொண்டு
வாசிப் பிராணன் உபதேசம் ஆகைக்குக்
கூசியவிந்து வுடன் கொண்டு கூடவே.

பொருள் : சிறப்பித்துக் கூறப்படும் சிகார மந்திரத்தில் சிகரத்தைப் பிரித்தல் சகரமாகும். இம் மெய்யெழுத்து மேற் சேரும் எழுத்தின்மையால் கூடமில்லாத சகரம் என்றாயிற்று. அச் சகரத்தின் மேல் இரகத்தையும் கூசி விந்துவாகிய மகரத்தையும் கூட்டினால் (ச்+இ+ம்) சிம் என்று ஆகும். இஃது உயிர்ப் புப்பழக்கத்திற்குரிய மந்திரமாகும். பேசிய மந்திரம் சி இது பிரணாயாமம் சித்திக்கும் முறை.

1096. கூடிய சீவன் பிராணன் முதலாகப்
பாவிய சவ்வுடன் பண்ணும் யகாரத்தை
மேவிய மாயை விரிசங்கு முத்திரை
தேவி நடுவுள் திகழ்ந்துநின் றாளே.

பொருள் : ஓதப்பெறும் மந்திரக்கிழவன் உயிர்ப்புப் பயிற்சிக்குக் கொள்ளும் சிம் என்பவற்றுள் பரந்து செல்லும் ஓசையுடைய சகரத்துடன் மகரமும் சேரச் சம் என்றாகும். இதனைச் சங்கு முத்திரை என்ப இம்முத்திரை அருள் அம்மையாரின் இருப்பிடமாகும். இதன் கண் அம்மை எழுந்தருளி விளங்குவள். (கூவிய-சொன்ன-உருப்போட்ட)

1097. நின்ற வயிரவி நீலி - நிசாசரி
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய உள்ளத்துச்
சென்றருள் நாயகி தேவர் பிரானுக்கே
நன்றருள் ஞாலத்து நாடிடும் சாற்றியே.

பொருள் : நிலைபெற்ற வயிரவி நீல நிறமுடையவள் இரவில் சஞ்சரிப்பவள். இராசத தாமத சாத்விகம் ஆகிய முக்குணங்களும் அடங்கிய உள்ளத்துத் தானே வலியச் சென்று அருள் வழங்கும் தலைவி. தேவதேவனாகிய சிவபெருமானது ஏவல் வழி நன்மையை அருள்பவன். ஆதலால் உலகத்தில் நீங்கள் அவளைப் புகழ்ந்து விரும்புங்கள். ஒன்றும் இரண்டும் என்பதற்கு அன்பு அறிவு ஆற்றல்கள் (இச்சை, ஞானம், கிரியை) எனினுமாம்.

1098. சாற்றிய வேதம் சராசரம் ஐம்பூதம்
நாற்றிசை முக்கண்ணி நாடும் இருள்வெளி
தோற்றும் உயிர்ப்பன்மை சோதி பராபரை
ஆற்றலொடு ஆய்நிற்கும் ஆதி முதல்வியே.

பொருள் : சிவனார் மொழிந்த வேதம் இயங்குவன நிற்பன ஆகிய உலகம் இவற்றின் முதலாகிய ஐம்பூதங்கள் நான்கு திசைகள் ஆகியவை யாவும் முக்கண்ணியன் வடிவே விரும்பும் இருள்வெளியாயும் தோற்றுகின்ற ஆன்ம சமஷ்டியாயும் உள்ள ஒளிப்பிழம்பு ஆயவள். இவை யாவற்றுக்கும் ஆற்றலை அளிக்கும் தலைவியும் ஆவாள்.

1099. ஆதி வயிரவி கன்னித் துறைமன்னி
ஓதி உணரில் உடலுயிர் ஈசனாம்
பேதை உலகிற் பிறவிகள் நாசமாம்
ஓத உலவாத கோலம்ஒன்று ஆகுமே.

பொருள் : நடப்பாற்றலைச் செய்யும் வயிரவி, எல்லாம் ஈன்றெடுத்தும் என்றும் கன்னியாய் இருப்பவள். சிவபெருமானுக்கு உடல் உயிராயவள். அறியாமை நிறைந்த உலகினார் அவளை அன்புடன் வழிபட்டால் பிறவி அகலும். ஓதுதற்கரிய மெய்யுணர்வே திருமேனியாக வுடையவள். உலவாத கோலம் - அழிவற்ற தேகம்.

1100. கோலக் குழலி குலாய புருவத்தள்
நீலக் குவளை மலரன்ன கண்ணினாள்
ஆலிக்கும் இன்னமுது ஆனந்த சுந்தரி
மேலைச் சிவத்தை வெளிப்படுத் தாளே.

பொருள் : அழகிய கூந்தலையும் புருவத்தையும் உடையவள், குவளை மலரையொத்த கண்ணை யுடையவள். நீங்கா மகிழ்ச்சியைத் தருகின்ற பேரழகினள். சிவபெருமான் எல்லாம் கடந்தவர். நாமுய்யும் பொருட்டுத் தடையிலா ஞானமாகிய அம்மையை உருவாகக் கொண்டு எழுந்தருளுவர் அதனால் அவரை வெளிப்படுத்தியது திருவருள் ஆற்றல் என்பர்.

1101. வெளிப்படு வித்து விளைவுஅறி வித்துத்
தெளிப்படு வித்துஎன் சிந்தையின் உள்ளே
களிப்படு வித்துக் கதிர்ப்படு சோதி
ஒளிப்படு வித்துஎன்னை உய்யக்கொண் டாளே.

பொருள் : சிவத்தை வெளிப்படச் செய்து அதனாலாம் பயனையும் உணர்த்தி தெளிவுதந்து என்னுடைய சிந்தையினுள்ளே களிப்பூட்டி கிரணங்களோடு விளங்குகின்ற பரஞ்சோதிப் பெருமானை ஒளிமிகும்படி செய்து அடியேனை ஆட்கொண்டருளினாள்.

1102. கொண்டனள் கோலங் கோடி அநேகங்கள்
கண்டனள் எண்ணென் கலையின்கண் மாலைகள்
விண்டனள் மேலை விரிகதிர் மூன்றையும்
தண்டலை மேல்நின்ற தையல்நல் லாளே.

பொருள் : உலகு உய்தற்பொருட்டு அருள் அம்மையார் கொண்டருளிய திருக்கோலத் திருவுருவங்கள் பலகோடி என்பர். அறுபத்து நாலும் கலைகளையும் தோற்றுவித்தனன். அவற்றுள் வெளிப்பட்ட நூற்சுவடி வரிசைகளையும் வெளிப்படுத்துவித்தனள். அதுபோல் ஞாயிறு திங்கள் நீ என்னும் மூன்று ஒளியுடைய பொருள்களையும் படைத்தருளினள். உச்சித் தொளையின் மேலுள்ள அருள்வெளியும் தானேயாம். வள் தையல் நல்லாள் ஆவள்.

1103. தையல்நல் லாளைத் தவத்தின் தலைவியை
மையலை நோக்கும் மனோன்மணி மங்கையைப்
பையநின் றேத்திப் பணிமின் பணிந்தபின்
வெய்ய பவம்இனி மேவகி லாவே.

பொருள் : தையல் நாயகியும் உச்சித் தொளையில் தவசிகளுக்கு விளங்கு முதல்வியும் அருட்பார்வையால் பிரபஞ்சத்தால் மயக்கத்தை அகற்றும் மனோன்மணியுமாகிய தேவியை மெதுவாக நின்று தோத்திரம் செய்து பணியுங்கள். பணிந்து பின் கொடிய பிறவி உங்களைச் சாராது.

1104. வேயன தோளி விரையுறு மென்மலர்
ஏய குழலி இளம்பிறை ஏந்திழை
தூய கடைமுடிச் சூலினி சுந்தரி
ஏயெனது உள்ளத்து இனிதுஇருந் தாளே.

பொருள் : மூங்கிலை யொத்த தோள்களை யுடையவள்; மணமுள்ள பூவை அணிந்தவள். பிறையும் அணியும் பூண்டவள்; தூய சடைமுடியுடைய யுடையவள்; சூலத்தை உடையவள்; அழகினள். அடியேன் உள்ளத்தும் பொருந்தி எனக்கும் இன்பம் தந்து கொண்டிருக்கின்றனள்.

1105. இனியதென் மூலை இருக்குங் குமரி
தனியொரு நாயகி தானே தலைவி
தனிப்படு வித்தனள் சார்வு படுத்து
நனிப்படு வித்துள்ளம் நாடிநின் றாளே.

பொருள் : இன்பம் விளங்கும் மூலாதாரத்தில் வாசம் செய்யும் வாலைப் பெண் தன் நிகரற்ற ஏக நாயகி, தன்னைச் செலுத்துவார் யாரும் இல்லாத் தலைவி, என்னுடைய மனச் சேர்வுகளை அகற்றி அவற்றினின்றும் வேறுபடுத்தித் தனியனாகினள். என்மனம் தன்னடிக்கண் நன்றாகப்படும் வண்ணம் செய்து அடியேனை விரும்பி நின்றாள்.

1106. நாடிகள் மூன்று நடுஎழு ஞானத்துக்
கூடி யிருந்த குமரி குலக்கன்னி
பாடகச் சீறடிப் பைம்பொற் சிலம்பொலி
ஊடக மேவி உறங்குகின் றாளே.

பொருள் : இடைபிங்கலை சுழுமுனையாகிய மூன்றனுள் நடுவிலுள்ள நாளம் போன்ற சித்ரணி நாடியில் பொருந்தியிருந்த வாலை பல சத்திகளைக் கொண்டு விளங்குபவள். அவள் காலணியோடு கூடிய அழகிய திருவடி அசைவால் உண்டாகும் நாதத்தோடு உள்ளத்தில் பொருந்தி அமைதியோடு இருக்கின்றாள்.

1107. உறங்கும் அளவில் மனோன்மணி வந்து
கறங்கும் வளைக்கைக் கழுத்தாரப் புல்லிப்
பிறங்கொளித் தம்பலம் வாயில் உமிழ்ந்திட்டு
உறங்கஐ யாஎன்று உபாயம்செய் தாளே.

பொருள் : நான் அவளோடு பொருந்தி யோக உறக்கம் கொள்ளும் போது மனோன்மணி எழுந்து வந்து ஒலிக்கின்ற வளையலை யணிந்த கையால் என் கழுத்தை நன்றாகத் தழுவி, விளங்கு கின்ற ஒளியோடு கூடிய அவளுடைய சத்தியை எனது வாயிலில் இட்டு உறங்காதே ஐயா என்று உபாயத்தைச் செய்தருளினாள்.

1108. உபாயம் அளிக்கும் ஒருத்தியென் உள்ளத்து
அபாயம் அறக்கெடுத்து அன்பு விளைத்துச்
சுவாவை விளக்கும் சுழியாகத் துள்ளே
அவாவை அடக்கிவைத்து அஞ்சல்என் றாளே.

பொருள் : அடியேனுக்கு உபாயங்களை அளித்தருளும் மனோன்மணி என் உள்ளத்து எழும் காமாதி பகைவர்களால் உண்டாகும் கேடுகளை நீங்கி, இறைவனிடம் நீங்காத அன்பு உண்டா கும்படி செய்து, நாய்போல் அலைகின்ற மனத்தை விளக்கி நிற்கும் சுழுமுனை நடுவுள் ஆசையை அடக்கி வைத்து அஞ்சேல் என்று அபயம் கூறினாள். (சுழியகம் - நனவுக்களம்; விழிப்புநிலை; சாக்கிரத்தானம், புருவநடு, சுவா-நாய்.)

1109. அஞ்சொல் மொழியாள் அருந்தவப் பெண்பிள்ளை
செஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழை
தஞ்சமென்று எண்ணித்தன் சேவடி போற்றுவார்க்கு
இன்சொல் அளிக்கும் இறைவியென் றாரே.

பொருள் : உயிரை உய்விக்கும் அழகிய நமசிவய என்னும் இரு மொழியினை அருள்வள் திருவருள் அம்மை. அவளே அதற்கு உரிய நானெறியாம் நற்றவப்பேற்றினை நல்குபவள். புகழ்மொழி தரும் பொற்பினள்; சிறந்த மாறாத பண்புகளாம் அணியருள்பவள். தன் திருவடியே புகல் என்று கருதிப் போற்றும் புண்ணியர்க்கு என்று பேரின்பம் பயக்கும் இனிய சொல்லையருளும் இறைவி அவள் என்று நவின்றனர்.

1110. ஆருயி ராயும் அருந்தவப் பெண்பிள்ளை
காரியல் கோதையள் காரணி நாரணி
ஊரும் உயிரும் உலகும் ஒடுக்கிடும்
கோரியென் உள்ளம் குலாவிநின் றாளே.

பொருள் : புண்ணியம் செய்தவர்களால் ஆராயப்பெறும் அருந்தவப் பெண்பிள்ளை. கருமையான கூந்தலை யுடையவள், ஐந்தொழிற்கும் காரணமானவள்; நாராயணி; உடல் உயிர் உலகு ஆகியவற்றை ஒடுக்கும் கோரமானவள். அவள் என்னுடைய உள்ளத்தில் மகிழ்ச்சியோடு பொருந்தியிருந்தாள். (நாரணன் - சிவன். நாரணி - சிவை. கோரி - ஒடுக்குங் காலத்து எடுக்கும் கோர உருவம் உடையவன்.)

1111. குலாவிய கோலக் குமரியென் னுள்ளம்
நிலாவி யிருந்து நெருநாடன் அணைந்தும்
உலாவி இருந்துணர்ந்து உச்சியின் உள்ளே
கலாவி இருந்த கலைத்தலை யாளே.

பொருள் : நாதத்தை வெளிப்படுத்தும் அழகிய குமரி என்னுடைய உள்ளத்தில் விளங்கியிருந்து நெடுநாள் பொருந்தி யிருந்தும் உச்சியில் உலாவியிருந்து உணர்ந்து கலந்து விளங்குகின்ற சந்திர கலைகளைத் தனது தலையிலே உடையவள் ஆவாள். அழகிய குமரி உள்ளத்தில் பொருந்திச் சிரசில் விளங்குபவளாக உள்ளாள்.

1112. கலைத்தலை நெற்றியோர் கண்ணுடைக் கண்ணுள்
முலைத்தலை மங்கை முயங்கி இருக்கும்
சிலைத்தலை யாய தெரிவினை நோக்கி
அலைத்தபூங் கொம்பினள் அங்கிருந் தாளே.

பொருள் : வாலறிவாம் திருவுருவில் அறிவு அடையாளமாகிய நெற்றிக் கண்ணை யுடையவள் சிவன். அவன் ஆருயிர்களுக்குக் கண் போன்றவன். அவன் இடப்பால் வீற்றிருந்து அருளும் முலை மங்கை திருவருள் அம்மை அவளுடன் சிவன் கலந்து நிற்கின்றனன். பொன் மலையை வில்லாகக் கொண்டவன். அவனது நாட்டத்தையே அம்மை நோக்கியருளித் துவளும் அழகிய இடையினை யுடையவள். அவ் அம்மை உள்ளத்து உறைந்தனள்.

1113. இருந்தனள் ஏந்திழை என்னுள்ளம் மேவிப்
பொருந்திய நால்விரல் புக்கனள் புல்லித்
திருந்திய தாணுவில் சேர்ந்துடன் ஒன்றி
அருந்தவம் எய்தினள் ஆதியி னாளே.

பொருள் : முதல்வி என்னுள்ளம் பொருந்தி நால்விரல் அளவினதாகிய உயிர்ப்புடன் சேர்ந்து, மூலக்கனலை எழுப்பிப் பயிற்சியால் செம்மையுற்ற நடு நாடியில் சேர்ந்து உடன் கலந்து இருந்தனள். அவன் அருளால் அருந் தவத்தை எய்து வித்தனள். அவளே ஆதி என்னும் இறைவியாவள்.

1114. ஆதி அனாதி அகாரணி காரணி
சோதிய சோதி சுகபர சுந்தரி
மாது சமாதி மனோன்மணி மங்கலி
ஓதிஎன் உள்ளத்து உடன்இயைந் தாளே.

பொருள் : தொடக்க நடப்பாற்றலாகிய ஆதியும், தொன்மை வனப்பாற்றலாகிய அனாதியும், தனக்கொரு காரணம் இல்லாதவளும் தான் எல்லாவற்றிற்கும் காரணமாம் உள்ளவளும், ஒளிக்குள் ஒளியாய்த் திகழ்பவளும், பேரின்பம் அருளும் அழகிய முதல்வியும், இனிய அமைதி தருபவளும் மனத்தின்கண் சிவநினைப்பை நிலைபெறச் செய்பவளுமாகிய மனோன்மணியும், மங்கலகுண முடையவளும் ஆகிய இறைவி திரு ஐந்தெழுத்தை உயிருக்கு உயிராய் நின்று ஓதுவித்து உடனாக இருந்தருளினள்.

இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் - Page 2 Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Mon Mar 26, 2012 3:30 pm

1115. இயைந்தனள் ஏந்திழை என்உள்ளம் மேவி
நயந்தனள் அங்கே நமசிவ என்னும்
அயன்தனை ஓரும் பதமது பற்றும்
பெயர்ந்தனள் மற்றும் பிதற்றுஅறுத் தாளே.

பொருள் : முதல்வி என் உள்ளம் பொருந்தி, எளியோன் நமசிவ என்னும் தமிழ் மறையை மேற்கொண்டு ஒழுகும் பரிபாகமாகிய செவ்வியை விழைந்தனள். அதனை ஓதுவித்தனள் அப்பொழுதே நிலையிலாப் பொருள்களின் பற்றுக்களையும் நீக்கியருளினள். மேலும் பிறப்புத் துன்பத்தையும் அறுத்து அருளினள்.

1116. பிதற்றிக் கழிந்தனர் பேதை மனிதர்
முயற்றியின் முற்றி அருளும் முதல்வி
கயற்றிகழ் முக்கண்ணுங் கம்பலைச் செவ்வாய்
முகத்தருள் நோக்கமும் முன்னுள்ள தாமே.

பொருள் : உண்மை அறியாது தர்க்க வாதம் புரிந்து காலத்தை வீணாக்கி ஏழை மனிதர் கெடுகின்றனர். ஆனால் அவள் முயற்சியினால் வீடு பேற்றை அளிக்கும் முழுமுதல் தலைவி. மீனைப்போன்று இமையா நாட்டம் மூன்றோடும் ஒலியை உண்டாக்கும் செவ்வாயும் கருணை விழிகின்ற திருமுகமும் நம்முள் விளங்கும்படி உள்ளவள். (கழற்றிகழ்-கயல்+திகழ்.)

1117. உள்ளத்து இதயத்து நெஞ்சத்தொரு மூன்றுள்
பிள்ளைத் தடம்உள்ளே பேசப் பிறந்தது
வள்ளல் திருவின் வயிற்றினுள் மாமாயைக்
கள்ள ஒளியின் கருத்தாகுங் கன்னியே.

பொருள் : எண்ணம் மனம் இறுப்பு என்னும் மூன்றும் முறையே சித்தம் மனம் புத்தி என வழங்கப்படும். இம் மூன்றும் முதல்வி இயைந்து இயைக்க இயங்குவன. அதனால் ஆண்டு உறைகின்றனள் என்ப. இடப்பால். வலப்பால் நடு நாடி என்னும் மூன்றனுள் பிள்ளைத் தடமெனப் பேசப்பெறும் நடுநாடியினுள் அகவொளி தோன்ற அருளியவளும் அவளே. வள்ளலாகிய சிவபெருமான் திருவடி யுணர்வாகிய அகத்தினுள் காரண மாயையின்கண் மறைந்து நின்று அதைக் கொண்டும் ஒளியருளும் திருவுள்ளம் சேர் அம்மை கன்னித் தெய்வமாகும்.

1118. கன்னியுங் கன்னி அழிந்திலள் காதலி
துன்னியங் கைவரைப் பெற்றனள் தூய்மொழி
பன்னிய நன்னூற் பகவரும் அங்குள
என்னேஇம் மாயை இருளது தானே.

பொருள் : சத்தியும் கன்னித் தன்மை அழியாதவள் காதலியாய்ச் சிவத்தோடு பொருந்தி ஐந்து மக்களைப் பெற்றனள். தூய மொழியாகிய நாத சொரூபி. வேதங்களால் புகழ்ந்து கூறப் பெற்ற சிவனும் அங்குளன் இத்தகையான மாயையானது இருளாகவும் விளங்கியது என்ன ஆச்சரியம் ! (ஐவர், அயன், அரி, அரன், ஈசன், சதாசிவன். சிவசத்தியே சிருட்டிக்குக் காரணம்)

1119. இருளது சத்தி வெளியதுஎம் அண்ணல்
பொருளது புண்ணியர் போகத்துள் இன்பம்
தெருளது சிந்தையைத் தெய்வம்என்று எண்ணில்
அருளது செய்யும்எம் ஆதிப் பிரானே.

பொருள் : சத்தி இருள்மயமானது ஞான வெளியில் விளங்குவது சிவம். புண்ணியர்க்குப் பொருளாவது சிவத்தோடு கலந்திருக்கும் சிவபோகத்தில் விளையும் இன்பம். இங்ஙனமாகத் தெளிந்த சிந்தையராய் நாதத்தை வழிபடில் எம் ஆதிப்பிரானாகிய சிவம் நாதத்தை இடமாகக் கொண்டு அருள் செய்யும் சத்தியின் நிறம் கறுப்பு.

1120. ஆதி அனாதியும் ஆய பராசக்தி
பாதி பராபரை மேலுறை பைந்தொடி
மாது சமாதி மனோன்மணி மங்கலி
ஓதும்என் உள்ளத்து உடன்முகிழ்த் தாளே.

பொருள் : தொடக்கமும் தொன்மையும் ஆகிய திருவருள் செம்பெருளுõம் சிவனுடன் செம்பாதி உடம்பினள் ஆவள். சிவவுலகத்து வீற்றிருப்பவள். அழகும் அமைதியும் மனத்தை இயைந்து இயக்கலும் நன்மைப்பாடும் உடைய அம்மை நமசிவய என நாவழுந்த ஓதும் நம்மகத்து உடன் உறைந்து அருள்வள்.

1121. ஓதிய வண்ணம் கலையின் உயர்கலை
ஆதியில் வேதமே யாம்என்று அறிகிலர்
சாதியும் பேதமும் தத்துவ மாய்நிற்பன்
ஆதியென்று ஓதினள் ஆவின் கிழத்தியே.

பொருள் : சொல்லிய முறையில் உயர்வாகிய கலை பிரணவமே என்று அறியாது மக்கள் உளர். சத்தியானவள் சாதியும் அவற்றால் விளையும் பேதமும் தத்துவங்களுமாய் நிற்பன் என்று ஆன்ம நாயகி எனக்கு உபதேசித்தருளினாள். (ஆவின் கிழத்தி - உயிர்க்கு உயிராகிய அம்மை.)

1122. ஆவின் கிழத்திநல் ஆவடு தண்துறை
நாவின் கிழத்தி நலம்புகழ்ந்து ஏத்திடும்
தேவின் கிழத்தி திருவாம் சிவமங்கை
மேவும் கிழத்தி வினைகடிந் தாளே.

பொருள் : ஆருயிர் அனைத்தையும் அடிமையாகக் கொண்டருளும் உடையாள். நாவுக்கு அரசியார் ஆவடு துறையில் எழுந்தருளியிருப்பவள். பொருள்சேர் புகழாம் நன்மையினை மெய்யன்பர்கள் போற்றும் அருளோனாகிய சதாசிவக் கடவுளின் மனைவியாவாள். திருவடிப் பேரின்பத்து நல்லாரைக்கூட்டுவிக்கும் சிவமங்கை. எங்கும் பொருந்தி உரிமை பூண்டருளும் முதல்வி. இவளே ஆருயிர்களின் வினையை அகற்றினள். நாவின் கிழத்தி - வாணி.

1123. வினைகடிந் தார்உள்ளத்து உள்ளொளி மேவித்
தனைஅடைந் தோர்க்கெல்லாம் தத்துவ மாய்நிற்பள்
எனைஅடிமை கொண்ட ஏந்திழை ஈசன்
கணவனைக் காண அனாதியும் ஆமே.

பொருள் : வினைப்பயனைக் கெடுத்தார் உள்ளத்து உள்ளொளியாக எழுந்தருளியிருந்து தன்னைச் சரணாக வந்து அடைந்தோர்களுக்கெல்லாம் உண்மைப் பொருளாக நிற்பள். அடியேனை வழிவழியாக அடிமை கொண்ட ஏந்திழை, ஈசனும் அவளுக்குக் கணவனுமாகிய சிவத்தைப் பார்க்கும் போது அநாதியாவாள். சிவத்தை நோக்க சத்தி முந்தியவள்.

1124. ஆதி அனாதி அகாரணி காரணி
வேதமது ஆய்ந்தனள் வேதியர்க் காய்நின்ற
சோதி தனிச்சுடர் சொரூபமாய் நிற்கும்
பாதி பராபரை பன்னிரண்டு ஆதியே.

பொருள் : தேவி முதலாயும் பழமையாயும் தனக்கு ஒரு காரணம் இல்லாதவளாயும் தான் எல்லாவற்றுக்கும் காரணமாயும் உள்ளவள். வாக்கு தேவியாக இருந்து வேதியர்க்கு வேத ஆராச்சியைக் கொடுத்தனள். நிலைத்து நின்ற சோதியாய்ப் பரஞ்சுடராகிய சிலத்துக்கு உருவமாய் நிற்பள். பாதி மேனியாவாள். பன்னிரண்டு இராசிகளை யுடைய சூரியன் போன்ற ஒளியை யுடைய ஆதிசத்தியாவாள். (சத்தியே சிவனுக்கு வடிவம் என்பதாம்.)

7. பூரண சத்தி

1125. அளந்தேன் அகலிடத்து அந்தமும் ஈறும்
அளந்தேன் அகலிடத்து ஆதிப் பிரானை
அளந்தேன் அகலிடத்து ஆணொடு பெண்ணும்
அளந்தேன் அவனருள் ஆய்ந்துணர்ந் தேனே.

பொருள் : திருவருள் துணையால் விரிந்த நிலவுகத்துக்குரிய ஒடுக்கமும் தோற்றமும் சார்பு அளவையான் அளந்தேன். அதுபோல் ஒருவனே தேவன். அவனே ஆதிப்பிரான். அவனையும் உணர்ந்தேன். ஆண் பெண் என்னும் இரண்டின் தன்மைகளையும் ஆய்ந்தேன். அவன் திருவருளாகிய சிவசத்தியின் உண்மையினையும் உணர்ந்தேன்.

1126. உணர்ந்திலர் ஈசனை ஊழிசெய் சத்தி
புணர்ந்தது பூரணம் புண்ணியர் தங்கள்
கணங்களைத் தன்னருள் செய்கின்ற கன்னி
கொணர்ந்த வழிகொண்டு கும்பகமாமே.

பொருள் : ஆண்டவனைத் தோற்றுவிக்கும் அருள் ஆற்றலாகிய சத்தியின் மெய்ம்மையை உணர்கிலர். அவ் அம்மைகூட அவர் எங்கும் நிறைந்தருளினர். சிவ வழிபாடு இயற்றும் சிவ புண்ணியப் பேறுடையாரின் திருக் கூட்டங்களைத் தன் திருவருள் பேற்றில் ஆழ்த்தி யருளிய கன்னியாவள். கொண்டு வந்த முறையே உள்ளத்தால் ஒடுக்கமும் செய்வள். (கும்பகம் - நிறைவு)

1127. கும்பக் களிறுஐந்தும் கோலொடு பாகனும்
வம்பில் திகழும் மணிமுடி வண்ணனும்
இன்பக் கலவி இனிதுறை தையலும்
அன்பிற் கலவியுள் ஆயொழிந் தாரே.

பொருள் : மத்தகம் பொருந்திய யானையை யொத்த புலன்கள் ஐந்தும், அப்புலன்களை அடுத்துச் செலுத்தும் மனமும், அவற்றைக் கருவியாகக் கொண்டு ஒற்றித்துக் காணும் ஆன்மாவும் திருவடி அன்பினால் கலந்து அடங்கின. புதுமையாகக் காணப்படும் மணி திகழ்கின்ற திருமுடியினையுடைய சிவபெருமானும், அவனுடன் ஆருயிர் இன்புறுதற்பொருட்டுக் கலந்து இன்புற்றுறையும் தையலாகிய திருவருள் அம்மையும், ஆருயிர் புரிந்துள்ள அன்பினால் அவ்வுயிர்களுடன் வறறக் கலந்து நின்றனர்.

1128. இன்பக் கலவியில் இட்டெழு கின்றதோர்
அன்பிற் புகவல்ல னாம்எங்கள் அப்பனும்
துன்பக் குழம்பில் துயருறும் பாசத்துள்
என்பிற் பராசத்தி என்னம்மை தானே.

பொருள் : இன்பக் கூட்டத்தில் செலுத்தி அங்கே எழுகின்ற ஆனந்தத்தில் நுழைய வல்லவன் எங்கள் தந்தையாகிய சிவனும் துன்பமயமான சுக்கில சுரோணிதச் சேர்க்கையில் விருப்பங்கொண்டு என்பிற் பராசக்தியும் உள்ளாள். ஆன்மாக்களின் விருப்பதத்துக்கேற்ப இன்பத்தில் செலுத்தி உடனிருந்தருளுவாள் சத்தி.

1129. என்னம்மை என்னப்பன் என்னும் செருக்கற்று
உன்னம்மை ஊழித் தலைவனும் அங்குளன்
மன்னம்மை யாகி மருவி உரைசெய்யும்
பின்னம்மை யாய்நின்ற பேர்நந்தி தானே.

பொருள் : உடலுறுவால் வந்த தாயும் தந்தையும் உற்பத்திக்குக் காரணம் என்னும் மயக்கம் நீங்கி நினைவாயாக. அந்த வித்தியா மண்டலத்தில் (சுத்த மாயையில்) அம்மையும் ருத்திரரும் அங்குள்ளார். இந்த அம்மை, என்றும் நிலைபெற்று உன்னைப் பொருந்தி நாதத்தை அளித்தருளுவாள். அவள் விளங்கும் ஒளி மண்டலமே நந்தி என்ற பேரினை உடையது சீவர்களுக்கு உண்மையான அம்மை அப்பன் சிவசத்தியே யாம்.

1130. தார்மேல் உறைகின்ற தண்மலர் நான்முகன்
பார்மேல் இருப்பதொரு நூறு தானுள
பூமேல் உறைகின்ற போதகம் வந்தனள்
நாமேல் உறைகின்ற நாயகி ஆணையே.

பொருள் : உலகினைப் படைத்தற் பொருட்டுத் திருமாலின் குளிர்ந்த கொப்பூழ்த் தாமரையின்கண் தோன்றியவன் நான்முகன். அத்தாமரை நிலை உயிர்களிடத்து மூலத்தின் மேல் கூறப்படும். அதற்கு நூறு இதழ்கள் உண்டு. நெஞ்சத்தாமரை மேல் உறைகின்ற உணர்வுச் சொல்லி எழுந்தருளினள். அவள் எழுந்தருள்வதும் தூய நாவின்கண் உறைகின்ற நாவரசியின் ஆணையேயாம்.

1131. ஆணையை மாய்வருந் தாதுள் இருந்தவர்
மாணைய மாய மனத்தை ஒருக்கிப்பின்
பாணைய மாய பரத்தை அறிந்தபின்
தாணைய மாய தனாதனன் தானே.

பொருள் : மெய்ம்மையாக அன்பர் அகத் தாமரையின்கண் வீற்றிருப்பவர் அம்மையப்பராவர். மிகுதியாகத் தோன்றும் ஐயம்திரிபு முதலிய குற்றங்களை அகற்றி மனத்தை ஒருமுகப் படுத்தி முதலோசையின் உயிர்ப்பாய் விளங்கும் முழுமுதலை உணர்ந்தபின் திருவடியின்பம் கிடைக்கல் பெறும். அது கிடைக்கப் பெற்றார் அத் திருவடிக்கு இருக்கையாவர். (ஆணையம் - உண்மை; தாதுள் - ஆதாரத் தாமரையுள்.)

1132. தானே எழுந்தஇத் தத்துவ நாயகி
வானேர் எழுந்து மதியை விளக்கினள்
தேனார் எழுகின்ற தீபத்து ஒளியுடன்
மானே நடமுடை மன்றறி யீரே.

பொருள் : கருணை மிகுதியால் தானே மூலாதாரத்திலிருந்து எழுந்த தத்துவ நாயகி ஆகாய மண்டலத்தில் புலப்படும்படி விளங்கி, மதி மண்டலத்தைப் பிரகாசம் பெறும்படி அமைத்தனள். செந்தேனைப் போன்று இடையறாத விருப்பத்தில் எழுகின்ற தீப சோதியில் பராசக்தி நடனம் செய்யும் சிற்றம்பலம் என்று அறியுங்கள்.

1133. அறிவான மாயையும் ஐம்புலக் கூட்டத்து
அறிவான மங்கை அருளது சேரில்
பரியா அறிவறி வார்உளம் பேணும்
நெறியாய சித்த நிறைந்திருந் தாளே.

பொருள் : பஞ்ச தன்மாத்திரைகளை அறியும் ஞானேந்திரியம் ஐந்தும் இந்திரியங்கள் இல்லாது அறியும் அருட்சத்தியைச் சேர்ந்தால் நீங்காத அறிவினை அறிவார். அங்ஙனம் அருட் சத்தியை விடாதுபற்றி நிற்போரிடம் அவளும் பொருந்தி அவரது விருப்பத்தைப் பூர்த்தி செய்வாள். அருட் சத்தியைச் சேர்ந்தால் விரும்பிய எல்லாம் பெறலாம்.

1134. இரவும் பகலும் இலாத இடத்தே
குரவம் செய்கின்ற குழலியை நாடி
அரவம்செய் யாமல் அருளுடன் தூங்கப்
பருவம்செய் யாததோர் பாலனும் ஆமே.

பொருள் : நினைப்பும் மறப்பும் இல்லாமற் செய்யும் திருவடியுணர்வு இடத்து அருள் விளையாட்டு நிகழ்த்தும் ஆருயிர்க் குழலியை ஆராயின், அவ்வுயிர் ஐந்தெழுத்து உணர்வாகவே நிற்கும். வேறு எவ்வகை ஓசையும் எழாது. அருளுடனே தங்கி நிற்கும் அவ்வுயிர் என்றும் இளமை நீங்காது ஒருபடித்தாக இருக்கும். அதனால் பருவம் செய்யாத பாலன் என்றார். (குரவம் - விளையாட்டு; பருவம் - இளமை முதல் முதுமை வரையுள்ள நிலைவேறுபாடு.)

1135. பாலனும் ஆகும் பராசத்தி தன்னோடு
மேலனு காவிந்து நாதங்கள் விட்டிட
மூலம தாமெனும் முத்திக்கு நேர்படச்
சாலவு மாய்நின்ற தற்பரத் தானே.

பொருள் : நீங்கா இளமை பெற்ற ஆருயிர் திருவருள் அம்மையுடன் நாத விந்துக்கள் என்று பேசப்பெறும் ஓசையும் ஒளியும் ஆகி முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து செல்ல முழுமுதற் சிவபெருமான் திருவடியைக் தலைக்கூடும். அவ்வாறு நிறைந்த திருவருளைச் செய்யும் அம்மை முழு முதல்வி. தற்பரத்தாள் - முழு முதல்வி. சீவர்கள் விந்து நாதங்களைக் கடந்து சென்றபோது பராசக்தி விளங்குவாள்.

1136. நின்ற பராசத்தி நீள்பரன் தன்னொடு
நின்றறி ஞானமும் இசைசையு மாய் நிற்கும்
நன்றறி யும்கிரி யாசத்தி நண்ணலே
மற்றன வற்றுள் மருவிடுந் தானே.

பொருள் : நாதாந்தத்தில் நிலை பெற்றிருந்த பராசத்தி அநாதி நித்தியனாக விளங்கும் சிவத்துடன் ஒன்றியபோது அவளே சீவர்களுடன் பொருந்திய இச்சையாகவும் ஞானமாகவும் இருப்பள். முன்னர்க் கீழ் நோக்குதலுடன் கூடிய கிரியா சத்தி நல்லவற்றை உணர்ந்த அங்கு நிற்கும்போது இம்மூவரும் பொருந்திய சபையில் சபைக்குரிய சிவமும் பொருந்திவிடும், சித்தம் சிவமாதலே முத்தி நிலை.

1137. மருவொத்த மங்கையும் தானும் உடனே
உருவொத்து நின்றமை ஒன்றும் உணரார்
கருவெத்து நின்று கலக்கின போது
திருவொத்த சிந்தைவைத்து எந்தைநின் றானே.

பொருள் : மலர் மனம்போன்று அடங்கித் தோன்றும் சிவனும் அருளும் ஓர் உருவாய் ஒத்து நீற்கும் உண்மையினை உணரார். கருவுக்கு உயிராய் நின்று அக் கருவினைத் தொழிற்படுத்தியபோது எந்தையாகிய சிவபெருமான் அவ்வுயிர் தன் திருவடியைச் சேர வேண்டுமென்று திருவுள்ளங் கொண்டு நின்றனன். தவமிருந்து மகப் பெறுவர் பெற்ற ஞான்றே தக்க மணவாளரை நாடுதல் இதற்கு ஒப்பாகும்.

1138. சிந்தையின் உள்ளே திரியும் சிவசத்தி
விந்துவும் நாதமும் ஆயே விரிந்தனள்
சந்திர பூமி சடாதரி சாத்தவி
அந்தமொடு ஆதிய தாம்வண்ணத் தாளே.

பொருள் : அன்பர்கள் சிந்தையில் உலவும் சிவசத்தி விந்து நாதங்களாக விரிந்தனள். அச்சத்தி சந்திரமண்டலத்துக்கு உரியவள்; ஆறு ஆதாரங்களையும் கொண்டு விளங்குபவள் சத்துவகுணம் உடையவள். அகரம் முதலாகவுள்ள ஐம்பத்தோர் அட்சரங்ளிலும் வசிப்பவள் ஆவள் (வண்ணம் - எழுத்து)

1139. ஆறி யிருந்த அமுத பயோதரி
மாறி யிருந்த வழியறி வாரில்லை
தேறி யிருந்துநல் தீபத்து ஒளியுடன்
ஊறி யிருந்தனள் உள்ளுடை யார்க்கே.

பொருள் : திருவடி யுணர்வு நிறைந்து அடங்கி யிருந்த திரு முலையை உடையவள். சிவனும் சிவையும் பொருளால் ஒன்றாய் தோற்றத்தால் பிரிப்பில்லாத வேறுபாடற்ற இரண்டாய் விளங்கும் நிலைமையை அறிபவர் இல்லை. திருவடியே நிலை பேறான புகலென்று தெளிந் திருந்து மெய்யுணர்வு விளக்கமாய்த் திகழும் ஆருயிர்கட்குப் பேரின்பமாம் இன்னமிழ்தாய் அதுவும் வற்றா வூற்றாய் அருளம்மை வீற்றிருப்பள். ஆறியிருந்த-சிவத்துள் அடங்கியிருந்த.

1140. உடையவன் அங்கி உருத்திர சோதி
விடையவன் ஏறி விளங்கி இருக்கும்
கடையவர் போயிடும் கண்டவர் நெஞ்சத்து
அடையது வாகிய சாதகர் தாமே.

பொருள் : உலகியற் பொருள்களை உடைமையாகவும் ஆருயிர் இனங்களை அடிமையாகவும் என்றும் உடையவன் சிவன் அவனே தீயினும் ஒளி கொடுக்கும் அரனாக வுள்ளவன் ஆனேறாகிய அறத்தினை ஊர்பவன். சிறந்து மேல் நிலத்து விளங்கும் மெய்ப்பொருள். அறிவு, ஆற்றல், அன்புகளில் கடையவராய் உள்ளார் இவ்வுண்மையினை அறியார். திருவருள் துணையால் அருட் கண்ணே கண்ணாகக் கொண்டு சிறப்புறக் காணும் நல்லார் தூய நெஞ்சத்துள் அவன் விளங்கியருள்வன். இவ்விளக்கம் உடையாரை அடயோகப் பயிற்சியினர் என்பர்.

1141. தாமேல் உறைவிடம் ஆறிதழ் ஆனது
பார்மேல் இதழ்பதி னெட்டிரு நூறுள
பூமேல் உறைகின்ற புண்ணியம் வந்தனள்
பார்மேல் உறைகின்ற பைந்தொடி யாளே.

பொருள் : திருவருள் ஆற்றல் திங்கள் மண்டிலத்தும் ஞாயிற்று மண்டிலத்தும் உறையும் நிலையினை மேலிடத்து உறையும் நிலையினை மேலிடத்து உறையென்பர். திங்கள் மண்டிலத்தின் இதழ் கீழ் நோக்கியும் ஞாயிற்று மண்டிலத்தின் இதழ் மேல்நோக்கியும் நிற்பன. இவையே மாறிதழ்கள் என்று சொல்லப் பெறுவன. நிலத்தின் மேல் அத்திருவருள் தங்குவதற்குப் பதினெட்டு இதழும் இரு நூற்று இதழ்களும் ஆகிய தாமரைகள் உள்ளன. ஆப்பூமேல் உறைவதற்குப் புண்ணியமாக எழுந்தருளினள். முறைமேல் நின்று நிறையும் பைங்கொடி போன்ற அருளம்மை. (பார்-முன்னதுநிலம்; பின்னதுமுறை)

1142. பைந்தொடி யாளும் பரமன் இருந்திடத்
திண்கொடி யாகத் திகழ்தரு சோதியாம்
விண்கொடி யாகி விளங்கி வருதலால்
பெண்கொடி யாக நடந்தது உலகே.

பொருள் : அழகிய கொடிபோன்ற அருள் அம்மையும் சிவன் திருவுருக்கொண்டு விளங்கும் பொருட்டு ஆற்றல்மிக்க தொடர்ந்த பேரொளிப் பிழம்பாவாள். அவள் விண்ணிலே காணப் படும் மின்னற் கொடி போன்ற விளங்கிவருகின்றனள். அதனால் உலகனைத்தும் பெண்கொடி வண்ணமாய் நடந்து பிறங்குவ வாயின (பிறங்குதல் - பொலிந்து விளங்குதல்.)

1143. நடந்தது அம்மலர் நாலுடன் அஞ்சாய்
இருந்தனர் கன்னிகள் எட்டுடன் ஒன்றாய்ப்
படர்ந்தது தன்வழி பங்கயத் துள்ளே
தொடர்ந்தது உள்வழி சோதி யடுத்தே.

பொருள் : திருவருளால் நடந்து வரும் உலகத்து இதழ் ஒன்பது கொண்ட தாமரை உளது. அதன்கண் வீற்றிருப்பார் ஒன்பதில் ஆற்றலர்கள். இவரை நவசத்தி என்பர். அகத் தாமரையாகிய நிலைக் களங்களில் நிகழும் நிகழச்சிகள் திருவருள் ஆணை வழி நிகழ்வன. உச்சித் தொளை வழி ஒள்ளொளியைத் தொடர்வதும் ஆகும்.

1144. அடுக்குத் தாமரை ஆதி இருப்பிடம்
எடுக்கும் தாமரை இல்லகத்து உள்ளது
மடுக்கும் தாமரை மத்தகத் தேசெல
முடுக்கும் தாமரை முச்சது ரத்தே.

பொருள் : ஆருயிரை அடுத்திருக்கும் நெஞ்சத்தாமரை (அனாகதம்) ஆதியையுடைய சிவபெருமானின் உறைவிடம் நெஞ்சினின்றும் மேல் உயர்த்தும் நிலைக்களம் இல்லகமாகிய மிடறாகும். உயிர் அமிழ்தாகிய வித்துமடுக்கும் தாமரை புருவ நடுவாகும். அப்புருவ நடுவில் ஆருயிரைச் செல்லுமாறு முடுக்கும் தாமரை மூலாமாகும். மூலம் - மூலாதாரம். அடுக்கும் தாமரை = ஆஞ்ஞை எடுக்கும் தாமரை-விசுத்தி; மடுக்கம் தாமரை - அனாகதம். முடுக்கும் தாமரை - மணிபூரகம்.

1145. முச்சது ரத்தே எழுந்த முளைச்சுடர்
எச்சது ரத்தும் இடம்பெற ஓடிடக்
கைச்சது ரத்துக் கடந்துள் ஒளிபெற
எச்சது ரத்தும் இருந்தனள் தானே.

பொருள் : முச்சதுரமாகிய மூலத்திடத்து எழுந்த சுடர் எங்கும் இடம் பெற்று விளங்கும்படி செல்லவும், அழகிய பெருமை மிக்க இவ்வொளி எய்தும் படியும் எல்லா இடங்களிலும் திருவருள் அம்மை நிறைந்திருந்தனள். பூரகத்தினின்று எவ்விடத்துக்கும் சத்தி பரவுதலால் முளைச் சுடர் எனப்பட்டது. (கைச்சதுரம் - பிரமரந்திரம்.)

1146. இருந்தனள் தன்முகம் ஆறொடு நாலாய்ப்
பரந்தன வாயு திசை திசை தோறும்
குவிந்தன முத்தின் முகவொளி நோக்கி
நடந்தது தேறல் அதோமுகம் அம்பே.

பொருள் : புலம் பத்தாகலின் அம்மையும் பத்து திருமுகங்களுடன் வீற்றி இருந்தனன். அம்மையின் உயிர்ப்பே ஆருயிர்க்குக் காற்றாக வழங்கலின் காற்றாக எங்கும் விரவி இருந்தனள். அருளொளி அத் திருமுகத்தின்கண் திரண்டு பொலிந்து விளங்கிற்று. அத்திருமுகத்து ஒளியின் துணையால் அம்புபோல் விரைவாய் இன்பம் பொழியும் கீழ்முகநோக்கி ஆருயிர் நடந்தது.

1147. அம்பன்ன கண்ணி அரிவை மனோன்மணி
கொம்பன்ன நுண்ணிடை கோதை குலாவிய
செம்பொன்செய் யாக்கை செறிகமழ் நாடொறும்
நம்பனை நோக்கி நவிலுகின் றாளே.

பொருள் : கணையொத்த கண்ணையும் கொம்பொத்த இடையையும் பிற அழகுகளையும் உடைய திருவருள் அம்மை நறுமணம் கமழுகின்ற செம்பொன் திமேனியுடன் சிவ பெருமானை நோக்கி ஆருயிர்கட்கு ஆம் இன்ப மொழி நயமுற நாடொறும் நவில்கின்றனள். அம்மை சிவபெருமானுடன் ஆருயிர்கட்கு அருமறை பகர்கின்றனள் என்பதும் ஒன்று.

1148. நவிலும் பெருந்தெய்வம் நான்மறைச் சத்தி
துகிலுடை யாடை நிலம்பொதி பாதம்
அகிலமும் அண்ட முழுதும் செம்மாந்தும்
புகலும்முச் சோதி புனையநிற் பாளே.

பொருள் : எல்லோராலும் புகழ்ந்து பேசப்பெறும் பெரும் பொருள் கடவுள். தமிழ் நான்மறையின் உள்ளுறையாற்றல். அவ் திசைகளையே மெல்லுடை ஆடையாக உடையவள். இருநிலமே திருவடியாக வுடையவளும் அவளே. அண்டமுதலாகச் சொல்லப்பெறும் எல்லா இடங்களிலும் ஓங்கி நிமிர்ந்து சிறப்பித்துச் சொல்லப்படும் ஞாயிறு திங்கள் தீ என்னும் மூன்றினுக்கும் ஒளியருளும் அழகிய பேரொளிப் பிழம்பாய்த் திகழ்பவளும் அவளே.

1149. புனையவல் லாள்புவ னத்துஇறை எங்கள்
வனையவல் லாள் அண்ட கோடிகள் உள்ளே
புனையவல் லாள்மண் டலத்தொளி தன்னைப்
புனையவல் லாளையும் போற்றியென் பேனே.

பொருள் : எங்கள் புவனாதிபதி யாகிய இறைவனைத் தன்மேனியின் ஒரு பாகத்தில் புனைய வல்லாள். அண்ட கோடிகளையும் சங்கற்ப மாத்திரத்தில் உள்ளேயே மாற்றத்தைச் செய்பவள். எல்லா மண்டலத்து ஒளியையும் தன்னிடம் கொண்டவள். எல்லாவற்றையும் தாங்கி யுள்ளவளை வணங்குவேன்.

1150. போற்றியென் பேன்புவ னாபதி அம்மையென்
ஆற்றலுள் நிற்கும் அருந்தவப் பெண்பிள்ளை
சீற்றங் கடிந்த திருநுதற் சேயிழை
கூற்றம் துரக்கின்ற கொள்பைந் தொடியே.

பொருள் : அடியேனது அன்புக்கு இலக்கான புவனாபதி அம்மையைப் போற்றி என்பேன். அடியேனது அருந்தவத்தின் ஆற்றலுள் நிற்கும் பெண்பிள்ளை. எனது கோபத்தன்மையை மாற்றிச் சிற்றம்பலத்துள் விளங்கும் செவ்வொளி மயமானவள். எமனை விரட்டும் வலிமையள் ஆவள். கோள் கொள் என நின்றது. புவனாபதி அம்மையை வணங்கினால் கூற்றத்தை வெல்லலாம்.

1151. தொடியார் தடக்கைச் சுகோதய சுந்தரி
வடிவார் திரிபுரை யாமங்கை கங்கைச்
செடியார் வினைகெடச் சேர்வரை என்றென்று
அடியார் வினைகெடுத்து ஆதியும் ஆமே.

பொருள் : அழகிய வளையல் அணிந்த திருக்கையை யுடையாள் திருஅருள் அம்மை. அவளே இன்ப ஊற்றாம் திருவினள். அழகிய திரிபுரை மங்கை; சலமகள்; அவளே திருவடி சேர்வார் துன்ப வினைகளை எல்லாம் அகற்றி அருள்பவள். சூரியனுக்கும் ஒளி அளிப்பவள் அவளே. அவள் அடியார் வினைகளை அறக் கெடுத்து அவர்களைத் திருவடியுணர்வில் ஈடுபடுத்தும் ஆதியாவாள். (செடி - துன்பம்)

1152. மெல்லிசைப் பாவை வியோமத்தின் மென்கொடி
பல்லிசைப் பாவை பயன்தரு பைங்கொடி
புல்லிசைப் பாவையைப் போகத் துரந்திட்டு
வல்லிசைப் பாவை மனம்புகுந் தானே.

பொருள் : மென்மையும் இனிமையும் வாய்ந்த திருமொழியினை உடையவள். அருள் வெளியில் விளங்கும் மெல்லிய பூங்கொடி பல உயிர்களோடும் இயைந்து இயக்கும் இயல்பினள். நற்பயன தரும் நல்லாள். புன்னெறியுள் செல்லும் போக் கினை விலக்கி மேலாம் நன்னெறிக்கு உய்க்கும் நங்கை திருவருள் அம்மை. அவள் எளியேன் உள்ளத்தில் வீற்றிருந்தனள். (வியோமம் - வானம்.)

1153. தாவித்த அப்பொருள் தான்அவன் எம்இறை
பாவித்து உலகம் படைக்கின்ற காலத்து
மேவிப் பராசத்தி மேலொடு கீழ்தொடர்ந்து
ஆவிக்கும் அப்பொருள் தானது தானே.

பொருள் : எம் இறைவனாகிய சிவபெருமான் உலக உடல்களைப் படைத்தருள உறுதி செய்தபோது பாவித்தலாகிய திருவுள்ளங் கொண்டனன். உடனே திருவருள் அவனுடன் பொருந்தி முனைத்து நின்றனள். மேலோடு கீழாக இறைவனுடன் தொடர்ந்தது போல் உயிரிலும் பொறிபுலன் கரணங்களிலும் தொடர்ந்து நின்றனள். பாவித்த திருவுளங்கொண்டு. (தாவித்த-நிச்சயித்த அப்பொருள் - கருவிகள்.)

1154. அதுஇது என்பர் அவனை அறியார்
கதிவர நின்றதோர் காரணம் காணார்
மதுவிரி பூங்குழல் மாமங்கை நங்கை
திதமது உள்ளார்கள் தேர்ந்துஅறி யாரே.

பொருள் : சிவத்தை அறியாதவர் பல தேவர்களைப் பயன் கருதி வழிபடுவர். முத்திப் பேறு கிடைத்தற்குரிய மூலகாரணமாகிய பொருள் இது எனக் காணார். இன்பத்தேன் நிறைந்த மணங்கமழும் பூச்சூடிய கூந்தலையுடைய அம்மையால் ஆவது இது என்று அறியார்கள். இவர்கள் தெளிவு பெறாதவர்களே. பராசத்தியின் பெருமையை உணர்ந்து வழிபடவேண்டும்.

8. ஆதார ஆதேயம்

(ஆதாரம் - இடம்; ஆதேயம் - இடத்தில் உள்ள பொருள்; சத்தி இரண்டாயும் உள்ளாள்.)

1155. நாலிதழ் ஆறில் அவிர்ந்தது தொண்ணூறு
தானிதழ் ஆனவை நாற்பத்து நாலுள
பாலிதழ் ஆனவள் பங்கய மூலமாய்த்
தானிதழ் ஆகித் தரித்திருந் தாளே.

பொருள் : நாலிதழ் கொண்டது மூலம். ஆறிதழ் கொண்டது கொப்பூழ் தொண்ணூறு இதழ் கொண்டது மேல்வழிறு. நாற்பது இதழ் கொண்டது நெஞ்சகம். பதினாலு இதழ் கொண்டது மிடறு பத்திதழ் கொண்டது புருவநடு. இவையணைத்தும் தாமரைப் பூவாக உருவகிக்கப்படும். திருவருள் அம்மை இவ்விடங்களில் நின்று இயக்குவள்.

1156. தரித்திருந் தாள்அவள் தன்னொளி நீக்கி
விரித்திருந் தான்அவள் வேதப் பொருளைக்
குறித்திருந் தாள்அவள் கூறிய ஐந்து
மறித்திருந் தாள்அவள் மாதுநல் லாளே.

பொருள் : திருவருள் அம்மை சிவனையே நோக்கி நின்றனள். அவன் திருவுளப்படி வேதாகமப் பொருள்களை விரித்தருளினள். ஐந்தொழில்களையும் உள்ளக் குறிப்பால் உஞற்றியருளினள். தோற்றுவித்தருளினமை போன்று ஒடுக்குங்காலத்து அவற்றை முறையே ஒடுக்கியருளினள். அதனால் அவ் அம்மை மாது நல்லாள் என வழுத்தபடுகின்றாள்.

1157. மாதுநல் லாளொடும் மணாளன் இருந்திடப்
பாதிநல் லாளும் பகவனும் ஆனது
சோதிநல் லாளைத் துணைப்பெய்ய வல்லிரேல்
வேதனை தீர்தரும் வெள்ளடை யாமே.

பொருள் : மாது நல்லாளாகிய திருவருள் தன் மணாளனாகிய சிவன் தன் மெய்யினில் செம்பாதி கொள்ள இடங்கொடுத்து, பாதி நல்லாள் ஆயினள். சிவனும் பகுப்புடையான் என்னும் பொருளில் பகவன் ஆயினன். அத்தகைய அறிவுப் பேரொளி நல்லாளைத் தம் ஆருயிர்த்துணையாகக் கொள்ள வல்லாரின் பிறவித்துன்பம் தீரும். அவ்அம்மை அருட்பெரும் வெளியாகும்.

1158. வெள்ளøட் யான்இரு மாமிகு மாமலர்க்
கள்ளடை யார்அக் கமழ்குழ லார்மனம்
அள்ளடை யானும் வனத்திற மாய்நின்ற
பெண்ணொரு பாகம் பிறவிப்பெண் ஆமே.

பொருள் : திருவருள் வெளியில் உறைபவன் சிவன். அவன் மிக்க கருமையும் தேனும் மணமும் நிறைந்த பூவும் விளங்கா நின்ற மருள் மாதர் உள்ளத்தால் அள்ளிக் கொள்ளும் தன்மையன் அல்லன். ஆயினும் அச் சிவனும் அருள் மாதரால் தோற்றுவிக்கப்பட்டோன். அருள் மாதருக்கு அரை யுடம்பு நல்கிய அப்பன்.

1159. பெண்ணொரு பெண்ணை புணர்ந்திடும் பேதைமை
பெண்ணிடை ஆணும் பிறந்து கிடந்தது
பெண்ணுடை ஆண்என் பிறப்பறிந்து ஈர்க்கின்ற
பெண்ணுடை ஆணிடைப் பேச்சற்ற வாறே.

பொருள் : திருவருள் ஆற்றலாகிய பெண் திருவருளையே திருவுருவாகக் கொண்டு திகழும் சிவனாகிய பெண்ணைக் கலந்திடும். ஆருயிர்களின் அறியாமையாகிய பேதைமையை அகற்றும் திருவருள் ஆற்றலாகிய பெண்ணின் எண்ணமாகிய நடுவுள் அவ் ஆற்றலைத் திருமேனி யாகவுடைய ஆணாகிய சிவனும் தோன்றி நின்றனன். என் பிறப்பகற்றும் செவ்வி யறிந்து தன் திருவடிக்கு ஆக்குகின்ற அருளே திருமேனி யாகவுடைய சிவபெருமானின் உண்மை உணர்ந்தால் குறியால் உணரப்படும் ஆண் பெண் என்ற பேச்சு அற்று விடும்.

1160. பேச்சற்ற நற்பொருள் காணும் பெருந்தகை
மாச்சற்ற சோதி மனோன்மனி மங்கையாங்
காச்சற்ற சோதி கடவு ளுடன்புணர்ந்து
ஆச்சற்றெ னுள்புகுந்து ஆவிக்கும் தானே.

பொருள் : சிவன் பேச்சற்ற இடத்தில் உணரும் நற் பொருளாவன். அப் பெருந்தகை இயல்பாகவே மாகன்ற பேரறிவுப் பேரொளி. மனோன்மணி மங்கையாகிய பகையற்ற பேராற்றல் பேரொளி அச்சிவனை மணந்தனள். அவள் எளியேனுள் புகுந்து தானே களிப்பிக்கச் செய்வாள் ஆயினாள்.

இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் - Page 2 Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Mon Mar 26, 2012 3:33 pm

1161. ஆலிக்குங் கன்னி அரிவை மனோன்மனி
பாலித்து உலகில் பரந்துபெண் ஆகும்
வேலைத் தலைவியை வேத முதல்வியை
ஆலித்து ஒருவன் உகந்துநின் றானே.

பொருள் : ஆருயிர்களின் அன்பிற்கு ஈடாகக் களிப்பிக்கச் செய்யும் கன்னி அரிய மனோன்மணி. அவன் உலகில் பெரும் பயனை அருளி நீக்கமற நிறைந்து நிற்கும் பெண்ணாவள். அவளே ஐந்தொழில் புரியும் அருள் தலைவி. அவளே மறை முதல்வி அவளை இடப்பாகத்துப் பெற்ற ஒப்பில்லாத சிவன் உயர்ந்து நின்றனன்.

1162. உலந்துநின் றான்நம்பி ஒண்ணுதற் கண்ணோடு
உகந்துநின் றான்நம் உழைபுக நோக்கி
உகந்துநின் றான்இவ் உலகங்கள் எல்லாம்
உகந்துநின் றான்அவன் தன்தோள் தொகுத்தே.

பொருள் : நம்பியாகிய சிவன் அழகிய நெற்றிக் கண்ணுடன் உயர்ந்து நின்றனன். அவன் ஆருயிர்கள் தன் திருவடியில் புகவேண்டும் என்னும் அருள் நோக்கத்தால் அவ்வுயிர்களிடத்தும் முதன்மை பெற்றிருந்தனன். அனைத்து உலகங்கட்கும் அவனே தலைவனாய் நின்றனன். இவை யனைத்தும் திருவருள் அம்மையின் திருத் தோள் புணர்ந்தமையால் வந்தன. அதனால் அம்மையை அணைந்து உயர்ந்து நின்றான் என்பர்.

1163. குத்து முலைச்சி குழைந்த மருங்கினள்
துத்தி விரிந்த சுணங்கினள் தூமொழ
புத்தகச் சீறடிப் பாவை புணர்வினைத்
தொத்த கருத்துச் சொல்லகில் லேனே.

பொருள் : விம்முகின்ற தனங்களை யுடையவளும் மெல்லிய இடையினை யுடையவளும், புள்ளிகள் விரவிய தேமலையுடையவளும் தூய்மையான மொழியினை யுடையவளும் மயில் தோகை போன்ற அழகிய திருவடிகளையும் உடைய பாவை போன்ற பராசத்தியைச் சேர்ந்தமையால் உண்டான குறிப்பைச் சொல்ல முடியாது.

1164. சொல்லஒண் ணாத அழற்பொதி மண்டலம்
சொல்லஒண் ணாது திகைத்தங்கு இருப்பர்கள்
வெல்லஒண் ணாத வினைத்தனி நாயகி
மல்லஒண் ணாத மனோன்மணி தானே.

பொருள் : அக்கினி மண்டலம் விளங்கும் காமபீடத்தின் வல்லபத்தை யாராலும் அளவிட்டுச் சொல்ல முடியாது. அளந்து அறிய முடியாமல் திகைப்புடன் மக்கள் அங்கு உள்ளனர். வினைப் போகத்தை வெல்ல அரிதாகும்படி ஒப்பற்ற நாயகி அமைத்துள்ளாள். இப்படிப்பட்ட ஆற்றலுடன் கூடிய சத்தியாகிய மனோன்மணியைப் பந்தித்துச் செயல் படாது நிறுத்த முடியாது.

1165. தானே இருநிலம் தாங்கிலிண் ணாய்நிற்கும்
தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும்
தானே மழைபொழி தையலுமாய் நிற்கும்
தானே வடவரைத் தண்கடற் கண்ணே.

பொருள் : திருவருள் அம்மையே இருநிலமாகவும் பூதங்களைத் தாங்கும் விண்ணாகவும் தீ ஞாயிறு திங்கள் என்று முச்சுடராகவும் நீருக்கு முதலாம் மழையாகவும் நிற்பள். அவளே பண்டு வடஎல்லையாக அமைந்த இமயமலையாக நிற்பன் இம்மலை அதற்கு முன் கடலின் கண் அமிழ்ந்திருந்தது. அது தென்கடல் கோளால் மேலெழுந்தது.

1166. கண்ணுடை யாளைக் கலந்தங்கு இருந்தவர்
மண்ணுடை யாரை மனித்தரிற் கூட்டொணாப்
பண்ணுடை யார்கள் பதைப்பற்று இருந்தவர்
விண்ணுடை யார்களை மேலுறக் கண்டே.

பொருள் : நெற்றிக் கண்ணையுடைய பராசக்தியைக் கூடி மதிமண்டலத்துக் களித்த ஞானிகள் மண்ணுலகத்தவராயினும் அவர்களை மனிதர்கள் என்று கருதவேண்டா. தெய்வகுணம் பொருந்தியவர்கள் ஆவார்கள். பதைப்பின்றி இருந்து அவர்கள் ஆகாய மண்லை வாசிகளைச் சூக்கும சிருஷ்டியினால் கண்டிருப்பர். நெற்றிக் கண்ணை உடையாளைக் கலந்திருப்பவர்க்கு நெற்றிக்கண் தொழிற்படுவதால் தேவ தரிசனம் பெறலாம் என்பதாம்.

1167. கண்டுஎண் திசையும் கலந்து வருங்கன்னி
பண்டுஎண் திசையும் பராசத்தி யாய்நிற்கும்
விண்டுஎண் திசையும் விரைமலர் கைக்கொண்டு
தொண்டுஎண் திசையும் தொழநின்ற கன்னியே.

பொருள் : திருவருள் எட்டுத் திசைகளிலும் உள்ள உலகுடல் கருவிகளைக் கருதிய அளவானே தோற்றமுறக் கண்டு அவற்றுடன் கலந்து இயக்கும் கன்னி. அவள் உலகத் தோற்றத்துக்கு முன் கருவுற்ற தாய்போல் சூலியாக நிற்பள். அப்போது அவள் வனப்பாற்றல் என்று பெயர் பெறுவள். அவள் திருவடியை எண்புலத்துள்ளாரும் நறுமலர் கைக் தொண்டு இயற்றித் தொழுவர். அத் தொழுகையை ஏற்றுத் துணையருள் புரிய இணையிலாக் கன்னியாக அவள் நின்றனள்.

1168. கன்னி ஒளியென நின்றஇச் சந்திரன்
மன்னி யிருக்கின்ற மாளிகை செந்நிறம்
சென்னி யிருப்பிடம் சேர்பதி னாறுடன்
பன்னி யிருப்பப் பராசத்தி யாமே.

பொருள் : திங்கள் போன்ற நெற்றியை யுடையவள், பேரொளி சேர் திருவருள் அம்மை நிலை பெற்றிருக்கும் வளமனை ஆருயிர்களின் நெற்றியாகும். அவள் செந்நிறம் உடையவள். கலைகள் பதினாறாகும். யாவரும் பாராட்டிப் புகழ எழுந்தருளியிருப்பவள் திருவருள் அம்மையே.

1169. பராசத்தி என்றென்று பல்வகை யாலும்
தராசத்தி யான தலைப்பிர மாணி
இராசத்தி யாமள ஆகமத் தாளாகும்
குராசத்தி கோலம் பலவுணர்ந் தேனே.

பொருள் : பராசத்தி பலவகையிலும் எல்லாவற்றையும் என்றென்றும் தாங்கி நிற்கும் சத்தியாய் முதன்மையான அளவையாக இருப்பவள். இரவின் கண் விளங்கும் சத்தியாய் உருத்திர யாமளம் என்னும் ஆகமத்தால் உணர்த்தப்படுபவள். குருவாக வருகின்ற சத்தியின் வடிவங்கள் பலவற்றையும் உணர்ந்தேன். வியாமள ஆகமம் சத்திவழிபாட்டை உணர்த்தும் ஆகமம்.

1170. உணர்ந்துஉலகு ஏழையும் யோகினி சத்தி
உணர்ந்துஉயி ராய்நிற்கும் உள்ளத்தின் ஈசன்
புணர்ந்தொரு காலத்துப் போகமது ஆதி
இணைந்து பரமென்று இசைந்துஇது தானே.

பொருள் : சிவனும் அருளுடன் ஒருகாலத்து இணைந்து ஆருயிர் வாழ்வுறப் போகநிலையாகிய வாழ்வு நிலையில் பரம் என்று இருந்தனன். அப்பரத்துடன் இசைந்த பராசத்தி தன் ஈசன் ஆகிய சிவம் திருவுள்ளம் கொள்ள யோகினி சத்தியாகிய நடப்பாற்றலால் ஏழ் உலகங்களையும் உணர்ச்சியால் தோற்றுவித்தது. தோற்றுவித்த ஏழ் உலகங்களாகிய எழுவகைப்பிறப்பு உயிர்கட்கும் உயிர்க்குயிராய் நின்றதும் அவ்வாற்றலுக்குரிய அம்மையாகும்.

1171. இதுஅப் பெருந்தகை எம்பெரு மானும்
பொதுஅக் கல்வியும் போகமும் ஆகி
மது அக் குழலி மனோன்மணி மங்கை
அதுஅக் கல்வியுள் ஆயுழி யோகமே.

பொருள் : இஃது என்று சுட்டப்பெறும் அம்மையும் பெருந்தகையாகிய சிவனும் கல்வியும் அதன்பயனும் போன்று பொருந்தியிருந்தனர். தேன் நிறைந்த மலர் சூடிய மனோன்மணி மங்கை என்னும் அம்மை ஆருயிர்கள் கற்கும் கல்வியும் அதன் பயனுமாய் நிற்பன்.

1172. யோகநற் சத்தி ஒளிபீடம் தானாகும்
யோகநற் சத்தி ஒளிமுகன் தெற்காகும்
யோகநற் சத்தி உதர நடுவாகும்
யோகநற் சத்திதான் உத்தரந் தேரே.

பொருள் : சிவனுடன் விட்டுப்பிரியாத திருவருள் ஆற்றல், ஒளி விளங்கும் இருக்கையாகிய பீடமாகும். அவ்ஆற்றலே திருவுருவின் திருமுகமாகும். அம்முகம் தென்முகம் நோக்கியதாகும். அவ் ஆற்றலே வயிறாகும், அதுவே நடுவாகும். அவ் ஆற்றலே திருவடியாகும். அத்திருவடியே உயர்வற உயர்ந்த சிறப்பாகும்.

1173. தேர்ந்தெழு மேலாம் சிவன்அங்கி யோடுற
வார்ந்தெழு மாயையும் அந்தம தாய்நிற்கும்
ஓர்ந்தெழு விந்துவும் நாதமும் ஓங்கிட
கூர்ந்தெழு கின்றனள் கோல்வளை தானே.

பொருள் : திருவருளம்மை (சத்தி) பேரொளிப் பிழம்பாம் சிவத்தினுள் ஒடுங்கும் அதுவே பேரொடுக்கநிலை. அந்நிலையில் மாயாகாரியங்களும் தம் முதற்காரணமாகிய மாயையின் கண் ஒடுங்கும். அம்மாயை திருவருள் ஆற்றலின்கண் ஒடுங்கும். இதுபோல் உலகத் தோற்றத்தின்கண் சிவத்தின் நின்றும் அருளாற்றல் வெளிப்படும். அது வெளிப்பட்டதும் மாயையின் கண் சொல்லுறுப்பாகத் தோன்றும் ஓசையும் ஒளியுமாகிய நாத விந்துக்கள் அம்மையின் நினைவாற்றலால் தோன்றும். அவை தொழிற்படுமாறு, அழகிய வளையல் அணிந்த அம்மையும் அப்பன் இடமாக நின்று முனைந்து எழுகின்றனள்.

1174. தானான ஆறுஎட்ட தாம்பரைக் குள்மிசை
தானான ஆறும்ஈ ரேழும் சககலை
தானான விந்து சகமே பரமெனும்
தானாம் பரவா தனையெனத் தக்கதே.

பொருள் : பரையாகிய திருவருள் மூலமுதலாகும் ஆறு நிலைக்களங்களும், அகத்தவமாகிய எட்டு யோக நிலைகளும், தனக்கு இடம் என்று கொண்டருள்வள். அதுபோல் அறுவகை வழிகளும் பதினான்கு உலகங்களும் தானாகக் கலந்திருப்பாள். கலைவடிவாகச் சயைமப்பட்ட உலகிற்கு முதலாம் விந்துவும் தானாக நிற்பள். பரமனாகிய நாதமும் தானாம். இத்திருவருள் திருவடிப் பேற்றை அப்பொழுது காட்டாமல் மறைத்தலின் மறைப் பாற்றல் எனத் தக்கதென்றனர்.

1175. தக்க பராவித்தை தானிரு பானேழில்
தக்கெழும் ஓர்உத் திரம்சொல்லச் சொல்லவே
மிக்கிடும் எண்சத்தி வெண்ணிற முக்கண்ணி
தொக்க கதையோடு தொன்முத் திரையாளே.

பொருள் : மிகவும் சிறந்த திருவருளின் கலையைப் பயிலுதண்கு ஏற்ற நாள் முக்கூட்டாகிய பரணி நாளாகும். பண்டைக் காலத்தில் கார்த்திகையை முதல் நாளாகக் கொண்டு எண்ணியுள்ளார்கள். அதனால் பரணிநாள் இருபத்தேழாம் நாளாயிற்று. அத்திருவருள் கலையைப் பயில்வார்க்கு ஒப்பில்லாத விடை பகரவே வெளிப்பட்டுத் தோன்றுவள். அவள் எட்டுச் சத்திகளை யுடையவள். அவள் வெள்ளிய நிறமுடையவள். அவளே மூன்று கண்களையும் உடையவள். அவளே அமைந்த காரணத்துடன் அரிய பழமையான முத்திரையையும் உடையவன் (உத்திரம் - விடை)

1176. முத்திரை மூன்றின் முடிந்தமெய்ஞ் ஞானத்தள்
தத்துவ மாய்அல்ல வாய சகலத்தள்
வைத்த பராபர னாய பராபரை
சத்தியும் ஆனந்த சத்தியும் கொங்கே.

பொருள் : அன்பு அறிவு ஆற்றல்களை விளக்கும் மூவகை முத்திரைகளுள் முடிந்த முத்திரையாகிய அறிவு முத்திரையுடையவள், அருளம்மை. தத்துவமாகிய உலக உடல்களுடன் கலப்பால் ஒன்றாய், பொருள் தன்மையால் வேறாய் உதவுதலால் உடனாய் எல்லாமாய் யிருப்பவளும் அவளே. அவன் அருள் செய்தற் பொருட்டுச் சிவ பெருமானுக்குச் திருமேனியாக உடையவள். நடப்பாற்றலாகிய ஆதிசத்தியும் வனப்பு ஆற்றலாகிய இன்பச் சத்தியும் சிவனை விட்டுப் பிரிந்து நில்லாதவர். அதனால் அவ்விருவரும் சிவனை மணக்கின்றனர் என்றனர்.

1177. கொங்குஈன்ற கொம்பின் குரும்பைக் குலாங்கன்னி
பொங்கிய குங்குமத் தோளி பொருந்தினள்
அங்குச பாசம் எனும்அகி லம்கனி
தங்கும் அவள்மனை தான்அறி வாயே.

பொருள் : திருவருளம்மை மணம் கமழ்கின்ற கொம்பு போலும் இடையினையுடையாள். குரும்பை போன்ற திருமுலையை உடையவளும் அவளே. அவளே அருள் விளக்கத்துடன் திகழும் கன்னி, குங்கும நிறத்தினையுடையவள், தோட்டியும் கயிறும் உடைய திருக் கையினை யுடையவளும் அவளே. அவள் அடியார் அகத் தாமரையின்கண் வீற்றிருப்பவள். இவற்றை அடியவர்க்கு அத்திருவருள் உணர்த்த உணர்ந்து ஒழுகும் தன்மை அவர்க்கு எய்தும். அவர்தம் நெஞ்சகமே அம்மை உறையும் உறையுளாகும்.

1178. வாயு மனமும் கடந்த மனோன்மணி
பேயும் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும்நல் தாரமும் ஆமே.

பொருள் : சீவர்களின் உட்சுவாச நிசுவாசத்தையும் மனத்தையும் கடந்து விளங்கும் மனோன்மணி பேய்களையும் பல்வேறு கணங்களையும் தமக்கு ஏவலாகப் பெற்றவள். ஆராய்ச்சி அறிவைக் கடந்த சிவனுக்கு மனோன்மணி தாயாகவும், மகளாகவும், மனைவியாகவும் உள்ளாள்.

1179. தாரமும் ஆகுவள் தத்துவ மாய்நிற்பள்
காரண காரிய மாகும் கலப்பினள்
பூரண விந்து பொதிந்த புராதனி
பாரள வாந்திசை பத்துடை யாளே.

பொருள் : பராசத்தி சிவத்துக்கு மனைவியும் ஆவள். சத்தி தத்துவமாய் நின்று நாதவிந்துகளைத் தோற்றுவிக்கவும் செய்வள். சிவத்தோடு ஒன்றிய நிலையில் அனைத்துக்கும் பரமகாரணியாகவும் சிருஷ்டியை நினைந்து பிரிந்தபோது சிவத்தின் காரியமும் ஆவள். இத்தகைய புணர்ப்பினை உடையாள் நிறைந்த விந்து சத்தி பொருந்தியுள்ள பழமைக் கெல்லாம் பழமையானவள். அண்டங்களின் அளவாகப் பிரிந்துள்ள திசைகள் பத்தையும் உடைமையாகக் கொண்டவள்.

1180. பத்துமுகமுடை யாள்நம் பராசத்தி
வைத்தனன் ஆறங்க நாலுடன் தான்வேதம்
ஒத்தனள் ஆதாரம் ஒன்றுடன் ஓங்கியே
நித்தமாய் நின்றாள்எம் நேரிழை கூறே.

பொருள் : திருவருள் அம்மை பத்துத் திருமுகங்களை உடையவள். அவள் பேரருள் என்னும் பெயருடைய பராசத்தி யாவள். அவளே திருநான்மறையும் கருவியாம் ஆறு உறுப்புக்களும் ஆருயிர் உய்ய ஓதுவித்தனள். அவளே அத்தனாகிய சிவனுக்கு அருள் திருமேனியாதலால் தாங்குவதாகிய ஆதாரம் ஆகின்றனள். ஒடுங்கும் போது அருள் அத்தனுள் ஒடுங்குதலால் தாங்கப்படுவதாகின்றது. இம் முறையாகத்தான் அதுவாம் தன்மையில் சிவனும் அருளும் என்றும் பிரிப்பின்றி நின்று அருள் செய்வர்.

1181. கூறிய கன்னி குலாய புருவத்தள்
சீறிய னாய்உல கேழும் திகழ்ந்தவள்
ஆரிய நங்கை அமுத பயோதரி
பேருயி ராளி பிறிவறுத் தாளே.

பொருள் : திருவருள் அம்மை என்றுளம் கன்னி என்று கூறப்படுபவள். அவள் விளங்கும் புருவத்தள். சிறந்தவளாக ஏழ் உலகும் விளங்குபவள். மேலானவள். அமுதம் நிறைந்த தனங்களை யுடையவள். அவள் அனைத்துயிரையும் அருள் காரணமாகக் காக்கின்றவள். அவள் ஆருயிரினின்றும் பிரிய வேண்டிய மல மாயை கன்மங்களைப் பிரிவித்தனள்.

1182. பிறிவின்றி நின்ற பெருந்தகைப் பேதை
குறியொன்றி நின்றிடும் கோமளக் கொம்பு
பொறியொன்றி நின்று புணர்ச்சிசெய் தாங்கே
அறிவொன்றி நின்றனள் ஆருயி ருள்ளே.

பொருள் : திருவருள் ஆருயிர்களை விட்டுப் பிரியாது நிற்கும் பெருந்தகை அம்மை. இரக்கமுள்ள தாய். அகவழிபாடு செய்யும் அன்பர்கள் குறிக்கும் குறிப்பில் பொருந்தி நிற்கும் இளமையும் அழழும் மென்மையும் வாய்ந்த கோமளக் கொம்பும் அவளே. அறிகருவியுடன் ஒத்து நின்று அவற்றைத் தொழிற்படுத்தி ஆருயிர்கட்கு உயிர்க்கு உயிராய் நின்று அவ்வுயிர்களின் அறிவுக்கு அறிவாய் இருப்பவளும் அவளே.

1183. உள்ளத்தின் உள்ளே உடனிருந்து ஐவர்தம்
கள்ளத்தை நீக்கிக் கலந்துட னேபுல்கிக்
கொள்ளத் தவநெறி கூடிய இன்பத்து
வள்ளல் தலைவி மருட்டிப் புரிந்தே.

பொருள் : வள்ளலாகிய பராசக்தி மனத்தினுள் உடனாய் இருந்து ஐம்பொறிகள் செய்யும் கள்ளத் தனத்தை ஒழித்து, உயிரோடு கலந்து, தவநெறி மேற்கொள்ளக்கூடிய உண்டான இன்பத்தில் என்னை மயக்கி விரும்பச் செய்தாள்.

1184. புரிந்தருள் செய்கின்ற போகமா சத்தி
இருந்தருள் செய்கின்ற இன்பம் அறியார்
பொருந்தி யிருந்த புதல்விபூ வண்ணத்து
இருந்த இலக்கில் இனிதிருந் தாளே.

பொருள் : விரும்பி அருள்புரிகின்ற போகசத்தி மனத்துள் இருந்து இன்பம் அளிப்பதையாரும் அறியார். அவ்வாறு பொருந்தியிருந்த புதல்வியாகிய சத்தி மலரும் மணமும் போல் சிவத்தோடு பொருந்தி இனிமையாக வீற்றிருந்தாள்.

1185. இருந்தனள் ஏந்திழை என்னுளம் மேவித்
திருந்து புணர்ச்சியில் தேர்ந்துணர்ந்து உன்னி
நிரந்தர மாகிய நிரதி சயமொடு
பொருந்த விலக்கில் புணர்ச்சி அதுவே.

பொருள் : அடியேன் உள்ளத்தைப் பொருந்தித் திருவருள் அம்மை இருந்தனள். நாமெல்லாம் இறைவன் திருவடிப் பேரின்பமாகிய எல்லை யில்லாத வியத்தகு இன்பத்தைப் பெற்று என்றும் ஒன்று போல் வாழ சிவபெருமானுடன் அம்மை பொருந்தியிருப்பாள். அதனால் ஆருயிர்க்கும் பிரிவில்லாப் பேரின்பம் உண்டு. (எல்லை யில்லாத வியத்தகு இன்பம் - நிரதிசயானந்தம்.)

1186. அதுஇது என்னும் அவாவினை நீக்கித்
துதியது செய்து சுழியுற நோக்கில்
விதியது தன்னையும் வென்றிட லாகும்
மதிமல ராள்சொன்ன மண்டலம் மூன்றே.

பொருள் : அது வேண்டும் இது வேண்டும் என்னும் ஆசையினை விட்டு, அவளைப்புகழ்ச்சி செய்து இடைவிடாது தியானித்தால் விதிக்கப்பட்ட வினைகளையும் வென்று விடலாம். சந்திர மண்டலவாசியாகிய அம்மை சொன்ன மண்டலங்கள் மூன்றாகும். சிவயநம எனச் சிந்தித்தலே விதியை öவ்லலும் மதியாகும். (மதிமலரான் - செந்தாமரைப் பீடத்தாள் எனினுமாம்.)

1187. மூன்றுள மண்டலம் மோகினி சேர்விடம்
ஏன்றுள ஈராறு எழுகலை உச்சியில்
தோன்றும் இலக்குற ஆகுதல் மாமாயை
ஏன்றனள் ஏழிரண்டு இந்துவோடு ஈறே.

பொருள் : மோகினியாகிய உணர்வுமெய் - அசுத்தமாயை. காலம் நியதி கலை என்னும் மூன்று பிரிவினையுடையது. அவை பன்னிரண்டாகக் காணப்பெறும்கலைமுடிவில் காணப்படும். இதற்குக் குறிக்கோளாக இருப்பது மாமாயை என்னும் தூமாயை இவற்றைப் பதினாலு கலையாகவும் பன்னிரண்டு கலையாகவும் ஏற்றனள் அம்மை.

1188. இந்துவின் நின்றொழு நாதம் இரவிபோல்
வந்துபின் நாக்கின் மதித்தெழு கண்டத்தில்
உந்திய சோதி இதயத்து எழும்ஒலி
இந்துவின் மேலுற்ற ஈறது தானே.

பொருள் : இந்துவாகிய தூமாயையின் நின்றெழும் முப்பத்தாறாம் மெய்யாகிய ஒலி-நாதம் நிறையுயிர் அகத்து பகலவன் போல் கதிர் ஒளியாகத் தோன்றிச் செவியில் பொருந்துமாறு நாக்கில் எழும். அதன் முன்னிலையாகிய கண்டத்தில் வெளித்தள்ளும் மிடற்று ஓசையாக நிற்கும். அதன் முன்னிலையாகிய நினைவு ஓசை திங்கள் நிலவு ஒத்து இருக்கும். இதற்கு முன்னிலையாகிய அண்ணோசை ஒன்று உண்டெனினும் இவைபோல் ஒப்பில் வைத்துக் கூற முடியாமையால் இதுவே ஈறு என்றார்.

1189. ஈறது தான்முதல் எண்ணிரண்டு ஆயிரம்
மாறுதல் இன்றி மனோவச மாய் எழில்
தூறது செய்யும் சுகந்தச் சுழியது
பேறது செய்து பிறந்திருந் தாளே.

பொருள் : முடிந்த முடிவாகிய திருவருள்மை முதல்வியாவாள். அவள் இருக்கை பதினாறாயிரம் இதழ்களை யுடையதாய் மாறுதல் இல்லாமல் அன்பர் மனத்து அடங்குவதாய் அழகிய மதி மண்டலத்தாமரையாகும். இதுவே சிறந்த நறுமணம் கமழும் விந்துவாகும். இதனால் உயிர்கட்குப் பேறருளிக்காட்சிப் புலனாம் உருவுடனும் தோன்றியிருந்தனள் என்பது புலனாம்.

1190. இருந்தனள் ஏந்திழை ஈறதி லாகத்
திருந்திய ஆனந்தம் செந்நெறி நண்ணிப்
பொருந்து புவனங்கள் போற்றிசெய்து ஏத்தி
வருந்த இருந்தனள் மங்கைநல் லாளே.

பொருள் : திருவருள் அம்மை முடிவாக மதிமண்டலத்தில் இருந்தனள். எல்லா உலகங்களிலும் அவரவர் வினைக்கு ஈடாகப் பிறந்துவாழும் உயிர்கள் முயன்று வழிபட்டுச் செந்நெறி முறைப்படி ஒழுகிப் பேரின்பம் எய்தி வாழ மங்கை நல்லாளும் எழுந்தருளி இருந்தனள்.

1191. மங்கையும் மாரனும் தம்மொடு கூடிநின்று
அங்குலி கூட்டி அகம்புறம் பார்த்தனர்
கொங்கைநல் லாளும் குமாரர்கள் ஐவரும்
தங்களின் மேவிச் சடங்குசெய் தாரே.

பொருள் : சத்தியும் சிவனும் பொருந்தி நின்று யானைத் துதிக்கை போன்ற பிரணவத்தின் உச்சியிலிருந்து சிருஷ்டிக்க எண்ணிச் சீவர்களுக்கு உடலுக்குவேண்டியதையும் உயிருக்கு வேண்டியதையும் கணித்தனர். பார்வதியும் ஐந்து குமாரர்களுடன் தங்களது சத்தியோடு சேர்த்து உலகத்துக் கானபடைத்தல் ஆதித் தொழில்களைச் செய்தனர்.

1192. சடங்கது செய்து தவம்புரி வார்கள்
கடந்தனின் உள்ளே கருதுவர் ஆகில்
தொடர்ந்தெழு சோதி துளைவழி ஏறி
அடங்கிடும அன்பினது ஆயிழை பாலே.

பொருள் : புறத்தே வேள்வி முதலிய சடங்குகள் செய்து தவம் புரியும் நன்னெறியாளர் அகத்தேயும் அவ்வழி பாட்டைப் பயில் வராயின் உயிர்க்கு உயிராகிய திருவருள் அம்மை பேரொளியாகத் தோன்றுவள். அவ்வருள் ஒளியைத் துணையாகப் பற்றி மேற்சென்று அன்பின்கண் அடங்குதல் வேண்டும். அங்ஙனம் அன்பின்கண் அடங்கி நிற்பார் அம்மையார் திருவடியைச் சேர்வர். (கடம் - தேகம்)

1193. பாவித் திருக்கும் பனிமலர் ஆறினும்
ஆலித் திருக்கும் அவற்றின் அகம்படி
சீலத்தை நீக்கத் திகழ்ந்தெழு மந்திரம்
மூலத்து மேலது முத்தது வாமே.

பொருள் : அக நிலைக்களங்களாகிய ஆறுஆதாமும் தாமரை மலர்களாக அமைத்துக் கொள்ளப்படும் அவற்றுடன் பொருந்திக் களித்திருக்கும் அந்நிலையும் திருவருள் அம்மையைச் சேரச் செல்வார்க்கு நீக்குதல் வேண்டும். அந்நிலையினையும் நீக்கி மேல் ஓங்குதல் வேண்டும். அங்ஙனம் செய்தற்குத் துணையாம் மந்திரம் நமசிவய என்பதாகும். இதுவே முத்துப்போன்று தனிமுதல் தமிழ்மந்திரமாகும்.

1194. முத்து வதனத்தி முகந்தொறும் முக்கண்ணி
சத்தி சதிரி சகளி சடாதரி
பத்துக் கரத்தி பராபரன் பைந்தொடி
வித்தகி என்னுளம் மேவிநின் றாளே.

பொருள் : முத்துப்போலும் அருளொளி வீசும் திருமுகத்தினையுடையவள். ஒவ்வொரு திருமுகத்தும் மும்மூன்று திருக்கண்களை யுடையவள். அறிவாற்றலள். திறமைமிக்கவள் உயிர்கள் உய்யும் பொருட்டு அருளால் திருமேனி கொள்பவள். விரிந்த திருச்சடையினை யுடையவள். பத்துக்கரத் தினையுடையவள். சிவபெருமான் ஒரு கூற்றில் மாறாது விளங்கும் ஒப்பிலா வளையலை அணிந்தவள். வியத்தகு காரணமாயுள்ளவள். அத்தகைய திருவருள் அம்மை எளியேன் உள்ளம் பொருந்தியருளினள்.

1195. மேவிய மண்டலம் மூன்றுடன் கீழ்எரி
தாவிய நற்பதத் தள்மதி யங்கதிர்
மூவரும் கூடி முதல்வியாய் முன்நிற்பார்
ஓவினும் மேலிடும் உள்ளொளி யாமே.

பொருள் : பொருந்திய மண்டலங்கள் மூவினுக்கும் உரிய தெய்வங்களாகக் கருதப்படுவோர் தீ, திங்கள், ஞாயிறு என்பபடுவர். இம் மூவரும் முதல்வியாரின் திருமுன் அவர்திரு ஆணையை வேண்டிய நிற்பர். அம் முதல்வியாரின் திருவருள் ஒளி இடையறாது விளங்கிக் கொண்டிருக்கும். திருவருள் ஒளிகண் மூடிய காலத்தும் அகத்து விளங்கும் ஆதலின் ஓவினும் என்றார்.

1196. உள்ளொளி மூவிரண்டு ஓங்கிய அங்கங்கள்
வெள்ளொளி அங்கியின் மேவி அவரொடும்
கள்ளவிழ் கோதை கலந்தவுடனே நிற்கும்
கொள்ள விசுத்திக் கொடியமு தாமே.

பொருள் : திருவருள் அம்மை அகத்தே ஒளியோடு காணப்படும் ஆறு நிலைக் களங்களுக்கும் ஒளி கொடுத்துக் கொண்டிருக்கும் முதல்வியாகப் பொருந்துவள். பொருந்தி அந்நிலைக் களங்களுக்குரிய தெய்வங்களுடன் தேன்வழியும் கொன்றை மாலை அணிந்துள்ள சிவபெருமான் வழிக்கலந்து உடனாய் நிற்பள். அவளே மிகவும் இயற்கைத் தூய்மை எய்தியவள்.

1197. கொடியதுஇ குருவுள் இருப்பப்
படியது வாருணைப் பைங்கழல் ஈசன்
வடிவது ஆனந்தம் வந்து முறையே
இடுமுதல் ஆறங்கம் ஏந்திழை யாளே.

பொருள் : ஒழுங்காய் அமைந்த சிறந்த வரைகளுள் குருவுருவாம் திருவருள் உள்ளிருத்தலால் பொருந்திய நிறம் விளங்குகின்ற பொற்கழல் அணிந்த சிவபெருமானின் திருவுருவம் பேரின்பம் ஆகும். அத்திருவுருவாய் விளங்கும் அம்மை ஆறு ஆதாரங்களுக்கு முதல்வியாவாள்.

1198. ஏந்திழை யாளும் இறைவர்கள் மூவரும்
காந்தாரம் ஆறும் கலைமுதல் ஈரெட்டும்
ஆந்த குளத்தியும் மந்திரர் ஆயவும்
சார்ந்தனர் ஏத்த இருந்தனள் சத்தியே.

பொருள் : திருவருள் அம்மையும் அவர் ஆணைவழி இயங்கும் அயன், அரி, அரன் என்னும் கடவுளர் மூவரும் அறுவகை ஓசையும், பதினாறு கலைகளும், தீ நெறிச் செலுத்தாது, நன்னெறிச் செலுத்தும் புருவநடு ஆணையும், மறைமொழி ஆராய்வும் கொண்டவனாய்ச் சார்ந்தவர் வழிபட்டேத்தும் தன்மையளாய் வீற்றிருந்தனள். (குளம்-நெற்றி; புருவ நடு.)

1199. சத்தியென் பாளொரு சாதகப் பெண்பிள்ளை
முத்திக்கு நாயகி என்பது அறிகிலர்
பத்தியைப் பாழில் உகுத்தஅப் பாவிகள்
கத்திய நாய்போல் கதறுகின் றாரே.

பொருள் : சத்தியென்று ஓதப்பெறும் பெண்பிள்ளை தோன்றாத் துணையாவாள். அவள் ஆருயிர்கள் எல்லாம் நன்னெறி நான்மை பயின்று நாயனடி கலைக்கூடப் பெறுதற்குத் துணை புரிபவள். அவ்வம்மை வீடு பேறு அளிக்கும் மேன்மையள். அவள் திருவடியில் சேர்ப்பிக்கும் பேரன் பாகிய பத்தியினைப் பாழாக உகுத்த அறிவிலாதவர், நாய்போல் பயனின்று மறை மொழிந்து கதறுகின்றார்கள்.

1200. ஆரே திருவின் திருவடி காண்பார்கள்
நேரே நின்றுஓதி நினையவும்வல் லார்க்குக்
காரேர் குழலி கமல மலரன்ன
சீரேயும் சேவடி சிந்தைவைத் தாளே.

பொருள் : திருவாகிய பராசத்தியின் திருவடியைக் காண்பவர் யார் ? அவளை ஒளியில் கண்டு புகழ்ந்து தியானம் செய்பவர்க்கு கருமை நிறமுள்ள கூந்தலை உடையவள் தனது சிவந்த தாமரை மலர்போன்ற பெருமை நிறைந்த திருவடியை அருளச்செய்வாள்.

1201. சிந்தையில் வைத்துச் சிராதிபி லேவைத்து
முந்தையில் வைத்துத்தம் மூலத்திலே வைத்து
நிந்தையில் வையா நினைவதியே வைத்துச்
சந்தையில் வைத்துச் சமாதிசெய் வீரே.

பொருள் : சத்தியைப்பற்றிய கருத்துக்களைச் சிந்தனையில் அகலாது வைத்து, சிரத்தில் ஆதியான புருவ மத்தியில் தொடங்கி, ஒளிமுகமாக முன்னிலைப்படுத்திக் கொண்டு, மூலத்தில் வைத்தும், உலக விஷயங்களை நினையாமல் அவளையே சிந்தித்து, திருமுறை நூல்களைப் பண்ணோடும் ஓதி அமைதி வடிவாய் இன்புற்று வாழ்வீராக ! சிரசாதி என்பது சிராதி எனத்திரிந்து நின்றது.

1202. சமாதிசெய் வார்க்குத் தான்முத லாகிச்
சிவாதியி லாரும் சிலைநுத லாளை
நவாதியி லாக நயந்தது ஓதில்
உவாதி அவளுக்கு உறைவிலே தாமே.

பொருள் : சமாதியாகிய ஒடுக்கத்தில் பயில்வார்க்குத் திருவருள் அம்மையே முதல்வியாவாள். அவள் விற்போலும் நெற்றியை உடையவள். அவளே சிவத்தில் பொருந்தியிருப்பவள். ஒன்பது திருவுருவங்களாகக் கோலங்கொண்டு அருள் செய்யும் அம்மையும் அவளே. அவ்வுருவில் விரும்பிய தொன்றை வழிபடில் அத்திருவுருவே எவ்வகைத் திரிபும் இல்லாத அம்மை அருள் புரிவதற்கு ஆகும் உறையுள் என்ப உறையுமிடம் அதுவாõகும்.

1203. உறைபதி தோறும் முறைமுறை மேவி
நறைகமழ் கோதையை நாடொறும் நண்ணி
மறையுட னேநிற்கும் மற்றுள்ள நான்கும்
இறைதினைப் போதினில் எய்திடலாமே.

பொருள் : திருவருள் அம்மை உயிர்கள் உய்தற்பொருட்டு, அகத்துப் போல் புறத்தும் திருக்கோயில் கொண்டுள்ளாள். அக்கோயில்கள் தோறும் சென்று மணங் கமழ்கின் பூச் சூடியுள்ள அம்மையை நாள் தோறும் வழிபட்டு நமசிவய என்னும் மந்திரத்தை ஓதும் மெய்யடியார்களுக்கு நான்கு உருவங்களாக உள்ள இறைவன் திருவருளும் விரைவில் எளிதில் எய்தும்.

1204. எய்திட லாகும் இருவினை யின்பயன்
கொய்தளிர் மேனிக் குமரி குலாங்கன்னி
மைதவழ் கண்ணிநன் மாதுரி கையொடு
கைதவம் இன்றி கருத்துறும் வாறே.

பொருள் : மேற்கூறிய வழிபாட்டு முறையில்லாதார் இருவினையின் பயனை எய்தி இளைப்பர். மாந்தளிர் போலும் திருமேனியும் குமரிப் பருவம், என்றும் நீங்கா இளமையும், அருள் பொழியும் கண்ணும் உடைய திருவருள் அம்மையை இனிய பாடல்களோடு வஞ்சனை யில்லாமல் வழிபடுக. இதுவே அம்மையை மனத்தில் இருத்தும் வகையாகும், (கைதவம் - வஞ்சகம், பொய், துன்பம்.)

1205. கருத்துறங் காலம் கருது மனமும்
திருத்தி இருந்தவை சேரு நிலத்து
ஒருத்தியை உன்னி உணர்ந்திடு மண்மேல்
இருத்திடும் எண்குணம் எய்தலும் ஆமே.

பொருள் : வழிபடும் கால முறையைக் கருதுக. சத்தியின் திருவடிகளைச் செவ்விய நெஞ்சில் நினைக. வழி பாட்டுக்குரிய இடத்தை நாடுக. ஒப்பில்லாத அவ் அம்மையை உள்ளூர நினைந்து போற்று. போற்றவே சிவபெருமானின் எட்டுக் குணங்களும் அவள் அருளால் உங்களை எளிதாக வந்தடையும்.

1206. ஆமையொன்று ஏறி அகம்படி யான்என
ஓம்என்று ஓதிஎம் உள்ளொளி யாய்நிற்கும்
தாம நறுங்குழல் தையலைக் கண்டபின்
சோம நறுமலர் சூழநின் றாளே.

பொருள் : ஆமைபோன்று ஐம்புலன்களை அடக்கி சத்தியின் துணையால் அவைகளை நல்வழிப்படுத்துக. யான் அம்மைக்கு அடிமையென உறுதியாக எண்ணுக. ஓம் என்னும் தமிழ்மறையை ஓதுக. அப்போது அம்மை உள்ளொளியாக நின்றருள்வள். அத்தகைய நறுமலர் சூடிய கூந்தலையுடைய அம்மையைக் கண்டபின் திங்கள் சூடிய அறிவருள் நிலை தோன்றும்.

1207. சூடிடும் அங்குச பாசத் துளைவழி
கூடும் இருவளைச் கோலக்கைக் குண்டிகை
நாடும் இருபத நன்னெடு ருத்திரம்
ஆடிடும் சீர்புனை ஆடக மாமே.

பொருள் : தோட்டியும் கயிறும் வழியாகப் போடப் படும் பெரிய வளையல்களும், நீர்க்கரகமும், நல்லார் நாடும் இரண்டு திருவடியும் அரசன் நாமமாகிய ஐந்தெழுத்து ஓதும் திருவாயும் கொண்டு பொன் மன்றில் திருவருள் அம்மை ஆடிடும். (உருத்திரம் - உருத்திரமந்திரம் ஈண்டு ஐந்தெழுத்து)

1208. ஆயமன் மால்அரன் ஈசன் சதாசிவன்
தாமடி சூழநின்று எய்தினார் தம்பதம்
காமனும் சாமன் இரவி கனலுடன்
சோமனும் வந்தடி குடநின் றாளே.

பொருள் : பிரமன், திருமால், ருத்திரன், மகேசன், சதாசிவன் ஆகியோர் சத்தியின் திருவடியைச் சூழத் தத்தம் பதவியைப் பெற்றனர். காமனும் அவன் தம்பியாகிய சாமனும் சூரியனும் அக்கினியுடன் சந்திரனும் அம்மையின் அருள் பெற்றுத் தங்கள் தங்கள் நிலையினை எய்தினர்.

1209. சூடும் இளம்பிறை சூலி கபாலினி
நீடும் இளங்கொடி நின்மலி நேரிழை
நாடி நடுவிடை ஞானம் உருவநின்று
ஆடும் அதன்வழி அண்ட முதல்வியே.

பொருள் : முழு முதல்வியாகிய அம்மை இளம்பிறை சூடியவள். சூலத்தைக் கைக்கொண்டவள். கபாலமாகிய மண்டை ஓட்டையும் ஏந்தியவள். என்றும் ஒரு படித்தாம் இளங்கொடி. இயல்பாகவே மலம் இல்லாதவள். சிறந்த அணிகலன் களை அணிந்தவன். நடுநாடியாக உள்ளவள். காளையை வாகனமாக உடையவள். மெய்யுணர்வே உருவானவள். அவள் ஆட்டத்தில் வழி அண்டம் அனைத்தும் நின்றாடும்.

1210. அண்டமுதலாய் அவனிபரி யந்தம்
கண்டதுஒன்று இல்லைக் கனங்குழை அல்லது
கண்டனும் கண்டியும் ஆகிய காரணம்
குண்டிகை கோளிகை கண்டத னாலே.

பொருள் : ஆகாயக் கூறான அண்ட முதல் பூமி தத்துவம் வரை பொற் காதணியுடைய பராசத்தியைத் தவிர வேறு நிலையான இடம் பெற்றவர் இல்லை. சிவனும் சத்தியமாகிய காரணம் பெண்ணும் ஆணுமாகப் படைப்பதற்காகவே யாம். (குண்டிகை - ஆண்தன்மை; கோளிகை - பெண்தன்மை.)
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் - Page 2 Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Mon Mar 26, 2012 3:35 pm

1211. ஆலம்உண் டான்அமுது ஆங்கவர் தம்பதம்
சாலவந்து எய்தும் தவத்துஇன்பம் தான்வரும்
கோலிவந்து எய்தும் குவிந்த பதவையோடு
ஏலவந்து ஈண்டி இருந்தனன் மேலே.

பொருள் : சத்தி, ஆலகாலம் உண்ட சித்துக்கு அமுதம் ஆவாள். அவர் அடையும் பதவியாவாள். நிரம்பவந்து பொருந்தும் தவத்தால் வரும் இன்பமாகத் தானே வருவாள். அத்தகைய சத்தி ஆதாரங்கள் தோறும் கோலிவந்து அடையப்பெறும் குவிந்த வழியாகிய சுழுமுனையோடு பொருந்தவத்து செறிந்த உச்சியின் மேல் விளங்கினள். (பதவை-வழி.)

1212. மேலாம் அருந்தவம் மேல்மேலும் வந்தெய்தக்
காலால் வருந்திக் கழிவர் கணத்திடை
நாலா நளினநின்று ஏத்திநட் டுச்சிதன்
மேலாம் எழுத்தினள் ஆமத்தி னாளே.

பொருள் : உயர்ந்த பெருந்தவம் வந்து கைகூட வேண்டி காடும் மலையும் கால் நோவ நடந்து வீணாகக் கழிவர். அவ்வாறன்றிக் கண்ணிமைப் பொழுதினுள் அருந்தவம் கைகூடும் வழியாதெனில் இரைக்குடராகிய ஆமத்தின்கண் சத்தி தங்கியுள்ளாள். அவளை மூலமாகிய நாலிதழ் தாமரையின் கண் நாடி வழிபட்டு உச்சிக்குமேல் உடன்கூடி உறைத்து நின்ற ஓமொழியை உன்னுதலே முறையாம்.

1213. ஆமத்து இனிதிருந்து அன்ன மயத்தினள்
ஓமத்தி லேயும் ஒருத்தி பொருந்தினள்
நாம் நமசிவ என்றுஇருப் பார்க்கு
நேமத் துணைவி நிலாவிநின் றாளே.

பொருள் : இரைக்குடலில் தங்கும் சோற்று வண்ணத்தாள் கொப்பூழின் கண் செய்யப்படும் ஓமத்தினிடத்தும் பொருந்தி யிருந்தனள். அவள் ஒப்பில்லாத சத்தியாவாள். அவள் திருப்பெயர் நமசிவ என்னும் நான்மறையாகும். அம்மறையை மறவா நினைவுடன் வழுத்துவார்க்கு அம்மை மாறாத உறுதித் துணையாவாள். விட்டு நீங்காமல் விளங்கி நிற்பாள். (ஓமம் - அக்கினிகாரியம் நெய்யால் செய்யும் வேள்வி.)

1214. நிலாமய மாகிய நீள்படி கத்தின்
சிலாமய மாகும் செழுந்த ரளத்தின்
சுலாமய மாகும் சுரிகுழற் கோதை
கலாமய மாகக் கலந்துநின் றாளே.

பொருள் : சத்தி நிலவும் பளிங்குக்கல் போன்ற வெண்ணிறத்தினள். வட்டமாகிய திரண்ட முத்துப் போன்றவள். நெளிந்த நீண்ட கூந்தலை யுடையவள். ஐங்கலை வண்ணமாய் இருப்பவள். ஆருயிர் உலகுடல் அனைத்துடனும் கலந்து நின்றனள். ஐங் கலைகளாவன; நீக்கல், நிலைப் பித்தல், நுகர்வித்தல், அமைதியாக்கல், அப்பாலாக்கல்

1215. கலந்துநின் றாள்கன்னி காதல னோடும்
கலந்துநின் றாள்உயிர் கற்பனை எல்லாம்
கலந்துநின் றாள்கலை ஞானங்கள் எல்லாம்
கலந்துநின் றாள்கன்னி காலமு மாயே.

பொருள் : திருவருட்கன்னி, காதலனாகிய சிவபெருமானுடன் கலந்து நின்றாள். ஆருயிர்கள் நாடும் நாட்டத்துள் எல்லாம் கலந்து நின்றாளும் அவளே. கலைநூல்கள் மெய் உணர்வு நூல்கள் எல்லாவற்றிலும் கலந்திருந்தனள். காலமும் ஊழியும் நாள்களுமாகிக் கலந்து நின்றவளும் அவளே.

1216. காலவி எங்கும் கருத்தும் அருத்தியும்
கூலவி ஒன்றாகும் கூட இழைத்தனன்
மாலின் மாகுலி மந்திர சண்டிகை
பாலினி பாலவன் பாகம் தாமே.

பொருள் : அம்மை சீவர்களுக்குக் காலதத்துவமாய் உள்ளவள் எங்கும் எண்ணத்தைப் பூர்த்தி செய்யும் அனுகூலமுடையவள். பிரிப்பின்றி விளங்கும் கலப்பினைச் செய்தவள். உமை; மூலாதாரச் சத்தியாகிய குண்டலினி. சண்டிகை மந்திரத்தில் விளங்குபவள். இவள் காக்கின்ற சிவத்துக்கு ஒருபாகமாய் உள்ளவள்.

1217. பாகம் பராசத்தி பைம்பொன் சடைமுடி
ஏகம் இருதயம் ஈரைந்து திண்புயம்
மோக முகம்ஐந்து முக்கண் முகந்தோறும்
நாகம் உரித்து நடஞ்செய்யும் நாதர்க்கே.

பொருள் : திருவருள் அம்மை, பொன் போலும் திருச்சடை முடியினையும், ஒன்றாம் திருவுள்ளத்தினையும், பத்துத்திருத்தோள்களையும் வேட்கை விளைவிக்கும் ஐந்து திருமுகங்களையும் முகந்தோறும் மூன்று திருக் கண்களையும் யானையுரி போர்த்த போர்வையினையும் உடையரால் எந்நாளும் நள்ளிருளில் நட்டம் செய்யும் சிவபெருமானார்க்கு ஒருபாசம் ஆனவள். அவளே பேரறிவுப் பேராற்றல் என்னும் பராசத்தியாய் இருப்பவள்.

1218. நாதனும் நால்ஒன் பதின்மரும் கூடிநின்று
ஓதிடும் கூட்டங்கள் ஓர் ஐந்து உளஅவை
வேதனும் ஈர்ஒன்ப தின்மரும் மேவிநின்று
ஆதியும் அந்தமும் ஆகிநின் றாளே.

பொருள் : சிவபெருமானும் முப்பத்தாறு தத்துவங்களும் மெய்யடியார்கள் அனைவரும் கூடிநின்று நினைவுற ஓதும் இயக்கம், ஆட்சி, நடுக்கம், விளக்கம், தோன்றுவித்தல் முதலிய ஐந்தொழில் புரியும் திருமுகங்கள் ஐந்தும் அயனும் பதினெட்டுத் தெய்வ கணங்களும் ஆகிய யாவருடனும் திருவருள் அம்மை பொருந்தி யிருந்தனள். அவளே எல்லா உலகங்களுக்கும் ஆதியும் அந்தமும் ஆகிநின்றாள்.

1219. ஆகின்ற நாள்கலை ஐம்பத்து ஒருவர்கள்
ஆகிநின் றார்களில் ஆருயி ராம்அவள்
ஆகிநின் றாளுடன் ஆகிய சக்கரத்து
ஆகிநின் றான்அவன் ஆயிழை பாடே.

பொருள் : மாயா காரியவுலகம் தோன்றும் நாள் முதற்கண் எழுத்துக்கள் ஐம்பத்தொன்றும் தோன்றும். இவற்றுள் அகர உயிராக நிற்பவள் அம்மையாகும். அவளுக்கு உடனாம் பொறியமைப்பாகிய சக்கரமாக அமைந்து நின்றான் சிவன். அஃது ஆயிழை பக்கமாகும் (கலை- அட்சரம், பாடு-பக்கம்)

1220. ஆயிழை யாளொடும் ஆதிப் பரமிடம்
ஆயதொர் அண்டவை யாறும் இரண்டுள
ஆய மனந்தொறு அறுமுகம் அவைதனில்
ஏயவார் குழலி இனிதுநின் றாளே.

பொருள் : திருவருள் அம்மையுடன் ஆதியாகிய சிவன் இடமாய் இருப்பது சக்கரம். சக்கரம்- யந்திரம்; அண்டவை. அச்சக்கரம் எட்டு இதழ்களையுடையதாய் இருக்கும். அவ் எட்டு இதழ்களுள் மனத்திற்கு வாய்த்த ஆறு இதழ்களில் மணங்கமழ்கின்ற கூந்தலையுடைய அம்மை இனிது வீற்றிருக்கின்றனள். (முகம் - இதழ்.)

1221. நின்றனள் நேரிழை யோடுடன் நேர்பட
இன்றென் அகம்படி ஏழு உயிர்ப்பெய்தும்
துன்றிய ஓர்ஒன் பதின்மரும் சூழலுள்
ஒன்றுயர் ஓதி உணர்ந்துநின் றாளே.

பொருள் : நேரிழையாகிய திருவருள்அம்மை அகத்தே நேர்பட நின்றனள். அதனால் பத்துக் காற்றாகிய உயிர்ப்பினுள் உயிர்க்காற்று, மலக்காற்று, வீங்கற்காற்று மூன்றும் ஒழித்து எஞ்சிய ஏழும் இயங்கும். அம்மையுடன் நெருங்கிய ஒன்பது ஆற்றல்களும் சூழ்ந்து வளிங்கும். உயர்வற உயர்ந்த ஒன்றாகிய சிவபெருமானை ஆருயிர்கட்கு உணர்த்த ஓதி நின்றனள். அருளம்மை ஓதி நின்றது தமிழ் மறையும் முறையுமாகும். (மறை - வேதம் முறை - ஆகமம்.)

1222. உணர்ந்தெழு மந்திரம் ஓம்எனும் உள்ளே
மணந்தெழும் ஆங்கதி யாகிய தாகும்
குணர்ந்தெழு சூதனும் சூதியும் கூடிக்
கணந்தெழும் காணும்அக் காமுகை யாமே.

பொருள் : அகத்தே உணர்ந்தெழும் மந்திரம் ஓம் என்று சொல்லும். அம்மந்திரத்தினுள்ளே பொருள்விளக்கமாகத் தோன்றும் ஆகும் நிலையும் கைகூடும். மேன்மைப் பண்புகள் அனைத்தும் இயல்பாகவே அமைந்துள்ள மறைபொருளாகிய சிவனும் சிவையும் பிறவக்கூடி ஆருயிர்களுடன் கலந் தெழுவர். இவ்வாறு எழும்படி காண்பது உயிர்கள் மாட்டு மிக்க விருப்பமுள்ள அம்மையினால் ஆகும். (கணந்து - கலந்து.)

1223. ஆமது அங்கியும் ஆதியும் ஈசனும்
மாமது மண்டல மாருதம் ஆதியும்
ஏமது சீவன் சிகையங்கு இருண்டிடக்
கோமலர்க் கோதையும் கோதண்ட மாகுமே.

பொருள் : ஒளிக்கும் ஒளியருளும் பேரொளிப் பிழம்பாகிய சுடரும் நடப்பாற்றலாகிய ஆதியும், அவ் ஆதியை உடலாகவுடைய ஆண்டானும் திங்கள் மண்டலமும், காற்று முதலாகியதும் காவலாகிய உயிரெழுத்தும் உயிர் எழுத்துக்கு ஒலிதரும் சிகையாகிய நாதமும், நடுநாடியாகிய கோதண்டமும் இருண்ட கூந்தலின்கண் சிறந்த மலர்சூடிய திருவருள் அம்மையான் இயங்கும். (சீவன் சிகை - உயிர் அட்சரம் கோதண்டம் - சுழுமுனை)

1224. ஆகிய கோதண்டத் தாகு மனோன்மணி
ஆகிய ஐம்ப துடனே அடங்கிடும்
ஆகும் பராபரை யோடுஅப் பரையவள்
ஆகும் அவள்ஐங் கருமத்தள் தானே.

பொருள் : நடுநாடியின்கண் விளக்கமுறும் மனோமன்மணியானவள் ஐம்பத்தோர் எழுத்துக்களுள் அடங்குவள். அவளே பேரறிவுப் பேராற்றலுடன் பெரும் பொருளாவள். அவள் படைத்தல் முதலிய ஐந்தொழிலுக்கும் உரியவள் ஆவள்.

1225. தானிகழ் மோகினி சார்வான யோகினி
போன மயமுடை யார்அடி போற்றுவர்
ஆனவர் ஆவியின் ஆகிய அச்சிவம்
தானாம் பரசிவம் மேலது தானே.

பொருள் : திருவருள், ஆருயிர்களின் அன்பை இயக்கும் மோகினி, அவளே சார்ந்த யோகினியாகிய காளி, பிறப்பு அற முயலும் பெரியோர் அம்மையின் திருவடியைப் போற்றுவர். எழுவகைப் பிறப்பினுள் மேலான மக்கட் பிறப்பு உயிரின்கண் மிக்கு விளங்குவது சிவம். அச்சிவம் தானாக விளங் குவது பரசிவம். அதற்கும் மேலாக விளங்குவது திருவருள் அம்மையாகும்.

1226. தானந்த மேலே தருஞ்சிகைதன்னுடன்
ஆனந்த மோகினி அம்பொன் திருவொடு
மோனையில் வைத்து மொழிதரு கூறது
ஆனவை யோமெனும் அவ்வுயிர் மார்க்கமே.

பொருள் : முடின் கண்ணும் மேலாக விளங்கும் அம்மை உயிர் எழுத்துக்கு உயிர்ப்பு நல்கும் சிகையாகிய நாதத்துடன் பேரின்பம் தரும் அன்பியாவள். அன்பி-மோகினி. அழியாத திருவடிச் செல்வத்துடன் முதற்கண் வைத்த முதல்வியாவள். சொல்லப்படும் கூறுடையதானவை ஓமெனும் எழுத்தாம். அவ் எழுத்தின் வழிப்பயில்வார் உயிர்மார்க்கம் செல்பவராவர்.

1227. மார்க்கங்கள் ஈன்ற மனோன்மணி மங்கலி
யார்க்கும் அறிய அரியாள் அவளாகும்
வாக்கும் மனமும் மருவிஒன் றாய்விட்ட
நோக்கும் பெருமைக்கு நுண்ணறிவு ஆமே.

பொருள் : உலகினர் உய்ய சமயநெறிகளை வகுத்த உமாதேவி தனது பதியுடன் பிரிப்பற்று விளங்குவள். யாவர்க்கும் அறிவதற்கு அருமையானவள். வாக்கும் மனமும் பொருந்தி ஒன்றான போது அவரது நுண்ணறிவில் விளங்கும் பெருமையினை யுடையவள். மார்க்கங்கள் தாசமார்க்கம் சற்புத்திர மார்க்கம், சகமார்க்கம் சன்மார்க்கம்.

1228. நுண்ணறி வாகும் நுழைபுலன் மாந்தர்க்குப்
பின்னறி வாகும் பிரான்அறிவு அத்தடம்
செந்நெறி யாகும் சிவகதி சேர்வார்க்குத்
தன்னெறி யாவது சன்மார்க்கம் ஆமே.

பொருள் : மிகக்கூரிய புலன்களைக் கொண்டு அறியும் மாந்தரின் அறிவு பின் அறிவாகும். கருவிகளை விட்டுப் பிரானுடன் ஒன்றிக் கருவிகள் இல்லாது அறியும் அறிவைப் பெறுவது செந்நெறியாகும். சிவத்துடன் பொருந்தி அடையப்படுவதே ஆன்மா அடையவேண்டிய நெறியாகும். இதுவே சன்மார்க்க மாகும்.

1229. சன்மார்க்க மாகச் சமைதரு மார்க்கமும்
துன்மார்க்க மானவை எல்லாம் துரந்திடும்
நன்மார்க்கத் தேவரும் நன்னெறி யாவதும்
சன்மார்க்கத் தேவியும் சத்தியென் பாளே.

பொருள் : சன்மார்க்கமாக அமைந்த நெறி, தூய நெறிகள் அல்லாத எல்லாவற்றையும் அகற்றிவிடும். நன்மார்க்கத்தால் நல்லொழுக்கம் ஆம். அச் சன்மார்க்கத்தைக் காட்டிய தேவியும் சத்தியேயாகும். (மார்க்கம் - முறைமை; ஒழுங்கு)

1230. சத்தியம் நானும் சயம்புவும் அல்லது
முத்தியை யாரும் முதல்அறி வாரில்லை
அத்திமேல் வித்திடில் அத்தி பழுத்தக்கால்
மத்தியில் ஏற வழியது வாமே.

பொருள் : சத்தியும் ஆன்மாவும் இவை இரண்டையும் உடைய சிவமும் ஆகிய மூன்றும் அல்லது முத்தி நிலையின் முடிவை அறிவார் ஒருவரும் இல்லை. உடம்புக்குள் உயிரை இணைத்து வைத்தால் அவ்வுடம்பு முதிர்ந்தால் நடுத்தண்டின் வழியாகச் சென்று உயிர்ப்பு உயரும். (உயிர்ப்பு - பிராணவாயு, அத்தி -அகரம், வித்து-மகரம், அத்திபழுத்தால் - சரீரம் பண்பட்டால்.)

1231. அதுஇது என்றுஅவ மேகழி யாதே
மதுவிரி பூழங்குழல் மங்கைநல் லாளைப்
பதிமது மேவிப் பணியவல் லார்க்கு
விதிவழி தன்னையும் வென்றிட லாமே.

பொருள் : அது இது என்று வாழ்நாளை வீணாகக் கழிக்காமல் தேன்வழியும் பூச்சூடியுள்ள கூந்தலையுடைய மங்கை நல்லாளைத் திங்கள் மண்டலத்து அமிழ்த வழியே சென்று வணங்க வல்லார்க்குப் பிறப்பு இறப்புக்கு உட்படுத்தும் விதி வழியையும் வென்றிடுதல் கூடும்.

1232. வென்றிட லாகும் விதிவழி தன்னையும்
வென்றிட லாகும் வினைப்பெரும் பாசத்தை
வென்றிட லாகும் விழைப்புலன் தன்னையும்
வென்றிடு மங்கைதன் மெய்யுணர் வோர்க்கே.

பொருள் : வெற்றியை யுடைய மங்கையாகிய பராசத்தியை உண்மையாக உணர்வார்க்கு விதியை வெல்லலாகும். வினைக்கூட்டங்களை வெல்லலாகும். ஐம்புல ஆசையையும் வெல்லலாம். பராசத்தியை உணர்வார்க்கு ஆகாமிய சஞ்சித கன்மங்களை வெல்லமுடியும்.

1233. ஓர்ஐம் பதின்மருள் ஒன்றியே நின்றது
பாரம் பரியத்து வந்த பரமிது
மாரன குழலாளும் அப்பதி தானும்முன்
சாரும் பதமிது சத்திய மாமே.

பொருள் : மிகப்பழங்காலத்துத் தமிழ் எழுத்துக்கள் ஐம்பத்தொன்றாக வழங்கப்பட்டன. அதற்குரிய தெய்வளங்களும் ஐம்பத்தொருவர் ஆவர். அவருள் ஒன்றி நின்றதும் அம்மையின் மெய்யுணர்வேயாகும். இம்முறைமை வழிவழியாக வருவது. கடவுளும் அங்ஙனம் வந்ததாகும். மலர்சூடிய கூந்தலையுடைய அம்மையும் அவள்தன் கணவனாகிய சிவபெருமானும் வந்து பெருந்தும் நிலையும் இதுவேயாகும். இஃது உண்மையாகும்.

1234. சத்தியி னோடு சயம்புவும் நேர்படில்
வித்தது இன்றியே எல்லாம் விளைந்தன
அத்தகை யாகிய ஐம்பத்து ஒருவரும்
சித்தது மேவித் திருந்திடு வாரே.

பொருள் : சத்தியோடு சிவன் சேர்ந்தால் மூலப்பொருள் இன்றியே சங்கற்பத்தினாலேயே எல்லாம் தோன்றின. தோன்றவே அவற்றிற்குரிய கடவுளரும் தோன்றினர். இக்கடவுளரும் சித்தாகிய அறிவினை மேவிச் செம்மையுறுவர்.

1235. திருந்துசிவனும் சிலைநுத லாளும்
பொருந்திய வானவர் போற்றிசெய்து ஏத்த
அருந்திட அவ்விடம் ஆரமுத ஆக
இருந்தனள் தான்அங்கு இளம்பிறை என்றே.

பொருள் : இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதலே திருந்துதல் ஆகும். அங்ஙனம் திருந்திய சிவனும் சிலையாகிய விற்போலும் நெற்றியையுடைய அம்மையும் எழுந்தருளியிருக்கும் வெள்ளி மலையிற் சென்று வானவர்கள் போற்றி முறையிட்டுத் தொழ ஆண்டவன் அக்கொடிய நஞ்சினை எடுத்து அருந்தவும் தேவர்கள் அமிழ்தத்தை யுண்ணவும் அம்மை ஆரருள் புரிந்து இனிதாகக் குளிர்வித்து இருந்தனள்.

1236. என்றும் எழுகின்ற ஏரினை எய்தினார்
அன்றது ஆகுவர் தார்குழ லாளொடு
மன்றரு கங்கை மதியொடு மாதவர்
துன்றிய தாரகை சோதிநின் றாளே.

பொருள் : என்றும் வளர்ந்தோங்கும் திருவருள் அழகினை எய்தினார் அப்பொழுதே அவ்வழகின் வண்ணமாகுவர். நடப்பாற்றலாகிய தார்குழளொடும், மதியொடும், வணங்கும் மாதவரோடும், தொடர்ந்து காணப்படும் பேரொளிப்பிழம்பாக அம்மை நின்றனள். (ஏர் - அழகு)

1237. நின்றனள் நேரிழை யாளொடு நேர்பட
ஒன்றிய உள்ளொளி யாலே உணர்ந்தது
சென்ற பிராணிகள் சிந்தையில் வேண்டிய
துன்றிடு ஞானங்கள் தோன்றிடும் தானே.

பொருள் : திருவருள் அம்மை நடப்பாற்றலுடன் நேர்பட நின்றனள். அவ்வருள் காட்டக் காணும் உள்ளொளியால் அஃது உணரப்படுவது. அவ்வடியின் கீழ்ச் சென்ற ஆருயிர்களின் நாட்டத்தில் வேண்டியவைகள் வந்து எளிதாகப் பொருந்தும் திருவடியுணர்வுகளும் தோன்றிடும்.

1238. தோன்றிடும் வேண்டுரு வாகிய தூய்நெறி
ஈன்றிடும் ஆங்கவள் எய்திய பல்கலை
மான்தரு கண்ணியும் மாரனும் வந்தெதிர்
கான்றது வாகுவர் தாம்அவள் ஆயுமே.

பொருள் : அம்மை நன்னெறிச் செல்வார் அன்புகூர்ந்து விரும்பும் திருவுருவோடு தோன்றியருள்பவள். அவள்பல வேறுகலைகளையும் உணர்த்துவித்துப் படைத்தருள்வள். மான் போலும் கண்ணையுடைய அம்மையும் மாரனாகிய சிவபெருமானும் மெய்யடியார் முன் தோன்றி யருள்வர். அங்ஙனம் தோன்றி யருள்வதும் சிவபெருமானும் அம்மையும் பொருளால் ஒருவராயிருக்கும் உண்மையான் என்க.

1239. ஆயும் அறிவும் கடந்தணு ஆரணி
மாயம தாகி மதோமதி ஆயிடும்
சேய அரிவை சிவானந்த சுந்தரி
நேயம தாநெறி யாகிநின் றாளே.

பொருள் : அம்மை ஆராய்வும் அறிவும் கடந்த நுண்ணியல்பானவள். அவள் கச்சுப் பூட்டபெற்ற கொங்கையையுடையவள். அவளே சொல்லமுடியாத மருட்சியுடன் மதோன் மத்தியாவள். அவள் செந்நிறம் வாய்ந்த அம்மை. அவளே சிவ்பேரின்ப அழகி. அவள் அன்பு நெறியில் அகப்படும் திருவாய் நின்றனள்.

1240. நெறியது வாய்நின்ற நேரிழை யாளைப்
பிறிவது செய்யாது பிஞ்ஞக னோடும்
குறியது கூடிக் குறிக்கொண்டு நோக்கும்
அறிவொடும் ஆங்கே அடங்கிட லாமே.

பொருள் : திருநெறியாகிநின்ற அம்மையைப் பின்னல் திருச்சடையையுடைய பிஞ்ஞகனோடும் பொருளால் பிரித்துப் பேசாமல் அம்மையின் குறிப்பின் வழிக் கூடி வேறொரு குறிப்பின்றி, அதுவே குறிப்பாகக் கொண்டு நோக்குவார் நல்லவராவர். அவர்தம் அறிவு அம்மையுடன் அடங்கி அருள் அறிவாகவே நிற்கும். பிஞ்ஞகன் - பின்னலையுடையவன்.

1241. ஆம்அயன் மால்அரன் ஈசன்மா லாங்கதி
ஓமய மாகிய ஒன்பதும் ஒன்றிடத்
தேமயன் ஆளும் தெனாதென என்றிடும்
மாமய மானது வந்தெய்த லாமே.

பொருள் : அம்மையின் ஆணைபெண்ணுத் தொழில் புரியும் அயன், அரி, அரன், ஆண்டான் என்னும் ஆருயிர் இனமாம் அவர்கள் விரும்பும் நிலையினை அருளவும் மிகவும் சிறப்புத் தன்மை பொருந்திய ஒன்பது ஆற்றல்களும் ஒன்று கூடவும் தீரா இன்ப வடிவினனாகிய சிவபெருமான் திருநோக்கம் கொண்டனன். கொள்ளவே தென்னாதென எனத் தேன் உண்ணவந்து மொய்க்கும் ஆருயிர் வண்டினங்களின் நிலைக் களமாகிய ஒலி மெய்வடிவம் எய்திற்று என்பர்.

1242. வந்தடி போற்றுவர் வானவர் தானவர்
இந்து முதலாக எண்டிசை யோர்களும்
கொந்தணி யுங்குழ லாள்ஒரு கோனையும்
வந்தனை செய்யும் வழிநவில் வீரே.

பொருள் : பூங்கொத்தணிந்த கூந்தலையுடைய அம்மையுடன் கோனாகிய சிவபெருமானையும் இன்ப நாட்டமே மிக்குடைய வானவர்களும் பொருள் நோக்கமே மிக்குடைய தானவர்களும் திங்கள் முதலாகச் சொல்லப்படுகின்ற எண்டிலக் காவர்களும் பயன் வேண்டிவந்து திருவடி போற்றுவர். (தானவர் - அசுரர்; வித்தியாதரர்.)

1243. நவிற்றுநன் மந்திரம் நன்மலர் தூபம்
கவற்றிய கந்தம் கவர்ந்துஎரி தீபம்
பயிற்றும் உலகினில் பார்ப்பதி பூசை
அவிக்கொண்ட சோதிக்கோர் அர்ச்சனை தானே.

பொருள் : இடைவிடாது கூறப்பெறும் நல்ல மந்திரமும், நல்ல மலரும், தூபமும், கவர்ச்சியைத் தரும் வாசனைப் பொருளும், இருளைப் போக்கும் தீபமும் கொண்டு உலகில் பார்ப்பதிக்குச் செய்யப்பெறும் பூசையானது வேள்வியில் இடும் அவியை ஏற்கும் இறைவனுக்குரிய அர்ச்சனையாக அமையும். சத்தியை விட்டு அகலாத சத்தன் ஆதலின் பார்வதி பூசை பரமனுக்கு ஆயிற்று.

1244. தாங்கி உலகில் தரித்த பராபரன்
ஓங்கிய காலத்து ஒருவன் உலப்பிலி
பூங்கிளி தங்கும் புரிகுழ லாள்அன்று
பாங்குடன் ஏற்பப் பராசத்தி போற்றே.

பொருள் : சத்தியை ஒருபால் கொண்டு உலகைத் தாங்கிய சிவன், அவளால் வந்த ஆக்கத்தால் உலகில் நிலைபெற்று ஒப்பற்றவனாகவும், அழியாதவனாகவும் உள்ளான். அழகிய கிளியை ஏந்திச் சுருண்ட சடையைத் தரித்த சாமுண்டியாகிய பார்வதி அன்று பாங்குடன் பரனை ஒரு பால் கொண்ட பராசத்தி ஆனமையால் அவளை வழிபடுவாயாக.

1245. பொற்கொடி மாதர் புனைகழல் ஏத்துவர்
அற்கொடி மாதுமை ஆர்வத் தலைமகள்
நற்கொடி மாதை நயனங்கள் மூன்றுடை
விற்கொடி மாதை விரும்பி விளங்கே.

பொருள் : கரிய கொடிபோலும் நிறம் வாய்ந்த உமையம்மையை, ஆருயிர்கள் மாட்டு நீங்கா ஆர்வம் பூண்ட முதல்வியை, நல்ல கொடிபோலும் இடையினையுடைய எழிலியை மூன்று திருக்கண்களையுடைய மூப்பியை, தொடர் ஒளி விளங்கும் துணைவியைச் சூழ வரும் பொன்போல் விளங்கும் பணிப்பெண்கள் திருவடி தொட்டு வழிபடுவர். நீயும் அங்ஙனம் வழிபடுவாயாக.

1246. விளங்கொளி யாய விரிசுடர் மாலை
துளங்கு பராசத்தி தூங்கிருள் நீங்கக்
களங்கொள் மணியுடன் காம வினோதம்
உளங்கொள் இலம்பியம் ஒன்று தொடரே.

பொருள் : மிக்கு விளங்குகின்ற ஒளியோடு கூடிய மலர் மாலையும், விரிசுடர் வாய்ந்த மணிமாலையும் விளங்கும் பராசத்தி, இருளைப் போக்கத் திருநீல கண்டம் விளங்குகின்ற சிவபெருமானுடன் மனத்தே காம விளையாட்டுக் கொள்கையில்லாத தோணித் தன்மையொத்த புணையாவாள். அவருடைய திருவடியைத் தொடர்ந்து வழிபடுவாயாக. (இலம்பியம் - உபதேசமொழி)

1247. தொடங்கி உலகினில் சோதி மணாளன்
அடங்கி இருப்பதென் அன்பின் பெருமை
விடங்கொள் பெருஞ்சடை மேல்வரு கங்கை
ஒடுங்கி உமையொடும் ஓருரு வாமே.

பொருள் : உலகினில் ஒளியினைத் தொடங்குவித்து அதற்கும் ஒளிகொடுத்து விளங்கும் சிவபெருமான் திருவருளின் கண் அடங்கியிருப்பது ஏன் ? அதுதான் பேரன்பாகிய காதலின் பெருமை பரந்த அடர்ந்த பெருஞ்சடைமேல் வருகின்ற கங்கையாள் நடப்பாகிய மறைப்பாற்றல் ஆவள். அவள் உமையாள் என்னும் வனப்பாகிய உறைப்பாற்றலின் கண் ஒடுங்குவள். ஆதலால் கங்கையும் உமையும் காணில் ஒருத்தியே.

1248. உருவம் பலஉயி ராய்வல்ல நந்தி
தெருவம் புகுந்தமை தேர்வுற நாடில்
புரிவளைக் கைச்சிஎம் பொன்னணி மாதை
மருவி இறைவன் மகிழ்வன மாயமே.

பொருள் : இறைவன் அனைத்து உயிர்களையும் வடிவாகக் கொண்டு விளங்குவதை நின்றாக ஆராயின் ஒலிக்கின்ற வளையலையணிந்த பொன் ஒளியில் விளங்கும் மாதை இறைவன் மகிழ்ச்சியோடு பொருந்தி உலகைப் படைத்தான் என்பது கற்பனையாம். (உபசாரமாம்) அறிதற்கரியன எனினுமாம்.

1249. மாயம் புணர்க்கும் வளர்சடை யானடித்
தாயம் புணர்க்கும் சலநதி அமலனைக்
காயம் புணர்க்கும் கலவியுள் மாசத்தி
ஆயம் புணர்க்கும்அவ் வியோனியும் ஆமே.

பொருள் : வளரும் திருச்சடையுடைய சிவபெருமான் மாயாகாரியமாகிய உலக உடல் கலன் ஊண் முதலியவற்றை இயைந்து இயக்கிப் படைத்தருள்வன். அவனே திருவடிப்பேற்றைச் சாரும் கூட்டுறவை நல்கியருள்வன். மறைப்பு ஆற்றலாகிய சலநதியை தாங்குபவனும் அவனே. இயல்பாகவே பாசங்களினின்று நீங்கிய இறைவன் உயிர்களுக்கு வினைக்கு ஈடாக உடலை அளித்துக் கூட்டுவிப்பன் இவையனைத்தும் திருவருளோடு கூடிய கூட்டங் காரணமாக நிகழ்வன.

1250. உணர்ந்து ஒழிந் தேன்அவன் நாம்எங்கள் ஈசனைப்
புணர்ந்துஒழிந் தேன் புவ னாபதி யாரை
அணைந்துஒழிந் தேன்எங்கள் ஆதிதன் பாதம்
பிணைந்துஒழிந்த தேன்தன் அருள்பெற்ற வாறே.

பொருள் : எங்கள் ஆண்டவனை அவனருளால் உறுதியாக உணர்ந்தேன். அவளே புவனமாகிய உலக முதல்வன். அவனைப் புணர்ந்தேன்; அணைந்தேன்; எங்கள் ஆதியையுடைய முழுமுதல்வனைப் பின்னிக் கிடந்தேன். இவையணைத்தும் திருவருள் தரப் பெற்றவாறு என்க. (பிணைந்து - கலந்து.)

1251. பெற்றாள் பெருமை பெரிய மனோன்மணி
நற்றாள் இறைவனே நற்பயனே என்பர்
கற்றான் அறியும் கருத்தறி வார்கட்குப்
பொற்றாள் உலகம் புகல்தனி யாமே.

பொருள் : நவசத்திகளுள் பெருமை பெற்றவள் மனோன்மணியாவாள். அவளைத் துணையாகக் கொண்டவர் இறைவனது திருவடியே அழிவில்லாத நற்பயனுடையது என்பர். கற்ற கல்வியின் பயனாகிய கருத்தை அறிவார்கட்கு அவன் திருவடியாகிய பொன்னொளி விளங்கும் மண்டலத்தை எய்துதல் ஒப்பற்ற பேறாம். இறைவன் திருவடியை அடைதலே கல்வியின் பயன் என்பதாம்.

1252. தனிநா யகன்த னோடு என்நெஞ்சம் நாடி
இனியார் இருப்பிடம் ஏழுலகு என்பர்
பனியான் மலர்ந்தபைம் போதுகை ஏந்திக்
கனியாய் நினைவதென் காரணம் அம்மையே.

பொருள் : குளிரால் மலர்ந்த அழகிய பூக்களைக் கையேந்திக் கனிந்த உள்ளத்துடன் அம்மையின் திருவடியை நினைந்து தொழுங் காரணத்தால் ஒப்பில்லாத முழுமுதல்களை என் நெஞ்சம் நாடுவதாயிற்று. அதன் பயனாக இனியார் என்னும் பெயர் சிவபெருமானுக்கு எய்துவதாயிற்று. அவ் இனியார் உறையும் உறையுள் ஏழுலகுக்கும் அப்பால் என்பர்.

1253. அம்மனை அம்மை அரிவை மனோன்மணி
செம்மனை செய்து திருமங்கை யாய்நிற்றும்
இம்மனை செய்த இன்னில மங்கையும்
அம்மனை யாகி அமர்ந்து நின்றானே.

பொருள் : உச்சி வீட்டுக்கரிய அம்மை மனோன்மணி என்ப. அவளே செம்பொருள் திருவடியின் உறையுளைச் செய்த திருமங்கை யாய் நிற்பள். அவள் இம்மனையாகிய இவ்வுடலைத் தந்தருளிப் பெருமைமிக்க நிலமடந்தை என்னும் பெயர் பூண்டனள். அவனே அழகிய அன்னையாய் ஆதியாய் யாண்டும் பொருந்தி நின்றனள். அவ் அருளம்மை தந்தருளிய ஒருமனை யாகிய ஓர் உடம்பிலேயே பிறப்பற முயலுதல் வேண்டும்.

1254. அம்மையும் அத்தவனும் அன்புற்றது அல்லது
அம்மையும் அத்தனும் ஆர்அறி வார்என்னை
அம்மையொடு அத்தனும் யானும் உடனிருந்து
அம்மையொடு அத்தனை யான்புரிந் தேனே.

பொருள் : உடல் உற்பத்திக்குக் காரணமான தாயும் தந்தையும் காதலால் ஒருவருக்கொருவர் உறவு கொண்டதே தவிர, என்னை அவர்கள் அறியமாட்டார்கள். சிவனும் சத்தியும் ஆன்மாவின் ஒன்றுபட இருந்ததில் என்னை எஞ்ஞான்றும் பிரியாத அம்மையையும் அத்தனையும் தொழுது நான் உய்ந்தேன்.

9. ஏரொளிச் சக்கரம்

(ஏர் - எழுச்சி ஏரொளிச்சக்கரம் மேல் நோக்கிய ஒளி வடிவான சக்கரம். மூலாதாரத்திலுள்ள அக்கினி எங்கும் வியாபித்து அனைத்தையும் தன்னுள் அடக்கித்தான் ஒன்றோயாம் நிற்கும் நிலை.)

1255. ஏரொளி உள்ளெழு தாமரை நாலிதழ்
ஏரொளி விந்துவி னால்எழு நாதமாம்
ஏரொளி அக்கலை எங்கும் நிறைந்தபின்
ஏரொளிச் சக்கரம் அந்நடு வன்னியே.

பொருள் : மூலாதாரத்தில் முளைத்தெழுகின்ற நான்கு இதழ்களையுடைய தாமரை மிக்க ஒளி வடிவினதாம் தூலவிந்து மாற்றி அமைக்கப்படுவதால் எழுகின்ற ஒளிசிரசில் நாதமாக அமையும். எழுகின்ற அக்கலை சிரசில் படர்ந்து எங்கும் நிறைந்த பின் அதன்நடுவில் அக்கினிமயமான சிவம் விளங்கும்.

1256. வன்னி ஏழுத்தவை மாபலம் உள்ளன
வன்னி எழுத்தவை வானுற ஓங்கின
வன்னி எழுத்தவை மாபெரும் சக்கரம்
வன்னி எழுத்திடு வாறுஅது சொல்லுமே.

பொருள் : சுடர்ச் சக்கரத்து எழுத்துக்கள் மிக்க வலுவைத்தருவன. அவ் எழுத்தே வானுற ஓங்கும் வழியும் வகுத்தன. அவ் எழுத்துக்களே மிகப்பெரும் சக்கரத்து அமைந்தன. அவ்எழுத்து அமைக்கும் முறையும் சொல்லப்படும். (வன்னி எழுத்து - ஏரொளிச் சக்கர எழுத்து.)

1257. சொல்லிய விந்துவும் ஈராறு நாதமாம்
சொல்லிடும் அப்பதி அவ்எழுத் தாவன
சொல்லிடும் நூறொடு நாற்பத்து நாலுரு
சொல்லிடு சக்கர மாய்வரு மேலதே.

பொருள் : கூறப்படும் விந்துவும் பன்னிரண்டு உயிர்ப்புக்களையுடையது. உயிர்ப்பு - பிராணன் அதன் தலைமை எழுத்து வடிவாகிய நாதமாகும். அவ் ஓசை வழியாக உலகம் தோன்றிடும் முறைமைக்குப் பன்னிரண்டும் பன்னிரண்டும் உறழ நூற்று நாற்பத்தி நான்கு அறைகள் உள்ள சக்கரம் தோன்றும். இது முதல் ஆறு மந்திரங்கள் வரை ஐம்பூதங்களின் உற்பத்தி கூறப்படுகிறது.

1258. மேல்வரும் விந்துவும் அவ்எழுத் தாய்விடும்
மேல்வரும் நாதமும் ஓங்கும் எழுத்துடன்
மேல்வரும் அப்பதி அவ்எழுத் தேவரின்
மேல்வரும் சக்கர மாய்வரும் ஞாலமே.

பொருள் : உச்சியளவும் சென்ற விந்துவும் நாதஓசையால் வெளிப்படும் அதனால் அது, நாத எழுத்தாகிய அகரமாகத் தோன்றும், அகர எழுத்துடன் கூடிச் சுழல மேற்கூறிய சக்கரம் உலகமாய் விரியும். பிருதுவி தத்துவம் கூறியவாறு.

1259. ஞாலம தாக விரிந்தது சக்கரம்
ஞாலம தாயிடும் விந்துவும் நாதமும்
ஞாலம தாயிடும் அப்பதி யோசனை
ஞாலம தாக விரிந்தது எழுத்தே.

பொருள் : நூற்று நூற்பத்தி நான்கு அறைகளோடு கூடிய சக்கரமே உலகமாக விரிந்தது. உலக முதலாக நிற்பதும் நாதவிந்துகளாகும். ஞாலமும் யோசனையாகிய ஒரு நீட்டல் அளவையைக் கொண்டது. ஞாலமாக விரிவதற்குக் காரணமாக உள்ளது ஓசை என்க.

1260. விரிந்த எழுத்தது விந்துவும் நாதமும்
விரிந்த எழுத்தது சக்கரமாக
விரிந்த எழுத்தது மேல்வரும் பூமி
விரிந்த எழுத்தினில் அப்புறம் அப்பே.

பொருள் : எழுத்தாக விரிந்தது விந்துவும் நாதமும், சக்கரமாக எழுந்ததும் அவ் எழுத்துக்களே, அவ் எழுத்தின் சுழற்சியால் நிலம் விரிந்தது. அந்நிலத்தின் மேல் தோன்றுவது நீராகும். அகரகலை விரிவில் பிருதிவி அப்பு மண்டலங்கள் அமையும் என்பதாம்.

1261. அப்புஅது வாக விரிந்தது சக்கரம்
அப்பினில் அப்புறம் அவ்அனல் ஆயிடும்
அப்பினில் அப்புறம் மாருத மாய்எழ
அப்பினில் அப்புறம் ஆகாச மாமே.

பொருள் : நீராக அச்சக்கரம் விரிந்தது. அதன் பிறகு நீரினில் அக்கின் தத்துவம் விளங்கும். அக்கினிக்குப் பிறகு காற்றுத் தத்துவம் அமைய அதன்பிறகு ஆகாசத் தத்துவம் அமையும். இவ்வாறு நீரிலிருந்து ஒவ்வொன்றாய்த் தோன்றின.

1262. ஆகாம அக்கரம் ஆவது சொல்லிடில்
ஆகாச அக்கரத்து உள்ளே எழுத்தவை
ஆகாச அவ்எழுத்து ஆகிச் சிவானந்தம்
ஆகாச அக்கரம் ஆவது அறிமினே.

பொருள் : வெளியின் அடையாளமாகிய எழுத்தைக் கூறுமிடத்து ஆகாச அக்கரத்துள்ளே நிறைகின்ற நாத அக்கரத்துள்ளே நிறைகின்ற நாதவிந்துக்களாகிய வித்து எழுத்துக்களுமாகிய ஆகாச எழுத்தே சிவப்பேரின்பம் ஆவதறிக. இதுகாறும் திருப்பாட்டுக்களால் கூறிய ஐம் பூதங்களுக்குரிய எழுத்துக்கள் முறையே ல,வ,ர,ய,அ என்பன.

1263. அறிந்திடும் சக்கரம் ஐ அஞ்சு விந்து
அறிந்திடும் சக்கரம் நாத முதலா
அறிந்திடும் அவ்எழுத்து அப்பதி யோர்க்கும்
அறிந்திடும் அப்பக லோன்நிலை யாமே.

பொருள் : அறியப்பட்ட இச்சக்கரம் பத்து ஒளி வட்டத்தால் ஆயது இதை நாதம் முதலாகக் கொண்டு அறிக. அந்தந்த மண்டல நாயகர்கள் அங்குளர் என்று அறியவும். இறுதியாகவுள்ளது சிவசூரியனாகும் என்று அறிக. பத்தாவன; மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை, சூரியன், சந்திரன், அக்கினி, தாரகை என்று பத்து நிலைகளை அறிக அவைகளையும் கடந்தபோது சிவம் விளங்கும் என்பதாம்.

1264. அம்முதல் ஆறும்அவ் ஆதி எழுத்தாகும்
அம்முதல் ஆறும்அவ் அம்மை எழுத்தாகும்
இம்முதல் நாலும் இருந்திடு வன்னியே
இம்முதல் ஆகும் எழுத்தலை எல்லாம்.

பொருள் : அந்த முதன்மையான ஆதாரங்கள் ஆறும் ஆதி எழுத்துக்கு உரியனவாகும். அவை அம்மை எழுத்தாகும், அதீத முதலான நான்கும் இருநடு என்ப. இரு நடு என்பது இரண்டுக்கும் நடு என்பதாகும். எனவே, மூலம் கொப்பூழ் மேல்வயிறு, என்னும் மூன்றனுள் நடுவாக உள்ள கொப்பழ் என்க. இது அனலுக்கு இடமாகும், இக் கொப்பூழிலிருந்து எல்லா எழுத்துக்களும் தோன்றும்.

1265. எழுத்தவை நூறொடு நாற்பத்து நாலும்
எழுத்தவை ஆறது அந்நடு வன்னி
எழுத்தவை அந்நடு அச்சுட ராகி
எழுத்தவை தான்முதல் அந்தமும் ஆமே.

பொருள் : மூலாதாரம் முதலாகச் சொல்லப்படும் எழுத்துக்கள் நூற்று நாற்பத்து நான்கும், அந்தந்தச் சக்கரங்களில் அமைந்துள்ளன. நடுவாக ஆறு எழுத்துமாகும். அவற்றுள் நடுவாகக் காணப்படுவது அனலாகும். எழுத்துக்கள் முதலும் முடிவும் ஆவன.

இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் - Page 2 Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Mon Mar 26, 2012 3:37 pm

1266. அந்தமும் ஈறு முதலா னவையற
அந்தமும் அப்பதி னெட்டுடன் ஆதலால்
அந்தமும் அப்பதின் மூன்றில் அமர்ந்தபின்
அந்தமும் இந்துகை ஆருடம் ஆனதே.

பொருள் : மேற்கூறிய அந்தமும் ஈறும் முதலானவை நீங்க, நெஞ்சம் மிடறு என்னும் ஈரித்தும் உள்ள எழுத்துக்கள் பதினெட்டாகும். பன்னிரண்டாம் நிலை எனப்படும் துவாதசாந்த அதீதத்தின் எழுத்துப்பதின் மூன்றாகும். அதன்மேல் திங்கள் மண்டிலம். அதன் மேல் அறியும் நிலையுளது.

1267. ஆவினம் ஆனவை முந்நூற்று அறுபதும்
ஆவினம் அப்பதின் ஐந்தின மாயுறும்
ஆவினம் அப்பதி னெட்டுடன் ஆயுறும்
ஆவினம் அக்கதி ரோன்வர வந்தே.

பொருள் : ஆவினம் - (அவ்+இனம்) அதன்வகை பகலவன்வகையாகத் தோன்றும் நாள்கள் முந்நூற்றுபது மாத்தின் இருகூறு பதினைந்து தினம் இது பிறையல்லது பக்கம் எனக் கூறப்படும். திங்கள் பன்னிரண்டும் கார் முதலாகச் செல்லப்படும் பருவம் ஆறும் ஆகிய பதினெட்டு இவை எல்லாமாகப் பொருந்துகின்ற கால எண்ணிக்கைகள் கால மெய்யினைப் படைத்தருளும் காலகாலனாகிய சிவபெருமானால் ஆவன. அதனால் அவன் சிவக் கதிரோன் எனப்படுவன். அக்கதிரோன் வர இவை எல்லாம் வந்தன் என்க.

1268. வந்திடும் ஆகாசம் ஆறது நாழிகை
வந்திடும் அக்கரம் முப்பதி ராசியும்
வந்திடு நாளது முந்நூற் றறுபதும்
வந்திடு ஆண்டு வகுத்துரை அவ்வியே.

பொருள் : வான்வமியாகக் கணக்கிடும் நாழிகை முப்பதும், பன்னிரு மனைகள் எனப்படும் இராசியும், இவற்றான் வரும் நாள்கள் முந்நூற்றறுபதும் அவ்விதியின்படி கணக்கிடப்படும் என்க. அவ்விதியே என்பது அவ்வியே எனத்திகரம் குறைந்து நின்றது. சூரியவீதி அமையும் முறை கூறியவாறு.

1269. அவ்வின மூன்றும்அவ் ஆடது வாய்வரும்
எவ்வின மூன்றும் கிளர்தரு ஏறதாம்
சவ்வின மூன்றும் தழைத்திடும் தண்டதாம்
இவ்வின மூன்றும் இராசிகள் எல்லாம்.

பொருள் : அவ்வின மாகிய மூன்றும் ஆடாகிய மேஷவீதியும் எவ்வின மூன்றும்-விளக்கமிக்க ஏறாகிய ரிஷபவீதியும், செவ்வினமூன்றும் - தழைத்து விளங்கும் தண்டாகிய மிதுனவீதியும் எனப்பன்னிரு மனைகளும் பகுக்கப்படும். அவைவருமாறு (மேட வீதியில் இடபம், மிதுனம், கடகம், சிம்மம், என் நான்கு அடங்கும்) (இடப வீதியில் மீனம், மேஷம், துலாம், கன்னி என நான்கும் அடங்கும்) (மிதுனவீதியில் கும்பம், மகரம், தனுசு, விருச்சிகம் எனநான்கும் அடங்கும்) இந்த முறை வைப்பில் வேறுபாடுகளும் உள.

1270. இராசியுள் சக்கரம் எங்கும் நிறைந்தபின்
இராசியுள் சக்கரம் என்றறி விந்துவாம்
இராசியுள் சக்கரம் நாதமும் ஒத்தபின்
இராசியுள் சக்கரம் நின்றிடு மாறே.

பொருள் : மூலாதார முதல் சக்கரங்கள் எங்கும் நிறைந்தபின் இதனை இராசிச் சக்கரம் என்று கூறுவர். இச்சக்கரம் விந்து என்னும் ஒளியால் நிலைபெறும். இவ்விந்துவும் நாதமும் அகவோசை புறவோசைகளால் ஒத்த இடத்து இராசியுள் சக்கரம் செவ்வே இயங்கும்.

1271. நின்றிடு விந்துவென் றுள்ள எழுத்தெல்லாம்
நின்றிடு நாதமும் ஓங்கும் எழுத்துடன்
நின்றிடும் அப்பதி அவ்வெழுத் தேவரின்
நின்றிடும் அப்புறம் தாரகை யானதே.

பொருள் : விந்து முதலாகக் கூறப்படும் எழுக்கள் எல்லாம் நாதம் உள்ளிருந்து ஒலிப்பிக்க ஒலிக்கும் அவ்வம் மனைக்குரிய எழுத்துக்கள் வரின் ஆங்கு நிற்கும். அதன்பின் தாரகை என்னும் நாள்கள் நிற்கும். மூல முதல்நிலைகள் ஆறினுக்கும் மனைகள் இவ்விரண்டாகும். நாள்கள் நட்சத்திரம் நாலரையாகும்.

1272. தாரகை யாகச் சமைந்தது சக்கரம்
தாரகை மேலோர் தழைத்தது பேரொளி
தாரகை சந்திரன் நற்பக லோன்வரத்
தாரகை தாரகை தாரகை கண்டதே.

பொருள் : சக்கரம் நட்சத்திர வடிவாகச் சமைந்தது அந்த நட்சத்திரங்களுக்கு ஒளி கொடுத்துக் கொண்டு செழித்த சிவ ஒளி மேலாக நிற்கின்றது. இந்த நட்சத்திர சக்கரத்தில் சந்திரனும் சூரியனும் வர, நட்சத்ரவடிவமான எழுத்து முறையாகக் காணப்பட்டது.

1273. கண்டிடு சக்கரம் விந்து வளர்வதாம்
கண்டிடு நாதமும் தன்மேல் எழுந்திடக்
கண்டிடு வன்னிக் கொழுந்தன ஒத்தபின்
கண்டிரும் அப்புறம் காரொளி யானதே.

பொருள் : காணப்படும் நட்சத்திர சக்கரங்கள் விந்துவினால் உண்டாவதாகும். அந்த விந்துவின் மேல் நாதமும் தோன்றும். அந்த நாதத்தின் மேல் அழல் வண்ணனாகிய சிவஒளி தோன்றும், இவையனைத்தும் ஒத்தபின் செம்மேனி எம்மானின் ஒரு பங்காகிய அம்மையின் காரொளி தோன்றும் இவ்வொளி எல்லாவற்றையும் இயக்கும்.

1274. காரொளி ஆண்டம் பொதிந்துஉலகு எங்கும்
பாரொளி நீரொளி காரொளி காலொளி
வானொளி ஒக்க வளர்ந்து கிடந்துபின்
நேரொளி ஒன்றாய் நிறைந்தங்கு நின்றதே.

பொருள் : அந்தக் கரிய ஒளியானது அண்டத்தை உள்ளிட்டு உலகு எங்கும் நிறையும் பாரொளியும் நீரொளியுமாகிய இரண்டும் அடங்குவதற்கரிய சாரொளியாகத் தீயொளியுமாகிய, அதனையும் அடக்கிக் கொண்டிருக்கும் கால் ஒளியாகிய காற்றொளியும், அதனையும் உள்ளடக்கிக் கொண்டிருக்கும் மேலொளி யாகிய வானொலியும் ஆகிய இவை எல்லாமும் மூலதாதர முதலாகத் தோன்றிய ஐம்பூத மண்டலங்களினும் நிறைந்து நிற்பதால அழகிய ஒளியாய் எங்கும் நிறைந்து நிற்கும் என்பது கருத்தென்க.

1275. நின்றது அண்டமும் நீளும் புவியெலாம்
நின்றஇவ் அண்டம் நிலைபெறக் கண்டிட
நின்றஇவ் அண்டமும் மூல மலம்ஒக்கும்
நின்றஇவ் அண்டம் பலமது விந்துவே.

பொருள் : பேரண்டங்களும் விரிந்த பல உலகங்களும் நிலைத்து நிற்கின்றன. ஊழி முடிவுவரை இவைகள் நிலைபெறக் காண்கின்றோம். இவைகளும் ஒருவகையான மூலமலத்துடுன் ஒக்கும். இவ்வண்டம் முதலியன நிறை பெறுவதற்கு அடிப்படை வலுவாக உள்ளது

1276. விந்துவும் நாதமும் ஒக்க விழுந்திடில்
விந்துவும் நாதமும் ஒக்க விரையதாம்
விந்திற் குறைந்திடு நாதம் எழுந்திடில்
விந்துவை எண்மடி கொண்டது வீசமே.

பொருள் : விந்து நாதம் என்னும் இரண்டு சமமாகக் கலந்தால் அவை அண்டத்துக்கு வித்து என்பர். விந்துவானது குறைந்து நாதமானது அதிகரித்துத் தோன்றுமானால் அது மந்திரவித்து என்பர். கூடும் முறைமை விந்துவை விடநாதம் எட்டுமடங்கு கூடுதல் என்பர். வீசம்- தற்போது 1/16 பாகம் நூல் எழுந்தகாலத்து எண்மடங்கு போலும்.

1277. வீசம் இரண்டுள நாதத்து எழுவன
வீசமும் ஒன்று விரைந்திடு மேலுற
வீசமும் நாதமும் எழுந்துடன் ஒத்தபின்
வீசமும் விந்து விரிந்தது காணுமே.

பொருள் : நாதத்தில் நின்று தோன்றுவன மந்திர வித்துக்கள் இரண்டு அவற்றுள் ஒன்று மேலோங்கும்படி விரைந்து செல்லும் வித்து நாதமும் மேலோங்கி எழுந்து ஒத்துடன் நின்றபின் அவைபரந்து விளங்கும். (வீசம் - விதை)

1278. விரிந்தது விந்துவும் கெட்டது வீசம்
விரிந்தது விந்துவும் நாதத்தும் அளவினில்
விரிந்தது உட்கட்ட எட்டெட்டும் ஆகில்
விரிந்தது விந்து விரையது வாமே.

பொருள் : விந்து விரிந்த காலத்து வித்தாகிய பீசம் மறையும் அந்த விந்துவும் நாதத்து அளவினில் விரியும். உள்ளே அடங்கும் உயிர்ப்பு அறுபத்து நான்கு மாத்திரையாகும். அவ்வாறு விரிந்த விந்து அனைத்து உலகுக்கும் வித்தும் ஆகும்.

1279. விரையது விந்து விளைந்தன எல்லாம்
விரையது விந்து விளைந்த உயிரும்
விரையது விந்து விளைந்தவிஞ் ஞாலம்
விரையது விந்து விளைந்தவன் தானே.

பொருள் : தோன்றிய உலகங்கள் அனைத்தும் விந்து என்னும் காணரத்தின் உண்டாவன விந்துவால் விளைந்த உடலகத்து உயிரையும் சிவன் சேர்த்துவைப்பன். விந்து காரணமாக இவை எல்லாம் விளைந்தனஎன்ப. அந்த விந்து காரணமாக மேலான அறிவு உண்டாகும். மேலான அறிவு மெய்யுணர்வு.

1280. விளைந்த எழுந்தது விந்துவும் நாதமும்
விளைந்த எழுத்தது சக்கர மாக
விளைந்த எழுத்தவை மெய்யினுள் நிற்கும்
விளைந்த எழுத்தவை மந்திர மாமே.

பொருள் : எழுத்துக்களுக்கு முதலாக விளைந்தது விந்துவும் நாதமும் அப்படி விளைந்த எழுத்தாகிய விந்துவும் நாதமும் சக்கரமாகும். அந்த எழுத்துக்களே மந்திரமாகும். உடம்பின் அகத்து - ஆறுநிலைக்களங்களுள்.

1281. மந்திரம் சக்கரம் ஆனவை சொல்லிடில்
தந்திரத்து உள்ளெழுத்த ஒன்றுஎரி வட்டமாம்
கந்தரத் துள்ளும்இ ரேகையில் ஒன்றில்லை
பந்தமது ஆகும் பிரணவம் உன்னிடே.

பொருள் : தந்திரமாகிய வழிவகைகளால் அகத்தே எழுந்து தோன்றும் வட்டவடிவமான எரி ஒன்று உண்டு. இதுவே மந்திர சக்கரமெனச் சொல்லப்படும். கழுத்தளவிலும் அகத்தே வரிவடிவின்றி ஒலிவடிவேயாம். இவற்றிற்கெல்லாம் முன்னாக ஓமொழி பிணிப்புள்ளதாகும். அதனை முதன்மையாகக் கொண்டு அகவழிபாடாகிய தியானத்தைப்புரிவாயாக, கழுத்திடத்தை வெளிநிலை எனவும் கூறுவர். (தந்திரம்-ஆகமம் உன்னுதல் - தியானித்தல்)

1282. உன்னிட்ட வட்டத்தில் ஒத்தெழு மந்திரம்
பின்னிட்ட ரேகை பிழைப்பது தானில்லை
தன்னிட்டு எழுந்த தகைப்பறப் பின்னிற்கப்
பன்னிட்ட மந்திரம் பார்க்கலும் ஆமே.

பொருள் : அகவழிபாடாகப் புரியப்படும் ஓமொழி வட்டத்தில் பொருந்தித் தோன்றும் மந்திரம், கலந்துள்ள சக்கரத்தின் கண் வரையப்படுதல் தவறுதல் இல்லை. அம் மந்திரத்தை ஒட்டி எழுந்த தடை நீங்க அதன்பின் நிற்கும்படி சொல்லப்பட்ட மந்திரத்தை ஆராய்தலுமாம்.

1283. பார்க்கலும் ஆகும் பகையறு சக்கரம்
காக்கலும் ஆகும் கருத்தில் கடமெங்கும்
நோக்கலும் ஆகும் நணுக்கற்ற நுண்பொருள்
ஆக்கலும் ஆகும் அறிந்துகொள் வார்க்கே.

பொருள் : பிறப்பு இறப்புக்களாகிய பழம் பகையை அகற்றும் தன்மை வாய்ந்த சக்கரத்தை அன்புடன் நோக்குதலும் ஆகும். விரிந்த கருத்தின்கண் அமைத்துக் காத்தலுமாகும். சோர்வின்றி அதன் பாலே நோக்கல் நோக்கமாகிய தியானத்தைப் புரிதலும் ஆகும். அவ்வுணர்விற் காணும் நுண் பொருளை ஆக்கலாகிய அழுந்தி அறிதலைப் புரிதலுமாகும். (அழந்தியறிதல் - அனுபவித்தல்; துய்த்தல்.)

1284. அறிந்திடும் சக்கரம் ஆதி எழுத்து
விரிந்திடும் சக்கரம் மேலெழுத்து அம்மை
பரிந்திடும் சக்கரம் பாரங்கி நாலும்
குவிந்திடும் சக்கரம் கூறலும் ஆமே.

பொருள் : மேற்கூறிய முறையான் அறியப்படும் சக்கரம் ஆதியையுடைய சிவபெருமானின் எழுத்தாகிய சிகரமாகும். அதன் மேலெழுத்து அம்மை எழுத்தாகிய வகரமாகும். மற்றைய இடங்களில் நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகிய நான்கு பூதங்களின் எழுத்தாகும். அலை முறையே ல வ ர ய என்ப.

1285. கூறிய சக்கரத்து உள்ளெழு மந்திரம்
ஆறியல் பாக அமைந்து விரிந்திடும்
தேறிய அஞ்சுடன் சேர்ந்தெழு மாரணம்
மாறியல் பாக மதித்துக்கொள் வார்க்கே.

பொருள் : மேற்குறித்த சக்கரத்துள் தோன்றும் மந்திரம் ஆறு இயல்பு ஆகும். அங்ஙனம் அமைந்து விரியும் இவ் ஆறனுள் மாரணம் ஒழிந்த ஐந்தும் பகைமையை வெல்லுவதற்காகப் பயன்படுத்தப்படும் ஆறுவகையான; தம்பனம், மோகனம், உச்சாடனம், வித்துவேசணம், மாரணம், வசியம்.

1286. மதித்திடும் அம்மையும் மாமாதும் ஆகும்
மதித்திடும் அம்மையும் அங்கனல் ஒக்கும்
மதித்தங்கு எழுந்தவை காரணம் ஆகில்
கொதித்தங்கு எழுந்தலை கூடகி லாவே

பொருள் : அனைத்துயிர்க்கும் நீங்கா அருள் புரிகின்றவள் என்று மதிக்கப்படும் அம்மையும் குறித்த சக்கரத்தின் முதல்வியாகும். அந்த அம்மையைப் பயில்வார்க்குப் பகையை வெல்லத் துணைசெய்யும் அழகிய அனலை ஒத்து அவள் காணப்படுவாள். அம்மை காரணமாக உடனெழும் ஐம்பூதங்களும் தொழில் செய்யுமாதலின். அவள் ஆணையின்றி அவை எத்தொழிலையும் செய்யவல்லனவாகா.

1287. கூடிய தம்பனம் மாரணம் வசியம்
ஆடியல் பாக அமைந்து செறிந்திடும்
பாடியுள் ளாகப் பகைவரும் வந்துறார்
தேடியுள் ளாகத் தெளிந்துகொள் வார்க்கே.

பொருள் : தனக்குள்ளேயே தேடித் தெளிந்து கொண்ட அன்பர்க்கு சேர்ந்த தம்பனம், மாரணம், வசியம் ஆகியவை இயல்பாகவே வந்து பொருந்தும். இவர்கள் இருப்பிடத்தில் பகை வரும் வந்து சேரார். பாடி என்பதற்குச் சரீரம் என்று பொருள் கொள்வாரும் உளர்.

1288. தெளிந்திடும் சக்கர மூலத்தின் உள்ளே
அளித்த அகாரத்தை அந்நாடு வாக்கிக்
குளிர்ந்த அரவினைக் கூடியுள் வைத்து
வளிந்தவை அங்கெழு நாடிய காலே.

பொருள் : மூலாதாரத்தில் தெளிவாகக் காணப்படும் சக்கரத்தினுள்ளே எல்லா எழுத்துக்கும் துணைசெய்யும் அளியையுடைய அகரம் நடுவாக எழுதப்படும் வட்டவடிவமான குண்டலினி ஆற்றல் அரவு வட்டமிட்டது போன்று காணப்படும். அதனை மனங்கூடி அங்ஙனம் அமைத்து வழிபடுவாராயின் நாடியது எளிதாகக் கைகூடும்.

1289. கால்அரை முக்கால் முழுதெனும் மந்திரம்
ஆலித்து எழுந்துஅமைந்து ஊறி எழுந்ததாய்ப்
பாலித்து எழுந்து பகையற நின்றபின்
மாலுற்ற மந்திரம் மாறிக்கொள் வார்க்கே.

பொருள் : கால், அரை, முக்கால், முழுமை என்னும் மாத்திரைகளையுடைய மந்திரங்களை முறையாக ஒலிக்க, அவ்ஓசை எழுந்தன. பின்பு அது சக்கரத்துக்குப் பொருந்த அமைத்தது. மேலும் ஊறித்திகழ்ந்து முழங்கும். கருதிய பயனைக் கைகூடச் செய்தபின், அம்மந்திரத்தினை முறைப்படி மாற்றி ஒலிக்க உணர்ந்தவர்களுக்கு வேறு கருதிய பயனும் கைகூடும்.

1290. கொண்டஇம் மந்திரம் கூத்தன் எழுத்ததாய்ப்
பண்டையுள் நாவில் பகையற விண்டபின்
மன்று நிறைந்த மணிவிளக் காயிடும்
இன்றும் இதயத்து எழுந்து நமஎனே.

பொருள் : மேற்குறித்த மந்திரம் ஒலித்து வேண்டுவ பெற்று அமைந்த பின், அதன் செயல் அறுதியாகக் கூத்தன் எழுத்தாம் சிவ என்பதை உதடு அசையாமல் உள் நாவில் பண்டைப் பகையாகிய ஆணவம் அறும் பொருட்டு ஒலித்தபின், பொன்னம்பலத்தின்கண் விளங்கும் மணி விளக்காய் உள்ளம் பொலிவுறும். அத்தகைய உள்ளத்தில் நம எனக் கூட்டிச் சிவயநம என ஒலிப்பாயாக.

10. வயிரவச் சக்கரம்

(வயிரவர் சிவனது கோர மூர்த்தங்களுள் ஒன்று பகை முதலிய இடையூறுகளைப் போக்க இவரை உபாசிப்பது வழக்கம். இவருக்குரிய சக்கரம் வயிரவச் சக்கரம் ஆம்.)

1291. அறிந்த பிரதமையோடு ஆறும் அறிஞ்சு
அறிந்தஅச் சத்தமி மேல்இவை குற்றம்
அறிந்துஅவை ஒன்றுவிட்டு ஒன்றுபத் தாக
அறிந்து வலமது வாக நடவே.

பொருள் : வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை ஆறு ஆதாரங்களிலும் அஷ்டமி நீங்கலாக நவமியில் நெற்றிக்கு மேலும், ஏகாதசியில் வலக்காதுக்குப் பக்கமும், திரியோதசியில் பிடரிப்பக்கமும் பௌர்ணமியில் இடது காது பக்கமும் ஆக பத்து இடங்களில் வயிரவரை அறிந்து சிரசில் வலப்பக்கமாகத் தியானிக்கவும்.

1292. நடந்த வயிரவன் சூல கபாலி
நடந்த பகைவனைக் கண்ணது போக்கித்
தொடர்ந்த உயிரது உண்ணும் பொழுது
படர்ந்த உடல்கொடு பந்தாட லாமே.

பொருள் : மேற்கூரிய முறைப்படி நடந்து வயிரவக் கடவுளினது துணையை வேண்டி அவர் சூலத்தை உடையவரென்றும், கபாலத்தை உடையவரென்றும் மனங்கொண்டு பகைமேற்செல்லுதல் வேண்டும். அங்ஙனம் செய்வார் பகை வென்று பகைவன் கருத்தையும் கண்ணையும் போக்கி அவன்தன் உயிரினைத் தொட்டுண்ணும் போழ்து மிக எளிதாக அவன்தன் உடலைப் பந்தாடல் ஒத்துப் பந்தாடலாம்.

1293. ஆமேவப் பூண்டருள் ஆதி வயிரவன்
ஆமே கபாலமும் சூலமும் கைக்கொண்டுஅங்கு
ஆமே தமருக பாசமும் கையது
வாமே சிரத்தொடு வாளது கையே.

பொருள் : ஆன்மாக்களின் பக்தியை ஏற்றுக் கொண்டு அவை விரும்பும் வண்ணம் திருவருள் பாலிக்கின்ற முதன்மை வாய்ந்த வயிரவர், இரண்டு கைகளில் கபாலமும் சூலமும் ஏந்தி, தமருகத்தையும் பாசத்தையும் மற்றும் இரண்டு கைகளில் தண்டிப்பதற்கு மேற்கொண்டவராய் மேலும் ஐந்து ஆறாம் கைகளில் சிரசும் வாளும் ஏந்தி நிற்பர் என்றவாறு. (ஆ - ஆன்மா. தமருகம் - உடுக்கை. பாசம் - கயிறு. கபாலம் - மண்டையோடு)

1294. கையவை யாறும் கருத்துற நோக்கிடும்
மெய்யது செம்மை விளங்கு வயிரவன்
துய்யர்உ ளத்தில் துளங்குமெய் யுற்றதாய்ப்
பொய்வகை விட்டுநீ பூசனை செய்யே.

பொருள் : ஆறு கைகளையும் அவற்றில் பொருந்திய ஆயுதங்களையும் மனம் பொருந்தித் தியானிக்கவும், அவனது திருமேனி செம்மை நிறமாக விளங்கும். அவன் மிகத் தூய்மையானவர் உள்ளத்தில் விளங்குவன். மெய்யான ஒளியைப் பொருந்தி உடலைக் கடந்து நீ பூசிப்பாயாக. வயிரவருக்குக் கைகள் ஆறு அவர் சிவப்பு நிறம்.

1295. பூசனை செய்யப் பொருந்திஓர் ஆயிரம்
பூசனை செய்ய மதுவுடன் ஆகுமால்
பூசனை சாந்து சவாது புழுகுநெய்
பூசனை செய்துநீர் பூசலை வேண்டுமே.

பொருள் : ஓராயிரம் உருச் செபித்துப் பூசிக்கவும். பூசனைக்கு நல்ல தேனை விரும்பிப் படையுங்கள். பூசனைக்குச் சாந்து, சவ்வாது, புனுகுச் சட்டம் ஆகியவற்றைச் சாத்தி நீர் பகை நீக்கம் வேண்டும். (பூசனை - சாத்துப்படி செய்தலை எனினும் ஆம்.)

1296. வேண்டிய வாறு கலகமும் ஆயிடும்
வேண்டிய ஆறினுள் மெய்யது பெற்றபின்
வேண்டிய வாறு வரும்வழி நீநட
வேண்டிய வாறது வாகும் கருத்தே.

பொருள் : நாம் விரும்பும் வண்ணம் பகைவருக்குள் கலகமும் உண்டாகி விடும். விரும்பிய சட்கர்ம வித்தையை உண்மையாகப் பெற்றபின் விரும்பிய வழிகள் யாவும் பெற நீ நடப்பாயாக. அப்போது உனக்கு வேண்டிய எல்லாம் சித்திக்கும்.

11. சாம்பவி மண்டலச் சக்கரம்

(சாம்பவி - சிவசத்தி. சிவசத்தி விளங்கும் சிவலிங்கத் திருமேனி நிறைந்துள்ள சக்கர மாதலின் சாம்பவி சக்கரம் எனப்பட்டது.)

1297. சாம்பவி மண்டலச் சக்கரம் சொல்லிடில்
ஆம்பதம் எட்டாக விட்டிடன் மேலதாம்
காண்பதம் தத்துவ நாலுள் நயனமும்
நாம்பதம் கண்டபின் நாடறிந் தோமே.

பொருள் : சாம்பவி மண்டலச் சக்கரத்தின் அமைப்பைச் சொன்னால், ஆகின்ற இதழ்கள் எட்டாக அமையின் மேலானதாகக் காணப்படுகின்ற இதழ்களில் விந்து, நாதம், சிவம், சத்தி ஆகிய நான்கனுள் விந்துவை நயனமாக நாம் அறிந்தோமானால் நாட்டார்கள் நம்மை வழிபடும் பேறு உண்டாகும்.

1298. நாடறி மண்டலம் நல்லஇக் குண்டத்துக்
கோடறி வீதியும் தொடர்ந்துள் இரண்டழி
பாடறி பத்துடன் ஆறு நடுவீதி
ஏடற நால்ஐந்து இடவகை யாமே.

பொருள் : நாடு அறிந்த சாம்பவி மண்டலமாகிய இக் குண்டத்துத் திரிவு முதலிய வேறுபாடுகள் அகல இரண்டு பக்கங்களிலும் வீதிகள் அமைத்துச் சிறந்ததாகக் காணப்படும் எட்டிதழ் நடுவிலுள்ள பதினாறு வீதிகளுள் இதழ்கள் அகல நான்கு மூலைகளும் அவற்றின் இடை இடம் நாலும் நடு இடமும் ஆம்.

1299. நால்ஐந்து இடவகை உள்ளதோர் மண்டலம்
நாலுநல் வீதியுள் நல்ல இலிங்கமாய்
நாலுநற் கோணமும் நந்நால் இலிங்கமாய்
நாலுநற் பூநடு நண்ணல்அவ் வாறே.

பொருள் : இருபது வரைகளைக் கொண்டது இச்சக்கரம். அதில் நடுவில் உள்ள வீதியில் நல்ல இலிங்க வடிவாயும் நான்கு நாற்கோணங்களிலும் நந்நான்கு இலிங்கமாயும் இடைவெளி நான்கிலும் நான்கு பூக்களும் நடுவிலும் அவ்வாறே பூவும் அமைக்க.

1300. ஆறிரு பத்துநால் அஞ்செழுத்து அஞ்சையும்
வேறுரு வாக விளைந்து கிடந்தது
தேறு நிருமல சிவாய நமவென்று
கூறுமின் கூறிற் குறைகளும் இல்லையே.

பொருள் : நடுவீதியில் சகாரம் முதல் க்ஷகாரம் வரையுள்ள முப்பத்தைந்து மெய்யெழுத்துக்களையும் சிவாய நம என்று அஞ்செழுத்துக்களையும் வேறாகவுள்ள நிறத்திலே வலமாக எழுதுக. அதுவே தூய்மையான சிவாய நம என்று தெளிமின். தெளிந்த பின் கூறுக. அவ்வாறு கூறினால் சாதகர்க்கு ஒரு குறையும் இல்லை.

1301. குறைவதும் இல்லை குரைகழற் கூடும்
அறைவதும் ஆரணம் அவ்எழுத்து ஆகித்
திறமது வாகத் தெளியவல் லார்க்கு
இறவில்லை என்றென்று இயம்பினர் காணே.

பொருள் : சிவய நம எனக் கூறுவார்க்கு எவ்வகைக் குறையும் நேராது. ஒலிக்கும் வீரக்கழல் அணிந்தி திருவடியைக் கூடுதலுமாகும். இவ் வுண்மையினை அறைவதும் மறை நூலாகும். அதனால் மறை நூல் முறை நூலாகிய வேதாக மங்களும் அவ் ஐந்து எழுத்தால் ஆவன. இவ் உண்மையினைத் தெளிய வல்லார்க்கு இறப்பில்லை என்று செந்நெறிச் செல்வர்கள் கூறினர்.

1302. காணும் பொருளும் கருதிய தெய்வமும்
பேணும் பதியும் பெருகிய தீர்த்தமும்
ஊணும் உணர்வும் உறக்கமும் தானாகக்
காணும் கனகமும் காரிகை யாமே.

பொருள் : புறத்தே காணப்படுகின்ற பொருளும் அகத்தே கருதிய தெய்வமும், போற்றுகின்ற ஊரும் பெருகிய புண்ணிய தீர்த்தமும், உணவும், உணர்வு உறக்கமும், முயற்சியின்றித் தானாகவே வந்தடையும் பொன்னும் ஆகிய எல்லாம் இச்சாம்பவியால் ஆகும்.

1303. ஆமே எழுத்தஞ்சும் ஆம்வழி யேயாகப்
போமே அதுதானும் போம்வழியே போனால்
நாமே நினைத்தன செய்யலு மாகும்
பார்மேல் ஒருவர் பகையில்லை தானே.

பொருள் : ஐந்தெழுத்தும் தோன்றுவதற்கு இடனாம் நாதமாகிய ஓசை வழியேயாக, போகும் மேலிடமாகிய உச்சித் தொளை வழியாகச் சென்றால் நாம் நினைத்த எச்செயலையும் மறை ஆற்றலால் செய்தலும் ஆகும். நிலவுலகில் ஒருவரும் பகையாகார். அப்பார் மேல் எனும் பாடத்திற்கு, துறக்கவுலகாம் முதலிய உலகங்களிலும் பகையில்லை என்க.

1304. பகையில்லை என்றும் பணிந்தவர் தம்பால்
நகையில்லை நாள்நாளும் நன்மைகள் ஆகும்
வினையில்லை என்றும் விருத்தமும் இல்லை
தகையில்லை தானும் சலமது வாமே.

பொருள் : சாம்பவி மண்டலத்தை வணங்குபவரிடம் பகையில்லையாம். நகைப்பிற்குரிய நிகழ்ச்சிகளும் இடம் பெறா. நாள்தோறும் நன்மைகள் உளவாம். தீவினைகளும் அவற்றால் உண்டாகும் பிறவிச் சக்கரமும் இல்லையாகும். தடையில்லை. தானும் சலம் போலத் தன்மையாக இருப்பர். சாம்பவிச் சக்கரத்தை வணங்குபவர் பிறவி அற்றவராதலோடு சாந்த குண சீலராய் இருப்பர்.

1305. ஆரும் உரைசெய்ய லாம்அஞ் செழுத்தாலே
யாரும் அறியாத ஆனந்த ரூபமாம்
பாரும் விசும்பும் பகலும் மதியதி
ஊனும் உயிரும் உணர்வது வாமே.

பொருள் : யாவரும் சாம்பவியை அஞ்செழுத்தாலே செபிக்கலாம். அதனால் எவரும் அறியாத ஆனந்த வடிவம் உண்டாகும். பிருதிவி முதல் ஆகாயமாயும் சூரிய சந்திர மண்டலமாயும் மேலான உடம்பில் உயிராயும் உயிரில் உணர்வாயும் அச்சாம்பவி விளங்கும்.

1306. உணர்ந்தெழு மந்திரம் ஓமெனும் உள்ளே
அணைந்தெழும் ஆங்கதன் ஆதியது ஆகும்
குணர்ந்தெழு சூதனும் சூதியும் கூடிக்
கணந்தெழும் காணும்அக் காமுகை யாலே.

பொருள் : சிவாய நம என்று எண்ணுவார்க்கு உள்ளே உந்தியிலிருந்து சிரசு முடிய பிரணவம் உதித்தெழும். அப் பிரணவமே பஞ்சாக்கர வடிவமான இறைவனின் முதல் நிலையாகும். சிவனும் சத்தியும் நாதவிந்து தத்துவங்களிலிருந்து உடலைக் கொண்டு வரும். சத்தி சிவத்தை நோக்கிய போது தத்துவங்கள் விந்துவிலும் விந்து நாதத்திலும் ஆக இலயமடையும்.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் - Page 2 Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Mon Mar 26, 2012 3:39 pm

12. புவனபதி சக்கரம்

(புவனைக்குரிய சக்கரம் புவனாபதி சக்கரம். புவனை என்பது சத்திக் குரிய பெயர். புவனைக் குரிய எழுத்துக்களும், சக்கரமும், உபாசனையும், பூசையும் இங்குக் கூறப்பெறுகின்றன. )

1307. சுகராதி ஓர்ஐந்தும் காணிய பொன்மை
அகராதி ஓராறு அரத்தமே போலும்
சகராதி ஓர்நான்கும் தான்சுத்த வெண்மை
ககராதி மூவித்தை காமிய முத்தியே.

பொருள் : திருமூலர் வட்ட எழுத்து வழங்கிய மிகப் பழங்காலத்து இருந்தவர் அவர் காலத்துத் தமிழின்கண் ஐம்பத்தோர் எழுத்து வழங்கியிருந்தன. அதனால் இங்ஙனம் ஓதியருளினார். ககர எழுத்து முன்னம் ஐந்தினமாக வழங்கி வந்தது. இதனைக் கவ்வருக்கம் என்பர். இவ்வெழுத்துப் பொன்மை நிறம் என்பர். அகராதி ஓராறும் என்பது ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ என்பன. இவை செம்மை நிறம் என்ப. சகர இனம் நான்கும் தூய வெண்மை நிறம் என்ப. க,அ,ச என மூவகையாகக் கூறப்படும். இம் மூவகை மந்திரமும் விரும்பிய வாழ்வினைத் தரும்.

1308. ஓரில் இதுவே உரையும்இத் தெய்வத்தைத்
தேரில் பிறிதில்லை யானொன்று செப்பக்கேள்
வாரித் திரிகோண மனம்இன்ப முத்தியும்
தேரில் அறியும் சிவகாயம் தானே.

பொருள் : ஆராயும் இடத்தில் யான் உரைக்கும் உரையும் இதுவேயாகும். தேறுமிடத்து இம்மந்திர வடிவமான புவனேசுவரியைத் தவிர தெய்வம் பிறிதில்லை. நான் ஒன்று சொல்லக் கேட்பாயாக. வாரி போன்ற முக்கோணத்தில் மனம் நித்தியானந்தத்தையும் அகண்டத்தையும் விரும்பின், அதுவே சிவனது வடிவம் என்று அறியும்.

1309. ஏக பராசத்தி ஈசற்குஆம் அங்கமே
யாகம் பராவித்தை யாமுத்தி சித்தையே
ஏகம் பராசத்தி யாகச் சிவகுரு
யோகம் பராசத்தி உண்மைஎட் டாமே.

பொருள் : ஒன்றாகிய பராசத்தியே இறைவனுக்கு அங்கமாவாள். அவளது திருமேனி வித்தையாம். அது முத்தியையும் சித்தியையும் தருவதாம். பராசத்தி ஒருத்தியே யாயினும் சிவகுரு வோடு பொருந்தி நிற்பதில் அவள் எட்டுச் சத்தியாக உண்மையில் உள்ளாள்.

1310. எட்டா கியசத்தி எட்டாகும் யோகத்துக்
கட்டாகு நாதாந்தத்து எட்டும் கலப்பித்தது
ஒட்டாத விந்துவும் தானற்று ஒழிந்தது
கிட்டாது ஒழிந்தது கீழான மூடர்க்கே.

பொருள் : இந்த எட்டு வகையாகிய சத்திகளும் அட்டாங்கங்களையுடைய யோகத்துக்கு அங்கமாகும். நாதாந்தம் கைவரப் பெற்றவர்க்கு இவ் எட்டும் கலப்பித்தல் அமையும். விருப்பத்தையும் விளைவித்துப் போகத்தில் செலுத்தும் வீரியமும் அற்று ஒழிந்தது. சிற்றின்பத்தில் நாட்டமுடைய கீழான மக்களுக்கு அடைய ஒண்ணாதது ஆயிற்று.

1311. ஏதும் பலமாம் இயந்திரா சன்அடி
ஓதிக் குருவின் உபதேசம் உட்கொண்டு
நீதங்கும் அங்க நியாசந் தனைப்பண்ணிச்
சாதங் கெடச்செம்பிற் சட்கோணம் தானிடே.

பொருள் : எல்லாப் பயனையும் தருமாறு இயந்திர ராசனாகிய புவனாபதிச் சக்கரத்தின் திருவடியாம் அதனை அறிந்து அவள் மந்திரத்தைக் குருவினால் அடைந்து, அதனை உடலில் நிறுத்திப் பயிலவும் ஆன்மா உடலில் மந்திராத்துவா ஆக நிலைபெற அங்கங்களைச் சிவஅங்கங்களாக நியசித்து உன் பிறவிசேர் கெடுமாறு செப்புத் தகட்டில் ஆறு கோணம் இடுவாயாக. (நியாசம் - தொடுதல்.) இந்த இராசன் எனப்பாடங் கொண்டு சந்திர மண்டலத்து அதிபதி எனப் பொருள் கொள்வாரும் உளர்.

1312. சட்கோணம் தன்னில் ஸ்ரீம்ஹிரீம் தானிட்டு
அக்கோணம் ஆறின் தலையில்ரீங் காரமிட்டு
எக்கோண மும்சூழ எழில்வட்டம் இட்டுப்பின்
மிக்கீர்எட்டு அக்கரம் அம்முதல் மேலிடே.

பொருள் : அந்த அறுகோணத்தில் ஸ்ரீம் ஹிரீம் என்ற பீசங்களை எழுதி அக்கோணம் ஆறின் உச்சியிலும் ஹிரீங்காரம் இட்டு எல்லாக் கோணங்களையும் சூழ அழகிய வட்டம் எழுதி, பின்பு அதன் மேல் பதினாறு உயிர் எழுத்துக்களையும் அகர முதலாக எழுதுக.

1313. இட்ட இதழ்கள் இடைஅந் தரத்திலே
அட்டஹவ் இட்டுஅதில் மேலே உவ்விட்டுக்
கிட்ட இதழ்களின் மேலே கிரோசிரோம்
இட்டுவா மத்துஆங்கு கிரோங்கொன்று மேவிடே.

பொருள் : எழுதிய தாமரை இதழ்களில் நடுவிலுள்ள வெளியில் எட்டி ஹ என்னும் எழுத்தையும் உ என்னும் எழுத்தையும் சேர்ந்து ஸ்ரீ எழுதி அணுக. இதழ்களுக்கு மேலே கிரோம் கிரோம் என்பனவற்றை எழுதி அதன் இடப்பாகத்தில் ஆம் கிரோம் என்று விரும்பி எழுதுக.

1314. மேவிய சக்கர மீது வலத்திலே
கோவை அடையவே குரோங்கிரோங் கென்றிட்டுத்
தாவில்ரீங் காரத்தால் சக்கரம் சூழ்ந்து
பூவைப் புவனா பதியைப்பின் பூசியே.

பொருள் : விரும்பி எழுதிய சக்கரத்தின் மீது வலப்பாகத்தில், மாலை மாதிரியாக கிரோம் கிரோம் என்றிட்டு குற்றமற்ற ஹிரீம் என்னும் பீசத்தால் சக்கரத்தைச் சூழ்ந்து புவனாபதி சத்தியைப் பூசிப்பாயாக. புவனாபதிச் சக்கரம் அமைக்கும் முறை கூறியவாறு.

1315. பூசிக்கும் போது புவனா பதிதன்னை
ஆசற்று அகத்தினில் ஆவா கனம்பண்ணிப்
பேசிய பிராணப் பிரதிட்டை யதுசெய்து
தேசுற் றிடவே தியானம் அதுசெய்யே.

பொருள் : பூசிக்கும் போது புவனாபதியைக் காமாதி குற்றம் நீங்கிய மனத்தினில் நிலை பெற வேண்டும் என்று வேண்டி அதற்குரிய மந்திரங்களைச் சிந்தித்து உயிர் கொடுத்து அங்கே நிறுத்தி ஒளி விளங்கும்படி தியானம் செய்வாயாக. புவனாபதியின் அசல் பூசை கூறியவாறு.

1316. செய்ய திருமேனி செம்பட்டு உடைதானும்
கையிற் படைஅங் குசபாசத் தோடுஅபயம்
செய்யில் அணிகலன் இரத்தின மாமேனி
துய்ய முடியும் அவயவத்தில் தோற்றமே.

பொருள் : சிவந்த மேனியை உடையவளாய்ச் செம்பட்டுடை உடுத்து, கையினில் அங்குசம் பாசம் அபயவரதத்தையும் கொண்டு திருமேனியில் அணிகலன்களையும் இரத்தின ஆபரணங்களையும் தாங்கித் தூய்மையான கிரீடத் தோடு வடிவு கொண்டு தோன்றுவள். (அபய வரதம் - அஞ்சற்க என்னும் அடையாளம்.)

1317. தோற்போர்வை நீக்கித் துதித்தடைவிற் பூசித்துப்
பாற்பே னகமந் திரத்தால் பயின்றேத்தி
நாற்பால நாரதா யாசுவ காஎன்று
சீர்ப்பாகச் சேடத்தை மாற்றிப்பின் சேவியே.

பொருள் : அரைக்கு மேலுள்ள மேலாடையை நீக்கி முறையாகப் போற்றி வழிபடப் பாற்சோறு அமைத்துக் குழைத்த லாகிய நிவேதனம் பண்ணி, நாற் புறத்தும் நாரதாயா சுவாகா என்று சிறப்புப் பொருந்தியன சாத்தி எடுத்த மாலை முதலியவற்றை மாற்றிப் பின் தொழுவாயாக. தோற் போர்வை மேல் வேட்டி (பால் போனகம் - பாயாசம்)

1318. சேவிப் பதன் முன்னே தேவியைஉத் வாகனத்தால்
பாவித்த இதய கமலத்தே பதிவித்துஅங்கு
யாவர்க்கும் எட்டா இயந்திர ராசனை
நீவைத்துச் சேவி நினைந்தது தருமே.

பொருள் : நைவேத்திய பிரசாதத்தை உண்பதற்கு முன்னே தேவியை உன்னிடம் கலந்திருப்பவளாக் கண்டு இதய கமலத்தில் பதித்துக் கொண்டு அங்கு யாவராலும் கண்டறிய ஒண்ணாத இயந்திர ராசனை நீ மனத்துள் கொண்டு வழிபடுவாயாக. பின் நீ நினைத்ததை எல்லாம் தருவாள். (உத்வாகனத்தால் - இதயத்தில் ஒடுக்குவதால். இயந்திர ராசன் - புவனாபதி.)

13. நவாக்கரி சக்கரம்

(நவாக்கரி - நவ+அக்கரி = ஒன்பது அட்சரம். நவாக்கரி சக்கரம் என்பது அட்சரங்களைப் பீசமாககக் கொண்ட தேவி மந்திரம் அமைந்த சக்கரம். ஓர் எழுத்தே ஒன்பது எழுத்தாகவும் மாறி அமையும் வகையில் எண்பத்தொரு வகையாகவும் விரியும்.)

1319. நவாக்கரி சக்கரம் நானுரை செய்யின்
நவாக்கரி ஒன்று நவாக்கரி யாக
நவாக்கரி எண்பத் தொருவகை யாக
நவாக்கரி அக்கிலீ சௌமுதல் ஈறே.

பொருள் : வியத்த தன்மை வாய்ந்த வ கரமென்னும் ஓரெழுத்துக்கு உரியவள் திருவருள் அம்மை. அவளுக்குரிய நவாக்கரி சக்கரத்தை யான் ஓதப் புகுந்தால் அந்த நவாக்கரி எண்பது வகையாக எழுத்து மாறுதலால் காணப்படும். நவாக்கரி எழுத்து முதற்கண் கிலீம் என்பதும் முடிவில் சௌ என்பதும் ஆகும். (நவ - ஒன்பது - புதுமை)

1320. சௌமுதல் அவ்வொரு ஹெளட னாங்கிரீம்
கௌவுள் உடையுளும் கலந்திரீம் கிரீமென்று
ஒவ்வில் எழுங்கிலி மந்திர பாதமாச்
செவ்வுள் எழுந்து சிவாய நமஎன்னே.

பொருள் : முதற்கண் சௌ, ஒள, ஹெள, கிரீம், கௌ, ஐ, இரீம், சிரீம், கிலீம் ஆகிய இவை ஒன்பதும் மந்திர உறுப்பாகக் கொண்டு செம்மையாக உள்ளெழுந்த முறையில் சிவயநம எனக் கணிப்பாயாக. ஆதி மந்திரம் அஞ்செழுத்தென்பதும் அதனை உயிராகவும் ஏனைய மந்திரங்களை உடல் உறுப்பாகவும் கொண்டு வழிபடுக. (செவ்வுள் - செவ்வையாக.)

1321. நவாக்கரி யாவது நானறி வித்தை
நவாக்கரி உள்ளெழும் நன்மைகள் எல்லாம்
நவாக்கரி மந்திர நாவுளே ஓத
நவாக்கரி சத்தி நலந்தருந் தானே.

பொருள் : நவாக்கரி யாவது நான் அறிந்த ஸ்ரீ வித்தையாகும். இதில் நன்மைகள் அனைத்தும் விளையும். இதனை நாவுள் வைத்து நினைக்கவே நவாக்கரி சத்தி நன்மைகளை அருளுவாள். நாவுளே ஓத - வாய் திறந்து உச்சரியாது நாப்புடை பெயரும் அளவில் உச்சரிக்க.

1322. நலந்தரு ஞானமும் கல்வியும் எல்லாம்
உரந்தரு வல்வினை உம்மை விட்டோடும்
சிரந்தரு தீவினை செய்வது அகற்றி
வரந்தரு சோதியும் வாய்த்திடும் காணே.

பொருள் : ஞானமும் கல்வி முதலாகிய நலம் எல்லாம் தரும். கொடுமையைத் தரும் (சஞ்சிதம்) பழவினைகள் உம்மை விட்டு நீங்கும். இப்பிறவியில் அறியாமையால் ஈட்டப்படும் தலையான (ஆகாமியம்) வினைகளை நீக்கி வரங்களை அருளும். அங்ஙனம் அழியும்படி செய்யப் பேரொளிப் பிழம்பாகிய சிவன் வந்து வாய்த்திடுவன்.

1323. கண்டிடும் சக்கரம் வெள்ளிபொன் செம்பிடை
கொண்டிடும் உள்ளே குறித்த வினைகளை
வென்றிடு மண்டலம் வெற்றி தருவிக்கும்
நின்றிடும் சக்கரம் நினைக்கும் அளவே.

பொருள் : சக்கரத்தை வெள்ளி, பொன், செம்புத் தகடுகளில் அமைக்கவும். மனத்திலும் தியானியுங்கள். அப்படிச் செய்யின் உங்களுக்கு அமைய உள்ள வினைகளை வென்றுவிடலாம். ஒரு மண்டலம் வழிபட்டு வர திருவருள் துணையால் வெற்றிகள் உண்டாகும். மேலும் அச்சக்கரத்தை நினைத்த அப்பொழுதே எல்லா நலமும் பெருகும். (மண்டலம் - 7 வாரம்). இப்போது 40 நாள் என்பர்.

1324. நினைத்திடும் அச்சிரீம் அக்கிலீம் ஈறா
நினைத்திடும் சக்கரம் ஆதியும் ஈறு
நினைத்திடும் நெல்லொடு புல்லினை யுள்ளே
நினைத்திடும் அருச்சனை நேர்தரு வாளே.

பொருள் : ஸ்ரீம் முதலாகக் கொண்டு கிலீம் ஈறாகத் தியானியுங்கள் அவ்வாறு தியானிக்கும் போது ஆதியாக உள்ளது ஈறாக அமையும். மஞ்சள் கலந்த அரிசியும் அறுகம் புல்லும் கொண்டு தியானித்து வழிபாடு செய்யுங்கள். உங்களது அருச்சனையை உகந்து வெளிப்பட்டு அருள்வாள்.

1325. நேர்தரும் அத்திரு நாயகிய ஆனவள்
யாதொரு வண்ணம் அறிந்திடும் பொற்பூவை
கார்தரு வண்ணம் கருதின கைவரும்
நார்தரு வண்ணம் நடந்திடு நீயே.

பொருள் : உங்களுக்கு வெளிப்பட்டு அருள் வழங்கும் பராசத்தி எவ்விதமான நிறமுடையவள் உணர விரும்பின் அழகிய காயாம்பூவைப் போலக் கரிய வண்ணமாகும். அவ் வண்ணம் தொழுவார்க்கு நினைத்தவை கைகூடும். அவள் உன்னை விரும்பும் படி நடந்து கொள்வாயாக. (நார் - அன்பு.)

1326. நடந்திடும் பாரினில் நன்மைகள் எல்லாம்
கடந்திடும் காலனும் எண்ணிய நாளும்
படர்ந்திடு நாமமும் பாய்கதிர் போல
அடைந்திடு வண்ணம் அடைந்திடு நீயே.

பொருள் : இந்த உலகில எல்லா நன்மைகளும் உண்டாகும். காலன் நமக்குரிய ஆயுளாக எண்ணிய நாள்களும் கடக்கும். எங்கும் பரந்து செல்லும் சூரியனது கதிரைப் போலப் புகழும் பரவும். ஆதலால் பராசத்தி உன்னிடம் பொருந்தும் வகையில் நீ நடப்பாயாக.

1327. அடைந்திடும் பொன்வெள்ளி கல்லுடன் எல்லாம்
அடைந்திடும் ஆதி அருளும் திருவும்
அடைந்திடும் அண்டத்து அமரர்கள் வாழ்வும்
அடைந்திடும் வண்ணம் அறிந்திடு நீயே.

பொருள் : பொன் வெள்ளி நவரத்தினம் முதலியவை தாமே வந்து அடையும். பராசத்தியின் அருளும் ஞானமும் வரும். தேவர்கள் வாழ்வு சித்திக்கும். நீ அவனை அடையும் வகையை அறிந்து கொள்வாயாக.

1328. அறிந்திடு வார்கள் அமரர்க ளாகத்
தெரிந்திடு வானோர் தேவர்கள் தேவன்
பரிந்திடும் வானவன் பாய்புனல் சூடி
முரிந்திடு வானை முயன்றடு வீரே.

பொருள் : மக்கள் அமரர்கள் ஆவதற்காகச் சிவனை அறிவார்கள். அதனை அறிந்த தேவர்களுக்குத் தேவ தேவனாகிய பரமேஸ்வரன் அருள் செய்யும் பாய்கின்ற கங்கையைச் சூடி, அதன் வேகத்தை மாற்றியருளிய பரமேஸ்வரனை அடைவதற்கு நீ முயல்வாயாக.

1329. நீர்பணி சக்கரம் நேர்தரு வண்ணங்கள்
பாரணி யும் ஹிரீ முன்நீம் ஈறாந்
தாரணி யும் புகழத் தையல்நல் லாள்தன்னைக்
காரணி யும்பொழில் கண்டுகொள் ளீரே.

பொருள் : நீங்கள் வணங்குவதற்குரிய சக்கரத்தில் பொருந்திய எழுத்துக்கள் உலகம் புகழும் ஹிரீம் முதலாக நீம் ஈறாக உள்ளதாம். இதனை வழிபட்டு மாலையை அணிந்து புகழோடு கூடிய பராசத்தியை மேகம் போன்ற மண்டலத்தில் கண்டு கொள்ளுங்கள்.

1330. கண்டுகொள் ளும் தனி நாயகி தன்னையும்
மொண்டுகொ ளும்முக வசியம தாயிடும்
பண்டுகொ ளும்பர மாய பரஞ்சுடர்
நின்றுகொ ளும்நிலை பேறுடை யாளையே

பொருள் : ஒப்பற்ற நாயகியாகிய சத்தியைத் தரிசியுங்கள். அள்ளிப் பருகும் படியாக முகப்பொலிவு உண்டாகும். மேன்மையான பரசிவம் மஞ்சமாகத் தாங்கும் நிலை பேறுடைய சத்தியைப் பழமையாகப் போற்றி மனத்துள் கொள்ளுங்கள். (வசியம் - கவர்ச்சி)

1331. பேறுடை யாள்தன் பெருமையை எண்ணிடில்
நாடுடை யார்களும் நம்வச மாகுவர்
மாறுடை யார்களும் வாழ்வது தானிலை
கூறுடை யாளையும் கூறுமின் நீரே.

பொருள் : நீங்கள் எய்தும் பேறாகவுள்ள சத்தியின் பெருமையை எண்ணில் நாட்டை யுடைய மன்னரும் நம்வசம் ஆகுவர். நமக்குப் பகையானவர்களும் வாழ்வதும் இல்லை. ஆதலால் இறைவனை ஒரு கூற்றிலே யுடையவனைத் தோத்திரம் செய்யுங்கள்.

1332. கூறுமின் எட்டுத் திசைக்கும் தலைவியை
ஆறுமின் அண்டத்து அமரர்கள் வாழ்வென
மாறுமின் வையம் வரும்வழி தன்னையும்
தேறுமின் நாயகி சேவடி சேர்ந்தே.

பொருள் : எட்டுத் திசைகளுக்கும் தலைவியாகிய நவாக்கரி சத்தியைத் தோத்திரம் செய்யுங்கள். அண்டங்களில் வாழ்கிற அமரர்கள் வாழ்வ எம்மாத்திரம் என அதில் வைத்த ஆசையை அறுங்கள். மீண்டும் பிறந்து இப்பூமியில் வரும் வழியை மாறுங்கள். நாயகியின் சிவந்த திருவடித் துணையைப் பற்றித் தெளிவு பெறுங்கள்.

1333. சேவடி சேரச் செறிய இருந்தவர்
நாவடி யுள்ளே நவின்றுநின்று ஏத்துவர்
பூவடி யிட்டுப் பொலிய இருந்தவர்
மாவடி காணும் வகையறி வாரே.

பொருள் : அம்மையின் திருவடியை இடைவிடாது நினைத்து இருந்தவர் நா அசையாது உள்ளே செவித்துக் கொண்டிருப்பர். அவ்வாறு தங்களது அசல் பார்வையைச் செலுத்தி விளங்க இருந்தவர் பெருமையுடைய திருவடியைக் காண்பவராவர்.

1334. ஐம்முத லாக வளர்ந்தெழு சக்கரம்
ஐம்முத லாக அமர்ந்திரீம் ஈறாகும்
அம்முத லாகி அவர்க்குஉடை யாள்தனை
மைம்முத லாக வழுத்திடு நீயே.

பொருள் : ஐகாரத்தை முதலாகக் கொண்டு வளர்ந்தெழுவது நவாக்கரி சக்கரம். அந்த ஐகாரம் முதலாகவும் இரீம் ஈறாகவும் வரைவர். அகர முதலாக விளங்கும் சிவபெருமானுக்கும் உடையாளாக விளங்கும் முழு முதல்வியை மையாகிய மாயைக்கும் முதல்வியாக வழுத்துவாயாக.

1335. வழுத்திடு நாவுக் கரசிவன் தன்னைப்
பகுத்திடும் வேதமெய் ஆகமம் எல்லாம்
தொகுத்தொரு நாவிடை சொல்லவல லாளை
முகத்துளும் முன்னெழக் கண்டுகொள் ளீரே.

பொருள் : வணங்கப்பெறும் வாகீசுவரியான சத்தியை வேதாக மங்கள் எல்லாம் பகுத்து ஓதும். அவை அனைத்தையும் சேர்த்து நம் நாவால் பயில அதற்கு அருள்புரியு வல்லாள். அன்பர்களது திருமுகமும் அருள்பொலிவோடு முற்பட்டுத் தோன்றும் கண்டு கொள்வீர்களாக.

1336. கண்டஇச் சக்கரம் நாவில் எழுதிடில்
கொண்டஇம் மந்திரம் கூத்தன் குறியதாம்
மன்றினுள் வித்தையும் மானுடர் கையதாய்
வென்றிடும் வையகம் மெல்லியல் மேவியே.

பொருள் : இவ்வாறுள்ள சக்கரத்தை ஒருவன் நாவில் எழுதிடில் கொண்ட இம் மந்திரமானது கூத்தப்பெருமானது வடிவமாகும். பொன்மன்றில் விளங்கும் சபாவித்தையும் மக்கள் கையதாகி மெல்லியலாகிய நவாக்கிரி கருணை பொருந்துதலால் உலகத்தையே வெல்லலாம்.

1337. மெல்லியல் ஆகிய மெய்ப்பொரு ளாள்தன்னைச்
சொல்லிய லாலே தொடர்ந்தங்கு இருந்திடும்
பல்லிய லாகப் பரந்தெழு நாள்பல
நல்லியல் பாலே நடந்திடும் தானே.

பொருள் : மென்மையான இயல்பினையுடைய உண்மைப் பொருளாகியவளைக் குரு உபதேசப்படி விடாது பற்றித் தியானித்திருங்கள். இன்ப துன்பக் கலப்புடைய நாள்கள் பலவும் நல்ல இன்ப நாள்களாகவே அமைந்துவிடும்.

1338. நடந்திடு நாவினுள் நன்மைகள் எல்லாம்
தொடர்ந்திடும் சொல்லொடு சொற்பொருள் தானும்
நடந்திடும் கல்விக்கு அரசுஇவ னாகப்
படர்ந்திடும் பாரில் பகையில்லை தானே.

பொருள் : நன்மைகள் எல்லாம் இவன் நாவினால் சொன்னபடி நடக்கும். இவன் சொன்னவாறு சொல்லுக்குரிய பயனும் தொடர்ந்துவிடும். வாகீஸ்வரியே இவன்நாவில் உள்ளமையால் எல்லாக்கல்வியும் பொருந்தி நாவரசாக விளங்குவான். பரந்த உலகில் பகையும் இல்லாது போகும்.

1339. பகையில்லை கௌமுதல் ஐயது ஈறா
நகையில்லை சக்கரம் நன்றறி வார்க்கு
மிகையில்லை சொல்லிய பல்லுரு எல்லாம்
வகையில்லை யாக வணங்கிடும் தானே.

பொருள் : பகையைக் கெடுக்கும் கௌ முதல் ஐ ஈறாகவுள்ள சக்கரத்தை நன்றாக அறிபவர்க்கு பிறர் பழித்தலும் இல்லை. பற்பல வடிவங்களாகக் காணப்படுவன எல்லாம் இவருக்கு வேறாக இல்லை. ஆதலின் வேறு வகையின்மையாக எல்லாம் இவரை வணங்குவனவாம்.

1340. வணங்கிடும் தத்துவ நாயகி தன்னை
நலங்கிடு நல்லுயி ரானவை எல்லாம்
நலங்கிடும் காம வெகுளி மயக்கம்
துலங்கிடும் சொல்லிய சூழ்வினை தானே.

பொருள் : தத்துவ நாயகியை எல்லோரும் வணங்குவர். ஆதலால் அந்த நால்வர் எல்லாம் அவளிடம் பொருந்தி யிருப்பர். காமம் வெகுளி மயக்கமாகிய முக்குற்றங்களும் நீங்கிவிடும். எண்ணிய கருமம் கைகூடி விளங்கும். (நலங்கிடுதல் - ஒன்றுபடுதல்)

1341. தானே கழறித் தணியவும் வல்லனாய்த்
தானே நினைத்தவை சொல்லவும் வல்லனாய்த்
தானே தனிநடங் கண்டவள் தன்னையும்
தானே வணங்கித் தலைவனும் ஆமே.

பொருள் : தனக்கு மேல் பிறரின்றித் தானே பேசி அடங்குபவனாய், தான் ஒருவனே நினைத்தவண்ணம் ஒளிக்காமல் பேசுபவனாய், தானே பேரூழிக் காலத்தில் சிவனது சங்காரத் தாண்டவம் கண்டவனையும், தானே வழிபட்டு வணங்கித் தலைவனுமாய் ஆவான்.

1342. ஆமே அமைத்துயிராகிய அம்மையும்
தாமே சகலமும் ஈன்றஅத் தையலும்
ஆமே அவளடி போற்றி வணங்கிடிற்
போமே வினைகளும் புண்ணியன் ஆகுமே.

பொருள் : எல்லா உயிர்களும் ஆகியவள் அம்மையே யாகும். எல்லாவற்றையும் பெற்றெடுத்த அழகு நிரம்பிய அன்னையும் ஆவாள், அவளது திருவடியைப் போற்றி வணங்கினால் நம்முடைய வினைகளும் போய்ப் புண்ணியன் ஆகலாம். (புண்ணியம் - இறைபணி)

1343. புண்ணிய னாகிப் பொருந்தி உலகெங்கும்
கண்ணிய னாகிக் கலந்தங்கு இருந்திடும்
தண்ணிய னாகித் தரணி முழுதுக்கும்
அண்ணிய னாகி அமர்ந்திருந் தானே.

பொருள் : உலகமெங்கும் பொருந்திப் புண்ணியனாகி, மதிக்கத் தக்கவனாக அனைவருடன் கலந்து விளங்குவான். கருணை நிறைந்தவனாக உலக முழுவதும் மிகவும் இனியனாக அமர்ந்திருந்தான். அண்ணித்தல் இனித்தல். இத்தன்மைகளை உடையவன் சிவபெருமான் என்க.

1344. தானது கிரீம் கௌவது ஈறாம்
நானது சக்கரம் நன்றறி வார்க்கெல்லாம்
கானது கன்னி கலந்த பராசக்கதி
கேளது வையங் கிளரொளி யானதே.

பொருள் : சக்கரத்தின் பீசமானது கிரீம் முதல் கொள ஈறாகும். அது நானாகவுள்ள சக்கரம் என்று அறிபவர்க் கெல்லாம் அஞ்ஞான மயமான காட்டில் இருள் மயமாகக் கலந்திருந்த அழியாத பராசத்தி உறவாகி அறிவான நிலையில் ஒளியாக எல்லா உயிர்களிடமும் விளங்குகின்றாள்.

க்+இரீம்=கிரீம் என்றாயிற்று

(சக்கரம் வரைபவர் எழுத்துக்களை மாற்றியும் வரைவர். அது மரபாகும் பராசத்தி - பேரறிவுப் பேராற்றல் பெற்றவள்.)

1345. ஒளிக்கும் பராசத்தி உள்ளே அமரில்
களிக்கும் இச் சிந்தனையில் காரணம் காட்டித்
தெளிக்கும் மழையுடன் செல்வம் உண்டாக்கும்
அளிக்கும் இவளை அறிந்துகொள் வார்க்கே.

பொருள் : ஒளி செய்கின்ற பராசத்தி மனத்தில் எழுந்தருளினால் களிக்கும் மனத்தில் உண்மைப் பொருளினை விளக்கித் தெளிவினைத் தரும் மழையுடன் செல்வத்தையும் உண்டாக்கும். இவளை அறிந்து கொள்வார்க்கு இங்ஙனம் அருள்புரியும். உபாசகன் விருப்பப்படி மழைபெய்து வறுமை நீங்கும் எனினுமாம்.

1346. அறிந்திடும் சக்கரம் அருச்சனை யோடே
எறிந்திடும் வையத்து இடரவை காணின்
மறிந்திடு மன்னனும் வந்தனை செய்யும்
பொறிந்திடும் சிந்தை புகையில்லை தானே.

பொருள் : அருளால் அறிந்து கைக் கொண்டொழுகும் நவாக்கரி சக்கரத் தினை வழிபடுவாயாக. அஃது உலகத் துன்பங்கள் அனைத்தையும் நீக்கும். சிறையில் அடைத்துத் தண்டம் செய்யும் மன்னனும் வலியவந்து வழிபடுமாறு செய்யும். உள்ளத்தைக் கலங்க வைக்கும் எவ்வகைத் துன்பங்களும் உளவாகா. எறிந்திடும்-விலக்கும். (புகை-துன்பம். காவல் மறித்திடும் - சிறையில் வைத்திடும்.)

1347. புகையிலை சொல்லிய பொன்னொளி யுண்டாம்
குகையில்லை கொல்வது இலாமையி னாலே
வகையில்லை வாழ்கின்ற மன்னுயிர்க் கெல்லாம்
சிகையில்லை சக்கரம் சேர்ந்தவர் தாமே.

பொருள் : நவாக்கரி சக்கர வழிபாடு உடையவர்கட்குப் புகையாகிய துன்பம் இல்லை. அகத்தவத்தோராகிய யோகிகளுக்கு உண்டாகும் கடவுள் காட்சியாம் பொன்னொளி அகத்தே காணப்படும். அத்தகையோர் கொலையும் புலையும் விடுத்த சிவ நிலையினராதலின் அவர்கட்குப் பிறவி யில்லை. மன்னுயிரை யெல்லாம் வேறுபாடு இல்லாமல்ஒக்கப்பார்த்து அவர் புரியும் கடவுள் தொண்டுக்கு முடிவில்லை. (குகை - கருப்பாசயம். இகை-முடிவு.)

1348. சேர்ந்தவர் என்றும் திசையொளி யானவர்
காய்ந்தெழு மேல்வினை காண்கி லாதவர்
பாய்ந்தெழும் உள்ளொளி பாரிற் பரந்தது
மாய்ந்தது காரிருள் மாறொளி தானே.

பொருள் : தியானித்தவர் ஒளியுடல் பெற்று விளங்குவார். சினந்து எழுகின்ற ஆகாமிய வினைகளைக் காணாதவர் ஆவர். இவரிடம் பரவி எழுகின்ற உள்ளொளி அவர் வாழும் பிரதேசத்தில் படர்ந்தது. அதனால் அப்பகுதியினரிடம் பரவிய இருள் மயமான அஞ்ஞானம் கெட்டு ஒளி பெற்று ஞான மயமானவர்களாக விளங்கினர்.

1349. ஒளியது ஹெளமுன் நிரீமது ஈறாம்
களியது சக்கரம் கண்டறி வார்க்குத்
தெளிவது ஞானமும் சிந்தையும் தேறப்
பணிவது பஞ்சாக் கரமது வாமே.

பொருள் : ஒளியுடையதாகிய ஹெள என்பதை முதலிலும் கிரீம் என்பதை ஈற்றிலும் வரைந்து, திருவருட் களிப்பை உண்டாக்கும் அச்சக்கரத்தை வழிபடுவார்க்குத் தெளிந்த மெய்யுணர்வும் தெளிந்த நாட்டமும் கைகூடும். பின் செந்தமிழ்த் திருவைந்தெழுத்தினை உருவேற்றி முழுமுதற் சிவபெருமானை வழிபாடு புரிவாயாக.

1350. ஆமே சதாசிவ நாயகி யானவள்
ஆமே அதோமுகத்துள்அறி வானவள்
ஆமே சுவைஒளி ஊறுஓசை கண்டவள்
ஆமே அனைத்துயிர் தன்னுளும் ஆமே.

பொருள் : சதாசிவ மூர்த்திக்கு அனுக்கிரக சத்தியாக விளங்குபவள் இவளே. இவளே கீழ் நோக்கிய சக்தியாக உயிர்களைச் செலுத்துபவள் ஆவாள். இவள் சுவை ஒளி ஊறு ஓசையாகிய இவற்றை அறியும் அறிவாகத் துணைசெய்பவள். இவளே அருவநிலையில் எல்லா உயிர்களையும் தன்னிடம் அடக்கிக் கொண்டவள் ஆவள். நாற்றம் என்னும் ஐந்தாவது அறிவையும் கொள்க.

1351. தன்னுளும் ஆகித் தரணி முழுதுங்கொண்டு
என்னுளும் ஆகி இடம்பெற நின்றவள்
மண்ணுளும் நீர்அனல் காலுளும் வானுளும்
கண்ணுளும் மெய்யுளும் காணலும் ஆமே.

பொருள் : எல்லா உலகங்களையும் கொண்ட ஈசானமூர்த்தி வடிவுடன் என்னுள்ளும் இடம் பெற்று விளங்கினன். அவளை மண்ணிலும் நீரிலும் ஒளியிலும் காற்றிலும் ஆகாய மண்டலத்திலும் கண்ணின் கருமணிப் பார்வையிலும் உடலிலும் காணலாம். மெய்ப் பொருளாகிய சிவனார் திருவுள்ளத் திருப்பவளும் அவளே என இவ்வகையாகக் கூறுதலும் ஒன்று.

1352. காணலும் ஆகும் கலந்துயிர் செய்வன
காணலும் ஆகும் கருத்துள் இருந்திடின்
காணலும் ஆகும் கலந்து வழிசெயக்
காணலும் ஆகும் கருத்துற நில்லே.

பொருள் : சத்தி உயிரோடு கலந்து நின்று உயிர்களுக்குச் செய்யும் உதவியைக் காணலாம். அவளை அடைய வேண்டும் என்ற ஒரே விருப்புடன் கூடி நிற்பவரிடம் சிவபோதம் இன்மையால் காணலுமாகும். அங்ஙனம் உயிர்க்கு உயிராக இருக்கும் அவள் வழியே உயிர்கள் தொழிலாற்றுவதைக் காணலாகும். ஆகையால் அவளிடம் என்றும் பிரியாத வண்ணம் கருத்துப் பொருந்தி நிற்பாயாக.

1353. நின்றிடும் ஏழு புவனமும் ஒன்றாகக்
கண்டிடும் உள்ளம் கலந்தெங்கும் தானாகக்
கொண்டிடும் வையம் குணம்பல தன்னையும்
விண்டிடும் வல்வினை மெய்ப்பொரு ளாகுமே.

பொருள் : சாதகர்க்கு ஏழுலகமும் ஒன்றாகக் கலந்து விளங்கும் எல்லா உயிர்களிடமும் பொருந்தித் தானாகக் காண்பர். பூமியிலுள்ள எல்லா இயல்புகளையும் உள்ளவாறு அறிவர். உயிர்கள் வலிய எய்திய வினைகளை விலக்கும் உண்மைப் பொருளாகவும் நிற்பர்.

1354. மெய்ப்பொருள் ஒளமுதல் ஹெளவது ஈறாக்
கைப்பொரு ளாகக் கலந்தெழு சக்கரம்
தற்பொரு ளாகச் சமைந்தமு தேஸ்வரி
நற்பொரு ளாக நடுவிருந் தாளே.

பொருள் : உண்மைப் பொருளாகிய ஒள முதல் ஹெள ஈறாகவுள்ள எழுத்துக்கள் விளக்கமாக அமைந்த சக்கரத்தில் சிவம் விளங்க எழுந்தருளிய அமுதேஸ்வரி நன்மையைத் தரும் பொருளாக உடலின் நடுவில் இருந்தாள்.

1355. தாதளதின் உள்ளே சமைந்தமு தேஸ்வரி
காலது கொண்டு கலந்துற வீசிடில்
நாளது நாளும் புதுமைகள் கண்டபின்
கேளது காயமும் கேடில்லை காணுமே.

பொருள் : முன் மந்திரத்தில் சொன்னவாறு மூலாதாரம் முதல் பிரமந்திரம் வரை சோதியாக விளங்கும் அமுதேஸ்வரியுடன் மூல வாயுவை மேலே கொண்டு வந்து பொருந்தும்படி செய்யின் நாள்தோறும் புதுமைகளைக் கண்டபின் சாதரது உறவாகிய உடலுக்கு அழிவில்லையாம்.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் - Page 2 Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Mon Mar 26, 2012 3:42 pm

1356. கேடில்லை காணும் கிளரொளி கண்டபின்
நாடில்லை காணும் நாண்முதல் அற்றபின்
மாடில்லை வரும்வழி கண்டபின்
காடில்லை காணும் கருத்துற்று இடத்துக்கே.

பொருள் : கெடாது நிலைத்திருக்கும் திருவருள் ஒளியைக் கண்டபின் நாடு முதலிய வேற்றுமை இல்லை. கால வரையறையைக் கடந்தபின் முன்பின் கீழ்மேல் என்ற இடப்பாகுபாடுகளும் இல்லை. திருவருள் கைவந்து எய்தச் சீலம் முதலிய நானெறிகளைக் கண்டபின் பிறவித் துன்பங்கள் உளவாகா. ஆதலின் திருவருள் இடத்தில் உள்ளன்பபைச் செலுத்துவாயாக.

1357. உற்றிடம் எல்லாம் உலப்பில்பா ழாக்கிக்
கற்றிடம் எல்லாம் கடுவெளி யானது
மற்றிடம் இல்லை வழியில்லை தானில்லைச்
சற்றிடம் இல்லை சலிப்பற நின்றிடே.

பொருள் : தான் வந்துற்ற இடமாகிய உலகமெல்லாம் தோன்றாதவாறு பாழாக்கி அவ்வுலகத்தில் கண்டறிந்த யாவும் வெட்ட வெளியாயிற்று தானே எங்கும் நிறைந்திருத்ததலின் வேறு இடமில்லை. ஆதலின் சஞ்சரித்தலுக்குரிய இடம் சிறிதும் இல்லை. ஆதலின் அசையாது அனுபவத்தில் நிலைபெறுவாயாக. ஆருயிர் திருவருள் வலத்தால் சிவமாந்தன்மை எய்தும். அப்போதுள்ள நிலையாகும் இது.

1358. நின்றிடும் ஏழ்கடல் ஏழ்புவி எல்லாம்
நின்றிடும் உள்ளம் நினைத்தவை தானே
நின்றிடும் சத்தி நிலைபெறக் கண்டிட
நின்றிடும் மேலை விளக்கொளி தானே.

பொருள் : சாதகர்க்கு ஏழ்கடலும் முன் நிற்கும். ஏழு உலகங்களும் முன்நிற்கும் மனத்தினால் நினைத்தவை எல்லாம் இவன் முன்னே வந்து நிற்கும். சத்தி தன்னிடத்து நிலை பெறக் காண்பவர்க்கு சிரசின் மேல் விளங்கும் ஒளிகள் அமைந்து நிற்கும். அண்டத்தில் உள்ளவற்றை யெல்லாம் பிண்டத்தில் காணலாம் என்கிறார்.

1359. விளக்கொளி ஸெளமுதல் ஈறா
விளக்கொளி சக்கரம் மெய்ப்பொரு ளாகும்
விளக்கொளி யாகிய மின்கொடி யாளை
விளக்கொளி யாக விளங்கிடு நீயே.

பொருள் : விளக்கு கின்ற ஒளியாக விளங்கும் சௌ முதல் ஒள ஈறாக வுள்ள பீசங்களை யுடைய நவாக்கிரி சக்கரம் உண்மைப் பொருளாகும். அதில் விளங்கும் மின்கொடி போன்றவளை விளங்குகின்ற ஞானத்தை உடையவனாகி அறிந்து நீ விளங்குவாயாக.

1360. விளங்கிடு மேல்வரு மெய்ப்பொருள் சொல்லின்
விளங்கிடு மெல்லிய லானது வாகும்
விளங்கிடு மெய்நின்ற ஞானப் பொருளை
விளங்கிடு வார்கள் விளங்கினர் தானே.

பொருள் : இதனால் விளங்கும் மேல்வருகின்ற உண்மையை உணர்த்தப் புகுந்தால் எங்கும் விளங்கும் சத்தியேயாகும் இவ்வாறு விளங்குகின்ற உண்மை ஞானப்பொருளை உணர்ந்தவரே உணர்ந்தவராவர்.

1361. தானே வெளியென எங்கும் நிறைந்தவள்
தானே பரம வெளியது வானவள்
தானே சகலமும் ஆக்கி அழித்தவள்
தானே அனைத்துள அண்ட சகலமே.

பொருள் : தானே ஆகாயம் போல உருவின்றி வியாபகமாய் நின்றவள். தானே பரம ஆகாயமாய் நின்றவள். தானே எல்லாப் பொருளுமாகி அவை அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டவள். எல்லா அண்டங்களும் தானேயானவள். சத்தியின் ஐந்தொழில் ஆற்றல் கூறியவாறு.

1362. அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருபெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தில் நின்ற கலப்பறி யார்களே.

பொருள் : அண்டங்கள் அனைத்திலும் அளத்தற்கு அருமையாக இருப்பவள். பிண்டமாகிய உடலில் ஞானம் விளங்கும் பெருவெளியைத் தனக்கு இடமாகக் கொண்டவள். ஓமம் செய்யும் ஓம குண்டத்தால் பல நன்மைகளைப்பெற்றாலும் கண்டத்துக்கு மேல் விளங்கி நிற்கும் நிலைபெற்ற கலப்பினை அறியாதவராக உள்ளனர்.

1363. கலப்பறி யார்கடல் சூழ்உலகு எல்லாம்
உலப்பறி யாருடன் ஓடுயிர் தன்னைச்
சிலப்பறி யார்சில தேவரை நாடித்
தலைப்பறி யாகச் சமைந்தவர் தானே.

பொருள் : கடல் சூழ்ந்த உலக மெல்லாம் சத்தி கலந்திருத்தலை உணரார்கள். உடலோடு கூடிய உயிர் ஒருநாள் உடலை விட்டுப்பிரியும் என்பதை அறியார்கள். சிறு தெய்வத்தை நாடினமையால் நாதத்தினை அறியார் இவ் வண்ணம் நடப்பது அவரது தலை எழுத்தாம்.

1364. தானே எழுந்த அச்சக்கரம் சொல்லிடின்
மானே மதிவரை பத்திட்டு வைத்தபின்
தேனே இரேகை திகைப்பற ஒன்பதில்
தானே கலந்த வறை எண்பத் தொன்றுமே.

பொருள் : மானே ! சுயம்புவாகத் தோன்றிய அச் சக்கரத்தைப்பற்றிச் சொல்லின் மதிக்கத் தகுந்த கோடுகள் குறுக்கும் நெடுக்குமாகப் பத்துக்கீறி அமைத்தபின், தேன் போன்றவளே ! இரேகைக்கு உட்பட்ட அறைகள் ஒன்பதாகத் தானே குறுக்கும் நெடுக்குமாக விளங்கும் அறை எண்பத் தொன்றாகும்.

1365. ஒன்றிய சக்கரம் ஓதிடும் வேளையில்
வென்றிகொள் மேனி மதிவட்டம் பொன்மையாம்
கன்றிய ரேகை கலந்திடும் செம்மையில்
என்றியல் அம்மை எழுத்தலை பச்சையே.

பொருள் : பொருந்திய சக்கரத்தைப்பற்றிச் சொல்லும் போது கட்டங்களுக்கு வெளியான மதிமண்டலம் பொன் நிறமாம். கட்டங்களில் அடிப்படையாக அமைந்துள்ள ரேகைகள் சிவப்பு நிறமாக இருக்கும். கருணையுடைய சத்தியினது அட்சரங்கள் அடைக்கும் கட்டங்கள் பச்சை நிறமாகும்.

1366. ஏய்ந்த மரவுரி தன்னில் எழுதிய
வாய்ந்தஇப் பெண்எண்பத் தொன்றில் நிரைத்தபின்
காய்ந்தவி நெய்யுள் கலந்துடன் ஓமமும்
ஆம்தலத்து ஆமுயிர் ஆகுதி பண்ணுமே.

பொருள் : பொருந்திய மரப்பட்டையில் எழுதிய இப்பெண்ணாகிய சத்தி பீசங்களை எண்பத்தோர் அறைகளில் அடைத்தபிறகு அவிசை நெய்யுடன் கலந்து ஆராய்ந்து எடுக்கப்பட்ட இடத்தினின்று ஓமம் செய்தபின் பிராணாகுதியும் செய்க. அவிசு உப்பின்றி வெண் பொங்கல் நமசிவய மந்திரத்தை எழுத வேண்டுமென்று கூறுவாரும் உளர்.

1367. பண்ணிய பொன்னைப் பரப்பற நீபிடி
எண்ணிய நாட்களில் இன்பமும் எய்திடும்
நண்ணிய நாமமும் நான்முகன் ஒத்தபின்
துண்ணென நேயநற் நோக்கலும் ஆமே.

பொருள் : இயந்திரத்தில் அமைக்கப்பட்ட பொன்னை யொத்த சத்தியை நிதானமாக நீ சிக்கெனப் பற்றுக. தியானிக்கத் தொடங்கிய நாளிலேயே இன்பம் உண்டாகும். பொருந்திய புகழும் யாக கர்த்தாவாகிய பிரமனை ஒத்த பிறகு விரைவில் நேயப் பொருளாகிய சிவத்தொடு நன்றாகச் சேர்தலுமாகும்.

1368. ஆகின்ற சநதனம் குங்குமம் கத்தூரி
போகின்ற சாந்து சவாது புழுகுநெய்
ஆகின்ற கற்பூரம் ஆகோ சனநீரும்
சேர்கின்ற ஒன்பதும் சேரநீ வைத்திடே.

பொருள் : அரைத்த சந்தனச் சாந்து குங்குமப்பூ, கஸ்தூரி, மணம் பரவுகின்ற பல வாசனைகளின் கூட்டு, சவ்வாது, புனுகு, நெய் ஆகின்ற பச்சைகற்பூரம், பசுவில் கோரோசனை, சேர்க்கின்ற ஒன்பது பொருள்களையும் ஒன்றுசேர்த்த நீர் சக்கரத்துக்குச் சாத்துவாயாக. (1) குங்குமம், (2) கத்தூரி (3) சாந்து (4) சவ்வாது (5) புழுகு (6) நெய் (7) கற்பூரம் (B) கோரோசனம் (9) நீர்.

1369. வைத்திடும் பொன்னுடன் மாதவம் நோக்கிடில்
கைச்சிறு கொங்கை கலந்தெழு கன்னியைத்
தச்சிது வாகச் சமைந்தஇம் மந்திரம்
அர்ச்சனை ஆயிரம் ஆயிரம் சிந்தியே.

பொருள் : சத்தியோடு மனத்தை வைக்கும் தவத்தைச் செய்வதால் உள்ளே எழுகின்ற முதிராத இளங் கொங்கையுடைய வாலைப் பெண்ணைப் பொருந்தி நவாக்கரியாக விளைந்த இம் மந்திரத்தை ஆயிரம் கணக்கான உரு சிந்திப்பாயாக (தச்சு - வசியம்)

1370. சிந்தையின் உள்ளே திகழ்தரு சோதியாய்
எந்தை கரங்கள் இருமூன்றும் உள்ளது
பந்தமா சூலம் படைபாசம் வில்லம்பு
முந்தை கிலீம்எழ முன்னிருந் தாளே.

பொருள் : மனத்தில் விளங்குகின்ற ஒளி வடிவான எம் தாயும் தந்தையுமாகிய நவாக்கரி தேவிக்குக் கைகள் ஆறு உள்ளன. அவற்றில் மழு, சூலம், தோட்டி, பாசம், வில்அம்பு, ஆகிய ஆயுதங்களுடன் முதல் கிலீம் பீசத்தையுடைய தேவி உபாசனை முன்பு வெளிப்படுவாள். (மழு-தீப்பந்தம்)

1371. இருந்தனம் சத்திகள் அறுபத்து நால்வர்
இருந்தனர் கன்னிகள் எண்வகை எண்மர்
இருந்தனர் சூழ எதிர்சக் கரத்தே
இருந்த கரம்இரு வில்லம்பு கொண்டே.

பொருள் : யோகினி சத்திகள் அறுபத்து நால்வர் இருந்தனர். கன்னிகள் எண்மர் இருந்தனர். இரு கைகளிலும் வில்லும் அம்பும் கொண்டு, யோகினி சத்திகள் சக்கரத்தை நோக்கியவராய்ச் சூழ இருந்தனர்.

1372. கொண்ட கனகம் குழைமுடி யாடையாய்க்
கண்டஇம் மூர்த்தம் கனல்திரு மேனியாய்ப்
பண்டமர் சோதிப் படரிதழ் ஆனவள்
உண்டு அங்கு ஒருத்தி உணரவல் லாருக்கே.

பொருள் : பொன்னாலாகிய காதணி, கிரீடம், ஆடை முதலியவைகளுடன் கண்ட இம்மூர்த்தல் கனல் திரு மேனியாய் பழமையாகவே சோதியைத் தனது இருப்பிடமாகக் கொண்டு விளங்குபவள் என்று அறிவார்க்கு வெளிப்பட்டு அருள்வாள். கண்ட இம்முத்தம் எனவும் பாடம்.

1373. உணர்ந்திருந் துள்ளே ஒருத்தியை நோக்கில்
கலந்திருந்து எங்கும் கருணை பொழியும்
மணந்தெழும் ஓசை ஒளியது காணும்
தணந்தெழு சக்கரம் தான்தரு வாளே.

பொருள் : இவ் வண்ணம் அறிந்து மனத்தினுள்ளே ஒப்பற்ற சத்தியைத் தரிசித்தால் அவள் எவ்விடத்தும் நீக்கமற நிறைந்த கருணை பொழிவாள். பின் எங்கும் கலந்துள்ள நாதமும் ஒளியும் ஆகிய பிரணவம் தோன்றும். உடலைத் தாண்டிய ஊர்த்துவ சகஸ்ரதளம் விளங்க அருள் செய்வாள். தணந்து-நீங்கி, (அஃதாவது சக்கரத்தினின்றும் வெளிப்பட்டு.)

1374. தருவழி யாகிய தத்துவ ஞானம்
குருவழி யாகும் குணங்களுள் நின்று
கருவழி யாகும் கணக்கை அறுத்துப்
பெருவழி யாக்கும் பேரொளி தானே.

பொருள் : பேரொளிப் பிழம்பாகிய பராசத்தி, உண்மையை விளக்கும் தத்துவ ஞானத்தைச் சிவர்களின் குருமண்டலத்திலிருந்து விளங்கும்படி செய்வாள். சீவர்களிடம் இறைமைக் குணங்கள் விளங்கும்படி நின்று கருவின் வழிப்பட்டுப் பிறக்கும் செயலை அகற்றி, பெரிய வழியாகிய வீட்டு நெறியை அருளுவாள்.

1375. பேரொளி யாய பெரிய பெருஞ்சுடர்
சீரொளி யாகித் திகழ்தரு நாயகி
காரொளி யாகிய கன்னிகை பொன்னிறம்
பாரொளி யாகிப் பரந்துநின் றாளே.

பொருள் : பேரொளிப் பிழம்பாகிய பெருங் சுடராய் மேலான ஒளியாகி விளங்குகின்ற தலைவி கருமையான ஒளி போன்ற கன்னியாகிப் பொன்னிறத்தோடு பூமி தத்துவத்தில் ஒளியாக எங்கும் விரிந்து நின்றாள்.

1376. பரந்த கரும்இரு பங்கயம் ஏந்திக்
குவிந்த கரம்இரு கொய்தளிர்ப் பாணி
பரிந்தருள் கொங்கைகள் முத்தார் பவளம்
இருந்தநல் லாடை மணிபொதிந் தன்றே.

பொருள் : அம்மையின் மேலே தூக்கிய இருகரங்களில் தாமரையும் குமுதமும் ஏந்தி அபய வரதமாகிய இருகரங்களும் கொய்கின்ற தளிர்போலும் அழகுடையனவாய் விரும்பியருளும் தனங்கள் முத்தும் பவளமும் நிறைந்து நல்ல மணி பொதிந்த ஆடையுடன் விளங்கும் அன்றே.

1377. மணிமுடி பாதம் சிலம்பணி மங்கை
அணிபவள் அன்றி அருளில்லை யாகும்
தணிபவர் நெஞ்சினுள் தன்னருள் ஆகிப்
பணிபவர்க்கு அன்றோ பரிகதி யாமே.

பொருள் : மாணிக்கம் பதித்த திருமுடியும் சிலம்பணிந்த திருவடியும் உடைய மங்கை செந்நிறப் பொருள்கள் அணிவதன்றிக் கருமை நிறம் வாய்ந்த பொருள்கள் அணிபவள் அல்லள். பேரன்பு பூண்டு ஒழுகும் மெய்யடியார் நெஞ்சினுள் அருளால் விளங்கித் தோன்றுவள். தொழுது வணங்கும் தொண்டர்க்குத் திருவடிப் பேறு நல்குவள்.

1378. பரந்திருந்து உள்ளே அறுபது சத்தி
கரந்தன கன்னிகள் அப்படிச் சூழ
மலர்ந்திரு கையின் மலரவை ஏந்திச்
சிறந்தவர் ஏத்தும் சிறீம்தன மாமே.

பொருள் : சக்கரத்தின் பரந்த இடங்களின் உள்ளே ஆற்றல்கள் அறுபதும் காணப்படும் ஆற்றல்கள் - சத்திகள். திருவருட் கன்னிகள் எண்மரும் சூழ மறைந்திருப்பர். விரிந்த இரு கைகளிலும் தாமரையும் குமுதமும் தாங்குவள். சிறந்த தொண்டர்கள் ஓதும் சிரீம் என்னும் வித்தெழுத்துத் திருவடிச் செல்வத்தை நல்கும்.

1379. தனமது வாகிய கையலை நோக்கி
மனமது ஓடி மரிக்கிலோர் ஆண்டில்
கனமவை யற்றுக் கருதிய நெஞ்சம்
தினகரன் ஆரிட செய்திய தாமே.

பொருள் : திருவருட் செல்வமாகிய அம்மையை மறவா மனத்தான் திரு ஐந்தெழுத்து ஓதி நோக்கினால் மன அடக்கம் எளிதாக வந்து வாய்க்கும். அடங்கிய மனத்துடன் ஓராண்டு பயின்றால் ஆசைப் பளுவாகிய பற்று நீங்கித் திருவருளால் எண்ணி எல்லாம் கைகூடும். சிவச் சுடராம் தினகரனார் திருவடிப்பேறே அவர் விழையும் செய்தியாகும்.

1380. ஆகின்ற மூலத்து எழுந்த முழுமலர்
போகின்ற பேரொளி யாய மலரதாய்ப்
போகின்ற பூரண மாக நிறைந்தபின்
சேர்கின்ற செந்தழல் மண்டல மானதே.

பொருள் : மூலத்திடத்துத் தோன்றும் பெரிய தாமரைமலர் திருவருள் ஆற்றலாகிய அம்மை வீற்றிருந்தருள வாய்ந்த நறுமலர். அம்மலரின்கண் ஆருயிர்புரியும் அன்பிற்குத் தக்கவாறு திருவருள் பெருகும் பெருகியபின் செந்தழல் மண்டலமாம் சிவத்தின் திருவடியைச் சேர்ப்பிக்கும்.

1381. ஆகின்ற மண்டலத்து உள்ளே அமர்ந்தவள்
ஆகின்ற ஐம்பத்து அறுவகை யானவள்
ஆகின்ற ஐம்பத்து அறுசத்தி நேர்தரு
ஆகின்ற ஐம்பத்து அறுவகை சூழலே.

பொருள் : மேற்கூறிய இச்சுடர் மண்டலத்துள்ளே விரும்பி உறைபவள் திருவருள் அம்மை. உயிரும் மெய்யுமாம் ஐம்பத்தோர் எழுத்தும் வித்தெழுத்து ஐந்தும் ஆகிய ஐம்பத்தாறு எழுத்துக்களையும் இயக்குபவளும் அவளே. அவற்றை இயக்கும் ஆணை யளும் அவளே. அலைகளை இயக்கும் அதிதேவதைகளுக்கு நடுவில் இருப்பவளும் அவளே.

1382. சூழ்ந்தெழு சோதி சுடர்முடி பாதமாய்
ஆங்கணி முத்தம் அழகிய மேனியும்
தாங்கிய கையவை தார்கிளி ஞானமாய்
ஏந்து கரங்கள் எடுத்தமர் பாசமே.

பொருள் : சுடர்போன்ற முடியும் பாதமும் எங்கும் பரந்தெழுகின்ற சோதியாய் அவ்விடத்து முத்துப்போன்ற வெண்ணிற மேனியை உடையவளாய்த் தாங்கிய கைகளில் மஞ்சள் வரை யையுடைய பைங்கிளியும் ஞானமுத்திரையுமாக மேல் ஏந்திய கைகளில் பாசமும் அங்குசமும் கொண்டு விளங்குவாள்.

1383. பாசம தாகிய வேரை யறுத்திட்டு
நேசம தாக நினைத்திரும் உள்முளே
நாசம தெல்லாம் நடந்திடும் ஐயாண்டில்
காசினி மேலமர் கண்ணுதல் ஆகுமே.

பொருள் : அம்மையின் திருவருளால் பாசமாகிய பற்றுக்கள் அனைத்தையும் அறுத்திட்டுப் பேரன்பால் திருவடியை இடையறாது நெஞ்சுளே நினைந்திரும். இப்பயிற்சி ஐந்தாண்டு நிறைவதன்முன் தீமைகள் அனைத்தும் தாமே அகன்றொழியும். நிலவுலகில் கண்ணுதல் திருவருள் கைவரப்பெற்று மெய்யடியாராகத் திகழ்வீர்.

1384. கண்ணுடை நாயகி தன்னரு ளாம்வழி
பண்ணுறு நாதம் பகையற நின்றிடில்
விண்ணமர் சோதி விளங்க ஹிரீங்கார
மண்ணுடை நாயகி மண்டல மாகுமே.

பொருள் : பராசத்தியின் அருளைப் பெறும் வழியாகிய தடையற்ற நாத தரிசனம் தன்னுள் அமையுமாகில் ஆகாயமண்டலத்தில் உள்ள சோதி விளங்க ஹிரீங்காரப் பீசத்துக்குரிய சத்தி மண்டலம் அமையும். (வனப்பாற்றல் - பராசத்தி. நடப்பாற்றல் - திரோதான சத்தி.)

1385. மண்டலத்து உள்ளே மலர்ந்தெழு தீபத்தைக்
கண்டகத்து உள்ளே கருதி யிருந்திடும்
விண்டகத்து உள்ளே விளங்கி வருதலால்
தண்டகத்து உள்ளவை தாங்கலும் ஆமே.

பொருள் : நவாக்கரி சக்கரமாகிய ஒளி மண்டலத்துள் மிக்கு எழுகின்ற விழுச்சுடராகிய அம்மையை அருளால் கண்டு நெஞ்சுள்ளே இடையறாது நினைமின். அவ் அம்மையின் திரு அருளால் களங்க மொழியும். மாசு அகற்றி அம்மை விளங்கி வருதலால் நடு நாடியினுள் அம்மையுடன் ஆருயிரும் விளங்கித் தோன்றும்.

1386. தாங்கிய நாபித் தடமலர் மண்டலத்து
ஓங்கி எழுங்கலைக்கு உள்ளுணர் வானவள்
ஏங்க வரும்பிறப்பு எண்ணி அறுத்திட
வாங்கிய நாதம் வலியுடன் ஆகுமே.

பொருள் : தாங்கிய விசாலமான உந்திக் கமலத்து ஓங்கி மேலே எழுகின்ற பிரணவத்துக்கு உணர்வாக உள்ளவள் வருந்தவரும் பிறவியை நினைத்து நீக்கி விட. அடங்கியிருந்த நாதம் வலிமையுடன் மேலோங்கி விளங்கும் நாபித் தடமலர் (மண்டலம் - மணிபூரகம். ஓசைமெய் - நாத தத்துவம்)

1387. நாவுக்கு நாயகி நன்மணி பூணாரம்
பூவுக்கு நாயகி பொன்முடி யாடையாம்
பாவுக்கு நாயகி பாலொத்த வண்ணத்தள்
ஆவுக்கு நாயகி அங்கமர்ந் தாளே.

பொருள் : நல்ல மணிகளை ஆபரணமாகவுடைய வாகீசுவரியும் பொன்முடியும் பொன்னாடையும் தரித்த இலக்குமியும் கவிதை பாடும் ஆற்றலை அளிக்கும் வெண்ணிற ஒளியில் விளங்கும் சரஸ்வதியும் ஆன்மாக்களின் நாயகியுமான மனோன்மணி சகஸ்ரதளத்தில் எழுந்தருளியிருந்தாள்.

1388. அன்றிரு கையில் அளந்த பொருள்முறை
இன்றிரு கையில் எடுத்தவெண் குண்டிகை
மன்றது காணும் வழியது வாகவே
கண்டுஅங்கு இருந்தவர் காரணி காணுமே.

பொருள் : சத்தியை வழிபடுமுன் இடைகலை பிங்கலையால் வெளியே சென்று பொருளை அளந்த முறையாக, சத்தியை வழிபட்டபின் இவ்விரண்டுமே வெளிச்செல்லாது இரண்டு வெண்ணிற அமுதகலசங்களாக, சிற்றம்பலத்தைத் தரிசிக்க வழியாவதை அறிந்து அங்கு இருந்தவர் தத்துவங்களை இயக்கிக் கொண்டிருக்கும் காரணியைக் காண்பவர் ஆவர்.

1389. காரணி சத்திகள் ஐம்பத்து இரண்டெனக்
காரணி கன்னிகள் ஐம்பத்து இருவராய்க்
காரணி சக்கரத்து உள்ளே கரந்தெங்கம்
காரணி தன்னருள் ஆகிநின் றாளே.

பொருள் : காரணிகளாகிய அட்சரசத்திகள் ஐம்பத்திரண்டென காரணியாக அவற்றை இயக்கும் கன்னிகள் ஐம்பத்து இருவராக காரணி விளங்கும் சிற்றம்பலத்தில் வெளிப்பட்டும் மற்றைய தத்துவங்களில் மறைந்தும் இருந்து, காரணி தன் அருளாலே சீவர்களுக்கு வெளிப்பட்டு நின்றாளே.

1390. நின்றஇச் சத்தி நிலைபெற நின்றிடில்
கண்டஇவ் வன்னி கலந்திடும் ஓராண்டில்
கொண்ட விரதநீர் குன்றாமல் நின்றிடின்
மன்றினில் ஆடும் மணியது காணுமே.

பொருள் : சர்வ காரணியாக விளங்கும் இச்சத்தியை சகஸ்ரதளத்தில் நிலைபெறக் கண்டு, ஓராண்டுச் சாதனையில் ஒளிமயமான பராசத்தி உன்னை விட்டு அகலாமல் இருப்பாள். நீங்கள் எடுத்துக் கொண்ட விரதம் குறையாமல் இருப்பின் பிறகு பரம ஆகாயத்தில் விளங்கும் சிவ சூரியனைக் காணலாம்.

1391. கண்டஇச் சத்தி இருதய பங்கயம்
கொண்டஇத் தத்துவ நாயகி யானவள்
பண்டையவ் வாயுப் பகையை அறுத்திட
இன்றென் மனத்துள் இனிதிருந் தாளே.

பொருள் : திருவருள் அம்மை நான்காம் நிலையாகிய நெஞ்சத் தாமரையின்கண் வீற்றிருந்தருள்வாள். அங்ஙனம் வீற்றிருந்தருளப் பட்டவர் அவள் தம் அருள்துணையால் நான்காம் பூதமாகிய காற்றினை வெல்லுவர். அம்மை உள்ளத்தின் கண் உயிர்க்கு உயிராய் இனிது இருந்தனள்.

1392. இருந்தஇச் சத்தி இருநாலு கையில்
பரந்தஇப் பூங்கிளி பாச மழுவாள்
கரந்திடு கேடதும் வில்லம்பு கொண்டங்கு
குரந்தங்கு இருந்தவள் கூத்துகந் தாளே.

பொருள் : இந்த சத்தி தனது எட்டுக் கைகளிலும் விரிந்த பூ, கிளி, பாசம், மழு, வாள், தடுக்கும் தன்மையுள்ள கேடயம், வில், அம்பு, ஆகியவைகளைத் தாக்கி, ஆரவாரத்துடன் இருந்து கூத்தையும் விரும்பி நடித்தாள். 1. பத்மம் - விவேகம், 2. கிளி - நாதத்தொனி, 3. பாசம்-ஏகாக்கிரகசித்தம் உடைமையில் ஆசை. 4. மழு-ஒளி, 5. வாள் - அதர்ம நாசகம், 6. கேடயம் - தீமையைத் தாங்கி நிற்றல். 7. வில் - ஆத்மரூபலட்சியம், 8. பாணம் - சிவாத்ம ஐக்கிய பாவனை. இவை சத்தி நடனத்தின் தத்துவார்த்தமாகும்.

1393. உகந்தனள் பொன்முடி முத்தார மாகப்
பரந்த பவளமும் பட்டாடை சாத்தி
மலர்ந்தெழு கொங்கை மணிக்கச்சு அணிந்து
தழைந்தங்கு இருந்தவள் தான்பச்சை யாமே.

பொருள் : திருவருள் அம்மை பொன்முடியையும் முத்து மாலையையும் விழைந்தவள். நிறைந்த பவழ மாலையையும் செம்பட்டையும் பூண்டவள். அண்ணாந்து ஏந்திய வனமுலைகளின் கண் கச்சுப் பூண்டவள். ஆருயிர் இன்புற்றுய்ய மலர்ந்த திருமுகத்துடன் திகழ்ந்திருந்தனள். அவள்தன் திருமேனி பச்சை நிறமாகும்.

1394. பச்சை இவளுக்குப் பாங்கிமார் ஆறெட்டு
கொச்சையார் எண்மர்கள் கூடி வருதலால்
கச்சணி கொங்கைகள் கையிரு காப்பதாய்
எச்ச இடைச்சி இனிதிருந் தாளே.

பொருள் : பச்சை நிறமுடைய இவளுக்குச் சத்திகள் நாற்பத்தெட்டும் மழலை மொழி பேசும் தோழியர் எண்மரும் எப்போதும் கூடிவருதலால் கச்சணிந்த கொங்கையோடு இருபுறமும் காவலை உடையவளாய் இளைத்த இடையினையுடையாள். இனிது வீற்றிருந்தாள்.

1395. தாளதின் உள்ளே தாங்கிய சோதியைக்
காலது வாகக் கலந்துகொள் என்று
மாலது வாக வழிபாடு செய்துநீ
பாலது போலப் பரந்தெழு விண்ணிலே.

பொருள் : மூலத்திலே தாங்கியே சோதி வடிவாகிய சத்தியை சுழுமுனை மார்க்கமாகக் கலந்துகொள் என்று விருப்பம் அவ்வாறே யாக மூலவாயுவை மேலே செலுத்தி நீ காதலனைக் கூடச் செல்லும் காதலியைப் போல ஆகாயவீதிக்குச் செல்க.

1396. விண்ணவர் நாபி இருதயம் ஆங்கிடைக்
கண்ணமர் கூபம் கலந்து வருதலால்
பண்ணமர்ந்து ஆதித்த மண்டல மானது
தண்ணமர் கூபம் தழைத்தது காணுமே.

பொருள் : புருவ நடுவின்கண் மதிமண்டலத்து அமிழ்தம் தங்கியுள்ளது அது மந்திர உருவால் மேல்வயிறு நெஞ்சம் இவ்விரண்டிற்கும் மேலிடமாகிய கழுத்தின் கண் வந்து தங்கும் அதனால் அக் கழுத்திடத்தை அமிழ்தக் கிணறு என்று அறைவர். இதனால் உடம்பகத்துள்ள ஞாயிற்று மண்டலம் குளிர்ச்சி எய்தும்.

1397. கூபத்துச் சத்தி குளிர்முகம் பத்துள
தாபத்துச் சத்தி தயங்கி வருவதால்
ஆபத்துக் கைகள் அடைந்தன நாலைந்து
பாசம் அறுக்கப் பரந்தன சூலமே.

பொருள் : அமிழ்தக் கிணற்றினுள் சத்தி தண்ணளிபொருந்திய பத்துத் திருமுகங்களோடு கூடியவள். அவளால் ஞாயிற்று மண்டலத்தின் வெப்பம் வேண்டிய அளவாக விளங்குகின்றது. ஆருயிர்கட்கு இடருற்ற பொழுதெல்லாம் அவ்இடரை யகற்றி நலமுறுத்தித் திடமுடன் வாழச் செய்யும் திருக் கைகள் இருபதென்ப. முத்தலை வேலாகிய சூலம் ஆவிகளது மும்மல அழுக்கை அகற்ற எங்கும் விரிந்து திகழ்கின்றது.

1398. சூலம்தண்டு ஒள்வாள் சுடர்பறை ஞானமாய்
வேல்அம்பு தமருகம் மாகிளி விற்கொண்டு
காலம்பூப் பாசம் மழுகத்தி கைகக்கொண்டு
கோலஞ்சேர் சங்கு குவிந்தகை எண்ணதே.

பொருள் : சூலம், தண்டு, ஒளிபொருந்திய வாள், ஒளிதரவல்ல ஞான வடிவாகிய வேல், அம்பு, தமருகம், பெருமையுள்ள கிளி, வில்தாங்கி, காலம்பூ, பாசம், மழு, கத்தி ஆகியவைகளைக் கைகளில் ஏந்தி அழுகிய சங்கு, அபயவரதம் விளங்கும் கைகளை எண்ணுவாயாக.

1399. எண்ணமர் சத்திகள் நாற்பத்து நாலுடன்
எண்ணமர் கன்னிகள் நாற்பத்து நால்வராம்
எண்ணிய பூவிதழ் உள்ளே இருந்தவள்
எண்ணிய எண்ணம் கடந்துநின் றாளே.

பொருள் : விரும்பத் தகுந்த நாற்பத்து நான்கு ஆற்றல்க் தம்மைச் சூழ வீற்றிருக்கும் அருளாற்றலர் நாற்பத்து நால்வராவர். இவர்கள் நடுவுள் கழுத்தாகிய விசுத்தியின் இடமாக வீற்றிருந்தருளும் திருவருள் அம்மை நினைப்பைக் கடந்து நீங்காது நிற்கும் நிலையினள் ஆவள்.

1400. கடந்தவள் பொன்முடி மாணிக்கத் தோடு
தொடர்ந்தணி முத்து பவளம்கச் சாகப்
படர்ந்தல்குல் பட்டாடை பாதச் சிலம்பு
மடந்தை சிறியவள் வந்துநின் றாளே.

பொருள் : திருவருள் அம்மை அழகிய பன்மணி குயின்ற பொன்னார் நன்முடியினள். மாணிக்கத் திருத்தோடு அணிந்தவள். முத்தினாலும் பவழத்தினாலும் ஆய அணி அணிந்தவள். முத்தும் பவழமும் கரையில் கோத்த கச்சுப்பூண்டவள். இடையில் பட்டாடை உடுத்தவள். திருவடிக்கண்சிலம்பு பூண்டவள். மடந்தை வடிவில் வந்து நின்றாள்.

1401. நின்ற இச் சத்தி நிரந்தர மாகவே
கண்டிடு மேரு அணிமாதி தானாகும்
பண்டைய ஆனின் பகட்டை அறுத்திட
ஒன்றிய தீபம் உணர்ந்தார்க்குண் டாமே.

பொருள் : இவ்வாறு நின்ற சத்தி இடையீடு இன்றி காணப்படும் மேருவாய் அணிமாதி சத்தியாகி பழைய சாத்திர அறிவு முதலியவற்றை அகற்றிவிடப் பொருந்திய சோதியை உணர்ந்தார்க்கு அறிவு உண்டாகும். (ஆனின் பகடு - ஆன்மாவின் பாசம்.)

1402. உண்டோர் அதோமுகம் உத்தம மானது
கண்டஇச் சத்தி சதாசிவ நாயகி
கொண்ட முகம்ஐந்து கூறும் கரங்களும்
ஒன்றிரண் டாகவே மூன்றுநா லானதே.

பொருள் : அருளோன் என்று செல்லப்படும் சதாசிவக் கடவுளின் கீழ் நோக்கிய திருமுகம் அம்மையின் திருமுகமாகும். அத் திருமுகமே சிறந்த தாகும். அவ்ஆற்றல் சேர் அம்மையே சதாசிவ நாயகி ஆவள். இத் திரு முகத்தோடு சேர்ந்து சதாசிவக் கடவுளுக்குத் துணைவியாகிய அம்மைக்கு ஐந்து திருமுகங்கள் உண்டு. ஐந்து திருமுகங்களுக்கும் பத்துத் திருக்கைகள் உண்டு (1+2+3+4=10.)

1403. நன்மணி சூலம் கபாலம் கிளியுடன்
பன்மணி நாகம் மழுகத்தி பந்தாகும்
கன்மணி தாமரை கையில் தமருகம்
பொன்மணி பூணாரம் பூசனை யானதே.

பொருள் : நல்லமணி, சூலம், கபாலம், கிளி ஆகியவற்றோடு பல மாணிக்கங்களை யுடைய பாம்பு, மழு, கத்தி, பந்து, ஆகியவையும் சத்தியின் கரங்களில் உண்டு. மாணிக்கம் போன்ற தாமரை, தமருகம், கையில் ஆம், இவைகளுடன் பொன்னாலும் மணியாலும் அலங்கரிக்கப்பட்டவள். திருக்கைகள் பத்திலும் காணப்படும் பொருள்கள் கூறப்பட்டன.

1404. பூசனைச் சத்திகள் எண்ஐவர் சூழவே
நேசவன் கன்னிகள் நாற்பத்து நேரதாய்க்
காசினிச் சக்கரத் துள்ளே கலந்தவள்
மாசடை யாமல் மகிழ்ந்திருந் தார்களே.

பொருள் : பூசனைக்குரிய திருவருள் அம்மை கன்னிப்பெண்கள் நாற்பதின்மர் சூழ வீற்றிருப்பவாள். இக்கன்னிப் பெண்களைச் சூழ ஆற்றல் மிக்க நாற்பதின்மர் சூழ்ந்திருப்பர். இவற்றிற்கு நடுவே உலகச் சக்கரம் அமைந்திருக்கும் அச்சக்கரத்துள் வழிபாடு செய்வார்க்குக் குற்றமடையாமல் அம்மை எழுந்தருளியிருப்பள். (உலகச் சக்கரம் காசினிச் சக்கரம். பூப்பிரத்தான யந்திரம்)

1405. தரத்தின் உள்ளே தங்கிய சோதியைப்
பாரத்தின் உள்ளே பரந்து எழுந்திட
வேரது ஒன்றிநின்று எண்ணு மனோமயம்
காரது போலக் கலந்தெழு மண்ணிலே.

பொருள் : பிரணவத்தினுள்ளே விளங்கிய சோதியைச் சுமையாகிய உடலில் இருந்து உடலைக் கடந்து எழுந்திட அதுவே தனக்கு ஆதாரம் என்று உணர்ந்து அதை எண்ணி மனோலயம் பெறுவார்க்கு மண்ணினின்றும் நீரை முகந்தெழும் மேகம்போல் பராசத்தி சிரசில் வெளிப்படுவாள்.

1406. மண்ணில் எழுந்த அகார உகாரங்கள்
விண்ணில் எழுந்து சிவாய நமவென்று
கண்ணில் எழுந்தது காண்பரிது அன்றுகொல்
கண்ணில் எழுந்தது காட்சிதர என்றே.

பொருள் : சுவாதிட்டானச்சக்கரத்தில் நிலை கொண்டிருந்த அகர உகாரங்கள் சகஸ்ர தளத்தை அடைந்து சிவாயநம என்று அகக் கண்ணுக்குப் புலனாகும்படி விந்து நாதங்களாக வெளிப்பட்டன. அது காண்பதற்கு அருமையானது அன்று அந் நாதம் எழுந்தது சாதகனுக்குக் காட்சி கொடுத்துத் தன் திருவடியில் வைத்துக் கொள்ளவேயாம்.

1407. என்றுஅங்கு இருந்த அமுத கலையிடைச்
சென்றுஅங்கு இருந்த அமுத பயோதரி
கண்டம் கரம்இரு வெள்ளிபொன் மண்ணடை
கொண்டங்கு இருந்தது வண்ணம் அமுதே.

பொருள் : புருவ மத்தியில் காணப்படும் திங்கள் மண்டலத்துள் வீற்றிருந்து அருளும் அம்மை அமுத முலையினள். அவளுடைய திருக்கழுத்து வெண்ணிறம், திருக்கை பொன்னிறம் அத் திருக்கையினிடத்து மண்ணலாகிய கமண்டலம் விளங்கும். அத்திருவருள் அம்மையின் நிறம் வெண்மை நிறமாகும். (வெள்ளி - சுக்கிலம், பொன் - சுரோணிதம் என்று பொருள் கொள்வாரும் உளர்.)

1408. அமுதம தாக அழகிய மேனி
படிகம தாகப் பரந்தெழும் உள்ளே
குமுதம தாகக் குளிர்ந்தெழு முத்துக்
கெமுதம தாகிய கேடிலி தானே.

பொருள் : நீலோற்பலமும் முத்தும் கலந்த குளிர்ச்சி பொருந்திய ஒளியில் ஆனந்த மயமாக விளங்கும் அழிவில்லாத பரமேஸ்வரி அமுதம் போன்ற அழகிய மேனியோடு வெண்ணிற ஒளியாக வெளிப்பட்டருள்வாள்.

1409. கேடிலி சத்திகள் முப்பத் தறுவரும்
நாடிலி கன்னிகள் நால்ஒன் பதின்மரும்
பூவிலி பூவிதழ் உள்ளே இருந்தவர்
நாளிலி தன்னை நணுகிநின் றார்களே.

பொருள் : கேடில்லாத முப்பத்தாறு சத்திகளும் நாடுதற்கு அருமையான முப்பத்தாறு தோழியர்களும், பிறப்பில்லாதவர்களும் சூழ இருப்பவர்களுமாகிய இவர்கள் காலவரையறையைக் கடந்து நின்ற அம்மையைச் சூழ நின்றார்கள் (பூவிலி - தோற்றம் இல்லாதவள்.)

1410. நின்றது புந்தி நிறைந்திடும் வன்னியும்
கண்டது சோதி கருத்துள் இருந்திடக்
கொண்டது ஓராண்டு கூடி வருகைக்கு
விண்டஒள காரம் விளங்கின அன்றே.

பொருள் : நெஞ்சத் தாமரையின்கண் எஞ்சாது விளங்கும் சிவபெருமானும், மேலே கூறிய திருவருள் அம்மையைச் சுடர் உருவாய் அன்பர்கள் உள்ளத்து அமைத்திடலால் அவர்கட்கு ஓர் ஆண்டில் கைகூடி அருள்வன். அக்காலத்து ஒளகாரம் முதலிய வித்தெழுத்துக்கள் விளங்கும் என்க. (வன்னி - சிவன். கூடிவருகை - சித்தியாதல்.)

1411. விளங்கிடு வானிடை நின்றலை எல்லாம்
வணங்கிடு மண்டலம் மன்னுயி ராக
நலங்கிளர் நன்மைகள் நாரணன் ஒத்துச்
சுணங்கிடை நின்றவை சொல்லலும் ஆமே.

பொருள் : விளங்குகின்ற வானத்தில் நிலைபெற்றுள்ள அண்டங்களில் வாழும் உயிர்கள் எல்லாம் மண்ணுலகில் வாழும் உயிர்களைப் போலச் சாதகரை வந்து வணங்கும். நாராயணனை ஒத்துப் பெறும் இன்பங்களைத் துன்பம் தரும் நோய் நிறைந்த இங்கு இருந்து சொல்ல முடியுமா ? முடியாது.

1412. ஆமே ஆதோமுக மேலே அமுதமாய்த்
தாமே உகாரம் தழைத்தெழும் சோமனும்
காமேல் வருகின்ற கற்பக மானது
பூமேல் வருகின்ற பொற்கொடி யானதே.

பொருள் : கீழ் நோக்கியுள்ள திங்கள் மண்டிலத்தின் மேல் அமிழ்தமயமாய்த் தோன்றும் எழுத்து உகரமாகும். அதன் கண்திங்களும் செழித்து விளங்கும். முற்கூரிய கடம்பவனத்தில் எழுந்தருளியுள்ள திருவருளம்மை நெஞ்சத்தாமரையில் எழுந்தருளும் அழகிய கொடி போலும் அம்மையாகும். (கா - சோலை; கடம்பவனம்.)

1413. பொற்கொடி யாளுடைப் பூசனை செய்திட
அக்களி யாகிய ஆங்காரம் போயிடும்
மற்கட மாகிய மண்டலம் தன்னுள்ளே
பிற்கொடி யாகிய பேதையைக் காணுமே.

பொருள் : பொற்கொடி போன்ற பராசத்தியை வழிபட்டால், அச்செருக்கினைத் தரும் அகங்காரம் போய்விடும். நிலை பெற்ற பெருவெளியாகிய பரம ஆகாயத்தில், பின்னியகொடி போல் விளங்கும் பேதையைக் காணலாம். சத்தி வழிபட்டால் அகங்காரம் நீங்கும். மற்கடம் - மன்கடம் - நிலைபெற்ற பெருவெளி.

1414. பேதை இவளுக்குப் பெண்மை அழகாகும்
தாதை இவளுக்குத் தாணுவுமாய் நிற்கும்
மானத அவளுக்கு மண்ணும் திலகமாய்
கோதையர் சூழக் குவிந்திடங் காணுமே.

பொருள் : பேதையாகிய பராசக்திக்கு எல்லா உயிர்களையும் பேணும் பெண்மையே அழகாகும். இவ் வம்மைக்குச் சிவம் தந்தையாகும். மாதரசியாகிய இவளுக்கு மண்ணுலகம் சிறிய திலகமாய்ப் பல சத்திகள் சூழ மேலே குவிந்த இடத்தில் விளங்குவாள்.

1415. குவிந்தனர் சத்திகள் முப்பத் திருவர்
நடந்தனர் கன்னிகள் நாலெண்மர் சூழப்
பரந்திதழ் ஆகிய பங்கயத் துள்ளே
இருந்தனள் காணும் இடம்ல கொண்டே.

பொருள் : கூடியிருக்கும் ஆற்றல் செல்விகள் முப்பத்திருவர், இவர்கட்கு அகமாகச் சூழ்ந்துவரும் கன்னிப் பெண்கள் முப்பத்திருவர் ஆவர். இவர்கள் அனைவரும் சூழ்ந்துவர இடப்பால் திகழும் விரிந்த இதழ்களையுடைய நெஞ்சத்தாமரையின்கண் வீற்றிருந்தருளும் அம்மை மூலமுதலாகிய ஆறுநிலைக் களங்களையும் கொண்டு தோன்றியருள்வாள்.

இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் - Page 2 Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Mon Mar 26, 2012 3:47 pm

1416. கொண்டங்கு இருந்தனர் கூத்தன் ஒளியினைக்
கண்டங்கு இருந்தனர் காரணத்து உள்ளது
பண்டை மறைகள் பரந்தெங்கும் தேடுமால்
இன்றுஎன் மனத்துளே இல்லடைந்து ஆளுமே.

பொருள் : கூத்தனார் ஒளியினைக் கொண்டு அங்கு எழுந்தருளியிருக்கும் திருவருள் அம்மையை அகத்தவம் உடையோர் கண்டிருந்தனர். கூத்தனாரும் திருவருள் அம்மையாகிய சிவகாமியா ரும் கலந்த கலப்பால் உலகுடல் பொருள்கள் எல்லாம் காரியப்பட்டுத் தோற்றுகின்றன. தொன்மைச் செந்தமிழ்த் திரு நான்மறைகள் எல்லாம் அம்மையின் அடியிணையை எல்லா இடங்களிலும் தேடுகின்றன. அத்தகைய அம்மை என் உள்ளத்தைக் குடியிருப்பாகக் கொண்டு என்னை ஆண்டு அருளினள் என்க.

1417. இல்லடைந் தானுக்கும் இல்லாதது ஒன்றில்லை
இல்லடைந் தானுக்கு இரப்பது தானில்லை
இல்லடைந் தானுக்கு இமையவர் தாம்ஒவ்வார்
இல்லடைந் தானுக்கு இல்லாதுஇல் ஆனையே.

பொருள் : என்று நிலைத்த மாறாத இல்லாகிய திருவருள் அம்மையின் திருவடியைப் பெற்றவர் இல்லடைந்தவர் ஆவர். அத்தகைய திருவடி இல்லடைந்தார் யாண்டும் எவரிடத்தும் ஒன்றினையும் இரவார். அத்தகையோர்க்கு விண்ணாட்டில் வாழும் வினைப் பயன்சேர் இமையவரும் ஒப்பாகார். தாழ்ந்தவரேயாவர். அவர்கட்குக் கிடைத்தற்கரிய பொருள் என்று ஏதும் இல்லை. அதற்குக் காரணம் அவர்கள் புகலிடமாக ஆருயிர்க்குத் தலைவனாம் சிவபெருமானையே கொண்டிருத்தலான் என்க.

1418. ஆனை மயக்கும் அறுபத்து நால்தறி
ஆனை யிருக்கும் அறுபத்து நால்ஒளி
ஆனை யிருக்கும் அறுபத்து நால்அறை
ஆனையும் கோடும் அறுபத்து நாலிலே.

பொருள் : ஆன் ஆகிய உயிருடன் கலக்கும் உச்சித் தொளைக்கு மேல் சொல்லப்படும் அருளாணையாகிய நிலைக்களத்தினின்றும் மேல்நோக்கி எழுந்து விரியும் கதிர்கள் அறுபத்து நான்கு. ஓ மொழி உருவாகும் சிவபெருமான் ஆனை எனப்படுவான். ஆன்+ஐ= உயிர்கள் தலைவன் அவன் அவ் ஒளிகட்கு உள்ளொளியாக விளங்குவன். அச்சிவபெருமான் அவ்வொளிக் கதிர்களாகிய அறையில் வீற்றிருந்தருள்வன். சிவபெருமானும் மூல முதலா எழுந்து அப்பால் வரையும் செல்லும் திருவருள் ஆற்றலாகிய ஒலிக்களையும் அவ்வொலிக்கதிர்களூடு தோன்றியருளும்.

நான்காம் தந்திரம் முற்றிற்று.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் - Page 2 Empty திருமந்திரம் | ஐந்தாம் தந்திரம்

Post by இறையன் Mon Mar 26, 2012 3:49 pm

(வாதுளாகமம்)

1. சுத்த சைவம்

(இயற்கைச் செந்நெறி)

(சுத்த சைவமாவது சடங்குகளில் நில்லாது தலைவனையும் தன்னையும் தளையையும் அறிந்து, தளையின் நீங்கித் தலைவன் திருவடிச் சார்பு பெறுதல். சைவம் சுத்தசைவர், அசுத்த சைவம், மார்க்க சைவர், சுடுஞ்சுத்த சைவம் என நால்வகையாம்.)

1419. ஊரும் உலகமும் ஒக்கப் படைக்கின்ற
பேரறி வாளன் பெருமை குறித்திடின்
மேருவும் மூவுல காளி இலங்கெழும்
தாரணி நால்வகைச் சைவமும் ஆமே.

பொருள் : ஊரையும் ஊர் அடங்கிய உலகத்தையும் ஒரு சேரப் படைக்கின்ற பேரறிவாளனாகிய இறைவனது பெருமையை அளவிட்டுக் கூறப்புகின், மேருமலையும், மூவுலகங்களையும் ஆளுகின்ற இறைவனிடமிருந்து தோன்றிய பூமியும் நால்வகைச் சைவமும் ஆகிய இவற்றின் பெருமைக்கு ஒப்பாகும்.

1420. சத்தும் அசத்தும் சதசத்தும் தான்கண்டு
சித்தும் அசித்தும் சேர்வுறா மேநீத்தும்
சுத்தம் அசுத்தமும் தோய்வுறாமே நின்று
நித்தம் பரஞ்சுத்த சைவர்க்கு நேயமே.

பொருள் : அழிவில்லாததும் அழிவுடையதும் இரு தன்மையும் கலந்ததும் ஆகியவை எவை என்பதை அறிந்து, அறிவும் அறியாமையும் சேராமல் விட்டும், சுத்த மாயை, அசுத்தமாயை ஆகிய இரண்டிலும் பொருந்தாமல் நின்று, அழியாப் பொருளான பரமே பார்த்திருப்பது சுத்த சைவர்க்கு ஆகும்.

(சத்து - சிவன், அசத்து - மாயை, உடல்; சதசத்து - ஆன்மா, உயிர், சித்து - ஞானம்; அசித்து - அஞ்ஞானம்.)

1421. கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோகம்
முற்பத ஞான முறைமுறை நண்ணியே
சொற்பத மேவித் துரிசற்று மேலான
தற்பரங் கண்டுளோர் சைவசித் தாந்தரே.

பொருள் : கற்கத் தக்கனவற்றைக் கற்று, பதினாறு கலைகளையுடைய சந்திர கலைகளை அறிந்து சிவயோகம் பயின்று, அதில் முன்னாக விளங்கும் அகர உகர மகர விந்து நாதங்களின் அறிவை முறையாக அறிந்து, பிரணவ பதம் உணர்த்தும் சாந்தியதீனத கலையைப் பொருந்தி உயிரின் மாயா சார்பான குற்றத்தை விட்டு, மேலான சிவத்தைக் கண்டு உறைபவர் சைவசித்தாந்தர் ஆவார். (துரிசு - குற்றம்.)

1422. வேதாந்தம் சுத்தம் விளங்கிய சித்தாந்தம்
நாதாந்தம் கண்டோர் நடுக்கற்ற காட்சியர்
பூதாந்த போதாந்த மாதுப் புனஞ்செய்ய
நாதாந்த பூரணர் ஞானநே யத்தரே.

பொருள் : வேதாந்தமாவது சுத்த சைவ சித்தாந்தமாம். இந்நெறி நிற்போரே நாதவடிவமாகிய சிவத்தைத் தரிசித்த சலனம் அற்றவராவர். தத்துவ முடிவை ஞானமயமாகப் பண்படுத்த நாதமுடிவில் நிறைவுற்று விளங்கும் சிவம் அறியப்படு பொருளாவர். விளக்கம்; சுத்த சைவ சித்தாந்தமே வேதங்களின் முடிவு . (பூதாந்தம் - பூதங்களின் முடிவு போதாந்தம் - ஞானமுடிவு . புனம் செய்ய - ஐம்புலக் காட்டினைப் பண்படுத்த.)

2. அசுத்த சைவம் (மீ இயற்கைச் செந்நெறி)

(அசத்த சைவமானது, திருவேந்தரித்துச் சரியை கிரியையாகிய இரு நெறியில் நிற்பார் நிலையைக் கூறுவது.)

1423. இணையார் திருவடி ஏத்தும் சீரங்கத்து
இணையார் இணைக்குழை ஈரணை முத்திரை
குணமார் இணைக்கண்ட மாலையும் குன்றாது
அணைவாம் சரியை கிரியையி னார்க்கே.

பொருள் : தமக்குத் தாமே ஒப்பாகிய நூலுணர்வு, நுகர் உணர்வுகளாகிய இரண் திருவடிகளையும் தொழும் தன்மையர் உடம்பு சிறப்புடம்பாகும். அவர்கட்கு இரண்டு குண்டலங்கள் காதணியாகக் காணப் பெறும் திருநீறும், திரு ஐந்து எழுத்தும் அறிவடையாள அங்கையும், நற்பண்பு வாய்ந்த தலையினும் மார்பினுமாகிய இரண்டு சிவமணி மாலைகளும் குறையாது என்றும் பொருந்துவனவாகும். இத்தகையோர் சீலத்தர் நோன்பினர் என்று அழைக்கல் பெறுவர். (சீர் அங்கம் - சிறப்பு உடம்பு. சரியை - உடம்பினால் இறைவனை வழிபடுவது; கிரியை - உடம்பினாலும் மனத்தினாலும் வழிபடுவது.)

1424. காதுப்பொன் ஆர்ந்த கடுக்கன் இரண்டுசேர்த்து
ஓதும் திருமேனி உட்கட்டு இரண்டுடன்
சோதனை செய்து உபதேச மார்க்கராய்
ஓதி இருப்பார் ஒருசைவர் ஆகுமே.

பொருள் : காதினில் பொன்னால் செய்யப்பட்ட இரண்டு கடுக்கன்களை அணிந்து கொண்டு, சொல்லப்பட்ட சிவ வேடத்தில் இடையில் ஓர் ஆடையும் அதன்மேல் ஓர் ஆடையும் உடையராய் அத்துவா சோதனை செய்து உபதேசம் பெற்றவராய் சைவ ஆகமங்களைப் பாடம் சொல்லிக் கொண்டிருப்பவர் ஒருவகைச் சைவராவர். உட்கட்டு இரண்டுடன் என்பதற்குச் சிவமணிவடமாகிய உட்பட்டு இரண்டு என்று பொருள் கொள்வாரும் உளர். (சோதனை செய்து - அத்துவா சோதனை செய்து - இது நிர்வாண தீக்கையில் செய்யக் கூடியது.)

1425. கண்டங்கள் ஒன்பதும் கண்டவர் கண்டனர்
கண்டங்கள் ஒன்பதும் கண்டாய் அரும்பொருள்
கண்டங்கள் ஒன்பதும் கண்டவர் கண்டமாம்
கண்டங்கள் கண்டோர் கடுஞ்சுத்த சைவரே.

பொருள் : நாவலம் தீவு முதலிய நிலவுலகங்கள் ஒன்பது பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவ் ஒன்பது கண்டங்களையும் இறையுறை திருப்பதிகளாகக் கண்டு வழிபட்டு வலஞ்செய்து வந்தவர் அங்ஙனம் விளங்கும் சிவபெருமானின் அருவம் நான்கு, உருவம் நான்கு, அருவுருவம் ஒன்று ஆகிய ஒன்பது திருமேனிகளையும் கண்டவராவர். இவர்களே வேறுபட்ட பல அண்டங்களையும் அருட்காட்சியால் கண்டவராவர். இவர்கள் கடுஞ்சுத்த சைவர் என அழைக்கப்படுவர். கண்டங்கள் ஒன்பது என்பதற்கு வேறு வகையாகப் பொருள் கொள்வாரும் உளர்.

1426. ஞானி புவியெழு நன்னூல் அனைத்துடன்
மோன திசையும் முழுஎண் எண் சித்தியும்
ஏனை நிலவும் எழுதா மறைஈறும்
கோனொடு தன்னையும் காணும் குணத்தனே.

பொருள் : ஞானியராவார் பூமியில் தோன்றுகின்ற ஞான நூல்களுடன் மௌன நிலையையும் முழுமையாக எண்ணப்பட்ட அட்டமாசித்திகளையும், பிற உலகங்களின் அறிவையும் உபநிடத அறிவையும் சிவத்தையும் தன்னையும் உணர்ந்து நிற்கும் ஆற்றலுடன் விளங்குவர். (எழுதாமறை - வேதங்கள். எண்எண் சித்திகள் என்பதற்கு அறுபத்து நான்கு கலைகள் எனப்பொருள் கொள்வாரும் உளர்.)

3. மார்க்கசைவம் (மெய்யுணர்வுச் செந்நெறி)

(மார்க்க சைவமானது, சைவ மார்க்கத்தில் நின்று வேதாந்த, சித்தாந்த நுண்பொருளை உணர்ந்து, ஆன்ம போதங் கெட்டுச் சிவ போகத்தில் திளைத் திருப்பார் நிலையை விளக்குவது.)

1427. பொன்னாற் சிவசாத னம்பூதி சாதனம்
நன் மார்க்க சாதனம் மாஞான சாதனம்
துன்மார்க்க சாதனம் தோன்றாத சாதனம்
சன்மார்க்க சாதன மாம் சுத்த சைவர்க்கே.

பொருள் : பொன்கட்டிய உருத்திராக்க மாலையும் திருநீற்றுப் பூச்சாகிய சாதனமும் சிறப்புமிக்க ஐந்தெழுத்து ஓதுதலாகிய ஞான சாதனமும், துன்மார்க்கரோடு சேராமல் நல்லடியாரோடு சேர்ந்து இருத்தலாகிய சாதனமும் சுத்த சைவநெறி பற்றியவர்க்குச் சன்மார்க்க ஒழுக்கமாகும்.

1428. கேடறு ஞானி கிளர்ஞான பூபதி
பாடறு வேதாந்த சித்தாந்த பாகத்தின
ஊடுறு ஞானோ தயனுண்மை முத்தியோன்
பாடுறு சுத்தசை வப்பத்தன் நித்தனே.

பொருள் : குற்றம் நீங்கிய ஞானி ஒளிவிடுகின்ற ஞானத்திற்கு அரசாவான். துன்பமில்லா வேதாந்த சித்தாங்களிடையே தோன்றும் ஞானமுடையோன். உண்மையான முத்திப் பேற்றினை உணர்ந்தவன். மேன்மை பொருந்திய சுத்த சைவத்திலே பத்தி யுடையவன். அழிவில்லாதவன். சுத்த சைவன். வேதாந்த சித்தாந்த நுண்பொருளை அபேதமாக உணர்ந்தவன்.

1429. ஆகமம் ஒன்பான் அதிலான நாலேழு
மோகமில் நாலேழு முப்பேத முற்றுடன்
வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்ம்மையொன்று
ஆக முடிந்த அருஞ்சுத்த சைவமே.

பொருள் : ஆகமங்கள் ஒன்பது, இவ்ஒன்பது ஆகமங்களே விரிந்து இருபத்தெட்டு ஆகமங்கள் ஆயின. அவை சைவம், ரௌத்திரம், ஆரிடம் என்ற மூன்று வகையாக ஆகி, பரபரப்பற்ற வேதாந்த முடிபாம் சித்தாந்த உண்மை சுத்த சைவர்க்கு ஒன்றாக முடிந்ததாம்.

1430. சுத்தம் அசுத்தம் துரியங்கள் ஓரேழும்
சத்தும அசத்தும் தணந்த பராபரை
உய்த்த பராபரை யுள்ளாம் பராபரை
அத்தன் அருட்சத்தி யாய்எங்கும் ஆமே.

பொருள் : அசுத்தமாகிய புலம்பின்கண் நனவு கனவு உறக்கம் என்னும் மூன்றும், சுத்தமாகிய புரிவின்கண் நனவு கனவு என் இரண்டும், பேருறக்கம், உயிர்ப்படங்கல் என்னும் இரண்டும் ஆகிய ஏழும் நிலைப்பதாகிய காரணமாயையும், நிலயாததாகிய காரியமாயையும் நீங்கிய பராபரையாகிய திருவருள் ஆருயிரோடு பொருந்தியும் உயிர்க்கு உயிராகியும் நிற்பவள் ஆவள். அவளே அத்தன் அருளாற்றலாகிய அன்னையாவள். அவளே எங்கும் நிறைந்து நின்று வெற்றையும் இயக்குபவள் ஆவள். (புலம்பு - கேவலம், புரிவு - சுத்தம். ஐந்துநிலைகளாவன ; ஜாக்கிரம் - நனவு, சொப்பனம் - கனவும், சுழுத்தி - உறக்கம், துரியம் - பேருறக்கம், துரியாதீதம் உயிர்ப்படங்கள் என்பனவாம்.)

1431. சத்தும் அசத்தும் தணந்தவர் தானாகிச்
சித்தும் அசித்தும் தெரியாச் சிவலோகமாய்
முத்தியுள் ஆனந்த சத்தியுள் மூழ்கினார்
சித்தியும் அங்கே சிறந்துள தானே.

பொருள் : சத்து அசத்துக்களாகிய காரண காரிய மாயைகளை மலம் அற்றமையால் வேறுபடுத்துணரும் இயல்பு அகன்றவராவர். சிற்றுணர்வும் சட்டுணர்வும் இல்லாச் சிவன் நிறைவில் அடங்கிச் சிவனே தானாகி வீடு பேற்றின்கண் இறவாத இன்ப இறைவியுள் அடங்கினவராவர். அவர்க்குப் பெரும் பேறும் சிறந்து விளங்கும். (சிவோகம் - சிவநிறைவில் உறைவதல். சிவோகம் பாவனையில் உடல் நினைவு இல்லை தான்என்ற அறிவு இல்லை என்க. சத்தியே தானாகவுள்ள ஞானிகள் எல்லாம் வல்ல சித்தராவர் என்பதாம்.)

1432. தன்னைப் பரனைச் சதாசிவன் என்கின்ற
மன்னைப் பதிபசு பாசத்தை மாசற்ற
முன்னைப் பழமல முன்கட்டை வீட்டினை
உன்னத் தகுஞ்சுத்த சைவர் உபாயமே.

பொருள் : உண்மைச் சைவர்கள் உள்ளுற நினைத்து மேற்கொண்டு ஒழுகவேண்டிய வழி வகையான பொருள்கள் எட்டு அவையாவன; ஆருயிர், இயற்கைப் பேரறிவுப் பெரும் பொருள், அருளோனாகிய சதாசிவன், இறை, உயிர், தளை, தொன்மையாகிய ஆணவ மலம், வீடுபேறு என்பன. சுத்த சைவர் இவ் எட்டுப் பொருட்களைப்பற்றிச் சிந்திப் பதைவீடு பேற்றிற்கு உபாயமாகக் கொண்டுள்ளனர். (பதி, பசு, பாசம் - இறை, உயிர், தளை.)

1433. பூரணம் தன்னிலே வைத்தற்ற அப்போதம்
ஆரணம் அந்தம் மதித்து ஆனந் தத்தோடு
நேரென ஈராறு நீதி நெடும் போதும்
காரண மாம்சுத்த சைவர்க்குக் காட்சியே.

பொருள் : ஆருயிர், நிறைவாம் சிவத்துள் அடங்குதலாகிய முற்றுணர்வு எய்துதலும் பண்டைத் தன்முனைப்பாகிய சிற்றுணர்வு அறும். அதுவே மறை முடிவாம். பேரின்பத்துடன் கலந்து, பன்னிரண்டாம் நிலையில் பெறப்படும் சிவநுகர்வு முறையாக எய்தும். இவை யனைத்தும் சுத்த சைவர்க்குக் காட்சியாம். (ஈராறு - பன்னிரண்டு - துவாத சாந்தப் பெருவெளி)

1434. மாறாத ஞான மதிப்பற மாயோதும்
தேறாத சிந்தையைத் தேற்றிச் சிவமாக்கிப்
பேறான பாவனை பேணி நெறிநிற்றல்
கூறாகு ஞானி சரிதை குறிக்கிலே.

பொருள் : மெய் கண்டார் எல்லையற்ற என்றும் ஒருபடித் தாயிருக்கிற திருவடி யுணர்வு கைகூடுதலால் பிறப்புக்கு வித்தாம் பெரிய யோகங்களைப் பொருளாகத் தெரிய ஒட்டாது தம் உள்ளத்தைத் தெளிவித்துச் சிவனிலையமாக்குவர். முழுதுணர்பேறான சீவனையே நாடுதலாகிய பாவனைபேணி அந்நெறியில் உறைத்து நிற்றல் அறிவிற்சீலம் என்ப்படும் ஞானத்திற் சரியையாகும்.

1435. வேதாந்தங் கண்டோர் பிரமலித் தியாதரர்
நாதாந்தங் கண்டோர் நடுக்கற்ற யோகிகள்
வேதாந்தம் அல்லாத சித்தாந்தங் கண்டுளோர்
சாதா ரணமன்ன சைவர் உபாயமே.

பொருள் : வேதாந்தத்தை உணர்ந்தவர் பிரம வித்தையை அறிந்தவர் ஆவர். நாத தரிசனம் செய்தவர் நன்மைகளில் மகிழாமலும் தீமைகளில் சோர்வுறாமலும் நிற்கும் பரமஹம்சயோகிகள் ஆவர். வேதாந்தக் கொள்கைக்கு வேறான சித்தாந்த அனுபவம் உடையோர் இயற்கையை அறிந்து உபாயத்தினால் சிவத்தைச் சேர்வர். விளக்கம்; வைராக்கியத்தால் பிரமத்தை அடையலாம் என்று வேதாந்தம் கூறும். அன்பினால் சிவத்தை அடையலாம் என்று சித்தாந்தம் சிவயோகம்; பாவனையால் சிரசில் நாத தரிசனம் செய்து நாதத்தை அடைவது.

1436. விண்ணினைச் சென்றணு காவியன் மேகங்கள்
கண்ணினைச் சென்றணு காப்பல காட்சிகள்
எண்ணினைச் சென்றணு காமல் எணப்படும்
அண்ணலைச் சென்றணு காபசு பாசமே.

பொருள் : வானத்தை இடமாகக் கொண்டு பொழிகின்ற பெரிய மேகங்களும் அவ் வானத்தைப் போய் எட்டாது. கண்ணிணாற் காணப்படும் பல காட்சிப் பொருள்களும் கண்ணினைச் சென்று பொருந்தா. அவை போல நாடுதலாகிய பாவனைக்கு அப்பால் பட்ட தென்னும் சிவபெருமானாகிய அண்ணலை யான் என்னும் சிற்றறிவும் எனதென்னும் சுட்டறிவும் பசு பாசங்கள் சென்றணுகா.

1437. ஒன்றும் இரண்டும் இலதுமாய் ஒன்றாக
நின்று சமய நிராகார நீங்கியே
நின்று பராபரை நேயத்தைப் பாதத்தால்
சென்று சிவமாதல் சித்தாந்த சித்தியே.

பொருள் : பொன்னும் மணியும் போல் பொருள் ஒன்றே என்னும் தன்மையும் இருளும் ஒளியும் போல் வேறு என்னும் தன்மையும் இல்லாமல், உடலுயிர்கண் அருக்கன் அறிவொளிபோல் வேறன்மையாகிய புணர்ப்பாய் நின்று திருவருளால் அன்பு செய்யப்படும் சிவனைச் சித்தி நிபாதமாகிய திருவருள் வீழ்ச்சியால் சென்று சிவமாம் பெருவாழ்வைப் பெற்றுப் பேரின்பம் உறுதல் சித்தாந்தப் பெரும் பேறாகும்.

(ஒன்று - ஏகான்மவாதம் இரண்டு - துவிதம் ஒன்றாக நின்று - சுத்த அத்துவிதம்)
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் - Page 2 Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Mon Mar 26, 2012 3:50 pm

4. கடுஞ் சுத்த சைவம் (மெய்கண்டார் செந்நெறி)

(ஞான நிலையில் ஆடம்பரமின்றித் தான் அவனாய் நிற்கும் நிலையை எடுத்து ஓதுவது இவ் அதிகாரத்திலாம். கடுஞ் சுத்த சைவர் உபாயமான கிரியைகளை விட்டு ஞானமே பெரியதெனக் கருதிச் சாயுச்சியம் பெறுவர்.)

1438. வேடம் கடந்து விகிர்தன்தன் பால்மேவி
ஆடம் பரமின்றி ஆசாபா சம்செற்றுப்
பாடொன்று பாசம் பசுத்துவம் பாழ்படச்
சாடும் சிவபோ தகர்சுத்த சைவரே.

பொருள் : புற வேடங்களில் விருப்பமின்றி இறைவனைச் சார்ந்து, உலகியல் ஆடம்பரம் இல்லாது ஆசையையும் பற்றையும் நீத்து, பிறவித் துன்பத்தைத் தரும் பாசமும் சீவ போதமும் பாழாக, தொலைக்கும் சிவஞானம் பெற்றோரே சுத்த சைவராவர். (வேடம் - விபூதி, உருத்திராக்கம், காதணி முதலிய புறச்சாதனம் விகிர்தன் - சிவன்; ஆசாபாசம் - ஆசை, பாசம்.)

1439. உடலான ஐந்தையும் ஓராறும் ஐந்து
மடலான மாமாயை மற்றுள்ள நீவப்
படலான கேவல பாசந் துடைத்துத்
திடமாத் தனையுறல் சித்தாந்த மார்க்கமே.

பொருள் : ஐம் பூதங்களால் ஆன யாக்கையும், ஆறு கோடி மாயாசத்திகள் என்று சொல்லப்படும் செருக்கு, சினம், சிறுமை, இவறல், மாண் பிறந்த மானம், மாணா வுவகை ஆகிய அறுவகைக் குற்றங்களும், ஐவகைப் புலன்களும் இவற்றிற்கு நிலைக் களமான காரண மாயையும் ஒழிக்க வேண்டுவனவாய புலம்பினைச் செய்த பழமலரும் அருளால் துடைத்து, உறுதியாகத் தன்னை உணர்ந்து, தலைவனையுறுதல் சித்தாந்த சைவச் செந்நெறிச் சீர்மையாகும்.

1440. சுத்தச் சிவனுரை தானத்தில் தோயாமல்
முத்தல் பதப்பொருள் முத்திவித் தாமூலம்
அத்தகைய ஆன்மா அரனை அடைந்தற்றால்
சுத்தச் சிவமாவ ரேசுத்த சைவரே.

பொருள் : பரமேசுவரனால் அருளிச் செய்யப்பட்ட ஆகமங்களில் கூறப்பெறும் பத முத்திரைகளைச் சாராது, முத்தர் கண்ட பிரணவப் பதத்தால் உணர்த்தப் படுவதே மேலான பரமுத்திக்கு மூலம். இதனை உணர்ந்த ஆன்மா பிரணவப் பொருளான இறைவனை அறிந்து உலக பந்தங்களை விட்டால் சுத்த சிவமாம் பேறு பெறுபவரே சுத்த சைவராவர்.

1441. நான் என்றும் தான்என்றும் நாடிநான் சாரவே
தான் என்று நான் என்று இரண்டிலாத் தற்பதம்
தான் என்று நான்என்ற தத்துவம் நல்கலால்
தான்என்றும் நான்என்றும் சாற்றகில் லேனே.

பொருள் : அறிபவனாகிய நான் என்றும், அறியப்படு பொருளாகிய சிவம் என்றும் ஆராய்ந்து சிவத்தை நான் சேரவே, சிவன் சீவன் என்ற இரண்டற்ற தற்சிவம், தானே நான் என்ற உண்மையை உணர்த்தியதால், பின்னர் அறியப்படுபொருள் என்றும் அறிபவன் என்றும் பிரித்தறிய முடியாத பெருநிலையை எய்தினேன்.

1442. சாற்றரி தாகிய தத்துவம் சித்தித்தால்
ஆற்றரி தாகிய ஐந்தும் அடங்கிடும்
மேற்றிகழ் ஞானம் விளக்கொளி யாய்நிற்கும்
பாற்பர சாயுச்சிய மாகும் பதியே.

பொருள் : சொல்ல ஒண்ணாத இறைநிறைவில் அடங்குவதாகிய மெய்ம்மை கைகூடினால் தன்வழி ஈர்க்கும் புலன் ஐந்தும் திருவருளால் ஆருயிரின் வழிச்சென்று அடங்கிடும். அதன்பின் திருவடிப் பேருணர்வாம் விளக்கொளி ஒளிர்ந்து நிற்கும். நிற்கவே தான் ஆதலாகிய பரசாயுச்சியப் பேறு பதியும். (பரசாயுச்சியம் - உயர்வற உயர்ந்த ஒரு பெருநலம்)

5. சரியை (சீலம்)

(நாடும் நகரமும் தேடித் திரிந்து சிவபெருமான் என்று பாடுதலும், ஆலய வழிபாடு செய்தலும் சரியை நெறியாம்.)

1443. நேர்ந்திடு மூல சரியை நெறியிதென்று
ஆய்ந்திடும் காலாங்கி கஞ்ச மலையமான்
ஓர்ந்திடும் கந்துரு கேண்மின்கள் பூதலத்து
ஓர்ந்திடும் சுத்த சைவத்து உயிரதே.

பொருள் : திருவடிப் பேற்றிற்கு நேர்வழியாய் உள்ள நான்கினுள் நேர்திடும் அடிப்படைச் சீலம் என்னும் சரியை நெறி இத்தன்மைத்து என்று ஆய்ந்தவர் கந்துரு காலங்கி முனிவரும், கஞ்ச மலையமான் முனிவரும் என்க. அந்த இருவரையும் நோக்கித் திருமூலர் அருளுகின்றார். இச்சீலம் இந்நிலவுலகத்துத் தனி முதற் சிவ நெறியாகிய சுத்த சைவத்துக்கு ஆராய்ந்து கடைப்பிடிக்கும் உயிராம் என்க. (உயிர் - நானெறித் தொண்டு.)

1444. உயிர்க்குயி ராய்நிற்றல் ஒண்ஞான பூசை
உயிர்க்குஒளி நோக்கல் மகாயோக பூசை
உயிர்ப்பெறும் ஆவா கனம்புறப் பூசை
செயிற்கடை நேசம் சிவபூசை யாமே.

பொருள் : உயிர்க்கு உயிராக இறைவன் கலந்திருத்தலை உணர்தல் சிறந்த ஞான பூசையாகும். உயிருக்கு ஒளி தருகின்ற பொருளாக இறைவனைக் காண்டல் மேன்மையான யோக பூசையாகும். புறத்தே மூர்த்தியினிடத்து பிராணப் பிரதிட்டையாகிய ஆவாகானம் செய்தல் புறப் பூசையாகும். புறத்தே செய்யின் சிவபூசை ஞானத்தை நோக்கக் கடை நேசமாமே.

1445. நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும்
தேடித் திரிந்து சிவபெரு மான் என்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்மினே.

பொருள் : நாடு நகரம் நல்ல திருக்கோயில் ஆகியவற்றைத் தேடி அலைந்து அங்கங்கே சிவன் வீற்றிருக்கின்றான் என்று பாடுங்கள். பாடுவதோடு பணியுங்கள். அவ்வாறு பணிந்த பிறகு ஒருமைப்பட்ட நெஞ்சத்தை இறைவன் தனக்குக் கோயிலாகக் கொள்வன். இப்பாட்டில் சரியா பூசையைப் பற்றிக் கூறுகின்றார்.

1446. பத்தர் சரிதை பாடுவோர் கிரியையார்
அத்தகு தொண்டர் அருள்வேடத்து ஆடுவோர்
சுத்த இயமாதி சாதகர் தூயோகர்
சித்தர் சிவஞானம் சென்றெய்து வோர்களே.

பொருள் : பத்தர் ஆலய வழிபாடு முதலிய செய்யும் சரியை வழியில் நிற்போர். விபூதி முதலிய சிவசாதனங்கள் அணிந்து சிவவேடந்தாங்கிய அடியார் கிரியை வழியில் நிற்போர். தூய இயமம் முதலிய அட்டாங்க யோக உறுப்புக்களை உணர்ந்து அவ்வழியில் நிற்போர் சுத்த யோகியர் ஆவர். சித்தர் சிவத்தைத் தன்னில் கண்டு, தான் அதில் ஒன்றி நிற்போராவர்.

(புத்தர் -சரியையாளர்; தொண்டர் - கிரியை யாளர்; சாதகர் யோகிகள்; சித்தர் - சிவஞானிகள்.)

1447. சார்ந்தமெய்ஞ் ஞானத்தோர் தானவர் ஆயினோர்
சேர்ந்தவெண் யோகத்தர் சித்தர் சமாதியோர்
ஆய்ந்த கிரியையோர் அருச்சனை தப்பாதோர்
நேர்ந்த சரியையோர் நீள்நிலத் தோரே.

பொருள் : உண்மையான ஞானம் பெற்றவர் அவனே தானாகியவர்கள்.அட்டாங்க யோக நெறியில் நின்று சமாதியடைந்தோர் யோகிய ராவர். ஆராய்ந்த கிரியையுடையோர் சிவபூசை தவறாமல் செய்பவர். கிரியை நெறியில் நிற்பவர் தலயாத்திரை புரிபவராவர்.

1448. கிரியை யோகங்கள் கிளர்ஞான பூசை
அரிய சிவனுரு அமரும் அரூபத்
தெரியும் பருவத்துத் தேர்ந்திடும் பூசை
உரியன நேயத்து உயர்பூசை யாமே.

பொருள் : கிரியை, யோகம், கிளர்ச்சியைத் தரும் ஞானம் ஆகிய பூசை முறையே அறிதற்கு அருமையான சிவனது உருவத்தையும் அருவத்தையும் பொருந்தும். உபாசகரின் பக்குவத்துக்கு ஏற்பத் தேர்ந்து கொள்ளும் பூசை உரிமையான நேயப் பொருளுக்குச் செய்யும் உயர்ந்த பூசையாம்.

(கிரியையாளரும் யோகிளும் செய்வது உருவபூசையாகும். ஞானபூசை என்பது அருவப் பூசையாகும்.)

1449. சரியாதி நான்கும் தருஞானம் நான்கும்
விரிவான வேதாந்த சித்தாந்தம் ஆறும்
பொருளா னதுநந்தி பொன்னகர் போந்து
மருளாகும் மாந்தர் வணங்கவைத் தானே.

பொருள் : சரியை முதலிய நான்கினாலும் பெறுகின்ற ஞானம் நான்கும் விரிவாகவுள்ள வேதாந்த சித்தாந்தத்தால் அடையப்படுகின்ற ஆறு விதமான முடிவினை உண்மைப் பொருளானதாகிய நந்தி யெம்பெருமான் குரு மண்டலமாகிய பொன்னகர் அடைந்து மயக்க அறிவினைக் கொண்ட மக்கள் வணங்கி அறிவைப் பெற வைத்தனன். ஞானம் நான்கு; சரியை, கிரியை, யோகம், ஞானம் இவைகளால் பெற்ற ஞானம்.

(வேதாந்தம் ஆறு; காபிலம், காணாதம், பாதஞ்சலம், அட்சபாதம், வியாயம், ஜைமினியம் என்பன.)

1450. சமையம் பலசுத்தித் தன்செயல் அற்றிடும்
அமையும் விசேடமும் அரன்மந் திரசுத்தி
சமைய நிருவாணம் கலாசுத்தி யாகும்
அமைமன்று ஞானமார்க் கம்அபி டேகமே.

பொருள் : சமைய தீட்சையால் ஆன்மாவில் பதிந்துள்ள மலக்குற்றங்களை அகற்றி ஆணவ மலத்தின் வலிவைக் குறைத்தல் விசேட தீட்சையால் சிவத்தின் துணைகொண்டு அமையப்பெற்ற மந்திரங்களால் மும்மலத்தின் அறிவைக் குறைத்தல். சமையத்தில் உள்ள நிருவாண தீட்சையால் கலைகளின் மலக்குற்றங்களை அகற்றி, அவ்வக் கலையிலுள்ள ஆன்மாக்களை மேலுள்ள கலைகளுக்குச் செல்லத் தகுதிப்படுத்தலாகும். அபிடேகமாவது திருவருட்சத்தி நிலைபெறப் போதித்து நிலபெறுத்தலேயாகும். இம்மந்திரம் சைவத்திலுள்ள தீக்கைகளை விவரிக்கின்றது சமயம், விசேடம், நிருவாணம், அபிடேகம்.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் - Page 2 Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Mon Mar 26, 2012 3:51 pm

6. கிரியை (நோன்பு)

(மலரிட்டு வணங்கி இறைவனை அகத்தும் புறத்தும் பூசித்தல் கிரியையாகும்.)

1451. பத்துத் திசையும் பராமொரு தெய்வமுண்டு
எத்திக்கு இலர்இல்லை என்பதின் அமலர்க்கு
ஒத்துத் திருவடி நீழல் சரணெனத்
தத்தும் வினைக்கடல் சாராது காணுமே.

பொருள் : பத்துத் திசைகளிலும் பரசிவம் வியாபித்துள்ளது. எத்திசையிலும் இல்லாதவர் எப்போது இலர் என்பதால் அத்தகைய மலமில்லாதவர்க்குப் பணிந்து, திருவடியை அடைக்கலம் என்று உறுதியாகக் கொள்ள, மேன்மேலும் தாவி வருகின்ற வினையாகிய கடல் இவ்ஆன்மாவைச் சாராது. இவ்வுண்மையை அனுபவத்தில் காண்பாயாக. எங்கும் நிறைந்த பரசிவமே தெய்வம் என்று சரண் அடைந்தால் வினை சாராது என்பதாம்.

1452. கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானுறு மாமலர் இட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உண்பவர்க்கு அல்லது
தேனமர் பூங்கமழ் சேரஒண் ணாதே.

பொருள் : காட்டின்கண் எங்கணும் நிறைந்து மணம் கமழும் சந்தனமும், வானளாவ நிறையும் வண்ணம் சிறந்த மலர்களும் சாத்தி வணங்கினாலும், கொல்லாமலும் கொன்றதைத் தின்னாமலும் இருப்பதாகிய செந்நெறியொழுகிச் சிவனை நினைப்பதாகிய திருவுடையார்க்கன்றி திருவருள் வீழ்ச்சியாகிய சத்திநிபாதம் கிட்டாது. (சத்தி - திருவருள், நிபாதம் - நினறாய்ப்பதிதல், வீழ்ச்சி ஊனினை நீக்கி - சரீர அபிமானம் விட்டு அல்லது மாமிச உணவை விட்டு.)

1453. கோனக்கன் தாயே குரைகழல் ஏத்துமின்
ஞானக்கன் றாகிய நடுவே உழிதரும்
வானக்கன் றாகிய வானவர் கைதொழும்
மானக்கன்று ஈசன் அருள்வள்ள மாமே.

பொருள் : மேன்மையான பசுங்கன்றைப்போல ஒலிக்கும் கழலையுடைய திருவடியைப் போற்றுங்கள். அப்போது ஞானத்தை நல்கும் சுழுமுனை நடுவே தோன்றும். தேவர் உலகக்கன்றாகிய வானவர் வந்து உம்மை வணங்குவார்கள். பெருமை பொருந்திய இடப வாகனத்தையுடைய இறைவன் திருவருளைத் தாங்கும் பாத்திர மாகுங்கள்.

1454. இதுபணிந்து எண்டிசை மண்டிலம் எல்லாம்
அதுபணி செய்கின் றவள்ஒரு கூறன்
இதுபணி மானுடர் செய்பணி ஈசன்
பதிபணி செய்வது பத்திமை காணே.

பொருள் : மேல் ஓதிய முறைமைகளை வணங்கி ஏற்றுக் கொண்டு எட்டுத் திசைகளால் சூழப்பெறும் உலக உடல்பொருள் நிறை மண்டிலங்களை யெல்லாம் படைத்து அளித்து அழித்து மறைத்து அருள் செய்யும் ஐந்தொழிலுடைய அம்மையை ஒரு கூற்றிலே உடையவன் சிவன். மாந்தர் செய்யத் தகுந்த இறைபணி சிவப் பணியேயாம். இச்சிவப்பணியே நோன்பாளராகிய கிரியையினம் செய்யும் சிவபத்தித் திருப்பணியாகும்.

1455. பத்தன் கிரியை சரியை பயில்வுற்றுச்
சுத்த அருளால் துரிசற்ற யோகத்தில்
உய்த்த நெறியுற்று உணர்கின்ற ஞானத்தால்
சித்தம் குருவரு ளால்சிவம் ஆகுமே.

பொருள் : பத்தியுடையோன் தூய மந்திரம் முதலியவற்றை நினைந்து அவ்வாறு நடந்து பழகி , சுத்தமாயை என்ற அருள் சத்தியால் குற்றமற்ற மெய்போகத்தில் அமைத்த நெறியில் பொருந்தி தன்னையும் தலைவனையும் உணர்கின்ற ஞானத்தினால் சித்தம் குருமண்டலப் பிரவேசத்தால் சிவமாக அமையும்.

1456. அன்பின் உருகுவன் நாளும் பணிசெய்வன்
செம்பொன் செய்மேனி கமலத் திருவடி
முன்புநின் றாங்கே மொழிவது எனக்கருள்
என்பினுள் சோதி இலக்குகின் றானே.

பொருள் : சித்தம் சிவமாய சிவபக்தன் எல்லையிலாத் தலைவன்பால் உருகுவன். அவன் எந்நாளும் அடிமைப்பணி செய்து ஒழுகுவான். பொன்போலும் திருமேனியும் செந்தாமரை அனையதிருவடியும் உடையவன் சிவன். அவன் அடியேன் முன்நின்று அருமறை யருளத் திருவடி யுணர்வு கைவந்த ஒரு மெய்யடியாரை ஊர்ந்து செறிந்த அறிவொளியால் விளங்கியருள்வன்.

7. யோகம் (செறிவு)

(யோகமாவது, மூலாதாரத்திலுள்ள குண்டலினியோடு கூடிய பிராணனைத் துவாத சாந்தத்தில் விளங்கும் சிவத்தோடு சேர்த்துப் பொருந்தி யிருத்தல். இவ்வாறு சேர்த்துத் தியானம் செய்தால் ஒளி விளங்கும். )

1457. நெறிவழி யேசென்று நேர்மையுள் ஒன்றித்
தறியிருந் தாற்போல் தம்மை யிருத்திச்
சொறியினும் தாக்கினும் துண்ணென் றுணராக்
குறியறி வாளர்க்குக் கூடலும் ஆமே.

பொருள் : ஆசான் அருளிய அருமறைவழியே ஒழுகி அகத்தலமாகிய யோகத்தில் பொருந்தி ஆ முதலியவற்றைக் கட்டுத்தறி (தூண்) மாறுதல் இன்றி இருந்தாற்போல் தம் உடம்பை இருத்தித் தினவு முதலியன உடம்பில் தோன்றினும் சொறியாமலும், காற்று மழை மின்னல் இடி முதலியன உடம்பில் மோதினும் அசையாமலும் இருந்து கருதிய குறியாம் சிவத்தை அறிவார்க்கு அருளால் அச்சிவத்துடன் கூடலுமாகும்.

1458. ஊழிதோ றூழி உணர்ந்தவர்க்கு அல்லால்
ஊழிதோ றூழி உணரவும் தானொட்டான்
ஆழி அமரும் அரிஅயன் என்றுளார்
ஊழி முயன்றும்ஓர் உச்சியு ளானே.

பொருள் : ஊழிதோறூழி பலவரினும், என்றும் ஒருபடித்தாய் நின்று நிலவும் முழு முதற்சிவனை அவன் அருட்கண்ணால் உணர்ந்தவர்க்கு அல்லாமல் பலவூழி கண்டாலும் தம் அறிவால் அச்சிவனைக் காணமுடியாது. சக்கரப் படையைத் தாங்கும் அரியும் அயனும் பலவூழி முயன்றும் காண ஒண்ணாமல் நீங்கி மறைந்து நின்றனன். (ஓருச்சி ஒருவி என்பதன் திரியு ஒருவி - நீங்கி.)

1459. பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோல்
சீவனுக்கு உள்ளே சிவமணம் பூத்தது
ஓவியம் போல உணர்ந்தறி வாளர்க்கு
நாவி யணைந்த நடுதறி யாமே.

பொருள் : மலரின் கண் மணம் பொருந்தி யமைவது போல் ஆருயிரின் கண்ணும் அன்னை அத்தனாம் சிவமணம் பூத்தமைந்தது. அவ் அமைவினையுடையார் புனைந்த சித்திரம் போல் அச்சிவனையே உணர்ந்தறிவர். அப்படி அறிகின்றவர் புனுகு பூனை அணைந்த நடுத்தறி போன்று அசையாதிருப்பவர். (நாவி - புனுகுப்பூனை)

1460. உய்ந்தனம் என்பீர் உறுபொருள காண்கிலீர்
கந்த மலரில் கலக்கின்ற நந்தியைச்
சிந்தை யுறவே தெளிந்தருள் நீங்கினால்
முந்தைப் பிறவிக்கு மூலவித் தாமே.

பொருள் : உயர்ந்தோம் என்று சொல்வீர்; ஆனால் யோகத்தால் உள்ளே உறுகின்ற பொருளைக் காணமாட்டீர். மணங்கமழும் நல்லார் தம் நெஞ்சத்தாமரையில் கலக்கின்ற நந்தியை உங்கள் உள்ளம் பொருந்தத் தெளியுங்கள். தெளிந்தால் இருள் நீங்கும். இருள் நீங்கினால் நுண்ணுடலாகிய கருவுறாது தோன்றும் முதற்பிறவியை ஒழிப்பதற்கு அத்தெளிவு அழியாக் காரணமாகும். வித்து காரணம்.

1461. எழுத்தொடு பாடலும் எண்ணெண் கலையும்
பழித்தலைப் பாசப் பிறவியும் நீங்கா
வழித்தலைச் சோமனோடு அங்கி அருக்கன்
வழித்தலைச் செய்யும் வகையுணர்ந் தேனே.

பொருள் : இலக்கண இலக்கியங்களும் இவற்றின் விரிவான அறுபத்து நான்கு கலைகளும், பழித்தற்கு இடமாகிய சுட்டுணர்வாகும். அச்சுட்டுணர்வாகிய பாசத்தினால் தொடரும் பிறவியும் நீங்காத முறைமை வாய்ந்த இடப்பால் நரம்பாகிய திங்களும் வலப்பால் நரம்பாகிய ஞாயிறும் நடுப்பால் நரம்பாகிய தீயும் அருளான் அமையும் நிலைகளையுணர்வர். அவ்வுணர்வால் முதன்மையான செந்நெறிச் செல்லும் மேன்மை எய்தும்.

1462. விரும்பிநின் றேசெய்யில் மேய்த்தவ ராகும்
விரும்பிநின் றேசெய்யின் மெய்யுரை யாகும்
விரும்பிநின் றேசெய்யின் மெய்த்தவ மாகும்
விரும்பிநின் றேசெய்யில் விண்ணவன் ஆகுமே.

பொருள் : சிவத்தை விரும்பி நின்று செயல் செய்யும் நல்லோர் உண்மைத் தவத்தவராவர். அவ்வாறு ஒழுகின் குருவருள் அருமறை கைகூடும். அதுபோல் செய்யின் அஃது இறப்பில் தவமாகிய உண்மைத் தவமாகும். மேலும் கைக் கோலின் தூய விண்ணுலக நேராட்சியுடைய சிவனென மதிக்கப்படுவன். (அருமறை - குருமொழி)

1463. பேணிற் பிறவா உலகருள் செய்திடும்
காணில் தனது கலவியு ளேநிற்கும்
நாணில் நரக நெறிக்கே வழிசெயும்
ஊனில் சுடும் அங்கி உத்தமன் தானே.

பொருள் : அகத்தவமாகிய யோக நெறியைப் பேணி ஒழுகுவார் மீண்டும் பிறப்பதற்கு வாயில் இல்லாத தூய சிவவுலகை எய்துவர். இவ்வுலகே பிறவா உலகெனப்படும். அருட் கண்ணாற் காண்பார் சிவபெருமான் வேறு அறக்கலந்து நிற்கும் கலவியுள் நிற்பர். இத்தவ ஒழுக்கிற் செல்ல நாணமுறுவார் இருள் உலகு எய்தி இன்னல் உறுவர். சிவன் உடம்பினுள் அவ்வுடம்பு நிலைத்து நிற்பதற்கு வேண்டும் சூட்டினை அருள்வன். அத்தகைய சிவபெருமானே சார்ந்தாரைக் காக்கும் தலைவன் ஆவான்.

1464. ஒத்தசெங் கோலார் உலப்பிலி மாதவர்
எத்தனை ஆயிரம் வீழ்ந்தனர் எண்ணிலி
சித்தர்கள் தேவர்கள் மூவர் பெருமையாய்
அத்தன் இவன்என்றே அன்புறு வார்களே.

பொருள் : நேர்மையான செங்கோல் அரசர்கள், உண்மையான வேதநெறி விளக்கிய முனிவர்கள் எத்தனை ஆயிரம் பேர்கள் இவ்வுண்மை உணராது அழிந்து ஒழிந்தார்கள். இவ் யோகத்தை அறிந்த எண்ணற்ற சித்தர்களும் தேவர்களும், பிரமன், திருமால், உருத்திரன் ஆகிய மூவரும் பெருமையாகப் பரசிவத்தைத் தவிர உயிருக்கு நன்மை செய்பவர் வேறு இல்லை என்று அடி பணிந்தார்கள்.

1465. யோகிக்கு யோகாதி மூன்றுள கொண்டுற்றோர்
ஆகத் தருகிரி யாதி சரியையாம்
தாகத்தை விட்ட சரியையொன் றாம்ஒன்றுள்
ஆதித்தன் பத்தியுள் அன்புவைத் தேனே.

பொருள் : யோகம், கிரியை, சரியை ஆகிய மூன்று நெறிகளையும் கொண்டு மேன்மையுறுவர் யோகிவர் ஆவர். அவ்வாறாகத் தருவன கிரியையில் கிரியை, கிரியையில் சரியை ஆகியவாம். ஆசையை விட்ட சரியை ஒன்றாகும். அவ்வாறு விளங்கும் ஒளிமண்டல சிவாதித்தன் பத்தியில் சிறந்துஅன்பு கொண்டேன். (ஆதித்தன் - சிவசூரியன்.)

1466. யோகச் சமயமே யோகம் பலவுன்னல்
யோக விசேடமே அட்டாங்க யோகமாம்
யோகநிர் வாணமே உற்ற பரோதயம்
யோகஅபி டேகமே ஒண்சித்தி யுற்றலே.

பொருள் : செறிவு நிலையாகிய யோகத்தில் சமயம், விசேடம், நிருவாணம், அபிடேகம் என் நான்கு நிலைகள் உள்ளன. அவை முறையே சிவநுழைவு, சிவநோன்மை, சிவ நுண்மை, சிவ நுகர்மை என அழைக்கப் பெறும், யோகத்தில் சமயம், பல வகையான யோக முறைகளை நினைத்தல், யோகத்தில் விசேடம் எட்டு உறுப்புடன் கூடிய யோகம், யோகத்தில் நிருவாணம் முழுமுதற் சிவம் தோன்றல் (யோகத்தில் அபிடேகம் - சித்திபெறுதல். உறுதல் - உறல்; உற்றல் என மிகுந்தது.)
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் - Page 2 Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Mon Mar 26, 2012 3:52 pm

8. ஞானம் (மெய்யுணர்வு)

(ஞானம் என்பது பதி அறிவு, ஞானம், நேயர், ஞாதுரு என்ற மூன்றும் கெட்டு ஒன்றான நிலையே ஞானம் எனப்பெறும் ஆதலால் ஞானமே வீடு பேற்றுக்கு வாயிலாகும்.)

1467. ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை
ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று
ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவா
ஞானத்தின் மிக்கார் நரரின்மிக் காரே.

பொருள் : ஞானத்தில் சிறந்த அறநெறி நாட்டில் இல்லை. ஞானத்தைக் கொடுக்காத சமயநெறியும் நல்லது அன்று. ஞானத்துக்குப் புறம்பானவை நல்ல வீடு பேற்றை அளிக்காது. ஞானத்தில் சிறந்து விளங்குபவரே மக்களில் மேலோர் ஆவர். ஞானமே வீடு பேற்றிற்கு வாயிலாதலின் சிறந்தது என்பதாம். (நாட்டில்லை - நாட்டில் இல்லை)

1468. சத்தமும் சத்த மனனும் தகுமனம்
உய்த்த உணர்வும் உணர்த்தும் அகந்தையும்
சித்தம் என்று இம்மூன்றும் சிந்திக்கும் செய்கையும்
சத்தங் கடந்தவர் பெற்றசன் மார்க்கமே.

பொருள் : நாதமும் நாதவடிவான மனமும் தக்க அம்மனம் தந்த புத்தியும் புத்தியை உணர்த்தும் அகங்காரமும் ஆகிய சித்தம் என்ற இம்மூன்றும், அது சிந்திக்கின்ற செயலும் அவற்றால் விளையும் நாதமும் கடந்த ஞானியர் பெற்ற நெறியே சன்மார்க்கம் ஆகும்.

1469. தன்பால் உலகும் தனக்குஅரு காவதும்
அன்பால் எனக்குஅரு ளாவது மாவன
என்பார்கள் ஞானமும் எய்தும் சிவோகமும்
பின்பாலின் நேயமும் பெற்றிடுந் தானே.

பொருள் : சீவனது சித்தத்தில் அமைத்துள்ள சங்கற்ப உலகமும் தனது சூழ்நிலையில் புறத்தே அமைந்துள்ள உலகமும் அன்பினால் எனக்கு அருளாக அமைந்தன என்பர் ஞானிகள். இவ்வகையான ஞானமும் அதனால் அமையும் சிவபாவனையும், பின்னர் அறியப்படுபொருள் ஆகிய சிவத்தையும் பெற்றிடுவர். (சிவோகம் - அவனே தானே ஆகிய நெறி. பின்பால் - சிவோகம் பாவனை கைவந்த பின். நேயர் - சிவம்.)

1470. இருக்கும் சேம இடம்பிரம மாகும்
வருக்கம் சராசர மாகும் உலகம்
தருக்கிய ஆசாரம் எல்லாம் தருமே
திருக்கமில் ஞானத்தைத் தேர்ந்துணர்ந் தோர்க்கே.

பொருள் : மாறுபாடு இல்லாத சிவஞானத்தை திருவருளால் தெளிந்து உணர்ந்தோர் சிவஞானியர் ஆவர். அவர் ஒடுக்கமாகிய நிட்டைகூடியிருக்கும் இடம் சிவன் எழுந்தருளியிருக்கும் இடமாகும். இயங்குதினை நிலைதிணையாகிய கூட்டம் அனைத்தும் அவர்களுக்கு உலக உறவாகும். மேம்பாடு மிக்க ஒழுக்கம் அனைத்தும் தாமே வந்து எய்தும்.

(செருமி இருக்கும் - மறைந்திருக்கும், ஆசாரம் - ஒழுக்கம், திருக்கிலா - மாறுபாடு இல்லாத)

1471. அறிவும் அடக்கமும் அன்பும் உடனே
பிறியா நகர்மன்னும் பேரரு ளாளன்
குறியும் குணமும் குரைகழல் நீங்கா
நெறியறி வார்க்கிது நீர்த்தொனி யாமே.

பொருள் : சிவத்தை அறியும் அறிவும், சிவத்தில் அடங்கும் அடக்கமும், சிவத்தைப் பற்றும் தலையன்பும் உள்ளவர் கேடில்லாத சிவவுலகத்தில் வாழ்வோராவர். அவர்கள் தம் புற அடையாளச் சிவப்பண்பும் ஒலிக்கும் கழல் அணிந்துள்ள சிவபெருமான் திருவடிகளை நீங்கா நிலையைக் றிப்பனவாகும். அவர்கள் பால் அடங்கியிருக்கும் திருவடி யுணர்வு காற்று முதலியவற்றின் துணையால் நீரில் உண்டாகும் ஒலிபோல் செந்நெறிச் செல்லும் துணையால் வெளிப்படும்.

1472. ஞானம் விளைந்தெழு கின்றதோர் சிந்தையுள்
ஏனம் விளைந்தெதி ரேகாண் வழிதொறும்
கூனல் மதிமண் டலத்தெதிர் நீர்கண்டு
ஊனம் அறுத்துநின்று ஒண்சுடர் ஆகமே.

பொருள் : ஞானம் முதிர்ந்து எழுகின்ற எண்ண நிலையில் கருவி யாகிய நாதம் தோன்றி முகத்தின் முன் எங்கும் இளம்பிறை மண்டலத்தின் ஒலியைத் தரிசித்து உடலின் இழிதகைமையை உணர்ந்து உடலைக் கடந்து ஒளி மிக்க சோதியாகும். ஞானியர் உடலின் இழிதகைமையை உணர்ந்து ஒளியேதாம் என்று அறிவர். (ஒண்சுடர் - சிவம்.)

1473. ஞானிக்கு உடன்குணம் ஞானத்தில் நான்குமாம்
மோனிக்கு இவை ஒன்றும் கூடாமுன் மோகித்து
மேனிற்ற லாம்சத்தி வித்தை விளைத்திடும்
தானிக் குலத்தோர் சரியை கிரியையே.

பொருள் : ஞானிக்கு உடனாய தன்மையாக ஞானத்தில் ஞானம், ஞானத்தில் யோகம், ஞானத்தில் கிரியை, ஞானத்தில் யோகம், ஞானத்தில் கிரியை, ஞானத்தில் சரியை ஆகிய நான்கும் ஆகும். அனுபவம் முதிர்ந்து பிரணவ சத்தியான மௌனிக்கு இலைஒன்றும் தேவையில்லை. முன்னே பரவசமடைந்து மேல் சந்திர மண்டல ஒளியில் விளங்கும். சத்தி ஞானத்தை அளித்துவிடும். அவ்வாறன்றி ஆதாரங்களில் பொருந்தி யோகம் புரிவோர்க்குச் சரியையும் கிரியையுமேயாகும்.

1474. ஞானத்தின் ஞானாதி நான்குமாம் ஞானிக்கு
ஞானத்தின் ஞானமே நான்எனது என்னாமல்
ஞானத்தில் யோகமே நாதாந்த நல்லொளி
ஞானக் கிரியையே நன்முத்தி நாடலே.

பொருள் : சிவஞானிக்கு ஒதப்பட்ட அறிவில் அறிவு முதலிய நான்கும் உள்ளன. அறிவில் அறிவாகிய ஞானத்தின் ஞானமே யான், எனது என்னும் செருக்கு அறல். ஞானத்தில் யோகம் முப்பத்தாறு மெய்யுங்கடந்த அருள் வெளியில் காணும் சிவஒளி ஞானத்தில் கிரியையே திருவடிப் பேற்றினை நாடுதல். மெய் - தத்துவம். ஞானத்தில் சரியை என்பது திருவடிப் பேற்றினைத் திருமுறைச் செல்வர் நவில நன்கினிது கேட்டல்.

1475. நண்ணிய ஞானத்தின் ஞானாதி நண்ணுவோன்
புண்ணிய பாவம் கடந்த பிணக்கற்றோன்
கண்ணிய நேயர் கரைஞானம் கண்டுளோன்
திண்ணிய சுத்தன் சிவமுத்தன் சித்தனே.

பொருள் : பெற்ற ஞானத்தில் ஞானாதி நான்கும் கைவரப் பெற்றவன் புண்ணியத்தால் அடையும் நற் பயனையும், பாவத்தாலவரும் தீய பயனையும் கடந்து நிற்பவன் ஆவான். பெருமையான நேயப் பொருளின் ஞான வரம்பைக் கண்டவன், திண்மையான மலக் குற்றங்கள் அற்றவனும் சிவ முத்தனும் சித்தனுமாவான். (சிவமுத்தன் - சிவப்பேற்றை அடைந்தவன். சித்தன் - அறிவின் எல்லையைக் கண்டவன், ஞானி - ஞானத்தின் எல்லையைக் கண்ட சிவ முத்தனும் சித்தனும் ஆவான்)

1476. ஞானச் சமயமே நாடும் தனைக் காண்டல்
ஞான விடேசமே நாடு பரோதயம்
ஞானநிர் வாணமே நன்றறி வான்அருள்
ஞானஅபி டேகமே நற்குரு பாதமே.

பொருள் : சிவ ஞானத்திலும் நிகழும் நால்வகைத் தீக்கையும் வருமாறு; சிவ நுழைவு என்பது சிவனைக் காணும் முறையால் தன்னைக் காண்பது சிவநோன்மை என்பது மேலாம் சிவத்தோற்றம் காண்பது. சிவ நுண்மை என்பது வாலறிவனாகிய சிவபெருமானின் திருவருள் வீழ்ச்சி. சிவ நுகர்மை என்பது திருவருள் ஆசான் திருவடியினை மறவாமை. (நுழைவு - சமயம்; நோன்மை - விசேடம்; நுண்மை - திருவாணம்; நுகர்மை - அபிடேகம்; திருவருள் வீழ்ச்சி - சத்திநிபாதம், நிபாதம் - நன்றாய் பதிதல், பரோதயம் பரம்+உதயம், சிவம் தோன்றல். நன்றறிவான் அருள் - சிவனருள், நற்குரு -சிவகுரு.)
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் - Page 2 Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Mon Mar 26, 2012 3:52 pm

9. சன்மார்க்கம் (காதன்மை நெறி)

(சன்மார்க்க மாவது, நன்னெறி அல்லது ஒளிநெறி, சன்மார்க்கத்தில் தான் அவனாம் தன்மை எய்தலாம்.)

1477. சாற்றும் சன் மார்க்கமாம் தற்சிவத் தத்துவத்
தோற்றங்க ளான சுருதிச் சுடர்கண்டு
சீற்றம் ஒழிந்து சிவயோக சித்தராய்க்
கூற்றத்தை வென்றார் குறிப்பறிந் தார்களே.

பொருள் : சொல்லப்பெறும் சன்மார்க்கமாவது தற்பதம் பொருளான சிவத்தின் உண்மை வடிவங்களான நாதவிந்துக்களில் விளங்கும் சுடரைக்கண்டு, சினத்தை விட்டுச் சிவயோகத்தில் நிலைத்த சித்த முடையவராய்க் காலனை வென்ற இறைவனது திருவுள்ளக் குறிப்பை உணர்ந்தவர் பற்றும் நெறியாம்.

1478. சைவப் பெருமைத் தனிநா யகன்நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு
தெய்வச் சிவநெறி நன்மார்க்கம் சேர்ந்துய்ய
வையத்துள் ளார்க்கு வகுத்துவைத் தானே.

பொருள் : சைவத்துக்குப் பெருமையைத் தரும் ஒப்பற்ற தலைவனாகிய சிவன் ஆன்மாக்கள் உய்தி பெறும் வண்ணம் அமைத்த ஒளிநெறி ஒன்றுண்டு. அதுதான் தெய்வச் சிவநெறியாகிய சன்மார்க்கம். அதனைச் சேர்ந்து உய்தி பெறுமாறு இவ்வுலகில் உள்ளார்க்கு அமைத்துக் கொடுத்தான்.

1479. தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்யப்
பரிசிக்கக் கீர்த்திக்கப் பாதுகஞ் சூடக்
குருபத்தி செய்யும் குவலயத் தோர்க்குத்
தருமுத்திச் சார்பூட்டும் சன்மார்க்கம் தானே.

பொருள் : தெரிசிக்கவும் பூசிக்கவும் தியானிக்கவும் தீண்டவும் புகழவும் திருவடிநிலையைச் சிரமேல் சூடவும் குருபத்தி செய்யும் மெய்யன்பர்களுக்குச் சன்மார்க்கம் முத்தியை அடையத் துணைபுரியும்.

1480. தெளிவறி யாதார் சிவனை அறியார்
தெளிவறி யாதார் சீவனும் ஆகார்
தெளிவறி யாதார் சிவமாக மாட்டார்
தெளிவறி யாதவர் தீரார் பிறப்பே.

பொருள் : சன்மார்க்க நெறியின்கண் ஒழுகித் திருமுறைவழியாக முப்பொருளின் மெய்ம்மை தெளியாதவர் சிவனை உணரார். சிவனை உணராமையினால் உயிர்ப்பயன் எய்தார். பயன்எய்தார் ஆகவே அறிவுடைப் பொருளும் ஆகார். மெய்ம்மை தெளியாதவர் சிவன் திருவடிகளைக் கூடிச் சிவமாம் பெருவாழ்வு எய்தார். மெய்ம்மை தெளியாதார் பிறப்பு அறார்; சிறப்பும் உறார்.

1481. தான்அவ னாகித் தான்ஐந்தூம் மலம்செற்று
மோனம தாம்மொழிப் பால்முத்த ராவதும்
ஈனமில் ஞானானு பூதியில் இன்பமும்
தான்அவ னாய்அற்ற லானசன் மார்க்கமே.

பொருள் : சுத்த ஆன்மாவாகிய தான் சிவமே யாகித் தன்பால் பொருந் திய ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி ஆகிய ஐம்மலங்களையும் நீக்கி, மோனம் என்ற பெயரினையுடைய ஒரு மொழியான பிரணவத்தை அடைந்து முத்தான்மா ஆவதும், குற்றமில்லாமல் ஞான அனுபவத்தில் இன்பம் அடைவதும். தான் சிவமாகத் தன்னிலை கெடல் சன் மார்க்கமாம். தான் அவனாதல் சன்மார்க்கத்தால் அடையலாம். (அனுபூதி - அனுபவம்)

1482. சன்மார்க்கத் தார்க்கு முகத்தொடு பீடமும்
சன்மார்க்கத் தார்க்கும் இடத்தொடு தெய்வமும்
சன்மார்க்கத் தார்க்கு வருக்கம் தரிசனம்
எம்மார்க்கத் தார்க்கும் இயம்புவன் கேண்மினோ.

பொருள் : சன்மார்க்கத்தர்களது முகமே சிவன் உறையும் பீடம் என்பதும், அவர்களது இடமே கோயில் என்பதும், அவர்களது கூட்டத்தைக் காண்பதே சிவதரிசனம் என்பதும் எம்மார்க்கத்தில் உள்ளோர்க்கும் கூறுகின்றேன்; கேட்பீர்களாக.

1483. சன்மார்க்க சாதனம் தான்ஞான ஞேயமாம்
பின்மார்க்க சாதனம் பேதையர்க் காய்நிற்கும
துன்மார்க்கம் விட்ட துரியத் துரிசற்றார்
சன்மார்க்கம் தான்அவ னாகும்சன் மார்க்கமே.

பொருள் : சன்மார்க்க சாதனமாவது சிவத்தை அறியும் ஞானமாகும். சன்மார்க்கம் ஒழிந்த ஏனைய சாதனம் அறிவில்லாதவர்க்கு ஆகும். தீமை தரும் மார்க்கத்தை விட்டுத் துரியத்தில் பொருந்திக் குற்றம் நீங்கினவர், சன்மார்க்கந்தான் அவனாகும் நன்னெறியை உணர்ந்தவராவர்.

1484. சன்மார்க்கம் எய்த வரும்அருஞ் சீடர்க்குப்
பின்மார்க்கம் மூன்றும் பெறஇயல் பாம்என்றால்
நன்மார்க்கம் தானே சிவனொடு நாடவே.
சொன்மார்க்கம் என்னச் சுருதிகைக் கொள்ளுமே.

பொருள் : சன்மார்க்கத்தை அடைய வருகின்ற அருமையான சாதகர்க்கு ஏனைய மூன்று மார்க்கங்களும் பெறுவது இயல்பாதலின் சிவனொடு பொருந்தும் நன்மார்க்கமே வேண்டுவது ஆகும். இதுவே பிரணவ மார்க்கம் என வேதம் கூறியது என்று கடைப்பிடிக்கவும். ஏனைய மூன்று; சகமார்க்கம், சற்புத்திரமார்க்கம், தாசமார்க்கம்.

1485. அன்னிய பாசமும் ஆகும் கருமமும்
முன்னும் அவத்தையும் மூலப் பகுதியும்
பின்னிய ஞானமும் பேதாதி பேதமும்
தன்னொடும் கண்டவர் சன்மார்க்கத் தோரே.

பொருள் : தனக்கு வேறாய்ப் பாசம் உண்டு என்றும், பாசத்தால் இன்பம் உண்டு என்றும், அக்கன்மம் காரணமாகப் பிறப்பு இறப்புக்களாகிய அவத்தைகள் உண்டு என்றும், அவத்தைக்கு ஏதுவான மூலப்பிர கருதி உண்டு என்றும் இவைகளை அறியும் அறிவு உண்டு என்றும், இவைகளின் பேதங்களையும் ஆன்மாவையும் கண்டு ஆராய்பவர் சன்மார்க்க நெறியில் நிற்பவரேயாவர்.

1486. பசுபாசம் நீக்கிப் பதியுடன் கூட்டிப்
கசியாத நெஞ்சம் கசியக் கசிவித்து
ஒசியாத உண்மைச் சொரூபஉ தயத்துற்று
அசைவானது இல்லாமை யானசன் மார்க்கமே.

பொருள் : ஆன்மாவைப் பாசத்தினின்றும் பிரித்து, பதியோடு சேர்த்து, கனியாத மனத்தை நன்றாகக் கனிய வைத்து, கெடாத மெய்ப்பொருள் தோற்றத்துள் பொருந்தி அசையாதபடி சமாதி கூடியிருத்தலே சன்மார்க்கமாம். (சொரூப உதயம் - ஆன்மாவின் இயற்கை உருவம்.)

1487. மார்க்கம்சன் மார்க்கிகள் கிட்ட வகுப்பது
மார்க்கம்சன் மார்க்கமே யன்றிமற்று ஒன்றில்லை
மார்க்கம்சன் மார்க்க மெனும்நெறி வைகாதோர்
மார்க்கம்சன் மார்க்க மாம்சித்த யோகமே.

பொருள் : சன்மார்க்கத்தில் உள்ளோர் அடைய வகுக்கும் மார்க்கம் சன்மார்க்கமாகிய மார்க்கமின்றிப் பறிதொன்றில்லை. மார்க்கமாகிய சன்மார்க்க நெறியே மார்க்கம் யோகசித்திகளைத் தரும் நன்னெறியாம். சன்மார்க்கமே ஞானத்தைத் தரும் மார்க்கமாம். இதனைச் சிவயோகம் எனவும் கூறுவர்.

10. சக மார்க்கம் (தோழமை நெறி)

(சகமார்க்கமாவது தோழமை நெறியாம். சகமார்க்கத்தில் நிற்போர் சிவ ரூபத்தைப் பெறுவர்.)

1488. சன்மார்க்கம் தானே சகமார்க்க மானது
மனமார்க்க மாமுத்தி சித்திக்குள் வைப்பதாம்
பின்மார்க்க மானது போராப் பிறந்துஇறந்து
உன்மார்க்க ஞானத்து உறுதியும் ஆமே.

பொருள் : ஞான நெறியானது தோழமை நெறியாகவே அடையப்படுவது. இராஜ மார்க்கமாகிய இது பின் வீடு பேற்றையும் சித்தியையும் தருவதாம். இவையல்லாத பிற்பட்ட நெறிகள் நீங்காப் பிறப்பையும் இறப்பையும் தந்து ஞானத்தை நினைத்து நினைத்து வருந்தச் செய்பவை. ஆருயிர்களைத் தோழமை நெறியில் இருத்துதற்கு இருந்து காட்டியவர்நம்பி ஆரூரர். பின்மார்க்கம் - மேலே கூறிய நான்கு மார்க்கங்கள் அல்லாதது. (உன் - அலைகிற)

1489. மருவும் துவாதச மார்க்கம்இல் லாதார்
குருவும் சிவனும் சமயமும் கூடார்
வெருவும் திருமகள் வீட்டில்லை யாகும்
உருவும் கிளையும் ஒருங்குஇழப் பாரே.

பொருள் : சிரசின் பன்னிரண்டு அங்குலத்தில் பொருந்துகின்ற மார்க்கத்தை அறியாதவர், துவாத சாந்தத்திலுள்ள குரு மண்டலமாகிய ஒளி மண்டலத்தையும், அங்கு விளங்கும் சிவத்தையும் இவற்றை உணர்த்தும் சமயத்தையும் அறியாதவர் ஆவர். இவரது இல்லத்தில் இலக்குமி தங்காமல் அகன்றுவிடும். தனது உருவத்தையும் சுற்றத்தையும் விட்டு இறந்துபடுவர்.

1490. யோகச் சமாதியின் உள்ளே அலிடம்
யோகச் சமாதியின் உள்ளே உளரொளி
யோகச் சமாதியின் உள்ளே உளசத்தி
யோகச் சமாதி யுகந்தவர் சித்தரே.

பொருள் : தோழமை நெறியாகிய சகமார்க்கத்தில் சமாதியாகிய நிஷ்டையில் இரப்போர்க்கு, அவர் உள்ளத்தின்கண் திருவருட்கண்ணால் பரந்த உலகங்கள் காணப்படும். அதுபோல் உள்ளொளியாகிய பேரொளி தோன்றும். அவ்வுள்ளத்தின்கண் திருவருள் அம்மை காட்சியருள்வள். இச்சமாதியில் உயர்ந்தோர். அனைத்துச் சித்தியும் அடைவர். அவர்களே சித்தர் என்பபடுவோர். (யோகசமாதி - சகமார்க்கம்)

1491. யோகமும் போகமும் யோகியர்க்கு ஆகுமால்
யோகம் சிவரூபம் உற்றிடும் உள்ளத்தோர்
போகம் புவியில் புருடார்த்த சித்தியது
ஆகும் இரண்டும் அழியாத யோகிக்கே.

பொருள் : யோகமும் போகமும் யோகியர்க்கு ஆகும். யோகத்தால் சிவ சாரூபம் பெற்று விளங்குவார். அதனால் அவர் பூவுலகில் அடையப்பெறும் அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் அடைந்தவராவர். அழியாத யோகிக்கு யோகமும் போகமும் பொருந்துவனவாம்.

1492. ஆதார சோதனை யால்நாடி சுத்திகள்
மேதாதி ஈரெண் கலாந்தத்து விண்ணொளி
போதா லயத்துப் புலன்கர ணம்புந்தி
சாதா ரணங்கெடல் ஆம்சக மார்க்கமே.

பொருள் : ஆதார சோதனையால் நாடிசுத்தி அமைந்து, மேதை முதலான பதினாறு கலைகளில் விளங்கும் ஆகாயமும் அவற்றால் விளங்கும் ஒளியும் புலனாகும். அறிவின் ஆலயம் என்ற ஆன்மாவில் புலன்களும் பொறிகளும் புத்தியும் தம்முடைய இயல்பான கீழ் இழுக்குந் தன்மையை விட்டு நிற்பதே சகமார்க்கமாகம்.

1493. பிணங்கிநிற் கின்றவை ஐந்தையும் பின்னை
அணங்கி எறிவன் அயிர்மன வாளால்
கணம்பதி னெட்டும் கருதும் ஒருவன்
வணங்கவல் லான்சிந்தை வந்துநின் றானே.

பொருள் : ஆன்மாவைக் கீழ்நோக்கில் அழைத்துச் செல்லுகின்ற ஞானேந்திரியங்கள் ஐந்தையும் பின்னர் மனம் என்னும் கூரிய வானால் வருத்தித் துன்புறுத்துவேன். அப்போது பதினெண் கணங்களும் கருதுகின்ற ஒருவனும் வணங்கத் தக்கவனும் ஆகிய இறைவன் சிந்தையில் பொருந்தி நின்றான்.

(ஐந்து இந்திரியங்களையும் அடக்கும் யோகியின் சிந்தையில் இறைவன் பொருந்தி நிற்பான்.)

கணம் பதினெட்டு : அமரர், சித்தர், அசுரர், சைத்தியர், கருடர், கின்னரர், நிருதர், கிம்புருடர், காந்தருவர், இயக்கர், விஞ்சையர், பூதர், பசாசர், அந்தரர், முனிவர், உரகம் ஆகாய வாசியர், போக பூமியர் எனப் பாகு பட்டன பதினெண் கணமே.

1494. வளங்கனி யொக்கும் வளநிறத் தார்க்கும்
வளங்கனி யொப்பதோர் வாய்மையன் ஆகும்
உளங்கணிந்து உள்ளம் உகந்திருப் பார்க்குப்
பழங்கனிந்து உள்ளே பகுந்துநின் றானே.

பொருள் : வளமான கனியைப் போன்ற கனிவையுடைய செம்மையாளர்க்கு நல்ல கனியைப்போன்று இன்பந்தரும் உண்மைப் பொருளாகும். மனங்கனிந்து உள்ளே மகிழ்ந்திருப்பவர்க்கு பழங்கனிந்துள்ளேயிருக்கும் காற்றினை நீக்கி எடுப்பது போல இவரைத் தத்துவங்களினின்றும் நீக்கித்தானும் உடனிருந்தான். சகமார்க்கத்தில் நிற்போரைத் தத்துவங்களினின்றும் நீக்கி உடனிருந்தருளுவான் இறைவன்.

(திருவடிப் பேரின்பம் பழங்கனிய அம் மெய்யடியார்க்கு அதனைப் பகிர்ந்து கொடுத்து உடன் நின்றருள்வன் அச்சிவன் எனினுமாம்.)

11. சற்புத்திர மார்க்கம் (மகன்மை நெறி)

(சற்புத்திர மார்க்கமாவது கிரியை நெறியாகும். பூசித்தல் முதலியன இந்நெறிக்குரிய அங்கங்களாம்.)

1495. மேவிய சற்புத்திர மார்க்க மெய்த்தொழில்
தாவிப்ப தாம்சக மார்க்கம் சகத்தொழில்
ஆவ திரண்டும் அகன்று சகமார்க்கத்
தேவியோடு ஒன்றல் சன்மார்க்கத் தெளிவதே.

பொருள் : தோழமை நெறியாகிய சகமார்க்கத்தை நிலை நிறுத்துவது மகன்மை நெறியாகிய சற்புத்திர மார்க்கமாகும். சகமார்க்கமாகிய அகத்தவமும் மனைத்தவமும் ஆகிய இரண்டும் காதன்மை நெறியாகிய சன்மார்க்க அடிப்படையாகும். (அகத்தவம் - யோகம், மனைத்தவம் - சகத்தொழில். இம்மந்திரம் சற்புத்திர மார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம் ஒன்றுக்கொன்று அடிப்படை என்று கூறுகிறது.)

1496. பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல்
ஆசற்ற நற்றவம் வாய்மை அழுக்கின்மை
நேசித்திட்டு அன்னமும் நீசுத்தி செய்தல்மற்று
ஆசற்ற சற்புத் திரமார்க்கம் ஆகுமே.

பொருள் : பூசனை செய்தல், பாராயணம் செய்தல், இறைவனது புகழைச் சொல்லி வணங்குதல், குறிப்பிட்ட மந்திரங்களைக் கூறிச்சிந்தித்தல், குற்றமற்ற தவ ஒழுக்கங்களை மேற்கொள்ளல், உண்மை பேசுதல், காமாதி அறுபகை நீங்குதல், அன்போடு அன்னபாவனை செய்தல் ஆகிய இவ்எட்டும் குற்றமற்ற சற்புத்திர மார்க்கத்திற்குரிய உறுப்புக்களாம்.

1497. அறுகால் பறவை அலர்தேர்ந்து உழலும்
மறுகா நரையன்னம் தாமரை நீலம்
குறுகா நறுமலர் கொய்வன கண்டும்
சிறுகால் அறநெறி சேர்கி லாரே.

பொருள் : ஆறுகால் பறவையான வண்டானது தேன் சேகரிக்கப் பலமலர்களை நாடி அலையும். அலையினும் வெள்ளை அன்னமானது தாமரையை விட்டுக் கவர்ச்சியான நீலோற்பல மலரை அடையாது. அதுபோலக் கிரியையாளர் மணமிகு மலர்களைப் பறித்துச்சிவனை வழிபடுவது கண்டும், ஏனையோர் சிறுபொழுதேனும் வழிபடாது பிறவழிச் சென்றுகெடுகின்றவர்களே.

1498. அருங்கரை யாவது அவ்வடி நீழல்
பெருங்கரை யாவது பிஞ்ஞகன் ஆணை
கருங்கரை ஏகின்ற மன்னுயிர்க்கு எல்லாம்
ஒருங்குஅரை யாய்உல கேழின்ஒத் தானே.

பொருள் : பிறவிப் பெருங்கடலுக்கு அருமையான கரையாவது திருவடி நீழலே, பெரிய கரையாவது அரன் ஆணையின் வண்ணம் அமைதலே திருவடியாகின்ற கரைக்குச் செல்லுகின்ற நிலைபெற்ற உயிர்கட்கு எல்லாம் ஒரே அரசாய் ஏழு உலகினும் ஒத்து விளங்கியவன் இறைவன் ஆவான். (அருங்கரை - சம்சாரக் கடலுக்குக்கரை. வரும் கரை - எழும் பிறப்புக்கள். அரையாய் - இறைவனாய்.)

1499. உயர்ந்தும் பணிந்தும் முகந்தும் தழுவி
வியந்தும் அரனடிக் கேமுறை செய்மின்
பயந்தும் பிறவிப் பயனது வாகும்
பயந்து பிரிக்கில்அப் பான்மையன் ஆமே.

பொருள் : திருவேடப் பொலிவால் உயர்ந்தும், சிவனடியார் திருவடிகளைப் பணிந்தும், அதனால் உள்ளம் உவந்தும், திருஐந்தெழுத்தினை அகம்தழுவியும், அதனால் வியப்புற்றும் சிவபெருமான் திருவடிக்கே திருத்தொண்டு செய்வோம் என்பாரே மகன்மை நெறியினராவர். அப்பணியினை அன்புடன் செய்யுங்கள். பிறவிக்கு அஞ்சிப் பெருமான் அடிகளைச்சேரும் பெரும் பேறு அதுவாகும். அன்பும் அச்சமுங்கொண்டு அவன் திருவடியினை நெஞ்சத்து அமைத்துத் தொழுதால் சிவபெருமானும் அவ் ஆருயிரினை முன்னின்று தாங்குபவன் ஆவான்.

1500. நின்று தொழுவன் கிடந்தெம் பிரான்தன்னை
என்றுந் தொழுவன் எழிற்பரஞ் சோதியைத்
துன்று மலர்தூவித் தொழுமின் தொழுந்தோறும்
சென்று வெளிப்படும் தேவர் பிரானே.

பொருள் : நான்நின்று தொழுவேன். அழகிய பிரானைக் கிடந்து என்றும் தொழுவேன். ஆதலால் நீங்களும் அழகிய பரஞ்சோதியாகிய இறைவனைப் பொருந்திய மலர்கொண்டு தொழுது வழிபடுங்கள். அவ்வாறு தொழும் போது தேவதேவனாகிய சிவபெருமான் தொழுவார்தம் சிந்தனையில் வெளிப்பட் டருள்வான்.

1501. திருமன்னும் சற்புத்திர மார்க்கச் சரியை
உருமன்னி வாழும் உலகத்தீர் கேண்மின்
கருமன்னு பாசம் கைகூம்பத் தொழுது
இருமன்னு நாடோறும் இன்புற்று இருந்தே.

பொருள் : கிடைத்தற்கரிய மக்கள் யாக்கை பெற்ற உலகவரே ! கேளுங்கள், மகன்மை நெறிக்கண் ஒழுகுவார்க்கு வீடுபேறு எளிதின் எய்தும். பிறவிக்கு வித்தாகிய ஆணவ மல பாசம் இம்மகன்மை நெறியினரைக் கண்டு செயலற்று ஒடுங்கும். அதனால் நாள்தோறும் திரு ஐந்தெழுத்து ஓதித் தொழுது இன்புற்றிருங்கள். (மகன்மை நெறி - சற்புத்திர மார்க்கம், கைகூம்ப - செயலற்று ஒடுங்கி. கை - செயல்)
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் - Page 2 Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Mon Mar 26, 2012 3:53 pm

12. தாச மார்க்கம் (அடிமை நெறி)

(தாசமார்க்கமாவது திருக்கோயிலில் சென்று தொண்டு செய்வது.)

1502. எளியனல் தீபம் இடல்மலர் கொய்தல்
அளிதின் மெழுகல் அதுதூர்த்தல் வாழ்த்தல்
பளிமணி பற்றல் பன்மஞ் சனமாதி
தளிதொழில் செய்வது தான்தாச மார்க்கமே.

பொருள் : அடியார்க்கு எளியனாய் ஒழுகுதல், திருக்கோவில்களில் நல்ல விளக்கிடுதல், திருநந்தவனத்தில் மலர் கொய்தல், அன்புடன் மெழுகல், திருஅலகிடுதல், திருமுறைத் திருப்பதிகம் பாடியபடி பொருள்சேர் புகழை ஓதி வாழ்த்தல், திருக்கோவிற்கண் உள்ள அசையாமணி போன்ற விளக்க மிக்க பெரிய மணிகளை அடித்தல், திருமுழுக்குக்கு வேண்டிய திருத்தநீர் முதலியன கொணர்தல் இன்னும் திருக்கோவில் திருத்தொண்டு பலவும் புரிதல் அடிமை நெறி என்ப. (பளி - பள்ளி என்பதன் இடைக்குறை தளி - திருக்கோயில். பள்ளி - திருக்கோயில்)

1503. அதுஇது ஆதிப் பரம்என்று அகல்வர்
இது வழி என்றங்கு இறைஞ்சினர் இல்லை
விதிவழி யேசென்று வேந்தனை நாடும்
அதுஇது நெஞ்சில் தணிக்கின்ற வாறே.

பொருள் : ஆதிப்பரம் அது இது என்று ஐயுற்றுத் தெளியாது நீங்குவர். வாய்மைச் செந்நெறி இது என்று தெளிந்து வேந்தனாம் சிவபெருமானை வழிபட்டுத் தெளிந்தார் இல்லை. தமிழ்த் திருமாமறை, திருமுறை வழியே உண்மை கண்டு ஓர்ந்து செந்நெறிச் சென்று சிவபெருமானை நாடுங்கள். அதுவே உள்ளத்தில் தோன்றும் ஐயுறவை அகற்றித் திருமுறை - தமிழ் ஆகமம், விதிவழி - தமிழ் வேதம்.

1504. அந்திப்பன் திங்கள் அதன்பின்பு ஞாயிறு
சிந்திப்பன் என்றும் ஒருவன் செறிகழல்
வந்திப்பன் வானவர் தேவனை நாடோறும்
வந்திப்பது எல்லாம் வகையின் முடிந்ததே.

பொருள் : திருவருள் துணையால் திங்களாகிய இடகலையையும் ஞாயிறாகிய பிங்கலையையும் அடக்குவன். அடக்கி எந்நாளும் ஒப்பில்லாத சிவபெருமானின் திருவடிகளை நாடுவன். தேவர் முதல்வனாகிய அச்சிவபெருமானையே நாள்தோறும் வணங்குவேன். அவ்வாறு வணங்கும் திறங்கள் எல்லாம் நால்வகை மார்க்கத்தில் அடங்கும்.

1505. அண்ணலை வானவர் ஆயிரம் பேர்சொல்லி
உன்னுவர் உள்மகிழ்ந்து உள்நின்று அடிதொழக்
கண்ணவன் என்று கருதும் அவர்கட்குப்
பண்ணவன் பேரன்பு பற்றிநின் றானே.

பொருள் : தேவர்கள் பரசிவத்தை ஆயிரம் நாமங்கள் கூறி அருச்சித்துத் தியானிப்பர். ஆனால் அவர்களை விடுத்து உள்ளம் மகிழ்ந்து திருவடியை மனத்தில் எண்ணித் தொழுது, கண் போன்றவன் என்று கருதி நிற்கும் அடியார்கட்கு நாதமயமான இறைவன் அவரது பேரன்புக்கு வெளிப்பட்டு அருளுவான்.

1506. வாசித்தும் பூசித்தும் மாமலர் கொய்திட்டும்
பாசிக் குளத்தில்வீழ் கல்லாம் மனம்பார்க்கின்
மாசற்ற சோதி மணிமிடத்து அண்ணலை
நேசத் திருத்த நினைவுஅறி யாரே.

பொருள் : வாசித்தாலும் பூசித்தாலும் சிறந்த மலர்களைக் கொய்து கொணர்ந்தாலும் சொன்னால் கல்வீழ்ந்த பாசிக்குளம் போன்று தெளிவில்லாதது மனம். ஆதலின் இவர்கள் குற்றமற்ற சோதியாகிய நீலகண்டப் பெருமானை அன்பினால் இடைவிடாது மனத்தில் இருந்த நினைவு அறியாதவரேயாவர். குளத்தில் கல்வீழ்ந்தபோது பாசி அகலும்; பின்னர் பாசிமூடும், அதுபோல மனம் பூசை முதலியன செய்தகாலத்துத் தெளியும், பின்னர் மூடத்தைப் பெறும்.

13. சாலோகம்

(சிவனுலகம்)

1507. சாலோகம் ஆதி சரியாதி யிற்பெறும்
சாலோகம் சாமீபம் தங்கும் சரியையால்
மாலோகம் சேரில் வழியாகும் சாரூபம்
பாலோகம் இல்லாப் பரன்உரு வாமே.

பொருள் : சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் ஆகிய நால்வகை முத்திகளும் சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நெறிகளால் அமையும். அவற்றுள் சரியை நெறிபற்றி நிற்போர் இறைவன் வாழும் உலகத்தை அடைந்து அவனுடைய சமீபத்தில் அமைவர். அத்தகைய உலகில் சாமீபத்தை அடைந்தவர் அவனது உருவத்தைப் பெறுவர். இவர் இறைவனைப் போன்ற ஒளி உருவைப் பெற்று இப்பரந்த உலகில் இல்லாமல் எங்கும் நிலைபெறும் பரம் உருவாமே.

(சரியையால் சாலோகம் பெறலாம் என்றது இம்மந்திரம்.)

1508. சமயம் கிரியையில் தன்மனம் கோயில்
சமய மனுமுறை தானே விசேடம்
சமயத்து மூலம் தனைத்தேறல் மூன்றாம்
சமயாபி டேகம் தானாம் சமாதியே.

பொருள் : சமயத்தைப் பற்றி நிற்போர் செய்யத்தகும் முதல் கிரியை தன்னுள்ளத்தில் வழிபடு கடவுளை வைத்தல், சமயத்தில் விசேடம் என்பது அவ்வழிபடு கடவுளுக்குரிய மந்திரத்தை உன்னுதல். சமயத்திலுள்ள மூலமந்திரத்தின் தத்துவம் தெளிதல் மூன்றாவதாகிய நிர்வாண தீட்சையாகும். வழிபடு கடவுளை நினைந்து சமாதி கூடல் சமயத்துக்குரிய அபிடேகமாம்.

14. சாமீபம் (சிவன் அண்மை)

(சாமீபம் - இறைவன் சமீபத்தில் உறைதல்.)

1509. பாசம் பசுவான தாகும்இச் சாலோகம்
பாசம் அருளான தாகும் இசை சாமீபம்
பாசம் சிரமான தாகும் இச் சாரூபம்
பாசம் கரைபதி சாயுச் சியமே.

பொருள் : சாலோக முத்தியில் பாசத் தன்மை கெடாமல் நின்று பிறவியைத் தரும். சாமீபத்தில் பாசம் பந்தப் படுத்தாமல் அருளாய் நிற்கும். சாரூபத்தில் பாசமானது மேலும் மேன்மையைத் தரும் சாயுச்சியத்தில் பாசமானது முழுதும் கரைந்து பதியை அடைவிக்கும்.

(விளக்கம் : சாலோகம் - இறைவனது உலகத்தில் இருத்தல், சாமீபம் - சமீபத்தில் உறைதல், சாரூபம் - உருவம்பெறதல், சாயுச்சியம் - இரண்டறக்கலத்தல்.)

(சாலோகம் முதலிய மூன்றும் பத முத்திரைகள், சாயுச்சியம் - பர முத்தி.)

15. சாரூபம் (சிவனுரு வாதல்)

(சாரூபம் - இறைவன் உருவம் பெறுதல்)

1510. தங்கிய சாரூபம் தானெட்டாம் யோகமாம்
தங்கும் சன்மார்க்கம் தனில்அன்றிக் கைகூடா
அங்கத் துடல்சித்தி சாதனர் ஆகுவர்
இங்கிவ ராக விழிவற்ற யோகமே.

பொருள் : நிலைபெற்ற சாரூபம் என்பது யோகத்தின் எட்டாவது உறுப்பான சமாதியில் அமைவது தங்கிய ஞானநெறி பற்றி நின்றார்க்கன்றிக் கைகூடாதாகும். இந்நெறியால் உறுப்போது கூடிய சரீரசித்தி கைவரப் பெறுவர். இங்கு இவரது உடல் குற்றமற்ற யோகத்தால் திருத்தி அமைக்கப்படும். யோக மார்க்கத்தால் சாமீபம் இட்டும் என்றது இம்மந்திரம்.

1511. சயிலலோ கத்தினைச் சார்ந்த பொழுதே
சயிலம தாகும் சராசரம் போலப்
பயிலும் குருவின் பதிபுக்க போதே
கயிலை இறைவன் கதிர்வடி வாமே.

பொருள் : உலகத்தில் ஒப்பில் ஒருமலை என்று சொல்லப்படும். பொன்மலையினைச் சார்ந்த இயங்குதிணையும் நிலைத் திணையுமாகிய பொருள்கள் எல்லாம் அப்பொன்வண்ணம் ஆதல்போல், சிவகுரு வீற்றிருக்கும் திருவூர் புகுந்தபோதே கயிலைமலையில் வீற்றிருக்கும் சிவபெருமானின் இயற்கை அறிவொளி வடிவம் ஆவன், மெய்கண்டானாகிய மாணவன். (சயிலம் - கயில மலை.)

16. சாயுச்சியம் (சிவனாதல்)

(சாயுச்சியம் - இறைவனோடு இரண்டறக் கலத்தல்)

1512. சைவம் சிவனுடன் சம்பந்த மாவது
சைவம் தனையறிந் தேசிவம் சாருதல்
சைவம் சிவம்தன்னைச் சாராமல் நீவுதல்
சைவம் சிவானந்தம் சாயுச் சியமே.

பொருள் : சிவனாம் நிலையில் முதல்நிலை சைவம் சிவனுடன் தொடர்புற்று நிற்றல். இரண்டாம் நிலை அந்நெறியின் உண்மை உணர்ந்து சிவன் அண்மையில் சார்ந்து நிற்றல். மூன்றாம் நிலை சார்ந்து நிற்றலைக் கடந்து முழுநீறு பூசிய முனிவர் போன்று வேறன்மையாக விரவி நிற்றல். இந்நிலையே சைவத்தின் கண் ஓதப்படும். சிவனார் திருவடிப் பேரின்பம் என்னும் சாயுச்சியமாகும்.

1513. சாயுச் சியம்சாக் கிராதீதம் சாருதல்
சாயுச் சியம்உப சாந்தத்துத் தங்குதல்
சாயுச் சியம்சிவ மாதல் முடிவிலாச்
சாயுச் சியமனத்து ஆனந்த சத்தியே.

பொருள் : விழிப்பின்கண் தன்னை மறந்திருத்தல் சாயுச்சியம் அடைதல், விருப்பு வெறுப்பு அற்ற உபசாந்த நிலையில் உள்ளவரும் சாயுச்சியம் பெற்றவரே. சிவத்துடன் இலயமாதல் எல்லையற்ற ஆனந்தத்தில் திளைத்திருப்பதாகிய சாயுச்சியமே. (சாக்கிராதீதம் - விழிப்பில் தன்னை மறந்திருத்தல் உப சாந்தம் - விருப்பு வெறுப்பு அற்ற நிலை)

17. சத்தி நிபாதம் (திருவருள் நன்கு பதிதல்)

மந்தம்

(சத்தி நிபாதம் - சத்தி நன்கு பதிதல். ஆன்மாவை விளக்கம் உறாது பந்தித்திருந்த மலசத்திகள் வீழ்தொழிந்து அருளைப் பெருக்கும் சத்திகள் பதித்தல். அருள் பதிவுக்கு ஏற்ப அறிவு பிரகாசிக்கும் என்ப. இதில் நான்கு நிலைகள் உள்ளன. 1) மந்தம் - அற்ப அறிவினைப் பெற்றவன், 2) மந்ததரம் - மந்தமாக இருந்து மந்திரங்களை உபாசிப்பவன், 3) தீவிரம் - யோகப் பயிற்சி செய்வோன் 4) தீவரதரம் - ஞான மார்க்கத்தை அனுசரிப்பவன்.)

1514. இருட்டறை மூலை யிருந்த குமரி
குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக்
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
மருட்டி யவனை மணம்புரிந் தாளே.

பொருள் : அறியாமையாகிய இருள் சூழ்ந்த இவ்வுடலகத்து அறியாமையை நீக்கி அறிவை விளங்கும் திருவருட் குமரி மூலையில் இருப்பார் போன்று மறைந்து உறைந்தனள். அறிவுக்கண் விளங்காமல் குருடாக இருந்த ஆருயிர்க் கிழவனைக் கூடுதல் கருதி, அவனுக்கு ஏற்பட்ட குருடாகிய அறியாமையை அகற்றிச் சிவபெருமானின் எண்கணங்களையும் வண்ணமுறக் காட்டித் தன்மாட்டே பேரன்பு கொள்ளுமாறு மயக்கி, அவன்பால் சிவமணம் கமழும் படிதான் கூடியிருந்தனள். (இருட்டறை - அஞ்ஞான இருள்படர்ந்த சரீரம். குமரி திருவருட்சத்தி குருட்டுக்கிழவன் - ஞானக்கண் இல்லாத ஆன்மா மணம்புரிந்தாள் - தங்கினாள்.)

1515. தீம்புல னான திசையது சிந்திக்கில்
ஆம்புல் னாயறி வார்க்குஅமு தாய்நிற்கும்
தேம்புல னான தெளிவறி வார்கட்குக்
கோம்புல னாடிய கொல்லையு மாமே.

பொருள் : சிவனடியின்பம் எய்துவதற்குரிய நிலையினை எண்ணில் அந்நிலை திருவடி யுணர்வாய் அவ்வுணர்வினை உணர்வார்க்கு இறவா இன்பநுகர்வாம் சிவ அமிழ்தாய் நிற்கும். இத்தகைய இனிய உணர்வாகித் தெளி அறியுடையவர் கட்குக் கோப்புலனாகிய சிவஞானம் எண்ணியவாறே ஐம்புலன் நுகர்வு இன்பம் தரும் புறத்துப் பூங்காஒத்து அகத்துதிகழும், (கோம்புலன் - கோப்புலன் உயர்ந்த ஞானம் கொல்லை - பூங்கா.)

1516. இருள்நீக்கி எண்ணில் பிறவி கடத்தி
அருள்நீங்கா வண்ணமே ஆதி அருளும்
மருள்நீங்கா வானவர் கோனொடுங் கூடிப்
பொருள்நீங்கா இன்பம் புலம்பயில் தானே.

பொருள் : பழ மலமாம் இருளைப் பிறைமதிபோல் நீக்கி, அதன் பொருட்டு அவ்வுயிர்க்கு நேர்ந்த பல பிறவிகளையும் கொடுத்துக் கடத்தி, ஆதியாகிய நடப்பாற்றல் திருவருள் நீங்காவண்ணம் உடன்நின்றருளும். அருளவே அவ்வுயிர் உன்மத்தம் அகலாத வானவர் கோனாகிய சிவபெருமானுடன் கூடி என்றும் நிலத்திருப்பதாகிய பேரின்பம் நுகரும். உயிர் நிலைக் களமாம் உடம்பாகவும் அவ்வருள் திகழும்.

1517. இருள்சூழ் அறையில் இருந்தது நாடில்
பொருள்சூழ் விளக்கது புக்கெரிந்த தாற்போல்
மருள்சூழ் மயக்கத்து மாமலர் நந்தி
அருள்சூழ் இறைவனும் அம்மையும் ஆமே.

பொருள் : இருட்டறையில் விளக்கொளியால் பொருளைக் காண்பது போல அஞ்ஞான இருள் படர்ந்த சரீரத்தில் திருவருட் சத்தியின் ஒளியால் சிவமாகிய பொருளைக் காணலாம் என்றது இம்மந்திரம்.

மந்தரம்

1518. மருட்டிப் புணர்ந்து மயக்கமும் நீக்கி
வெருட்டி வினையறுத்து இன்பம் விளைத்து
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
அருள்திகழ் ஞானம் அதுபுரிந் தாளே.

பொருள் : திருவருள் அம்மை ஆருயிர்கள் தன்மாட்டு விருப்பம் கொள்ளும்படி அவ்வுயிர்களை மயக்கிக் கூடினள். அவளே அவ்வுயிர்கள் பழமலப் பிணிப்பால் மாயையின்கண் மயங்கிக் கிடந்த மயக்கினை நீங்கி யருளினள். அச்சுறுத்தி வினைகளை அறுத்துத் திருவடி யின்பத்தினை விளைவித்தவளும் அவளே. அவளே ஞானக்கண் பெறாது அகக்கண்குருடாயிருந்த குருட்டினை நீக்கியருளினன். எய்தற்கரிய நன்மைகள் பலவற்றையும் காட்டித் திருவருள் வண்ணமாகிய சிவஞானத்தினைப் பதித்தருளியவளும் அவளே. அங்ஙனம் செய்தருளியவள் வனப்பாற்றலாகிய திருவருள் அம்மை.

1519. கன்னித் துறைபடித்து ஆடிய ஆடவர்
கன்னித் துறைபடித்து ஆடுங் கருத்திலர்
கன்னித் துறைபடிந்து ஆடுங் கருத்துண்டேல்
பின்னைப் பிறவி பிறிதில்லை தானே.

பொருள் : புறத்தே செந்தமிழ் நாட்டுத் தென்கோடி முனையாகிய கன்னியாகுமரி என்னும் கன்னித்துறைதிருத்தநீர் படிந்து ஆடியவர் அத்துடன் அமைந்து விடுகின்றனர். அஃது அகத்தே விளங்கும் திருவருள் நெறியாகிய கன்னித்துறை படிந்தாடுதற்கு வழியென்று நினைத்து ஆண்டுச் சென்று பயிலும் கருத்துடையர் அல்லர். அத்திருவருள் நெறிச் செல்லும் கருத்துண்டாகுமானால் அவர் பிறவாப்பெருநெறிப்பற்றிப் பிறப்பற்றுச் சிறப்புற்று வாழ்வர். (கன்னித் துறை - சத்தி பொருந்துதலுக்கு உரிய வழி).

1520. செய்யன் கரியன் வெளியன்நற் பச்சையன்
எய்த உணர்ந்தவர் எய்வர் இறைவனை
மைவென்று அகன்ற பகடுரி போர்த்தவெங்
கையன் சிவனென்று காதல்செய் வீரே.

பொருள் : படைத்தல் காத்தல் துடைத்தல் மறைத்தல் ஆகிய உலகியல் தொழில் நான்கிற்கும் கொள்ளும் திருமேனியின் நிறம் முறையே செம்மை, கருமை, வெண்மை, பசுமை என்ப. இறைவன் இந்நிறங்களை மேற் கொள்ளுகின்றனன் என்னும் உண்மையைப் பொருந்த உணர்ந்தவர் அவன் திருவடியினை அடைவர். எய்வர் - எய்துவர் (இடைக் குறை) அவனே அறியாமைச் சார்பாகத் தோன்றிய தன் முனைப்பாகிய யானையை நகத்தால் உரித்துப் போர்த்தனன். மழுவாகிய தீயினைக் கையில் தாங்கியவனும் அவனே. அதனால் அவன்பால் பேரன்பு கொள்ளுங்கள். (செய்யன் - அயன்; கரியன் - அரி; வெளியன் - அரன்; பச்சையன் - ஈசன்.)

1521. எய்திய காலங்கள் எத்தனை யாயினும்
தையலும் தானும் தனிநா யாகம்என்பர்
வைகலும் தன்னை வணங்கும் அவர்கட்குக்
கையிற் கருமம்செய் காட்டது வாமே.

பொருள் : உலகினுக்கு எத்தனை ஊழிகள் செல்லினும் சிவையும் சிவனும் ஒப்பில்லாத முழுதன்மையர் ஆவர். நாள்தோறும் தம்மை வணங்கும் மெய்யடியார்கட்கு உண்மை அறிவு இன்ப அடையாளத் திருக்கையால் காட்டிருள்வர். அடையாளக் காட்டு அதுவுமாகும். இதுவே சின்முத்திரை; பொறி. (கருமம்செய் காட்டு - யோகம் செய் என்று கூறுவது போலும்.)

1522. கண்டுகொண் டோம்இரண் டும்தொடர்ந்து ஆங்கொளி
பண்டுபண்டு ஓயும் பரமன் பரஞ்சுடர்
வண்டுகொண் டாடும் மலர்வார் சடையண்ணல்
நின்றுகண் டார்க்கிருள் நீங்கிநின் றானே.

பொருள் : ஞாயிறும் திங்களும் ஆகிய ஒளியிரண்டும் பழமையாக ஒன்றை ஒன்று தொடர்ந்து வரினும் அவை இளைப்புறும். ஆனால் பரனாகிய பரஞ்சுடர் என்றும் ஒன்று போல் இருப்பன். வண்டு மொய்க்கும் கொன்றை மலர்மாலையணிந்து நீண்ட திருச்சடையுடைய சிவபெருமான் திருவடிகளை நன்னெறிக்கண் நின்று வழிபடுவோர்க்கு அவன் எழுந்தருளி இருள்நீக்கி ஆண்டு அருள்வன்.

தீவிரம்

1523. அண்ணிக்கும் பெண்பிள்ளை அப்பனார் தோட்டத்தில்
எண்ணிக்கும் ஏழேழ் பிறவி யுணர்விக்கும்
உள்நிற்ப தெல்லாம் ஒழிய முதல்வனைக்
கண்ணுற்று நின்ற கனியது வாகுமே.

பொருள் : சிவபெருமான் உடைமையாகிய தோட்டம் ஒன்றுள்ளது. அத்தோட்டம் ஆருயர்களின் உடம்பாகும். அதன்கண் பொருந்தியிருக்கின்ற பெண்பிள்ளை திருவருள் ஆற்றல் ஆவள். அளவில்லாத எழுவகையாகத் தோன்றும் பிறப்பு உயிர்க்கு அத் திருவருள் உணர்வினை விளக்கும். உடம்பு அகத்துள்ள கருவிக் கூட்டங்களும் கருமக் கூட்டங்களும் ஆகிய அனைத்தினையும் அத்திருவருள் அகற்றி யருள்வள். அகற்றவே முழுமுதலாகிய விழுமிய சிவக்கனி கண்ணுறப் பொருந்தி நிற்கும் (எண்ணிக்கும் - எண்ணைக் கடக்கும் அளவிறக்கும்.)

1524. பிறப்பை அறுக்கும் பெருந்தவம் நல்கும்
மறப்பை யறுக்கும் வழிபடø வைக்கும்
குறப்பெண் குவிமுலை கோமள வல்லி
சிறப்பொடு பூசனை செய்யநின் றார்க்கே.

பொருள் : குறப்பெண்ணாகிய வெள்ளிமலை மலையாள் - திருவருள் அம்மை செந்தமிழ்த் திருமுறை வழியே சிறப்புடன் பூசனை புரியும் மெய்யடியார்க்கு அவர்களுடைய பிறப்பை அறுப்பாள். நானெறிப் பெருந்தவத்தை நல்குவாள். அறியாமையான நிகழும் சிவனை மறக்கும் மறப்பை அறுப்பாள். சிவயநம என்னும் திரு ஐந்தெழுத்தைக் கணித்து இடையறாது வழிபட வைப்பாள். (குறப்பெண் - குறிஞ்சி நிலப்பெற் - பார்வதி.)

1525. தாங்குமின் எட்டுத் திசைக்கும் தலைமகன்
பூங்கமழ் கோதைப் புரிகுழ லாளொடும்
ஆங்கது சேரும் அறிவுடை யார்கட்குத்
தூங்கொளி நீலம் தொடர்தலும் ஆமே.

பொருள் : எட்டுத் திசைக்கும் தலைவனோடு கூடி விளங்கும் திருவருள் அம்மையை உள்ளத் தாமரையினிடத்து இடையறாது உன்னுங்கள். மணங் கமழ்கின்ற மலர் சூடிய கூந்தலை யுடைய திருவருள் அம்மையின் திருவடிகளை வழிபடும் மெய்யன்பர்களுக்கு நீங்கா ஒளி நீலமாகிய திருவருள் பதிந்து தொடர்ந்து அருள் புரியும் (திருவருள் வீழ்ச்சி - சத்திநிபாதம். நீலம் - திருவருள் தாங்குமின் - நினையுங்கள்)

1526. நணுகினும் ஞானக் கொழுந்தொன்று நல்கும்
பணிகிலும் பன்மலர் தூவிப் பணிவன்
அணுகியது ஒன்றறி யாத ஒருவன்
அணுகும் உலகெங்கும் ஆவியும் ஆமே.

பொருள் : மேலே கண்ட வகையில் சத்தியின் அருளி பெற்றவனை அடைந்த பிறர்க்கு ஞானம் அமையும். அவனை வணங்கின் அவனும் பல மலர்களைத் தூவி வழிபடுவன். அத்தகைய மேலோன் தன்னைப் பணிவாரைக் கண்டு செருக்குக் கொள்ளாமல் சமத்தவ நிலையில் நிற்பன். அவன் உலகெங்கும் சென்று வரும் ஆற்றலைப் பெறுவான். சத்தி நிபாதத்தில் தீவிரத்தில் உள்ளோர் இயல்பு. தீவிர பக்குவிகள் எங்கும் சென்று ஞானம் நல்குவர்.

தீவிரதரம்

1527. இருவினை நேரொப்பில் இன்னருள் சத்தி
குருவென வந்த குணம்பல நீக்கித்
தருமெனும் ஞானத்தால் தன்செய லற்றால்
திரிமலத் தீர்ந்து சிவனவன் ஆமே.

பொருள் : நல்வினை தீவினையாகிய இரண்டும் சமமாக ஒத்தகாலத்தில் இனிமையான அருள் சத்தி குரு மண்டலத்தில் விளங்கி, ஆன்மப் பிரகாசம் அடைவதற்கு இடையூறான குணங்களைப் போக்கியருள்வாள் என்னும் அறிவால் தன்முனைப்பால் செய்யும் செயலற்றிருப்பின் மும்மலங்களும் கெட்டுச் சிவமாய் விளங்குவான். இருவினை ஒப்பாவது நன்மையில் உவப்பும் தீமையில் வெறுபபும் இன்றியிருத்தல். தன் செயல் அறுதலாவது, எல்லாம் சிவன் செயல் என்றிருத்தல். தீவரதர பக்குவிகள் தமக்கென ஒரு செயலுமின்றி யிருப்பர்.

1528. இரவும் பகலும் இலாத இடத்தே
குரவம் செய்கின்ற குழலியை உன்னி
அரவம்செய் யாமல் அவளுடன் சேரப்
பரிவொன்றி லாளும் பராபரை தானே.

பொருள் : நினைப்பும் மறப்பும் இல்லாமற் செய்யும் திருவடியுணர்வு இடத்து அருள் விளையாட்டு நிகழ்த்தும் ஆருயிர்க்குழலியை ஆராயின் அவ்வுயிர் ஐந்தெழுத்து உணர்வேயாக நிற்கும். வேறு எவ்வகை ஓசையும் எழாது, அருளுடனே தங்கிநிற்கும் அவ்வுயிர் என்றும் இளமை நீங்காது ஒரு படித்தாக இருக்கும் பராபரையாகிய அவளும் அன்போடு இவனைப் பொருந்தி வாழ்வாள்.

1529. மாலை விளக்கும் மதியமும் ஞாயிறும்
சால விளக்கும் தனிச்சுடர் அண்ணலுள்
ஞானம் விளக்கிய நாதன்என் உள்புகுந்து
ஊனை விளக்கி உடனிருந் தானே.

பொருள் : மாலைக் காலத்தில் இருட்டைப் போக்கி ஒளியை நல்கும் திருவிளக்கும், அது போன்ற மதியமும், பகலில் அது போன்று ஒளியை நல்கும் ஞாயிறும் விளக்கம் தருமாறு அவற்றுக்கு விளக்கம் அருளும் தனிச்சுடர் அண்ணலாகிய சிவபெருமான் ஆருயிர்களுக்கு உயிர்க்குயிராய் உள்நின்று தானே முழுமுதல் தலைவன் என அருளி என் உள்ளே புகுந்து நின்றவனும் அவனே. அதனோடு உடனாய் நின்றவனும் அவ÷. (ஊனை - சரீரத்தை)
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் - Page 2 Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Mon Mar 26, 2012 3:54 pm

18. புறச்சமய தூஷணம் (பிறநெறிப் பீழை)

(புறச்சமய தூஷணம் - புறச்சமய நிந்தனை. புறத்தே இறைவனைக் காணவேண்டும் என்று கூறும் சமயம் புறச் சமயமாகும். புறச்சமயம் பிறவி நீங்கும் வழியினை தெரிவிக்க மாட்டாது.)

1530. ஆயத்துள் நின்ற அறுசம யங்களும்
காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலா
மாயக் குழியில் விழுவர் மனைமக்கள்
பாசத்தில் உற்றுப் பதைக்கின்ற வாறே.

பொருள் : கூட்டமாக உள்ள ஆறு சமயங்களும், உடம்பினுள் விளங்கும் இறைவனைக் காண உதவி செய்யா. அதனால் அச்சமயங்களைப் பற்றி நிற்போர் மயக்கத்தைத்தரும் குழியில் விழுவர். மேலும் அவர் மனைவி மக்களாகிய தளையில் கட்டுண்டு தவிப்பவராவர்.

1531. உள்ளத்து ளேதான் கரந்தெங்கும் நின்றவன்
வள்ளல் தலைவன் மலர்உறை மாதவன்
பொள்ளற் குரம்பைப் புகுந்து புறப்படும்
கள்ளத் தலைவன் கருத்தறி யார்களே.

பொருள் : ஆருயிரின் நெஞ்சினுள்ளே மறைந்து எங்கும் நீக்கமற நிறைந்து நின்றவன், வள்ளலாகிய முதல்வன். அவன் உச்சிக்கு அப்பால் அருள் வெளியில் காணப்படும் ஆயிர இதழ்த் தாமரையில் வீற்றிருந்தருளும் அம்மையோடு கூடிய அப்பன், அவன் ஒன்பது ஓட்டைகளை யுடைய நிலையில்லாத இவ்வுடலில் புகுந்து நின்றனன். இங்கிருந்து ஆருயிர்களின் செல்வி நோக்கி வெளிப்படுவன். கள்ளத்தலைவனாகிய மறையோன், அவனது மெய்ம்மைக் கருத்தினை எவரும் எளிதாக அறிய மாட்டார்கள் என்க.

1532. உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க்கு
உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் எம்மிறை
உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க்கு
உள்ளத்தும் இல்லை புறத்தில்லை தானே.

பொருள் : உயிரின் இடமாக இருந்து அறிவு செம்மையுற்ற ஞானகட்கு அவரின் உயிரின் இடமாக இருந்து அருள்புரிவன்; உயிருக்கு அந்நியமாய் இருந்து உயிர்களை நடத்துகிறான் என்ற பேதஞானமுடைய பக்தனுக்கு வேறாக வெளியில் நின்று அருள் வழங்குவான் எமது இறைவன். உள்ளும் புறமும் இல்லையென்ற நாத்திகர்களுக்கு இரண்டிடத்தும் இல்லாதவனாகிறான்.

1533. ஆறு சமயமும் கண்டவர் கண்டிலர்
ஆறு சமயப் பொருளும் அவனலன்
தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்தபின்
மாறுதல் இன்றி மனைபுக லாமே.

பொருள் : முக்கூற்று புறச்சமயத்துள் குறிப்பாக ஆறுவகைச் சமயம் வருமாறு. பைரவம், சமணம், பாஞ்சராத்திரம், பாட்டாசாரியம், உலகாயதம், சூனியவதாம் என்பன. இச்சமயங்களில் நின்றவர் சமயங்கடந்த சிவத்தைக் காண்கிலர். இச்சமயத்தாரால் கூறப்படும் பொருளும் அவன் அல்லன். இவ் வுண்மையினை ஆராய்தற் பொருட்டு நல்லாருடன் ஆராயுங்கள். ஆராய்ந்து தெளியுங்கள். தெளிந்த பின் நுமக்குத் திருவடியாகிய நிலைத்த பேரின்பம் எய்துதல் ஆகும். (நல்லார் - சித்தாந்த சைவர்.)

1534. சிவமல்லது இல்லை அறையே சிவமாம்
தவமல்லது இல்லை தலைப்படு வார்க்கிங்கு
அவமல்லது இல்லை அறுசம யங்கள்
தவம்வல்ல நந்திதாள் சார்ந்துய்யும் நீரே.

பொருள் : இவ்வுலகத்தில் சிவத்தைக் காட்டிலும் எங்கும் நிறைந்த மேலான பொருள் இல்லை என்று செப்புவாயாக, ஆன்மாவில் மறைந்துள்ள சிவத்தை அறிந்து அனுபவத்தைப் பெற்றுச் சிறப்படைதலே தவமே தவிர பிற இல்லை. இவ்வுண்மையை அறியாமல் சமயத் துறையில் புகுந்து சிறக்க விரும்புவார்க்கு ஆறு சமயங்களும் வீணானவையாகும். தவத்தின் பயனை அளிக்கவல்ல உங்கள் குரு மண்டலத்தில் விளங்கும் சிவத்தைச் சார்ந்துய்யுங்கள். தவமானது, தன்னுள் மறைந்த பொருளைக் காணச் செய்யும் முயற்சி.

1535. அண்ணலை நாடிய ஆறு சமயமும்
விண்ணவ ராக மிகவும் விரும்பும்
உள்நின்று அழியும் முயன்றிலர் ஆதலான்
மண்ணின்று ஒழியும் வகையறி யார்களே.

பொருள் : இறைவனைத் தேடி ஆறு உள் சமய நெறி நின்றோரும் விண்ணவர் ஆவதற்கு மிகவும் விரும்பி மயக்கத்துள் பட்டு அழிவர். ஆவர் தேவ தேவனாகிய இறைவனை அடைய முயற்சி செய்யாதவர் ஆதலின் பிறவி நீங்கும் உபாயம் அறியாதவர் ஆவார். விண்ணவர் பதம் மீண்டும் பிறவியைத் தரும். (ஏம் - மயக்கம்.)

1536. சிவகதி யேகதி மற்றுள்ள எல்லாம்
பவகதி பாசப் பிறவியொன் றுண்டு
தவகதி தன்னொடு நேரொன்று தோன்றில்
அவகதி மூவரும் அவ்வகை யாமே.

பொருள் : சிவநெறியே மேலான நெறி, ஏனையவை பிறவியைத் தரும் நெறிகள். அவற்றைச் சாரின் மலத்தால் உளதாம் பிறவியாகிய ஒன்று உண்டு. தன் அகத்தே சிவ ஒளி தோன்றில் தவநெறியாம். பிரமன் விஷ்ணு உருத்திரர் ஆகிய மூவரும் பிறவியை நல்கும் அவநெறியினரேயாம்.

1537. நூறு சமயம் உளவா நுவலுங்கால்
ஆறு சமயம்அவ் ஆறுள் படுவன
கூறு சமயங்கள் கொண்ட நெறிநில்லா
ஈறு பரநெறி இல்லாம் நெறியன்றே.

பொருள் : சொல்லப் போனால் பல நூற்றுக் கணக்கான சமயங்கள் உளவாம். ஆறு சமயங்களும் அவ்வகையுள் அடங்கிவிடும். கூறப்பெறும் சமயங்கள் மேற் கொண்ட நெறிகளைக் கடந்த முடிவையுடையது சிவநெறி. இதுவே வீடு பேற்றை அளிக்கும் நெறியாகும்.

1538. கத்தும் கழுதைகள் போலும் கலதிகள்
சுத்த சிவன்எங்கும் தோய்வற்று நிற்கின்றான்
குற்றம் தெளியாதார் குணங்கொண்டு கோதாட்டார்
பித்தேறி நாளும் பிறந்திருப் பாரே.

பொருள் : பொருள் அறியாமல் கத்துகின்ற கழுதைகள் போன்றவர்கள் வீணர்கள் தூய்மையான சிவன் எங்கும் நீக்கம் அறநிறைந்து நிற்கின்றான். எனினும் தம்மிடம் குற்றம் நீங்காதார் அவனிடமுள்ள பெருமைக் குணங்களைப் பாராட்ட மாட்டார். உண்மை உணராது மயக்கம் அடைந்து பிறந்து இறந்து உழல்வார். (கோதாட்டுதல் - பாராட்டுதல்)

1539. மயங்குகின் றாரும் மதிதெளிந் தாரும்
முயங்கி இருவினை முழைமுகல் பாச்சி
இயங்கிப் பெறுவரேல் ஈறது காட்டில்
பயங்கெட்டு அவர்க்கோர் பரநெறி யாமே.

பொருள் : ஞான சாஸ்திரங்களை ஓதித் தெளிந்தாரும், ஓதாது பத்திமார்க்கத்தில் நின்றாகும், இருவினை நுகர்ந்து சுழுமுனை நாடியின் வழியே சென்று முடிவான பிரமரந்திரத்தில் ஓடி அருளைப் பெறுவரேல் அச்சந்தவிர்ந்து நிற்போர்க்கு ஒருமேலான நெறியாகும்.

1540. சேயன் அணியன் பிணியிலன் பேர்நந்தி
தூயன் துளக்கற நோக்கவல் லார்கட்கு
மாயன் மயக்கிய மானுட ராம்அவர்
காயம் விளைக்கும் கருத்தறி யார்களே.

பொருள் : முழுமுதற் சிவம், மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன் ஆதலின் தொலைவில் உள்ளோன். அவன் அருள் கண்ணால் காணும் தவமுடையார்க்கு உயிர்க்கு உயிராய் வெளிப்படுதலின் நெருக்கமாக உள்ளவனும் ஆவான். இயல்பாகவே பாசங்களினின்று நீங்கியவன் ஆதலின் பிணியிலன். அவன் திருப்பெயர் நந்தி, இயல் பாகவே தூய்மையாகிய வாலறிவினன். அவனை ஒருமனப் பட்ட நெஞ்சினராய் அசையாது நின்று இடையறாது நோக்கவல்லார்க்குப் பிறப்பறும்; சிறப்புறும் திருவடிப் பேரின்பம் எய்தும், பிறப்பு இறப்புக் உட்பட்டு உடம் பால் விளையும் துன்ப நிலையை அறியாது அதுவே இன்ப மென மயங்குவோர் மாயவன் மயக்கிற்பட்ட மருண்ட மாந்தராவர்.

1541. வழியிரண் டுக்கும்ஓர் வித்தது வான
பழியது பார்மிசை வாழ்தல் உறுதல்
சுழியறி வாளன்தன் சொல்வழி முன்னின்று
அழிவழி வார்நெறி நாடகில் லாரே.

பொருள் : நற்கதியாகிய முறையை அறிந்து வாழ்பவர்க்கும், அறியாது வாழ்பவருக்கும் வினைப் போகமாகிய உடம்வு வித்தாம். பூமியின்கண் வாழ்ந்து மீண்டும் பிறப்பையும் இறப்பையும் பெறுதல் பழியாகும். பிராணனைப் பிரமப்புழைக்குச் செலுத்தும் உபாயத்தைக் கற்பிக்கும் குரு வழிநின்று, தம்மை அகண்டா காரத்தில் ஒன்றுபடுத்திக் கொள்ளும் நெறியை விரும்பவில்லையே.

1542. மாதவர் எல்லாம் மாதேவன் பிரான்என்பர்
நாதம தாக அறிவயப் படுநந்தி
பேதஞ்செய் யாதே பிரான்என்று கைதொழில்
ஆதியும் அந்நெறி யாகிநின் றானே.

பொருள் : பெரிய தவமுடையார் அனைவரும் மகாதேவனாகிய பரசிவனைத் தம்மைச் செலுத்துபவன் என்று வணங்குவர். அவன் குரு மண்டலத்தில் நாதவடிவாக வெளிப்படுவதனால் அறியப்படத் தக்கவன். அந்த சப்த உணர்வே அவன் என்று வணங்குவாயாகில் அம் முதல்வனும் அந் நெறிக்கண் வெளிப் பட்டு அருள்வன்.

1543. அரநெறி அப்பனை ஆதிப் பிரானை
உரநெறி யாகி உளம்புகுந் தானைப்
பரநெறி தேடிய பத்தர்கள் சித்தம்
பரனறி யாவிடில் பல்வகைத் தூரமே.

பொருள் : எல்லாச் சமயங்கட்கும் தலைவனை, யாவற்றுக்கும் முன்னோனை, பக்தியினால் விரும்புவோரின் மன மண்டலத்தில் விளங்குவோனை, மேலான மார்க்கத்தை நாடிய பக்தர்களின் சித்தம் விரும்பித் தேடியபோது அவன் அறிந்து வெளிப்படாவிடில் சமய உண்மை அறிவதற்கு அருமையாகும்.

1544. பரிசறி வானவன் பண்பன் பகலோன்
பெரிசறி வானவர் பேற்றில் திகழும்
துரிசற நீநினை தூய்மணி வண்ணன்
அரிதவன் வைத்த அறநெறி தானே.

பொருள் : சீவர்களுக்கு அளிக்க வேண்டிய பரிசை அறிந்தவன், விரும்பின வரை ஆதரிக்கும் பண்பை உடையவன், ஒளிமயமானவன். வானவர் பெற்றுள்ள பேறுகளுக் கெல்லாம் அவனே பெரிய தலைமையாக வுள்ளவன். உன்னுடைய சந்தேக புத்தியை விட்டு நினைப்பாயாக, தூய்மையான ஒளிக்கல் போன்ற சோதியை உடையவன். அவன் வைத்த தர்ம மார்க்கமாவது அருமையானதாகும்.

1545. ஆன சமயம் அதுஇது நன்றெனும்
மாய மனிதர் மயக்க மதுஒழி
கானங் கடந்த கடவுளை நாடுமின்
ஊனங் கடந்த உருவது வாமே.

பொருள் : சமயங்களில் அது நல்லது என்று கூறும் மயக்கத்தையுடைய மனிதரது மயக்கச் சூழலை விட்டு அகல்வாயாக, நாதாந்தத்தில் விளங்கும் சிவத்தை நாடுங்கள். மலமாயாகன்மங்களுடன் கலந்துள்ள ஊனுடலைக் கடந்துள்ள பிரணவ தேகத்தைப் பெறுவீர்கள்.

1546. அந்நெறி நாடி அமரரும் முனிவரும்
செந்நெறி கண்டார் சிவனெனப் பெற்றார்பின்
முன்னெறி நாடி முதல்வன் அருளிலார்
சென்னெறி செல்லார் திகைக்கின்ற வாறே.

பொருள் : மேலே சொன்ன நாத மார்க்கத்தை அறிந்து அடைந்த தேவர்களும் முனிவர்களும், செம்மையாகிய நெறி இதுவே என்று கண்டு சிவமாம் பேறு பெற்றார்கள். அப்படியிருக்க மக்கள் வகுத்த வேறு நெறிகளை நாடி முதல்வனது அருளைப் பெறாதார் செல்லுகின்ற நெறியில் சொல்லாமல் திகைக்கின்றவாறு என்னே !

1547. உறுமாறு அறிவதும் உள்நின்ற சோதி
பெறுமாறு அறியின் பிணக்கொன்றும் இல்லை
அறுமாறு அதுவான அங்கியுள் ஆங்கே
இறுமாறு அறிகிலர் ஏழைகள் தாமே.

பொருள் : நாம் அடையத்தக்க நெறியாக அடைவதும், உயிர்க்கு உயிராக நிற்கின்ற சோதியைப் பெறுதற்குரிய நெறியில் நின்று அறியில் யாதொரு மாறுபடும் உண்டாகாது. நம்முடைய மலகன்மங்கள் நீங்குவதற்குரிய வழியாக உள்ள செந்தீயுள் நின்று தற்போதும் கழிவதை மக்கள் அறிகின்றலர். இவர் அறிவில்லாதவர் தாமே.

1548. வழிநடக் கும்பரிசு ஒன்றுண்டு வையம்
கழிநடக் குண்டலர் கற்பனை கேட்பர்
சுழிநடக் கும்துய ரம்அது நீக்கிப்
பழிநடப் பார்க்குப் பரவலும் ஆமே.

பொருள் : இறைவனை அடைய வகுத்த வழி மேலே சொன்ன வழி ஒன்றேயாகும். உலக இன்பத்தில் மிகவும் நாட்டங் கொண்டு நடப்பவர் பிறர் கூறும் கற்பனைகளைக் கேட்பர். பிறவிச் சுழியில் அகப்பட்டு நடக்கும் துன்பத்தை நீக்கி, உலக இன்பத்தைப் பழித்த நடப்பவர்க்குப் பிறரல் புகழவும் ஆகும்.

1549. வழிசென்ற மாதவம் வைகின்ற போது
பழி செல்லும் வல்வினைப் பற்றறுத்து ஆங்கே
வழிசெல்லும் வல்வினை யார்திறம் விட்டிட்டு
உழிசெல்லில் உம்பர் தலைவன்முன் ஆமே.

பொருள் : மேலே உணர்த்திய சிவநெறி பற்ற அத்தவம் நிலை பெற்ற போது, பழிபாவங்களில் செலுத்தும் வலிமையான வினைத் தளைகளை அறுத்து, அவ்வினை வழியே செல்லும் தீவினை யாளரையும் புறக்கணித்து நீங்கி, பிரமரந்திரத் தொளைவழி செல்லின் தேவ தேவனாகிய சிவன் வெளிப்படுவான்.

19. நிராகாரம்

(நிராகாரம் - வடிவின்மை, அருவம். இங்கு அருவமான உயிர் உணர்வில் அருவமான இறைவன் உணர்வாய்க் கலந்திருக்கும் தன்மையைக் கூறுவது)

(நிராசாரம் என்று தலைப்பிட்டு அல் ஒழுக்கம் என்று பொருள் கொள்வர் ஒரு சாரார்.)

1550. இமையங்க ளாய்நின்ற தேவர்கள் ஆறு
சமையங்கள் பெற்றவர் சாத்திரம் ஓதி
அமையறிந் தோம்என்பர் ஆதிப் பிரானும்
கமையறிந் தாருள் கலந்துநின் றானே.

பொருள் : இமயமலை போன்ற அசைவற நின்ற தேவர்கள் அவர்கள் நிலைமைக்கு ஏற்றவாறு ஆறு சமயங்கள் பெற்றனர். அவற்றிற்குரிய சாத்திரங்களாகிய பொருள் நூல்களை ஓதினர். அடைதற்காய் அமைந்த நிலையினை அறிந்தோம். என்பர். ஆதிப் பிரானாகிய சிவபெருமானும் பிழைபொறுக்கும் தன்மையராய்ப் பொறுமையுடன் ஒழுகுவாருடன் கலந்து நின்றருள்வான்.

1551. பாங்கமர் கொன்றைப் படர்சடை யானடி
தாங்கு மனிதர் தரணியில் நேரொப்பர்
நீங்கிய வண்ணம் நினைவுசெய் யாதவர்
ஏங்கி உலகில் இருந்தழு வாரே.

பொருள் : தாரும் கண்ணியும் ஆக முறையே மார்பினிடத்தும் தலையினிடத்தும் கொன்றைப் பூவால் அமைந்தவற்றைச் சூடி விளங்கும் திருச் சடையினையுடைய சிவபெருமான் திருவடிகளை மறவாது உளங்கொண்டு தாங்கும் மெய்யடியார்கள் இவ்வுலகில் தமக்குத் தாமே ஒப்பாக விளங்குவர். சிவபெருமானை நினையாமல் செந்நெறியை நீங்கித்தாம் புன்னெறியிற் செல்லும் புரையாகிய குற்றத்தினை எண்ணாதவர் செய்வது இன்னதென்று அறியாமல் இவ்வுலகில் ஏங்கி இருந்து அழுவர்.

1552. இருந்தழு வாரும் இயல்புகெட் டாரும்
அருந்தவம் மேற்கொண்டங்கு அண்ணலை எண்ணில்
வருந்தா வகைசெய்து வானவர் கோனும்
பெருந்தன்மை நல்கும் பிறப்பிலி தானே.

பொருள் : உலகில் இருந்து சூழ்நிலை காரணமாக வருந்தி அழுகின்ற வரும் நல்ல நிலையிலிருந்த அதனை இழந்து வருந்துவோரும் அண்ணலாகிய சிவத்தை நினைத்து அருந்தவம் மேற்கொண்டால் அவரவர்க்குரிய இன்னல்களைப் போக்கி வருந்தாமல் செய்து தேவதேவனும் பிறப்பில்லாதவனுமாகிய சிவன் பெரிய தகுதியை அளித்தருளுவான்.

1553. தூரறி வாளர் துணைவர் நினைப்பிலர்
பாரறி வாளர் படுபயன் தான்உண்பர்
காரறி வாளர் கலந்து பிறப்பர்கள்
நீரறி வார்நெ மாமுகி லாமே.

பொருள் : குற்றமாகிய தூர்வையைக் குணமென அறிந்து தம்மனம் போல ஒழுகுபவர் யாண்டும் உள்ளுறு துணையாக நிற்கும் அம்மை யப்பரின் நினைப்பில்லாதவராவர். நிலையாத உலகமே பெரிதென மயங்கி அவ்வழி ஒழுகுவார் உலகப் பயனை நுகர்ந்து பிறப்பர். அறியாமை வயப்பட்டுத் தம் முனைப்புடன் ஒழுகுவார் மீண்டும் மீண்டும் இறந்து பிறந்து இன்னல் உறுவர். திருவடி உணர்வாகிய அருள்நீர் அறிவார் அத்திருவடி உணர்வாக நின்று திருவருள் வண்ணமாவர்.

1554. அறிவுடன் கூடி அழைத்தோர் தோணி
பறியுடன் பாரம் பழம்பதி சிந்தும்
குறியது கண்டும் கொடுவினை யாளர்
செறிய நினைக்கிலர் சேவடி தானே.

பொருள் : அறிவோடு கூடி அறிந்து அனுபவிப்பதோர் தோணியாகிய சிவம், வினைகளுக்குச் சேமிப்பான இடமாகிய காரண சரீரத்தை அழிக்கும் தூணாகாரமான சோதியின் இயல்லை அறிந்திருந்தும், கொடிய வினைக் கூட்டத்தை உடையார் சிவபெருமானது திருவடியைப் பொருந்த நினைக்கவில்லையே. (பறி - மீன்பிடிக்கும் கருவி, குறி - தூண் போன்ற சோதி. தோணி - சிவத்தின் திருவடி.)

1555. மன்னும் ஒருவன் மருவு மனோமயன்
என்னின் மனிதர் இகழ்வர்இவ் ஏழைகள்
துன்னி மனமே தொழுமின் துணையிலி
தன்னையும் அங்கே தலைப்பட லாமே.

பொருள் : நிலைபெற்ற ஒப்பில்லாத சிவபெருமான் அன்பால் நினைவாரது உள்ளக் கமலத்தின் கண் அவர் நினைந்த வடிவோடு பொருந்தி விளங்கும் மனோமயன் ஆவன். இவ் உண்மையினை மெய்யடியார்கள் கூறக்கேட்கும் மக்கள் அதனைப் பொருட்படுத்துகின்றார் இல்லை. பொருட்படுத்தாது இகழ்வார் தாழ்ந்த அறிவினை உடையவர் ஆவர். அவ்வழிச் செல்லாமல் சிவபெருமானை மனங்கொண்டு நெருங்கித் தொழுங்கள். தொழுதால் ஒப்பில்லாத அவன் அப்பொழுதே வெளிப்பட்டருள்வன். அருளவே அவன் திருவடியயைக் கூடி இன்புறலாம்.

1556. ஓங்காரத்து உள்ளொளி உள்ளே உதயமுற்று
ஆங்காரம் அற்ற அனுபவம் கைகூடார்
சாங்காலம் உன்னார் பிறவாமை சார்வுறார்
நீங்காச் சமயத்துள் நின்றொழித் தார்களே.

பொருள் : ஓங்காரத்தின் உள்ளொளி வண்ணமாக இருப்பவன் சிவன். அவன் அருளின் தோற்றம் அங்கே உண்டாக ஆங்காரம் அறும். அறவே சிவனடி இன்ப நுகர்வு கைகூடும். இந்நிலைமை கைகூடாதவர் தங்கட்கு இறப்பு உண்டென எண்ணார். எனவே பிறவாமையைச் சார்வுறார். இத்தகையோர் பிறப்பு இறப்பினைத் தரும் புறச்சமய நெறியில் உழல்வர்.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் - Page 2 Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Mon Mar 26, 2012 3:54 pm

20. உட்சமயம்

(உட்சமயமாவது சீவனுள் விளங்கும் சிவச் சோதியை அறியச் செய்தல். இதனை ஒளிநெறி அல்லது சன்மார்க்கம் என்பர்.)

1557. இமையவர் தம்மையும் எம்மையும் முன்னம்
அமைய வகுத்தவன் ஆதி புராணன்
சமயங்கள் ஆறும்தன் தாளிணை நாட
அமைஅங்கு உழல்கின்ற ஆதிப் பிரானே.

பொருள் : தேவர்களையும் சீவர்களாகிய எம்மையும் பழமையாகவே தனுகரணங்களைத் தந்து உலகில் பொருந்தி அனுபவிக்கும்படி வைத்தவன் மிகப் பழமையானவன். அகச் சமயங்கள் ஆறும் தனது திருவடியை நாட அமைய அவற்றில் கலந்து நின்று வியாபித்திருப்பவனே முதல்வனாவான்.

இவ் வுண்மையறியாது சிலர் அச்சமயங்களில் நின்று மேல்நோக்காது உழல்கின்றனர் எனினுமாம். (இமையவர் - இமயமலைவாசிகள். அறு உட்சமயங்களாவன. சைவம், வைணவம், சாக்தம், சௌரம், காணாபத்தியம், கௌமாரம் என்பன.)

1558. ஒன்றது பேரூர் வழியாறு அதற்குள
என்றது போல இருமுச் சமயமும்
நன்றிது தீதிது என்றுரை யாளர்கள்
குன்று குரைத்தெழு நாயைஒத் தார்களே

பொருள் : ஒரே ஊருக்குச் செல்ல ஆறுவழிகள் உள்ளன. அது போல ஆறு சமயங்களும் ஒரே பொருளை அடைய வுள்ளன. இது நன்று அது தீது என்று சொல்பவர்கள் மலையைப் பார்த்துக் குரைத்த நாயைப்போல ஒரு பயனையும் எய்தார்.

1559. சைவப் பெருமைத் தனிநா யகன்தன்னை
உய்ய உயிர்க்கின்ற ஒண்சுடர் நந்தியை
மெய்ய பெருமையர்க்கு அன்பனை இன்பம்செய்
வையத் தலைவனை வந்தடைந்து உய்மினே.

பொருள் : பெருமை வாய்ந்த சைவ சமயத்துக்கு ஒப்பற்ற தலைவனை, சீவர்கள் உய்யும் வண்ணம் உயிர்க்கு உயிராய் இருக்கின்ற ஒளிவடிவான குருநாதனை, உண்மை உணர்வு பெற்றார்க்கு அன்பனை, இன்பம் தருகின்ற உலக முதல்வனை வந்து அடைந்து உய்தி பெறுவீர்களாக.

1560. சிவனவன் வைத்ததோர் தெய்வ நெறியில்
பவனவன் வைத்த பழிவழி நாடி
இவனவன் என்பது அறியவல் லார்கட்கு
அவனவன் அங்குள தாம்கடன் ஆமே.

பொருள் : சிவபெருமான் சீவர்கள் உய்திபெறுமாறு அமைத்த நெறியில் கடவுளாகிய அவன் வைத்த பழமையான வழியே சென்று இச்சீவனே சிவன் என்று உணரவல்லார்க்கு அவ்வச் சமயத்திலும் உள்ள அப்பெருமான் அங்குத் தோன்றுவது அதன் கடமையாம்.

1561. ஆமாறு உரைக்கும் அறுசம யாதிக்குப்
போமாறு தானில்லை புண்ணியம் அல்லதங்கு
ஆமாம் வழியாக்கும் அவ்வே றுயிர்கட்கும்
போமாறுஅவ் ஆதாரப் பூங்கொடி யாளே.

பொருள் : அங்ஙனம் சீவர்கள் உய்தி பெறும் வண்ணம் அமைக்கப் பட்ட ஆறுசமய உச்சிக்குச் சீவர்கள் தாமாகப் போகும் வழிதான் இல்லை. அவர் செய்த புண்ணியமே அங்கு அவ்வழியை அமைப்பதாகும். அங்ஙனம் சீவர்கள் மேலேறிச் செல்லத் தாங்கி நிற்பது திருவருளின் ஆற்றலாகும்.

1562. அரன்நெறி யாவது அறிந்தேனும் நானும்
சிவநெறி தேடித் திரிந்தஅந் நாளும்
உரநெறி யுள்ளக் கடல்கடந்து ஏறும்
தரநெறி நின்ற தனிச்சுடர் தானே.

பொருள் : அரனை அடைவதற்குரிய வழியாவதை அறிந்தேன். ஆகிய நானும் வேறு சில நெறிகளைத் தேடித் திரிந்த அக்காலத்து வன்மை மிக்க நெறியில் எண்ணமாகிய கடலைக் கடந்து ஏறுவதற்கு மேன்மையான நெறியாக நின்றது ஒப்பற்ற சுடரேயாம்.

1563. தேர்ந்த அரனை அடைந்த சிவநெறி
பேர்ந்தவர் உன்னிப் பெயர்ந்த பெருவழி
ஆர்ந்தவர் அண்டத்துப் புக்க அருள்நெறி
பேந்து புனைந்து புணர்நெறி யாமே.

பொருள் : ஆராய்ச்சியாலும் அனுபவத்தாலும் சிவனே பரம்பொருள் எனத் தெளிந்தடைந்த சிவநெறி புறச்சமய நெறி நின்றவர் ஆராய்ந்து மீண்டும் வந்தடைந்த பெருநெறியாம். அகச் சமயத்துள் பொருந்தியவரும் அவரவர் பக்குவத்துக்கேற்ப அனுபவம் பெற அந்தந்த அண்டங்களுக்குச் செல்ல அருளும் நெறி அந்தந்த முத்திகளில் நின்று மீண்டும் வந்த பொருந்தி உய்திபெறும் நெறியாம். திருநாவுக்கரசர் இதற்குத்தக்க சான்றாவார்.

1564. ஈரு மனத்தை இரண்டற வீசுமின்
ஊரும் சகாரத்தை ஓதுமின் ஓதியே
வாரும் அரன்நெறி மன்னியே முன்னியத்
தூரும் சுடரொளி தோன்றலும் ஆமே.

பொருள் : புறப்பொருளில் செல்லும் மனத்தை அகப்பொருளாகிய சிவத்தைப் பொருந்துமாறு நிறுத்துங்கள். பஞ்சாட்சரத்தை ஓதுங்கள். அரனுடைய நெறியைப் பொருந்தி இச்சாதனையைச் செய்து வாருங்கள். நெற்றிக்கு முன்னே செந்நிறம் பொருந்திய ஒளி தோன்றலும் ஆகும்.

1565. மினற்குறி யாளனை வேதியர் வேதத்து
அனற்குரி யாளனை ஆதிப் பிரான்தன்னை
நினைக்குறி யாளனை ஞானக் கொழுந்தின்
நயக்குறி காணில் அரன்நெறி யாமே.

பொருள் : யோகக் காட்சியினர்க்கு மின்னல்போன்ற ஒளியில் வெளிப்படுபவனை, அந்தணர் ஓம்பும் வேள்வித் தீயில் வெளிப்படுபவனை, முழுமுதற் கடவுளை, எவ்வுருவில் நினைத்தாலும் அவ்வுருவில் வெளிப்படுபவனை பரஞானத்தில் ஒளிமயமாகக் காணில் அதுவே அரன் நெறியாகிய சைவ நெறியாம்.

1566. ஆய்ந்துண ரார்களின் ஆன்மாச் சதுர்பல
வாய்ந்துண ராவகை வகைநின்ற அரன்நெறி
பாயந்துணர் வார்அரன் சேவடி கைதொழுது
ஏய்ந்துணர் செய்வதோர் இன்பமும் ஆமே.

பொருள் : ஆராய்ந்து ஒளி நெறியே சிறந்தது எனத் தெளியாத ஆன்மாவின் ஆற்றல் பலவாகும். அவர் சேர்ந்து அறியாவண்ணம் நின்ற அரன்நெறி, புகுந்து உணர்வார் அரனது திருவடியைப் பற்றி நின்று, பொருந்தி உணர்வது ஒப்பற்ற இன்பமாகும்.

1567. சைவ சமயத் தனிநா யகன்நந்தி
உய்ய வகுதத குருநெறி ஒன்றுண்டு
செய்வச் சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துய்ய
வையத் துளார்க்கு வகுத்துவைத் தானே.

பொருள் : கொலையும் புலையும் விடுத்த செந்நெறியாகிய சைவத்தின் பெருமைமிக்க ஒப்பில்லாத முதல்வன் நந்தியெம் பெருமான். அவன் ஆருயிர்கள் அனைத்தும் திருவடி பெற்று உய்யுமாறு வகுத்தருளிய குருநெறி ஒன்றுண்டு. அதுவே தெய்வச் சிவனெறி. அந்நெறியாகிய சன்மார்க்கத்தைச் சேர்ந்து ஒழுகி உய்யும்படி நிலவுலகத்து உள்ளார்க்குச் செந்தமிழால் வகுத்தருளினன். தெய்வச் சிவனெறி எனினும் சன்மார்க்கமெனினும் ஒன்றே.

1568. இத்தவம் அத்தவம் என்றிரு பேரிடும்
பித்தரைக் காணின் நகும் எங்கள் பேர்நந்தி
எத்தவம் ஆகிலென் எங்குப் பிறக்கிலென்
ஒத்துணர் வார்க்ஒல்லை ஊர்புக லாமே.

பொருள் : இத்தவம் நல்லது அத்தவம் நல்லது என்று பேதஞானம் படைத்த அறிவிலிகளைக் கண்டால் எங்கள் சிவபெருமான் நகை செய்யும் எந்தத்தவமாக இருந்தால் என்ன ? அல்லது எங்கே பிறந்தால் என்ன ? அபேதமாக நின்று உணர்வார்க்கு முத்தியாகிய ஊரை அடைதல் கூடும்.

1569. ஆமே பிரான்முகம் ஐந்தொடும் ஆருயிர்
ஆமே பிரானுக்கு அதோமுகம் ஆறுள
தானே பிரானுக்கும் தன்சிர மாலைக்கும்
நாமே பிரானுக்கு நரரியல் பாமே.

பொருள் : சதாசிவம் முகங்கள் ஐந்தொடும் எல்லா உயிர்களிடமும் பொருந்தி விளங்கும், அப்பிரானுக்கு இந்த ஐந்து முகங்களோடு கீழே அதோமுகம் என்ற ஒன்றும் சேர்ந்து ஆறுமுகங்கள் உள்ளன. சிவத்தை அறிந்து வழிபடுவார்க்குச் சதாசிவம் போல் ஆறு முகங்களும் ஒன்றாய் விடும். சிவத்தை அறிந்து வழிபடாத போது அதோமுகம் கீழ்நோக்கியே செலுத்தும்.

1570. ஆதிப் பிரான்உலகு ஏழும் அளந்தவன்
ஓதக் கடலும் உயிர்களு மாய்நிற்கும்
பேதிப்பு இலாமையின் நின்ற பராசக்தி
ஆதிக்கண் தெய்வமும் அந்தமும் ஆமே.

பொருள் : அம்மையோடு கூடிய அப்பனாகிய சிவபெருமான் உலகை அளந்த மாலாகவும், அம்மாலின் நிறம் போலும் ஒலியுடைய கடலாகவும், அக்கடல் சூழ் உலகில் வாழும் பல்÷ வறு உயிர்களாகவும், கலப்பால் ஒன்றாய் நிற்பன், அவன் வனப்பாற்றலாகிய திருவருள் அம்மையுடன் பிரிப்பின்றி மரமும் காழ்ப்பும் போல ஒருவனே இரு நிலையுமாய் நிற்பன். அவ்அம்மையே நடப்பாற்றலாகிய ஆதியும் நிற்பன். அவ்அம்மையே நடப்பாற்றலாகிய ஆதியும் ஆவள். அவளே ஒடுக்கத்தைச் செய்யும் ஆண்டவனும் ஆவள். அவளே ஒடுக்கத்தைச் செய்யும் ஆண்டவனும் ஆவள். ஆதி - நடப்பாற்றல். ஆதிக் கண் - சிருஷ்டி ஆரம்பத்திலும் அந்தமும் ஒடுங்கும் காலத்திலும்.

1571. ஆய்ந்தறி வார்கள் அமரர்வித் தியாதரர்
ஆய்ந்தறி யாவண்ணம் நின்ற அரனெறி
ஆய்ந்தறிந் தேன்அவன் சேவடி கைதொழ
ஆய்ந்தறிந் தேன்இம்மை அம்மைகண் டேனே.

பொருள் : தற்போத முனைப்பால் ஆராய்ந்து அறிவார்கள் அமரர் தந்தருவர் முதலியோர். ஆராய்ச்சியால் அறிய முடியாவகை நின்ற அரனெறியான சைவத்தை, அவன் திருவடியை வழிபடும் பேறு பெற்றமையால் ஆராய்ந்து உணர்ந்தேன். அதனால் இப்பிறப்பிலேயே மறுமை இன்பத்தினைப் பெற்றேன். அன்போடு சிவனைப் பரவினால் பிறவி நீங்கும்.

1572. அறியஒண் ணாதுஅவ் வுடம்பின் பயனை
அறியஒண் ணாத அறுவகை யாக்கி
அறியஒண் ணாத அறுவகைக் கோசத்து
அறியஒண் ணாததோர் அண்டம் பதிந்ததே.

பொருள் : உடம்பைப் பெற்றபயன் இறைவனை அறிவதே என்பதை அக்கள் அறியவில்லை. அறியமுடியாமல் ஏகாமாயுள்ள ஆகாயத்தை ஆறு ஆதாரங்களில் இயங்கும்படி வைத்து அறியமுடியாத வகையாக ஆறு கோசங்களில் அனுபவம் பெறச்செய்து ஆகாய மயமான சிவம் அறியவொண்ணாமல் அண்டமாய் உள்ளது.

ஐந்தாம் தந்திரம் முற்றிற்று.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் - Page 2 Empty திருமந்திரம் | ஆறாம் தந்திரம்

Post by இறையன் Tue Mar 27, 2012 1:16 pm

1. சிவகுரு தரிசினம்

(தம்முதல் குருவுமாய்த் தோன்றல்)

(சிவகுரு தரிசனமாவது உள்ளத்தில் உறையும் சிவனைக் காண்டல். அக்குருநாதன் பிரணவ உபதேசத்தால் குற்றங்களை நீங்கச் செய்து உண்மை இயல்புகளை உணர்த்துவார். இது சத்தியோ நிர்வாண தீட்சை எனப்பெறும்.)

1573. பத்திப் பணித்துப் பரவு மடிநல்கிச்
சுத்த வரையால் துரிசறச் சோதித்துச்
சத்தும் அசத்தும் சதசத்தும் காட்டலால்
சித்தம் இறையே சிவகுரு வாமே.

பொருள் : பத்தியை உண்டாக்கி, திருவடியை வணங்கச் செய்து பிரணவ உபதேசத்தால் குற்றங்களை நீங்கச் செய்து சத்தும் அசத்தும் சதசத்துமான பொருள்களின் உண்மை இயல்புகளை உள் நின்று உணர்த்தியமையால், சித்தத்தில் உள்ள இறைவனே குரவானவன்.

மந்திரம் கிரியை பாவனையற்றது, பிரணவ உபாசகருக்கு அசத்தாகிய பாசமும், சதசத்தாகிய பசுவும், சத்தாகிய சிவமும் விளங்கும்.

சிவகுருவாக எழுந்தருளி வருபவன் உறுதியாக விழுமிய முழுமுதற் சிவனேயாவன்.

1574. பாசத்தைக் கூட்டியே கட்டிப் பறித்திட்டு
நேசித்த காயம் விடுவித்த நேர்நேரே
கூசற்ற முத்தியில் கூட்டலா நாட்டத்தது
ஆசற்ற சற்குரு அம்பல மாமே.

பொருள் : ஆணவத்தால் மறைப்புண்டு கிடந்து சீவனை மாயா மலத்தைக் கூட்டி ஆணவத்தை அகற்றி, உடலே தான் என்றிருந்த ஆசையை அறுத்து, நேருக்கு நேரே நிலைகுலையாத முத்தியால் கூட்டுவதற்கு உபகாரப்படுவது, உபாசகனின் ஒளி மண்டலத்தில் விளங்கும் உருவமற்ற சத்குருவாம். சற்குருவின் அருளால் பாசநீக்கம் பெற்று முதல் நிலைக்குச் செல்லலாம்.

1575. சித்திகள் எட்டோடும் தண்சிவ மாக்கிய
சுத்தியும் எண்சித்தித் தூய்மையும் யோகத்துச்
சத்தியும் மந்திர சாதக போதமும்
பத்தியும் நாதன் அருளிற் பயிலுமே.

பொருள் : அணிமாதி சித்திகள் எட்டுடனும், சாதகனைச் சிவமாகச் செய்த பக்குவ நிலையும், வாமாதி எண் சத்திகளால் பந்திக்காத தூய்மையும் யோகத்தால் உண்டாகும் ஆற்றலும் மந்திரங்களைத் தியானிப்பதால் விளையும் ஞானமும் இறைவன்பால் உண்டாகும் அன்பும் ஆகிய எல்லாம், சிவகுருவின் அருளால் நடைபெறும்.

1576. எல்லா உலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய்
நல்லார் உள்ளத்து மிக்கருள் நல்கலால்
எல்லாரும் உய்யக்கொண்டு இங்கே அளித்தலால்
சொல்லார்ந்த நற்குருச் சுத்த சிவமே.

பொருள் : முப்பத்தாறு தத்துவங்களுக்கு உட்பட்ட உலகங்கள் அனைத்திற்கும் அப்பாற்பட்ட சிவன், இவ்வுலகத்தில் தென்நாடுடைய சிவனேயாய்த் திகழ்கின்றனன். அவன் நல்லாராகிய சிவஞானிகள் உள்ளத்து மிக்க அருள் செய்தல் போல் ஏனையார்க்கும் செய்தற் பொருட்டுப் புறத்தே, தம் முதல் குருவுமாய்த் தோன்றி அருள்வன். அதனால் எல்லாரையும் இப்பிறப்பு ஒன்றிலேயே உய்யக் கொண்டருள்வன். அதனால் புகழமைந்த நற்குரு இறய்கைச் சிவனே.

1577. தேவனும் சுத்த குருவும் உபாயத்துள்
யாவையும் மூன்றாய் உனக்குண்டு உரையாலே
மூவாப் பசுபாசம் மாற்றியே முத்திப்பால்
யாவையும் நல்கும் குருபரன் அன்புற்றே.

பொருள் : தேவனும் சுத்த குருவாகவும் உள்ள சிவன் ஆகமத்துள் எல்லாம் பதி பசு பாசம் என்று மூன்றாகக் கருதுவது அறிந்து உபதேசத்தாலே அழிவற்ற சீவனது பாசத்தை நீக்கியே குருபரன் அன்புகொண்டு முத்தியின்கண் யாவையும் அருளும். சிவன் அன்புகொண்டு சீவரது தகுதிக்கேற்பக் குருவாக வந்து முத்தி அருளும்.

1578. சுத்த சிவன்குரு வாய்வந்து தூய்மை செய்து
அத்தனை நல்கருள் காணா அதிமூடர்
பொய்த்தகு கண்ணான் நமர்என்பர் புண்ணியர்
அத்தன் இவனென்று அடிபணி வாரே.

பொருள் : சுத்த சிவனே சீவர்களிடம் கருணை கொண்டு குருவாக வந்து மலக்குற்றத்தினை நீக்கி, அத்துணை புரியும் அருளினைக் காணாது அறிவிலிகள், பொய் மிகுந்த புவன போகங்களையே பொருளெனக் கண்டறியும் பாசம் பற்றியவர். குருவை நம்மவர் என்று தம்மோடு ஒப்பவைத்து எண்ணுவர். சிவபுண்ணியமுடைய ஞானியர் சிவனே இவன் என்று அடிபணிந்து வணங்குவர்.

1579. உண்மையிற் பொய்யை ஒழித்தலும் உண்மைப்பார்
திண்மையும் ஒண்மைச் சிவமாய அவ்அரன்
வண்மையும் எட்டெட்டுச் சித்தி மயக்கமும்
அண்ணல் அருளன்றி யாரறி வாரே.

பொருள் : ஞானத்தால் பொய்மை நீக்குதலும், பிருதிவி தத்துவத்தின் வலிமையும், சிவமாகிய அவ் அரனது உபகாரமும், அறுபத்து நான்கு கலைகளால் வரும் மயக்க அறிவும் அண்ணலின் சத்தி பதியாவது யார் அறியமுடியும் ? குருவருளால் அஞ்ஞானம் நீங்கி இறைவனது உபகாரம் விளங்கும்.

1580. சிவனே சிவஞானி ஆதலால் சுத்த
சிவனே எனஅடி சேரவல் லார்க்கு
நவமான தத்துவ நம்முத்தி நண்ணும்
பவமானது இன்றிப் பரலோகம் ஆமே.

பொருள் : சிவனே சிவஞானியாக அமைவதால், தனக்கு உபதேசம் செய்யும் குருவைச் சிவனென்று எண்ணித் திருவடியை அடைவார்க்கு, சிவத்தினது தோழமையும் நல்ல முத்தியும் பொருந்தும். அவர் பிறப்பின்றி மேலான சிவலோகத்தைச் சென்றடைவர். சிவகுருவை வழிபட்டார்க்குப் பிறப்பு இல்லை.

1581. குருவே சிவமெனக் கூறினன் நந்தி
குருவே சிவமென் பதுகுறித்து ஓரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே உரையுணர் அற்றதோர் கோவே.

பொருள் : எனது குரு மண்டலத்தில் விளங்கும் நந்தி குருவே சிவம் என உபதேசித்தான். குரு மண்டலமே சிவனுமாய் உயிருக்குத் தலைவனுமாய் உள்ளது. குருமண்டலமே வாக்கு உணர்வைக் கடந்து விளங்கம் அரசனாகும். இத்தகைய பெருமையுடைய குருமண்டலத்தில் சிவம் உள்ளிருந்து விளங்குவதைச் சாமானியர் அறியாதவராக உள்ளார்.

1582. சித்த யாவையும் சிந்தித்து இருந்திடும்
அத்தம் உணர்த்துவ தாகும் அருளாலே
சித்தம் யாவையும் திண்சிவம் ஆனக்கால்
அத்தனும் அவ்விடத் தேயமர்ந் தானே.

பொருள் : அத்தனாகிய சிவபெருமான் தன் திருவருளால் சீவர்களுக்கு உள்நின்று உணர்த்தி யருள்வன். அதனால் எண்ணமாகிய சித்தம் யாவற்றையும் உள்ளவாறு உணர்ந்து இருந்திடும். அம்முறையில் எண்ணமானது இடையறாது. சிவத்தையே நாடுதலால் எண்ணம் முதலிய கருவிகள் அனைத்தும் சிவக் கருவியாகச் சிறக்கும். அத்தனாகிய சிவபெருமானும் அச்சீவன் தானாகவே அமர்ந்திடுவன்.

1583. தான்நந்தி சீர்மையுள் சந்தித்த சீர்வைத்த
கோன்நந்தி எந்தை குறிப்பறி வாரில்லை
வான்நந்தி யென்று மகிழும் ஒருவற்குத்
தான் நந்தி அங்கித் தனிச்சுடர் ஆமே.

பொருள் : சிவமாகிய தானே விளங்கும் சிறப்பான குரு மண்டலத்துள் பொருந்துவதால் அமையும் பெருமையை வைத்த தலைவனாகிய நந்தி பெருமானது குறிப்பை உணர்வார் இல்லை. ஆகாயத்தில் குருமண்டலத்தில் விளங்குபவன் என்று மகிழ்ந்திருப்பார்க்கு, முன்னர் அக்கினி மண்டலத்தில் விளங்கிய அரசனே ஒப்பற்ற சிவ சூரியனாம்.

1584. திருவாய சித்தியும் முத்தியும் சீர்மை
மருளாது அருளும் மயக்கறும் வாய்மைப்
பொருளாய வேதாந்த போதமும் நாதன்
உருவாய் அருளாவிடில் ஓர்ஒண் ணாதே.

பொருள் : வாராத செல்வமாகிய திருவடிப்பேறும் வீடும் அவ் அவற்றின் சிறப்புக்களும் மயக்கம் உறாவண்ணம் அருளுதலும் மெய்ப்பொருள் உணர்த்திப் பொய்ப் பொருளின் மயக்கறுத்தலும் அம் மெய்ப் பொருளை உள்ளவாறு உணர்த்தும் திருநான்மறையின் முடிவும் அம்முடிபால் பெறப்படும் சித்தாந்த நுண்ணுணர்வும் சிவகுரு வடிவெடுத்துச் சிவபெருமான் அருளாவிடின் ஒருவராலும் உணர ஒண்ணாது என்க.

1585. பத்தியும் ஞானவை ராக்கிய மும்பர
சித்திக்கும் வித்தாம் சிவோகமே சேர்தலான்
முத்தியின் ஞானம் முளைத்தலால் அம்முளை
சித்தி யருள்தரில் தான்எளி தாமே.

பொருள் : சிவத்தினிடம் பத்தியும் அதனால் ஞானத்தைப் பெற வேண்டும் என்ற வைராக்கியமும் வீடுபேறடைய சாதனங்களாம். அவற்றால் சிவமேதான் என்ற பாவனை முதிர்ந்து வீடு பேற்றிற்கு ஏதுவான ஞானம் தோன்றி, அந்த ஞானப்பயிர் சத்தியின் அருளால் எளிதாக வளர்ந்து முத்தி கிட்டு. (வைராக்கியம் - விஷயங்களில் பற்றின்மை)

1586. பின்எய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை
முன்எய்த வைத்த முதல்வனை எம்இறை
தன்எய்தும் காலத்துத் தானே வெளிப்படும்
மன்எய்த வைத்த மனமது தானே.

பொருள் : இவ்வுலகில் நான் வீடுபேறு அடைவதற்காக அமைத்த இன்பப் பிறப்பை, முன்னமே எனக்கு உதவிய முதல்வனாகிய இறைவனை ஞானத்தில் அடையுங்காலத்தில் அவன் என்னிடமாகத்தானே வெளிப்படுவான். அங்ஙனம் எனது தலைவனை அடையத்துணை செய்தது என்னுடைய மனமேயாம்.

1587. சிவமான ஞானம் தெளியஒண்சித்தி
சிவமான ஞானம் தெளியஒண் முததி
சிவமான ஞானம் சிவபரத்தே ஏகச்
சிவமான ஞானம் சிவானந்தம் நல்குமே.

பொருள் : சிவமாக்கும் திருவடியுணர்வு சிவஞானம் எனப்படும். சிவஞானம் எனினும் திருவருள் எனினும் ஒன்றே, அத்திருவருளால் ஆருயிர்களின் அறிவு தெளிவுபெறும். அறிவு தெளியச் சிறந்த சித்திகள் கைகூடும். பற்று அறுதியாகிய வீடும் எய்தும். இவற்றால் சிவம் தானாதல் என்னும் சீரும் பொருந்தும். அத்திருவருளே தவலில் சிவ இன்பமாகும். (தவலில் - குற்றமற்ற)

1588. அறிந்துணர்ந்த தேன்இவ் அகலிடம் முற்றும்
செறிந்துணர்ந்து ஓதித் திருவருள் பெற்றேன்
மறந்தொழிந் தேன்மதி மாண்டவர் வாழ்க்கை
பிறந்தொழிந் தேன்இப் பிறவியை நானே.

பொருள் : திருவருள் துணையால் உலகியல் உண்மை முற்றும் அறிந்துணர்ந்தேன். சிவன் திருவடிக்குப் பேரன்பு வைத்துத் திருமுறையும் சித்தாந்த நூல்களும் ஓதியுணர்ந்து திருவருள் பெற்றேன் சிவனடி நினைக்கும் சிறந்த அறிவில்லாரின் பெரு வாழ்வையும் மறந்து ஒழிந்தேன். அதனால் சிறப்பில்லார் தம் திறத்துச் சேர்வை நீங்கிற்று. நீங்கவே பிறவியினின்று விடுபட்டேன். (மதி மாண்டவர் - அறிவு அறை போகியவர்.)

1589. தரிக்கின்ற பல்லுயிர்க்கு எல்லாம் தலைவன்
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்
பிரிக்கின்ற இந்தப் பிணக்கறுத்து எல்லாம்
கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண் டேனே.

பொருள் : வினைக்கு ஈடாகப்பெற்ற உடல் முதலியவற்றைச் சுமக்கின்ற பல்லுயிர்க்கு எல்லாம் தலைவனாகிய இறைவன் எவ்வாறு சீவர்களோடு பொருந்தி இருக்கின்றான் என்பதை எவ்வகையிலும் அறியார். சீவர்கள் அறியா வகை பிரிக்கின்ற தடைகளை நீக்கி எல்லா உயிர்களையும் தன் கருவில் கொண்ட இறைவனை நான் கண்டு கொண்டேன்.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் - Page 2 Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Tue Mar 27, 2012 1:17 pm

2. திருவடிப்பேறு

(திருவடி - திருவருள், கால் என்பது குண்டலினி, சத்தி, அது சிரசை நோக்கிப் பாய்வதே அருள். அவ்வாறு சிரசின் மேல் பொருந்தி யிருப்பதே திருவடிப்பேறு.)

1590. இசைந்தெழும் அன்பில் எழுந்த படியே
பசைந்திடும் ஈசரைப் பாசத்துள் ஏகச்
சிவந்த குருவந்து சென்னிகை வைக்க
உவந்த குருபதம் உள்ளத்து உவந்ததே.

பொருள் : திருவருள் வலத்தால் ஒத்து எழும் அன்பின்கண் அந்த அன்புருவாக விழைந்து எழும் சிவபெருமானை மேலும் மேலும் முறுகி வளரும் அன்பின்வழிச் சென்று தொழுவர். தொழவே, சிவபெருமான் சிவகுருவாக வந்து மும்மலங்களை அகற்றுவர். அகற்றி உச்சியின்கண் திருக்கையினைப் பொருந்துமாறு வைத்து அருளுவர். அருளவே அவர்தம் திருவடி சீவர்களின் உள்ளத்து இடனமைத்து வெளிப்பட்டு அமரும்.

1591. தாள்தந்த போதே தலைதந்த எம்இறை
வாள்தந்த ஞான வலியையும் தந்திட்டு
வீடு அந்தம் இன்றியே ஆள்கென விட்டு அருள்
பாடுஇன் முடிவைத்துப் பார்வந்து தந்ததே.

பொருள் : எம் தலைவனாகிய சிவபெருமான் தன் திருவடிகளை எம் உள்ளத்தே பதித்த பொழுது இது காறும் பொறி புலன்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த எமக்கு அவைகள் அடிமைப் படும்படியான தலைமையையும் தந்தருளினன். அறியாமையை ஈரும் வாளாகிய திருவடி உணர்வையும் தந்தருளினன். திருவருளால் தன் திருவடிகளை வெளிப்படுத்திச் சிவகுருவாய் எழுந்தருளிவந்து எம்முடி மேல் வைத்தருளினன்.

1592. தான்அவ னாகிச் சொரூபத் துவந்திட்டு
ஆன சொரூபங்கள் நான்கும் அகற்றின
ஏனைய முத்திரை ஈந்தாண்ட நன்நந்தி
தான்அடி முற்சூட்டித் தாபித்தது உண்மையே.

பொருள் : என்னைச் சிவம்வந்து ஆட்கொண்டு அவனாகச் செய்தபோது சிவசொரூபமாக நான் ஆனபோது முன்னர்ச் சிவமாக விளங்கிய அயன், அரி, அரன், மகேசுவரன் ஆகிய நான்கு சொரூபங்களும் என்னை விட்டு அகற்றப்பட்டன. இதர அடையாளங்களான அருவச் சதாசிவம் விந்து நாதம் சத்தி ஆகியவைகளை என்னிடம் சிறப்பாக விளங்கும்படி செய்து தனது திருவருளை முன்னமேயே பெற்றவன் என்ற உண்மையைத் தாபித்து அருளினன் நந்தி.

1593. உரையற்று உணர்வற்று உயிர்பரம் அற்றுத்
திரையற்ற நீர்போல் சிவமாதல் தீர்த்துக்
கரையற்ற சத்தாதி நான்கும் கடந்த
சொரூபத்த இருத்தினன் சொல்இறந் தோமே.

பொருள் : அனுபவ நிலையில் பேச்சற்று, உணர்வு கெட்டு, தான் என்ற நிலை அறியாமல் தெளிந்த நீர் போல அசைவில்லாமல் இருக்கும் சிவமாம் தன்மையும் கெட்டு நான்கு வாக்கினால் உதிக்கும் நாதத்தைக் கடந்த எல்லையற்ற தனது சொரூபத்துடன் ஒன்றாக்கினன். அதனால் பிறப்பு இறப்புக்கு எல்லையான பிரணவத்தைக் கடந்து விட்டோம்.

1594. குரவன் உயிர்முச் சொரூபமும் கைக்கொண்டு
அரிய பொருள்முத் திரையாகக் கொண்டு
பெரிய பிரானடி நந்தி பேச்சற்று
உருகிட என்னைஅங்கு உய்யக்கொண் டானே.

பொருள் : தீட்சை செய்ய அமைந்தகுரு சீடனின் தூல சூக்கும காரண உடல்களில் உள்ள காரணமான தடைகளை நீக்கி, அரிய உயிரைக் குருவினிடம் பொருந்தும்படி செய்து யாவருக்கும் தலைவனான சிவத்துடன் மௌன யோகத்தில் விளங்கிடப் பொருந்தி என்னை ஆண்டு கொண்டருளினன். குரு பிரணவ சமாதியில் பொருந்தும் படி அருளினான்.

1595. பேச்சற்ற இன்பத்துப் பேரானந் தத்திலே
மாச்சற்ற என்னைச் சிவமாக்கி மாள்வித்துக்
காச்சற்ற சோதி கடன்மூன்றும் கைக்கொண்டு
வாச்ச புகழ்மாளத் தாள்தந்து மன்னுமே.

பொருள் : முன்னிலையில் அமைந்த குரு மௌன ஆனந்தமாகிய பேரின்பத்தில் எனது பசுகரங்களை அழித்து என்னிடம் அகண்ட அறிவாகிய சிவத்தைப் பதிப்பித்து என்னை நான் அறியாமல் செய்து, வெப்பமற்ற சந்திர மண்டல ஒளியில் மனம் வாக்கு காயம் ஆகிய மூன்றையும் கைக்கொண்டு அவற்றால் அடைந்த பெருமைகளைஅழித்துத் திருவடிகளைச் சூட்டி என்னிடத்தில் நிலை பெற்றனன்.

1596. இதயத்தும் நாட்டத்தும் என்றன் சிரத்தும்
பதிவித்த பாதப் பராபரன் நந்தி
கதிவைத்த வாறும் மெய்காட் டியவாறும்
விதிவைத்த வாறும் விளம்பஒண் ணாதே.

பொருள் : எனது ஆத்மாவிலும் பார்வையிலும் எனது சிரத்தின் மீதும் திருவருளைப் பதிவித்த பராபரனாகிய குருவானவர், கீழ் முகமாகச் சுருண்டு கிடந்த குண்டலினியை ஊர்த்துவ கதியாக அமைத்தருளியதும், விந்து நாதங்களை உணர்த்தியருளியதும், எம்முறையில் விந்து நாதங்கள் தொழிற்படுமோ அம்முறையில் உணர்த்தி யருளியதும் பிறருக்கு எடுத்துச் சொல்ல முடியாததாகும்.

1597. திருவடி வைத்தென் சிரத்துருள் நோக்கிப்
பெருவடி வைத்தந்த பேர்நந்தி தன்னைக்
குருவடி விற்கண்ட கோனையெங் கோவைக்
கருவழி ஆற்றிடக் கண்டுகொண் டேனே.

பொருள் : என்னுடைய சிரசின் மீது திருவடியைச் சூட்டி, அருளால் பார்த்து, எங்குமாயிருக்கும் பெரிய வடி வினைத்தந்த பெரிய பெருமானை, குருவடிவில்வந்த தலை வனை, எம்முடைய அரசனை பிறவி உண்டாகும்வழி உலர்ந்து போகக் கண்டு கொண்டேன். பரிசமும் நோக்கமும் ஞான தீட்சையாகும்.

1598. திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலர மீட்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.

பொருள் : திருவடியுணர்வு ஆருயிர்களை மும்மலப் பிணிப்பினின்றும் செம்மையுற விடுவிக்கும். அவ்வுணர்வே கிடைத்தற்கரிய திருவருட் சித்திகளை எய்துவிக்கும் அதுவே சிவவுலக வாழ்வினைச் சேர்ப்பிக்கும் அவ்வுணர்வே சிவமாம் பெருவாழ்வையும் கூட்டுவிக்கும்.

1599. மேல்வைத்த வாறுசெய் யாவிடின் மேல்வினை
மால்வைத்த சிந்தையை மாயமது ஆக்கிடும்
பால்வைத்த சென்னிப் படரொளி வானவன்
தான்வைத்த வாறு தப்பித்த வாறே.

பொருள் : மேல்ஓதிய திருவருள் ஆணையின்வழி ஆருயிர்கள் செம்மையுற ஒழுகாவிட்டால், பண்டைப் பழவினைகளாகிய எஞ்சுவினைகள் உள்ளத்தை மயக்கி ஆசைக்குழியுள் வீழ்த்திப் பிறப்பு இறப்பிற் படுத்தி மாயமதாக்கும். பால்போலும் பிறையினைச்சூடியருளிய திருமுடியையுடைய அறிவுப் பேரொளிப் பெருமானாகிய சிவபெருமான் திருவடி சூட்டியவாறும், செந்நெறிக்கண் நிற்பித்தவாறும் திருவருளே.

1600. கழலார் கமலத் திருவடி என்னும்
நிழல்சேரப் பெற்றேன் நெடுமால் அறியா
அழல்சேரும் அங்கியுள் ஆதிப் பிரானும்
குழல்சேரும் என்னுயிர்க் கூடும் குலைத்தே.

பொருள் : ஒலிக்கின்ற கழல் பொருந்திய கமலத்தில் விளங்கும் திருவடிநிழலை அடையப்பெற்றேன். திருமாலும் காணமுடியாத வெம்மை பொருந்திய அக்கினி மண்டலத்தில் உள்ள ருத்திரமூர்த்தியும் என்னுடைய உடல்பற்றை அழித்துச் சுழுமுனை உச்சியில் ஒளி பொருந்திய சிவமாக அமைந்தது.

1601. முடிமன்ன ராகின்மூ வுலகமது ஆள்வர்
அடிமன்னர் இன்பத் தளவில்லை கேட்கின்
முடிமன்ன ராய்நின்ற தேவர்கள் ஈசன்
குடிமன்ன ராய்க்குற்ற மற்றுநின் றாரே.

பொருள் : முடிசூடிய மன்னராயின் மூன்று உலகங்களையும் ஒரு சேர ஆளுவர். ஆராயின் சிவனடியாராகிய மன்னர்கள் பெறும் இன்பத்துக்கு அளவே இல்லை. முடிமன்னராக உள்ள தேவர்களும் இறைவனுக்கு வழிவழி ஆட்செய்யும் குடி மன்னராயின் குற்றம் நீங்கி நின்றோர் õவர். இறைவன் முடிமன்ன ராயின் என்பதும் பாடம். அப்போது குற்றியலுகரமும் ஒற்றும் நீக்கி 12 எழுத்துக்கள் சரியாக உள்ளன.

1602. வைத்தேன் அடிகள் மனத்தினுள் ளேநான்
பொய்த்தே எரியும் புலன்வழி போகாமல்
எய்த்தேன் உழலும் இருவினை மாற்றிட்டு
மெய்த்தேன் அறிந்தேன் அவ்வேதத்தின் அந்தமே.

பொருள் : நான் என் மன மண்டலத்துள் இறைவனது திருவடிளான விந்து நாதங்களைப் பதித்துக் கொண்டேன். அதனால் பொய்யை மெய்போன்று காட்டி அக் கினியைத் தூண்டி நடத்தும் புலன்வழிச் செல்லாமல் மனத்தை மீட்டு, இளைத்தவனாகிய நான் படும் இருவினைத் துயரினை மாற்றி, அவ் வேதத்தின் முடிவாகிய ஞானானந் தத்தை அடைந்தேன. (வேதத்தின் அந்தம் - தத்துவமசி, அஃதாவது நீ எதை நினைக்கிறாயே அது ஆகிறாய் என்பது).

1603. அடிசார லாம்அண்ணல் பாதம் இரண்டும்
முடிசார வைத்தனர் முன்னை முனிவர்
படிசார்ந்த இன்பப் பழவடி வெள்ளைக்
குடிசார் நெறிகூடி நிற்பவர் கொள்கையே.

பொருள் : நன்னெறிச் செல்வார் திருவருள் துணையால் திருவடி சேர்வர். பண்டைப் பழஅடியாராகிய முழு நீறு பூசிய முனிவர்கள் சிவபெருமான் திருவடியிரண்டினையும் தம் முடிவுக்கு அணியாக அணிந்தனர். படி முறையான் ஏற்றமாக எய்தும் இன்ப நிலையினராகிய அடியாருள் இணங்கி வாழும் இன்பவெள்ளத்துள் மூழ்குதலே நன்னெறிச் செல்வார் கொள்கையாகும் (நன்னெறி - சன்மார்க்கம்)

1604. மந்திரமாவதும் மாமருந்து ஆவதும்
தந்திர மாவதும் தானங்கள் ஆவதும்
சுந்தர மாவதும் தூய்நெறி யாவதும்
எந்தை பிரான்தன் இணையடி தானே.

பொருள் : நினைப்பவனைக் காக்கும் மந்திரமாவதும், பிறவி நோய்க்கு மருந்தாவதும், திருவருளைப் பெறக்கூடிய கிரியையாவதும் அடைந்தார் பெறும் பயன் எய்தும் புண்ணியத்தலங்கள் ஆவனவும் வீடு பேற்றை அளிக்கும் மேன்மையான நெறியாவதும் எந்தையாகிய சிவபெருமானது இரு திருவடிகளேயாம்.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் - Page 2 Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Tue Mar 27, 2012 1:18 pm

3. ஞாதுரு ஞானஞேயம் (காண்பான் காட்சி காட்சிப்பொருள்)

(ஞாதுரு - காண்போன். ஞானம் - காணும் அறிவு; ஞேயம் காணப்படும் பொருள். இங்குக் காண்பவன் ஆன்மா; காண்பது சிவஞானம்; காணப்படும் பொருள் சிவம்.)

1605. நீங்காச் சிவானந்த ஞேயத்தே நின்றிடப்
பாங்கான பாசம் படரா படரினும்
ஆங்காரம் நீங்கி அதன்நிலை நிற்கவே
நீங்கா அமுத நிலைபெற லாமே.

பொருள் : ஆன்மா என்றும் நீங்காத சிவானந்தமாகிய சிவத்திடம் பொருந்தி நிற்க, அநாதியே பற்றியுள்ள ஆணவமலம் அறிவை மறைக்காது அங்ஙனம் மறைப்பினும் தன் முனைப்பு நீங்கி அச்சிவானந்த நிலையில் நிற்கவே, என்றும் தன்னை விட்டு நீங்காத பேரின்பமாகிய அமதத்தில் நிலை பெறலாம்.

1606. ஞேயத்தே நின்றோர்க்கு ஞானாதி நின்றிடும்
ஞேயத்தின் ஞாதுரு ஞேயத்தில் வீடாகும்
ஞேயத்தின் ஞேயத்தை ஞேயத்தை யுற்றவர்
ஆயத்தில் நின்ற அறிவுஅறி வாரே.

பொருள் : அறியப்படும் பொருள் சிவம் என்று துணிந்து அவ்வழி நிற்போர்க்கு ஞானத்துக்குரிய மற்றவைகளும் பொருந்தி நிற்கும். அங்ஙனம் அறியப்படும் பொருளான சிவத்தை ஆன்மா அறிந்து அதுவாகவே அமைவது வீடாகும். ஞேயப் பொருளாகிய சிவத்தைப் பிரியாத சத்தியை உணர்ந்தவர் இக்கூட்டத்தால் விளைந்த மெய்ஞ்ஞான அறிவை அறிவார்.

1607. தானென்று அவனென்று இரண்டாகும் தத்துவம்
தானென்று அவனென்று இரண்டும் தனிற்கண்டு
தானென்ற பூவை அவனடி சாத்தினால்
நானென்று அவன்என்கை நல்ல்தொன்று அன்றே.

பொருள் : உண்மைப்பொருள் தான் என்ற ஆன்மாவும் அவன் என்ற சிவமும் ஆக இரண்டு உள்ளன. தன்னையும் அவனையும் தன்ஒளியில் கண்டு தானாக விளங்கும் சகஸ்ரதள உணர்வை, அவன்விளங்கும் நிமிர்ந்த சகஸ்ர தளத்துக்கு மாற்றினால், நான் என்றும் அவன் என்றும் வேறுபடுத்திக்காணும் உணர்வு மாறி நானே அவன் என்று கூறுவது நல்லது ஒன்றல்லவா ?

1608. வைச்சன ஆறாறும் மாற்றி என வைத்து
மெச்சப் பரன்தன் வியாத்துவம் மேலிட்டு
நிச்சய மாக்கிச் சிவமாக்கி ஞேயத்தால்
அச்சங் கெடுத்தென்னை யாண்டனன் நந்தியே.

பொருள் : சிவனுக்கு உபகாரமாக வைத்து முப்பத்தாறு தத்துவங்களின் தொழிலையும் மாற்றி என்னை நிலைபெறச் செய்து உலகவர் பாராட்டும் வண்ணம் பரனது வியாபகத்துள் இருத்தி, அவ் அனுபவத்தில் நிலைபெறச் செய்து சிவமாக்கி, என்னை ஆட்கொண்டருளினான் என் குருநாதனாகிய சிவன்.

1609. முன்னை அறிவுஅறி யாதஅம் மூடர்போல்
பின்னை அறிவுஅறி யாமையைப் பேதித்தான்
தன்னை அறியப் பரனாக்கித் தற்சிவத்து
என்னை அறிவித்து இருந்தனன் நந்தியே.

பொருள் : சிவதீக்கை பெறுமுன் அறியவேண்டிய உண்மைகளை அறியாதிருந்த அறிவிலார்க்குச் சிவதீக்கைக்குப் பின் அறிவு அறியாமையென்னும் இரண்டினையும் சிவன் அழித்தனன். தன்னையாகிய சீவனை அறிய அச்சீவனைச் சிவமாக்கினன். ஆக்குதலும் சிவத்துடன் கூடி சீவன் தன்னையும் சிவத்தையும் காணும். அவ்வாறு காணும்படி அருளினன் சிவபெருமான்.

1610. காணாத கண்ணுடன் கேளாத கேள்வியும்
கோணாத போகமும் கூடாத கூட்டமும்
நாணாத நாணமும் நாதாந்த போதமும்
காணா எனவந்து காட்டினன் நந்தியே.

பொருள் : கட்பொறியால் காணாத காட்சியுடன், செவிப்பொறியால் கேளாத கேள்வியும் மாறுபடாத சிவனந்தமும் கூடிப் பிரியாத சேர்க்கையும் நாணமில்லாத பற்றும் நாதாந்தத்தில் விளங்கும் அறிவும் நந்தியெம் பெருமான் காண்பாயாக எனக் காட்டியருளினான்.

1611. மோனம்கை வந்தோர்க்கு முத்தியும் கைகூடும்
மேனம்கை வந்தோர்க்குச் சித்தியும் முன்னிற்கும்
மோனம்கை வந்துஊமை யாமொழி முற்றுங்காண்
மோனம்கை வந்துஐங் கருமமும் முன்னுமே.

பொருள் : வாய் வாளாமை யாகிய மோனம் கைவந்தோர்க்கு, திருவடிப்பேறும் கிட்டும். அவர்க்குச் சித்தியாகிய திருவருள் நிலையும் கைகூடும். அவர்க்குச் சொல்சிறந்து மறையாகிய சிகரம் கைகூடும். இதனை அசபாமறை என்பர். இத்திறத்தார்க்கு ஐந்தொழிலும் ஆண்டவன் அருளால் செய்தல் கூடும். (ஊமையா மொழி - பேசாத மந்திரம், இதனை அசபமந்திரம் என்றும் கூறும். ஊமை எழுத்து - பிரணவம்; ஐங்கருமம் - ஐந்தொழில்கள்.)

1612. முத்திரை மூன்றின் முடிந்தது மூன்றன்பால்
வைத்த கலைகால் நான்மடங் கால்மாற்றி
உய்த்தவத் தான் அந்தத்து ஒண்குரு பாதத்தே
பெத்த மறுத்தோர் பிறந்துஇற வாரே.

பொருள் : சிவதீக்கையுற்ற நன்னெறிச் செல்வம் பொறியாகிய முத்திரை மூன்றினாலும் இடப்பால், வலப்பால், நடுநாடியாகிய மூன்றிலும் செல்லும் உயிர்ப்பினால் வீணாக வெளியாகும் நால்விரல் அளவினை உள்நிறுத்தல் செய்வார். அங்ஙனம் செய்யும்படி பழக்கிய பேரின்பச் சிவகுரு பாதத்தே நிலைபெறுவர். அதனால் அவர் மலப்பிணிப்பு அறும். அவர்கள் பிறந்திறக்கும் பொருந்துன்பப் பெற்றியினின்று நீங்குவர்.

1613. மேலைச் சொரூபங்கள் மூன்று மிகுசத்தி
பாலித்த முத்திரை பற்றும் பரஞானி
ஆலித்த நட்டமே ஞேயம் புகுந்தற்ற
மூலச் சொரூபன் மொழிஞா துருவனே.

பொருள் : முன் ஓதிய காண்பான் காட்சி காட்சிப்பொருள் என்னும் மூன்றும் திருவருட் பொறிச் சிறப்பால் உள்ளங் கொள்கின்ற சிறந்த மெய் யுணர்வுடையோன் சிவ பெருமான் புரிந்தருளும் திருக்கூத்தினைத் திருவருட் கண்ணாற் கண்டு அம்மெய்ப் பொருளின் திருவடியிற்புகுவன். புகுந்த காரணத்தால் பருவுடம்பாகிய மூலப்பகுதியின் காரியங்கள் புடம் போட்ட பொன் போலவும் வேதித்த செம்பு போலவும் ஞானத்தின் திருவுருவாகும். அவனே சிவஞானி (பொறி - முத்திரை.)

4. துறவு

(துறவு - அன்பினால் இறைவனைப்பற்றி இயல்பான முறையில் பாசங்களின் நீங்குதல் அறிவினால் ஆராய்ச்சி செய்து பற்றின் நீங்குதல் அவா அறுத்தலின் பின்னர் கூறப்பெறும்.)

1614. இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கித்
துறக்கும் தவங்கண்ட சோதிப் பிரானை மறப்பில
ராய்நித்தம் வாய்மொழி வார்கட்கு அறப்பதி
காட்டும் அமரர் பிரானே.

பொருள் : ஒருவருக்கு இறப்பும் பிறப்புமாகிய ஆற்றொணாத் துன்பத்து இரு தன்மையும் நீங்கி இறைவனுக்கு அடிமையாகிய மெய்யுணர்வு பெறுதலே தமிழகத்துக்குத் துறவும் தவமும் ஆகும். அந்நெறியினை உடங்கியைந்து உணர்த்தியருளியவன் சிவபெருமான். அவன் திருவடி யிணையை மறவாதவராய் அவன்பால் பத்தராய் அவனையே பன்னிய நூல்தமிழ் மாலையால் பாடுவார்கட்கு அறப் பதியாம் சிவவுலகினைத் தந்தருள்வன் அமரர் பிரானாகிய சிவபெருமான். (வாய் மொழிவார் - துதிப்பவர்; அறப்பதி - முத்தியுலகம்.)

1615. பிறந்தும் இறந்தும்பல் பேதைமை யாலே
மறந்து மலஇருள் நீங்க மறைந்து
சிறந்த சிவனருள் சேர்பரு வத்துத்
துறந்த உயிர்க்குச் சுடரொளி யாமே.

பொருள் : பல்வேறு ஆற்றல்களையுடைய ஆணவ மலமாகிய பேதைமையினால் பிறந்தும் இறந்தும் சிவத்தை மறந்தும் அல்லலுறும் ஆருயிர்களின் மலஇருள் நீங்கும்படி உயிர்க்கு உயிராய் மறைந்து நின்று செவ்வி வருவித்து வெளிப்படுவன் சிவன். அவ்வாறு வெளிப்படுங்காலத்துச் சிவகுரு எனப்படுவான். சிவகுருவாய் வந்து திருமுறை வழித்தீக்கை செய்து ஆருயிர்களை ஆட்கொள்வான். ஆட்கொண்ட காலத்து அவ்வுயிர் சிவத்தைப் பேணும். அகத்துணைவெய்தும். அவ்வுயிர் அதனால் அருட்சுடர் பொலிவோடு திகழும்.

1616. அறவன் பிறப்பிலி யாரும் இலாதான்
உறைவது காட்டகம் உண்பது பிச்சை
துறவனும் கண்டீர் துறந்தவர் தம்மைப்
பிறவி யறுத்திடும் பித்தன்கண் டீரே.

பொருள் : நியதியை உடையவன்; அனாதியே உள்ளவன்; அதனால் தனியன். அவன் தங்கும் இடம் எல்லாத் தத்துவங்களும் சுட்டெரிக்கப்பட்ட இடம். அவன் ஏற்பது சீவபோகம், ஆதலால் அவன் துறவி என்பதை அறியுங்கள். பற்றுக்களை நீத்தவரைப் பிறவியைப் போக்கும் பித்தனாவான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

1617. நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான்
நெறியில் வழுவின் நெருஞ்சில் முட்பாயும்
நெறியில் வழுவாது இயங்கவல் லார்க்கு
நெறியின் நெருஞ்சில்முள் பாயகி லாவே.

பொருள் : அனாதியான இறைவன் சீவர்கள் அடைய வேண்டிய நெறியையும் நெருஞ்சில் முள்போல ஒதுக்கித் தள்ள வேண்டிய செயலையும் படைத்துள்ளான். அறவழியில் நில்லாமல் தவறினால் நெருஞ்சில் முள் குத்துவது போன்ற துன்பத்தை அடைவர். ஆனால் அறிவழி தவறாமல் ஒழுக வல்லார்க்கு வழியில் நெருஞ்சில்முள் குத்துவது போன்ற துன்பங்கள் அடைய மாட்டா.

1618. கேடும் கடமையும் கேட்டுவந்து ஐவரும்
நாடி வளைந்தது நான்கட வேன்அலேன்
ஆடல் விடையுடையஅண்ணல் திருவடி
கூடும் தவம் செய்த கொள்கையன் தானே.

பொருள் : சிவ குருவால் ஆட்கொள்ளப்பட்ட உயிர் பிறப்பு இறப்புத் துன்பங்களையும் அத்துன்பங்களினின்றும் விடுபடுதற்குரிய சிவவழிபாடும் அக்குருவால் கேட்டு மகிழ்ந்தது. மகிழவே ஐம்புல ஆசைகள் அகன்றன. அதனால் ஐம்புலக் கள்வர் பற்றிப் பிடித்துச் செய்யும் துன்பங்கட்கு அவ்வுயிர் கடமைப்படாமல் நீங்கிற்று. அதனால் அத்தகைய உயிர் வெற்றிப்பாடு அமைந்த ஆனேற்றை யுடைய அண்ணலாகிய சிவபெருமான் திருவடியைக் கூடும். தாவில் தவஞ் செய்யும் தலைமையினையும் ஆயும்; எய்தும்.

1619. உழவன் உழஉழ வானம் வழங்க
உழவன் உழவினில் பூத்த குவளை
உழவன் உழத்தியர் கண்ஒக்கும் என்றிட்டு
உழவன் அதனை உழஒழிந் தானே.

பொருள் : ஞான சாதனை செய்பவன், மேலும் மேலும் சாதனையை விரும்பிச் செய்ய, ஆகாய மண்டலம் விளங்க ஞான சாதனையில் அமைந்த நீலோற்பல ஒளி ஞான சாதனை செய்தவன் இது அருள் சத்தியின் ஒளி என்று கண்டு ஞான சாதகன் மேலும் சாதனையற்று அருளில் நாட்டம் கொண்டு விளங்கினான்.

1620. சேல்துறந் தண்ணல் விளங்கொளி கூற்றுவன்
நாள்துறந் தார்க்குஅவன் நண்பன் அவாவிலி
கார்துறந் தார்க்குஅவன் கண்ணுத லாய்நிற்கும்
பார்துறந் தார்க்கே பதஞ்செய லாமே.

பொருள் : இயல்பாகவே பற்றும் வெறுப்பும் இல்லாதவன். கூற்றுவன் நாள் என்ற காலத்தைக் கடந்தவருக்கு அவன் நண்பன். எல்லாவற்றையும் உடைமையால் அவன் ஆசையற்றவன். அஞ்ஞானமாகிய இருளைவிட்டு ஒளி பெறுவோர்க்குத் தனது நெற்றிக் கண்ணால் அனுக்கிரகம் செய்வான். பூமி தத்துவம் என்ற பாலுணர்ச்சியைத் துறந்தவர்க்கே தனது திருவடியைத் தந்து அருளுவான்.

1621. நாகமும் ஒன்று படம்ஐந்து நாலது
போகம்உள் புற்றில் பொருந்தி நிறைந்தது
ஆகம் இரண்டும் படம்விரித்து ஆட்டொழிந்து
ஏகப் படம்செய்து உம்பிட மாமே.

பொருள் : ஆருயிர்கட்கு நாகம் போலும் உடம்பு ஒன்று அதன் ஐந்து படம்போலும் ஐம்பொறிகள். அப்பொறிகள் வழியாக அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நாற்பயன்களையும் உயிர் நுகரும், உளப் புற்றாகிய உடம்பினது அகத்துப் பொருந்தி நிறைந்து நிற்பன் சிவன். நுண்மை முன்மையாகிய உடம்பு இரண்டினுள்ளும் படமாகிய பொறி வழிச்சென்று ஆடும் செயலறப்பாடஞ் செய்தலாகிய தகுதி உண்டாக்கி அச்சிவபெருமான் அவ்உடம்பினை இடமாகக் கொண்டருள்வன். (நுண்மை - சூக்குமம், முன்னை - காரணம்)

1622. அகன்றார் வழிமுதல் ஆதிப் பிரானும்
இவன்தான் எனநின்று எளியனும் அல்லன்
சிவன்தான் பலபல சீவனும் ஆகும்
நயன்தான் வரும்வழி நாமறி யோமே.

பொருள் : அம்மையுடன் கூடிய அப்பனாகிய சிவனும் பற்றற்றார் வழிக்கு முதல்வன் ஆவன். அவன் இன்ன தன்மையன் என்றிசைக்கும் எளியனும் அல்லன். சிவன் தாளாகிய திருவருள் ஆருயிர்கட்கு ஏற்றவாறு பலவாக அமைந்து செவ்வி வருவிக்கும். நயமாகிய திருவடியுணர்வு திருவருள் உணர்வான் உணரத்தக்கது. நாம் என்னும் அகச் செருக்கு உள்ளவரையும் அவ்வுயிர் ஆணவமுனைப்பு உடையது அம்முனைப்பால் சிவனை உணரமுடியாது என்பதாம், நாம்அறியோம் என்பது.

1623. தூம்பு திறந்தன ஒன்பது வாய்தலும்
ஆம்பற் குழலியின் கஞ்சுளிப் பட்டது
வேம்பேறி நோக்கினன் மீகாமன் கூரையில்
கூம்பேறிக் கோயிலிற் பூக்கின்ற வாறே.

பொருள் : உடலைக் கடந்தபோது கண்முதலிய ஒன்பது வாயில்களால் வரும் அறிவு விடுபட்டது. சந்திரமண்டலத்தில் அமைந்த தொனியில் சம்மியம் செய்தபோது தேகமாகிய சட்டையின் அனுபவன் முடிவுள்ளது. பிரபஞ்சம் இனித்த நிலை மாறிக் கசப்பாயிற்று. உடøச் செலுத்திய ஆன்மாசிரசின் உச்சியில் தலைவன் வாழும் ஊர்த்துவ சகஸ்ர தளத்தில் விளங்கியதே.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் - Page 2 Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Tue Mar 27, 2012 1:18 pm

5. தவம்

(தவமாவது தன்னுள் மறைந்துள்ள பொருளைக் காணச் செய்யும் முயற்சி, அஃது இடையறாது இறைவனை எண்ணியிருத்தலால் கைகூடும்.)

1624. ஒடுங்கி நிலைபெற்ற உத்தம் உள்ளம்
நடுங்குவ தில்லை நமனும்அங்கு இல்லை
இடும்பையும் இல்லை இரப்பகல் இல்லை
படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே.

பொருள் : சிவத்தினிடம் மனத்தை வைத்து நிலைபெற்ற உத்தமர்களின் உள்ளமானது, உலகிலுள்ள எத்தகைய துன்பத்தையும் கண்டு அஞ்சுவதில்லை. அத்தகையாவர் எமனுக்கும் பயப்படுவதில்லை. அவர்களுக்குத் துன்பமும் இல்லை. இரவு பகல் என்ற வேறுபாடும் இல்லை. பிற பொருளின் மேல் பற்று நீத்தவர்க்கு விளைகின்ற பயன் வேறொன்றும் இல்லை.

1625. எம்ஆ ருயிரும் இருநிலத் தோற்றமும்
செம்மா தவத்தின் செயலின் பெருமையும்
அம்மான் திருவருள் பெற்றவர்க்கு அல்லாது
இம்மா தவத்தின் இயல்பறி யாரே.

பொருள் : எமது அரிய உயிர் உடலோடு புணர்ப்பதாகிய பிறப்பும், அது உடம்போடு கூடி அனுபவிப்பதற்கு இடமாகிய உலகப்படையும், சிறப்பான தவத்தின் மேன்மையும் சிவனது அருள் பெற்றவர்க்கு அல்லால் இப்பெரிய தவத்தின் தன்மையை அறியமாட்டார். தவமுடையோர் வினைவழியே பிறப்பும் சூழ்நிலையும் ஆகும் என்று அமைதி பெறுவர்.

1626. பிறப்பறி யார்பல பிச்சைசெய் மாந்தர்
சிறப்பொடு வேண்டிய செல்வம் பெறுவர்
மறப்பில ராகிய மாதவம் செய்வார்
பிறப்பினை நீக்கும் பெருமைபெற் றாரே.

பொருள் : உயிர் உய்யுமாறு உயிர்க்கு உயிராகிய உடையவனால் தரப்பட்ட உடலுக்கும் உழையாமல், பிச்சை எடுத்துண்ணும் பலர் பிறப்பு இறப்புக்களால் ஏற்படும் பெரும் துன்பத்தை அறியார். சிவபெருமான் திருவடியை மறவாமையே பெருந்தவம். அப் பெருந்தவம் செய்தார் சிறப்பாகிய வீடு பேற்றுடன் வேண்டிய இம்மை மறுமைச் செல்வங்களும் பெறுவர். அவர்களே பிறப்பினை யறுக்கும் சிவபுண்ணியப் பெருமை பெற்றவராவர். (பிச்சை - தவஉணவு. பிச்சை செய்மாந்தர் - தவசிகள்.)

1627. இருந்து வருந்தி எழில்தவம் செய்யும்
பெருந்தன்மை யாளரைப் பேதிக்க என்றே
இருந்துஇந் திரனே எவரே வரினும்
திருந்தும்தம் சிந்தை சிவனவன் பாலே.

பொருள் : தனித்திருந்து சிவப்பேற்றை அடைய அரிதின் முயன்று அழகிய தவத்தினை இயற்றும் மனவுறுதி பூண்டோரை மனத்தை மாற்ற வேண்டும் என்றே சூழ்ந்திருந்து இந்திரனோ பிறதேவரோ யார் வந்தாலும், மயங்காமல் தம்முடைய மனத்தைச் சிவத்தின்பால் உறுதியாக வைத்துத் திருந்தியிருப்பார். (பெருந்தன்மை - வைராக்கியம்)

1628. கரந்தும் கரந்திலன் கண்ணுக்கும் தோன்றான்
பரந்த சடையன் பசும்பொன் நிறத்தன்
அருந்தவர்க்கு அவ்வால் அணுகலும் ஆகான்
விரைந்து தொழப்படும் வெண்மதி யானே.

பொருள் : பக்குவன் அடைந்த ஆன்மாக்களால் விரைந்து தொழப்படும் வெண்மதியில் விளங்குபவன் தவம் இல்லார்க்கு மறைந்தும் தவம் உடையோர்க்கு வெளிப்பட்டும் உள்ளான். அகக் கண்ணுக்கே யன்றிப் புறக் கண்ணுக்குத் தோன்றாதவன். பரந்த ஒளிக் கிரணத்தையுடையவன். பசும்பொன் போன்ற நிறமுடையவன். அரிய தவத்தை உடையவர்க்கு அல்லாமல் மற்றவரால் அனுகுவதற்கும் முடியாதவன்.

1629. பின்எய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை
முன்எய்த வைத்த முதல்வனை எம்இறை
தன்எய்தும் காலத்துத் தானே வெளிப்படும்
மன்எய்த வைத்த மனமது தானே.

பொருள் : ஆன்மாக்கள் பின்னால் அடைய வேண்டிய இன்பப் பிறப்பை முன்னால் நியதியாகவைத்த முதற்பொருளாகிய எமது இறைவனை ஆன்மா தன்னை அறியப் புகும்போது தானே வந்து அடையும். அவ்வாறு உயிருக்குத் தலைவனை அடையச் செய்தது மனத் திட்பமேயாம்.

1630. அமைச்சரும் ஆனைக் குழாமும் அரசும்
பகைத்தெழும் பூசலுள் பட்டார் நடுவே
அமைத்ததோர் ஞானமும் ஆத்தமும் நோக்கி
இமைத்துஅழி யாதிருந் தார்தவத் தாரே.

பொருள் : சூழ்ச்சி மிக்க அமைச்சரும், பெருமைமிக்க யானைக் கூட்டங்களும் ஆற்றல்மிக்க அரசரும் பகைத்தெழுந்து செய்தபெரும் போரில் இருதிறத்தாரும் எண்ணிறந்தாராய் மாண்டனர். அப்போர் நடுவில் நின்று காண்போர்க்கு நிலையாமை உணர்ச்சியும், திருவடி உணர்வும் சிவப்பேற்றின்கண் ஆத்தமாகிய நேயமும் இயல்பாக சிவப் பேற்றின்கண் ஆத்தமாகிய நேயமும் இயல்பாக உண்டாகும். அந்நோக்கல் நோக்காகிய கருத்தினை மறந்து அழியாதிருந்தார் இறவாத நற்றவன் செய்தோராவர். (அத்தம் என்பது ஆத்தம் என்றாயிற்று. அத்தம் - சமயம்.)

1631. சாத்திரம் ஓதும் சதுர்களை விட்டுநீர்
மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின்
பார்த்தஅப் பார்வை பசுமரத்து ஆணிபோல்
ஆர்த்த பிறவி அகலவிட்டு ஓடுமே.

பொருள் : உண்மை நாட்டமின்றிப் பொருள் கருதி நூல்களைப் படித்துப் பிதற்றித் திரியும் பொய்ப் பெருமைகளை விட்டு அகன்று நீங்கள் மாத்திரையாகிய ஒரு நொடிப் பொழுதேனும் உயிர் உணர்வு வெளிமுகப்படாது அகமுகப்பட்டுச் சிவனை அவனருளால் நோக்குங்கள். அங்ஙனம் நோக்கினால் அப் பார்வை யுணர்வு பசுமரத்து ஆணி போல் உயிரின்கண் பதிந்து விளங்கும். அவ்விளக்கத்தால் தொன்று தொட்டுப் பிணித்துவரும் பிறவி நீங்கி ஓடும்.

1632. தவம்வேண்டு ஞானம் தலைப்பட வேண்டில்
தவம் வேண்டா ஞானம் சமாதிகை கூடில்
தவம் வேண்டாம் அச்ச கசமார்க்கத் தோர்க்கு
தவம் வேண்டா மாற்றம் தனையறி யாரே.

பொருள் : ஞானம் பெறவேண்டுமாயின் தவம் வேண்டும். ஞானசமாதி கூடிய பின்னர் அதற்குரிய சாதனை வேண்டியதில்லை. இல்லறத்திலிருந்து யோகம் பயில்வோர்க்கு, சமாதி பெறுதற்குரிய தவம் வேண்டியதில்லை. நான் தவம் வேண்டாஎனக் கூறும் உண்மையினை உலகினர் அறியார்.

6. தவதூஷணம்

(தவதூஷணம் - தவநிந்தை, அஃதாவது புறநோக்கை விட்டு அகநோக்குக் கொண்டவர்க்குப் புறத்தே செய்யும் கிரியை ஒன்றும் வேண்டா என்று கூறுவது.)

1633. ஓதலும் வேண்டாம் உயிர்க்குயிர் உள்உற்றால்
காதலும் வேண்டாம் மெய்க்காயம் இடம்கண்டால்
சாதலும் வேண்டாம் சமாதிகை கூடினால்
போதலும் வேண்டாம் புலன்வழி போகார்க்கே.

பொருள் : உயிர்க்குயிராகிய பொருளை உள்ளே பெற்றபின் கற்று அறிய வேண்டியது ஒன்றும் இல்லை. உண்மைப் பொருளான சிவத்தை எடுத்த உடலில் கண்டால் அன்பு செய்தலும் வேண்டா. தன்மை மறந்த சமாதி நிலைகிட்டிய பின் இறத்தலும் வேண்டியதில்லை. மனத்தைப் புலன் வழியாகப் போகாமல் தடுத்து நிலை நிறுத்தும் ஆற்றல் பெற்றவர்க்குப் பிற இடங்களுக்குச் சென்று தவம் செய்ய வேண்டியது இல்லை.

1634. கத்தவும் வேண்டாம் கருத்தறிந்து ஆறினால்
சத்தமும் வேண்டாம் சமாதியை கூடினால்
சுத்தமும் வேண்டாம் துடக்கற்று நிற்றலால்
சித்தமும் வேண்டாம் செயலற்று இருக்கிலே.

பொருள் : மெய்ந்நூற் பொருள்களின் உண்மைக் கருத்தறிந்து அடங்கினால் வெளிப்படையாக அச்சொற்றொடர்களை எடுத்தும் படுத்தும் கத்துதலாகிய முயற்சிகள் வேண்டா. சமாதி கைகூடினால் வேதம் ஓதுதலாகிய சத்தமும் வேண்டா. ஆணவத் தொடக்கு அற்றவர்க்கு வேறுதுப்புறவுகள் வேண்டா. உயிர்ச் செயலற்று உடையான் செயலாக இருப்பின் ஒன்றைத் தூக்கி நாடுதலாகிய சித்தமும் வேண்டா.

1635. விளைவுஅறி வார்பண்டை மெய்த்தவம் செய்வார்
விளைவுஅறி வார்பண்டை மெய்யுரை செய்வார்
விளைவுஅறி வார்பண்டை மெய்யுறம் செய்வார்
விளைவு அறி வார்விண்ணின் மண்ணின்மிக் காரே.

பொருள் : உடம்பு எடுத்த பயன் உடம்பினுள் உடையானைக் கண்டு வழிபடுதல். இவ்வுண்மையினை யுணர்ந்தார் நன்னெறி நான்மைத் தவம்புரிபவர் ஆவர். அதுபோல் மெய்யுரையாகிய குரு மொழி கொள்வார் உடம்பின் பயன் உணர்ந்தோர் ஆவர். மெய்யறமாகிய சிவ புண்ணியம் செய்வாரும் உண்மை உணர்ந்தோரே. இவ்வுண்மை உணர்ந்தோர் விண்ணிலும் மண்ணிலும் வாழ்வார்; அனைவரினும் மிக்கோராவர்.

1636. கூடித் தவஞ்செய்து கண்டேன் குரைகழல்
தேடித் தவஞ்செய்து கண்டேன் சிவகதி
வாடித் தவஞ்செய்வ தேதவம் இவைகளைந்து
ஊடில் பலவுல கோõர்எத் தவரே.

பொருள் : திருவருளோடு கூடிச் சிவத்தைப் பேணுவதாகிய தவத்தைச் செய்து அவன் திருவடியைக் கண்டு கொண்டேன். அந்தத் தவவழியே சென்று சிவ நிலையையும் கண்டேன். முன்னாக இவ்உண்மை உணர்ந்தவர் உடல் வருந்தும்படியாகத் தவம் செய்வார். ஐம்புலன்களையும் வென்றவர் பலவுலகப் பண்பினராவர். வெல்லாது ஊடி நிற்பவர் ஒரு தவமும் உடையவர் ஆகார்.

1637. மனத்துரை மாகடல் ஏழுங்கை நீந்தித்
தவத்திடை யாளர்தம் சார்வத்து வந்தார்
பவத்திடை யாகார் அவர்பணி கேட்கின்
முகத்திடை நந்தியை முந்தலும் ஆமே.

பொருள் : மனத்தில் சங்கற்பத்தாலாகிய பெரிய கடலாகவுள்ள ஏழினையும் கடந்து தவமுடையோர் வழி சார்ந்து அவரோடு இணங்கியிருப்பார் பிறப்புக்கு வரமாட்டார். பன் அத்தவமுடையோர் ஏவலைக் கேட்டு நடந்தால் சிவத்தைத் தம்முகத்தின் முன்னர்க்கண்டு சிவப்பேறு அடைதலும் கூடும். (
ஏழ்கடல் - எழுவகைப்பிறப்பு)

1638. மனத்திடை நின்ற மதிவாள் உருவி
இனத்திடை நீக்கி இரண்டற ஈர்த்துஐப்
புனத்திடை அஞ்சும் போகாமல் மறித்தால்
தவத்திடை யாறுஒளி தன்ஒளி யாமே.

பொருள் : மனமாகிய உறையுளில் செறிக்கப்பட்ட ஞானவாளை உருவி பிரபஞ்ச வாசனையை விட்டு, சிவத்துடன் அநந்யமாகப் பொருந்தி ஞானேந்திரயங்கள் ஐந்தும் விஷயங்களைப்பற்றி வெளிச் செல்வதைத் தடுத்தால் தவத்திடை காணும் சிவஒளியே தன்னொளியாகும்.

1639. ஒத்து மிவும் நின்றானை யுரைப்பது
பத்தி கொடுக்கும் பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுக்கும் முனிவன் எனும் பதம்
சத்தான செய்வது தான்தவந் தானே.

பொருள் : சீவர்களது அறிவினில் பொருந்தி நின்றானை உணர்வது, சிவக்காதலை உண்டாக்கும். மேலும் அடியார் பணிந்து நாள் தோறும் தொழுகின்றமையால் முத்தியும் கிட்டும். அவ்வாறு பிரபஞ்ச நோக்கை முனிகின்றவன் என்ற சொல்லை உண்மைப் படுத்துவதே தவமாம்.

1640. இலைதொட்டுப் பூப்பறித்து எந்தைக்குஎன் றெண்ணி
மலர்தொட்டுக் கொண்டேன் வரும்புனல் காணேன்
தலைதொட்ட நூல்கண்டு தாழ்ந்ததென் உள்ளம்
தலை தொட்டுக் கண்டேன் தவங்கண்ட வாறே.

பொருள் : பத்திரங்களை எடுத்தும் பூவினைக் கொய்தும் எம் இறைக்கு ஆகும் என்று நினைத்து, மலர்களைத் தொடுத்துக் கொண்டிருந்தேன். அவ்வாறு பூமாலையைச் சாத்தி வழிபட்டுக் கொண்டிருந்தாலும் கண்களில் இன்பநீர் பெருகக் காண்கிலம். செந்தமிழ்வேத ஆகமங்களைத் தலைசிறந்த மெய்ந்நூலாகக் கொண்டு திரு ஐந்தெழுத்தை ஓதினேன். வழிபாட்டுப் பாடல்களைப் பாடினேன். இதுவே நற்றவன் எனக் கண்டேன்.

1641. படர்சடை மாதவம் பற்றிய பத்தர்க்கு
இடர் அடை யாவண்ணம் ஈசன் அருளும்
இடர் அடை செய்தவர் மெய்த்தவம் நோக்கில்
உடம் அடை செய்வது ஒருமனத் தாமே.

பொருள் : படர்ந்த ஒளிக்கிரணத்தை உடைய தவத்தைச் செய்த அன்பர்க்கு, துன்பம் வாரா வண்ணம் இறைவன் காத்தருள்வான், துன்பத்தை வாரா வண்ணம் செய்தவரது உண்மைத்தவத்தை ஆராயின் உடம்பை மீண்டும் பெருமை செய்வது அவரது மன ஒருமைப்பாட்டினால் ஆகும்.

1642. ஆற்றிற் கிடந்த முதலைக்கண்டு அஞ்சிப்போய்
ஈற்றுக் கரடிக்கு எதிர்ப்பட்ட தன்ஒக்கும்
நோற்றுத் தவம்செய்யார் நூலறி யாதவர்
சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே.

பொருள் : நூலை அறியாதவராய்ப் பொறுமையோடு தவஞ் செய்யாதவர் வயிற்றுக்கு இரைதேடி வருந்தி அலைவது ஆற்றிலேயுள்ள முதலைக்கு அஞ்சி ஓடி அண்மையில் ஈன்ற கரடிக்கு முன்னே அடைந்து வருந்துதலை ஒக்கும். நூலைக் கற்றறிந்து தவம் செய்தலே துன்பம் நீங்கும் வழி.

1643. பழுக்கின்ற வாறும் பழம்உண்ணும் ஆறும்
குழக்கன்று துள்ளியக் கோணியைப் பல்காற்
குழக்கன்று கொட்டிலில் கட்டவல் லார்க்குள்
இழக்காது நெஞ்சத் திடஒன்று மாமே.

பொருள் : நற்றவம் முதிர்ச்சியடையுமாறும், அத் தவத்தின் பயனை நுகருமாறும் இளங்கன்று ஒத்துத் துள்ளித் திரிகின்ற நெஞ்சினைப் பலமுறை அடக்கும் வன்மையுடையார் இனிமேல் கோணியாகிய உடம்பினுள் புகும் தன்மையையும் உணரவல்லார் ஆவர். அவர்க்கு மெய்ம்மை தோன்றும். இளங்கன்றாகிய பசுவின் மனத்தை அடக்கவல்லார்கட்கு நெஞ்சத் திடம் உண்டாகும்; பிறப்பும் நேராது.

1644. சித்தம் சிவமாகச் செய்தவம் வேண்டாவால்
சித்தம் சிவானந்தம் சேர்ந்தோர் உறவுண்டாய்
சித்தம் சிவகாம வேசித்தி முத்தியாம்
சித்தம் சிவமாதல் செய்தவப் பேறே.

பொருள் : சித்தம் இடையறாது சிவத்தை நினைந்து சிவமாகவே அவருக்குச் செய்ய வேண்டிய தவம் ஒன்றும் வேண்டா. அவ்வாறு சித்தம் சிவமாகிப் பேரானந்தம் பொருந்திய அடியார் உறவும் உண்டானால் அவர்களது சித்தம் சிவமாய்ச் சித்தியும் முத்தியும் உண்டாம். ஆகையால் சித்தமானது சிவமாவதே பூர்வம் செய்ததவத்தின் பயனாம். சித்தம் இடையறாது சிவனை எண்ணிச் சிவமாதலே தவம் என்பதாம்.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் - Page 2 Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Tue Mar 27, 2012 1:19 pm

7. அருளுடைமையின் ஞானம் வருதல்

(அருள் - நாத விந்துவாகிய திருவடி. அருள் உடைமையின் ஞானம் வருதலாவது, நாதவிந்துவாகிய திருவடி பொருந்தியபோது ஞானம் விளங்குதல்).

1645. பிரான் அருள் உண்டெனில் உண்டுநற் செல்வம்
பிரான் அருள் உண்டெனில் உண்டுநன் ஞானம்
பிரான்அரு ளிற்பெருந் தன்மையும் உண்டு
பிரான்அரு ளிற்பெருந் தெய்வமும் ஆமே.

பொருள் : சிவபெருமானின் திருவருள் உண்டானால் செல்வன் கழல் ஏத்தும் செல்வம் உண்டாகும். அதுபோல் திருவடியுணர்வும் உண்டாகும். அத்திருவருளால் அறிவினுள் அறிவாம் பேராப் பெருநிலையும் உண்டாகும். அதுபோல் சிவமாம் பெருவாழ்வும் எய்தும்.

1646. தமிழ்மண் டலம்ஐந்தும் தாவிய ஞானம்
உமிழ்வது போல உலகம் திரிவர்
அவிழு மனமும்எம் ஆதி அறிவும்
தமிழ்மண் டலம்ஐந்தும் தத்துவம் ஆமே.

பொருள் : சரியை வழிநற்போர் தமிழ்மண்டலமும் அதனைச் சார்ந்த கன்னடம், மலையாளம், துளுவம், தெலுங்கு ஆகிய மண்டலங்களிலுமுள்ள தலங்களை அடைந்து வழிபடுவதில் அவர்களிடம் மறைந்துள்ள ஞானம் வெளிப்படும் என்று சுற்றித்திரிவர். ஞானிகள் இவ்வுண்மையைத் தமது தேகத்தில் உணர்ந்து ஒன்றான சிவமே பலவான சத்திகளாக விளங்குகிறது என்று அறிந்து எவரும் செல்லாமல் இருந்த இடத்திலேயே அகண்ட வழிபாட்டைச் செய்து பெரும் பயனை அடைகின்றனர்.

1647. புண்ணிய பாவம் இரண்டுள் பூமியில்
நண்ணும் பொழுதறி வார்சில ஞானிகள்
எண்ணி இரண்டையும் வேர்அறுத்து அப்புறத்து
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வீரே.

பொருள் : புண்ணியம் என்றும் பாவம் என்றும் இவ்வுலகில் இரண்டு உள்ளன. இவை வினை காரணமாக இன்ப துன்பமாகப் பொருந்துகின்றன என்ற உணர்வார் சில ஞானிகள். இவ்வாறு உணர்ந்து இவற்றுக்குக் காரணமான வினையாகிய வேரினை அறுத்தால் அதன் பின்னர் நீங்களும் வினை நீங்கி வெளிப்படும் அண்ணலை ஆராய்ந்து அறிவீர்கள்.

1648. முன்னின்று அருளும் முடிகின்ற கலத்து
நன்னின்று உலகில் நடுவுயி ராய்நிற்கும்
பின்னின்று அருளும் பிறவியை நீக்கிடும்
முன்னின்று எனக்கொரு முத்திதந் தானே.

பொருள் : வினைகள் முடிகின்ற காலத்தில் சிவம் தனது சத்தியைப் பதிப்பித்து ஆண்டருளும். அந்நிலை வாராத இடைக்காலத்தில் உயிருக்குயிராய் நின்று வினைகளை ஊட்டி நிற்கும். சிவனுக்குப் பின்னே நின்றருளிப் பிறவியை நீக்கிவிடும். அவனே முன்தோன்றி வீடு பேற்றை அளிப்பவன் ஆவான்.

1649. சிவனரு ளாற்சிலர் தேவரும் ஆவர்
சிவனரு ளாற்சிலர் தெய்வத்தோடு ஒப்பர்
சிவனரு ளால்வினை சேரகி லாமை
சிவனருள் கூறில்அச் சிவலோகம் ஆமே.

பொருள் : சிவத்தின் அருளால் சிலர் தேவ வடிவம் பெறுவர். சிவத்தின் அருளால் சிலர் தெய்வத்தன்மை பெறுவர். சிவத்தின் அருளால் சிலருக்கு வினை சேராமை பொருந்தும். சிவத்தின் அருளைச் சொல்லப்போனால் மேலே கண்ட மூவரும் சிவலோக வாசிகளே யாவர்.

1650. புண்ணியன் எந்தை புனிதன் இணையடி
நண்ணி விளக்கென ஞானம் விளைந்தது
மண்ணவ ராவதும் வானவர் ஆவதும்
அண்ணல் இறைவன் அருள்பெற்ற போதே.

பொருள் : அம்மையும் அப்பனுமாக ஓர் உடம்பில் விளங்கும் சிவபெருமான் புண்ணியன் என்று அழைக்கப்படுவான். யாவர்க்கும் தந்தையாய் உள்ளவன் ஆதலால் அவன் எந்தை எனப்படுவான். அவனே யாவரையும் தூய்மைப்படுதலால் அவன் புனிதமாயுள்ளான். நல்லார் அத்தகையோன் திருவடியைத் திரு ஐந்தெழுத்து ஓதியும் போற்றி மந்திரம் புகன்று மலர்தூவித் தொழுதும் சேர்வர். அப்படிச் சேர்தலால் அவர்பால் திருவிளக்குச் சுடராகிய சிவஞானம் விளைந்தது. தலைமைப்பாடு அமைந்த சிவபெருமான் திருவருள் பெற்றபோதே மண்ணவர் பிறப்பற்றுச் சிறப்புறுவதும் சிவ உலகத்தாராகிய வானவர் ஆவதும் நிகழும்.

1651. காயத்தோர் ஏறி மனப்பாகன் கைகூட்ட
மாயத்தேர் ஏறி மயங்கும் அவையுணர்
நேயத்தேர் ஏறி நிமலன் அருள்பெற்றால்
ஆயத்தேர் ஏறி அவன்இவன் ஆமே.

பொருள் : உடம்பாகிய தேரினுள் புகுந்து மனமாகிய தேரோட்டி சேர்ந்து வைக்க, மாயத் தேராகிய இவ்வுலகத்தில் மயங்கும் உயிரினங்கள் திருவடியன்பாகிய தேரேறிச் சிவபெருமான் திருவருளைப் பெற்றால் ஆயமாகிய சிவனடியார் திருக்கூட்டத்துடன் விரவி உயர்வற உயர்ந்த சிவமாம் பெருவாழ்வை எய்தும்.

1652. அவ்வுல கத்தே பிறக்கில் உடலொடும்
அவ்வுல கத்தே அருந்தவம் நாடுவர்
அவ்வுல கத்தே அரனடி கூடுவர்
அவ்வுல கத்தே அருள்பெறு வாரே.

பொருள் : மெய்யடியார்கள் சிவவுலகத்தே தோன்றுவர். அச்சிவ உலகத்துக்குரிய தூய உடலுடன் இருப்பர். அவ் வுலகத்தின் கண் சிவனை வழிபடும் அருந்தவம் ஆற்றுவர். அச்சிவ உலகத்தே நின்று இறையருள் நேர்படின் சிவன் திருவடியினைக் கூடுவர். அச்சிவ உலகத்திலேயே திருவருள் இன்பத்தினை எய்துவர்.

1653. கதிர்கண்ட காந்தம் கனலின் வடிவாம்
மதிகண்ட காந்தம் மணிநீர் வடிவாம்
சதிகொண்ட சாக்கி எரியின் வடிவாம்
எரிகொண்ட ஈசன் எழில்படி வாமே.

பொருள் : சூரியனைக் கண்ட சூரிய காந்தக்கல் நெருப்பின் வடிவமாகும். சந்திரனைக் கண்ட சந்திரகாந்தக் கல் முத்துப் போன்ற நீரில் வடிவாகும். சக்கியோடு மோதும் முக்கியைக் கொண்ட சக்கிமுக்கி தீயினை உண்டாக்கும் அக்கினி வடிவம். ஆனால் அக்கினி மண்டலத்தைத் தன்னுள் இழுத்துக்கொண்ட சிவன் அக்கினியின் தன்மையை விட்டு அழகான சந்திரன் ஒளிமயமாக விளங்குவான். சக்கிமுக்கிக் கல்லை நெருப்புக்கல் என்பர்.

1654. நாடும் உறவும் கலந்தெங்கள் நந்தியைத்
தேடுவன் தேடிச் சிவபெரு மான் என்று
கூடுவன் கூடிக் குரைகழற் கேசெல்ல
வீடும் அளவும் விடுகின் றிலேனே.

பொருள் : நாடுதலாகிய சிந்தித்தலும் உறவாகிய முழுநேயமும் கொண்டு எங்கள் நந்தியாகிய சிவபெருமானை அவன் அருள் விளக்கத் துணையால் தேடுவேன் தேடிச் சிவபெருமான் என்று கூடுவேன். கூடி இடையறாது நினைக்கும் நினைவாகிய ஒலிக்கும் ஆண்மைக்கழல் அணிந்துள்ள திருவடிக்கே செல உடம்பை விட்டு உயிர் நீங்கும் வரை திருவடியைப் பற்றுதலாகிய திரு ஐந்து எழுத்த ஓதுதலை நீங்கேன்.

8. அவவேடம் (போலிக் கோலம்)

(அவ வேடம் - பயனற்ற சின்னம் அகம்புறம் ஒத்தில்லாமல் வேடம் புனைவது பயனின்றாகும்.)

1655. ஆடம் பரங்கொண்டு அடிசில்உண் பான்பயன்
வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்
ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்
தேடியும் காணீர் சிவனவன் தாள்களே.

பொருள் : கூடா ஒழுக்கத்தினராய்த் தவவேடங் கொண்டு பிறரை அஞ்சுவித்துத் திரிவார்க்குப் பயன் ஆடம்பரமான சோறு கறி உண்பதேயாம். பேதைகளே ! பிறப்பின் பயன் இதுவோ ? சிவனார் திருவுருவினைக் கண்டவுடன் மெய்ம் மறந்து ஆடியும், பொய்யில்லாத திருமுறை பாடியும் இன்பக் கண்ணீர் பெருக்கி அழுதும், மகிழ்ச்சி மேலீட்டால் அரற்றியும் இம்முறையாகத் தேடியும் காணுங்கள். இதுவே பிறவிப்பயன்.

1656. ஞானம்இல் லார்வேடம் பூண்டுஇந்த நாட்டிடை
ஈனம தேசெய்து இரந்துண்டு இருப்பினும்
மான நலங்கெடும் அப்புவி யாதலால்
ஈனவர் வேடம் கழிப்பித்தல் இன்பமே.

பொருள் : திருவடி உணர்வில்லாக் கீயோர் சிவக்கோலம் பூண்டு சிறந்த தென்னாட்டகத்துக் கூடாஒழுக்கம் புரிந்து பிறரை வஞ்சித்து ஏதும் உøழாது இரந்துண்டிருப்பர். அவர் அவ்வாறு இருப்பதால் நாட்டின் பெருமையும் நன்மையும் கெட்டழியும். ஆகையால் அப்பொருந்தா வேடத்தாரை அவ்வேடத்தை நீக்கச் செய்து நாட்டுக்கு நன்மையும் இன்பமும் வாய்க்கும்படி செய்வது நல்லோர் கடனாகும்.

1657. இன்பமும் துன்பமும் நாட்டார் இடத்துள்ள
நன்செயல் புன்செய லால்அந்த நாட்டிற்காம்
என்ப இறைநாடி நாடொறும் நாட்டினன்
மன்பதை செப்பம் செயின்வையம் வாழுமே.

பொருள் : இன்பமும் துன்பமும் நாட்டுமக்கள் செய்த நல்வினை தீவினையால் நாட்டிற்கு ஆகும் என்று கூறுவர். ஆதலால் அரசன் இதனை நன்கு ஆராய்ந்து நாள்தோறும் நாட்டில் அவ்வேடத்தாரை நல்வழிப் படுத்துமாயின் உலகம் வாழும்.

1658. இழிகுலத் தோர்வேடம் பூண்பர் மேலெய்த
வழிகுலத் தோர்வேடம் பூண்பர் தேவாகப்
பழிகுலத் தாகிய பாழ்சண்ட ரானார்
கழிகுலத் தோர்கள் களையப்பட் டோரே.

பொருள் : தாழ்ந்த குலத்தில் தோன்றியவர்கள் மேல்நிலை அடைய வேடம் கொள்வர். வழிவழி அடிமை செய்யும் குலத்தில் வந்தவர் தெய்வநிலை அடைவதற்காக வேடம் கொள்வர். பழிக்கத் தக்க செயலைச் செய்யும் குலத்தில் வந்த பாழான சண்டாளர்கள் வேடம் பூணில் கழிக்கத்தக்க குலத்தவர்கள் ஆவர். ஆதலால் நீக்கத் தக்கவராம்.

1659. பொய்த்தவம் செய்வார் புகுவார் நரகத்துப்
பொய்த்தவம் செய்தவர் புண்ணியர் ஆகார்
பொய்த்தவம் மெய்த்தவம் போகத்துள் போக்கியம்
சத்திய ஞானத்தால் தங்கும் தவங்களே.

பொருள் : தவத்தைப் பொய்ம்மையாகச் செய்பவர் இருளுலகம் புகுந்து இன்னல் உறுவர். பொய்த்துவம் செய்வார் புண்ணியர் ஆகார். பின் அதற்குப் பயன் மெய்த்தவம் போன்று நடிப்பதால் நிலையிலா உலக இன்பம் பொருந்தாவழியில் சிறிதுண்டாம். அவ்வளவே அத்தவப் பயன் உண்மையும் திருவடி உணர்வும் மேற்கொள்வதால் மெய்த்தவப் பயன்கள் நிலைக்கும்.

1660. பொய்வேடம் பூண்பர் பொசித்தல் பயனாக
மெய்வேடம் பூண்போர் மிகுபிச்சை கைக்கொள்வர்
பொய்வேடம் மெய்வேடம் போலவே பூணினும்
உய்வேட மாகும் உணர்ந்தறிந் தோர்க்கே.

பொருள் : வயிறார உண்பது ஒன்றே பயன் என்று கருதிப் பொய்யாகத் தவ வேடம் புனைவர். உண்மையாகத் தவவேடம் பூண்டோர் உயிர் பிரியாதிருக்கக் கைப்பிச்சை ஏற்பர். பொய்யான வேடத்தை மெய்யான வேடம் போலப் பூண்டாலும் வேடத்தின் உண்மையும் மேன்மையும் உணரின் அதுவே அவர் உய்தி பெறுதற்குரிய வேடமாகும்.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் - Page 2 Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Tue Mar 27, 2012 1:21 pm

9. தவ வேடம்

(தவவேடம் - தவத்துக்குரிய சின்னம், விபூதி, உருத்திராக்கம், குண்டலம் முதலியன தவத்துக்குரிய சின்னங்களாம்.)

1661. தவமிக் கவரே தலையான வேடம்
அவமிக் கவரே அதிகொலை வேடர்
அவமிக் கவர்வேடத் தாகார்அவ் வேடம்
தவமிக் கவர்க்கன்றித் தாங்கஒண் ணாதே.

பொருள் : திருவடி யுணர்வுக்கு வாயிலாகிய நற்றவமிக்கவரே தலையான சிவக்கோலம் உடையவராவர். தவமில்லாத அவமாகிய பாவச் செயல் மிக்கவரே கொடுங் கொலைக்குச் சிறிதும் நடுங்காத வனவேடராவர். சிவக்கோலமாகிய தவக்கோலம் மிக்கவரே அக்கோலத்தைத் தாங்கும் தகுதியினராவர். மற்றவர்கள் அக்கோலத்தைத் தாங்கும் தகுதியுடையவர் அல்லர்.

1662. பூதி அணிவது சாதனம் ஆதியில்
காதணி தாம்பிர குண்டலம் கண்டிகை
ஓதி யவர்க்கும் உருத்திர சாதனம்
தீதில் சிவயோகி சாதனம் தேரிலே.

பொருள் : சிவ அடையாளங்களுள் முதன்மை வாய்ந்தது திரு வெண்ணீறு இத்திருவெண்ணீறு உடம்பில் பல்வேறு இடங்களில் அணியப்படுவது. செம்பொன்னால் ஆக்கிய குண்டலங்கள் இரண்டு காதுகளில் காணப்படும். வண்டனைய வடிவச் சிவமணிகள் முப்பத்திரண்டு கொண்டு கண்டிகை மார்பிடத்துக் காணப்படும். இவையே சிவ அடையாளங்களாகும். குற்றமற்ற செறிவு நிலையாகிய சிவயோகிக்கும் இவையே அடையாளங்களாம் சொம்பொன் தாமிரம்.

1663. யோகிக்கு இடுவது வுட்கட்டுக் கஞ்சுளி
தோகைக்குப் பாசத்துச் சுற்றும் சடையதொன்று
ஆகத்து நீறனி ஆங்குஅக் கபாலம்
சீகத்து மாத்திரை தின்பிரம் பாகுமே.

பொருள் : உட்கட்டாகிய கோவணமும் கஞ்சுளியாகிய போர்வையும் திருச்சடையின்கண் மயில் இறகாலாகிய குல்லாவும் முழுவுடம்பும் அணியும் திருவெண்ணீறும் கையில் மண்டையோடும் அழகிய வலந்திருக்கையில் பிரப்பங்கோலும் சிவயோகியின் அடையாளங்களாகும்.

1664. காதணி குண்டலம் கண்டிகை நாதமும்
ஊதுநற் சங்கும் உயர்கட்டி கப்பரை
ஏதமில் பாதுகம் யோகாந்த மாதனம்
ஏதமில் யோகபட் டம்தண்டம் ஈரைந்தே.

பொருள் : காதணியாகிய குண்டலமும் சிவமணியாலாகிய கண்டிகையும், ஓசை எழுப்பும் திருஐந்தெழுத்தும், வெண்சங்கும், மண்டையாகிய சட்டியும், திருநீற்று மடலும், பாதக்குறகும் சிவயோகிக்குரிய அழகிய இருக்கையும், யோகபட்டமும், யோத்தண்டும் என்னும் பத்தும் அடையாளங்களும் சிவயோகியர்க்கும் உரியனவாம்.

10. திருநீறு (திருநீறு - விபூதி, விபூதி என்பது ஒளியை நினைவு படுத்தும் சாதனம்)

1665. நூலும் சிகையும் உணரார்நின் மூடர்கள்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
பாலொன்றும் அந்தணர் பார்ப்பார் பரமுயிர்
ஓரொன்று இரண்டெனில் ஓங்காரம் ஓதலே.

பொருள் : பூணூலையும் சிகையையும் அணிந்திருந்தும் அவற்றின் உண்மையை மூடர்கள் அறிவதில்லை. பூணூல் என்பது வேதாந்தத்தைக் குறிப்பது. நுட்பமான குடுமி என்பது வேதாந்த ஞானத்தை உணர்த்துவது. பிரமத்தின் பால் இரண்டற்று ஒன்றினை அத்தண்மையுடையோர் பரமும் உயிரும் ஒன்றென்று பார்ப்பார். அவ்விதம் ஒன்றாகாது நின்றவர் ஓங்காரம் ஓதில் ஒன்றாவர்.

1666. கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சார்வரே.

பொருள் : சிவபெருமான் பூசும் கவசத் திருநீற்றை ஒளிகெடாமல் பூசி மகிழ்வராயின் பண்டைய வினைகளும் உங்களிடம் தங்கா. சிவகதியும் உங்களிடம் வந்து பொருந்தும், ஆனந்த மயமான திருவடியை அடையலாம். (கங்காளன் - எலும்பு மாலை அணிந்தவன்; சிவன் எலும்பில் சோதியை வெளிப்படுத்தும் சக்தியுள்ளது.)

1667. அரசுடன் ஆல்அத்தி ஆகும்அக் காரம்
விரவு கனலில் வியனுரு மாறி
நிரவயன் நின்மலன் தாள்பெற்ற நீதர்
உருவம் பிரமன் உயர்குலம் ஆமே.

பொருள் : அரசு, ஆல், அத்தியின் சமித்துக்கள், வேள்வித் தீயில் பொருந்தி உருவம் மாறி விபூதியாகும். உருவம் இல்லாதவனும் மலம் இல்லாதவனும் ஆகி சிவத்தின் திருவடியை உணர்ந்து அனுபவிக்கும் நியதி உடையவர் உருவ மற்றம் பெற்ற பிரமத்தியானத்தினால் உயர் குலத்தோராவர், காரம் - காரியம் - திருநீறு, நீதர் நீதியை உடையவர்.

ஞான வேடம்

(ஞான வேடமாவது, ஞானப் பேற்றினை விரும்பி மேற்கொள்ளும் வேடம். அருள் ஞான சாதனம் என்று உணர்ந்து பூணுதலாம்.)

1668. ஞானம்இ லார் டவடம் பூண்டும் நரகத்தர்
ஞானம்உ ளார்வேடம் இன்றெனில் நன்முத்தர்
ஞானம்உள தாக வேண்டுவோர் நக்கன்பால்
ஞானம்உள வேடம் நண்ணிநிற் போரே.

பொருள் : உண்மைச் சிவஞானம் இல்லாதவர் உண்மைச்சிவ ஞானியர் போல் வேடந் தாங்கினால் நரகத்தை அடைவர். உண்மைச் சிவஞானம் உடையோர் சிவஞானியர்க்குரிய வேடத்தைத் தாங்கா விடினும் நல்லமுத்தர்களே யாவார்கள். சிவஞானப் பேறு உண்டாக வேண்டு மென்ற விருப்பமுடையோர் சிவத்தினிடம் என்று நீங்காத பேரொளியைப் பொருந்தி நிற்பர்.

1669. புன்ஞானத் தோர்வேடம் பூண்டும் பயனில்லை
நன்ஞானத் தோர்வேடம் பூணார் அருள்நண்ணித்
துன்ஞானத் தோர்சம யத்துரி சுள்ளோர்
பின் ஞானத் தோர்ஒன்றும் பேசகில் லாரே.

பொருள் : இழிந்த ஞானமுடையோர் ஞானிகள் வேடத்தைத் தாங்கினாலும் அதனால் ஆவதொரு பயனும் இல்லை. நல்ல ஞான முடையோர் திருவருளில் தோய்ந்து வேடம் பூண்பதில் விருப்பமற்று இருப்பர். திரிபு உணர்ச்சியுடையோர் சமயக் காழ்ப்பு உடையோர் ஆவர். பின்பு அனுபவமுள்ள ஞானிகள் சமயக்காழ்ப்பு உடையோரிடம் வாது செய்ய விரும்பார். சிவஞானிகள் வேடத்தில் விருப்பமின்றி மவுனமாய் இருப்பர்.

1670. சிவஞானி கட்கும் சிவயோகி கட்கும்
அவமான சாதனம் ஆகாது தேரில்
அவமாம் அவர்க்கது சாதன நான்கும்
உவமானம் இப்பொருள் உள்ளுற லாமே.

பொருள் : சிவஞானிகளுக்கும் சிவயோகிகளுக்கும் ஆராயின் பயனற்றதான புறச்சாதனங்கள் ஆகா. அவர்களுக்குத் திருநீறு, உத்திராக்கம், சடைமுடி, அஞ்செழுத்து ஆகிய நான்கு புறச்சாதனங்களும் வீணேயாகும். அவர்கள் உவமிக்க ஒண்ணாத பொருளை உள்ளே பொருந்தி வாழலாம்.

1671. கத்தித் திரிவர் கழுவடி நாய்போல்
கொத்தித் திரிவர் குரக்களி ஞானிகள்
ஒத்துப் பொறியும் உடலும் இருக்கவே
செத்துத் திரிவர் சிவஞானி யோர்களே.

பொருள் : செப்பிடு வித்தைக்காரர்கள் கழுமரத்தின் அடியில் இருக்கும் நாய் போலக் கத்தித் திரிவார்கள். மேலும் கழுகுபோல ஏமாளிகளைப் பிடுங்கித் திரிவார்கள். ஆனால் சிவஞானிகளோ ஐம்பொறிகளும் உடலும் நுகர்ச்சிக்குத் தக்கனவாக ஒத்திருந்தும் போகங்களை விரும்பாமல் செத்தாரைப் போலத் திரிவார்.

1672. அடியார் அவரே அடியார் அலாதார்
அடியாரும் ஆகார்அல் வேடமும் ஆகார்
அடியார் சிவஞானம் ஆனது பெற்றோர்
அடியார் அலாதார் அடியார்கள் அன்றே.

பொருள் : அருள் இயக்கத் தன்முனைப்பற்று அதன்வழி இயங்கும் சிவமெய்உணர்வினர் மெய்யடியார் ஆவர். அத்தகுதியில்லார் அடியாரும் ஆகார். அவர் கொள்ளும் கோலம் சிவக் கோலமும் ஆகாது. திருவடியுணர்வு பெற்றோர் மெய்யடியார் ஆவார். அடியார் தன்மை யில்லாதவர் ஒருகாலமும் மெய்யடியார்கள் ஆகார்.

1673. ஞானிக்குச் சுந்தர வேடமும் நல்லவாம்
தானுற்ற வேடமும் தற்சிவ யோகமே
ஆன அவ் வேடம் அருண்ஞான சாதனம்
ஆனதும் ஆம்ஒன்றும் ஆகா தவனுக்கே.

பொருள் : சிவஞானிக்கு நம்பியாரூரர் போன்று திருமணக் கோலம் ஒத்த அழகிய கோலமும் தோற்றத்தாலும் பயனாலும் நன்மையேயாம். கொண்ட அத்திருவேடமும் சிவயோக வேடமேயாம். மேலும் அத்திருக்கோலம் அருள் ஞானத் துணையுமாகும். சிவஞானம் கைவரப் பெறாதார் கொள்ளும் கோலம் ஒருவகையானும் பொருந்தாதென்க.

1674. ஞானத்தின் நாற்பதம் நண்ணும் சிவஞானி
தானத்தில் வைத்த தனிஆல யத்தனாம்
மோனத்தன் ஆதலின் முத்தனாம் சித்தனாம்
ஏனைத் தவசி இவனெனல் ஆகுமே.

பொருள் : சிவஞானி ஞானத்தில் ஞானமாகிய நான்காம் மார்க்கம் பொருந்தும். அகண்டமான சிவம் இவனுடலை ஆலயமாகக் கொண்டு விளங்குவதால் ஞானியின் தேகமே ஒப்பற்ற சிவாலயமாகும். சிவஞானி பிரணவ உபாசனை உடையவன் ஆதலின் முத்தனாகவும் சித்தனாகவும் விளங்குவான். ஏனைய தவத்தர்களின் நிலை எல்லாம் இவனிடம் உள்ளமையால் அவரெல்லாம் இவனைப் போன்றவர் ஆவரோ ? ஆகமாட்டார் என்றபடி.

1675. தானன்றித் தன்மையும் தான்அவ னாதலும்
ஏனை அச்சிவ மான இயற்கையும்
தானுறு சாதக முத்திரை சாத்தலும்
மோனமும் நந்தி பதமுத்தி பெற்றதே.

பொருள் : தற்போதம் நீங்கிய தன்மையும், மற்றும் தான் சிவமேயாகி விளங்குதலும் உலகிலுள்ள எப்பொருளுக்கும் உரிய முக்காலத்தையும் அறியும் ஆற்றலும், பக்குவ சீவர்களுக்குப் பார்வையாலோ பரிசத்தாலோ ஞானத்தை வழங்குதலும் பிரணவசித்தியும் சிவபதவி அடைந்தோர்க்கு உரியனவாம்.

12. சிவ வேடம்

(சிவ வேடமாவது சிவனுக்கு அடிமை என்று உணர்ந்திருப்போர் கொள்ளும் வேடம். இவ்வேடத்தார் தமக்கென ஒரு செயலற்றார் என்க.)

1676. அருளால் அரனுக்கு அடிமைய தாகிப்
பொருளாம் தனதுடல் பொற்பதி நாடி
இருளானது இன்றி இருஞ்செயல் அற்றோர்
தெருளாம் அடிமைச் சிவவேடத் தாரே.

பொருள் : திருவருளால் சிவனுக்கு உடல் பொருள் ஆவி மூன்றையும் அர்ப்பணித்து அடிமையாகி, பொருளாகிய தனது உடலுக்கு மேல் விளங்கும் பொன்னொளி மயமான அண்ட கோசத்தை உணர்ந்து, இருள் நீங்கித் தம்செயல் அற்றவரே தெளிந்த அடிமை பூண்ட சிவ வேடத்தார் ஆவர்.

1677. உடலில் துவக்கிய வேடம் உயிர்க்காகா
உடல்கழன் றால்வேடம் உடனே கழலும்
உடல்உயிர் உண்மையென்று ஓர்ந்துகொள் ளாதார்
கடலில் அகல்பட்ட கட்டைஒத் தாரே.

பொருள் : உடலிற் காணப்படும் வேடமாகிய திருக்கோலம் உயிரினைப் பொருந்தி உயிரினுக்குத் துணையாகாது. உடல் உயிரை விட்டு நீங்கினால் அவ்வேடமும் உடனே நீங்கும். உடலின்கண் தங்கும் உயிர் அழிவில்லாத உண்மையான மன்னுயிராகும். இத்தகைய உண்மையினை உணர்ந்து கொள்ளாதார் உடலிற்பட்ட மரக்கட்டை இடையறாது அங்கும் இங்கும் அலைவது போன்று பிறவிப்பெருங்கடலினை நீந்தமாட்டாது பிறந்து இறந்து உழன்று அதனுள் அழுந்துவர்.

1678. மயலற்று இருளற்று மாமனம் அற்றுக்
கயலுற்ற கண்ணியர் கையிணைக் கற்றுத்
தயலற்று அவரோடும் தாமே தாமாகிச்
செயலற்று இருப்பார் சிவவேடத் தாரே.

பொருள் : ஆணவமல காரியமான மயக்கத்தை விட்டு, அதன் விளைவான இருளையும் அகற்றி, வலிமையுள்ள மனம் எண்ணுதலை விட்டு, கயல்மீனைப் போன்ற கண்களையுடைய பெண்களால் கையால் தழுவப் பெறுதலையும் நீங்கி, மயக்க மற்றவரோடு இணங்கி, தமக்கெனச் செயலின்றி இருப்பார் சிவ வேடத்தர் ஆவர்.

1679. ஓடுங் குதிரைக் குசைதிண்ணம் பற்றுமின்
வேடம்கொண்டு என்செய்வீர் வேண்டா மனிதரே
நாடுமின் நந்தியை நம்பெரு மான்தன்னைத்
தேடும்இன் பப்பொருள் சென்றுஎய்த லாமே.

பொருள் : மனிதர்களே ! பிராண ரூபமாக உங்களிடம் ஓடிக் கொண்டிருக்கும் குதிரையைக் கடிவாளங் கொண்டு உறுதியாகப் பற்றி நிறுத்துங்கள். வேடத்தை மட்டும் தாங்கி என்ன செய்வீர்கள் ? வீணான வேடத்தை விடுங்கள். நம் தலைவன் நந்தி தங்கியுள்ள குரு மண்டலத்தில் மனத்தைச் செலுத்துங்கள். நீங்கள் தேடுகின்ற இன்பப் பொருளான சிவத்தைச் சென்றடையலாம். (குதிரை - பிராணன். குசை கடிவாளம்.)

13. அபக்குவன் (கொய்க்குரு)

அபக்குவன் - தகுதியில்லாதவன்

1680. குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழு மாறே.

பொருள் : அறியாமையை அறிவனால் போக்கும் குருவினைக் கொள்ள மாட்டார். அறியாமையை நீக்காத குருவினைக் கொள்வர். அது குருடனும் குருடனும் சேர்ந்து குருட்டுத் தனமாக ஆடி இரு குருடர்களும் அறியாமையால் குழியில் விழுவது போலாம். ஞானமில்லாத குரு ஞானத்தை உபதேசிப்பது ஒரு குருடன் மற்றொரு குருடனுக்கு வழிகாட்டுவது போலாம். இருவரும் கெடுவர்.

1681. மனத்தில் எழுந்ததோர் மாயக்கண் ணாடி
நினைப்பின் அதனின் நிழலையுங் காணார்
வினைப்பயன் போக விளக்கியும் கொள்ளார்
புறக்கடை இச்சித்துப் போகின்ற வாறே.

பொருள் : மனிதன் எண்ணுவது எல்லாம் பிரதிபலித்துக் கொண்டிருப்பது காரண சரீரம். எண்ணங்கள் நிறைந்த மனம் உடையவர் காரண சரீரத்தின் நிழலைக்கூட அணுகி அனுபவிக்கமாட்டார். எண்ணங்களால் உண்டாகிய வினைப் பயன்களை மாற்றிக் கொள்ளவும் அறியார். அறியாமையால் மீண்டும் காலவழியை இச்சித்துப் போய் எண்ணங்களைப் பெருக்கிப் கொள்கின்றனர்.

1682. ஏய்எனில் என்என மாட்டார் பிரசைகள்
வாய்முலை பெய்ய மதுரம்நின்று ஊறிடும்
தாய்முலை யாவது அறியார் தமருளோர்
ஊன்நிலை செய்யும் உருவிலி தானே.

பொருள் : மக்கள் ஏய் என்று கூப்பிட்டால் என்ன என்று கூட பதில் கூற மாட்டார்கள். இது உலக இயல்பு. சிசுவின் வாயில் தாயின் முலையை வைக்க அமுதம் ஊறும். ஆனால் எவ்வாறு தாயின் முலையில் அமுதம் ஊறுகிறது என்பதை நம்மவர் அறிவதில்லை. அவ்வாறு அமுதம் பெய்து ஊனில் உயிரை நிலைக்கச் செய்பவன் உருவில்லாத சிவனேயாம்.

1683. வாயொன்று சொல்லி மனமொன்று சிந்தித்து
நீயொன்று செய்யல் உறுதி நெடுந்தகாய்
நீயென்றிங்கு உன்னைத் தெளிவன் தெளிந்தபின்
பேயென்றிங்கு என்னைப் பிறர்தெளி யாரே.

பொருள் : உறுதி கொண்ட பெருந் தன்மையுடையோனே ! வாய் ஏதோ ஒன்றைச் சொல்லவும், மனம் வேறொன்றைச் சிந்திக்கவும் நீ மற்றொன்றைச் செய்யாதே முக்கரண சுத்தியோடு இருப்பின் நீசிவாக்கினையைப் பெற்றவன் என்று நான் கூறுவேன். அவ்வாறு தெளிந்த பின்னர் என் கூற்று பித்தன் கூற்று என்று பிறர் கூறமாட்டார். பக்குவம் இல்லாதவர் முக்கரண சுத்தியோடு இருக்கமாட்டார்.

1684. பஞ்சத் துரோகத்துஇப் பாதகர் தம்மை
அஞ்சச் சமயத்துஓர் வேந்தன் அருந்தண்டம்
விஞ்சச்செய்து இப்புலி வேறே விடாவிடில்
பஞ்சத்துள் ஆய்புவி முற்றும்பா ழாகுமே.

பொருள் : பொய், கொலை, களவு, கள், காமம் என்னும் ஐம்பொரும் பாவங்களும் அஞ்சாது நெஞ்சார இயற்றுவோர். நம்பகக் கேடுசூழ் பெரும் பாதகராவர். அவர்களையும் ஏனையோடும் அவ்வாறு செய்து பாதகர் ஆகாவண்ணம் அஞ்சி ஒழுகும்படி தண்டித்தல் வேந்தன் கடனாகும். அத்தண்டமாவது அக்கொடியோரை நாடு கடத்தலேயாம். அவ்வாறு செய்யாவிட்டால் நாட்டினில் மழைபெய்யாமல் விளைவு குன்றிப் பஞ்சமுண்டாகும். (துரோகம் - நம்பகக் கேடு.)

1685. தவத்திடை நின்றவர் தாம்உண்ணும் கன்மம்
சிவத்திடை நின்றது தேவர் அறியார்
தவத்திடை நின்றுஅறி யாவதர் எல்லாம்
பவத்திடை நின்றேதார் பாடது வாமே.

பொருள் : சிவனை மறவாமல் செந்தமிழ் திருஐந்தெழுத்தை ஓதி ஒழுகும் பெருந்தவத்திடை நின்றவர் உடம்புள்ள துணையும் ஊழ்வினை நுகர்வு நீங்கா. ஆதலால் அத்தவத்தோர்க்கு அந்நுகர்வு உடலோடு நின்றுவிடும். அவர் உள்ளத்தின்கண் நின்று நிலைபெறும் மாறில் நுகர்வு சிவநுகர்வேயாம். இவ்வுண்மையினைச் செருக்கறாத் தேவரும் அறியார். நற்றவமாகிய சிவவழிபாட்டில் நின்று அறியமாட்டாதவர் எல்லாரும் பிறப்பிடை நின்று துன்புறுவர்.

1686. கன்றலும் கருதலும் கருமம் செய்தலும்
தின்றலும் சுவைத்தலும் தீமை செய்தலும்
பின்றலும் பிறங்கலும் பெருமை கூறலும்
என்றிலை இறைபால் இயற்கை அல்லவே.

பொருள் : நற்றவத்தால் சிவத்தை யுற்றவர்பால் செருக்குக் கொண்டு சினத்தாலும், நட்பு உறவு கருதுதலும், பயன்கருதிச் செயல் செய்தலும், முனைத்துத் தின்றலும், சுவைத்தலும், தீமை செய்தலும், முறையின்றித் தாழ்த்தலும், உயர்த்தலும், தற்பெருமை கூறுதலும் ஆகிய நிகழ்ச்சிகள் மறந்தும் உண்டாகா. காரணம் யாதெனில் இவையாவும் சிவன்பால் இன்மையால் என்க.

1687. விடிவது அறியார் வெளிகாண மாட்டார்
விடியில் வெளியில் விழிக்கவும் மாட்டார்
கடியதோர் உண்ணிமை கட்டுமின் காண்மின்
விடியாமை காக்கும் விளக்கது வாமே.

பொருள் : அனுகூலமானதை அறிய மாட்டார். பரவெளியைக் காணமாட்டார். அனுகூலமான பரவெளியில் பார்வையைச் செலுத்த மாட்டார் காவலுடன் கூடிய கண்ணிமைகளைப் புறநோக்கிலிருந்து தடுத்து நிறுத்துங்கள். அகநோக்கை அறியுங்கள் தொடர்ந்துவரும் துர்ப்பாக்கியத்தைத் தவிர்க்கும் ஒளியாகச்சிவம் விளங்கும்.

1688. வைத்த பசுபாசம் மாற்று நெறிவைகிப்
பெத்தம் அறுமுத்த னாகிப் பிறழ்வுற்றுத்
தத்துவம் முன்னித் தலைப்படாது அவ்வாறு
பித்தான சீடனுக்கு ஈயப் பெறாதானே.

பொருள் : அனாதியே ஆன்மாவோடு பிணிக்கப் பெற்ற ஆணவமலத்தை மாற்றுகின்ற வழியினைப் பொருந்தி, மலக்குற்றம் நீங்க முத்தியில் விருப்பனாகி உலகஇயலில் மாறுபட்டு, உண்மைப் பொருளை நாடி மேன்மையடையாவண்ணம் உறுதியில்லாத சீடனுக்கு ஞானத்தைக் கொடுக்கலாகாது.

1689. மன்னும் மலம்ஐந்தும் மாற்றும் வகையோரான்
துன்னிய காமாதி தோயும் தொழில்நீங்கான்
பின்னிய பொய்யன் பிறப்புஇறப்பு அஞ்சாதான்
அன்னியன் ஆவான் அசற்சீடன் ஆமே.

பொருள் : நிலையான ஆணவம் ஆதி ஐம் மலங்களையும் நீங்கும் வகையை ஆராயன். பொருந்திய காமம் முதலானவற்றில் மூழ்கும் தொழிலினின்றும் பிரியான். பொய் கலந்து பேசுபவன் பிறப்பு இறப்புகளுக்கு அஞ்சாதவன். இவன் தீட்சைக்குரிய சீடன் அல்லன் என்று தள்ளத்தக்கவன் ஆவான். (மலம் ஐந்து - ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி, காமாதியாவன: காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் ஆம்.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் - Page 2 Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum