தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சே குவேரா - புரட்சிக்காரர்களின் இதயத் துடிப்பு
திருமூலர் | திருமந்திரம் - Page 3 EmptyThu Aug 28, 2014 10:03 am by கே இனியவன்

» ஒரு முக்கோணம் - தொலைந்து போகும் மனிதர்கள் - புரியாத மர்மம்
திருமூலர் | திருமந்திரம் - Page 3 EmptyThu Aug 28, 2014 10:01 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா
திருமூலர் | திருமந்திரம் - Page 3 EmptyThu Aug 28, 2014 10:00 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் எலியாஸ் -சுரா
திருமூலர் | திருமந்திரம் - Page 3 EmptyThu Aug 28, 2014 9:59 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா
திருமூலர் | திருமந்திரம் - Page 3 EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» கென்யா நாட்டு சிறுகதை தமிழில் சுரா
திருமூலர் | திருமந்திரம் - Page 3 EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதை
திருமூலர் | திருமந்திரம் - Page 3 EmptyThu Aug 28, 2014 9:57 am by கே இனியவன்

» பிரம்மராஜன் கவிதைகள்
திருமூலர் | திருமந்திரம் - Page 3 EmptyThu Aug 28, 2014 9:56 am by கே இனியவன்

» K Iniyavan
திருமூலர் | திருமந்திரம் - Page 3 EmptyThu Aug 28, 2014 9:41 am by கே இனியவன்

» K Iniyavan -karuththu
திருமூலர் | திருமந்திரம் - Page 3 EmptyThu Aug 28, 2014 9:37 am by கே இனியவன்


திருமூலர் | திருமந்திரம்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

திருமூலர் | திருமந்திரம் - Page 3 Empty திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Mon Mar 26, 2012 2:08 pm

First topic message reminder :

திருமூலர் | திருமந்திரம் - Page 3 Thirumular
பன்னிரு திருமுறைகளில் திருமூலர் எழுதிய திருமந்திரம் 10ம் திருமுறையாகும். இது மூவாயிரம் பாடல்களைக் கொண்டது. யோகிகள் பல்லாண்டு காலம் உயிர் வாழ்ந்திருப்பார் என்பது நூற் கொள்கை. திருமூலர் ஒரு யோகி. ஆகவே அவர் தான் கற்ற வித்தையை உலகிற்குக் கூறுகின்றார். உடல் வேறு, உயிர்வேறு. இவையிரண்டும் ஒன்று சேர்ந்து இருந்தால் தான் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருட்களையும் அடைய முடியும் என்ற அந்த உபாயத்தைத் திருமூலர் நமக்குக் கூறுகின்றனர். திருமந்திரம் ஒன்பது பகுதிகளாக உள்ளது. ஒவ்வொரு பகுதியும் ஒரு தந்திரம் எனப் பெயர் பெறும். திருமூலர் காலத்துத் தமிழகத்தில் சைவசமயம் இருந்த நிலைமையை உணர இச் செய்திகள் பொருந்துணை புரிய வல்லவை.

பரகாயப் பிரவேசம் என்று கேள்விப் பட்டிருப்பீர்கள் கூடு விட்டுக் கூடு பாய்தல் என்பது அதன் பொருள். அதாவது ஓர் உயிர் தான் குடியிருக்கும் உடலை விட்டு நீங்கி, மற்றோர் உடம்பினுள் நுழைந்து, அவ்வுடம்பிற்கு ஏற்றவாறு செயல் படுதல். விக்கிரமாதித்தன், ஆதிசங்கரர், அருணகிரிநாதர் ஆகியோர் கூடுவிட்டுக் கூடு பாய்ந்த செய்திகளை நாம் படிக்கிறோம். அதுபோல் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகிய திருமூலரும் மூலன் என்பவனின் உடம்பில் புகுந்து ஆகமப் பொருளைக் கூறியுள்ளார். உயிர் வேறு, உடல் வேறு என்ற தத்துவத்திற்குக் கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தை ஓர் உதாரணமாக விளங்குகிறது.

கயிலாய மலையில் நந்தி தேவரின் உபதேசத்தைப் பெற்ற யோகியார் ஒருவர், அவர் அட்டமா சித்தி பெற்றவர். அவர் அகத்தியரிடத்துக் கொண்டு நட்பால் பொதியமலை நோக்கி வந்தார். திருவாவடுதுறையை அடைந்தார். ஆங்கு இறைவரை வணங்கினார். அப்பதியினின்று அகன்று போகும் போது காவிரியாற்றின் கரையில் பசுக்கூட்டம் அழுவதைப் பார்த்தார். அப்பசுக்கள் மேய்க்கும் மூலன் என்ற இடையன் இறந்து கிடந்தான். யோகியார் அப்பசுக்களின் துன்பத்தைப் போக்க எண்ணினார். தாம் பயின்ற சித்தியினால் அம்மூலன் என்பவனின் உடலில் தம் உயிரைப் புகுத்தினார். பசுக்கள் மகிழ்ந்தன. திருமூலர் மாலையில் அப்பசுக்கூட்டங்களைக் கொண்டு அவற்றின் இருப்பிடங்களில் செல்லச் செய்தார். அவை வழக்கம் காரணமாகத் தம் வீடுகளுக்குச் சென்றன. திருமூலர் ஓரிடத்தில் நின்றார். மூலன் என்ற இடையனின் மனைவி தன் கணவன் இன்னும் வரவில்லையே என்று தேடிக் கொண்டு சென்றாள்! தன் கணவன் போல நின்ற யோகியாரைப் பார்த்தாள். அவர்க்கு ஏதோ நேர்ந்து விட்டது என்று எண்ணி அவரைத் தம் இல்லத்துக்கு அழைத்துச் செல்ல முயன்றாள். முடியவில்லை. அதனால் மனம் கவன்று அவள் இல்லம் திரும்பினாள். அன்று இரவு கழிந்தது. மறுநாள் அவள் தன் கணவனின் நிலையைப் பலரிடம் உரைத்தாள். அவர்கள் திருமூலரிடம் சென்றனர். அப்போது திருமூலர் யோகத்தில் இருக்கக் கண்டு அவரை மாற்ற இயலாது என்று மூலனின் மனைவியிடம் உரைத்தனர். அவள் பெரிதும் துன்பம் அடைந்தாள்.

யோகத்தினின்று எழுந்து யோகியார் தாம் வைத்திருந்த உடலைத் தேடிப் பார்த்தார். அது கிடைக்கவில்லை. தம் யோகவன்மையால் இறைவரின் உள்ளத்தை உணர்ந்தார். சிவாகமப் பொருளைத் திருமூர் வாக்கால் கூற வேண்டும் என்பது இறைவரின் திருவுள்ளம். அதனால் தம் உடல் இறைவரால் மறைக்கப்பட்டது என்பதை அறிந்தார். திருமூலர் சாத்தனூரிலிருந்து சென்றபோது இடையர் அவரைப் பின் தொடர்ந்தனர். அவர்க்கு அவர் உண்மையை உரைத்து, திருவாவடுதுறையை அடைந்து இறைவரை வணங்கிக் கோயிலுக்கு மேற்கில் உள்ள அரசமரத்தின் கீழ் சிவராச யோகத்தில் இருந்து மூவாயிரம் ஆண்டுகளில் மூவாயிரம் செய்யுளை இயற்றினார். பின் இறைவரது திருவடி நிழலை எய்தினார்.

முதல் தந்திரம்

யாக்கை நிலையாமை, செல்வ நிலையாமை, இளமை நிலையாமை, கொல்லாமை, புலால் உண்ணாமை, காம அடக்கம், அந்தணர் ஒழுக்கம், அரசன் கடமை, அறஞ்செய்தலின் சிறப்பு, அன்பை வளர்த்தல், பிறர்க்கு உதவி செய்தல், கற்றோரிடமிருந்தும், நூல்களில் இருந்தும் அறிவை வளர்த்தல், மனத்தை விருப்பு வெறுப்புக்களிற் செல்ல விடாமை போன்ற அறிவுரைகள் தரப்பட்டுள்ளன.

இரண்டாம் தந்திரம்

அகத்தியர் தென்னாடு போந்தமை, சிவனுடைய எட்டு வீரச் செயல்கள், லிங்கத்தின் தோற்றம், தக்கயாகம், பிரளயம் பற்றி புராணக் கதைகள் குறிக்கப்பட்டுள்ளன. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் சிவனுடைய ஐந்தொழில்களும், சக்தி, சிவன் விளையாட்டால் உண்டான ஜீவர்கள், விஞ்ஞானகலர், சகலர், பிரளயாகலர் என்னும் மூவகையினர் என்பதும் அவருள் மதிக்கத்தக்கவர் யாவர் என்பது விளக்கப்பட்டுள்ளன. கோவில்களை அழிப்பது தீது சிவநிந்தை தீது, அடியார் நிந்தை தீது, பொறையுடைமை, பெரியாரைத் துணைக் கோடல் என்பன குறிக்கப்பட்டுள்ளன.

மூன்றாம் தந்திரம்

இப்பகுதி முழுவதும் யோகத்தைப் பற்றியது. ஆனால் பதஞ்சலி கூறும் யோக முறையன்று. இயமம் முதலிய எண்வகை யோகமுறைகளும் அவற்றால் அடையும் பயன்களும் பிறவும் கூறப்பட்டுள்ளன.

நான்காம் தந்திரம்

மந்திர சாத்திரம் அல்லது உபாசனா மார்க்கத்தைப் பற்றியது. அஜபா மந்திரம், சபாலி மந்திரம் கூறப்பட்டுள்ளன. திரு அம்பலச் சக்கரம், திரிபுரச் சக்கரம், ஏரொளிச் சக்கரம், பைரவச் சக்கரம், சாம்பவி மண்டலச் சக்கரம், புவனாபதிச் சக்கரம், நவாஷர் சக்கரம் என்பவை பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன.

ஐந்தாம் தந்திரம்

சைவத்தின் வகைகளும் சரியை, கிரியை, யோகம், ஞானம் இவைகளும் கூறப்பட்டுள்ளன. புறச் சமயங்கள் கண்டிக்கப்படுகின்றன. உட் சமயங்கள் ஏற்கப்படுகின்றன.

ஆறாம் தந்திரம்

உயிர் நாடியாக உள்ளவை சிவ குரு தரிசனம். அவனது திருவடிப் பேறு, ஞானத்தில் பொருள் தெரிபவன், தெரியப்பட்ட பொருள், துறவு, தவம், அருளில் இருந்து தோன்றும் ஞானம், தக்கவர் இலக்கணம், தகாதவர் இலக்கணம், திருநீற்றில் பெருமை என்பவையாகும்.

ஏழாம் தந்திரம்

ஆறு ஆதாரங்கள், ஆறு லிங்கங்கள், சமய சிறப்புப் போதனை, ஐம்புலன்களை அடக்கும் முறை, குருவின் வருணனை, கூடா ஒழுக்கம் முதலியன பேசப்பட்டுள்ளன.

எட்டாம் தந்திரம்

சித்தாந்தத்தின் விளக்கம், காரிய காரண உபாதிகள், புறங்கூறாமை சிவ நிந்தை ஒழிப்பு, உண்மை பேசல், ஆசையை ஒழித்தல் முதலியவை கூறப்பட்டுள்ளன.

ஒன்பதாம் தந்திரம்

குரு, குருமடம், குரு தரிசனம், வைணவ சமாதி, ஸ்தூல, சூக்கும, அதிசூக்கும பஞ்சாட்சரங்கள் பேசப்பட்டுள்ளன. இறைவனது நடன வகைகள் முதலியனவும் ஞானம் மலர்தல், ஞானத்தின் சிறப்பும் கூறப்பட்டுள்ளன.

10ம் திருமுறையில் திருமூலரால் பாடப்பட்ட 3047 பாடல்களும் அதன் தெளிவுரையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down


திருமூலர் | திருமந்திரம் - Page 3 Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Tue Mar 27, 2012 1:22 pm

14. பக்குவன் (மெய்க்குரு)

(பக்குவன் - தகுதியுடையவன். குரு உபதேசப்படி ஒழுகுபவன். பக்குவம் உடையவன் ஆவான்.)

1690. தொழுதறி வாளர் சுருதிகண் ணாகப்
பழுதறி யாத பரம குருவை
வழியறி வார்நல் வழியறி வாளர்
அழிவறி வார்மற்றை யல்லா தவரே.

பொருள் : வழிபாடு செய்யும் பக்குவமுள்ள சீடர் வேதாகம முறை உணர்ந்து, குற்றமே அறியாத மேலான குருவை நாடி அறிவார். இவர் நல்முத்தியை விரும்பும் அறிவுடையவர். மற்றைய முத்தியை விரும்பாத உலக நிலையில் உள்ளவர் அழிந்து போகும் வழியைத்தான் அறிவர். முத்தியை விரும்பும் பக்குவமுடையவர் நல்ல குருவை நாடி உபதேசம் பெறுவர்.

1691. பதைத்தொழிந் தேன்பர மாவுனை நாடி
அதைத்தொழிந் தேன்இனி யாரொடும் கூடேன்
சிதைத்தடி யேன்வினை சிந்தனை தீர
உதைத்துடை யாய்உகந்து ஆண்டரு ளாயே.

பொருள் : சிவபெருமானே ! பிறப்புத் துன்பங் கண்டு அஞ்சிப் பதறினேன். உன் திருவடியை நாடி இடைவிடாமல் அலைந்தேன். அறியாதார் உடம்பினை இனியாரென்று கூறுகின்றனர். அவ்வுடம்புடன் கூடேன். அறியேனின் இருவினைகளையும் சிதைத்து மனக்கவலை தீரப் பிறப்பினை உதைத்து அடியேனை உவந்து ஆண்டருள்வாயாக.

1692. பதைக்கின்ற போதே பரம்என்றும் வித்தை
விதைக்கின்ற வித்தினை மேல்நின்று நோக்கிச்
சிதைக்கின்ற சிந்தையைச் செவ்வே நிறுத்தி
இசைக்கின்ற அன்பருக்கு ஈயலு மாமே.

பொருள் : பிறப்பு இறப்புகளில் படும் துன்பத்தை நினைக்கின்ற போதே உள்ளம் பதைக்கின்றது. மேலாகிய சிவனைச் சேரும் திருவடியுணர்வைப் புருவ நடுவினின்றும் நோக்கி அந்நோக்கத்திற்கு இடையூறாக உலகியலிற் செல்லும் மனத்தைத் தடுத்து நிறுத்திச் சிவன் திருவடியில் இடையறாது சேர்க்கின்ற மெய்யன்பர் அருமறை பெறுதற்கு உயிராவர். (அருமறை - உபதேசம், குருமொழி திரு ஐந்தெழுத்து.)

1693. கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக
உள்ள பொருளுடல் ஆவி யுடன்ஈக
எள்ளத் தனையும் இடைவிடா தேநின்று
தெள்ளி யறியச் சிவபதந் தானே.

பொருள் : கொண்டால் நல்ல குருநாதனைக் கொள்க. உன்னிடம் உடமையாகக் கருதப்பட்ட பொருளையும் உனது உடலையும் உனது உயிரையும் காணிக்கையாகக் கொடுக்க என்னளவு காலமும் இடைவிடாமல் அவர் காட்டிய வழியிலே நின்று தெளிந்து உணரச் சிவபதம் தானே விளையும்.

1694. சோதி விசாகம் தொடர்ந்திரு தேள்நண்டு
ஓதிய நாளே உணர்வது தானென்று
நீதியுள் நேர்மை நினைந்தவர்க்கு அல்லது
ஆதியும் ஏதும் அறியகி லானே.

பொருள் : உலகோர் கொள்ளும் முறைமையுள் அருமறை கொள்ள சோதி, விசாகமும் முதலிய நட்சத்திரங்களும் தேள் நண்டு முதலிய ராசிகளும், திங்கள் முதலிய கிழமைகளும் சிறந்தனவாக நினைப்பவர்க்கல்லது அதன் முதலும் காரணமும் அறியவொண்ணா என்க. (சோதி - சுவாதி நட்சத்திரம் தேள் - விருச்சிகராசி, நண்டு - கடகராசி, ஓதியநாள் - சொல்லப்பட்ட சுப வாரங்கள். ஆதியும் ஏதும் - முதலும் காரணமும்.)

1695. தொழிலார மாமணித் தூய்தான சிந்தை
எழிலால் இறைவன் இடங்கொண்ட போதே
விழலார் விறலாம் விளையது போகக்
கழலார் திருவடி கண்டரு ளாமே.

பொருள் : குரு உபதேசம் பெற்ற பெரிய மணியைப் போன்ற தூய்மையான சிந்தையில் ஒளி பொருந்திய இறைவன் எழுந்தருளிய போதே, விருப்பமுடையாரது வலிமை மிக்க வினைநீங்க இறைவனது திருவடிஎன்னும் நாதவுணர்வு பெற்று அருளைப் பெறலாம். தொழில் என்பது - குரு சீடனுக்குக் காட்டில் கொடுத்த உபாயம்.

1696. சாத்திக னாய்ப்பர தத்துவவந் தானுன்னி
ஆத்திக பேத நெறிதோற்ற மாகியே
ஆர்த்த பிறவியின் அஞ்சி அறநெறி
சாத்தவல் லான்அவன் சற்சீட னாமே.

பொருள் : அறிவும் அமைதியுமாகிய தலைமைக்குணம் உடையவனாய் உண்மைப் பொருளாகிய சிவனடியை மறவாமல் நினைந்து கடவுள் உண்டெனும் கொள்கை வேறுபாடு உடைய நெறிகளின் அடிப்படைத் தோற்றத்தை மேற்கொண்டு எல்லையின்றிப் பிணித்துவரும் பிறவியினுக்கு அஞ்சிச் செந்நெறியாகிய அற நெறியின் கண் உறைந்து நிற்க வல்லான் நன்மாணவன் ஆவான். (சாத்திகனாய் சத்துவ குணம் உடையவனாய். ஆத்திக் பேத நெறி - கடவுள் உண்டென்னும் பல சமயங்கள்)

1697. சத்தும் அசத்தும்எவ் வாறெனத் தான்உன்னிச்
சித்தை உருக்கிச் சிவனருள் கைகாட்டப்
பத்தியின் ஞானம் பெறப்பணிந்து ஆனந்தச்
சந்தியில் இச்சை தருவோன்சற் சீடனே.

பொருள் : உலகில் நித்தியமாய் அழியாத பொருள் எவை அநித்தியமாய் அழியும்பொருள் எவை என்று தான் சிந்தித்து உணர்ந்து, சிவத்தையே சிந்தித்துச் சிவத்தின் சத்தி பதியப்பெற்றுச் சிவத்தை உணர்த்த உணர்த்த நித்தியப் பொருளான சிவத்தினிடம் சிவஞானத்தைப் பெறப்பணிந்து ஆனந்தமே வடிவான சிவசத்தியின் இச்சைக்குத் தக்கவாறு தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்பனே நல்ல சீடனாவான்.

1698. அடிவைத்து அருளுதி ஆசானஇன்று உன்னா
வடிவைத்தம் மாமுடி மாயப் பிறவி
அடிவைத்த காய அருட்சத்தி யாலே
அடிபெற்ற ஞானத்தன் ஆசற்று ளோனே.

பொருள் : குருநாதனே ! இன்று தங்களது திருவடியைச் சூட்டி அருளும் என்று குருவினது வடிவத்தைத் தம்முடைய சிரசின் மேல் தியானிக்க வஞ்சனையுடைய பிறவியைக் கோபிக்கின்ற அருட்சத்தியால் அருள்பெற்ற ஞானமுடையோனே குற்றம் நீங்கிய சீடன் ஆவான்.

1699. சீராடு ஞானத்தின் இச்சை செலச்செல்ல
வாராத காதல் குருபரன் பாலாகச்
சாராத சாதக நான்கும்தன் பால்உற்றோன்
ஆராயும் ஞானத்த னாம்அடி வைக்கவே.

பொருள் : சீடன் சிறப்புப் பொருந்திய அனுபவ ஞானத்தில் விருப்பம் மிக்கு, இதுவரை கண்டறியாத காதல் குருபரனான சிவத்தின்பால் உண்டாக, இதுகாறும் அமையப்பெறாத சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்ற நான்கும் தன்னிடம் அமையப்பெற்றோன் திருவடி தீட்சைக்குப் பிறகு ஞானத்தின் அனுபவத்தை ஆராய்பவன் ஆவான்.

1700. உணர்த்தும் அதிபக் குவர்க்கே உணர்த்தி
இணக்கில் பராபரத்து எல்லையுள் இட்டுக்
குணக்கொடு தெற்கு உத் தரபச்சி மங்கொண்டு
உணர்த்துமின் ஆவுடை யாள்தன்னை உன்னியே.

பொருள் : உணர்த்துவதும் சத்திநிபாதம் மிக்குஉடைய வர்க்கேயாகும், பசுக்களுக்கே உதவும் பராசத்தியை நினைந்து, ஒன்றோடும் பற்றில்லாத பராபரமாகிய சிவத்தின் எல்லைக்குச் சீடனைக் கொண்டு சென்று கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு ஆகிய இடங்களை அறிவியுங்கள்.

1701. இறையடி தாழ்ந்துஐ வணக்கமும் எய்திக்
குறையது கூறிக் குணங்கொண்டு போற்றச்
சிறையுடல் நீயறக் காட்டிச் சிவத்தோடு
அறிவுக்கு அறிவிப்போன் சன்மார்க்கி யாமே.

பொருள் : உபதேச குருவின் திருவடிகளை வணங்கி, ஐந்துவகையான வணக்கங்களைச் செய்து, ஆன்மாவின் குறையைக் கூறி, அழியாத குணத்தை அளிக்கும்படி சீடன் வேண்டிப் போற்ற குருவானவர், சிறைப்பட்டு உடலையே உண்மையென்று நம்பியுள்ள மாணவ ! நீ அகண்ட சிவமாவாய் என உணர்த்தி, சிவ அறிவுடன் ஆன்ம அறிவையும் ஒன்றுபடுத்தும் நெறியை அறிவிப்பவனே சன்மார்க்க பஞ்சாங்கம், ஷாடங்கம், அஷ்டாங்கம் அங்கம் உறுப்பு, கைகள் 2, கால்கள் 2, தலை 1, காது 2, நெஞ்சு 1, ஆக எட்டு உறுப்புக்களும் நீலந்தோய வணங்கல் அஷ்டாங்க வணக்கம்.

1702. வேட்கை விடுநெறி வேதாந்தம் ஆதலால்
வாழ்க்கைப் புனல்வழி மாற்றிச்சித் தாந்தத்து
வேட்கை விடுமிக்க வேதாந்தி பாதமே
தாழ்க்கும் தலையினான் சற்சீட னாமே.

பொருள் : ஆசையை விடுகின்ற நெறியே வேதாந்த மாதலால், உலக வாழ்வுக்குத் துணை புரிகின்ற புலன்வழிச் செல்லுகின்ற பெறிகளை மாற்றி, சித்தாந்தச் செந்நெறியிலே சென்று விருப்பத்தை விடுகின்ற சிறந்த வேதாந்தியான குருவின் திருவடிகளில் வணங்குகின்ற தலையினை உடையவனே சிறந்த பக்குவமுள்ள சீடனாவான்.

1703. சற்குணம் வாய்மை தயாவிவே கம்தண்மை
சற்குரு பாதமே சாயைபோல் நீங்காமே
சிற்பர ஞானம் தெளியத் தெளிவுஓர்தல்
அற்புத மேதோன்றல் ஆகும்சற் சீடனே.

பொருள் : நன்னெறி நன்மாணாக்கனுக்குரிய பத்துத் தன்மைகளும் முறையே வருமாறு; நற்பண்பு, வாய்மை, இரக்கம், நல்லறிவு, பொறுமை, குருவின் அடி நீங்காமை, உண்மை அறிவின்பப் பெரும் பொருள் உணர்வு, தெளிவு, ஓர்வு, அருள் நிகழ்ச்சி என்பன. இவை முற்றவும் உடைய மெய் உணர்வினனே நன்மாணவன் ஆவான்.

ஆறாம் தந்திரம் முற்றிற்று.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் - Page 3 Empty திருமந்திரம் | ஏழாம் தந்திரம்

Post by இறையன் Tue Mar 27, 2012 1:25 pm

(காலோத்திர ஆகமம்)

1. ஆறு ஆதாரம்

1704. நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறும்
கோவிமேல் நின்ற குறிகள் பதினாறும்
மூலம்கண்டு ஆங்கே முடிந்து முதல்இரண்டும்
காலங்கண் டான்அடி காணலும் ஆமே.

பொருள் : அக நிலைகள் ஆறும் வருமாறு: நான்கு இதழ்கள் உள்ள மூலமும் (மூலாதாரம்), ஆறு இதழ்கள் உள்ள கொப்பூழும் (சுவாதிட்டானம்), பத்து இதழ்கள் உள்ள மேல்வயிறும் (மணிபூரகம்), பன்னிரண்டு இதழ்கள் உள்ள நெஞ்சமும் (அனாகதம்), பதினாறு இதழ்கள் உள்ள மிடறும் (விசுத்தி), இரண்டு இதழ்கள் உள்ள புருவநடுவும் (ஆஞ்ஞை), ஆகிய ஆறு இடங்களும் ஆறு ஆதாரங்கள் எனப்படும். இந்நிலைக் களங்களின் நினைந்து வழிபடக் காலத்தைத் தோற்றுவித்துத் தொழிற்படுத்தும் சிவபெருமானின் திருவடி காணலாகும்.

1705. ஈராறு நாதத்தில் ஈரெட்டாம் அந்தத்தின்
மேதாதி நாதாந்த மீதாம் பராசக்தி
போதா லயத்துஅ விகாரந் தனிற்போத
மேதாதி ஆதார மீதான உண்மையே

பொருள் : ஓசைமெய்யாகிய நாத தத்துவத்தின்கண் பன்னிரு கலைகளோடு கூடியது சூரிய மண்டலம்; பதினாறு கலைகளோடு கூடியது திங்கள் மண்டலம் நிலமுதல் நாதம் ஈறாகச் சொல்லப்பட்ட முப்பத்தாறு மெய்களும் மேலாகப் பேராற்றலாகிய திருவருள் அம்மை வீற்றிருந்தருள்வன். இயற்கை உணர்வின் இருப்பிடமாகிய தனிமுதற் சிவன் அதற்குமேல் காணப்படுவன். இவற்றிற்கு எல்லாம் சார்பு நிலைக்களமாக வுள்ளதும் அச்சிவனேயாவன்.

1706. மேல்என்றும் கீழ்என்று இரண்டறக் காணுங்கால்
தான்என்றும் நான்என்றும் தன்மைகள் ஓராறும்
பார்எங்கும் ஆகிப் பரந்த பராபரம்
கார் ஒன்று கற்பகம் ஆகிநின் றானே.

பொருள் : மேல் கீழ் என்னும் பாகுபாடுகள் நீங்கி ஆராயுமிடத்துத் தான், யான், நீ என்னும் மூவிடப் பெயர்களும் அவன், அவள், அது என்னும் திணைபாற் பெயர்களும் கூடிப் பெயர்த்தன்மை ஆறாகும். நிலவுலகம் எங்கணும் பரந்து நிறைந்த முழுமுதற் தனிப்பொருளாம் சிவன் வேண்டாமை கொடுத்தலின் காரும், வேண்டக் கொடுத்தலின் கற்பகமும் ஆகி நின்றருள்கின்றனன். மேகத்தையும் கற்பகமரத்தையும் ஒப்பாகக் கொடுப்பவன் என்க: (கேட்காமல் கொடுப்பது - மேகம் கேட்டுக் கொடுப்பது - கற்பகம்)

1707. ஆதார சோதனை யால்நாடி சுத்திகள்
மேதாதி ஈரெண் கலாந்தத்து விண்ணொளி
போதா லயத்துப் புலன்கர ணம்புந்தி
சாதா ரணங்கெட்டான் தான்சக மார்க்கமே.

பொருள் : ஆறு ஆதாரங்களையும் திருவருள் துணையால் கண்டு மேல்நோக்குதல் நாடிசுத்திகளாகும். சுத்தி - உண்மை ஓர்தல். மேதை முதல் ஏழ்முதற்பொருள்களும் பதினாறு கலைகளும் கலந்த கலப்பும், பரவெளிப்பரப்பும் அறிவு நிலையத்துள் காணப்படும் ஐம்புலன் அந்தக் காரணம் நான்கு ஆகியவைகளுள் ஆய்தல் சீலநிலையைத் தூண்டுதல். இவை தோழமை நெறியாகும், ஏழ்முதற் பொருள்கள்; சாரம், செந்நீர், ஊன், கொழுப்பு, எலும்பு, மூளை, வெண்ணீர் என்பன. (செந்நீர் - இரத்தம்; வெண்ணீர் - சுக்கிலம்) சாதாரணம் - ஜீவ இயல்வு.

1708. மேதாதி யாலே விடாதுஓம் எனத்தூண்டி
ஆதார சோதனை அத்துவ சோதனை
தாதுஆர மாகவே தானெழச் சாதித்தால்
ஆதாரஞ் செய்போக மாவது காயமே.

பொருள் : பதினாறு கலைப் பிராசாதத்தால் இடையறாது ஓமெனத் தூண்டி ஆறு நிலைக்களங்களையும் ஆறு வழிகளையும் சிவகுருவின் திருவருள் துணையால் செவ்வையுறத் திருத்தினால் உடம்பின்கண் வழிபடுதற்கு இயைபு உண்டாகும். மூலாதாரம் முதல் வழிபாடு இயற்றினால் அங்ஙனம் வழிபடுவார்க்கு வரும் நுகர்வு சிவநுகர்வேயாகும். (பிராசாதம் - ஒருவகை மந்திரம், ஆறுதத்துவாக்கள் சோதனை (மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை) தாது ஆரமாக - மூலாதாரம் முதலாகக் கொண்டு.)

1709. ஆறந்த மும்கூடி யாரும் உடம்பினில்
கூறிய ஆதார மற்றும் குறிக்கொண்மின்
ஆறிய அக்கரம் ஐம்பதின் மேலே
ஊறிய ஆதாரத்து ஓரெழுத்து ஆமே.

பொருள் : சொல்லும் பொருளும் ஆகிய வழிகள் ஓராறு. அவை முறையே எழுத்து மொழி மறை எனவும், உலகு கலன் (தத்துவம்) கலை எனவும் கூறுவர். இவற்றான் இயங்குவது உடம்பு. இதன்கண் மூலமுதல் ஆறு நிலைகலங்களிலும் வழிபடும் முறைமைகளைக் குறிக்கொண்டு போற்றுமின், அமைந்துள்ள எழுத்துக்கள் ஐம்பதன் மேல் அமுதூறும் மூலாதாரத்து எழுத்து ஒன்று உண்டு. அது பிரணவம். திருமூலர் காலத்தில் உயிர்எழுத்தும் மெய்யெழுத்தும் ஐம்பதாகும்.

1710. ஆகும் உடம்பும் அழிகின்ற அவ்வுடல்
போகும் உடம்பும் பொருந்திய வாறுதான்
ஆகிய அக்கரம் ஐம்பது தத்துவம்
ஆகும் உடம்புக்கும் ஆறந்த மாமே.

பொருள் : தோற்றும் பருவுடம்பு அழிகின்ற உடலாகும். தோன்றா நுண்ணுடல் இதன் கண்ணின்று உயிருடன் ஏகும் உடம்பாகும். இவற்றுக்குரிய எழுத்துக்கள் ஐம்பதாகும். தத்துவமாகிய உடம்புக்கு வழிகள் ஆறும் உறுப்புக்களாகும்.

1711. ஆயு மலரின் அணிமலர் மேலது
ஆய இதழும் பதினாறும் அங்குள
தூய அறிவு சிவானந்த மாகிப்போய்
மேய அறிவாய் வினைந்தது தானே.

பொருள் : மூலாதாரங்களின் வைத்து ஆராயுமலர்களின் மேலானது அழகிய பதினாறு இதழ்களையுடைய மிடற்றின் கண்மலராகும். அங்கு வழிபடும் தூய அறிவு சிவப்பேரின்பமாய்த் திகழும். அவ்வறிவு சிவ அறிவினுள் அடங்கிச் சிவ அறிவாய் விளங்கும். இதழ்பதினாறு விசுத்தி.

2. அண்டலிங்கம் (உலக சிவம்)

(அண்டம் - உலகம், இலிங்கம் - குறி, அண்டலிங்கம் - உலகமே சிவனது அடையாளம்.)

1712. இலிங்கம தாவது யாரும் அறியார்
இலிங்கம தாவது எண்டிசை எல்லாம்
இலிங்கம தாவது எண்ணெண் கலையும்
இலிங்கம தாக எடுத்தது உலகே.

பொருள் : அம்மையப்பரின் அடையாளமாகிய சிவலிங்கமே எல்லாத் திசைகளிலும், எல்லாக் கலைகளும் எல்லா உலகுமாகும். இவ்வுண்மையினை நுண்ணுணர்வினரே அறிவர். ஏனையோர் அறியார். அம்மை ஆற்றலாகவும் அப்பன் பொருளாகவும் திகழ்வர். ஆதலால் எப்பொருளை எடுத்துக் கொண்டாலும் ஆற்றலும் ஆற்றலின் நிலைக்களமுமாக ஒவ்வொன்றும் இரு திறப்படும். இது கதிரும் கதிரவனும் போன்ற நிலையாகும். எங்கும் நிறைந்து நீக்கமற நிற்கின்ற சிவனும் சத்தியும் எல்லாப்பொருளையும் இயைந்து இயக்குகின்றமையின் எல்லாம் சிவன் எனப்படும்.

1713. உலகில் எடுத்தது சத்தி முதலா
உலகில் எடுத்தது சத்தி வடிவமாய்
உலகில் எடுத்தது சத்தி குணமாய்
உலகம் எடுத்த சதாசிவன் தானே.

பொருள் : சதாசிவனாகிய முழுமுதல் தனைவிட்டு நீங்கா ஆணையாகிய சத்தியே வினைமுதற் காரணமாகக் கொண்டு உலகினைக் கருத்தளவானே படைத்தருள்கின்றனன். அதனால் சத்தியே உலகின் காரணம், உலகின் வடிவம், உலகின் குணம் என ஏற்றிக் கூறுவர்.

1714. போகமும் முத்தியும் புத்தியும் சித்தியும்
ஆகமும் ஆறாறு தத்துவத்து அப்பாலாம்
ஏகமும் நலகி இருக்கும் சதாசிவம்
ஆகம அத்துவா ஆறும் சிவமே.

பொருள் : அன்பியல் வாழ்கையாகிய போகமும், அருளியல் வாழ்க்கையாகிய முத்தியும், முறையே அவற்றின் பயனாகிய சிற்றின்பமாகிய புத்தியும், பேரின்பமாகிய சித்தியும், சித்திக்குரிய வழிவகை கூறும் திருமூலர் போன்ற செந்தமிழ் ஆகமும், அவற்றின் கண் காணப்படும் அருஞ்சைவர் தத்துவம் முப்பத்தாறும், அதற்கு அப்பாலாகத் திகழும் ஒப்பில் ஒரு முதலாம் சதாசிவமும் ஆகம நூலிற் காணப்படும் அத்துவா ஆகிய வழிகள் ஆறும் சிவபெருமானேயாம். (அத்துவா - கதியடைக்கும்வழி, சதாசிவம் சிவத்தின் தடத்த நிலை. இஃது அருவத்துக்கும் உருவத்துக்கும் உள்ள இடைநிலை.)

1715. ஏத்தினர் எண்ணிலி தேவர்எம் ஈசனை
வாழ்த்தினர் வாசப் பசுந்தென்றல் வள்ளலென்று
ஆர்த்தனர் அண்டங் கடந்து அப் புறநின்று
காத்தனன் என்னும் கருத்தறி யாரே.

பொருள் : எண்ணற்ற தேவர்கள் எம் சிவபெருமானை வழிபட்டனர். மணத்தினை ஏந்திவரும் தென்றலைப் போன்ற வள்ளல் என்று வாழ்த்தினர். மகிழ்ச்சி பொங்க ஆரவாரித்தனர். ஆனால் அப்பெருமான் அண்டங்களைக் கடந்து நின்று காக்கின்றான் என்ற உண்மையினை அறியார். இரண்டாம் அடிக்கும் பஞ்ச பூதங்களையே தன்னுருவாகக் கொண்ட சகுண பரசிவம் என்று பொருள் கொள்வாரும் உளர். நிர்க்குண சிவத்தைத் தேவர்கள் அறியார்.

1716. ஒண்சுட ரோன்அயன் மால்பிர சாபதி
ஒண்சுட ரான இரவியோடு இந்திரன்
கண்சுட ராகிக் கலந்தெங்கும் தேவர்கள்
தண்சுட ராய்எங்கும் தற்பரம் ஆமே.

பொருள் : ஒளிமிக்க சுடர் வடிவாகிய அக்கினியும் பிரமனும் திருமாலும் தேவகுருவும், ஒளி வடிவான சூரியனோடு இந்திரனும் ஆகியவர்களிடம் கண்ணீர் ஒளி போலக் கலந்து நின்றும், ஏனைய தேவர்களிடம் உணர்வைப் பெருக்கும் சந்திர ஒளி போன்றும் எவ்விடத்தும் நீக்கமற நிறைந்து சிவம் விளங்கும். சிவம் சிறந்த தேவர்களிடம் கண்ணொளி போன்றும் ஏனைய தேவரிடம் உணர்வு போன்றும் உள்ளான் என்பதாம்.

1717. தாபரத் துள்நின்று அருளவல் லான்சிவன்
மாபரத் துண்மை வழிபடு வாரில்லை
மாபரத் துண்மை வழிபடு வாளர்க்கும்
பூவகத்து உள்நின்ற பொற்கொடி யாகுமே.

பொருள் : அறிவில் பொருளாகிய மண் முதலியவற்றினின்றும் சிவபெருமான் தன்னை வழிபடுவோர்க்கு அருள்புரிபவன். அவன் முழுமுதற் கடவுளானவன். அத்தகையே மெய்ப் பொருளை வழிபடுவாரில்லை. அவ்வுண்மை யோர்ந்து வழிபடுவார்க்கு உச்சியின் மேற் காணப்படும் ஆயிரஇதழ்த் தாமரை யின்கண் வீற்றிருந்தருளும் திருவருள் அம்மையின் பேரருள் உண்டாம். தாபரம் - அசையாப் பொருள் (ஸ்தாவரம்), (மாபரம் - பெருமையுள்ள சிவம், பூவகம் - சகசிலமர்; பொற்கொடி - சிவசத்தி.)

1718. தூவிய விமானமும் தூலமது ஆகுமால்
ஆய சதாசிவம் ஆகுநற் சூக்குமம்
ஆய பலிபீடம் பத்திர லிங்கமாம்
ஆய அரன்நிலை ஆய்ந்துகொள் வார்கட்கே.

பொருள் : மிக உயர்ந்துதாகய சிவலாயத்தைப் பற்றி அறிந்து கொள்பவருக்கு, கருவறையின் மேலுள்ள விமானமே தூயலங்கமாகும். கருவறையின் உள்ளிருக்கும் சிவலிங்கம் நல்ல சூக்கும லிங்கமாகும். இலிங்கத்து முன்னுள்ள பலிபீடமும் நந்தியும் சிவலிங்கமென அழைக்கப்பெறும். (அரன் நிலை - ஆலயம், பத்திரம் - ஆனேறு; நந்தி; ரிஷபம்.)

1719. முத்துடன் மாணிக்கம் மொய்த்த பவளமும்
கொத்தும்அக் கொடி சிலைநீறு கோமளம்
அத்தன்தன் ஆகமம் அன்னம் அரிசியாம்
உய்த்ததின் சாதனம் பூமண லிங்கமே.

பொருள் : முத்து, மாணிக்கம், பவழம், திருவுருச் செதுக்கிய மரக்கொம்பு, பளிங்கு முதலிய வெண்கற்கள், திருவெண்ணீறு, மரகதம் சிவபெருமானை முடி முதலாகக் கொண்டு செந்தமிழின்கண் வரையப்பெற்ற திருமந்திரம் போன்ற ஆகம அருள் நூற்கள், திருவமுது அமுது முதலாகிய அரிசி ஆகிய பத்தும் அழகிய தூய்மையாக்கும் மணமுள்ள சிவலிங்க வழிபாட்டிற்கு உரிய இலிங்கம் அமைக்கும் கருவித்துணைப் பொருள்களாகும். சாதனம் துணைப் பொருள்.

1720. துன்றும் தயிர்நெய் பால்துய்ய மெழுகுடன்
கன்றிய செம்பு கனல்இர தம்சலம்
வன்திறல் செங்கல் வடிவுடை வில்வம்பொன்
தென்தியங்கு ஒன்றை தெளிசிவ லிங்கமே.

பொருள் : கட்டித், தயிர், நெய், பால் தூய்மையான பசும் சாணத்துடன், விளக்கிய செம்பு, அக்கினி, பாதரசம், சங்கு, நன்றாக வெந்த செங்கல், அழகான வில்வம், பொன் ஆகியவற்றுள் அழகு விளங்கும் ஒன்றைச் சிவலிங்கமாகக் கொள்க. பால், சலம் ஆகியவற்றைக் கலசத்துள் பெய்து வழிபடலாகும். (சலம் - நீர், சலஞ்சலம் என்னும் சங்கு; இரதம் - இரசலிங்கம், வில்வம் - வில்வப்பழம் அல்லது வில்வமரத்தால் செய்யப்பட்ட இலிங்கம். ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பயனுண்டு.)

1721. மறையவர் அர்ச்சனை வண்படி கந்தான்
இறையவர் அர்ச்சனை யேயபொன் னாகும்
குறைவிலா வசியர்க்குக் கோமள மாகும்
துறையுடைச் சூத்திரர் தொல்வாண லிங்கமே.

பொருள் : வளமான படிகலிங்கம் அந்தணர் பூசிக்கத்தக்கது. பொன்னாலாகிய இலிங்கம் மன்னர் அருச்சிக்கத் தக்கது. குறைவில்லாத வருவாயுடைய வைசியர்க்கு வழிபடத்தக்கது மரகதலிங்கமாகும். தொண்டு நெறியிலுள்ள வேளாண் தொழிலுடையோர்க்கு வாண லிங்கமாகும்.

1722. அதுவுணர்ந் தோன்ஒரு தன்மையை நாடி
எதுஉண ராவகை நின்றனன் ஈசன்
புதுஉணர் வான புலனங்கள் எட்டும்
இது உணர்ந்து என்னுடல் கோயில் கொண்டானே.

பொருள் : முன்னே சொன்ன முறையில் சிவனை இலிங்கத் திருமேனியில் உணர்ந்தோன் அவனது வியாபகத் தன்மையை அதனுள் நாடி, எவ்வகையாலும் உணரமுடியாது நின்ற ஈசன், உண்மை உறவால் பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகிய எட்டிலும் வியாபகமாகக் கலந்திருத்தலை உணர்ந்தபோது என் உடம்பைக் கோயிலாகக் கொண்டு அருளினான். (புது உணர்வு - தற்போதம் கெட்டு உண்மை அறிவு மிகுதல்.)

1723. அகலிட மாய்அறி யாமல் அடங்கும்
உகலிட மாய்நின்ற ஊனதன் உள்ளே
பகலிட மாம்முனம் பாவ வினாசன்
புகலிட மாய்நின்ற புண்ணியன் தானே.

பொருள் : முன்னம் ஈட்டிய பாவங்களைப் போக்குபவனும் அனைத்தும் ஒடுங்குவதற்கு இடமாய் நின்ற புண்ணியனுமாகிய சிவமே அகன்ற பிரபஞ்சமாய் அவற்றுள் பிறர் அறியாமல் கலந்திருக்கும். அது நாடியவர்க்கு அழிகின்ற உடம்பினுள்ளே ஒளி செய்யும் பொருட்டு இடமாகக் கொண்டது. உகலிடம் - அழிதற்கு இடம்.

1724. போது புனைசூழல் பூமிய தாவது
மாது புனைமுடி வானக மாவது
நீதியுள் ஈசன் உடல்விசும் பாய்நிற்கும்
ஆதியுற நின்றது அப்பரி சாமே.

பொருள் : ஆதார மாலையை அணிந்திருக்கும் திருவடி பூமியாகும். ஒளிபொருந்திய கங்கையைச் சூடிய திருமுடி ஆகாயமாகும். இறைவன் யாவற்றுள்ளும் கலந்திருக்கும் முறையில் அவனது உடல் ஆகாயமானது. இதுவே ஆதிபகவானாகிய சிவம் அண்டத்தைத் திரு மேனியாகத் தரித்து நின்ற தன்மையாகும்.

1725. தரையுற்ற சத்தி தனிலிங்கம் விண்ணாம்
திரைபொரு நீரது மஞ்சன சாலை
வரைதவழ் மஞ்சுநீர் வானுடு மாலை
கரையற்ற நந்திக் கலையும்திக் காமே.

பொருள் : நிலமாகவுள்ள சத்தி பீடத்தின்போல் விளங்கும் இலிங்கம் (பாணம்) ஆகாயத்தை அளாவி நிற்பதாம். அலைமோதுகின்ற கடலே திருமஞ்சனசாலையாகும். மலையின்மேல் விளங்கும் மேகமே திருமஞ்சன தீர்த்தம். வானத்தின் சிறு ஒளியாகப் பிரகாசிக்கும் நட்சத்திரங்களே அண்டலிங்கத்துக்குரிய மாலையாகும். அளவிடுவதற்கு அரிய சிவத்துக்கு ஆடை எட்டு திக்குகளும் ஆகும்.

3. பிண்டலிங்கம் (உடற் சிவம்)

(பிண்டம் - உடம்பு; பிண்டலிங்கம் என்பது உடம்பே லிங்கம் என்றபடி.)

1726. மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்
மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம்
மானுடர் ஆக்கைவடிவு சதாசிவம்
மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே.

பொருள் : மானிடர் உடம்பின் வடிவமே சிவலிங்கம். மானிடர் உடலும் உடலைச் சூழவுள்ள பகுதியும் அறிவு ஆகாயம், மானிடர் உடல் சதாசிவரின் உருவத்திருமேனி. மானிடர் உடம்பிலுள்ள அசை வெல்லாம் கூத்தப் பெருமானின் நடனமேயாம். சிவ லிங்கமாவது உடம்பில் கால் முதல் அரை வரையில் பிரம பீடம் உடல் பகுதி கத்தி பீடம். தலை பாணம் என்ற வகையில் உடம்பு சிவலிங்கம். தலைபாகம் சிதம்பரம். உடல்பாகம் சதாசிவம். கால்பாகம் திருக்கூத்து.

1727. உலந்திலர் பின்னும் உளரென நிற்பர்
நிலந்தரு நீர்தெளி யூனவை செய்யப்
புலந்தரு பூதங்கள் ஐந்தும் ஒன்றாக வலந்தரு
தேவரை வந்திசெய் யீரே.

பொருள் : இறந்தவர் இறந்தே போனார் என்பதற்கு இடனின்றி வினைக்கு ஈடாக மீண்டும் பிறக்கின்றனர். அவர்கள் உடம்பு தோற்ற முறையில் நீரின்று நிலம் தோன்றும் என்பதாகக் குறிக்கவே ஐம்பூதச் சேர்க்கையால் ஆகியது என்பது விளங்கும். இப்பிறப்பினை வெல்வது சிவபெருமான் திருவடி வணக்கத்தால் ஆகும். நிலம்தரு நீர் நிலம் உற்பத்திக்குக் காரணமான நீர்.

1728. கோயில்கொண் டன்றே குடிகொண்ட ஐவரும்
வாயில் கொண் டாங்கே வழிநின் றருளுவர்
தாயில்கொள் டாற்போல் தலைவன்என் உட்புக
வாயில் கொண்(டு) ஈசனும் ஆளவந் தானே.

பொருள் : உடல் வந்த போதே உடம்பினுள் குடிபுகுந்த ஐந்து பூத நாயகர்களும். அவரவர் தொழிற் படும் நுழைவாயிலில் நின்று உயிருக்கு வேண்டிய அறிவை வழங்கியருளுவர். தாய் மனையிற் புகுமாறு போல விருப்புடன் தலைவன் என் உள்ளத்தில் புகுதலும் அவ்வாயில்களைத் தனதாக்கிக் கொண்டு சிவம் ஆண்டருளினான்.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் - Page 3 Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Tue Mar 27, 2012 1:27 pm

தெய்வம்-பூதம்-பொறி-புலன்

1. பிரமன்-மண்-மூக்கு-மணம்

2. விஷ்ணு-நீர்-நாக்கு-சுவை

3. உருத்திரன்-தீ-கண்-ஒளி

4. மகேசுரன்-காற்று-தோல்-ஊறு

5. சதாசிவன் ஆகாயம் செவி ஓசை

(கன்னற நினைந்து ஆ மனை புகுவது போன்று என்றும் மூன்றாம் அடிக்குப் பொருள் கொள்ளலாம்.)

1729. கோயில்கொண் டான்அடி கொல்லைப் பெருமறை
வாயில்கொண் டான் அடி நாடிகள் பத்துள
பூசைகொண் டான்புலன் ஐந்தும் பிறகிட்டு
வாயில்கொண் டான்எங்கள் மாநந்தி தானே.

பொருள் : மக்கள் யாக்கையினைத் திருக்கோவிலாகக் கொண்டு எழுந்தருளினன் சிவன். மிகுதியான மறை நூல்களைத் தன்னை யடையும் வழி காட்டியாகக் கொண்டான். திருவடி சேர்வார் நாடிகள் பத்தினையும் தூய்மை செய்தல் வேண்டும். புலன் ஐந்தும் தம்பின் வரச் சிவனை வழிபடுதல் வேண்டும். அவ்வாறு வழிபடும்போது சிவன் நாடிகளையும் இடமாகக் கொண்டு அருள்புரிவான்.

4. சதாசிவ லிங்கம் (உலக முதற் சிவம்)

1730. கூடிய பாதம் இரண்டும் படிமிசை
பாடிய கையிரண்டு எட்டுப் பரந்தெழும்
தேடு முகம்ஐந்து செங்கையின் மூவைந்து
நாடும் சதாசிவம் நல்லொளி முத்தே

பொருள் : திருவருளோடு கூடிய திருவடி இரண்டும் பூமியின் மேலாக; புகழ்ந்து பாடப் பெற்ற பத்துக் கைகள் திக்குகள் எல்லாம் பரந்து எழுவதாக எங்கும் பார்க்கின்ற முகங்கள் ஐந்தாக, சிவந்த கண்கள் பதினைந்தாக. நல்ல ஒளி பொருந்திய முகத்தின் நிறத்துடன் கூடிய சதா சிவத்தைத் தியானியுங்கள். ஐந்து முகங்களாவன: சத்தியோ சாதம். வாம தேவம் அகோரம். தத்புருடம். ஈசானம் என்பன.

1731. வேதா நெடுமால் உருத்திரன் மேலீசன்
மீதான ஐம்முகன் விந்துவும் நாதமும்
ஆதார சத்தியும் அந்தச் சிவனொடும்
சாதா ரணமாம் சதாசிவந் தானே.

பொருள் : அயன், அரி, அரன், ஆண்டான், மேம்பட்ட ஐம்முகன் விந்து நாதம் இவற்றை இயைந்து இயக்கும் திருவருள் ஆற்றல். அத்திருவருள் ஆற்றலை மரமும் காழ்ப்பும் போல் விட்டு நீங்காதிருக்கும் சிவன் ஆகிய அத்தனையும் பொதுவாகச் சதாசிவன் எனப்படும். (மீதான ஐம்முகன் மகேசனுக்கு மேற்பட்ட சதாசிவன்.)

1732. ஆகின்ற சத்தியின் உள்ளே கலைநிலை
ஆகின்ற சத்தியின் உள்ளே கதிரெழ
ஆகின்ற சத்தியின் உள்ளே அமர்ந்தபின்
ஆகின்ற சத்தியுள் அத்திசை பத்தே.

பொருள் : சதாசிவமாகிய சத்தியினிடம் நிவிருத்தி. பிரதிட்டை வித்தை. சாந்தி. அதீதை ஆகிய கலைகள் இடம்பெறும். இவ்வைந்து கலைகள் இடமாகச் சிவ சூரியன் எழ, அதன் கிரணம் உள்ளும் வெளியும் சூழ அண்ட கோசம் நிறைந்து விளங்கும் ஒளியில் எட்டுத் திசைகளும் மேல் கீழ் என்ற இரண்டு திசைகளும் பொருந்தி ஒரே ஒளி மயமாக விளங்கும்.

1733. அத்திசைக் குள்ளே அமர்ந்தன ஆறங்கம்
அத்திசைக் குள்ளே அமர்ந்தன நால்வேதம்
அத்திசைக்குள்ளே அமர்ந்த சரியையோடு
அத்திசைக் குள்ளே அமர்ந்த சமயமே.

பொருள் : பத்துத் திசைகளோடு கூடிய அண்ட கோசத்தில் சிட்சை கற்பம். வியாகரணம். சந்தோபிசிதம். நிருத்தம். சோதிடம் ஆகிய ஆறு சாத்திர அறிவும், அமைந்துள்ளது. அங்கு இருக்கு யசுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களின் அறிவும் உண்டு. அங்குப் பொருந்திய சரியை. கிரியை. யோகம். ஞானம் என்ற மார்க்கங்களோடு சமய அறிவும் அடங்கும்.

1734. சமயத்து எழுந்த அவத்தையீர் ஐந்துள
சமயத்து எழுந்த இராசி ஈராறுள
சமயத்து எழுந்த சரீரம்ஆ றெட்டுள
சமயத்து எழுந்த சதாசிவத் தானே.

பொருள் : சித்தாந்த சைவத்தில் கூறப்படும் நிலைகள் பத்து. இவற்றுள் ஐந்து. அவத்தைகள் மேல் நோக்கியும் ஐந்து அவத்தைகள் கீழ்நோக்கியும் உயிர் சென்று வருங்கால் நிகழ்வன. மேலும் உயிர்ப்புக் கலைகள் பன்னிரண்டுள்ளன. அயன், அரி, அரன், ஆண்டான் அருளோன், அன்னை என்னும் திருமேனிகள் ஆறு. பூதம். ஐந்து, ஞாயிறு, திங்கள், ஆரூயிர் மூன்று ஆகிய வடிவங்கள் எட்டு. இவை யனைத்தும் பூண்டருள்வோன் சதாசிவனேயாவன்.

1735. நடுவு கிழக்குத் தெற்குஉத் தரமேற்கு
நடுவு படிகநற் குங்கும வன்னம்
அடைவுள அஞ்சனம் செவ்வரத் தம்பால்
அடியேற்கு அருளிய முகம்இவை அஞ்சே.

பொருள் : சதாசிவக் கடவுளுக்கு ஓதப்பெறும் திருமுகங்கள் ஐந்து. அந்த ஐந்து முகங்களும் முறையே உச்சி கிழக்கு தெற்கு, வடக்கு, மேற்கு என்னும்புலன்கள் ஐந்தும் நோக்கி விளங்குகின்றன. புலன்கள் - திசைகள். இந்த ஐந்து திருமுகங்களின் வண்ணங்கள் முறையே வருமாறு. உச்சிமுகம் பளிங்குநிறம். கிழக்கு முகம் குங்கும நிறம். தெற்கு முகம் நீலவருணம். வடக்குமுகம் செவ்வரத்த நிறமாகும். மேற்கு முகம் பால் நிறமாகும். இத்திருமுகங்கள் ஐந்தும் அடியேற்கு அருளுதற்பொருட்டுக் கொண்டனவாகும்.

1736. அஞ்சு முகமுள ஐம்மூன்று கண்ணுள
அஞ்சினொ டுஅஞ்சு கரதலம் தானுள
அஞ்சுடன் அஞ்சா யுதமுள நம்பியென்
நெஞ்சு புகுந்து நிறைந்துநின் றானே.

பொருள் : ஐந்து திருமுகங்களும் பதினைந்து திருக்கண்களும் பத்துத் திருக்கைகளும். பத்துத் திருப்படைகளும் கொண்டு திகழ்கின்ற நம்பியாகிய சதாசிவக் கடவுள் அடியேன் நெஞ்சுள் புகுந்து நிறைந்து நின்றருளினன்.

1737. சத்தி தராதலம் அண்டம் சதாசிவம்
சத்தி சிவமிக்க தாபர சங்கமம்
சத்தி உருவம் அருவம் சதாசிவம்
சத்தி சிவதத்துவ முப்பத் தாறே.

பொருள் : அருளோன் நிலமண்டிலம் சத்தியாகவும் வான் மண்டிலம் சதாசிவமாகவும் விளங்கி வீற்றிருந்து அருள்வான் சத்தி சிவமாம். இருவரும் நிலத் திணை இயங்குதிணை ஆகிய இரண்டன் கண்ணும் இயைந்து இயக்குவர். சத்தி உருவம். சதாசிவம் அருவுருவம். நிலமுதல் சத்தி சிவம் ஈறாகத் தத்துவம் முப்பத்தாறாகும். இந்த முப்பத்தாறு மெய்களும் அருஞ் சைவர்களுக்கு உரிய பொருண்மையாகும். மெய்-தத்துவம். தத்துவம் முப்பத்தாறு.

1738. தத்துவ மாவது அருவம் சராசரம்
தத்துவ மாவது உருவம் சுகோதயம்
தத்துவம் எல்லாம் சகலமு மாய் நிற்கும்
தத்துவம் ஆகும் சதாசிவம் தானே.

பொருள் : சத்தி சிவ மெய்கள் உருவமும் உள்ளுறை அருவமும் ஆகத் திகழும். இயங்குதினை நிலைத்திணை உலகங்கள் முற்றும் விரிந்து விளங்கும். இன்பம் தோற்ற வூற்றாய் எழுவதும் சத்தி சிவமாகும். எல்லா மெய்களும் சத்தி சிவம் இரண்டின் கலப்பு இயக்கத்தால் இயங்குவன. தத்துவம் எல்லாம் சதாசிவன் என்று அழைக்கப்படும்.

1739. கூறுமின் ஊறு சதாசிவன் எம்இறை
வேறோர் உரைசெய்து மிகைப்பொரு ளாய் நிற்கும்
ஏறுரை செய்தொழில் வானவர் தம்மொடு
மாறுசெய் வான் என் மனம்புகுந் தானே.

பொருள் : உள்ளத்தே ஊறுகின்ற சதாசிவனாகிய எம்இறையை ஏத்துங்கள். வேறு வகையாகக் கூறும் நூல்களால் அறியப்படாது கடந்து விளங்குவான். தாம் மேலேறு வதற்காகப் புகழ்தலைச் செய்யும் தேவரோடு மாறுபட்டு நிற்பான். அத்தகையவன் எளியேனாகிய என்மனத்தில் புகுந்து விளங்கினான். கூறுமின் நூறு எனக் கொண்டு 108 நாமங்களால் துதியுங்கள் எனவும் கூறலாம். (108க்கு நூறு என்றும். 1008க்கு ஆயிரம் என்றும் கூறுவது மரபு.)

1740. இருளார்ந்த கண்டமும் ஏந்து மழுவும்
சுருளார்ந்த செஞ்சடைச் சோதிப் பிறையும்
அருளார்ந்த சிந்தையெம் ஆதிப் பிரானைத்
தெருளார்ந்தென் உள்ளே தெளிந்திருந் தேனனே.

பொருள் : இருள் பொருந்திய கழுத்தும் வலக்கையில் ஏந்திய மழுவும் சுருண்ட செஞ்சடைக் கண் ஒளி விடுகின்ற பிறைச் சந்திரனும் அருள் பொழிகின்ற சிந்தையை யுடைய எம் ஆதியாகிய சதாசிவமூர்த்தியைத் தெளிந்த என் உள்ளத்தில் தெளிந்திருந்தேன்.

1741. சத்திதான் நிற்கின்ற ஐம்முகம் காற்றிடில்
உத்தமம் வாமம் உரையத்து இருந்திடும்
தத்துவம் பூருவம் தற்புரு டன்சிரம்
அத்தரு கோரம் மருடத்துஈ சானனே.

பொருள் : சீவர்களுக்கு அருள் பொழிவதற்காகச் சத்தி விளங்கி நிற்கும் ஐம்முகங்களைப் பற்றிச் சொல்லின் வடக்கு நோக்கிய வாம தேவ முகம் உத்தம மானது. இஃது உரையின்றி மௌனமாக இருந்திடும். கிழக்கு நோக்கிய தற்புருட முகம் உடலிலுள்ள தத்துவங்களை இயக்குவது சிரத்தைப் போன்றது தெற்கு நோக்கிய முகமாகிய அகோரம். சிரசின் முடியில் வட கீழ்த்திசை நோக்கி விளங்குவது ஈசானமுகமாம். (தெற்கில் அகோரம் தென்கிழக்கு ஈசனே எனவும் பாடம். வாதேவம் - விளக்கம். சத்தியோசாதம்-தோன்றுவித்தல். தற்புருடம்-ஆட்சி. அகோரம் - நடுக்கம். ஈசானன்-இயக்கம்.)

1742. நாணுநல் ஈசானன் நடுவுச்சி தானாகும்
தாணுவின் தன்முகம் தற்புருட மாகும்
காணும் அகோரம் இருதயம் குய்யமாம்
மாணுற வாமம்ஆம் சத்திநற் பாதமே.

பொருள் : நாண்போன்ற ஈசானத்தைச் சிரசின் நடுவில் நியசிக்க வேண்டும். தாணுவினது தற்புருடத்தை முகத்தில் நியசிக்க வேண்டும். காணுகின்ற அகோரத்தை இதயத்தில் நியசிக்க வேண்டும். மாட்சிமையுடைய வாமத்தைக் குறியில் நியசிக்க வேண்டும். சத்தியோ சாதத்தை நல்ல பாதங்களில் நியசிக்க வேண்டும். (நியசித்தல் - தொடுதல். சுட்டுதல்)

1743. நெஞ்சு சிரம்சிகை நீள்கவ சம்கண்ணாம்
வஞ்சமில்விந்து வளர்நிறம் பச்சையாம்
செஞ்சுறு செஞ்சுடர் சேகரி மின்னாகும்
செஞ்சுடர் போலும் தெசாயுதம் தானே.

பொருள் : இருதயம் சிரசு. சிகை. கவசம். நேத்திரம் ஆகியவை அங்கங்களாம். இவற்றைக் குறிக்கின்ற மந்திரங்கள் வஞ்சனை யில்லாமல் சீவர்களுக்கு அறிவு விளக்கம் தரும் சுத்த மாயையாகும். இவற்றின் நிறம் பச்சையாகும். உடம்பெல்லாம் ஒளிமயமானபோது செவ்வொளியில் சத்தி மின்னோளி போன்று விளங்குவாள். சதாசிவரிடமுள்ள பத்து ஆயுதங்களும் உதய கால சூரியனை ஒத்துப் பிரகாசிக்கும்.

1744. எண்ணில் இதயம் இறைஞான சத்தியாம்
விண்ணிற் பரைசிரம் மிக்க சிகையாதி
வண்ணக் கவசம் வனப்புடை இச்சையாம்
பண்ணுங் கிரியை பரநேத் திரத்திலே.

பொருள் : ஆராயின் இதயமந்திரம் இறைவனுக்கு ஞான சத்தியாகும். சிரமந்திரம் ஆகாயத்தில் விளங்கும் பராசத்தியாகும். சிகாமந்திரம் ஆதி சத்தி. அழகுடைய கவசமந்திரம் பல நிறங்களையுடைய இச்சாசத்தியாம். நேத்திரம் கிரியாசத்தியாம்.

1745. சத்திநாற் கோணம் சலமுற்று நின்றிடும்
சத்திஅறு கோண சயனத்தை உற்றிடும்
சத்தி வட்டம் சலமுற்று இருந்திடும்
சத்தி உருவாம் சதாசிவன் தானே.

பொருள் : திருவருள் ஆற்றல் நாற்கோணமாகிய மூலத்தினிடத்து நீர்போல் இடையறாது இயக்கிக் கொண்டிருக்கும். அத்திருவருளே கொப்பூழின்கண் மால்போல் கிடந்து உற்றுழி இயக்கும். இந்நிலை அறு கோணமாகும். அத்திருவருளே நெற்றிப் புருவநடுவில் வட்ட நிலையத்தில் நின்று ஆணை செலுத்திக்கொண்டிருக்கும். இக்குறிப்புத்தோன்றவே செந்தமிழ் ஆன்றோர் தொன்று தொட்டு நெற்றிப் புருவ நடுவில் வட்டமாகப் பொட்டு இடுவதை மரபாகக் கொண்டுள்ளனர். திருவருள் ஆற்றலின் நடுவே சிவன் வடிவமாகும். சந்தனம். குங்குமம் சாந்து ஆகிய மூன்றா லிடும் பொட்டு முப்பண்பின் அடையாளமாகும். திரு நீற்றுப் பொட்டுச் சிவனார் எண்குண அடையாளமாகும்.

1746. மான் நந்தி எத்தனை காலம் அழைக்கினும்
தான் நந்தி அஞ்கின் தனிச்சுட ராய்நிற்கும்
கால் நந்தி உந்தி கடந்து கமலத்தில்
மேல் நந்தி ஒன்பதின் மேவிநின் றானே.

பொருள் : மகத்துவம் மிக்க சதாசிவரை எவ்வளவு காலம் தொழுதாலும் அவர் பஞ்சப் பிரமமாகவே விளங்குவர். அவர் மூல வாயுவாக எழும்பி ஆதாரங்களைக் கடந்து ஊர்த்துவ சகஸ்ர தளத்தின் மேல் சென்றபோது ஒன்பது நிலைகளிலும் பொருந்தி விளங்குவார்.

1747. ஒன்றிய வாறும் உடலின் உடன்கிடந்து
என்றும்எம் ஈசன் நடக்கும் இயல்பது
தொன்தலைக்கு ஏறத் திருந்து சிவனடி
நின்று தொழுதேன்என் நெஞ்சத்தின் உள்ளே.

பொருள் : சிவபெருமான் மேல் ஓதிய முறையான் உலகத்துடன் பொருந்தி அவ்வுலகினை இயக்குகின்றனன். அதுபோல் உடலுடனும் உயிருடனும் பொருந்தி அவ்வுடல் உயிர்களை இயைந்து இயக்குகின்றனன். இவை அவனது பேரருள் பெருமாண்பாகும். அத்தகைய சிவனடி நம்முடிமேல் சூட்டப்பெறுதலால் அழகிய தலை எனப்படும் தென் தலையாகும்.

1748. உணர்ந்தேன் உலகினில் ஒண்பொரு ளானைக்
கொணர்ந்தேன் குவலயம் கோயிலென் நெஞ்சம்
புணர்ந்தேன் புனிதனும் பொய்யல்ல மெய்யே
பணிந்தேன் பகலவன் பாட்டும் ஒலியே.

பொருள் : உலகனைத்தும் ஒளிப் பொருளாய் விளங்கும் பரசிவத்தை உணர்ந்தேன். அவனைச் சீவர்களாகிய நாம் உய்யும் வண்ணம் பூமி தத்துவத்துக் கொண்டு வந்தேன். என் மனமாகிய கோயிலில் புனிதனாகிய இறைவனைக் கூடினேன். அத் தூய்மையே உருவானவன் என்றும் நாதரூபமாய்க் காட்சி அளித்துக் கொண்டிருந்தான். சிவ சூரியனைப் பாட்டினால் நான் பணிய அவன் ஒளியினால் என்னுடன் ஒன்றியிருந்தான்.

1749. ஆங்கவை மூன்றினும் ஆரழல் வீசிடத்
தாங்கிடும் ஈரேழு தான்நடு வானதில்
ஓங்கிய ஆதியும் அந்தமும் ஆமென
ஈங்கிவை தம்முடல் இந்துவும் ஆமே.

பொருள் : மூவகை உலகினும் சிவச்சுடர் வீசுகின்றது. அதன்மேல் ஈரேழ் உலகினும் அச்சிவன் நடுவணதாகிய அறிவுப் பெருவெளியாக நின்றருள்பவன். அவனே உலகினைப் படைத்தலால் ஆதியாகவும் மீண்டும் தன்பால் ஒடுக்குதலால் அந்தமாகவும் விளங்குகின்றனன். மேலும் ஆருயிரின் உடம்பகத்துத் திருவருள் நிலையாம் திங்களுமாகும்.

1750. தன்மேனி தற்சிவ லிங்கமாய் நின்றிடும்
தன்மேனி தானும் சதாசிவ மாய்நிற்கும்
தன்மேனி தற்சிவன் தற்சிவா னந்தமாய்
தன்மேனி தானாகும் தற்பரம் தானே.

பொருள் : ஆருயிர்களின் உடம்புகள் சிவலிங்கமாகவே நின்றிடும் அதுபோல் அச்சிவலிங்கத்து உள்ளும் புறமுமாய் நிறைந்து நிற்கும் சதாசிவமாகும். உடம்பே தனி முதல்சிவன் உடம்பே சிவன் திருவடிப் பேரின்பம். உடம்பே சிவமெய்யாகும். உடம்பே ஒப்பில் முழுமுதல். இத்திருமந்திரம் ஆருயிரின் இடையறாச் சிவன் நினைப்பால் அவ்வுடம்பு உள்ளம் உணர்வு. உணர்வில் உளதாம் இன்பம் எல்லாம் சிவனேயாகும் என்பதை வலியுறுத்துகின்றது.

1751. ஆரும் அறியார் அகாரம் அவனென்று
பாரும் உகாரம் பரந்திட்ட நாயகி
தாரம் இரண்டும் தரணி முழுதுமாய்
மாறி எழுந்திடும் ஓசைய தாமே.

பொருள் : மேதா கலையாகிய அகரத்தைச் சிவம் என்று யாரும் அறியமாட்டார். அர்க்கிச கலையாகிய உகரத்தால் குறிக்கப்படும் சக்தி எல்லாப் பொருளிடத்தும் கலந்து நிற்பதாம். இவ்விதமான சிவமும் சத்தியும் பொருந்தி உலகமாய் மாறி இச் சிவசத்தி சிரசைத் தாண்டினபோது நாதஒலி உண்டாகும் படி செய்தது.

1752. இலிங்கநற் பீடம் இசையும்ஓங் காரம்
இலிங்கநற் கண்டம் நிறையும் மகாரம்
இலிங்கத்துஉள் வட்டம் நிறையும் உகாரம்
இலிங்கம் அகாரம் நிறைவிந்து நாதமே.

பொருள் : சதாசிவ லிங்கத்துக்குரிய பீடம் அல்லது அடிப்பாகம் ஓங்காரம். இலிங்கத்தின் நல்ல கண்டம் மகாரம். இலிங்கத்தின் வட்டமாகிய பகுதி உகாரம். இலிங்கத்தின் பாணம் அகாரமும் நிறைந்த விந்து நாதமும் ஆகும். சிவலிங்கத் திருமேனி அகர உகர மகர விந்து நாதமாகிய பிரணவமாம்.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் - Page 3 Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Tue Mar 27, 2012 1:28 pm

5. ஆத்மலிங்கம் (உயிர்ச்சிவம்)

(ஆத்ம, லிங்கமாவது ஆன்மாவே இலிங்கமாதல்)

1753. அகார முதலா அனைத்துமாய் நிற்கும்
உகார முதலா உயிர்ப்பெய்து நிற்கும்
அகார உகாரம் இரண்டும் அறியில்
அகார உகாரம் இலிங்கம் தாமே.

பொருள் : அகரமாகிய சிவம் எல்லாவற்றிற்கும் முதலாய் எல்லாவற்றோடும் கலந்தும் இருக்கும். உகாரமாகிய சத்தி எல்லாவற்றிற்கும் முதலாய் அவை உயிர் பெற்று நிற்க உதவும். இவ்வாறு அகாரம் சிவம் என்றும் உகாரம் சத்தி என்றும் அறியின் அகார உகாரங்களே இலிங்க வடிவமாம் என்பது விளங்கும்.

1754. ஆதாரம் ஆதேயம் ஆகின்ற விந்துவும்
மேதாதி நாதமும் மீதே விரிந்தன
ஆதார விந்து ஆதிபீட நாமே
போதாஇ லிங்கப் புணர்ச்சிய தாமே.

பொருள் : அண்ட கோசத்தில் உருவமான சிருட்டிக்குக் காரணமாயும், அதனுள் நிலைத்தாயும் உள்ள விந்துவும் மேதை முதலான சோடச கலைகளாகிய நாதமும் அடுக்கு அடுக்காய் விரிந்தன. ஆதாரமான விந்து உயர்ந்ததான நாதத்தை இடமாகக் கொண்டு நிலை பெற்றுள்ளது. இவ்வகையான உயர்ந்து செல்லுவதில் விந்து நாதங்களின் புணர்ச்சியுள்ளது.

1755. சத்தி சிவமாம் இலிங்கமே தாபரம்
சத்தி சிவமாம் இலிங்கமே சங்கமம்
சத்தி சிவமாம் இலிங்கம் சதாசிவம்
சத்தி சிவமாகும் தாபரம் தானே.

பொருள் : திருக்கோவில்களில் நிலைபெற்ற இலிங்கம் தாபர இலிங்கம், (தாபரம் - ஸ்தாவரம் - அசையாப்பொருள்) அந்த இலிங்கம் சத்தியும் சிவமும் ஆகும். அடியார் கூட்டம் சங்கமம் ஆகும்.

(சங்கமம் - அசையும் பொருள்) மெய்யடியார் திருக்கோலங்களும் சத்தி சிவமாகும். சத்தி சிவம் இரண்டையும் இணைத்து ஓதுங்கால் சதாசிவம் எனப்பெறும். தானே தனிமுதல் சத்திசிவம் இரண்டும் இணைந்த சதாசிவம் என்ப.

1756. தானேர் எழுகின்ற சோதியைக் காணலாம்
வானேர் எழுகின்ற ஐம்பது அமர்ந்திடம்
பூரேர் எழுகின்ற பொற்கொடி தன்னுடன்
தானேர் எழுகின்ற அகாரமது ஆமே.

பொருள் : மூலத்திடத்து என்றும் அழகோடு தானாக எழுந்து ஒளி வீசுகின்ற சிவச்சுடரைக் காணலாம். தூய மாயையின் கூறாக அம்மூலத்திடத்து எழுகின்ற ஐம்பது எழுத்துக்களின் தொகையாகிய ஓங்காரமும் அம் மூலத்தேயாம். ஆயிரம் இதழ்த் தாமரையின் நிலைக்களமாகிய உச்சித் துளைமேல் சிவசத்தியிடன் சேர்ந்து விளங்குவது. அகார முதல்வனாகிய சிவபெருமானாகும்.

1757. விந்துவும் நாதமும் மேவும் இலிங்கமாம்
விந்துவ தேபீட நாதம் இலிங்கமாம்
அந்த இரண்டையும் ஆதார தெய்வமாய்
வந்த கருஐந்தும் செய்யும் அவைஐந்தே.

பொருள் : ஒளியும் ஒலியும் ஆகிய விந்து நாதங்கள் பொருந்தும் சிவலிங்கம், விந்து பீடமாகும்; நாதம் இலிங்கமாகும். இவ் விரண்டையும் சார்புக் கடவுளாகக் கொண்டு அருளோன், ஆண்டான், அரன், அரி, அயன் என்னும் ஐம்பெரும் தெய்வ நிலைகள் தோன்றின. இவ் ஐந்தினையும் ஐந் தொழிற்கு வேண்டிய கருவென்ப, கரு காரணம், இவ் ஐவரின் வாயிலாக ஐந்து தொழில்கள் நிகழ்கின்றன. அத்தொழில் முறையே அருளல், மறைத்தல், துடைத்தல், காத்தல், படைத்தல் என்ப.

1758. சத்திநற் பீடம் தகுநல்ல ஆன்மா
சத்திநற் கண்டம் தகுவித்தை தானாகும்
சத்தநல் லிங்கம் தகும்சிவ தத்துவம்
சத்திநல் ஆன்மாச் சதாசிவம் தானே.

பொருள் : சத்தி வடிவாகக் கொள்ளப்படும் சிவ லிங்கத்தினிடத்துப் பீடம் ஆவி நிலையாகும். கழுத்தினை ஒத்த பீடத்தின் குழி திருவடி உணர்வாகிய சிவ ஞானமாகும். மேல் தோன்றும் இலிங்கம் சிவ மெய்யாகும். எவற்றினுக்கும் உயிர்க்குயிராம் பேராவி பரமாத்மா, சதாசிவமாகும்.

1759. மனம்புகுந்து என்னுயிர் மன்னிய வாழ்க்கை
மனம்புகுந்து இன்பம் பொழிகின்ற போது
நலம்புகுந்து என்னொடு நாதனை நாடும்
இனம்புகுந்து ஆதியும் மேற்கொண்டவாறே.

பொருள் : ஆருயிர்களின் உள்ளத்தின்கண் சிவபெருமான் திருவருளால் புகுந்து நிலைபெற்ற திருவடி வாழ்க்கையை அருளினான். அதனால் பேரின்பப் பெருவாழ்வு பொழிவதாயிற்று. அந்த இன்ப நன்மையின் நாட்டத்துடன் ஆருயிரையும் சிவனையும் அருளால் நாடுவர். அந்த நாட்டத்தின் பயனாக உடம்பாகிய வீட்டினுள் ஆதியாகிய சிவன் புகுந்து ஆண்டு கொண்டனன்.

1760. பராபரன் எந்தை பனிதமதி சூடி
தராபரன் தன்னடி யார்மனக் கோயில்
சிராபரன் தேவர்கள் சென்னியின் மன்னும்
அராபரன் மன்னி மனத்துஉறைத் தானே.

பொருள் : மேலானவற்றுக்கும் மேலானவனும் எம்தந்தை போல்வானும் குளிர்ந்த பிறையைச் சூடினவனும் உலகனைத்தையும் தாங்குபவனும் தம் அடியார் மனக்கோயிலின் உச்சியில் விளங்குபவனும் தேவர்கள் சித்தினுள் ஒளிமயமாக விளங்கும் குண்டலினியின் தலைவனுமாகிய அரன் என் மனத்துள் நீங்காது எழுந்தருளினான்.

1761. பிரான்அல்ல நாம்எனில் பேதை உலகம்
குரால்என்னும் என்மனம் கோயில்கொள் ஈசன்
அராநின்ற செஞ்சடை அங்கியும் நீரும்
பொராநின் றவர்செய்அப் புண்ணியன் தானே.

பொருள் : பசுவின் தன்மையுடைய என்மனத்தைக் கோயிலாகக் கொண்ட ஈசனும் பாம்பு தங்கிய சடையும் அக்கினியும் நீரும் பொருந்தியவனும் செய்கின்ற புண்ணியம் அனைத்தும் ஆகியவனுமாகிய அவன் தலைவன் அல்ல நாமே தலைவன் என்று கூறுவது அறியாமையுடையோர் கூற்றாகும். (குரால் - பசு)

1762. அன்றுநின் றான்கிடந் தான்அவன் என்று
சென்றுநின்று எண்டிசை ஏத்துவம் தேவர்கள்
என்றுநின்று ஏத்துவன் எம்பெரு மான்தன்னை
ஒன்றியென் உள்ளத்தின் உள்ளிருந் தானே.

பொருள் : சிவன் அன்று அங்கு நின்றான், இங்குக் கிடந்தான் என்று எட்டுத் திசைகளிலும் திரிந்து போய்த் தேவர்கள் வணங்கு வார்கள். அவன் என் உயிர்க்கு உயிராய் என் உள்ளத்தில் பொருந்தி நின்றான். அத்தகைய எம்பெருமானை என்றைக்கும் வணங்கிக் கொண்டிருப்பேன்.

6. ஞான லிங்கம் (உணர்வுச் சிவம்)

1763. உருவும் அருவும் உருவோடு அருவும்
மருவு பரசிவன் மன்பல் உயிர்க்கும்
குருவு மெனநிற்கும் கொள்கையன் ஆகும்
தருவென நல்கும் சதாசிவன் தானே.

பொருள் : உருவும் அருவும் அருவுருவம் என்று மூன்று வகையான திருமேனி கொள்ளும் பரசிவன் நிலைபெற்ற பல உயிர்களுக்கும் குருவாக நிற்கும் தன்மையுடையவன் ஆகும். அவனே சதாசிவமாய்க் கற்பகமரம் போல வேண்டுவார்க்கு வேண்டியதை வழங்கி யருளுவான்.

1764. நாலான கீழது உருவம் நடுநிற்க
மேலான நான்கும் அருவம் மிகுநாப்பண்
நாலான ஒன்றும் அருவுரு நண்ணலால்
பாலாம் இவையாம் பரசிவன் தானே.

பொருள் : சதாசிவக் கடவுள் ஒன்பது திருமேனிகளை உடையவன். உருவம் நான்கு; இவைகீழ்ப்படி என்ப, அருவம் நாலும் மேற்படி என்ப; நடுப்படி அருவுருவம் ஒன்று என்ப; இவையனைத்தும் பரமசிவன் அருளிற் கொள்ளும் நினைப்பு உருவமாகும்; இவைமுறையே அயன், அரி, அரன், ஆண்டான் எனவும் அருளோன் எனவும், ஒளி, ஓசை அன்னை அத்தன் எனவும் கூறுப (அருளோன் - சதாசிவன்.)

1765. தேவர் பிரானைத் திசைமுக நாதனை
நால்வர் பிரானை நடுவுற்ற நந்தியை
ஏவர் பிரான்என்று இறைஞ்சுவார் அவ்வழி
யாவர் பிரானடி அண்ணலும் ஆமே.

பொருள் : தேவர் அனைவர்க்கும் நாதனும் நான்கு திசைகளிலும் முகமுடைய தலைவனும் உருவமூர்த்திகள் நால்வரையும் செலுத்துபவனும், உருவுக்கும் அருவுக்கும் இடையேயுள்ள அருவுரு மூர்த்தியும் ஆகிய சதாசிவரை யார் பெருமான் என்று வணங்குகின்றாரோ அவ்விடத்திலே பிரானாகிய சதாசிவர் தோன்றுவார். அவ்வாறு அவரது திருவடியை அணுகுதலும் கூடும்.

1766. வேண்டிநின் றேதொழு தேன்வினை போயற
ஆண்டொரு திங்களும் நாளும் அளக்கின்ற
காண்டகை யானொடும் கன்னி உணரினும்
மூண்டகை மாறினும் ஒன்றது வாமே.

பொருள் : ஆண்டு, மாதம், நாள் ஆகியவற்றைச் செய்கின்ற, சிவ சூரியனாகிய சதாசிவரோடு சத்தியை வழிபடினும் இருவரையும் வேறு வேறு உருவாக ஓருருவாகத் தியானிக்கினும் பயன் ஒன்றேதான். ஆதலின் வினை நீங்கும்படி இவ்வாறு தொழுதேன்.

1767. ஆதி பரந்தெய்வம் அண்டத்து நல்தெய்வம்
சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்
நீதியுள் மாதெய்வம் நின்மலர் எம்இறை
பாதியுள் மன்னும் பராசத்தி யாமே.

பொருள் : ஆதியான மேலான தெய்வமாகிய சதாசிவரே, அவரவர் ஆகாய மண்டலத்தில் விளங்குபவர். அவர் சோதியாக அடியார்கள் வணங்கும் பெருந் தெய்வமாகும். ஒவ்வொருவரின் அண்ட ஆகாயத்தில் நீதிவடிவாக விளங்கும் பெருமையுடைய தெய்வமாகும். அவர் யாவருடைய உடலையும் இடமாகக் கொள்ளினும் நின்மலர். இத்தகைய எமது இறையின் ஒரு பாதியில் பராசத்தி உள்ளாள்.

1768. சத்திக்கு மேலே பராசத்தி தன்னுள்ளே
சுத்த சிவபதம் தோயாத தூவொளி
அத்தன் திருவடிக்கு அப்பாலைக்கு அப்பாலாம்
ஒத்தவும் ஆம்ஈசன் தானான உண்மையே.

பொருள் : சத்திக்கு மேல் பராசத்தி விளங்கும் அண்ட கோசத்திலுள்ள வெளியில் தூய்மையான சிவபதம் உண்டு இங்கு ஏனைய தத்துவங்களில் தோய்வின்றி நிற்கின்ற வெளி உள்ளது. அத்தன் திருவடி விளங்கும் இவ்வெளிக்கும் அப்பாலுக்கு அப்பாலாயும் ஒத்ததாயும் இருக்கும் சிவத்தின் உண்மையான நிலை.

1769. கொழுந்தினைக் காணில் குவலயம் தோன்றும்
எழுந்திடம் காணில் இருக்கலும் ஆகும்
பரந்திடம் காணில் பார்ப்பதி மேலே
திரண்டெழக் கண்டவன் சிந்தையு ளானே.

பொருள் : ஞானலிங்கமாகிய ஒளிமயமான சதாசிவரை அறியில் உலகமெல்லாம் அங்குச் சூக்குமமாய் விளங்குவது தெரியும். எழக்கூடிய வல்லமை இருக்குமாயின் என்றும் அழியாது இவ்வுலகில் இருத்தலும் கைகூடும். தத்துவங்களை விட்ட ஆன்மாவை உறுதியாகம் பற்றினால் சத்தி உருவில் அமைந்த சிவம் சிந்தையுள் விளங்கும்.

1770. எந்தை பரமனும் என்னம்மை கூட்டமும்
முந்த உரைத்து முறைசொல்லின் ஞானமாம்
சந்தித்து இருந்த இடம்பெருங் கண்ணியை
உந்தியின் மேல்வைத்து உகந்துஇருந்தானே.

பொருள் : எந்தையாகிய சிவபெருமானும் என் அம்மையாகிய பெருமாட்டியும் மணியொளிபோலப் பிரிப்பின்றிக் கலந்து கூடிய கூட்டமும் முற்படக் கூறி முறை இயம்பின் திருவடி உணர்வாகிய சிவஞானமாகும். இருவரும் கூடியிருந்த நிலைக்களம் கொப்பூழாகிய சுவாதிட்டான மாகும். அதற்கு மேலெனப்படும் நெஞ்சமாகிய அநாகதத்தின்கண் பெருங்கண்ணியை உடன் வைத்து மாறிலாத உவப்புடையவன் ஆனான். கூட்டம் - ஒரு பாகத்தமர்ந்த சேர்க்கை.

1771. சத்தி சிவன்விளை யாட்டாம் உயிராகி
ஒத்த இருமாயா கூட்டத்து இடையூட்டிச்
சுத்தம தாகும் துரியம் பிறிவித்துச்
சித்தம் புகுந்து சிவம்அகம் ஆக்குமே.

பொருள் : சத்தி சிவத்துடன் விளங்கும் தகுதிக்கேற்ப உயிரின் நிலை விளங்கச் செய்து அதற்கேற்ப சுத்த மாயை அசுத்தமாயை என்ற கூட்டத்தில் சேர்த்து உயிர் பக்குவமானபோது சுத்த மாயையில் விளங்கும் (துரியம்) ஒளி மண்டலத்தை உணர்த்தி அதனைக் கடக்கும்படி செய்து சிவனின் சித்தத்தில் சிவம் தங்கிச் சிவனைச் சிவனுறையும் கோயிலாக்கும்.

1772. சத்தி சிவன்தன் விளையாட்டுத் தாரணி
சத்தி சிவமுமாம் சிவன்சத் தியுமுõகும்
சத்தி சிவமின்றித் தாபரம் வேறில்லை
சத்திதான் என்றும் சமைந்துரு வாகுமே.

பொருள் : இப்பூமி சிவ சத்திகளின் விளையாட்டாகும். உருவமுடைய சத்தி அறிவான சிவமாம். அறிவான சிவன் உருவான சத்தியுமாம். சத்தி சிவமின்றி உடலுடைய உயிர்கள் ஒன்றும் இல்லை. சத்தியே தேவைப்பட்ட விதம் சமைந்து எக்காலத்தும் உருவத்தைப் பெறும். சிவத்துக்கு உருவம் சத்தி என்பதாம்.

7. சிவலிங்கம் (சிவகுரு)

1773. குரைக்கின்ற வாரிக் குவலய நீரும்
பரக்கின்ற காற்றுப் பயில்கின்ற தீயும்
நிரைக்கின்ற வாறிவை நீண்டகன் றானை
வரைத்து வலம்செயு மாறுஅறி யேனே.

பொருள் : ஒலிக்கின்ற கடலாற் சூழப்பட்ட இவ்வுலகமும் நீரும், தீயும், காற்றும் (வெளியும்) வரிசையாக விளங்கும் விளக்கம் சிவனாவேயாம். இவை எல்லாமாய்ச் செறிந்த சிவனை நாம் ஒரு குறியில் வைத்து வழிபடுதல் வேண்டும். அங்ஙனம் வழிபடுவதும் அவன்தன் திருவருள் துணையாலேயாம். இவ்வுண்மை அறியகில்லேனே.

1774. வரைந்து வலஞ்செய்யு மாறுஇங்குஒன்று உண்டு
நிரைத்து வருகங்கை நீர்மலர் ஏந்தி
உரைத்துஅவன் நாமம் உணரவல் லார்க்குப்
புரைத்துஎங்கும் போகான் புரிசடை யோனே.

பொருள் : அச்சிவபெருமானை ஒரு குறியில் கண் வைத்து வழிபடும் வகை ஒன்று உண்டு. அது திரு ஐந்து எழுத்தால் ஆகும். செம்பொற்குடத்து நிரைத்துவைத்த தெண்ணீரும் மருமலரும் அங்கையில் ஏந்திப் புகழ்ந்து மொழியப்படும் நந்திநாமம் நமச்சிவாய என்னும் செந்தமிழ்த் திருமறை ஓதித் திருவடியிலிட்டு வழிபடுதல் என்பதேயாம். இங்ஙனம் வழிபடு உணர்வின்கண் உணர வல்லார்க்குப் புரிசடையோனாகிய சிவபெருமான் அவரைவிட்டு நீங்கி எங்கும் போகான்.

1775. ஒன்றெனக் கண்டோம் ஈசன் ஒருவனை
நன்றென்று அடியிணை நான்அவ னைத்தொழ
வென்றுஐம் புலமும் மிகக்கிடந்து இன்புற
அன்றுஎன்று அருள்செய்யும் ஆதிப் பிரானே.

பொருள் : எம்முதல்வனாகிய சிவபெருமான் ஒருவனே உலகுக்கு முழுமுதல் என அருளால் உணர்ந்தோம். அவனை நன்னெறி நான்மையும் எய்தத் தொழுதலே நன்றென்று அவன் திருவடியிணையைப் புனலும் பூவும் கொண்டு போற்றி மறை புகன்று நனவிலும் கனவிலும் மனமுறத் தொழுதனம். அங்ஙனம் தொழுதமையால் ஐம்புலனும் மிகக் கிடந்து இன்புறும்படி அப்பொழுதே ஆதிப்பிரான் அருள் செய்தனன். புலன்கள் ஆண்டவன் திருஆணை வழியே நிகழ்வன.

1776. மலர்ந்த அயன்மால் உருத்திரன் மகேசன்
பலந்தரும் ஐம்முகன் பரவிந்து நாதம்
நலந்தரும் சத்தி சிவன்வடி வாகிப்
பலந்தரு லிங்கம் பராநந்தி யாமே.

பொருள் : மாலின் கொப்பூழில் தோன்றிய அயனும். அம் மாலாகிய அரியும், அரனும், ஆண்டானும் பயனருளும் அருளோனாகிய ஐம்முகனும் மேலாம் விந்து நாதங்களும் நன்மையருளும். சத்திசிவன் வடிவங்களும். நிறைந்த குறை விலாஇன்பப் பயனுக்கு வாயிலாகிய பாடிப் பிரவிப் பணியும் பணியாம். நல்தவத்தைத் தந்த தருளும் நந்தி யெம்பெருமானே. சிவலிங்கமும் ஆவன்.

1777. மேவி எழுகின்ற செஞ்சுடர் ஊடுசென்று
ஆவி எழும்அள வன்றே உடலுற
மேவப் படுவதும் விட்டு நிகழ்வதும்
பாவித்து அடக்கிற் பரகதி தானே.

பொருள் : மூலா தாரத்திலிருந்து நடுநாடி வழியாகச் செல்லுகின்ற செவ்வொளியோடு கூடி ஆவி எழுகின்ற அளவுவரை உடம்பிலுள்ள ஆதார கலைகளிலும் உடம்பை நீங்கிய நிராதார கலைகளிலும் பொருந்துவதும். நீங்குவதுமாக மனத்தை நிறுத்திப் பழகுவதில் மேலான சிவகதி விளையும்.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் - Page 3 Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Tue Mar 27, 2012 1:29 pm

8. சம்பிரதாயம் (பண்டைய முறை)

1778. உடல்பொருள் ஆவி உதகத்தாற் கொண்டு
படர்வினை பற்றறப் பார்த்துக்கை வைத்து
நொடியின் அடிவைத்து நுண்ணுணர் வாக்கி
கடியப் பிறப்பறக் காட்டினன் நந்தியே.

பொருள் : முன்னிலையில் அமைந்த குரு உடல் பொருள் ஆவி மூன்றையும் சீடன் நீரோடு தத்தம் செய்ய ஏற்றுக் கொண்டு, படர்ந்த வினையால் வரும் பற்றினை அறும்படி கண்ணினால் நோக்கி, சீடனது சிரசில் கைவைத்து, திருவடி ஞானத்தை விளக்கியருளி நுட்பமான உணர்வை எழுப்பி விரைவில் கட்டினையுடைய பிறவியை அறுத்தருளினன்.

1779. உயிரும் சரீரமும் ஒண்பொரு ளான
வியவார் பரமும்பின் மேவும் பிராணன்
செயலார் சிவமும் சிற்சத்தி ஆதிக்கே
உயலார் குருபரன் உய்யக் கொண்டானே.

பொருள் : உயிரும் உடம்பும் ஒளி பொருளான வியப்புப் பொருந்திய பரமும். பின்பொருந்தியுள்ள பிராணனும் இவற்றை இயக்குகின்ற சிவமும் சத்தி ஆகியவற்றை அறிந்து, உய்யும் வண்ணம் குருநாதன் ஆட்கொண்டருளினான். (சிவன் - காரண குரு. குருபரன் - காரிய குரு.)

1780. பச்சிம திக்கிலே வைத்தஆ சாரியன்
நிச்சலும் என்னை நினையென்ற அப்பொருள்
உச்சிக்கும் கீழது உள்நாக்கு மேலது
வைச்ச பதமிது வாய்திற வாதே.

பொருள் : சிவகுருவானவர் வடக்கு நோக்கி அமர்வார். சிவ தீட்சை பெறுவோராகிய மாணவர் மெய்கண்டார் எனப்படுவார். அவர் சிவகுருவின் இடப்பாலாகிய மேற்குபக்கம் அமர்வார். மேற்குத் திக்குப் பச்சிமம் எனப்படும். அந்நிலையில் சிவகுருவானவர் நாடோறும் மாணவரை நினையும்படி ஆணை ஈந்தது சிவசிவ என்னும் செந்தமிழ் மறையே. அச்சிவன் உறையுமிடம் உச்சிக்குக் கீழும் உள் நாக்குக்கு மேலும் ஆகும். அந்தச் சிவனை விட்டு நீங்காத சீவனுக்கும் கனவில் உயிர்ப்பு அடங்கலாகிய சாக்கிரத்தே அதீதத்øத் புரியும் தவநிலையும் அதுவேயாம். அந்நிலையில் பிறப்பு வழி உண்டாகிறது.

1781. பெட்டடித்து எங்கும் பிதற்றித் திரிவேனை
ஒட்டடித்து உள்ளமர் மாசெலாம் வாங்கிப்பின்
தட்டொக்க மாறினன் தன்னையும் என்னையும்
வட்டமது ஒத்தது வாணிபம் வாய்த்ததே.

பொருள் : விரும்பியவாறு அனுபவம் இன்றி வாய் ஞானம் பேசிக் கொண்டிருந்த என்னை, என்னிடத்திலுள்ள குற்றங்களையெல்லாம் அகற்றி, பின்னர்க் குருநாதனாகிய தன்னையும் சீடனாகிய என்னையும் துலாத்தட்டு நேராதல் போலச் சமன் செய்தான். நாணய மாற்று நடந்து வியாபாரம் சித்தித்தது.

1782. தரிக்கின்ற பல்லுயிர்க்கு எல்லாம் தலைவன்
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்
பிரிக்கின்ற விந்து பிணக்கறுத்து எல்லாம்
கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண்டேனே.

பொருள் : உலகில் வாழ்கின்ற பல உயிர்களுக்கெல்லாம் தலைவனாகிய சிவம். உடனாய் இருக்கின்ற இயல்பினை உலகவர் சிறிதும் அறியார். சுத்த மாயையின் மாறுபாட்டைப் போக்கி, எல்லாவற்றையும் கருவாகக் கொண்ட சிவத்தை நான் கண்டு கொண்டேன்.

1783. கூடும் உடல்பொருள் ஆவி குறிக்கொண்டு
நாடி அடிவைத்து அருள்ஞான சத்தியால்
பாடல் உடலினில் பற்றற நீக்கியே
கூடிய தானவ னாம்குளிக் கொண்டே.

பொருள் : வினைக்கு ஈடாக உடல் பொருளோடு கூடிய உயிரை உய்விக்க வேண்டும் என்று எண்ணங் கொண்டு, தனது ஞான சத்தியால் விந்து நாதங்களாகிய திருவடியை விரும்பிப் பதிப்பித்துப் பெருமையில்லாத உடம்பின் பற்றினை அறுத்து, சிவம் சீவனில் கலந்து மறைந்து அவனே தானாய் நிற்கும்.

1784. கொண்டான் அடியேன் அடிமை குறிக்கொள்ளக்
கொண்டான் உயிர்பொருள் காயக் குழாத்தினைக்
கொண்டான் பலமுற்றும் தந்தவன் கோடலால்
கொண்டான் எனஒன்றும் கூறகி லானே.

பொருள் : அடியேனைப் பக்குவம் வந்த போது அடிமையாக ஏற்றுக் கொள்ள எண்ணங் கொண்டான். எனது உயிர் பொருள் உடம்பின் கருவிக்கூட்டம் ஆகியவற்றை அவன தாக ஆக்கிக் கொண்டான். எல்லா வல்லமையையும் தந்தவனே எடுத்துக் கொண்டான். அவ்வாறு கொடுத்தவன் கொள்ளுதலால் என்னிடம் உள்ளவற்றை எடுத்துக் கொண்டான் என்று. கூறுவதற்கில்லை (காயக்குழாம் - தூல சூக்கும காரண சரீரங்கள்)

1785. குறிக்கின்ற தேகமும் தேகியும் கூடி
நெறிக்கும் பிராணன் நிலைபெற்ற சீவன்
பறிக்கின்ற காயத்தைப் பற்றிய நேர்மை
பிறக்க அறியாதார் பேயுடன் ஒப்பரே.

பொருள் : குறியாகக் கொள்கின்ற உடம்பும் உடம்பை யுடைய சீவனும் கூடி, நெறிப்பட இயங்கும் பிராணன் நிலை பெற்ற சீவன். இயமன் நீக்குகின்ற உடம்பை எடுத்துக்கொண்ட தன்மையை, உடம்போடு கூடியிருக்கும்போதே அறிந்து பிறிக்காதார் பேய்போல் அலைபவர் ஆவர்.

1786. உணர்வுடை யார்கட்கு உலகமும் தோன்றும்
உணர்வுடை யார்கட்கு உறுதுயர் இல்லை
உணர்வுடை யார்கள் உணர்ந்தஅக் காலம்
உணர்வுடை யார்கண் உணர்ந்துகண் டாரே.

பொருள் : முன் மந்திரத்தில் கூறியவாறு தமது சீவனான ஒளியை உணரும் தன்மை உடையார்க்கு எல்லா சூக்கும உலகங்களும் விளங்கும். அத்தகைய உணர்வுடையார் இவ்வுலகை அனுபவப் பொருளாகக் காணாமல் சாட்சியாகக் காண்பதால் எவ்வகையான துன்பமும் அவர்க்கு இல்லை. இங்ஙனம் உணர்வுடைய ஞானிகள் உலகை அறிந்தபோது அவர்கள் தம்மையும் தலைவனையும் உணர்ந்தவராவர்.

1787. காயப் பரப்பில் அலைந்து துரியத்துச்
சால விரிந்து குவிந்து சகலத்தில்
ஆயஅவ் ஆறாறு அடைந்து திரிந்தோர்க்குத்
தூய அருள்தந்த நந்திக்கு என் சொல்வதே.

பொருள் : உடல் பரப்பில் அலைந்து, துரிய நிலையில் ஒளி மண்டலத்தில் மிகவிரிந்து சிவத்துடன் பொருந்திக் குவிந்து சகல நிலையில் முப்பத்தாறு தத்துவங்களுடன் பொருந்தியிருந்த சீவருக்குதூய்மையான தனது அருள் சத்தியைப் பதிப்பித்த நந்தியெம்பெருமானை என்ன சொல்லி வாழ்த்த முடியும்.

1788. நானென நீயென வேறில்லை நண்ணுதல்
ஊனென ஊனுயிர் என்ன உடனின்று
வானென வானவர் நின்று மனிதர்கள்
தேனென இன்பம் திளைக்கின்ற வாறே.

பொருள் : நான் என்றும், நீ என்றும், நீ வந்து அடைதல் என்றும் வேறு பிரித்து உணரக்கூடிய நிலை இல்லை. உடம்பும் உடம்பிலுள்ள உயிரும் போல நாம் உடனாயிருக்க ஆகாயத்தில் இறைவன் வேறாக இருப்பதாக எண்ணின் ஆகாய மண்டலவாசிகள் வந்து பொருந்தி நின்று மனிதர்கள் நுகர்கின்ற இன்பங்களைத் தேன்போலச் சுவைத்து அழுந்தியிருப்பார்கள்.

1789. அவனும் அவனும் அவனை அறியார்
அவனை அறியில் அறிவானும் இல்லை
அவனும் அவனும் அவனை அறியில்
அவனும் அவனும் அவனிவன் ஆமே.

பொருள் : இறைவனைத் துவைத பாவனையில் வணங்கும் சரியை கிரியை வழி நிற்போர் அவனை அறிய மாட்டார். காணப்படுபவனைக் காண்பவன் அறிந்தால் அது இரு பொருளாக இல்லாமல் ஒரே பொருளாகக் காண்பவனும் காட்சியும் ஒன்றிவிடும். இவ்விதமாகச் சரியை வழி நிற்போரும் அநந்நியமாக உணரில் காணப்படு பொருளான சிவமும் காண்பானும் ஒன்றாகச், சீவனார் சிவனாய் விடுவார்.

1790. நானிது தானென நின்றவன் நாடோறும்
ஊனிது தானுயிர் போலுணர் வானுளன்
வானிரு மாமுகில் போற்பொழி வானுளன்
நானிது அம்பர நாதனும் ஆமே.

பொருள் : நான் இந்தச் சீவனே என்று உள்ளங் கொள்பவனாகிய சிவன், உடலாகிய இதனைத் தான் எனவே எப்போதும் கருதும் உயிர்போல உளன். அவன் வானத்தில் பரவும் பெரிய மேகம் போலக் கருணையைப் பொழிபவனாக உள்ளான். அதனால் நான் ஆகாய நாயகனாக ஆயினேன்.

1791. பெருந்தன்மை தானென யானென வேறாய்
இருந்ததும் இல்லைஅது ஈசன் அறியும்
பொருந்தும் உடல்உயிர் போல்உமை மெய்யே
திருந்தமுன் செய்கின்ற தேவர் பிரானே.

பொருள் : பெருந்தன்மையுடைய தான் என்னும் சிவனும் யான் என்னும் சீவனும் வேறாக ஒருபோதும் இருக்கவில்லை. அத்தன்மையை இறைவன் இயல்பாகவே அறிவான். உண்மையாகவே உயிர்களைத் திருத்த மடையச் செய்கின்ற சிவபெருமான் உம்மை உடல் உயிர்போலப் பிரிப்பின்றிப் பொருந்தி யிருப்பான்.

9. திருவருள் வைப்பு (திருவருள் வைப்பு - திருவடி பதிதல். திருவடியாவன: சூரிய சந்திர கலைகள்.)

1792. இருபத மாவது இரவும் பகலும்
உருவது ஆவது உயிரும் உடலும்
அருளது ஆவது அறமும் தவமும்
பொருவது உள்நின்ற போகமது ஆமே.

பொருள் : சீவர்கள் அறிய வேண்டிய நெறி சூரிய நெறி, சந்திரநெறி என இரண்டாம். இத்தகைய சூரிய கலை, சந்திர கலை விளங்கவே உயிருக்கு உருவமான உடல் அமைந்தது. அருள் என்ற தெய்வ சத்தியை பெற சந்திர நெறி பற்றியவர்க்கு அறமும், சூரிய நெறி பற்றியவர்க்குத் தவமும் அமைந்துள்ளன. இவ்விரு நெறியினும் மனத்தின் பண்பிற்கேற்பப் போகப் பொருள்கள் உடலுக்கு அமையும்.

1793. காண்டற்கு அரியன் கருத்திலன் நந்தியும்
தீண்டற்கும் சார்தற்கும் சேயனாத் தோன்றிடும்
வேண்டிக் கிடந்து விளக்கொளி யான்நெஞ்சம்
ஈண்டிக் கிடந்தங்கு இருளறும் ஆமே.

பொருள் : ஊனக் கண்ணால் காண்பதற்கு அருமையானவன். மனத்தால் பாவித்து அறியவும் அருமையானவன். குரு மண்டலத்தில் விளங்கும் நந்தியும் பரிசிப்பதற்கும் அணுகுவதற்கும் தூரத்தில் உள்ளவனாகத் தோன்றுவான். அவனையே வேண்டிக் கிடப்பார்க்கு அகநோக்கில் விளக்கொளி போலத் தோன்றுவான். அப்போது அவனையே செறிந்திருத்தலால் உள்ளத்திலிருந்த அஞ்ஞானம் நீங்குமாம்.

1794. குறிப்பினின் உள்ளே குவலயம் தோன்றும்
வெறுப்பிருள் நீங்கில் விகிர்தனும் நிற்கும்
செறிப்புறு சிந்தையைச் சிக்கென நாடில்
அறிப்புறு காட்சி அமரரும் ஆமே.

பொருள் : விளக்கொளி கண்டு நின்றபோது அகக்காட்சியில் உலகிலுள்ள உயிர்ப்பொருள் எல்லாம் கருவாய்த் தோன்றும். வெறுக்கத்தக்க ஆணவ இருள் நீங்கினால் உயிர்க்குயிராய்க் கலந்திருக்கும் பரசிவன் உண்மையைக் காணலாம். அவ்வாறு அவனிடம் செறிந்த சிந்தையை ஆராயின், ஞானமே உருவான காட்சி உண்டாகித் தேவ உருவம் சித்திக்கும்.

1795. தேர்ந்தறி யாமையின் சென்றன காலங்கள்
பேர்ந்தறி வான் எங்கள் பிஞ்ஞகன் எம்இறை
ஆர்ந்தறி வார்அறி வேதுணை யாமெனச்
சார்ந்தறி வான்பெருந் தன்மைவல் லானே.

பொருள் : ஞானத்தின் திருவுருவைத் தெளிந்து அறியாமையால் காலங்கள் வீணே கழிந்தன. எங்கள் சிவனாகிய தலைவன் தன் சொரூப நிலையினின்றும் பெயர்ந்து குருவாக வந்து காட்டிக் காண்பான். அவ்வாறு உண்மை அறிவே துணையாகப் பொருந்தி உணர்வாரிடம் சார்ந்து விளங்கும் பெருமை யுடையவன் சிவன்.

1796. தானே அறியும் வினைகள் அழிந்தபின்
நானே அறிகிலன் நந்தி அறியுங்கொல்
ஊனே உருகி உணர்வை உணர்ந்தபின்
தேனே யனையன்நம் தேவர் பிரானே.

பொருள் : ஆருயிரின் இருள்சேர் இருவினையும் அருளால் அழிந்த பின் அவ்வுயிர் தன்னைத் தானே திருவருள் துணையால் அறியும். மல கன்ம மாயைகளை அவ்வுயிர் அறியாது. அவ்வாறு இருப்ப, நந்தியாகிய சிவபெருமான் அவற்றை அறிவது எங்ஙனம் ? அவன் அறியான். அறியான் ஈண்டு அனுபவியான். உள்ளம் உருகித் தொழுது உணரப்படும் உணர்வாகிய சிவனை உணர்ந்தபின் தேனே அனைய சிவபெருமானின் திருவடி யின்பத்தை உயிர் துய்க்கும்.

1797. நான்அறிந்து அன்றே இருக்கின்றது ஈசனை
வான்அறிந் தார்அறி யாது மயங்கினர்
ஊன்அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்
தான்அறி யான்பின்னை யார்அறி வாரே ?

பொருள் : உடல் தோன்றிய போதே ஒளியாய் உயிர்ப்பாய் உள்ள ஈசனை நான் அறிந்தே யிருந்தேன். ஆகாய மண்டல வாசிகள் இவ் வுண்மையை அறியாமல் மயங்கி இருந்தனர். தேகத்தின் உள்ளே உயிர்ப்பின் இயக்கத்தை நடத்துகின்ற ஒளிமிக்க சுடராக்கிய இறைவன் தான் அறியவில்லையெனில் பின்னை யாரே அறிந்து உபகாரம் செய்ய முடியும் ?

1798. அருள்எங்கு மான அளவை அறியார்
அருளை நுகர்அமு தானதும் தேரார்
அருள்ஐங் கருமத்து அதிசூக்கம் உன்னார்
அருள்எங்கும் கண்ணானது ஆர்அறி வாரே.

பொருள் : அருளே எங்குமாய் உள்ளது என்ற தன்மையை உலகவர் அறியார். அருளை அறிவோர்க்கு அது அமுதம் போல இனிமையைத் தரும் என்பதனையும் சிந்தித்துத் தெளியார். சத்தியே மிக சூக்குமமாய்ச் சிருட்டியாதி ஐந்தொழிலுக்கும் ஏதுவானது என்பதனை எண்ணிப் பார்ப்பதில்லை. அருள்சத்தி கண்ணாயிருந்து அனைத்தையும் ஒரு சேரக் காண்டலையும் உணரார்.

1799. அறிவில் அணுக அறிவது நல்கிப்
பொறிவழி யாசை புகுத்திப் புணர்ந்திட்டு
அறிவது ஆக்கி அடியருள் நல்கும்
செறிவொடு நின்றார் சிவம்ஆயி னாரே.

பொருள் : திருவடி உணர்வாகிய அறிவில் ஆருயிர்கள் பொருந்த அச்சிவன் அறிவுக்கு அறிவாய் நின்று அறிவினை அருளினன். அந்நிலை எய்துதற்குரிய பயில்வு கைக்கொள்ளும் பொருட்டுப் பொறிவழி விருப்பினை உயிர்க்குப் புகுத்தினன். தானும் அவ்வுயிரினோடு புணர்ந்து நின்றனன். அவ்அருளின் வழித் திருவடி உணர்வு பெற்றுத் திருவருள் நிறைவில் நிலைத்து நின்றார் அச்சிவமாகவே இருப்பர்.

1800. அருளில் பிறந்திட்டு அருளில் வளர்ந்திட்டு
அருளில் அழிந்துஇளைப் பாறி மறைந்திட்டு
அருளான ஆனந்தத்து ஆரமுது ஊட்டி
அருளால் என்நந்தி அகம்புகுந் தானே.

பொருள் : அருட்சத்தியால் பிறந்து வளர்ந்து, அருளால் அழிந்து இளைப்பினை நீங்கி மறைந்துள்ள சீவனை ஒளிமயமான ஆனந்தம் பெறச் செய்து, பின்னர் தானே எழுந்தருளி எனது குரு மண்டலத்தை விளங்கச் செய்தான்.

1801. அருளால் அமுதப் பெருங்கடல் ஆட்டி
அருளால் அடிபுனைந்து ஆர்வமும் தந்திட்டு
அருளான் ஆனந்தத்து ஆரமுது ஊட்டி
அருளால் என்நந்தி அதும்புகுந் தானே.

பொருள் : திருவடி மறவாச் சீரிய நினைவே அழியா அமிழ்தப் பெருங்கடலாகும். அக்கடலின்கண் திரு அருளால் ஆட்டுவித்து அத்திரு அருளாலேயே திருவடியினைச் சூட்டி, மறவாப் பேரன்பும் வழங்கி, அத்திருவருள் பேரன்பினையும் உண்பித்து, அத் திருவருளாலேயே அச் சிவன் ஆருயிரின் அகம் புகுந்தான்.

1802. பாசத்தில் இட்டது அருள்அந்தப் பாசத்தின்
நேசத்தை விட்டது அருள்அந்த நேசத்தில்
கூசற்ற முத்தி அருள்அந்தக் கூட்டத்தின்
நேசத்துத் தோன்றா நிலையரு ளாமே.

பொருள் : என்னைப் பாசத்தில் பொருத்தி அனுபவிக்கச் செய்தது அருள். அந்தப் பாசத்தைப் பற்றாகக் கொண்ட என்னை அதிலிருந்து வேறுபடுத்தியது அருள். அந்தப் பாசத்தில் பற்று விட்டவுடன் நேயப்பொருளாகிய சிவத்துடன் பொருந்தும்படி செய்தது அருள். காண்பானும் காட்சிப் பொருளும் கூடிய கூட்டத்தில் காட்சிப் பொருளோடு பிரிப்பின்றி நிலைபெறச் செய்ததும் அருளாகும்.

1803. பிறவா நெறிதந்த பேரரு ளாளன்
மறவா அருள் தந்த மாதவன் நந்தி
அறவாழி அந்தணன் ஆதிப் பராபரன்
உறவாகி வந்துஎன் உளம்புகுந் தானே.

பொருள் : பிறவிக்குக் காரணமாகிய இருளைப் போக்கி, ஒளியினைத் தந்த பெருங் கருணையாளனும், சிவனை இன்பத்தில் ஆழ்த்தி மறக்காத வண்ணம் சத்தியைப் பதிப்பதித்து அருளிய பெரிய பிரானாகிய சிவனும், உதவுவதால் குறையாத தன்மையுடைய கடல் போன்ற - தண்ணளியாளனும் மேலான பொருள்களுக்கு எல்லாம் மேலானவனும் ஆகிய இறைவன், அவனை விரும்பியதால் உறவாக வந்து என்து உள்ளம் புகுந்தான்.

1804. அகம்புகுந் தான்அடி யேற்குஅரு ளாலே
அகம்புகுந் தும்தெரி யான்அருள் இல்லோர்க்கு
அகம்புகுந்து ஆனந்த மாக்கிச் சிவமாய்
அகம்புகுந் தான்நந்தி ஆனந்தி யாமே.

பொருள் : சிவபெருமான் திருவருளால் அடியேன் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி அங்குப் புகுந்தனன். திருவருள் கைவரப் பெறாதார்க்கு அகம் புகுந்தும் அவரால் உணர்வதற்கு அரியன். உள்ளம் புகுந்து கண், எண்ணம், அறிவமைதி எல்லாம் சிவத் தொடர்பாக ஆக்குதலால் எல்லாம் சிவ இன்பமாகவே திகழும் . சிவமாக்கி ஆருயிர்களை ஆளும் முறையால் ஆனந்தி என்னும் பெயர் சிவனுக்கு ஆயிற்று.

1805. ஆயும் அறிவோடு அறியாத மாமாயை
ஆய கரணம் படைக்கும் ஐம்பூதமும்
ஆய பலஇந் திரியம் அவற்றுடன்
ஆய அருள்ஐந்து மாம்அருட் செய்கையே.

பொருள் : ஆராய்கின்ற அறிவு மயமான ஆன்மாவோடு அறியப்படாத மகா மாயையையும், மாயா காரியமாகிய அந்தக் கரணங்களையும் தோன்றும் ஐம்பூதங்களையும் ஆகின்ற இந்திரியக் கூட்டங்களையும், அவற்றோடு பராசக்தி, ஆதிசக்தி, இச்சாசத்தி, ஞானாசத்தி, கிரியாசத்தி ஆகிய ஐந்து சத்திகளையும் பொருந்தியது இறைவனது திருவருட் செயலாம்.

1806. அருளே சகலமும் ஆய பவுதிகம்
அருளே சராசர மாய அமலமே
இருளே வெளியே யெனும்எங்கும் ஈசன்
அருளே சகளத்தன் அன்றிஇன் றாமே.

பொருள் : அனைத்திற்கும் தாங்கும் நிலைக்களமாய்த் திருவருள் நிற்றலின் பூத காரிய முதல் அனைத்தும் அருளேயாம். இயங்குதிணை நிலைத்திணை ஆகிய எல்லாவற்றின் வாழ்க்கைகளும் அருளாலேயே நிகழ்வனவாகும். இருளும் வெளியுமாகிய அறியாமையும் அறிவும் தொழிற்படத் துணை நிற்பதும் அருளே. அவ் அருளே சிவபெருமானுக்குத் துணைவியாய்த் திருமேனியுமாய் நிற்கும். அதனால் அருள் உருவானவன் சிவன். அருள் அன்றிச் சிவன் இல்லை. (பவுதிகம் பூதகாரியம். சகளத்தன் - மாயையாற் திருமேனி கொண்ட சிவபிரான்.)

1807. சிவமொடு சத்தி திகழ்நாதம் விந்து
தவமான ஐம்முகன் ஈசன் அரனும்
பவமுறும் மாலும் பதுமத்தோன் ஈறா
நவம்அவை யாகி நடிப்பவன் தானே.

பொருள் : சிவமாகிய அறிவும், சத்தியாகிய ஆற்றலும், ஒலியும், ஒளியும், அருளோனும், ஆண்டானும், அரன், அரி, அயன் என்னும் மூவரும் ஆகிய ஒன்பதின்மரும் உலகுயிர் நிகழ்ச்சியின்பொருட்டு வேண்டப்படுவர். அவ் ஒன்பது திருக்கோலங்களும் முழுமுதற்சிவன் ஒருவனே திருவருளாற் கொண்டு நடிப்பன்.

1808. அருட்கண்இ லாதார்க்கு அரும்பொருள் தோன்றா
அருட்கண்உ ளோர்க்குஎதிர் தோன்றும் அரனே
இருட்கண்ணி னோர்க்குஅங்கு இரவியும் தோன்றாத்
தெருட்கண்ணி னோர்க்குஎங்கும் சீரொளி யாமே.

பொருள் : திருவருட்கண் வாய்க்கப்பெறாதார்க்கு உண்மை அறிவு இன்ப உருவினனாகிய சிவபெருமான் தோன்றான். அரும்பொருள்-சிவன். அருட்கண் உள்ளோர்க்கு ரன் எதிர் தோன்றுவான். கண்குருடாகிய இருட்கண்ணினோர்க்கு யாவர்க்கும் வெளிச்சமாகிய ஞாயிறும் தோன்றாது அஞ்ஞாயிறு குருடு நீங்கித் தெளிந்த கண்ணுடையார்க்குச் செவ்வகையாகத் தோன்றும். அதுபோல் சிவனும் அருட்கண்ணினர்க்குத் தோன்றுவன்.

1809. தானே படைத்திடும் தானே அளித்திடும்
தானே துடைத்திடும் தானே மறைந்திடும்
தானே இவைசெய்து தான்முத்தி தந்திடும்
தானே வியாபித் தலைவனும் ஆமே.

பொருள் : சிவத்தின் சத்தியே தனுகரண புவன போகங்களைப் படைக்கும். சத்தியே படைத்தவற்றைக் காக்கும். அதுவே காத்தவற்றை அழிக்கும். அழித்தவற்றை ஓய்வு கொடுத்துக் கரந்திடும். அதுவே இவைகளுடன் முத்தியையும் அளிக்கும். அத்தகைய அருளோடு கூடினவனே வியாபகப் பொருளுக்கு எல்லாம் மேலான தலைவனாக உள்ளான். சத்தியோடு கூடிய சிவனே ஐந்தொழிலைச் செய்து தலைவனாக உள்ளான்.

1810. தலையான நான்கும் தனதுஅரு வாகும்
அலையா அருவுரு வாகும் சதாசிவம்
நிலையான கீழ்நான்கு நீடுரு வாகும்
துலையா இறைமுற்று மாய்அல்லது ஒன்றே.

பொருள் : மேன்மையான சிவம், சத்தி, நாதம், விந்து ஆகிய நான்கும் சிவத்துக்குரிய அருவ நிலையாகும். நீங்குதல் இல்லாத அருவுருவம் சதாசிவமாகும். நிலைபெறுவதற்கு உரியவான மகேசுவரம், அரன், அரி, பிரமன் ஆகிய நான்கும் நீடிய உருவ நிலைகளாம். அழியாத இவ் ஒன்பதுமாம் இவற்றைக் கடந்து நின்று இவற்றை இயக்குவதாயும் உள்ள பரசிவம் ஒன்றேயாம்.

1811. ஒன்றது வாலே உலப்பிலி தானாகி
நின்றது தான்போல் உயிர்க்குயி ராய்நிலை
துன்றி அவைஅல்ல வாகும் துணையென்ன
நின்றது தான்விலை யாட்டென்னுள் நேயமே.

பொருள் : ஒப்பற்ற தன்மையால் கேடில்லாத சிவம் தானேயாய் நின்றதுபோல, உயிர்க்கு உயிர்களோடு பொருந்தி அவற்றின் தன்மை யின்றாய் நிற்கும். ஆனால் என்னுள்ளத்தே நேயப் பொருளாய சிவம் துணையென்று கூறும் வண்ணம் உடன்நின்று செலுத்தியதுதான் விளையாட்டாகும்.

1812. நேயத்தே நின்றிடும் நின்மலன் சத்தியோடு
ஆயக் குடிலையுள் நாதம் அடைந்திட்டுப்
போயக் கலைபல வாகப் புணர்ந்திட்டு
வீயத் தகாவிந்து வாக விளையுமே.

பொருள் : அன்பினால் நிலைபெற்றுள்ள நின்மல சிவன் சித்தியோடு கூடி அதனைத் தொழிற்படுத்தவே சுத்தமாயையினின்றும் நாதம் தோன்றி, விரிந்து நிவிருத்தியாதி பஞ்சகலைகளாகக் கூடி அழிவில்லாத விந்துவாக விளையும்.

1813. விளையும் பரவிந்து தானே வியாபி
விளையும் தனிமாயை மிக்கமா மாயை
கிளையொன்று தேவர் கிளர்மனு வேதம்
அளவொன் றிலாஅண்ட கோடிக ளாமே.

பொருள் : அனைத்துமாய்ப் பரவிந்து வடிவில் நிலைத்திருக்கும் சத்தியே எல்லாத் தத்துவங்களிலும் நிறைந்துள்ளான். அவனிடமிருந்தே அசுத்த மாயையும் மேலான சுத்த மாயையும் விளையும் இவ்விரு வகையான மாயையில் தேவக்கூட்டமும், விதந்து சொல்லப்பட்ட பிரணவமும் அதன் பேதமான மந்திரங்களும் நான்கு வேதங்களும் அளவற்ற அண்ட கோடிகளும் தோன்றும். பரவிந்துவிலிருந்து சொற்பிரபஞ்சம் பொருட் பிரபஞ்சம் முதலியவை ஆகின்றன.

10. அருள் ஒளி

1814. அருளில் தலைநின்று அறிந்துஅழுந் தாதார்
அருளில் தலைநில்லார் ஐம்பாசம் நீங்கார்
அருளின் பெருமை அறியார் செறியார்
அருளில் பிறந்திட்டு அறிந்துஅறி வாரே.

பொருள் : திருவருளே துணையென்றும் உணர்ந்து அதன் வழிநின்று தன் செயல் அறாதவர் திருவருள் இயக்கத்தில் பொருந்த மாட்டார். அவர் ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரேதாயி ஆகிய ஐம்மலங்களையும் நீங்க மாட்டார். அருளின் பெருமையை அறியாதவர் அதனுள் அழுந்தமாட்டார். திருவருளால் தோன்றி அருளே கண்ணாக அறிபவரே அறிந்தவராவர்.

1815. வாரா வழிதந்த மாநந்தி பேர்நந்தி
ஆரா அமுதளித்து ஆனந்தி பேர்நந்தி
பேரா யிரமுடைப் பெம்மான்பேர் ஒன்றினில்
ஆரா அருட்கடல் ஆடுகென் றானே.

பொருள் : மீண்டும் பிறவிக்கு வாராத நெறியினை அருளிய குருநாதன் சிவனாவான். அந்நந்தியாகிய சிவபெருமான் இன்பம் தெவிட்டாத அமுதத்தை நல்கினான். ஆயிரம் திருநாமங்களையுடைய பெருமானது பெயர் ஒன்றாகிய சிவ என்பதால் இன்பம் தெவிட்டாத திருவருட்கடலில் தோய்ந்து ஆடுக என்றனன். (ஆராஅமுது - சிவானந்தம் பேரொன்று - சிவ என்பது.)

1816. ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்
தேடியும் கண்டேன் சிவன்பெரும் தன்மையைக்
கூடிய வாறே குறியாக் குறிதந்தென்
ஊடுநின் றான்அவன் தன்னருள் உற்றே.

பொருள் : ஆனந்தத்தினால் ஆடியும் பாடியும் கண்ணீர் மல்கியும் அலறியும், சிவனது பேரியல்பினைத் தேடிக் கண்டு கொண்டேன். கண்டு பொருந்திய போதே உருவமற்ற ஒளியை நல்கி அவன்தன் அருளால் என்னூடு மேல் கீழ் உள் என்ற பாகுபாடு அற்று விளங்கினான்.

1817. உற்ற பிறப்பும் உறுமலம் ஆனதும்
பற்றிய மாயாப் படலம் எனப்பண்ணி
அத்தனை நீயென்று அடிவைத்தான் பேர்நந்தி
கற்றன விட்டேன் கழல்பணிந் தேனே.

பொருள் : ஆணவ மலத்தால் உண்டான பிறப்பும், பிறப்பால் உற்ற மாயா காரியங்களும், இடையே வந்து பற்றிய பொய்க் கூட்டம் என்று உணர்த்தி, நீ இவற்றை நீங்கினாய் என்று திருவடி ஞானம் தந்தருளினான் குருநாதன். அதனால் இதுகாறும் கற்றவை விட்டேன். அவனருளால் கிட்டிய நாதத்தை நான் பணிந்து அதன் வழி நின்றேன். குருநாதன் அருளால் பாசஞானம் நீங்கிப் பதிஞானம் அமையும்.

1818. விளக்கினை யேற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குமடை யார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே.

பொருள் : ஞானவிளக்கை ஏற்றி, எல்லையில்லாப் பரம்பொருளை அறியுங்கள். பரம்பொருளின் திருமுன் மல மாயா கன்மங்களாலாகிய உடம்பின் துன்பம் நீங்கும். பேரொளியை வெளிப்படுத்தும் ஒளி உடையார்கள் சிவ ஒளியும் தன் ஒளியும் கலந்து விளங்குவார்கள்.

1819. ஒளியும் இருளும் ஒருகாலும் தீர
ஒளியு ளோர்க்குஅன்றோ ஒழியாது ஒளியும்
ஒளியிருள் கண்டகண் போலவே றாயுள
ஒளியிருள் நீங்கும் உயிர்சிவம் ஆமே.

பொருள் : ஒளியும் இருளும் எந்தக் காலத்திலும் கெடஒளியில் கலந்திருப்பவர்க்கு அல்லவா அருள் ஒளியும் நீங்காது ! புறக்கண் எதையும் இருளில் அறியாது ஒளியில் அறிவதுபோல, புறக்கண்ணுக்கு வேறான அகக்கண் விளங்கும் அண்டகோச அறிவில் இருள் அகன்று உயிர் ஒளி பெறில் சிவமாம்.

1820. புறமே திரிந்தேனைப் பொற்கழல் சூட்டி
நிறமே புகுந்தென்னை நின்மலன் ஆக்கி
அறமே புகுந்தெனக்கு ஆரமுது ஈந்த
திறம்ஏதென்று எண்ணித் திகைத்திருந் தேனே.

பொருள் : ஆணவத்தால் புறஉலகில் திரிந்து கொண்டிருந்த எனக்கு உன்னுடைய பொன் ஒளியில் விளங்கும் நாதத்தை அளித்து, எனது அண்டகோச ஒளியில் புகுந்து என்னை மலம் அற்றவனாகச் செய்து, என்னுடைய அறவாழ்வில் புகுந்து எனக்குக் கிட்டுதற்கு அரிய அமுதைக் கொடுத்த திறம் என்ன என்று எண்ணி மயங்கியிருந்தேன். (பொற்கழல் - புத்தி தத்துவத்தில் விளங்கும் நாதம்)

1821. அருளது என்ற அகலிடம் ஒன்றும்
பொருளது என்ற புகலிடம் ஒன்றும்
மருளது நீங்க மனம்புகுந் தானைத்
தெருளுறும் பின்னைச் சிவகதி தாமே.

பொருள் : அருள் என்ற பரவெளி ஒன்றும், மெய்ப்பொருள் என்ற புகுமிடம் ஒன்றும் வேறு என்ற மயக்கம் நீங்க, மனத்துள் புகுந்த பேரொளியைச் சிவமெனத் தெளியுங்கள். பின்னர்ச் சிவகதி உண்டாகும். சிவசத்தி உண்மை உணர்ந்தபோது சிவகதி உண்டாம்.

1822. கூறுமின் நீர்முன் பிறந்திங்கு இறந்தமை
வேறொரு தெய்வத்தின் மெய்ப்பொருள் நீக்கிடும்
பாறணி யும்உடல் வீழலிட்டு ஆருயிர்
தேறுஅணி வோம்இது செப்பவல் லீரே.

பொருள் : சிவம் இவ்வுலகில் பிறந்து இறந்த கதை இருந்தால் சொல்லுங்கள். செத்துப் பிறக்கின்ற பிற தெய்வங்களை மெய்ப்பொருள் என்று கருதுவதை விட்டுவிடுங்கள். பருந்து வட்டமிடும் உடலை வீழச்செய்து அருமையான உயிர் தெளிவடையச் செய்வோம். இவ்வுண்மையைப் பிறர்க்கு எடுத்துச் சொல்லுங்கள்.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் - Page 3 Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Tue Mar 27, 2012 1:30 pm

11. சிவபூசை

1823. உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே.

பொருள் : உள்ளமாகிய மனமண்டலம் சிவன் உறையும் கருவறையாகும். ஊனாலாகிய உடம்பு ஆன்மாவின் ஆற்றலைக் குறைத்து வைத்துள்ள இடமாகும். வள்ளலாகிய தலைவனைச் சென்று வழிபடுவதற்கு வாய் கோபுர வாசலாகும். நன்றாக அறிந்து தெளிவு பெற்றவர்க்குச் சீவனே சிவலிங்கம். இவ்வாறு அறிந்து வழிபடுவார்க்கு வஞ்சனையைச் செய்யும் ஞானேந்திரியங்கள் ஐந்தும் பெரிய ஒளிபொருந்திய விளக்காகும்.

1824. வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக்
காட்டவும் நாம்இலம் காலையும் மாலையும்
ஊட்டவி யாவன உள்ளம் குளிர்விக்கும்
பாட்டவி காட்டுதும் பால்அவி யாமே.

பொருள் : வேள்வியில் இடப்பட்ட நிவேதனத்தை ஏற்கின்ற விரிந்த கிரணத்தையுடைய சிவபெருமானுக்கு, நிவேதிக்கத் தக்க பொருள் நம்மிடம் இல்லை. காலையிலும் மாலையிலும் நிவேதிக்கும் பொருளாவன, மனத்தை மகிழச் செய்யும் பாடலாகிய உணவாம். அதனை நிவேதிப்போம். அதுவே அவர்க்குப் பால் நிவேதனமாம்.

1825. பான்மொழி பாகன் பராபரன் தானாகும்
ஆன சதாசிவன் தன்னைஆ வாகித்து
மேன்முகம் ஈசான மாகவே கைக்கொண்டு
சீன்முகம் செய்யச் சிவனவன் ஆகுமே.

பொருள் : பால்போன்ற இனிய மொழியையுடைய பராசத்தியின் பாகனாகிய பராபரனாகும் ஐம்முகமான சதாசிவ மூர்த்தியைச் சிரசில் நிலைபெறுத்தி, உச்சிமுகத்தை ஈசான முகமாகச் சுழுமுனையில் தியானித்து, சீலமான முகத்தைச் செய்ய சிவமாவர்.

1826. நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லால்
கனைகழல் ஈசனைக் காண அரிதாம்
கனைகழல் ஈசனைக் காண்குற வல்லார்
புனைமலர் நீர்கொண்டு போற்றவல் லாரே.

பொருள் : சிவத்தை நினைத்துக் கொண்டிருப்பதும் சிவத்தைப் பற்றிப் பிறர்க்கு எடுத்துரைப்பதுமாகிய இருவழிகள் அல்லாமல் நாத சொரூபமான சிவத்தைக் கண்டு களிக்க வல்லவர் நீரினை முகமாகவுடைய சுவாதிட்டானத்தில் விளங்கும் மூலவாயுவை எழுப்பிச் சிவத்தைப் பரிச யோகத்தால் அடையத் தக்கவராவர்.

1827. மஞ்சன மாலை நிலாவிய வானவர்
நெஞ்சினுள் ஈசன் நிலைபெறு காரணம்
அஞ்சமு தாம்உப சாரம்எட்டு எட்டொடும்
அஞ்சலி யோடும் கலந்துஅர்ச்சித் தார்களே.

பொருள் : அபிஷேகத்திலும் அலங்காரத்திலும் விளங்கிய தேவர்களது நெஞ்சத்தில் இறைவன் இடைவிடாது வீற்றிருப்பதற்குக் காரணம், பஞ்ச கவ்வியமும் சோடச உபசாரத்துடன் நமஸ்கார முத்திரையுடன் பக்தர்களோடு கலந்து வழிபட்டமையாலாம்.

1828. புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு
அண்ணல் அதுகண்டு அருள்புரி யாநிற்கும்
எண்ணிலி பாவிகள் எம்இறை ஈசனை
நண்ணறி யாமல் நழுவுகின் றாரே.

பொருள் : சிவபூசையாகிய புண்ணியம் செய்வார்க்குப் பொருந்தும் நீரும் பூவும் உண்டு. அண்ணலாகிய சிவம் அவ்வித பூசனை செய்வார்க்கு அருள் வழங்கி நிற்கும். கணக்கற்ற பாவிகள் எமது தலைவனாகிய சிவத்தைப் பொருந்த அறியாமல் வீணே கழிகின்றனர்.

1829. அத்தன் நவதீர்த்தம் ஆடும் பரிசுகேள்
ஒத்தமெய்ஞ் ஞானத்து உயர்ந்தார் பதத்தைச்
சுத்தம தாக விளக்கித் தெளிக்கவே
முத்தியாம் என்று நம்மூலன் மொழிந்ததே.

பொருள் : சிவனது ஒன்பது தீர்த்தத்திலும் ஆடித் திளைக்கும் பரிசினைக் கேட்பாயாக. அவ்வாறு பொருந்தி உண்மை ஞானம் பெற்று உயர்ந்தோர் திருவடியைத் தூய்மையாகக் கழுவித் தெளித்துக் கொள்ள வீடு பேறு கிட்டும் என்று நம் மூலன் மொழிந்ததாம்.

1830. மறப்புற்று இவ்வழி மன்னிநின் றாலும்
சிறப்பொடு பூநீர் திருந்தமுன் ஏந்தி
மறப்பின்றி யுன்னை வழிபடும் வண்ணம்
அறப்பெற வேண்டும் அமரர் பிரானே.

பொருள் : தேவர் பெருமானே ! அபுத்தி பூர்வமாக ஞானிகளின் உறவு கிட்டினாலும், சிறப்பான பூவையும் நீரையும் நான் திருந்தும்படி வெளிப்படுத்தி, மறவாமல் உன்னை வழிபடுகின்ற தன்மையை, மிகுதியாகப் பெறுவதற்கு அருள்புரிவாயாக, சிவனை மறவாது வழிபட வேண்டும்.

1831. ஆரா தனையும் அமரர் குழாங்களும்
தீராக் கடலும் நிலத்துஉம தாய்நிற்கும்
பேரா யிரமும் பிரான்திரு நாமமும்
ஆரா வழியெங்கள் ஆதிப் பிரானே.

பொருள் : ஆயிரம் திருநாமங்களையும் சிவனது சிறப்புத் திருநாமமாகிய சிவசிவ என்பவற்றையும் தியானிக்கும் வகையால் எம் ஆதிப்பிரான் விளங்குவான். அப்போது வழிபாடுகளும் தேவர் கூட்டமும், அலை ஓயாத கடலும் நீங்கள் வாழ்கின்ற நிலத்தில் உங்கள் ஏவல்வழி நிற்கும்.

1832. ஆன்ஐந்தும் ஆட்டி அமரர் கணம்தொழத்
தான்அந்த மில்லாத் தலைவன் அருளது
தேன்உந்து மாமலர் உள்ளே தெளிந்ததோர்
பார்ஐங் குணமும் படைத்துநின் றானே.

பொருள் : அமரர் கூட்டங்கள் பால், தயிர், வெண்ணெய், நெய்மோர் என வரும் ஆன் ஐந்தும் சிவபெருமான் திருமுடிக்கு ஆட்டித் தொழுவர். அங்ஙனம் ஆட்டுவதும் என்றும் அழிவில்லாது நின்று நிலவும் சிவபெருமான் திருவருளேயாம். தேன் ஒழுகும் மலரினுள் மணநிறைவு தெளிந்ததொரு பொருளாவதுபோல, சிவபெருமானும் ஐம்பூதப் பண்பாகவும் கலப்பால் விளங்குவன். பூதப்பண்புவருமாறு நாற்றம், சுவை, ஒளி, ஓசை என்பன. (தேநீர், கோமம் ஏற்புடையனவாகா.)

1833. உழைக்கொண்ட பூநீர் ஒருங்குடன் ஏந்தி
மழைக்கொண்ட மாமுகில் மேற்சென்று வானோர்
தழைக்கொண்ட பாசம் தயங்கிநின்று ஏத்தப்
பிழைப்பின்றி எம்பெரு மான்அரு ளாமே.

பொருள் : நன்னிலத்தில் காணப்படும் பூவும் புனலும் கைக் கொண்டு மழை மேகத்தின் மேற்கொண்டு பெருகிய அன்புடன் கைதொழுது வணங்க, தவறுதல் இன்றிச் சிவபெருமான் திருவருள் கைகூடும் என்க. (உழை - பூமி. தழைக்கொண்ட - சுற்றியுள்ள - பிழைப்பின்றி - தவறாமல்.)

1834. வெள்ளக் கடலுள் விரிசடை நந்திக்கு
உள்ளக் கடற்புக்கு வார்சுமை பூக்கொண்டு
கள்ளக் கடல்விட்டுக் கைதொழ மாட்டாதார்
அள்ளக் கடலுள் அழுந்துகின் றாரே.

பொருள் : திருச்சடையின்கண் கடல்போலும் வெள்ள நீரைத் தாங்கும் நந்தியாகிய சிவபெருமான் திருவடிக்கு நிறைந்த கடல்போலும் அன்புள்ள நெஞ்சத்துடன் பூ முதலியன சுமந்துகொண்டு வந்து கடல் போலும் கள்ளங் கவடுகளை அகற்றி வழிபடும் சிவப்புண்ணியப் பேறிலாதார் துன்பக் கடலுள் அழுந்துவர்.

1835. கழிப்படுந் தண்கடற் கௌவை யுடைத்து
வழிப்படு வார்மலர் மொட்டுஅறி யார்கள்
பழிப்படு வார்பல ரும்வழி வீழ
வெளிப்படு வோர்உச்சி மேவிநின் றானே.

பொருள் : உப்பங்கழியைச் சாரும் கடல் ஒலியினையும் அடக்கி மீதெழும் திருமுறைத் திருப்பாட்டு முழக்கங்களோடு மெய்யடியார்கள் மலர் கொண்டு வழிபடுவர். வழிபாட்டிற்குத் தகுதியில்லாத மொட்டனைய பொருள்களை விலக்கி விடுவர். அறியாமையினால் சிவனை மறந்து தீநெறிக்கண் செல்லும் தீராப்பழி தீரும் வண்ணம் நல்லார் இணக்கத்தால் வழிபடுவோரின் உச்சியின்மேல் பொருந்தி வெளிப்பட்டு அருள்புரிவன்.

1836. பயனறிவு ஒன்றுண்டு பன்மலர் தூவிப்
பயனறி வார்க்குஅரன் தானே பயிலும்
நயனங்கள் மூன்றுடை யான்அடி சேர
வயனங்க ளால்என்றும் வந்துநின் றானே.

பொருள் : பயன் தரக்கூடிய அறிவு ஒன்றும் உள்ளது. பயனை அறிந்தும் பலகாலும் மலரைத் தூவி வழிபட்டவர்க்கு, சிவன் தானே வரவினைச் சொல்லும். கண்கள் மூன்றுடைய சிவனது திருவடியைச் சார்தலும், அதுவே வழியாக எப்போதும் வெளிப்பட்டு நின்றான்.

1837. ஏத்துவர் மாமலர் தூவித் தொழுதுநின்று
ஆர்த்தெமது ஈசன் அருட்சே வடியென்றன்
மூர்த்தியை மூவா முதலுரு வாய்நின்ற
தீர்த்தனை யாரும் துதித்துஉண ராரே.

பொருள் : இறைவனாகிய சிவபெருமான் திருவடியைப் பன்மலர் தூவித் திருமுறை ஓதிப் பேரன்பின் பெரு முழக்குடன் வழிபடுவர். அத்தகைய இன்பத் திருவுருவினை, அழிதல் இல்லாத வினைமுதற்காரணனை, ஆருயிர்களின் மலப் பிணிப்பினின்று தீர்த்தருளி அவ்வுயிர்களை ஆட் கொள்ளும் தூயோனை நன்னெறிப் புகாதார் யாரும் வழி பட்டுனரார்.

1838. தேவர்க ளோடுஇசை வந்துமண் ணோடுறும்
பூவொடு நீர்சுமந்து ஏத்திப் புனிதனை
மூவரிற் பன்மை முதல்வனாய் நின்றருள்
நீர்மையை யாவர் நினைக்கவல் லாரே.

பொருள் : தேவர்களோடு கலந்து, பிருதிவி தத்துவத்தில் பொருந்திய சுவாதிட்டான மலரிலிருந்து ஆகாய கங்கையாக மேல் எழும் உணர்வில் வெளிப்படும் பரிசுத்த மூர்த்தியை பிரமன், விஷ்ணு, உருத்திரன் என்ற மூவரோடு கலந்தும் வேறாயும் விளங்கும் முதல்வனும் ஆகிய சிவன் அருளும் முறையினை யார் அறிந்து எண்ண வல்லவர்கள் ?

1839. உழைக்கவல் லோர்நடு நீர்மலர் ஏந்திப்
பிழைப்பின்றி ஈசன் பெருந்தவம் பேணி
இழைக்கொண்ட பாதத்து இனமலர் தூவி
மழைக்கொண்டல் போலவே மன்னிநில் லீரே.

பொருள் : முதல்வனø நினைக்க வல்லோர் சுவாதிட்டான மலரிலிருந்து சுழுமுனை வழியாக மேல்நோக்கிப் பாயும் உணர்வாகிய நீரை ஏந்தி, தவறின்றி இறைவனது பெரிய தவத்தை விரும்பி, இரு கண் மலர்களைச் சேர்த்தலால் தோன்றும் திருவடியைப்பற்றி மழையைப் பொழியும் மேகம் போன்ற ஒளியில் பொருந்தி நில்லுங்கள்.

1840. வென்று விரைந்து விரைப்பணி என்றனர்
நின்று பொருந்த இறைபணி நேர்படத்
துன்று சலமலர் தூவித் தொழுதிடில்
கொண்டிடும் நித்தலும் கூறிய அன்றே.

பொருள் : ஐம்புலன்களையும் வென்று, நறும்புகையும் நெய்யொளியும் காட்டும் சிவப்பணியினைச் செய்யும் தொண்டர்கள் நேர் நின்று அன்பார் மனம் பொருந்த இறைபணி கைகூட நிறைந்த பூவும் புனலும் தூவித் திருமுறை வழிப்போற்றித் தொடர் புகன்று தொடுமின். இவ்வாறே நாள்தோறும் வழிபாடு செய்வீராக.

1841. சாத்தியும் வைத்தும் சயம்புஎன்று ஏத்தியும்
ஏத்தியும் நாளும் இறையை அறிகிலார்
ஆத்தி மலக்கிட்டு அகத்துஇழுக்கு அற்றகால்
மாத்திக்கே செல்லும் வழியது வாமே.

பொருள் : ஆடை, அணிகலன், வெண்ணீறு, சாந்து, பூ, முதலியன சாத்தியும் திருவுறு முதலியன அமைத்து நிலை நாட்டியும், இயற்கைத் தனிப் பெருங்கடவுள் என்று ஏத்தியும், அங்ஙனமே நாளும் தொடர்ந்து தொழுதும் சிவனை அவனருளால் உணர்கிலார் பலர். ஆத்தியாகிய ஆசைகளை ஒழித்து அதன்வழியாக மல அழுக்கு அற்ற இடத்துப் பெரிய வீடுபேற்றிற்குச் செல்லும் வழியுண்டாகும். அதுவே சிவ வழிபாட்டுப் புண்ணியப் பேறென்க. (மாதிக்கு - பெரிய விடுபேறு. ஆத்தி - ஆர்த்தி என்பதன் திரிபு).

1842. ஆவிக் கமலத்தில் அப்புறத்து இன்புற
மேவித் திரியும் விரிசடை நந்தியைக்
கூவிக் கருதிக் கொடுபோய்ச் சிவத்திடைத்
தாவிக்கு மந்திரம் தாமறி யாரே.

பொருள் : ஆன்மாவின் கமலமாகிய சகஸ்ர தளத்தின் மேலாக இன்பம் உண்டாகுமாறு பொருந்திய, எங்கும் விளங்கும் விரிந்த ஒளிக்கிரணத்தையுடைய நந்தியை மந்திர சாதனை செய்து கொண்டு சிவம் விளங்கும் நாதாந்தத்தில் பொருந்தும் மந்திரம் உலகினர் அறியார்.

1843. காண்ஆகத் துள்ளே அழுந்திய மாணிக்கம்
காணும் அளவும் கருத்தறி வாரில்லை
பேணிப் பெருக்கிப் பெருக்கி நினைவோர்க்கு
மாணிக்க மாலை மனம்புகுந் தானே.

பொருள் : சாண் அளவு உடம்பினுள்ளே மறைந்து கிடந்த மாணிக்கத்தைக் காணும் அளவு அதன் உண்மை யியல்பை அறிவார் இல்லை. அதனைப் போற்றி வளர்த்து நினைய வல்லார்க்கு மாணிக்கச் சோதியாக மனத்தே புகுந்து விளங்குவான். எண்சாண் அளவு உடம்பு என்க.

1844. பெருந்தன்மை நந்தி பிணங்கிருள் நேமி
இருந்தன்மை யாலும் என் நெஞ்சுஇடங் கொள்ள
வருந்தன்மை யாளனை வானவர் தேவர்
தருந்தன்மை யாளனைத் தாங்கிநின் றாரே.

பொருள் : பெருந்தன்மை யுடைய நந்தியும் மாறுபாட்டைச் செய்யும் இருளைப் போக்கும் சக்கரப் படையை உடையவனும் பேரருளால் என் மனத்தை இடமாகக் கொண்டு எழுந்த தருளியவனும் வேண்டுவார்க்கு வேண்டியதை அருளும் தன்மை உடையவனும் ஆகிய சிவனை, ஆகாய மண்டல வாசிகளாகிய தேவர்கள் தாங்கி நின்றார்கள்.

1845. சமைய மலசுத்தி தன்செயல் அற்றிடும்
அமையும் விசேடமும் ஆனமந் திரசுத்தி
சமையநிர் வாணம் கலாசுத்தி யாகும்
அமைமன்று ஞானம் ஆனார்க்கு அபிடேகமே.

பொருள் : சமைய தீட்சையால் மாயா மலத்தானாகிய சரீரசுத்தி எய்தத் தன் செயல் அற்றிடும். விசேஷ தீட்சையால் மந்திர சுத்தி உண்டாகும். சமையத்தில் சிறந்த நிர்வாண தீட்சையால் கலா சுத்தியாகும். அமைதி பொருந்திய சிவஞானம் உடையார்க்குச் செய்வது ஆச்சர்ய ஆபிஷேகமாம்.

1846. ஊழிதோ றூழி உணர்ந்தவர்க்கு அல்லது
ஊழில் உயிரை உணரவும் தான்ஒட்டா
ஆழி அமரும் அரிஅயன் என்றுளோர்
ஊழி கடந்தும் ஓர்உச்சியு ளானே.

பொருள் : ஊழிதோ றூழி பலவரினும் என்றும் ஒருபடித்தாய் நின்று நிலவும் முழுமுதற் சிவனை, அவன் அருட்கண்ணால் உணர்ந்தவர்க்கு அல்லாமல் பல ஊழி கண்டாலும் தம் அறிவால் அச் சிவனைக் காண முடியாது. சக்கரப் படையைத் தாங்கும் அரியும் அயனும் பல ஊழி முயன்றும் காண ஒண்ணாது நீங்கி மறைந்து நின்றனன். (ஒருவி - நீங்கி)

12. குரு பூசை

(குரு மண்டல பூசை குரு பூசை எனக் கூறப்பட்டது. சதாசிவ லிங்க வழிபாட்டில் சதாசிவரை லிங்க வடிவில் கிரியை வழி பூசையை விளக்கினார். சிவ பூசை தலைப்பில் சதாசிவரை அருவமாக ஈசான முகத்தில் வழிபடுவதை விளக்கினார். இத்தலைப்பு ஒளி வடிவில் எங்கும் உள்ள சிவத்தை வழிபடும் முறை கூறுகின்றது. ஒன்பதாம் தந்திரம் அற்புதக் கூத்து இதன் தொடர்பாகும்.)

1847. ஆகின்ற நந்தி அடித்தா மரைப்பற்றிப்
போகின் றுபதேசம் பூசிக்கும் பூசையும்
ஆகின்ற ஆதாரம் ஆறாறு அதனின்மேல்
போகின்ற பொற்பையும் போற்றுவன் யானே.

பொருள் : கலப்பால் எல்லாமாய் நிற்கும் திருவாணை நந்தியின் திருவடிக் தாமரையினைப் பற்றுக் கோடாகக் கொண்டு, ஆருயிர் திருவடிப் பேற்றினை எய்துதற்கு உரிய அருமறையாகிய உபதேசம் திருஐந்து எழுத்தாகும். அதனை அருளால் அருளிச் செய்பவன் சிவகுரு ஆவான். அவனைப் பூசிக்கும் பூசை குரு பூசையாகும். அப்பூசையினையும் அகத்தே ஆறுநிலைக் களங்களில் செய்யும் வழிபாட்டினையும் அருஞ்சைவர் மெய்யாகப் பெறப்படும் முப்பத்தாறு தத்துவங்களுக்குமேல் செல்லுகின்ற மாறா அழகினையுடைய விழுமிய முழுமுதற் சிவனையும் இடையறாது அடியேன் வழிபடுவேன்.

1848. கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானுற மாமலர் இட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உணர்பவர்க்கு அல்லது
தேனமர் பூங்கழல் சேரஒண் ணாதே.

பொருள் : மண்ணும் விண்ணும் ஆகிய எங்கணும் நறுமணம் கமழும் சந்தனமும், அத்தகைய சிறந்த மணம் கமழும் நறுமலரும் கைக்கொண்டு நாளும் வழிபட்டாலும், தம்மை அடிமை என்று கொண்டு கொல்லாமலும் கொன்றதைத் தின்னாமலும் இருப்பதாகிய செந்நெறி யொழுகிச் சிவனை நினைப்பதாகிய சத்திநிபாதம் கிட்டாது. சத்தி - திருவருள்; நிபாதம் - நன்றாய்ப் பதிதல்; வீழ்ச்சி.

1849. மேவிய ஞானத்தின் மிக்கிடின் மெய்ப்பரன்
ஆவயின் ஞான நெறிநிற்றல் அர்ச்சனை
ஓவற உட்பூ சனைசெய்யில் உத்தமம்
சேவடி சேரல் செயலறல் தானே.

பொருள் : பொருந்திய ஞானத்தில் சிறந்திருந்தால் மெய்ப்பொருள் காட்சியாம். அவ்வழி ஞானத்தில் பொருந்தி நிற்றலே அர்ச்சனை. இடையறாது அகத்தே வழிபாடு செய்யின் அதுவே சிறந்த வழிபாடு ஆகும். அவ்வாறு திருவடி அடைதலே தன் செயலற்று இருத்தலாகும்.

1850. உச்சியும் காலையும் மாலையும் ஈசனை
நச்சுமின் நச்சி நமவென்று நாமத்தை
விச்சிமின் விச்சு விரிசுடர் மூன்றினும்
நச்சுமின் பேர்நந்தி நாயகன் ஆகுமே.

பொருள் : காலை, நண்பகல், மாலையாகிய மூன்று வேளைகளிலும் இறைவனை விரும்புங்கள். விரும்பி நமசிவாய என்ற அவனது திரு நாமமாகிய விதையினைத் தெளியுங்கள். அந்த விதை அக்கினி, சூரியன், சந்திரன் ஆகிய மும்மண்டலத்திலும் விளைந்து பயிராவதை விரும்பி நில்லுங்கள். இவ்வாறு வளர்ந்ததே நந்தி என்ற பெயரையுடைய தலைவனாகும்.

1851. புண்ணிய மண்டலம் பூசைநா றாகுமாம்
பண்ணிய மேனியும் பத்துநூ றாகுமாம்
எண்ணிலிக்கு ஐயம் இடில்கோடி யாகுமால்
பண்ணிடில் ஞானிஊண் பார்க்கில் விசேடமே.

பொருள் : சிவத்தலங்களில் சிவபூசை செய்தல் நூறு மடங்கு உயர்ந்த தாகும். தவம் பண்ணுவார் சந்நிதியில் சிவபூசை செய்தல் ஆயிர மடங்கு உயர்ந்ததாம். இனி எவற்றிலும் எண்ணமில்லாத சிவயோகிக்குப் பிச்சையிடில் கோடி மடங்கு உயர்ந்ததாகும். ஆனால் சிவஞானிக்கு உணவளித்து உண்ணுவதைப் பார்த்தால் அது மிகவும் விசேடமாகும்.

1852. இந்துவும் பானுவும் இலங்கும் தலத்திடை
வந்தித்த தெல்லாம் அசுரர்க்கு வாரியாம்
இந்துவும் பானுவும் இலங்காத் தலத்திடை
வந்தித்தல் நந்திக்கு மாபூசை யாமே.

பொருள் : இடமூக்கு வலமூக்குகளில் உயிர்ப்பு நடக்குங்கால் சிவவழிபாடு செய்யின் அதன் பயன் அசுரர்க்கு வாரியமாகிய பயனாகும். இவை இரண்டின் வழியின்றி நடுநாடிக்கண் உயிர்ப்பு அடங்கியுள்ள ஒருமையுடன் சிவ வழிபாடு செய்யின், அதன் பெரும் பயன் பூசை செய்யும் சிவபுண்ணியர்க்கேயாம். இப்பூசையே செப்பரும் பூசையாகும். (இந்து - இடகலை. பானு - பிங்கலை.)

1853. இந்துவும் பானுவும் என்றெழு கின்றதோர்
விந்துவும் நாதமும் ஆகிமீ தானத்தே
சிந்தனை சாக்கிரா தீதத்தே சென்றிட்டு
நந்தியைப் பூசிக்க நற்பூசை யாமே.

பொருள் : திங்களும் ஞாயிறும் அதன்வழித்தாம் விந்துவும் நாதமும் திகழ்கின்ற ஆறு நிலைக் களங்களுக்கும் அப்பாற்பட்ட மேலிடத்தே நாட்டத்தினை நிறுத்தி, நனவில் உயிர்ப்பு அடங்கினார் ஒத்து சிவனிறைவில் ஒடுங்கிச் சிவபெருமானை வழிபடும் சிவபூசையே திருவடி சேர்க்கும் நற்பூசையாகும். (சாக்கிராதீபம் - அறிதுயில். சாக்கிரமும் சொப்பனமும் அல்லாத நடுநிலைமை.)

1854. மனபவ னங்களை மூலத்தான் மாற்றி
அனித உடல்பூத மாக்கி அகற்றிப்
புனிதன் அருள்தனில் புக்கிருந்து இன்பத்
தனியுறு பூசை சதாசிவற்கு ஆமே.

பொருள் : மனம் பிராணன் ஆகியவற்றை மூலவாயு மேல் செல்வதால் மாற்றி, அநித்தியமான உடலை அவற்றின் காரணமான பூதங்களிலும், பூதங்களை அவற்றின் காரணமான தன் மாத்திரையிலும் ஒடுக்கி, சிவனருளில் தோய்ந்திருந்து, இன்ப நுகர்ச்சியோடு செய்யப் பெறும் தனிப்பூசையே சதாசிவமூர்த்திக்கு உரியதாம்.

1855. பகலும் இரவும் பயில்கின்ற பூசை
இயல்புடை ஈசர்க்கு இணைமல ராகப்
பகலும் இரவும் பயிலாத பூசை
சகலமும் தான்கொள்வன் தாழ்சடை யோனே.

பொருள் : சூரியகலை சந்திரகலை இயங்கும்போது செய்கின்ற பூசையானது, இயல்பாகவுள்ள ஈசனுக்கு இணைந்த மலராக மட்டும் அமைய, சூரிய சந்திர கலைகள் இயங்காமல் அக்கினிகலையில் (சுழுமுனையில்) இயங்கும்போது செய்யும் பூசையைத் தாழ்ந்த ஒளிக் கிரணங்களையுடைய ஈசன் முழுவதும் விரும்பி ஏற்றுக் கொள்வான்.

1856. இராப்பகல் அற்ற இடத்தே இருந்து
பராக்குஅற ஆனந்தத் தேறல் பருகி
இராப்பகல் அற்ற இறையடி இன்பத்து
இராப்பகல் மாயை இரண்டுஇடத் தேனே.

பொருள் : முன்னே கூறியவாறு இரவுபகல் என்ற பேதமற்று சாக்கிராதீத்தே நின்று, வேறு எண்ணமற்றுச் சிவானந்தத் தேனைப் பருகி, இரவும் பகலும் இல்லாத திருவடியின்பத்தில் திளைத்து இரவும் பகலும் உள்ள அசுத்த மாயை சுத்தமாயை இரண்டையும் அகற்றி நின்றேன்.

13. மகேசுவர பூசை

1857. படமாடக் கோயில் பகவற்குஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்குஅங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்குஅது ஆமே.

பொருள் : சித்திரம் போன்று அமைந்த மாடங்களையுடைய கோயிலில் உள்ள இறைவனுக்கு ஏதேனும் நைவேத்தியம் செய்தால் நடக்கின்ற மாடக்கோயிலாக விளங்கும் சிவனடியார்க்கு வந்து அமையா. ஆனால் நடமாடும் கோயிலாகவுள்ள சிவனடியார்க்கு ஏதேனும் கொடுத்தால் அது மாடக் கோயிலில் உள்ள இறைவனுக்குத் திருப்தி அளிப்பதாகும். அதாவது அடியார்க்குச் செய்யும் பூசை இறைவனுக்குச் செய்யும் பூசையாகும்.

1858. தண்டுஅறு சிந்தை தபோதனர் தாம்மகிழ்ந்து
உண்டது மூன்று புவனமும் உண்டது
கொண்டது மூன்று புவனமும் கொண்டதுஎன்று
எண்திசை நந்தி எடுத்துரைத் தானே.

பொருள் : தீமையில்லாத சிந்தையுடைய தவத்தினையுடைய செல்வர்கள் தாம் மகிழ்ச்சியோடு உண்டது மூன்று புவனங்களும் முழுமையும் உண்டதாகும். அவர்கள் ஏற்றுக் கொண்டது மூன்று புவனங்களும் ஏற்றுக் கொண்டதாம் என்று எட்டுத் திசைகளுக்கும் தலைவனாகிய நந்தி எடுத்துக் கூறினான். உண்டது உணவு, கொண்டது ஆடை என்றுள்ள வேறுபாட்டை அறிக.

1859. மாத்திரை ஒன்றினில் மன்னி அமர்ந்துறை
ஆத்தனுக்கு ஈந்த அரும்பொரு ளானது
மூர்த்திகள் மூவர்க்கும் மூவேழ் குரவர்க்கும்
தீர்த்தம தாம்அது தேர்ந்துகொள் வீரே.

பொருள் : ஒரு மாத்திரையாகிய அகரத்தில் பொருந்தி உறைகின்ற யோகிக்குக் கொடுத்த அருமையான பொருள் மும்மூர்த்திகளுக்கும் மூவேழு தலைமுறையினர்க்கும் அர்ப்பணித்ததாகும். அதனைத் தெளிந்து கொள்வீராக.

1860. அகரம் ஆயிரம் அந்தணர்க்கு ஈயில்தன்
சிகரம் ஆயிரம் செய்து முடிக்கில்என்
பகரு ஞானி பகல்ஊண் பலத்துக்கு
நிகரிலை என்பது நிச்சயம் தானே.

பொருள் : ஆயிரம் நகரம் அந்தணர்க்கு அளித்தால் ஆகும் பயன் என்ன ? ஆயிரம் கோயில்கள் கட்டி முடித்தலால் என்ன பயன் ? சொல்லப் பெறுகின்ற ஞானி ஒரு பகல் உண்ணும் உணவால் விளையும் பயனுக்கு ஒப்பாகாது என்பது உண்மை. (அகரம்-ஊர்; பார்ப்பனச் சேரி.)

1861. ஆறிடும் வேள்வி அருமறை நூலவர்
கூறிடும் அந்தணர் கோடிபேர் உண்பதில்
நீறிடும் தொண்டர் நினைவின் பயனிலை
பேறெனில் ஓர்பிடி பேறது வாகுமே.

பொருள் : ஆற்றுப் படுத்தும் வேள்வியினைச் செய்யும் அருமறை நூல்வல்லார் என்று கூறப்பெறும் அந்தணர் கோடிபேர் உண்பதில் திருநீற்றினை நிறையப் பூசும் தொண்டர் ஒருவருக்கு உணவு அளிக்க வேண்டும் என்று நினைவதில் உள்ள பயன் இல்லை. அவ்வாறு அந்தணர்க்கு அளிப்பது பேறு என்றால் அது ஒரு சிறு அளவு பேறாகும். வேள்வியினைப் புரியும் அந்தணர்க்கு அளிப்பதைவிட நீற்றினைப் பூசும் தொண்டர்க்கு அளிப்பது மேலானது.

1862. ஏறுடை யாய்இறை வாஎம்பி ரான்என்று
நீறிடு வார்அடி யார்நிகழ் தேவர்கள்
ஆறணி செஞ்சடை அண்ணல் இவர்என்று
வேறுஅணி வார்க்கு வினையில்லை தானே.

பொருள் : திருஐந்தெழுத்து ஓதித் திருநீறு அணியுங்கள் ஏறுடையாய் எனவும், இறைவா எனவும், எம்பிரான் எனவும் உள்ளன்பால் ஓதுவர். அவ்வாறு ஓதித் திருவெண்ணீறு அணியும் மெய்யடியார்கள் இயங்கும் தேவர்கள் ஆவர். அம்மெய்யடியார்களை ஒருவர் ஆறணி செஞ்சடை அண்ணலாகிய சிவபெருமான் இவர்களே என்று நினைதல் வேண்டும். அங்ஙனம் நினைந்து அம் மெய்யடியார்களைச் சிறப்பாக வழிபடுபவர்கட்கு முத்திற வினைகளும் மூளா என்க. முத்திரை வினைகளாவன: சஞ்சிதம், பிராரத்தம், ஆகாமியம் என்பனவாம்.

1863. சீர்நந்தி கொண்டு திருமுக மாய்விட்ட
பேர்நந்தி என்னும் பிறங்கு சடையனை
நான்நொந்து நொந்து வருமளவுஞ் சொல்லப்
பேர்நந்தி என்னும் பிதற்குஒழி யேனே.

பொருள் : சிறந்த ஒளிமண்டல நினைவைக் கொண்டு தன் சந்நிதியில் இட்டுச் சென்ற பெரிய நந்தி என்று பேசப் பெயறும் ஒளிக்கிரணங்கள் விளங்கும் சடாதாரியை நான் மிகவும் நைந்துருகித் தோன்றும் அளவு கூறுவதற்காக நந்தியாகிய சிவனது நாமத்தைத் திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டிருப்பேன்.

1864. அழிகதவு இல்லா அரன்அடி யாரைத்
தொழுகை ஞாலத்துத் தாங்கிருள் நீங்கும்
பழுது படாவண்ணம் பண்பனை நாடித்
தொழுதெழு வையகத்து ஓர்இன்பம் ஆமே.

பொருள் : அழியும் தன்மையில்லாத அருட்பண்புகளை மேற்கொண்டொழுகும் சிவனடியாரை இவ்வையத்துள்ள மெய்யடியார் கண்ணிற் காணும் சிவன் எனக் காதலால் தொழுவர். அதனால் அவர்கள்பால் பண்டே புல்லிய மலஇருள் நீங்கும். தொழாத நாள் இல்லையென்று சொல்லும்படி அம்மெய்யடியார்களைச் சிவன் எனவே நாடித் தொழுது எழ ஒப்பில்லாத சிவப் பேரின்பம் பின்னை என்னாமல் அப்பொழுதே உண்டாம்.

1865. பகவற்குஏ தாகிலும் பண்பில ராகிப்
புகுமத்த ராய்நின்று பூசனை செய்யும்
முகமத்தோடு ஒத்துநின்று ஊழிதோ றூழி
அகமத்த ராகிநின்று ஆய்ந்தொழிந் தாரே.

பொருள் : அம்மைக்கு ஒரு கூறு பகுத்து அளித்ததனால் அப்பனாகிய சிவபெருமான் பகவன் என்று அழைக்கப்பட்டான். அவனை உணர்தற்கு வேண்டும் உலகியல் பண்புகள் ஏதும் இலராகிலும் மெய்யடியார்கள் மாட்டுப் பூண்டுள்ள அளவிறந்த அன்பாகிய மத்தராய் நின்று பூசனைக்கு வேண்டிய முகமனாகிய சிறப்புடன் வழிபாடு செய்வர். அவ்வழிபாட்டின் பயனாய் ஊழி ஊழியாக நின்று உள்ளத்தை அதற்கே ஈந்தவராய் வேறு ஆராய்வு எதுவுமின்றி அடங்கி நிற்பர்.

1866. வித்தக மாகிய வேடத்தர் உண்டஊன்
அத்தன் அயன்மால் அருந்திய வண்ணமாம்
சித்தம் தெளிந்தவர் சேடம் பருகிடில்
முத்தியாம் என்றுநம் மூலன் மொழிந்ததே.

பொருள் : திருத்தமாகிய வேடத்தையுடைய மகேசுவரர் அருந்திய உணவு, உருத்திரன் பிரமன் திருமால் ஆகிய மூவரும் அருந்திய பெருமையுடையதாம். சித்தம் தெளிந்தவர் மிச்சத்தை உண்டால் முத்தி உண்டாகும் என்று நம்மூலன் மொழிந்த உண்மையாகும். இது திருமூலர் ஆணை மொழியாகும்.

1867. தாழ்விலர் பின்னும் முயல்வர் அருந்தவம்
ஆழ்வினை ஆழ அவர்க்கே அறஞ்செய்யும்
ஆழ்வினை நீக்கி அருவினை தன்னொடும்
போழ்வினை தீர்க்கும்அப் பொன்னுலகு ஆமே.

பொருள் : சிவனடியார் வழிபாட்டின் அன்பில் ஒருசிறிதும் குறைபாடு இலராய், மேலும் மேலும் சிவத்தைப் பேணும் இறப்பில் தவத்தால் ஆழச்செய்யும் ஏறுவினை அகன்று ஒழிய மெய்யடியார் திருவடியினை வழிபட்டு மண்ணில் பிறந்தார் எய்த வேண்டிய பெரும்பயனை எய்துவர். மேலும் அந்த ஏறுவினை நீங்கினமை போன்று அருவினையாகிய எஞ்சுவினையுடன் போழ்வினையாகிய ஏன்றவினையும் அருளால் தாக்காது நீக்குவர். அவர்கள் வாழும் இடமே சிவவுலகு ஆகும். (ஆழ்வினை - ஆகாமியம்; அருவினை சஞ்சிதம்; போழ்வினை - பிராப்தம்)
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் - Page 3 Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Tue Mar 27, 2012 1:30 pm

14. அடியார் பெருமை

1868. திகைக்குரி யானொரு தேவனை நாடும்
வகைக்குரி யானொரு வாது இருக்கில்
பகைக்குரி யாரில்லைப் பார்மழை பெய்யும்
அகக்குறை கேடில்லை அவ்வுல குக்கே.

பொருள் : திசைகளை உரிமையாகக் கொண்ட ஒரு பரம்பொருளை நாடுகின்ற தன்மையுடைய அடியார் நீங்காது இருப்பின் அந் நாட்டில் பகை செய்வதற்கு ஒருவரும் இல்லையாகும். அந் நாட்டில் பருவ மழை முøறாகப் பெய்யும். அந்நாட்டில் விளையும் பொருளின் விலை தரமாய் இருக்குமாம். அடியார் வாழும் நாடு வளமாக இருக்கும்.

1869. அவ்வுல கத்தே பிறந்துஅவ் உடலோடும்
அவ்வுல கத்தே அருந்தவம் நாடுவர்
அவ்வுலக கத்தே அரனடி கூடுவர்
அவ்வுலக கத்தே அருள்பெறு வாரே.

பொருள் : மெய்யடியார்கள் சிவவுலகத்தே தோன்றுவர். அச்சிவ உலகத்துக்குரிய தூயவுடலுடன் இருப்பர். அவ்வுலகத் தின்கண் சிவனை வழிபடும் அருந்தவம் ஆற்றுவர். அச்சிவவுலகத்தே நின்று இறையருள் நேர்படின் சிவன்திருவடியைக் கூடுவர். அச் சிவவுலகத்திலேயே திருவருள் இன்பத்தினை எய்துவர். (அவ்வுலகம் - சிவவுலகம்)

1870. கொண்ட குறியும் குலவரை உச்சியும்
அண்டரும் அண்டத்து அமரரும் ஆதியும்
எண்டிசை யோரும்வந்து என்கைத் தலத்தினுள்
உண்டெனில் நாம்இனி உய்ந்தொழிந் தோமே.

பொருள் : நாம் மேற்கொண்ட ஒளிமண்டலத்தில் எட்டுக் குலமலைகளின் உச்சியும், கீழ் உலகிலுள்ள நாகர்களும் அண்டங்களில் வாழும் தேவர்களும் ஆதிப்பரம் பொருளும் எட்டுத் திசைகளிலுள்ள அனைவரும் வந்து என் கையகத்தில் உள்ளார்கள் என்றால் நாம் இனி உய்தி பெற்றோம்.

1871. அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியும்
கொண்ட சராசரமும் முற்றும் குணங்களும்
பண்டை மறையும் படைப்பளிப்பு ஆதியும்
கண்டசிவனும்என் கண்ணன்றி இல்லையே.

பொருள் : ஏழு உலகங்களும் எல்லையற்ற ஆகாயமும் உயிர்களும் உலகிலுள்ள நிற்பன அசைவனாகிய யாவும் அவற்றின் குண விசேடங்களும் பழமையான வேதங்களும், படைத்தல், காத்தல் முதலான தொழில்களும் அவை முறையாக நடக்கும்படி காணுகின்ற சிவனும் என்னிடம் அன்றி இல்லையாம்.

1872. பெண்ணல்ல ஆணல்ல பேடல்ல மூடத்துள்
உள்நின்ற சோதி ஒருவர்க்கு அறியொணாக்
கண்ணின்றிக் காணும் செவியின்றிக் கேட்டிரும்
அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே.

பொருள் : பெண், ஆண், பேடு என்ற பாகுபாடு உடையது அல்ல. அண்ட கோசத்தால் மூடியிருக்கும்போது உள்நின்ற சோதியை ஒருவராலும் அறிய இயலாது. அது கண் ஆகிய கருவியின்றிப் பார்க்கும். காதாகிய கருவியின்றிக் கேட்கும். சோதிக்குள் சோதியாய் விளங்கும் இறைவன் பெருமையை ஆராய்ந்து அறிந்ததே மூத்த ஞானமாம். (அன்பர்கள் - அகண்ட அறிவுடையவர்.)

1873. இயங்கும் உலகினில் ஈசன் அடியார்
மயங்கா வழிசெல்வர் வானுலகு ஆள்வர்
புயங்களும் எண்டிசை போதுபா தாள
மயங்காப் பகிரண்ட மாமுடி தானே.

பொருள் : ஓவாது சுழலும் இவ்வுலகினில் சிவபெருமானின் திருவடியுணர்வு கைவரப் பெற்ற சிவனடியார்கள் செந்நெறியிற் செல்வர்; சிவ உலகை ஆள்வர். அச் சிவபெருமான் திருத்தோள்கள் புலம் எட்டிலும் நலம்புரிய எட்டாயின. போதாகிய அவன் திருவடித் தாமரை பாதாளம் ஏழினுக்கும் அப்பால் - திருமுடிவெளியில் நிகழும் புற அண்டங்களுக்கும் அப்பாலாம்.

1874. அகம்படி கின்றநம் ஐயனை ஓரும்
அகம்படி கண்டவர் அல்லலில் சேரார்
அகம்படி உட்புக்கு அறிகின்ற நெஞ்சம்
அகம்படி கண்டுஆம் அழிக்கலும் எட்டே

பொருள் : உள்ளத்தில் விளங்கும் சிவனை எண்ணி மனம் அடங்கப் பெற்றவர் துன்பத்தில் தோயார். ஆதலின் அகங்காரம் அடங்கப் பெற்று உள்புகுந்து இறைவனை அறிகின்ற உள்ளம், தன் முனைப்பு அடங்கப் பெற்று புரி அடக்கமாகிய சூக்கும உடலை அழித்தலும் கூடும்.

1875. கழிவும் முதலும் காதல் துணையும்
அழிவும தாய்நின்ற ஆதிப் பிரானைப்
பழியும் புகழும் படுபொருள் முற்றும்
ஒழியும்என் ஆவி உழவுகொண் டானே.

பொருள் : சொல்லுக்கு அடங்காத பெருமையும் எல்லையில்லாத முதன்மையும், தன்னின் நீங்காத திருவருள் அம்மையாம் காதல் துணையும் பேரொடுக்கப் பெருமானுமாய் நின்ற காரணக் கடவுளை வழிபடுதலும் பெருள்சேர் புகழ் கூறுதலும் அவன் அருள் தொழில் ஐந்தின் பொருண்மை மொழிதலும் பணியாகக் கொண்ட அடியேன் உயிரை உழவு நிலமாகக் கொண்டு ஆண்டவன் இயக்குகின்றனன்.

1876. என்தாயோடு என்அப்பன் ஏழ்ஏழ் பிறவியும்
அன்றே சிவனுக்கு எழுதிய ஆவணம்
ஒன்றாய் உலகம் படைத்தான் எழுதினான்
நின்றான் முகில்வண்ணன் நேர்எழுத் தாமே.

பொருள் : என் தாயோடு என் அப்பன் ஏழேழ் பிறப்பும் அநாதியே சிவனுக்கு அடிமை என்று எழுதிக் கொடுத்த அடிமை ஓலையை ஒன்றாக நின்று உலகம் அனைத்தையும் படைத்த முதல்வன் எழுதினான். மேகவண்ணனாகிய திருமால் சாட்சிக் கையெழுத்திட்டான். (நேரெழுத்து - சான்றெழுத்து. சுந்தரர் வரலாற்றை ஒப்பிட்டுக்கொள்க.)

1877. துணிந்தார் அகம்படி துன்னி உறையும்
பணிந்தார் அகம்படி பால்பட்ட ஒழுகும்
அணிந்தார் அகம்படி ஆதிப் பிரானைக்
கணிந்தார் ஒருவர்க்கு கைவிடலாமே.

பொருள் : இறைவன் ஐயமின்றித் தன்னையே நம்முதல் என்று துணிந்து வழிபட்டவர் நெஞ்சில் பொருந்தி உறைவன். தன்னை வணங்குவோர் உள்ளத்தில் பொருந்திய விருப்பத்தை நிறைவேற்றி வைப்பான். தன்னையே அணியாகக் கொண்டவர் உள்ளத்தில் உறையும் அம் முதல்வனை எண்ணிக் கொண்டே இருப்பவர் இடையில் கைவிட முடியுமோ ? முடியாது. (கணித்தல் - எண்ணுதல்)

1878. தலைமிசை வானவர் தாழ்சடை நந்தி
மிலைமிசை வைத்தனன் மெய்ப்பணி செய்யப்
புலைமிசை நீங்கிய பொன்னுலகு ஆளும்
பலமிசை செய்யும் படர்சடை யோனே.

பொருள் : தாழ்ந்த திருச்சடையை யுடைய நந்திஎம் பெருமான் தலையால் வணங்கும் சிவவுலகத்தினர்க்குத் தன் திருவடியை அவர்தம் முடிமேல் சூட்டியருளினன். திருவடி யொன்றே அகந்தழுவி மெய்ப்பணி செய்வார்க்கு மல கன்மம் நீங்கிய தூமாயை உலகத்தும் இன்பப் பயன் அருள்வன். அவனே படர்சடைச் சிவபெருமான் ஆவன். (மிலைமிசை மிசை மிலை - தலையில் அணியும்படி.)

1879. அறியாப் பருவத்து அரன்அடி யாரைக்
குறியால் அறிந்தின்பம் கொண்டது அடிமை
குறியார் சடைமுடி கட்டி நடப்பார்
மறியார் புனல்மூழ்க மாதவம் ஆமே.

பொருள் : அறியாத காலத்தில் சிவனடியாரை வேடத்தால் அறிந்து, தொண்டு செய்து இன்பத்தைப் பெற்றது அடிமையின் தன்மையாம். வேடத்தையுடைய அடியார் ஒளிக்கிரணங்களையுடைய சடை ஒளி நீங்காவண்ணம் கட்டிக் கொண்டிருப்பர். அவ்வாறு தடுத்துக் கொண்டுள்ள அடியார் திருவடி உணர்வில் பொருந்துவது பெரிய தவமாகும்.

1880. அவன்பால் அணுகியே அன்புசெய் வார்கள்
சிவன்பால் அணுகுதல் செய்யவும் வல்லன்
அவன்பால் அணுகியே நாடும் அடியார்
இவன்பால் பெருமை இலயமது ஆமே.

பொருள் : மேல் ஓதிய சிவனடியாரை அடைந்து அவர்க்கு அன்பும் பணியும் இன்புறச் செய்வார் சிவபெருமான் திருவடியை நெருங்கவும் வல்லராவர். மேலும் அம் மெய்யடியாரைத் தொடர்ந்து நாடுபவர் சிறந்தோராவர். அவர்பால் முழுப் பெருமையும் தங்கும் சிவனடியார் வாயிலாகவே தாயிலாச் சிவனை எய்தலாம். (அவன் - சிவனடியார். இலயதாமே - அடங்குமே.)

1881. முன்னிருந் தார்முழுது எண்கணத் தேவர்கள்
எண்ணிறந்து அன்பால் வருவர் இருநிலத்து
எண்இரு நாலு திசைஅந் தரம்ஒக்கப்
பன்னிரு காதம் பதஞ்செய்யும் பாரே.

பொருள் : முன்னேயுள்ள பதினெண்கணத் தேவர்கள் முற்றும் எல்லையற்ற அன்பினால் இப்பெரிய பூமிக்கண் வருவார்கள். அவரது வரவால் பூமியினது எட்டுத்திசையும் ஆகாயம் போன்று மிளிர, பன்னிரண்டு காத எல்லை வரை உள்ளவர்க்கு நன்மை உண்டாகும்.

1882. சிவயோகி ஞானி செறிந்தஅத் தேசம்
அவயோகம் இன்றி அறிவோர்உண் டாகும்
நவயோகம் கைகூடும் நல்லியல் காணும்
பவ யோகம் இன்றிப் பரலோகம் ஆமே.

பொருள் : சிவன் திருவடியை மறவா நினைவுடையோன் சிவயோகியாவன். சிவன் நிறைவில் அழுந்தித் தற்செயல் அற்றுச் செய்வனவெல்லாம் சிவன் செயலாய்ப் புரிபவன் சிவஞானி யாவான். அத்தகையோர் வாழும் நாடு சிவநாடு ஆகும். அந் நாட்டில் மெய்யுணர்வு உடையோர் வாழ்வர். அங்குக் கேட்டைத் தரும் தீவினைகள் ஏதும் நிகழா. ஆண்டு அருளால் எய்தும் புதுமை உண்டாகும். மேலும் எவ்வகையான நன்மையும் பெருகும். ஆண்டு வாழ்வோர் மீண்டும் பிறவார். சிவவுலகம் உறுவர்.

1883. மேலுணர் வான்மிகு ஞாலம் படைத்தவன்
மேலுணர் வான்மிகு ஞாலம் கடந்தவன்
மேலுணர் வார்மிகு ஞாலத்து அமரர்கள்
மேலுணர் வார்சிவன் மெய்யடி யார்களே.

பொருள் : சிவபெருமான் திருவாணையால் உயிர்கட்கு உலகு உடல்களைப் படைத்துக் கொடுத்தனன் அயன். அதுபோல் காத்தனன் அரியும். எனினும் அவர்கள் உணர்வெல்லாம் படைத்தல் காத்தலாகிய தொழில் மேல் என்று உணர்ந்து உவகையுற்று நிற்கும். அதனால் சிவனை உணரார். இந்நிலவுலகத்து வாழும் மெய்யடியார் விரும்பியுணர்வது சிவனையே. அதனால் அவர்கள் சிவனடியார்கள் என்று எவராலும் என்றும் வழுத்தப் பெறுவர்.

15. போசன விதி (ஊண் முறை)

1884. எட்டுத் திசையும் இறைவன் அடியவர்க்கு
கட்ட அடிசில் அமுதென்று எதிர்கொள்வர்
ஒட்டி ஒருநிலம் ஆள்பவர் அந்நிலம்
விட்டுக் கிடக்கில் விருப்பறி யாரே.

பொருள் : உலகில் எட்டுத் திசையிலும் இறைவன் அடியார்க்கு அளித்த உணவை அவர்கள் அமுதம் என்று விரும்பி ஏற்றுக் கொள்வர். ஏனெனில், உடம்பாகிய ஒரு நிலத்தைப் பொருந்தி அதனைப் போற்றுபவர். அவ்வாறு அதனைப் போற்றாமல் பாழாய்க் கிடக்க விரும்ப மாட்டார். (விட்டுக் கிடக்கில் - நீங்கி இருந்தால்)

1885. அச்சிவன் உள்நின்ற அருளை அறிந்தவர்
உச்சியம் போதாக உள்ளமர் கோவிற்குப்
பிச்சை பிடித்துண்டு பேதம் அறநினைந்து
இச்சைவிட்டு ஏகாந்தத்து ஏறி இருப்பரே.

பொருள் : அச்சிவன் உடம்பினுள் உயிர்க்கு உயிராக விளங்கும் அருளை உணர்ந்தவர் உச்சிப்போதில் உள்ளத்தில் அமர்ந்திருக்கும் தலைவனுக்கு, பிச்சை ஏற்று உண்டு பேதமில்லா ஞானம் வரப்பெற்று, ஆசையை விட்டு, தனிமையாகச் சகஸ்ரதளத்தில் பொருந்தி இருப்பர். அடியார் ஒருபோது பிச்சை ஏற்று உண்டு ஏகாந்தத்து இருப்பர்.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் - Page 3 Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Tue Mar 27, 2012 1:31 pm

16. பிட்சா விதி

1886. விச்சுக் கலம்உண்டு வேலிச்செய் ஒன்றுண்டு
உச்சிக்கு முன்னே உழவு சமைந்தது
அச்சம்கெட்டு அச்செயல் அறுத்துண்ண மாட்டாதார்
இச்சைக்குப் பிச்சை இரக்கின்ற வாறே.

பொருள் : விந்துவாகிய விதையைச் சேமிக்க உடம்பாகிய பாத்திரம் உண்டு. விதையினை விதைப்பதற்குரிய பாதுகாவலான சகஸ்ரதளமாகிய நிலம் ஒன்று உள்ளது. ஆஞ்ஞைச் சக்கரமாகிய உச்சிக்கு முன்பு தியானமாகிய உழவு அமைந்தது. அச்சமின்றி ஊர்த்துவ சகஸ்ரதளமாகிய அந்நிலத்தில் பொருந்தி சமாதியாகிய பயனைப் பெற மாட்டாதார் விருப்பத்துக்காக வெளியே சென்று பிச்சை யேற்றுத் திரிகிறார்களே, என்ன பாவம் !

1887. பிச்சையது ஏற்றான் பிரமன் தலைதன்னில்
பிச்சையது ஏற்றான் பிரியா அறஞ்செய்யப்
பிச்சையது ஏற்றான் பிரமன் சிரங்காட்டிப்
பிச்சையது ஏற்றான் பிரமன் பரமாகவே.

பொருள் : சிவபெருமான் படைப்போனாகிய அயன் மண்டையோட்டை ஆருயிர்கட்குக் காட்டிப் பிச்சை ஏற்பான் ஆயினான். சிவன் தன்னைவிட்டு நீங்காச் சிவையின் வழி முப்பத்திரண்டு அறமும் இடைவிடாது செய்வித்துக் கொண்டிருக்கின்றான். அங்ஙனம் இருப்பவும் இரப்பதற்குக் காரணம் ஈவோரெல்லாம் அருளாளர் நிலையாகவும் இரப்போரெல்லாம் ஆண்டான் நிலையாகவும் கருதுதல் வேண்டும் என்னும் குறிப்பு. பிரமன் சிரங்காட்டி இரப்பது பிரமனிலும் தான் உயர்ந்தோன் எனவும் உலப்பிலோன் எனவும் உலகத்துக்கு உணர்த்த என்க.

1888. பரந்துலகு ஏழும் படைத்த பிரானை
இரந்துணி என்பர்கள் எற்றக்கு இரக்கும்
நிரந்தர மாக நினையும் அடியார்
இரந்துண்டு தன்கழல் எட்டச்செய் தானே.

பொருள் : நீக்கமற நிறைந்து உலகு ஏழையும் படைத்த இறைவனை உலகவர் இரந்து உண்பவன் என்று எள்ளி நகையாடுவர். அவன் எதற்காக இரக்கின்றான் ? இடைவிடாது தன்னையே நினைத்துக் கொண்டிருக்கும் அடியார்கள், அவர்கள் உண்ணும் ஊண் தன் திருவருளால் வழங்கப்படுவதென்னும் மெய்மை உணர்த்த உணர்கின்றனர்.

1889. வரஇருந் தான்வழி நின்றிடும் ஈசன்
தரஇருந் தான்தன்னை நல்லவர்க்கு இன்பம்
பொரஇருந் தான்புக லேபுக லாக
வரஇருந் தால்அறி யான்என்ப தாமே.

பொருள் : இறைவன் தன்னை வந்து அடைவார் செய்யும் முயற்சியில் உடன்நின்று உதவுவான். நல்ல மெய்யடியார்க்குத் தன்னை இன்பவடிவில் தர இருந்தான். அடியார்களுக்கு அடைக்கலமாகப் பொருந்த இருந்தான். இவ்வாறெல்லாம் வரவை எதிர்நோக்கியிருந்தால் அறியாதவன் என்று கூறலாமோ ?

1890. அங்கார் பசியும் அவாவும் வெகுளியும்
தங்கார் சிவனடி யார்சரீ ரத்திடைப்
பொங்கார் புவனத்தும் புண்ணிய லோகத்தும்
தங்கார் சிவனைத் தலைப்படு வாரே.

பொருள் : சிறு தீயினை யொத்த பசி, அவா, வெகுளி முதலான குற்றப் பாடுகளில் சிவனடியார்கள் ஒரு சிறிதும் மனம் பொருந்தார். உடம்பு உடைமை முதலியவற்றில் பற்றுக் கொண்டு அவற்றை இறைவன் உடைமையெனவும் தமக்கு அவனால் கொடுக்கப் பெற்ற இரவல் எனவும் கொள்ளவேண்டிய உண்மையை மறந்து தம்மை மதித்து மனம் பொங்கிச் செருக்குறார். துறக்க உலகம் சிவவுலகம் முதலிய எவ்வுலகத்தும் உள்ள நிலையிலா இன்பத்தையும் கொள்ளார்; உள்ளார்; சிவன் திருத்தாளே தலைப்படுவர்.

1891. மெய்யக ஞானம் மிகத்தெளிந் தார்களும்
கையதும் நீண்டார் கண்டத்தலைக் கேசெல்வர்
ஐயம் புகாமல் இருந்த தவசியார்
வையகம் எல்லாம் வரஇருந் தாரே.

பொருள் : உள்ளுணர்வாய் உண்மையாய்த் திகழும் திருவடியுணர்வு கைவரப் பெற்ற தெளிவுடையார்கள் சிவஞானி எனப்படுவர். அவர்கள் திருவடி இயக்கத்தால் மனையறம் புரியும் மாண்புசேர் நல்லார் வாழ் மனைத்தலைச் சேர்வர். அங்ஙனம் சேர்தல் அவர் நல்வழியான் ஈட்டிய பொருளை நல் உளத்தோடு நல்லுரை நவின்று நன்றாற்றி நல்கும் தானத்தைப் பெற்றுப் பயனீதற் பொருட்டு ஆகும். இதுவே அவர் மனைத்தலை சென்று பிச்சை உண்பதாம். வேறுசில சிவஞானிகள் தாம் தங்குமிடத்தே தங்கியிருப்பர். முன் தங்குமிடத்தே கொண்டுவந்து பணிந்து படைப்பர். அதனையும் ஏற்று அருள்புரிவர்.

17. முத்திரை பேதம்

(முத்திரை - கருவி கரண அறிவை மாற்றி முதல் நிலைக்குச் செல்வதற்குரிய உபாயம். பேதம் - வகை, சாம்பவி, கேசரி என்பன முத்திரை பேதமாம்.)

1892. நாலேழு மாறவே நண்ணிய முத்திரை
பாலான மோன மொழியில் பதிவித்து
மேலான நந்தி திருவடி மீதுய்யக்
கோலா கலங்கெட்டுக் கூடுநன் முத்தியே.

பொருள் : பதினொரு கருவிகளும் சீவபோத வழியினின்று சிவபோத வழியில் மாறவே வந்த முத்திரை அமுதூறும் பிரணவத்தில் அழுந்துவித்து எல்லாவற்றிற்கும் மேலான சிவனது திருவடியை அடைவிக்க ஆரவாரம் அடங்கி மேலான முத்திப்பேறு உண்டாகும்.

(நாலேழு - உம்மைத் தொகை பதினொன்று: ஞானேந்திரியம் 5, கன்மேந்திரியம் 5, மனம் 1, ஆகப்பதினொன்று)

1893. துரியங்கள் மூன்று சொருகுஇட னாகி
அரிய உரைத்தாரம் அங்கே அடக்கி
மருவிய சாம்பவி கேசரி உண்மை
பெருகிய ஞானம் பிறழ்முத் திரையே.

பொருள் : மூன்று வகையான துரியங்களும் அடங்கும் இடமாகி, அருமையாகப் பேசுகின்ற நாவின் செயலை அடக்கி, பொருந்திய சாம்பவியும் கேசரியும், உண்மையைப் பெருக்கி ஞானம் விளங்கும் முத்திரைகளாம். (துரியம் - உறக்கநிலை.)

சாம்பவியாவது, கண்பார்வையை நாசித் துவாரங்களின் பக்கமாய் மார்பகம் வரை பார்த்துப் பழகுதல். கேசரியாவது, புருவ மத்தியில் தொடங்கி அகநோக்கில் சிரசின் உச்சியை நோக்கிப் போதல்.

1894. சாம்பவி நந்தி தன்னருள் பார்வையாம்
ஆம்பவம் இல்லா அருட்பாணி முத்திரை
ஓம்பயில் ஓங்கிய உண்மைய கேசரி
நாம்பயில் நாதன்மெய்ஞ் ஞானமுத் திரையே.

பொருள் : சாம்பவி யாவது குருநாதனது அருட்பார்வையை விளைவிப்பதாம். அது தொடர்ந்து வருகின்ற பிறப்பினை நீக்கி அருளமுதம் வழங்கும் முத்திரையாகும். பிரணவத் தியானத்தோடு பொருந்தியிருக்கின்ற கேசரியாவது சிவயோகியாகிய நாம் பயிலக் கூடிய உண்மையான ஞான முத்திரையாகும். சாம்பவி, அருளை அளிப்பது, கேசரி, ஞானத்தை நல்குவது, அருள் பெற்ற பின் ஞானம் உண்டாகும்.

1895. தானத்தின் உள்ளே சதாசிவன் ஆயிடும்
ஞானத்தின் உள்ளே நற்சிவம் ஆதலால்
ஏனைச் சிவமாம் சொரூபம் மறைத்திட்ட
மோனத்து முத்திரை முத்தாந்த முத்தியே.

பொருள் : கண்டத்திடத்து அருளோனாகிய சதாசிவன் வீற்றிருந்தருள்வன். திருவடியுணர்வாகிய சிவஞானத்தினால் அகத்தினுள் உணர்வுக்கு உணர்வாய் நற்சிவன் தோன்றுவான். வாய்வாளாமையாகிய மோனத்தினுள் சிவமாம் உருவம் மறைந்திடும். இதுவே மோன முத்திரை. முடிந்த முடிபாகிய வீடுபேறும் இதுவே. (மோனத்து முத்திரை மவுனம்.)

1896. வாக்கு மனமும் இரண்டும் மவுனமாம்
வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கையாம்
வாக்கு மனமும் மவுனமாம் சுத்தரே
ஆக்கும்அச் சுத்தத்தை யார்அறி வார்களே.

பொருள் : செயலும் தன்மையாகிய மௌனம் இருவகைப்படும். ஒன்று வாய், மற்றொன்று மனம். இவ்விரண்டும் ஒருங்கு செயலாற்றினால் பயன் உண்டு. வாய்மட்டும் பேசாதிருந்தால் ஊமையே. இரண்டும் ஒன்றுபட்டால் அருளில் அழுந்திய தூய உயிராகும். திருவருள் உடன் நின்று ஆக்கும் அத்தூய்மையின் உண்மையினை அறிவார் யார் ? ஒருவரும் இவர் என்பதாம்.

1897. யோகத்தின் முத்திரை ஓர்அட்ட சித்தியாம்
ஏகத்த ஞானத்து முத்திரை எண்ணுங்கால்
ஆகத் தகும்வேத கேசரி சாம்பவி
யோகத்துக் கேசரி யோகமுத் திரையே.

பொருள் : எண்பெரும் இருத்திகளாகிய சித்திகள் யோக முத்திரை என்ப. ஒப்பில்லாத உண்மை உணர்வு அடையாளத்தை ஆராயுமிடத்துத் திருநான் மறையின்கண் வகுக்கப் பெற்ற முறையான் ஒழுகிக் கடவுளருளால் கைவரும் கேசரி, சாம்பவி யோகத்துக் கேசரி முதலிய முத்திரைகள் அடங்கிய யோக முத்திரையாகும்.

(இருத்தி - சித்தி. ஏகத்த - ஒப்பற்ற.)

1898. யோகிஎண் சித்தி அருளொலி வாதனை
போகி தன் புத்தி புருடார்த்த நன்னெறி
ஆகும்நன் சத்தியும் ஆதார சோதனை
ஏகமும் கண்டொன்றில் எய்திநின் றானே.

பொருள் : அகத்தவமாகிய யோகத்தால் பெறும் எண்சித்தியுள்ளவன் திருவருள் உயிர்ப்பாகிய அருள் மூச்சுடைய வாதனாவன். யோக நிலையிலுள்ளார் புத்திக்குமேல் உணரும் நன்னெறியின்கண் உளராகுவர். இவையே உண்மையாகும். இதுவே மூலமுதல் ஆறுநிலைக் களங்களிலும் நின்றருள்பவன் சிவன் என்று துணியும் செம்மை கண்டு உடனாகக் கூடி எதிர்நிற்கும் பண்பாகும். எதிர் நிற்றல் ஏற்றுக்கொள்ளுதல். (வாதனை - செம்பைப் பொன்னாக்கும் செய்கை.)

1899. துவாதச மார்க்கமென் சோடச மார்க்கமாம்
அவாஅறும் ஈர்ஐ வகைஅங்கம் ஆறும்
தவாஅறு வேதாந்த சித்தாந்தத் தன்மை
நவாஅக மோடுஉன்னல் நற்சுத்த சைவமே.

பொருள் : யோகநெறியில் கூறப்பெறும் பன்னிரு கலைப்பிராசாத நெறியே பதினாறு கலைப் பிராசாத நெறியாகும். இதனால் ஞானேந்திரியங்கள் கன்மேந்திரியங்கள் ஆகியவை காமாதி அறுபகை வழிச் செல்லாமல் அவற்றின் விருப்பத்தைவிட்டு நிற்கும். இதுவே கேடற்ற வேதாந்த சித்தாந்தத் தன்மையாம். இறைவனைத் துணையாக மனத்துடன் சிந்தித்தல் நல்ல சுத்த சைவமாகும்.

1900. மோனத்து முத்திரை முத்தர்க்கு முத்திரை
ஞானத்து முத்திரை நாதர்க்கு முத்திரை
தேனிக்கும் முத்திரை சித்தாந்த முத்திரை
கானிக்கும் முத்திரை கண்ட சமயமே.

பொருள் : மேல் ஓதிய மோனமுத்திரை நல்லுயிராகிய முத்தர்க்கு உரியது. நாதராகிய சிவ குருவினர்க்கு உரியது ஞான முத்திரை. செம்பொருள் துணிவாம் சித்தாந்தச் செந்நெறியாளர் முத்திரை ஆன்சுரை முத்திரையாகும். (ஆன் சுரை முத்திரை - தேனுமுத்திரை பசுமமுத்திரை.)

1901. தூநெறி கண்ட சுவடு நடுஎழும்
பூநெறி கண்டுஅது பொன்னக மாய்நிற்கும்
மேல்நெறி கண்டது வெண்மதி மேதினி
நீல்நெறி கண்டுள நின்மலன் ஆமே.

பொருள் : தூய நெறியாகக் காணப்பெறும் உச்சித் துளைவழி மேல் திகழும் ஆயிரம் இதழ்த் தாமரை அருள் வழியாகும். அருளால் அந்நெறி அழுந்திக் காண்பவரின் உள்ளமும் உடலும் பொன் வண்ணமாய்த் திகழும். மேல் நெறியாகக் காணப்படுவது திங்கள் மண்டிலமாகும். மேற்செல்லும் உயிர்ப்பு வழி கண்டவர் உள்ளம் மலர் அகன்று நலம் உற்று நிலைநின்ற தூய்மையாகும். (சுவடு பிரமரந்திரம். பூநெறி - உச்சித் தாமரை. நீநெறி. பிராணவாயு மேற்செல்லும் நெறி.)
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் - Page 3 Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Tue Mar 27, 2012 1:32 pm

18. பூரணக் குகை நெறிச் சமாதி.

(பூரணம் - முடிவு - குகை - இடம். முடிவின் பின் எய்தும் பயன்.)

1902. வளர்பிறை யில்தேவர் தம்பாலின் முன்னி
உளரொளி பானுவின் உள்ளே ஒடுங்கித்
தளர்வில் பிதிர்பதம் தங்கிச் சசியுள்
உளதுறும் யோகிய உடல்விட்டால் தானே.

பொருள் : யோகி வளர்பிறையில் உடலை விட்டு நீங்கினால் திங்கள் மண்டிலத்தே சென்று தங்குவன். செல்லும் வழியில் துறக்க உலகத்தும் ஞாயிற்று உலகத்தும் பதிர் உலகத்தும் தங்கித் தங்கிச் செல்லன். (பிதிர்பதம் - உடலை விட்டு உயிர் பதிர்ந்து நிற்கும் பதம்.)

1903. தான்இவை ஒக்கும் சமாதிகை கூடாது
போன வியோகி புகலிடம் போந்துபின்
ஆனவை தீர நிரந்தர மாயோகம்
ஆனவை சேர்வார் அருளின் சார் வாகியே.

பொருள் : மேல் ஓதியவாறு சமாதி கை கூடாமல் உடலை விட்டுப்போன யோகி நிலையான சிவனடிப் புகலிடம் புகாமல் மீண்டும் பிறக்க நேரின் நற்சார்பில் வந்து பிறந்து வினை நீங்கி, அருளின் சார்வாகி நிலையான புகலிடம் புகும் மாயோகி ஆவன். (புகலிடம் போந்து கன்மத்துக்கு ஈடாகப் பதவி யடைந்து.)

1904. தான்இவ் வகையே புவியோர் நெறிதங்கி
ஆன சிவயோகத்து ஆமாறுஆம் அவ்விந்து
தானதில் அந்தச் சிவயோகி ஆகுமுன்
ஊனத்தோர் சித்திவந்து ஓர்காயம் ஆகுமே.

பொருள் : அங்ஙனம் புவியில் பிறந்த யோகி ஏனை உலகோர் போன்று உண்டு உடுத்து உழைத்து சிவயோகி செல்லும் தூமாயையின்கண் முன்போல் சிவயோகி ஆவதன்முன் இவ்வுடலின்கண் சித்தி கைவரப் பெற்றுத் திகழ்வன். அதற்கு நிலைக் களமாகிய இவ்வுடலே தாய் உடலாகும். புவியோர் நெறி - கன்ம மார்க்கம்.

1905. சிவயோகி ஞானி சிதைந்துடல் விட்டால்
தவலோகம் சேர்ந்துபின் தான்வந்து கூடிச்
சிவயோக ஞானத்தால் சேர்ந்தவர் நிற்பர்
புவலோகம் போற்றும்நற் புண்ணியத்தோரே.

பொருள் : சிவயோகியாகிய ஞானியர் உடல் சிதைந்து நீங்கினால் சிவவுலகம் சென்று பின் நிலவுலகம் வந்து, பிறந்து நிறைந்த சிவயோக ஞானத்தால் திருவடி சேர்ந்து நிலை யின்பம் பெற்று நீடுவாழ்வர். புவ உலகம் முதலிய அனைத்துலகும் சிவயோக ஞானியரைப் போற்றும். அதனால் போற்றுநர்க்குப் புண்ணியப் பேறும் உண்டாகும். (புவலோகம் - ஒளிமண்டலம். சொர்க்கத்திற்கும் பூமிக்கும் இடைப்பட்ட உலகம்.)

1906. ஊனமில் ஞானிநல் யோகி உடல்விட்டால்
தானற மோனச் சமாதியுள் தங்கியே
தானவன் ஆகும் பரகாயம் சாராதே
ஊனமில் முத்தராய் மீளார் உணர்வுற்றே.

பொருள் : குற்றமற்ற திருவடி உணர்வ பெற்ற ஞானியாதற் பொருட்டுச் சிவயோகியராகிச் செறிவுநெறி நின்றவர் உடல் விட்டால் தான்என்னும் உயிர்த்தன்மை நீங்க உரையற்ற, உலக உணர்வு அற்ற உணர்த்தும் உணர்வுடன் நிறைவுற்ற (மோன சமாதி) அருளில் தங்கித் தானவன் ஆகுவர்; வேறோர் உடற்கண் புகுதார்; பழுதற்ற நல்லு யிராவர். இயற்கையும் முற்றுமாம் இன்ப உணர்வு எய்தி என்றும் மீளாது இன்புறுவர். (முத்தர் - நல்லுயிர்; ஞானியர்)

1907. செத்தார் பெறும் பயன் ஆவது ஏதெனில்
செத்துநீர் சேர்வது சித்தினைக்கூடிடில்
செத்தார் இருந்தார் செகத்தில் திரிமலம்
செத்தார் சிவமாகி யேசித்தர் தாமே.

பொருள் : உலகியலை மறந்தவர் செத்தார் எனப்படுவர். அவர்பெறும் பயன் யாதென்று கேட்டால் ஆணவமலம் கெட்டுப் பேணுபணி தொட்டு அருள் தன்மை வாய்ந்து சிவனடியைச் சேர்வது. அச்சிவனடி கூடிய பின்னும் அன்னார் நிலவுலகத்தில் இருத்தலும் கூடும். அங்ஙனம் இருந்தார் மும்மலமற்ற செம்மலாயிருப்பர். அவர்கள் செம்பொருளாகிய சிவமாகவே விளங்குவர். அவர்களே சித்தர் என்று அழைக்கப்படுவோர் ஆவர்.

1908. உன்னக் கருவிட்டு உரவோன் அரன்அருள்
பன்னப் பரமே அருட்குலம் பாலிப்பன்
என்னப் புதல்வர்க்கும் வேண்டி யிடுஞானி
தன்இச்சைக்கு ஈசன் உருச்செய்யும் தானே.

பொருள் : பிரணவ யோகத்திலிருந்து பிரணவத்துக்குரிய சர்வ வல்லமையுள்ள சித்தின் அருளைப் பலகாலும் சிந்திக்க. பரசிவமே அச்சிவ ஞானிக்குச் சத்தியின் கூட்டத்தை அருளுவான். அங்ஙனம் பெற்ற அருளை எத்தகைய பக்குவமுள்ள சீடர்க்கும் வேண்டி அளிக்கும் ஞானி, தன் விருப்பத்துக்கு ஏற்பச் சீடனை ஈசன் உருவாக அமைத்தருளுவான்.

1909. எங்கும் சிவமாய் அருளாம் இதயத்துத்
தங்கும் சிவஞானிக்கு எங்குமாம் தற்பரம்
அங்காங்கு எனநின்று சகமுண்ட வான்தோய்தல்
இங்கே இறந்துஎங்கு மாய்நிற்கும் ஈசனே.

பொருள் : நீக்கமற நிறைந்து எங்குமாய் விளங்கும் சிவத்தின் அருள் நடுவுள் பொருந்தியிருக்கும் சிவஞானிக்கு எங்கும் சிவம் தோன்றும். அங்கு அங்கேயுள்ள நிலம் முதலிய பூதங்களை விழுங்கி அவற்றுள் கலந்திருக்கும் ஆகாயம் போல ஈசன் உருப்பெற்ற ஞானி உடல் பிரக்ஞைவிட்டு எல்லாவற்றிலும் கலந்திருப்பார். ஈசன் உருப்பெற்ற ஞானி எங்குமாய் எல்லாவற்றையும் அறிவார்.

19. சமாதிக் கிரியை.

(சமாதிக்கிரியை - ஞானி உடலை விட்டபின் செய்ய வேண்டிய சடங்கு.)

1910. அந்தமில் ஞானிதன் ஆகம் தீயினில்
வெந்திடின் நாடெலாம் வெப்புத் தீயினில்
நொந்து நாய்நரி நுகரின் நுண்செரு
வந்துநாய் நரிக்குஉண வாகும் வையகமே.

பொருள் : அழிவில்லாத சிவஞானியின் உடல் தீயில் வெந்து கெடுமானால் நாட்டு மக்கள் எல்லாம் சுர நோயினால் பீடிக்கப் பட்டு வருந்துவர். கவனிப்பாரின்றி அழுகி நாய் நரி உண்ணுமாயின் நுட்பமான உட்பகை மூண்டு நாட்டு மக்கள் அழிந்து நாய் நரிக்கு உணவு ஆவர். (ஞானியின் உடல் சமாதி செய்யப்பட வேண்டும் என்பதாம்.)

1911. எண்ணிலா ஞானி உடல்எரி தாவிடில்
அண்ணல்தம் கோயில் அழல்இட்டது ஆங்கு ஒக்கும்
மண்ணில் மழைவிழா வையகம் பஞ்சமாம்
எண்ணரு மன்னர் இழப்பார் அரசே.

பொருள் : அளவிடுதற்கரிய திருவடியுணர்வு கைவரப்பெற்ற சிவஞானியரின் திருவுடல் எரியில் இடப்படின் அது சிவபெருமான் திருக்கோயிலின் கண் தீயிட்டதை ஒக்கும். அப்பெரும் பாவத்தால் மண்ணினில் மழை விழாது. அதனால் நீங்கா வற்கடமாம் பெரும் பஞ்சமும் உண்டாகும். அளவிலா மன்னரும் தத்தம் அரசினையும் இழப்பர்.

1912. புண்ணிய மாம்அவர் தம்மைப் புதைப்பது
நண்ணி அனல்கோக்கில் நாட்டில் அழிவாகும்
மண்ணில் அழியில் அலங்கார பங்கமாம்
மண்ணுலகு எல்லாம் மயங்கும் அனல்மண்டியே.

பொருள் : சிவஞானியின் திருமேனியைப் புதைத்துத் திருக்கோவில் அமைப்பது பெரும் சிவபுண்ணியமாகும். அப்படிச் செய்யாமல் தீயின்கண் இட்டால் நாட்டுக்குப் பெரும் அழிவு உண்டாகும். மேலும் அத்திருமேனி ஓம்புவாரற்று மண்ணில் கிடந்து அழியின், நாட்டின் அழகு எல்லாம் பாழ் பட்டு நாடும் வீழ்ச்சியும். தணியா வெப்பும் தீயும் பிணியும் பிறவும் மண்ணுலகம் எங்குமாகிப் பெருந்துன்பம் உண்டாகும்.

1913. அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால்
அந்த உடல்தான் குகைசெய்து இருத்திடில்
சுந்தர மன்னரும் தொல்புவி உள்ளோரும்
அந்தமில் இன்ப அருள்பெறு வாரே.

பொருள் : அளவிடப் படாத சிவஞானி திருவடிப்பேறாம் அருளை அடைந்தக்கால் அவர்தம் திருவுடலை நிலவறையாகிய குகை செய்து அவற்றின் கண் அமைத்தல் வேண்டும். அங்ஙனம் அமைத்தக்கால் அறிவாற்றல்களால் மிக்க அழகு பெற்ற வேந்தரும் நிலவுலகத்தில் வலமும் நலமும் குலமும் சேர்மாந்தரும் முடிவிலாப் படியிலா வடிவுடை ஆரருள் இன்பம் பெற்று வாழ்வர். (நிலவறை - சமாதி குகை.)

1914. நவமிகு சாணாலே நல்லாழம் செய்து
குவைமிகு சூழஐஞ் சாணாகக் கோட்டித்
தவமிகு குகைமுக் கோணமுச் சாணாக்கிப்
பவமறு நற்குகை பத்மா சனமே.

பொருள் : நிலவறைப் படுக்கும் குகையின் அளவு வருமாறு ஆழம் ஒன்பது சாண். அகலமாகிய சுற்றளவு ஐந்து சாண். மூன்று சாண் அகலத்தில் முக்கோணம். இத்தகைய முறைப்படி அமைக்கும் குகை. தாமரை இருக்கையாகிய பதுமாசன மாகும். சிவஞானியின் உடலைப் பதுமாசனமாக இருத்துக என்பதாம்.

1915. தன்மனை சாலை குளங்கரை ஆற்றிடை
நன்மலர்ச் சோலை நகரின்நற் பூமி
உன்னரும் கானம் உயர்ந்த மலைச்சாரல்
இந்நிலம் தான்குகைக்கு எய்தும் இடங்ளே.

பொருள் : சமாதி செய்விப்போன் வீட்டின் பக்கம், நடைச் சாலையின் பக்கம், குளக்கரை, ஆற்றின் நடுப்பகை, பூந்தோட்டம், நகரில் நல்ல பூமி, நினைத்தற்கு அருமையான காடு, உயர்ந்த மலைச்சாரல் ஆகிய இந்நிலம்தான் குகைக்கு உரிய இடங்களாகும்.

1916. நற்குகை நால்வட்டம் பஞ்சாங்க பாதமாய்
நிற்கின்ற பாதம் நவபாதம் நேர்விழப்
பொற்பமா ஓசமும் மூன்றுக்கு மூன்றுஅணி
நிற்பவர் தாம் செய்யும் நேர்மையை தாமே.

பொருள் : நல்ல குகை நாற்புறமும் காலடியால் ஐந்தடி அகலமும், நிற்கின்ற உயரம் ஒன்பது அடி நேராக அமைய, அழகமைந்த குகையின் குறுக்களவு மூன்றுக்கு மூன்றாக, அணுக்கமாக உள்ளோர் செய்யும் முறையாகும். (ஓசம் - கோயில் அல்லது குகை. பஞ்சாங்க பாதமாய் - ஐந்து அங்கங்கள் நிலத்தில் பதியும்படி வணங்குவதற்கு இடமுள்ளதாய்.)

1917. பஞ்ச லோகங்கள் நவமணி பாரித்து
விஞ்சப் படுத்துஅதன் மேல்ஆ சனம்இட்டு
முஞ்சிப் படுத்துவெண் ணீறுஇட்ட தன்மேலே
பொன்செய் நற்சுண்ணம் பொதியலும் ஆமே.

பொருள் : ஐவகை உலோகங்களையும் ஒன்பது வகை மணிகளையும் குகையில் பரப்பி மிகுதியாகப் போட்டு அதன்மேல் ஆசனத்தை அமைத்து, தருப்பையைப் பரப்பி திரு வெண்ணீற்றை நிறையப் போட்டு அதன்மேல் பொற்சுண்ணப்பொடியைப் போதலுமாம். (முஞ்சி - தருப்பை பொற்சுண்ணம் - மஞ்சள் முதலிய பொருளைச் சேர்த்து இடித்த பொடி.)

1918. நள்குகை நால்வட்டம் படுத்துஅதன் மேல்சாரக்
கள்ளவிழ தாமம் களம்பம்கத் தூரியும்
தெள்ளிய சாந்து புழுகுபவன் னீர்சேர்த்து
ஒள்ளிய தூபம் உவந்திடு வீரே.

பொருள் : குகைநடுவில் நால்வட்டம் அமைத்து, அதன்மேல் தேன் நிறைந்த மலர்மாலைகள், சந்தனக் கலவை, கத்தூரி முதலிய மணக்கூட்டுக்கள், சாந்து, புனுகு, பன்னீர் சேர்த்துத் தக்கவாறு பொதிதல் வேண்டும். பின் சிறந்த நறும்புகையும் விரும்பி மகிழ்ந்து இடுவீர்களாக. (நள்குகை - குகை நடுவில்.)

1919. ஓதிடும் வெண்ணீற்றால் உத்தூளம் குப்பாயம்
மீதினில் இட்டுஆ சனத்தினின் மேல் வைத்துப்
போதறு சுண்ணமும் நறும் பொலிவித்து
மீதில் இருத்தி விரித்திடு வீரே.

பொருள் : சொல்லப் பெறுகின்ற திருவெண்ணீற்றுப் பூச்சாகிய சட்டையை மேலே இட்டு, ஞானியின் உடலை ஆசனத்தின் மேல் அமர்த்தி மலர், அறுகம்புல், வாசனைப்பொடி, திருவெண்ணீறு ஆகியவை அணிவித்து குகையின் மீது வைத்து நாற்புறமும் மண்ணை விரிந்து சமன் செய்வீராக. (குப்பாயம் - சட்டை உத்தூளம் - பூச்சு)

1920. விரித்தபின் நாற்சாரும் மேவுதல் செய்து
பொரித்த கறிபோ னகம்இள நீரும்
குருத்தலம் வைத்துஓர் குழைமுகம் பார்வை
தரித்தபின் மேல்வட்டம் சாத்திடு வீரே.

பொருள் : மேல் ஓதியபடி அமைத்தபின் சாருமணை பொருந்த வைத்து, அதன்மேல் பாவாடை விரித்து, இலை அமைத்துப் பொன்போல் பொரித்த கறிவகைகளும் போனகமாகிய திருவமுதும் இளநீரும் சிவகுருவின் முன்னிலையில் படையுங்கள். அத்திருவுருமுன் குழைமுகப் பார்வை தரித்தலாகிய நைவேத்தியம் கண்டபின் மேற்கட்டியமைத்து வேண்டுவ செய்வீராக. (போனகம் - சோறு. மேல்வட்டம் - மேல்நிலை)

1921. மீது சொரிந்திடும் வெண்ணீறும் சுண்ணமும்
போது பலகொண்டு தர்ப்பைப்புல் வில்வமும்
பாத உதகத்தான் மஞ்சனம் செய்துபார்
மீதுமூன் றுக்குமூன்று அணிநிலம் செய்யுமே.

பொருள் : திருவெண்ணீற்றையும் வாசனைப் பொடியையும் மேலே சொரியும் தருப்பைப் புல் வில்வம் மலர் கொண்டு பாத்தியம், ஆசமனம், அர்க்கியம் கொடுத்து நிலத்தின்மேல் மூன்றுக்கு மூன்று அடி மேடை செய்யுங்கள். அலங்காரம் செய்தபின் உபசாரம் செய்ய வேண்டும்.

1922.ஆதன மீதில் அரசு சிவலிங்கம்
போதும் இரண்டினில் ஒன்றைக் தாபித்து
மேதகு சந்நிதி மேவுத் தரம்பூர்வம்
காதலில் சோடசம் காண்உப சாரமே.

பொருள் : மேடை மீதினில் அரசங்கன்று அல்லது சிவலிங்கம் ஆகிய இவற்றுள் ஒன்றைத் தருவித்து சமாதியின் மேன்மையான சந்நிதி வடக்கு நோக்கி யேனும் கிழக்கு நோக்கி யேனும் அமைய, அன்போடு பதினாறு வகை உபசாரம் செய்க.

சிறப்பு பதினாறாவன; 1. திருமஞ்சனம் 2. நறுமலர். 3. மணக்கூட்டு. 4. நறும்புகை 5. உறுஞ்சுடர் 6. குளிர்நீர் 7. திருவமுது 8. தூசு. 9. அடைக்காய். 10. கண்ணாடி. 11. குடை 12. கவரி. 13. ஆலவட்டம் 14. விசிறி. 15. ஆடல். 16. வாத்தியம் என்பன.

(ஆதனம் - சமாதிக் குகையின் மேல் உள்ள வேதிகை.)
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் - Page 3 Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Tue Mar 27, 2012 1:32 pm

20. விந்துற்பனம்

(விந்து உற்பனம் - விந்துவின் தோற்றம். இப்பகுதியில் அண்டத்துக்குக் காரணமான விந்துவும், பிண்டத்துக்குக் காரணமான விந்துவும் கூறப்பெறும்.)

1923. உதயத்தில் விந்துவில் ஓங்குகுண் டலியும்
உதயக் குடிலில் வயிந்தவம் ஒன்பான்
விதியில் பிரமாதி கள்மிகு சத்தி
கதியில் கரணம் கலைவை கரியே.

பொருள் : விந்து என்று சொல்லப்படும் தூமாயை தோற்றத்தில் சிறந்த குண்டலியும், பெருவெளியில் மாயாகாரியமான வைந்தவம் ஒன்பதும், அவற்றின் முறையால் அயன் முதலிய ஒன்பதின்மரும் திருவருள் முறையாகக் கரணங்கள், கலைகள், வைகரி முதலிய ஓசைகள் ஆகிய எல்லா ஆக்கப்பாடுகளும் தோன்றும். (ஆக்கப்பாடு - காரியம். குடிலில் பரமாகாயத்தில் வயிந்தவம் ஒன்பான் - விந்து மாயாகாரியம் ஒன்பது. கதியில் - முறையாக)

1924. செய்திடும் விந்துபே தத்திறன் ஐ ஐந்தும்
செய்திடும் நாதபேதத்திற னால்ஆறும்
செய்திடும் மற்றவை ஈர்இரண் டில்திறம்
செய்திடும் ஆறுஆறு சேர்தத் துவங்களே.

பொருள் : விந்துவின் காரியத்தால் பிரமன். விஷ்ணு - உருத்திரர். மகேஸ்வரர். சதாசிவராகிய ஐவரும் ஐந்து கொத்தாக உடலிற் பொருந்தித் தொழிற்படுவர். நாதபேத காரணத்தால் அது ஆறு வகையாகப் பிரியும். இவ்விதம் அமைவதால் உருவமூர்த்திகளான பிரமன் விஷ்ணு உருத்திரர் மகேஸ்வரர் ஆகிய நால்வர்பால் மற்ற தத்துவங்கள் பொருந்தும். இவற்றின் விரிவே உடலைப் பற்றியும் உயிரைப் பற்றியுமுள்ள முப்பத்தாறு தத்துவங்களாம்.

1925. வந்திடு பேத மெலாம்பர விந்துமேல்
தந்திடு மாமாயை வாகேசி தற்பரை
உந்து குடிலையோடு ஏமுறு குண்டலி
விந்துவில் இந்நான்கும் மேவா விளங்குமே.

பொருள் : பரவிந்துவில் தோன்றும் மாமாயை மேலோதிய இருபத்தைந்து சிவவடிவங்களையும் தந்திடும். மேலும் வாகேசி தற்பரை. செலுத்தும் குடிலை இன்புறுத்தும்; குண்டலி என்னும் விந்துவில் பொருந்தித் தோன்றும். (ஏமுறு - இன்பம் பொருந்திய. மேவா - மேவி)

1926. விளங்கு நிவர்த்தாதி மேலக ராதி
வளங்கொள் உகாரம் மகாரத் துள்விந்து
களங்கமில் நாதாந்தம் கண்ணினுள் நண்ணி
உளங்கொள் மனாதியுள் அந்தமும் ஆமே.

பொருள் : விளங்குகின்ற நிவிருத்தியாதி கனல் அகாராதி கலையில் பொருந்தும். வளமை மிக்க உகாரம் மகாரத்துள் அடங்கும். விந்து குற்றமில்லாத நாத முடிவை எய்தி அந்தக் கரணமாகிய மனமாதி யவற்றுள் அந்தம் அடையும்.

1927. அந்தமும் ஆதியும் ஆகிப் பராபரன்
வந்த வியாபி எனலாய அந்நெறி
கந்தம தாகிய காரண காரியம்
தந்துஐங் கருமமும் தான்செய்யும் வீயமே.

பொருள் : காரண காரியமாகிய முதல் விளைவுகளுக்கு எண்ணத் துணையாய் நிற்கும் முழுமுதற் சிவன் பராபரன் எனப்படுவன். அவன் எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கும் வியாபியாவன். அந்நிலையில் மணஞ்சேர் காரண காரிய முதல்வராய்த் திருத்தொழில் ஐந்தினையும் இடையாறாது புரிவன். இவையே அவன்தன் அளவில் பெருமையாம். (வீயம் - வியம் - பெருமை)

1928. வீயம தாகிய விந்துவின் சத்தியால்
ஆய அகண்டமும் அண்டமும் பாரிப்பக்
காயஐம் பூதமும் காரிய மாயையில்
ஆயிட விந்து அகம்புறக் ஆகுமே.

பொருள் : பெருமை உடைத்தாகிய விந்துவின் ஆற்றலால் அகண்டமும் அண்டமும் ஆகிய அனைத்து ஆக்கப்பாடுகளும் உண்டாவன. ஆகாயம் முதலிய ஐம்பூதம் உள்ளிட்ட முப்பத்தொரு மெய்களும் தூமாயை யாகிய விந்துவின் காரியம் போன்ற படங்குடில் ஆனாற்போலும் வளர்ச்சியன்று பால் தயிரானாற் போன்ற திரிபு. இதனைத் தூவாமாயை என்பர். இவை தூமாயையின் கீழ்ப் பகுதியாகும். இவ்விந்து முப்பத்தாறு மெய்களுக்கும் அகம்புறம் என்ப விந்து எனினும் காரண மாயை எனினும் ஒன்றே. (விந்து - வித்து - காரணம். அகண்டம் - எல்லையற்றது. அண்டம் எல்லையுடையது. இவ்விரு நிலைகளிலும் விந்து மண்டலம் உள்ளது.)

1929. புறம்அகம் எங்கும் புகுந்துஒளிர் விந்து
நிறமது வெண்மை நிகழ்நாதம் செம்மை
உறமகிழ் சத்தி சிவபாதம் ஆயுள்
திறனொடு வீடுஅளிக் கும்செயல் கொண்டே.

பொருள் : மேல் ஓதியவாறு விந்து புறம் அகம் எங்கும் விரவி ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. விந்துவின் நிறம் வெண்மை நாதத்தின் நிறம் செம்மை. அறிவு ஆற்றல்களால் ஆருயிர்களை மகிழ்விக்க மகிழும் சத்தி சிவம் இரண்டிற்கும் முறையே விந்து நாதம் பதிந்த நிலைக்களமாகும். (பதிவு - நிலைப்பு. பதிவு பாதம் என்றாயிற்று உயிர்க்கு உயிராய் உணர்விற்கு உணர்வாய் உள்நின்று பேறு அருளும் அருளிப்பாடு கொண்டே இவை யனைத்தும் நிகழ்கின்றன.)

1930. கொண்டஇவ் விந்து பரமம்போல் கோதற
நின்ற படம்கட மாய்நிலை நிற்றலின்
கண்டக லாதியின் காரண காரியத்து
அண்டம் அனைத்துமாய் மாமாயை ஆகுமே.

பொருள் : உடலுக்கு வெளியே யுள்ள ஒளி நிலையே குற்றமில்லா ஆடையும் குடமும் உருக்கொண்டு நிற்றல் போல் நிலைöற்ற பஞ்ச கலைகள் ஆதிய காரணத்தினின்று காரியமாகிய பிரபஞ்சம் அனைத்துமாய் விரிந்து மாமாயையாகும். நூல் காரணம்; ஆடை காரியம்; மண் காரணம்; குடம் காரியம். அதுபோல கலைகள் முதலியவை காரணம். (பிரபஞ்சம் - காரியம்)

1931. அதுவித்தி லேநின்றுஅங்கு அண்ணிக்கும் நந்தி
இதுவித்தி லேஉள வாற்றை உணரார்
மதுவித்தி லேமலர் அன்னம தாகிப்
பொதுவித்திலே நின்ற புண்ணியன் தானே.

பொருள் : அகண்டத்தில் வித்தாக விளங்கித் தோன்றும் சிவமே பிண்டத்தில் விந்துவாக உள்ள முறைமையை மக்கள் உணரார். இன்பம் பொருந்திய சுவாதிட்டான மலரில் அன்ன ரூபமாக உள்ளவனே பரமாகாயத்தில் விளங்கும் புண்ணியனாகிய சிவனாகும். தாமரைமீது மகிழ்ந்து அமரும் அன்னத்தைப் போன்று போகம் ஈன்ற புண்ணியனாகிய சிவபெருமான் வீற்றிருந்து அருளுகின்றனன். அது போன்று பொன்னம் பலத்தின் கண்ணும் நின்று அருள்கின்றனன்.

1932. வித்தினில் அன்றி முளையில்லை அம்முளை
வித்தினில் அன்றி வெளிப்படு மாறில்லை
வித்தும் முளையும் உடனன்றி வேறில்லை
அத்தன்மை யாரும் அரன்நெறி காணுமே.

பொருள் : வித்தில் அன்றி வேறிடத்தில் முளையில்லை. அதனால் அம்முளை விதத்தில் இருந்தல்லாமல் வேறிடத்திலிருந்து தோன்றுதல் இல்லை. வித்தும் முளையும் ஒன்றைவிட்டு ஒன்று இல்லாமையால் இரண்டையும் ஒரு பொருளாகக் கருத வேண்டும். அது போன்றே விந்துவும் சிவமும் ஆகும்.

1933. அருந்திய அன்னம் அவைமூன்று கூறாம்
பொருந்தும் உடல்மனம் போம்மலம் என்னத்
திருந்தும் உடல்மன மாம் கூறு சேர்ந்திட்டு
இருந்தன முன்னாள் இரதமது ஆகுமே.

பொருள் : உண்ட உணவுகள் உயிர் பொருந்துவதற்குரிய உடல், மனம், கழியும் மலம் என்று மூன்று பகுதியாகும். திருந்தும் உடலும் மனமும் ஆகிய இருபகுதிகளும் சேர்ந்து முன்னால் உண்ட உணவின் சாரத்தால் அமைந்து இருந்தன. உணவின் தன்மைக்கேற்ப உடலோடு உள்ளமும் அமைகிறது. சாத்துவிக உணவு நல்ல உடலுறுதியும், மன அமைதியும் தந்து யோகம் பயில உதவும்.

1934. இரதம் முதலான ஏழ்தாது மூன்றில்
உரிய தினத்தில் ஒருபுல் பனிபோல்
அரிய துளிவிந்து வாகும்ஏழ் மூன்றின்
மருவிய விந்து வளரும்கா யத்திலே.

பொருள் : இரதமாகிய சாரம் முதலாகச் சொல்லப்படும் ஏழ் முதற் பொருள்களால் ஆக்கப்பட்டது. இவ்வுடல். தாது-முதற் பொருள். அவ்ஏழும் வருமாறு: சாரம், செந்நீர், ஊன், கொழுப்பு, என்பு, மூளை, வெண்ணீர் என்பன. இவற்றுள் சாரம், செந்நீர், வெண்ணீர் ஆகிய மூன்றும் ஒரு நாள் ஒருபுற் பனிபோல் திரளும். இத்திரட்சியே விந்து எனப்படும். இவ்விந்து ஏழு மூன்றாகிய இருபத்தொரு நாள்வரை உடம்பில் வளரும்.

1935. காயத்தி லேமூன்று நாளில் கலந்திட்டுக்
காயத்துள் தன்மனம் ஆகும் கலாவிந்து
நேயத்தே நின்றோர்க்கு நீங்கா விடாமையின்
மாயத்தே செல்வோர் மனத்தோடு அழியுமே.

பொருள் : அதன்பின் மூன்று நாள் காறும் பரந்து கலந்து முன் உடல் விந்துவாக இருந்த அது மனவிந்துவாக மாறும். அதனைக் கலையாகிய அறிவு விந்துவாக அமைத்துச் சிவன் திருவடியுணர்வாய் நீங்காது. நின்றோர்க்கு அவ்விந்துவும் நீங்கா. பற்று அறாமையின் உலக மயக்கில் ஈடு படுவோர்க்கு அவ்விந்து மனத்துடன் அழியும். இதனையே கனவிற் கழிதல் என்ப. (நேயத்தை நாடிச் செல்வார்க்கு விந்து செயமும் மாயத்தை நாடிச் செல்வார்க்கு விந்து நீக்கமும் உண்டாகும்.)

1936. அழிகின்ற விந்து அளவை அறியார்
கழிகின்ற தன்னையுட் காக்கலும் தேரார்
அழிகின்ற காயத்து அழிந்துஅயர் உற்றோர்
அழிகின்ற தன்மை அறிந்தொழி யாரே.

பொருள் : அழிகின்ற விந்துவின் அளவை அறியமாட்டார். இறந்து அழிகின்ற தன்னை உள்ளே காத்துக் கொள்ளுதலையும் தெளியமாட்டார். அழிகின்ற உடலில் அழிந்து சோர்விற்றோர் அழிகின்ற தன்மையை அறிந்தும் விந்து நீக்கத்தினின்றும் ஒழியார். விந்து கழிவதால் வாழ்நாளும் உடலும் பாழாகும். ஏனெனில் பன்மடங்கு இரத்தமே மாறி ஒரு துளி வீரியம் ஆகிறது.

21. விந்து ஜயம் - போக சரவோட்டம்

(விந்துஜயம் - விந்துவைக் காத்தலால் உண்டாகும் செயம். போக சரவோட்டம் - போக காலத்தில் அமையும் பிராண இயக்கம்.)

1937. பார்க்கின்ற மாதரைப் பாராது அகன்றுபோய்
ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல்மூட்டிப்
பார்க்கின்ற கண்ணாசை பாழ்பட மூலத்தே
சேர்க்கின்ற யோகி சிவயோகி தானே.

பொருள் : நம்மை விரும்பிப் பார்க்கும் பெண்களை நாம் பாராமல் அகன்று சென்று, ஆராய்கின்ற மனம் உருக மூலக் கனலை எழுப்பி, கண்ணின் வழியாகச் சென்று பார்க்கும் விருப்பம் பாழாக, மூலமாகிய புருவ நடுவில் கண்ணைச் சேர்க்கின்ற யோகியே சிவயோகியாம். பார்க்கின்ற மாதரைப் பாராதிருத்தல், மனம் உருக மூலக்கனலை எழுப்புதல். ஊர்த்துவ சிருஷ்டியால் புருவ நடுவை நோக்கியிருத்தல் ஆகிய மூன்றும் காமத்தை வெல்வதற்குரிய சாதனங்களாம்.

1938. தானே அருளால் சிவயோகம் தங்காது
தானேஅக் காமாதி தங்குவோ னும்உட்கும்
தானே அதிகாரம் தங்கில் சடங்கெடும்
ஊனே அவற்றுள் உயிர்ஓம்பா மாயுமே.

பொருள் : காம மிகுதியில் பொருந்தினால் திருவருளால் வரத்தக்க சிவ யோகம் பொருந்தாது. அக்காமம் முதலியவற்றுள் பொருந்துவோனும் மனவலி இழந்து அஞ்சுவான். இனி உடம்பும் தன் இயல்பு கெடும். உடம்பில் உள்ள தாதுக்கள் உயிரைப் பாதுகாக்காமல் அழியும்.

1939. மாயாள் வசத்தே சென்றிவர் வேண்டில்
ஓயா இருபக்கத்து உள்வளர் பக்கத்துள்
ஏயாஎன் நாள்இன்ப மேல்பனி மூன்றிரண்டு
ஆயா அபரத்துள் ஆதிநாள் ஆறாமே.

பொருள் : மாதர் வசப்பட்டுச் சென்று இவர் கூட விரும்பினால் தொடர்ந்து மாறி மாறி வருகின்ற பூர்வம் அபரம் என்ற இருபக்கத்தில் பூர்வம் என்ற வளர்பக்கத்தில் பொருந்தாத முதல் எட்டு நாட்கள் கூடிய இன்பமானது துன்பமாம். பூர்வ பக்கத்தில் பின் ஆறு நாள்களும் கூடுவதற்கு ஆகுமாம் (பூர்வபக்கம் - வளர்பிறை அபரபக்கம் தேய்பிறை.)

1940. ஆறுஐந்து பன்னொன்றும் அன்றிச் சகமார்க்கம்
வேறுஅன்பு வேண்டுவோர் பூவரில் பின்னம்தோடு
ஏறும் இருபத் தொருநாள் இடைத்தோங்கும்
ஆறின் மிகுந்தோங்கும் அக்காலம் செய்யவே.

பொருள் : யோகநெறி நிற்போர் வளர்பிறைப் பக்கத்தில் முன் ஆறு நாட்களும் தேய்பிறைப் பக்கத்தில் பின் ஐந்து நாட்களும் ஆக பதினொரு நாட்களையும் நீக்கி ஏனைய நாட்களில் கூடலாம். இவரின் வேறாய சரியை கிரியை நெறி நிற்போர் மாதர் பூப்பு எய்திய பின்னை, கருப்பாசயத்தில் உள்ள இதழ் வளர்ந்து கொண்டேவரும் இடைப்பட்ட இருபத்தொரு நாட்களில், பூப்புத் தொடங்கிய ஆறு நாட்களுக்குப் பின்னுள்ள அக்காலத்தில் கூடலாம்.

1941. செய்யும் அளவில் திருநான் முகூர்த்தமே
எய்யும் கலைகாலம் இந்து பருதிகால்
நையுமிடத்து ஓடி நான்கா நூல்நெறி
செய்க வலம் இடம் தீர்ந்து விடுக்கவே.

பொருள் : மங்கை நல்லாரை மவுதற்குப் பொருந்திய நற்பொழுது இரவுப் பொழுதேயாகும். அவ் இரவுப்பொழுதிலும் எட்டு முழுத்தம் வாய்ப்புடைத்தென்ப. விந்துவைக் கருப்பையில் தங்கவிடும் காலம் ஞாயிறு திங்களைத் தன்னுள் அடக்குவதான வலப்பால் மூக்கில் உயிர்ப்புச் செல்லுங்காலம். நல்ல காம நூலின் முறைப்படி மருவுதல் செய்க. ஒருகால் இடப்பால் மூக்கில் உயிர்ப்புச் செல்லின் அதனை மாற்றி வலப்பால் விடுக்க. (இருநாள் முகூர்த்தம் - இரவு காலம்.)

1942. விடுங்காண் முனைந்துஇந் திரியங்க ளைப்போல்
நடுங்காது இருப்பானும் ஐஐந்தும் நண்ணப்
படுங்காதல் மாதின்பால் பற்றற விட்டுக்
கடுங்காற் கரணம் கருத்துறக் கொண்டே.

பொருள் : பேரன்பாகிய காதல் மங்கையினிடத்து மகப்பேறு ஒன்றே கருதிச் சிற்றின்பம் பற்றுக்களை அறவே விட்டு விரைந்து ஓடும் உயிர்ப்பினை அமைதிப் படுத்திக் கரணங்களைத் திருத்திய கருத்துட் கொண்டு மன எழுச்சியுடன் நடுக்கமின்றிப் பொறி புலன் பத்தும் ஒத்துப் பொருந்தக் கருப்பையில் விந்துவிடும் முறைமையே விழுமிது என்க.

1943. கொண்ட குணனே நலமேநற் கோமளம்
பண்டை உருவே பகர்வாய் பவளமே
மிண்டு தனமே மிடைய விடும் போதில்
கண்ட காரணம் உட் செல்லக்கண் டேவிடே.

பொருள் : சிறப்பெனக் கொண்ட நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு, என்னும் பெண்மைக் குணம் நான்கும் இயற்கை அன்பு செயற்கை அன்புகளால் ஏற்படும். நன்மையும் மருவும் பருவமாகிய இளமையும் (பேரிளம் பெண்) மணந்த ஞான்றுள்ள கட்டுக் குலையா வடிவமும் மும்மையும் பயக்கும் செம்மை வாயாகிய பவழமும் மலை நேர் பொலியும் முலையும் வாய்ந்து திகழாநின்ற மங்கை நல்லாரை மருவிப் புணர அன்புள்ளத்தை இன்புறச் செலுத்தும்போது கல்வி முறைகளை நன்கு கருதிச் செலுத்துவாயாக.

1944. விட்டபின் கர்ப்பஉற் பத்தி விதியிலே
தொட்டுறுங் காலங்கள் தோன்றக் கருதிய
கட்டிய வாழ்நாள் சாம்நாள் குணம் கீழ்மைசீர்ப்
பட்ட நெறியிதுஎன்று எண்ணியும் பார்க்கவே.

பொருள் : மேல் ஓதியவாறு கூடிக் கருப் பதித்தபின் கருப்பத்தோற்ற முறையானே பின் அம் மகவுக்கு வரக்கூடிய காலக் கணக்குகளை நன்கு உன்னி வாழ் நாள் நிலைமையும் சாநாள் நிலைமையும் சிறந்து குணனும், சிறவாக் குணனும் கீழ்மைக் குணனும் முதலிய எல்லாவற்றையும் தாங்கள் கூடிய கூட்டத்தாலும் ஓடிய உயிர்ப்பினாலும் உய்த்துணர்ந்து நோக்குதல் வேண்டும்.

1945. பார்த்திட்டு வையத்துப் பரப்பற்று உருப்பெற்று
வார்ச்செற்ற கொங்கை மடந்தையை நீக்கியே
சேர்த்துற்று இருதிங்கள் சேராது அகலினும்
மூப்புற்றே பின்னாளில் ஆம்எல்லாம் உள்ளவே.

பொருள் : முற்கூறியவண்ணம் பார்த்து, உலகத் தொடர்பின்றிக் கருப்பையில் பெற்று, கச்சினை வருத்தும் தனங்களையுடைய பெண்ணின்றும் நீக்கியே, உலகில் சேர்க்கப்பெற்று அச்சிசு இரண்டு மாதங்கள்கூட வாழாமல் நீங்கினும், மூப்படைந்து பின்னாளில் நீங்கினும் எல்லாம் எண்ணுதற்கு ஆகும்.

1946. வித்திடு வோர்க்குஅன்றி மேலோர் விளைவில்லை
வித்திடு வோர்க்குஅன்றி மிக்கோர் அறிவில்லை
வித்தினில் வித்தை விதற உணர்வரேல்
மத்தில் இருந்ததோர் மாங்கனி யாமே.

பொருள் : வித்தினை விதைப்பவர்க்கு அல்லாது விதையாதவர்க்குப் பயன்இல்லை. வித்தின் (விந்துவின்) பயனை அறிந்து ஒளி செய்வார்க்கு அல்லாது அறிவும் இல்லை. விந்துவே ஒளியாக மாறுகிறது என்று சலனமின்றி உணர்வாராயின் தயிரில் இருந்த வெண்ணெய் போல உயிரில் இருந்த சிவக்கனியாகும். (மத்து - தயிர்.)

1947. கருத்தினில் அக்கரம் ஆயுவும் யாவும்
கருத்துளன் ஈசன் கருஉயிரோடும்
கருத்தது வித்தாய்க் காரண காரியம்
கருத்துறு மாறுஇவை கற்பனை தானே.

பொருள் : கருத்தினில் பிரமலிபி. ஆயுள் முதலிய யாவும் ஈசன் கருவில் பதியும் உயிரோடு கருத்தில் அமைத்துத் தானும் உள்ளான். அவ்வாறு கருத்தில் உள்ளதே வித்தாகப் புறத்திலே உள்ளதைக் காரண காரியமாகக் கருத்தில் கொள்வது கற்பனையாகும். கரு பதியுங் காலத்தில் மேல்விளைவு எல்லாம் அமைந்துள்ளன.

1948. ஒழியாத விந்து வுடன்நிற்க நிற்கும்
அழியாப் பிராணன் அதிபலஞ் சத்தி
ஒழியாத புத்தி தபஞ்செப மோனம்
அழியாத சித்தியுண் டாம்விந்து வற்றிலே.

பொருள் : என்றும் நீங்காத உள்ளத்தின் ஒளிமண்டலம் உடலுடன் சார்ந்து நிற்க, நிற்கின்ற அழியாப் பிராணனும் அளவில் ஆற்றலும் குறைவற்ற புத்தி விலாசமும் தவமும் செபமும் பிரணவ சித்தியும் அழியாத எண்வகைச் சித்திகளும் தூலவிந்து வற்றில் அடைத்தக்கனவாம்.

1949. வற்ற அனலைக் கொளுவி மறித்தேற்றித்
துற்ற சுழியனல் சொருகிச் சுடருற்று
முற்று மதியத்து அமுதை முறைமுறை
செற்றுண் பவரே சிவயோகி யாரே.

பொருள் : தூலவிந்து வற்றிப் போகும்படி மூலாதாரத்திலுள்ள குண்டலினியாகிய நெருப்பைப் பெருக்கி, விந்து கீழ் நோக்காதவாறு தடுத்து மேலே ஏற்றுவதால் அமையும் (பிரமரந்திர) ஞானக்கினியில் பொருந்தி அங்குள்ள ஒளியை அடைந்து பூரண சந்திர மண்டல அமுதைப் பல தடவை பெருக்கி உண்பவரே சிவயோகியாவர். (சுற்றிசுழி - ஆஞ்ஞை)

1950. யோகியும் ஞானியும் உத்தம சித்தனும்
யோகியும் ஞான புரந்தரன் ஆவோனும்
மோகம் உறினும் முறைஅமிர்து உண்போனும்
ஆகிய விந்து அழியாத அண்ணலே.

பொருள் : பண்டைப் பயிற்சி கொண்ட வுளத்தால் வேட்கை உற்றாலும் விந்துவினை வெளிவிடாது. உள்ளடக்கி நுகர்ந்து இன்புறும் நன்மையரும் உளர். அவர்கள் வருமாறு: யோகியும் ஞானியும் தலையாய சித்தனும் தலையாய யோகியும் தலையாய ஞான முதல்வனும் ஆவர். இவ் ஐவர்களும் எஞ்ஞான்றும் விந்துவினை மைந்துடன் காக்கும் தலைமையர் ஆவர்.

1951. அண்ணல் உடலாகி அவ்வனல் விந்துவும்
மண்ணிடை மாய்க்கும் பிராணனாம் விந்துவும்
கண்ணும் கனலிடைக் கட்டிக் கலந்தெரித்து
உண்ணில் அமிர்தாகி யோகிக்கு அறிவாமே.

பொருள் : அகத்தவ யோகியர்க்கு ஏனையோர்க்கு உயிர்க்குயிராய்த் திகழும் அண்ணலாகிய சிவபெருமான் உடலாயத் திகழ்வன். அங்ஙனம் திகழ்வதால் விந்து மாயையாகிய அனற் பிழம்பும் மண்ணிடை வீணாக் கழிப்பின் மாயச் செய்யும் உயிர் விந்துவாகிய அனற்பிழம்பும் கருதப்படும் மூலக் கனலுடன் கூடிக் கலந்து, ஒப்பில் பேரொளிப் பிழம்பாய்ச் சுடர்விட்டு, அகத்து அமிர்தாகி யோகிக்குத் தாவில் அறிவாகும் என்ப. கண்ணுங்கனல் மூலாக்கினி.

1952. அறியாது அழிகின்ற ஆதலால் நாளும்
பொறியால் அழிந்து புலம்புகின் றார்கள்
அறிவாய் நனவில் அதீதம் புரியச்
செறிவாய் இருந்து சேரவே வாயுமே.

பொருள் : மக்கள் விந்துவின் அருமையும் பெருமையும் அறியாது கெடுகின்றமையின் என்றும் இந்திரியங்கள் வசப்பட்டு மனம் அழிந்து உடலழிந்து வருந்துகின்றார்கள். ஞானமே சொரூபமாய் நனவில் துரியாதீதத்தில் சிவத்தோடு செறிந்து பொருந்த கீழுள்ள வீரியம் ஊர்த்துவ முகம் கொண்டு ஒளியாகித் தூலவிந்து அழிந்துவிடும்.

1953. மாதரை மாய வரும் கூற்றம் என்றுன்னக்
காதலது ஆகிய காமம் கழிந்திடும்
காதலும் இல்லை சதகோடி ஆண்டினும்
சோதியின் உள்ளே துரிசறும் காலமே.

பொருள் : பெண்களைக் கொல்லும் எமன் என்று நினைக்க, காதலால் விளைவதாகிய காமம் நீங்கும் காமக் கழிவு இல்லாமையால் இறப்பும் இல்லை. நூறு கோடி ஆண்டுகள் சிவச் சோதியில் கலந்து ஆணவக் குற்றம் நீங்கும் காலமாகும். காமக் கழிவின்றேல் நூறு கோடி ஆண்டுகள் வாழலாம்.

1954. காலம் கடந்தவன் காண்விந்து செற்றவன்
காலம் கடந்தழிந் தான்விந்து செற்றவன்
காலங் களின்விந்து செற்றுற்ற காரிகை
காலின்கண் வந்த கலப்பறி யாரே.

பொருள் : விந்துவை (வீரியத்தை) வென்றவன் காலத்தை வென்றவன். விந்துவை அழித்தவன் காலத்தால் வெல்லப்பட்டு அழிந்தவனாவான். விந்துவை வென்று விளங்கும் காலங்களில் குண்டலினியாகிய சத்தி மூலவாயுவில் பொருந்தி மேலெழும் இன்பத்தை அறியமாட்டார்.

1955. கலக்கு நாள் முன்னாள் தன்னிடைக்காதல்
நலத்தக வேண்டில்அந் நாரி யுதரக்
கலத்தின் மலத்தைத்தண் சீதத்தைப் பித்தை
விலக்கு வனசெய்து மேலணை வீரே.

பொருள் : காலத்தால் கருத்தொத்த இருவரும் மருவி வாழ விரும்பினால் கூடுவதற்குத் தகுதியெனக் கருதும் நாளின் முதல் நாளில் காதற் பெரும் பயனும் நன்றாதற் பொருட்டுக் காதலியின் மலக்குடலில் தங்கும் மலத்தை அகற்றி, வாத பித்தம் ஐ என்னும் மூன்றினையும் இருக்க வேண்டிய முறையில் இருக்கச் செய்து நன் முறையாகக் கூடி இன்புறுவீராக.

1956. மேலா நிலத்தெழு விந்துவும் நாதமும்
கோலால் நடத்திக் குறிவழி யேசென்று
பாலாம் அமிர்துண்டு பற்றறப் பற்றினால்
மாலா னதுமாள மாளும் அவ்விந்துவே.

பொருள் : மூலம் முதலாகச் சொல்லப்படும் ஆறு நிலைகளுக்கும் அப்பாலுள்ள தூவெளி மேனிலம் எனப்படும். அங்கு விந்துவும் நாதமும் தோன்றும். அவற்றை நாடுநாடி வழியாக நடத்தி அகத்தவ ஆசான் கூறி அருளியபடி செய்து அவ்விந்துப் பாலாகிய அமிழ்தத்தினைப் பருகுவராயின் அவர் பற்றறப் பற்றினாராவர். அவர்க்குப் பிறப்பிற்கு ஏதுவாம் மருள் முற்றும் மாயும். அவ்விந்துவும் அடங்கும். (மாலானது - போகமானது. மாளும் - கட்டுப்படும்.)

1957. விந்து விளைவும் விளைவின் பயன்முற்றும்
அந்த அழிவும் அடக்கத்தில் ஆக்கமும்
நந்திய நாசமும் நாதத்தால் பேதமும்
தந்துணர் வோர்க்குச் சயமாகும் விந்துவே.

பொருள் : தூலவீரியம் விளையும் முறையும், அவ்வீரியம் முதிர்ந்து நிற்பதனால் எய்தும் பயன் முழுதும் அறியாதார் அடையும் அழிவும், அறிந்தவர் விந்துவை அடக்கி ஆள்வதால் அடையும் சிறப்பும், அதனால் பெருகிய நாதமும் அதன் வகையும் ஆகியவற்றை ஆராய்ந்து அறிவோர்க்கு விந்து செயம் ஆகும்.

1958. விந்துஎன் வீசத்தை மேவிய மூலத்து
நந்திய அங்கிய னாலே நயந்தெரிந்து
அந்தமில் பானு அதிகண்ட மேலேற்றிச்
சந்திரன் சார்புறத் தண்ணமு தாமே.

பொருள் : விந்து என்று சொல்லப் படுகின்ற உயிர்வாழ் வித்தினைப் பொருந்திய மூலத்திடத்து விளங்கும் மூல அனலால் செம்மையுறச் செய்து, கொப்பூழ் முதல் நெஞ்சம் வரையுள்ள ஞாயிற்று மண்டிலத்துக்கு வலப்பால் நாடிவழியாக ஏற்றி, அதன்மேல் நெஞ்சமுதல் நெற்றி வரையுள்ள திங்கள் மண்டிலத்துக்கு இடப்பால் நாடி வழியாக ஏற்றி, அத்திங்கள் மண்டிலச் சார்புறத் தண்மையும் வெண்மையுமிக்க வண்மை அமுதமாகும். (வீசம் - வித்து)

1959. அமுதச் சசிவிந்து வாம்விந்து மாள
அமுதப் புனலோடி அங்கியின் மாள
அமுதச் சிவயோகம் ஆதலால் சித்தி
அமுதப் பிலாவனம் ஆங்குறும் யோகிக்கே.

பொருள் : அமுதமாகிய சந்திர மண்டலத்துள்ள விந்துவில் (ஒளியில்) உடற்கண் தோன்றிய விந்து (வீரியம்) கலந்து கெட உடம்பு முழுதும் அமுதப் புனல் பரவி சிவாக்கினியில் இலயிக்க அமுத மயமான சிவபோகம் விளையும் ஆதலால், சிவயோகிக்கு அமுதப் பெருக்கமாகிய சித்தி பொருந்தும். (பிலாவனம் - முழுக்காட்டுதல். திளைத்தல்)

1960. யோகம்அவ் விந்து ஒழியா வகையுணர்ந்து
ஆகம் இரண்டும் கலந்தாலும் ஆங்குறாப்
போகம் சிவபோகம் போகிநற் போகமா
மோகங் கெடமுயங் கார்மூடர் மாதர்க்கே.

பொருள் : யோக நெறியால் விந்து அழியாதவாறு புணர்ந்து, ஆணும் பெண்ணுமாகிய இரு உடலும் கலந்தாலும் விந்து நழுவிப் பெண்ணிடத்துப் போகாமல் அமையும் போகமே சிவபோகமாம். இவ்வாறு நல்ல முறையில் போகத்தில் மாதர் ஆசையைத் தீர்க்க மாட்டார்கள் மூடர்கள். என்னே அறியாமை.

1961. மாதர் இடத்தே செலுத்தினும் அவ்விந்து
காதலி னால்விடார் யோகம் கலந்தவர்
மாதர் உயிராசை கைக்கொண்டே வாடுவர்
காதலர் போன்றங்ஙன் காதலாம் சாற்றிலே.

பொருள் : யோக நெறியில் நிற்பவர் மாதரோடு புணர்ந்தாலும் அவ்விந்துவைக் காதலினால் விடமாட்டார். மாதர்களோ யோகியர்களை உயிர்போலக் கருதி ஆசை கொண்டு வருந்துவார்கள். சொல்லப்புகின் நெடுநாள் பழகிய காதலரைப்போல அப்பொழுதே உயிர்க் காதல் கொள்வர்.

1962. சாற்றிய விந்து சயமாகும் சத்தியால்
ஏற்றிய மூலத் தழலை எழுமூட்டி
நாற்றிசை ஓடா நடுநாடி நாதத்தோடு
ஆற்றி அமுதம் அருந்தவிந் தாமே.

பொருள் : முன்னே கூறிய சத்தியால் விந்து செயம் உண்டாகும். தூண்டிய மூலாதாரத்திலுள்ள கனலை மேலேறச் செய்து, நாற்புறமும் சிதறிப் போகாவண்ணம் வீணாத்தண்டூடே சப்த உணர்ச்சியில் ஒன்றச் செய்து அமுதம் உண்ண ஒளி மண்டலம் ஆகும்.

1963. விந்துவும் நாதமும் மேலக் கனல்மூல
வந்த அனல் மயிர்க் கால்தோறும் மன்னிடச்
சிந்தனை மாறச் சிவம்அக மாகவே
விந்துவும் மாளும்மெய்க் காயத்தில் வித்திலே.

பொருள் : சிரசின் மேலே விந்துவும் நாதமும் (ஒளியும் ஒலியும்) உயர்ந்து பொருந்த, வந்த மூலக் கனலின் வெப்பம் மயிர்க்கால் தோறும் நிறைய நம் சிந்தனை ஆன்ம போகத்தை விட்டுச் சிவோகம் பாவனையில் நிலைப் பெற, உண்மையான உடம்பில் விந்து (வீரியம்) வற்றிவிடும். (சிவ+அகம் - சிவோகம் - சிவன் நான்)

1964. வித்துக்குற் றுண்பான் விளைவுஅறி யாதவன்
வித்துக்குற் றுண்ணாமல் வித்துச் சுட்டு உண்பான்
வித்துகுற் றுண்பானில் வேறலன் ஈற்றவன்
வித்துக்குற் றுண்ணாமல் வித்துவித்தான் அன்றே.

பொருள் : விதையைக் குத்தி அரிசியாக்கி உண்பவன் விதையாலாகிய பயனை அறியமாட்டான். விதையைக் குத்தி உண்ணாமல் விதையை வறுத்து உண்பவன் விதையைக் குத்தி உண்பானைப் போலவே தவிர வேறல்லாதவன். இவ்விரண்டு அல்லாத மூன்றாமவன் விதையைக் குத்தி உண்ணாமல் விதையை விதைத்து விதையின் பயனைப் பெருக்கிக் கொண்டவன் ஆவன்.

1965. அன்னத்தில் விந்து அடங்கும் படிகண்டு
மன்னப் பிராணனாம் விந்து மறித்திட்டு
மின்னொத்த விந்துநா தாந்தத்து விட்டிட
வன்னத் திருவிந்து மாயும்கா யத்திலே.

பொருள் : உண்ணும் நல்லுணவால் ஏற்படும் விந்து தன் உடம்பு அகத்தே யோகப் பயிற்சியால் அடங்கும் வகையினைக் கண்டு, உயிர் நெடுநாள் நிலைபெறுமாறு அவ் விந்துவினைக் கீழ் நோக்கவொட்டாது மேலேற்றி மின்னல் போலத் தோன்றி மாயும் இவ்வுடம்பு அகத்து விந்து நாதம் இரண்டினையும் ஒன்று கலந்து உடம்பகத்து ஆக்க. அழகினையுடைய காரண காரியமாகிய இருவகை விந்துவும் உடம்பின்கண் கட்டுப்படும்.

1966. அன்னம் பிராணன்என் றார்க்கும் இருவிந்து
தன்னை அறிந்துண்டு சாதிக்க வல்லார்க்குச்
சொன்ன மாம்உருத் தோன்றும்எண் சித்தியாம்
அன்னவர் எல்லாம் அழிவற நின்றதே.

பொருள் : உண்ணும் நல்லுணவால் ஏற்படும் விந்து தன் உடம்பகத்தே யோகப் பயிற்சியால் அடங்கும் வகையினைக் கண்டு உயிர் நெடுநாள் நிலைபெறுமாறு அவ்விந்துவினைக் கீழ்நோக்க ஒட்டாமல் மேலேற்றி மின்னல் போலத் தோன்றி மாயும் இவ்வுடம்பு அகத்து விந்து நாதம் இரண்டினையும் ஒன்று கலந்து உடம்பகத்து ஆக்க, அழகினையுடைய காரண காரியமாகிய இருவகை விந்துவும் உடம்பின்கண் கட்டுப்படும்.

1967. நின்ற சிகாரம் நினைக்கும் பிராணனாய்
ஒன்றும் மகாரம் ஒருமூன்றோடு ஒன்றவை
சென்று பராசத்தி விந்து சந்தன்னை
ஒன்ற உரைக்க உபதேசம் தானே.

பொருள் : பஞ்சாக்கரத்தில் முதன்மையாக உள்ள சிகாரம் இரு கண்களில் அக்கினித் தன்மையோடு பிரகாசிக்கும் கலையாக, பிரணவத்திலுள்ள மகாரம் தொண்டையைக் கடந்து வெளியான போது அ உ ம மூன்றும் ஒன்றாக, அவை பராசத்தி நிலையமாகிய புருவ நடுவில் சென்று பொருந்துவதால் அமையும் விந்து செயத்தினைப் பொருந்துமாறு உரைப்பதே உபதேசமாகும்.

1968. தானே உபதேசம் தானல்லாது ஒன்றில்லை
வானே உயர்விந்து வந்த பதினான்கு
மானேர் அடங்க அதன்பின்பு புத்தியும்
தானே சிவகதி தன்மையும் ஆமே.

பொருள் : சிவகுரு அருளிச் செய்யும் சிவய நம என்னும் தமிழ்மறை தானே உபதேசமாகும். சிவபெருமான் தன் கலப்பில்லாத ஒரு பொருளும் இல்லை. தூமாயை யினின்றும் வெளிவந்த கலைகள் பதினான்கு என்ப. மானாகிய மனம் சிவசிவ என வழுத்தும் நினைவால் செவ்வை யுற்றடங்க அதன்பின் இறுப்பாகிய புத்தியும் அடங்க ஆருயிர் சிவத்து அடங்க அதுவே சிவகதியாகும்.

1969. விந்துவும் நாதமும் விளைய விளைந்தது
வந்தஇப் பல்லுயிர் மன்னுயி ருக்கெலாம்
அந்தமும் ஆதியும் ஆம்மந் திரங்களும்
விந்து அடங்க விளையும் சிவோகமே.

பொருள் : விந்து நாதம் என்னும் இரண்டும் கட்டற்று விளைய விளைந்தது உயர்திணை. வினைக்கீடாக ஆணையால் தோன்றிய இயங்குதிணையாகிய பல உயிர்கட்கு உள்ளும் ஆறறிவு நிரம்பப் பெற்றது உயர்திணை. மன்னுயிர்கள் எல்லாவற்றிற்கும் அந்தமும் ஆதியுமாகிய அருந்தமிழ் மந்திரம் இரண்டு. அவை முறையே சிவசிவ நமசிவய என்ப. இம்மந்திரவலியால் விந்துவைக் கட்டுப்படுத்தியவருக்குச் சிவோகமே விளையும். (சிவோகம் - சிவன் திருவடிக்கீழ் உறைந்து பேரின்பம் நுகர்தல்.)

1970. வறுக்கின்ற வாறும் மனத்துலா வெற்றி
நிறுக்கின்ற வாறும் அந் நீள்வரை ஒட்டிப்
பொறிக்கின்ற வாறும்அப் பொல்லா வினையை
அறுக்கின்ற நாள்வரும் அத்திப் பழமே.

பொருள் : விந்துவை மீண்டும் முளையாதவாறு வறுக்கும் முறைமையும் எங்கும் உலாவும் மனத்தைத் தடுத்து நிறுத்தலால் அமையும் வெற்றியைத் தரும் முறையும் அதனை உயர்ந்து செல்லுகின்ற சகஸ்ரதளத்தில் கொண்டு செலுத்திப் பக்குவம் செய்கின்ற முறைமையும் அக்கொடிய வினைகளைப் போக்கும் நாளில் வரும். (அத்திப்பழம் - உடல்.)

1971. விந்துவும் நாதமும் மேவியுடன் கூடிச்
சந்திர னோடே தலைப்படு மாயிடில்
சுந்தர வானத்து அமுதம்வந்து ஊறிடும்
அங்குஉதி மந்திரம் ஆகுதி யாகுமே.

பொருள் : விந்துவும் நாதமும் அருளால் பொருந்தி யுடன் கூடித் திங்களுடன் தலைப்படுமாயின் ஆயிரஇதழ்த் தாமரைப் பரவெளியினின்று ஊற்றெழும் அமிழ்தம் வந்து வெள்ளம் போன்று இடையறாது பெருகும். அவ்விடத்துத் திருஐந்தெழுத்து மந்திரமே ஆகுதியாகும். (அங்குதி மந்திரம் - அப்போது உண்டாகும் உறுதிப்பாடு.)

1972. மனத்தொடு சத்து மனஞ்செவி யென்ன
இனத்தெழு வார்கள் இசைந்தன நாடி
மனத்தில் எழுகின்ற வாக்கு வசனம்
கனத்த இரதம் அக் காமத்தை நாடிலே.

பொருள் : இணைவிழைச்சாகிய காமத்தை விரும்பினால் மனத்தொடு பொருந்திய நிலையான எண்ணமும் மனம் கூடி உணரும் ஓசையும் என்று சொல்லப்படுகின்ற இக்கூட்டத்தால் எழுந்து சொல்லுகின்ற சொல் கனத்த இரதமாகிய பயன் இல்லதாகும். இணைவிழைச்சு (ஆண் பெண் போக விருப்பம்)

1973. சத்தமும் சத்த மனமும் மனக்கருத்து
ஒத்துஅறி கின்ற இடமும் அறிகிலர்
மெய்த்துஅறி கின்ற இடம் அறி வாளர்க்கு
அத்தன் இருப்பிடம் அவ்விடம் தானே.

பொருள் : கண் நாக்கு மூக்குச் செவி மெய் என்னும் அறிதற் கருவி ஐந்தும் ஈண்டுச் சத்தமென்னும் சொல்லாற் பெறப்படும். அவ் ஓசையை வெளிப்படுத்தத் துணைபுரியும் மனமும் அம்மனக்கருத்து ஒத்து அறிகின்ற புலன்களும் எவ்வாறு ஒன்றோடொன்று தொடர்ந்து யார் இயக்க இயங்குகின்றன என்னும் இயற்கை மெய்ம்மையினை அறியார். உண்மைச் சிவன் அருளால் இவை இயங்குகின்றன என்று அறிய வல்லார்க்கு அவ்வறிவாகவே அத்தனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருள்வன். அதுவே அவனது தூய இருக்கையாகும்.

1974. உரம்அடி மேதினி உந்தியில் அப்பாம்
விரவிய தன்முலை மேவிய கீழ்அங்கி
கருமலை மீமிசை கைக்கீழிற் காலாம்
விரவிய கந்தரம் மேல்வெளி யாமே.

பொருள் : உடலைத் தாங்கும் உறுதியான பாதம் நிலம் ஆகும். பாத்திலிருந்து கொப்பூழ் வரை நீராகும். கொப்பூழில் இருந்து மார்புவரை தீயாகும் மார்பிலிருந்து தோள்வரை காற்றாகும். கழுத்துக்கு மேல் வான வெளியாகும். இம் முறையாக உடம்பின்கண் ஐம்பெரும் பூதநிலை நிற்பன காண்க.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் - Page 3 Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Tue Mar 27, 2012 1:33 pm

22. ஆதித்தநிலை - அண்டாதித்தன்

(ஆதித்தன் - சூரியன். அண்டாதித்தன் - அண்டத்தில் விளங்கும் சூரியன். சூரியன் அண்டத்தில் விளங்கும் நிலையைக் கூறுவது.)

1975. செஞ்சுட ரோன்முத லாகிய தேவர்கள்
மஞ்சுடை மேரு வலம்வரு காரணம்
எஞ்சுடர் ஈசன் இறைவன் இணையடி
தஞ்சுட ராக வணங்கும் தவமே.

பொருள் : சூரியன் முதலான ஒளி உருவுடைய தேவர்கள் வெண்மேகம் சூழ்ந்த மேரு மலையை வலம் வருவதற்குரிய காரணம், ஒளி வடிவான எமது ஈசனாகிய இறைவனது இரு திருவடிகளின் ஒளி தம் ஒளியாக வேண்டும் என்பதே. கிரி வலம் வந்து வணங்குவதே அவர் செய்யும் தவமாம்.

1976. பகலவன் மாலவன் பல்லுயிர்க்கு எல்லாம்
புகலவ னாய்நின்ற புண்ணிய நாதன்
இகலற ஏழுல கும்உற வோங்கும்
பகலவன் பல்லுயிர்க்கு ஆதியும் ஆமே.

பொருள் : சூரியனே திருமால் ஆவன். உயிர்கள் அனைத்துக்கும் நிலைக்களனாக விளங்கும் புண்ணிய நாதனாகிய சிவனும் ஆவன். பகைமை நீங்கி ஏழுலகங்களும் தழைத்து ஓங்கச் செய்யும் சூரியனே எல்லா உயிர்களுக்கும் முதற் பொருளும் ஆவன்.

1977. ஆதித்தன் அன்பினோடு ஆயிர நாமமும்
சோதியின் உள்ளே சுடரொளி யாய்நிற்கும்
வேதியர் வேண்டினும் விண்ணவர் சொல்லினும்
ஆதியில் அன்பு பழுக்கின்ற வாறே.

பொருள் : ஆதித்தனாகிய சிவஞாயிறைச் சோதியாகிய உலக ஞாயிறு ஆயிரம் திருப்பெயர்களை வாயாரப் புகன்று வழிபட, அஞ்ஞாயிற்றினுள் அளவில் சுடரொளியாய் அவன் விளங்குவன். அச்சிவன் திருப்பெயரை மறையவராயினும் வானவராயினும் காதலால் ஓதுவராயின் சிவனருள் அன்பு செழித்துப் பழுக்கின்றவாறாகும் சிவன் திருப்பெயர் நமசிவய என்ப.

(ஆதித்தன் - சிவசூரியன்; சோதி - அண்டச் சூரியன். ஆதியில் சிவபிரானிடத்தில்)

1978. தானே உலகுக்குத் தத்துவ னாய்நிற்கும்
தானே உலகுக்குத் தையலு மாய்நிற்கும்
தானே உலகுக்குச் சம்புவு மாய்நிற்கும்
தானே உலகுக்குத் தண்சுட ராகுமே.

பொருள் : மேலோதிய சிவபெருமா÷ உலகினுக்கு என்றும் ஒரு படித்தாய் நிற்கும் மெய்ப்பொருளாவன். அவனே உலகியல் நடத்தற் பொருட்டுத் தையலாகிய திருவருளாயும், அவனே ஆருயிர்கட்கு இடையறா இன்பருளச் சம்புவாய் நிற்பன். அவனே தண் சுடராகிய திருவருட் பேரொளியாய் நிற்பன். (தத்துவமாய் - மெய்ப்பொருளாய். தையல், சம்பு - சத்தி, சிவம், நேர்மின் ஆற்றல் எதிர்மின் ஆற்றல். தண்சுடர் - அருள் ஒளி)

1979. வவையமுக் கோணம் வட்டம் அறுகோணம்
துலையிரு வட்டம் துய்ய விதம்எட்டில்
அலையுற்ற வட்டத்தில் ஈர்எட்டு இதழாம்
மலைவுற்று உதித்தனன் ஆதித்தன் ஆமே.

பொருள் : வலையம், முக்கோணம், வட்டம், அறுகோணம், துலை, இருவட்டம் ஆகிய அறுவகை அடையாளங்களால் மூலமுதல் ஆறிடங்களுள் அவற்றின் துய்ய தன்மையை ஆராயின், சுழன்று கொண்டிருக்கும் வட்டத்தில் பதினாறு இதழ்த் தாமரை காணப்பெறும் அதன்கண் நெஞ்சத்திடத்து செவ்விதாக ஞாயிறு தோன்றும். இது விசுத்தியில் சூரியன் உதிக்கும் முறை கூறிற்று.

1980. ஆதித்தன் உள்ளி லானமுக் கோணத்தில்
சோதித்து இலங்கும்நற் சூரியன் நாலாம்
கேத முறுங்கேணி சூரியன் எட்டில்
சோதிதன் நீட்டில் சோடசம் தானே.

பொருள் : மேல்ஓதியவாறு ஞாயிற்றுக்குரிய நிலைக்களனாகிய முக்கோணத்தில் யாவற்றையும் விளக்கித் திகழ்கின்றவன் பகலவன். பகலவன் என்றாலும் சூரியன் என்றாலும் ஒன்றே. அவனது நாலாங்கால் குற்றந்தரும் கேணி போன்றாகும். பகலவனுக்கு உரியன எட்டிதழ்த் தாமரை, பதினாறு இதழ்த் தாமரை என்ப. குற்றந்தரும் கேணி என்பது திங்களின் நாலாங்கால் இறக்கும் தன்மையான் நேருவது (சோடசம் - பதினாறு).

1981. ஆதித்த னோடே அவனி இருண்டது
பேதித்த நாலும் பிதற்றிக் கழிந்தது
சோதிக்குள் நின்று துடியிடை செய்கின்ற
வேதப் பொருளை விளங்குகி லீரே.

பொருள் : சூரியனோடு உலக அறிவு கெட்டது. உலக அறிவைப் பற்றிய சூக்குமை பைசந்தி மத்திமை வைகரியாகிய வாக்குகள் பிதற்றி ஓய்ந்தன. இவ்வண்ணம் அண்ட கோசத்தில்பராசக்தி நிலை பெற்று உணர்த்து கின்ற வேதம் கூறும் அனுபவப் பொருளை நீங்கள் விளங்கிக் கொள்ள மாட்டீர்கள்.

1982. பாருக்குக் கீழே பகலோன் வரும்வழி
யாருக்கும் காணஒண் ணாத அரும்பொருள்
நீருக்கும் தீக்கும் நடுவே உதிப்பவன்
ஆருக்கும் எட்டாத ஆதித்தன் தானே.

பொருள் : சுவாதிட்டானத்துக்குக் கீழுள்ள மூலாதாரத்தினின்றும் மேல் வருவது சூரியன் வரும் வழியாகும். அது யோகியர் அல்லாத பிறரால் காணமுடியாத அருமையான பொருளாகும். அவ்வாறு யாராலும் காணமுடியாத சூரியன் நீருக்குரிய மணி பூரகத்துக்கும் தீயினுக்குரிய அநாகதத்துக்கும் இடையில் உதிப்பவன் ஆவான்.

1983. மண்ணை இடந்துஅதின் கீழொடும்
விண்ணை இடந்து வெளிசெய்து நின்றிடும்
கண்ணை இடந்து களிதந்த ஆனந்தம்
எண்ணும் கிழமைக்கு இசைந்து நின்றானே.

பொருள் : முன்னர்க் கூறியவாறு அச்சூரியன் மண்ணீரலில் இருந்து சுவாதிட்டானம் வந்து அங்கு அதைப் பிளந்து மூலாதாரம் சென்று அங்கிருந்து ஆகாயக் கூறான ஆஞ்ஞையில் பிளந்து உடலுக்கு வெளியே சோதியாய் நின்றிடும். இருகண்பார்வையும் கொண்ட ஆஞ்ஞையில் களிப்பூட்டுகின்ற ஆனந்தத்தால் நாம் தியானிக்கும் உரிமைக்கு உடனாய் நின்றனன். பூகோள அறிவின்படி பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்வதால் இரவு பகல் தோன்றுவதும் சூரியனைப்பூமி சுற்றி வருவதால் ஓர் ஆண்டு ஆவதும் நாம் படிக்கிறோம். (அவ்வாறு பொருள் கொள்ளினும் அமையும்.)

1984. பாரை இடந்து பகலோன் வரும்வழி
யாரும் அறியார் அருங்கடை நூலவர்
தீரன் இருந்த திருமலை சூழ்என்பர்
ஊரை உணர்ந்தார் உணர்ந்திருந் தாரே.

பொருள் : உலகம் ஞாயிற்றைச் சுற்றி வருகின்றது. ஆனால் ஞாயிறு உலகைச் சுற்றி வருவதாகச் கூறுவோர் உண்மை உணராத வராவர். அவ்வுண்மையினை நுண்ணுணர்வினரே உணர்வர். தாழ்ந்த நிலையினர் பொருட்டுச் செய்யப்பட்ட நூலையே உயர்ந்த நூலாகக் கருதிச் சிலர் ஞாயிறு திருமலையினைச் சுற்றி வருகிற தென்பர். உயர்ந்தோர் உச்சித் துளைவாயிலாக ஞாயிற்றைக் காணும் முறையிற் காண்பர். ஞாயிற்றைப் பகலவன் எனவும் பகலோன் எனவும் கூறுவர். (திரன் - சிவபெருமான். ஊரை - ஈசன் இருக்கும் புருவமத்தி ; உச்சித் தாமரை)

23. பிண்டாதித்தன்

(பிண்டாதித்தன் - உடம்பில் விளங்கும் ஆதித்தன்.)

1985. நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்
கன்றாய நந்திக் கருத்துள் இருந்தனன்
கொன்று மலங்கள் குழல்வழி ஓடிட
வென்று விளங்கும் விரிசுடர் காணுமே.

பொருள் : நிற்றல் இருத்தல் கிடத்தல் நடத்தல் ஆகிய செயல்களைச் செய்யும் போது இளம் யானை வடிவினனாகிய பிரணவக் கடவுள் என்னுடைய கருத்தில் எப்போதும் இருந்தனன். இதனால் மலங்களைச் செற்று வீணாத்தண்டில் உணர்வு கீழ் நோக்காமல் மேல் நோக்கி எழ, வெல்லுதலைச் செய்கின்ற விரிந்த கிரணங்களையுடைய சூரியன் வெளிப்படுவன்.

1986. ஆதித்தன் ஓடி அடங்கும் இடங்கண்டு
சாதிக்க வல்லவர் தம்மை யுணர்ந்தவர்
பேதித்து உலகம் பிதற்றும் பிதற்றெல்லாம் ஆதித்த
னோடே அடங்குகின் றாரே.

பொருள் : சூரியன் மேலெழுந்து சென்று அடங்கும் இடமாகிய ஈசான திக்கைக் கண்டு, அங்கிருந்து மேற்சென்று ஊர்த்துவ சகஸ்ரதளத்தை அடைந்து அங்குள்ள ஒளியில் நிற்க வல்லவரே தம்மை உணர்ந்தவராவர். இவ்வுண்மையை உணராது பிதற்றும் உலகவர் எல்லாம், கீழுள்ள சூரியனை மேலெழச் செய்ய வகை அறியாது மாய்ந்து ஒழிபவரே யாவர்.

1987. உருவிப் புறப்பட்டு உலகை வலம்வந்து
சொருகிக் கிடக்கும் துறையறி வார்இல்லை
சொருகிக் கிடக்கும் துறையறி வாளர்க்கு
உருகிக் கிடக்கும்என் உள்ளன்பு தானே.

பொருள் : சூரியன் மூலாதாரத்திலிருந்து உருவிக்கொண்டு புறப்பட்டு உலகமாகிய உடலை வலம் வந்து, சொருகிக் கிடக்கும் இடமாகிய ஈசான திக்கை அறிவார் யாரும் இல்லை. அங்ஙனம் அறிகின்ற அறிவுடையோர்க்கு என் உள்ளத்திலுள்ள அன்பு அவர்பால் உருகி எழும்.

24. மன ஆதித்தன் (மண ஆதித்தன் - மன மண்டலத்தில் விளங்கும் சூரியன்.)

1988. எறிகதிர் ஞாயிறு மின்பனி சோரும்
எறிகதிர் சோமன் எதிர்நின்று எறிப்ப
விரிகதிர் உள்ளே இயங்கும்என ஆவி
ஒருகதிர் ஆகில் உலாஅது ஆமே.

பொருள் : வெப்பக் கதிரை வீசும் ஞாயிறும் தட்பக்கதிரை வீசும் திங்களும் மேல் கீழாய் நேரொக்கத் தோன்றும் காலம் உவா எனப்படும் உவா- முழுநிலா, அங்ஙனம் விரிந்து எறிக்கும் கதிரினுள் ஆருயிர் இயங்கும். (அமாவாசைக்கும் உவா என்று பெயர்.)

1989. சந்திரன் சூரியன் தான்வரின் பூசனை
முந்திய பானுவில் இந்துவந்து ஏய்முறை
அந்த இரண்டு உபய நிலத்தில்
சிந்தை தெளிந்தார் சிவமாயி னரே.

பொருள் : சந்திரகலை என்று சொல்லப்பெறும் இடகலையும் சூரிய கலையென்று சொல்லப்பெறும் வலப்பால் கலையும் முறையாக இயங்கிக் கொண்டிருப்பின் நற்றவமாம். சிவ பூசைக்கு உற்ற அமைவாம் என்க. சூரிய கலையின்கண் சந்திரகலை பொருந்தி நிகழுங்காலம். பூசனைப் பொழுதாம் என்க. அக்கனல் நடு நாடி வழியாகச் செல்லுங்கால் சிந்தை தெளிவுண்டாகும். இவரே சித்தம் சிவமாக்கப் பெற்ற திருவினர். இவரே சிவமாய் அமர்ந்திருப்பார்.

1990. ஆகும் கலையோடு அருக்கன் அனல்மதி
ஆகும் கலையிடை நான்குஎன லாம்என்பர்
ஆகும் அருக்கன் அனல்மதியோடுஒன்ற
ஆகும்அப் பூரணை யாம்என்று அறியுமே.

பொருள் : பிங்கலை யாகிய வலப்பால் உயிர்ப்பு எனப்படும் ஞாயிறும் அனலாகிய தீயும், திங்களாகிய இடப்பால் உயிர்ப்பும் கலையெனப்படும் நடுநாடியும் ஆகிய நான்கும் கலை என்று அழைக்கப்படும். அருக்கனாகிய வலப்பால் உயிர்ப்பும், மூலத்தீயும், திங்களாகிய இடப்பால் உயிர்ப்பும் நடு நாடிக்கண் கூடிப் பொருந்த மேலோதிய நிறைநிலா ஆகும் என்று அறிக. அகத்தே காணும் நிறைநிலா என்பது திங்கள் அமிழ்தத் தீஞ்சுவை வெண்ணிலா என்க. இதற்கு இடம் நெற்றிப் புருவம் என்க.

1991. ஈர்அண்டத்து அப்பால் இயங்கிய அவ்வொளி
ஓர் அண்டத் தார்க்கும் உணரா உணர்வது
பேர்அண்டத்து ஊடே பிறங்கொளி யாய்நின்றது
ஆர் அண்டத் தக்கார் அறியத்தக் காரே.

பொருள் : அனல் மண்டலத்தையும் சூரிய மண்டலத்தையும் கடந்து விளங்கிய சந்திர மண்டல ஒளி ஓர் அண்டம் என்ற அனல் மண்டலத்தில் காம உணர்வோடு வாழும் மக்கள் ஒருவருக்கும் புலப்படாததாகும். சிரசுக்கும் மேல் விளங்கும் பிரமாண்டத்தில் உயர்ந்து செல்லும் ஒளியாய் நின்றவர் யாவர் ? அந்நிலையை அடைந்த அவரே அவ்வொளியை அறியத்தக்கவர் ஆவர்.

1992. ஒன்பதின் மேவி உலகம் வலம்வரும்
ஒன்பதும் ஈசன் இயல்அறி வார்இல்லை
முன்புஅதின் மேவி முதல்வன் அருளிலார்
இன்பம் இலார்இருள் சூழநின் றாரே.

பொருள் : மனமண்டலத்துள் சூரியன் பிருதிவியாதி ஒன்பது நிலைகளிலும் பொருந்தி உடம்பாகிய உலகத்தை வலம் வரும். இவ்வகையான ஒன்பது தத்துவங்களும் ஈசனது சத்தி நிலையாகும் என்பதை அறிபவர் இல்லை. முன்னர் இவ்வகையான ஒன்பதிலும் ஆன்மா பொருந்தி உள்ளதாயினும் சிவத்தின் அருள் இல்லாதவர் இன்பம் இல்லாதவராய் இருள் சூழ்ந்த அண்ட ஆகாயத்தைப் பெற்றுள்ளனர். (ஒன்பது - பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், சூரியன், சந்திரன், அக்கினி, தாரகை.)

25. ஞானாதித்தன் (ஞானித்தன் - ஞானசூரியன்)

1993. விந்து அபரம் பரம்இரண் டாய்விரிந்து
அந்த அபரம் பரநாத மாகியே
வந்தன தம்மில் பரங்கலை யாதிவைத்து
உந்தும் அருணோ தயமென்ன உள்ளத்தே.

பொருள் : விந்து ஒன்றே தூலமாகிய அபரம் என்றும் சூக்குமமாகிய பரம் என்றும் இரண்டாக விரிந்து, அந்தத் தூலவிந்துவே மேல் நோக்கியபோது பரநாதமாகி மேலான நிவிருத்தியாதி பஞ்ச கலைகளில் வந்து ஞான சூரியனின் அருணோதயம் என்று சொல்லுமாறு உள்ளத்தில் மேலெழுந்து தோன்றும். விந்துவே தூலமாகிய அபரநிலையில் வீரியம் என்றும் சூக்கும மாகிய பரநிலையில் ஒளி என்றும் ஆகிறது. (அருணோதயம் - சூரியனது தோற்றம்.)

1994. உள்ள அருணோ தயத்தெழும் ஓசைதான்
தெள்ளும் பரநாதத் தின்செயல் என்பதால்
வள்ளல் பரவிந்து வைகரி யாதிவாக்கு
உள்ளன ஐங்கலைக்கு ஒன்றாம் உதயமே.

பொருள் : உள்ளமாகிய மன மண்டலத்தில் அருணோதயம் போன்று எழுகின்ற ஓசையே தெளிந்த பரநாதத்தின் செயலாதலின் வள்ளலாகிய சிவனருளால் வைகரியாதி வாக்குகள் பரவிந்துவோடு கூடிப் பஞ்ச கலைகளிலிருந்து தோன்றும் உள்ளத்து எழுகின்ற நாதமே அருணோதயமாகும்.

1995. தேவர் பிரான்திசை பத்துஉத யஞ்செய்யும்
மூவர் பிரான்என முன்னொரு காலத்து
நால்வர் பிரான்நடு வாயுரை யாநிற்கும்
மேவு பிரான்என்பர் விண்ணவர் தாமே.

பொருள் : தேவ தேவனாகிய சிவன் சுற்றியுள்ள எண்திசைகளிலும் மேல் கீழ் என்ற இரண்டு பக்கங்களிலுமாகப் பத்துத் திசைகளிலும் வெளிப்படுவான். பழமையான காலத்தில் இவனை மூவர் பிரான் என்றும் பிற்காலத்தில் வந்தவர் பிரமன், விஷ்ணு, உருத்திரன், மகேசுவரன் என்ற நால்வர்க்கும் நடு நாயகமாய் உள்ளவன் என்றும் உரைத்தனர். ஆனால் வானோர்கள் இவனையே தங்கள் தலைவன் என்று கூறுவர். (மூவர் பிரான் என்றது வேதகாலத்திலும், நால்வர் பிரான் என்றது ஆகம காலத்திலும் ஆம்.)

1996. பொய்யிலன் மெய்யன் புவனா பதிஎந்தை
மையிருள் நீக்கும் மதிஅங்கி ஞாயிறு
செய்யிருள் நீக்கும் திருவுடை நந்திஎன்
கையிருள் நீங்கக் கலந்தெழுந் தானே.

பொருள் : புவனங்கள் அனைத்துக்கும் தலைவனும் எந்தையுமாகிய சிவம் கற்பனைப்பொருள் அல்ல உண்மையில் உள்ளவனேதான். மைபோன்ற இருளை நீக்குகின்ற சந்திரன் அக்கினி சூரியன் ஆகியவை அண்டகோசத்தில் கீழ் முகமாகச் செயல்பட்டபோது உண்டான இருளை நீக்குகின்ற ஞானச் செல்வனாகிய சதாசிவன் என்னுடைய வீணாத் தண்டின் இருளை அகற்றக் கீழிருந்து மேல்வரை கலந்திருந்தான்.

1997. தனிச்சுடர் எற்றித் தயங்கிருள் நீங்க
அனித்திடும் மேலை அருங்கனி ஊறல்
கனிச்சுட ராய்நின்ற கயிலையில் ஈசன்
நனிச்சுடர் மேல்கொண்ட வண்ணமும் ஆமே.

பொருள் : ஒப்பற்ற சிவ ஒளியானது நிறைந்த அண்டகோசஇருளை நீங்கச் செய்து, பெறுதற்குரிய கனியினின்றும் ஊறுவதாகிய தேன்போலும் இனிய அமுதம் சுரக்கச் செய்யும். கனிந்த சுடர் போன்று நின்று கயிலாயபதி நிறைந்த சுடர்போல் என சிரசின் மேல் விளங்கும் தன்மையுமாவான். (அளித்திடும் என்பது எதுகை நோக்கி அனித்திடும் என்றாயிற்று.)

1998. நேரறி வாக நிரம்பிய பேரொளி
போரறி யாது புவனங்கள் போய்வரும்
தேரறி யாத திசையொளி யாயிடும்
ஆரறி வாரிது நாயக மாமே.

பொருள் : அனுபவ ஞான வடிவாக ஆன்மாவினிடம் நிரம்பியுள்ள பேரொளியாகிய பிழம்பு (சிவம்) தங்கு தடையின்றி எல்லாப் புவனங்களிலும் வியாபித்து நிற்கும். சூரிய ஒளி படராத இடத்திலும் இவ்வொளி படர்ந்து நிற்கும். இதுவே அனைத்துக்கும் தலையானது என்பதை யார் அறிவார்.

1999. மண்டலத் துள்ளே மலர்ந்தெழும் ஆதித்தன்
கண்டிடத் துள்ளே கதிரொளி ஆயிடும்
சென்றிடத்து எட்டுத் திசையெங்கும் போய்வரும்
நின்றிடத் தேநிலை நேரறி வார்க்கே.

பொருள் : மண்தலமாகிய நிலவுலகத்துள்ளே விளங்கித் தோன்றும் ஒளியுடையது ஞாயிறு. இதுவே மூலத்திடத்து விளங்கும் ஞாயிறு வாகும். அதுவே மிடற்றினிடம் என்று சொல்லப்படும் விசுத்தியின் கண் கதிர்காலும் ஒளியாய்த் திகழும். அவ்வொளி எல்லாத் திசைகளிலும் உலாவி விளங்கும். திருவருளால் நின்ற இடத்திலே நின்று திருவடி உணர்வால் எல்லாம் காண்பார்க்கு இவ் உண்மை எளிதிற் புலனாம்.

2000. நாபிக்கண் நாசிநயன நடுவினும்
தூபியோடு ஐந்தும் சுடர்விடு சோதியைத்
தேவர்கள் ஈசன் திருமால் பிரமனும்
மூவரு மாக உணர்ந்திருந் தாரே.

பொருள் : ஆருயிர் உறையும் சீரிய உலகத்துக் கொப்பூழ், கண், நாசி, புருவ, நடு, உச்சித்துளை என்று சொல்லப்படும் ஐந்திடத்தும் உயிருக்கும் உயிராய் அறிவுக்கு அறிவாய் ஒளி கொடுத்தருளும் சிவ பெருமானைத் தூமாயையின்கண் வீற்றிருக்கும் அரன், அரி, அயன் என்று சொல்லப்படும் மூவருமாக மெய்யுணர்ந்தோர் உணர்ந்திருந்தார் என்க. (தூபி - உச்சித்துளை.)

26. சிவாதித்தன் (சிவாதித்தன் - சிவசூரியன்)

2001. அன்றிய பாச இருளும்அஞ் ஞானமும்
சென்றிடு ஞானச் சிவப்பிர காசத்தால்
ஒன்றும் இருசட ராம்அரு ணோதயம்
துன்றிருள் நீங்குதல் போலத் தொலைந்ததே.

பொருள் : சிவ ஒளிக்கு மாறுபட்ட பாச இருளும் அதனால் விளையும் அஞ்ஞானமும், சிவம் பிரகாசித்தபோது நீங்கி அதனுள் ஒடுங்கும். பெரிய சூரியன் எழுச்சிக்கு முன்னுள்ள அருணோதயத்தால் நெருங்கிய இருள் விலகுதல் போலத் தொலைந்தது; சிவசூரியன்முன் அஞ்ஞானத்தின் ஆற்றல் குன்றியது.

2002. கடம்கடம் தோறும் கதிரவன் தோன்றில்
அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான்
விடங்கொண்ட கண்டனும் மேவிய காயத்து
அடங்கிட நின்றதும் அப்பரி சாமே.

பொருள் : நீருள்ள குடங்கள் தோறும் சூரியன் தோன்றினாலும் அவன் அக்குடத்துள் அடங்குமாறு மூடி வைத்தாலும் அவற்றில் அடங்கமாட்டான். அத்தன்மைபோல, நீலகண்டப் பெருமான் விரும்பி எழுந்தருளிய உயிரில் அடங்கியிருந்தும் அத்தன்மையதாகும். சிவசூரியன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது.

2003. தானே விரிசுடர் மூன்றும்ஒன் றாய்நிற்கும்
தானே அயன்மால் எனநின்று தாபிக்கும்
தானே உடலுயிர் வேறன்றி நின்றுளன்
தானே வெளியொளி தானிருட் டாமே.

பொருள் : சிவமாகிய தானே விரிந்த கிரணங்களையுடைய சூரியன், சந்திரன், அக்கினியாகிய மூன்றும் இயைந்த ஓர் ஒளியாக விளங்கும், தன்மையை நிரூபிக்கும். தானே அறிவற்ற உடலில் அறிவுடைய உயிரிலும் பிறப்பின்றிக் கலந்துள்ளான். தானே ஆகாயமாயும் அதன் ஒளியாயும் இருப்பதோடு இருளாயும் உள்ளான்.

2004. தெய்வச் சுடர்அங்கி ஞாயிறும் திங்களும்
வையம் புனல்அனல் மாருதம் வானகம்
சைவப் பெரும்பதி தாங்கிய பல்லுயிர்
ஐவர்க்கு இடம்இடை ஆறங்கம் ஆமே.

பொருள் : தெய்வத் தன்மை பொருந்திய ஒளியுடன் கூடிய சிவாக்கினியும், சூரியனும், சந்திரனும், பூமியும், நீரும், நெருப்பும், காற்றும், விண்ணும் ஆகிய எட்டும், சிவன் உறையும் திருமேனிகளாம். இத்திருமேனிகளைத் தாங்கியிருக்கின்ற பல உயிர்களும் சத்தியே சாதர் முதலிய ஐவர்க்கும் செறிவுடைய இருதயம் முதலிய ஆறு அங்கங்களுக்கும் இடமாகும்.

(ஐவர் (பஞ்சப்பிரமம்) - சத்தியோ சாதர், வாமதேவர், அகோரர், தற்புருடர், ஈசானர் ஆகிய ஐவர்; ஆறு அங்கங்களாவன; இருதயம், சிரசு, சிகை, கவசம், நேத்திரம், அஸ்திரம்.)

27. பசு இலக்கணம் (பிராணன்)

(பசு என்றால் கட்டப்பட்டது என்பது பொருள்)

2005. உன்னும் அளவில் உணரும் ஒருவனைப்
பன்னு மறைகள் பயிலும் பரமனை
என்னுள் இருக்கும் இளையா விளக்கினை
அன்ன மயமென்று அறிந்துகொண் டேனே.

பொருள் : (தியானித்த அளவில் உணரப்படுகின்ற ஏக நாயகனை, பன்னிப் பன்னிப் பேசும் வேதங்கள் இடைவிடாது சொல்லிக் கொண்டிருக்கும் பரம் பொருளை, என் உள்ளத்து விளங்கும் தூண்டா விளக்கானவனை அம்ச ரூபன் என்று அறிந்து கொண்டேன்.)

2006. அன்னம் இரண்டுள ஆற்றம் கரையினில்
துன்னி இரண்டும் துணைப்பிரி யாதுஅன்னம்
தன்னிலை அன்னம் தனியொன்றது என்றக்கால்
பின்ன மடஅன்னம் பேறணு காதே.

பொருள் : சீவ வாழ்வில் இரண்டு அன்னங்கள் உள்ளன. இரண்டும் ஒன்றை விட்டு ஒன்று பிரியாதனவாம். அவற்றுள் தன்னிலையில் நிற்கும் சிவமாகிய அன்னம் தனக்கு வேறாயது என்று எண்ணினால் வேறுபட்ட அறியாமையோடு கூடிய சீவனாகிய அன்னத்துக்கு என்றும் சிவப்பேறு கிட்டாதாகும். (ஆற்றங்கரை - உலகவாழ்வு, அன்னம் இரண்டு. சிவன், சீவன் பேறணுகாது - தான்வேறு என்று எண்ணிக் கொண்டு இருக்கும் அளவும் முத்தி அடையாது.)
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் - Page 3 Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Tue Mar 27, 2012 1:34 pm

28. புருடன்

2007. வைகரி யாதியும் மாயா மலாதியும்
பொய்கரி யான புருடாதி பேதமும்
மெய்கரி ஞானம் கிரியா விசேடத்துச்
செய்கரி ஈசன் அனாதியே செய்ததே.

பொருள் : வைகரி, மத்திமை, பைசந்தி, சூக்குமை ஆகிய வாக்குகளும், மாயை, முதலான மலங்களும், பொய்யான போகங்களை நுகர்விக்கு புருடன் முதலான வித்தியா தத்துவமும், பிறப்பை ஒழிக்கும் ஞானமும் ஆகிய இவற்றைச் சாட்சியாயுள்ள ஈசன் ஆன்மாக்கள் செயற்பட்டு, உய்தி பெறும் பொருட்டு அனாதியே அமைத்தருளியதாம்.

2008. அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே.

பொருள் : அணுவுக்கும் அணுவாயுள்ளதை ஆயிரம் கூறு செய்து அவ் ஆயிரத்தில் ஒரு கூற்றினை நெருங்க வல்லார்க்கு அணுவுக்கு அணுவானவனும் ஆதிப் பிரானும், மிகச் சூக்குமம் ஆனவனும், ஆகிய பரம்பொருளை அடையலும் ஆகும். (அணு - ஆன்மா; நுண்மை, ஆயிரம் கூறிடலாவது நுணுகி ஆராய்தல். ஆன்மாவில் விளங்கும் சிவத்தை நுணுகி ஆராய்வார்க்கு நெருங்குதலும் கூடும்.)

2009. படர்கொண்ட ஆலதின் வித்தது போலச்
சுடர்கொண்டு அணுவினைத் தூவழி செய்ய
இடர்கொண்ட பாச இருளற ஓட்டி
நடர் கொண்ட நல்வழி நாடலும் ஆமே.

பொருள் : விழுது ஊன்றி விரிவாய்ப் படர்ந்திருக்கும் ஆலமரத்தின் தன்மை முற்றும் அதன் வித்தின்கண் அடங்கியிருப்பது போல், திருவருள் ஒளியினைக் கொண்டு அணுவாகிய ஆருயிர் உய்யச் செந்நெறியைத் தன் திருவுள்ளத்தில் அமைத்தனன் சிவன் அத்திருவருளின் துணையால் அந் நன்னெறியிற் சென்று எந்நாளும் துன்பத்தை மிகுவிக்கும் பாச இருளை முற்றாக ஓட்டுதல் வேண்டும். ஓட்டி அகத்தும் புறத்தும் ஐந்தொழிற்கூத்து இயற்றியருளும் திருவடிசேர் திருநெறியை நாடுவது நாடற்கரிய பெரு நன்மையாகும். (நடர் - அம்பலக் கூத்தர்.)

2010. அணுவுள் அவனும் அவனுள் அணுவும்
கணுஅற நின்று கலப்பது உணரார்
இணையிலி ஈசன் அவன்எங்கும் ஆகித்
தணிவற நின்றான் சராசரம் தானே.

பொருள் : மிகவும் நுண்மையாகிய அணுவாம் உயிரினுள் சிவபெருமானும், அச்சிவபெருமான் இடமாக ஆருயிரும் வேறு அறக் கலந்து நிற்கும் கலப்புச் சொல்லொணாது என்க. ஆயினும் திருவருட் கண்ணால் அஃது உணர்தல் வேண்டும். அங்ஙனம் உணராதார். செந்நெறிக்குச் சேயராவர். சிவபெருமான் ஒப்பில்லாதவன். அவன் எங்கும் எல்லையின்றிக் கலந்து நிற்கின்றான். அம்முறையால் அவனே இயங்கு திணையும் நிலைத்திணையும் ஆகிய எல்லாப் பொருள்களும் என்று நல்லாரால் சொல்லப் படுகின்றனன். (கணு - பேதம், தணிவு எல்லை.)

29. சீவன்

2011. மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறுநா றாயிரத்து ஒன்றே.

பொருள் : உடலின்கண் பொருந்திய சீவனது வடிவத்தை அளவிட்டுச் சொன்னால் பசுவின் மயிர் ஒன்றை நூறாகப் பிளந்து அதிலுள்ள ஒன்றை ஆயிரம் கூறாக்கினால் உயிரின் வடிவம் பசுவினது உரோமத்தை ஓர் இலட்சம் கூறிட்டதற்கு ஒப்பு ஆகும்.

2012. ஏனோர் பெருமையன் ஆயினும் எம்மிறை
ஊனே சிறுமையின் உட்கலந்து அங்குளன்
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியும் தவத்தின் அளவே.

பொருள் : எம் இறைவன் ஏனைய தேவர்களைவிடப் பெருமை உடையவன் ஆயினும் தனது எளிவந்த கருணையால் உடம்பினுள் உயிராகக் கலந்தும் விளங்குவான். தேவர்களால் அளவிட்டு அறியமுடியாத தேவதேவன் ஆயினும் ஆன்மா தான் செய்யும் தவத்தின் அளவாகத் தானே அறியும்.

2013. உண்டு தெளிவன் உரைக்க வியோகமே
கொண்டு பயிலும் குணமில்லை யாயினும்
பண்டு பயிலும் பயில்சீவ னார்பின்னைக்
கண்டு சிவனுருக் கொள்வர் கருத்துளே.

பொருள் : யோகத்தைப் பயின்று தெளிந்த குரு உபதேசம் செய்ய யோகத்தில் பொருந்திப் பயில்வதற்குள்ள நற்பண்புகள் இல்லாதவராயினும், பழைய வாசனையால் பயின்ற சிவன் பின்னை அனுபவத்தைத் தம்முள்ளே பெற்றுச் சிவரூபம் பெறுவர். குரு உபதேசத்தால் பழைய வாசனை தூண்டப் பெற்று இப்பிறவியில் யோகசித்தி உண்டாகும்.

2014. மாயா உபாதி வசத்தாகும் சேதனத்து
ஆய குருஅரு ளாலே அதில்தூண்ட
ஓயும் உபாதியோடு ஒன்றின்ஒன் றாதுஉயிர்
ஆய துரியம் புகுந்தறி வாகவே.

பொருள் : உயிர் மாயையின் காரியமாகிய துன்பங்களில் தோய்ந்தும் தானும் அதன் வசமாகும். ஞானமே வடிவாக விளங்கும் குருவின் அருளால் சேதனத்தில் தூண்ட மாயா உபாதிகள் ஒன்றினும் பொருந்தாது உயிரின் செயல் ஒடுங்கும். பயிற்சி வசத்தால் துரிய நிலையில் புகுந்த ஞானமே வடிவாக விளங்கும். மாயா உபாதி - மாயா காரியமான தனு கரண புவன போகங்களால் உண்டாகும் துன்பம். குருவருள் - சிவோகம் பாவனை செய்து சிவப்பேறு எய்திய ஞானாசாரியன் திருவருள்; குரு அருளால் மாயா உபாதிகள் நீங்கி ஞானம் உண்டாகும்.

30. பசு (பசு - கட்டப்பட்ட உயிர்)

2015. கற்ற பசுக்கள் கதறித் திரியினும்
கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினும்
முற்ற பசுக்கள் ஒருகுடம் பால்போலும்
மற்றைப் பசுக்கள் வறன்பசு தானே.

பொருள் : வேத ஆகமங்களை நிரம்பக் கற்ற உயிர்கள் பொருள் அனுபவர் இன்றிப் புலம்பிக் கொண்டு திரிந்தாலும், அரச செல்வாக்கைப் பெற்றுள்ள உயிர்கள் தமக்குரிய விருது கட்டிக்கொண்டு தெரிந்தவர் போலத் திரிந்தாலும், முதிர்ந்த அனுபவம் உடையவரது ஒரு சிறிது ஞானமே உலகத்துக்குப் பயன் தரும். மற்றையோரது வாய்வேதாந்தம் வறட்டுப் பசுபோல் உலகுக்குப் பயன்படாது. (பசுக்கள் - வினையினால் கட்டுண்ட உயிர்கள். கொற்றம் - அரசு. குறி - அரசு மரியாதைக்கு உரிய அடையாளம். பால் - ஞானம் வாய் வேதாந்தம் பேசுவோர் உலகுக்குப் பயன்படார். )

2016. கொல்லையின் மேயும் பசுக்களைச் செய்வதென்
எல்லைக் கடப்பித்து இறைவன் அடிகூட்டி
வல்லசெய்து ஆற்ற மதித்தபின் அல்லது
கொல்லை செய் நெஞ்சம் குறிப்பறி யாதே.

பொருள் : ஐம்புலக் காட்டினுள் தம்புலம் அறியாது மேயும் பசுக்களாகிய ஆருயிர்களை வருமாறு செய்வதன்றி வேறென் செய்வது ? திருவருள் உடனாய் நின்று உடல், கலன் உலகு ஊண் முதலியவற்றின்கண் வைத்துள்ள பற்றின் எல்லையினைக் கடப்பித்துத் திவடியிற்கூட்டி இன்புறுவிக்கும் அச்செயலே நல்லதாகிய வல்ல அருஞ்செயல் செய்வதாகும். அத்திருவருள் அவ்வாறு செய்தருளத் திருவுள்ளங் கொண்ட பின்புதான் பண்படா விளை நிலமாகிய ஐம்புலக் கொல்லையினை இவ்வாறு செய்யும் திருக்குறிப்பினை ஆருயிர்கள் உணர்தல்கூடும். அதற்குமுன் ஏதும் அறியா இயல்பினவாகும்.

31. போதன் (போதன் - அறிஞன், சிவஞானத்தை அனுபவத்தில் கண்டவன்.)

2017. சீவன் எனச்சிவன் என்னவே றில்லை
சீவ னார்சிவ னாரை அறிகிலர்
சீவ னார்சிவ னாரை அறிந்தபின்
சீவ னார்சிவ னாயிட்டு இருப்பரே.

பொருள் : சீவன் எனவும் சிவனெனவும் இரு பொருளாக இருக்கவில்லை. சீவனார் சீவத் தன்மையில் உள்ளவரையில் சிவனை அறிய முடியாது. சீவனார் சிவத்தன்மை மாறி அகண்ட ஞானம் பெற்ற பிறகு சீவன் என்ற பெயரைப் பெறாது சிவம் என்ற பேரைப் பெற்று விளங்கும்.

2018. குணவிளக் காகிய கூத்தப் பிரானும்
மனவிளக் காகிய மன்னுயிர்க் கெல்லாம்
பணவிளக் காகிய பல்தலை நாகம்
கணவிளக் காகிய கண்காணி யாகுமே.

பொருள் : அறிவொளியாய் விளங்கும் நடராசப் பெருமானும் மனத்தை விளக்காகக் கொண்டு வாழ்கின்ற உயிர்களுக்கு எல்லாம் பல்தலை நாகத்தின் படத்தில் உள்ள நாகரத்தினம் போல் உயிர்க்கூட்டங்களுக்கு விளக்கம் தரும் மேற்பார்வையாளர் ஆகும். பணம் - படம். படத்திலுள்ள நாகரத்தினம் பாம்புக்கு பக்குவம் வந்தபோது ஒளியைத் தரும். அது போன்று கூத்தப் பெருமான் பக்குவம் வந்தபோது ஒளியை நல்குவான்.

2019. அறிவாய் அறியாமை நீங்கி யவனே
பொறிவாய் ஒழிந்தெங்கும் தானான போதன்
அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவன்
செறிவாகி நின்றஅச் சீவனும் ஆகுமே.

பொருள் : சிவத்தை (அகண்ட அறிவை) விடயமாகக் கொண்டு தம் அறியாமை நீங்கினவனே பஞ்சேந்திரியங்களால் கூட்டியறியும் அறிவை விடுத்து எங்கெங்கும் உள்ளவற்றை அங்கு அங்கு இருந்து காணும் அறிவைப் பெற்றவன் ஆவான். அவனே அறிவுருவாய் எல்லா உயிர்களிடத்தும் அறிவாய் நின்று அறிவன்; அறிவில் பொருந்தி நின்ற அச்சீவனும் ஆவான்.

2020. ஆறாறின் தன்மை அறியாது இருந்தேனுக்கு
ஆறாறின் தன்மை அறிவித்தான் பேர்நந்தி
ஆறாறின் தன்மை அருளால் அறிந்த பின்
ஆறாறுக்கு அப்புறம் ஆகிநின் றானே.

பொருள் : அருஞ்சைவர் தத்துவம் முப்பத்தாறும் இன்னின்ன என்னும் மெய்ம்மை அறியாதிருந்த அடியேனுக்கு மிகவும் சிறந்த நந்தி யெம்பெருமான் திருவருளால் அறிவிற்கு அறிவாய் நின்று அறிவித்தருளினன். அம்முப்பத்தாறின் தன்மைகளைத் திருவருளால் அறிந்தபின் அம்முப்பத்தாறு மெய்களுக்கும் அப்பால் நின்றருள்பவன் சிவபெருமான் ஆவன் என்னும் மெய்ம்மை புலப்பட்டது என்க.

2021. சிவமா கியஅருள் நின்றுஅறிந்து ஓரார்
அவமாம் மலம்ஐந்தும் ஆவது அறியார்
தவமான செய்து தலைப்பறி கின்றார்
நவமான தத்துவம் நாடகி லாரே.

பொருள் : சிவத்தோடு பிரிப்பின்றி விளங்கும் திருவருளில் நின்றறிந்து தெளியமாட்டார் கேட்டினைச் செய்யும் ஐம் மலங்களும் எவ்விதம் தம்மிடம் பொருந்துகின்றன என்பதையும் அறியமாட்டார். உடம்பை வருத்தித் தவங்கள் பல செய்தங்கள் அறிவைப் பாழாக்குகின்றனர். தோழமை நெறியில் விளங்கும் சிவத்தை ஆராயமாட்டார். என்னே அறியாமை ! சிவத்தின் அருளைத் தோழமை நெறி நின்று நாட வேண்டும்.

2022. நாடோறும் ஈசன் நடத்தும் தொழில்உள்ளார்
நாடோறும் ஈசன் நயந்தூட்டல் நாடிடார்
நாடோறும் ஈசன்நல் லோர்க்கருள் நல்கலால்
நாடோறும் நாடார்கள் நாள்வினை யாளரே.

பொருள் : நாளும் வினை செய்வோர் நாள்தோறும் இறைவன் உயிர்களாகிய நமக்குச் செய்யும் அருட்செயல்களை எண்ணார் நம் வினைக்கேற்ப இன்ப துன்பங்களை நளினமாக அவன் ஊட்டுவதையும் அறியார். இறைவன் நல்லவர்களுக்கே நாள்தோறும் அருள் வழங்குதலால் வினை செய்பவர்கள் நாள்தோறும் இதை எண்ண மாட்டார்கள். இறைவன் செய்யும் உபகாரத்தை நல்லறிஞர் உணர்வர்.

32. ஐந்து இந்திரியம் அடக்கும் அருமை

2023. ஆக மதத்தன ஐந்து களிறுன
ஆக மதத்தறி யோடுஅணை கின்றில
பாகனும் எய்த்துஅவை தாமும் இளைத்தபின்
யோகு திருந்துதல் ஒன்றுஅறி யோமே.

பொருள் : மிக்க மதம் பொருந்திய ஐந்து இந்திரியங்களாகிய யானைகள் உள்ளன. அவை உடலில் களிப்பினை நல்கும் சந்திர மண்டலமாகிய கட்டுத்தறியில் அணைந்து பொருந்துவதில்லை. இவற்றை அடக்க முயலும் ஆன்மாவாகிய பாகனும் இளைத்து ஐம்பொறிகளின் வல்லமையும் குறைந்தபிறகு யோக நெறியால் திருந்துதல் என்பதை நான் அறியவில்லை. (களிறு - இந்திரியங்கள். இந்திரியங்கள் செம்மையாய் இருக்கும்போதே யோகம் செய்தல் வேண்டும். இளைத்தபின் யோகம் சித்தியாது.)

2024. கருத்தின்நன் னூல்கற்று கால்கொத்திப் பாகன்
திருத்தலும் பாய்மாத் திகைத்தன்றிப் பாயா
எருத்துற ஏறி இருக்கிலும் ஆங்கே
வருத்தினும் அம்மா வழிநட வாதே.

பொருள் : கருத்துடைய நல்ல நூல்களைப் பலகாலும் கற்றுணர்ந்து பிராணனது இயக்கத்தை ஆன்மாவாகிய பாகன் மாற்றித் திருத்தலும், வேகமாகப் பாய்கின்ற இந்திரியங்களாகிய குதிரைகள் திகைத்து நிற்குமே தவிர ஏவியவுடன் பாய்ந்து செல்ல மாட்டா. பிடரியின்கண் நன்கு ஏறியிருந்து மிகவும் தூண்டி நடத்தினாலும் அக் குதிரைகள் முன்னே சென்று வழிச் செல்லமாட்டா. யோகப் பயிற்சியின்றி ஐம் புலன்களை அடக்குவது முடியாததொன்று யானையும் வருத்தம் உறாமல் வழிக்கு வருவதில்லை.

2025. புலம்ஐந்து புள்ஐந்து புள்சென்று மேயும்
நிலம்ஐந்து நீர்ஐந்து நீர்மையும் ஐந்து
குலம் ஒன்று கோல்கொண்டு மேய்ப்பான் ஒருவன்
உலம்வந்து போம்வழி ஒன்பது தானே.

பொருள் : ஐம்பூதங்களாகிய இடங்கள் ஐந்து ஞானேந்திரியங்களாகிய பறவைகள் ஐந்து. அவை சென்று பற்றும் தன் மாத்திரைகளாகிய புலன்கள் ஐந்து கன்மேந்திரியங்கள் ஐந்து. அவற்றின் செயல்களாகிய வசனாதிகளும் ஐந்து மாயையாகிய குலம் ஒன்று, அறிவாகிய கோலைக் கொண்டு அவற்றைச் செலுத்துகின்ற ஆன்மாவாகிய மேய்ப்பான் ஒருவன் உண்டு. அவன் வருந்திப் போகும்வழி உடம்பினுள் ஒன்பதாகும்.

2026. அஞ்சுள சிங்கம் அடவியல் வாழ்வன
அஞ்சும்போய் மேய்ந்துதம் அஞ்சுஅக மேபுகும்
அஞ்சின் உகிரும் எயிரும் அறுத்திட்டால்
எஞ்சாது இறைவனை எய்தலும் ஆமே.

பொருள் : உடம்பாகிய காட்டில் இந்திரியங்களாகிய சிங்கங்கள் ஐந்துள்ளன. அவ் ஐந்தும் புறம் சென்று புறப்பொருளைப்பற்றி அகம் வந்து சேரும் விஷயங்களைப் பற்றி நிற்கும் மனத்தையும் விஷயங்களில் ஈடுபடும் கருவிகளையும் செல்லவொட்டாது அடக்கி நிறுத்தி விட்டால் தவறாது இறைவனை அடைதலும் ஆகும். மனம் பொறிவழி செல்லாது தடுத்துவிட்டால் இறைவனை அடையலாம். சிங்கம் இந்திரியம், உகிர் - நகம் (செல்லுதல்) எயிறு - பல் (பற்றுதல்)

2027. ஐவர் அமைச்சருள் தொண்ணூற்று அறுவர்கள்
ஐவரும் மைந்தரும் ஆளக் கருதுவர்
ஐவரும் ஐந்து சினத்தொடே நின்றிடில்
ஐவர்க்கு சிறைஇறுத்து ஆற்றகி லோமே.

பொருள் : ஐந்து இந்திரியங்களாகிய அமைச்சரும் அவர்கட்கு அடங்கித் தொண்ணூற்றாறு தத்துவங்களாகிய ஏவலாளரும் உள்ளனர். அந்த அமைச்சர் ஐவரும் அவர்வழி வந்த தத்துவக் கூட்டமாகிய பிள்ளைகளும் நம்மை ஆளக் கருதுவார்கள். அந்த ஐவரும் ஐவகையான தாபத்தோடே செயல்படின் நம்மால் அந்த ஐவருக்கும் கையுறை கொடுத்துச் சமாளிக்க முடியாது.

2028. சொல்லகில் லேன்சுடர்ச் சோதியை நாடொறும்
சொல்லகில் லேன்திரு மங்கையும் அங்குள
வெல்லகில் லேன்புலன் ஐந்துடன் தன்னையும்
கொல்லநின் றோடும் குதிரைஒத் தேனே.

பொருள் : தினந்தோறும் சுயம் சோதியாகப் பிரகாசிக்கும் சிவத்தைத் தோத்திரிக்கும் வன்மையுடையேன் அல்லேன். திருவருள் அம்மையும் அங்கிருப்பதைச் சொல்ல வல்லேன் அல்லேன். இந்திரியங்களையும் அவற்றின் வயப்பட்டு அலையும் மனத்தையும் வெல்லும் ஆற்றல் உடையேன் அல்லேன். கொல்லுவதற்குக் கொண்டு செல்லும் குதிரைமேல் ஏறியவனை ஒத்தேன்.

2029. எண்ணிலி இல்லி அடைத்துஅவ் இருட்டறை
எண்ணிலி இல்லியோடு ஏகில் பிழைதரும்
எண்ணிலி இல்லியோடு ஏகாமை காக்குமேல்
எண்ணிலி இல்லதோர் இன்பமது ஆமே.

பொருள் : இவ்வுடல் அளவிட முடியாத தொளைகளை உடையதாகும். மனமானது கணக்கற்ற தொளைகளையுடைய உடல் இன்பத்தைத் தேடி ஓடுமாயின் குற்றம் விளையும். உயிரானது மனவழிச் சென்று கணக்கற்ற தொளைகளையுடைய உடல் இன்பத்தை நாடாமல் இருக்குமாயின் எண்ணமற்ற உள்ளத்தில் ஓர் இன்பம் உண்டாகி நிற்கும். (மனம் பொறிவழி நாடாமல் இருக்குமாயின் எண்ணமிலா இன்பம் எய்தலாம்.)

2030. விதியின் பெருவலி வேலைசூழ் வையம்
துதியின் பெருவழி தொல்வான் உலகம்
மதியின் பெருவலி மானுடர் வாழ்க்கை
நிதியின் பெருவலி நீர்வலி தானே.

பொருள் : கடலால் சூழப்பட்ட பூமியில் உள்ள மக்களுக்கு அவரவர் புண்ணிய பாவத்துக்கு ஏற்ப வாழ்க்கை அமையும். சிவத்தைத் துதித்துப் பெருமையான வல்லமை பெற்றவர்க்குப் பழமையான வானுலகம் அமையும். சந்திர மண்டல வல்லமைக்கு ஏற்ப மானிடர் வாழ்க்கை உள்ளது. அட்டமா சித்திகளை அடைவதே அழகான நிதியின் பெருவலியாகும்.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் - Page 3 Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Tue Mar 27, 2012 1:35 pm

33. ஐந்து இந்திரியம் அடக்கும் முறைமை.

2031. சூட்டம் ஒருமுழம் உள்ளம் அரைமுழம்
வட்டம் அமைந்ததோர் வாவியுள் வாழ்வன
பட்டன மீன்பல பரவன் வலைகொணர்ந்து
இட்டனன் யாம்இனி ஏதம்இ லோமே.

பொருள் : சந்திரமண்டலமாகிய குளம் ஒரு முழம் அகலமும் அரைமுழம் (ஒரு சாண்) ஆழமும் உள்ளது. வட்ட வடிவமாக அமைந்த அக்களத்தில் விஷய வாசனைகளாகிய மீன்கள் வாழ்கின்றன. சிவபெருமானாகிய வலைஞன் வலையைக் கொண்டு வீசினான். அவ்வலையில் மீன்கள் அகப்பட்டுக் கொண்டன. யாம் இனிப் பிறவித்துன்பம் நீங்கினோம். (பரதவன் - பரவன் என இடைக் குறைந்தது. இங்குக் குளம் என்றது சிரசின் பகுதியாகும்.)

2032. கிடக்கும் உடலில் கிளர்இந் திரியம்
அடக்க லுறும்அவன் தானே அமரன்
விடக்கிரண்டு இன்புற மேவுறு சிந்தை
நடக்கின் நடக்கும் நடக்கும் அளவே.

பொருள் : அறிவற்றுக் கிடக்கும் உடலில் கிளர்ந்து எழுகின்ற இந்திரியங்களை அடக்க வல்லவனே அமரன் ஆவான். உடம்பின்கண் அருந்துதல் பொருந்துதல் ஆகிய இரண்டு இன்பங்களிலும் மனம் பொருந்தி நிற்கும் அளவும் உடம்பில் சுவாச இயக்கம் இருந்துகொண்டே இருக்கும். இரண்டு இன்பமாவன: உணவை அருந்துவதிலும், பெண்ணைப் பொருந்துவதிலும் உண்டாகும் இன்பம். இவ்விரண்டும் விருப்பம் உள்ளவரை பிராண செயம் உண்டாகாது. விடக்கு - உடல். நடக்கும் அளவு - பிராணவாயு இயங்கும்வரை.

2033. அஞ்சும் அடக்குஅடக்கு என்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கிலை
அஞ்சும் அடக்கிய அசேதன மாம்என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவுஅறிந் தேனே.

பொருள் : இந்திரியங்கள் ஐந்தையும் அடக்க வேண்டும் என்று வற்புறுத்திச் சொல்வார்கள் அறிவில்லாதவர்கள். அவ்வாறு ஐந்தையும் அடக்கிய தேவர்களும் இல்லை. ஐந்தையும் அடக்கிவிட்டால் அறிவற்ற சடப்பொருளாகும் என்று கருதி ஐந்தையும் அடக்காமல் இயங்கச் செய்கிற உபாயத்தை உணர்ந்து கொண்டேன். (புலனடக்கம் என்பது அவற்றைத் தீய வழியிற் செலுத்தாமல் தூய வழியில் செலுத்துதல் ஆகும்.)

2034. முழக்கி எழுவன மும்மத வேழம்
அடக்க அறிவென்னும் கோட்டையை வைத்தேன்
பிழைத்தன ஓடிப் பெருங்கேடு மண்டிக்
கொழுத்தன வேழம் குலைக்கின்ற வாறே.

பொருள் : இந்திரியங்களாகிய மும்மத யானைகள் பிளிறிக் கொண்டு எழுகின்றன. அவற்றை அடக்க அறிவாகிய கோட்டையை வைத்தேன். ஆனால் அவை அக் கோட்டையினின்றும் தப்பியோடி வெளியே கேடு தரும் புலன்களில் மண்டி உடம்பாகிய கரும்பை அழித்துத் திமிர்கொண்டு அலைகின்றன.

2035. ஐந்தில் ஒடுங்கில் அகலிடம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அருந்தவம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அரன்பதம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அருளுடை யாரே.

பொருள் : பிரணவமாகிய ஐந்தில் ஒடுங்கினால் நாதாந்தரமாகிய அகலிடம் அமையும். இதுவே மேலான தவமாகும். இதுவே சிவபதமுமாகும். இதில் ஒடுங்கி நின்றவாரே அருளுடையார் திரு ஐந்தெழுத்தை ஓதினால் இவை யாவும் சித்தியாகும் என்பதாம்.

2036. பெருக்கப் பிதற்றிலென் பேய்த்தேர் நினைந்தென்
விரித்த பொருட்கெல்லாம் வித்தாவது உள்ளம்
பெருக்கிற் பெருக்கம் சுருக்கிற் சுருக்கம்
அருத்தமும் அத்தனை ஆராய்ந்துகொள் வார்க்கே.

பொருள் : நிரம்பப் பேசி என்ன பயன் ? கானல் நீரைப் போன்று தோன்றி மறையும் உலகை நினைந்து என்ன பயன் ? பரவலாக விரிந்துள்ள பொருளுக்கெல்லாம் வித்தாக உள்ளம் இருக்கிறது. உலகப் பொருளை மிருதியும் நினைக்கில் உலகைப் பற்றி சிந்தனை மிகுதியும் பெருகிவிடும். அவற்றை நினையாது சிவத்தை நினையில் உலகப் பொருள் அங்குச் சுருங்கிவிடும். இதனை ஆராய்ந்து தெளிவார்க்கு இவ்வளவுதான் உண்மைப் பொருளாகும்.

2037. இளைக்கின்ற வாறு அறிந்து இன்னுயிர் வைத்த
கிளைக்குஒன்றும் ஈசனைக் கேடில் புகழோன்
தளைக்கொன்ற நாகம்அஞ் சாடல் ஒடுக்கத்
துளைக்கொண்டது அவ்வழி தூங்கும் படைத்தே.

பொருள் : பாசவழி நீங்கிப் பெருமை பெற்ற சீவன் பொறிவழிச் சென்று கெடுகின்றமையை அறிந்து, இனிய உயிர்கட்காக அடியார் கூட்டத்தை வைத்து அவரோடு பொருந்தியிருக்கும் ஈசனிடம் பாசத்தினின்றும் விடுபட்ட மனத்தினது ஐவகைச் சேட்டைகளையும் ஒடுக்கி நிற்க, ஐம்பொறியாகிய தொளை வழிச் சென்றது பிரமரந்திரமாகிய தொளையில் இன்பத்தைப் பெற்று ஓய்ந்திருக்கும்.

2038. பாய்ந்தன பூதங்கள் ஐந்தும் படரொளி
சார்ந்திடும் ஞானத் தறியினில் பூட்டிட்டு
வாய்ந்துகொள் ஆனந்தம் என்னும் அருள் செய்யில்
வேய்ந்துகொள் மேலை விதியது தானே.

பொருள் : ஐம்பூதங்களில் தூலத் தன்மை மாறிச் சூக்குமமான ஐவகை ஒளிகளாய், சார்ந்து விளங்கும் ஊர்த்துவ சகஸ்ர தளமாகிய தறியினில் கட்டப்பெறும் பேற்றை அடைவாயாக. ஆனந்த சக்தி உன்னிடம் பதியில் இதுவே முடிவானது என்று சிரசின்மேல் சூடிக் கொள்வாயாக. இதுவே மிகப் பழமையான நெறியாகும்.

2039. நடக்கின்ற நந்தியை நாடோறும் உன்னில்
படர்க்கின்ற சிந்தையைப் பைய ஒடுக்கிக்
குறிக்கொண்ட சிந்தை குறிவழி நோக்கில்
வடக்கொடு தெற்கு மனக்கோயி லாமே.

பொருள் : எல்லா உயிர் வகையிலும் பொருந்தி இயக்குகின்ற சிவத்தை நாள்தோறும் தியானிப்பதால், எல்லாப் பொருளிடத்தும் சென்று பற்றும் மனத்தை மிகவும் மெதுவாக ஒடுக்கி, ஊர்த்துவ சகஸ்ர தளத்தைக் குறியாகக் கொண்டு அதன் வழியே மனம் பதிவுண்டால் சிரசிலுள்ள இடப்பாக மாகிய வடக்கும் வலப்பாகமாகிய தெற்கும் வளர்ந்து மனக் கோயிலாக அமையும். வடபெருங்கடலும் தென் பெருங்கடலும் நடங்கொள் இடமாகக் கொண்டருளும் சிவபெருமான் திரு ஐந்தெழுத்து எண்ணுபவர் சிந்தையே திருக்கோவிலாகக் கொண்டருள்வன் எனவும் பொருள் கொள்ளலாம்.

2040. சென்றன நாழிகை நாள்கள் சிலபல
நின்றது நீள்பொருள் நீர்மேல் எழுத்துஒத்து
வென்று புலன்கள் விரைந்து விடுமின்கள்
குன்று விழவதில் தாங்கலும் ஆமே.

பொருள் : முன்னே கூறிய சாதனையில் சில நாழிகைகள் சில நாட்கள், பின் பல நாட்கள் சென்றன. அதனால் உலகப் பொருள் எல்லாம் நீர் மேல் எழுத்துப்போல் அழிவனவாகத் தோன்றின. இவ்வகையே புலன்களின்மேல் செல்லும் விருப்பத்தினை விரைந்து விடுங்கள். பின் மலை போன்ற துன்பம் வந்தாலும் தாங்க முடியும்.

2041. போற்றிசைத் துப்புனி தன்திரு மேனியைப்
போற்றிசெய் மீட்டே புலன்ஐந்தும் புத்தியால்
நாற்றிசைக் கும்பின்னை யாருக்கும் நாதனை
ஊற்றுகை உள்ளத்து ஒருங்கலும் ஆமே.

பொருள் : தூயோனாகிய சிவபெருமான் திருமேனியைப் போற்றி இசைத்துத் தொழுங்கள். சிவன் நினைவாகிய சிறந்த அறிவினால் புலன்களைப் புன்னெறியதனிற் செல்லும் போக்கினை விலக்கி மேலாம் நன்னெறி ஒழுகச் செய்யும் பெரு நிலம் வாய்க்கும். அந்நலத்தால் நாற்றிசைக்கும் முன்னையும் பின்னையுமாக விளங்கும் அனைத்து உயிர்க்கும் முழுமுதல்வன் சிவன். அவனே நாதனாகவும் விளங்குவன். அச் சிவபெருமானைக் கண்டு தொழுக. அதனால் அவன் திருவடிக்கண் ஒடுங்குதலும் நிலைபெறும் என்க.

2042. தரிக்கின்ற நெஞ்சம் சகளத்தின் உள்ளே
அரிக்கின்ற ஐவரை யாரும் உணரார்
சிரிக்கின்ற வாறு சிலபல பேசில்
வரிக்கொண்ட மைசூழ் வரையது வாமே.

பொருள் : உடம்பினுள் தாங்கிக் கொண்டிருக்கும் உள்ளத்தினால் உடம்பை அரித்துத் தின்னுகின்ற ஐம்பொறிகளாகிய கள்வரை யாரும் உணரவில்லை. நகைக்கின்றவாறு உலக விஷயங்களில் சில பலவற்றைப் பேசிக் கொண்டிருப்பின், உயர்ந்துள்ள அண்டகோசம் கரிய இருளால் சூழப்பட்ட எல்லையாகவேதான் இருக்கும். (சிவபெருமான் கொண்டருளும் அருள் திருமேனியைச் சகளம் என்பர். சகளம் - நிலைக்களம்)

2043. கைவிட லாவதுஒன்று இல்லை கருத்தினுள்
எய்தி அவனை இசையினால் ஏத்துமின்
ஐவ ருடைய அவாவினில் தோன்றிய
பொய்வ ருடுஐய புலன்களும் ஐந்தே.

பொருள் : ஐம்பொறிகளை அடக்கி விட்டால் விடவேண்டியது ஒன்றும் இல்லை. அகத்தினுள் பொருந்தி யிருக்கும் பரம்பொருளை இயல்பான முறையில் தொழுங்கள். இல்லை மேல் ஐம்பொறிகளின் விருப்பத்தில் விளைந்த பொய்யினையே பொருந்தும் புலன்கள் ஐந்து புறத்தே கவர உள்ளன. (இறைவனை அகத்தே எண்ணியிருந்தால் புறத்தேயுள்ள ஐம்புல ஆசைகள் தோன்றா.)

34. அசற்குரு நெறி (அசற்குரு - சன்மார்க்கம் அறியா குரு)

2044. உணர்வுஒன்று இலாமூடன் உண்மைஓ ராதோன்
கணுவின்றி வேதா கமநெறி காணான்
பணிஒன்று இலாதோன் பரநிந்தை செய்வோன்
அணுவின் குணத்தோன் அசற்குரு வாமே.

பொருள் : சிவ உணர்வு இல்லாத மூடனும், உண்மைப் பொருளை ஆராயாதவனும், சிக்கலின்றி வேத ஆகமங்கள் உணர்த்தும் நெறியினைக் காணாதவனும், அடக்கமில்லாதவனும், பிறரை நிந்திப்போனும், ஆன்மபோதம் உடையவனும் ஆகிய இவர் அசற்குரு ஆவர். (கணு - முடிச்சு; வேதாகமங்களின் மறைபொருள். அணுவின் குணம் - சீவபோதம், இவ் அறுவகையினரும் சன்மார்க்கம் உபதேசிக்கும் நெறியில்லாதவர் ஆவர்.)

2045. மந்திர தந்திர மாயோக ஞானமும்
பந்தமும் வீடும் தரிசித்துப் பார்ப்பவர்
சிந்தனை செய்யாத் தெளிவியாது ஊண்பொருட்டு
அந்தகர் ஆவோர் அசற்குரு வாமே.

பொருள் : மந்திர தந்திரம் மாட்சிமையுடைய யோகம் ஞானமுடன் பாசம் முத்தி ஆகியவற்றைக் கண்டு உணர்ந்திருப்பாரை மனத்தினால் நினைத்தும் உண்மை ஞானம் பெறச் செய்யாமல் வயிற்றுப்பாட்டுக்குக் குருடராய்த் திரியும் குருமார்கள் அசற்குரு ஆவர்.

2046. ஆமாறு அறியாதோன் மூடன் அதிமூடன்
காமாதி நீங்காக் கலதி கலதிகட்கு
ஆமாறு அசத்துஅறி விப்போன் அறிவிலோன்
கோமான் அலன்அசத் தாகும் குரவனே.

பொருள் : பேரின்பத்தை அடைதற்குரிய உபாயத்தை அறியாதவனும், அறிவில்லாதவனும் அறிவில்லாத செயலைச் செய்பவனும் காமம் முதலிய ஆறு பகைகளை நீங்கப் பெறாத கீழ் மகனும், பாவிகளுக்கு மெய்யை உணர்த்தாது பொய்யை உணர்த்துபவனும் ஆகிய அறிவற்றவன் சிறந்த குரு ஆக மாட்டான். அவன் அசற்குருவேயாகும். (மூடன் - நன்மை தீமைகளை அறியாதவன். அதிமூடன் - நன்மை தீமைகளை அறிந்தும் தீமை செய்பவன்.)

2047. கற்பாய கற்பங்கள் நீக்காமற் கற்பித்தால்
தற்பாவங் குன்றும் தனக்கே பகையாகும்
நற்பால் அரசுக்கும் நாட்டுக்கும் கேடென்றே
முற்பாலே நந்தி மொழிந்துவைத் தானே.

பொருள் : உலக வாழ்வு பற்றிய எண்ணங்களை நீக்காமல் மந்திர உபதேசம் செய்தால் சிவபாகம் சிறந்து வெளிப்படாமல் சுருங்கி நிற்கும். சிவத் தியானமும் உலக போகமும் ஒன்றுக்கொன்று முரணானது பற்றித் தீமையும் விளையும். இத்தகைய குருமார்கள் வாழும் நாட்டுக்கும் அரசனுக்கும் தீங்குவரும் என்று முன்னமே சிவபெருமான் திருவாய் மலர்ந்து அருளினான். உலக யோகத்தில் திளைப்பவர் நல்ல குரு ஆகார்.

2048. குருடர்க்குக் கோல்காட்டிச் செல்லும் குருடர்
முரணும் பழங்குழி வீழ்வர்கள் முன்பின்
குருடனும் வீழ்வர்கள் முன்பின் அறவே
குருடரும் வீழ்வார் குருடரோடு ஆகியே.

பொருள் : கண்ணில்லாதவர்க்குக் கோலைக் கொடுத்து வழிகாட்டிச் செல்லும் கண்ணில்லாதவர், வழிக்கு மாறுபட்ட பழைய குழியிலே முன்னே விழுவார்கள். அதற்குப் பின்பு அவரைப் பின்பற்றி வந்த குருடரும் அந்தக் குழியிலே விழுவார்கள். அதுபோல ஞானத்தை உணராத சீடரும் அசற்குருவோடு சேர்ந்து முன்பின் இல்லாமல் ஒருசேர அஞ்ஞானத்தில் விழுவார்கள். (சிவஞானம் போதிக்கும் குரு அகக் கண் உடையவராய்க் காமத்தை வென்றவராய் இருக்க வேண்டும்.)

35. சற்குரு நெறி (சற்குரு - சத்தை உணர்த்தும் குரு)

2049. தாள்தந்து அளிக்கும் தலைவனே சற்குரு
தாள்தந்து தன்னை அறியத் தரவல்லோன்
தாள்தந்து தத்துவா தீதத்துச் சார்சீவன்
தாள்தந்து பாசம் தணிக்கும் அவன்சத்தே.

பொருள் : சிவகுருவாக எழுந்தருளிவந்து தலையளிபுரியும் சிவனும் அதற்கு வழித்துணையாக நிற்கும் குலகுருவும் கருத்தில் ஒருவரே யாவர். சிவபெருமானின் திருவடிகளைத் தந்தருள்பவனே மெய்க் குரவன். மெய்க் குரவன் எனினும் சற்குரு எனினும் ஒன்றே. திருவடிகளைத் தந்தருளித் தன்னையும் உண்மையாக அறிவிப்பவன் மெய்க்குரு. தாளை அருளித் துவாதீதமாகிய அப்பால் நிலைக்கண் ஆருயிரைச் சாரச் செய்பவன் குரு. திருவடிகளைத் தந்தபின் பாசம் துடைத் தருள்வன். அவன் என்றுமுள்ள மெய்ப் பொருளாவன். (சத்து - மெய்ப்பொருள்)

2050. தவிரவைத் தான்வினை தன்னடி யார்கோள்
தவிரவைத் தான்சிரத் தோடுதன் பாதம்
தவிரவைத் தான்நமன் தூதுவர் கூட்டம்
தவிரவைத் தான்பிற வித்துயர் தானே.

பொருள் : சிவகுருவாக எழுந்தருளிய சிவன் ஆருயிர்கட்கு அளித்தருளும் அருளிப்பாடுகள் பலவாம். அவை வருமாறு: தன்னடியார்களின் வினைகளை நீங்க அருளினன். தன்னடியார் கட்குக் கோள்கள் துன்புறுத்தாமல் அவர் ஏவும் தொழிலை இயற்ற அருளினான். நமனின் தூதுவர் கூட்டம் நணுகாது விலக வைத்தனன். பிறவிப் பெருந்துயர் நீங்க வைத்தனன்.

2051. கறுத்த இரும்பே கனகமது ஆனால்
மறித்துஇரும் பாகா வகையது போலக்
குறித்தஅப் போதே குருவருள் பெற்றான்
மறித்துப் பிறவியில் வந்தணு கானே.

பொருள் : கருமை நிறம் வாய்ந்த இரும்பு வேதிப்பான் தொழிலால் செம்பொன் ஆகும். அங்ஙனம் செம்பொன் ஆனபின் மீண்டும் இரும்பாகாது. அவ்வகை போன்று செவ்வி வாய்ந்த பொழுது சிவகுரு எழுந்தருள்வன். குறித்த அப்பொழுதே குருவருள் கிட்டும். அக்குருவருள் பெற்றவன் மீண்டும் பிறவிப் பெருங்கடலில் வந்து பொருந்தான்.

2052. பாசத்தை நீக்கிப் பரனோடு தன்னையும்
நேசத்து நாடி மலமற நீக்குவோர்
ஆசற்ற சற்குரு வாவோர் அறிவற்றுப்
பூசற்கு இரங்குவோர் போதக் குருவன்றே.

பொருள் : திருவருளால் சிவ பெருமானுடன் தன்னையும், அன்பினால் ஆராய்ந்து அருளால் பாசத்தை நீங்கியவரும், ஏனை யார்க்கும் அவ் அருளாலேயே மலமற நீக்குபவரும் மெய்க்குரவராவர். அங்ஙனமின்றி நல்லறிவு சிறிதும் இல்லாது மாயப் போர்க்கு மனம் இரங்குவோர் கோழையாகும் புல்லியராவர். அவர் ஒரு ஞான்றும் மெய்யுணர்வுக் குரவராகார். (பூசற்கு - கலகத்திற்கு)

2053. நேயத்தே நிற்கும் நிமலன் மலமற்ற
நேயத்தை நல்கவல் லோன்நித்தன் சுத்தனே
ஆயத்த வர்தத் துவம்உணர்ந் தாங்குஅற்ற
நேயர்க்கு அளிப்பவன் நீடும் குரவனே.

பொருள் : இயல்பாகவே பாசங்களினின்று நீங்கிய முழுமுதற் சிவன் அன்பரது அன்பு அகத் தாமரையில் அருளால் பிணைந்து நிற்பன். குற்றமற்ற தன்னை மெய் அன்பர்கட்குச் சுற்றமாகக் கொடுத்தருளும் துணைவன் என்றும் அழியா நிலைமையன்; இயற்கைத் தூய்மையன்; சிவமெய்யடியார் கூட்டத்துத் திரு அருளால் கூடி மெய்யுணர்வு கைவரப் பெற்றவர் தத்துவம் உணர்ந்தோராவர். அவரே மலப் பசை அற்றவரும் ஆவர். அத்தகையோர் பேரன்பினர். அவர்க்குத் திருவடிப்பேறு அளிப்பவனே நிலைபெற்ற மெய்க் குரவன் ஆவான்.

2054. பரிசன வேதி பரிசித்தது எல்லாம்
வரிசை தரும்பொன் வகையாகு மாபோல்
குருபரி சித்த குவலயம் எல்லாம்
திரிமலம் தீர்ந்து சிவகதி யாமே.

பொருள் : பொன்னாக்கும் மருந்து பரிசனவேதி எனப்படும். இதனைப் பொன்னாக்குவது எனப் புகலினும் பொருந்தும் உலகியற் பொருள்களில் இயைபுடைய பொருள்கள் எல்லாவற்றினும் பட்ட அளவானே அவை முற்றும் பொன்னாகிவிடும். அதுபோல் மெய்க் குரவனாகிய சிவகுருதொட்ட இடமெல்லாம் மும்மலம் அகன்று, ஆருயிர்க் கிழவர் செம்மலர் நோன்றாள் சேர்ந்து சிவகதி எய்திச் சிவனாகிச் சிவனடிக் கீழ் இருப்பர்.

2055. தானே எனநின்ற சற்குரு சந்நிதி
தானே எனநின்ற தன்மை வெளிப்பாடில்
தானே தனைப்பெற வேண்டும் சதுர்பெற
ஊனே எனநினைந்து ஓர்ந்துகொள் உன்னிலே.

பொருள் : சிவமே தானாக எழுந்தருளிய சற்குருவின் திருமுன்பு ஆன்மாவின் தன் உண்மை தோன்றுமாயின், ஆன்மாவே சிவத்தைப் பெருமைபெற அறிவதாகும். அவ் அறிவே உன் உடம்பினுள் இருக்கும் சிவம் என்று தேர்ந்து கொள்வாயாக.

2056. வரும்வழி போம்வழி மாயா வழியைக்
கருவழி கண்டவர் காணா வழியைப்
பெரும்வழி யாநந்தி பேசும் வழியைக்
குருவழியே சென்று கூடலும் ஆமே.

பொருள் : வினைக்கீடாக வரும் வழியாம் பிறப்பும், போம் வழியாம் இறப்பும் எஞ்ஞான்றும் மாறா, மறையா, அழியா வழியாக நிற்கும். இவ்வழியினைப் பிறக்கும் கருவழி கண்டவர் காண்பர். இவ்வழியினைக் காணாதவர் அருளால் காணும் வழி பெரு வழி. அவ்வழி நந்தி முதல்வராய் நவின்று நாட்டியருளப் பட்ட நல்வழியாகும். அதுவே நன்னெறி; திருநெறி. அதனைச் சிவகுருவின் திருவருள் வழியே சென்று பொருள் பெறப் பெறுவதாகும்.

2057. குருஎன் பவனே வேதாக மங்கூறும்
பரஇன்ப னாகிச் சிவயோகம் பாவித்து
ஒருசிந்தை யின்றி உயிர்பாசம் நீக்கி
வருநல் குரவன்பால் வைக்கலும் ஆமே.

பொருள் : சிவகுரு என்று அழைக்கப்படுபவன் செந்தமிழ் மறைமுறையாம் வேதாகமம் சிறந்து எடுத்து ஓதும் பேரின்ப வடிவினன். அவ்வடிவு உடையவனாகிச் செவ்வி உயிரினுக்குச் சிவயோகம் சேர்ப்பித்து அருள்வன். அவ்வுயிர் திருவடியுணர்வு கைவந்தமையால் வேறோர் எண்ணமும் எண்ணுவதில்லை; அவ்வுயிரை அந் நிலையான் உயரச் செய்து பாசப் பசை அகற்றித் திருவடி நிழற்கீழ் வருவித்துப் பேற்றின்கண் நிலைப்பிப்பவன் சிவகுரு ஆவான்.

2058. சத்தும் அசத்தும் சதசத்தும் தான்காட்டிச்
சித்தும் அசித்தும் சிவபரத் தேசேர்த்துச்
சுத்தம் அசுத்தம் அறச்சுக மானசொல்
அத்தன் அருட்குரு வாம்அவன் கூறிலே.

பொருள் : சத்தாகிய சிவமும் அசத்தாகிய மாயையும், சத்தோடு கூடிச் சத்தாகவும், அசத்தோடுகூடி அசத்தாகவும் உள்ள ஆன்மாவும் ஆகிய முப்பொருள்களின் இயல்புகளை உணர்த்திச் சித்தாகிய ஆன்மாவையும் அசித்தாகிய முப்பத்தாறு தத்துவங்களையும் சிவத்தோடு சேர்த்து சுத்த மாயையும் அசுத்த மாயையும் நீங்க இன்ப வடிவான பிரணவ உபதேசம் செய்யும் தலைவனே அருட்குரு என்று சொல்லப் பெறுவான். (சத்து - அழியாதது; அசத்து - அழிவுடையது. சதசத்து - ஆன்மா அழியாததாயினும் சார்ந்ததன் வண்ணமாய் இருப்பது. சித்து அறிவு. அசித்து - அறியாமை.)

2059. உற்றிடும் ஐம்மலம் பாச உணர்வினால்
பற்றறு நாதன் அடியில் பணிதலால்
சுற்றிய பேதம் துரியம்மூன் றால்வாட்டித்
தற்பரம் மேவுவோர் சாதகர் ஆமே.

பொருள் : உயிர்களுடைய பாச உணர்வினால் ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி ஆகிய ஐம்மலங்களும் பொருந்தும், சிவபெருமானது திருவடியைப் பணிவதால் அவா நீங்கும். சிவப்பறை ஆதாரமாகக் கொண்டு ஆன்மாவைச் சுற்றியுள்ள பேத ஞானத்தைச் சீவதுரியம், சிவதுரியம், பரதுரியம் ஆகிய மூன்றினாலும் கெடுத்து, தத்பரம் என்ற மேலான சிவத்தைச் சார்வோர் சாதகராவர்.

2060. எல்லாம் இறைவன் இறைவி யுடன்இன்பம்
வல்லார் புலனும் வருங்கால் உயிர்தோன்றிச்
சொல்லா மலம்ஐந்து அடங்கியிட்டு ஓங்கியே
செல்லாச் சிவகதி சேர்தல்விளை யாட்டே.

பொருள் : எல்லா உயிர்களும் இன்பம் நுகர்தற்குரிய வலிமை மிக்க புலன் உணர்வோடு பொருந்த, வருங்காலத்து இறைவன் இறைவியோடு உள்ளத்தில் தோன்றவே சொல்லாமலே ஐம்மலச் சேட்டைகளும் அடங்கி உயிர் சிறந்து மீண்டுவாராநெறி அடைவித்தல் இறைவனுக்கு விளையாட்டாகும். முதல் இரண்டு அடிகளைப் பொருள் இயைபுக்கேற்பக் கொண்டு கூட்டுக.

2061. ஈனப் பிறவியில் இட்டது மீட்டூட்டித்
தானத்துள் இட்டுத் தனையூட்டித் தாழ்த்தலும்
ஞானத்தின் மீட்டலும் நாட்டலும் வீடுற்று
மோனத்துள் வைத்தலும் முத்தன்தன் செய்கையே.

பொருள் : இழிந்த பிறவியில் செலுத்தி, பின்பு அதனின்றும் மீட்டு வினைப் போகங்களை அருத்தி, பத முத்தியை அடையப் பண்ணி, பதவிகளின் போகங்களை அருந்தச் செய்து உயிர்களைப் பிறவிக்கடலில் ஆழ்த்துதலும், பின் சிவஞானத்தில் மீளச் செய்தலும் அதிலேயே நிலைபெறுத்தலும், வீட்டினைப் பொருந்தி மௌனம் என்ற பேசாப் பெருவாழ்வு அளித்தலும் ஆகியவை முத்தியை அளிக்கும் சிவனது செயலாம்.

2062. அத்தன் அருளின் விளையாட் டிடம்சடம்
சித்தொடு அசித்துஅறத் தெளிவித்த சீவனைச்
சுத்தனும் ஆக்கித் துடைத்து மலத்தினைச்
சத்துடன் ஐங்கரு மத்திடும் தன்மையே.

பொருள் : சிவபெருமான் செய்தருளும் திருஐந்தொழிலின் திரு விளையாட்டிடம் ஆருயிர்களின் உடம்பாகும். அறிவுடையன இவை அறிவில்லன இவை, என ஆருயிர்கட்கு அறிவித்து அவ் அறிவினால் தெளிவிக்கப்பட்ட செவ்வி உயிரை மலம் நீக்கி அருளுகின்றனன். உண்மைப் பொருளாகிய தன் வண்ணம் ஆக்குகின்றனன். இவையே திரு ஐந்தெழுத்தின் சிறப்பால் பெறப்படும் பேரின்பப் பேற்றினுக்கு வாயிலாகிய திரு ஐந்தொழிலாகும்.

2063. ஈசத்து வங்கடந்து இல்லையென்று அப்புறம்
பாசத்து ளேயென்றும் பாவியும் அண்ணலை
நேசத்து ளேநின்ற நின்மலன் எம்மிறை
தேசத்தை எல்லாம் தெளியவைத் தானே.

பொருள் : ஈசுவரத் தன்மையைப் பெறுவதற்குமேல் பேறு இல்லையென்று, அப்புறமாகி நின்ற சதாசிவ மூர்த்தியைப் பாசத்தில் உள்ளபோதே பற்றி நில்லுங்கள். பாசத்தின்கண் அவன் அன்போடு பொருந்தி யிருப்பினும் அதில் ஒட்டாத நின்மலன் ஆவன் அவன் தங்கியிருந்த பாச மயமான புவனங்களை ஒளிமயமாகச் செய்தான் (ஈசத்துவம் - தலைமைத் தன்மை)

2064. மாணிக்க மாலை மலர்ந்தெழு மண்டலம்
ஆணிப்பொன் நின்றங்கு அமுதம் விளைந்தது
பேணிக்கொண்டு உண்டார் பிறப்பற்று இருந்தார்
ஊனுக்கு இருந்தார் உணராத மாக்களே.

பொருள் : சிவந்த மாணிக்க மாலையைப் போல ஒளிவிட்டு எழுகின்ற புருவ நடுவாகிய மண்டலத்தில், மாற்றுயர்ந்த பொன் போன்ற சிவம் பொருந்தி நின்று பேரின்பமாகிய அமுதினை விளையச் செய்தது. இதனைத் தெரிந்து விந்து செயத்தால் அமுதத்தைப் பெருகச் செய்து கொள்வரே பிறப்பற்றகனைய ஏனையோர் சோற்றுக்குக் கேடாய் வாழ்பவர் ஆவர்.

2065. அசத்தொடு சத்தும் அசத்சத்து நீங்க
இசைத்திடு பாசப்பற்று ஈங்குஅறு மாறே.
அசைத்துஇரு மாயை அணுத்தானும் ஆங்கே
இசைத்தானும் ஒன்றறி விப்போன் இறையே.

பொருள் : மலத்தொடு கூடிய ஆன்மா சீவத்தன்மை நீங்கவும், கூடப்பட்ட பாசபற்றுகள் அற்ற ஒழியவும், சுத்த மாயை அசுத்த மாயை ஆகிய இரு மாயைகளையும் நெகிழ்வித்து அணுவாகிய ஆன்மாவை அங்கே கூட்டியவனும், பிரணவ உபதேசம் செய்பவனும் இறைவன் ஆவான்.

2066. ஏறு நெறியே மலத்தை எரித்தலால்
ஈறில் உரையால் இருளை அறுத்தலான்
மாறில் பசுபாசம் வாட்டலால் வீடுக
கூறு பரனே குருவாம் இயம்பிலே.

பொருள் : மூலாதாரத்திலிருந்து சிரசை நோக்கி ஏறும் பாதையில் உயிரைப் பிணிக்கும் மலத்தன்மையைச் சுட்டு எரித்து மேலே செலுத்தலாலும் முடிவற்ற நாத முழுக்கத்தால் இருளை அறுத்தலாலும், பசுவின் இயல்பான பாசத்தன்மை கெடும்படி வாட்டுதலாலும், வீட்டுலகை அடையுமாறு உபதேசிக்கும் பரசிவமே குருவாம். மலம் - பாசம், இருள் - பாசத்தால் உண்டான இருள் (அறியாமை) வீடு புக இரண்டும் தடையாம். பரமசிவமாகிய குரு பாசத்தையும் இருளையும் போக்கி ஒளியாகிய வீட்டினை நல்குவான்.

இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் - Page 3 Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Tue Mar 27, 2012 1:38 pm

36. கூடா ஒழுக்கம் (கூடா ஒழுக்கம் - வஞ்சகச் செயல்.)

2067. கண்காணி இல்லென்று கள்ளம் பலசெய்வார்
கண்காணி இல்லா இடமில்லை காணுங்கால்
கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களஒழிந் தாரே.

பொருள் : உலகவர் தாங்கள் செய்யும் நன்மை தீமைகளை மேற்பார்க்கும் அதிகாரி இல்லையென்று பலவிதமான வஞ்சகச் செயல்களைச் செய்வர். எல்லாரையும் மேற்பார்வை செய்யும் இறைவனாகிய கண்காணி இல்லாத இடமே இல்லை. உலகவர் இயற்றும் காரியங்களை மேற்பார்வை செய்து எங்கும் நிறைந்து விளங்குகின்ற இறைவனைக் கண்ணை இடமாகக் கொண்டு கண்டவர்கள் தாம் செய்யும் வஞ்சகத் தொழிலினின்றும் நீங்குவர்.

2068. செய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப்
பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள்
மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்வன்
மைதாழ்ந்து இலங்கும் மிடறுடை யோனே.

பொருள் : கருமை நிறம் பொருந்தி விளங்கும் நீலகண்டப் பெருமான் செழுமையாக கடல் சூழ்ந்த உலகில் பொய்யான வற்றையே பேசித்திரியும் மனிதர்கள் உண்மையானவற்றைப் பேசுவார்களாயின் தேவரும் தொழும் தகுதி வழங்குவான், இவ்வுலகினை படைத்த அவன் பொய்யையும் மெய்யையும் அறிவான்.

2069. பத்திவிற் றுண்டு பகலைக் கழிவிடும்
மத்தகர்க்கு அன்றோ மறுபிறப்பு உள்ளது
வித்துக்குற் றுண்டு விளைபுலம் பாழ்செய்யும்
பித்தர்கட்கு என்றும் பிறப்பில்லை தானே.

பொருள் : திருவேடம் பூண்டு பக்தியுடையோர் போன்று ஏனையோர்க்கு அந்நெறிமுறைகளைப் போதித்து விலைபெற்று வாழும் வஞ்சகர் வீணாள் கழிப்பவர் ஆவார். அவரே பெரு மயக்கம் கொண்ட மத்தரும் ஆவார். அவருக்கே மறு பிறப்பும் உண்டு. பிறப்புக்கு அடிப்படையான எஞ்சுவினையை நெற்குத்தி உண்பது போல் சிவ குருவின் திருக்கடைக்கண் நோக்கால் எரிசேர் வித்தெனச் செய்தவர் பிறப்புகளைப் புலமாம் கருப்பையைப் பாழ் செய்தவராவர். அவரே சிவப் பித்தராவர். சிவ பித்தராவார் திருவடியுணர்வு கைவந்தோர், அப் பித்தர்கட்கே எஞ்ஞான்றும் பிறப்பில்லை என்க.

2070. வடக்கு வடக்கென்பர் வைத்ததுஒன்று இல்லை
நடக்க உறுவரே ஞானமி லாதார்
வடக்கில் அடங்கிய வையகம் எல்லாம்
அகத்தில் அடங்கும் அறிவுடை யோர்க்கே.

பொருள் : முன்னர்க் கூறிய பௌராணிகர் வடக்கே உள்ள மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவை பெருமை யுடையன என்பர். வடக்கே உள்ளது ஒன்றும் இல்லை. எனினும் அறிவில்லாதோர் பிறரை யெல்லாம் அங்குச் செல்லும்படி தூண்டுவர். வடக்கில் அடங்கிய தலம் எல்லாம் ஞானியின் உள்ளத்திலேயே அடங்கியுள்ளன. திருநாவுக்கரசரும் காரைக் காலம்மையாரும் வடக்கு நோக்கிச் சென்று பின்பு தெற்கில் வந்துதான் முத்தி பெற்றனர்.

2071. காயக் குழப்பனைக் காயநன் னாடனைக்
காயத்தி னுள்ளே கமழ்கின்ற நந்தியைத்
தேயத்து ளேஎங்கும் தேடித் திரிவர்கள்
காயத்துள் நின்ற கருத்தறி யாரே.

பொருள் : உயிரை உடலோடு சேர்த்து வைப்பவனும் உடலையே தான் வாழும் நாடாகக் கொண்டவனும் உடலுக்குள் இருந்து வெளிப்படும் குரு மண்டலத் தலைவனும் ஆகிய இறைவனைத் தேசம் எங்கும் தேடிப் புறத்தே அலைவார்கள். அவன் அவரவர் உடலில் பொருந்தி நிற்கும் உண்மையை உணரவில்லையே! (என்னே அறியாமை.)

2072. கண்காணி யாகவே கையகத் தேயெழும்
கண்காணி யாகக் கருத்துள் இருந்திடும்
கண்காணி யாகக் கலந்து வழிசெய்யும்
கண்காணி யாகிய காதலன் தானே.

பொருள் : ஆருயிர்களின் உணர்வுக் கருத்தாம் கண்ணைச் சிறந்த இருப்பிடமாகக் கொண்டு வீற்றிருந்தருளும் மெய்க் காதலனாம் சிவபெருமான் நேரே காணும்படியாக நானெறி ஒழுக்கத்தில் கையகத்தே வந்து தோன்றியருள்வன். அது போன்றே கருத்தினுள்ளும் இருந்திடுவன். அது போன்றே உடன்கலந்து செந்நெறிச் செழுத்தித் திருவடிப் பெரும் பேற்றினுக்கு நீங்காது வழிகாட்டி யருள்வன்.

2073. கன்னி ஒருசிறை கற்றோர் ஒருசிறை
மன்னிய மாதவம் செய்வோர் ஒருசிறை
தன்னியல்பு உன்னி உணர்ந்தோர் ஒருசிறை
என்னித ஈசன் இயல்புஅறி யாரே.

பொருள் : காமத்துக்குக் காரணமான கன்னியர் வலையில் வீழ்வோர் ஒரு வகையில் சிறைப்பட்டவர். வேதங்களை ஓதுபவர் ஒருவகையில் சிறைப்பட்டவர்; உடலை வருத்தித் தவம் செய்பவர் ஒரு வகையில் சிறைப்பட்டவர்; தத்துவ விசாரணையால் அனுபவமின்றித் தன்னையும் தலைவனையும் உணர முற்படுவோர் ஒரு வகையில் சிறைப்பட்டவர் ஆவர். இவ்வகையாக உள்ள நால்வரும் ஈசன் இயல்பு அறியதவராயினர்.

2074. காணாத கண்ணில் படலமே கண்ணொளி
காணாத வர்கட்கும் காணாதது அவ்வொளி
காணாத வர்கட்கும் கண்ணாம் பெருங்கண்ணைக்
காணாது கண்டார் களவொழிந் தாரே.

பொருள் : ஒன்றையும் காணமாட்டாத படலத்தால் மறைப்புண்ட கண்ணுக்கு இருட்டே அதன் ஒளி. சிவ ஒளி எங்கும் வியாபித்திருந்தாலும் அவ்வொளி சாதாரண மக்களால் காணப்படாததாகவே உள்ளது. காணாதவர்கட்கு அகக் கண்ணாய் இருந்து காட்டும் பெரிய கண்ணொளியாகும் கடவுளை ஊனக் கண்ணால் காணாமல் ஞானக் கண்ணால் கண்டவர் தாம் புரியும் களவு ஒழுக்கத்தினின்றும் உய்ந்து ஒழிந்தார்.

2075. பித்தன் மருந்தால் தெளிந்து பிரகிருதி
உய்த்தொன்று மாபோல் விழியும்தன் கண்ணொளி
அத்தன்மை யாதல்போல் நந்தி அருள்தரச்
சித்தம் தெளிந்தேன் செயல் ஒழிந்தேனே.

பொருள் : பித்தனுக்கு அந்நோயால் ஏற்பட்ட பிரகிருதியாகிய கிறுக்குத் தன்மை, தீர்ப்பான் தரும் தக்க மருந்தால் நீங்கப் பெறும். நீங்கவே நல்ல நிலைமையைப் போய் பொருந்துவன். அதுபோல் கண்ஒளியும் படலம் நீங்கக் காணும் இயற்கைத் தன்மை எய்தும். அந்நிலைபோல் நந்திக் கடவுள் ஆருயிர் கட்கு இருட் சார்பாம் மருள் நீங்கத் திருவருள் தந்தருள்வன். தரச் செவ்வி உயிர்களின் சித்தத் தெளிவினை எய்தும். அம்முறையில் அவனருளால் தெளிவெய்தினேன். தெளிவு எய்தவே செயல் ஒழிந்தேன் என்க. (பிரகிருதி - பித்த சுபாவம்)

2076. பிரான்மய மாகப் பெயர்ந்தன எட்டும்
பராமயம் என்றெண்ணிப் பள்ளி யுணரார்
சுராமயம் முன்னிய சூழ்வினை யாளர்
நிராமய மாக நினைப்பொழிந் தாரே.

பொருள் : நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகிய எட்டும் சிவத்தினது உறுப்புகளாகும். இவை அவனது சக்திகள் ஆகும் என்பதை எண்ணி அஞ்ஞானமாகிய தூக்கத்தினின்றும் விழித்தலைச் செய்யார். கள் முதலியவற்றின் மயமாக ஆக எண்ணிய தீவினையாளர் இன்ப மயமான இறைவனது நினைப்பை ஒழிந்தாரானார்.

2077. ஒன்றுஇரண் டாகிநின்று ஒன்றிஒன் றாயினோர்க்கு
ஒன்றும் இரண்டும் ஒருகாலும் கூடிடா
ஒன்றுஇரண்டு என்றே உரைதரு வோர்க்கெல்லாம்
ஒன்றுஇரண் டாய்நிற்கும் ஒன்றோடுஒன் றானதே.

பொருள் : கலப்பினால் ஒன்றாய் பொருள் இயல்பால் சீவனும் சிவனும் என்று இரண்டாயும் நின்று சீவத்தன்மை கெட்டுச் சிவமாயினோர்க்கு, ஒன்று இரண்டு என்னும் பேத ஞானம் ஒருபோதும் வராது. அவ்வாறின்றி ஒன்று இரண்டு என்னும் பேத ஞானம் உடையவர் எல்லோருக்கும் அந்நியமாயுள்ளது (பிரிப்பின்றி உள்ளது) ஒன்று என்றும் இரண்டு என்றும் வேறு பிரித்து எண்ணும் நிலையில் வேறாகவே நிற்கும்.

2078. உயிரது நின்றால் உணர்வுஎங்கு நிற்கும்
அயர்அறி வில்லையால் ஆருடல் வீழும்
உயிரும் உணலும் ஒருங்கிக் கிடக்கும்
பயிரும் கிடந்துள்ளப் பாங்குஅறி யாரே.

பொருள் : உயிர்ப்பும் உயிர் ஆகாவாம். உயிர்ப்பு ஆகிய உயிர் நின்றால் அவ்வுடற்கண் உணர்வு எல்லா இடத்திலும் நிகழ்தல் வேண்டும். நினைப்பும் மறப்பும் உண்டாகா. உடலும் கீழ்விழாது. ஆகையால் உயிர்ப்பும் உடலும் ஒற்றுமையுற்று வாழும் வாழ்வு சிவபெருமானின் திருவுள்ளப் பாங்காகும். அவ்வுண்மையினைப் பலர் அறியார்.

2079. உயிரது வேறாய் உணர்வுஎங்கும் ஆகும்
உயிரை அறியில் உணர்வுஅறி வாகும்
உயிர்அன்று உடலை விழுங்கும் உணர்வை
அயரும் பெரும்பொருள் ஆங்கறி யாரே.

பொருள் : திருவருளால் உயிர் உடலின் வேறு என்னும் உண்மை ஏற்படின் உணர்வு சுட்டும் சிற்றும் கடந்து முற்றாய் எங்கும் ஆகும். அதுபோல் உயிரின் உண்மையை அவ்வருளால் அறியில் அவ் உணர்வே மெய்யுணர்வு ஆகும். உடலை நீங்கச் செய்வது உயிரன்று. அவ் உண்மையை அறிவிக்காமல் மறைத்து வைத்திருப்பதும். பெரும் பொருளே. இவ் உண்மைகள் அவன் அருளால் அன்றி உணரவாரா. (சுட்டும் - சுட்டுணர்வும். சிற்றும் - சிற்றுணர்வும் முற்றாய் முற்றுணர்வாய். அயரும் - மறைக்கச் செய்யும்.)

2080. உலகாணி ஒண்சுடர் உத்தம சித்தன்
நிலவாணி ஐந்தினுள் நேருற நிற்கும்
சிலவாணி யாகிய தேவர் பிரானைத்
தலைவாணி செய்வது தன்னை அறிவதே.

பொருள் : உலகம் நிலைபெறுவதற்குரிய அச்சாணி போன்றவனும் ஒளி பொருந்திய மேலான அறிவு சொரூபமானவனும் ஆகிய இறைவன் நிலம் முதலாகிய ஐம்பூதங்களின் தன்மையாய் அவற்றுள் உள்ளும் புறம்புமாகக் காணப்படுவன். சிலவாக்கு ரூபமான சக்தியுடன் பொருந்திய தேவர்களுக்குத் தலை வனை, தலையில் வாக்கு ரூபமாக அறிவதே தன்னை அறியும் செயலாகும்.

2081. தான்அந்த மாம்என நின்ற தனிச்சுடர்
ஊன்அந்த மாய்உல காய்நின்ற ஒண்சுடர்
தேன்அந்த மாய்நின்ற சிற்றின்பம் நீஒழி
கோன்அந்தம் இல்லாக் குணத்தரு ளாமே.

பொருள் : உலகப் பொருள் எல்லாவற்றுக்கும் ஒடுங்கும் இடமாகவுள்ள ஒப்பில்லா சுயம்சோதியும், உடல் உலக எல்லாமாய் நின்ற ஒளி பொருந்திய சுடரும் ஆகிய தலைவனது எல்லையற்ற கருணையால் விளையும் பேறு உனக்கு உண்டாகும். விருப்பத்தையும் பின் முடிவில் சோர்வினையும் நல்கும் சிற்றின்பத்தையும் நீ விடுவாயாக.

2082. உன்முத லாகிய ஊன்உயிர் உண்டெனும்
கல்முதல் ஈசன் கருத்தறி வார்இல்லை
நல்முதல் ஏறிய நாமம் அறநின்றால்
தன்முதல் ஆகிய தத்துவம் ஆமே.

பொருள் : உனக்கு முதல்வனாய் உடம்பில் உயிர் நிலைபெறச் செய்த ஒளி மண்டலத்தில் விளங்கும் இறைவனது கருத்தை அறிவார் இல்லை. நல்ல முதல்வனாகிய சிவம் மிக்குத் தோன்றத் தனக்கெனப் பெயரின்றி அவனோடு ஒன்றி நின்றால் தன் முதலாகிய சிவத்தினது இயல்பு ஆகும். (கல்முதல் - கயிலை எனினும் ஆம்.)

2083. இந்தியம் அந்தக் கரணம் இவைஉயிர்
வந்தன சூக்க உடலன்று மானது
தந்திடும் ஐவிதத் தால்தற் புருடனும்
முந்துளம் மன்னும் ஆறாறு முடிவிலே.

பொருள் : இந்திரியங்களும் அந்தக்கரணங்களும் வந்தவனாகிய சூக்கும உடலும் உயிர் ஆகா. இவை மகத் தத்துவத்தினின்றும் தோன்றியவை. புருடனும், கலைகாலம், நியதி வித்தை, அராகம் ஆகிய ஐந்தின் கூட்டத்தால் பொருந்தும். அனாதியாக உள்ள ஆன்மாவானது முப்பத்தாறு தத்துவத்தின் முடிவில் நிலை பெற்றிருக்கும். (இந்தியம் - இந்திரியம், ஐவிதம் - கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை, சமாதி என்பாரும் உளர்.)

37. கேடு கண்டு இரங்கல் (கேடு கண்டு இரங்கல் - அழிவு கண்டு வருந்துதல்)

2084. வித்துப் பொதிவார் விரைவிட்டு நாற்றுவார்
அற்றதம் வாணாள் அறிகிலாப் பாவிகள்
உற்ற வினைத்துயர் ஒன்றும் அறிகிலார்
முற்றொளி தீயின் முனிகின்ற வாறே.

பொருள் : ஒவ்வொரு கணமும் தம் வாழ்நாள் கழிகின்றதை அறியாத பாவிகள் வினையாகிய வித்தைச் சேமிப்பார். வினைப் போகத்தை அறுவடை செய்ய உடம்பாகிய நாற்றங்காலில் அவ்விதையை முளைக்கச் செய்வார். தமக்குற்ற வினைப் போகத்தால் வரும் துன்பத்தைச் சிறிதும் உணரமாட்டார். அவர் கொழுந்து விட்டு எரிகின்ற தீயில் கெடுகின்றது போலாகும்.

2085. போது சடக்கெனப் போகின் றதுகண்டும்
வாதுசெய் தென்னோ மனிதர் பெறுவது
நீதியு ளேநின்று நின்மலன் தாள்பணிந்து
ஆதியை அன்பில் அறியகில் லார்களே.

பொருள் : வாழ்நாள் திடீரென்று முடிவதைப் பார்த்தும், மக்கள் சாதனையின்றி வாயினால் பேசி வாதிட்டு என்ன பயனைப் பெறுவது ? நேர்மையுள் இருந்து அகண்டமாகிய மலமற்ற சிவத்தினது திருவடியை வணங்கி, அனைத்துக்கும் முதலாகிய அவன்பால் அன்பாய்ப் பொருந்தும் நெறியை அறியும் ஆற்றல் இல்லாதவர்களாய் இருக்கிறார்கள்.

2086. கடன்கொண்டு நெற்குத்துக் கையரை
உடம்பினை ஓம்பி உயிராத் திரிவார்
தடங்கொண்ட சாரல் தழல்முரு டேறி
இடங்கொண்டு உடலார் கிடக்கின்ற வாறே.

பொருள் : அறியா மக்கள் கடன் வாங்கியேனும் நெல்லைப் பெற்றுக் குத்தி உண்டு, கயவராகிய பொறிகளைத் திருப்தி செய்து உடம்பை வளர்த்து, அவ்வுடம்பே உயிரென மதித்துத் திரிவர். விசாலமான மலைச்சரிவில் நெருப்புப் பொருந்திய முருட்டுக் கட்டையில் ஏறி இவ்வுடல் கிடக்கும் என்பதை அறியார். அறிவில்லாதவர் இறைவனை நினைந்து போற்றாமல் உடலை நினைந்து போற்றிக் கெடுகிறார்கள்.

2087. விரைந்தன்று நால்வர்க்கு மெய்ப்பதி சூழ்ந்து
புரந்தகல் லால்நிழல் புண்ணியன் சொன்ன
பரந்தன்னை ஓராப் பழிமொழி யாளர்
உரந்தன்மை யாக ஒருங்கிநின் றார்களே.

பொருள் : அக்காலத்தில் சனகாதி நால்வர்க்குக் கயிலாயப் பதியில் இருந்து, பாதுகாத்த கல்லாலின் புடை அமர்ந்த அறக்கடவுளான குருநாதன் விரைந்து உபதேசித்து அருளிய சிவத்தை உணராமல், பழி மொழிகளைப் பேசும் மக்கள் தமது சீவபோதமே இயல்பாகக் கொண்டு ஒருப்பட்டு நின்றனர். சிவகுரு உபதேசித்த வழி நில்லாமல் தம் அறிவுவழி நின்று உலகவர் கெடுகின்றனர்.

2088. நின்ற புகழும் நிறைதவத்து உண்மையும்
என்றுஎம் ஈசன் அடியவர்க் கேநல்கும்
அன்றி உலகம் அதுஇது தேவுஎன்று
குன்றுகை யாலே குறைப்பட்ட வாறே.

பொருள் : நிலையான புகழையும் நிறைந்த தவத்தின் பயனையும் எப்போதும் எமது இறைவன் அடியவர்க்கு அருளுவான். அஃதறிந்தும் உலகவர் முதற்கடவுள் அது என்றும் இது என்றும் பேசி நிலைகெடுதலால் குறைபட்டனர். தேவு - சிறுதெய்வம். சிறு தெய்வம் பெரும் பயனை அளிக்காது என்க. சிவம் விரும்பிய தெல்லாம் அளிக்கும் என்பதை உலகவர் அறியவில்லை.

2089. இன்பத்து ளேபிறந்து இன்பத்து ளேவளர்ந்து
இன்பத்து ளேநினைக் கின்றது இதுமறந்து
துன்பத்து ளேசிலர் சோறொடு கூறையென்று
துன்பத்து ளேநின்று தூங்குகின் றார்களே.

பொருள் : பிறவாப் பெருநெறி எய்துதற்குச் சிவபெருமான் மக்கட்பிறப்பை வகுத்தருளினன். அவ்வுயர்ந்த பிறப்பை எய்த ஆருயிர்கள் மீட்டும் அப்பிறப்பு இறப்பில் புகாமல் அந்த உடம்பு தன்னுடனே அரனார் மகனாராதல் வேண்டும். அதுவே இறவாத இன்பம் பிறப்பாகும். இன்பப் பிறப்பென்பது சிவனடி மறவா அன்புத் திருவுள்ளத்துடன் இருப்பது. அத்தகையாரே தொண்டராம் குணமிக்கராவர்.

2090. பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற்கு அரிய பிரானடி பேணார்
பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற்கு அரியதோர் பேறுஇழந் தாரே

பொருள் : பெறுவதற்கு அருமையான மானுடப் பிறவியை இறையருளால் பெற்றிருந்தும், பெறுவதற்கு அருøமான சிவத்தினது திருவடியைப் போற்றாதவராயினார். பெறுவதற்கு அருமையான பிறவியைப் பெற்ற மாக்கள் எல்லாம் பெறுவதற்கு அருமையான இன்பப் பேற்றினை இழந்தனர்.

2091. ஆர்வ மனமும் அளவில் இளமையும்
ஈரமும் நல்லஎன்று இன்புறு காலத்துத்
தீரு வருவதோர் காமத் தொழில்நின்று
மாதவன் இன்பம் மறந்தொழிந் தார்களே.

பொருள் : வேட்கையுடைய மனமும் அளவில்லாத இளமையும் அன்பும் ஆகிய இவை நல்லனவாகவுள்ள இன்பமான காலத்தில் மாற்றம் தருவதொரு உடலுறவு (பரியங்யோகம்) கொண்டு நிலைபெற்று மாதவனாகிய சிவத்தை நினைந்து இன்பம் பெறாமல் பெறாமல் உலகவர் கெடுகின்றனர்.

2092. இப்பரி சேஇள ஞாயிறு போலுரு
அப்பரிசு அங்கியின் உள்ளுறை அம்மானை
இப்பரி சேகம லத்துறை ஈசனை
மெய்ப்பரி சேவினை வாதுஇருந் தோமே.

பொருள் : முன் மந்திரத்தில் கூறிய முறையில் இளஞ்சூரியன் போன்ற உருவம் அமையும். அவ்விதம் அக்கினி மண்டலத்துள் அமர்ந்த தலைவனும் இம் முறையில் சுவாதிட்டான மூலாதாரங்களில் பொருந்தியிருக்கும் ஈசனும் ஆகிய இறைவனது உண்மைத் தன்மையை இதுவரை விசாரியாமல் இருந்தோம். என்னே அறியாமை.

2093. கூடகில் லார்குரு வைத்த குறிகண்டு
நாடகில் லார்நயம் பேசித் திரிவர்கள்
பாடகில் லார்அவன் செய்த பரிசறிந்து
ஆடவல் லார்அவர் பேறெது வாமே.

பொருள் : குரு காட்டிய இலட்சியத்தில் நிலைபெற்றுச் சிவனைக் கூடமாட்டார். சிவத்தை நாடி அடைய மாட்டாதவர். புத்தகங்களில் கண்ட நயத்தைப் பேசித்திரிவர். இறைவன் செய்த உபகாரங்களை எண்ணி அவன் புகழைப் பாட மாட்டார்கள். வீணாகக் களியாட்டம் ஆடவல்லவராகிய இவர்கள் அடையும் பயன் எதுவாகும் ?

2094. நெஞ்சு நிறைந்தங்கு இருந்த நெடுஞ்சுடர்
நம்செம் பிரான்என்று நாதனை நாடொறும்
துஞ்சும் அளவும் தொழுமின் தொழாவிடில்
அஞ்சுஅற்று விட்டதோர் ஆனையும் ஆமே.

பொருள் : மனத்தில் நிறைந்து உயர்ந்து எழுகின்ற சோதியை நம்முடைய செம்பொருளாகிய சிவன் என்று நம் நாதனை நாள்தோறும் உறங்கும் வரைக்கும் துதியுங்கள். அங்ஙனம் துதிக்காவிடில் நமது ஐந்து இந்திரியங்களும் கட்டினை அறுத்துக் கொண்டு திரியும் யானை போலாகும்.

2095. மிருக மனிதர் மிக்கோர் பறவை
ஒருவர்செய்து அன்புவைத்து உன்னாதது இல்லை
பருகுவர் ஓடுவர் பார்ப்பயன் கொள்வர்
திருமருவு மாதவம் சேர்ந்துஉணர்ந் தோரே.

பொருள் : விலங்கு, மனிதர், தேவர், பறவை ஒப்பற்ற இறைவன்பால் அன்பு பூண்டு நினையாதது இல்லை. ஞானத்தோடு பொருந்திய மாதவம் செய்த ஞானியர் எண்ணுதலோடு அமையாமல் சிவ அமுதத்தை உண்டு திளைப்பர்; மகிழ்ச்சியால் ஓடுவர். பூமியில் பிறந்ததனால் ஆகிய பயனைப் பெறுவர், மானுடர் அஃறிணையிற் பிறப்பினும் முற் பயிற்சியால் பிறப்புக்கு ஏற்றவாறு வழிபடுவர்.

2096. நீதியி லோர்பெற்ற பொன்போல் இறைவனைச்
சோதயி லாரும் தொடர்ந்துஅறி வாரில்லை
ஆதி பயனென்று அமரர் பிரான்என்ற
நாதியே வைத்தது நாடுகின் றேனே.

பொருள் : நேர்மை யில்லாதவர் தமக்குக் கிடைத்த பொன்னைப் போற்றாமை போன்று சம்பிரதாய முறையில் இறைவனைச் சோதியாக அறிந்து போற்றுவாரில்லை. ஆனால் நான் அவனை நாம் பெறும் முதற் பயன் என்றும் தேவர்களுக்கும் மேலான தேவன் என்றும் அநாதி காலந்தொடங்கி மனத்துள் வைத்து அவனையே விரும்புகின்றேன். (நாதி - அநாதி என்பதின் முதற்குறை.)

2097. இரும்தேன் மலர்அளைந்து இன்புற வண்டு
பெருந்தேன் இழைக்கின்ற பெற்றிமை ஓரார்
வருந்தேன் நுகராது வாய்புகு தேவை
அருந்தேனை யாரும் அறியகி லாரே.

பொருள் : மிக்க தேன் பொருந்திய மலரினைப் பொருந்தி மகிழ்வதற்காக, வண்டுகள் மிகுதியாகத் தேனைச் சேகரிக்கும் தன்மையை மக்கள் உணரார். சுற்றி வரும் வண்டு நுகராமல் வாயில் வலிய வந்து சொட்டும் தேனும் யாவராலும் பெறுவதற்கு அருமையான தேனும் போல்பவராகிய இறைவனை ஒருவரும் உணர மாட்டார். (தேன் - வண்டு. அருந்தேனை அருந்துகின்ற என்னை - இது நம் நாயனார் தம் நிலைமொழிந் தருளும் இடங்களுள் ஒன்று என்றும் பொருள் கொள்ளலாம்.)

2098. கருத்தறி யாது கழிந்தன காலம்
அருத்தியுள் ளான்அம ராபதி நாதன்
ஒருத்தன்உள் ளான்உல கத்துயிர்க்கு எல்லாம்
வருத்திநில் லாது வழுக்குகின் றாரே.

பொருள் : இறைவனை அறியும் கருத்து இல்லாமல் இத்தனை காலமும் வீணே கழிந்தன. தேவர்க்குத் தலைவனாகிய அவன் அன்பினுள் உள்ளான். அவன் ஒருவனே உலகத்து உயிர்கள் அத்தனைக்கும் உயிர்க்குயிராய் உள்ளவன். அங்ஙனமிருந்தும் அறிவில்லாதவர் அவனைத் தங்கள் அனுபவத்தில் வருவித்துக் கொள்ளாமல் தவறி விடுகின்றார்கள்.

2099. குதித்தோடிப் போகின்ற கூற்றமும் சார்வாய்
விதித்தன நாள்களும் வீழ்ந்து கழிந்த
விதிர்த்திருந்து என்செய்தீர் ஆறுதிர் ஆகில்
கொதிக்கின்ற கூழில் துடுப்பிட லாமே.

பொருள் : வினைக்கு ஈடாக வரையறுக்கப்பட்ட நாள்களும் கழிந்தன. ஆகுல நீரராய்ப் பயனில மொழிந்தும் நயநில புரிந்தும் பொழுது போக்கி என் செய்தீர். கூற்றம் குதித்தோடிப் போய் ஆற்றல் வாய்ந்த சிவத்தப் பேணுதலாகிய நற்றவம் புரிகின்றிலீர். என் செய்வீர். ஆறுதலாகிய சுகனமர்ந்த அன்பினராய் ஆறுவகை செற்று ஐம்புலனும் அடக்கி ஞானப்புகலினை எய்துவோர் ஆருயிர் கொகிக்கின்ற கூழ்ஒத்துக் காணப்படும் சிவபெருமான் திருவடியன்பில் துடுப்பு இடுதல் ஒத்து அணைந்து இன்புறும். (கொதிக்கின்ற கூழ் - சிவச்சோதி, துடுபிபிடல் - ஆன்மா ஒருமை அடைதல்)

2100. கரைஅருகு ஆறாக் கழனி விளைந்த
திரைஅரு காமுன்னம் சேர்ந்தின்பம் எய்தும்
வரைஅருகு ஊறிய மாதவ நோக்கின்
நரைஉரு வாச்செல்லும் நாள்கில வாமே.

பொருள் : தில்லைச் சிற்றம்பல நாதனை அணைய முயல்வார் மனம் அடங்கிய எல்லையாகிய கரையின்கண் திருவடிப் பேரின்பக் கழனியாகிய சிவப்பேறு ஆற்றுப் பெருவெள்ளம் போன்று விளைந்து திகழ்கின்றது. நல்லோர் திரைப் பருவமாகிய முதுமை எய்துவதன் முன் திருவருளால் இரண்டறக் கூடிக் கலந்து இன்புறுதற்கும் பொருந்தும் பெருந்தவம் புரிவாராயினர். அதனால்உணர் வுள்ளத்து எல்லையில்லாப் பேரின்பம் ஊறிப் பெருகுவதாயிற்று. இந் நன்னெறிக்கண் வாராத சில்லோர் நரைமுதிர் யாக்கையினராய்ச் சாநாள் எய்தி வருந்துகின்றனர். அத்தகைய நாள் நற்றவத்தோர்க்கு இல் லென்ப (திரை - தோல் சுருக்கம்.)

2101. வரவுஅறி வானை மயங்கிருள் ஞாலத்து
இரவுஅறி வானை எழுஞ்சுடர்ச் சோதியை
அரவுஅறி வார்முன் ஒருதெய்வம் என்று
விரவுஅறி யாமலே மேல்வைத்த வாறே.

பொருள் : உயிர் அனைத்தும் உடலோடு கூடித் தோன்றும் ஆதி சிருட்டியை அறிபவனும் அறியாமையை யுடைய அவ்வுலகத்தில் அதன் தன்மையை அறிபவனும் தானே எழுந்து விளங்கும் சோதியும் ஆகிய இறைவனைக் குண்டலினி யோகம் பயில்வோர் முன் விளங்கும் ஒரு தெய்வம் என்று அதனை அடைய வகை அறியாமலே அந்த இருளாகிய பிரபஞ்சத்தின் மேல் ஆசை வைத்து மக்கள் கெடுகின்றனர்.

இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் - Page 3 Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Tue Mar 27, 2012 1:39 pm

38. இதோபதேசம் (இதோபதேசம் - உயிருக்கு உறுதி பயக்கும் நன்மொழி.)

2102. மறந்தொழி மண்மிசை மன்னாப் பிறவி
இறந்தொழி காலத்தும் ஈசனை உள்கும்
பறந்துஅல மந்து படுதுயர் தீர்ப்பான்
சிறந்த சிவநெறி சிந்தைசெய் யீரே.

பொருள் : இறைவனை மறந் தொழிகின்ற இவ்வுலகில் நிலையற்ற உடம்பு இறக்கும் காலத்தும் இறைவனை எண்ணுங்கள். வாழும்போது அலைந்து நிலை கலங்கிப்படும் துன்பங்களை எல்லாம் தீர்ப்பதற்காக மேன்மையான சிவ நெறியை எண்ணத்தில் கொண்டு நாடுவீராக. முதல் அடிக்கு மன்னா உலகமாகிய இம் மண்ணின் மீதுள்ள நிலையுறல் இல்லாத பிறவியை மறந் தொழியுங்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.

2103. செல்லும் அளவு செலுத்துமின் சிந்தையை
வல்ல பரிசால் உரைமின்கள் வாய்மையை
இல்லை யெனினும் பெரிதுளன் எம்மிறை
நல்ல அரநெறி நாடுமின் நீரே.

பொருள் : முடிந்த அளவு சித்தத்தைச் சிவன்பால் வையுங்கள் முடிந்த தன்மையால் உண்மைப் பொருளான சிவத்தையும் ஆத்மனையும் எடுத்துக் கூறுங்கள். இறைவன் ஒருவன் இல்லை என்று சிலம் சொல்லிக் கொண்டிருந்தாலும் எம்இறைவன் என்றும் உள்ளான். ஆதலால் சிவநெறியே தேடிப் பெறுங்கள். (வாய்மை - நித்திய பொருள். அவை ஆத்மனும் சிவனும் ஆம். பெரிதுளன் - நீக்கமற நிறைந்துள்ளவன்.)

2104. ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி இல்லைநும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே.

பொருள் : குலமும் ஒன்றே; தெய்வமும் ஒன்றுதான். நல்லனவற்றையே எண்ணுங்கள். உமக்கு நமன் இல்லை, நீங்கள் வெட்கப்படாமல் சென்று அடையும் நெறியும் பிறிதில்லை. உங்கள் மனத்து இறை எண்ணம் நின்று நிலை பெற நீங்கள் நினைந்து உய்யுங்கள். திருமூலர் காலத்தில் தமிழ் நாட்டில் சைவ சமயமும் சிவ வழிபாடும் நிலை பெற்றிருந்தன என யூகிக்க முடிகிறது.

2105. போற்றிசெய் அந்தண் கயிலைப பொருப்பனை
நாற்றிசைக் கும்நடு வாய்நின்ற நம்பனைக்
காற்றிசைக் கும்கமழ் ஆக்கையைக் கைக்கொண்டு
கூற்றுதைத் தான்தன்னைக் கூறிநின்று உய்ம்மினே.

பொருள் : அழகிய செந்தண்மை வாய்ந்த திரு வெள்ளி மலைக்கண் வாழும் சிவபெருமானை, நெஞ்சமே போற்றி செய்வாயாக. நான்கு திசைகளுக்கும் நடுவிடமாகக் காணப்படும் தில்லைக் கண் மன்னிய பொன்னம்பலனாம் நம்பனை உயிர்ப்பினால் நடத்தப்படும் ஒன்பது தொளை சேர் இவ்வுடம்பினைக் கைக்கொண்டு கூற்றை உதைத்துத் தன் திருவடியைக் கொடுத்தருளும் ஏற்றூர்தி நீற்றுமேனியும் கொண்டு பெண்பாகமும் உடைய எம்மானை இடையறாது ஏத்தி ஐந்தெழுத்து ஓதி உய்யுங்கள்.

2106. இக்காயம் நீக்கி இனியொரு காயத்தில்
புக்கும் பிறவாமல் போய்வழி நாடுமின்
எக்காலத்து இவ்வுடல் வந்துஎமக்கு ஆனதென்று
அக்காலம் உன்ன அருள்பெற லாமே.

பொருள் : இவ்வுடலை நீத்து, இனி ஓர்உடலில் புகுந்து பிறவாத வண்ணம் உய்ந்து போகும் நெறியை விரும்புங்கள். எப்போது இவ்வுடல் நமக்கு வந்தது என்று அக்காலத்தை எண்ணி ஆராய்ந்தால் இறைவனது அருளைப் பெறலாம். சிவனை நாடினால் மலநீக்கம் பெற்றுப் பிறவி அறுதல் உண்டாகும்.

2107. போகின்ற வாறே புகுகின்ற அப்பொருள்
ஆகின்ற போதும் அரன்அறி வான்உளன்
சாகின்ற போதும் தலைவனை நாடுமின்
ஆகின்ற அப்பொருள் அக்கரை ஆகுமே.

பொருள் : சீவர்களின் விருப்பம் செல்லுகின்ற முறையில் உடனாகின்ற பொருளாகிய சிவன் பக்குவமாகின்ற காலத்தும் அறிந்து இன்பம் செய்பவனாகவும் உள்ளான். ஆதலால் இறக்கின்ற காலத்தும் அத் தலைவனையே நினையுங்கள். அப்பொழுது அப் பரம்பொருள் பிறவிக் கடலை நீந்தி அக்கரை சேர உதவும்.

2108. பறக்கின்ற ஒன்று பயனுற வேண்டின்
இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும்
சிறப்பொடு சேரும் சிவகதி பின்னைப்
பிறப்பொன்றும் இலாமையும் பேருல காமே.

பொருள் : உடம்பை விட்டுப் பிரிந்து செல்லுகின்ற இச்சீவன், இதனுள் வாழ்ந்த பயனைப் பெற வேண்டின் இறக்கும் போதாவது ஈசனை எண்ணுங்கள். அதனால் சிறப்போடு சிவநெறியும் தானே வந்து அடையும் பிறகு பிறப்பில்லாப் பேருலகம் கூடலாம். இறக்கின்ற காலத்திலாவது ஈசனை நினைக்க வேண்டும் என்று இப்பகுதியில் மூன்று தடவை வந்துள்ளது கண்டு, இதன் இன்றியமையாமை உணர்க.

2109. கூடியும் நின்றும் தொழுதுஎம் இறைவனைப்
பாடியுளே நின்று பாதம் பணிமின்கள்
ஆடியு ளேநின்று அறிவுசெய் வார்கட்கு
நீடிய ஈற்றுப் பசுவது ஆமே.

பொருள் : அடியார் கூட்டத்தோடு நின்றும் தனித்து நின்றும் தொழுது, எமது இறைவனை உடலாகிய பாசறையுள் நின்று அவனது திருவடியைப் பணியுங்கள். கண்ணாடி போன்ற முகத்தின் முன்னுள்ள ஒளியில் நிலைபெற்று அறிவினால் தொழுபவர்க்கு, கன்றையுடைய பசு பாலைச் சொரிவது போலச் சிவ ஒளி சீவன்பால் பெருகி நிற்கும்.

2110. விடுகின்ற சீவனார் மேல்எழும் போது
நடுநின்று நாடுமின் நாதன்தன் பாதம்
கெடுகின்ற வல்வினை கேடில் புகழோன்
இடுகின்றான் உம்மை இமையவ ரோடே.

பொருள் : ஆவி நீங்கி ஆருயிர் மேலோங்கிப் போகும்போது சிவயநம என்று நாடுங்கள். அதுவே சிவபெருமானின் திருவடிகளை நாடுவதாகும். நாடுவது - சிந்திப்பது அப்படி நாடுவதால் அத்திருவடிச் சிறப்பால் நும் வினைகள் கெடுகின்றன. அழிவில்லாத புகழையுடைய அழகனாகிய சிவ பெருமான் உம்மை இமையவர் நடுவுள்இருக்குமாறு அருள்புரிகின்றான். (இமையவர் - மெய்யடியார்.)

2111. ஏறுடை யாய்இறை வாஎம்பி ரான்என்று
நீறிடு வார்அடி யார்நிகழ் தேவர்கள்
ஆறணி செஞ்சடை அண்ணல் திருவடி
வேறுஅணி வார்க்கு வினையில்லை தானே.

பொருள் : திரு ஐந்தெழுத்து ஓதித் திருநீறு அணியுங்கால் ஏறுடையாய் எனவும், இறைவா எனவும், எம்பிரான் எனவும் உள்ளன்பால் ஓதுவர். அவ்வாறு ஓதித் திருவெண்ணீறணியும் மெய்யடியார்களை ஒருவர் ஆறணி செஞ்சடை அண்ணலாகிய சிவபெருமான் இவர்களே என்று நினைதல் வேண்டும். அங்ஙனம் நினைந்து அம் மெய்யடியார்களைச் சிறப்பாக வழிபடும் அவர்க்கு முத்திற வினைகளும் மூளா என்க. முத்திற வினைகளாவன: சஞ்சிதம், பிராரத்தம், ஆகாமியம் என்பன.

2112. இன்புறு வீர்அறிந் தேஎம் இறைவனை
அன்புறு வீர்தவம் செய்யும்மெய்ஞ் ஞானத்துப்
பண்புறு வீர்பிற வித்தொழி லேநின்று
துன்புறு பாசத்து உழைத்துஒழிந் தீரே.

பொருள் : பிறவித் தொழிலேயே நின்று பிறப்புத் துன்பத்தை மிகுவிக்கும் பாசப் பற்றாகிய ஆக்கைக்கே இத்தனை காலமும் உழைத்து இளைத்துக் களைத் மொழிந்தவர்களே அவனருளால் அறிந்தே இன்புறுங்கள். அவன் திருவடிக் கண்ணே இறவாத இன்ப அன்பு வேண்டிக் காதல் செய்யுங்கள். சிவத்தைப் பேணுதலாகிய தவத்தைப் புரியுங்கள். அதற்குரிய திருவடி யுணர்வுப் பண்புகளைப் பெறுவீராவீர்.

2113. மேற்கொள்ள லாவதோர் மெய்த்தவம் ஒன்றுண்டு
மேற்கொள்ள லாவதோர் மெய்த்தாளும ஒன்றுண்டு
மேற்கொள்ள லாவதோர் மெய்ந்நெறி ஒன்றுண்டு
மேற்கொள்ள லாம்வண்ணம் வேண்டிநின் றோர்க்கே.

பொருள் : அனைத்துயிரும் படிப்படியாகச் செவ்வி பெற்று மேற்கொள்ளத் தக்க அழிவில் மெய்த்தவம் ஒன்றுண்டு. அத்தவமே சிவத்தைப் பேணும் தவமாகும். இத்தவமே சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்னும் நன்னெறி நான்மையாக நவிலப்படும். இப்பெருந்தவ வாயிலாக எய்தற்கரிய திருத்தாளும் ஒன்றுண்டு. அத் திருவடியைத் தலைப்படும். அறிவினுள் அறிவாம் மெய்ந்நெறியும் ஒன்று உண்டு. இவற்றை மேற்கொள்ளும் வண்ணம் விழைந்து நிற்பார் சிவக்கிழமையர் ஆவர். அந்நல்லார்க்கு எல்லாம் எளிதாகவும் இனிதாகவும் கைகூடும்.

2114. சார்ந்தவர்க்கு இன்பம் கொடுக்கும் தழல்வண்ணன்
பேர்ந்தவர்க்கு இன்னாப் பிறவி கொடுத்திடும்
கூர்ந்தவர்க்கு அங்கே குரைகழல காட்டிடும்
சேர்ந்தவர் தேவரைச் சென்றுணர் வாரே.

பொருள் : திருவருள் துணையால் திருவடி யுணர்வால் சேர்ந்தவர்க்கு ஆர்ந்த இன்பம் கொடுத்தருளும் செம் மேனி எம்மான் சிவபெருமான். நன்னெறி சென்று நாடாமல் நீங்கியவர் பேர்ந்தவராவர். அவர்க்குத் துன்பப் பிறவியைக் கொடுத்தருள்வன். நன்னெறி நான்மையில் அறிவில் அறிவு என்று சொல்லப்படும் மேல்நெறி சென்றவர் கூர்ந்தவர் ஆவர். அத்தகையோர்க்கே திருவடிகளைக் காட்டி அருள்வன். அவ் அருள்வழிச் சென்று சார்ந்தவர் தேவராகிய சிவபெருமானை உணர்ந்தவர் ஆவர்.

2115. முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை
எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை
நெய்த்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன்
அத்தகு சோதி அதுவிரும் பாரே.

பொருள் : வீடு பேறாகவும், அதன் வாயிலாகிய ஞானமாகவும் ஞானத்துக்குத் துணை செய்யும் முத்தமிழ் ஓசையாகவும் உள்ள ஈசனை, எத்துணைக் காலமும் பலர் புறத்தில் பணிவர். ஆனால் பாலில் கலந்திருக்கும் நெய் போல் நின்மல சிவனும் அவருடன் மறைந்திருப்பான். அத் தன்மையான சோதிப் பிழம்பாகிய அவனை அகத்தே கண்டு வழிபட அறியார்.

2116. நியமத்த னாகிய நின்மலன் வைத்த
உகம்எத் தனையென்று ஒருவரும் தேறார்
பவமத்தி லேவந்து பாய்கின்றது அல்லால்
சிவமத்தை ஒன்றும் தெளியகில் லாரே.

பொருள் : தனுகரண புவன போகங்களை உயிர்களுக்கு நியமிக்கின்றவனாகிய நின்மல சிவன் அமைத்தருளிய காலம் எவ்வளவு என்று ஒருவரும் உணரமாட்டார். பிறப்பிலே வந்து படுவதைத் தவிர, சிவமாகிய பரம்பொருளின் பெருமையை உணராது கெடுகின்றார்.

2117. இங்கித்தை வாழ்வும் எனைத்தோர் அகிதமும்
துஞ்சொத்த காலத்துத் தூய்மணி வண்ணனை
விஞ்சத்து உறையும் விகிர்தா எனநின்னை
நஞ்சுஅற் றவர்க்குஅன்றி நாடஒண் ணாதே.

பொருள் : இங்குள்ள வாழ்வும் எவ்வளவு துன்பமும் ஆயினும், மரணம் வந்த காலத்தில் தூய செம்மணி போலும் பெருமானை விஞ்ஞானத்து உறையும் விகிர்தனே என்று நைந்து உருகிப் பற்றற்ற வர்க்கன்றி நின்னை அடைய முடியாது (அகிதம் - துன்பம்.)

2118. பஞ்சமும் ஆம்புவி சற்குரு பால்முன்னி
வஞ்சகர் ஆனவர் வைகில் அவர்தம்மை
அஞ்சுவன் நாதன் அருநர கத்துஇடும்
செஞ்சநிற் போரைத் தெரிசிக்கச் சித்தியே.

பொருள் : சன்மார்க்க குருவை நாடி வஞ்சகமுடையோர் அடைவராயின் உலகில் பஞ்சம் உண்டாகும். அவர்களைக் கண்டு இறைவனே அஞ்சுவான். கொடுமையான நரகத்தில் அவர்களை வைப்பன். வஞ்சகமின்றிச் செம்மையான ஒழுக்கத்து நிற்போரைக் காண்பதே எல்லாச் சித்திகளையும் அளிக்கும்.

2119. சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
அவனை வழிபட்டங்கு ஆமாறுஒன் றில்லை
அவனை வழிபட்டங்கு ஆமாறு காட்டும்
குருவை வழிபடின் கூடலும் ஆமே.

பொருள் : அளவற்ற தேவர்கள் சிவனைக் கிரியை நெறிநின்று வழி பட்டனர். அவ்வாறு அவனை வழிபட்டு ஆகும் பயன் ஒன்றும் இல்லை. அவனை வழிபடும் நெறியான ஞான நெறியினை உபதேசிக்கும் சற்குருவை வழிபட்டால் சிவனைப் பெறலாம். சற்குரு வழிபாடு சிவகதி அடைவிக்கும்.

2120. நரரும் சுரரும் பசுபாசம் நண்ணிக்
கருமங்க ளாலே கழிதலில் கண்டு
குருஎன் பவன்ஞானி கோதிலன் ஆனால்
பரம்என்றல் அன்றிப் பகர்ஒன்றும் இன்றே.

பொருள் : மக்களும் தேவரும் ஆகிய பசு வர்க்கம் பாசத்தைப் பொருந்தி வினைகளைச் செய்து அழிவதைப் பார்த்து குருவாகிய ஞானி பாசம் நீங்கினவனாய் இருப்பான் ஆகில், நீ பரத்தோடு கூடிப் பரமாவாய் என்று உபதேசிப்பதன்றிச் சீடனுக்குச் சொல்லக் கூடியது ஒன்றும் இல்லை. தத்துவமசி மகாவாக்கியமே பாச நீக்கத்துக்குரிய உபதேச மொழியாகும்.

2121. ஆட்கொண் டவர்தனி நாயகன் அன்புற
மேற்கொண் டவர்வினை போயற நாடொறும்
நீர்க்கின்ற செஞ்சடை நீளன் உருவத்தின்
மேற்கொண்ட வாறுஅலை வீவித்து ளானே.

பொருள் : குருவாக எழுந்தருளி வந்து ஆட்கொண்டவர் ஒப்பற்ற சிவன். அவன்பால் அன்பு கொண்ட சீடரது வினைகள் நாள்தோறும் தேய்ந்து ஒழிய, நீரையுடைய நீண்ட செஞ்சடையை யுடைய இறைவன், உருவம் கொண்டு எழுந்தருளிவந்து ஆட்கொண்ட முறையே வருத்தி வினையைக் கெடுமாறு செய்தான். சிவமே குருவாக எழுந்தருளிவந்து வினை கெடுமாறு அருளுவான்.

ஏழாம் தந்திரம் முற்றிற்று.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் - Page 3 Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Tue Mar 27, 2012 1:42 pm

(சுப்பிராமேம்)

1. உடலிற் பஞ்ச பேதம்

(உடலில் ஐவகை பேதமாவன: அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் என்பன.)

2122. காயப்பை ஒன்று சரக்குப் பலவுள
மாயப்பை ஒன்றுண்டு மற்றுமோர் பையுண்டு
காயப்பைக்கு உள்நின்ற கள்வன் புறப்பட்டால்
மாயப்பை மண்ணா மயங்கிய வாறே.

பொருள் : உடலாகிய அன்னமய கோசம் ஒன்று உண்டு. பல வினைகளாகிய சரக்கை யுடைய பிராணமய கோசம் என்று ஒன்று உண்டு. இவை அல்லாத வேறொரு மனோமய கோசம் ஒன்று உண்டு அறிவு விளங்கும் மனோமய கோசம் உடலைவிட்டு நீங்கினால் மாயப் பை ஆகிய இரு உடலும் மண்ணோடு மண்ணாய்க் கலந்துவிடும்.

2123. அத்தன் அமைத்த உடல்இரு கூறினில்
சுத்தம தாகிய சூக்குமம் சொல்லுங்கால்
சத்த பரிச ரூப ரசகந்தம்
புத்திமான் ஆங்காரம் புரியப்பட்ட காயமே.

பொருள் : சிவபெருமான் அமைந்தருளிய தூலம் சூக்குமம் என இரு கூறாகிய உடலில் சுத்தமாகிய சூக்கும உடலைப்பற்றிச் சொல்லும்போது ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம், புத்தி மனம் அலங்காரம் என்னும் எட்டும் புரியட்ட சரீரமாகும்.

2124. எட்டினில் ஐந்தாகும் இந்திரி யங்களும்
கட்டிய மூன்று கரணமும் ஆயிடும்
ஒட்டிய பாசம் உணர்வுஅது வாகவே
கட்டி அவிழ்ந்துவிடும் கண்ணுதல் காணுமே.

பொருள் : முன்மந்திரத்தில் கூறிய எட்டினில் சப்தம் முதலிய தன் மாத்திரைகளிலிருந்து ஐந்து இந்திரியங்களும் ஆகும். அவற்றோடு பொருந்திய புத்திய முதலிய மூன்றும் உட்கருவிகளாம். இவற்றோடு சேர்த்த பாசத்தை உணர்வு மயமாக இருந்து சிவபெருமான் தூல உடலில் கூட்டியும் பிரித்தும் அருளுவான்.

2125. இரதம் உதிரம் இறைச்சிதோல் மேதை
மருவிய அத்தி வழும்பொடு மச்சை
பரவிய சுக்கிலம் பாழாம் உபாதி
உருவ மலால்உடல் ஒன்றென லாமே.

பொருள் : உண்ட உணவின் சாரம் இரத்தம் மாமிசம், தோல், நரம்பு, பொருந்திய எலும்பு கொழுப்பொடு மூளை, பரந்துள்ள இந்திரியம் ஆகியவற்றாலாகிய பாழாம் காரியமான உருவமாகிய மயக்கம் தரும் உடலை ஒரு பொருள் என்று கூற முடியுமோ ? முடியாது. (அத்தி - அஸ்தி எலும்பு. உபாதி - காரியம்.)

2126. ஆரே அறிவார் அடியின் பெருமையை
யாரே அறிவார் அங்கவர் நின்றது
யாரே அறிவார் அறுபத்தெட்டு ஆக்கையை
யாரே அறிவார் அடிக்காவல் ஆனதே.

பொருள் : சிவபெருமானுடைய திருவடிப் பெருமையை யார் அறிவார் ? உடலை இடமாகக் கொண்டு அவர் எழுந்தருளியிருப்பதை யார் அறிவார் ? அறுபது பொதுத் தத்துவங்களோடும் எட்டுச் சிறப்புத் தத்துவங்களும் விளங்கும் இருவகை உடலையும் யார் அறிவார் ? அவர் மூலாதாரச் சக்கரத்திலிருந்து காப்பதை யார் அறியவல்லார் ?

2127. எண்சாண் அளவால் எடுத்த உடம்புக்குள்
கண்கால் உடலில் கரக்கின்ற கைகளில்
புண்கால் அறுபத்தெட்டு ஆக்கை புணர்க்கின்ற
நண்பால் உடம்புதன் னால்உடம் பாமே.

பொருள் : எட்டுச் சாண் அளவாக எடுத்த உடம்பினுள் அமைந்த கண் கால் முதலிய உறுப்புக்களை அவ் வுடம்பில் மறைக்கின்ற ஒழுங்கில் நினைவழியாக அறுபத்தெட்டு உருவான ஆகாயக் கூற்றை ஒன்று சேர்க்கின்ற நட்பினால் தூல உடம்பும் அதைத் தாங்கிய சூக்கும உடம்பும் ஆம்.

2128. உடம்புக்கும் நாலுக்கும் உயிராகிய சீவன்
ஒடுங்கும் பரனோடு ஒழியாப் பிரமம்
கடந்தொறும் நின்ற கணக்கது காட்டி
அடங்கியே அற்றது ஆரறி வாறே.

பொருள் : தூல உடம்புக்கும் தூலமல்லாத பிராணமய மனோமய விஞ்ஞானமய ஆனந்தமய மாகிய நாலு உடம்புக்கும் உயிராக விளங்குவது சீவனாகும். அச் சீவன் பரத்தோடு நீங்கு தலற்ற பிரமத்தில் (சிவத்தில்) ஒடுங்கும். அப்பிரமம் உடல் உயிரில் கலந்து வியாபித்திருப்பதைப் போன்று சீவன் ஐங்கோசங்களிலும் அடங்கியிருந்து தொழிற்படுவதையும் இவற்றை விட்டு நீங்கும் முறைமையையும் யார் அறிவார் ?

2129. ஆறுஅந்த மாகி நடுவுடன் கூடினால்
தேறிய மூவாறும் சிக்கென்று இருந்திடும்
கூறுங் கலைகள் பதினெட்டும் கூடியே
ஊறும் உடம்பை உயிருடம்பு எண்ணுமே.

பொருள் : வழிகள் ஆறுமுடியினை உடையன. அவை எழுத்து, சொல், மறை, தத்துவமாகிய மெய்கள் (உடல்) உலகம், கலைகள் என்று சொல்லப்படும். முற்கூறிய மூன்றும் சொல்லுலகு என்றும், பிற்கூறிய மூன்றும் பொருள் உலக என்றும் கூறப்படும். இவ்வழிகளின் நடுவாய்த் திகழும் மெய்ப்பொருள் சிவபெருமான். அச்சிவத்துடன் கூடினால் பதினெட்டும் கூடினார் வழி யொழுகும். (கூடுதல் - இடையறா திரு ஐந்தெழுத்தை எண்ணுதல்.)

2130. மெய்யினில் தூல மிகுந்த முகத்தையும்
பொய்யினில் சூக்குமம் பொருந்தும் உடலையும்
கையினில் துல்லியம் காட்டும் உடலையும்
ஐயன் அடிக்குள் அடங்கும் உடம்பே.

பொருள் : புறம் தோன்றும்படி பொருந்தியுள்ள பருமை மிக்க பருவுடலையும், அகத்தே ஊன்றி உன்னும்படி அமைந்த நுண்ணுடலையும் உழைப்புக்கு விளக்கும் தரும் முதல் உடலையும் தருதற்குக் காரணமாயுள்ள மா மாயையைச் சிவபிரான் ஒடுக்குவன். அம் மாமாயை உடம்பு சிவபெருமான் திருவடிக்கீழ் ஒடுங்கும். (முதலுடம்பு - காரண உடம்பு; உடம்பு - மாமாயை; முகத்தையும் - பொருத்தத்தையும்; மெய் - தூலசரீரம்; பொய் - சூக்கும சரீரம்.)

2131. காயும் கடும்பரி கால்வைத்து வாங்கல போல்
சேய இடம்அண்மை செல்லவும் வல்லது
காயத் துகிர்போர்வை ஒன்றுவிட்டு ஆங்குஒன்றிட்டு
ஏயும் அவரென்ன ஏய்ந்திடும் காயமே.

பொருள் : பகைவரைக் காயும் தன்மை வாய்ந்த பாய்மாவாகிய குதிரை அண்மை இடத்தில் மட்டும் அல்லாமல் மிகவும் தொலைவான இடத்துக்கும் மிகுந்த விரைவில் செல்லும் வன்மையுடையதாகும். அது போல் ஆருயிரும் தன்னை மூடியிருக்கும் துகிலால் ஆகிய போர்வையைப் போன்றுள்ள உடம்பை வினைக்கீடாக ஒன்று விட்டு ஒன்றைப் பற்றிப் பிறக்கும். துகிற் போர்வை பழுதூற்றல் அதனை நீக்கி விட்டு மற்றொரு போர்வையினை எடுத்துக் கொள்ளுதல் ஈண்டு ஒப்பாகும். இது உயிர் பல அண்டங்களில் பல பிறவிகளை வெகுவிரைவாக எடுக்கும் என்றது.

2132. நாகம் உடல்விரி போலும்நல் அண்டச
மாக நானாவில் கனாமறந் தல்லது
போகலும் ஆகும் அரன்அரு ளாலே கென்று
ஏகும் இடம்சென்று இருபயன் உண்ணுமே.

பொருள் : நாகப்பாம்பு தோலை உரித்துவிட்டுச் செல்லுதல் போலவும், முட்டையிலுள்ள குஞ்சு முட்டையைவிட்டு வெளிவருவது போலவும் கனவில் கண்டவற்றை நனவில் விளங்காது மறந்து விடுதல் போலவும் உடலைவிட்டு உயிர் போகும். சிவனது ஆணையால் உடலை விட்டுப் பிரிந்துபோய் அதன் தகுதிக்கேற்ப நல்வினை தீவினைகளைச் சொர்க்க நரகங்களைப் பொருந்தி உண்ணும். (அண்டசம் - முட்டையில் தோன்றுவன அல்லது உடம்பு
அல்லாதது.)

2133. உண்டு நரக சுவர்க்கத்தில் உள்ளன
கண்டு விடும்சுக்கம் காரண மாச்செலப்
பண்டு தொடரப் பரகாய யோகிபோல்
பிண்டம் எடுக்கும் பிறப்புஇறப்பு எய்தியே.

பொருள் : இத்தேகப் பயனை அனுபவித்து உடலை விட்டவர் சூக்கும சரீரத்தில் பொருந்தி நரக சொர்க்கப் பலனை அனுபவிப்பர். பழமையான வினை தொடர சூக்கும சரீரத்தைப் பற்றி வந்து பர ஆகாயத்தில் சஞ்சரிக்கும் திறமை பொருந்திய யோகி மீண்டும் தன் உடலில் வந்து புகுவது போல் உடம்பை எடுத்துப் பிறந்தும் இறந்தும் பிறவிச் சக்கரத்தில் அலைக்கப் படுவர்.

2134. தான்அவ னாகிய தற்பரம் தாங்கினோன்
ஆனவை மாற்றிப் பரமத்து அடைந்திடும்
ஏனை உயிர்வினைக்கு எய்தும் இடம்சென்றும்
வானும் நிலனும் புகுந்தும் வருந்துமே.

பொருள் : அவனே தானாகிய அந்நெறி நின்று தத்பதப் பொருளைத் தன்னில் கண்டவன் பிறவிக்கு வரும் இயல்பான குண தர்மணத்தை மாற்றிப் பரமம் என்ற மேலான நிலை அடைவன். இவ்விதம் செய்யாத மற்றைய உயிர்கள் அவரவர் வினைப் போகங்களுக்குரிய பத நிலைகளைப் பெற்றுச் சொர்க்கம். நரகம் அடைந்தும் மீண்டும் நிலவுலகில் வந்தும் வருந்தும்.

2135. ஞானிக்கும் காயம் சிவமே தனுவாகும்
ஞானிக்கும் காயம் உடம்பே அதுவாகும்
மேல்நிற்கும் யோகிக்கும் விந்துவும் நாதமும்
மோனிக்குக் காயம்முப் பாழ்கெட்ட முத்தியே.

பொருள் : சிவத்தையே நினைந்திருப்பதால் ஞானியின் உடம்பு சிவதனுவாகும். தேவ தர்மத்தை மறந்திருத்தலால் ஞானிக்குரிய உடம்பு சிவத்தினுடையதாகும். சிரசின் மேல் சிந்தித்திருக்கும் யோகிக்கும் விந்துவும் நாதமும் உடம்பாகும். மோனம் என்ற பிரணவ யோகத்தை முடித்தவர் ஆணவம் கன்மம் மாயை என்னும் மூன்றுமான உடம்பு கெட்டு சிவசாயுச்சியம் பெறுவர்.

இந்நான்கும் முறையே அகவிடத்தார் ஆசாரத்தை அகலுதலும், தன்னை மறத்தலும், தன்நாமம் கெடுதலும், தலைவன் தாள் தலைப்படுதலும் ஆகிய திருநெறி நான்மைத் திருவாகும். இக்குறிப்பு முன்னம் அவனுடைய நாமங்கேட்டாள் என்னும் அப்பர் தேவாரத்துள் காண்க.

2136. விஞ்ஞானத் தோர்க்குஆ ணவமே மிகுதனு
எஞ்ஞானத் தோர்க்குத் தனுமாயை தான்என்ப
அஞ்ஞானத் தோர்க்குக் கன்மம் தனுவாகும்
மெஞ்ஞானத் தோர்க்குச் சிவதனு மேவுமே.

பொருள் : தெளிந்த அறிவினையுடைய விஞ்ஞானகலர்க்கு ஆணவம் ஒன்றே உடம்பாகும். அறிவினைப் பெறும் தகுதியுடைய பிரளயகலர்க்கு மாயையே உடம்பாகும். அஞ்ஞானத்தோடு பொருந்திய சகலர்க்குக் கன்மத்தால் விளைந்த போக போக்கியப் பொருளே உடலாகும். உண்மையான சிவஞானிக்கு அகண்ட சிவமே உடம்பாக அமையும். ஞானிகளே ஆணவமாதி மலங்கள் நீங்கப் பெற்றுச் சிவதனுவைப் பெறுவர்.

2137. மலமென்று உடம்பை மதியாத ஊமர்
தலமென்று வேறு தரித்தமை கண்டீர்
நலமென்று இதனையே நாடி இருக்கில்
பலமுள்ள காயத்தில் பற்றும்இவ் அண்டத்தே.

பொருள் : இவ்வுடம்பு மலத்தால் ஆயது என்று உணர்ந்து இதனை ஒதுக்காத அறிவிலிகள் இதுவே சிறந்த இடம் என்று எண்ணிக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றீர்கள். இவ்வுடம்பே நன்மை பயப்பது என்று கருதியிருப்பீர்களாயின் உங்களுக்கு மேலும் மேலும் இப்பூவுலகில் பிறவி வந்து கொண்டிருக்கும். பூத உடலை விட்டு நிற்பதே ஞான நெறியாகும்.

2138. நல்ல வசனத்து வாக்கு மனாதிகள்
மெல்ல விளையாடும் விமலன் அகத்திலே
அல்ல செவிசத்த மாதி மனத்தையும்
மெல்ல தரித்தார் முகத்தார் பசித்தே.

பொருள் : நல்ல வசனத்தைப் பேசும் வாக்கும் நல்லதையே நினைத்துச் சிந்தித்துத் தெளியும் மனம் முதலியனவும் உடையவரது உள்ளத்தில் மலமில்லாத சிவன் மெல்ல விளங்கி அருளுவான். அவ்வாறு அல்லாதவற்றைக் கேட்கும் செவியும் பேசும் வாக்கு முதலியனவும் நினைக்கும் மனமும் மெல்லப் பெறுபவர் சிவம்பிரகாசியாது வாட்டமுறும் முகத்தை உடையோராவர். சிவத்தை நினைந்து பேசியிருப்பவர் இன்பமும், உலகத்தை நினைந்து பேசியிருப்பவர் துன்பமும் பெறுவர்.

2. உடல் விடல் (உடல் விடலாவது உடல் நினைவு விடல்)

2139. பண்ணாக்கும் காமம் பயிலும் வசனமும்
விண்ணாம் பிராணன் விளங்கிய சத்தமும்
புண்ணாம் உடலில் பொருந்தும் மனத்தையும்
அண்ணாந்து பார்க்க அழியும் உடம்பே.

பொருள் : இன்பம் தரும் காமத்தை உண்டாக்குகின்ற பேச்சும், ஆகாயக் கூற்றில் செல்லும் பிராணனும், அங்கே உண்டாகும் ஓசையும், ஊன் பொதிந்த உடம்பில் பொருந்துகின்ற மனத்தையும், சிரசின் மேல் நிலை பெறச் செய்ய, உடம்பின் பிரக்ஞையும் மறந்துவிடும்.

2140. அழிகின்ற ஓர்உடம்பு ஆகும் செவிகண்
கழிகின்ற காலவ் விரதங்கள் தானம்
மொழிகின்ற வாக்கு முடிகின்ற நாடி
ஒழிகின்ற ஊனக்கு உறுதுணை இல்லையே.

பொருள் : உடம்பை விட்டு ஆருயிர் நீங்கும் காலத்தில் செவி கண் முதலிய உறுப்புகள் செயலற்று அழியும். அக்காலத்துப் புரியும் நோன்பினாலும் தானங்களினாலும் எவ்வகையான துணையும் அவ்வுடலுக்கோ உயிருக்கோ வருவதில்லை. எனவே சிவபெருமானே உறுதுணையாவான்.

2141. இலையாம் இடையில் எழுகின்ற காமம்
முலைவாய நெஞ்சத்து மூழ்கும் உளத்துத்
தலையாய மின்னுடல் தாங்கித் திரியும்
சிலையாய சித்தம் சிவமுன் இடைக்கே.

பொருள் : இல்லையென்று சொல்லும்படியான மிகவும் நுணுகிய இடையையுடைய அழகமைந்த பெண்பால் கொண்ட அளப்பரும் காமத்தால் நெஞ்சம் உலைவுற்று மூழ்கித் துன்புறும். இவ்வுண்மை உணர்ந்து ஒழுகுவார் நெஞ்சத் திண்மையர் ஆவர். அவர்கள் உள்ளத்தில் தம் உடம்பு மின்னல் போன்று நிலையாது அகலும் என உணர்ந்து தம்முடலைச் சுமை யெனத் தாங்கித்திரிவர். அவர்களுடையகல் ஒத்த உறுதி யான சித்தம் சிவபிரானிடத்தே அழுந்தி நிற்கும் அதனால் அவர்கள் பேரின்பம் உறுவர்.

3. அவத்தை பேதம் - கீழால் அவத்தை

(அவத்தை பேதம் - சீவன் உடம்பில் வாழும்போது அடைகின்ற நிலை வேறுபாடு. இவை சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என ஐந்தாகும். சாக்கிரத்திலிருந்து கீழ்நோக்கித் துரியாதீதத்துக்குச் செல்லுதல் கீழால் அவத்தை (நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்பு, அடங்கல்))

2142. ஐஐந்து மத்திமை யானது சாக்கிரம்
கைகண்ட பன்னான்கில் கண்டம் கனாஎன்பர்
பொய்கண் டிலாத புருடன்இத யம்சுழுனை
மெய்கண் டவன்உந்தி ஆகும் துரியமே.

பொருள் : இருபத்தைந்து கருவிகளுடன் சீவன் புருவ நடுவில் உள்ள போது விழிப்பு நிலையாகும். பழகிய பதிநான்கு கருவிகளுடன் சீவன் கழுத்தில் தங்கும்போது கனாநிலையை அடையும் என்பர். அழிவில்லாத புருடன். இதயத்தைப் பற்றியுள்ளபோது உறக்கமாகும். அழியாவனாகிய ஆன்மா உந்தியில் பொருந்தும்போது துரியமாகும்.

2143. முப்பதோடு ஆறின் முதல்நனா ஐந்தாகச்
செப்புஅதில் நான்காய்த் திகழ்ந்திரண்டு ஒன்றாகி
அப்பதி யாகும் நியதி முதலாகச்
செப்பும் சிவம்ஈறாய்த் தேர்ந்துகொள் ளீரே.

பொருள் : சாக்கிரத்தில் முப்பத்தாறு தத்துவங்களுடன் சிவ தத்துவம் ஐந்துமாக அடுத்துச்சொல்லப் பெறுகின்ற கனவு நிலையில் மகேசுவரம் சாதாக்கியம் சத்தி சிவம் ஆகிய நான்கும், விளங்குகின்ற துரியத்தில் சத்தி சிவம் ஆகிய இரண்டும், துரியாதீதத்தில் சிவம் ஒன்றுமாக அச்சிவம் முதலாகத் தொழிற்படும். இவ்வாறு சுத்தவித்தை முதலாகச் சிவம் ஈறாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

2144. இந்தியம் ஈரைந்து ஈரைந்து மாத்திரை
மந்திர மாய்நின்ற மாருதம் ஈரைந்தும் அந்தக்
கரணம் ஒருநான்கும் ஆன்மாவும்
பந்தஅச் சாக்கரப் பாலது ஆகுமே.

பொருள் : ஞானேந்திரிய கன்மேந்திரியங்கள் பத்தும் அவற்றின் விஷயங்களான சத்தாதி வசனாதி பத்தும் மறை பொருளாக உள்ள வாயுக்கள் பத்தும் மனம் முதலிய உட்கரணங்கள் நான்கும் இவற்றோடு கூடிய ஆன்மாவும் ஆக 35 ம் பந்தத்தைச் செய்கின்ற சாக்கிர அவத்தையின் கண்ணவாகும். பாடபேதம் : (அச்சக்கரம் - சரீரம்.)

2145. பாரது பொன்மை பசுமை உடையது
நீரது வெண்மை செம்மை நெருப்பது
காரது மாருதம் கறுப்பை உடையது
வானகம் தூமம் மறைந்துநின் றாரே.

பொருள் : மண்ணின் நிறம் பசும்பொன் நிறமாகும். நீர் வெண்ணிறமானது. நெருப்பு செந்நிறமானது, மேகம் போன்ற காற்று கருமை நிறமானது. ஆகாயம் புகை நிறமானது. இவ்வகையான நிறங்களில் ஐம்பூதங்களும் மறைந்து நிற்கும். முதல் மூன்று வெளிப்படத் தோன்றுவன. காற்று தொழிலால் புலனாவது. வானம் உயத்துணர்வல் புலனாவது அதனால் வானத்தை மறைந்து நின்றார் என ஓதினார்.

2146. பூதங்கள் ஐந்தும் பொறியவை ஐந்துளும்
ஏதம் படஞ்செய்து இருந்து புறநிலை
ஓதும் மலம்குணம் ஆகும்ஆ தாரமோடு
ஆதி அவத்தைக் கருவிதொண் ணூற்றாறே.

பொருள் : பூதம் ஐந்தும், பொறிஐந்தும் குற்றம் எய்துமாறு இருந்த புறநிலைக் கருவிகள் என்ப. இவற்றால் நிகழும் குணம் செயல்கள் மலம் காரணமாகும். இவற்றை அடிப்படையாகக் கொண்டு விரிந்த கருவிகள் அறுபது. ஆகக்கருவிகள் தொண்ணூற்றாறு என்ப, இவை ஜாக்கிர அவத்தைக்குரிய கருவிகள் 96 ஆகம். (தத்துவம் 36 தாத்துவிகம் 60 ஆக 96)

2147. இடவகை சொல்லில் இருபத்தஞ்சு ஆனை
படுபர சேனையும் பாய்பரி ஐந்தும்
உடையவன் மத்திமை உள்ளுறும் நால்வர்
அடைய நெடுங்கடை ஐந்தொடு நான்கே.

பொருள் : ஆருயிர்கள் ஐம்பாடு எய்தும் இட வகைகள் ஐந்தென்ப அவை: நனவு, கனவு, உறக்கம் பேருறக்கம், உயிர்ப்பு, அடங்கல் என்ப. இவற்றுள் உயிர்ப்படங்கல் ஒழித்து, ஒழிந்து நான்கினும் உள்ள கருவிகளை உருவகமாக ஓதியருளுகின்றார். இருபத்தைந்து கருவிகள் யானையை ஒக்கும். பேசல், நடத்தல், கொடுத்தல், கழித்தல், இன்புறலின் கருவிகள் விரைந்து செல்லும் காலாட்களாகும். ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்பவற்றை மேற்கொள்ளும் கருவிகள் ஐந்தும் மிக விரைந்து செல்லும் குதிரைகளாகும். மிடற்றோசை உள்ளிட்ட ஓசைகள் நான்கும் அமைச்சரை ஒக்கும். இந் நான்கும் மடங்குதலே அப்பால் நிலையாகும். (ஓசைநான்கு நுண்மை, நினைவு, மிடறு, செவி என்ப.)

2148. உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி
உடம்பிடை நின்ற உயிரை அறியார்
உடம்பொடு உயிரிடை நட்புஅறி யாதார்
மடம்புகு நாய்போல் மயங்குளின் றாரே.

பொருள் : பிராணமய கோசமும் மனோமய கோசமும் அன்னமய கோசத்தைத் தழுவி நின்ற உடம்பில் உள்ள உயிரின் இயல்பை அறியார். உடம்புக்கும் பிராணனுக்கும் உள்ள தொடர்பை அறியாதவர் மடத்தில் புகுந்த நாய் அலைவது போல மயங்குகின்றார்கள். (சைவர் மடத்தில தனக்கு வேண்டிய இறைச்சி எலும்பு முதலியன இல்லாமையால் நாய் மயங்குவது இங்கு உவமையாக வந்துள்ளது.)

2149. இருக்கின்ற வாறுஒன்று அறிகிலர் ஏழைகள்
மருக்கும் அசபையை மாற்றி முகந்து
கருக்கொண்டு காமாரி சார முகந்தேர்ந்து
உருக்கொண்டு தொக்க உடல்ஒழி யாதே.

பொருள் : உண்மை யறிவில்லாத கோழையர் உடம்பகத்துத் தங்கியிருக்கும் தம் தன்மையை உணரமாட்டார். இவ்வுடம்பையே சிவநினைவால் திரு வெண்ணீறு, சிவமணி பூணலால் சிவனடியாராகிய நடமாடும் திருக்கோயில்களைச் சிவன் எனவே தேறி வழிபடலால் மாற்றிச் சிவ உடலாக அமைத்துக் கொள்ளலாம். அங்ஙனம் அமைத்துக் கொண்டால் பிறப்பு இறப்புகளை அறுக்கும் பெருமறை சிகரமாகும். இதனைப் பேசாமறை என்பர். இப்பேசாமறையே அசபை என ஓதப் பெற்றது. இதனால் இறப்பு - பிறப்புகளை ஒழிக்கலாம்.

2150. ஒளித்திட் டிருக்கும் ஒருபதி னாலை
அளித்தனன் என்னுள்ளே ஆரியன் வந்து
அளிக்கும் கலைகளி னால்அறு பத்து
ஒளித்திட்டு வைத்தான் ஒடுங்கிய சித்தே.

பொருள் : ஆருயிர் தோறும் ஒளிந்திருக்கும் ஒருபதி என்று ஓதப்பெற்றனன். அவன் ஆருளிய பொருளும் நெறியும் நந்நான்கு என்ப அவை முறையே அறம் பொருள் இன்பம் வீடு எனவும் சீலம், நோன்பு, செறிவு, அறிவு எனவும் கூறப்படும். இவற்றை அளித்தருளினன் என் உள்ளத்தின் உள்ளே ஆரியன் என்னும் ஆசானாய் எழுந்தருளினன். அத்தகைய சிவ குருவானவர் உள்ளிருந்து உணர்த்தும் கலைகள் அறுபத்து நான்கு அக்கலைகளின் வாயிலாக எண்ணத்தின் கருவியாகிய சித்தம் சிவம் திருவடியையன்றி வேறொன்றும் எண்ணாமல் ஒடுங்குமாறு செய்தருளினன். திருவடிப் புகலில் அடங்கி யிருக்குமாறும் அருள் புரிந்தனன். பதினாலு என்பதைப் பிராசாத கலைகள் என்றும் கொள்ளலாம்.

2151. மண்ணினில் ஒன்று மலர்நீரும் மருங்காகும்
பொன்னினில் அங்கி புகழ்வளி ஆகாயம்
மன்னும் மனோபுத்தி ஆங்காரம் ஓர்ஒன்றாய்
உன்னின் முடிந்தது ஒருபூத சயமே.

பொருள் : மண்ணும், அதனில் பொருந்தி விரிந்து இருக்கும் நீரும் பொன்போற் காணப்படும் தீயும், புகழ் மிக்கதாகிய வளியும், புகழ்மிக்கதாகிய வானமும், நிலைபெற்றுள்ள மனம், இறுப்பு, எழுச்சி ஆகிய எட்டும் அவ் அவற்றின் தன்மையுடன் ஓர் ஒன்றாய் நினைத்து உண்மை ஓர்ந்தால் பூதவெற்றி நிறைவுற்ற தென்க.

2152. முன்னிக்கு ஒரு மகன் மூர்த்திக்கு இருவர்
வன்னிக்கு மூவர் வதுவைக்கு நால்வர்
கன்னிக்குப் பிள்ளைகள் ஐவர்மு னாள்இல்லை
கன்னியைக் கன்னியே காதலித் தானே.

பொருள் : முதல்பூதமான ஆகாயத்துக்கு ஓசை என்ற ஒரு மகன். அதனின்றும் உருக்கொண்ட காற்றுக்கு ஓசையும் ஊறுமான இருமக்கள். காற்றினின்றும் வந்த தீயினுக்கு ஓசை, பரிசம், உருவம் என்ற மூன்று பிள்ளைகள். பிறகான நீருக்கு ஓசை, பரிசம், உருவம், சுவை என்ற நான்கு பிள்ளைகள், கன்னியாகிய பூமாதேவிக்கு ஓசை பரிசம் உருவம், சுவை, நாற்றம் என்ற ஐவர் மக்களாகும். இவ்விதமான பிள்ளைகள் சிவத்துடன் சமவாயமான சிற் சித்தியிடம் முதலில் இல்லை. அவளே சிருஷ்டியைக் கருதியபோது ஐந்து பிரிவாகப் பிரிந்து அவைகளின் வேறாயும் அவைகளின் ஊடேயும் நின்றனள்.

2153. கண்டன ஐந்தும் கலந்தனதான் ஐந்தும்சென்று
உண்டன நான்கும் ஒருங்கே உணர்ந்தபின்
பண்டைய தாகிப் பரந்து வியாக்கிரத்து
அண்டமும் தானாய் அமர்ந்துநின் றானே

கண்டகனவு ஐந்தும் எனவும் பாடம்

பொருள் : மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஞானேந்திரியங்களால் பெற்ற காட்சி ஐந்தும், வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம் ஆகிய கன்மேந்திரியங்களால் பெற்ற அனுபவம் ஐந்தும், மனம் முதலிய அந்தக் காரணங்களால் நுகர்ந்தவை நான்கும் ஒருசேரக் கண்டபின் பழமையானதாகிய மேலான சாக்கிரநிலையில் பிரபஞ்சமும் தானாய் விளங்கும்படி நின்றான்.

2154. நின்றவன் நிற்கப் பதினாலில் பத்துநீத்து
ஒன்றிய அந்தக் கரணங்கள் நான்குடன்
மன்று கலந்த மனைவாழ்க்கை வாதனை
கன்றிய கண்டத்தில் கண்டான் கனவதே.

பொருள் : மேலோதியவாறு நின்றார் நிற்க. அங்ஙனம் நில்லாதார் அனைவரும் இருவகைப் பொறிபத்தும் கலன் நான்குமாகிய பதினான்கில் பொறி பத்தையும் விட்டுப் பொருந்திய எண்ணம், மனம், எழுச்சி இறுப்பு என்னும் அகப்புறக் கலன் நான்குடன் புறத்து மனை வாழ்க்கையின்கண் பயின்று வந்துள்ள பசைத் தொடர்பால் கழுத்தில் கனவு கண்டனர்.

2155. தானம் இழந்து தனிபுக்கு இதயத்து
மானம் அழிந்து மதிகெட்டு மாலாகி
ஆன விரிவுறி யாஅவ் வியத்தத்தில்
மேனி அழிந்து சுழுத்தியது ஆமே.

பொருள் : கனவின் நிலைக்களமாகிய கழுத்தை விட்டுக் கீழிறங்கி நெஞ்சத்தில் தனியே புகுந்து உலகியல் பெருமையும் அறிவும் அழிந்து உயிர் நிற்கும். அங்கு அவ்வுயிர்க்கு மயக்கம் ஒன்றுமே உடன் நிற்கும். அங்கு அமைதி, ஆட்சி, அழுந்தல் என்னும் மூன்று குணங்களும் (சத்துவம், இராஜசம், தாமதம்) வெளிப்படாமல் அடங்குநிலை அவ்வியத்தம். இதுவே உறக்க நிலையாகும். (உறக்கம் - சுழுத்தி, அவ்வியத்தம் - மூலப்பகுதி.)

2156. சுழுமுனையைச் சேர்ந்துள மூன்றுடன் காட்சி
கெழுமிய சித்தம் பிராணன்தன் காட்சி
ஒழுகக் கமலத்தின் உள்ளே யிருந்து
விழுமப் பொருளுடன் மேவிநின் றானே.

பொருள் : உறக்க நிலைக் களமாகிய நெஞ்சத்தின் கண் எண்ணமும் உயிர்ப்பும் ஆளும் ஆகிய மூன்று கருவிகளும் தொழிற் படும். பேருறக்க நிலைக் களமாகிய கொப்பூழின்கண் உயிர்ப் பும் ஆளும் ஆகிய இரண்டு கருவிகள் தொழிற்படும். உயிர்ப்பு அடங்குதலாகிய குலத்திடத்து ஆள் மட்டும் தொழிற்படும் இங்கு ஆருயிர் ஆள் என்னும் கருவியுடன் கூடி மூலப்பகுதி என்னும் திரிபு உணர்ச்சிப் பண்பை நுகர்ந்து கொண்டிருக்கும் இவ்வுண்மை அவ்வுயிர் விழித்தெழுந்தபின் இன்புறத் துயின்றேன் என மொழிவதால் உணரலாம். அவ்வியத்தமாகிய மூலப்பகுதி மாறு பாட்டுணர்வைச் செய்யும்.

2157. தானத்து எழுந்து தருக்கு துரியத்தின்
வானத்து எழுந்துபோய் வையம் பிறகிட்டுக்
கானத்து எழுந்த கருத்தின் தலையிலே
ஊனத்து அவித்தைவிட்டு ஊமன்நின் றானே.

பொருள் : பேருறக்கமாகிய துரியத்தின்கண் ஆருயிர் எழுந்து தருக்குறும். உள்ளமானது எழுந்து உலகம் பின்னிடும் படியாக வேகமாகச் செல்லும் சென்று ஓசையுடன் மூலத்திடத்து ஊனமாகிய ஆருயிர் குறைவுடைத்தாகிய அறியாமைப் பண்பைச் செய்யும் மூலப்பகுதியின் செயலையும் விட்டு அம்மூலப்பகுதியுடன் மட்டும் தனித்து நிற்கும். (ஆருயிர் - உயிர்ப்பு. பிராணவாயு. ஊமன் - ஆன்மா.)

2158. ஊமை எழுத்தொடு பேசும் எழுத்துறில்
ஆமை அகத்தினில் அஞ்சும் அடங்கிடும்
ஓமயம் உற்றுஅது உள்ளொளி பெற்றது
நாமயம் அற்றது நாம்அறி யோமே.

பொருள் : பேச இயலாத எழுத்தாகிய மகாரத்தோடு பேசும் எழுத்துக்களாகிய அகார உகாரங்கள் பொருந்தில் ஆமைக்குள் அதன் உறுப்புக்கள் அடங்குவன போல் ஐந்து, இந்திரியங்களும் செயல்படாமல் அடங்கிவிடும். அப்போது ஆன்மா பிரணவத்தில் பொருந்தி ஒளிபெற்று விளங்கும். அப்போது அகங்காரம் கெட்டதை நாம் அறியமாட்டோம்.

(ஓம் - அ+உ+ம் தூலப்பிரணவம்

ம் - மெய்யெழுத்து (ஊமை எழுத்து) உயிரைச் சார்ந்து அன்றி ஒலியாது. அகர உகரங்கள் பேசும் எழுத்துக்கள்.

அ - ஆற்றல் - சக்தி உ - அறிவு - சிவம். ஊமை எழுத்து - (ம்) மலம்.)

2159. துரியம் இருப்பதும் சாக்கிரத்து உள்ளே
நரிகள் பதினாலு நஞ்சுண்டு செத்தன
பரிய புரவியும் பாறிப் பறந்தது
தரியம் இறந்திடம் சொல்லஒண் ணாதே.

பொருள் : பேருறக்கமாகிய துரியம் இருப்பது நனவாகிய சாக்கிரத் துள்ளேயாம். நரிகள் என்று சொல்லப்படும் அறிதற் கருவி ஐந்தும், செய்தற்கருவி ஐந்தும் அகக் கலன்கள் நான்கும் கூடிப் பதினான்கு என்ப. இக்கருவிகள் பதினான்கும் ஆருயிர் புறத்துப் பரவாமையான நுகர்ச்சியின்றி நஞ்சுண்டது ஒத்து அடங்கின. அப்பொறிகள் புலன் கெள்ளும் புலன்கள் பத்தும் குதிரையை ஒத்துத் தொடர்பின்றிப் பறந்தது. உயிர்ப்பு அடங்கலாகிய துரியாதீதத்து நிகழும் நிலையில் இனிய நிலையினை இன்ன தன்மைத்தென்று சொல்ல ஒண்ணாதென்க.

2160. மாறா மலம்ஐந்தால் மன்னும் அவத்தையில்
வேறாய மாயா தங்கர ணாதிக்குஇங்கு
ஈறாகா தேஎவ் வுயிரும் பிறந்துஇறந்து
ஆறாத வல்வினை யால்அடி யுண்ணுமே.

பொருள் : திருவடிப் பேறு எய்தும் அளவும் விட்டு நீங்காமல் ஒட்டி நிற்கும் மலம் ஐந்தும் மாறாமலம் எனப்பட்டன. இவை ஆருயிர்களின் ஐம்பாட்டினும் உடன் நிற்கும். இவை நீங்காமையால் மாயா காரியமாகிய உடல் கலன் முதலியவற்றை இன்னும் வேறாகப் பெறுதல் வேண்டும். ஆகையால் உடம்பின் ஈறு எய்துவதற் கில்லை. அதனால் எத்தகைய உயிரும் பிறந்து இறந்து ஆறாத வல் வினையால் அடியுண்டு துன்புறும்.

2161. உண்ணும்தன் ஊடாடாது ஊட்டிடு மாயையும்
அண்ணல் அருள்பெற்ற முத்தியது ஆவது
நண்ணல் இலாஉயிர் ஞானத்தி னால்பிறந்து
எண்ணுறு ஞானத்தின் நேர்முத்தி எய்துமே.

பொருள் : நுகர்விக்கப் படவேண்டிய மாயாகாரியங்கள் திருவருள் எய்தும் வரையில் ஊட்டாமல் கழியா. சிவபெருமான் திருவருள் பெறுவது வீடு பேறாகும். மாயையை நண்ணுதல் இல்லாத உயிர்கள் பிறப்பு எய்தினும் அப்பிறப்பு திருவடி யுணர்வாகிய சிவஞானப் பிறப்பாகும். அப்பிறப்பின்கண் எண்ணத்தக்க திருவடி யுணர்வால் நேர்முத்தியாகிய மீளா ஆளாம் திருவடிப் பேறு எய்தும்.

2162. அதிமூட நித்திரை ஆணவம் நந்த
அதனால் உணர்வோன் அருங்கன்மம் முன்னி
திதமான கேவலம் இத்திறம் சென்று
பிரமாகா ஐஅவத் தைப்படு வானே.

பொருள் : ஆருயிர்க்கு ஆணவம் மிகுதலால் அதி மூடமாகிய உறக்கம் உண்டாகும். அதனால் அவ்வுயிர் இரு வினைக்கு ஈடான கன்மங்களையே நினைக்கும். நினைத்து நிலையான கீழ் ஐம்பாடு என்று சொல்லப்படும் கீழால் அவத்தையை எய்தும். இம்முறையாகச் சென்று சிறப்புநிலை இல்லாத ஐம்பாட்டினையும் எய்தும்.

2163. ஆசான்முன் னேதுயில் மாண வகரைத்
தேசாய தண்டால் எழுப்பும் செயல்போல்
நேசாய ஈசனும் நீடுஆண வத்தரை
ஏசாத மாயாள்தன் னாலே எழுப்புமே.

பொருள் : ஆசிரியர் முன்னே பாடம் கற்பிக்கும் போது உறங்கும் மாணவரை ஒளியுடைய பிரம்பால் ஆசிரியர் தட்டி எழுப்புவது போல, நேயப் பொருளான சிவபெருமானும் அநாதியாகவே ஆணவ மலத் தொடக்கு உடையோரைச் சுத்த மாயையால் ஒளியை உண்டாக்கி எழுப்பி அருளுவன்.

2164. மஞ்சொடு மந்தா கினிகுட மாம்என
விஞ்சுஅறி வில்லோன் விளம்பும் மிகுமதி
எஞ்சலில் ஒன்றெனு மாறுஎன இவ்வுடல்
அஞ்சுணும் மன்னன்அன் றேபோம் அளவே.

பொருள் : மேகத்தொடு பொருந்திய ஆகாய கங்கை குடத்திலுள்ள நீரேயாம் என்பது அறிவில்லாதவன் மிக்க அறிவுடையோன் போலக் கூறும் கூற்று. அவ்வாறு குறை வில்லாத பிரமமும் ஆன்மாவும் ஒன்று என்பதற்கு மாறாக இவ்வுடலுக்கு நாயகனாகிய ஆன்மா பக்குவப்பட்டு நீங்கும் வரை ஐந்து அவத்தைக்கு உட்பட்டுக் கொண்டே யிருக்கும்.

2165. படியுடை மன்னவன் பாய்பரி ஏறி
வடிவுடை மாமநகர் தான்வரும் போது
அடியுடை ஐவரும் அங்குஉறை வோரும்
துடியில்லம் பற்றித் துயின்றனர் தாமே.

பொருள் : உடம்பைத் தனதாகக் கொண்டு ஆளும் ஆருயிர் இடையறாது ஓடிக் கொண்டே யிருக்கும். இயல்பு வாய்ந்த மனமாகிய குதிரை மீது ஏறி அழகு மிக்கதாகிய அகநகரின்கண் வலம் வருகின்றது. அப்பொழுது அறிதற் கருவியாகிய செவி முதலிய ஐந்தும் செய்தற்கருவி முதலிய பிறகருவிகளும் புடைபெயராது உறங்கிக்கிடக்கும். அவைகளின் பற்றுக் கோட்டுக்கு இடனாகத் துடித்துக் கொண்டிருக்கும் இயல்பு வாய்ந்த நெஞ்சம் துடியில்லம். அந்நெஞ்சத்தைப் பற்றி உறங்குகின்றனர். (துடியில்லம் - இதயத்தானம்)

2166. நேரா மலத்தை நீடுஐந்து அவத்தையின்
நேரான வாறுஉன்னி நீடு நனவினில்
தேரா மலம்ஐந்தும் நேரே தரிசித்து
நேராம் பரத்துடன் நிற்பது நித்தமே.

பொருள் : புறக்கண்ணுக்குப் புலப்படாத மலத்தை சுத்த அவத்தையில் புலப்படும் வண்ணம் மலக் குற்றத்துக்குரிய காரணத்தை நினைந்து நின்மல சாக்கிரத்தில் கண்ணுக்குப் புலப்படாதிருந்த ஐம் மலங்களையும் அகக்காட்சியில் கண்டு, தம் முகத்துக்கு முன்னாக விளங்கும் சிவத்துடன் பிரியாது நிற்பதே அழியாத நிலையாகும்.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் - Page 3 Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Tue Mar 27, 2012 1:43 pm

4. மத்திய சாக்கிர அவத்தை

(அஃதாவது மத்தியமாகிய புருவ நடுவில் சீவன் சாக்கிரம் ஆதிய ஐந்து அவத்தைப் படும். அவை சாக்கிரத்தில் சாக்கிரம், சாக்கிரத்தில் சொப்பனம், சாக்கிரத்தில் சுழுத்தி, சாக்கிரத்தில் துரியம், சாக்கிரத்தில் துரியாதிதம் என்பன. இவை விழிப்பிலுள் நிலைவேறு பாடேயாம்.)

2167. சாக்கிர சாக்கிரம் தன்னில் திரோதாயி
சாக்கிர சொப்பனம் தன்னிடை மாமாயை
சாக்கிரம் தன்னில் அழுத்திதற் காமியம்
சாக்கிரம் தன்னில் துரியத்து மாயையே

பொருள் : நனவின் நனவு என்று சொல்லப்படும் நிலையில் திரோதாயி தொழிற்படுத்தும். திரோதாயி நடப்பாற்றல். இதுவே மறைப்பாற்றல். நனவினிடத்து நிகழும் கனவில் தூமாயைத் தொடர்பினராவர். நனவின் உறக்கத்துக்குக் கன்மத் தொடர்பினராவர். நனவின் பேருறக்கத்துக்குத் தூவாமாயைத் தொழிலினராவர்.

2168. மாயை எழுப்பும் கலாதியை மற்றதின்
நேய இராகாதி ஏய்ந்த துரியத்துத்
தோயும் சுழுமுனை கனாநனா வும்துன்னி
ஆயினன் அந்தச் சகலத்துஉ ளானே.

பொருள் : தூவா மாயையானது உயிர்ப்பு அடங்கலாகிய துரியாதித நிலையில் உழைப்புக் கருவியாகிய கலாதியுடன் அடங்கிநிற்கும் பேருறக்கத்தின்கண் விழைவுக் கருவியாகிய அராதும் முனைக்கும். உறக்கமாகிய சுழுமுனையின்கண் உணர்வுக் கருவியாகிய வித்தை முனைத்துக்கூடும். கனவு நிலையில் உழைப்பு முனைத்துக்கூடி உடல் மெய்யாகிய மூலப்பகுதிக் கருவிகள் இருபத்தைந்துடன் தொழிற்படும். நனவு நிலையுடன் எல்லாக் கருவிகளுமாகிய முப்பத்தைந்து கருவிகளுடன் தொழிற்படும்.

2169. மேவிய அந்தகண் விழிகண் குருடனாம்
ஆவயின் முன்அடிக் காணு மதுகண்டு
மேவும் தடிகொண்டு செல்லும் வழிபெற
மூவயின் ஆன்மா முயலும் கருமமே.

பொருள் : பிறவியிலேயே குருடனும் இடையில் குருடானவனும் ஆகிய இருவரும் நடந்து செல்லும் போது முன்னே சென்ற நடைபாதையை அறிந்து பொருந்திய தடியைக் கொண்டு பாதையை அறிந்து நடப்பர். அவ்வாறே மூன்று வகையான உயிர் வருக்கங்களும் செயலில் பொருந்தும்.

2170. மத்திமம் ஒத்தி சிலந்தி வலயத்துள்
ஒத்துஅங் கிருந்து உயிருண்ணு மாறுபோல்
அத்தனும் ஐம்பொறி ஆடகத்துள் நின்று
சத்த முதல்ஐந்தும் தான்உண்ணு மாறே.

பொருள் : சிலந்தியானது அதுகட்டிய வலையின் நடுவுள் பொருந்தியிருந்து அங்கு அணுகி வரும் உயிரினங்களைப் பிடித்துத் தின்னுவது போல் சிவபெருமானும் ஐம்பொறி அறிவுகளும் வந்துபொருந்தும் மூளைப் பகுதியில் உடனிருந்து சத்த முதலாகிய புலன்கள் ஐந்தையும் நுகர்கின்றான். சிவன் மூளையில் ஆன்மாவுடன் இருந்து சத்த முதலிய புலன்களை நுகர்கின்றான்.

2171. வைச்சன வச்சு வகையிரு பத்தஞ்சும்
உச்சும் உடன்அணை வான்ஒரு வன்உளன்
பிச்சன் பெரியன் பிறப்பிலி என்றென்று
நச்சி அவனருள் நான்உய்ந்த வாறே.

பொருள் : வைக்கவேண்டியவாறு இருபத்தைந்து தத்துவங்களைச் சாக்கிர நிலையில் வைத்து அவற்றையே உபாயமாகக் கொண்டு பொருந்தி எங்குமுள்ள சிவன் வியாபித்துள்ளான். பித்தன் என்றும் பெரியன் என்றும் பிறப்பில்லாதவன் என்றும் எப்போதும் விரும்பிப் போற்றி அவனருள் பெற்று நான் உய்து பெற்றேன்.

2172. நாலா றுடன்புருடன் நல்தத் துவமுடன்
வேறான ஐ ஐந்து மெய்ப்புரு டன்பரன்
கூறா வியோமம் பரம்எனக் கொண்டனன்
வேறான நாலேழு வேதாந்த தத்துவமே.

பொருள் : ஆன்ம தத்துவம் இருபத்து நான்குடன் புருடன் என்ற தத்துவத்துக்கு வேறாகவுள்ள இருபத்து ஐந்துடன் ஆன்மா பிரமம் சொல்லமுடியாத ஆகாயம் ஆகியவற்றை மேலான தத்துவங்களாகப் பிரமவாதிகள் கொண்டனர். இவ்வாறு வேறான இருபத்தெட்டும் வேதாந்தத்துக்குரிய தத்துவங்களாம். (வேறான ஐந்து பூதங்கள் 5, இந்திரியங்கள் 10, தொழில்கள் 10, ஆன்மா - 1, பிரமம் - 1, பரமாகாயம் - 1 ஆக 28. சைவ தத்துவம் 36.)

2173. ஏலங்கொண்டு ஆங்கே இடையொடு பிங்கலை
கோலங்கொண்டு ஆங்கே குணத்துடன் புக்கு
மூலங்கொண்டு ஆங்கே முறுக்கிமுக் கோணிலும்
காலங்கொண் டான்அடி காணலும் ஆமே.

பொருள் : ஆன்மா பொருத்தமாக உடம்பினுள் இடை பிங்கலை நாடிகளில் முறையாகப் பொருந்தி அங்குச் சத்துவ குணத்துடன் புகுந்து மூலாதாரம் முதலாக அங்கு மும்முடிச்சுகளையும் கடந்து காலாதீதப் பொருளான சிவனது திருவடியைக் காணலாகும்.

2174. நாடிகள் பத்தும் நலந்திகழ் வாயுவும்
ஓடிய காலில் ஒடுங்கி யிருந்திடும்
கூடிய காமம் குளிக்கும் இரதமும்
நாடிய நல்ல மனமும் உடலிலே.

பொருள் : பத்து நாடிகளும் நன்மையைத் தருகின்ற பிராணன் முதலிய வாயுக்களும் மூலாதாரம் முதலாக மேலாகச் செல்லும் சுழுமுனையில் ஒடுங்கி இருந்திடும். காமக் கல்வியில் பெறும் ஆனந்த இரசமும் நன்மையை நாடிய மனமும் இவ்வுடலில் ஆம்.

2175. ஆவன ஆக அழிவ அழிவன
போவன போவ புகுவ புகுவன
காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன்
ஏவன செய்யும் இலங்கிழை யோனே.

பொருள் : ஆவன ஆகும். அழிவன அழியும், கழிவன கழியும், வருவன வரும். ஆகையால் காக்கின்ற இறைவன் ஆன்மாக்களுக்கு அனுபவத்தைக் கொடுத்துச் சாட்சியாகக் கண்டிருப்பவன். ஆதலால் தக்கவாறு செய்யும் கருணையாளன் ஆவான்.

2176. பத்தொடு பத்துமோர் மூன்றும் பகுதியும்
உய்த்த துரியமும் உள்ளுணர் காலமும்
மெய்த்த வியோமமும் மேனலத் துரியமும்
தத்துவ நாலேழ் எனஉன்னத் தக்கதே.

பொருள் : பத்து இந்திரியங்களோடு அவற்றின் தொழில்கள் பத்தும் நான்கு அந்தக் காரணங்களும், இவை பொருந்திய சிவனும் சிரசில் மோதும், பிராணனும் உண்மையான ஆகாயமும் மேல்முகத்தில் விளங்கும் பிரமமும் வேதாந்த தத்துவங்கள் இருபத்தெட்டு என்று எண்ணத்தக்கன வாகும்.

2177. விளங்கிடு முந்நூற்று முப்பதோடு ஒருபான்
தளங்கொள் இரட்டிய தாறு நடந்தால்
வணங்கிடும் ஐம்மலம் வாயு எழுந்து
விளங்கிடும் அவ்வழி தத்துவம் நின்றே.

பொருள் : விளக்கம் மிக்க முன்னூறுடன் முப்பதோடு பத்தாகிய முன்னூற்றைச் சேர்த்து அறு நூற்றை வலிமையுடைய ஆறை இரட்டிய முப்பத்தாறுடன் பெருக்க வரும் 21,600 சுவாசம் நடந்தால் ஆணவமாதி ஐம்மலங்களும் வணங்கி நீங்கும், மூலவாயு மேல் எழுந்து விளங்கும் போது தத்துவங்களும் அங்கங்கே நின்றுவிடும்.

2178. நாலொரு கோடியே நாற்பத்தெண் ணாயிரம்
மேலுமேர் ஐந்நூறு வேறாய் அடங்கிவிடும்
பாலவை தொண்ணூறோடு ஆறுள் படும்அவை
கோலிய ஐ ஐந்துள் ஆகும் குறிக்கிலே.

பொருள் : தத்துவங்களை வெவ்வேறாகப் பிரித்துக் கணக்கிட்டால், அவை நான்கு கோடியே நாற்பத்தொண்ணாயிரத்து ஐந்நூறு என்று சிறப்பாக அடங்கும். அவற்றைப் பகுத்துத் தொகுக்கின் தொண்ணூற்றாறுள் படும். அவைகளை மேலும் சுருக்கில் இருபத்தைந்துள் அடங்கும்.

2179. ஆகின்ற தொண்ணூறோடு ஆறும் பொதுஎன்பர்
ஆகின்ற ஆறாறு அருஞ்சைவர் தத்துவம்
ஆகின்ற நாலேழ் வேதாந்தி வயிணவர்க்கு
ஆகின்ற நாலாறுஐ ஐந்துமாயா வாதிக்கோ.

பொருள் : மாயையின் காரியமாகிற தத்துவங்கள் பொதுவகையால் தொண்ணூற்றாறு ஆகும். அருமையான சைவர் கொண்டுள்ளது முப்பத்தாறு தத்துவங்களாகும். இருபத்தெட்டு தத்துவங்கள் வேதாந்த சமயத்துக்கு உள்ளன. வைணவர்களுக்கு உள்ள தத்துவம் இருபத்து நான்காகும். மாயாவாதிக்குரிய தத்துவம் இருபத்தைந்தாம்.

2180. தத்துவ மானது தன்வழி நின்றிடில்
வித்தக னாகி விளங்கி யிருக்கலாம்
பொய்த்தவ மாம்அவை போயிடும் அவ்வழி
தத்துவம் ஆவது அகார எழுத்தே.

பொருள் : தத்துவங்களைத் தம்வழி அடங்கி நிற்கும்படி செய்யின்; மிகவும் சமர்த்தனாக விளக்கம் பெற்றிருக்கலாம். பிராண செயமடையாது ஏனைய பொய்யான நெறி அகன்றுவிடும். அதை உணர்த்தும் நெறி அகார எழுத்தறிவாகும்.

2181. அறிவொன் றிலாதன ஐஏழும் ஒன்றும்
அறிகின்ற என்னை அறியாது இருந்தேன்
அறிகின்றாய் நீஎன்று அருள்செய்தார் நந்தி
அறிகின்ற நானென்று அறிந்து கொண்டேனே.

பொருள் : முப்பத்தாறு தத்துவங்களும் ஆன்மா பொருந்தாத போது அறிவில்லாதவை ஆகும். அவ்வாறு இருந்தும் அவற்றை அறிகின்ற என்னை நான் அறியாமல் இருந்தேன். என் குருநாதன் நீ அறியும் ஆற்றலுடையாய் என்று அருள்செய்தான். அதனால் நான் அறிகின்றவன் என்பதை அறிந்து கொண்டேன்.

2182. சாக்கிர சாக்கிர மாதி தனில்ஐந்தும்
ஆக்கும் மலாவத்தை ஐந்து நனவாதி
போக்கி இவற்றொடும் பொய்யான ஆறாறு
நீக்கி நெறிநின்றுஒன்று ஆகியே நிற்குமே.

பொருள் : சாக்கிரத்தில், சாக்கிரம் முதலான அவத்தையில் சிவதத்துவம் ஐந்தும் பொருந்தும் அவைகளை மலத்தைக் காரணமாகவுடைய இந்த நனவு முதலிய ஐந்து அவத்தைகளினால் போக்கி, இவற்றோடும் பொய்யான முப்பத்தாறு தத்துவங்களையும் அகற்றி ஆன்மா பிரணவ நெறி நின்று சிவத்தோடு பொருந்தி நிற்கும்.

2183. ஆணவ மாதி மலம்ஐந்து அவரோனுக்கு
ஆணவ மாதிநான் காம்மாற்கு அரனுக்கு
ஆணவ மாதிமூன்று ஈசர்க்கு இரண்டென்ப
ஆணவம் ஒன்றே சதாசிவத்திற்கு ஆவதே.

பொருள் : பிரமனுக்கு ஆணவம், கன்மம், மாயை மாயேயம், திரோதாயி ஆகிய ஐம்மலங்களும் உள்ளன. திருமாலுக்கு ஆணவம் கன்மம் மாயை திரோதாயி ஆகிய நான்கு மலங்கள் உள்ளன. உருத்திரனுக்கு ஆணவம் கன்மம் திரோதாயி ஆகிய மூன்று மலங்கள் உள்ளன. மகேசுவரர்க்கு ஆணவமும் திரோதாயியும் உள்ளன. சதாசிவனுக்கு ஆணவம் மட்டும் உரியது.

5. அத்துவாக்கள்

(அத்துவா - வழி, அத்துவாக்கள் மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை என ஆறாம். இவற்றுள் மந்திரம் பதம், வன்னம் சொற்பிரபஞ்சம் எனவும், புவனம் தத்துவம் கலை பொருட் பிரபஞ்சம் எனவும் பெயர் பெறும். இவை வினையை ஈட்டுவதற்கும் வினையை நுகர்வதற்கும் உரிய வழிகளாம்.)

2184. தத்துவம் ஆறாறு தன்மனு ஏழ்கோடி
மெய்த்தகு வன்னம்ஐம் பான்ஒன்று மேதினி
ஒத்துஇரு நூற்றுஇரு பான்நான்குஎண் பான்ஒன்று
வைத்த பதம்கலை ஓர்ஐந்தும் வந்தவே.

பொருள் : தத்துவங்கள் முப்பத்தாறு, மந்திரங்கள் ஏழ்வகையான முடிவுகளை உடையன. உண்மையில் வழங்கும் எழுத்துக்கள் ஐம்பத்தொன்றாகும். புவனங்கள் இருநூற்று இருபத்து நான்கு பதங்கள் எனப்படுபவை. எண்பத்தொன்று கலைகள் ஐந்து, இவை சிருஷ்டியில் வந்தவை. ஆறு அத்துவாக்களின் வகையும் தொகையும் கூறியவாறு.

2185. நாடிய மண்டிலம் மூன்றும் நலந்தெரிந்து
ஓடும் அவரோடு உள்இரு பத்துஐஞ்சும்
கூடுவர் கூடிக் குறிவழி யேசென்று
தேடிய பின்னர்த் திகைத்திருந் தார்களே.

பொருள் : உடலகத்தே நாடப்படும் மண்டிலங்கள் மூன்று சிவகுருவின் அருளால் அவற்றின் நன்மைகளை அறிந்து நிற்பாருடன் கலந்து நடப்பது இருபத்தைந்து மெய்களாகும். அவற்றுடனும் சிவகுருவின் அருமறையாம் உபதேச மொழியுடனும் சென்று காண்õபர்க்குக் கருவிகள் ஒன்றும் தோன்றா. அதனால் திகைப்புற்றிருந்தாரை யொப்பர்.

2186. சாக்கிர சாக்கிர மாதித் தலையாக்கி
ஆக்கிய தூலம் அளவாக்கி அதீதத்துத்
தாக்கிய அன்பான தாண்டவம் சார்ந்துஅது
தேக்கும் சிவமாதல் ஐந்தும் சிவாயவே.

பொருள் : நனவின் நனவினை முதற்கொண்டு பருவுடற்கண் உள்ள உச்சித் தொளையாகிய வெளிவரை நின்று அப்பால் அருள் வெளியின்கண் அருளப் பெறும் திருக்கூத்தினைக் கண்டு வழிபட்டு அதன்மேல் தூவா மெய்க்கண் காணப் பெறும் சிவமெய் ஐந்தும் உணர்வுறுவர். அத்தகையார்க்கு எல்லாம் சிவ வண்ணமாய்க் காணப்பெறும்.

6. சுத்த நனவாதி பருவம் (அஃதாவது சகலநிலையில் சுத்தசாக்கிர முதலிய ஐந்து நிலைகள்.)

2187. நானவாதி தூலமே சூக்கப் பகுதி
அனதான ஐஐந்தும் விந்துவின் சத்தி
தனதாம் உயிர்விந்து தான்நின்று போந்து
கனவா நனவில் கலந்ததுஇவ் வாறே.

பொருள் : நனவு முதலாகச் சொல்லப்படும் பருமைப் பகுதியே நுண்மையாம். பகுதியும். அத்தன்மையவாகிய இருபத்தைந்து மெய்களும் தூமாயை என்று சொல்லப்பெறும் மாமாøயினின்றும் போந்தன வாகும். அவற்றுடன் கலந்து தொழிற்படும். ஆருயிரின்நிலை தூநிலை யாகும். அந்நிலை நனவிற் கனவு போன்று காணப் பெறும். (விந்துவின் - மகாமாயையின்.)

2188. நனவில் அதீதம் பிறந்தார் கிடந்தார்
நனவில் துரியம் நிகழ்ந்தார் தவழ்ந்தார்
நனவில் சுழுத்தி நடந்தார் வளர்ந்தார்
நனவில் கனவுஓட நன்செய்தி யானதே.

பொருள் : சாக்கிரத்தில் (விழிப்பு நிலையில் துரியாதீதம் அடைந்தவர் குழந்தையைப் போலக் கிடப்பர். சாக்கிரத்தில் துரியநிலை அடைந்தவர் தவழும் குழந்தையைப் போல் சிறிது அறிவுள்ளவராவர். சாக்கிரத்தில் உடலை உறங்கச் செய்பவர் வளர்ந்த பிராயம் பெற்றவராவர். சாக்கிரத்தில் சொப்பன நிலையில் உள்ளவர் ஓடுதல் போன்ற செயலைச் செய்பவராவர்.)

2189. செறியுங் கிரியை சிவதத் துவமாம்
பிறிவில் சுகயோகம் பேரருள் கல்வி
குறிதல் திருமேனி குணம்பல வாகும்
அறிவில் சராசரம் அண்டத் தளவே.

பொருள் : சாக்கிரத்தில் துரியாதீதம் சென்றவரிடத்துக் கிரியை சிறந்து விளங்குவதால் சிவ தத்துவம் உணரப்படுவதாக உள்ளது. அப்படிப் பட்டவர்களிடம் பிரிப்பின்றிச் செறிந்திருக்கும் சுகரூபமான யோகம் சிவத்தின் பேரருளாலேயாம். அவரிடம் சிறந்த கல்வியும் நல்ல திருமேனியும் நற்குணங்களும் காணப்பெறும். அவர்களுடைய அறிவில் அண்டகோசத்தில் அசைவனவும் அசையாதனவும் விளங்கும்.

2190. ஆதி பரஞ்சிவம் சத்தி சதாசிவம்
ஏதம்இல் ஈசன்நல் வித்தியா தத்துவம்
போதம் கலைகாலம் நியதிமா மாயை
நீதிஈ றாக நிறுத்தினன் என்னே.

பொருள் : ஆதியாகிய பரசிவம் சிவம்சத்தி சதாசிவம் குற்றமில்லாத மகேசன் சுத்தவித்தை ஆகிய தத்துவமும், வித்தை கலை காலம் நியதி மாயை ஆகிய தத்துவமும் முறையையும் முடிவும் உடையனவாக அமைந்துள்ளான் என்று அறியாவாயாக. சுத்தவித்தை சிவதத்துவத்திலும் வித்தை வித்தியா தத்துவத்திலும் உள்ளன எனக்கொள்க.

2191. தேச திகழ்சிவம் சத்தி சதாசிவம்
ஈசன் அனல்வித்தை இராகம் கலைகாலம்
மாசகல் வித்தை நியதி மகாமாயை
ஆசில் புருடாதி ஆன்மாஈ றாறே.

பொருள் : ஒளிமிக்கசிவம் சத்தி சதாசிவம் மகேசன் சுத்தவித்தை இராகம் கலை காலம் குற்றமற்ற வித்தை நியதிமாயை குற்றமில்லாத புருடன் முதலாக ஆன்மதத்துவங்கள் ஈறாகத் தத்துவம் 36 ஆகும். (சிவத்துவங்கள் ஐந்தும், வித்தியா தத்துவங்கள் ஏழும் கூறப்பட்டுள்ளன எனவும் கொள்ளலாம்.)

2192. ஆணவம் மாயையும் கன்மமும் ஆம்மலம்
காணும் முளைக்குத் தவிடுஉமி ஆன்மாவும்
தாணுவை ஒவ்வாமல் தண்டுலமாய் நிற்கும்
பேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்தே.

பொருள் : ஆணவம் உமியை ஒக்கும் மாயை தவிட்டை ஒக்கும். கன்மம் முளையை ஒக்கும். ஆருயிர் அரிசியை ஒக்கும். உயிர் கலப்புத்தன்மையால் சிவனுடன் புணர்ப்பாய்ப் பிரிவின்றி நிற்பினும் அரிசியை ஒக்குமே யன்றிச் சிவனை ஒவ்வாது. திருவருளால் உன்னுடைய பாசங்களை விட்டுவிலகிச் சிறப்பருளும் சிவபெருமான் திருவடிப் பெருமையினைப் போற்றுவாயாக. (தண்டுலம் - அரிசி.)

2193. பசுக்கள் பலவண்ணம் பாலொரு வண்ணம்
பசுக்களை மேய்க்கின்ற ஆயன் ஒருவண்ணம்
பசுக்களை மேய்க்கின்ற ஆயன்கோல் போடில்
பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே.

பொருள் : பசுக்கள் பல நிறமுடையவையாயினும் அவைகளின் பால் ஒரே வெண்மை நிறமுடையதுதான். அப்பசுக்கள் பல வாயினும் மேய்ப்பான் ஒருவன்தான். அப்பசுக்களை மேய்ப்பவன் மேய்ப்பதை நிறுத்தினால் பசுக்கள் மேய்ப்பானைச் சூழ்ந்து கொண்டு அகலாது நின்றுவிடும். (பசுக்கள் - ஆன்மாக்கள். பால், தன்மை, ஆயன் - பசுபதி; சிவம்.)

2194. உடல்இந் தியம்மனம் ஒண்புத்தி சித்தம்
அடலொன்று அகந்தை அறியாமை மன்னிக்
கெடும்அவ் வுயிர்மயல் மேலும் கிளைத்தால்
அடைவது தான்ஏழ் நரகத்து ளாயே.

பொருள் : உடலில் உள்ள கன்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள் மனம் ஒளிமிக்க புத்தி சித்தம் வலிமை மிக்க அகங்காரம் ஆகிய அந்தக் காரணங்கள் அறியாமையைப் பொருந்திக் கெடும். அத்தகைய உயிரினது. மயக்கம் மேலும் பெருகினால் அவ்வுயிர் ஏழு நரகத்திலும் சென்று துயர் உறும். ஆன்மா அறியாமையோடு பொருந்தினால் உய்தி இல்லை.

2195. தன்தெரி யாத அதீதம்தற்கு ஆணவம்
சொல்தெரி கின்ற துரியம்சொல் காமியம்
பெற்ற சுழுத்திப்பின் பேசுறும் காதலாம்
மற்றது உண்டிக் கனவுநன வாதலே.

பொருள் : மூலாதாரத்தைப் புருடன் பொருந்திக் கிடப்பது தன்னை அறியாத துரியாதீத நிலையாகும். உந்தியைப் புருடன் அடையும் போதும் பிரணவம் விளங்கும் அகரக் கலையை விரும்பிப் பொருந்தி நிற்பான். இதயத்தில் புருடன் சுழுத்தியை அடையும்போது சொல்லப்பெற்ற காமிய வாசனையுடன் உள்ளான். மற்று அவ்வாசனையே அனுபவமாகக் கனவு நனவு நிலைகளில் ஆகும்.

2196. நனவில் கனவுஇல்லை ஐந்து நனவில்
கனவிலாச் சூக்குமம் காணும் சுழுத்தி
தனலுண் பகுதியே தற்கூட்டும் மாயை
நனவில் துரியம் அதீதம் தலைவந்தே.

பொருள் : நனவிற் கனவில்லை யாதலின் அந்நனவின்கண் ஐம்பொறியும் செம்மையாகத் தொழிற்படும். நனவின் கண் கனவு நிகழாத உறக்கம் சுழுத்தி எனப்படும். அதில் மனம் முதலிய நுண்பொறிகள் தொழிற்படும். தன்னைச் சார்ந்துள்ள மாயை என்னும் மூலப் பகுதியின் நுகர்வே பேருறக்க நிலையாகும். நனவில் அப்பால் நிலை தன்னை வேறென உணரும்நிலை பொருந்தியதாகும். (அதீதம் - அப்பால்)

2197. ஆறாறில் ஐஐந்து அகல நனாநனா
ஆறாம் அவைவிட ஆகும் நனாக்கனா
வேறான ஐந்தும் விடவே நனாவினில்
ஈறாம் சுழுத்தி இதில்மாயை தானே

பொருள் : முப்பத்தாறு தத்துவங்களில் உடலின் சார்பான ஆன்ம தத்துவமும் புருடனும் ஆகிய இருபத்தைந்து தத்துவங்களும் நீங்கினால் சத்த சாக்கிரம் பொருந்தும் மேலுள்ள வித்தியா தத்துவத்தில் உள்ள ஆறும் முன்னுள்ள இருபத் தைந்தும் ஆகமுப்பத் தொன்றும் நீங்கினால் நனவில் கனவு பொருந்தும், இவைகளின் மேலுள்ள வேறான சிவ தத்துவம் ஐந்தும் கழன்ற போது சுழுத்தி அமையும். இந்நிலையில் எஞ்சியுள்ளது சுத்தமாயை ஒன்றேயாகும்.

2198. மாயையில் வந்த புருடன் துரியத்தில்
ஆய முறைவிட்டு அதுவும்தான் அன்றாகிச்
சேயதே வலவிந் துடன் செல்லச் சென்றக்கால்
ஆய தனுவின் பயனில்லை யாமே.

பொருள் : பேருறக்க நிலையாகிய துரியத்தில் ஆளுடன மட்டும் ஆருயிர் நிற்கும், அதற்கும் அப்பால் அந் நிலையையும் கடந்து அப்பால் நிலையாகிய புலம்பின்கண் மாயையுடன் செல்லும. அவ்வாறு நிற்கும் நிலையில் மாயாகாரிய உடம்பு இருந்தும் வினை நிகழ்ச்சி இன்மையால் ஏதும் பயன் இல்லை. ஈண்டு கூறப்படும் ஆள் பொதுமை - நிலையென்க. (புருடன் - ஆன்மா. கேவலவிந்து - கேவல அவத்தையில் மாயையோடு.)

2199. அதீதத் துரியத்து அறிவனாம் ஆன்மா
அதீதத் துரியம் அதனால் புரிந்தால்
அதீதத்து எழுந்து அறிவாகிய மானன்
முதிய அனலில் துரியத்து முற்றுமே.

பொருள் : அப்பால் நிலைப் பேருறக்கத்தின்கண் ஆருயிர் கருவிகளுடன் கூடாமல் தன்னளவாய் அறிவாய் நிற்கும். அந்நிலையிலேயே திருவருள் துணையால் உறுதியாக நின்றால் அப்பால் நிலையில் கிளர்ந்தெழுந்த அறிவாகிய ஆருயிர் முதிய அனல் என்று சொல்லப்படும் சிவ பெருமானாகிய பேரறிவுச் சுடரில் புணர்ந்து நிலையுறும். (அதீதத் துரியம் - அப்பால் நிலைபேருறக்கம். இயமானன் - ஆன்மா. முதிய அனல் - பழமையான சிவாக்கினி.)

2200. ஐஐந்து பத்துடன் ஆனது சாக்கிரம்
கைகண்ட ஐஐந்தில் கண்டம் கனாஎன்பர்
பொய்கண்ட மூவர் புருடன் சுழுனையின்
மெய்கண் டவன்உந்தி மேவல் இருவரே.

பொருள் : சாக்கிரத்தில் தொழிற்படும் கருவிகள் முப்பத்தைந்து கண்டத்தில் இருபத்தைந்து தத்துவங்களோடு தொழிற்படும் நிலையைக் கனா என்பர். பொய்யான உடலை இடமாகக் கொண்ட புருடனோடு பிராணன் சித்தம் ஆகிய மூன்றும் சுழுத்தியிலாகும். உடலை அறிந்த புருடனோடு பிராணன் ஆக இரண்டு உந்தியிலாதல் துரியம்.

2201. புரியட் டகமே பொருந்தல் நனவு
புரியட் டகந்தன்னில் மூன்று கனவு
புரியட் டகத்தில் இரண்டு சுழுத்தி
புரியட் டகத்தொன்று புக்கல் துரியமே.

பொருள் : சாக்கிரத்தில் புருடனுடன் பொருந்துவன பஞ்ச தன் மாத்திரைகளும் மனம் புத்தி அகங்காரங்களும் சேர்ந்து எட்டாகும். சொப்பனத்தில் புருடனுடன் பொருந்துவன மனம், புத்தி, அகங்காரம் ஆகிய மூன்றாகும். சுழுத்தியில் புருடனுடன் புத்தியும் அகங்காரமும் கூடித் தொழிற்படும். துரியத்தில் புருடனுடன் அகங்காரம் ஒன்று மட்டும் பொருந்தித் தொழிற்படும். முன் மந்திரத்தில் தூல தேகத்தில் கீழாலவத்தையை விளக்கியவர் இங்குச் சூக்கும தேகத்தில் அமையும் கீழால் அவத்தையை விளக்குகின்றார். (புரியட்டகம் - சூக்குக தேகம்.)

2202. நனவில் நனவு புலனில் வழக்கம்
நனவிற் கனவு நினைத்தல் மறத்தல்
நனவிற் சுழுத்திஉன் நாடல் இலாமை
நனவில் துரியம் அதீதத்து நந்தியே.

பொருள் : சாக்கிரத்தில் நனவு நிலையில் புலன் அறிவு சிறப்பாக விளங்கும். புலன்களோடு தொடர்பு இன்றி அவற்றின் வாதனைகளுடன் கூடியிருப்பது சாக்கிரத்தில் கனவு நிலையாகும். அவ் வாசனைகளையும் மறந்து நிற்கும் போது சாக்கி சுழுத்தி அமையும். ஒன்றையும் பற்றிய நாட்டம் இல்லாமை சாக்கிரத்தில் துரியம். சாக்கிரத்தில் அதீதத்து சிவானுபவம் ஒன்றேயாம். (நினைத்தல் - கனவு, மறத்தல் - உறக்கம், நாடல் - பேருறக்கம், நாடல் இலாமை - உயிர்ப்பு அடங்கல், புலனில் வழக்கம் - ஐம்புலன் ஒடுக்கம்.)

2203. கனவில் நனவுபோல் காண்டல் நனவாம்
கனவினில் கண்டு மறத்தல் கனவாம்
கனவில் சுழுத்தியும் காணாமை காணல்
அனுமாதி செய்தலில்ஆன துரியமே.

பொருள் : கனவின்கண் நனவுபோல் காண்பது கனவின் நனவு கனவிற் கனவு கண்டு மறத்தலாகும். கனவின் உறக்கம் காணாமையாகும். கனவின் பேருறக்கம் அனுமாதியாகக் காண்டல். அனுமாதி உத்தேசம், உத்தேசம் என்பது பொருள் உண்மை மட்டும் கோடல், அஃதாவது எழுவாய்க் காட்சியினை ஒத்தல், உயிர்ப்பு அடங்கலின்கண் அவ்உத்தேசக் செயலும் இன்றி நிற்றல்.

2204. சுழுத்தி நனவுஒன்றும் தோன்றாமை தோன்றல்
சுழுத்தி கனவுஅதன் உண்மை கழுத்தியில்
சுழுத்தி அறிவுஅறி வாலே அழிகை
சுழுத்தித் துரியமாம் சொல்லறும் பாழே.

பொருள் : சுழுத்தி என்று சொல்லப்படுவது உறக்கத்தில் கண் நனவு ஒன்றும் தோன்றாமை. உறக்கத்தில் கனவு ஆருயிரின்கண் தன் உண்மை மட்டும் தோன்றுதல் உறுக்கத்தில் உறக்கம் - சுட்டுணர்வும் சிற்றுணர்வும் அழிவெய்தல். அந்நிலை முற்றுணர்வால் ஏற்படுவதாகும். முற்றுணர்வு - சிவஞானம் உறுக்கத்தில் பேருறக்கம் சொற் கழிவாகிய பாழ் நிலையாகும் சொற்கழிவு - சொல்லுக்கு அடங்காதது.

2205. துரிய நனவாம் இதமுணர் போதம்
துரியக் கனவாம் அகமுணர் போதம்
துரியச் சுழுத்தி வியோமம் துரியம்
துரியம் பரமெனத் கோன்றிடும் தானே.

பொருள் : (துரியத்தில் நனவு என்பது இதத்தைத் தரும் சிவ உணர்வில் நிற்பது.)

துரியத்தில் கனவு என்பது சிரசுக்கு மேல் சிவனை அண்ட ஆகாயத்தில் அறிவதாகும். துரியத்தில் சுழுத்தி என்பது சிரசுக்கு மேலுள்ள நிராதார ஆகாயத்தில் பொருந்துவதாகும். துரியத்தில் துரியம் என்பது எல்லாத் தத்துவங்களையும் கடந்த போது தன்னைப் பரமாக அறிவதாகும்.

2206. அறிவுஅறி கின்ற அறிவு நனவாம்
அறிவுஅறி யாமை அடையக் கனவாம்
அறிவுஅறி அவ்அறி யாமை சுழுத்தி
அறிவுஅறி வாகும் ஆன துரியமே.

பொருள் : சிற்றறிவு திருவருளால் முற்றறிவின்கண் ஒடுங்கி நின்று அவ் அறிவினை அறிதல் அறிவின்கண் நனவாகும். அறிவிற் கனவு அவ் அறிவை அறிகின்றோம் என்னும் எண்ணமும் தோன்றாமல் அவ் அறிவின்கண் ஒடுங்குதல். அறிவுறக்கம் தன்னறிவு அவ் அறிவின்பின் செல்லுதலால் அவ் அறிவேயாய்த் தன்னை மறத்தலாகும். அறிவுப் பேருறக்கம் பரமாகிய சிவன் தோன்றுதலாகும்.

2207. தான் எங்கும் ஆயவன் ஐம்மலம் தான்விட்டு
ஞானம் தனதுரு வாகி நயந்தபின்
தான்எங்கு மாய்நெறி நின்றது தான்விட்டு
மேல்நந்தச் சூக்கம் அவைவண்ணம் மேலிட்டே.

பொருள் : பர ஆகாயம் போல் தான் எங்கும் பொருந்தும் நிலையை அடைந்தவன் ஐம் மலங்களினின்றும் விடுபட்டு ஞானமே தனது உருவாகச் சிவத்தை விரும்பி அடைந்தவன் தான் எங்குமாய் நிற்கும் தன்மையும் விட்டு மேலாக விளங்கும் சூக்கும நிலையான பிரணவ தேகத்தை அடைவான். (வன்னம் - எழுத்து.)

2208. ஐஐந்தும் ஆறும்ஓர் ஐந்தும் நனாவினில்
எய்யும் நனவு கனவு சுழுத்தியாம்
மெய்யும்பின் சூக்கமும் மெய்ப்பகுதி மாயை
ஐயமும் தான்அவன் அத்துரி யத்தனே.

பொருள் : முப்பத்தாறு தத்துவங்களுள் இருபத்தைந்து நீங்கிய போது சாக்கிரமும், ஆறு நீங்கிய போது சொப்பனமும், ஐந்து நீங்கிய போது சுழுத்தியும் முடிவுறும். இவையே நனவில் நனவு கனவு சுழுத்தியாகும் பின்னர்த் தூலமும் சூக்குமமும் சுத்த மாயையில் ஆம். அத்துரிய நிலையில் தத்துவங்கட்குத் தலைமை தாங்குபவனாய்த் தான் அவனாய் நிற்பன். (எய்த்தல் - இளைத்தல். இதுவரை கூறியதை இங்குத் தொதுத்துக்கூறியவாறு.)

2209. ஈதென்று அறிந்திலன் இத்தனை காலமும்
ஈதென்று அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்
ஈதென்று அறியும் அறிவை அறிந்தபின்
ஈதென்று அறியும் இயல்புடை யோனே.

பொருள் : இவ் வுண்மையை நான் இவ்வளவு காலமும் அறியவில்லை. இவ்வுண்மையை அறிந்தபின் வேறு அறியத்தக்க பொருள் ஒன்றும் இல்லை. அகண்ட வடிவான சிவமே முதல் என்றும் அஃது அறிவுக்கும் அறிவுரு என்றும் அறிந்தபின் அது தான் நாம் அடையும் பேறு என்று உணர்ந்த தன்மையன் ஆயினேன். சுத்த அவத்தையைத் தவிர அடைய வேண்டிய பேறு வேறொன்றும் இல்லை.

2210. உயிர்க்குஉயி ராகி உருவாய் அருவாய்
அயல்புணர் வாகி அறிவாய்ச் செறிவாய்
நயப்புறு சத்தியும் நாதன் உலகாதி
இயற்பின்றி எல்லாம் இருண்மூட மாமே.

பொருள் : சிவம் எல்லா உயிரினங்களுக்கும் உயிராகவும் உருவமாகவும், அருவமாகவும், அயலாகவும் அயலில் இருந்து புணரும் பொருளாகவும், அறிவாகவும் எங்கும் நிறைந்த பொருளாகவும், விரும்பப்படுகின்ற சத்தியாகவும், நாதனாகவும், உலகம், உடல், கருவி ஆகியவற்றை இயக்காது ஒழியின் அவை அனைத்தும் அஞ்ஞானத்தால் அறிவு பெறாது போகும்.

2211. சத்தி இராகத்தில் தான்நல் உயிராகி
ஒத்துறி பாச மலம்ஐந்தோடு ஆறாறு
தத்துவ பேதம் சமைத்துக் கருவியும்
வைத்தனன் ஈசன் மலம்அறு மாறே.

பொருள் : ஈசன் அநாதியே ஆன்மாக்களைப் பற்றிய மலம் நீங்கும் வண்ணம் ஆன்மாக்களின் மேல் வைத்த கருணையால் சத்தியோடு பொருந்தி அவளுக்கு உயிராகி நின்று, அநாதியே பொருந்திப் பாசத்தை வினைவிக்கும் ஐம்மலக் கூட்டத்தையும் முப்பத்தாறு தத்துவ பேதங்களையும் படைத்து அவற்றை நுகர்தற்குரிய உட்கருவியும் உயிரோடு கூட வைத்தனன்.

2212. சாக்கிரா தீதத்தில் ஆணவம் தன்னுண்மை
சாக்கிரா தீதம் துரியத்தில் தானுறச்
சாக்கிரா தீதத்தில் ஆணவம் தான்விடாச்
சாக்கிரா தீதம் பரன்உண்மை தங்குமே.

பொருள் : சாக்கிரா தீத நிலையில் ஆணவ மலமும் தன்னுண்மை என்ற ஆன்மாவும் உள்ளன. சாக்கிரா தீதத்துப் பொருந்திய ஒளியில் ஆன்மா பொருந்த சாக்கிரா தீதத்தில் பொருந்திய ஆணவம் நீங்கல் பெற்றுத் திருவருளைப் பொருந்தி நின்றால் பரத்தின் உண்மை இவர்களிடம் தங்கி நிலை பெறும். (சாக்கிரா தீதம் - அப்பால் நனவு.)

2213. மலக்கலப் பாலே மறைந்தது சத்தி
மலக்கலப் பாலே மறைந்தது ஞானம்
மலக்கலப் பாலே மறைந்தனன் தாணு
மலக்கலப்பு அற்றால் மதியொளி யாமே.

பொருள் : அநாதியே ஆன்மாவோடு மலம் கலந்திருப்பதால் சிவ தத்துவம் விளங்கும் மகாமாயை (சுத்தவித்தை) மறைந்து உள்ளனள். மலக்கலப்பால் தெளிவான ஞானம் விளங்கவில்லை. மலக்கலப்பால் சிவனும் மறைந்திருந்தான். ஆன்மாவினிடம் பொருந்திய மலக் குற்றம் அகன்றால் சுத்தவித்தை விளங்கும் மதிமண்டலம் ஒளிபெற்று விளங்கும். (ஆருயிர் - ஆன்மா, பேருயிர் - பரமான்மா.)

2214. திகைக்கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்று
நகைக்கின்ற நெஞ்சுள் நரிக்குட்டி நான்கு
வகைக்கின்ற நெஞ்சினுள் ஆனைக்கன்று ஐந்து
பகைக்கின்ற நெஞ்சுக்குப் பாலிரண் டாமே.

பொருள் : நன்மை தீமைகளைப் பிரித்தறியாத சிந்தையில் காமம் வெகுளி மயக்கம் ஆகிய சிங்கங்கள் மூன்று உள்ளன. விஷயங்களை மகிழ்ச்சியுடன் சென்று பற்றி வஞ்சகமாய் அவைகளை அடையும் முயற்சியில் ஈடுபடுத்தும் அந்தக் கரணங்களாகிய நரிக்குட்டிகள் நான்கு உள்ளன. வெளிப் பொருட்களை நுகரும் விஷயத்தில் வகை செய்த அனுபவிக்க முயலும் இந்திரியங்களாகிய ஆனைக் கன்றுகள் ஐந்து உள்ளன. புறத்தேயும் அகத்தேயும் செலுத்துகின்ற இரு தன்மைகள் நெஞ்சுக்கு உள்ளன.

2215. கதறு பதினெட்டுக் கண்களும் போகச்
சிதறி எழுத்திடுஞ் சிந்தையை நீரும்
விதறு படாமுன்னம் மெய்வழி நின்றால்
அதிர வருவதோர் ஆனையும் ஆமே

பொருள் : தச வாயுக்களும் புரியட்டகமும் பொருந்திய உடல் புற உலகில் அவாவிச் செல்ல, சிதறுண்டு எழுகின்ற மனத்தை நீங்கள் அவ்வாறு கேடுற்று உடல் அழியும் முன்னம் இறைவனை அடையும் உண்மை நெறியைப் பற்றி நின்றால் மேலே கண்ட பதினெட்டும் அதிர்ச்சியடைய, ஒப்பற்ற ஆன்மாவின் தலைவனாகிய சிவன் வெளிப்பட்டருளுவான். (ஆனை - ஆன்+ஐ = ஆன்மாவின் தலைவன்; சிவன்)

2216. நனவகத் தேயொரு நாலைந்தும் வீடக்
கனவகத் தேஉள் கரணங்க ளோடு
முனவகத் தேநின்று உதறியுட் புக்கு
நினைவகத்து இன்றிச் சுழுத்திநின் றானே.

பொருள் : நனவில் ஞானேந்திரிய கன்மேந்திரியங்களாகிய பத்தும் அவற்றின் விடயங்களாகிய பத்தும் நீங்க, கனவில் புகுந்து அந்தக் கரணங்களோடு முன் மூளையிலிருந்து சிந்திப் பதையும் மறந்து உள்ளமாகிய மன மண்டலத்தில் நிலை பெற்றால் நினைவும் இல்லாமல் ஆன்மா நின்மல சுழுத்தியில் பொருந்தும்.

2217. நின்றவன் ஆசான் நிகழ்துரி யத்தனாய்
ஒன்றி உலகின் நியமாதிகள் உற்றுச்
சென்று துரியாதீ தத்தே சிலகாலம்
நின்று பரனாய் நின்மல னாமே.

பொருள் : இவ்வாறு நிற்கும் உயிர் ஆசான் திருவருளால் நனவில் பேருறக்கத்தனாய் உலகத்துடன் பொருந்திச் செய்ய வேண்டும். கடமைகளைச் செவ்வையாகச் செய்து நின்றால் அப்பால் நனவிற் செல்வது வாய்க்கும் அதன்கண் சில நாள் உறைத்து நிற்றல் வேண்டும். இயல்பாகிய பாசங்களின் நீங்கிய சிவபெருமானின் திருவடிப் பேற்றால் மலம் நீங்கித் தூய்மை எய்தும். இதுவே ஆருயிர் பரனாய் நின் மலனாம் நிலைமை எய்துவது என்க.

2218. ஆன்அவ் ஈசன் அதீதத்தில் வித்தையாத்
தான் உலகு உண்டு சதாசிவ மாசத்தி
மேனிகள் ஐந்தும்போய் விட்டுச் சிவமாகி
மோனம் அடைந்தொளி மூலத் னாமே.

பொருள் : தூயோனாக விளங்கிய அவ் ஆருயிர்க் கிழவன் ஈசன் என்று அழைக்கப் பெறுவன். அவ் உயிர் அப்பால் நிலையில் திருவடி யுணர்வாய்த் திகழும். சிவ உலக நுகர்வுகளை நுகரும், அருளோன் முதலாக அயன் ஈறாகச் சொல்லப்படும் தூமாயை அருள்விக்க வடிவங்களை எய்தும். திருவருளால் அவ் வடிவங்களை அகன்று தூய சிவனாகி ஞான வரம்பாம் மோனம் எய்திப் பேரறிவுப் பேரொளிப் பெரு முதல்வனாக விளங்குவான்.

2219. மண்டலம் மூன்றினுள் மாயநன் நாடனைக்
கண்டுகொண்டு உள்ளே கருதிக் கழிகின்ற
விண்டவர் தாமரை மேலொன்றும் கீழாக
அண்டமும்ல தானாய் அகத்தினுள் ஆமே.

பொருள் : உடம்பினுள் மும் மண்டலங்களில் மாயத்தைப் புரியும் பெருமானைத் தரிசித்துக் கொண்டு உள்ளே நினைந்து நீங்கி, மலர்ந்து விளங்குகின் ற சகஸ்ர தளத்தைக் கடந்து மேற் சென்ற போது அண்டம் யாவும் தானாகவே அகத்தினுள் விளங்கும்.

இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் - Page 3 Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Tue Mar 27, 2012 1:44 pm

2220. போதறி யாது புலம்பின புள்ளினம்
மாதுஅறி யாவகை நின்று மயங்கின
வேதுஅறி யாவணம் நின்றனன் எம்இறை
சூதறி வாருச்சி சூடிநின் றாரே.

பொருள் : புள்ளினங்கள் என்று சொல்லப்படும் ஆருயிர்கள் செவ்வியாகிய போது அறியாமல் புலம்பின. திருவருள் ஆற்றலாம் மாதினை யறியாமல் நின்று மயங்கின. வேறு பிரித்துக் காண முடியாத நிலைமையாய் வேறறப் புணர்ந்து நின்றனன் சிவன். அவன் திருவடி யுணர்வால் இச்சூழ்ச்சி உண்மையை உணர்வோர் அப்பெருமானின் திருவடியைச் சூடிப் பேரின்பம் உற்றுத் திகழ்வாராயினர்.

2221. கருத்தறிந்து ஒன்பது கண்டமும் ஆங்கே
பொருத்தறிந் தேன்புவ னாபதி நாடித்
திருத்தறிந் தேன்மிகு தேவர் பிரானை
பருத்தறிந் தேன்மனம் மன்னிநின் றேனே.

பொருள் : முன்மந்திரத்தில் கண்ட சிவம் விளங்கும் நுட்பத்தை அறிந்து ஆறு ஆதாரங்களையும் சோம சூரிய அக்கினியாகிய மும் மண்டலங்களையும் சேர்த்து ஒன்பது பிரிவுகளையும் உடலுள் பொருத்துதலை அறிந்தேன். புவனங்கள் அனைத்துக்கும் தலைவனான பரம்பொருளை நாடி ஒன்பது மண்டலங்களையும் திருத்தி அமைத்தேன். தேவாதி தேவனாகிய சிவனை அகத்தில் வருவிக்க அறிந்தேன். அவன் என் மனத்தையே பொருந்தி நிலையாக நின்றுவிட்டான்.

2222. ஆன் விளக்கொளி தூண்டும் அவன் என்னத்
தான விளக்கொளி யாம்மூல சாதனத்து
ஆன் விதிமூலத் தானத்தில் அவ்விளக்கு
ஏனை மதிமண்ட லம்கொண்டு எரியுமே.

பொருள் : உலகத்திலான விளக்கை எண்ணெய்த் திரியிட்டுத் தூண்டுகின்றவனது செயல்போல மூலாதாரத்திலுள்ள அக்கினி மண்டல ஒளி மூல சாதனையினால் ஆகும். அவ்வாறு தூண்டப்பட்ட மூலாதாரத்திலுள்ள அவ்வொளி, ஏனைய சூரிய சந்திர மண்டலங்கள் ஆகியவற்றைக் கொண்டு பிரகாசமாய் விளங்கும்.

2223. உள்நாடும் ஐவர்க்கு மண்டை ஒதுங்கிய
விண்நாட நின்ற வெளியை வினவுறில்
அண்ணாந்து பார்த்துஐவர் கூடிய சந்தியில்
கண்நாடி காணும் கருத்ததுஎன் றானே.

பொருள் : உள் நாட்டமுடைய ஐம்பொறிகளை உடையார்க்கு மண்டைக்கு மேலாக விளங்கும் ஊர்த்துவ சகஸ்ர தளத்தில் ஆகாய மண்டலத்தை ஆராயப்புகின் மேல் நோக்கிய அகத்தில் ஐம்பொறிகளும் கூடிய சந்தியில் அது கண்ணால் சிந்தையில் நாடிக் காணும் தன்மையது என்றான்.

2224. அறியாத வற்றை அறிவான் அறிவான்
அறிவான் அறியாதான் தன்னறிவு ஆகான்
அறியா தவத்தை அறிவானைக் கூட்டி
அறியாது அறிவானை யார் அறி வாரே.

பொருள் : தன்னறிவால் சுட்டி உணரப்படாததாய தூமாயை முதலியவற்றைத் திருவருட் கண்ணால் காண்பவனே தெளிந்த அறிவுடையவன் ஆவன். அவற்றைத் தன் அறிவால் அறியுலுறுவான் அறியாவன் ஆவன். அறிவான்ஆகான் என ஓதினார். அறிவு விளங்காமல் புலம்புற்றிருந்த ஆருயிரை மாயா காரியங்களைக் கூட்டி ஐம்பாடுகளில் செலுத்தி மறைந்து நின்று அறிவித்து வரும் அவ் அருளுடையானை அவன் திருவருள் துணையின்றி எவர்தாம் அறிவர் இப்பாடு கீழ்ப்பாடு என்பர். (பாடு - அவத்தை, தன்னறிவு - ஆன்ம ஞானம்.)

2225. துரிய தரிசனம் சொற்றோம் வியோமம்
அரியன தூடணம் அந்நன வாதி
பெரியன கால பரம்பின் துரியம்
அரிய அதீதம் அதீதத்த தாமே.

பொருள் : துரியம் எனப்படும் புரிவுக்காட்சி பேரறிவுப் பெருவெளியைக் காண்பதெனக் கூறினோம். வியோமம் - அறிவு வெளி, சொல்லப்படும் நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்பு , அடங்கல் முதலியன, தடையெனக் கழித்து நன்னடைக்குக் கொண்டுவர வேண்டிய தொன்று புரிவு - சுத்தம் காலங்கடந்த எங்கும் பரம்பிய பெரியனவாகிய புரிவு அருமை சேர் அப்பாலதாகும். (அதீதம் - அப்பால்)

2226. மாயையிற் சேதனன் மன்னும் பகுதியோன்
மாயையின் மற்றது நீவுதல் மாயையாம்,
கேவல மாகும் சகலமா யோனியுள்
தோயும் மனிதர் துரியத்துள் சீவனே.

பொருள் : அசுத்த மாயையில் அறிவுடைய ஆன்மா அதன் பகுதிகளில் (31 தத்துவ அறிவில்) நிலை கொண்டுபொருந்தும் சுத்த மாயையில் ஆன்மா சிவ தத்துவத்தை அறிவதில் பொருந்தும் இவ்வுண்மையை அறியாத சகலர் கேவல அவத்தையை அடைந்து பல யோனிகளில் புக்கு உழல்வர். சுத்த அவத்தை (சுத்த மாயை)யில் பொருந்தியுள்ளவர் நின்மல துரியத்தைக் கண்ட சிவனாவர். நின்மல சாக்கிர நிலையை அடைந்தவருக்குப் பிறவி இல்லை.

7. கேவல சகல சுத்தம் (புலம்பு புணர்வு புரிவு)

(கேவலமாவது, கருவி கரங்களோடு கூடாமல் நிற்கும் நிலை. சகலமாவது கருவி கரணங்களோடு கூடி நிற்கும் நிலை, சுத்தமாவது கருவி கரணங்களை விட்டுத் தூயனாய் நிற்கும் நிலை)

2227. தன்னை அறிசுத்தன் தற்கேவ லன்தானும்
பின்னம் உறநின்ற பேத சகலனும்
மன்னிய சத்தசத் துச்சத சத்துடன்
துன்னுவர் தத்தம் தொழில்கள் வாகவே.

பொருள் : தன் உண்மையை அறிந்த சுத்தனும், தான் ஒன்றையும் அறியாமல் கிடக்கும் கேவலனும், இவர்களுக்கு வேறான பல வகைப்பட்ட பரிபாகமுள்ள சகலவனும், முறையே சத்தையும், அசத்தையும், சதசத்தையும் உடனாக, தத்தம் அறியும் திறனுக்குப் ஏற்பப் பொருந்தி நிற்பர். சத்து - சிவன்; அசத்து - மாயை; சதசத்து - ஆன்மா. ஆன்மா சத்தோடு கூடிச் சத்தாயும், அசத்தோடு கூடி அசத்தாயும் நிற்றலின் சத சத்தாம். ஆன்மா பக்குவத்துக்கு ஏற்ப. இம்மூன்று நிலைகளிலும் பொருந்தி நிற்கும்.

2228. தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானே தான்செய்த வினைப்பயன் துய்ப்பானும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே.

பொருள் : தனக்குப் பகைவனும் நண்பனும் தானே ஆவான். அங்ஙனமே தனக்குரிய மறுமைப்பயனும் இம்மைப் பயனும் தன்னாலே ஆகும். தான் செய்த புண்ணிய பாவச் செயல்களின் பயனை அனுபவிப்பவனும் தானே யாவான். தனக்குத் தலைவனும் தானே ஆவான். ஆன்மாக்கள் செய்யும் வினைக் கேற்ப அனுபவமும் பயனும் உண்டாம்.

2229. ஆமுயிர் கேவலம் மாமாயை யின்நடந்து
ஆம்உயிர் மாயை எறிப்ப அறிவுற்று
காமியம் மாமேய மும்கல வாநிற்பத்
தாம்உறு பாசம் சகலத்து ஆமே.

பொருள் : கேவல நிலையில கிடக்கின்ற உயிர் சுத்த மாயையில் பொருந்தி, பிறகு பக்குவமாகின்ற உயிர் மாயையின் தொடர்பால் விளக்கம் பெற, அறிவுற்று பண்டைய வினைப் பயன்களும் அவைகளை அடைவதற்குரிய மாயேயமாகிய தனுகரண புவன போகங்களும் பெற்றும், தாம் அடைந்த பாசத்தால் சகல நிலையை அடையும்.

2230. சகல அவத்தையில் சார்ந்தோர் சகலர்
புகலும் மலம்மூ வகையும் புணர்ந்தோர்
நிகரில் மலரோன்மால் நீடுபல் தேவர்கள்
நிகழ்நரர் சீடம் அந்தமும் ஆமே.

பொருள் : சகல நிலையில் கருவிகளோடு கூடி வந்தவர் சகலர் ஆவார். அவர்கள் ஆகமங்களில் சொல்லப்பெறும் ஆணவம் கன்மம் மாயை ஆகிய மூன்று வகையான மலங்களுடன் பொருந்தியவர்கள் ஒப்பில்லாத பிரமன் திருமால் பலவாக வுள்ள தேவர்கள் இவ்வுலகில் வாழ்கின்ற மக்கள் புழு ஈறாகச் சகலராவர். பிரமன்முதல் புழு ஈறாகப் பிறப்பு இறப்பில் பட்டவராதலின் சகலராவர்.

2231. தாவிய மாயையில் தங்கும் பிரளயம்
மேவிய மற்றது உடம்பாய்மிக் குள்ளன
ஓவல் இலக்கணர் ஒன்றிய சீகண்டர்
ஆவயின் நூற்றெட்டு உரத்திர ராமே.

பொருள் : அசுத்த மாயையில் தங்கியிருக்கும் பிரளயகாலர் பொருந்திய அந்த அசுத்த மாயையே உடம்பாக மற்றைய மாயேயங்களை விட்ட தன்மையுடைய வராவர். அவர்கள் சிவத்தோடு பொருந்திய சீகண்டரும் நூற்றெட்டு உருத்திரர்களும் ஆவார்கள்.

2232. ஆகின்ற கேவலத்து ஆணவத்து ஆனவர்
ஆகின்ற வித்தேச ராம்அனந் தாதியர்
ஆகின்ற எண்மர் எழுகோடி மந்திரர்
ஆகின்ற ஈசர் அநேகரும் ஆமே.

பொருள் : பொருந்திய கேவல நிலையில் ஆணவமலம் ஒன்று மட்டும் உடைய விஞ்ஞானகலர். அவ்வாறு ஆகின்ற அனந்தாதியராகிய வித்தியேசுரர் எண்மரும் சப்த கோடி மகா மந்திரர்களும் மந்திரேசர்கள் பலரும் ஆவர்.

2233. ஆம்அவ ரில்சிவ னார்அருள் பெற்றுளோர்
போம்மலந் தன்னால் புகழ்விந்து நாதம்விட்டு
ஓம்மய மாகி ஒடுங்கலின் நின்மலம்
தோம் அறும் சுத்த அவத்தைத் தொழிலே.

பொருள் : முற்கூறிய விஞ்ஞானகலரில் மிகப் பக்குவம் பெற்றுச் சிவத்தினது அருளுக்குப் பாத்திரமானவர் வலி யொடுங்கிப் போகும் ஆணவ காரியமாகிய விந்து நாதங்களைக் கடந்து பிரணவ சொரூபமாகிச் சிவத்தின் ஒடுங்குதலால் மலக் குற்றமில்லாச் சுத்த நிலையை அடைவர்.

2234. ஓரினும் மூவகை நால்வகை யும்உள
தேரில் இவைகே வலம்மாயை சேர்இச்சை
சார்இய லாயவை தாமே தணப்பவை
வாரிவைத்து ஈசன் மலர்அறுத் தானே.

பொருள் : ஆராயின் ஞான சொரூப நிலையில் ஆன்மாக்கள் மூன்று வகையாவும் நான்கு வகையாகவும் உள்ளன. ஆராயும் போது இவை மாயையோடு பொருந்தி இச்சையைச் சாருகின்ற தன்மையால் ஆனவை. எனினும் பக்குவம் அடைந்த போது இச்சை முதலியவை எல்லாம் தாமே நீங்குவனவாம் அந்நிலையில் இறைவன் அருளைக் கூட்டி மலத்தைப் போக்கி அருளினான். விஞ்ஞானகலர்க்கு ஞானநிலையில் அருளைக் கூட்டி இறைவன் அருளுவான்.

2235. பொய்யான போதாந்தம் ஆறாறும் விட்டகன்று
எய்யாமை நீங்கவே எய்தவன் தானாகி
மெய்யாம் சராசர மாய்வெளி தன்னுட்புக்கு
எய்தாமல் எய்தும்சுத் தாவத்தை என்பதே.

பொருள் : நிலையற்ற மண்முதல் நாதம் ஈறாகவுள்ள முப்பத்தாறு தத்துவங்களின் அறிவையும் விட்டுநீங்கி, அவற்றுள் பற்றுச் சிறிதுமின்றி நீங்கவே எய்தப் பெறுகின்ற பொருளாகிய சிவமே தானாகி நித்தியமாய் சரம் அசரமான எங்குமாய்ப் பரவெளியுற்றும் கலந்து சென்று அடையாமலே தானே வந்து எய்தும் நிலையே சுத்தவத்தை எனப் பெறுவது தத்துவங்களை விட்டுப் பரவெளியில் கலந்திருக்கும் நிலை சுத்தமாகும்.

2236. அனாதி பசுவியாத்தி யாகும் இவனை
அனாதியில் வந்த மலம்ஐந்தால் ஆட்டி
அனாதியில் கேவலம் அச்சக லத்திட்டு
அனாதி பிறப்பறச் சுத்தத்துள் ஆகுமே.

பொருள் : அனாதியாகவே பசுத்துவத்தில் கட்டுப்பட்டிருக்கும் ஆன்மாவை அனாதியிலேயுள்ள ஐம்மலங்களில் உழலச் செய்து, அனாதியில் இருந்த கேவல நிலையினின்றும் நீங்கிச் சகலநிலையில் பொருந்துவித்து, அனாதியாகப் பற்றி வருகின்ற பிறவி நீங்க அவ்வான்மா சுத்தாவத்தையைப் பொருந் தினவன் ஆவான். அனாதி மிகப் பழமை. வியாத்தி அகண்டமான பொருளில் அடங்கி யிருத்தல்.

2237. அந்தரம் சுத்தாவத் தைகே வலத்தாறு
தந்தோர்தம் சுத்தகே வலத்தற்ற தற்பரத்
தின்பால் துரியத் திடையே அறிவுறத்
தன்பால் தனையறி தத்துவந் தானே.

பொருள் : பரவெளியை ஞானம் பற்றிச் சென்று அடைந்தவர் தமது சுத்த கேவல நிலையில் கடந்த தற்பல சிவத்தினிடம் சுத்த துரியத்தே தமது அறிவு பொருந்த ஆன்மாவாகிய தன்னிடம் சிவமாகிய பொருளை உணரும் உண்மையன் ஆவான்.

2238. ஐ ஐந்து ஒடுங்கும் ஆன்மாவில் ஆன்மாவும்
மெய்கண்டு சுத்த அவத்தையில் வீடாகும்
துய்யஅவ் வித்தை முதன்மூன்றும் தொல்சத்தி
ஐயன் சிவன்சத்தி யாம்தோற்றம் அவ்வாறே.

பொருள் : பிருதிவி முதல் புருடன் ஈறாக இருபத்தைந்து தத்துவங்களும் ஆன்மாவில் ஒடுங்கும். ஆன்மாவும் சுத்தநிலை எய்தித் தன் உண்மையை உணர்ந்து வீட்டினை அடையும். சிவ தத்துவத்திலுள்ள சுத்தவித்தை மகேசுரம் சாதாக்கியம் ஆகிய மூன்றும் பழமையான சத்தியிலும் ஐயனாகிய சிவத்திலும் ஒடுங்கும். சிருஷ்டிக் கிரமத்தில் சிவனிடமிருந்து சத்தியும் ஏனையவும் அவ்வாறே தோன்றும்.

2239. ஐஐந்தும் ஆன்மாவில் ஆறோடு அடங்கிடும்
மெய்கண்ட மேல்மூன்றும் மேவுமெய் யோகத்தில்
கைகண்ட சத்தி சிவபாகத் தேகாண
எய்யும் படியடங்கும் நாலேழ் எய்தியே.

பொருள் : சுத்தவத்தையில் ஆன்மதத்துவம் 24, புருடன் 1, வித்தியதத்துவம் 6, ஆக 31 தத்துவங்களும் ஆன்மாவிடம் அடங்கி நிற்கும். உண்மையில் கண்டத்தில் விளங்கும் சுத்த வித்தையும் புருவநடுவில் விளங்கும் மகேசுரமும் சிரசுவரை விளங்கும் சதாசிவரும் ஆகிய மூன்றும் உண்மையான யோகத்தில் சுழுமுனைக்கு மேல் விளங்கும் சத்திசிவ பாகமாய்க் காணும்படி இருபத்தெட்டுத் தத்துவங்களும் அடங்கும் முறையில் அடங்கும்.

2240. அணவத் தார்ஒன்று அறியாத கேவலர்
பேணிய மாயைப் பிரளயா கலராகும்
காணும் உருவினர் காணாமை காண்பவே
பூணும் சகலர்முப் பாசமும் புக்கோரே.

பொருள் : ஆணவ மலம் ஒன்றுமே உடையோராய் மாயை இன்மங்களை அறியாதவர் விஞ்ஞான கேவலர் ஆவார். ஆணவத்துடன் மாயையைப் பொருந்தினவர் பிரளயாகலர் ஆவர். காணுகின்ற உருவமுடையவராய் அக நோக்கம் பெறாமல் புற நோக்கம் உடையோராய் ஆணவம் கன்மம் மாயை ஆகிய மூன்றும் பொருந்தியவர் சகலர் ஆவார்.

2241. ஆணவம் ஆகும் விஞ்ஞான கலருக்குப்
பேணிய மாயை பிரளயா கலருக்கே
ஆணவ மாயையும் கன்மம் மூன்றுமே
காணும் சகலர்க்குக் காட்டும் மலங்களே.

பொருள் : விஞ்ஞானகலரிடை உள்ள குற்றம் ஆணவ மலமாகும். மாயையைப் பற்றிக்கொண்டு நிற்பது பிரளயாகலரின் குற்றமாகும். ஆணவம் மாயை கன்மம் ஆகிய மூன்றையும் பற்றிக்கொண்டு நிற்பது சகலரின் மலக்குற்றமாகும்.

2242. கேவலம் தன்னில் கிளர்ந்தவிஞ் ஞாகலர்
கேவலம் தன்னில் கிளர்விந்து சத்தியால்
பூவயின் கேவலத்து அச்சக லத்தையும்
மேவிய மந்திர மாமாயை மெய்ம்மையே

பொருள் : ஒருமலக் கட்டுடையார் தனி நிலையில் விளங்கிய விஞ்ஞான கலராவர்.. அந் நிலையில் தூண்டித் தொழிற்படுத்துவது அன்னை என்று சொல்லப்படும். விந்து சத்தியாகும். அந்நிலையில் அவ்வுயிர் உடல் முதலியவற்றையும் எய்தும். அவ்வுடல் மாமாயையில் தோன்றும் மந்திர உடலாகும். மெய்ம்மை - உடலின் தன்மை, கேவலம் - ஞானசொரூபம், ஞான நிலையில் விஞ்ஞானகலர் பராசத்தியைப் பொருந்தி நிற்பர்.

2243. மாயையில் மன்னும் பிரளயா கலர்வந்து
மாயையும் தோன்றா வகைநிற்க ஆணவ
மாய சகலத்துக் காமிய மாமாயை
ஏயமன் நூற்றெட்டு உருத்திரர் என்பவே.

பொருள் : இருமலக் கட்டினராகிய பிரளயகாலர் மாட்டு ஆணவமே மேலிட்டு நிற்பதால் ஏனைக் கன்மம் மாயைகள் உள்ளடங்கி நிற்கும். அதனால் அவை தோன்றாவகை நிற்க என ஓதினர். அவர் தமக்கு உடம்பும் தூமாயையினால் அமைந்ததாகும். எனவே அவர் இயற்றுங் கன்மங்களும் இருள்சேர் இருவினையும் கடந்த இறைபணியாகும். ஈண்டு உறைவோரும் இம் மெய்யினரும் நூற்றெட்டு உருத்திரர் என்ப.

2244. மும்மலம் கூடி முயங்கி மயங்குவோர்
அம்மெய்ச் சகலத்தர் தேவர் சுரர்நரர்
மெய்ம்மையில் வேதா விரிமிகு கீடாந்தத்து
அம்முறை யோனிபுக்கு ஆர்க்கும் சகலரே.

பொருள் : மூன்று மலங்களோடு கூடி அவற்றில் மயங்கி நிற்பவர் அவ் வுண்மையான சகல ஆன்மாக்கள் ஆவர். அவர்கள் தேவர் வானவர் மானுடர் மெய்மையில்லாத பிரமன் விரிந்து மிகுந்து கிடக்கும் புழு ஈறாக அம் முறையில் பிறிவிக் குழியில் பட்டுக் கட்டுப்படும் சகலராவர். (மெய்ம்மையில் வேதா - பரம்பொருளின் முடியைக் காணாமல் கண்டதாகப் பொய்யுரைத்த பிரமன். தேவர் முதல் புழு ஈறாக மும்மலமுடைய சகலர் பிறவிக்குழியில் பட்டுழல்வர்.)

2245. சுத்த அவத்தையில் தோய்ந்தவர் மும்மலச்
சத்துஅசத்து ஓடத் தனித்தனி பாசமும்
மத்த இருள்சிவ னான கதிராலே
தொத்தற விட்டிடச் சுத்தஆ வார்களே.

பொருள் : சுத்தாவத்தையில் பொருந்திய சகலவர்க்க ஆன்மாக்கள், மும்மலங்களில் நித்தமாகிய ஆணவமும், அநித்தமாகிய மாயை கன்மங்களும் நீங்க இவைகளில் தனித்தனியாக நிலை பெற்ற ஆசையும், மயக்கம் பொருந்திய இருளும் சிவசூரியனின் ஒளியால் தொடர்பற நீங்கிடச் சுத்தர் ஆவார்கள். சுத்த நிலையை அடைந்த ஆன்மாக்கள் சிவசூரியன் ஒளியால் மும்மல இருளை நீக்குவர்.

2246. தற்றே வலம்முத்தி தானே தனிமையாம்
பிற்பால் சகலம் கலாதிப் பிறிவதாம்
சொற்பால் புரிசுத்த கேவலம் சாக்கிரம்
தற்பால் புரிவது தற்சுத்தம் ஆமே.

பொருள் : தூய நிலையில் தான் தனித்து நிற்கும் வீடாகிய பற்றறுதி ஆருயிர் தனித்து நிற்பதாகும். இந்நிலையைத் தூய புலம்பு என்னலாம். தூயபுலம்பு - சுத்த கேவலம். தூய புணர்ப்பு உழைப்பு முதலாகச் சொல்லப்படும். தூவா மாயை யினின்று விலகுவதாம். தூயபுரிவாவது சொல்லப்படும் தூயபுலம்பும் புணர்ப்பும் தன்னுணர்வுக்கும் தோன்றாது ஒழிவது. இதுவே தன் தூய்மையாகும். உழைப்பு தலைமெய் சுத்தவத்தையில் மூன்று நிலையும் அவற்றின் பயனும் கூறியவாறு.

2247. அறிவின்றி முத்தன் அராகாதி சேரான்
குறியொன்றி லாநித்தன் கூடான் கலாதி
செறியும் செயலிலாண் தினங்கற்ற வல்லோன்
கிறியன் மலவியாபி கேவலம் தானே.

பொருள் : கேவல நிலையிலுள் ஆன்மா அறிவின்றியும், உடல் இல்லாதவனாகவும் அராகாதி குணங்களோடு பொருந்தாதவனாகவும், கொள்கை ஒன்றும் இல்லாதவனாகவும் என்றும் உள்ளவனாகவும் கலை முதலிய அசுத்த மாயையைக் கூடாதவனாகவும் தத்துவங்களோடு பொருந்திச் செயல் செய்யாதவனாகவும் போகம் நுகர அறியாதவனாகவும் இருந்தும் இல்லாதவன்; ஆண்வ மலத்தால் வியாபிக்கப் பட்டவனாகவும் உள்ளான். (நித்தன் - தோற்றக் கேடுகள் இல்லாதவன்.)

2248. விந்துவும் மாயையும் மேவும் கிரியையும்
சந்தத ஞான பரையும் தனுச்சத்தி
விந்துவின் மெய்ஞ்ஞான மேவும் பிரளயர்
வந்த சகலசுத் தான்மாக்கள் வையத்தே.

பொருள் : ஒளிமண்டலமும் அதனை மறைக்கும் மாயையும் அதனை வெளிப்படுத்தும் கிரியையும் அதனால் விளையும் ஞானமும் உடம்பின் சக்திக் கேற்ப அமையும். விந்துமண்டல ஒளியில் உண்மை ஞானத்தைப் பொருந்தும் பிரளயாகலர் உலகில் பிறவிக்கு வந்த சுத்தான்மாக்கள் ஆவர். பிரளயாகலராக இருந்தவர் பிறவிக்கு வந்து அடையும் பேற்றினைக் கூறியவாறு.

2249. கேவல மாதியின் பேதம் கிளக்குறில்
கேவல மூன்றும் கிளரும் சகலத்துள்
ஆவயின் மூன்று மதிசுத்த மூடவே
ஓவலில் லாஒன்பான் ஒற்றுணர் வோர்கட்கே.

பொருள் : கேவலம் முதலிய நிலைகளின் வேறுபாட்டைச் சொல்லுமிடத்து, கேவல கேவலம், கேவல சகலம், கேவல சுத்தம் என மூன்றும் கிளர்ச்சியுடைய சகலத்தில் சகல கேவலம், சகல சகலம், சகல சுத்தம் என அவ்விடத்து மூன்றும், மேலான சுத்தத்தில் சுத்த கேவலம், சுத்த சகலம், சுத்த சுத்தம் என மூன்றுடன் நிலைகளைப் பொருந்தி ஆராய்பவர்க்கு நீங்காத ஒன்பது வகையாகும்.

2250. கேவலத்தில் கேவலம் அதீதா தீதம்
கேவலத் தில்சக லங்கள் வயிந்தவம்
கேவத் திறசுத்தம் கேடில்விஞ் ஞாகலர்க்கு
ஆவயின் நாதன் அருண்மூர்த்தி தானே.

பொருள் : கேவலத்தில் கேவலம் எனப்படும் தூயபுலம்பு அப்பாலைக்கு அப்பாலாம். அப்புலம்பிற் புணர்வு தூமாயை நிலைக்களம். அப்புலம்பிற் பிரிவு குற்றமற்ற பேருணர்வாகிய விஞ்ஞானம். இந்நிலை ஒரு மலத்தராகிய விஞ்ஞானகலர் நிலை என்ப. அவ்விடத்து அவ்வுயிர் நாதனாகிய சிவபெருமான் விளங்கும் சீர்த்தவ உடம்பாகும். வயிந்தவம் - சுத்தமாயை தூயபுலம்பு சுத்த கேவலம்.

2251. சகலத்தில் கேவலம் சாக்கிரா தீதம்
சகல சகலமே சாக்கிர சாக்கிரம்
சகலத்திற் சுத்தமே தற்பரா வத்தை
சகலத்தில் இம்மூன்று தன்மையும் ஆமே.

பொருள் : புணர்விற் புலம்பு கனவில் அப்பாலாகும். புணர்விற் புணர்வு நனவிற் கனவாகும் புணர்விற்புரிவு ஆருயிர் அருளுடன் கூடிநிற்கும் நிலை. தூய புணர்வின்கண் இம்மூன்று நிலையும் காண்க. பராவத்தை - அருள்நிலை.

2252. சுத்தத்தில் சுத்தமே தொல்சிவ மாகுதல்
சுத்தத்தில் கேவலம் தொல்லுப சாந்தமாம்
சுத்த சகலம் துரிய விலாசமாம்
சுத்தத்தில் இம்மூன்றும் சொல்லலும் ஆமே.

பொருள் : தூய புரிவில் புரிவு ஆருயிர் தொன்மையும் முன்மையும், நன்மையும், உண்மையும், அறிவும் இன்பமும் ஒருங்கமைந்த தொன்னாடுடைய சிவன் திருவுரு எய்தல். புரிவிற் புலம்புதற்பணியறுதலாகிய தவ ஒடுக்கம். புரிவிற் புணர்வு இன்பினில்மூழ்கும் இனிய உறைவிடமாம் துரிய விலாசம். (தூயதுரியம் - இன்பநிலையம்.)

2253. சாக்கிர சாக்கிரம் தன்னில் கனவொடுஞ்
சாக்கிரம் தன்னில் சுழுத்தி துரியமே
சாக்கிரா தீதம் தனிற்சுகா னந்தமே
ஆக்கு மறையாதி ஐம்மல பாசமே.

பொருள் : நனவில் நனவு, நனவில் கனவு, நனவில் உறக்கம், நனவில் பேருறக்கம், நனவில் உயிர்ப்பு அடங்கல், ஆகிய ஐந்தும் துன்பில் இன்பாய் மன்னும் ஆணவம் கன்மம், மாயை, மாயை ஆக்கம், நடப்பாற்றல் ஆகிய ஐம்மலப் பிணிப்பும் மறையாது அகலும்.

2254. சாக்கிரா தீதத்தில் தானறும் ஆணவம்
சாக்கிரா தீதம் பிராவத்தை தங்காது
ஆக்கு பரோபாதி யாஉப சாந்தத்தை
நோக்கும் மலங்குணம் நோக்குதல் ஆகுமே.

பொருள் : முற்கூறியவாறு சாக்கிரா தீதத்தில் சிவத்தோடு பொருந்துதலால் ஆன்மாவின் ஆணவ மலக்குற்றம் அகலும். சாக்கிராதீதம் நாதாந்த மாகையால் நாததத்துவம் தங்காது போகும். பரோபாதியினால் உபசாந்தமாகிய நிறைந்த அமைதி கிட்டும் நாததத்துவத்தைப் பற்றி நிற்கும் ஆன்மா மலங்களையும் அவற்றால் விளையும் குணங்களையும் நோக்குமோ ? நோக்காது.

2255. பெத்தமும் முத்தியும் பேணும் துரியமும்
சுத்த அதீதமும் தோன்றாமல் தானுணும்
அத்தன் அருள்என்று அருளால் அறிந்தபின்
சித்தமும் இல்லை செயல்இல்லை தானே.

பொருள் : கட்டும் வீடும் நல்லோரால் பேணப்படும் துரியமாகிய ஒடுக்கமும், தூய்மையாகிய அப்பால் நிலையும் திருவருளால் ஒருசிறிதும் தோன்றாவாகும். தான் நுகர்ந்து கொண்டிருப்பது அத்தன் - சிவபெருமானின் திருவடியின்பம் என்று அருளால் அறிவன். அறிந்தபின் எண்ணமாகிய சித்தத்தின் இயக்கம் இல்லை. அஃது இல்லையாகவே வேறு எச்செயலும் இல்லை.

2256. எய்திய பெத்தமும் முத்தமும் என்பன
எய்தும் அரன்அரு ளேவினை யாட்டோடு
எய்திடு உயிர்சுத்தத் திடுநெறி என்னவே
எய்தும் உயிர்இறை பால்அறி வாமே.

பொருள் : உயிர்கள் அடையும் பெத்தமும் முத்தியும் சிவனது அருளால் அமையும். அச்சிவனது அருள் விளையாட்டோடு பொருந்தும் உயிர் இது சுத்தநிலைக்குச் செலுத்தும் நெறியாகும் என்று அடையும். அவ்வாறு அடையும் உயிர் இறைவனிடம் அறிவாய்த்திகழும்.

2257. ஐம்மலத் தாரும் மதித்த சகலத்தர்
ஐம்மலத் தாரும் அருவினைப் பாசத்தார்
ஐம்மலத் தார்சுவர்க் கந்நெறி யாள்பவர்
ஐம்மலத் தார்அர னார்க்குஅறி வோரே.

பொருள் : ஐம்மலமுடைய சீவர்கள் தம்மைத் தாமே மதித்த சகலத்தர் ஆவர். அவர்கள் ஐம்மலப் பாசத்தால் கட்டுண்டவராகிக் கொடிய வினைகளைத் துய்க்க வேண்டியவராக உள்ளார். இவர்கள் வீட்டுலகை விரும்பாமல் சொர்க்க நெறியை விரும்பிப் பெறுவர். இவர்கள் அரனாரை அறியாதிருப்பினும் அரனார் இவர்களை அறிந்தே யுள்ளார்.

2258. கருவில் அதீதம் கலப்பிக்கும் மாயை
அரிய துரியம் அதிலுண்ணும் ஆசையும்
உரிய சுழுனை முதல்எட்டும் சூக்கத்து
அரிய கனாத்தூலம் அந்நன வாமே.

பொருள் : கேவலத்து அதீதத்தில் ஆன்மாக்களைப் பிறவிக்குச் செலுத்தச் சிவசத்தி மாயையைக் கலக்கச் செய்யும். பின்னர் துரிய நிலையில் அவ்ஆன்மாவுக்கு விருப்பவாசனைகளை உண்ணும் ஆசை உண்டாம். அவ் ஆன்மாவின் விருப்புக்கேற்ப பிரமரந்திரமும் அதைச் சூழவுள்ள எட்டு நிலைகளும் சூக்குமாக அமையும். பின்னர் குணம் என்ற மனோமய கோசம் இணைக்கப்பட்ட போது நனவு நிலையாகும்.

2259. ஆணவம் ஆகும் ஆதீதம்மேல் மாயையும்
பூணும் துரியம் சுழுத்திபொய்க் காமியம்
பேணும் கனவும் மாமாயை திரோதாயி
காணும் நனவில் மலக்கலப்பு ஆகுமே.

பொருள் : உயிர்ப்பு அடங்குதல் அல்லது அதீதம் என்று சொல்லப்படும் அப்பால் நிலைக்கண் ஆணவமட்டும் ஆருயிர்களைப் பிணித்து நிற்கும். பேருறக்கத்தின் கண் தூவாமாயை புணர்ந்து நிற்கும். உறக்கத்தின் கண் காமியம் என்னும் இருவினைகள் கூடி நிற்கும். கனவின்கண் தூமாயை கூடிநிற்கும். நனவின்கண் நடப்பாற்றலாகிய திருரோதாயியுடன் ஐம்மலமும் பிணிப்புற்றிருக்கும்.

2260. அரன்முத லாக அறிவோன் அதீதத்தன்
அரன்முத லாமாயை தங்கிச் சுழுனை
கருமம் உணர்ந்து மாமாயைக் கைகொண்டோர்
அருளும் அறைவார் சகலத்துற் றாரே.

பொருள் : அரன் முதலாக அறிவோனாகிய ஆருயர் அப்பால் நிலைக்கண் தங்கும். அரன் முதலாகக் கொள்ளும் மாயை பேருறக்கமாகும். உறக்கத்தில் கருமமாகும். கனவில் மாமாயையாகும் நனவில் மறைப்பொருளாகிய நடப்பாற்றல் மேலோங்கும். இந்நிலையே புணர்ப்பு நிலையாகும். (புணர்ப்பு - சகலம்)

2261. உருவுற்றுப் போகமே போக்கியம் துற்று
மருவுற்றுப் பூதம னாதியான் மன்னி
வரும்அச் செயல்பற்றிச் சத்தாதி வைகிக்
கருவுற் றிடுஞ்சீவன் காணும் சகலத்தே.

பொருள் : மாயாகாரியமான தேகத்தைப் பொருந்தி, எடுத்த தேகத்துக்கு ஏற்றவாறு போக போக்கியங்களை நுகர்ந்து பூதங்களைச் சார்ந்து மனம் முதலிய அந்தக்கரணங்களைப் பொருந்தி வருகின்ற கன்மங்களை அடைந்து சத்தம் முதலாகிய தன்மாத்திரைகளில் தங்கி, கருவை அடைந்த சீவன் சகலாவத்தையில் தோன்றும்.

2262. இருவினை ஒத்திட இன்னருள் சத்தி
மருவிட ஞானத்தில் ஆதனம் மன்னிக்
குருவினைக் கொண்டருள் சத்திமுன் கூட்டிப்
பெருமலம் நீங்கிப் பிறவாமை சுத்தமே.

பொருள் : ஞானமும் கிரியையும் ஒத்த விளங்கும் போது இன்பம் விளைக்கும் சிற்சித்தி பொருந்தி ஞான சொரூபமான சுத்தாவத்தை பொருந்தவே அதுசமயம் தக்க குருவினால் உணர்த்தும்படி செய்து திருவருட்சத்தி பொருந்தி மூலமலம் நீங்கி மீட்டும் பிறவியை அடையாமல் இருப்பதே சுத்தநிலையாகும்.

2263. ஆறாறும் ஆறதில் ஐ ஐந்து அவத்தையோடு
ஈறாம் அதீதத் துரியத்து இவன்எய்தப்
பேறான ஐவரும் போம்பிர காசத்து
நீறார் பரம்சிவம் ஆதேய மாகுமே.

பொருள் : முப்பத்தாறு தத்துவங்களின் வழியாக இருபத்தைந்து நிலைகளையும் அவற்றின் ஈறாகிய நின்மல துரியாதீதத்தை இச்சீவன் அடைய, சுத்த தத்துவத்துக்குரிய சுத்தவித்தை மகேசுரம், சதாசிவம் விந்துநாதம் ஆகியஐந்தும் நீங்கும் பிரகாசத்தையுடைய சீவன் பரமாகிச் சிவத்தினிடம் உள்ளதாகும்.

2264. தன்னை அறியாது உடலைமுன் தான்என்றான்
தன்னைமுன் கண்டான் துரியம் தனைக்கண்டான்
உன்னும் துரியமும் ஈசனோடு ஒன்றாக்கால்
பின்னையும் வந்து பிறந்திடும் தானே.

பொருள் : உடம்பின் வேறாக ஆன்மாவாகிய தான்ஒருவன் உளன் என்பதை அறியாமல் தன் உடலையே தான் என்று மயங்கியிருந்தான். நிராதாரத்தில் உணர்வு சென்ற போதுதான் ஓர் ஒளிவடிவினன் என்பதை அறிந்தான். இவ்வுடலைத் தாங்கி நிற்பது ஒளிஎன்று கண்டான். அவ்வாறுள்ள ஒளி உடல் சித்துடன் ஒன்றாகவிடில் மீளவும் வந்து வினைக் கீடாக அவ் ஆன்மா பிறப்பான்.

2265. சாக்கிரந் தன்னில் அதீதம் தலைப்படில்
ஆக்கிய அந்த வயிந்தவம் ஆனந்தம்
நோக்கும் பிறப்புஅறும் நோன்முத்தி சித்தியாம்
வாக்கும் மனமும் மருவல்செய் யாவே.

பொருள் : நின்மல சாக்கிராதீதம் கூடுமானால் அதைத்தோற்று வித்த சுத்த தத்துவம் ஆனந்தத்தை விளைக்கும். எதிர்நோக்கியுள்ள பிறப்பு ஆறும், பெருமை பொருந்திய முத்தி கிட்டும் அந்த அதீத நிலையில் சூக்குமமான வாக்கும் மனமும் பொருந்தா.சாக்கிரத்தில் அதீதம் தலைப்பட்டவரிடத்து வாக்கும் மனமும் இல்லை.

2266. அப்பும் அனலும் அகலத்து ளேவரும்
அப்பும் அனலும் அகலத்து ளேவாரா
அப்பும் அனலும் அகலத்துள் ஏதெனில்
அப்பும் அனலும் கலந்ததுஅவ் வாறே.

பொருள் : நீரின் குணமாகிய தண்மையும் நெருப்பின் குணமாகிய ஒளியும் அகண்ட ஆகாயத்துள்ளே விளங்கும். ஆனால் அவற்றின் நெகிழ்ச்சியும் சுடுதல் தன்மையும் அங்கு இரா. விரிந்த ஆகாயத்தில் நீரும் நெருப்பும் ஏது என்று வினவினால் அப்புத் தன்மையும் அனலின் தன்மையும் கலந்து அவ்வாறாகும்.

2267. அறுநான்கு அசுத்தம் அதிசுத்தா சுத்தம்
உறும்ஏழு மாயை உடன்ஐந்தே சுத்தம்
பெறுமாறு இவைமூன்றும் கண்டத்தால் பேதித்து
உறும்மாயை மாமாயை ஆன்மாவி னோடே.

பொருள் : முப்பத்தாறு தத்துவங்களில் ஆன்ம தத்துவம் இருபத்துநான்கும் அசுத்தம். மிசிர மாயையோடு கூடிய வித்தியாதத்துவங்கள் ஏழும் சுத்தாசுத்தம். உடனாகிய சிவ தத்துவங்கள் ஐந்தும் சுத்தமாகும். இம்மூன்றையும் ஆன்மா அடையும் வண்ணம் மூன்று கண்டங்களாகப் பிரிந்து பிரகிருதிமாயை அசுத்தமாயை சுத்தமாயை ஆன்மாவினிடம் பொருந்தும்.

2268. மாயைகைத் தாயாக மாமாயை ஈன்றிட
ஆய பரசிவன் தந்தையாய் நிற்கவே
ஏயும் உயிர்க்கே வலசகலத்து எய்தி
ஆய்தரு சுத்தமும் தான்வந்து அடையுமே.

பொருள் : அசுத்த மாயை செவிலித் தாயாகவும், சுத்தமாயை தாயாகவும் ஆக, இவைபொருந்தும் வகையில் பரசிவன் தந்தையாக அமைய ஆன்மா கேவல சகல நிலைகளை அடைந்து, ஆராய்ந்து தெளிவு பெற்ற போது சுத்த மாயையைப் பொருந்திச் சுத்தாவத்தையை அடையும் மாயை தாயாகவும் சிவன் தந்தையாகவும் அமைந்து ஆன்மாக்களைத் கேவல சகலங்களில் பொருந்திச் சுத்தநிலையை அடைவிக்கும்.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் - Page 3 Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Tue Mar 27, 2012 1:46 pm

8. பராவத்தை

(பர + அவத்தை = பராவத்தை. இது பரை அல்லது சத்தியோடு கூடியுள்ள நிலை, இங்குப் பரைநிலையில் ஆன்ம அனுபவம் கூறப் பெறும்.)

2269. அஞ்சும் கடந்த அனாதி பரன்தெய்வம்
நெஞ்சம தாய நிமலன் பிறப்பிலி
விஞ்சும் உடலுயிர் வேறு படுத்திட
வஞ்சத் திருந்த வகையறிந் தேனே.

பொருள் : சிவ தத்துவமாகிய ஐந்தையும் கடந்த நிலையிலுள்ள அனாதியான பரனே தெய்வமாகும். இதுவே எல்லோரது மன மண்டலத்தில் பொருந்தியதாய் மலமற்றதாய் பிறப்பில்லாததாய் உள்ளது. இஃது அகண்ட பொருளான படியால் உடலினுள் இருந்த உயிரை வேறுபடுத்துவதற்காக மறைந்திருந்த உண்மையை நான் அறிந்தேன்.

2270. சத்தி பராபரம் சாந்தி தனிலான
சத்தி பரானந்தம் தன்னில் சுடர்விந்து
சத்திய மாயை தனுச்சந்தி ஐந்துடன்
சத்தி பெறுமுயிர் தான்அங்கத்து ஆறுமே.

பொருள் : பராசத்தியே சுத்தமாயை, அசுத்தமாயையில் விரவித் தன்னிலை கெடாத சாந்தி கலையில் உள்ளது மேலான ஆனந்த நிலையில் அச்சத்தி ஒளிமயமாய் உள்ளது. அச்சத்தியே அசுத்தமாயையில் பொருந்தி உடம்பின் சத்திகளாகிய ஐந்துடன் சீவன் உடம்பால் பெறும் பயனுக்குக் காரணமாயும் உள்ளது. பராசத்தி சீவனுக்குச் செய்யும் உபகாரம் கூறியவாறு.

2271. ஆறாறுக்கு அப்பால் அறிவார் அறிபவர்
ஆறாறுக்கு அப்பால் அருளார் பெறுபவர்
ஆறாறுக்கு அப்பால் அறிவாம் அவர்கட்கே
ஆறாறுக்கும் அப்பால் அரன்இனி தாமே.

பொருள் : முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து அறிவோரே அறிபவர் ஆவார். அக்கடந்த நிலையில் அவர் சத்தியின் அருளைப் பெறுபவர் ஆவார். அதனால் அவர்களுக்கு அங்கே எல்லா அறிவும் உண்டாகும். அப்போது அவர் சிவனோடு இனிதாய்ப் பொருந்தி யிருப்பார். தத்துவங்களைக் கடந்து சிவ சத்தியோடு பொருந்தியிருப்பவர் எல்லா அறிவும் உடையவர் ஆவார்.

2272. அஞ்சொடு நான்கும் கடந்துஅக மேபுக்குப்
பஞ்சணி காலத்துப் பள்ளி துயில்கின்ற
விஞ்சையர் வேந்தனும் மெல்லிய லாளொடு
நஞ்சுற நாடி நயம்செய்யு மாறே.

பொருள் : ஐந்த ஞானேந்திரியங்களும் நான்கு அந்தக்கரணங்களும் தத்தம் செயல் மடங்கி உள்ளத்தில் (மன மண்டலத்தில்) அடங்க ஐந்து இந்திரியங்களையும் அணிகலமாகக் கொண்டு உறக்கத்தை அடைகின்ற அறிவுமயமான ஆன்மா சிற்சத்தியோடு நீல ஒளியில் மனம் தொழிற்படாமல் நிற்பதில் இன்பத்தைத் துய்க்கும். (விஞ்சையர் வேந்தன் அறிவுடைய ஆன்மா. சத்தியின் நிறம் நீலம்.)

2273. உரிய நனாத்துரி யத்தில் இவளாம்
அரிய துரிய நனவாதி மூன்றில்
பரிய பரதுரி யத்தில் பரனாம்
திரய வரும்துரி யத்தில் சிவமே.

பொருள் : துரியம் என்று சொல்லப்படும் அப்பால் நனவில் ஆருயிர் தனித்து நிற்கும். அதனால் இவனாம் என்றருளினார். அப்பால் நனவு - துரிய சாக்கிரம். அத்தகைய அருமைவாய்ந்த அப்பால் நனவு, அப்பால் கனவு, அப்பால் உறக்கம் என்ற மூன்றினுள் பெருமை மிக்க அப்பாலுக்கு அப்பாலாம் பரதுரியத்தில் பரன் என்று சொல்லப்படும் திருவருளுடன் கூடி உறைபவனாம். இவற்றிற் கெல்லாம் மேம்பட்ட மாறுபாடு இல்லாத அப்பால் நிலைக்கண் தூய சிவனேயாவன். (இவனாம் - இந்த ஆன்மாவாம்.)

2274. பரமாம் அதீதமே பற்றறப் பற்றப்
பரமாம் அதீதம் பயிலப் பயிலப்
பரமாம் அதீதம் பயிலாத் தபோதனர்
பரமாகார் பாசமும் பற்றொன்றுஅ றாதே.

பொருள் : நின்மல சாக்கிரா தீத்தில் சிவன் தத்துவங்களை விட்டுப் பரமாகும். இவ்வகையான அதீதத்தில் பலகால் பழகப் பழகப் பரம் பொருந்தும். இவ்விதம் நிஷ்டை பொருந்தி அதீதத்தை அடையாதவர் பரமாக மாட்டார். அவரை விட்டுப் பாசமும் அதனாலாய பற்றும் நீங்கா.

2275. ஆயும்பொய்ம் மாயை அகம்புற மாய்நிற்கும்
வாயு மனமும் கடந்துஅம் மயக்கறின்
தூய அறிவு சிவானந்த மாகிப்போய்
வேயும் பொருளாய் விளைந்தது தானே.

பொருள் : ஆராச்சியால் அறியப்பட்டபோது மாயை உடலின் உள்ளும் உடலின் புறம்புமாய்ப் பொருந்தி யிருக்கும். நின்மல துரியாதீதத்தில் வாயுவும் மனமும் கடந்த நிலையில் மயக்கம் நீங்கினபோது தூய்மையான அறிவு சிவானந்தமாய் மேல்நிறைந்து மாயையை மூடும் பொருளாக அமைந்தது தானே.

2276. துரியப் பரியில் இருந்தஅச் சீவனைப்
பெரிய வியாக்கிரத் துள்ளே புகவிட்டு
நரிகளை ஓடத் துரத்திய நாதர்க்கு
உரிய வினைகள்நின்று ஓலமிட் டன்றே.

பொருள் : துரிய மாகிய குதிரைமேல் இருந்த சீவனை மென்மையான பராவத்தையில் புகச் செய்து, இந்திரியங்களாகிய நரிகளை விரட்டிய நாதத்தைத் தரிசனம் செய்த அனுபூதிமான்களுக்கு உரியனவாகிய வினைகள் பந்திக்க மாட்டாமையால் நின்று ஓலமிட்டன.

2277. நின்றஇச் சாக்கிர நீள்துரி யத்தினின்
மன்றனும் அங்கே மணம்செய்ய நின்றிடும்
மன்றன் மணம்செய்ய மாயை மறைந்திடும்
அன்றே இவனும் அவன்வடி வாமே.

பொருள் : முற்கூறியவாறு நின்ற சாக்கிரத்தில் அதீதம் புரியும் போத பரந்த ஆகாய பூத நாயகனான சபேசனும் சீவனுடன் கலந்து நிற்பான். சபேசன் சீவனுடன் பொருந்தி விளங்கும்போது மாயையாகிய இருள் விலகிவிடும். அப்போதே சீவனும் சிவன் போல் அகண்ட வடிவை அடைவான்.

2278. விரிந்திடில் சாக்கிரம் மேவும் விளக்காய்
இருந்த இடத்திடை ஈடான மாயை
பொருந்தும் துரியம் புரியில்தா னாகும்
தெரிந்த துரியத்துத் தீதுஅக லாதே.

பொருள் : பொறிபுலன் கலன்முதலிய உறுப்புக்கள் விரிந்த இடத்து நனவினைப் பொருந்தும். மாயை விளக்குப் போன்று இருந்த இடத்தில் வலிமையோடு நிற்கும். நனவில் அப்பால் நிலைக்கு முன் நிலை வாய்க்குமிடத்து அருளால் ஆருயிர் தாமரையிலை நீர்போல் ஒட்டாது நிற்கும். இக்கருவிகள் எல்லாம் நனவின்கண் ஏற்படும் பேருறக்க நிலையில் விட்டு அகலாமல் ஒட்டிச் செயலற்று இருக்கும்.

2279. உன்னை அறியாது உடலைமுன் நான்என்றாய்
உன்னை அறிந்து துரியத்து உறநின்றாய்
தன்னை அறிந்தும் பிறவி தணவாதால்
அன்ன வியாத்தன் அமலன் என்று அறிதியே.

பொருள் : ஆன்ம ஒளியை அறியாமல் நீ தேகாத்ம புத்தியோடு முன் இருந்தாய். பின் ஆத்ம ஒளியை அறிந்து துரியத்தில் நின்றாய். தன்னுடைய இயல்பை அறிந்தும் சிவ வியாபகத்தில் பொருந்தவில்லை யென்றால் பிறவி நீங்காது. அவ்வாறு சிவத்தின் வியாபக்தில் அடங்கி விடுதலே மலமற்ற நிலையாகும்.

2280. கருவரம்பு ஆகிய காயம் துரியம்
இருவரும் கண்டீர் பிறப்புஇறப்பு உற்றார்
குருவரம் பெற்றவர் கூடிய பின்னை
இருவரும் இன்றிஒன் றாகிநின் றாரே.

பொருள் : கருவின் எல்லைக்கு உட்பட்டது துரியத்திலுள்ள சூக்கும வித்தியா தேகம். பிறப்புக்குரிய காரணம் அகற்றப் படாதவரைச் சூக்குமமும் தூலமும் பொருந்திச் சீவர்கள் பிறவியில் பட்டுழல்வர். குருவின் சகாயத்தால் சிவத்துடன் பொருந்தும் அருளைக் கூடினவர் சூக்கும வித்தியா தேகத்தையும் தூல தேகத்தையும் விட்டுச் சிவ தத்துவத்தில் சிவத்தோடு ஒன்றாவர். இருவர் - தூல உடல், சூக்கும உடல்.

2281. அணுவின் துரியத்தில் ஆன நனவும்
அணுஅசை வின்கண் ஆன கனவும்
அணுஅசை வில்பரா தீதம் சுழுத்தி
பணியில் பரதுரி யம்பர மாமே.

பொருள் : ஆருயிராகிய அணுவின் பேருறக்க நிலையாம்துரியத்தில் உண்டாகும். நனவும் ஆருயிரின் புடை பெயர்ச்சியில் உண்டாகும் கனவும், அப்புடை பெயர்ச்சியில் உண்டாகும் கனவும், அப்புடை பெயர்ச்சியின்கண் தன்னை இழப்பதாகிய உறக்கமும் பொருந்திய இடத்து அப்பால் நிலை எய்தும், எய்தவே சிவனுடன் ஒன்றாம் சிறப்பு எய்தும். இதுவே பரம் என ஓதப்பெற்றது. (அணு - ஆன்மா. பணியில் - பொருந்தினால்)

2282. பரதுரி யத்து நனவும் பரந்து
விரிசகம் உண்ட கனவும்மெய்ச் சாந்தி
உருவுறு கின்ற சுழுத்தியும் ஓவத்
தெரியும் சிவதுரி யத்தனு மாமே.

பொருள் : மேற் பேருறக்கமாகிய பரதுரிய நனவு எங்கும் பரந்து விரிந்த உலக நுகர்வுகளை உண்டல். அது போல் கனவுப் பயனும் நண்ணுகர்வு உண்மையாதலின் பர துரியக் கனவு மெய்ம்மை அமைதியாகும். கருவி கரண முதலிய உருவு மட்டும் அசைவின்றி இருக்கும் உறக்க நிலையும் நீங்க, ஆண்டு அருளாற் புலனாகும் ஒன்று. அதுவே சிவதுரிய நிலையாகும், அந்நிலை எய்தியவன் சிவ துரியத்தன் ஆவன்.

2283. பரமா நனவின்பின் பால்சக முண்ட
திரமார் கனவும் சிறந்த சுழுத்தி
உரமாம் உபசாந்தம் உற்றல் துறவே
தரனாம் சிவதுரி யத்தனும் ஆமே.

பொருள் : மேல் நனவு என்று சொல்லப்படும் பரமா நனவின் அடுத்த நிலை மெய்ம்மையும் உறுதியும் உடைய மேற்கனவின் உலக நுகர்வுகளை உண்ணும். சிறந்த உறக்க நிலை நல்லுறுதி யாகும். பேருறக்க மேல் நிலை அமைதி நிறைதல். அதன் மேல்நிலை துறவாகும். இந்நிலை சிவ துரிய நிலையாகும். இந்நிலை எய்தினான் சிவதுரியத்தன் ஆவன். (தரனாம் - கைகூடப் பெற்றவன்)

2284. சீவன் துரியம் முதலாகச் சீரான
ஆவ சிவன்துரி யாந்தம் அவத்தைபத்தும்
ஓவும் பராநந்தி உண்மைக்குள் வைகியே
மேவிய நாலேழ் விடுவித்தநின் றானே.

பொருள் : சீவன் துரியம் முதலாக பெருமை பெற்ற சிவதுரியம் ஈறாகப் பத்து நிலைகளும் நீங்கும். மேலான சிவத்தின் நிறைவில் அடங்கியிருப்பது அந்தக்கரணம் நான்கையும் பொருந்திய வித்தியா தத்துவம் ஏழையும் விட்டு நின்றான்.

2285. பரம்சிவன் மேலாம் பரமம் பரத்தில்
பரம்பரன் மேலாம் பரநன வாக
விரிந்த கனாவிட்டுமேவும் சுழுமுனை
உரந்தரும் மாநந்தி யாம்உண்மை தானே.

பொருள் : பரம் சிவன் இரண்டற்கு மேல் பரமம். அப்பரத்திற்கு மேல் பரம்பரன். பரநனவு விரிந்த பரக்கனவு இவ்விரண்டும் ஆருயிர்களின் பிறப்புத் துன்பத்தை அகற்றும். அதற் மேல் பேரறிவுப் பெருமானாகிய பர நந்தியின் உண்மை நிலையினை எய்துவன்.

2286. சார்வாம் பரம்சிவம் சத்தி பரநாதம்
மேலாய விந்து சதாசிவம் மிக்கோங்கிப்
பாலாய்ப் பிரமன் அரிஅம ராபதி
தேவாம் உருத்திரன் ஈசனாம் காணிலே.

பொருள் : ஆராயின், உயிர்கட்குப் பற்றுக் கேடாக அருவநிலைகளான பரம், சிவம், சத்தி, பரநாதம், பரவிந்து, சதாசிவமும், இப்பால் உருவமூர்த்திகளான பிரமன், விஷ்ணு, தேவர் தலைவனான உருத்திரன் மகேசனும் ஆக பதின்மர் உளர். பரம் - சத்தி சிவன் பிரிப்பின்றி உள்ள நிலை, முன் மந்திரத்தின் விரிவு இங்குக் கூறியவாறு.

2287. கலப்புஅறி யார்கடல் சூழ்உல கேழும்
உலப்புஅறி யார்உடலோடுஉயிர் தன்னை
அலப்புஅறிந்து இங்குஅர சாளகி லாதார்
குறிப்பது கோலம் அடலது ஆமே.

பொருள் : முன் மந்திரத்தில் கண்ட திருமேனிகள் உயிர்களோடு ஒன்றியிருந்து இயக்குவதை உலகினர் அறியமாட்டார். கடலால் சூழப்பட்ட ஏழ் உலகங்களும் அழிந்து போவதையும் இவர்கள் அறியமாட்டார்கள். உடலோடு உயிர் பொருந்தியிருக்கும் தன்மையை அறிந்து இங்கு மேன்மை அடையமாட்டார். மேலே கண்ட திருமேனிகளைத் தியானிப்பது வலியுடைமை ஆகுமோ ? ஆகாது. (ஆமே - ஏகாரம் எதிர்மறை)

2288. பின்னை அறியும் பெருந்தவத்து உண்மைசெய்
தன்னை அறியில் தயாபரன் எம்இறை
முன்னை அறிவு முடிகின்ற காலமும்
என்னை அறியலுற்று இன்புற்ற வாறே.

பொருள் : குரு உபதேசத்தின் பின் விளங்கும் பெரிய தவத்தின் பயனாகிய வரவிந்து மண்டலத்தை உணரில் கருணாமூர்த்தியான எமது தலைவன் பழமையான சுட்டறிவு நீங்குகின்ற காலத்தில் என்னுடைய அகண்ட வியாபகத்தை உணரும்படி செய்து, அதனால் நான் இன்பம் பெற்று உய்ந்தவாறு என்னே !

2289. பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம்
பொன்னின் மறைந்தது பொன்னணி பூடணம்
தன்னை மறைத்தது தன்கர ணங்களாம்
தன்னின் மறைந்தது தன்கர ணங்களே.

பொருள் : பொன்னால் செய்யப்பெற்ற நகையைக் காணும்போது பொன்னைப் பற்றிய காட்சியில்லை. பொன்னின் இயல்பைப் பார்க்கும் போது பொன்னால் செய்யப்பெற்ற நகையின் காட்சி பொன்னில் மறைந்தது. அதுபோல அந்தக் கரணங்கள் பகிர்முகமாக வியாபகம் பெற்றிருந்த போது ஆன்மாவின் காட்சியில்லை ஆன்மாவின் இயல்பை உணர்ந்தபோது அந்தக்கரணங்களின் வியாபகம் ஆன் மாவில் ஒடுங்கியது.

2290. மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதல் பூதமே.

பொருள் : மரத்தால் செய்யப் பெற்ற யானைப் பதுமையைப் பார்க்கும்போது மரத்தைப் பற்றிய காட்சி இல்லை. வர்ணங்களை அகற்றிப் புறநிலையை மாற்றிப் பார்க்கும்போது யானையின் காட்சி மரத்தில் மறைந்தது. அது போலப் பார்த்தால் விளக்கம் பெற்ற பார் முதலிய பூதங்களைப் பார்க்கும்போது பரமானது காட்சிக்கு ஆவதில்லை. குருவருளால் பார்க்கும்போது பரமே காட்சியளித்துப் பார்முதல் பூதங்கள் பரத்தில் மறைந்தன.

2291. ஆறாறு ஆகன்று நமவிட்டு அறிவாகி
வேறான தானே யகாரமாய் மிக்கோங்கி
ஈறார் பரையின் இருளற்ற தற்பரன்
பேறார் சிவாய அடங்கும்பின் முத்தியே.

பொருள் : முப்பத்தாறு தத்துவங்களைக் கடந்து, பஞ்சாட்சரத்தில் நம என்ற எழுத்துக்களைவிட்டு, பேரறிவாகி, தத்துவங்களுக்கு வேறாய் ஆன்மா யகாரமாய் விளங்கியபோது பரையின் இறுதியிலுள்ள ஒளியான தற்பரனாகிய சிவத்தில் பேறு நிறைந்த சிவாய என சிவசத்தியோடு அடங்கி நிற்றலே முத்தியாகும்.

2292. துரியத்தில் ஓரைந்தும் சொல்அக ராதி
விரியப் பரையில் மிகும்நாதம் அந்தம்
புரியப் பரையில் பராவத்தா போதம்
திரிய பரமம் துரியம் தெரியவே.

பொருள் : பராவத்தையில் சாக்கிரம் முதலான ஐந்தும் கீழ்க்காணுமாறு ஆகும். பரையில் சொற் பிரபஞ்சத்துக்குக் காரணமான நாதம் தோன்றும்; சொப்பனத்தில் நாதம் ஒடுங்க பரையில் நின்மல சுழுத்தியாகிய உறக்கம் அமையும்; நின்மல சுழுத்தியில் அழுந்தாமல் மேல் விளங்கவே மேலான சிவதுரியம் பொருந்தும்.

2293. ஐந்தும் சகலத்து அருளால் புரிவற்றுப்
பந்திடும் சுத்த அவத்தைப் பதைப்பினில்
நந்தி பராவத்தை நாடச் சுடர்முனம்
அந்தி இருள்போலும் ஐம்மலம் மாறுமே.

பொருள் : பராவத்தை ஐந்தும் சகல நிலையில் சீவர்களுக்கு அருளால் பந்தம் நீங்கச் செய்து, சுத்தாவத்தையில் பொருந்தும்படி செய்யும் இந்நிலையில் பொருந்தும் பிரமந்திரத் துடிப்பினால் மனம் பதியச் சிவத்தை அடைவதற்குரிய பராவத்தையில் விருப்பம் உண்டாக, மாலைக் காலத்தில் நீல ஒளியின்முன் இருள் நீங்குவது போலச் சிரசின் முன்னுள்ள ஒளியில் ஐம்மலங்களும் நீங்கும். நந்தி - கதிர். பரை ஒளியில் மனம் பதிவுண்டபோது சிவதரிசனம் உண்டாகி மலம் நீங்கும்.

2294. ஐ ஐந்து மட்டுப் பகுதியும் மாயையும்
பொய்கண்ட மாமாயை தானும் புருடன்கண்டு
எய்யும் படியாய் எவற்றுமாய் அன்றாகி
உய்யும் பராவத்தை உள்ளுதல் சுத்தமே.

பொருள் : அசுத்த மாயையில் உள்ள புருடனுடன் கூடிய ஆன்ம தத்துவங்கள் இருபத்தைந்தும் பொய்யாகுமாறு சுத்த மாயையில் தேகத்துக்குரிய ஆத்மன் கண்டு எல்லாப் பொருளும் அடையும்படியாய் அவைகளேயாய் அவற்றினின்றும் விலகியிருக்கவும் உய்தியைத் தருகின்ற பராவத்தையையே எண்ணிக் கொண்டிருத்தல் சுத்த நிலையாகும்.

2295. நின்றான் அருளும் பரமும்முன் நேயமும்
ஒன்றாய் மருவும் உருவும் உபாதியும்
சென்றான் எனைவிடுத்து ஆங்குச்செல் லாமையும்
நன்றான ஞானத்தின் நாதப் பிரானே.

பொருள் : பண்டைய நற்றவத்தால் ஞானத்தில் விளங்கும் நாதனான சிவபெருமான் தான் ஆன்மாக்கள்மாட்டுச் செய்யும் அருளும் பரமும் அவர்கள் தன்மீது செலுத்தும் அன்புமாக நின்றான். ஆன்மாக்களோடு பிரிப்பின்றிக் கலந்து உருவத்தில் பொருந்தியிருந்தும் ஆன்மாக்களின் சாக்கிரம் முதலிய உபாதிகளில் பொருந்தாமல் இருந்தான். என்னைத் தூல சூக்கும உடல்களின் பிடிப்பிலிருந்து விடுவித்தும் என்னை விட்டு அகலாதவனாகவும் உள்ளான்.

9. முக்குண நிர்க்குணம் (முக்கணம் : - சாத்துவிகம், இராசதம், தாமதம். நிர்க்குணம் குணமற்ற தன்மை.)

2296. சாத்திகம் எய்தும் நனவெனச் சாற்றுங்கால்
வாயந்த இராசதம் மன்னும் கனவென்ப
ஓய்த்திடும் தாமதம் உற்ற சுழுத்தியாம்
மாய்த்திடும் நிற்குணம் மாசில் துரியமே.

பொருள் : அவத்தைகளில் பொருந்திய உயிர்க்கு நனவினில் சாத்துவ குணம் அமையும்; கனவு என்பது அதற்குரிய இராசதகுணம் பொருந்துதலாம். கருவிகரணங்களையும் செயற் படாது ஓய வைத்திடுதல் தாமத குணம் பொருந்திய சுழுத்தியாகும். இந்திரியங்களையும் அந்தக்கரணங்களையும் செயற்படாமல் அழித்திடும் நிலையே குற்றமற்ற துரிய மாகும். (உயிர் அவத்தைகளில் பொருந்தியிருக்கும்போதுள்ள குணங்களைக் கூறியவாறு.)

10. அண்டாதி பேதம் (அண்டாதி பேதம் - அண்டத்தின் வகை)

(மனிதனுடைய உடல் தொம்பைக்கூடு போன்ற ஒளி மண்டலத்தில் சூழப் பெற்றுள்ளது. பக்குவம் பெற்றபோது குஞ்சு முட்டையை உடைத்து வெளிச் செல்வதுபோல அண்டகோசம் என்ற பிரணவத்துள்ளாக வளர்ந்து பக்குவம் பெற்றபோது, மனிதன் பிரணவத்தைக் கடந்து வெளிச் செல்கிறான். அத்தகைய அண்டம் இங்கும் விளக்கப் பெறுகிறது. இவ் அண்டகோசத்துக்கு வெளியே உள்ளது பகிரண்டம்.)

2297. பெறுபகி ரண்டம் பேதித்த அண்டம்
எறிகடல் ஏழின் மணல்அள வாகப்
பொறியொளி பொன்னணி யென்ன விளங்கிச்
செறியும்அண் டாசனத் தேவர் பிரானே.

பொருள் : அண்டத்தை ஆசனமாகக் கொண்டு அதன்மேல் வீற்றிருக்கும் தேவாதி தேவனான சிவன், விரும்பிப் பெறும் பேரண்டத்தில் வெவ்வேறாகவுள்ள அண்ட கோசங்களில் திரை எறிகின்ற கடல் ஏழினும் உள்ள மணலின் அத்துணை அளவாக ஒளிக்கிரணங்களில் பொன் அணியில் பொன் செறிந்து பிரகாசிப்பது போல் பிரகாசிப்பான். (பொன் - சிவன்.)

2298. ஆனந்த தத்துவம் அண்டா சலத்தின்மேல்
மேனிஐந் தாக வியத்தம்முப் பத்தாறாய்த்
தான்அந்த மில்லாத தத்துவம் ஆனவை
ஈனமி லாஅண்டத்து எண்மடங்கு ஆமே.

பொருள் : அண்ட கோசத்துக்குரிய ஆத்மன் அண்டத்தை ஆசனமாகக் கொண்டு ஆனந்தமாகத் தத்துவங் கடந்துள்ளான். ஆத்மனுக்கு உபகரிக்கும் நிமித்தம் சத்தியானவள் ஐந்தாக அண்டத்தினுள்ளே முப்பத்தாறு தத்துவங்களாய் அண்டத்தின் புறத்தில் சத்தி முடிவற்ற தத்துவங்களாகவும் அனந்த சத்தியாகவும் அண்டத்தின் எண்மடங்கு அளவுடையதாகவும் விளங்குகின்றது. மேனி ஐந்தாவன : சத்தியோசாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் என்பன.

11. பதினோராம் தானமும் அவத்தை யெனக் காணல்

(பதினோராம் தானமாவது துவாதச கலையில் பதினோராவது கலையாகிய சமனை கலையாவன அகர முதல் உன்மனை ஈறாகப் பன்னிரண்டாகும். ஒவ்வொரு கலைக்கும் ஓர் இடம் உண்டு. சமனைக்குரிய இடம் சிரசின் மேலாகும். இங்கு அவத்தை ஆன்மா பொருந்தி யிருத்தல் அல்லது நிலை என்க.)

2299. அஞ்சில் அமுதும்ஓர் ஏழின்கண் ஆனந்தம்
முஞ்சில்ஓங் காரம்ஓர் ஒன்பான் பதினொன்றில்
வஞ்சக மேநின்று வைத்திடில் காயமாம்
கிஞ்சுகச் செவ்வாய்க் கிளிமொழி கேளே.

பொருள் : ஐந்தாவது கலையாகிய அர்த்த சந்திரனுக்குரிய இடமாகிய புருவநடு விழிப்படையின் அமுதமயமான சந்திர ஒளி பெருகும். சிரசினுள் ஏழாவது கலையாகிய நிரோதினி கலையை உணர்ந்தபோது ஆனந்தம் உண்டாகும். விந்து செயம் பெறுதலே பிரணவமாகும். ஒன்பதாவது கலையான சத்தியானது வஞ்சகத்தைச் செய்யின் பதினோராவது கலையாகிய உன் மனையை விளங்க ஒட்டாமல் ஆன்மாவைத் தேகேந்திரியங்களின் வழிச் செலுத்தும். மூலாதாரச் சக்கரத்திலுள்ள குண்டலினி சத்தியே கேட்டு அருள் புரிவாயாக. முஞ்சில் - தருப்பை. அழிவில்லாத எனினுமாம். முன்முருங்கின் பூவிதழ் போன்ற செவ்விய இதழையுடைய பெண் பிள்ளையே கேட்பாயாக எனினுமாம். (மகடூஉ முன்னிலை)

2300. புருட னுடனே பொருந்திய சித்தம்
அருவமொ டாறும் அதீதத் துரியம்
விரியும் சுழுத்தியின் மிக்குள்ள எட்டும்
அரிய பதினொன்று மாம்அவ் அவத்தையே.

பொருள் : மன மண்டலத்தில் புருடத்துவத்துடன் அருவமான சிவ தத்துவம் ஐந்துமாக ஆறும் விளங்கும் நிலையே ஆன்மாவுக்குத் துரியாதீதமாகும். சுழுத்தி நிலையில் புரியட்டக சரீரம் விரிந்து விளங்கும். சாக்கிர சொப்பன நிலைகளில் அருமையான வித்தியா தத்துவம் எழும் அந்தக்கரணம் நான்கும் தொழிற்படும். சித்தம் - மனம், புத்தி, அகங்காரம் ஆகிய மூன்றும் அடங்கிய மன மண்டலம்.

2301. காட்டும் பதினொன்றும் கைகலந் தால்உடல்
நாட்டி அழுத்திடின் நந்திஅல் லால்இல்லை
ஆட்டம்செய் யாத அதுவிதி யேநினை
ஈட்டு மதுதிடம் எண்ணலும் ஆமே.

பொருள் : முற்கூறிய பதினொரு தத்துவங்களும் உறவாகில் உடல் அமையும். இவைகளைச் செயல்படாமல் அழுத்திடில் விளங்குவது சிவமேயாகும். வீணாக அந்தக்கரணங்களின் வழிச் சென்று அலையாமல் நிற்பதே முறை என்று நீ உணர்வாயாக. (பின் சிவத்தின் வழி நிற்றலே உறுதி பயக்கும் என்று எண்ணுதல் நன்மையாகும்.)

12. கலவு செலவு

(கலவு - கலத்தல். செலவு - பிரிதல். கருவிகளோடு கலத்தலும் அவற்றோடு பிரிதலும் இங்குக் கூறப்படும்.)

2302. கேவலம் தன்னில் கலவச் சகலத்தின்
மேவும் செலவு விடவரு நீக்கத்துப்
பாவும் தனைக்காண்டல் மூன்றும் படர்வற்ற
தீதறு சாக்கிரா தீதத்தில் சுத்தமே.

பொருள் : கேவல அவத்தையில் விளங்கிய ஆன்மா கருவி கரணங்களோடு கலக்க அது சகல அவத்தையைப் பொருந்தும் கருவி கரணங்களை விட்டபோது அச்சகலம் பிரிதலை அடையும். இவ்விரண்டையும் விட்டு ஆன்மா தனது அகண்ட சொரூபத்தைப் பெறுதல் ஆகிய மூன்றாவதும் படருதல் இல்லாத தீமை நீங்கும். சாக்கிர அதீதத்தில் ஆன்மா பொருந்தி இருத்தலே சுத்தநிலையாம். ஆன்மா கருவி கரணங்களை விட்டு நீங்கி, அதீதத்தில் பொருந்தியிருத்தலே சுத்தநிலையாகும். (கேவல் + அவத்தை = கேவலாவத்தை - வடமொழி தீர்க்க சந்தி.)

2303. வெல்லும் அளவில் விடுமின் வெகுளியைச்
செல்லும் அளவும் செலுத்துமின் சிந்தையை
அல்லும் பகலும் அருளுடன தூங்கினால்
கல்லும் பிளந்து கடுவெளி யாமே.

பொருள் : முக்குற்றங்களில் ஒன்றாகிய சினத்தை முடிந்த அளவு அடக்கியிருங்கள். மனத்தை இயன்ற மட்டும் இறை நினைவில் நிறுத்துங்கள். இரவும் பகலும் சிவ நினைவில் சிவ ஒளி பெற்றுத் துரிய சமாதி பொருந்தில் கல்போன்ற உறுதியான பாச இருள் அகன்று பரமாகாய மண்டல ஒளியில் அமர்வீர். (பரமாகாயம் - பரம + ஆகாயம்.)

13. நின்மல அவத்தை

(நின்மல அவத்தை - மலம் தன் வலி ஒடுங்கிய நிலை. ஆன்மா சிவத்தைச் சார்ந்து, தன்னையும் மறந்து, வியாபகமாக இருக்கும் நிலை நின்மல அவத்தையாம்.)

2304. ஊமைக் கிணற்றகத் துள்ளே உறைவதோர்
ஆமையின் உள்ளே அழுவைகள் ஐந்துள
வாய்மையின் உள்ளே வழுவாது ஒடுங்குமேல்
ஆமையின் மேலும்ஓர் ஆயிரத்து ஆண்டே.

பொருள் : ஆகாயமாகிய வாயில்லாக் கிணற்றுள்ளே உறையும் பிரணவ உபாசகரிடம் உறைப்புடன் தங்கும் நின்மல சாக்கிரம் முதலிய நிலைகள் ஐந்து உண்டு. அந்நிலையில் ஆன்ம ஒளியினுள்ளே நழுவாமல் அறிவு ஒடுங்குமேல் அவர் பிரணவ தேகத்துடன் மேலும் ஓர் ஆயிரம் ஆண்டு உயிர் வாழ்வார்.

2305. காலங்கி நீர்பூக் கலந்தஆ காயம்
மாலங்கி ஈசன் பிரமன் சதாசிவன்
மேலஞ்சும் ஓடி விரவவல் லார்கட்குக்
காலனும் இல்லை கருத்தில்லை தானே.

பொருள் : காற்றும் தீயும் நீரும் பூமியும் எல்லாவற்றிலும் கலந்து விளங்கும் ஆகாயமும் என்ற ஐந்தையும் மகேசனும் உருத்திரனும் திருமாலும் பிரமனும் உருவச் சதாசிவரும் முறையே இயக்கும் அதிபராவர் இவர்களை விட்டு இவர்களுக்கு மேல் உள்ள அருவச் சதாசிவம், விந்து, நாதம், சத்தி, சிவம் ஆகிய ஐந்தையும் பொருந்தும் ஆற்றல் உடையார்க்கு எமனும் இல்லை. உலகம் பற்றிய சங்கற்பமின்றித் திருவடிச் சார்பில் பொருந்தி நிற்பர். பூதங்களை இயக்கும் அதிபர்களின் பெயர் (வரிசைக் கிரமம்) மாறியுள்ளது.

2306. ஆன்மாவே மைந்தன் ஆயினன் என்பது
தான்மா மறையறை தன்மை அறிகிலர்
ஆன்மாவே மைந்தன் அரனுக்கு இவன்என்றால்
ஆன்மாவும் இல்லையால் ஐஐந்தும் இல்லையே.

பொருள் : ஆன்மாவே சிவகுமாரன் ஆயினான் என்று பெயரிய வேதமானது கூறும் உண்மையினை உலகினர் அறியவில்லை. ஆனால் ஆன்மாவே சிவகுமாரன் நின்மல அவத்தையில் ஆன்மா என ஒன்று இல்லாமையால் சிவனுக்கு இவன் மைந்தன் என்று கூறுதலாம். அந்நிலையில் இருபத்தைந்து தத்தவங்களும் இல்லையாம். சிவகுமாரன் என்று கூறுவது தந்தைக்குள்ள தன்மையை மகன் பெறுவதால் ஆம்.

2307. உதயம் அழுங்கல் ஒடுங்கல்இம் மூன்றின்
கதிசாக் கிரங்கன வாதி சுழுத்தி
பதிதரு சேதனன் பற்றாம் துரியத்து
அதிசுப னாய்அனந் தான்அந்தி யாகும்.

பொருள் : ஒளி உதயமாதல், உலக சிந்தனையற்று அதனுள் அழுந்ததல், இந்திரியங்கள் ஓய்ந்து அடங்குதல் ஆகிய இம்மூன்றும் முறையே நின்மல சாக்கிரம் நின்மல சொப்பனம் நின்மல சுழுத்தியில் ஆகும். இவை பதிந்த சித்துப் பொருளாகிய ஆன்மா தனக்குப் பற்றுக்கோடாக விளங்கும் துரிய நிலையில் மிகுந்த மங்கல வடிவினனாய் அழியாத பேறு எய்துவான். (நந்தான் - கெடான் எனினுமாம். சேதனன் - ஆன்மா. அனந்த ஆனந்தம் - முடிவிலா ஆனந்தம்.)

2308. எல்லாம்தன் னுட்புக யாவுளும் தானாகி
நல்லாம் துரியம் புரிந்தக்கால் நல்லுயிர்
பொல்லாத ஆறாறுள் போகாது போதமாய்ச்
செல்லாச் சிவகதி சென்றுஎய்தும் அன்றே.

பொருள் : மாயேயமாகிய எல்லாத் தத்துவங்களும் சீவ ஒளியில் அடங்க, தத்துவங்களில் உள்ளும் புறம்பாகிய சீவஒளி தானாய் அது நன்மையைத் தரும் துரிய நிலை புரிந்தால் சுத்தான்மாவாகும். அப்போது அதுதீமையைத் தரும் முப்பத்தாறு தத்துவங்களுடன் கூடாது தனித்துவிடும். ஆன்மா ஞானமே வடிவாய்ச் சென்று அடைவதற்கு அருமையான சிவகதியைச் சென்றடையும்.

2309. காய்ந்த இரும்பு கனலை அகன்றாலும்
வாய்ந்த கனலென வாதனை நின்றாற்போல்
ஏய்ந்த கரணம் இறந்த துரியத்துத்
தோய்ந்த கருமத் துரிசுஅக லாதே.

பொருள் : தீயினில் காய்ந்த இரும்பு தீயினை விட்டு அகன்றாலும் பொருந்திய தீயினது தன்மை இரும்பில் இருப்பது போல் பொருந்திய கரணங்கள் நீங்கி நிற்கும் நின்மல துரியத்தில் முன்னர் அவை நடத்திய கிரியா வாசனை ஆன்மாவை விட்டு அகலாது நிற்கும். நின்மல துரியத்திலும் ஆன்மாவினிடம் கிரியா வாசனை எஞ்சி நிற்கும்.

2310. ஆன் மறையாதி யாம்உரு நந்திவந்து
ஏனை அருள்செய் தெரிநனா அவத்தையில்
ஆன வகையை விடும்அடைத் தாய்விட
ஆன மலாதீதம் அப்பரந் தானே.

பொருள் : ஞானத்தைக் கொடுப்பதான மறையாதியான நாதம் வெளிப்பட்டு வந்து ஏனையவற்றைப் புலப்படுத்துகின்ற நனவு நிலையில் இவ் வகையான நாதத்தைக் கடந்து மேற் சொல்லுங்கள். அவ்வாறு நாதத்தைக் கடந்து நாதாந்த நிலையில் பொருந்தியபோது உண்டான மலமற்ற தன்மையே ஆன்மாபரமாகும் என்பதாம். ஆன்மா நாதாந்தம் பொருந்தியபோது பரமாந் தன்மை எய்தும்.

2311. சுத்த அதீதம் சகலத்தில் தோய்வுறில்
அத்தன் அருள்நீங்கா ஆங்கணில் தானாகச்
சித்த சுகத்தைத் தீண்டாச் சமாதிசெய்து
அத்தனோடு ஒன்றற்கு அருள்முத லாமே.

பொருள் : முற்கூறியவாறு நாதவெளிப்பாடு பெற்றுச் சகலநிலையில் நின்மல துரியாதீதத்தில் பொருந்தினால் அவரை விட்டு, சித்தினது அருட்சத்தி நீங்காது. அந்த நாதத்தையே தியானப் பொருளாகக் கொண்டு, மனம் விரும்பும் உலக போகத்தின் வழிச் செல்லாமல் நாதாந்தம் சென்று சமாதி உற்று, சிவத்தோடு பொருந்துவதற்குத் திருவருட் சத்தியே அவர்கட்கு முதற் காரணமாகும். (ஆங்கணில் - அவ்விடத்தில்)

2312. வேறுசெய் தான்இரு பாதியின் மெய்த்தொகை
வேறுசெய் தான்என்னை எங்கணும் விட்டுய்த்தான்
வேறுசெய் யாஅருள் கேவலத் தேவிட்டு
வேறுசெய் யாஅத்தன் மேவிநின் றானே.

பொருள் : மாதொரு பாகனாய் இருக்கும் தன்மையால் உலக உயிர்களை ஆணும் பெண்ணுமாக இரு கூறு செய்தான். அர்த்தநாரியாய் ஒன்றாய் இருக்கும்போது அவனே என்னை உலகக் கவர்ச்சியினின்றும் மீட்டு அகண்ட சொரூபமாக்கி எங்கும் செல்லும் ஆற்றலை அளித்தான். மேலும் அவன் என்னைவிட்டு நீங்காத அருட் கேவலத்தில் பொருந்தி என்னைவிட்டு நீங்காத தந்தையாய் உடனிருந்தான்.

2313. கறங்குஓலை கொள்ளிவட் டம்கட லில்திரை
நிறஞ்சேர் ததிமத்தின் மலத்தே நின்றங்கு
அறங்காண் சுவர்க்க நரகம் புலிசேர்ந்து
கிரங்கா உயிர்அரு ளால்இவை நீங்குமே.

பொருள் : காற்றாடியின் ஓலையும் கொள்ளிக்கட்டையின் வட்டமும் கடலின் அலையும் அழகு நிறைந்த தயிரின் மத்தும் போல உயிர்மலத்தினால் சுழன்று, அவ்விடத்துத் தத்தம் புண்ணிய பாவத்துக்கு ஏற்பப் பொருந்தும் சொர்க்கம் நரகம் சேர்ந்து பூமியைக் கடந்து வருந்தி, உயிர் இறைவன் அருளை அடைந்தால் பிறப்பு இறப்பு நீங்கும். இறைவனது அருளைப் பெற்றால் உயிர்க்கூட்டம் பிறவிக்கு வாரா.

2314. தானே சிவமான தன்மை தலைப்பட
ஆன மலமும்அப் பாச பேதமும்
ஆன குணமும் பரான்மா உபாதியும்
பானுவின் முன்மதி போல்பட ராவே.

பொருள் : திருவருட் பேற்றால் ஆருயிர் தானே சிவமாந்தன்மை எய்தும். எய்தத் தொன்மையான மலமும் அம்மலத்தைப் போக்க அருளால் சேர்க்கப்பட்ட பாச வேறுபாடுகளுமாகிய ஐம் மலங்களும் நீங்கும். அதனால் ஏற்படும் குணங்களாகிய தீமைகளும் அகலும். உயிர்த்தன்மைத் தடையாகிய பரமான்மா உபாதியும் நீங்கும். இவை முற்றும் உடன் ஒருங்கு அகல்வதற்கு ஒப்பு ஞாயிற்றின்முன் திங்கள் நீங்குவதாகும். நீங்குதல் என்பது அடங்குதல்.

2315. நெருப்புண்டு நீருண்டு வாயுவும் உண்டங்கு
அருக்கனும் சோமனும் அங்கே அமரும்
திருத்தக்க மாலும் திசைமுகன் தானும்
உருத்திர சோதியும் உள்ளத்து ளாரே.

பொருள் : உலகமும் உடலும் ஒப்பெனக் கூறும் உண்மையான உடலகத்தும் நிலமுண்டு; நீருண்டு; நெருப்புண்டு; காற்றுண்டு; வெளியுண்டு; ஞாயிறுண்டு. அவற்றை இயக்கும் தெய்வங்களாகிய அயன், அரி அரன், ஆண்டான், அருளோன் என்பாரும் உளர். ஐம்பூத நிலையை முறையே மூலம், மேல் வயிறு, நெஞ்சம், கழுத்து, உச்சித்துளை என்ப. ஞாயிற்று மண்டிலத்தை அடிப்பகுதியிலும் திங்கள் மண்டிலத்தைப் புருவ நடுவிலும் கூறுப.

இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் - Page 3 Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Tue Mar 27, 2012 1:50 pm

2316. ஆனைகள் ஐந்தும் அடங்கி அறிவென்னும்
ஞானத் திரியைக் கொளுவி அதனுட்புக்கு
ஊனை இருளற நோக்கும் ஒருவற்கு
வானகம் ஏற வழிஎளி தாமே.

பொருள் : ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி, அறிவாகிய ஞானத்திரியைத் தூண்டி, காணும் சீவ ஒளியில் புகுந்து, ஊனாலாகிய உம்பைச் சோதி வடிவாகக் காண்பவர்க்கு சிவலோகம் ஏற வழி மிக எளிதாகும். சீவ ஒளியில் நிலைபெற்று உடலைச் சோதி மயமாகக் காண்பவர் முத்திநிலை எய்துவர்.

2317. ஆடிய காலில் அசைக்கின்ற வாயுவும்
தாடித் தெழுந்த தமருக ஓசையும்
பாடி எழுகின்ற வேதாக மங்களும்
நாடியின் உள்ளாக நான்கண்ட வாறே.

பொருள் : சந்திர கலையில் இயக்கம் பெறுகின்ற பிராணனும் அது மேல் செல்லுவதால் உண்டாகின்ற சிறுபறை முழக்கமும் ஒலிக்கின்ற வேதாகமங்களின் மூலமான இனிய நாதமும் எனது இடை நாடியில் சகஸ்ர தளத்தில் நான் கண்டு கொண்டேன். (ஆடையகால் - தூக்கிய இடத் திருவடி. சந்திரகலை சந்திரன் மனத்துக்கு அதிபர். தமருகம் - உடுக்கை. அசைக்கின்ற வாயு - சிலம்பொலி. தாடித்து - மிகுத்து (தடித்து).)

2318. முன்னை அறிவினில் செய்த முதுதவம்
பின்னை அறிவினைப் பெற்றால் அறியலாம்
தன்னை அறிவது அறிவாம்அஃ தன்றிப்
பின்னை அறிவது பேயறி வாகுமே.

பொருள் : முந்திய பிறவிகளில் ஞானத்தினால் சாதகம் செய்த நற்றவம் காரணமாக, இப்போது எடுத்த பிறவியில் அவ்வறிவு பிரகாச முற்று விளங்கில், தனது இயல்பான அகண்ட வடிவத்தை அறியலாகும். இவ்வாறு தன்னை அறிதலே அறிவாகும். அஃது அல்லாமல் பிற அறிவினைப் பெற்றால் பேய் போலச் சொர்க்க நரகங்களில் அலைந்து பிறப்பு எடுக்க வேண்டியதாகும்.

2319. செயலற் றிருக்கச் சிவானந்த மாகும்
செயலற் றிருப்பார் சிவயோகம் தேடார்
செயலற் றிருப்பார் செகத்தோடுங் கூடார்
செயலற் றிருப்பார்க்கே செய்தியுண் டாமே.

பொருள் : திருவருளால் செயலற்றிருப்பதைச் சமாதி அல்லது நிட்டை என்பர். செயலற்றிருக்கச் சிவ இன்பம் ஆகும். செயலற்றிருப்போர் சிவயோகம் தேடார். அவர்கள் உலக நிலையிலா வாழ்வுடனும் கூடார். செயலற்றிருக்கும் திருவினர்க்கே சிவபெருமானின் பேரின்பச் செய்தி உண்டாகும். செயலறல் அகப்புறச் செயலறலாகும். ஆனால் ஆண்டான் அடியின்ப நுகர்வுச் செயலுண்டு. அது நிற்கும் நிட்டை.

2320. தான்அவ னாகும் சமாதிகை கூடினால்
ஆன மலம்அறும் அப்பசுத் தன்மைபோம்
ஈனமில் காயம் இருக்கும் இருநிலத்து
ஊனங்கள் எட்டும் ஒழித்தொன்று வோர்கட்கே.

பொருள் : திருவருளால் ஆருயிர்கட்குத தான் அவனாம் சமாதி கைகூடினால் ஐவகையான மலம் அறும் சிற்றுணர்வு என்னும் பசுத்தன்மை அகலும், புலால் புகர்தல், கொலை,களவு, கள், காமம், பொய் கூறல், சிவனை மறத்தல், சிவனடியாரை மறத்தல் என்னும் எண் பெருங்குற்றமும் ஒழிந்து சிவபெருமான் திருவடியை ஒன்று வோர்க்குக் குற்றமற்ற அவர்தம் நல்லுடல் சிவ வுலகத்தில் இருக்கும்.

2321. தொலையா அரனடி தோன்றும்அம் சத்தி
தொலையா இருளொளி தோற்ற அணுவும்
தொலையாத் தொழின்ஞானம் தொன்மையில் நண்ணித்
தொலையாத பெத்தம்முத் திக்கிடை தோயுமே.

பொருள் : ஆருயிர்கட்குச் செவ்வி வாய்த்ததும் திருவருள் வீழ்ச்சியாகிய சத்திநிபாதம் எய்தம் எய்தவே, என்றும் பொன்றாச் சிவபெருமானின் திருவடி தோன்றும். ஒடுங்குதலாவது கெடுதல் எய்தாத மலமாகிய இருளும், சிற்றுணர்வாகிய உயிர்த்தன்மையும் தோன்றுதலாம் அணுவாகிய ஆரு யிர்க்குக் கேடில்லாத தொன்மையிலேயே உள்ள நன்னெறி நான்மையின் தொழிலும் அறிவும் உண்டு அதனால் கட்டு வீடென்று சொல்லப்படும் இருநிலையும் தோன்றும். அதற்கிடையில் ஆருயிர் அருளில் தோயும் (பெத்தம் - பந்த பாசங்களில் நிற்கும் நிலை. சத்திநிபாதம் - பக்குவம் பெற்ற ஆன்மாக்களிடம் திருவருள் பற்றுதல்)

2322. தோன்றிய பெத்தமும் முத்தியும் சூழ்சத்தி
மான்றும் தெருண்டும் உயிர்பெறும் மற்றவை
தான்தரு ஞானம்தன் சத்திக்குச் சாதனாம்
ஊன்றல்இல் லாஉள் ளொளிக்குஒளி யாமே.

பொருள் : திருவருட் ஆருயிர்க்குத் தோற்றுவிக்கப்பட்ட கட்டும் வீடும் தோன்றும். அவற்றை அவ்வுயிர் மருண்டும் தெருண்டும் உணரும். பின் சிவபெருமான் அருள்கின்ற திருவடியுணர்வால் அவ்வுயிர் சத்திக்குச் சாதனன் ஆகும். அஃதாவது, அவ்வுயிர் அருள்வழி ஒழுகுவது ஊன்றி நின்று நிலைப்பதல்லாத உள்ளொளிக்குள் ஒளியாய சிவ ஒளிதோன்றும். (மான்று - மயங்கி. தெருண்டு - தெளிந்து)

2323. அறிகின்றி லாதன ஐஏழும் ஒன்றும்
அறிகின்ற என்னை அறியா திருந்தேன்
அறிகின்றாய் நீயென்று அருள்செய்தான் நந்தி
அறிகின்ற நானென்று அறிந்துகொண் டேனே.

பொருள் : தாமே அறியும் தன்மையில்லாத முப்பத்தாறு மெய்களும் ஆருயிரால் அறிகின்றன. அவ் வுண்மையினையும் அறிகின்ற என்னையும் அறியாதிருந்தேன். சிவபெருமான் அறியும் தன்மை உனக்குள்ள தென்று அருளால் அறிவித்தான். அதனால் நான் அறிகின்றேன் என்று அறிந்து கொண்டேன். இதன்கண் நம் மூலர் தம் முன்னிலையினை ஓதியருள் கின்றார்.

2324. தான்அவ னாகிய ஞானத் தலைவனை
வானவ ராதியை மாமணிச் சோதியை
ஈனமில் ஞானத்து இன்னருள் சத்தியை
ஊனமி லாள்தன்னை ஊனிடைக் கண்டதே.

பொருள் : மேல் ஓதியவாறு விளக்க விளங்கும் அறிவுள்ளது உயிரென உணர்ந்தோன் இரும்பைப் பொன்னாக்கும் இயைபுபோல், தன்னை அவனாக்கும் ஞானத்தலைவன் சிவன் என்பன். சிவ வுலக வாழ்வினர்க்கு முதல்வனும் அவனே. அளவிடப்படாத மாமணியாகிய செம்மணிச் சோதியை மாசிலா மெய்யுணர்வை நல்கும் இனிய வனப்பு மிகும் நல்லருள் ஆற்றலும் அவனே. ஒரு ஞான்றும் முழு முதல் தன்மையில் ஏதும் குறை பாடில்லாத சிவபெருமானை இவ் வுடம்பகத்தே அவன் காட்டக் கண்டு கொண்டேன் என்க.

2325. ஒளியும் இருளும் பரையும் பரையுள்
அளியது எனலாகும் ஆன்மாவை யன்றி
அளியும் அருளும் தெருளும் கடந்து
தெளிய அருளே சிவானந்த மாமே.

பொருள் : சிற்றறிவாகிய ஒளியும் ஆணவமாகிய இருளும் இவற்றை விளக்கும் நடப்பாற்றலாகிய பரையும் அத்திருவருளால் தலையளிக்கத் தக்க ஆருயிரும் அருளால் உணரலாகும். அதன் மேலும் தலையளிப்பையும் அதனைப் புரியும் அருளையும், அவ்வருளால் எய்தும் தெருளையும் கடந்து திருவடியைத் தெளியத் துணை புரியும் வனப் பாற்றலாகிய திருவருளே சிவப் பேரின்பமாகும்.

2326. ஆனந்த மாகும் அரனருட் சத்தியில்
தான் அந்த மாம்உயிர் தானே சமாதிசெய்து
ஊன்அந்த மாய்உணர் வாய்உள் உணர்வுறில்
கோன்அந்தம் வாய்க்கும் மகாவா கியமாமே.

பொருள் : சிவத்தினது அருட் சத்தில் ஆன்மா தன் வயமற்று அழுந்தில் ஆனந்தத்தையும் அடையும். உடலைக் கடந்து சமாதி செய்து உணர்வு மயமாய் உள் உணர்வில் கலந்து அகண்டமாய் நிற்கும் அறிவைப் பெற்றால் உடலின் தலைவனான் ஆன்மாவின் சுட்டறிவு முடிவுறும். இது மகாவாக்கியப் பொருளாகும்.

2327. அறிவிக்க வேண்டாம் அறிவற்று அயர்வோர்க்கும்
அறிவிக்க வேண்டாம் அறிவிற் செறிவோர்க்கும்
அறிவுற்று அறியாமை எய்திநிற் போர்க்கே
அறிவிக்கத் தம்அறி வார்அறி வோரே.

பொருள் : ஆன்ம ஞானமற்றுத் தாமதகுணம் பொருந்தியவர்களுக்கு ஞானோபதேசம் செய்ய வேண்டாம். பூர்வ சென்மம் காரணமாக இயல்பாகவே ஞானம் பெற்றவர்க்கும் அறிவிக்க வேண்டாம். ஆன்ம ஞானத்தைக் கல்வியினால் அறிந்தும் அனுபவம் கூடாமல் அறியாமையில் உள்ளவர்க்கே அவர்கள் அனுபவம் பெற்றுத் தம்முடைய எதார்த்த சொரூபத்தை அறிவார்.

2328. சத்தும் அசத்தும் சதசத்தும் தான்கூடிச்
சித்தும் அசித்தும் சிவசித்த தாய்நிற்கும்
சுத்தம் அசுத்தம் தொடங்காத துரியத்துச்
சுத்தரா மூன்றுடன் சொல்லற் றவர்களே.

பொருள் : சத்து அசத்து சதசத்து என்னும் பொருட்களில் தான் எனப்படுகிற ஆன்மா மற்றைய பொருட்களோடு கூடி, அறிவுப் பொருளாகவும் அறிவற்ற பொருளாகவும் பேரறிவுப் பொருளாகவும் நிற்கும். சுத்த மாயையும் அசுத்த மாயையும் தொடராத துரிய நிலையில், சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி ஆகிய மூன்று நிலைகளையும் பிரணவத்தையும் கடந்து மலங்களின் நீங்கிய சுத்தமுடையதாகும்.

2329. தானே அறியான் அறிவிலோன் தானல்லன்
தானே அறிவான் அறிவு சதசத்தென்று
ஆனால் இரண்டும் அரனரு ளாய்நிற்கத்
தானே அறிந்து சிவத்துடன் தங்குமே.

பொருள் : ஆன்மா தானாகவே தனது உண்மைச் சொரூபத்தை அறியமாட்டான். ஆனால் அறிவில்லாதவனும் அல்லன். தன்னுடைய அறிவு அறிவும் அறியாமையும் உடையது என்று சொரூபத்தை அறிந்தபின் அறிவான். ஆனால் இவ்விரு தன்மைகளும் அருட் சத்திப் பதிவால் உண்டாக, ஆன்மா தன்னையும் அறிந்து தலைவனான சிவத்துடன் பொருந்திப் பேரின்பம் அடையும்.

2330. தத்துவ ஞானம் தலைப்பட் டவர்கட்கே
தத்துவ ஞானம் தலைப்பட லாய்நிற்கும்
தத்துவ ஞானத்துத் தான்அவ னாகவே
தத்துவ ஞானானந் தந்தான் தொடங்குமே.

பொருள் : முப்பத்தாறு மெய்களின் உண்மை உணரும் உணர்வு தலைப்பட்டவர்கட்கே திருவடியுணர்வாகிய அழியாத் தத்துவ ஞானம் கைகூடும் அத் திருவடியுணர்வு கைவந்தால் சிவனருளால் சிவனாவன். சிவனாகவே திருவடிக்கீழ் அமர்ந்து திருவடியின்பம் துய்ப்பன். தத்துவ ஞான ஆனந்தம் தான் தொடங்குமே - எனப் பிரித்துக்கொள்க.

2331. தன்னை அறிந்து சிவனுடன் தானாக
மன்னும் மலம்குணம் மாளும் பிறப்பறும்
பின்அத சன்முத்தி சன்மார்க்கப் பேரொளி
நன்னது ஞானத்து முத்திரை நண்ணுமே.

பொருள் : திருவருளால் ஒருவன் தன் உண்மை நிலையினை அறிந்து, அச் சிவபெருமான் திருவடிக்கீழ் தங்கி நிலைப்பன். தங்கவே மலம் முதலியவற்றின் பிணிப்பு மறைப்பு துய்ப்பு முதலிய பண்புகள் அறும். அறவே பிறப்பும் அறும். அற்ற பின் கைகூடுவது உண்மைத் திருவடிப் பேறாகும். அப் பேற்றால் நன்னெறிப் பேரொளி நண்ணும். நண்ணவே என்றும் நன்மை பயப்பதாகிய திருவடி. உணர்வுப் பொறி பெற்ற திருவினராவர். (பொறி - முத்திரை).

2332. ஞானம்தன் மேனி கிரியை நடுஅங்கம்
தானுறும் இச்சை உயிராகத் தற்பரன்
மேனிகொண்டு ஐங்கரு மத்துவித் தாதலால்
மோனிகள் ஞானத்து முத்திரைபெற் றார்களே.

பொருள் : சிவத்தின் திருமேனி ஞானமாகும். கிரியையில் அவன் நடு அங்கமாகவுள்ள இதயத்தில் உறைபவனாக வுள்ளான். உயிரின் இச்சையில் தனது இச்சையைப் பொருத்தி அந்த மேலான சிவம் உயிர்களிடம் ஒளியில் பொருந்தி, சிருஷ்டி யாதி ஐந்தொழில்களுக்கும் காரணமாக உள்ளதால் பிரணவ யோகிகள் அவன் அறிவுடன் பொருந்தித் தங்களது இச்சை கிரியைகளை விட்டு ஞான முத்திரையைப் பெற்றார்கள்.

2333. உயிர்க்குஅறி உண்மை உயிர்இச்சை மானம்
உயிர்க்குக் கிரியை உயிர்மாயை சூக்கம்
உயிர்க்குஇவை ஊட்டுவோன் ஊட்டும் அவனே
உயிர்ச்செயல் அன்றிஅவ் வுள்ளத்து ளானே.

பொருள் : உயிர்க்குரிய அறிவு சத்தியப் பொருளது உயிர்க்குரிய அபிமானம் அதன் இச்சையாகும். உயிரின் செயல் உயிரோடு பிணிக்கப்பட்ட மாயையின் அளவாகும். இவை அனைத்தும் பரவிந்துவில் சூக்கும மாய் உள்ளன. இவைகளை உயிரோடு புணர்த்தியவன் எல்லாவற்றையும் புணர்த்தும் சிவமேயாகும். ஆதலால் உயிர்கள் செயல் அவற்றின் செயலாகாது; உள்ளத்திலுள்ள சிவத்தின் செயலாகும்.

2334. தொழில்இச்சை ஞானங்கள் தொல்சிவசீவர்
கழிவற்ற மாமாயை மாயையின் ஆகும்
பழியற்ற காரண காரியம் பாழ்விட்டு
அழிவற்ற சாந்தாதீ தன்சிவ னாமே.

பொருள் : பழமையாகச் சிவமாந் தன்மை எய்திய சீவரது இச்சா ஞானக் கிரியைகள் நீங்காத சுசுத்தாசுத்த மாயா காரியங்களினால் நிகழ்வனவாகும். அச் சீவன் பழியில்லாத காரண காரிய தத்துவங்கள் பாழ்பட நிலைபேறான சாந்திய தீதகலையில் விளங்குபனான சிவனாவன். சாந்தியாதீத கலை வியாபகம் மற்ற கலைகள் அதனுள் வியாப்பியம்.

2335. இல்லதும் உள்ளதும் யாவையும் தானாகி
இல்லதம் உள்ளது மாய்அன்றாம் அண்ணலைச்
சொல்வது சொல்லிடில் தூராகி தூரமென்று
ஒல்லை உணர்ந்தால் உயிர்க்குயி ராகுமே.

பொருள் : நிலையில்லாக் காரியப் பொருளான மாயா வடிவங்களிலும் நிலையான காரணமான பரவிந்துவிலும் எல்லாவற்றிலும் கலந்து சிவன் தானாகி, பொருள் தன்மையால் இல்லதும் உள்ளதுமாய அப்பொருள்களின் வேறாயும் உள்ள சிவனை, வாக்குக்கு அப்பாலுக்கு அப்பாலாய் உள்ளவன் என்று விரைவில் சிவஞானத்தால் உணரின் அவன் உயிர்க்குயிராய் விளங்குவான்.

2336. உயிரிச்சை யூட்டி உழிதரும் சத்தி
உயிரிச்சை வாட்டி ஒழித்திடும் ஞானம்
உயிரிச்சை யூட்டி யுடனுறலாலே
உயிரிச்சை வாட்டி உயர்பதஞ் சேருமே.

பொருள் : உயிர்களிடம் விருப்பத்தை உண்டாக்கி மாயையை இடமாகப் பொருந்தும்படி செய்யும் சத்தி, ஞானமான போது உயிரின் இச்சைகளை அழித்து நிற்கும். உயிர்களுக்கு இறைவன்பால் அன்பு உண்டாகச் செய்து உடனாய் இருத்தலால் உயிரானது உலக இச்சைகளை அழித்து மேலான சிவபதம் சேரும்.

2337. சேரும் சிவமானார் ஐம்மலம் தீர்ந்தவர்
ஓர்ஒன்றி லார்ஐம் மலஇருள் உற்றவர்
பாரின்கண் விண்நர கம்புகும் பான்மையர்
ஆருங்கண் டோரார் அவையருள் என்றே.

பொருள் : உயிரின் இச்சையை வாட்டிச் சிவமாம் பேறு பெற்றவர் உயிர்க்குற்றமாகிய ஐம்மலங்களையும் அகற்றினவராவர். அவ்விதம் சிவத்துடன் ஒன்றுதல் இல்லாதவர் உயிர்க் குற்றமாகிய ஐம்மலக் குற்றங்களையும் பொருந்தி இருளுடையவராக இருப்பர். இத்தகையோர் பூமியிலும் சொர்க்கத்திலும் நரகத்திலும் உழல்பவராக இருப்பர். இங்ஙனம் பிறந்து உழல்வது சிவ சக்தியினால் என்பதை பாரும் உணர்வதில்லை. சிவமாந்தன்மை எய்தியவர் சிவசத்தியினால் தன் உண்மை உணர்வர்.

2338. எய்தினர் செய்யும் இருமாயா சத்தியின்
எய்தினர் செய்யும் இருஞான சத்தியின்
எய்தினர் செய்யும் இருஞால சத்தியின்
எய்தினர் செய்யும் இறையருள் தானே.

பொருள் : ஆருயிர்கள் தூமாயை தூவாமாயை என்னும் இரு மாயைகளிலும் அருளால் பொருந்திச் செய்பவன செய்யும். அது போல் பெரிய ஞான சத்தியைப் பொருந்தி அறிவு விளங்கப்பெறும் பெரிய நிலவுலக முதலாம் மூலப்பகுதியினைப் பொருந்தித் துய்ப்பன துய்க்கும். இவை யனைத்தும் திருவருளால் நிகழ்வனவாகும். (இரு மாயா சக்தி - சுத்தமாயை, அசுத்த மாயை, ஞாலசக்தி - பிரகிருதி மாயை. தூமாயை - சுத்தமாயை. தூவாமாயை - அசுத்தமாயை.)

2339. திருந்தினர் விட்டார் திருவில் நரகம்
திருந்தினர் விட்டார் திருவார் சுவர்க்கம்
திருந்தினர் விட்டார் செறிமலர் கூட்டம்
திருந்தினர் விட்டார் சிவமாய் அவமே.

பொருள் : திருவடி யுணர்வால் திருத்த முற்றவர் இன்பமில்லாத துன்பம் நிறைந்த இருளுலகம் புகார். திருவடியுணர்வு - மெய்யுணர்வு, சிவஞானம். அத்தகைய உணர்வுடையார் நிலையிலா இன்பம் எய்தும் துறக்க உலகத்தையும் கான்ற சோறென ஒதுக்கித் தள்ளினர். அவர்கள் ஐம்மலக் கூட்டத்தையும் அறவே விட்டனர். மேலும் சிவமாய்த் திகழ்ந்தனர். அதனால் அவமாய பிறப்பினை விட்டனர். இவர்களே தங்கருமம் செய்யும் தவத் தோராவர். ஏனையோர் சிறப்பில்லாத பிறப்பு வினை செய்யும் அவத்தராவர்.

2340. அவமும் சிவமும் அறியார் அறியார்
அவமும் சிவமும் அறிவார் அறிவார்
அவமும் சிவமும் அருளால் அறிந்தால்
அவமும் சிவமும் அவனரு ளாமே.

பொருள் : நல்லறிவு இல்லாதவர் எது பயனற்றது எது பயன் உள்ளது என்பதை அறியமாட்டார். நல்லறிவு உள்ளவர் பயனற்றதையும் பயனுள்ளதையும் பிரித்து உணர்வர். அவ்வாறு பிரித்து, அறிவினால் தெளிந்தால் சீவர்களுக்கு அமைத்த கேடும் நன்மையும் அவன் அருளால் ஆம் என்று உணர்வர். சீவர்களுக்கு நன்மையும் தீமையும் அமைப்பது அருளேயாகும்.

2341. அருளான சத்தி அனல்வெம்மை போலப்
பொருள்அவ னாகத்தான் போதம் புணரும்
இருள்ஒளி யாய்மீண்டு மும்மல மாகும்
திருவருள் ஆனந்தி செம்பொருள் ஆமே.

பொருள் : அருள் என்ற சிவசத்தி நெருப்பும் அதனை விட்டு நீங்காத வெப்பமும் போல அவன் பொருளாகத்தான் ஞானமாய்ப் பொருந்தும் ஆன்மாவினிடம் சிவசத்தி இருளாகவும் ஒளியாகவும் பிரிந்து பின் மும் மலங்களாக விரியும். சிவானந்தத்தை விளைக்கும் சத்தியே சிவமாகும்.

2342. ஆதித்தன் தோன்ற வரும்பது மாதிகள்
பேதித்த தவ்வினை யாற்செயல் சேதிப்ப
ஆதித்தன் தன்கதி ரால்அவை சேட்டிப்பப்
பேதித்துப் பேதியா வாறுஅருட் பேதமே.

பொருள் : சூரியன் உதிக்க வளரும் தாமரை முதலிய மலர்கள் பக்குவ மாறுபாட்டுக்கு ஏற்ப அவ்வவற்றின் தன்மை மாறுபட்டு, சூரியனது ஒளிக் கிரணங்களால் அம் மலர்கள் தொழிற்பட மலர்ந்தும் மலர்ச்சி புலப்படாதவாறுபோல, சத்தியில் அருட்பதிவால் உண்டாகும் மாறுபாடும் ஆகும். சூரியனது கிரணத்தால் மலர் விரிவது போலச் சத்தியின் பதிவால் சீவர்கள் மெத்தென ஒளிபெறுவர்.

2343. பேதம் அபேதம் பிறழ்பேதா பேதமும்
போதம் புணர்போதும் போதமும் நாதமும்
நாத முடன்நாத நாதாதி நாதமும்
அதன் அருளின் அருள்இச்சை யாமே.

பொருள் : காணப்படும் உலகை வேற்றுமையாகவும் ஒற்றுமையாகவும் வேற்றுமையும் ஒற்றுமையாகக் காண்கின்ற தன்மையும் இயற்கை அறிவும் கல்வி கேள்விகளினால் ஆய அறிவும் ஞானமும் நாதமும் நாதத்தைத் தொடர்ந்து அதிநாதம் என்ற நாதாந்த நிலைபெறுதலும் ஆன்மாவுக்கு அருளில் அமைந்த இச்சா சத்தியின் கருணையாகும். (ஆதன் - ஆன்மா,) அதிநாதம், மகாநாதம், நாதாந்தம் என்பன ஒரு பொருளனவே.

2344. மேவிய பொய்க்கரி யாட்டும் வினையெனப்
பாவிய பூதம்கொண்டு ஆட்டிப் படைப்பாதி
பூவியல் கூட்டத்தால் போதம் புரிந்தருள்
ஆவியை நாட்டும் அரன்அரு ளாமே.

பொருள் : பொய்யான யானைப் பதுமையை மனிதன் பொருந்தி ஆட்டும் செயல்போல், பரந்த பூதங்களைக் கொண்டு ஆடச் செய்து படைத்தல் முதலான தொழில்களால் பூமி சொர்க்கம் நரகம் முதலியவைகளுடன் கூடச் செய்து ஞானம் வரப்பண்ணுதல் உயிரை நிலைபெறச் செய்யும் சிவனருட் சத்தியின் செயலாகும்.

2345. ஆறாறு அகன்று தனையறிந் தானவன்
ஈறாகி யாவினும் இயலாவும் தனில்எய்த
வேறாய் வெளிபுக்கு வீடுற்றான் அம்மருள்
தேறாத் தெளிவுற்றுத் தீண்டச் சிவமாமே.

பொருள் : முப்பத்தாறு தத்துவங்களையும் விட்டுத் தன் உண்மையை அறிந்த ஆன்மாவானவன், எல்லா உயிர்களிடமும் செல்ல வல்லவனாயும் எல்லா உயிர்களையும் தன்னிடம் காண்பவனாயும் அவைகளின் வேறாயும் பரவெளியில் புகுந்து வீட்டை அடைவான். முன்னர் இருந்த மயக்கம் தேறித் தெளிவுற்று அருள்சத்தி பதியச் சிவமாவான்.

2346. தீண்டற்குரிய அரிய திருவடி நேயத்தை
மீண்டுற்று அருளால் விதிவழியே சென்று
தூண்டிச் சிவஞான மாவினைத் தானேறித்
தாண்டிச் சிவனுடன் சாரலும் ஆமே.

பொருள் : தற்போதத்தினால் அடைவதற்கு அருமையான திருவடிப் பேற்றை முற்பிறவியின் தொடர்பாக இப்பிறவியில் அருள்கூட்ட அறிந்து, அந்நெறியில் சென்று மூலாதாரத்திலிருந்து மேலேறும் வாசியாகிய குதிரையில் ஏறி, ஆதாரங்களைக் கடந்து நிராதாரம் சென்று சிவனுடன் சார்தல் அமையும்.

2347. சார்ந்தவர் சாரணர் சித்தர் சமாதியர்
சார்ந்தவர் மெய்ஞ்ஞான தத்துவ சாத்தியர்
சார்ந்தவர் நேயந் தலைப்பட்ட ஆனந்தர்
சார்ந்தவர் சத்த அருள்தன்மை யாரே.

பொருள் : சிவத்தைச் சார்ந்தவர் சாரணர்களும் சித்தர்களும் சமாதி பொருந்தினவர்களும் ஆவார்கள். உண்மைச் சிவஞானத்தை உணர்ந்தவரும் சார்ந்தவர் ஆவார். சிவத்தின்பால் அன்பு கொண்டு சிவானந்தத்தை அனுபவிப்பவரும் சார்ந்தவராம். நாதமாகிய அருளில் விளங்குபவரும் சார்ந்தவராக இருப்பர். (சாரணர் - எங்கும் செல்லும் ஆற்றலுடன் உயிருக்கு உதவுபவர்.)

2348. தான்என்று அவன்என்று இரண்டென்பர் தத்துவம்
தான் என்று அவன்என்று இரண்டற்ற தன்மையைத்
தான்என்று இரண்டுஉன்னார் கேவலத் தானவர்
தான்இன்றித் தானாகத் தத்துவ சுத்தமே.

பொருள் : ஆன்மாவாகிய தான்என்றும் சிவமாகிய அவன் என்றும் ஆக உண்மையைப் பொருள் இரண்டு என்று கூறுவர் சகலர். தான்என்று அவன் என்று இல்லாமல் ஒன்றான தன்மையை, அருட் கேவலத்தில் இருப்போர். தன்னைச் சிவத்துக்கு வேறான பொருள் என்று எண்ணமாட்டார். அவ்வாறு ஆன்மா தற்போதம் கெட்டுச் சிவமே யாகத் தத்துவ சுத்தமாகும்.

2349. தன்னினில் தன்னை அறியம் தலைமகன்
தன்னினில் தன் ஐ அறியத் தலைப்படும்
தன்னினில் தன்னைச் சார்கிலன் ஆகில்
தன்னினில் தன்ஐயும் சார்தற்கு அரியவே.

பொருள் : தன்னிடத்தே தன் உண்மையை அறியும் தத்துவசுத்தி பெற்ற ஆன்மா தன் உண்மையில் தனது தலைவனாகிய சிவத்தை அறிய அது வளர்ந்து தோன்றும். அவ்வாறு தன்னிடத்தே தன் உண்மையை அறிந்து பொருந்தானாகில் தன்னிடத்தே தனது தலைவனையும் அடைவதற்கு அருமையாகும். தலைப்படுதல் - வளர்தல்.

2350. அறியகி லேன்என்று அரற்றாதே நீயும்
நெறிவழி யேசென்ற நேர்பட்ட பின்னை
இருசுட ராகி இயற்றவல் லானும்
ஒருசுட ராவந்துஎன் உள்ளத்துள் ஆமே.

பொருள் : மேல் ஓதியவாறு திருவருளால் யான் அறியகில்லேன் என்று நீயும் கவன்று அரற்றுதல் செய்ய வேண்டா. நன்னெறி நான்மை வழியே சென்றால் திருவருளால் சிவன் உனக்கும் நேர்படுவன். அவன் பின்பு அடியேனுக்கும் ஆருயிர் பேருயிர் என்ற இருசுடராய் இயைந்து இயக்கும் உண்மையினையும் புலப்படுத்துவன். அத்தகைய வல்லானாகிய சிவன் அடியேனை அவன் திருவடிக்கீழ் அடக்கி அடியேன் உள்ளத்து உள்ளாவான். (ஆருயிர் - ஆன்மா. பேருயிர் பரமான்மா. சிவன். இருசுடர் - சிவன், சீவன். ஒரு சுடர் - சிவன்.)

2351. மண்ஒன்று தான்பல நற்கலன் ஆயிடும்
உள்நின்ற யோனிகட்கு எல்லாம் ஒருவனே
கண்ஒன்று தான்பல காணும் தனைக்காணா
அண்ணலும் அவ்வண்ணம் ஆகிநின் றானே.

பொருள் : மண் என்ற ஒரு பொருள் பானை சட்டி முதலிய பல பாண்டங்களாக ஆகிறது. அது போல இறைவன் ஒருவனே சகல சீவ வர்க்கங்களிலும் ஆகியுள்ளான். கண் ஒரு பொருளாக இருந்து உலகிடைப் பல பொருள்களைக் கண்டும் அதனை அவை காணா. அதுபோல உயிர்களின் தலைவனான இறைவனும் தான் எல்லாவற்றையும் அறிந்தும் தான் அவற்றால் அறியப்படாதவனாய் உள்ளான்.

2352. ஓம்புகின் றான்உலகு ஏழையும் உள்நின்று
கூம்புகின் றார்குணத் தின்னொடும் கூறுவர்
தேம்புகின் றார்சிவன் சிந்தைசெய் யாதவர்
கூம்பகில் லார்வந்து கொள்ளலும் ஆமே.

பொருள் : சிவபெருமான் உயிர்க்கு உயிராய், உலகுக்கும் உயிராய் உள்நின்று, உலகு ஏழினையும் ஓம்பியருள்கின்றனன். அச்சிவ பெருமான் திருவடிக்கண் ஒருங்கிய மனத்தார் கூம்புகின்றா ராவர். அத்தகையாரை மெய்யடியார் எட்டுவான் குணத்து எம்மான் எனக் கூறுவர். சிவபெருமானின் திருவடிகளை நினையாதவர் தேம்புகின்றார் ஆவர். உள்ளத் தளர்ச்சி யில்லாதவர் இடையறாது நினைந்து சிவன் திருவடியைக் கொள்ளத் தளரார்.

2353. குறிஅறி யார்கள் குறிகாண மாட்டார்
குறிஅறி யார்கடம் கூடல் பெரிது
குறிஅறி யாவகை கூடுமின் கூடி
அறிவறி யாஇருந்து அன்னமும் ஆமே.

பொருள் : உயிர்க்கும் உயிராய் இருக்கும் சிவத்தைத் தன் உண்மை என்ற பரவிந்து மண்டலம் வெளிப்படாதபோது அறிய மாட்டார். இவ்விதம் தன் உண்மை அறியாதவர் உடம்போடு கூடிப் பல பிறப்பு எடுப்பர். சிவம் வேறு தாம் வேறு என்று எண்ணாமல் சிவத்தடன் அத்துவிதமாய் (பிரிப்பின்றி) நில்லுங்கள். அங்ஙனம் கூடிச் சுட்டியறிதல் இன்றி அதுவேயாக இருந்து ஹம்சம் ஆகலாம். ஹம்சம் - நான் அவன். சிவனோடு அத்துவித பாவனையில் இருந்தாம் ஹம்சம் ஆகலாம்.

2354. ஊனோ உயிரோ உறுகின்றது ஏதுஇன்பம்
வானோர் தலைவி மயக்கத்து உறநிற்கத்
தானோ பெரிதுஅறி வோம்என்னும் மானுடர்
தானே பிறப்போடு இறப்பறி யாரே.

பொருள் : சிவானந்தத்தைப் பெறுவது உடலா உயிரா இவற்றுள் எது? ஆகாய ரூபிணியாகிய சத்தியோடு பொருந்தி இவை ஒன்றும் அறியாது இருப்ப, தாம் மிகவும் அறிகின்றோம் என்று கூறும் மக்கள் மேலும் மேலும் வரும் பிறப்பு இறப்பில் பொருந்தி அவை நீக்க அறியமாட்டார்.

14. அறிவுதயம் (அஃதாவது ஆன்மாவுக்குச் சுட்டறிவு இன்றி எல்லாவற்றையும் அறியும் அறிவு உள்ளது என்று அறிவது.)

2355. தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே.

பொருள் : ஆன்மாவாகிய தன்னை அறிவுரு என்று அறிந்தால் கருவி கரணங்களோடு பொருந்தி மயங்க வேண்டிய கேடு வராது, தான் அறிவுரு என்பதை அறியாமல் ஆன்மா தனது அஞ்ஞானத்தால் கருவி கரணங்களோடு பொருந்திய பிறவியில் பட்டு உழல்கிறது. கருவி கரணமின்றித் தானே எல்லாவற்றையும் அறியவல்ல ஒளிவடிவு என்ற அறிவை ஞான சாதனத்தால் அறிந்தபின் தன்னை உலகோர் வணங்கும்படியான சிவ சொரூபமாகத்தான் இருந்தான்.

2356. அங்கே அடற்பெரும் தேவரெல் லாம்தொழச்
சிங்கா தனத்தே சிவன்இருந் தானென்று
சங்குஆர் வளையும் சிலம்பும் சரேலெனப்
பொங்குஆர் குழலியம் போற்றிஎன் றானே.

பொருள் : முன் மந்திரத்துக் கூறியவாறு அறிவுபெற்ற ஆன்மா அவ்விடத்து வலிமையும் பெருமையும் மிக்க பிரமன் அரி முதலான தேவர்கள் எல்லாம் வணங்க அரியாசனத்தில் சிவ பெருமானே வீற்றிருக்கிறான் என்று மதித்து சங்கினாலாகிய வளையலும் கால் சிலம்பும் ஓசையை எழுப்ப மிகுந்த கூந்தலையுடைய பராசத்தியும் போற்றி என்று கூறினாள்.

2357. அறிவு வடிவென்று அறியாத என்னை
அறிவு வடிவென்று அருள்செய்தான் நந்தி
அறிவ வடிவென்று அருளால் உணர்ந்தே
அறிவு வடிவென்று அறிந்திருந் தேனே.

பொருள் : எவற்றையும் கருவி யில்லாது அறியும் ஆற்றல் உண்டு என்பதை அறியாதிருந்த என்னை, என்னுடைய இயல்பான சொரூபம் அறிவு தவிர வேறில்லை என்ற அவன் கருணையால் உணர்த்தினான். நான் அறிவு சொரூபன் என்று அவனது சத்தியால் உணர்த்தப்பட்டு உணர்ந்தபோது நான் அறிவு வடிவென்று அறிந்து கருவி கரணங்களை விட்டு அறிவாகவே இருந்தேன்.

2358. அறிவுக்கு அழிவில்லை ஆக்கமும் இல்லை
அறிவுக்கு அறிவல்லது ஆதாரம் இல்லை
அறிவே அறிவை அறிகின்ற என்றிட்டு
அறைகின் றனமறை ஈறுகள் தாமே.

பொருள் : ஆகாய மண்டலத்தில் மிகச் சூக்குமமாக உள்ளமையின் அறிவு எவ்விதமான தூல மாறுதலாலும் பாதிக்கப்படுவது இல்லை. அதனால் அதற்கு விருத்தியும் இல்லை.

ஆன்மாவாகிய அறிவுப் பொருளுக்குப் பேரறிவான சிவத்தையன்றி வேறு ஆதாரம் இல்லை. ஆதலால் அறிவுருவான ஆன்மா பேரறிவான சிவத்தை அறிய முற்படுகிறது என்று வேத முடிவான உபநிடதங்கள் கூறுகின்றன. ஆன்மா நித்தியப் பொருளாதலின் அதற்கு அழிவும் ஆக்கமும் இல்லை. பரனும் பரையும் அதற்கு ஆதாரம்.

2359. ஆயு மலரின் அணிமலர் தன்மேலே
பாய இதழ்கள் பதினாறும் அங்குள
தூய அறிவு சிவானந்த மாகியே
போய அறிவாய்ப் புணர்ந்திருந் தானே.

பொருள் : ஆராயப் பெற்ற ஆதார கமலங்களில் சிறந்த அனாகத சக்கரத்தின் மேல், பரவிய விசுத்திச் சக்கரத்தில் பதினாறு இதழ்கள் கண்டத்தில் உள்ளன. தூய்மையான ஆன்ம அறிவு சிவானந்தம் பொருந்தி, விசுத்திச் சக்கரத்தைக் கடந்து பேரறிவாய் அதனோடு கலந்து விளங்கும் ஆன்மா சிவத்தை அறியும் முறை கூறியவாறு.

2360. மன்னிநின் றாரிடை வந்தருள் மாயத்து
முன்னிநின் றாமை மொழிந்தேன் முதல்வனும்
பொன்னின்வந் தானோர் புகழ்திரு மேனியைப்
பின்னிநின் றேன்நீ பெரியையென் றானே.

பொருள் : சிவ சிந்தனையில் இடைவிடாது நிற்பவரிடத்து வந்து சுத்தமாயா காரியமான நாத தத்துவத்தில் வெளிப்படுபவனை நினைந்தேன். அம்முதல்வனும் பொன்ஒளியில் திகழ்ந்து விளங்கினான். ஒப்பற்ற புகழினையுடைய பொன்னார் மேனியனைப் பிணைந்து நின்றேன். அவனும், நீ பெரியவன் என்று அருள் கூர்ந்தான்.

2361. அறிவுஅறி வாக அறிந்துஅன்பு செய்மின்
அறிவுஅறி வாக அறியும்இவ் வண்ணம்
அறிவுஅறி வாக அணிமாதி சித்தி
அறிவுஅறி வாக அறிந்தனன் நந்தியே.

பொருள் : ஆன்ம அறிவு பேரறிவின் வழியாயது என்று உணர்ந்து அதனிடம் அன்பு செலுத்துங்கள். அப்போது அகண்டாகாரம் வேரறிவுப் பொருளாய சிவமும் உங்கள் அறிவில் பொருந்துவான். உங்கள் அறிவு அவன் அறிவாக அமையின் அணிமாதி சித்திகள் தாமே பொருந்தும். அப்போது சிவன் உங்களது அறிவைத் தன்னறிவாகத் திருவுள்ளத்தில் கொண்டனன் என்பது விளங்கும்.

2362. அறிவுஅறி வென்றுஅங்கு அரற்றும் உலகம்
அறிவுஅறி யாமை யாரும் அறியார்
அறிவுஅறி யாமை கடந்துஅறி வானால்
அறிவஅறி யாமை அழகிய வாறே.

பொருள் : உலகோர் திருவருள் நாட்டமின்றி அறிவு அறிவென்று அரற்றுவர். எது அறிவு எது அறியாமை என மெய்ம்மையைப் பகுத்து உணரார். திருவருளால் உணரும் உயிர் அறிவு அறியாமை என்னும் இரண்டினையும் அருளால் கடந்து முற்றறிவு பெற்றுச் சிவமாம் பெருவாழ்வு எய்தும். அங்ஙனம் எய்தினால் அவ் அறிவு அறியாமை கடந்து சிவமாம் பெருவாழ்வு எய்திய அமைதற்கரிய திருவாம் பேரழகு புலனாம் என்க.

2363. அறிவுஅறி யாமையை நீவி யவனே
பொறிவாய் ஒழிந்துஎங்கும் தானான போது
அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவின்
செறிவாகி நின்றவன் சிவனும் ஆமே.

பொருள் : அறிவையும் அறியாமையையும் நீங்கியவனே ஞானேந்திரியங்களைக் கடந்து அகண்டத்தில் ஒன்றானேபோது அவ்வறிவாய் அவ் அறிவினுள் அடங்கியவனாய் சிவஅறிவில் தான் நீக்கமற நிறைந்துள்ளவன் சிவனேயாவன். அறிவு அறியாமை நீங்கியவனே பேரறிவில் நீக்கமற நிறைந்து நிற்பன்.

2364. அறிவுடை யார்நெஞ்சு அகலிடம் ஆவது
அறிவுடை யார்நெஞ்சு அருந்தவம் ஆவது
அறிவுடை யார்நெஞ்சொடு ஆதிப் பிரானும்
அறிவுடை யார்நெஞ்சத்து அங்குநின் றானே.

பொருள் : திருவருளால் நல்லறிவுடையார் நெஞ்சம் அருள் வெளியாகும். அந்த நெஞ்சமே சிவ புண்ணிய அருந்தவ நிலைக் களமாகும். அவ் அறிவுடையார் நெஞ்சத்து மும்மையுலகத்துக்கும் அம்மையாகிய திருவருள் எனப்படும் ஆதி எழுந்தருள்வாள். பகவனாகிய சிவபெருமானும் அந்நல்லார் நெஞ்சத்தின்கண் தங்கியருள் கின்றனன். மும்மை உலகம் - அவன், அவள், அது என்னும் உலகம்.

2365. மாயனும் ஆகி மலரோன் இறையுமாய்க்
காயநன் னாட்டுக் கருமுதல் ஆனவன்
சேயன் அணியன் தித்திக்கும் தீங்கரும்
பாய்அமு தாகிநின்று அண்ணிக்கின் றானே.

பொருள் : திருமால், பிரமன், உருத்திரன் என மூன்று உருவாய் உடல் உற்பத்திக்குக் காரணமான சிவபெருமான், தூரத்தில் உள்ளவனாகவும் சமீபத்தில் உள்ளவனாகவும் சுவையுள்ள கரும்பானவனாகவும் அமுதமாகவும் ஆகி நின்று இனத்துக் கொண்டிருக்கின்றான். மும்மூர்த்திகளாக உள்ள இறைவன் ஞானிகளுக்குக் கரும்பாய் அமுதமாய் இருந்து இன்பம் நல்குகின்றான்.

இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் - Page 3 Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Tue Mar 27, 2012 1:52 pm

2366. என்னை அறிந்திலேன் இத்தனை காலமும்
என்னை அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்
என்னை அறிந்திட்டு இருத்தலும் கைவிடாது
என்னையிட்டு என்னை உசாவுகின் றானே.

பொருள் : நான் பாச நிலையில் பந்தித்து இருந்தபோது என்னுடைய உண்மைச் சொரூபம் ஒளி (அறிவு) என்பதை அறியாதிருந்தேன். நான் ஒளி (அறிவு) வடிவினன் என்று அறிந்தபின் என்னை முன் பந்தித்திருந்த தத்தவங்களை (இருளை) நான் அறியவில்லை. அவ்விதம் நான் எனது உண்மைச் சொரூபத்தை அறிந்திருத்தலும் என்னுடைய முதல்வன் என்னுடன் இருந்தே எனது நிலையைக் கேட்டுக் கொண்டு இருக்கிறான்.

2367. மாய விளக்கது நின்று மறைந்திடும்
தூய விளக்கது நின்று சுடர்விடும்
காய விளக்கது நின்று கனன்றிடும்
சேய விளக்கினைத் தேடுகின் றேனை.

பொருள் : பெத்த நிலையில் உள்ளோர்க்கு ஆத்ம சொரூபம் தேகத்தோடு பொருந்தி யிருந்தும் விளங்காதவாறு மறைந்திருக்கும். ஞான நிலையில் உள்ளோர்க்கு ஆத்ம சொரூபம் விளங்கி ஒளிபெற்று நிற்கும். அது தேகத்தில் இருந்து சூட்டினை நல்கிக் கொண்டிருக்கும். அத்தகைய செம்மையான சோதி யாகிய விளக்கினைத் தேடுகின்றேன்.

2368. தேடுகின் றேன்திசை எட்டோடு இரண்டையும்
நாடுகின் றேன்நல மேஉடை யானடி
பாடுகின் றேன்பர மேதுணை யாமெனக்
கூடுகின் றேன்குறை யாமனத் தாலே.

பொருள் : பத்துத் திசையின்கண்ணும் பரம்பொருளைப் பரிந்து தேடுகின்றேன். பொலம் ஒரு சிறிதும் இல்லா நலமே நிறைந்த சிவபெருமானைக் குறித்து அவன் திருவடியை நாடுகின்றேன். சிவபெருமானே நமக்கு வழித்துணையும விழத்துணையும் என்று பழுதில் செந்தமிழால் பாடிப் பரவுகின்றேன். அச் சிவபெருமானே பரம்பொருள்; அவனே ஆருயிர்த் துணை என்னும் உண்மை கண்டு அவன் திருவடியிற் கூடுகின்றேன். அதுவே நிறைமன வழிபடாகும். அத் திருக்குறிப்புக் குறையா மனம் என்பதனால் பெறப்படும். (திசை - புலம். பொலம் - தீமை.)

2369. முன்னை முதல்விளை யாட்டத்து முன்வந்தோர்
பின்னைப் பெருமலம் வந்தவர் பேர்த்திட்டுத்
தன்னைத் தெரிந்துதன் பண்டைத் தலைவன்தன்
மன்னிச் சிவமாக வாரா பிறப்பே.

பொருள் : முன்னை என்று ஓதப்படும் அனாதியின்கண் முதல் விளையாட்டாகிய பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் நுண்ணுடம்புக் பிறப்பில் பிறந்தோர், பின்பு ஐம்மலமும் அகலும் நிலையில் செவ்வி வாய்ந்தோர் ஆவர். அவர் திருவருளால் தம்மைத் தெரிவர். தெரிந்து தமக்குரிய பண்டைத் தலைவனாம் சிவபெருமானின் தாளிணையைச் சார்ந்த ஆளினராவர். இவர்கள் என்றும் பொன்றாது நின்று சிவமாக மன்னி வாழ்வர். அதனால் மீண்டும் பிறப்பினுக்கு வாராவர். (விளையாட்டத்து - பிறப்பினுள். மலம் வந்தவர் - மலபரி பாகம் வந்தவர்.)

15. ஆறு அந்தம்

(ஆறு அந்தம் - ஆறு முடிவுகள். அவை கலாந்தம், நாதாந்தம், யோகாந்தம், போதாந்தம், வேதாந்தம், சித்தாந்தம் என்பன.)

2370. வேதத்தின் அந்தமும் மிக்கசித் தாந்தமும்
நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும்
ஓதத்தகும்எட்டு யோகாந்த அந்தமும்
ஆதிக்க லாந்தமும் ஆறந்தம் ஆமே.

பொருள் : வேதத்தின் அந்தமாகிய உபநிடதங்களின் கூற்றும், மேன்மையான சித்தாந்தமாகிய சிவாகம முடிவும், நாத தத்துவத்தின் முடிவும், சத்விசாரணையால் அமைந்த முடிவும், சொல்லத் தக்க அட்டாங்க யோக நெறியின் முடிவும், முதலாவதான பஞ்ச கலைகளின் முடிவும் ஆகிய இவையே ஆறு முடிவுகளாகும். நெறிகள் வேறு ஆயினும் அடையும் பொருள் ஒன்றேயாம்.

2371. அந்தம்ஓர் ஆறும் அறிவார் அதிசுத்தர்
அந்தம்ஓர் ஆறும அறிவார் அமலத்தர்
அந்தம்ஓர் ஆறும் அறியார் அவர்தமக்கு
அந்தமோடு ஆதி அறியஒண் ணாதே.

பொருள் : மேல் ஓதிய ஆறு அங்கங்களும் திருவருளால் அறிபவர் எல்லையில்லாத தூயராவர். அதுபோல் ஆறு அந்தமும் அறிவார் மல மற்றவர் ஆவர். இவற்றின் உண்மைகளைச் சிவகுரு வாயிலாக அறியாதவர் இறப்புப் பிறப்பினையும் உலக ஒடுக்கத் தோற்றங்களையும் ஒரு சிறிதும் உணராதவர் ஆவார்.

2372. தானான வேதாந்தம் தான்என்னும் சித்தாந்தம்
ஆனாத் துரியத்து அணுவன் தனைக்கண்டு
தேனார் பராபரம் சேர்சிவ யோகமாய்
ஆனா மலமற்று அரும்சித்தி யாதலே.

பொருள் : நான் பிரமம் என்னும் வேதாந்தமும் சிவன் நான் என்னும் சித்தாந்தமும், நீங்காத துரிய நிலையில் ஆன்மா தனது எதார்த்த சொரூபமான ஒளியைக் கண்டு இனிய மேலான பரம அபரமாக விளங்கும் சிவத்தோடு கூடுவதாய், ஆன்மா தன்னுடைய மலங்களை அகற்றி அட்டமாசித்தி அடைதலே பயனாகும். ஆன்மா துரியத்தில் பராபரத்தோடு பொருந்தி மல நீக்கம் பெற்றிருக்கும் என்பது வேதாந்த சித்தாந்த முடிவாம்.

2373. நித்தம் பரனோடு உயிருற்று நீள்மனம்
சத்தம் முதல்ஐந்தும் தத்துவத் தால்நீங்கிச்
சுத்தம் அசுத்தம் தொடரா வகைநினைந்து
அத்தன் பரன்பால் அடைதல்சித் தாந்தமே.

பொருள் : உயிர் இடைவிடாது சிவனோடு பொருந்தி நின்று நீண்டு செல்லும் மனமும் சத்தம், பரிசம், ரூபம், இரசம், கந்தம் ஆகிய புலன்களின் உண்மையை அறிந்துவிட்டு, சுத்தமாயை அசுத்தமாயைகள் பற்றாவகை எண்ணி, தலைவனாகிய முழுமுதற் பொருளை அடைதல் சித்தாந்த நெறியாகும்.

2374. மேவும் பிரமனே விண்டு உருத்திரன்
மேவுசெய் ஈசன் சதாசிவன் மிக்குஅப்பால்
மேவும் பரவிந்து நாதம் விடாஆறாறு
ஓவும் பொழுதுஅணு ஒன்றுஉள தாயே.

பொருள் : பொருந்திய அயன், அரி, அரன், ஆண்டான், அருளோன் அதற்கப்பால் பொருந்திய பரவிந்து, பரநாதமும் விட்டு, முப்பத்தாறு மெய்களும், கருத்தின்கண் நீங்கியபொழுது நிலைத்த ஆருயிரின் உண்மை நன்கு புலனாகும். விடா - விட்டு . ஓவும் - நீங்கும். நாதாந்தம் சென்றவர்க்குப் பிறவி இல்லை.

2375. உள்ள உயிர்ஆறாற தாகும் உபாதியைத் தெள்ளி
அகன்றுநா தாந்தத்தைச் செற்றுமேல்
உள்ள இருள்நீங்க ஓர்உணர் வாகுமேல்
எள்ளலின் நாதாந்தத்து எய்திடும் போதமே.

பொருள் : மெய்களின் ஆய்வு முறைமையினால் உண்மை கண்டுள்ள ஆருயிர் முப்பத்தாறு மெய்களின் பிணிப்பினின்றும் விடுபடும். பிணிப்பு உபாதி. விடுபட்ட தெளிவினால் நாதாந்தத்தைக் கடக்கும். அக இருள் அகல அருள் உணர்வு தோன்றும். தோன்றவே குறைபாடில்லாத நாத முடிவில் எய்தும் நல்லறிவு கைவந்து பொருந்தும். (மெய்கள் - தத்துவங்கள். செற்று - கடந்து.)

2376. தேடும் இயம நியமாதி சென்றகன்று
ஊடும் சமாதியில் உற்றுப் படர்சிவன்
பாடுறச் சீவன் பரமாகப் பற்றறக்
கூடும் உபசாந்தம் யோகாந்தக் கொள்கையே.

பொருள் : ஞானியரால் உணர்த்தப்பெற்ற இயமம் நியமம் முதலிய எட்டு உறுப்புகளையும் கொண்ட அட்டாங்க யோக நெறி சென்று நீங்கி, சமாதியில் பொருந்தி, அங்கு விரிந்து விளங்கும் சிவத்துடன் பொருந்த, சீவன் தத்துவங்களை விட்டுப் பரமாகப் பற்றுக்களை நீங்கினபோது உபசாந்த நிலை பொருந்தும் என்பதே யோகத்தின் முடிவாகும். (பாடுற - அருகிற் சேர.)

2377. கொள்கையில் ஆன கலாந்தம் குறிக்கொள்ளில்
விள்கையில் ஆன நிவர்த்தாதி மேதாதிக்கு
உள்ளன வாம்விந்து உள்ளே ஒடுங்கலும்
தெள்ளி அதனைத் தெளிதலும் ஆமே.

பொருள் : குறிக்கொள்ளத் தக்கதான கலாந்தத்தைச் சொல்லுமிடத்து நீக்கல் முதலிய ஐந்து கலைகளும், கொழுப்பு முதலிய ஏழுவகைப் பொருட்களும் மாயையின்கண் ஒடுங்கும். அங்ஙனம் ஒடுங்கும் முறைமையை ஆய்தலும், ஆய்ந்து தெளிதலும் கலாந்தமாகும். கலைகள் ஐந்து நீக்கல், நிலைப்பித்தல், நுகர்வித்தல், அமைதியாக்கல், அப்பால் ஆக்கல் என்ப. பொருள்கள் ஏழு, சாரம், செந்நீர், ஊன், கொழுப்பு, எலும்பு, மூளை, வெண்ணீர் என்ப. (சப்த தாதுக்கள்.)

2378. தெளியும இவையன்றித் தேர்ஐங் கலைவேறு
ஒளியுள் அமைந்துள்ளது ஓரவல் லார்கட்கு
அளியவ னாகிய மந்திரம் தந்திரம்
தெளிஉப தேசஞா னத்தொடுஐந் தாமே.

பொருள் : மேல் ஓதியவாறு கலாந்தம் தெளிவது அல்லாமல் வேறும் ஒருவகையால் குறிப்பதும் உண்டு. அந்தம் நீக்கல் முதலிய கலைகள் ஐந்தினையும் சிறப்பாகிய திருவருள் ஒளியுள் அமைத்தல் வேண்டும். அங்ஙனம் அமைத்து ஓரவல்லார கட்குச் சிவபெருமான் அளவில் பேரருள் புரிகின்றனன். அவை: மந்திரம், தந்திரம், தெளிவு, உபதேசம், ஞானம் என ஐந்தாகும். இந்த ஐந்தினையும் அருளே, மறைமுறை, ஆசான் சொல், மெய்ம்மை, தரும உணர்வு இவ் ஐங்கலை அந்தம் என்ப.

2379. ஆகும் அனாதி கலைஆ கமவேதம்
ஆகும்அத் தந்திரம் அந்நூல் வழிநிற்றல்
ஆகும் அனாதி உடல்அல்லா மந்திரம்
ஆகும் சிவபோ தகம்உப தேசமே.

பொருள் : கலை என்னும் திருவருள் ஆற்றல் தொன்மையதாகும். இக்கலையே முறையும் மறையும் எனப்படும் ஆகம வேதங்களாகும். அம்முறை மறைவழியின் நிறையின் நீங்காது ஒழுகுதல் தந்திரமாகும். மனம் முதலிய கருவிகள் நீங்கி உணர்விற் கணிக்கும் ஒண்மையவாம் சிவசிவ மந்திரமாகும். சிவபெருமானைத் தெளிவிக்கும் சிவ குருவின் திருவார்த்தை உபதேசமாகும். (உபதேசம் - குருமொழி. மனாதி உடல் அல்லா மந்திரம் - காரண பஞ்சாட்சரம்)

2380. தேசார் சிவமாகும் தன்ஞானத் தின்கலை
ஆசார நேய மறையும் கலாந்தத்துப்
பேசா உரையுணர் வற்ற பெருந்தகை
வாசா மகோசர மாநந்தி தானே.

பொருள் : ஞானக்கலை என்பது அளவில் பேரொளிப் பகவனாகிய சிவபெருமானாகும். ஆன்றோரைப் பின்தொடர்ந்து ஒழுகுவது ஆசாரம் என்ப. அவ் ஒழுக்கத்தில் தலை நிற்கும் பேரன்பு நேயம் என்ப. இவ்விரண்டும் சொல்லப்படும் கலாந்தமாகும். இவ்வழி ஒழுகி, வாய் வாளாமையாகிய உரை உணர்வற்ற பெருநிலை யுற்றோன் பெருந்தகையாவன். மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன் சிவபெருமான் ஆவன்.

2381. தான்அவ னாகும் சமாதி தலைப்படில்
ஆன கலாந்தநா தாந்தயோ காந்தமும்
ஏனைய போதாந்தம் சித்தாந்த மானது
ஞான மென்ஞேய ஞாதுரு வாகுமே.

பொருள் : ஆருயிர் பேருயிர்க்கண் ஒடுங்குதலே தான் அவனாகும் சமாதி நிலை என்ப. இந்நிலையினைத் தலைப்படுதலே கலாந்தம், நாதாந்தம், யோகாந்தம், போதாந்தம், சித்தாந்தம் என்ப. சிறந்த சித்தாந்தம் எனப்படுவது காட்சி, காணப்படும் பொருள் காண்போன் என்னும் முத்திற முடிவும் எத்திறமும் நீங்காது கொள்ளும் நிலைமைத்தாகும். ஞானம் - காட்சி. ஞேயம் காணப்படும் பொருள். ஞாதுரு - காண்போன்.

2382. ஆறந்த மும்சென்று அடங்கும்அந் நேயத்தே
ஆறந்த ஞேயம் அடங்கிடும் ஞாதுரு
கூறிய ஞானக் குறியுடன் வீடவே
தேறிய மோனம் சிவானந்த உண்மையே.

பொருள் : மேலே கூறப்பெற்ற ஆறு அந்தங்களும் அந்நேயப் பொருளில் சென்று அடங்கும். ஆறு அந்தங்களால் அடையப் பெறும் நேயப் பொருளாகிய சிவத்தில் ஞாதுருவாகிய சீவன் அடங்கும். குருகாட்டிய நெறியில் நின்று சிவமல்லாத ஏனைய தத்துவங்களை விட்டு நிற்க, தெளிந்த பிரணவ யோகத்தால் உண்மையான சிவானந்தம் உண்டாகும்.

2383. உண்மைக் கலைஆறுஓர் ஐந்தான் அடங்கிடும்
உண்மைக் கலாந்தம் இரண்டுஐந்தோடு ஏழ்அந்தம்
உண்மைக் கலைஒன்றில் ஈறாய நாதாந்தத்து
உண்மைக் கலைசொல்ல ஓர்அந்தம் ஆமே.

பொருள் : மெய்ம்மைக்கலை பதினொன்று ஆகும். கலாந்தம் பதினேழாகும். உண்மையான கலையின்கண் முற்றுற நிற்பது நாதாந்தமாகும். இத்திருவருட் கலைகளைச் சிவகுரு அருளிச் செய்ய ஒப்பில் ஒரு முடிபாகும்.

2384. ஆவுடை யானை அரன்வந்து கொண்டபின்
தேவுடை யான்எங்கள் சீர்நந்தி தாள்தந்து
வீவற வேதாந்த சித்தாந்த மேன்மையைக்
கூவி யருளிய கோனைச் கருதுமே.

பொருள் : ஆன்மாக்களை இயக்கும் சத்தியாகிய குண்டலினியை நாதத்தின் தலைவனான சிவன் ஏற்றுக் கொண்டபின், அநேக தேவர்களை நடத்தும் எங்கள் பெருமையுடைய சிவன் திருவடிகளை முடிமேல் சூட்டி, அழிதல் இல்லாத வேதாந்த சித்தாந்தங்களின் சிறப்பை நாதத்தால் உணர்த்தி யருளிய சிவகுரு நாதனைக் கருதியிருங்கள்.

2385. கருதும் அவர்தம் கருத்தினுக்கு ஒப்ப
அரனுரை செய்தருள் ஆகமந் தன்னில்
வருசமயப் புற மாயைமா மாயை
உருவிய வேதாந்த சித்தாந்த உண்மையே.

பொருள் : வழிபடுகின்றவர்களின் வழிபாட்டுக்கு ஏற்ப சிவபெருமான் அருளிச் செய்த ஆகமங்களில் உணர்த்தப் பெறுகின்ற உண்மைச் சமயத்துக்குப் புறம்பாயுள்ள மாயை மகாமாயை ஆகியவற்றைக் கடந்ததே வேதாந்த சித்தாந்தத்தால் உணர்த்தப் பெறும் உண்மையாகும். ஆன்மாக்களின் பக்குவத்துக்கு ஏற்பச் சமய முடிவுகள் அமையும்.

2386. வேதாந்தம் சித்தாந்தம் வேறிலா முத்திரை
போதாந்த ஞானம் யோகாந்தம் பொதுஞேய
நாதாந்தம் ஆனந்தம் சீரோ தயமாகும்
மூதாந்த முத்திரை மோனத்து மூழ்கவே.

பொருள் : வேதாந்தம் சித்தாந்தம் ஆகிய இருநெறிகளும் வேற்றுமையில்லாத ஒரு தன்மையான குறிப்பினை யுடையனவாம். ஆன்ம அறிவின் முடிவே ஞானமாகும். யோகாந்தம் பொதுவாக ஞேயப்பொருளைக் காட்டும். நாதாந்த ஆனந்தமாய் இன்பத்தோற்றம் அளிக்கும் ஒலி உண்டாகும். பழமையான முத்திரையாவது பிரணவ சமாதியில் பொருந்தி யிருக்கத் தருவதாகும்.

2387. வேதாந்தம் தன்னில் உபாதிமே லேழ்விட
நாதாந்த பாசம் விடுநல்ல தொம்பதம்
மீதாந்த காரணோ பாதியேழ் மெய்ப்பரன்
போதாந்த தற்பதம் போமசி என்பவே.

பொருள் : வேதாந்த நெறியில் சீவனுக்குரிய காரிய உபாதிகள் ஏழின் பிணிப்பு நீங்கவே, நாதாந்தத்தில் பசுத்தன்மை கெடுகின்ற (தொம்பதம் அமையும். மேலுள்ள காரண உபாதிகளாகிய ஏழையும் உடைய உண்மையான பரன் அறிவின் முடிவாகிய தற்பதம் ஆகும். பின்னர் இவ்விரண்டாகிய தன்மை நீங்கி ஒன்றாம் தன்மையான அசி பதம் பொருந்தும் தொம்பதம் - சீவன். தத்பதம் - சிவன். அசிபதம் - ஒன்றாக ஆகின்ற பதம். போமசி - போம் + அசி.)

2388. அண்டங்கள் ஏழும் கடந்துஅகன்று அப்பாலும்
உண்டென்ற பேரொளிக் குள்ளாம் உளஒளி
பண்டுறு நின்ற பராசத்தி என்னவே
கொண்டவன் அன்றிநின் றான்தங்கள் கோவே.

பொருள் : ஏழு அண்டங்களையும் கடந்து நீங்கி, அப்பால் விளங்கும் பேரொளிக்குள் உள்ள ஒளியினைப் பழமையாகவே பொருந்தி நின்ற பராசத்தி என்றே கொண்டவன் தனது சொரூப நிலையில் தனித்து நின்ற எங்கள் தலைவனாவான்.

2389. கோஉணர்த் தும்சத்தி யாலே குறிவைத்துத்
தேவுணர்த் துங்கரு மஞ்செய்தி செய்யவே
பாவனைத் தும்படைத் தர்ச்சனை பாரிப்ப
ஓஅனைத் துண்டுஒழி யாத ஒருவனே.

பொருள் : சிவத்தை உணர்த்தும் நாதசத்தியை இலட்சியமாகக் கொண்டு, தெய்வத்தால் அனுக்கிரகிக்கப்பட்ட கருமத்தையே தம் செயலாகச் செய்து, தோத்திரப் பாடல்களைக் கொண்டு அருச்சனை புரிய பிரணவத்தின் உறுப்புக்களாகிய அகார உகார மகார விந்து நாதங்களைக் கடந்து இவைகளை அடக்கிய சிவம் பொருந்தும்.

2390. ஒருவனை உன்னார் உயிர்தனை உன்னார்
இருவினை உன்னார் இருமாயை உன்னார்
ஒருவனு மேயள் உணர்த்திநின் றூட்டி
அருவனு மாகிய ஆதரத் தானே.

பொருள் : ஒருவனாக இருந்து உலகை நடத்தும் சிவனை அறிய மாட்டாதவர், உயிரைப்பற்றிய உண்மையை அறிய மாட்டார். அவரவர் அனுபவிக்கும் போக போக்கியங்களுக்கு அவரவர் முன்னர்ச் செய்த நல்வினை தீவினையே காரணம் என்பதை உணரமாட்டார். அசுத்த மாயை சுத்த மாயையாகிய இவற்றால் கட்டுண்டிருப்பதை நினைத்துப் பார்ப்பதில்லை. ஏகனாய் விளங்கும் சிவபெரு மானே இவை எல்லாவற்றையும் ஆன்மாவின் உள்ளே நின்று உணர்த்தி அவ்வினை கழியுமாறு அருத்தி அருவப் பொருளாய் நின்று எல்லாவற்றுக்கும் ஆதாரமாக உள்ளான்.

2391. அரன்அன்பர் தானம தாகிச் சிவத்து
வருமவை சத்திகள் முன்னா வகுத்திட்டு
உரனுறு சந்நிதி சேட்டிப்ப என்றும்
திரனுறு தோயாச் சிவாநந்தி யாமே.

பொருள் : சிவன் அன்பர்களை இடமாகக் கொண்டு எழுந்தருளி, அவர்கள் பக்குவம் அடைய பல சத்திகளை அவர்களது ஆன்மாவினிடம் பொருத்தி வலிமையுள்ள சிவசங்கற்பத்துக்கு ஏற்ப அவை தொழிற்பட ஆன்ம சங்கற்பம் உருவத்தைப் பற்றாதபோது அச்சத்திகளின் செயல் நீங்கச் சிவானந்தம் விளைப்பன்.

2392. வேதாந்த தொம்பதம் மேவும் பசுஎன்ப
நாதாந்த பாசம் விடநின்ற நன்பதி
போதாந்த தற்பதம் போய்இரண்டு ஐக்கியம்
சாதா ரணம்சிவ சாயுச்சிய மாமே.

பொருள் : வேதாந்தத்தில் சொல்லப் பெறும் தொம்பரமானது. பசு என்னும் ஆன்மாவைக் குறிப்பதாகும் என்பர். நாதாந்தத்தில் பசுத் தன்மை இயல்பாகவே நீங்கி நின்ற நல்ல பதியே அறிவின் முடிவாகிய தத் என்னும் பதமாம். சீவனும் சிவமும் ஆகிய இரண்டும் இரண்டறக் கலத்தல் இயல்பாகச் சிவகாயுச்சியம் என்னும் அசிபதமாகும். வேதாந்தத்தில் சீவனும் சிவனும் ஒன்றாதலே சிவ சாயுச்சியமாகும்.

2393. சிவமாதல் வேதாந்த சித்தாந்த மாகும்
அவம்அவம் ஆகும் அவ்வவ் இரண்டும்
சிவமாம் சதாசிவன் செய்துஒன்றான் ஆனால்
நவமான வேதாந்தம் ஞானசித் தாந்தமே.

பொருள் : வேதாந்தம் சித்தாந்தமாகிய இரண்டு நெறிகளும் சீவன் சிவமாதலைப் பற்றிக் கூறுவனவேயாகும். நன்மையில்லாத பிரமன், திருமால், உருத்திரன், மகேசன் ஆகிய நால்வரும் சிவமாகும் தன்மையுடைய சதாசிவமூர்த்தியின் ஆணைவழி செய்த படைத்தலாதி தொழில்கள் முடிவுற்ற ஒன்றாகுமானால் வியக்கத்தக்க வேதாந்தம் ஞானம் தரும் சித்தாந்தமாகும்.

(அவ்வவ் இரண்டும் - வேதாந்தம் சித்தாந்தம் ஒழிந்த ஏனைய அந்தங்களும் எனப்பொருள் கொள்ளுதலும் உண்டு. அந்த நான்காவன: நாதாந்தம், போதாந்தம், யோகாந்தம் கலாந்தம் என்பன.)

2394. சித்தாந்த தேசீவன் முத்திசித் தித்தலால்
சித்தாந்தத் தேநிற்போர் முத்திசித் தித்தவர்
சித்தாந்த வேதாந்தம் செம்பொருள் ஆதலால்
சிந்தாந்த வேதாந்தம் காட்டும் சிவனையே.

பொருள் : சித்தாந்த சைவத்தில் சீவன் முத்திநிலை கைகூடுதலால் சித்தாந்த சைவநெறியில் நிலைத்து நிற்பவர்கள் முத்தி நிலையாகிய சிவப்பேற்றைப் பெற்றவராவர். சித்தாந்தம் வேதாந்தம் ஆகிய இரண்டு நெறிகளும் செம்பொருளான சிவத்தைக் குறித்தனவேயாதலின் சித்தாந்தமும் வேதாந்தமும் சிவத்தையே காட்டும். இவையிரண்டும் செம்பொருளைக் காணத் துணை புரியும்.

2395. சிவனைப் பரமனுள் சீவனுள் காட்டும்
அவமற்ற வேதாந்த சித்தாந்தம் ஆனால்
நவமுற்று அவத்தையில் ஞானம் சிவமாம்
தவமிக்கு உணர்ந்தவர் தத்துவத் தாரே.

பொருள் : சிவத்தைப் பரமாகவுள்ள சீவனில் உள்ளாகவும் வெளியாகவும் விளக்கும். குற்றமற்ற வேதாந்த நெறியும் - சிந்தாந்த நெறியும் ஒன்றானால் தோழமை கொண்ட துரியாதீதத்தில் விளங்கும் ஞானம் சிவமாகும். இத்தகைய சிவஞானத்தை உணர்ந்து கடைப்பிடிப்பவர். சிறந்த தத்துவ தரிசினிகளாவர்.

2396. தத்துவம் ஆகும் சகள அகளங்கள்
தத்துவ மாம்விந்து நாதம் சதாசிவம்
தத்துவ மாகும் சீவன்தன் தற்பரம்
தத்துவ மாம்சிவ சாயுச் சியமே.

பொருள் : ஆன்மா வியாபித்துள்ள முப்பத்தாறு தத்துவங்களும் உருவமுடையனவாயும் உருவம் இல்லாதனவாயும் உள்ளன. இவைகளில் விந்து நாதமாகிய தத்துவங்களில் விளங்குபவர் சதாசிவராவார். சீவனின் நாதாந்த நிலையில் உள்ளது தற்பரம் என்ற மெய்ப் பொருளாகும். இந்நிலையை அடைதலே சிவ சாயுச்சியமாகும். சகளம் உருவம்; அகளம் - அருவம். உருவமும் அருவமுமாய் உள்ளவர் சதாசிவம். இவரே நாதவிந்துவில் விளங்குபவர். (தற்பரம் - சிவம்)

2397. வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன்நூல்
ஓதும் பொதுவும் சிறப்பும்என்று உள்ளன
நாதன் உரையவை நாடில் இரண்டந்தம்
பேதமது என்பர் பெரியோர்க்கு அபேதமே.

பொருள் : வேதங்களும் ஆகமங்களும் இறைவனாய் அருளிச் செய்யப் பெற்றவை. அவை உண்மையை உரைக்கும் நூல்கள் வேதம் பொதுவாகவும், ஆகமம் சிறப்பாகவும் உள்ளன. சிவபெருமானால் உணர்த்தப் பெற்ற அவைகளின் முடிவுகள் வேறுவேறானவை என்று சிலர் கூறுவர். தத்துவ தரிசனம் கண்ட பெரியோர்க்கு இவைகளின் வேறுபாடின்மை விளங்கும்.

2398. பராநந்தி மன்னும் சிவானந்தம் எல்லாம்
பரானந்தம் மேல்மூன்றும் பாழுறா ஆனந்தம்
விராமுத்தி ரானந்தம் மெய்நடன ஆனந்தம்
பொராநின்ற உள்ளமே பூரிப்பி யாமே.

பொருள் : பரமாகிய சீவன் பெறும் சிவஆனந்தம் முழுவதும் பரானந்தமாகும். மேல் மூன்றாகவுள்ள பாழாகிய மாயையில் பொருந்தாத ஆனந்தமும் சாம்பவி கேசரிமுதலிய முத்திரைகளால் அடைகின்ற ஆனந்தமும் சிவ நடனத்தை இடைநாடியில் கண்டு களிப்பதால் வரும் ஆனந்தம் ஆகியவற்றை அடைந்த உள்ளம் பொலிவினையுடைய தாகும்.

2399. ஆகுங் கலாந்தம் இரண்டந்த நாதாந்தம்
ஆகும் பொழுதிற் கலைஐந்தாம் ஆதலில்
ஆகும் அரனேபஞ் சாந்தகன் ஆம் என்ற
ஆகும் மறைஆ கமம்மொழிந் தான்அன்றே.

பொருள் : கலாந்தம் இரண்டாகும் அவ்விரண்டும் நாதாந்தம் கலையந்தம் என்ப கலையந்தம் நீக்கலாகிய நிவர்த்தி முதல் ஐந்தாகும். இவ் ஐந்திற்கும் அரனே முழுமுதலாவான். அதனால் அரனே பஞ்சாந்தகனாம் என்ன அருளினர். இங்ஙனம் மறை யாகமம் முறையுற மொழிந்தனன் என்க. (பஞ்சாந்தகன் - தனித்தனியே ஐந்து கலைகளின் முடிவிடத்து இருப்பவன்.)

2400. அன்றாகும் என்னாதுஐ வகைஅந்தம் அன்னை
ஒன்றான வேதாந்த சித்தாந்தம் உள்ளிட்டு
நின்றால் யோகாந்தம் நேர்படும் நேர்பட்டால்
மன்றாடி பாதம் மருவலும் ஆமே.

பொருள் : ஐவகையான முடியாம் அந்தங்களும் மாறுபட்டதன்று. இவ்வுண்மையை வேதாந்த சித்தாந்தம் ஒன்றென விளங்கக் கூறும். அத்தகைய வேதாந்த சித்தாந்தத்தை முன்னிட்டு ஒழுகினால் யோகாந்தம் நேர்படும். அச்செறிவு நிலை ஏற்பட்டால் மன்றாடிபாதம் மருவலுமாம். மன்றம் ஐவகை யாகும். (ஆலங்காடு இரத்தினசபை, சிதம்பரம் - பொற்சபை; மதுரை - வெள்ளிசபை; திருநெல்வேலி - செம்புசபை; குற்றாலம் - சித்திரசபை என்பனவாம்.)

2401. அனாதி சீவன்ஐம் மலமற்றுஅப் பாலாய்
அனாதி அடக்கித் தனைக்கண்டு அரனாய்த்
தன்ஆதி மலம்கெடத் தத்துவா தீதம்
வினாவுநீர் பாலாதல் வேதாந்த உண்மையே.

பொருள் : மன்றாடி பாதம் பொருந்தும் பழமையான சீவன் ஐம்மலங்களும் கெட்டு அனாதியாகவுள்ள ஆன்மாவின் சுட்டறிவை அழித்துத் தன் உண்மையான பரநிலையைக் கண்டு சிவசொரூபமாய் தன் ஆதிமலமாகிய ஆணவம் நீங்கச் சகல தத்துவங்களையும் கடந்த நிலையில் நீர் பாலுடன் சேர்ந்து பாலாகவே இருத்தல் போலச் சீவன் சிவமாதல் வேதாந்தம் உணர்த்தும் உண்மையாகும்.

2402. உயிரைப் பரனை உயர்சிவன் தன்னை
அயர்வற்று அறிதொந் தத்தசி அதனால்
செயலற்று அறிவாகி யும்சென்று அடங்கி
அயர்வற்ற வேதாந்த சித்தாந்தம் ஆமே.

பொருள் : ஆருயிரைப் பரனாகி திருவருளை எவர்க்கும் மேலாம் பரசிவனை மருளற்று தெருளுற்றுத் திருவருளால் செறிந்து காண்பாயாக நீ அதுவாகின்றாய் என்று கூறும் தொந்தத்தசிப் பெருங்கிளவியால் உன் செயலற்று அறிவாகியிருப்பாயாக. அறிவாகியும் திருவடிக்கீழ் அடங்கி நிற்பாயாக. இந்நிலையே மருளற்ற வேதாந் சிந்தாந்த அருள் மாண்பாகும். இவ்வுண்மை செந்தமிழ் மறை முடியாம் திருவாசகச் செழுந்தேனால் உணராலாம். (தொந்தத்தசி - துவம் + தத் + அசி = நீ சிவமாய் இருக்கிறாய்.)

2403. மன்னிய சோகமாம் மாமறை யாளர்தம்
சென்னிய தான சிவயோகமாம் ஈதென்ன
அன்னது சித்தாந்த மாமறை யாய்பொருள்
துன்னிய ஆகம நூலெனத் தோன்றுமே.

பொருள் : நிலைபெற்ற அது நான் என்னும் ஆழ்ந்த நினைவினால் அவனே தானாகி நிற்கும் நிலை சோகம் எனக் கூறப்படும் ஆழ்ந்த நினைவு - பாவனை. இக்குறிக்கோள் மாமறை யாளர்க்கு ஏற்படுவதாகும். அம்மறையாளர் முடி மணியாத் திகழும் அருண்மறை சிவோகம் எனப்படும். சிவோகம், சிவனுடன் கூடுதல். சிவோகம் இஃது என்று கூறத்தகும். இத்தகைய அரும் பொருள் சித்தாந்த மாமறையால் ஆராயப்படும் பொருளாகும். இப்பொருளை ஆராயும் எழில் நூல் ஆகமம் எனப்படும் சோகம் = ச+அகம், அது நான், சிவோகம் - சீவத்துடன் கூடுதல்.

2404. முதலாகும் வேத முழுதுஆ கமம்அகப்
பதியான ஈசன் பகர்ந்தது இரண்டு
முதிதான வேதம் முறைமுறை யால்அமர்ந்து
அதிகாதி வேதாந்த சித்தாந்தம் ஆமே.

பொருள் : முதல் நூலாகிய வேதமும் முழுமுதல் நூலாகிய ஆகமமும் நல்லடியார் வாயிலாக முதல்வனாம் சிவபெருமானால் அருளிச் செய்யப்பட்டனவாகும். இவ்விரண்டனுள் முதன்மையான வேதமும் முறைமுறையால் அமர்ந்த வேதாந்தமாகும். ஆகமம் நனிமிகச் சிறந்த சித்தாந்தமாகும்.

16. பதி பசு பாசம் வேறின்மை (அஃதாவது இறை உயிர் தளை ஆகியவற்றின் தொடர்பு)

2405. அறிவுஅறிவு என்ற அறிவும் அனாதி
அறிவுக்கு அறிவாம் பதியும் அனாதி
அறிவினைக் கட்டிய பாசம் அனாதி
அறிவு பதியில் பிறப்பறுந் தானே.

பொருள் : அறிவு அறிவு என்று சொல்லப்படும் ஆன்மா மிகத் தொன்மையானது ஆன்மாவுக்குத் தலைவனான சிவமும் ஆன்மாவைப் போன்று மிகத் தொன்மையானது ஆன்மாவைப் பிணித்துள்ள பாசம் தொன்மையானதே. பேரறிவுப் பொருளான சிவம் ஆன்மாவிடம் விளங்குமாயின் பாசம் நீங்கிப் பிறப்பு இல்லையாகும். பதி பசு பாசம் மூன்றும் தொன்மையானவை.

2406. பசுப்பல கோடி பிரமன் முதலாய்ப்
பசுக்களைக் கட்டிய பாசம்மூன் றுண்டு
பசுத்தன்மை நீக்கிஅப் பாசம் அறுத்தலால்
பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே.

பொருள் : பிரமன் அரி உருத்திரன் மகேசன் சதாசிவர் முதலிய பெருந் தேவர்களை உள்ளிட்டுப் பசுக்கள் பல கோடியாகும். பசுக்களைப் பிணித்துள்ள ஆணவம் கன்மம் மாயை யாகிய மலங்கள் மூன்றாகும். ஆன்மா போதத்தை நீக்கி மலங்களை அகற்றினால் பசுக்கள் பதியினைப் பற்றி விடாது நிற்கும்.

2407. கிடக்கின்ற வாறே கிளர்பயன் மூன்று
நடக்கின்ற ஞானத்தை நாடோறும் நோக்கித்
தொடக்குஒன்றும் இன்றித் தொழுமின் தொழுதால்
குடக்குன்றில் இட்ட விளக்கது வாமே.

பொருள் : பாசத்தில் கட்டுண்டு கிடக்கின்ற உயிர்கள் காமியத்தோடு செய்த சரியை கிரியை யோகத்தால் அடைகின்ற சாலோக சாமீப சாரூபம் ஆகிய பயன்கள் மூன்றாகும். அவற்றின் முடிவாய் விளையும் ஞானத்தைப் பெற நாள்தோறும் தியானம் செய்து தொடர்பு சிறிதும் பற்றாமல் நிஷ்காமியமாய் வணங்குங்கள். அவ்வாறு வணங்கினால் குடத்தின் உள்ளே வைத்திருந்த விளக்கை எடுத்து குன்றின்மேல் வைத்ததுபோலப் பிரகாசம் பெறுவீர்கள்.

2408. பாசம்செய் தானைப் படர்சடை நந்தியை
நேசம்செய்து ஆங்கே நினைப்பர் நினைத்தாலும்
கூசம்செய்து உன்னிக் குறிக்கொள்வது எவ்வண்ணம்
வாசம்செய் பாசத்துள் வைக்கின்ற வாறே.

பொருள் : ஆன்மாக்களின் ஆணவ மல வலிமை கெடக் கன்மத்தையும் மாயையையும் பொருத்தினவனும் விரிந்த கிரணங்களையுடைய நந்தியும் ஆகிய சிவபெருமானைப் பற்றுள்ளம் கொண்டு ஞானியர் நினைப்பர். அவ்வாறு நினைக்கும் தியான பலத்தால் மனம் கூசும் பாசத்தை நினைப்பது எவ்வண்ணம் ? பழமையாகவே தொடர்ந்து வந்துள்ள பாசத்தால் மீண்டும் சீவனை விடுவது எங்ஙனம் ?

2409. விட்ட விடம்ஏறா வாறுபோல் வேறாகி
விட்ட பசுபாசம் மெய்கண்டோன் மேவுறான்
கட்டிய கேவலம் காணும் சகலத்தைச்
சுட்டு நனவில் அதீதத்துள் தோன்றுமே.

பொருள் : மந்திர சக்தியால் நீங்கிய விடம் தீண்டியவனை மீண்டும் பொருந்தாவாறு போல ஞானத்தால் பசுத்தன்மையும் பாசத் தன்மையும் விட்ட மெய்கண்டான் மீண்டும் அவற்றைப் பொருந்தான். தன்னைக் கேவல அவத்தையிலும் சகல அவத்தையிலும் பிணைத்திருந்து பாசத்தைச் சுட்டழித்து நின்மல துரியாததீதத்தை விழிப்பு நிலையில் அவ்வுண்மை ஞானி காண்பர்.

2410. நாடும் பதியுடன் நற்பசு பாசமும்
நீடுமாம் நித்தன் நிலையறி வார்இல்லை
நீடிய நித்தம் பசுபாச நீக்கமும்
நாடிய சைவர்க்கு நந்தி அளித்ததே.

பொருள் : ஆராயப்படும் பதி, பசு, பாசம் பலவாக விரியும் என்றும் பொன்றாது ஒன்றுபோல் நின்று நிலவும் சிவபெருமானாகிய நித்தன் நிலையினை உள்ளவாறு அறிவார் இல்லை. தொன்று தொட்டுத் தென்பட்டும் படாதும் வருகின்ற முப்பொருள்களும் என்றும் ஒன்றுபோல் நிலைப்பதாகிய பதியின் நிலைமையும் சார்பாகிய பசுவுக்கு நேர்ந்த பசுபாச நீக்கமும் திருவருளால் ஆராயத் தொடங்கிய சைவ நற்சீலர்க்கு நந்தியாகிய சிவபெருமான் விளங்குமாறு அளித்தருளினன்.

2411. ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்
ஆய பசுவும் அடலே றெனநிற்கும்
ஆய பலிபீடம் ஆகுநற் பாசமாம்
ஆய அரனிலை ஆய்ந்துகொள் வார்கட்கே.

பொருள் : திருக்கோயிலில் மூலத் தானத்திலுள்ள சிவலிங்கம் அருளுடன் கூடிய சிவலிங்கமாம். அங்குள்ள வலிய ரிஷபம் பசுவாம். அங்கு ரிஷபத்துக்குப் பின்னே யுள்ள பலிபீடமே பாசமாகும். இவ்வுண்மை சிவாலயத்தின் அமைப்பை ஆராய்ந்து பார்க்க விளங்கும்.

2412. பதி பசு பாசம் பயில்லியா நித்தம்
பதிபசு பாசம் பகர்வோர்க்கு ஆறாக்கிப்
பதி பசு பாசத்தைப் பற்றற நீக்கும்
பதிபசு பாசம் பயில நிலாவே.

பொருள் : பதிபசு பாசம் ஆகியவற்றை உணர்த்தும் ஞான நூல்களை நாள்தோறும் ஆராய்ச்சி செய்து, பதி பசு பாச உண்மையை உணர்வோர்க்கு, நெறியினைக் காட்டி பதிப் பொருளானது பசு ஞானத்தையும் பாச ஞானத்தையும் பற்றறக் கெடுக்கும் பதி பசு பாசங்களைக் குறியீடாக் கொண்ட தியானத்தால் பசு ஞானம் பாச ஞானம் நிலைபெறா.

2413. பதியும் பசுவொடு பாசமும் மேலைக்
கதியும் பசுபாச நீக்கமும் காட்டி
மதிதந்த ஆனந்த மாநந்தி காணும்
துதிதந்து வைத்தனன் சுத்தசை வத்திலே.

பொருள் : பேருயிராகிய பதியும், ஆருயிராகிய பசுவும், அப்பசுவைப் பிணித்த பாசமும், அருளால் பாசம் நீங்கிய இடத்துப் பெறும் திருவடிப் பேறாகிய மேலைக் கதியும், சிவகுருவாய்ச் சிவபெருமான் எழுந்தருளி வந்து பசு பாசத்தை நீக்கியருளும் நீக்கமும் மெய்ம்மையாக் காட்டியருள்வது தனிப்பெரும் சைவமாம் சுத்த சைவத்தென்க. இத்தகைய தத்துவ ஞானமாகிய மெய்யுணர்வைத் தந்தருளிய வன்இயற்கை உண்மை அறிவு இன்ப மாநந்தியாகிய சிவபெருமானவன். அவன் திருவடிகளைச் செந்தமிழ்த் திருமுறை வழியாக வழிபட்டு உய்யும்படியாகவும் வைத்தருளினன்.

2414. அறிந்தணு மூன்றுமே யாங்கணும் ஆகும்
அறிந்தணு மூன்றுமே யாங்கணும் ஆக
அறிந்த அனாதி வியாத்தனும் ஆவன்
அறிந்த பதிபடைப் பான்அங்கு அவற்றையே.

பொருள் : அறிவுடைய ஆன்ம வர்க்கம் விஞ்ஞானகலர், பிரளயகலர், சகலர் என மூவகைப்பட்டு எங்கும் உள்ளனர். இவ்வகையான ஆன்மாக்கள் எங்கும் இருக்க, எல்லாம் அறிந்த சிவன் அவைகளில் நிறைந்துள்ளான். ஆன்மாக்களின் தகுதியை அறிந்த சிவம் அவை அவைகளின் தகுதிக்கு ஏற்பப் படைத்தருளுவான்.

2415. படைப்புஆதி யாவது பரம்சிவம் சத்தி
இடைப்பால் உயிர்கட்கு அடைத்துஇவை தூங்கல்
படைப்பாதி சூக்கத்தைத் தற்பரன் செய்ய
படைப்பாதி தூய மலம்அப் பரத்திலே.

பொருள் : படைப்பில் தொடக்கமாவது பரம் சிவம் சத்தி ஆகியவற்றை இறைவன் உயிர்க் கூட்டங்களின் இடையே பொருத்தி, இவ்வுயிர்களை உறக்கத்தில் வைத்தலாகும். பின்னர்ப் படைப்புக்குரிய காரணத்தைத் தற்பரனாகிய சிவன் சங்கற்பத்தால் செய்ய, படைப்பின் முதல் நிலை சுத்த மாயையில் அப் பரத்தில் ஆகும்.

இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் - Page 3 Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Tue Mar 27, 2012 1:53 pm

2416. ஆகிய சூக்கத்தை அவ்விந்து நாதமும்
ஆகிய சத்தி சிவபர மேல்ஐந்தால்
ஆகிய சூக்கத்தில் ஐங்கரு மம்செய்வோன்
ஆகிய தூயஈ சானனும் ஆமே.

பொருள் : நுண்ணிய ஐந்தொழிலை விந்து, நாதம், சத்தி, சிவம், பரம் என்னும் மேல் ஐந்து நிலைகளாலும் ஆக்குவிப்பன். அந்த நுண்ணிய ஐந்தொழிலை அருளால் ஆக்குவிப்போன் தூய இயக்க முதலாகிய ஈசானன் ஆவான்.

2417. மேவும் பரசிவம் மேற்சத்தி நாதமும்
மேவும் பரவிந்து ஐம்முகன் வேறுஈசன்
மேவும் உருத்திரன் மால்வேதா மேதினி
ஆகும் படிபடைப் போன்அர னாமே.

பொருள் : இப்படைப்பாதி ஐந் தொழிலையும் சிவபெருமான் அருவம் நான்கு, அருவுருவம் ஒன்று, உருவம் நான்கு ஆக ஒன்பான் நிலைகளின் நின்று உன்முகமாகிய கருத்தால் இயற்றி அருளுகின்றனன். அந் நிலைகள் முறையே பரசிவம், பராசத்தி, பரநாதம், பரவிந்து எனவும், ஐம்முகன் எனவும், ஈசன், உருத்திரன், மால், அயன் எனவும் கூறப்படும். மாயா காரியமாகிய உலகினைப் படைத்து அருளுபவன் அரனாகிய சிவபெருமான் ஆவன். ஐம்முகன் - சதாசிவன்.

2418. படைப்பும் அளிப்பும் பயில்இளைப் பாற்றும்
துடைப்பும் மறைப்பும்முன் தோன்ற அருளும்
சடத்தை விடுத்த அருளும் சகலத்து
அடைத்த அனாதியை ஐந்தென லாமே.

பொருள் : படைப்பும் காப்பும் இளைப்பாற்றும் பொருட்டுச் செய்யும் அழிப்பும் மறைப்பும் வாழும்பாது விளங்க அருளாலும் உடம்பை விட்டபின் நிகழும் அருளலும் என சிவபெருமான் சகலர்க்கு இணைத்த அனாதியான தொழிலை ஐந்து என்னலாகும்.

2419. ஆறாறு குண்டலி தன்னின் அகத்திட்டு
வேறாரு மாயையில் முப்பால் மிகுத்திட்டுஅங்கு
ஈறாம் கருவி இவற்றால் வகுத்திட்டு
வேறாம் பதிபசு பாசம்வீ டாகுமே.

பொருள் : குண்டலியாகிய மாமாயை யினின்று முப்பத்தாறு மெய்கள் சிவபெருமான் திருவுள்ளத்தால் தோன்றி விரியும். இம்முப்பத்தாறையும் படுக்குங்கால் உணர்த்து மெய் ஐந்து, உணர்வுமெய் ஏழு, உடல்மெய் இருபத்து நான்கு என்பனவாகும். இவற்றை முறையே, தூமாயை, தூவா மாயை, பகுதிமாயை எனக் கூறுவர். ஆருயிர்கட்கு முடிந்த முடிபாக வேண்டி கருவிகளையும் இவற்றாலேயே வகுத்தருளினன். பதி பசு பாசம் என்னும் உண்மைகளையும் தொடர்புகளையும் அருளால் உணரும் காலத்துப் பாசத்தினின்றும் பசு வேறாகும். வேறாகவே பதியினைச் சென்றெய்தும். எய்துவதே வீடு பேறாகும்.

2420. வீட்டுகும் பதிபசு பாசமும் மீதுற
ஆட்கும் இருவினை ஆங்குஅவற் றால்உணர்ந்து
ஆட்கு நரக சுவர்க்கத்தில் தானிட்டு
நாட்குற நான்தங்கு நற்பாசம் நண்ணுமே.

பொருள் : பதியானது பசுவினை மலநீக்கத்தின் பொருட்டு மாயா காரியமாகிய பாசத்தின்கண் விருப்பம் உண்டாகச் செய்யும் அவ்வுயிர் உலகுடல் கலன்களில் விருப்பம் மீதூர இருவினை புரியும்படி ஆழ்த்தும். அதன்வாயிலாக ஆருயிர்கள் இருவினைகளைப் புரியும். அவற்றின் பயன்களாகிய இன்பதுன்பங்களை நுகர்விப்பதன் பொருட்டு அவ்வுயிர்களை முறையே துறக்க நிரயங்களில் இட்டு ஆழச் செய்யும். இவ்வகையாகப் பயன் துய்க்கும் காலங்கழியப் பிறப்பிற்கு ஏதுவாகிய நான் என்னும் முனைப்புத் தங்கும்படி நற்பாசமாகிய மறைப்பாற்றல் வந்து பொருந்தும் என்க மறைப்பாற்றல் - நடப்பாற்றல்; திரோதான சத்தி.

2421. நண்ணிய பாசத்தில் நான்எனல் ஆணவம்
பண்ணி மாயையில் ஊட்டல் பரிந்தனன்
கண்ணிய சேதனன் கண்வந்த பேரருள்
அண்ணல் அடிசேர் உபாயமது ஆகுமே.

பொருள் : மாயா காரிய உடம்புடன் கூடி நான் என்று முனைத்து நிற்றல் ஆணவப் பண்பாகும். அவ் ஆணவம் நீங்குதற் பொருட்டு மாயையின்கண் செலுத்தி இருவினைப் பயன்களையும் நடப்பாற்றல் ஊட்டுவதாகும். ஊட்டுவதனால் ஆணவ மலம் அகலும் அகலவே கருதப்படும் அறிவிக்க அறியும் தன்மை வாய்ந்த சேதனனாகிய ஆருயிர்கள் மாட்டு வைத்த பேரருளினால் அவ்வுயிர்க்கு அண்ணலாகிய சிவபெருமானின் திருவடி சேரும் வழிவகைகளையும் அவ்வாற்றல் தோன்றுவித்தருளும் இதையே உபாயமதாகும் என்றார்.

2422. ஆகும் உபாயமே யன்றி அழுக்கற்று
மோக மறச்சுத்தன் ஆதற்கு மூலமே
ஆகும் அறுவை அழுக்கேற்றி ஏற்றல்போல்
ஆகுவ தெல்லாம் அருட்பாச மாகுமே.

பொருள் : நடப்பாற்றல் ஆருயிர்க் கிழவற்கு வினை மாயைகளைக் கூட்டல் வழிவகைக் மட்டு மன்றி, ஆணவ அழுக்கு நீங்கித் தூயனாதற் பொருட்டுக் கடும்பற்றாகிய மருள் நீங்குதற்கும் தூயனாதற்கும் இதுவே மூலமாகும். இதற்கு ஒப்பு அழுக்கேறிய அறுவை என்னும் ஆடையை மேலும் சாணி உவர் முதலிய அழுக்கினை ஏற்றிட அவ் அழுக்கினை அகற்றுவதாகும். இவ் அனைத்தும் அருட்பாசமாகிய நடப்பாற்றலால் நிகழ்வனவாகும்.

2423. பாசம் பயிலுயிர் தானே பரமுதல்
பாசம் பயிலுயிர் தானே பசுவென்ப
பாசம் பயிலப் பதிபர மாதலால்
பாசம் பயிலப் பதிபசு வாகுமே.

பொருள் : பாசத்துடன் பயின்றுவரும் ஆருயிர் முதல் பரமாகும். பரம் - சுமை. இயற்கையிலேயே சுமையுடையதாகும் என்ப. அப் பாசப் பிணிப்புச் சுமை யுடைமையால் அவ் வுயிர் பசு வெனப்பட்டது. ஆருயிர் பாசம் பயின்று தூயனாதற் பொருட்டுப் பதியும் அப் பசுவுடன் கலத்தலால் பதியும் பசுவாகும் என்ப. இது நோயாளிக்கு மருந்து கூட்டிக் கொடுப்போன் அம்மருந்துடனும் நோயாளியுடனும் தொடர்பு கொண்டிருப்பதை யொக்கும். ஆருயிர்க்குப் பாசத்தினப் பயிற்று வித்தற் பொருட்டுப் பதியும் பரமாக விளங்கும். பரம் - முதன்மை.

2424. அத்தத்தில் உத்தரம் கேட்ட அருந்தவர்
அத்தத்தில் உத்தர மாகும் அருள்மேனி
அத்தத்தி னாலே அணையப் பிடித்தலும்
அத்தத்தில் தம்மை அடைந்து நின்றாரே.

பொருள் : வேதப் பொருளின் உண்மையை தட்சிணாமூர்த்தியிடம் வினாவிய சனகாதி முனிவர்க்கு அருள் மேனி தாங்கிய பெருமான் சுட்டு விரலைப் பெருவிரலோடு சேர்த்துக் காட்டி ஞானமுத்திரையினால் உணர்த்தினார். சின்முத்திரையின் சூக்குமப் பொருளை உணராமையால் அவரது சிரத்தைத் தீண்டிச் தீட்சை செய்தருளுதலும் அம் மூர்த்தியை உணர்ந்து தமது உண்மையான ஒளி வடிவில் நிலைபெற்று நின்றனர். (அத்தம் - பொருள்.)

17. அடிதலை அறியும் திறங்கூறல் (அஃதாவது திருவடியைச் சிரசில் உணரும் தன்மை கூறல்.)

2425. காலும் தலையும் அறியார் கலதிகள்
கால்அந்தச் சத்தி அருள்என்பர் காரணம்
பாலொன்று ஞானமே பண்பார் தலைஉயிர்
கால்அந்த ஞானத்தைக் காட்டவீ டாகுமே.

பொருள் : காலும் தலையும் எவை என்பதை வீணர்கள் அறியவில்லை. கால் என்பது அக் குண்டலினி சத்தியாகும். மூலாதாரத்தில் குண்டலினி விளங்குவதற்குக் காரணம் அருள் என்று கூறுவர். ஒளி விளங்கும் ஞானமே பண்பு நிறைந்த தலையாகும். சத்தியானது அந்த ஞானமாகிய சிவத்தைக் காட்ட உயிர் வீடு பெறும்.

2426. தலைஅடி யாவது அறியார் காயத்தில்
தலைஅடி உச்சியில் உள்ளது மூலம்
தலைஅடி யான அறிவை அறிந்தோர்
தலைஅடி யாகவே தான்இருந் தாரே.

பொருள் : ஆருயிரின் உடம்பகத்துத் தலை உச்சியில் உள்ளது. அடி என்பது வழியாக உள்ளது. இவ் வுண்மையினை அருளால் அறியார். தலையடி என்பது சிவ என்னும் செந்தமிழ்ப் பெரு மறையாகும். இவ் அறிவை அறிந்தோர் சிவமாகவே இருந்து இன்புறுவர்.

2427. நின்றான் நிலமுழுது அண்டமும் மேலுற
வன்தாள் அசுரர் அமரரும் உய்ந்திடப்
பின்தான் உலகம் படைத்தவன் பேர்நந்தி
தன்தாள் இணைஎன் தலைமிசை ஆனதே.

பொருள் : சிவபெருமான் நிலமும் அண்டமும் கீழும் மேலும் பொருந்தும் வண்ணம் பேரொளிப் பிழம்பாய் நின்றருளினன். அவ்வாறு அன்று நின்று அருளியது அசுரரும் அமரரும் உய்ந்திடும்படி ஆள்வதற்கேயாம். அவனே பின்பு உலகம் படைத்தருளினன். அவன் திருப்பெயர் நந்தியாகும். அவன் திருவடி அடியேன் தலையின்கண் அமர்ந்தது.

2428. சிந்தையின் உள்ளே எந்தை திருவடி
சிந்தையின் எந்தை திருவடிக் கீழது
எந்தையும் என்னை அறியகி லான்ஆகில்
எந்தையை யானும் அறியகி லேனே.

பொருள் : எனது உள்ளத்தினுள்ளே எனது தந்தையாகிய சிவத்தினது திருவடி உள்ளது எனது உள்ளமும் செயலற்று அடங்கி அவனது திருவடியில் வணக்கத்தைச் செலுத்திக் கொண்டிருக்கிறது. உள்ளத்தின் உள்ளும் புறம்புமாக வியாபித்திருக்கும் சிவன் என்னை அறிந்து உணர்த்தாவிட்டால் எனது தந்தையை நானும் அறிய முடியாதவனே யாவன். சித்தத்தைச் சிவன்பால் வைத்திருப்பார்க்கு அவன் விளங்கித் தோன்றுவான்.

2429. பன்னாத பாரொளிக்கு அப்புறத்து அப்பால்
என்நா யாகனார் இசைந்தங்கு இருந்திடம்
உன்னா ஒளியும் உரைசெய்யா மந்திரம்
சொன்னான் கழலிணை சூடிநின் றேனே.

பொருள் : சொல்லுதற்கு அருமையான ஆறாதார ஒளிக்குமேல் பரமா காயத்தில் எனது தலைவனாகிய சிவன் விரும்பி அங்கு எழுந்தருளியிருக்கும் இடமாம். மனத்தினாலேயே நினைந்து காணமுடியாத ஒளியையும் வாயினால் சொல்லி விளக்க முடியாத பிரணவத் தொனியையும் எனக்கு உணர்த்தினான். பின் நான் அவனது திருவடிகளான விந்து நாதங்களை எனது தலையில் சூடி நின்றேன்.

2430. பதியது தோற்றும் பதமது வைம்மின்
மதியது செய்து மலர்ப்பதம் ஓதும்
நதிபொதி யும்சடை நாரியோர் பாகன்
கதிசெயும் காலங்கள் கண்டுகொ ளீரே.

பொருள் : பதிப்பொருள் விளங்கும் சிரசின்மேல் மனத்தைப் பொருத்துமின். சந்திரகலை விளங்கும்படி செய்து அங்கு இறைவனது திருவடியை நினைந்து ஏத்துமின். கங்கையைச் சிரசில் அணிந்த அர்த்த நாரீசுவரன் முத்தி அருளும். அவனை வழிபடுகின்ற காலங்களில் கண்டு வழிபடுங்கள்.

2431. தரித்துநின் றானடி தன்னிட நெஞ்சில்
தரித்து நனி றான்அம ராபதி நாதன்
கரித்துநின் றான்கரு தாதவர் சிந்தை
பரித்துநின் றான்அப் பரிபாகத் தானே.

பொருள் : சிவபெருமானின் திருவடிகளைப் பதம் வாய்ந்த விரிந்த மன நிலைக்கண் மாறாது நினையுங்கள். அப்படி நினைவார் மனத்து அவன் நீங்காது தங்கி நின்றருள்வன். அவன் இயல்பாகவே எங்கும் தங்கி நின்றருள்பவன். அவன் அனைவர்க்கும் நாதன் அமராபதியாகிய விண்ணவர் கோனுக்கு முதல்வன். கருதாதவரை வெறுத்து நின்றனன். சிந்தை சிவமாகச் செய்தனவே தவமாகத் திருவருளால் செவ்வி வாய்க்கும். பரிபாகம் உற்றாரைச் சிவன் தாங்கி நின்றனன்.

2432. ஒன்றுண்டு தாமரை ஒண்மலர் மூன்றுள
தன்தாதை தாளும் இரண்டுள காயத்துள்
நன்றாகக் காய்ச்சிப் பதஞ்செய்ய வல்லார்கட்கு
இன்றேசென்று ஈசனை எய்தலும் ஆமே.

பொருள் : தாமரையாகிய சுழுமுனை ஒன்றுண்டு. அதன்கண் தாதுமிக்க அழகிய ஒள்ளிய மலரும் மூன்றுண்டு. அதற்குரிய தாள்களும் இரண்டுள. தாளிரண்டு இடப்பால் நரம்பு. வலப்பால் நரம்பு. மலர் மூன்று, மூன்று நரம்பும் கூடியமைந்த முடிச்சு. உடம்பகத்து மூலக் கனலால் நன்றாக வெதுப்பியபோது உள்ளம் செவ்வி வாய்க்கும். செவ்வி வாய்த்த வல்லார்கட்கு வாய்த்த அப்பொழுதே சிவபெருமானைச் சென்று தலைக் கூடுதலும் ஆகும்.

2433. கால்கொண்டுஎன் சென்னியிற் கட்டறக் கட்டற
மால்கொண்ட நெஞ்சின் மயக்கின் துயக்கறப்
பால்கொண்ட என்னைப் பரன்கொள்ள நாடினான்
மேல்கொண்டென் செம்மை விளம்பஒண் ணாதே.

பொருள் : அடியேன் முடியில் சிவபெருமான் திருவடிகளைச் சூட்டியருளினன். சூட்டலும் கட்டற்றது. ஆணவக் கட்டறலும் மாயா காரியப் பொருள்களின் இடமாகவுள்ள நெஞ்சின் மயக்கம் நீங்கிற்று. மயக்கம் நீங்கவும் திருவடியுணர்வாகிய சிவஞானத்தை அடியேற்கு அளித்தருளினன். அவ் வுணர்வு பெற்ற என்னை மேலாம் தன் வண்ணம் ஆக்கத் திருவுளம் கொண்டருளினன். அதனால் ஆராஇன்பத் திருவிடி இணையின் மேல நிலையைப் பெற்றின் புற்றேன். அத்தகைய மேற் கொண்டு துய்க்கும் செம்மை நலம் சொல் இறந்ததொன்று.

2434. பெற்ற புதல்வர்போல் பேணிய நாற்றமும்
குற்றமுங் கண்டு கணங்குறை செய்யவோர்
பற்றைய ஈசன் உயிரது பான்மைக்குச்
செற்றமி லாச்செய்கைக்கு எய்தின செய்யுமே.

பொருள் : தாம் பெற்று வளர்த்த மக்கள்பால் கொண்ட சம்பந்தத்தையும் அவர் செய்யும் குற்றத்தையும் உணர்ந்து அவரது குற்றத்தைப் பாராட்டாது குணத்தைக் கைக்கொள்ளும் பெற்றோர்பால் மற்று இறைவனும் உயிரின் தன்மைக்கேற்ப வெறுப்பில்லாத செயல்களுக்குப் பொருந்துமாற்றால் ஏற்றுக்கொண்டு தக்கவாறு செய்வான். (நாற்றம் - சம்பந்தம், கன்ம வாசனை, பற்றைய - பற்றாக உள்ள.)

18. முக்குற்றம் (காமம், வெகுளி, மயக்கம் ஆகியவை முக்குற்றங்களாகும்.)

2435. மூன்றுள குற்றம் முழுதும் நலிவன
மான்றுஇருள் தூங்கி மயங்கிக் கிடந்தன
மூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார்
மூன்றினுள் பட்டு முடிகின்ற வாறே.

பொருள் : காமம் வெகுளி மயக்கம் ஆகிய குற்றங்கள் மூன்று உள்ளன. அவை யாவும் உயிர்களுக்குத் துன்பத்தைத் தருவன. அதனால் உயிர்கள் தங்களது உண்மைச் சொரூ பத்தை அறியாமல் மாயா காரியமாகிய இருளில் ஆழ்ந்து மயங்கிக் கிடந்தன. காமம, வெகுளி, மயக்கம் ஆகிய முக் குற்றங்களினின்றும் விடுபட்டவர் பிறப்பு இறப்புக்களை நீக்கினவராவர். அவ்விதம் நீங்காதவர் அம் முக் குற்றங்களின் காரியமாகிய மாயையால் துன்பப்பட்டு அழிபவ ரேயாவர்.

(மான்றல் - மயக்கம். இருள் தூங்கலாவது. அறியாமையில் கிடத்தல்.)

2436. காமம், வெகுளி, மயக்கம் இவைகடிந்து
ஏமம் பிடித்திருந் தேனுக்கு எறிமணி
ஓமெனும் ஓசையின் உள்ளே உறைவதோர்
தாமம் அதனைத் தலைப்பட்ட வாறே.

பொருள் : காமம் வெகுளி மயக்கம் ஆகிய முக்குற்றங்களையும் நீக்கி, பாதுகாவலான திருவடி பற்றியிருந்தேனுக்கு, மணியோசை போன்ற பிரணவத் தொனியினுள்ளே பொருந்துவதாகிய ஒளியினைத் தலைப்படுதல் கூடும். (காமம் - ஆசை; வெகுளி - சினம்; மயக்கம் அறியாமை; தாமம் - ஒளி; ஈண்டுச்சிவ ஒளி. ஏமம் சிவானந்தம்.)

19. முப்பதம் (தற்பதம், தொம்பதம், அசிபதம் ஆகியவை முப்பதங்களாகும்.)

(முப்பதம் - தத்+துவம்+அசி, தத்துவமசி)

2437. தோன்றிய தொம்பதம் தற்பதம் சூழ்தர
ஏன்ற அசிபதம் இம்மூன்றோடு எய்தினோன்
ஆகின்ற பராபர மாகும் பிறப்பற
ஏன்றனன் மாளச் சிவமாய் இருக்குமே.

பொருள் : தோன்றி நீ என்ற பதம் அது என்ற பதத்தால் சூழ்ந்திருக்க, ஏற்றுக் கொள்ளப்பெற்ற ஆகிறாய் என்ற பதமும் ஆகிய இம் மூன்றோடும் பொருந்தினவன் பிறப்பு நீங்க அகண்டப் பொருளாவன். இவ்வாறு ஏற்றுக் கொள்ளப் பெற்றவன் இவ்வுடல் ஒழியச் சிவமாக ஆவான். (பராபரம் = பரம் + அபரம்)

2438. போதந் தனையுன்னிப் பூதாதி பேதமும்
ஓதுங் கருவிதொண் ணூறுடன் ஓராறு
பேதமும் நாதாந்தப் பெற்றியில் கைவிட்டு
வேதம்சொல் தொம்பத மாகுதல் மெய்ம்மையே.

பொருள் : திருவருளால் பெறும் நாதோபாசனையில் நின்று, பூதம் முதலாகச் சொல்லப் பெறும் தொண்ணூற்றாறு கருவி பேதங்களையும் நாதாந்த நிலையில் நீங்கி, வேதம் உணர்த்திய நீ என்ற பதமாகுதல் உண்மையான நிலையாகும்.

2439. தற்பதம் என்றும் துவம்பதம் தான்என்றும்
நிற்பது அசியத்துள் நேரிழை யாள்பதம்
சொற்பதத் தாலும் தொடரஒண் ணாச்சிவன்
கற்பனை யின்றிக் கலந்துநின் றானே.

பொருள் : தத்பதம் என்பதும் துவம்பதம் என்பதும் திருவருளால் பொருந்தி யிருப்பது அசிபதமாகும் எல்லாவற்றாலும் அறிவினால் அளவிட்டுக் கூறமுடியாத சிவபெருமான் பரையின் விளக்கத்தில் கற்பனையாக இல்லாமல் உண்மையாகவே அசிபத நிலையில் கலந்து அருளுகின்றான். (நேரிழையாள் - பரை.)

2440. அணுவும் பரமும் அசிபதத்து ஏய்ந்து
கணுஒன் றிலாத சிவமும் கலந்தால்
இணையறு பால்தேன் அமுதென இன்பத்
துணையது வாயுரை யற்றிடத் தோன்றுமே.

பொருள் : சீவனும் பரமும் அசிபதத்தில் பொருந்தி, தங்குதடையற்ற சிவமும் கலந்தால் உவமிக்க இயலாத பாலும் தேனும் போன்று அவ் இன்பப் பொருளாய் வாய் பேசா மௌனத்தில் விளங்குவதாகும். ஆன்மா சிவத்தோடு கலந்திருக்கும் இன்பத்தை வாயினால் கூற முடியாது.

2441. தொம்பதம் தற்பதம் தோன்றும் அசிபதம்
நம்பிய சீவன் பரன்சிவ னாய்நிற்கும்
அம்பத மேலைச் சொரூபமா வாக்கியம்
செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே.

பொருள் : தொம்பதம், திருவருளை நம்பி வாழும் வாழ்க்கையையுடைய ஆருயிராகும். தற்பதம், ஆருயிரைத் சிவத்துடன் கூட்டும் திருவருளாகும். ஆருயிரும் பேருயிரும் ஒன்றாய்க் கலந்து தோன்றும் நிலை சிவனாகும். இந்நிலையைச் சிறப்பு நிலை எனக் கூறுவர். சிறப்பு நிலையெனினும் சொரூப நிலையெனினும் ஒன்றே. அந்நிலையினை யுணர்த்தும் அச்சொல்லும் சிறப்புப் பெயரும் பொருட்கிளவியாகும். பெரும் பொருட் கிளவி மாவாக்கியம். ஆருயிர் செம்பொருளாகிய சிவனை அடைவதற்பொருட்டுச் சீர்த்தி மிக்க நந்திக் கடவுள் ஆண்டருள் கின்றனன்.

2442. ஐம்பது அறியா தவரும் அவர்சிலர்
உம்பனை நாடி உரைமுப்ப தத்திடைச்
செம்பர மாகிய வாசி செலுத்திடத்
தம்பர யோகமாய்த் தான்அவன் ஆகுமே.

பொருள் : ஆருயிர்கட்கு அகவை ஐம்பது ஆகியும் முப்பொருள் உண்மையினைத் தப்பின்றித் தெரியும் தன்மை வாய்த்து இலது. அதுபோல் சிலர் அறியாதவர் ஆவர். அவரும் அருள்நினைவால் தத்துவமசி என்னும் முப்பதத்தை நாடிப் பெறுவதாகிய சிவனை நாடும் வழியாக முப்பதத்திடைவாசியாகிய உயிர்ப்பினைச் செலுத்தியிடச் செம்பர நிலைக்கு வழி அமையும். அவ்வழி தமக்குரிய சிவனுடன் கூடுவதாகிய யோகமாகும். இச்செறிவு வழியாக ஆருயிர் சிவத்துடன் கூடிச் சிவனாகும் வாசி செலுத்திட பிராணாயாமப் பயிற்சி செய்ய.

2443. நந்தி அறிவும் நழுவில் அதீதமாம்
இந்தியும் சத்தாதி விடவிய னாகும்
நந்திய மூன்று இரண்டு ஒன்று நலம்ஐந்து
நந்தி நனவாதி மூட்டும் அனாதியே.

பொருள் : நாத ஒலியை அறியும் ஆன்மாவின் நிலை நழுவில் சாக்கிராதீதம் பொருந்தும் ஞானேந்திரியங்கள் ஐந்தும் சத்தம் முதலிய விஷயங்களைவிடப் பரமாகும். அப்பஞ்சேந்திரிய அறிவு மூன்றும் இரண்டும் ஒன்றும் நீங்கவே, சிவன் அனாதியாக நின்மல சாக்கிரம முதலியவற்றைக் கூட்டிச் சீவர்களைப் பக்குவம் செய்கிறான். இந்தியம் இந்திரியம்.

2444. பரதுரி யத்து நனவு படியுண்ட
விரிவிற் கனவும் இதன்உப சாந்தத்து
துரிய சுழுமுனையும் ஓவும் சிவன்பால்
அரிய துரியம் அசிபதம் ஆமே.

பொருள் : ஆன்மா மேலான நின்மல துரியத்தில் நனவு நிலையில் தங்கி விரியாத காலத்து நின்மல சொப்பனம் அமையும். இதில் அலையிலாச் சாகரம்போல் அசைவின்றி இருக்கும் நிலையே துரிய சுழுத்தியாகும். சிவத்தினிடம் பொருந்தினபோது அதுவும் நீங்கின நின்மல துரியமே அசிபதமாகும்.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் - Page 3 Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Tue Mar 27, 2012 1:53 pm

20. முப்பரம்

(அஃதாவது, அக்கினி மண்டலம், சூரிய மண்டலம், சந்திரமண்டலம் ஆகிய மும் மண்டலங்களிலும் ஆன்மா நிற்கும் நிலை.)

2445. தோன்றிஎன் உள்ளே சுழன்றுஎழு கின்றதோர்
மூன்று படிமண் டலத்து முதல்வனை
ஏன்ணெய்தி இன்புற்று இருந்தே இளங்கொடி
நான்று நலம்செய் நலந்தரு மாறே.

பொருள் : என் உடம்பகத்துத் தோன்றி என்னுள்ளே வலம் கழித்து எழும் மண்டிலங்கள் மூன்றுள. அவை முறையே தீ மண்டலம், ஞாயிற்று மண்டிலம், திங்கள் மண்டிலம் எனச் சொல்லப்பெறும். இம்மூன்று மண்டிலத்து முழு முதல்வனாகிய சிவபெருமானைத் திருவருளால் ஏற்றுப் பொருந்தி இன்புற்றிருப்பம்; இளங்கொடியாகிய குண்டலினியை உயிர்ப்புப் பயிற்சியால் எழுப்பி அதனுடன் கலந்த நின்று உணர்ந்த காலத்தென்க. அக்காலத்து முழு நலமும் வந்து எய்தும்.

2446. மன்று நிறைந்தது மாபர மாயது
நின்று நிறைந்தது நேர்தரு நந்தியும்
கன்று நினைந்தெழு தாயென வந்தபின்
குன்று நிறைந்த குணவிளக்கு ஆமே.

பொருள் : குண்டலினி சிரத்தைக் கடந்தபோது ஆகாயம் முற்றிலும் வியாபிப்பதாக உள்ளது. அது மிக மேம்பட்ட பொருளாக விளங்கும். அவளுடன் பொருந்திய சிவமும் அங்கு நின்ற எல்லாப் பொருளிலும் பூரணமாக நிறைந்திருந்தது. கன்று நினைந்து கதறியபோது ஓடி வரும் தாயைப்போன்று சீவன் நினைந்தபோது கருணை சுரக்கும் இறைவன் அருளியபின் அச்சீவன் குன்றின்மேல் இட்ட விளக்குப் போன்று பிரகாசம் பெறும்.

2447. ஆறாறு தத்துவத்து அப்புறத்து அப்புரம்
கூறா உபதேசம் கூறில் சிவபரம்
வேறாய் வெளிப்பட்ட வேதப் பகவனார்
பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே.

பொருள் : முப்பத்தாறு தத்தவங்களையும் கடந்து நிலையில் விளங்கும் அப்பரம் கூறாமல் கூறிய உபதேசத்தைச் சொல்லப்புகின் சிவபரம்பொருள் வேறாய் வெளிப்பட்டு குருமேனி தாங்கி அருளிய இன்பத்தைப் போற்றிப் பாதுகாத்துக் கொள்க என்பதாம்.

2448. பற்றறப் பற்றில் பரம்பதி யாவது
பற்றறப் பற்றில் பரனறி வேபரம்
பற்றறப் பற்றினில் பற்றவல் லோர்கட்கே
பற்றறப் பற்றில் பரம்பர மாமே.

பொருள் : தத்துவங்களின் பற்று நீங்க அவை இலயமடையும் பொருளைப் பற்றில் விஞ்ஞான கலர் நிலையடைந்து ஆன் மாக்கள் சதாசிவராவார். அவ்வாறு பற்றி நீங்க நாதத்தைத் தொழுதால் நாத சொரூபமான சிவத்தின் அறிவே ஆன்மாவின் அறிவாகும். சீவபோதம் கெடச் சிவப்பற்று மிக மேம்பட்டவர்க்கே பழைய தத்துவங்களின் பற்று நீங்கி பற்றிக் கொண்டுள்ள சிவ அறிவு மிகுந்து ஆன்மா பரம் பரமாகுதல் கூடும்.

2449. பரம்பர மான பதிபாசம் பற்றாப்
பரம்பர மாகும் பரஞ்சிவ மேவப்
பரம்பர மான பரசிவா னந்தம்
பரம்பர மாகப் படைப்பது அறிவே.

பொருள் : திருவருளால் தொன்று தொட்டு வழிவழியாகத் தோன்றாத் துணையாக நின்றருளும் பதியினைப் பற்றினால் பாசம் பற்றாகும். யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீவருடைய சிவபெருமான் திருவடிகளைப் பற்றினார்க்கு அவன் எழுந்தருளி வந்து இன்புறுத்துவன். அதுவே மேலான திருவடியின்பமாகும். இவை அனைத்தினையும் திருவடியு ணர்வால் திருவருள் உந்துவதால் அறிவதே நிலைபெற்ற அறிவாகும்.

2450. நனவில் கலாதியாம் நாலொன்று அகன்று
தனியுற்ற கேவலம் தன்னில் தானாகி
நினைவுற்று அகன்ற அதீதத்துள் நேயந்
தனையுற்று இடத்தானே தற்பர மாமே.

பொருள் : நனவுக் காலத்தே உழைப்பு, உணர்வு, உவப்பு, ஆள், மருள் என்னும் ஐந்தும் செயல் உறாது அகல ஆருயிர் நிற்கும் நிலை தனி நிலையாகிய புலம்பாகும். தன்னில் தானாக நின்று அகன்ற அந்நிலையில் உள்ளது அப்பால் நிலையாகும். அந்நிலையில் உணர்வுக்கு உணர்வாய் விளங்கப்படும் பொருள் சிவபெருமான் ஆவன். அச் சிவபெருமான் திருவடிகளைத் திருவருள் நினைவால் கொள்ள அவ்வுயிர் தற்பர சிவமாய்த் திகழும். உழைப்பு முதலியவற்றை முறையே கலை, வித்தை, அராகம், புருடன், மாயை எனவும் கூறு) (நாலொன்று - ஐந்து நேயந்தனை - சிவத்தை)

2451. தற்கண்ட தூயமும் தன்னில் விலாசமும்
பிற்காணும் தூடணம் தானும் பிறழ்வுற்றுத்
தற்பரன் கால பரமும் கலந்தற்ற
நற்பரா தீதமும் நாடுஅசு ராதியே.

பொருள் : தன்னைத் தூய்மையாகக் காண்டலும், தன்னிடத்து விரிவைக் காண்டலும் பின்னர் கருவிகரணங்களைக் கொண்ட ஆன்மாவின் நிலைமாறி, சிவனும் சீவனும் கலந்து, தத்துவங்களை விட்ட நல்ல பராதீத நிலையில் அகரத்தை ஆதியாகவுடைய பிரணவ சொரூபமான சிவத்தை நாடுவாயாக. (தற்பரன் - சிவன். காலபரம் - ஆன்மா.)

21. பரலட்சணம் (பரலட்சணம் - பரை ஒளியின் இயல்பு.)

2452. அதீதத்து ளாகி அகன்றவன் நந்தி
அதீதத்து ளாகி அறிவிலோன் ஆன்மா
மதிபெற் றிருள்விட்ட மன்னுயிர் ஒன்றாம்
பதியிற் பதியும் பரவுயிர் தானே.

பொருள் : நின்மல துரியாதீத நிலையில் விளங்கும் நந்தி என்னும் சிவம் வியாபகமும் அறிவும் உடையது. ஆன்மா துரியாதீத நிலையில் தன்னறிவை இழந்தவனாக இருப்பான். ஆன்மாவின் சந்திர மண்டலம் விளங்கி ஆணவமாகிய இருளை விட்டுச் சிவத்தோடு ஒன்றாய்ப் பொருந்தினால் சிவம் உயிரில் பதிந்து தனது வியாபகத்தையும் அறிவையும் பதிக்கும்.

2453. ஆதியும் அந்தமும் இல்லா அரும்பதி
சோதிப் பரஞ்சுடர் தோன்றத்தோன் றாமையின்
நீதிய தாய்நிற்கும் நீடிய அப்பர
போதம் உணர்தவர் புண்ணியத் தோரே.

பொருள் : முதலும் முடிவும் இல்லாத அறிதற்கு அரிய பெரும்பதி சிவபெருமான். அவன் பேரொளிப் பிழம்பாய் உள்ளொளியாய் விளங்கும் ஒள்ளியன். நல்லார்க்குத் தோன்றியும் பொல்லார்க்குத் தோன்றாமலும் நிற்க வல்லான். அதனால் அவன் அறமுறை குன்றியவன் அல்லன். அறமுறை - நீதி. யாண்டும் முறைமையோடே நிற்பன் என்றும் பொன்றாது நிலைப்பாடு உடையதாக இருக்கும் சிவஞான போத வடிவினன். அம்மேலான சிவஞான போதத்தை அருள் நினைவால் உணர்வோர் திருவருட் புண்ணியச் செல்வராவர்.

2454. துரியங் கடந்து துரியா தீதத்தே
அரிய வியோகங்கொண்டு அம்பலத் தாடும்
பெரிய பிரானைப் பிரணவக் கூபத்தே
துரியவல் லார்க்குத் துரிசில்லை தானே.

பொருள் : நின்மல துரியத்தில் சீவன் பரைபோகத்தில் ஆழ்ந்து ஆணவ மலமற்று விளங்கும் நிலை கடந்து அது சுத்திபெறும் துரியாதீத நிலையில், அச்சீவர்களுக்கு வீடுபேற்றை அளிக்கப் பரவெளியில் நடனம் செய்யும் பெருந்தலைவனான சிவனைப் பிரணவச்சுனையில் துருவிக் காண்பவர்க்கு எவ்வகைப்பட்ட குற்றமும் இல்லையாம். (வியோகம் - வீடுபேறு.)

2455. செம்மைமுன் னிற்பச் சுவேதம் திரிவபோல்
அம்மெய்ப் பரத்தோடு அணுவன்உள் ளாயிடப்
பொய்மைச் சகமுண்ட போத வெறும்பாழில்
செம்மைச் சிவமேரு சேர்கொடி யாகுமே.

பொருள் : செம்மையாகிய நாதத்தின் முன்னே வெண்மையாகிய விந்து தன்மை கெட்டு ஒடுங்குவதுபோல, அவ்வுண்மையான பரசிவத்தோடு சீவன் தன்முனைப்பற்று ஒடுங்க, பொய்யான உலகமுகத்து ஓடாத மனத்துடன் நிற்பதோடு எண்ணுவதையும் விட்ட பாழில் குண்டலினி நாத சத்தியாகிச் சிவமேரு என்ற பிரணவ உச்சியில் விளங்கும் தன் கணவனோடு ஒன்றாவாள்.

2456. வைச்ச கலாதி வருதத்து வங்கெட
வெச்ச இருமாயை வேறாக வேரறுத்து
உச்ச பரசிவ மாம்உண்மை ஒன்றவே
அச்சம் அறுத்தென்னை ஆண்டனன் நந்தியே.

பொருள் : சிவமேருவில் நாத சித்தியோடு பொருந்திய சீவர்க்குக் கலைமுதலிய தத்துவங்கள் ஒடுங்க. எஞ்சியுள்ள சுத்த மாயை அசுத்த மாயையின் பிணிப்பு அடியோடு மீண்டும் முளையாவாறு நீங்க, துவாத சாந்தத்தில் உண்மைப் பொருளாகிய சிவசூரியன் விளங்க, அப்பெருமான் அச்சத்தை நீக்கி என்னை அடிமையாக ஏற்றுக் கொண்டு நிலைபெறச் செய்தனன்.

2457. என்னை அறிய இசைவித்த என்நந்தி
என்னை அறிந்துஅறி யாத இடத்துய்த்தப்
பின்னை ஒளியிற் சொரூம் புறப்பட்டுத்
தன்னை அளித்தான் தற்பர மாகவே.

பொருள் : என்னுடைய யதார்த்த சொரூபம் இத்தகையது என்று அறியும்படி செய்த நந்தியெம் பெருமான், என்னுடைய யதார்த்த சொரூபத்தை அறிந்ததும் இதுகாறும் செல்லாத பரவெளிக்கண் அறிவுடன் செல்லும்படி செய்து, பிறகு பிரணவ ஒளியில் ஆத்மசொரூபம் வேறாய் விளங்க, தனது சத்தியை அளித்துத் தற்பரமாகச் செய்தனன்.

2458. பரந்தும் சுருங்கியும் பார்புனல் வாயு
நிரந்தர வளியோடு ஞாயிறு திங்கள்
அரந்த அறநெறி யாயது வாகித்
தரந்த விசும்பொன்று தாங்கிநின் றானே.

பொருள் : நுண்பூத நிலையில் விரிந்தும், பருப்பூத நிலையில் சுருங்கியும் நிலம் நீர் வாயு நிறைந்த காற்றுடன், சூரியன் சந்திரனாய்ச் செம்மையுடைய நெறியில் பயனாய், அகண்டமான ஆகாயத்தில் எல்லாவற்றையும் இறைவன் ஒருவனே தாங்கி நின்றனன்.

2459. சத்தின் நிலையினில் தானான சத்தியும்
தற்பரை யாய்நிற்கும் தானாம் பரற்கு உடல்
உய்த்தரும் இச்சையில் ஞானாதி பேதமாய்
நித்தம் நடத்தும் நடிக்கும்மா நேயத்தே.

பொருள் : அருவத் திருமேனி கொண்ட சிவத்தின் நிலையில் தானாக விளங்கும் சத்தியும் தற்பரையாய் நிற்கும். அப்பரையே பரனுக்கு உடலாகும். தனு கரணபுவன போகங்களைச் சீவர்களுக்குப் படைத்துக் கொடுக்க வேண்டும் என்ற சங்கற்பத்தால் ஞானசத்தி முதலிய பேதங்களாய், பெருமை மிக்க பரனிடத்து அகலா திருந்து சிருஷ்டியாகி ஐந்தொழில்களைச் செய்து நடித்தருளுவான்.

2460. மேலொடு கீழ்பக்கம் மெய்வாய்கண் நாசிகள்
பாலிய விந்து பரையுள் பரையாகக்
கோலிய நான்கவை ஞானம் கொணர் விந்து
சீலமி லாஅணுச் செய்திய தாமே.

பொருள் : உடலுக்கு மேலும் கீழும் சூழுவுமாக இருந்து, மெய் வாய் கண் நாசி ஆகியவற்றைப் பாதுகாக்கின்ற விந்து சத்தியானது பரையுள் பரையாக, அருவமான சிவம் சத்தி நாதம் விந்து ஆகிய நான்கின் ஞானத்தைப் பெறச் செய்து, ஆணவ மலத்தில் கட்டுண்டிருக்கும் சீவர்களை நடத்தும்.

2461. வேறாம் அதன்தன்மை போலும்இக் காயத்தில்
ஆறாம் உபாதி அனைத்தாகும் தத்துவம்
பேறாம் பரவொளி தூண்டும் பிரகாசமாய்
ஊறாய் உயிர்த்துண்டு உறங்கிடும் மாயையே.

பொருள் : பரைஒளி வேறு வேறு இயல்புடையதாய் ஆறு ஆதார சக்கரங்களில் பொருந்தி ஆறுவகையான உபாதிகளை அளிப்பதால் வெவ்வேறு தத்துவங்களை மாயையால் சேட்டிக்கிறது. மாயை பிரகாசத்தைத் தூண்டுவதாய்ச் சிவனை அசைவித்து, சுவாசத்தை இயக்கி உணவை உண்பித்து உறக்கத்தையும் அடையச் செய்யும். ஆனால் மாயா காரியமான தத்துவங்களைக் கடந்து பர ஒளியில் பொருந்தியிருத்தலே ஆன்மா அடையத்தக்க பேறாம்.

2462. தற்பரம் மன்னும் தனிமுதல் பேரொளி
சிற்பரம் தானே செகமுண்ணும் போதமும்
தொற்பதம் தீர்பாழில் சுந்தரச் சோதிபுக்கு
அப்புறம் மற்றதுஇங்கு ஒப்பில்லை தானே.

பொருள் : தன்னுடைய பரம் என்ற நிலை ஒப்பற்ற பேரொளியில் நிலைபெற்றுள்ளது. அதுவே மேலான ஒப்பற்ற ஞானமும் தத்துவங்களை அழித்து நிற்கும் அறிவும் ஆகும். ஆன்ம போதம் நீங்கித் தன் ஒளியை மறந்து சிவப் பேரொளியில் புகுந்து சுட்டி அறியும் அறிவை விட்டு நிற்பதைவிட இங்கு ஒப்பாகச சொல்லக் கூடியது ஒன்று இல்லையாகும்.

2463. பண்டை மறைகள் பரவான் உடலென்னும்
துண்ட மதியோன் துரியாதீ தந்தன்னைக்
கண்டு பரனும்அக் காரணோ பாதிக்கே
மிண்டின் அவன்சுத்தம் ஆகான் வினவிலே.

பொருள் : பழமையான வேதங்கள் சிவத்துக்கு மேன்மையான ஆகாயமே உடல் என்று கூறும். சந்திரனைச் சூடிய பெருமான் விளங்கும் ஆகாயத்தில் துரியாதீத நிலையில் தன்னைக் கண்டு, அப்பர நிலையை அடைந்தவனும் சுத்த மாயைக்கே நெருங்கின் அவன் ஆராயின் சுத்தனாக மாட்டான்.

2464. வெளிகால் கனல்அப்பு மேலவுமண் நின்ற
தனியா இயதற் பரங்காண் அவன்தான்
வெளிகால் கனல்அப்பு மேவுமண் நின்ற
வெளியாய சத்தி அவன்வடி வாமே.

பொருள் : ஆகாயம் காற்று தீ பொருந்தும் மண் ஆகியவை இலயமாகும் கோயிலாகிய தற்பரமே அத்துரிய நிலையில் விளங்கும் சீவனாகும். ஆகாயம் காற்று தீ நீர் பொருந்தும் மண் ஆகியவற்றின் நிறைந்து நிற்கின்ற வெளியாகிய சத்தியமே அவன் வடிவாகும்.

2465. மேருவி னோடே விரிகதிர் மண்டலம்
ஆர நினையும் அருந்தவ யோகிக்குச்
சீரார் தவம்செய்யில் சிவனருள் தானாகும்
பேரவும் வேண்டாம் பிறிதில்லை தானே.

பொருள் : நிலையில் திரியாது பொன்வண்ணமாக என்றும் ஒன்று போலப் பொன்றாது நின்றருளும் சிவனை மேரு என்பர் செந்தமிழர். அத்தகைய மேருவாகிய சிவபெருமானை விரிந்த கதிர்களையுடைய பகலவன் மண்டிலமாகிய நெஞ்சத்தினிடத்து வஞ்சனையின்றி எஞ்சாமல் நிலைக்கின்ற அருந்தவ யோகியர்க்கு அந்நினைப்பாகிய சிறந்த தவத்தை அவர் செய்யின் ஆண்டுச் சிவனருள் வெளிப்பட்டுத் தானாக நிற்கும். நீங்க வேண்டிய நீர்மையும் இல்லை. அச் சிவபெருமானின் திருவாணையாகிய திருவருளின் மிக்கது பிறிதொன்றில்லை.

22. முத்துரியம் (முத்துரியம் - சீவதுரியம், பரதுரியம், சிவதுரியம்.)

2466. நனவாதி மூன்றினில் சீவ துரியம்
தனதுஆதி மூன்றினில் பரதுரி யந்தான்
நனவாதி மூன்றி னில்சிவ துரியமாம்
இனதாகும் தொந்தத் தசிபதத் துஈடே.

பொருள் : சீவன் கேவல சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி ஆகியவற்றைக் கடந்து சீவதுரியத்தை அடையும். சீவனுக்கு ஆதியான பரமும் சகல சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி ஆகிய மூன்றையும் கடந்து பரதுரியத்தை எய்தும். சிவனும் பரனைப் போன்று நின்மல சாக்கிரமாதி குன்றைக் கடந்து சிவதுரியத்தை அடையும். இவ்வகையாகத் தொந்தத்தசி என்ற மகாவாக்கியம் விளக்கி நெறி அமையும். (ஈடு - நெறி.)

2467. தானாம் நனவில் துரியம்தம் தொம்பதம்
தானாம் துரியம் நனவாதி தான்மூன்றில்
ஆனாப் பரபதம் அற்றது அருநனா
வானான மேல்மூன்றும் துரியம் அணுகுமே.

பொருள் : ஆருயிர் தானாம் நனவில் பேருறக்கமாகிய துரியத்து நீ என்னும் முன்னிலைப் பொருளாய்த் தொம்பதமாக நிற்கும். ஆருயிரின் பேருறக்க நிலையில் பேசப்படும் நனவு, கனவு, உறக்கம் என்னும் மூன்றினில் நீங்காத அருட்பாடாம் பராவத்தை முடிந்த இடமாகும். அதுவே அந்நிலைக்குரிய அரிய நனவாகும். மிக மேலாகச் சொல்லப்படும் சிவ துரியத்து உறக்கம், பேருறக்கம், உயிர்ப்பு அடங்கல் வந்து பொருந்தும்.

2468. அணுவின் துரியத்து நான்கும துஆகிப்
பணியும் பரதுரி யம்பயில் நான்கும்
தணிவில் பரமாகிச் சாரமுத் துரியக்
கணுவில்இந் நான்கும் கலந்தஈர் ஐந்தே.

பொருள் : சீவன் விளங்கும் துரியத்தில் சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம் என நான்காகி, பணியும் பர துரியத்தில் பொருந்தும் சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம் ஆகிய நான்கும் மேலான பரமாகிப் பொருந்தும் சீவ பரசிவ சேர்க்கையில் சீவ துரியம் பரதுரியம் ஆகிய பொதுமையில் இருண்டும், சீவ பரதுரியத்திலுள்ள விரிவாகிய எட்டு நிலைகளுமாகப் பத்தாகும். (கணு - சேர்க்கை.)

2469. ஈர் ஐந்து அவத்தை இசைமுத் துரியத்துள்
நேர்அந்த மாக நெறிவழி யேசென்று
பார்அந்த மான பராபத்து அயிக்கியத்து
ஓர்அந் மாம்இரு பாதியைச் சேர்த்திடே.

பொருள் : முன் மந்திரத்தில் கூறிய பத்து நிலைகள் பொருந்திய சீவபர சிவதுரியத்துள் சிவத்தை அடையும் பொருட்டு உபதேச முறைப்படி நின்று, நிலம் முதலான தத்துவங்கள் முடிவடைகின்ற பராபரச் சேர்க்கையில் ஒரு முடிவை அடைவிக்கும் நாத விந்துக்களாகிய இரு திருவடிகளையும் சேர்த்து நிற்பாயாக.

2470. தொட்டே இருமின் துரிய நிலத்தினை
எட்டாது எனின்நின்று எட்டும் இறைவனைப்
பட்டாங்கு அறிந்திடில் பன்னா உதடுகள்
தட்டாது ஒழிவதோர் தத்துவந் தானே.

பொருள் : துரிய நிலையாகிய அருள் நிலத்தினைத் தொட்டே இருங்கள் தொட்டிருத்தல் என்பது ஓவாது உணர்வில் உணர்த்திருத்தல். ஏனை யோர்க்கு எட்டாத நிலையில் உள்ள வனாயினும் உணர்வார்க்கு அவருணர்வில் எட்டும் ஒப் பிலா இறைவனைத் திருவருளால் உள்ளவாறு அறியுங்கள். அறிந்தால் பல்லும் நாவும் உதடும் பிறவும் கூடிப் பிறக்கும் தூய மாயாகாரியமாகிய சொல்லுக்கு எட்டாமல் நிற்குமவன் ஒப்பில்லாத மெய்ப்பொருளாகப் புணர்ந்து மெய்யின்பம் தந்தருள்வன். (பன்னா - பல்+நா. பல்லும் நாவும்.)

2471. அறிவாய் அசத்தென்னும் ஆறாறு அகன்று
செறிவாய மாயை சிதைத்துஅரு ளாலே
பிறியாத பேரருள் ஆயிடும் பெற்றி
நெறியான அன்பர் நிலையறிந் தாரே.

பொருள் : ஆன்மா அசத்தாகிய முப்பத்தாறு தத்துவங்களையும் விட்டுச் சித்துருவான பரமாய் சார்ந்திருந்த சுத்தமாயை அசுத்த மாயைகளை அருள் சத்தியால் (நாதத்தால்) சிதைத்து, அதன் விளைவான பிரிவில்லாத சிவ சத்திøப் பொருந்திடும் தன்மையை சிவநெறியில் ஈடுபட்ட அன்பர் நெறிகாட்டும் முடிவை அறிந்திருந்தனர்.

2472. நனவின் நனவாதி நாலாம் துரியம்
தனதுயிர் தொம்பதம் ஆமாறு போல
வினையறு சீவன் நனவாதி யாகத்
தனைய பரதுரி யந்தற் பதமே.

பொருள் : சாககிரத்தில் நான்காம் நிலையாகிய துரியத்தில் தன்னுடைய உயிர் விளங்கும் தொம்பதம் என்ற ஒளி நிலை ஆவது போல வினைகளினின்றும் நீங்கிய சீவன், நின்மல சாக்கிரத்தை ஆதியாகக் கொண்ட நான்காம் நிலையாகிய நின்மல துரியம் அடைய, தானாகிய பரதுரியம் அமைந்து, அதனையும் கடந்த துரியாதீத்தில் தற்பதம் நின்ற நிலையை அடையும்.

2473. தொம்பதம் தற்பதம் சொன்முத் துரியம்போல்
நம்பிய மூன்றாம் துரியத்து நல்தாமம்
அம்புவி யுன்னா அதிசூக்கம் அப்பாலைச்
செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே.

பொருள் : முத்துரியத்தில் தொம்பதம் என்றும் தற்பதம் என்றும் சொல்வதுபோல நம்பத் தகுந்த மூன்றாம் துரியமாகிய சிவ துரியத்து நல்ல பரமபதம் அழகிய உலகை நினையாத அதிசூக்கும நிலையாகும். அங்கு அப்பால் விளங்கும் செம்பொருள் ஆன்மாக்களை ஆட்கொண்டருளும் சிறப்பு மிக்க நந்தியாகும். (தாமம் - பரமபதம். ஒளி, முத்துரியம் கடந்து விளங்குவது ஆன்மாக்களை ஆட்கொள்ளும் சிவமாகும்.)
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் - Page 3 Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Tue Mar 27, 2012 1:54 pm

23. மும்முத்தி (மும்முத்தி - சீவமுத்தி, பரமுத்தி, சிவமுத்தி.)

2474. சீவன்தன் முத்தி அதீதம் பரமுத்தி
ஓய்உப சாந்தம் சிவமுத்தி ஆனந்தம்
மூவயின் முச்சொரூப முத்திமுப் பாலதாய்
ஓவுறு தாரததில் உள்ளும்நா தாந்தமே.

பொருள் : சீவன் தன்னுடைய முத்தி நிலையைத் துரியாதீதத்தில் அடையும். ஆன்மா தன் செயலற்று அருளின் வழியே நிற்கும் நிலையே பரமுத்தியாகும். சிவமுத்தி என்பது சிவானந்தமாகும். மேற்கூறிய முறையில் மூன்று இடங்களிலும் சீவமுத்தி, பரமுத்தி, சிவமுத்தி என மூவகைப்பட்டு விளங்குவதாய்ப் பிரணவத் தொனியின் வழியே செயலின்றி நினைந்திருப்பின் நாதாந்தம் அமையும். (ஓவுறுதாரம் பிரணவம்.)

2475. ஆவது அறியார் உயிர்பிறப் பாலுறும்
ஆவது அறியும் உயிர்அருட் பாலுறும்
ஆவது ஒன்றில்லை அகம்புறத் தென்றுஅகன்று
ஓவு சிவனுடன் ஒன்றாதல் முத்தியே.

பொருள் : பிறவிப்பயனை அறியாதவராது உயிர் பிறவியில் வந்து அடையும் பிறவிப்பயன் இறைவனை வழிபடுதல் என்று அறிந்த உயிர், இறைவன் திருவருளை நாடிப் பயன்பெறும். புறத்தேயுள்ள உலகிலும் அகத்தேயுள்ள கருவி கரணங்களிலும் உயிருக்கே நன்மை அளிப்பது ஒன்றும் இல்லை என்பதை அறிந்து, உலகையும் கருவி கரணங்களையும் விட்டு நீங்கி நிற்கும் சிவத்துடன் பொருந்துதலே முத்தியாகும். (ஓவுதல் - நீங்குதல்.)

2476. சிவமாகி மும்மலம் முக்குணம் செற்றுத்
தவமான மும்முத்தி தத்துவத்து அயிக்கியத்
துவம்ஆ கியநெறி சோகம்என் போர்க்குச்
சிவமாம் அமலன் சிறந்தனன் தானே.

பொருள் : சிவத்தை நினைந்து சிவமாகி ஆணவம் கன்மம் மாயை யாகிய மும்மலங்களையும் தாமத இராசத சாத்விகமாகிய முக்குணங்களையும் அழித்து, தவத்தால் அடையும் மும்முத்தி என்ற அது நீ ஆகின்றாய் என்ற உபதேச நெறி நின்று, சோகம் பாவனை செய்வார்க்கு மலமில்லாச் சிவன் தானே வெளிப்பட்டருளினன். அது நீ ஆகின்றாய் என்பதே சோகம் என்னும் நெறியாகும்.

2477. சித்தியும் முத்தியும் திண்சிவ மாகிய
சுத்தியும் முத்தீ தொலைக்கும் சுகானந்த
சத்தியும் மேலைச் சமாதியும் ஆயிடும்
பெத்தம் அறுத்த பெரும்பெரு மானே.

பொருள் : பொருளும் அருளும் போக்கில் மெய்ப்பொருளும் முறையே சித்தி, முத்தி, சிவமாம் சுத்தி என்று ஓதப்பெறும். இவைமுறையே தன்னைப்பற்றி வருவன, பிற உயிர்களைப்பற்றி வருவன, தெய்வத்தைப் பற்றி வருவனவாகிய மூவகைத் துன்பங்களையும் ஒழிப்பனவாகும். இம்மூன்றையும் தாபத்திரயம் என்பர். ஈண்டு இவற்றை முத்தீ என்று ஓதினர். இவை தொலையவே பேரின்பப் பேரருள் உருவாம் பேரறிவாற்றல் வெளிப்படும். அதன்மேல் செயல் அறலாகிய சமாதியும் கைகூடும். பின்னர்ப் பிணிப்பாகிய பெத்தத்தினை அறுத்தருளிய பெரும் பெருமான் வெளிப்பட்டுத் திருவடியை நல்கிப் பேரின்புறுத்துவன். அவனே முழுமுதல்.

24. முச்சொரூபம் (முச்சொரூபம் - சீவசொரூபம், பரசொரூபம், சிவ சொரூபம்)

2478. ஏறிய வாறே மலர்ஐந் திடைஅடைந்து
ஆறி ஞானச் சிவோகம் அடைந்திட்டு
வேறும் எனமுச் சொரூபத்து வீடுற்றுஅங்கு
ஈறதில் பண்டைப் பரன்உண்மை செய்யுமே.

பொருள் : ஆணவத்தில் கட்டுண்டு கிடந்த உயிர்கள் பக்குமாதற் பொருட்டு, இறைவன் கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி ஆகியவற்றைக் கூட்டி ஆணவம் வலிகெட இருவினையொப்பு வந்த நிலையில் சிவோகம் பாவனை பண்ணி, மேலும் ஒரு நிலையாகச் சீவ பர, சிவ நிலைகளை அடைந்து நீங்கி, அங்கு இறுதியில் பழமையான பரம் பொருளின் உண்மையில் அவ்வுயிர்களை நிலைபெறச் செய்வான்.

2479. மூன்றுள மாளிகை மூவர் இருப்பிடம்
மூன்றினில் முப்பத் தாறும் உதிப்புள
மூன்றினின் உள்ளே முளைத்தெழும் சோதியைக்
காண்டலும் காயக் கணக்கற்ற வாறே.

பொருள் : சகலர், பிரளயகாலம், விஞ்ஞானகலர் ஆகிய மூவர் வாழ்கின்ற இடம் பிரகிருதிமாயை, அசுத்த மாயை, சுத்த மாயை ஆகும். இவ்வகையான மூன்று மாயையிலும் முப்பத்தாறு தத்துவங்களும் தோன்றியுள்ளன. இம்மூன்று மண்டலங்களிலும் ஊடுருவி நிற்கும் ஆத்ம சோதியைக் கண்டபோதே எடுக்கவேண்டிய தேகத்தின் கணக்கு முடிவுறும்.

2480. உலகம் புடைபெயர்ந்து ஊழியும் போன
நிலவு சுடரொளி மூன்றும் ஒன்றாய
பலவும் பரிசொடு பான்மையுள் ஈசன்
அளவும் பெருமையும் ஆரறி வாரே.

பொருள் : பேரொடுக்க மாகிய பேரூழிக் காலத்து உலகம் ஒடுங்கிற்று. அத்தகைய ஊழியும் பல கழிந்தன. விளங்குகின்ற ஆருயிர், அருள், அருளோன் என்னும் மூன்று அருள் வெளியில் ஒன்றாயின. இம்மூன்றையும் அன்பு, அருள், அருளோன் எனவும் கூறலாம். சீவன், பலம், சிவம் எனவும் கூறுப. பலவும் முறைப்படி சிவபெருமான் திருவடிக் கீழ் அடங்கி, கலப்பால் ஒன்றாயிருப்பினும் சிவபெருமானின் அளத்தற்கரிய அளவினையும் உரைத்தற்கரிய பெருமையையும் எவராலும் அளந்தறிந்து உரைக்க ஒண்ணா என்க. அதனால் ஒருவரும் அறியார் என்பது யாரறிவார் என்னும் குறிப்பால் பெறப்படும்.

2481. பெருவாய் முதலெண்ணும் பேதமே பேதித்து
அருவாய் உருவாய் அருவுரு வாகிக்
குருவாய் வரும்சத்தி கோன்உயிர்ப் பன்மை
உருவாய் உடனிருந்து ஒன்றாய்அன் றாமே.

பொருள் : மாயா காரிய உருக்களை மலைமுதல் மண்ஈறாகவும் யானைமுதல் எறும்பு ஈறாகவும் கண்டு கருதப்படும் வேறுபாடுகளையே ஆருயிர்களுக்குக் காட்டியருள்கின்றனன் சிவன். அவன் எல்லாவற்றுடனும் கலந்து அருவாய் உருவாய் அருவுருவாய்த் தோன்றியருள்வன். அருளே திருமேனியாய்க் குருவாய் எழுந்தருளும் தனிப்பெரும் தலைவனும் ஆவன். மன்னும் பல உயிரோடும் கலந்து அவ்வவ் உயிராய் உருவாய் உடன் இருந்தருள்வன். அன்றாம் என்பது இந்நிலைமை சிவபெருமானுக்குத் தொன்மையிலேயே இயற்கையாக அமைந்த நன்மைப் பண்பாம் என்க. (பெருவாய் - பெரியதாய்.)

2482. மணிஒளி சோபை இலக்கணம் வாய்த்து
மணிஎன லாய்நின்ற வாறுஅது போலத்
தணிமுச் சொருபாதி சத்தியாதி சாரப்
பணிவித்த பேர்நந்தி பாதம்பற் றாயே.

பொருள் : வெண்பளிங்கானது மாணிக்கத்தின் முன் அதன் வண்ணம் பூரிப்புத் தன்மை ஆகியவற்றைப் பெற்று மாணிக்கம் என்னும் படியாக நின்றது போலத் தணிந்த தன்மையுடைய ஆன்மா சீவசொரூபம், பர சொரூபம், சிவ சொரூபம் என்ற சத்திகள் பொருந்திய போது, அவையேயாய் ஆகுமாறு செய்த பெருமையுடைய சிவனது திருவடிகளைப் பற்றி வாழ்வாயாக.

2483. கல்லொளி மாநிறம் சோபை கதிர்தட்ட
நல்ல மணியொன்றின் நாடிஒண் முப்பதும்
சொல்லறும் முப்பாழில் சொல்லறு பேருரைத்து
அல்அறும் முத்திராந் தத்துஅனு பூதியே.

பொருள் : பளிங்கு போன்ற ஆன்மா மாணிக்கம் போன்ற சிவஒளியின் பிரகாசம் தோன்ற நன்மையைச் செய்கின்ற கண்மணியில் நாடி, ஒளி பொருந்தி தத்துவமசி என்னும் முப்பத்தினால் போதப்பாழ், சீவப்பாழி சிவப்பாழில் நின்று சொல்லாமல் அடைய முடியாத பிரணவத்தைக் கொண்டு, ஞானமுத்திரையின் முடிவில் பெறும் அனுபூதியால் அறியாமையாகிய இருள் நீங்கிப் பிறவி அறும். (முப்பதச் சொல் - தத்+துவம்+அசி = அது நீ ஆகிறாய்.)

2484. உடந்தசெந் தாமரை உள்ளுறு சோதி
நடந்தசெந் தாமரை நாதம் தகைந்தால்
அடைந்த பயோதரி அட்டி அடைத்தஅவ்
விடம்தரு வாசலை மேல்நிற வீரே.

பொருள் : மாறுபட்ட தன்மையுடைய ஆயிர இதழ்த் தாமரையின் உள்ளே விளங்கும் சோதியை, செல்லுகின்ற மூலாதாரத்தினின்றும் எழும் நாதமானது அருளால் கிட்டுமாயின், அங்கே பொருந்தும் அமுதேஸ்வரி வெளிப்பட முன் அடைந்திருந்த மேல்வாசலைத் திறந்திருப்பீராக.

25. முக்கரணம் (முக்கரணம் - மனம், வாக்கு, காயம்)

2485. இடனொரு மூன்றில் இயைந்த ஒருவன்
கடல் உறும் அவ்வுரு வேறெனக்காணும்
திடமது போலச் சிவபர சீவர்
உடனுரை பேதமும் ஒன்றென லாமே.

பொருள் : திருவருளால் ஆருயிர் உடல், உணர்வு, உணர்த்துமெய் ஆகிய மூன்று இடங்களிலும் பொருந்தும். இம்மூன்றையே பருவுடல், நுண்ணுடல், முதலுடல் என்பனவற்றிற்குக் கூறினும் பொருந்தும். அவ் அருளாலேயே செவ்வி வாய்த்தற் பொருட்டு உரித்தெனக் கருதிய அம்மூன்றினையும் அவ்வுயிர் தனக்கு வேறெனக் காணும். அது போன்றும் அருளோன் அருள் ஆருயிர் போன்று சொல்லப்படும் சிவ பரசீவர்கள் உடனுறை வேறுபாடுகளும் ஒன்றெனல் ஆகும். (கடனுறு - உரியதான.)

2486. ஒளியை ஒளிசெய்து ஓம்என்று எழுப்பி
வளியை வளிசெய்து வாய்த்திட வாங்கி
வெளியை வெளிசெய்து மேலெழ வைத்துத்
தெளியத் தெளியும் சிவபதம் தானே.

பொருள் : ஒளியை உடைய கண்ணின் பார்வையை மேலும் ஒளி பெறுமாறு செய்து, பிரணவத் தியானத்தால் மூலாதாரத்திலிருந்து கனலை எழுப்பிச் சந்திரகலை சூரியகலை ஒன்றாகுமாறு சுழுமுனையில் சேர்த்து சிரசுக்கும் மேல் சகஸ்ரதள வெளியில் பொருத்தி, தியானம் முதிரச் சிவபதம் அமையும்.

2487. முக்கர ணங்களின் மூர்ச்சைதீர்த்து ஆவதுஅக்
கைக்கா ரணம் என்னத் தந்தனன் காண்நந்தி
மிக்க மனோன்மணி வேறே தனித்துஏக
ஒக்குமது உன்மனி ஓதுஉள் சமாதியே.

பொருள் : உள்ளம் உரை உடல் என்னும் மூன்று கருவிகளின் சோர்வினை அகற்றி ஆக வேண்டிய அருள்நிலையைக் கைக்கனி என்னும்படி தந்தருளினன். அவன் சிவபெருமானாகிய நந்தியாகும். ஆணை நிலையாகிய புருவ நடுவின்கண் விளங்கும் மனோன்மணி அங்கு நின்றும் மேலோங்க அதன்மேல் உன்மனையாகிய திருவருள் துணையாகும். அத் துணையால் ஒருமை உணர்ச்சி உண்டாகும். அவ்வுணர்ச்சியால் செயலற்ற திருநிலை எய்தும். இதனையே நிருவிகற்பசமாதி என்ப. இதனை ஒருமை ஒடுக்கம் என்ப.

26. முச்சூனிய தொந்தத்தசி

(சூனியம் - இன்மை, முச்சூனிய தொந்தத்தசி யாவது முப்பதமும் இன்மை. முப்பதம் நீங்கிய நிலையே பெருநிலை என்க.)

2488. தற்பதம் தொம்பதம் தானாம் அசிபதம்
தொல்பதம் மூன்றும் துரியத்துத் தோற்றலே
நிற்பது உயிர்பரன் நிகழ்சிவ மும்மூன்றின்
சொற்பத மாகும் தொந்தத் தசியே.

பொருள் : ஆது என்னும் தற்பதுமும் நீ என்னும் தொம்பதமும் தான் அது ஆகின்ற தென்னும் அசிபதமும் தொன்மையே யுள்ளன. இம் மூன்றும் மேல்நிலையாகிய துரியத்துத் தோற்றமும். இத் தோற்றத்தின்கண் நிற்பன ஆருயிரும் அருளாகிய பரமும் அருளோனாகிய சிவமும் என்னும் மூன்றின் சொற்பொருளாகும். இவையே தொந்தத்தசி என்ப. இதன்கண் தொம்பதமாகிய நீ தத்பதமாகிய அசி ஆகின்றாய் என்னும் பொருள் காணப்படும்.

2489.தொந்தத் தசிமூன்றில் தொல்கா மியமாதி
தொந்தத் தசிமூன்றில் தொல்தா மதமாதி
வந்த மலம்குணம் மாளச் சிவம்தோன்றின்
இந்துவின் முன்இருள் ஏகுதல் ஒக்குமே.

பொருள் : தொந்தத்தசி என்ற மூன்றில் பழமையான கன்மமும் மாயையும் ஆணவமும், தொந்தத்தசி மூன்றில் பழமையான தாமதம் இராசதம் சாத்துவிகமும் ஆகிய மலமும் குணமும் கெட சிவன் தோன்றினால் பூரண நிலவின் முன் இருள் கெட்டு ஒளி உண்டாவது போல ஆன்மப் பிரகாசம் அமையும்.

2490. தொந்தத் தசியைஅவ் வாசியில் தோற்றியே
அந்த முறைஈர் ஐந்தாக மதித்திட்டு
அந்தம் இல்லாத அவத்தைஅவ் வாக்கியத்து
உந்து முறையில் சிவன்முன்வைத்து ஓதிடே.

பொருள் : தொம்பதத்தோடு காணப்படும் அசிபதப் பொருளை வாசியாகிய உயிர்ப்பின் கண் தோன்றக் கண்டு முன் ஓதியவாறு அவத்தைகள் பத்தினையும் கருதுக. கருதி முடிவில்லாத அவத்தையை அவ்வாக்கியத்தில் செலுத்து முறையில் வைத்து ஓதுதல் வேண்டும். அங்ஙனம் ஓதுங்கால் சிவத்தை முன்வைத்து ஓதுக. சிவத்தை முன்வைத்து ஓதுவது சிவயநம என்று ஓதுவதாகும்.

2491. வைத்துச் சிவத்தை மதிசொரு பானந்தத்து
உய்த்துப் பிரணவ மாம்உப தேசத்தை
மெய்த்த இதயத்து விட்டிடு மெய்யுணர்ந்து
அத்தற்கு அடிமை அடைந்துநின் றானே.

பொருள் : மேல்ஓதியவாறு சிவத்தை முன்வைத்து ஓதுதலான் ஆருயிரின் அறிவு அச்சிவத்தின் இயற்கை உண்மையறிவு இன்ப வடிவின்கண் செல்லும். அங்ஙனம் செல்லுமாறு செலுத்தி ஓமொழிச் செவியறிவுறூஉவாம் உபதேசத்தை மெய்யுணர்வால் களங்கமற்ற உள்ளத்தினிடத்துச் செலுத்தி விடும். அதன்பின் திருவருளால் சிவபெருமானின் திருவடியுணர்வினை உணர்ந்து அத்திருவடிக்கு என்றும் நீங்கா அடிமையாக அவ்வுயிர் நின்று இன்புறும்.

2492. தொம்பதம் மாயையுள் தோன்றிடும் தற்பதம்
அம்பரை தன்னில் உதிக்கும் அசிபதம்
நம்புறு சாந்தியில் நண்ணும்அவ் வாக்கியம்
உம்பர் உரைதொந்தத் தசிவாசி யாமே.

பொருள் : மாயையில் தோன்றும் சீவனாகிய தொம்பதமும் மேலான பரையினிடத்து விளங்கும் பரமாகிய பதமும் விரும்பப்படுகின்ற சாந்தியில் பொருந்தும் ஆகிறாய் என்ற அசிபதமும் ஆகிய அவ்வாக்கியம் மேலான உரையாகும். அவ் வுரையான நீ அதுவாகிறாய் என்பதில் வாசியாகிய உணர்வு பொருந்தும்.

2493. ஆகிய அச்சோயம் தேவதத் தன்இடத்து
ஆகிய வைவிட்டால் காயம் உபாதானம்
ஏகிய தொந்தத் தசியென்ப மெய்யறிவு
ஆகிய சீவன் பரசிவன் ஆமே.

பொருள் : மேல்ஓதிய முப்பதங்களின் புணர்ப்பினை விளக்க அச்சோயமாகிய இவன் அவனே என்னும் முறைப்படி அவனே இத் தேவதத்தன் என்னும் பொருளின்கண் ஏற்படும் காலமும் இடமும் செய்தியும் நீங்கப் பெற்றால், அப் பெயர்க்குரிய பொருளாகிய உடம்பு காரணம் அளவாக நிற்கும். அக்காரண மாயையும் கடந்த நிலையில் தொந்தத்தசியாகிய முப்பதம் மெய்யுணர்வினைத் தரும். அதனால் ஆருயிர் அருள் அருளோன் என்னும் மூன்றும் பெறப்படும். அவ்வுயிர் அருளுடன் கூடி அருளோன் அடியிற் கலந்து முடிவிலா இன்பம் எய்தும். (சோயம் - இவன் அவனே. சோயந்தேவதத்தன் - அவனே தேவதத்தன். இது வேதாந்த பரிபாஷை. ஆதியில் பிரமசாரியாகவும், பிறகு இல்லறத் தானாகவும் அதன் பின்னர் துறவியாகவும் இருந்தவன் தேவதத்தன் ஒருவனேயாம் என்று விளக்கப்படுகிறது. உபாதானம் - முதற்காரணம்.)

2494. தாமதம் காமியம் ஆசித் தகுணம்
மாமலம் மூன்றும் அகார உகாரத்தோடு
ஆம்அறும் மவ்வும்அவ் வாய்உடல் மூன்றில்
தாமாம் துரியமும் தொந்தத் தசியதே.

பொருள் : அமைதி ஆட்சி அழுந்தலாகிய (சத்துவ, இராசத, தாமதங்கள்) முக்குணமும் ஆணவம் கன்மம் மாயையாகிய மும்மலமும் நிகழ்வது நீக்குவதுமாகிய செயல்கள் அகர உகர மகரங்களான் ஆகும். அவ் அகர கர மகரங்களே (அ+உ+ம்) பத்தாய் பகுத்த பாடுகளுள் மூன்றில் தாமாம் துரியம் தோன்றும். ஆண்டுத் தொம் தத் அசி என்னும் பதப்பொருள் முற்றுறும்.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் - Page 3 Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by இறையன் Tue Mar 27, 2012 1:55 pm

27. முப்பாழ்

(முப்பாழ் - மாயைப்பாழ், போதப்பாழ், உபசாந்தப்பாழ் என்பன. மாயைப்பாழ், சீவப்பாழ், வியோமப்பாழ் எனவும் பெயர் பெறும். ஆன்ம தத்துவங் கடந்து நிற்றல் மாயைப் பாழ்; ஆன்ம போதம் கழல நிற்றல் போதப்பாழ் அல்லது சீவப்பாழ்; உபசாந்த நிலையில் பரவெளியில் நிற்றல் உபசாந்தப்பாழ் அல்லது வியோமப் பாழ்.)

2495. காரியம் ஏழ்கண் டறும்மாயப் பாழ்விடக்
காரணம் ஏழ்கண் டறும்போதப் பாழ்விடக்
காரிய காரண வாதனை கண்டறும்
சீர்உப சாந்தமுப் பாழ்விடத் தீருமே.

பொருள் : மாயா காரியமாகிய வித்தியா தத்துவம் ஏழையும் ஞான விசாரணையால் அவை பொய் என்று அறிந்துவிட ஆன்ம சொரூபம் விளங்கும் தேகப் பிரக்ஞையும் காரணமாகிய சிவநிலைகள் ஏழையும் கண்டு நீங்க ஆன்ம அறிவும், காரிய காரணங்களாகவுள்ள வாசனைகளைக் கண்டபோது பொருந்திய உபசாந்தமும் நீங்கும். இம்மூன்று பாழினையும் நீங்கப் பிறவி அறும்.

2496. மாயப்பாழ் சீவன் வியோமப்பாழ் மன்பரன்
சேயமுப் பாழெனச் சிவசத்தி யில்சீவன்
ஆய வியாப்தம் எனும்முப்பா ழாம்அந்தத்
தூய சொரூபத்தில் சொல்முடி வாகுமே.

பொருள் : மாயப்பாழும் சீவப் பாழும் உபசாந்தப் பாழும் நிலைபெற்ற பரனது அறிவுக்கு அப்பாற்பட்ட முப்பாழ் என்னும்படி சிவசத்தியாகிய அருளில் சீவன் அடங்கி நிற்கும் மூன்று பாழ்நிலைகளாம். அத்தகைய தூய்மையான சிவ சொரூபத்தில் அடங்கி நிற்பதே தத்துவமசி வாக்கியத்தின் முடிவாகும். (வியாப்தம் - அடங்கி நிற்றல்.)

2497. எதிர்அற நாளும் எருதுஉவந்து ஏறும்
பதியெனும் நந்தி பதமது கூடக்
கதியெனப் பாழைக் கடந்துஅந்தக் கற்பனை
உதறிய பாழில் ஒடுங்குகின் றேனே.

பொருள் : நாளும் ஆனேற்றினை உவந்து ஊர்ந்து உலகினுக்கு அருளும் ஒப்பில்லாத பதி சிவபெருமான் ஆவன். அவனே நந்தி என்று அழைக்கப்படுவன். அவனுடைய திருவடிகளைக் கூடுதற் பொருட்டு நிலையெனக் கருதிய மாயை, உயிர், அருள் என்னும் முப் பாழையும் கடந்து, அவை யனைத்தும் காரணம் பற்றிய கற்பனை என உதறி நீக்கி எஞ்சிய உருவற்ற பாழில் ஒடுங்குகின்றேன். (பாழ் - உருவில்லது. கற்பனை என்பது கற்பின் எனத் திரிந்து நின்றது. எதிரற - இணையில்லாமல்.)

2498. துரியம் அடங்கிய சொல்லறும் பாழை
அரிய பரம்பரம் என்பர்கள் ஆதர்
அரிய பரம்பரம் என்றே துதிக்கும்
அருநிலம் என்பதை யார்அறி வாரே.

பொருள் : செயலறலாகிய துரியம் அடங்கிய நிலையினைச் சொல்லுறும் பாழ் என்பர். சொல்லறல் - சொல்ல முடியாது ஆதல். அப்பாழை அறிவிலாதார் அறிதற்கரிய பெரும் பொருட்குப் பெரும் பொருளாம். பரம்பரம் என்பார்கள். அப்பாழ் அறிதற்கரிய பரம்பரம் என்றே துதிக்கும் அருளார் அருநிலமாகும். இவ்வுண்மையை அறிவார் யார் ? ஒருசிலரே என்க. அருநிலம் அப்பால் இடம். துரியாதீதம். (ஆதர் - அறிவில்லாதவர்.)

2499. ஆறாறு நீங்க நமவாதி அகன்றிட்டு
வேறா கியபரை யாவென்று மெய்ப்பரன்
ஈறான வாசியில் கூட்டும் அதுவன்றோ
தேறாச் சிவாய நமவெனத் தேறிலே.

பொருள் : முப்பத்தாறு தத்துவங்களும் நீங்க, திரோதான மாகிய நகாரமும் மலமாகிய மகாரமும் நீங்கி, திருவருள் சத்தியாகிய பரை, என்றும் யகாரமாகிய ஆன்மாவை உண்மையான பரநிலையின் முடிவில் சிவசத்தியோடு சேர்ப்பிக்கும். ஆராயின் அதுவல்லவா ஆன்மாக்களால் அறியமுடியாத சிவாய நம என்பதன் கருத்தாகும். (ஆ என்று - பசு என்று.)

2500. உள்ளம் உருவென்றும் உருவம் உளமென்றும்
உள்ள பரிசறிந் தோரும் அவர்கட்குப்
பள்ளமும் இல்லைத் திடர்இல்லை பாழ்இல்லை
உள்ளமும் இல்லை உருவில்லை தானே.

பொருள் : உருவாகிய உடலையே உள்ளமாகிய உயிர் என்றும் உயிரையே உடலென்றும் தடுமாறிக் கூறுவர். அது கலப்பால் ஒன்றுபட்டுப் புணர்ந்து நிற்கும் நிலைமையால் கூறப்படுவதாகும். இவ்வுண்மையை அருளால் உள்ளவாறு ஓர்ந்து உணர்வார்கட்குப் பள்ளமாகிய கருப்பையினுள் புக்கு உருப்பெற்றுத் தோன்றி உழலுமாறில்லை. திடராகிய உலகினில் உறைந்து நிலவுமாறும் இன்று; பாழாகிய உருவற்ற நிலையில் வீழ்ந்து அழுமாறும் இன்று. ஆகவே உயிர் உடல் என்ற வேறுபாட்டு உரை உண்டாவதில்லை.

28. காரிய காரண உபாதி

(காரிய காரண உபாதி யாவன : சீவ உபாதி, பர உபாதிகள். உபாதி - பந்தம், கட்டு.)

2501. செற்றிடும் சீவ உபாதித் திறன்ஏழும்
பற்றும் பரோபாதி ஏழும் பகருரை
உற்றிடும் காரிய காரணத் தோடற
அற்றிட அச்சிவ மாகும் அணுவனே.

பொருள் : முன் ஓதிய திருப்பாட்டின்கண் காரிய உபாதியாகிய சிவஉபாதி ஏழும் காரண உபாதியாகிய அருளுபாதி ஏழும் உள்ளவிடத்துத் தோன்றும் உபாதியாகிய வருத்தமும் அதனைச் சுட்டும் பெயர்களும் முற்றும் தோன்றாவறு அற்றொழிதல் வேண்டும். அற்றொழிந்தவிடத்து அவ்அணுவாகிய ஆருயிர் பற்றற்றார்க்கு என்றும் வற்றாப் பற்றாய் நிற்கும் பரசிவத்தின் அடியிணையைச் சாரும். சாரவே அச்சிவமாக நிற்கும். (சீவ உபாதி - காரிய உபாதிகள். பரோபதி - காரண உபாதிகள். அணுவன் - சீவன்.)

2502. ஆறாறு காரியோ பாதி அகன்றிட்டு
வேறாய் நனவு மிகுந்த கனாநனா
ஆறாறு அகன்ற சுழுத்தி அதில்எய்தாப்
பேறா நிலத்துயிர் தொம்பதம் பேசிலே.

பொருள் : திருவருள் நினைவால் முப்பத்தாறு மெய்களால் ஏற்படும் காரிய வருத்தம் என்னும் உபாதிகள் நீங்கும். நீங்கவே சிறப்பு நனவாய் மிகுந்த கனவின்கண் நிகழும் நனவும் உண்டாம். அதுபோல் ஆறாறு நீங்கிய உறக்கம் வந்துறும். அவ் உறக்கமும் எய்தாத நிலைபெற்ற பேறாகிய திருவடியின் கண் சார்ந்து தொம்பதப் பொருளாகிய ஆருயிர் இன்புறும். பேசுமிடத்து இதுவே திருவடிப் பேறாகிய நிலம் என்ப. (பேறா நிலம் - முத்தி.)

2503. அகாரம் உயிரே உகாரம் பரமே
மகாரம் சிவமாய் வருமுப் பதத்துச்
சிகாரம் சிவமே வகாரம் பரமே
யகாரம் உயிரென்று அறையலும் ஆமே.

பொருள் : உயிரெனக் குறிப்பதாய உடல்மெய் இருபத்து நான்கும் அகாரமாகும். பரமெனக் குறிப்பதாகிய உணர்த்து (சிவ) மெய் ஐந்தும் உகாரமாகும். மலமெனக் குறிப்பதாய உணர்வு மெய் ஏழும் மகாரமாகும். இம் முப்பத்தாறு மெய்களும் சிவரம் சிவமாகிய உயிர்க்குயிராய் வகரம் சிவபெருமானின் திருமேனியாய் யகரம் திருவருளின் கைப்படும் உயிராய்த் திகழும் என்க.

2504. உயிர்க்குயி ராகி ஒழிவற்று அழிவற்று
அயிர்ப்புஅறும் காரணோ பாதி விதிரேகத்து
உயிர்ப்புறும் ஈசன் உபமிதத் தால்அன்றி
வியர்ப்புறும் ஆணவம் வீடல்செய் யாவே.

பொருள் : உயிர்க்குயிராக நீக்கமற நிறைந்து அழிவல்லாது சோர்வினை நீக்கும் காரண உபாதிகள் உயிரின் பக்குவ நிலையில் உடனாய் நிற்கும் இறைவன் செய்யும் கருணையால் அல்லாமல் உயிர்களுக்கு நடுக்கத்தினைச் செய்யும் ஆணவத்தை நீக்குவது இயலாது. (அயிர்ப்பு - அயர்ப்பு - மயக்கம். உபமிதத்தல் - கருணைபுரிதல்.)

2505. காரியம் ஏழில் கலக்கும் கடும்பசு
காரணம் ஏழில் கலக்கும் பரசிவன்
காரிய காரணம் கற்பனை சொற்பதப்
பாரறும் பாழில் பராபரத் தானே.

பொருள் : காரிய உபாதி ஏழில் ஆணவ மலக் குற்றத்தால் பசுத் தன்மையுடைய சீவன் மயங்கி நிற்கும். காரணோபாதியாகிய ஏழில், சீவன் ஒளியை அறிவதில் மேலான சிவன் கலந்து நிற்கும். காரியமாகவும் காரணமாகவும் உள்ள இவை கற்பனை யாகும். அசிபதப் பொருளை உணர்ந்து அனுபவிக்கும்போது அது நீங்கினபாழில் மேலான பரன் உள்ளது (கடும்பசு - ஆணவத்தால் மோகத்தில் பற்றுள்ள சீவன். சொற்பதம் - அசிபதம்.)

29. உபசாந்தம்

(உபசாந்தம் - விருப்பு வெறுப்பு அற்றிருத்தல்.)

2506. முத்திக்கு வித்து முதல்வன்தன் ஞானமே
பத்திக்கு வித்துப் பணிந்துற்றுப் பற்றலே
சித்திக்கு வித்துச் சிவபரம் தானாதல்
சத்திக்கு வித்தத் தனதுப சாந்தமே.

பொருள் : சிவஞானமே வீடு பேறாகிய முத்தி அடைவதற்கு வாயிலாகும். சிவனிடத்தில் தன் முனைப்பின்றி அவனது திருவடிகளைப் பொருந்தி யிருத்தலே பத்தி செய்யும் வழியாகும். சிவத்தைப் பொருந்திச் சிவமாதலே எண்சித்தி பெறுவதற்கு வழியாகும். ஆன்மா விருப்பு வெறுப்பின்றி அடங்கி இருத்தலே சத்தியை அடைவதற்குரிய வழியாகும்.

2507. காரியம் ஏழும் கரந்திடும் மாயையுள்
காரணம் ஏழும் கரக்கும் கடுவெளி
காரிய காரண வாதனைப் பற்றறப்
பாரண வும்உப சாந்தப் பரிசிதே.

பொருள் : காரிய வருத்தம் ஏழும் தூவா மாயையினுள் ஒடுங்கும். காரண வருத்தம் ஏழும் தூமாயையின்கண் ஒடுங்கும். காரிய காரண வருத்தங்களின் வாதனைப் பற்றாகிய பசையறத் திருவருள் பெருமை வந்து தலைப்படும். அது தலைப்படுதலே ஒடுக்க மென்னும் உபசாந்தமாகும். இவ் விளக்கமே அதன் பரிசாகும். (பாரணவும் - பெருமை பொருந்தும்)

2508. அன்ன துரியமே ஆத்தும சுத்தியும்
முன்னிய சாக்கிரா தீதத் துறுபுரி
மன்னும் பரங்காட்சி யாவது உடனுற்றுத்
தன்னின் வியாத்தி தனில்உப சாந்தமே.

பொருள் : ஒடுக்கச் செயலறல் ஆகிய துரியமே ஆவித் தூய்மை யாகும். பொருந்திய நனவினில் அப்பால் சிவனருள் இன்பமாகும். நிலை பெற்ற ஆவிக் காட்சியாவது சிவபெருமானின் திருவடியுணர்வில் கூடுவதாகும். அவ் வுணர்வின்கண் ஒடுங்கி நிற்பது உபசாந்தமாகும்.

2509. ஆறாது அமைந்துஆண வத்தையுள் நீக்குதல்
பேறான தன்னை அறிதல்பின் தீர்சுத்தி
கூறாத சாக்கிரா தீதம் குருபரன்
பேறாம் வியாத்தம் பிறழ்உப சாந்தமே.

பொருள் : ஆன்மா முப்பத்தாறு தத்துவங்களது சேர்க்கையால் ஆணவமல பந்தத்தை நீக்கிக் கொள்ளுதல், கிடைத்தற்கரிய பேறான தனது இயல்பான சொரூபத்தை அறிதல், தன் உண்மை அறிந்தபின் தத்துவங்களின் நீங்கித் தூய்மை அடைதல், அளவிட்டுக் கூறமுடியாத சுகநிலை பெறல். ஒளிக்கெல்லாம் ஒளியினை நல்கும் சிவனிடம் அடங்கி நிற்றல் ஆகியவை தத்துவங்களின் மாறுபட்ட உபசாந்த மாகும். (குருபரன் - பேரொளிச் சிவன். வியாத்தம் - அடக்கம்.)

2510. வாய்ந்த உபசாந்த வாதனை உள்ளப்போய்
ஏய்ந்த சிவமாத லின்சிவா னந்தத்துத்
தோய்ந்தறல் மோனச் சுகானுபவத் தோடே
ஆய்ந்துஅதில் தீர்க்கை யானதுஈர் ஐந்துமே.

பொருள் : தனக்குக் கிடைத்த உபசாந்தம் அமையச் சென்று, பொருந்திய சிவமாக ஆதலின் அச் சிவானந்தத்தில் அழுந்தி அந்நினைவு நீங்குதலும் மவுன நிலையாகிய சுக அனுபத்தோடு நின்று அதனையும் தீர்தல் என்பது உபசாந்த நிலை அமைவதற்கு வேண்டிய பத்துப் படிகளாகும். ஆணவம் அழிதல் முதலாக ஆனந்தத்தை ஒழிதல் ஈறாக உற்றவை உபசாந்தப் படி நிலைகளாகும்.

2511. பரையின் பரவ பரத்துடன் ஏகமாய்த்
திரையின்நின்று ஆகிய தெண்புனல் போலவுற்று
உரையுணர்ந்து ஆரமுது ஒக்க உணர்ந்துளோன்
கரைகண் டானுரை அற்ற கணக்கிலே.

பொருள் : பரை ஒளியில் வியாபகத்தைப் பெற்று, பரத்துடன் பிரிப்பின்றி திரையற்ற ஆழ்கடல் நீரை ஒத்து நின்று, குருவின் உபதேசத்தை உணர்ந்து சிவானந்தத்தை அனுபவிக்கும் ஆன்மா பேச்சற்ற பேரானந்தத்தை அடைந்து பிறிவிக் கடலை நீந்தினவன் ஆவான். உபசாந்த நிலையில் ஆன்மா பெறும் அனுபவம் கூறியவாறு :
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

திருமூலர் | திருமந்திரம் - Page 3 Empty Re: திருமூலர் | திருமந்திரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum